Apr 27, 2016

இரத்தம் வறண்டு மடிந்து கொண்டிருக்கும் அல் அஸாத்தின் அரசு!

 
சிரியப் புரட்சி ஐந்து ஆண்டுகள் நிறைவையும் தாண்டி தொடரும் நிலையில் இன்றைய களநிலையும், நாட்டை உரிமை கோரும் சண்டைகளும் எதை நோக்கிச் செல்கின்றன என்பதை சுருக்கமாக விபரிக்கிறது இந்தக் கட்டுரை!
 
சிரியப் புரட்சி ஐந்து ஆண்டுகளையும் தாண்டித் தொடரும் என மிகச் சிலரே கருதினர். மிகக் கொடூரமான டமஸ்கஸ் அரசின் கொலைவெறித் தாண்டவத்தில் அரபு வசந்தத்தில் தொலைந்து போனவர்களாக சிரிய மக்கள் அடையாளப்படுத்தப்படுவர் என்றே பலரும் எதிர்பார்த்தனர். சிரிய மக்களின் புரட்சிக்கு குருதித் துளிதான் முற்றுப்புள்ளி என அனேகர் வாதாடினர். ஆனால் இன்று கதை மாற்றி எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. பஸார் அல் அஸதின் அரசும், அவனது  அழிவுப்படையும் இரத்தப்பெருக்கால் அழிந்து கொண்டிருக்கிறது. பிரமாண்டமாகக் காட்டப்படும் அவனது அரியணையும், கூலிப்படையும் அவனது முன்னைய நிலையின் நிழல்கள் மாத்திரமே என்றாகி விட்டன. அரைத் தசாப்தங்களாகத் தொடர்ந்த நெடிய யுத்தம் சிரிய அரசின் சக்தியை மிகைத்து விட்டது. எதிர்காலம் அரசின் திசையில் நிச்சயமாய் இல்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. இந்நிலை அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும், புரட்சிப்படையும் பெற்ற தொடர் வெற்றிகளில் அரசின் குருதி வற்றி விட்டதன் விளைவு. இதை பல கோணங்களில் காணலாம்.
 
நாட்டின் நெட்டாங்கு, அகலாங்கு எங்கிலும் கிளர்ச்சிப் படைகளை ஐந்து முழு ஆண்டுகளாக எதிர்கொண்ட பஸாரின் அரசு சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. நாட்டை ஒட்டு மொத்தமாக மீளப்பெறுவதற்கு பஸாரிடம் வளம் கிடையாது. நாட்டின் சனச்செறிவு குறைந்த வடக்கு பிராந்தியத்தையும், கிழக்குப் பிராந்தியத்தையும் மீளப் பெரும் நோக்கத்தை அவன் என்றோ கைவிட்டு விட்டான். இன்று அவனின் துருப்புக்களால் பாரிய அளவிலான தரைத் படை நகர்வை மேற்கொள்ள முடியாத நிலை. வெற்றி கொண்ட பெரிய பிராந்தியங்களை தக்க வைக்க முடியாத நிலை. இன்று பஸார் தலைநகர் டமஸ்கஸ்ஸையும், மத்தியதரை கடற்கரையை அண்டிய ஓர் ஒடுங்கிய பிராந்தியத்தையும் மாத்திரம் பாதுகாத்தால் தலை தப்பியது என்று சிந்திக்கும் நிலை.
 
இந்த மூலாபாயமும் அலவிகளின் முக்கிய பகுதிகளை பாதுகாப்பதை மையப்படுத்தியது. அதற்கு மேலால் நாட்டின் ஏனைய பகுதிகளில் கால் வைப்பதை அகலக்காலாக அரசு நோக்குகிறது. அதற்கான பலமோ, வளமோ அதற்கு கிடையாது. 2016, மார்ச் மாதத்தில் நடந்த “battle of Palmyra – பல்மீறா பகுதியை மீட்பதற்கான சமர்” இதற்கு ஓர் நல்ல எடுத்துக் காட்டு. இந்தச் சமர் முழுக்க முழுக்க சிரியத்துருப்புக்கள் அல்லாத அந்நிய உதவிப்படைகளால் தான் நடாத்தப்பட்டது. நாடெங்கும் போராடத்தேவையான சொந்தப்படை சிரிய அரசிடம் இல்லை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் பஸாருக்கு உதவி வரும் பல்தேசிய படைகளின் உதவியால் தான் பல்மீறா பகுதி மீளப்பெறப்பட்டது. யு.கே இன்டிபென்டண்ட் பத்திரிகை இது குறித்து குறிப்பிடும்போது, “ புகைப்படங்களின் ஆய்வு, சமூக வளைத்தளங்களின் இடுகைகள், ஈரானிய, ரஸ்ய ஊடகங்கள், ஏன்; சிரிய ஊடகங்கள் கூட நகர்வு ரஸ்யப்படைகளால் வழிநடாத்தப்பட்டதை, கூடுதலான எடுபிடி வேலைகள் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை ஜெனரலுக்கு கீழ் இயங்கிய ஆப்கானிய, ஈராக்கிய ஷிஆ இராணுவச் சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்டதை தெரிவிக்கின்றன.” [1]
 
பஸாரின் துருப்புக்களின் எண்ணிக்கை இந்த ஐந்து வருடங்களில் மிக அதிகளவில் குறைந்துள்ளது. நாட்டை உரிமை கொண்டாட பஸாரின் இராணுவம்தான் அவனது துரும்புச் சீட்டு. அதுதான் முற்றுகைகளைத் தொடரவும், மனிதப்படுகொலைகளை புரியவும், வான்வெளித்தாக்குதல்களை நிகழ்த்தவும் அவனுக்கு உதவி வந்தது. சிரிய அரசின் குண்டுகளும், ஏவுகணைகளும் பல இலட்சம் மக்களை காவு கொண்டது மாத்திரமல்லாது முற்றாக அழிந்து சுடுகாடாய்போன ஹீம்ஸ்(Homs) போன்ற நகர்களை தரைப்படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவியது. எனினும் போரின் ஆயுள் அதிகரிக்க அதிகரிக்க, துருப்புக்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், படுகாயங்களால் ஏற்பட்ட அங்கவீனங்கள், இராணுவத்திலிருந்து சிப்பாய்களின் விலகி ஓடுதல்கள், தொடர்ந்தேர்ச்சையான இராணுவத் தோல்விகள் போன்றன அதிகரித்து சிரிய இராணுவத்தின் ஆளுமை வெகுவாக சரிந்துள்ளது. சில கணிப்புக்கள் ஆரம்பத்திலிருந்த 300,000 இராணுவத்திலிருந்து தற்போது 150,000 இராணுவத்தினர்தான் மிஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. தனது இராணுவக் களநிலை மிகவும் பலகீனமாக உள்ளதை உணர்ந்த பஸார் வேறு வழியில்லாமல் தனது அலவி ஆதரவாளர்களிடம் இதுபற்றி தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டான். தனது அரசு மிக அதிகளவான இராணுவத் தோல்விகளைச் சந்தித்தது என்பதை அவன் ஒப்புக்கொண்டான். மே, 2015 இல் ஆற்றிய ஒரு உரையில் முதல்முறையாக தனது “வெற்றி வெற்றி” என்ற பாட்டை நிறுத்தி மயக்கம் தெளிந்த சில வார்த்தைகளை உதிர்த்தான் “ இன்று நாங்கள் ஓர் போரில் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சமரிலல்ல. போர் என்பது ஒரு சமர் அல்ல. மாறாக அது பல சமர்களின் கோர்ப்பு. சமர்களைப் பொருத்தமட்டில் முன்னேற்றங்களும், பின்வாங்குதல்களும், வெற்றிகளும், தோல்விகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் யாதார்த்தமானதாகும்.” [2]
 
பஸாருக்கு தானே தொடுத்த யுத்தத்தை தொடர முடியாது போய் முற்று முழுதாக பிற சக்திகளிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை. கடந்த ஒக்டோபர் 2015 இல் ரஸ்யா, சிரிய போருக்குள் நேரடியாக மூக்கை நுழைத்தது சடுதியாக சரிய இருந்த பஸாரின் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் தருணத்திலேதான். அலவிகளின் பலப்பிராந்தியமான லடாக்கியாவை நோக்கி  கிளர்ச்சிப்படைகள் தாக்குதல் நடாத்த முன்னேறியிருந்த வேளைகள் இனிமேல் முழுமையாக பிறரின் தயவில் தான் பஸாரின் வண்டி ஓடும் என்ற நிலையை நிரூபித்தன. முதல் தடவையாக, ரஸ்ய விசேட படைகள் மாத்திரமல்லாது விலாதிமிர் புட்டினுடன் தொடர்புடைய கூலிப்படைகளும் சிரிய போர் முன்னரங்குகளில் போராடி வருவது வெளிச்சத்துக்கு வந்தது.[3] ஈரானிலுள்ள ஆப்கானிய ஷிஆப் போராளிகள், குறிப்பாக ஈரானிலுள்ள ஆப்கானிய ஹஸாரா அகதி மக்களைச் சேர்ந்த பல போராளிகள் மடிந்து வரும் செய்திகள் அதிகளவில் வெளிவரத் தொடங்கின.[4] பாக்கிஸ்தானிய ஷிஆ போராளிகளின் பங்களிப்புக்கள் பற்றிய தகவல்களும் இடைக்கிடையே வந்து மறைந்தன. இந்தத்தகவல் ஈரானில் அந்தப் போராளிகளின் மரணச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊர்ஜிதம் செய்யபப்பட்டது. ஈரானியப்படைகளும், ஆப்கானிய, பாக்கிஸ்தானிய ஷிஆ போராளிகளும், ரஸ்ய விசேட மற்றும் கூலிப்படைகளும் தான் தற்போது அல் அஸாத் தொடரும் ஈனப்போருக்கு முதுகெழும்பாக இருக்கின்றன.[5]
 
பஸார் அல் அஸதின் ஆதரவுத்தளம் முழுச் சனத்தொகையில் வெறும் 12 சதவீதத்தையும் தாண்டாது. எனவே இராணுவத்தை விட்டு தப்பி ஓடிய, கொல்லப்பட்ட, அங்கங்களை இழந்த துருப்புக்களை மீண்டும் ஈடுசெய்வதற்கு இந்த ஆதரவுத்தளத்தில்தான் அஸாத் தஞ்சம் புக வேண்டும்.  போர் நீழ நீழ இந்த ஆதரவுத்தளமும் அதி வேகத்தில் சுருங்கிக்கொண்டே செல்லும். இடம்பெற்ற முழுப்போரையும் உற்று நோக்கினால் இராணுவத் தட்டுப்பாடு பஸாருக்கு தொடர்ந்து இருந்துகொண்டெ இருக்கிறது. ஆரம்பத்தில் தேசிய பாதுகாப்புப் படை (NDF) என்ற ஒரு அணியை உருவாக்கி இந்நிலை எதிர்கொள்ளப்பட்டது. பின்னர் பஸாருக்கு ஹிஸ்புல்லாஹ்வின் கை தேவைப்பட்டது. அதன் பின்னர் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்பாதுகாப்புப் படை (IRGC) நேரடியாக தனது ஆதரவை வழங்கியது. பின்னர் இராணுவத்தினரின் உயிரிழப்புக்கள் அதிகரிக்கத் தொடங்க இராணுவம் ஈராக்கிய ஷிஆ போராளிகளையும், ஆப்கானிய ஷிஆ கூலிப்படைகளையும் துணைக்கு அழைத்தது.
 
உள்நாட்டுக்குள்ளும் அரசுக்கு ஆதரவு வட்டம் சுருங்கிக்கொண்டே வருகிறது. சிரியாவில் வாழும் துருஸ்(Druze) சமூகத்தினர் கூட அரசிலிருந்து சற்று ஒதுங்கியே நிற்கிறார்கள். அவர்கள் செறிந்து வாழும் சுவைதா பிராந்தியத்திலிருந்து தமது இளைஞர்கள் வெளியேறி அரசுக்காக நாடு தழுவிய ரீதியில் போராடுவதை அவர்கள் விரும்பவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலால் அலவி சமூகமும் மிகவும் களைப்படைந்து போயிருக்கிறது. பஸாருக்காக போராடக்கூடிய மிகக் குறைந்த ஆண்மக்களே அவர்களிடமும் உள்ளது. பஸாரின் இந்த கையறு நிலை மாறப்போவதில்லை. எனவே வெளிநாட்டுப் போராளிகளின் காலைப் பிடிக்க வேண்டியது அவனது தலைவிதியாகி விட்டது. சுருங்கக்கூறின், பஸார் அல் அஸதின் அரசு இன்று வரை மூச்சுத்திணறித் திணறி நிலைத்து நிற்பது வெளிநாட்டு ஆதரவினால் மாத்திரமே. மேற்குலக நலனை பாதுகாக்க டமஸ்கஸ்ஸிலுள்ள அவனது அரசின் இருப்பு எதுவரை தேவைப்படுகிறதோ அதுவரை இந்த ஆதரவும் தொடரும் என்பதே இன்றைய யதார்த்தம்.
 

Apr 16, 2016

சிரியாவின் நிலப்பரப்பு அரசியல் அம்பலமானது

 
 

1970ம் ஆண்டு ராணுவ புரட்சி மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த அசாதின் தந்தை ஹாஃபிஸின் காலத்திலிருந்தே அமெரிக்கா சிரியா அரசுக்கு தனது முழுமையான ஆதரவை அளித்து வருகிறது. கடந்த காலத்தில் நிக்சன் மற்றும் கிளின்டன் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகள் நேரடி விஜயம் செய்யும் அளவிற்கு அதன் ஆதரவு வெளிப்படையாக இருந்தது, தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடைபெற்று வரும் இக்காலத்தில், புரட்சிக்குழுக்களான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு சிரியா ஆதரவு அளித்து வரும் காரணத்தால் கடந்த புஷ் அரசாங்கம் அதன் உறவை மறைமுகமாகவே மேற்கொண்டு வருகிறது.
 
அல்-அசாத் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் அலவைத் கோத்திரத்தை சார்ந்தவர், இது இஸ்லாமிய அடிப்படையில் முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடைய கோத்திரம் ஆகும், மேலும் அஹ்லுஸ் சுன்னாவினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நாட்டில் அதன் ஆதிக்கத்தை குறைத்து உலகின் ஏதாவதொரு ஜாம்பவானின் ஆதரவை பெற்றால் மட்டுமே அங்கு ஆட்சியை பிடிக்க முடியும். அமெரிக்கவை பொறுத்தவரை சிரியா தனக்கு ஒரு பூலோக ரீதியான பலன்களை அடைய மிக முக்கிய மையப்பகுதியாக கருதிகிறது . இதர காலணித்துவ நாடுகளை போல இயற்கை வளத்தால் முக்கியத்துவம் பெறவில்லை, மாறாக அதன் பூலோக அரசியல் காரணங்களுக்காகவே அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதலாவதாக, சிரியா இஸ்ரேலுடன் எல்லையை கொண்டிருக்கிறது அதனால் இஸ்ரேலுக்கு ஆதரவான அரசை கொண்டிருப்பது அமெரிக்காவுக்கு இன்றியமையாததாகும். இரண்டாவதாக, சிரியாவின் மூலமாக இஸ்ரேலுடன் எல்லையை கொண்டிருக்கும் இன்னொரு நாடான லெபனானின் கட்டுப்பாட்டை ஒருவர் கைப்பற்ற முடியும். மூன்றாவதாக, சிரியா மத்திய கிழக்கு மற்றும் அரபுலகின் மையப்பகுதியல் உள்ளது மேலும் இந்த நாட்டின் மீது கட்டுபாடு கொண்டிருத்தல் இந்த பிராந்தியம் முழுவதுமான ஆதிக்கத்தை செலுத்திட உதவி புரியும். அந்த இடத்தில் தான் அலவிகள் மற்றும் அமெரிக்காவினுடைய இந்த தேசங்களுக்கு இடையிலாக நடைபெறும் விளையாட்டில் தத்தமது நலன்கள் ஒன்று சேருகிறது!
 
சிரிய புரட்சியின் போது, அமெரிக்கா அந்த சூழ்நிலையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாத நிலையை கடைபிடித்தது, இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொடுங்கோல் அரசால் கொல்லப்பட்டும் மானபங்க படுத்தப்பட்ட நிலைக்கும் வழி வகுத்தது. ஊடகங்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் வலியுறுத்துவது போல் உலக அபிப்ராயத்தாலும் மனித உரிமை போன்றவற்றினாலும் அமெரிக்கா தனது நலனை இதுபோன்ற அரசிடம் விற்றுவிட்டு இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உதவும் என ஒருவர் நினைக்கலாம். உண்மை நிலவரம் என்னவெனில் ஒரே ஒரு காரணத்திற்காக இந்த விஷயத்தில் இதுபோல் எதுவும் செய்யவில்லை என்னவெனில் இது போன்று ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு சிரியாவில் அமெரிக்காவின் நலன்களை காக்கும் ஒரு மாற்று தலைமையை கண்டெடுக்க வேண்டும். அமெரிக்காவின் நலன்களை காக்கும் ஒரு நிழல் அரசாங்கத்தை நிறுவும் உத்திகள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில் தனது நலன்களை பாதுகாத்து வந்த அரசை கவிழ்ப்பதற்கு எந்த விதமான அரசியல் மற்றும் யதார்த்த நிலையும் அதற்கு இருக்கவில்லை.
 
அங்கு தான் சிரியாவில் அமெரிக்காவின் குழப்பமான நிலை நலவுகிறது: ராணுவத்திலிருந்து விலகியவர்களால் உருவான குழுவின் மூலம் எதிர்ப்பாளர்களை கொண்டுள்ளது, தங்களுக்கென கட்டளையிட ஒரு சரியான ஒருங்கிணைப்பை கொண்டிராத இந்த எதிர்ப்பாளர்களை அந்த அரசு ஒன்றரை வருட காலமாக வேறருக்க முடியாத நிலையில் உள்ளது, அமெரிக்கா அதன் மீது ஆதிக்கத்தை செலுத்த முடியும் அல்லது அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்! இந்த பிரச்சினை மேலும் மோசமான நிலையை அடைவதற்கு சர்வதேச சமூகத்திடமிருந்து உதவி வராதது மற்றும் சிரியா சமூகத்தின் மத பழமைவாத தன்மையுமே ஆகும், FSA எனப்படும் சுதந்திர சிரிய படை எனும் லேபிலிற்கு கீழ் செயலாற்றி வரும் ராணுவத்திலிருந்து  வெளியேறிய வீரர்களிடையே  பலமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய உணர்வுகள். இந்த உணர்வுகள் எந்த அளவு பலமாக அதிமாகியிருக்கிறது என்றால் FSA வின் பல உட்பிரிவுகள் சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர், இந்த கோரிக்கையை அமெரிக்கா நிச்சயம் எக்காலும் ஏற்றுக்கொள்ளாது.
 
மேலுள்ள அனைத்து காரணங்களால், வேறு எந்தவொரு மாற்றும் அதற்கு இல்லாத நிலையில் அமெரிக்கா ஏற்கனவே கவிழ்ந்து வரும் பஷார் அல்-அசாதின் அரசை பிடித்து தொங்கி கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. அமைதியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஒபாமா அரசாங்கத்தின் தொடர்ச்சியான வேண்டுகோள் அங்கு அதன் கையாளாகாத தன்மையால் ஏற்பட்ட விளைவே ஆகும். சிரிய புரட்சியாளர்களை பொருத்தமட்டில், சிரியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள யாராவது ஒருவரையாவது அல்லது அதற்கும் மேற்பட்டோரை கொன்ற அல்லது மானபங்கப்படுத்தியவர்களை கொண்ட அதே மக்களை கொண்ட ஒரு ஒருங்கிணைந்த மாற்று அரசை ஏற்படுத்துவது என்பது அடி முட்டாள்தனமாகவும் நகைப்பிற்குரியதாகவும் கருதப்படுகிறது. அமெரிக்காவின் அந்த கையாளாகாதனத்தை அதன் பாதுகாப்பு அமைச்சர், சி.என்.என் தொலைக்கான்சிக்கு 2012 ஜூலை 30ம் தேதி லியோன் பெனேட்டாவின் வார்த்தைகள் மூலம் அறிந்து கொள்ளலாம், “நான் முக்கியமானதாக கருதுவது அசாத் விடைபெறும் சமயம் – நிச்சயமாக அவர் விடைபெறிவார் – அந்நாட்டில் நிலைத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மேலும் அத்தகைய நிலைத்தன்மையை தொடர்ந்து நீடிக்க செய்ய பெருமளவு ராணுவத்தையும், காவல்துறையும் பாதுகாப்பு படையினருடன் சேர்த்து நிலை நிறுத்த வேண்டும், மேலும் அவர்கள் இப்போதுள்ள முறையிலான அரசாங்க முறையிலிருந்து  மாறி ஜனநாயக அடிப்படையிலான அரசாங்கம் அமைக்க முயற்சி செய்வர். இது தான் முக்கியம்” [1]
 
அமெரிக்கா பழைய அரசாங்கத்திலுள்ளவர்களை பொருமளவில் தக்கவைத்து கொள்ள விரும்புகிறது இதன்மூலம் அவர்களை அசாதிற்கு பின்னர் நிறுவப்பட இருக்கும் அரசாங்கம் தான் விரும்பக்கூடிய வகையில் தனது ஆதிக்கத்தை செலுத்தவும் மற்றும் எதிர்வரும் அரசு தனக்கு விசுவாசமாக இருப்பதை உறுதிபடுத்த விரும்புகிறது. சிரியா மக்களை பொறுத்தவரை, அவர்கள் அடக்குமுறை மற்றும் காலனியாதிக்கத்திலிருந்து உண்மையில் வெளியேற நாடினால்,  எதிர்கால சிரியாவில் முந்தைய அரசில் ஈடுபட்ட அனைவரையும் ஒரம்கட்ட வேண்டும் என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும்!
 
[1] http://security.blogs.cnn.com/2012/07/30/panetta-says-when-not-if-al-assad-falls-syrian-military-should-remain-intact/

Apr 13, 2016

யேமனின் மக்கள் 80 சதவீதத்தினர் உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் நிலை!!!

திங்கட்கிழமை யேமனில் அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம், அந்த நாட்டில் ஓராண்டு காலமாக நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலானது. அடுத்த வாரம் குவைத்த்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்கவிருப்பதற்கு முன்னதாக இந்த போர் நிறுத்தம் வருகிறது. யேமன் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஐந்து தகவல்களைத் தருகிறது பிபிசி.
 
யேமனின் மக்கள் தொகையில் குறைந்தது 80 சதவீதத்தினர் உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கின்றனர்
 
யேமன் -- ஐந்து முக்கிய தகவல்கள்
 
1)அரபு நாடுகளிலேயே, யேமன் நாடுதான் மிகவும் வறிய நாடு. குறைந்து வரும் எண்ணெய் மற்றும் தண்ணீர் வளம் அதன் பிரச்சனைகள். மோதல் ஓராண்டுக்கு முன்னர் தொடங்கியதிலிருந்து, அதன் அடிப்படைக் கட்டமைப்பு நொறுங்கிவிட்டது. பொருளாதாரம் ஸ்தம்பித்துவிட்டது. அதன் 26 மிலியன் மக்கள் தொகையில் குறைந்தது 80 சதவீதத்தினராவது, உணவு உதவியை எதிர்நோக்கும் நிலையில் இருக்கின்றனர்.
 
 
2) அரசுக்கு விசுவாசமான படையினருக்கும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 2.5 மிலியன் பேருக்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்த நிலையில் வசிக்கின்றனர்.
 
 
3) யேமனில் , அதன் முன்னாள் அதிபருக்கு விசுவாசமான ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், அதன் தற்போதைய அதிபருக்கு ஆதரவான படைகள், வளைகுடா நாடுகளின் அரபுப் படைகள், அல் கயீதா மற்றும் இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் குழு ஆகிய போட்டி ஜிஹாதிக் குழுக்கள் என பல்வேறு குழுக்கள் போரிட்டு வருகின்றனர். அரசு ஊழல் மிகுந்ததாக இருப்பதாகவும், உத்தேசிக்கப்பட்ட ஒரு சமஷ்டி அமைப்பைக் கொண்டுவருவதன் மூலம் தங்களது நிலப்பரப்பை ஓரங்கட்டிவிட முயல்வதாகவும், கிளர்ச்சியாளர்கள் அரசு மீது குற்றம் சாட்டிவருகின்றனர்.
 
 
4) கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சானா உட்பட யேமனின் பல பகுதிகளைக் கைப்பற்றி, அரசை நாடுகடத்திவிட்டனர். ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் வட பகுதி ஷியா முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
 
 
இதனையடுத்து சௌதி அரேபியா தலைமையிலான 9 நாடுகள் அடங்கிய கூட்டணி 2015 மார்ச்சிலிருந்து யேமன் மீது வான் தாக்குதல்களைத் தொடங்கியது. சௌதி தலைமையிலான கூட்டணியின் வான் தாக்குதல்களின் உதவியுடன், அரசுக்கு விசுவாசமான படையினரும் தென்பகுதி ஆயுதக்குழுக்களும் ஐந்து தென் பகுதி மாகாணங்களை மீண்டும் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டன.
 
 
5)யேமன் மோதலை சிலர் பிராந்திய போட்டி நாடுகளான சௌதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையேயான மதக்குழு நிழல் யுத்தம் என்று கருதுகிறார்கள். சௌதி அரேபியா ஒரு சுன்னி இனப் பெரும்பான்மை நாடு. சௌதியின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் ஷியா பிரிவினர் தங்களை அரசு ஒதுக்கிவருவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இரான் ஒரு ஷியா பெரும்பான்மை நாடு. இந்த இரு நாடுகளும் மாறிவரும் மத்தியக் கிழக்குப் பகுதியில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தவும், அதிகரிக்கவும் போட்டியிடுகின்றன.

BBC

Apr 11, 2016

மேற்குலகத்தீர்வுகளால் HIV எயிட்ஸை ஒழிக்க முடியுமா?

எயிட்ஸ் ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட சிபாரிசுகள் இங்கே முன்மொழியப்படுகின்றன. இது குறித்த பல நிபுணர்கள் பேசுகிறார்கள். ஊடகங்கள் எழுதுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்த ஆட்கொல்லி நோய் தொடர்பாகவும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இதுவரை முன்வைக்கப்பட்டுவரும் தீர்வுகள் சரியானவைதானா? குறிப்பாக மேற்குலகால் இந்தப் பிரச்சனையை அணுவும் விதம் சரியானது தானா? என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியிருக்கிறது. மேலும் இஸ்லாம் இதற்கு என்ன தீர்வை முன்வைக்கிறது என்பதை முஸ்லிம் சமூகம் தெளிவாக புரிந்து கொள்வதும் இன்றியமையாதது என்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
 
 
HIV எயிட்ஸின் யதார்த்தம் என்ன?
 
HIV எயிட்ஸினால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பீதி ஏனைய தொற்றுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். அது ஒரு மிகக்கொடிய உயிர்கொல்லியாக இருப்பதும்; அது ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய சமூக வடுக்கள் பாரியது என்பதும் இதற்கான பிரதான காரணங்களாகக் கொள்ளப்படலாம்.
 
அதேபோல HIV எயிட்ஸ் பரவும் முறையும் தனித்துவமானது. அது பொதுவாக ஏனைய நோய்கள் பரவுவதை போல சாதாரணமாக தொற்றிவிடுவதில்லை. அது பொதுவாக ஒரு மனிதரிடமிருந்து இன்னுமொரு மனிதருக்கு பரவும் முறை சற்று வேறுபட்டது. சாதாரணமான உறவாடலின் ஊடாக இது பரவுவதில்லை. மாறாக ஒருவரிடமிருந்து வெளிவரக்கூடிய  பாலியல் திரவங்களினூடாகவோ அல்லது குருதியினூடாகவோதான் இது பரவுவதால் அது விசேட தொற்றாக அடையாளப்படுத்தப்படுகிறது.
 
குருதியினூடாகவோ, இந்திரியத்தினூடாகவோ ஒருவரிடமிருந்து ஒருவருக்கு ஒரு நோய் தோற்ற வேண்டுமானால் அதற்கென வாய்ப்புக்கள் விசேடமான சில நடவடிக்கைகளில் ஒருவர் ஈடுபடாமல் இருக்கின்ற நிலையில் சாத்தியமற்றது. அத்தகைய செயற்பாடுகள் மனிதர்கள் தவிர்ந்து கொள்ளக்கூடியவைகளே. அந்தவகையில் வயது வந்தவர்களைப் பொருத்தமட்டில் HIV எயிட்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவில் ஈடுபடுவதன் ஊடாகவும், HIV இனால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்றிய ஊசியை அவரைத்தொடர்ந்து இன்னொருவருக்கு ஏற்றுவதன் ஊடாகவும் இத்தொற்று பரவுகின்றது. அதிலும் குறிப்பாக நடைமுறை ரீதியாக நோக்கினால் இந்த ஊசிகள் ஊடாக பரவும் செயற்பாடு போதைப்பொருள் பாவணையின்போது பயன்படுத்தப்பட்ட ஊசிகளை இன்னொருவர் திரும்பப் பாவிப்பதன் ஊடாகவே பெரும்பாலும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இத்தகைய அதியுயர் ஆபத்தான சில நடவடிக்கைகளை தவிர்ந்து கொள்வதன் ஊடாக, மக்கள் இந்த நோயின் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படலாம். ஓர் ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தின் ஊடாக மாத்திரம் தமது தாம்பத்திய உறவை ஏற்படுத்திக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் விசுவாசமான முறையில் வாழ்கின்ற காலாசாரத்தை ஒழுகுவார்களானால் HIV பாதிப்பு கணிசமானளவில் குன்றிவிடும்.
 
குழந்தைகளைப் பொருத்தமட்டில் தாய் HIV தொற்றினால் பாதிப்புற்றிருந்தால் கற்பக்காலத்திலோ, பிள்ளைப்பேறின் போது, தாய்ப்பால் வழங்கும் காலத்திலோ தாயுடைய தொற்று சிசுவுக்கும் பரவி விடுகிறது. இவ்வாறு பரவும் முறையை தடுப்பதற்கான வழிமுறைகள் சில இருந்தாலும், அடிப்படையில் பெற்றோர் HIV யால் பாதிப்புறாத நிலையில் இருப்பதே சிசுவின் ஆரோக்கியமான வாழ்வுக்கு உண்மையான உத்தரவாதமாகும் என்ற பார்வையே ஆராக்கியமானதாகும்.
 
உலக சுகாதார நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டிற்கான புள்ளி விபரம் உலகில் ஏறத்தாழ 36.9 மில்லியன் மக்கள் HIV எய்ட்ஸ் உடன் வாழ்ந்து வருவதையும், அவர்களில் 2.6 மில்லியன் பேர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. 2014 இல் மாத்திரம் 2 மில்லியன் மக்கள் HIV இனால் பாதிப்புற்றிருப்பதையும் அவர்களில் 220,000 பேர் சிறுவர்கள் என்பதையும் குறிப்பிடுகிறது. உலகில் HIV எயிட்ஸ் உடன் தொடர்புபட்ட நோய்களினால் இதுவரை 34 மில்லியன் மக்கள் இறந்துள்ளார்கள். 2014 இல் மாத்திரம் 1.2 மில்லியன் மக்கள் மரணத்தை சந்தித்துள்ளார்கள் என உலக சுகாதார நிறுவனம்(WHO) தெரிவிக்கின்றது.
 
இலங்கையை எடுத்துக்கொண்டால் 2014 முடிந்த ஆண்டிற்கான இலங்கை சுகாதார சேவை திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின்படி ஏறத்தாழ 3200 பேர் HIV இனால் பாதிப்புற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் ஒவ்வொரு வாரமும் மேலும் 4 பேர் பரிசோதனைகளின் போது HIV தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக இனம்காணப்படுவதாகவும் உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றமை எமது நாட்டில் HIV பாதிப்பின் விபரீதத்தை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த உயர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது தொடர்பாக இன்று பிரபலமாக பின்பற்றப்படும் அணுகுமுறை மேற்குலகின் அணுகு முறையாகும். அது குறித்து இனிப் பார்ப்போம்.
 
மதச்சார்பற்ற சடவாத நாடுகள் HIV எயிட்ஸ் பாதிப்பை அணுகும் முறை
 
சுதந்திரம் (CONCEPT OF FREEDOM) என்ற எண்ணக்கரு முதலாளித்து சித்தாந்தத்தில் மிக முக்கிய விதியாக போற்றிப் பாதுகாக்கப்படுவதால் மேற்கூறிய தகாத பாலியல் உறவுகள், போதைப்பொருள் பாவணை போன்ற பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்ந்து நடக்குமாறு மக்களை அவர்கள் கோருவதில்லை. மாறாக இத்தகைய பழக்கங்களில் ஈடுபடும்பொழுது எவ்வாறு பாதுகாப்பான முறையில் ஈடுபடலாம், அதனூடாக HIV எயிட்ஸ் தொற்றைத் தவிர்ந்து கொள்ளலாம் என ஆலோசனை வழங்குவதையே வழிமுறையாகக் கொள்கின்றனர்.
 
கொன்டொம்(ஆணுறை) பாவணையை தூண்டுதல், தூய ஊசிகளை வழங்குவதன் ஊடாக போதைப்பாவணையின்போது HIV எயிட்ஸ் பரவாமல் தடுத்தல் போன்ற உத்திகளையே முதலாளித்துவ மேற்குலகு தமது நாடுகளில் முக்கிய உபாயமாக நடைமுறைப்படுத்துகிறது. மேலும் வளர்முக நாடுகளில் இந்த உபாயங்களை HIV தடுப்புக்கான சிறந்த தீர்வுகளாக பரப்புரையும் செய்து வருகின்றது.
 
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் உலகில் இந்த உபாயங்கள் இதுவரையில் படுதோல்வியையே கண்டுள்ளன. கொன்டொம்களும், தூய்மையான ஊசிகளும் ஓரளவுக்கு தொற்றபாயத்தை கட்டுப்படுத்தினாலும், கொன்டொம்கள் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காது என்பதும், பெரும்பாலும் போதைக்கு அடிமைப்பட்டவர்களில் அதிகமானவர்கள் படிப்பறிவில்லாத நிலையிலேயே  இருப்பதால் அவர்கள் எப்போதும் தூய ஊசிகளை பாவிப்பார்கள் என  எதிர்பார்ப்பது என்பதும் நடைமுறைச் சாத்தியமற்றது.
 
HIV எயிட்ஸ் பரவுவதற்க்கான அடிப்படைக்காரணி
 
உலகில் எல்லையில்லாது வியாபித்துள்ள தவறான பாலியல் பழங்கங்களும், போதைப்பொருள் பாவணைகளும் சுதந்திரம் என்ற எண்ணக்கருவின் விளைவால் வந்த வினை என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தான்தோன்றித்தனமாக தனது உணர்வுகளை, இச்சைகளை தீர்த்துக்கொள்வதை அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளும் இந்த எண்ணக்கரு உலகில் ஒழுக்கம் எனக் போற்றப்படும் அனைத்து வரம்புகளையும் தரைமட்டமாக்கி விடுகிறது. ஒழுக்கமின்மையும், பாலியல் முறைகேடுகளும் சமூக வழக்கமாகி விட்ட மேற்கை எடுத்தாலும், விழுமியங்கள் வரட்சி கண்டுவரும் எம்மைப்போன்ற கிழக்குக் கலாசாரங்களை எடுத்தாலும்; சுதந்திரம் சுகத்தைப்பெற்றுத்தரவில்லை என்பதே உண்மை.
 
இறைவேதங்களை உலகியல் விவகாரங்களில் தலையிட அனுமதிக்காத முதலாளித்துவம் சுதந்திரத்தினூடாக மனிதனுக்கு பூரண விடுதலையை பெற்றுத்தந்ததாக நினைக்கிறது. இதன் விளைவாக நான்கு வகையான சுதந்திரங்களை அது மனிதனுக்கு வழங்குகிறது. 1) நம்பிக்கைச் சுதந்திரம், 2) கருத்துச் சுதந்திரம், 3) உடைமைச் சுதந்திரம், 4) தனிநபர் சுதந்திரம் என்ற இந்த நான்கில் தனிநபர் சுதந்திரம் என்பதே எமது தலைப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டதால் அது குறித்து சிறிது நோக்கலாம்.
 
தனிநபர் சுதந்திரம் - PERSONAL FREEDOM

முதலாளித்துவ வாழ்வமைப்பு  தனிநபர் சுதந்திரத்தை பரிபூரணமாக எட்டுவதற்கும், பாதுகாப்பதற்கும் அனுதினமும் உழைத்துவரும் ஒரு சமுதாய அமைப்பு. அங்கே ஒரு தனிநபர் தனது தனிப்பட்ட வாழ்வில் தான் விரும்பியவாறெல்லாம் வாழ்வதற்கு பூரண உத்தரவாதம் வழங்கப்படும். அவருக்கு இருக்கின்ற ஒரேயொரு நிபந்தனை அவர் பிறரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறாதிக்க வேண்டும் என்பதுவே. அவருக்கு திருமணம் செய்துகொள்ளவும் உரிமை இருக்கிறது. திருமண பந்தமின்றியே ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடவும் உரிமை இருக்கிறது. அதற்கு அந்த பெண்ணின் ஒப்புதல் மாத்திரமே அவருக்கு தேவைப்படுகிறது.
 
சிறுவர்களை தனது உணர்வுகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை தவிர, அசிங்கமாக, அறுவறுப்பாக விதம் வி;தமாக தனது பாலியல் உணர்வுகளை பிரயோகிக்க அவர் உரிமை பெற்றிருக்கிறார்,  பொதுச் சட்டத்திற்கு கட்டுப்படுவதைத்தவிர, எதைவேண்டுமானாலும் புசித்து, எப்படி வேண்டுமானாலும் உடுத்து அவரால் வாழமுடியும். ஹராம், ஹலால் என்ற ஒரு அளவுகோல் அவருக்கு கி;டையாது. முதலாளித்துவ உலகப்பார்வைக்கு இசைந்த “சட்ட ஏற்புடைய நடத்தை”களை மீறாதிருக்கும் வரை அவர் எச்செயலிலும் ஈடுபடலாம். இந்த சட்ட ஏற்புக்கூட காலத்திற்கு காலம், சமூகத்திற்கு சமூகம் மாற்றமடையவும் அனுமதிக்கபடுகிறது.
 
இங்கே வேதங்களிலிருந்து ஒழுக்க மாண்புகள் பேசுவது காலாவதியான குப்பைகளாக பார்க்கப்படுகிறது. பெண்கள் உரத்துப்பேசுவதும், கட்டுடைந்த வெள்ளம்போல் மேழும் கீழும் துள்ளுவதும் முன்னேற்றங்களாக பேசப்படுகின்றது. பெண்ணீயம் என்ற போதை வார்த்தைக்குள் பெண்கள் துகிலுரிப்பை உரிமைப்போராட்டமாக சித்தரிக்கும் நாடகம் நாகரீகமாக நடக்கிறது. ஓரினச்சேர்க்கையும், வேரினச்சேர்க்கையும்(மிருகங்களுடன்) உச்சகட்ட விடுதலையாக போற்றப்படுகிறது. மதத்தை அரசிலிருந்து பிரித்தல் என்ற முதலாளித்துவ சடவாத தேசங்களின் அடிப்படை கொள்கையிலிருந்து நோக்கும்போது இந்த அசிங்கங்களை மறைக்க “தனிநபர் சுதந்திரத்தை பாதுகாத்தல்” என்ற கடப்பாட்டை அரசே மிக்க பொறுப்புணர்வுடன் மேற்கொள்கிறது.
 
பல ரில்லியன் பெறுமதியான போனோகிரபிக் தொழிற்துறையும், நிர்வாண பார்களும், பச்சை விரசத்தை கொப்பளிக்கும் அழைப்பு வசதிகளும் இவர்களின் பாலியல் விடுதலைக்கு சில உதாரணங்கள்.
 
ஒரு முஸ்லிம் “தனிநபர் சுதந்திரத்தை” ஒரு கோட்பாடாக ஏற்றுக்கொள்ளமாட்டார். ஏனெனில் அது மனிதனின் செயல்கள் தொடர்பான அல்லாஹ்(சுபு) ஷரீயத்தை இரண்டாம் பட்சமாக்கிவிடுகின்றது.
சமூகச்சீரழிவுக்கு அதுதான் மூலவாய். பச்சையாகச் சொன்னால் தனிநபர் சுதந்திரம் என்பது விபச்சாரச்சுதந்திரம், போதைச்சுதந்திரம். எனவே இஸ்லாம் எவ்வாறு அதனை மதிக்கும்? ஏற்றுக்கொள்ளும்?
 
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.  (அந்நூர்:39)

முஹம்மத்(ஸல்) சொன்னார்கள், “நான் இன்னும் காணாத இரு வகைப்பட்ட மக்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒரு சாரார் மாட்டின் வாலைப்போன்ற சவுக்குகளை வைத்துக்கொண்டிருப்பார்கள். அதனை மக்களை அடிப்பதற்காக பயன்படுத்துவார்கள். அடுத்தவர்கள் ஆடை அணிந்தும்; அரை நிர்வாணிகளாக இருக்கின்ற பெண்கள். அவர்கள் ஆண்களின் பார்வை அவர்கள் பக்கம் வலையும் வண்ணம் (தமது உடலை) வலைப்பவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமிழ்களைப்போல இருக்கும். இத்தகைய பெண்கள் சுவனம் புகமாட்டார்கள். அதன் நறுமணத்தைக்கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் பல நாட்கள் பயணத்தூரம் வரைக்கும் வீசக்கூடியதாக இருந்தாலும்கூட (முஸ்லிம்)
 
இஸ்லாம் சொல்லும் மாற்றுத் தீர்வு
 
இஸ்லாமிய சமூக முறைமையை சரியாகவும், குறிப்பிட்ட காலத்திற்கும் அமூல்படுத்தும்போது ர்ஐஏ க்கான தீர்வு சர்வ சாதாரணமாக எட்டப்பட்டு விடும். இஸ்லாம் உருவாக்கும் சமூகத்தில் திருமண பந்தத்திற்கு வெளியேயான பாலியல் உறவுகள் முற்றாக தடுக்கப்பட்டிருக்கும், அந்த வழமையை மீறும் சிலருக்கும் மிகக் கடுமையான தண்டைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைந்த ஒரு
சமூகம் இன்று நாம் பரவலாகக் காணும் சமூகங்களிலிருந்து தனித்துவமானது. அந்த சமூகம் சில அடிப்படைகளை தனது அத்திவாரமாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.
 
அந்த சமூகம் இறைவிழிப்புணர்வுடன் அதாவது தக்வாவுடன் நிறைந்து காணப்படும்.
 
எந்நேரமும் அவ்விழிப்புணர்வை வியாபிக்கும் சூழல் அந்த சமூகத்தின் அடிப்படை இலக்காகக் கொள்ளப்படும். இஸ்லாமிய ஷரீஆவின் விதிமுறைகள், தவறான சமூக உறவுகளைத் தடைசெய்து பாதுகாப்பான உறவுகளை மாத்திரமே அனுமதிக்கும். அங்கே உடுத்தும் முறை தொடக்கம் வாழும் கட்டிடம் வரை ஒழுக்க மாண்புகளை பாதுகாக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.
 
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அந்நூர்:30-31)

“ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடும்போது ஈமான் அவரை விட்டகன்றி அவரது தலைக்கு மேலால் நிற்கிறது. அந்தச்செயலிலிருந்து அவர் வெளியேறும்போதுதான் அது மீண்டும்  அவரை சென்றடைகிறது (திர்மிதி, அபுதாவூத்)

”எந்தவொரு பெண் நறுமணங்களை பூசிக்கொண்டு பிற ஆண்கள் அதன் நறுமணத்தை நுகரவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களைக் கடந்து செல்கிறாளோ அவள் விபச்சாரியாவாள்” (திர்மிதி, அபுதாவூத்)

ஷரீஆ குல்வா(தனித்திருத்தலை) வை முற்றாகத் தடை செய்கிறது.
 
அதாவது ஒரு அந்நிய ஆணும், பெண்ணும் மறைவான முறையில் தனித்திருப்பதை ஷரிஆ முற்றாகத் தடுக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும் யாரும் பார்க்க முடியாத விதத்தில் தனித்திருப்பது தவறுகள் இடம்பெறுவதற்கான அடிப்படை வாய்ப்பை வழங்கி விடுகின்றது. அந்த வாய்ப்பை உருவாக்காமல் தடுப்பதன் ஊடாக ஷரீஆ தவறின் வாசலை ஆரம்பத்திலேயே அடைத்து விடுகிறது.
“எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் ஈமான் கொண்டிருக்கிறாரோ அவர் தனக்கு மஹ்ரம் இல்லாத ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுடன் மூன்றாமவனாக சைத்தான் இருக்கின்றான்” (அஹ்மத்)
 
கடுமையான தண்டனையும், இறையச்சமும்
 
உமர்(ரழி) சொன்னார்கள், “இறையச்சத்தால் திருந்தாதவர்கள், சுல்தானினால்(அதிகாரத்தினால்) திருத்தப்படுவார்கள்”
 
அந்தவகையில் இஸ்லாமிய குற்றவியல் முறைமையை அமூல்செய்வதன் ஊடாக இத்தகைய
சமூகத்தீமைகள் மிக இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
 
விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அந்நூர்:2)
 
பனீ அஸ்லம் கோத்திரத்;தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில்(ஸல்) வந்து  தான் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டேன் எனக்கூறி தனக்கெதிராக தானே நான்கு முறை சாட்சியம் கூறினார். ரஸ}ல்(ஸல்) அவர்கள் அவர் திருமணமானவர் என்பதால் அவரை கல்லால் எறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார்கள். (புஹாரி)

ஓரினச்சேர்க்கை
 
எயிட்ஸின் தோற்றத்திற்கும் ஓரினச்சேர்க்கைக்கும் இடையே நேரடித் தொடர்பிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்hகவிலுள்ள லொஸ் ஏன்ஜெல்ஸில் வசித்த ஐந்து ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களிடமிருந்தே எயிட்ஸிற்கான கிருமி முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு 1981 ஜுன் 5ஆம் திகதி அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டுக்கும், தடுப்புக்குமான நிலையத்தினால்தான் உலகில் முதன்முதலில் எயிட்ஸ் தொற்றுநோய் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று எயிட்ஸின் பரம்பலுக்கு ஓரினச்சேர்க்கையும் அடிப்படைக் காரணமாக கொள்ளப்பட்டாலும் அந்தக் காரணத்தை மையப்படுத்தாமல் பொதுவாகவே ஓரினச்சேர்க்கையை மிகக்கொடிய பாவமாக இஸ்லாம் ஏற்கனவே தடைசெய்து விட்டது. லூத்(அலை) அவர்களின்
சமூகத்தை வேறெந்த சமூகத்தையும் அதைப்போன்று அழிக்காத முறையில் அல்லாஹ்(சுபு) மிகப்பயங்கரமாக அழித்ததும் இந்த தீயசெயலுக்காகத்தான் என்பதை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.
 
இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிப்பதாக இக்ரிமா(ரழி) ஒரு நபிமொழியை அறிவிக்கிறார்கள், “ லூத்தினுடைய மக்கள் செய்த செயலை (ஓரினச்சேர்க்கை) எவராவது செய்வதை உங்களில் யாராவது கண்டால் அதனைத் செய்தவரையும், செய்யப்பட்டவரையும் கொலை செய்து விடுங்கள்”
 
ஸஹாபாக்களைப் பொருத்தமட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களை எவ்வாறு கொலை செய்வது என்பதில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தார்களேயொழிய அவர்களை கொலைசெய்யும் விடயத்தில் அவர்கள் இஜ்மாவுடன்(ஏகோபித்த கருத்துடன்) உடன்பட்டிருந்தார்கள்.
 
அல் பைஹக்கி (ரஹ்), அலி(ரழி) அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களை கற்களால் அடித்துக்கொன்றார்கள் எனக்குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் ஓரினச்சேர்;க்கையாளர்களுக்கான தண்டனை பற்றி கேட்கப்பட்ட போது அவர்கள் ” நகரத்தில் இருக்கின்ற உயரமான கட்டிடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து தலைகீழாக அவர் தள்ளப்பட்டு, பின்னர் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்” என்று சொன்னார்கள். மேலும் அலி(ரழி) அவர்கள் ”அவரின் பாவச்செயலின் கொடூரம் காரணமாக அவர் வாளால் கொல்லப்பட்டு பின்னர் எறிக்கப்பட வேண்டும்” என்றார்கள். உமர்(ரழி) மற்றும் உத்மான்(ரழி) போன்றோர்கள் இப்பாவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு பாரிய சுவர் தள்ளி வீழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார்கள். இவ்வாறு கொல்லும் விதத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் கொலைத்தண்டனையில் அவர்கள் உடன்பட்டிருந்தார்கள் என்பதையே இந்த அபிப்பிராயங்கள் காட்டுகின்றன.

ஆண் - பெண் உறவில் திருமண பந்தத்தை அடிப்படையாக்கல்
 
இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துவதுடன், அதனை இளம் வயதில் மேற்கொள்வதை மிகவும் வரவேற்கிறது. அதற்கு தடையாக இருக்கும் சமூக வழமைகளை முற்றாகக் களையச் சொல்கிறது.

“இளைஞர்களே! உங்களில் திருமணமுடிக்க வசதியுள்ளவர்கள் திருமணம் முடித்துக்கொள்ளுங்கள். அது உங்களை ஏனைய பெண்களை பார்ப்பதை விட்டும் தடுக்கும். மேலும் உங்கள் கற்பைக் காக்கும். மேலும் யார் திருமண முடிக்க வசதியில்லாதிருக்கிறாரோ அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். அது அவரை பாதுகாக்கக் கூடியது. (முஸ்லிம்)

அபு ஹீரைரா(ரழி) அறிவிக்கிறார்கள், அல்லாஹ்(சுபு) உதவி பெரும் உரிமை மூன்று சாராருக்கு இருக்கின்றது. அல்லாஹ்(சுபு) பாதையில் போராடும் ஒரு முஜாஹித், தனது கற்பைப் பாதுகாக்கும் நோக்கில் திருமண முடிக்க நாடுபவர், தன்னை விடுவித்துக்கொள்ள நிதியினை எதிர்பாக்கும் ஒரு அடிமை”
 
இஸ்லாமிய சமூக முறைமை இளையோர்கள் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக  பழகுவதற்கு முன்னர் திருமணம் என்ற ஒரு பொறுப்புணர்வுள்ள அலகுக்குள் நுழைவதற்கு வழிகாட்டுகிறது. இந்த பாதுகாப்பான பாலியல் வடிகாலினூடாக HIV தொற்று முளையிலேயே கிள்ளியெறியப்படுகிறது.
 
போதைப்பொருட்களை ஊசிகளால் உடலுக்குள் பாய்ச்சுவதைப் பொருத்தமட்டில் - போதைப்பொருள் பாவணை இஸ்லாத்தில் மிகக்கண்டிப்பாக தடுக்கபட்டுள்ளதால் இஸ்லாமிய சமூக முறைமை தனது குடிமக்கள் மத்தியில் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், அதன் பாவணையையும் முற்றிலுமாக ஒழிப்பதை தனது முக்கிய குறிக்கோளாகக் கொள்ளும். இந்தச் சீர்திருத்தம் ஈமானிய சூழலை சமூகத்தில் நிலைநாட்டுதலில் தொடங்கி, போதைப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விநியோகிப்பவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது வரை தொடரும்.
 
HIV இனால் பாதிப்புற்றவரை களங்கம் கற்பித்தல்
 
HIV இனால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் நிச்சயம் இஸ்லாம் அனுமதிக்காத பாவ காரியத்தில்தான் ஈடுபட்டிருப்பார் என்ற முடிவுக்கு நாம் தீர்க்கமாக வந்துவிடமுடியாது. தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபடாத நிலையிலும் சிலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அது தொற்றியிருக்கக் கூடும். எனவே ஒருவர் HIV இனால் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு வகையான களங்கமாக எமது சமூகத்தில் நோக்கப்படலாகாது. ஒரு மனிதர் பாவமான காரியத்தில் ஈடுபட்டிருந்தால் அது தீர்க்கமாக நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் சந்தேகத்தின் பேரிலும், ஊகத்தின் பேரிலும் அவர் மீது களங்கம் கற்பிப்பதும், தண்டனைகளை வழங்க எத்தனிப்பதும் இஸ்லாத்தால் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் HIV இனால் பாதிக்கப்பட்டிருப்பது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகாது. மாறாக அவர்கள் நோயாளிகளாக நோக்கப்பட்டு அவர்கள் மனிதாபிமான முறையில் நடாத்தப்பட்டு பூரண சுகத்திற்கான நிவாரணிகளை அவர்கள் பெறவேண்டும்.
 
நபி(ஸல்) சொன்னார்கள், “அனைத்து நோய்களுக்கும் மருந்துண்டு. ஆகவே அதனை பெற்றுக்கொள்ளுங்கள்.”
 
ஏனெனில்  HIV இன் பாதிப்பு முஸ்லிம் அல்லாத நாடுகளில் மாத்திரம் எதிர்கொள்ளப்படும் பிரச்சனை அல்ல. மிக அதிகளவான இஸ்லாமியச் சகோதரர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை இஸ்லாமிய அணுகுமுறை கொண்டு பராமரிப்பது மிகவும் அவசியமாகும். மேலும் HIV இனால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற முஸ்லிம் நாடுகள் தமது
சமூகத்தில் இஸ்லாமிய சூழலை மிக ஆழமாக வேரூண்றச் செய்வதன் மூலம் மாத்திரமே HIV பரவுவதை குறைக்க முடியுமேயொழிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் வேலைத்திட்டங்களாலும், மேற்குலகத் தீர்வுகளாலும்  அதனை அடைந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முடிவாக...
 
மேற்குலகு கவனத்தை குவிக்கின்ற எயிட்ஸ் தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகளும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் வழிமுறைகளைக் கையாள்வதும் அவசியமானதுதான். இருந்தாலும் அது பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. அவ்வாறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்றைய முதலாளித்துவ மருந்துற்பத்தி துறையின் சுரண்டல் மனோபாவம் அதனை குறைந்த விலைக்கு வழங்கி HIV இனால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பயன்பட விடாது. எனவே மருத்துக் கம்பனிகளிடம் நாம் தீர்வை எதிர்பார்ப்பது கானல்நீர் நோக்கி நடப்பதற்கு ஒப்பானது.
 
எயிட்ஸ்க்கு புதுப்புது மருந்து கண்டுபிடிப்பதும், அதன் பரம்பலைத் தவிர்ப்பதற்கு விதம் விதமான உபாயங்களை முன்வைப்பதும் எயிட்ஸின் பாதிப்பிலிருந்து பல இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு இதுவரை உதவவில்லை. காலத்திற்கு காலம் அதன் பாதிப்பு உலகில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. HIV இனால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள துணை-சஹாரா ஆபிரிக்காவில் மாத்திரம் 2013 ஆண்டில் 24.7 மில்லியன் மக்கள் HIV இனால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதேவருடம் 1.5 மில்லியன் மக்களுக்கு HIV தொற்றலாம் என்றும்,HIV இன் பாதிப்பினால் 1.1 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்றும் UNAIDS அறிக்கை தெரிவிக்கிறது என்றால் இந்நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது.
 
மனிதகுலம் வாழ்வதற்காக பிறக்கிறதேயொழிய விதம்விதமான கிருமிகளுக்கு பழியாகி மில்லியன் கணக்காக, பில்லியன் கணக்காக அநியாயமாக அழிவதற்கு பிறக்கவில்லை. மனிதர்களுக்கு நோய்கள் வருவதும், அதனால் அவர்கள் இறப்பேய்துவதும் பொதுவானதுதான். ஆனால் ஓர் ஒட்டுமொத்த மனித அவலமாக மாறும் போது அது சர்வசாதாரணமான விடயமல்ல. அது ஒரு விதிவிலக்கான நிலை. எயிட்ஸை பொருத்தவரையில் பெரும்பாலும் அது மனிதனின் துர்நடத்தையாலும், அதற்கு காரணமான சமுதாய மதிப்பீடுகளாலும் தோன்றிய கொடுமை என்பதை யாரும் மறுக்க முடியாது.
 
அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் முன்வைக்கும் கொன்டொம் பயன்பாடு, தூய ஊசிகளின் பாவணை, புதிய மருந்து உற்பத்தி என்ற திட்டங்கள் இதுவரை பயன்தராதது போலவே இனிவரும் காலங்களுக்கும் பயன்தரப்போவதில்லை. எனவே மேற்குலகின் போலித் தீர்வுகளுக்கு பின்னால் ஏதோ விமோஷனம் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டில் நடக்கும் வழிமுறையை எமது நாடுகள் கைவிட வேண்டும். இந்தப்பிரச்சனைக்கெல்லாம் மூல காரணமான “சுதந்திரம்” என்ற முதலாளித்துவ கோட்பாடு   வாழ்வுக்குதவாதது என்ற ஞானம் எம்முள் பிறக்க வேண்டும். பிரச்சனையை நேர்மையாகவும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதற்கு நாம் இனியாவது பழக வேண்டும். உண்மையில் இந்த ஆட்கொல்லி நோயை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் அது தோன்றுவதற்கான உண்மையான சமூகக் காரணிகள் நிர்ணயிக்கப்படவேண்டும். அந்தப்புரிதலின் விளைவாக உலகில் அடிப்படைச் சமூகமாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் சத்தியமான ஒரு சித்தாந்தத்திலிருந்தே உதயமாக முடியும். அந்த வகையில் ஆரோக்கியமான சமூகக்கட்டமைப்பை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரேயொரு சித்தாந்தமான இஸ்லாமிய சித்தாந்தத்தினால் மாத்திரமே இன்று உலகில் HIV தோற்றுவித்துள்ள மனித அவலத்தை நேர்மையாய் எதிர்கொள்ள முடியும். இதற்கு முதலில் HIV இனால் பாதிப்புற்றுள்ள முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய முறைமையை அமூல்படுத்தி HIV ஒழிப்பில் முழு உலகுக்கும் முன்மாதிரியாய்த் திகழ்வது முதலாவது மைற்கல் என நினைக்கிறேன்.

Apr 6, 2016

பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்கள் எம்மை எத்திசையில் செலுத்த வேண்டும்?


மார்ச் 22ஆம் திகதி 2016 பெல்ஜியத் தலைநகர் குண்டு வெடிப்புக்களால் அதிர்ந்தது. தாக்குதல்கள் 31 பேர்களின் உயிர்களைக் குடித்தது. அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதை அது முஸ்லிமாக இருந்தாலும், இல்லாது விட்டாலும் இஸ்லாம் முற்றாகத் தடை செய்கிறது. இன்று உலகின் பிரபல அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அங்காராவிலும், இஸ்தான்புல்லிலும் குண்டுவெடிப்புக்களில் இறந்த உயிர்கள் பற்றி அலட்டிக்கொள்ளாதது போல அல்லது பஷார் அல் அஸதினால் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதை கண்டும் காணாது இருப்பது போல இஸ்லாம் இதனைப் பாரபட்சத்துடன் நோக்குவதில்லை. மாறாக பல்வேறு பின்னணிகளைக் கொண்ட அரசியல்வாதிகளும், மேற்குலக ஊடகங்களும் அப்பாவி மக்களின் கொலைகளை பயன்படுத்தி தமது ஈனத்தனமான அரசியல் ஓட்டங்களை எடுப்பதற்காக முயற்சிப்பதை நாம் வழமைபோலவே பிரசல்ஸ் தாக்குதல் சம்பவத்திலும் காண்கிறோம்.

தமது நாட்டுக்குள் அகதிகளை ஏற்றுக்கொள்வது, முஸ்லிம்கள் தமது நாட்டில் நிலைகொண்டு வாழ்வது போன்ற விடயங்களில் அவர்களிடம் காணப்படும் குரோதமான மனோநிலையை இத்தகைய சம்பங்களின்போது அவர்கள் எடுக்கின்ற நிலைப்பாடுகள் தோலுரித்துக் காட்டுகின்றன. அவர்கள் முஸ்லிம்கள் எங்கே, யாருடன் தமது விசுவாசத்தை வைத்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கணைகளைத் தொடுத்து தமது சமூகத்திற்கு மத்தியில் பீதியான ஒரு மனோநிலையை தோற்றுவிக்க முயன்று வருவதும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு பீதியை அதிகரிப்பதன் ஊடாக சாதாரண பொதுமக்களை தீவிரப்படுத்தி அவர்களுக்கு மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புகின்ற முனைப்பிலா இவர்கள் இருக்கிறார்கள் என்ற நியாயமான கேள்வியும் இங்கே எழுகின்றது.

ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தீவிரவாதத் தாக்குதல்கள் எங்கும் நடக்கலாம் என்ற புரளியைக் கிளப்பி விடுவதிலும், மக்களை தொடர்ந்தும் அச்சத்தில் வைத்துக் கொள்வதிலும் அக்கறை காட்டுவதை நாம் காண்கிறோம். குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய போரின் முக்கிய பங்காளியான பிரித்தானியா இதனை முன்னின்று செய்கிறது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜோன் ரீட் “ தீவிரவாதிகள் பிரித்தானியாவின் பாதுகாப்பு வேலிகளை கடந்து பிரஸல்ஸில் நடந்த தாக்குதல்களைப்போல இங்கேயும் தாக்குதல்கள் நடாத்துவார்கள்” என பொறுப்பற்ற முறையில் சில தினங்களுக்கு முன் பிபிசிக்கு தெரிவித்த கருத்தும், அடுத்த தாக்குதல் பிரித்தானியாவில்தான் என மக்கள் மத்தியில் பீதியைக் கிளறிவிடும் ஏனைய பிரித்தானிய அரசியல்வாதிகளின் கருத்துக்களும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

இத்தகைய பொறுப்பற்ற போலிப்பிரச்சாரங்கள் உள்நாட்டுக்குள் தமது வங்குரோத்து அரசியல் நடாத்துவதற்கும், இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதி;ராக சர்வதேச மட்டத்தில் மேற்குலகு ஏற்படுத்தி வந்த எதிர்மறையான தோற்றப்பாட்டை மென்மேலும் வலுப்படுத்தி முஸ்லிம் உலகில் தாங்கள் வீசும் குண்டுகளுக்கும், தமது தலையீடுகளுக்கும் நியாயாதிக்கத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

முஸ்லிம்களின் நம்பிக்கைகள், விழுமியங்கள், அடையாளங்களை குறிவைத்து சிதைக்கும் நோக்கில் மேற்குலக நாடுகள் பலவற்றில் அமூல்படுத்திவரும் அல்லது அமூல்படுத்த எத்தணிக்கும் அரசாங்க நிகழ்ச்சி நிரல்களுக்கு இந்த தீவிரவாத தாக்குதல்களை நல்ல சாட்டாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இஸ்லாத்தின் அதி முக்கிய அம்சங்களில் கூட சமரசம் செய்யும்படி நிர்ப்பந்திக்கின்ற இவர்கள் எந்தளவு தூரத்திற்கு நீஙகள் இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பிக்கிறீர்களோ அந்தளவு தூரத்திற்கு எமது சமூகத்திற்கு ஒரு அபாய சமிஞ்ஞையாக மாறி வருகிறீர்கள் என்ற உளவியல் அழுத்தத்தை சாதாரண முஸ்லிம்கள் மத்தியில் அநுதினமும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த அரசியல் திருகுதாளங்கள் அனைத்தும் இத்தகைய தீவிரவாத தாக்குதல்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணமான மேற்குலகின் அயோக்கியத்தனமான வெளிவிவகாரக் கொள்கை பற்றிய நேர்மையான விமர்சனத்தையும், வாதங்களையும், குறிப்பாக கடந்த தசாப்பத்தில் மத்திய கிழக்கிலும், முஸ்லிம் உலகிலும் அவர்கள் ஏற்படுத்திய படு பயங்கரமான சூழல் பற்றிய கருத்தாடல்களையும் திசை திருப்புவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகளாகும்.

உலகில் கவனத்தை அவர்கள் எவ்வளவு தான் திருப்பினாலும், எம்மீது பௌதீக மற்றும் உளவியல் அழுத்தங்களை எவ்வளவுதான் திணித்தாலும் முஸ்லிம்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அதுதான் நாம் எமது அடையாளத்தையும், தீனுல் இஸ்லாத்தையும் சமரசம் செய்யாது வாழ்கின்ற அதேநேரம் எமது தீனையும், எமது உம்மத்தையும் உண்மையில் பாதுகாக்கக் கூடிய கிலாஃபா ராஷிதாவை உலகில் மீண்டும் தோற்றுவிக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். அவ்வாறு நபிவழியில் தோன்றக்கூடிய கிலாஃபாவால் மாத்திரம்தான் முஸ்லிம் உலகிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். வரலாறு இந்த உண்மைக்கு சான்று பகர்வதை யாரும் மறுக்க முடியாது.

ஸஹாப்பாக்களின் காலத்திலிருந்து 90 வருடங்களுக்கு முன் உத்மானிய கிலாஃபா நிர்மூலமாக்கப்படும் வரை மத்திய கிழக்கும், அரபுலகமும் பொதுவாக அமைதியான சூழலிலேயே இருந்தது. மேற்குலகுடன் அதற்கு இருந்த உறவு அரசுகளுக்கிடையிலான உறவு என்ற அளவில் இருந்ததேயொழிய அந்நிய தலையீடுகளின் ஊடாகவோ, காலணித்துவத்தின் ஊடாகவே, வேவு வேலைகளின் ஊடாகவோ இருக்கவில்லை. எப்போது மேற்குலக காலணித்துவம் எமது நாடுகளில் தடம்பதித்ததோ அன்றிலிருந்து இன்று வரை எமது தேசங்கள் ஸ்திரமற்ற நிலையிலும், பிளவுபட்ட நிலையிலுமே இருக்கின்றன. நிரந்தரமான மேற்குலகத் தலையீடுகள், முகவர்களின் ஆட்சிகள், அவர்களின் கூலிப்படைகளின் அடக்குமுறைகள் என எமது மக்களின் தலையெழுத்து அழிவாகவும், அவலமாகவும் மாறிவிட்டது. எமது நிலங்களின் பொதுவாழ்வில் இஸ்லாத்தின் வகிபாகம் முற்றாக மறுக்கப்பட்ட ஒரு சூழலில் முஸ்லிம் உலகிலும் சரி, உலகின் ஏனைய பிராந்தியங்களிலும் சரி மனித குலத்திற்கு அமைதியான நல்வாழ்வு எட்டாக்கனியாக மாறிவிட்டது. மேற்குலக சித்தாந்தம் மிகக்குறுகிய காலத்திலேயே உலகை தலைமை தாங்குவதற்குரிய தனது அறிவார்ந்த தகுதியை இழந்து விட்ட நிலையில் பலப்பிரயோகம் மாத்திரமே அதற்கு இருக்கின்ற இறுதி ஆயுதம். நேரடி யுத்தங்களையும், வன்முறைகளும் பாவித்து தமது ஆதிக்கத்தை நிறுவ வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். விளைவு, தீவிரவாதத்தையும், வன்முறைகளையும் தமது நாடுகளுக்குள்ளும் அவர்கள வரவழைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு வரவழைக்கப்பட்டவைகள் தான் 9/11, 7/7, தொடக்கம் பிரஸல்ஸ் தாக்குதல்கள் வரைக்கும்.

எனவே முஸ்லிம்கள் அவர்களின் பலகீனத்தையும், அவர்களின் தோல்வி மனப்பான்மையின் பிரதிபலிப்புக்களையும் நன்கு உணர வேண்டும். அவர்கள் தமது தீய அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக எங்கள் மீது பிரயோகிக்கின்ற அழுத்தங்களைக் கண்டு அஞ்சி நாம் அடிபணிந்து விடக்கூடாது. மாறாக இஸ்லாமிய சித்தாந்தத்தின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அதன் அறிவாhந்த பலத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்த அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டும். நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க இஸ்லாத்தை பின்பற்றுவதிலும், அதனை உயர்த்திப் பிடிப்பதிலும் நாம் முன்னிற்க வேண்டும். எமது அசைக்க முடியாக நம்பிக்கையும், அதன் அடிப்படையில் எழும் உத்வேகமும் பிற சமூகங்களைக்கூட இஸ்லாத்திற்குள் உள்ளிழுக்கக்கூடிய வழிகளைத் திறந்து விடவேண்டும். உலகை உய்விக்க இருக்கின்ற ஒரேயொரு அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாம் மாத்திரம்தான் என்ற நம்பிக்கையை அது எல்லோரிலும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் எது இந்த உலகில் வந்து விடக்கூடாது என்று அனைத்து சக்திகளும் முயற்சிக்கின்றனவோ அந்த ஒளி முஸ்லிம் உலகில் நேர்வழிபெற்ற கிலாஃபத்தின் வடிவில் பிரகாசிக்கும் வரையில் இன்றைய வன்முறைச் சூழலை மாற்ற முடியாது. இன்றைய உலக அவலங்களை நீக்க முடியாது. எனினும் வாக்களிக்கப்பட்ட அல்லாஹ்(சுபு) இன் ஒளியின் பிரவாகத்தை யாரால்தான் தடுத்து நிறுத்த முடியும்!

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (61:08)

அமெரிக்கா-சிரியா இடையே உள்ள உறவின் ரகசியங்கள்

 
உதுமானிய கிலாபா முதல் உலக யுத்தத்தில் தோல்வி அடைந்திருந்த நிலை மற்றும்  1916ல் பிரான்ஸ் இங்கிலாந்து இடையே ஏற்பட்ட சைக்ஸ் பீகாட் ஒப்பந்தம் மூலம், இன்று சிரியா என நம்மால்  அறியப்படும் பகுதியை பிரான்ஸ் ஆக்கிரமித்தது. ஒருவருக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்த அளவிற்கு இருக்கின்றது என்றும் அசாத் அரசிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவை பற்றி புரிந்து கொள்ள, அவர் இக்கால சிரியா உருவான வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியமாகும். கீழ்வரும் 10 கால வரிசையிலான முக்கிய புள்ளிகள் அதாவது சிரியாவின் மீதான மேற்கத்திய காலனியாதிக்கம் முதல் இன்றைய நிலை வரையிலான நிகழ்வுகள் இந்நாட்டில் அமெரிக்காவின் ஈடுபாட்டை குறிப்பிட்டு காட்டுகிறது.
1. அமெரிக்கா மற்றும் சி்.ஐ.ஏ 1949 முதல் சிரியாவில் நடத்திய ராணுவ புரட்சிகள்:
 
அமெரிக்கா டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம்  மற்றும் சி்.ஐ.ஏ வாயிலாக முதன் முதலில் 1949 ல் ராணுவ புரட்சியை நடத்தியது, என மைல்ஸ் கோப்லேண்ட் எனும் எழுத்தாளர் தனது “The game of Nations” எனும் நூலில் விவரித்துள்ளார். இதன் மூலம் மத்திய கிழக்கின் மீதான சர்வதேச போராட்டம் புது வரவான  அமெரிக்காவிற்கும் இந்த பிராந்தியத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வந்து இரண்டாம் உலக யுத்தத்தில் பேரழிவை சந்தித்து வெளியேறிய ஐரோப்பாவிற்கும் (பிரஞ்சு மற்றும் பிரிட்டன்) இடையே தொடங்கியது. அமெரிக்க தூதரகமும் சி.ஐ.ஏ வும் தொடர்ந்து பல அடுத்தடுத்த ராணுவ புரட்சிகளை சிரியாவில் 50 மற்றும் 60 களில் ஐரோப்பிய எதிரிகளுக்கு எதிராக நடத்தியது, இந்த காலம் திறத்தன்மை அற்ற நிலையில் இருந்தது இந்நிலைமை 20 ஆண்டுகள் நீடித்தது.
2. இஸ்ரேலை பாதுகாக்க 1967ம் ஆண்டு நடந்த போரில் ஹாஃபிஸின் பின் வாங்கல்: 
 
முன்னால் அதிபர் அமீன் அல்-ஹாஃபிஸ், 2001 ம்ஆண்டு ஜூலை 2ம் தேதி அல்-ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஹாஃபிஸ் அல்-அசாத், அந்த போரின் ஆரம்பத்தில் கோலன் ஹைட்ஸில் உள்ள சிரியாவின் ராணுவத்தினரை பின் வாங்குமாறு கண்டிப்பான உத்தரவு ஒன்றை அவர்களுக்கு அனுப்பினார் இது சிரியா தோல்வி அடையாத நிலையிலும் இஸ்ரேலிய ராணுவத்துடன் எவ்வித தாக்குதலை துவக்காத நேரத்தில் நடைபெற்றது. இச்செயல் இந்த இடத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் நிலைக்கு இட்டு சென்றது.[1] இச்செயலை செய்ததன் காரணமாக இஸ்ரேலின் வடக்கு எல்லையை பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் நம்பிக்கையை அசாத் பெற்றார், அதை அவர் 30 வருடங்களாக தொடர்ந்து செவ்வனே செய்து வருகிறார்.
3. அமெரிக்கா சிரியாவை ஐ.நா தீர்மானம் 242 மூலம் 1967 ல் ஆதரித்தது:
 
கோலன் ஹைட்ஸ் எனும் இடத்தை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு எதிராக ஆறு நாள் போர் என அறியப்பட்ட 1967 போருக்கு பின் நிறைவேற்ற பட்ட ஐ.நா தீர்மானம் 242, சிரியாவுக்கு இது நாள் வரை அந்த இடத்தின் மீதான அதன் உரிமையை திரும்ப பெற்றுத்தந்தது.[2] அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தையும் இந்த இடத்தின் மீதான சிரியாவின் உரிமையையும் ஆதரித்தது. ஏதோவொரு நேரத்தில் வெளிப்படும் வெத்துவாக்காகவும் அல்லது இந்த கடல்வழி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இஸ்ரேலின் நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தது,
4. 1973ம் ஆண்டின் போருக்கு பின் அமெரிக்க – சிரியாவுடனான உறவை பலப்படுத்தல்:
 
1973 ல் திடீரென நடைபெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர்ந்து, அமெரிக்கா சிரியாவை கண்டித்திருக்க வேண்டும் மற்றும் அதன் மீது தடைகள் விதித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக, 1974ல், அசாதுடனான உறவை வலுப்படுத்த அதிபர் நிக்சன் டமாஸ்கஸிற்கு விஜயம் புரிந்தார்.
5. 1976ம் ஆண்டு முதல் சிரியா மேற்கொண்ட லெபனான் மீதான ஆக்கிரமிப்பை அங்கீகரித்தல்:
 
லெபனானில் நடைபெற்ற உள்நாட்டு போரின் தொடக்கத்தில் சிரியா லெபனான் மீது ராணுவ படையெடுப்பு நடத்தியது. இது குறித்து அமெரிக்காவின் மௌனம் என்பது ஹாஃபிஸ் அல்-அசாதின் இந்த ஆக்கிரமிப்பை தொடங்கியதற்கான “பச்சை விளக்கு” காட்டப்பட்டது போல் இருந்தது இந்த ஆக்கிரமிப்பு 2005 வரை நீடித்து இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி பிரஞ்சு தீர்மானம் கொண்டு வத்ததன் மூலம் சிரியாவை வெளியேற்றியது. அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து ஒரு அரசியல் ஆய்வாளர் இவ்வாறு கூறினார்: “[அமெரிக்கா] லெபனானில் சிரியாவின் ஆதிக்கம் நீடித்திருக்க விரும்பியது.” [3]
6. சிரியா மற்றும் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை 1989ல் நடைபெற்ற தாயிஃப் ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றுதல்:
 
தாயிஃப் ஒப்பந்தம் சவூதி அரேபியாவில் பல லெபனானிய குழுக்களுக்கு இடையே 1989 உள்நாட்டு போரை நிறுத்துவதற்காக போடப்பட்டது. இதன் மத்தியஸ்த்தராக பிரான்ஸ், சவூதி அரேபியா, எகிப்து தவிர சிரியாவுடன் அமெரிக்கா செயல்பட்டது அது “சர்வதேச ஆதரவை லெபனான் மீது சிரியாவின் – பாதுகாப்பு பொறுப்பை நிலைநிறுத்த உதவியது. [4]
7. அமெரிக்காவின் 1991 ல் ஈராக் மீதான படையெடுப்பில் சிரியா பங்கு கொள்ளுதல்:
 
(ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்) என்னும் ஈராக் மீதான போரில் அமெரிக்காவிற்கு சிரியா ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் 14,500 படை வீரர்களை அமெரிக்க படையெடுப்புக்கு உதவுவதற்காக ஈராகிற்கு அனுப்பி வைத்தது. [5]
8. அமெரிக்கா 1990 களில் சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக செயல்படுதல்:
 
சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமெரிக்கா மத்தியஸ்ராக செயல்பட ஹாஃபிஸ் அல்-அசாத் ஒப்புக்கொண்டார். ராணுவ தலைமை அதிகாரி Lt. Gen. ஹிக்மத் அல்-ஷிஹாபி, தலைமையில் ஒரு குழு அமெரிக்காவுக்கு சென்று அமைதி பேச்சுவார்த்தை சம்பந்தமாக கருத்துரையாடினர். ரஷ்யா டுடே எனும் தொலைக்காட்சிக்கான பேட்டி ஒன்றில் சிரியாவின் முன்னால் பாதுகாப்பு அமைச்சரும் அசாத் அரசின் ஒரு தூணாக இருந்த முஸ்தபா த்லாஸ், அல்-ஷஹாபி ஒரு அமெரிக்காவின் சி்.ஐ.ஏ ஏஜன்ட் என குறிப்பிட்டார். [6]
9. சி.ஐ.ஏ மற்றும் சிரியாவுக்கு இடையே 2001 முதல் கைதிகளை சித்திரவதை செய்வது தொடர்பான உளவுத்துறை உடன்பாடு:
 
சி.ஐ.ஏ விற்கும் சிரிய அரசுக்கும் இடையேயான உறவு மிக நெருக்கமானதாகும், அதாவது சிரியாவை பொருக்கி நாடு என அறிவிக்கப்பட்ட காலத்தில் கூட, சிரிய அரசு அதன் அழுக்கடைந்த சேவையை சி.ஐ.ஏ விற்கு ஆற்றி வந்தது. அந்த அரசு உலக புகழ்பெற்ற தனது உளவுத்துறையை சி.ஐ.ஏவிற்காக கைதிகள் மற்றும் போர் கைதிகளிடமிருந்து விவரங்களை சேகரிக்க உபயோகித்தது. இதற்கு உதாரணமாக  கனடாவை சார்ந்த மாஹெர் அரார் என்பவரது நிகழ்வு சர்வதச செய்திகளில் வலம்வந்தது. [7]
10. 2011 முதல் நடைபெரும் சிரிய புரட்சியில் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா: 
 
அசாத் அரசு சிரிய மக்களின் மீது 5 வருடங்களாக நடத்திவரும் தினசரி படுகொலைகளை கண்டு வாய் மூடி மவுனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்களை பாதுகாத்து கொள்ளவும் அசாதை வெளியேற்றவும் போராளிகளுக்கு தேவைப்படும் ஆயுதங்களை கொடுக்காமல் தடுத்து வருகிறது.
சிரியாவின் நவீன கால வரலாற்றில் அமெரிக்கா தொடக்கத்தில் அதன் கைப்பாவைகளை அதிகாரத்திற்கு கொண்டு வர ராணுவ புரட்சிகள் மூலம் முயற்சித்து வந்தது தெளிவாக தெரிகிறது. அமெரிக்கா சிரியாவுக்கு எதிரான வார்த்தைகளை பொது இடங்களில் உபயோகித்தாலும், அதன் கைகூலி ஹாஃபிஸ் அல்-அசாத் 1970 ல் ஆட்சிக்கு வந்ததும் சிரியாவில் தனது முழு கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியது. அல்-அசாத் வந்தது முதல் சிரியா அமெரிக்காவின் பிரதிநிதி நாடாக அப்பிராந்தியத்தில் அதன் நலன்களுக்கு சேவை செய்யவும் இஸ்ரேலிய வட எல்லைகளை பாதுகாக்கும் செயலை செய்து வருகிறது, ஆனால் வெளியே அரபு பகுதியல் நான் தான் அதை எதிர்ப்பதில் முன்னோடி என கூறி வருகிறது.
[1] http://www.aljazeera.net/programs/pages/fa527ac3-2308–4892-945e-7978486e3ac5 (ara­bic)
[2] http://en.wikipedia.org/wiki/Resolution_242 
[3] http://www.meforum.org/research/lsg.php
[4] http://www.gmu.edu/programs/icar/ijps/vol14_2/SALAMEY%20-%2014n2%20IJPS.pdf
[5] http://en.wikipedia.org/wiki/Coalition_of_the_Gulf_War
[6] http://arabic.rt.com/prg/telecast/23261/ (ara­bic)
[7] http://en.wikipedia.org/wiki/Maher_Arar