Dec 1, 2015

தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காத தேசப்பற்றும் முஸ்லிம்களும்....

முஸ்லிம்களை தேச பற்று இல்லாதவர்களாய் சித்தரித்து அன்னியர்களாய் சித்தரிக்கும் காட்சிகளை பார்த்து வருகிறோம்....

அதற்கான பதில்:

முஸ்லிம்கள் தேசியவாதிகள் அல்லர்....

பல தேசங்களை ஒன்றாக்க பிறந்தவர்கள்....

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டவர்கள்...

ஆக்கிரமித்த பிரிட்டனிடமிருந்து கடன் வாங்கி

எல்லை பிரித்து இந்திய தேசியம் என்று கூறினால் அதை

ஏற்று கொள்ளாதவர்கள்....

மொரொகோவிலிருந்து இந்தோனெசியா வரை....

கன்னியாகுமரியிலிருந்து கிரீமியா வரை....

தேசங்களை இணைக்க காத்திருப்பவர்கள்...

அவர்களுக்கு இஸ்லாம் தந்த அடையாளத்தை தவிர

வேறொரு அடையாளம் இல்லை...

முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து

இந்தியா முதல் சவுதி வரை அனைத்து நாடுகளையும்

விடுவிக்க உழைப்பவர்கள்....

ஏகாதிபத்தியவாதிகளின் தேசியவாதம் எங்களிடம்

செல்லாது....

நாங்கள் முஸ்லிம்கள் தேசியவாதிகள் அல்ல....

நபி (ஸல்) கூறினார்கள்" (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்". (நூல்:அபுதாவூத்)

துருக்கி, ரஸ்ய விமானத்தை தாக்கயளித்த சம்பவத்திலிருந்து நாம் புரிய வேண்டிய 10 விடயங்கள்

1) இது ரஸ்ய யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கிய விமானியின் படம். அவர் ஒரு வீர புருஷன். இதற்கு முன்னமே மாஸ்கோவின் கதவுகளை உரத்துத் தட்டிய உத்மானிய இராணுவத்தின் வழித்தோன்றல் அவர். அவர் இச்செலுக்காக பெருமைப்படவேண்டும்.
 
2) ரஸ்யா சிரிய முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர யுத்தத்தில் முன்னணியில் நின்று தாக்குதல் நடாத்தி  நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்களை இதுவரை குடித்திருப்பதால் இந்தச் செய்தி கேட்டு சிரிய முஸ்லிம்களும், உலகின் ஏனைய சொரணையுள்ள முஸ்லிம்களும் ஆறுதல் அடைந்திருப்பார்கள்.
 
3) இந்தத்தாக்குதல் மிகவும் தாமதமானதும், மட்டுப்படுத்தப்பட்டதும் என்றாலும் முஸ்லிம்கள் நீண்ட நாட்களாய் எதிர்பார்த்து நின்ற போற்றுதலுக்குரிய செயலாகும். இத்தாக்குதல்; கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எமது கண்ணியத்தையும், சுயமரியாதையையும் இழந்து நிற்கும் எமக்கு எமது புகழ்பெற்ற வரலாற்றை கண் முன்னே கொண்டுவந்து ஆறுதல் அளிக்கின்றது.
 
4) உத்மானியர்களின் தமது வரலாற்றில் எதனைச்செய்தார்களோ, தமது வீர வரலாற்றுடன் எதனை இணைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்களோ அந்த அளவீட்டின் படி இந்த சம்பவத்தை அளந்து பார்த்தால்; யார் தன்னை உத்மானிய கிலாஃபத்தின் உண்மையான வழித்தோன்றலாக கருதுகிறார்களோ அவர்களில் ஒருவனின் செயற்பாடாகவே இந்தத்தாக்குதல் கருதப்பட வேண்டுமெயொழிய இன்றைய சடவாத துருக்கியின் ஒரு விதி விலக்கான செயலாகப் பார்க்கப்படக்கூடாது.
 
5) ரஸ்ய விமானத்தை குறிவைத்து தனது ரிகரை அழுத்திய துருக்கிய விமானி தனது செயலுக்காக மிகுந்த உவகை கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்த மனோநிலைக்கும் முஸ்லிம் உலகிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்களின் உணர்வுகளுக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்பதை இந்த இடத்தில் நாம் மறந்துவிடலாகாது.
 
6) எதிரிக்கு எதிராக எமது சிப்பாய்களின் ரிகர் அழுத்தப்படுவதற்கு மேலிடத்திலிருந்து வரும் ஒரு கட்டளை மாத்திரம் போதுமானது என்பதையே இந்த சம்பவம் எமக்கு திரும்பவும் ஞாபகமூட்டுகிறது. எனவே எமது அடிப்படை பலகீனம் என்பது துணிச்சலான அரசியல் தீர்மானமின்மை என்பதேயொழிய அது இராணுவ வளம் தொடர்பானதாகவோ, மோசடியான இராணுவம் தொடர்பானதாகவோ எப்போதும் இருந்ததில்லை.
 
7) ஒரு பேச்சுக்கு துருக்கிய வான்வெளிக்குள் இந்த ரஸ்ய விமானம் அத்துமீறாதிருந்து துருக்கியிலிருந்து சில மைல்களுக்கு அப்பால் சிரியாவின் வான்வரப்பில் முஸ்லிம்களை பலியெடுப்பதில் ஈடுபட்டிருந்தால், துருக்கி அந்த விமானத்தை தாக்கி அழித்திருக்குமா? சிரியாவில் சிந்தப்படும் முஸ்லிமின் இரத்தத்தைப் பாதுகாப்பது துருக்கியின் வான் எல்லையைப் பாதுகாப்பதை விட மகத்தானது என்பதில் எந்தவொரு முஸ்லிமுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா?அதற்காகத்தானே துருக்கி களமிறங்கியிருக்க வேண்டும்? உண்மையில் அதைத்தானே இஸ்லாம் அதன் மீது கடமையாக்கியிருக்கிறது? அது கஷ்டமான செயலா? என்று கேட்டால், பதில் 'கஷ்டமானதுதான்'.  ஆனால் முடியாத காரியமா? என்று கேட்டால் பதில் 'இல்லை' என்று தயங்காமல் கூறலாம்.
 
வரலாற்றின் முக்கிய திருப்பு முனைகள் அரிதாகவே வந்துபோகும். இது அப்படியான ஒரு திருப்பு முனை. பிராந்தியம் அதியுச்ச நிலையில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. உலகளாவிய மற்றும் பிராந்திய சக்திகள் முஸ்லிம் உலகில்(அது துருக்கிக்கும் பொருந்தும்) ஒரு முடிவு கண்டுதான் தீருவோம் என்று களமிறங்கியிருக்கின்றபோது களத்தில் துருக்கியின் விவேகமான முடிவே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
 
8) நவ காலணித்து வேட்டையிலிருந்து துருக்கி தப்பித்துவிடலாம் என்று பகற்கனவு காணுகிறதா? குப்பார்களும், பிராந்திய சக்திகளும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான பொறி பற்றக்கூடும் என எதிர்பார்க்கின்ற இந்தவொரு நிலத்தையும் விட்டுவைக்கப்போவதில்லை. இதனைப்புரிந்து கொள்ள துருக்கிய தலைமைகள் பெரிதாக சிரமப்பட வேண்டியதில்லை. வெறுமனவே ஈராக்கின் இன்றைய நிலையை பார்த்தால் போதுமானது. எனவே துருக்கி தனது கடப்பாட்டை புரிந்துணர்ந்து உண்மையான சவால்களை முகம் கொடுப்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.  இன்று அதனைச் செய்வதற்கு தயங்கினால் நாளை அதன்மீது சாபக்கேட்டின் மேகங்கள் சூழ்ந்து கொள்வதை தடுக்க முடியாது போய்விடலாம்.
 
9) இன்று சிரியாவிலே முஸ்லிம்களின் அழுகுரல் வானத்தை பிளக்கிறது. அவர்களின் குருதி ஆறாகப் பாய்கிறது. மேலும் இதையொத்த வேதனையிலும், சோதனையிலும் பலஸ்தீனிலும், ஈராக்கிலும், செச்னியாவிலும், காஸ்மீரிலும், பர்மாவிலும் எமது உம்மத் நீண்ட காலமாகத் தவிக்கிறது. இந்நிலையில் அல்லாஹ்(சுபு) உதவி மந்திரத்தால் மலரப்போவதில்லை. மாறாக அல்லாஹ்(சுபு) எம்முள்ளிருக்கும் துணிச்சலும், வாய்மையும், தக்வாவுமுள்ள தலைமைகளின் கரங்களாலேயே அந்த வெற்றியை  கொண்டு வருவான்.
 
முஸ்லிம்கள் அவரில் தேவையுடையவராக இருக்கின்ற நிலையில் எந்தவொரு தலைவர் முஸ்லிம்களை தவிப்பில் விட்டு விடுகின்றாரோ அவரை அல்லாஹ(சுபு) தவிப்பில் விட்டு விடுவான் என்பதை எமது மார்க்கம் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இது குறித்து பின்வரும் நபிமொழியில் தீர்க்கமாகச் சொன்னார்கள்.
 
“ஒரு மனிதனின்(முஸ்லிமின்) மரியாதைக்கு பங்கம் விளைவிக்கப்படுகின்ற இடத்தில் அல்லது அவனது கண்ணியம் களங்கப்படுத்தப்படுகின்ற இடத்தில் அந்த மனிதனை(முஸ்லிமை) கைவிடும் ஒருவருக்கு, அல்லாஹ்வின் உதவியை அவர் அதிகம் நாடுகின்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ் அவரை கைவிடாமல் இருக்க மாட்டான். ஒரு மனிதனின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கப்படுகின்ற இடத்தில் அல்லது அவனது கண்ணியம் களங்கப்படுத்தப்படுகின்ற இடத்தில் அந்த மனிதனுக்கு உதவும் ஒருவருக்கு, அல்லாஹ்வின் உதவியை அவர் அதிகம் நாடுகின்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ் உதவாமல் இருக்க மாட்டான்.” (அபுதாவூத்)
 
10) இந்த தாக்கியளிப்பு சம்பவத்தை துருக்கி தன்னிச்சையாக செய்திருந்தாலும் சரி, அல்லது அமெரிக்கா துருக்கியினூடாக ரஸ்யாவுக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்காக இது இடம்பெற்றிருந்தாலும் சரி அல்லது துருக்கிய அரசியற் தலைமையின் உத்தரவே இல்லாமல் இராணுவத்தின் ஒரு சில ஜெனரல்களின் சொந்த முடிவாக இருந்தாலும் சரி உண்மை எதுவென காலம் விரைவில் பதில் சொல்லும். எனினும் அதனது எதிர்காலத்தில் துருக்கிக்கு உண்மையான அக்கறை இருந்தால் ஒரு அடிப்படை கேள்விக்கு அது தீர்க்கமாக பதில் தேட வேண்டும்.
 
மேற்குலக சக்திகளின் நலன்களுக்காக தன்னை தாரைவார்த்து, கைமாறாக சில குறுகிய நலன்களை பெற்றுக்கொள்கின்ற பாதையிலேயே துருக்கி தொடர்ந்து பயணிக்கப்போகிறதா? அல்லது யாரெல்லாம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அணிதிரட்டு நிற்கிறார்களோ அவர்களுக்கு எதிராக முஸ்லிம் உம்மத்துடன் கைகோர்த்து முன்னேறப்போகிறதா? அவ்வாறு செய்வதன் ஊடாக பல மில்லியன் கணக்கான மக்கள்  அதன் பின்னால் அணிதிரள மீண்டும் முஹம்மத் அல் பாதிஹ், சுலைமான் அல் காநூனி, இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீத் போன்ற மாபெரும் கலீஃபாக்களின் வரலாற்றை உயிர்ப்பிக்கப்போகிறதா? இந்தக் கேள்விக்கான நேர்மையான பதிலிலேயே உண்மையான துருக்கியின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பதை தூரநோக்குள்ள ஒரு முஸ்லிம் தலைவர் துல்லியமாகப் புரிந்து கொள்வார்!
 
யா அல்லாஹ்! ரஸ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய அந்த முஸ்லிம் விமானியின் கரங்களுக்கு அருள்பாலிப்பாயாக! மேலும் துருக்கியினூடாக இஸ்லாத்திற்கு கண்ணியத்தையும், வெற்றியையும் தந்தருள்வாயாக!

செய்தி பார்வை : 14 நவம்பர் 2015

தலைப்புகள் :
  • பாரிஸ் தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு ஹோலன்ட் இஸ்லாமிய அரசு (IS) மீது பழிசுமத்தல்.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அப்கானிஸ்தானிய கைதிகள் மீது சர்வதேச கூட்டுப்படையினர் அத்துமீறல் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக சுட்டி காட்டுகிறது.
  • ரஷ்யா இஸ்லாமிய போராளிகளுக்கு புதிய தளமாக விளங்குகிறது.
 பாரிஸ் தாக்குதல்: இந்த தாக்குதலுக்கு ஹோலன்ட் இஸ்லாமிய அரசு (IS) மீது பழிசுமத்தல்
 
பிரஞ்சு அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் பாரிஸ் நகரில் தொடர் தாக்குதல் நடத்தி 128 உயிர்கள் வரை கொன்ற சம்பவம் இஸ்லாமிய அரசால்(IS) ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தியவை என குற்றம் சாட்டியுள்ளார், எட்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள் மற்றும் தற்கொலை படையினருடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் “வெளியிலிருந்து ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டதாகும்’ என பிரஞ்சு அதிபர் ஃபிரான்கோஸ் ஹோலன்ட் கூறியுள்ளார். மதுபான விடுதிகள், உணவு விடுதிகள், இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடம் மற்றும் மிகவும் பிரசித்தி பெற்ற கால்பந்தாட்ட போட்டி நடந்த மைதானம் இவைகளை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் இவை. இந்த தாக்குதலுக்கு IS பொறுப்பேற்றுள்ளது. பெல்ஜியத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், பிரான்சில் இரண்டாம் உலகப்போருக்கு பின் அமைதிக்கு எதிராக நடந்த மிக மோசமான தாக்குதல் இது, இதன் விளைவாக ஒரு அவசர நிலையை திரு் ஹோலன்ட் ஏற்படுத்தியுள்ளார் என நீதியமைச்சார் கூறியள்ளார், மேலும் ஐரோப்பாவில் 2004 ல் மேட்ரிட் நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு பின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவம் அதில் 80 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய அரசு (IS) சனிக்கிழமை அன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது அதில் ” எட்டு சகோதரர்கள் மூலம் வெடிகுண்டுகளை கொண்ட இடுப்புவார்களை அணிந்தவாரும் துப்பாக்கிகளை ஏந்தியவாரும்” இந்த தாக்குதலை “மிகவும் ஜாக்கிரதையாக” தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை நோக்கி தொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இத்தாக்குதல் சிரியா மற்றும் ஈராக்கில் IS போராளிகள் மீதான தாக்குதலில் பிரான்ஸ் பங்களிப்பதன் எதிரொலியாக தொடுக்கப்பட்டது என வெளியிட்டுள்ளது. அதற்கு சற்றுமுன் அதிபர் ஹோலன்டு பிரான்ஸ் மீது “ஒரு கோழைத்தனமான வெட்கப்படக்கூடிய மற்றும் கோர தாக்குதல்” தொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரான்ஸ் இதற்கு பதிலடி கொடுக்கும் போது இஸ்லாமிய அரசின்(IS) போராளிகளுக்கு எவ்வித கருணையும் காட்டாது என கூறினார். மேலும் சட்டத்திற்குட்பட்டு அனைத்து உபகரணங்களையும்…..அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போர்க்களங்களிலும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உபயோகிப்பதற்கு உறுதியுடன் இருப்பதாக கூறினார். [மூலம்: BBC]
பிரான்சில் இதுவரை யாரும் பிரஞ்சு மக்களை காக்க தவறிய ஹோலன்டை பார்த்து எந்த கடிணமான கேள்விகளையும் கேட்கவில்லை. 2015 ஜனவரியில் நடந்த சார்லி ஹெப்டோ தாக்குதலிலிருந்து 10500 பேரகள் கொண்ட படையை நிறுவியுள்ளது மேலும் பாதுகாப்பை மேம்படுத்த பல மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது, மேலும் அது ஏற்படுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக எளிதாக மீறப்பட்டுள்ளது. ஹோலன்டு மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரியின் ராஜினாமாவை கோருவதற்கு பதிலாக, சிரியாவில் ராணுவ படையெடுப்பு எடுக்க கோரும் சத்தம் தான் அதிகமாகி கொண்டிருக்கிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அப்கானிஸ்தானிய கைதிகள் மீது சர்வதேச கூட்டுப்படையினரின் அத்துமீறல்களுக்கான ஆதாரம் இருப்பதாக சுட்டி காட்டுகிறது.
 
 ஐ.நா வழக்குறைஞர்கள் 12.11.15 அன்று சர்வதேச படைகள் அப்கானிஸ்தானில் சிறைக்கைதிகளுக்கு உடலளவிலும் உள்ளத்தளவிலும் அத்துமீறி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2003 ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினர் மீது தொடுக்கப்பட்ட குற்றப்புகார்களை விசாரித்து வருகின்றது, ஆனால் இவ்விசாரணையின் நிலை குறித்த இதற்கு முந்தைய அறிக்கைகள் குற்றம் நடத்தப்படது குறித்தும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெளிவற்ற நிலையிலிருந்தது. இதன் சமீபத்திய ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையில் இது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது, நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரி கூறுகையில் அமெரிக்க வீரர்களின் குற்றம்சாட்டப்பட்ட வழக்குகளை விசாரித்ததில் எவ்வித குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கட்டளையிடும் உயர்ந்த பதவியிலுள்ளவர்களை சென்றடையவும் முடியவில்லை. இந்த கண்டுபிடிப்பு நீதிமன்றத்தின் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையை மேலும் முனைப்படைய செய்யும். இது இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர் அல்லாத மற்றும் முன்பு இந்த நீதிமன்றம் அமைவதற்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்த அமெரிக்காவிற்கு பிரச்சினைக்குரியதாக அமையக்கூடும். “அதிபயங்கர விசாரணை யுத்திகளை மேற்கொண்டதின் விளைவாக உடலளவிலும் உள்ளத்தளவிலும் மிகுந்த காயத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.” என விசாரணை அதிகாரிகள் எழுதியுள்ளனர். அவர்கள் சர்வதேச மற்றும் அமெரிக்க படையினர் மேற்கொண்ட அத்துமீறலின் ஆழத்தையும் அளவையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றோம் என கூறினர். NATO படையை சார்ந்த அனைவரும் கூட்டாக அப்கானிஸ்தானில் 2001 ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு படை திட்டத்தில் பங்கு கொண்டனர். அமெரிக்க மற்றும் இதர நாட்டு படைகள் தொடர்ந்து அப்கானிஸ்தானில் NATO பயிற்சி திட்டம் என்ற பெயரில் நீடித்து வருகின்றனர். [மூலம்: ரய்டர்ஸ்]
என்னதான் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அப்கானிஸ்தானில் நடந்த ஆக்கிரமிப்பாளர்களின் கரங்களால் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கான ஆதாரத்தை கண்டுபிடித்தாலும். அமெரிக்க படையினரை தண்டிப்பதிலிருந்து பாதுகாக்கும் அப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையேயான இரு நாட்டிற்கு மத்தியில் ஏற்பட்ட ஒப்பந்தம் நீடித்து இருக்கையில் இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்த குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தர முடியுமா என்பது கேள்விக்குறி.
 ரஷ்யா இஸ்லாமிய போராளிகளின் புதிய தளமாக விளங்குகிறது
 
ரஷ்யா சிரியாவில் தனது பங்களிப்பை அதிகப்படுத்திவரும் நிலையில், அது தனது ராணுவத்தை புதை குழியில் சிக்க வைக்கக்கூடிய ஆபத்தான நிலையை எடுத்துள்ளது. அதன் படையெடுப்பு ஏற்கெனவே அதற்கு இருந்த உள்நாட்டு அச்சுறுத்தலை அதிகப்படுத்தியுள்ளது, அது முழு நாட்டையும் நிலைகுலைய செய்யக்கூடியதாக இருக்கின்றது. ரஷ்யாவில் ஒரு புது வகையான இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்து வருகிறது, அதற்கு எரியூட்டும் விதமாக ரஷ்ய வீரர்கள் உள்நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த அளவிற்கு சாத்தியக்கூறுகளுடன் ஒரு தீவிரமான பயங்கரவாத குழு அமைவது என்பது நினைத்து பார்க்கக்கூடிய அளவில் கூட இருந்திருக்கவில்லை. அந்நேரத்தில் ரஷ்யா மண்ணில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வட காகேசிய பகுதியை சார்ந்த செச்நியா போராட்டக்காரர்களின் தூண்டுதலின் பெயரில் நடத்தப்பட்டது. 2009 ல் செச்சென்யாவில் தான் வெற்றி கொண்டதாக அறிவித்த ரஷ்யா அடிப்படைவாத பயங்கரவாதத்தின் அச்சத்தை பெருமளவில் கட்டுப்படுத்துவதற்கு உறுதியுடன் இருந்தது. ஆனால் பயங்கரவாத இஸ்லாம் காணாமல் போய்விடவில்லை. உண்மையில், அடிப்படைவாத கருத்துக்கள் செசன்யாவிலிருந்து ரஷ்ய மத்திய பகுதி முழுவதும் பரவியது. அவை மத்திய கிழக்கினால் பயிக்சியளிக்கப்பட்ட ரஷ்ய இமாம்கள் மூலம் பரப்பப்பட்டு அதற்கு நாட்டின் முஸ்லிம் குடிமக்கள் மற்றும் மாஸ்கோவிலுள்ள மத்திய ஆசியாவிலிருந்து குடி புகுந்தவர்கள் என புதிய ஆதரவாளர்களை கிடைக்கப்பெற்றது. மேலும் இளைஞர்கள் சிலர் மற்றும் நீண்ட காலமாக இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு கொண்ட முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாக மாறி வருகின்றனர். அவர்களின் ஐரோப்பிய சகோதரர்களை போல இவர்கள் மேற்கத்திய ‘சிலுவை போராளிகளுக்கு’ எதிராக கோபத்தை வரவைக்கும் இணையதள காணொளிகளையும் சமூகதள செய்திகளையும் பார்க்கின்றனர். இது ரஷ்யாவிற்கு மிகவும் ஆபத்தாகும். நாடு பயங்கரவாத இஸ்லாத்திற்கு எதிரான போரில் புதிய முனையாக மாறிவிட்டது, ஐரோப்பாவின் அதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட நாடு இந்த போரை சந்திக்க தயார் செய்ய தவறிவிட்டது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி இஸ்லாமிய அரசுடன்(IS) கைகோர்ந்து 5000 ரஷ்ய மற்றும் முன்னால் சோவியத் நாடுகளை சார்ந்த மக்கள் போரிட்டு வருகின்றனர் ( தனிமனித குழுக்கள் 7000 மக்கள் வரை இருக்கலாம் என கூறுகின்றனர்). இன்றைய நிலையில் அரபு மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்து இஸ்லாமிய அரசு (IS) மத்தியில் முகவும் பிரபலமான மொழியாக ரஷ்ய மொழி இருக்கின்றது. சிரியாவிலுள்ள தரய்யாவில் காணப்பட்ட துண்டு பிரசுரத்தில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இவ்வாறு கூறுகின்றது:
 
‘இன்று சிரியா, நாளை ரஷ்யா! செச்னிய மற்றும் டாடார்களே எழுந்திருங்கள்!
புதினே, நாங்கள் உனது மாளிகையில் தொழுவோம்!” ரஷ்ய அதிகாரிகள் அபாயத்தை உணர்ந்து விழித்து எழுந்திருக்கின்றனர். புதினின் தலைமை அதிகாரி, செர்ஜி இவாநோவ், இஸ்லாமிய அரசுடன் சேர்ந்து சண்டையிட்ட பல ரஷ்யர்கள் நாடு திரும்பிவிட்டனர், இது நேரடியான ஆபத்தை விளைவிக்கூடியதாக இருக்கின்றது என கூறினார். செப்டம்பர் மாதம் நடந்த ஐ.நா பொதுக்கூட்டத்தில் புதின் உறையாற்றுகையில் “சிரியாவில் ‘இரத்தத்தின் வாடையை’ நுகர்ந்த போராளிகள் ரஷ்யாவிற்கு திரும்பி “அவர்களுடைய பயங்கரவாத” செயல்களை இங்கு தொடர்வார்கள் என அறிவித்தார். ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு படை சிரிய பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அதிகமில்லாத வட காகசஸ் பகுதியில் தீவிரவாத்த்திற்கு எதிரான சிறிய அளவிலான தாக்குதல்களை மட்டுமே நடத்தும் வழக்கம் கொண்டிருந்தது. அடிப்படைவாதிகளாக மாறும் தாதர்களையும் பஷ்கிர்ஸ்களையும் எதிர்கொள்ளும் அளவு தயார் நிலையில் அவர்கள் இல்லை, இதனால் பெருதகரங்களில் வாழும் மத்திய ஆசியர்களிடமும் உள்நாட்டிலும் இஸ்லாமிய அரசின்(IS) ஊடுருவலை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. இந்த காரியம் மிகவும் சவாலானதாகும் ஏனெனில் இந்த புதிய ஜிஹாதானது பூலோக அளவில் பரப்பளவு மிகுதியானதாகும் (ரஷ்ய அதிகாரிகள் தீவிரவாதிகளை கிழக்கு சைபீரியாவில் கைது செய்த விவரத்தை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன) மேலும் அது நகரங்களிலும் சிறகை விரித்துள்ளது. இதன் விளைவாக, தீவிரவாத அமைப்புகள் ஒருங்கினைவதற்கும் மற்றும் ஒளிவதற்கும் எவ்வித சிரமுமின்றி எளிதாக செயல்பட வித்திடுகிறது. ரஷ்யாவில் அஹ்லுஸ் சுன்னாவினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் புதின் சிரியாவில் உள்ள அஹ்லுஸ் சுன்னாவினருக்கு எதிராக காய் நகர்த்தியது தீவிரவாதத்திற்கு எதிரான ஆபத்தை மேலும் அதிகப்படுத்திக்கொண்டு விட்டார். ஏற்கெனவே, 55 வஹ்ஹாபிய அறிஞர்கள் சிரியாவின் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதளுக்கு எதிராக ஜிஹாத் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். (மூலம்: வாஷிங்டன் போஸ்ட்)
ரஷ்யாவும் மேற்குலகும் வேண்டுமென்றே அடிப்படைவாதத்திற்கான மூலக்காரணத்தை தீர்ப்பதற்கான காரியங்களை தவிர்க்கின்றன அதாவது
அ) முஸ்லிம் நாடுகளில் கண்டனத்திற்குரிய முறையிலான வெளிநாட்டு தலையீடு.
ஆ) பலவீனமான அறிவுடைய மேற்கத்திய சிந்தனை.

அரசு பற்றிய இஸ்லாத்தின் கருத்தாக்கம்– பாகம் – 2

இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான் என்பதால், இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஆட்சியாளர்கள் முழுமையான முறையிலும் எவ்வாறு அருளப்பட்டுள்ளதோ அதேமுறையிலும் நடைமுறைப்படுத்தவேண்டியது கட்டாயமாகும். ஏனெனில்
 
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
 
وَمَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
 
அல்லாஹ்வின்தூதர்எவற்றைகொண்டுவந்துள்ளாரோஅவற்றைஎடுத்துக்கொள்ளுங்கள், அவர்எவற்றைவிட்டும்உங்களைதடுக்கிறாரோஅவற்றைவிட்டும்தவிர்ந்துகொள்ளுங்கள்இன்னும்அல்லாஹ்வைஅஞ்சிஹக்கொள்ளுங்கள், நிச்சயமாகஅல்லாஹ்தண்டனைஅளிப்பதில்கடுமையானவனாகஇருக்கிறான்ஹ   (அல்ஹஷ்ர் : 7)
 
இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘مَا’ என்ற அரபி வார்த்தை பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே நபி(ஸல்) ஏவியுள்ள அனைத்து கட்டளைகளையும் ஏற்று செயல்படுத்தவேண்டும் என்பதும் அவர்கள்(ஸல்) தடைசெய்துள்ள அனைத்திலிருந்தும் விலகிக் கொள்ளவேண்டும் என்பதும் கட்டாயமாகும்(வாஜிபாகும்). இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ஏவல் மற்றும் விலக்கல் தொடர்பான வேண்டுகோள் திட்டவட்டமான கட்டளையாக உள்ளது ஏனெனில், இந்த வசனத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்று செயல்படாதவர்களுக்கும் அவர்கள் (ஸல்) தடைசெய்துள்ள விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு’ என்ற சொற்றொடர் இந்த கட்டளை திட்டவட்டமானது என்பதற்குரிய கரீனாவாக விளங்குகிறது.
 
மேலும் அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு தீர்ப்பளிக்கவேண்டும் என்று தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அவன்(சுபு) கட்டளையிட்டுள்ளான்,
 
‎‎‎وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ
  ‎‎‎‎        ‎‎‎‎‎‎        ‎‎‎  
 
அன்றியும்அல்லாஹ்அருளியவற்றைகொண்டுஅவர்கள்மத்தியில்தீர்ப்பளிப்பீராக (அல்மாயிதா : 49)
 
அல்லாஹ்(சுபு) அருளியுள்ளவை ஏவல்கள் என்றாலும் விலக்கல்கள் என்றாலும் அவை தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் மட்டுமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற இந்த கட்டளை அல்லாஹ்(சுபு) அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுக்கு பின்னர் வருகின்ற அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் அளிக்கப்பட்ட திட்டவட்டமான கட்டளையாக உள்ளது, ஏனெனில் ‘مَا’ என்ற இந்த வார்த்தை பொதுவான அர்த்தம் கொண்டது என்பதால் அதில் அல்லாஹ்(சுபு) அருளிய அனைத்து சட்டங்களும் அடங்கும்.
 
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களுக்கு பின்னர் ஆட்சியதிகாரத்தை பெற்றுள்ள அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களும் மக்களின் மனஇச்சைகளை பின்பற்று வதிலிருந்தும் அவர்களுடைய அபிலாஷைகளுக்கு கட்டுப்படுவதிலிருந்தும் தடைசெய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ
 
அவர்களுடையமனஇச்சைகளைநீர்பின்பற்றாதிருப்பீராகஅல்லாஹ்அருளியசிலவற்றிலிருந்துஉம்மைதிருப்பிவிடாதவகையில்அவர்களிடம்ஹஎச்சரிக்கையுடன்இருந்துகொள்வீராக!   (அல்மாயிதா : 49)
 
அல்லாஹ்(சுபு) அருளியவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தும்போது மக்களின் களங்கமுற்ற கருத்தாக்கங்களுக்கு ஏற்ப நடந்துகொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களையும் அவர்களுக்கு பின்னர் வரும் முஸ்லிம் ஆட்சியாளர்களையும் அல்லாஹ்(சுபு) எச்சரிக்கை செய்கிறான். அல்லாஹ்(சுபு) அருளியவற்றுக்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது கூடும் என்றோ அல்லது அல்லாஹ்(சுபு) அருளியவை சட்டரீதியானதல்ல என்றோ ஒருவர் கருதினால் அவர் நிச்சயமாக காஃபிர் என்று அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்!
 
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
 
எவர்கள்அல்லாஹ்அருளியவற்றைகொண்டுதீர்ப்பளிக்கவில்லையோநிச்சயமாகஅவர்கள்காஃபிர்கள்ஆவார்கள் (அல்மாயிதா : 44)
 
அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது கூடும்  என்று நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நிய மானவற்றை கொண்டு ஆட்சி செய்தால் அவர் ஃபாஸிக் (வெளிப்படையாக பாவம் செய்பவர்) என்றும் ழாளிம் (அநீதம் இழைப்பபவர்) என்றும் அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்.
 
இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை முழுமையாகவும் விரிவாகவும் ஒரே சமயத்திலும் மேற்கொள்ளவேண்டுமே ஒழிய படிப்படியாக மேற்கொள்ளக்கூடாது ஏனெனில் படிப்படியான நடைமுறைப்படுத்துதல் என்பது இஸ்லாமிய சட்டங்களுக்கு வெளிப்படையான முறையில் முரண்பாடாக இருக்கிறது. இஸ்லாமிய சட்டங்களின் சட்டரீதியான மதிப்பில் நம்பிக்கை கொள்ளாத நிலையில் அல்லது இஸ்லாமிய சட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றின் சட்டரீதியான மதிப்பில் நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ்(சுபு) அருளிய அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அல்லது சில சட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு மற்ற சில சட்டங்களை புறக்கணித்துவிட்டார் என்றால் அவர் காஃபிர் என்றே கருதப்படுவார். இஸ்லாத்தின் சட்டங்களில் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் அவற்றை ஒருவர் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அவர் பாவியாகவும் மாறு செய்தவராகவும் கருதப்படுவார்.
 
எனவே ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம்காட்டவும் கூடாது, சட்டங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தவும் கூடாது, ஏனெனில் குறிப்பிட்ட ஒரு வாஜிபிற்கும் மற்றொரு வாஜிபிற்கும் இடையிலும், குறிப்பிட்ட ஒரு விலக்கலுக்கும் மற்றொரு விலக்கலுக்கும் இடையிலும், குறிப்பிட்ட ஒரு சட்டத்திற்கும் மற்றொரு சட்டத்திற்கும் இடையிலும் எத்தகைய வேறுபாடுகளும் கிடையாது! அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் அனைத்தும் சமமானவையாகும், எத்தகைய தாமதமோ அல்லது தள்ளிப்போடுதலோ அல்லது படிப்படியான நடைமுறைப்படுத்துதலோ எதுவுமின்றி அவையனைத்தையும் ஒரேநேரத்தில் முழுமையாகவும் விரிவாகவும் உடனடியாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும், இதற்கு மாறுபாடான முறையில் செயல்படுபவர் கீழ்க்கண்ட அல்லாஹ்(சுபு)வின் வார்த்தையின் அடிப்படையில் தண்டனைக்குரியவராகவே கருதப்படுவார்!
 
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ‎‎‎‎
 
ஆகவேவேதத்தில்சிலவற்றில்ஈமான்கொண்டுசிலவற்றைநீங்கள்நிராகரிக்கிறீர்களா! இவ்வாறுசெய்பவர்களுக்குஇம்மையில்இழிவைதவிரவேறொன்றுமில்லை. அன்றியும்மறுமையிலோகொடியவேதனையின்பால்அவர்கள்திருப்பப்படுவார்கள்! நிச்சயமாகநீங்கள்செய்பவைகுறித்துஅல்லாஹ்பாராமுகமாகஇல்லை (அல்பகரா : 85)
 
ஆகவே இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலில்லை அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சூழல் ஏற்படவில்லை அல்லது ஷரீஆவை நடை முறைப்படுத்துவதற்கு உலகமக்களின் வெகுஜனக்கருத்து எதிராக உள்ளது அல்லது இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் அனுமதிக்காது அல்லது இது போன்ற அற்பமான மதிப்பற்ற சாக்குப்போக்குகள் அடிப்படையில் இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இஸ்லாமிய அரசு மனிதர்களை கொண்டுள்ள அரசாக உள்ளதே ஒழிய (தெய்வீகம் பொருந்திய) புனிதமான அரசல்ல; அதை நடத்திச்செல்லும் கலீஃபா அல்லது இமாம் மனிதராக இருக்கிறார் என்பதால் அவர் புனிதமானவராகவோ அல்லது மாசற்றவராகவோ (மஃஸும்) இருப்பதற்கு சாத்தியமில்லை. அவரை உம்மா நியமனம் செய்கிறதே ஒழிய அல்லாஹ் (சுபு) நியமனம் செய்வதில்லை ஏனெனில் ஆட்சியதிகாரத்தை அவன்(சுபு) உம்மாவுக்கு அளித்திருக்கிறான், எனவே உம்மாவின் சார்பில் கலீஃபா ஆட்சிசெய்யும் பொருட்டு பைஆ மூலமாக அவரை நியமனம் செய்யும் அதிகாரத்தை அல்லாஹ்(சுபு) உம்மாவிற்கேஹ அளித்து உள்ளான். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்(ரளி) அறிவித்திருப்பதாவது : நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன், ‘கைகளால் கைலாகு அளிப்பதின் மூலமும் இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதின் மூலமும் எவரேனும் ஒருவர் ஓர் இமாமுக்கு பைஆ அளித்தால் பிறகு இயன்றவரையில் அவர் அவருக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும்’ அப்துல்லாஹ் இப்னு உமர்(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிற்றுள்ளேன், ‘எவரேனும் தமது கழுத்தில் கலீஃபாவின் பைஆ இல்லாத நிலையில் மரண மடைந்தால் பிறகு அவருடைய மரணம் ஜாஹிலிய்யா (அறியாமை காலத்து) மரணமாகும்’ உம்மாவின் சார்பாக கலீஃபா ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார், எனவே கலீஃபா பதவிக்கு நியமிக்கப்படும் நபரிடம் அவருக்குரிய ஆட்சியதிகாரம் தொடர்பான சட்டரீதியான அதிகாரங்களை அளிக்கவேண்டியது கட்டாயமாகும், தனது அபிப்ராயத்தின் அடிப்படையில் செயலாக்க அமைப்புகள், சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கு அவருக்கு உரிமையுண்டு. கலீஃபா பதவியை ஏற்றுக்கொள்ளும் நபர் மனிதராகவே இருக்கிறார், எனவே அவர் தவறிழைப்பதற்கும் ஞாபகமறதிக்கு உட்படுவதற்கும் பொய்யுரைப்பதற்கும் துரேகம் இழைப்பதற்கும் அல்லது மக்களுக்கு எதிராக கலகம் செய்வதற்கும் சாத்தியம் இருக்கிறது, அவர் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக இல்லை ஏனெனில் மாசற்ற நிலை என்பது முற்றிலும் நபிமார்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் மட்டுமே உரியதாகும்.
 
கலீஃபாவாக இருக்கும் இமாம் தவறு செய்யக்கூடும் என்றும் அவர் அநீதம் இழைப் பராகவோ அல்லது பாவம் செய்பவராகவோ இருக்கக்கூடும் என்றும் அதன்காரணமாக மக்கள் அவரை வெறுக்கவும் சபிக்கவும் கூடும் என்றும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நமக்கு அறிவித்து கொடுத்துள்ளார்கள். மேலும் கலீஃபா வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற் கொள்ளக்கூடும் என்பதையும் அவர்கள்(ஸல்) நமக்கு அறிவித்துள்ளார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் இமாம் அல்லது கலீஃபா மாசற்ற நிலையில் தூய்மையானவராக இருக்கிறார் என்பதுடன் முரண்படுகின்றன என்பதோடு அவர் பாவம் செய்வதிலிருந்து பரிசுத்தமானவராக இருக்கிறார் என்பதையும் மறுக்கின்றன. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது ‘அறிந்துகொள்ளுங்கள்! இமாம் என்பவர் கேடமாகும், அவருக்கு பின்னால் நின்று மக்கள் போரிடுவார்கள், அவரை கொண்டே தங்களை பாதுகாத்து கொள்வார்கள்’ நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஃப் இப்னு மாலிக்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் பதிவு செய்யப் பட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது : ‘உங்களுடைய இமாம்களில் சிறந்தவர் யார் எனில் நீங்கள் அவரை நேசிப்பீர்கள் அவரும் உங்களை நேசிப்பார்; நீங்கள் அவருக்காக துஆ செய்வீர்கள் அவரும் உங்களுக்காக துஆ செய்வார். உங்களுடைய இமாம்களில் மோசமானவர் யார் எனில் நீங்கள் அவரை வெறுப்பீர்கள் அவரும் உங்களை வெறுப்பார்; நீங்கள் அவரை சபிப்பீர்கள் அவரும் உங்களை சபிப்பார்’ உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்ததாக புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : ‘நபி(ஸல்) அவர்கள் எங்களை (பைஆ செய்வதற்கு) அழைத்தார்கள் எனவே நாங்கள் அவர்களிடம் பைஆ செய்தோம். ‘இன்பத்திலும் துன்பத்திலும் இலகுவிலும் கஷ்டத்திலும் நாங்கள் முழுமையாக கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரத்தை பெற்றுள்ளவர்களுடன் சர்ச்சை செய்ய மாட்டோம் என்றும் ‘அல்லாஹ்(சுபு)விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குஃப்ரை கண்டால் ஒழியஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  பைஆ செய்தோம்’ இமாம் அல்லது கலீஃபா தவறு செய்யக்கூடும் என்பதற்கும் பாவம் செய்யக்கூடும் என்பதற்கும் இந்த ஹதீஸ்கள் தெளிவான ஆதாரங்களாக விளங்குகின்றன என்ற முறையில் இமாம் அல்லது கலீஃபா மாசற்றவராக (infallible) இல்லை என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன.
 
ஆகவே முஸ்லிம்கள் ஆட்சியாளரை தட்டிக்கேட்கவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) ஹகட்டளையிட்டுள்ளான் என்பதால் இது அவர்களுடைய உரிமையாக இருக்கிறது ஏனெனில் ஆட்சியாளர் ஆட்சியதிகாரத்தில் மக்களின் பிரதிநிதியாகவும் அதிகாரம் பெற்றவராகவும் இருந்தபோதும், மக்கள் அவரை பதவியில் அமர்த்துகிறார்கள் என்றபோதும் அவர் தவறு செய்யக்கூடும் என்பதாலும் பாவம் செய்பவராகவும் குஃப்ர் செயல்பாடுகளை மேற்கொள்ப வராகவும் இருக்கக்கூடும் என்பதாலும் அவர் புனிதமானவராக இருப்பதற்கோ அல்லது பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக இருப்பதற்கோ சாத்தியமில்லை.
 
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
‎‎‎وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ    ‎‎  ‎‎                    
 
(ஈமான்கொண்டவர்களே!)
உங்களிலிருந்துஒருகூட்டத்தினர்சிறந்தவற்றின்பால்அழைப்பவர்களாகவும்நன்மையைஏவிதீமையைதடுப்பவர்களாகவும்இருக்கவேண்டும், நிச்சயமாகஅவர்கள்தான்வெற்றியாளர்கள்  (ஆலஇம்ரான் : 104)
 சிறந்த ஜிஹாது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, ‘கொடுங்கோல்ஆட்சியாளரிடம்சத்தியத்தைஉரைப்பதுதான்சிறந்தஜிஹாதாகும்!’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள்(ஸல்) கூறியதாவது, ‘ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிபும்(ரளி) கொடுங்கோல் இமாம் முன்பாக நின்றுகொண்டு நன்மையை ஏவி தீமையை தடுத்து அதன்காரணமாக கொலை செய்யப்பட்ட மனிதரும் ஷுஹாதாவின் தலைவர் ஆவார்கள்’ அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரளி) அறிவித்து ஸுனன் அபூதாவூதில் பதிவுசெய்யப்பட்ட ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘அல்லாஹ்வின்மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கவேண்டும். அன்றியும் அநீதம் இழைப்பவரின் கைகளை நீங்கள் தடுத்து நிறுத்தவேண்டும்; (தீமை செய்வதிலிருந்து) அவரை தடுத்து சத்தியத்தின்பால் செலுத்தவேண்டும்’ இப்னு மஸ்வூது(ரளி) அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பதாவது : ‘இல்லாவிடில் (பரஸ்ப்பர) பகைமையை கொண்டு அல்லாஹ் உங்களுடைய இதயங்களில் அடிப்பான்; அவர்களை சபித்ததுபோல் உங்களையும் சபிப்பான்!’
 
சில தருணங்களில் நாவைக்கொண்டு ஆட்சியாளர்களை தடுப்பதற்கு அப்பாற்பட்டு ஆயுத போராட்டம் மேற்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிட்டுள்ளது, கலீஃபா வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் பின்வரும் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது போல் அவருக்கு எதிராக ஆயுதமேந்தி போர் செய்யவேண்டும் என்று அது நமக்கு கட்டளையிட்டுள்ளது, உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்திருப்பதாவது : அல்லாஹ்விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குஃப்ரை அவர் மேற்கொள்ளாத வரையில் அதிகாரம் பெற்றுள்ளவர்களிடம் நாங்கள் சர்ச்சை செய்யமாட்டோம் (என்று பைஆ செய்தோம்)’
 
முஸ்லிம் சகோதரர்களே!
 
இதுதான் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து நிறுவவேண்டும் என்று அல்லாஹ் (சுபு) கட்டளையிட்டுள்ள இஸ்லாமிய அரசாகும்! நபித்துவத்தின் அடிச்சுவட்டின்மீது ‘கிலாஃபா ராஷிதாவை’ நிறுவும் பொருட்டும், ‘அதன்பின்னர் நபித்துவத்தின் வழிமுறையில் மீண்டும் கிலாஃபா ராஷிதா ஏற்படும்’ என்ற அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் நற்செய்தியை உண்மைப்படுத்தும் பொருட்டும் எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்!