Mar 2, 2011

ஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும்

கடந்த பல தசாப்தங்களாக மேற்குலகைப் பொருத்தவரையில் ஜிஹாத் என்பது ஒரு வாதப்பொருளாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் உண்மையான சக்தியினை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணர்ந்ததாலேயே, மேற்குலகு, ஜிஹாத் என்ற சொல்லிற்கு அஞ்சுகிறது. எனவே அதனது உண்மை அர்த்தத்தினை திரிக்க அவர்கள் முயற்சிப்பது ஒன்றும் முஸ்லிம்களுக்கு புதிதானது அல்ல.

முஸ்லிம் உம்மத்திற்கு எதிராக சிலுவைப்போர் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தம் திரிக்கப்படுகிறது என்பதனை நாம் வரலாறு நெடுகிலும் காண்கின்றோம். ஆனால்; அதன் வடிவங்கள் வேறுபடக்கூடும். உதாரணமாக, டோனி பிளயெரின் கூற்றில் 'இஸ்லாம் ஒரு சமாதானத்திற்கான மார்க்கம்" என்பதாகவும், மேற்குலகை ஆதரிக்கும் இஸ்லாமியவாதிகளின் அர்த்தத்தில், "ஒருவர் தமது மனோ இச்சைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு விஷயம்" என்பதாகவும் இருக்கலாம்.

இவ்வாறான அர்த்தங்களை திரிக்கும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, மேற்குலகானது, ஜிஹாதினை ஒரு 'பயங்கரமான விஷயமாக" சித்தரிக்கின்ற உபாயங்களையும் தனது வழிமுறையாக கையாண்டு வருகிறது. உதாரணமாக, ஜிஹாத் தொடர்பாக உரை நிகழ்த்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இங்கிலாத்திலுள்ள பின்ஸ்பெரி பார்க் பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டதை நாம் ஊடகங்களினு}டாக அறிந்திருப்போம். பள்ளிவாசல்களை மூடப்படுவதைப்போன்ற இத்தகைய செயற்பாடுகள், ஜிஹாத் தொடர்பான இஸ்லாத்தின் கருத்துக்கள் பள்ளிவாசல்களில் பேசப்படுவதை பெரும்பாலும் தடுத்து விடுகின்றன. உம்மத்திற்கெதிராக அதிகளவில் அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற இன்றைய சூழலில் ஏன் நீங்கள் ஜிஹாத் தொடர்பாக பேச மறுக்கின்றீர்கள் என பொதுமக்கள் பள்ளிவாசல் நிர்வாகங்களை வினவும்போது, அவர்கள், 'பள்ளிவாசல்கள் இழுத்து மூடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை", என தெரிவிக்கின்றனர். இவ்வாறான எத்தகைய வழிமுறைகளையும் கடைப்பிடித்து, ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தத்தினை திரிபுபடுத்த முயற்சிப்பதில் அவர்கள் கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். ஏனெனில் யுத்தம் என்பது எமது வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். பாரம்பரியமாகவே, தமது இலக்கினை அடைந்து கொள்வதற்காக, மேற்குலகு, தமது பலத்தினை உபயோகப்படுத்த என்றும் தயங்கியதில்லை. அமெரிக்க கூட்டுப்படையின் ஈராக்கிய யுத்தம் இதற்கொரு சிறந்த உதாரணமாகும். ஆனால், 'இஸ்லாம் பலப்பிரயோத்திற்கு எதிரானது" என முஸ்லிம்களையே கூறவைக்கும் நயவஞ்சக முயற்சிகளை மேற்கொள்வதிலும் அவர்கள் வல்;;லவர்கள். இத்தகைய யுக்திகளை பயன்படுத்துவதன் மூலமாக முஸ்லிம்களின் மனோநிலையை பலவீனப்படுத்தி தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எளிதுபடுத்துவதில் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகண்டுள்ளார்கள்.

யுத்தம் ஏன் தவிர்க்கப்பட முடியாதது?

தனது இறையாண்மையை பாதுகாக்கும் தற்காப்பு உணர்வு உலகின் அனைத்து நாடுகட்கும் அதன் மக்கட்கும் உண்டு. அதனை பாதுகாப்பதற்காக அந்த தேசம் எந்த விலையினையும் கொடுக்கத் தயாராகி விடுகிறது. அதேபோன்று ஒவ்வொரு தேசத்திற்கும் அடிப்படையான இலக்குகளும் காணப்படுகின்றன. மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைவதே மேற்கத்தியத்தின் அடிப்படை நோக்கமாகும். எனினும் இஸ்லாத்தினை பொருத்தமட்டில் அல்லாஹ் (சுபு) வின் திருப்தியை பெற்றுக்கொள்வதே அதனது ஏக இலக்காகும். எனவே இவற்றில் எந்த தேசத்தினை எடுத்துக்கொண்டாலும் அது தனது சித்தாந்தத்தை மேலோங்கச்செய்து தனது இலக்கினை அடைவதற்கு பலம் அவசியமாகும். இதற்காக உள்நாட்டிற்குள் காவல்துறையும் புலனாய்வுத்துறையும் செயற்படுத்தப்படுவதுடன் வெளிநாட்டுறவில் இராணுவமும் புலனாய்வுத்துறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுவாக எந்தவொரு தேசத்தை பொருத்தவரையிலும் அதனது வரவுசெலவுத்திட்டத்தில் பெரும் ஒதுக்கீட்டை பெறுவது பாதுகாப்புத்துறையேயாகும். எனவே எவராவது ஒருவர் பலப்பிரயோகம் தேவையற்றது எனக்கூறுவாரேயானால் அவர் யதார்த்தத்தை மறுக்கிறார் என்பதே உண்மையாகும். பலம் இல்லாத நிலையில் குழப்ப நிலை தொடர்வது தவிர்க்க முடியாதது. இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டால் எமது வாதம் யுத்தத்தை மறுப்பதாக அல்லாமல் அது எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதை நோக்குவதாக இருக்கும்.

சோசலிஷவாதிகள், மனிதாபிமானவாதிகள் போன்றோர்களுடன் யுத்தம் தொடர்பாக உரையாடும்போது, 'யுத்தம் தவறானது" என்ற வாதத்தின் வாயிலாக இஸ்லாத்தினை யுத்தத்திற்கு எதிரான ஒன்றாக இனம்காட்டும் முயற்சியின்போதும், 'யுத்தம் குறித்து இஸ்லாத்தில் எவ்வித கொள்கையும் இல்லை' என்பதை நிறுவ முயற்சிக்கும் விஷயத்திலும் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விசுவாசம் கொண்டோரே! நிராகரிப்போரிலிருந்து உங்களை அடுத்து இருப்போருடன் போர் செய்யுங்கள்; அவர்கள் உங்களிடம் கடுமையையே காண வேண்டும்: இன்னும், நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையோருடன் இருக்கின்றான். (அத்தவ்பா:123)

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என இறை நிராகரிப்பாளர்கள் கூறும் வரையில் போர் புரியுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன்.
இதேபோன்று, அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச்செய்வதற்கான முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றும் பொருட்டு காபிர்களுடன் போராடுவதே ஜிஹாத் என்பதாக உலமாக்கள் ஏகோபித்த முடிவினைக் கொண்டுள்ளனர்...

இங்கு கவனிக்கத்தக்க முக்கிய இரு விஷயங்கள் இருக்கின்றன.
அதாவது.

செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக காபிர்களுடன் போராடுவது. நோக்கம் குறித்தது:அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வது.

அனைத்து சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் பொருத்தவரையிலும், அதனை மேலோங்கச்செய்வதிலும், பரப்புவதிலும், பாதுகாப்பதிலும் போராட்டங்களும் யுத்தங்களும் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேற்குலகின் யுத்தத்திற்கான அடிப்படை உலக இலாபங்களை அடைந்து கொள்வதாகும். அதனை இவ்வாறு சொல்லலாம். ஆதாவது உலக இலாபங்களை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றுவதற்காக போராடுதலாகும்.

இங்கும் கவனிக்கத்தக்க முக்கிய இரு விடயங்கள் இருக்கின்றன.
அதாவது

செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக எவருடனும் போராடுவது. நோக்கம் குறித்தது: உலக இலாபங்களை அடைந்து கொள்வது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக முதலாளித்துவ தேசமும் இஸ்லாமிய தேசமும் பலத்தையினை பிரயோகிப்பதை நம்மால் காணமுடிகிறது. எனினும் மிகத்தெளிவான வேறுபாடு அதனது நோக்கத்திலேயே இருக்கிறது. எனவே நோக்கத்தில் காணப்படும் இந்த அடிப்படை வேறுபாட்டினை புரிந்து கொண்டு காபிர்களின் வலையில் சிக்கிவிடுவதிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

அதாவது ஜிஹாத்தினுடைய அர்த்தத்தினை தமது மனோ இச்சைகளுக்கு எதிரான போராட்டமாக மட்டும் இனம்காட்டுவதன் மூலம் அதனது உண்மை அர்த்தத்தினை மறைத்து முஸ்லிம்களை பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்குள் தள்ளுவதற்கான சகல முயற்சிகளையும் காபிர்கள் எடுப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜிஹாத் என்பது வெறுமனவே தமது மனோ இச்சைகளுக்கு எதிரான ஒரு போராட்டமா?
இந்த வினா இஸ்லாமிய ஷரியத்திலிருந்து விளங்கிக்கொள்ளப்படவேண்டும். ஜிஹாத் தொடர்பான மேற்குறித்த வாதமானது மிக அரிதான ஷரிஆ ஆதாரத்தின் அடிப்படையிலேயே விளங்கப்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் ஜிஹாத்தினுடைய நேரடி மொழியியல் அர்த்தம் தொடர்பான விளக்கத்திலும்; அதனது ஷரிஆ hPதியான அர்த்தத்திற்குமிடையிலான வேறுபாட்டினையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மொழியியல் ரிதியான ஜிஹாத் என்பதன் அர்த்தம் முயற்சித்தல் அல்லது போராடுதல் ஆகும்

எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ அதை எனக்கு நீ இணையாக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அவ்விஷயத்தில் நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். ( லுக்மான்:15)
மேலும் அல்லாஹ்வுடைய வழியில் எவர் ஜிஹாத் செய்கிறாரோ அவர் ஜிஹாத் செய்வதெல்லாம் (அதன் பலனெல்லாம்) தனக்காகத்தான் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
( அல் அன்கபூத்:6)


மேலும் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். அன்றியும் எதைப்பற்றி உனக்கு அறிவு இல்லையோ அதை எனக்கு இணையாக்குமாறு (மனிதனே) அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விடயத்தில்) நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். (அல் அன்கபூத்:8)

மேலும் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் - அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களி(ன் கூட்டத்தாருடன் சுவனத்தி)ல் நுழைவிப்போம். (அல் அன்கபூத்:9)

மொழியியல் ரிதியாக ஜிஹாத்திற்கான அர்த்தம் வழங்கபடுவது மேற்குறிப்பிட்ட நான்கு ஆயத்களில் மாத்திரமேயாகும். இந்த ஆயத்துக்களும் மக்காவில் அருளப்பட்ட மக்கீ ஆயத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இந்த ஆயத்துக்களைப்பொருத்தமட்டில் அது உண்மையாகவே யுத்தத்தைக் குறிக்கவில்லை. எனவே இந்த ஆயத்துக்களுக்கு சண்டையிடுதல் அல்லது கொல்லுதல் என அர்த்தம் கற்பிப்பது தவறானதாகும். எனினும் சண்டையிடுவதையும் கொல்வதையுமே ஜிஹாத்திற்கான ஷரிஆ ரிதியாக விளக்கமாகக் குறிக்கின்ற 120இற்கும் மேற்பட்ட ஆயத்துக்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.

விசுவாசிகளில் தங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)

இலேசாகவும் கவனமாகவும் ( இளைஞர்கள், முதியவர்கள், செல்வந்தர்கள், செல்வம் இல்லாதவர்கள், வாகனத்தில் ஏறியவர்கள், நடப்பவர்கள் ஆகியோர்) புறப்பட்டு, உங்களின் செல்வங்களாலும், உங்களின் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யுங்கள்: நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும். (அத்தவ்பா: 41)

(அத்தகைய வியாபாரமானது ) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய (இத்) துதரையும் ஈமான் கொண்டு உங்களுடைய பொருட்களையும் உங்களுடைய உயிர்களையும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் (ஜிஹாத்) செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாக இருக்கும். (அஸ்ஸவ்ப்:11)
இந்த ஆயத்துக்களை பொருத்தமட்டில் இவைகள் நேரடியான சண்டையிடுதலையே குறிப்படுகிறதேயொழிய இவற்றிற்கு நேரடி சொல் விளக்கத்தினை எடுப்பது தவறானதாகும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து உலமாக்களும் ஜிஹாத்திற்கான ஷரிஆ அர்த்தமாக யுத்தம் புரிவதையே சரிகாண்கின்றனர்.

ஹனபி மத்ஹப் - பாதியா அஸ்ஸானியா மாலிக் மத்ஹப் - மன்ஹல் ஜலீல் ஷாபி - அல் இக்னா ஹன்பலி - அல் முஹ்னி சிலர் ஷரிஆ அர்த்தத்தை ( சண்டையிடுதல், கொல்லுதல்) பொருள் hPதியான அர்த்தத்தை(மனோஇச்சைகளுக்கு எதிரான போராட்டம்) விடவும் குறைவாக கணிக்கின்றனர். அதற்காக அவர்கள் கீழ்வரும் ஹதீஸினை முன்வைக்கின்றனர்.

நான் சிறிய ஜிஹாத்திலிருந்து பெரிய ஜிஹாதிற்கு திரும்பியுள்ளேன். இதற்கு ஸஹாபாக்கள் எது பெரிய ஜிஹாத் என நபிகளாரிடம் வினவியபோது அதற்கு அவர்கள் மனோ இச்சைகளுக்கெதிரான ஜிஹாத் என்றார்கள்.
மேற்கூறப்படும் ஹதீஸானது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதன்று. ஏனெனில் இது புனைந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹதீஸ் கலை நிபுணர் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் இப்ராஹீம் பீ அபி அப்லா என்வரின் கூற்று மட்டுமே என அறிவிக்கின்றார்கள்.

மேலும் கீழ்வரும் காரணங்களினால் இதனது கருத்தில் தவறு இருப்பது புலப்படுகிறது.

1. மேற்படி கூற்றானது ஜிஹாதின் மேன்மை குறித்த உறுதியான குர்ஆனின் கருத்திற்கு மாறுபாடானது.

விசுவாசிகளில் சங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)
2.மொழியியல் ரிதியான பொருளானது பொதுவானதாகும். ஆதாவது அது 'நப்ஸ்" யிற்கு எதிராக போராடுவதையும் சண்டையிடுவதையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் அதனது ஷரிஆ ரிதியான அர்த்தமானது காபிர்களுக்கு எதிரான போராட்டமேயாகும்.

3. மேற்படி ஹதீஸானது யுத்தம் செய்வதா, செய்யாது விடுவதா என்பது குறித்து தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கவில்லை. இது யுத்தத்தினை தடை செய்வதற்கான எவ்வித அறிகுறியையும் தெரிவிப்பதாக இல்லை.

இதேநேரத்தில் சிலர் ஜிஹாதினை தற்பாதுகாப்பிற்கான ஒரு விடயமாக மாத்திரம் இனம்காட்ட முயற்சிக்கின்றனர். இது மிகமிகத் தவறானதாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை மேலோட்டமாக பார்த்தால் கூட இது தவறான கருத்து என புரிந்து கொள்ளலாம்.

முஅத்ஆ யுத்தமானது ரோமாபுரிக்கெதிராக முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் 200,000 விரர்கள் கொண்ட ரோம இராணுவத்தினை 3000 முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். அதேபோன்று மக்காவெற்றியானது ஹ{னைன் யுத்ததினை தவிர்க்கமுடியாததாக மாற்றியமைத்ததையும் நாம் அறிவோம். தபூக் யுத்தமும் கூட முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டு அது ரோமர்களை முற்றுமுழுதாக அழித்தொழிப்பதற்கு ஏதுவாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஸஹாபாக்களின் இஜ்மா ( ஏகோபித்த முடிவு) விலும் அவர்கள் ஜிஹாத்தினை ஷாம், ஈராக், ஈரான், எகிப்து, வட ஆபிரிக்கா போன்ற பிரதேசங்களில் ஆரம்பித்திருப்பதை நாம் காணலாம். மேலும் ஷஹீத்களின் அந்தஸ்த்தானது இஸ்லாத்தில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே எவ்வாறு ஜிஹாத்தானது ஏனைய விடயங்களை விட குறைவாக மதிப்பிடப்படலாம்?

இஸ்லாத்தை நோக்கிய முறையான அழைப்பிற்கு பின்பு காபிர்களை இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துவதை இஸ்லாம் தடைசெய்கிறது. மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதில் நிர்ப்பந்தம் இல்லை என்ற குர்ஆனியக்கருத்தும் இதனையே வலியுறுத்துகிறது. எனினும் உலகில் அனைவரையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்காகவே இந்த தீன் இறக்கப்பட்டுள்ளது. இதனை அடைந்து கொள்வதற்கான கருவியே ஜிஹாதாகும். ஜிஹாத் இல்லாமல் அல்லாஹ் கூறுவதைப்போன்று இஸ்லாம் மறைந்து விடும்.

அவன் எத்தகையோன் என்றால் அவன் தன்னுடைய து}தரை நேர்வழியைக்கொண்டும் உண்மையான மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்தபோதிலும் மற்ற எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச்செய்யவே (தன் துதரை அனுப்பிவைத்தான்.)
( அஸ் ஸவ்ப்:9)


முஸ்லிம்கள் காபிர்களிடமிருந்தும் தம்முள் காணப்படும் காபிர்களின் முகவர்களிடமிருந்தும் இஸ்லாத்தினை பாதுகாக்க உறுதி கொள்ளவேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்

எவர் அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறுகின்றாரோ அவரைவிட சொல்லால் மிக்க அழகானவர் யார்? (புஸ்ஸிலத்:33)

No comments:

Post a Comment