Showing posts with label நவீன பிரச்சனைகள். Show all posts
Showing posts with label நவீன பிரச்சனைகள். Show all posts

May 4, 2014

பன்றியின் மரபணுவை வெள்ளரி செடியில் செலுத்துவதற்கு அனுமதி உண்டா ?

 
செடிகளின் வளர்ச்சியையும் மகசூலையும் அதிகரிக்க,வெள்ளரி செடி அல்லது மற்ற செடிகளில் பன்றியின் மரபணுவை எடுத்து உபயோகிக்க அனுமதி கிடையாது.
பின்வரும் காரணங்களுக்காக பன்றி அசுத்தமானதாகவும், தடுக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
             தானாக செத்தது,இரத்தம்,பன்றியின் மாமிசம்,அல்லாஹ் அல்லாத வேறு பெயர்கள் கூறப்பட்டவைகளை அல்லாஹ் உங்களுக்கு தடை செய்துள்ளான்.ஆகவே எவரேனும் வரம்பு மீறாமலும் பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றை புசிக்க) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமாகாது.நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும் மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
                                                                                                                                              (அல் பகரா :173)
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ
தானாக செத்தது,இரத்தம்,பன்றி இறைச்சி,அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவை ஆகியவை உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளன.
                                                                                                                                                  (அல் மாயிதா:3)
  அபு தஃலபா அல் குஷனி அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:-
… وَأَنَا فِي أَرْضِ أَهْلِ الْكِتَابِ وَهُمْ يَأْكُلُونَ فِي آنِيَتِهِمْ الْخِنْزِيرَ وَيَشْرَبُونَ فِيهَا الْخَمْرَ فَآكُلُ فِيهَا وَأَشْرَبُ؟ قَالَ فَصَعَّدَ فِيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ….وَإِنْ وَجَدْتَ عَنْ آنِيَةِ الْكُفَّارِ غِنًى فَلَا تَأْكُلْ فِيهَا، وَإِنْ لَم تَجِدْ غِنًى فَارْحَضْهَا بِالْمَاءِ رَحْضًا شَدِيدًا ثُمَّ كُلْ فِيهَا…..
 ”நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மத்தியில் வாழ்கிறோம்; அவர்கள் தங்கள் பாத்திரத்தில் பன்றி இறைச்சியை சமைக்கின்றனர்; மேலும் மதுவை அவர்களின் பாத்திரத்தில் பருகுகின்றனர்.”அந்த பாத்திரங்களை பயன்படுத்தலாமா என்றபோது, நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்…நீங்கள் வேறு ஏதாவது பாத்திரங்களை கண்டால், அதிலிருந்து உண்டும் குடித்தும் கொள்ளுங்கள். அப்படி உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால், அவைகளை தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்து பின் (அதிலிருந்து) உண்ணவும் பருகவும் செய்யுங்கள்.”                   (தபரானி)
அஃதாவது ஒருவருக்கு பாத்திரம் தேவைப்பட்டு அதைத்தவிர அவருக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால், அதை நன்றாக கழுவிக்கொள்ளவும். இந்த பாத்திரங்களை சுத்தம் செய்ய கழுவுதல் அவசியமாக இருப்பதன் காரணத்தால், மது மற்றும் பன்றிகள் அசுத்தமானவையாகும். நபிصلى الله عليه وسلمஅவர்கள் அப்பாத்திரங்களை தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்யுமாறு கூறியது அதை தூய்மைப்படுத்துவதற்காகும்.இது பன்றி மற்றும் மது அசுத்தமானவை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُخَالِطُ الْمُشْرِكِينَ وَلَيْسَ  لَنَا قُدُورٌ وَلَا آنِيَةٌ غَيْرُ آنِيَتِهِمْ , قَالَ: فَقَالَ: «اسْتَغْنُوا عَنْهَا مَا اسْتَطَعْتُمْ فَإِنْ لَمْ تَجِدُوا فَارْحَضُوهَا بِالْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُورُهَا ثُمَّ اطْبُخُوا فِيهَا
“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் பலதெய்வ வழிபாடு செய்பவர்களின் இடத்தில் இருக்கின்றோம்; அவர்களுடையதை தவிர வேறு பாத்திரங்கள் எங்களிடம் இல்லை”. ..அதற்கு நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்; அதிலிருந்து உங்களால் முடிந்த வரை விலகி இருங்கள்; அதைத்தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை எனில் அதை தண்ணீரால் நன்கு கழுவிக்கொள்ளவும். ஏனெனில் தண்ணீர் அவைகளை சுத்தப்படுத்தக்கூடியதாகும். பின்பு அதில் நீங்கள் சமைத்து கொள்ளுங்கள்.”                   (தாரகுத்னி)
நபிصلى الله عليه وسلمஅவர்கள் «فَإِنَّ الْمَاءَ طَهُورُهَا» “தண்ணீர் அதை தூய்மைப்படுத்த கூடியதாகும்” என்று கூறியதன் மூலம் மது மற்றும் பன்றி அசுத்தமானவைகள் என்று விளங்குகிறது. மேலும்
அசுத்தமானவைகளிலிருந்து ஆதாயமடைவதும் தடுக்கப்பட்டவை  என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.
நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்;-
إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الخَمْرِ، وَالمَيْتَةِ وَالخِنْزِيرِ وَالأَصْنَامِ ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ المَيْتَةِ، فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لاَ، هُوَ حَرَامٌ» ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»
“அல்லாஹ்வும் அவனது தூதரும் மது, செத்த மிருகங்கள், பன்றி, சிலை ஆகியவற்றை வியாபாரம் செய்வதை ஹராமாக்கியுள்ளார்கள்.”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! செத்த மிருகங்களின் கொழுப்பை கொண்டு படகிற்கு கொழுப்பிடுவது,அதன் துளைகளை மறைப்பது மற்றும் விளக்கிற்காக அதை பயன்படுத்துவது கூடுமா என்று கேட்கப்பட்டது. நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்..இல்லை! இவை  தடுக்கப்பட்டவையாகும்.அல்லாஹ் யூதர்களை நாசமாக்கட்டும்! அல்லாஹ் (மிருகங்களின்) கொழுப்பை அவர்களுக்கு ஹராமாக்கியிருந்தான்; எனினும் அவர்கள் அதன் கொழுப்பை உருக்கி அதை விற்று அதன் லாபத்தை உண்டனர்.”
                                                                                             (ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), புகாரி)
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بَلَغَ عُمَرَ أَنَّ سَمُرَةَ بَاعَ خَمْرًا، فَقَالَ: قَاتَلَ اللهُ سَمُرَةَ، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَجَمَلُوهَا، فَبَاعُوهَا
“சமுரா மது விற்பனை செய்ததாக உமர்(ரலி) அவர்களிடம் அறிவிக்கப்பட்டது. அல்லாஹ் சமுராவை நாசமாக்கட்டும்!  நபிصلى الله عليه وسلمஅவர்கள், அல்லாஹ் யூதர்களை சபிக்கட்டும்! அவர்களுக்கு கொழுப்பை(சாப்பிட) தடுக்கப்பட்டிருந்தும், அதை உருக்கி பின் அதை விற்றனர்.” என்று கூறியது அவருக்கு தெரியாதா என்று பதிலளித்தார்கள்.
                                                                                                                                                               (முஸ்லிம்)
நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
إِنَّ اللَّهَ حَرَّمَ الْخَمْرَ وَثَمَنَهَا، وَحَرَّمَ الْمَيْتَةَ وَثَمَنَهَا، وَحَرَّمَ الْخِنْزِيرَ وَثَمَنَهُ
“அல்லாஹ் மதுவையும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையையும் தடுத்திருக்கிறான்;செத்த மாமிசத்தையும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையையும் தடுத்திருக்கிறான்; மேலும் பன்றியையும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையையும் தடுத்திருக்கிறான்.” (அபூ ஹுரைரா(ரலி), அபூ தாவூது )
அசுத்தமானவைகளிலிருந்து ஆதாயமடைவது தடுக்கப்பட்டவை என்பதை மேற்கூறிய ஆதாரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.ஆகவே, வெள்ளரி மற்றும் அதை போன்ற செடிகளை செழிப்படைய செய்து அதன் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக பன்றியிலிருந்து மரபணுவை எடுத்து செடிகளில் செலுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அசுத்தமானவைகளிலிருந்து ஆதாயமடைவது தடுக்கப்பட்டுள்ளதால் இதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.
 அசுத்தமானவைகள் வெறுக்கப்பட்டதாயினும்  அவற்றை மருந்துக்காக உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதை இத்துடன்  ஒப்பிட்டு கூறமுடியாது.
அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள் :-
أَنَّ نَاسًا مِنْ عُرَيْنَةَ اجْتَوَوْا المَدِينَةَ «فَرَخَّصَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا، وَأَبْوَالِهَا»
“உரைனா கோத்திரத்தை சார்ந்த சிலர் மதீனாவிற்கு வந்தார்கள்; அவர்களுக்கு அதன் சீதோஷ்ண நிலை ஒத்துக்கொள்ளவில்லை;ஆகவே அல்லாவிஹ்ன் தூதர்صلى الله عليه وسلمஅவர்கள், ஜகாத்தாக கொடுக்கப்பட்ட ஒட்டக மந்தைக்கு சென்று அதன் பாலையும் சிறுநீரையும்(மருந்தாக) பருக அனுமதியளித்தார்கள்…”(புகாரி)
செடி வளர்ப்பு என்பது மருந்து என்னும் சொல்லின் அர்த்தத்தில் அடங்காத காரணத்தால், செடி வளர்ப்பதை மருந்திற்கு சமமானதாக கூறமுடியாது. ஆகவே செடியின் வளர்ச்சிக்காக பன்றியின் மரபணுவை உபயோகிக்க அனுமதி கிடையாது.

Sources sindhanai.org

விற்பனை இலக்கை மட்டும் மையமாக வைத்து தொழிலாளியின் படியை நிர்ணயிப்பது கூடுமா?

 
கேள்வி:-
இக்காலத்தில் சதவீதம் என்கிற வார்த்தையின் உபயோகம் அதிகரித்துள்ளது; அதாவது இந்த மாதத்தில் 4,00,000 ரூபாய் அளவில் நீங்கள் விற்பனை செய்திருந்தால், அதில் கால் சதவிகிதம் உங்களுக்கு படியாக கிடைக்கும்; அந்த விற்பனை இலக்கை அடையவில்லையெனில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது.
இதற்கு அனுமதி உண்டா?
ஒரு விற்பனை அங்காடியில்  வியாபாரிக்காக வேலை செய்யும் தொழிலாளிக்கு தன்னுடைய கூலியின் அளவு தெரிந்திருப்பது அவசியமாகும். மேலும் அவர் விற்பனை செய்த பொருட்களுக்காக கூலியுடன் சில சதவிகிதத்தை சேர்த்து கொடுக்கலாம். உதாரணமாக, அவருடைய சம்பளம் 1000 ரூபாய்  என்றிருந்தால், அவர் விற்பனை செய்த பொருட்களுக்காக கூடுதலாக 10 சதவிகிதத்தை உபரியாக அதனுடன் சேர்த்து வழங்கலாம்; இதற்கு தடை இல்லை. அவ்வாறில்லாமல் அவர் விற்பனை செய்த பொருட்களுக்கு மட்டும் சதவிகிதமாக வழங்குவது; அவர் விற்பனை செய்யும் பட்சத்தில் அவருக்கு 10 சதவிகிதம் கிடைக்கும்; அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவருக்கு எதுவும் கிடைக்காது என்று  நிர்ணயிப்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் உள்ளன… ஷரியா அடிப்படையிலான வலுவான கருத்து  என்னவெனில், இதற்கு அனுமதி கிடையாது.
வேறொருவருக்காக தொழிலாளியாக வேலை செய்வது, அதாவது அவருக்காக அவருடைய வணிக வளாகத்தில் விற்பனை செய்வது; அவர் விற்பனை செய்த தொகையில் சில சதவிகிதம் அவருக்கு சம்பளமாக வழங்கப்படும். அஃதாவது, அவர் விற்பனை செய்யும் பட்சத்தில், அவர் விற்பனை செய்ததில் சில சதவிகிதம் அவருக்கு கிடைக்கும். அவ்வாறு இல்லையெனில் அவருக்கு எதுவும் கிடைக்காது. தொழிலாளிக்கு தன்னுடைய கூலி எவ்வளவு என அறிந்திருப்பது அவசியம் என்ற அடிப்படையில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.அவர் விற்பனை செய்ததற்கான பொருட்களுக்காக கூடுதலாக சில சதவிகிதத்தை கூலியுடன் சேர்த்து கொடுக்கலாம். ஆனால் அவர் விற்பனை செய்த பொருட்களுக்கான சதவிகிதத்தை மட்டும் கூலியாக வழங்குவதற்கு அனுமதி கிடையாது.
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:-
مَنِ اسْتَأْجَرَ أَجِيرًا، فَلْيُعْلِمْهُ أَجْرَهُ
“யார் ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறாரோ, அவர் தொழிலாளிக்கு அவருடைய கூலியை தெரிவித்து கொள்ளட்டும்.”
                                               (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:-
أَعْطِ الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ
“தொழிலாளியின் வியர்வை உணர்வதற்கு முன் அவருடைய கூலியை வழங்கி விடுங்கள்”  (பைஹகீ)
இதனடிப்படையில், தொழிலாளிக்கு அவர் செய்யும் வேலைக்கு கூலி வழங்கப்பட வேண்டும். அவர் வேறொருவருக்காக கூலியில்லாமல் வேலை செய்வதற்கு அனுமதியில்லை. இதுவே இவ்விஷயத்தில் வலுவான நிலைப்பாடாகும்.
அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே; அவனே நீதிபதிகளில் சிறந்தவன்.

Sources sindhanai.org

கைகளால் வரையப்படும் சித்திரங்கள் குறித்த இஸ்லாமிய தீர்ப்பு

கேள்வி:-
 கைகளால் வரையப்படும் சித்திரங்கள் மற்றும் உயிருள்ள ஜீவன்களான மனிதன், மிருகங்களை சித்திரமாக வரைந்து வீடுகளில் வைத்திருத்தல், அதை தொங்கவிடுவது பற்றிய ஷரியா விதிமுறை என்ன?
மனிதர்களையும் மிருகங்களையும் சித்திரமாக தீட்டுவதென்பது இப்போது நடைபெற்று வரும் வழக்கமான விடயங்களில் ஒன்றாகிவிட்டது.மனிதனின் முயற்சியில், அதாவது எழுதுகோல் மூலமாகவோ அல்லது கணினியின் உபகரணம் கொண்டோ சித்திரம் தீட்டுவதென்பது, உயிருள்ள ஒன்றிற்கு பொய்யான தோற்றத்தை அளிப்பது போன்றதாகும். ஆகையால் தடுக்கப்பட்டவை என்னும் அளவுகோல் இதற்கு பொருந்தும்.
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்:-
مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا
“எவரொருவர் ஓர் உருவத்தை வரைந்தால், அதற்கு உயிர் கொடுக்கப்படும் வரை அல்லாஹ் அவருக்கு தண்டனை அளிப்பான். மேலும் அவர்களால் ஒருபோதும் அதற்கு உயிரளிக்க முடியாது”.                     (இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)
நபிصلى الله عليه وسلمஅவர்கள்  கூறினார்கள்:-
إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ
“உருவத்தை சித்திரமாக தீட்டுபவர்கள் மறுமை நாளில் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்; மேலும் அவர்களிடம் ‘நீங்கள் உருவாக்கிய ஓவியத்திற்கு உயிரளியுங்கள்’ என்று கூறப்படும்”.       (இப்னு உமர்(ரலி), புகாரி)
சித்திரங்களை வைத்திருப்பது, வீட்டில் வைத்திருப்பது, அதை தொங்கவிடுவது பற்றிய சட்டங்களை காண்போம்.
அ) தொழுகை விரிப்புகள், மஸ்ஜிதுகளின் திரைகள் அல்லது மஸ்ஜிதுகளுக்கான விளம்பரங்கள் மற்றும் இது போன்ற இடங்களில் தடுக்கப்பட்டதாகும். இதற்கு அனுமதியில்லை.
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கஃபாவினுள் இருந்த சித்திரங்கள் அழிக்கப்படும் வரை உள்ளே வர மறுத்தார்கள் என்று கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபிصلى الله عليه وسلمஅவர்கள் அவர்கள் சித்திரங்கள் அழிக்கப்படும் வரை உள்ளே நுழைய மாட்டேன் என்று கூறியது வழிபாட்டு தலங்களில் சித்திரங்கள் வைப்பதற்கு தடை என்பதற்கான கரீனா(قَرِينَة) ஆகும்.எனவே மஸ்ஜிதுகளில் சித்திரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
أَنَّ النَّبِيَّ صبى الله عليه وسلم لَمَّا رَأَى الصُّوَرَ فِي الْبَيْتِ يَعْنِي الْكَعْبَةَ لَمْ يَدْخُلْ وَأَمَرَ بِهَا فَمُحِيَتْ
“நபிصلى الله عليه وسلمஅவர்கள் அவர்கள் இல்லத்தில், அஃதாவது கஃபாவினுள் சித்திரத்தை கண்டதால் நுழையவில்லை;மேலும் அதை அழிக்க உத்தரவிட்டார்கள்.”
                                                                                                  (இப்னு அப்பாஸ்(ரலி),முஸ்லிம்)
ஆ) வழிபாடு அல்லாத வேறு இடங்களில் வைப்பதற்குரிய அனுமதி
மரியாதைக்குரியதாகவும், பெருமைக்காகவும் அவைகளை வைத்திருப்பது; அஃதாவது வணக்கத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் வீடுகளில் திரையாக, கல்விக்கூடங்களில் செயல் விளக்கத்திற்காக, ஆடைகளில் அல்லது துணிகளில் வரையப்படுவது…அல்லது பள்ளிக்கூடங்களில், அலுவலகங்களில், அல்லது விளம்பரங்களில் அல்லது பொருட்களின் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக நாடி உபயோகிப்பது அல்லது இது போன்ற விஷயங்கள்…. இவை அனைத்தும் விரும்பத்தகாத (مَكْرُوه)  செயலாகும்.
மிதியடிகள், படுத்து உறங்க பயன்படுத்தும் பாய்கள், தலையணைகள், மிதிக்கும் தரைகள் போன்றவை; வணக்கத்துக்குரிய அல்லது மதிப்பிற்குரிய இடங்களைத்தவிர மற்ற இடங்களில் இவற்றை வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சில ஆதாரங்கள்:-
நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்:-
لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ
                     ” நாய் மற்றும் சித்திரங்கள் உள்ள வீட்டினுள் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள்”.
                                                                                     (அபூ தல்ஹா(ரலி), முஸ்லிம்)
நபிصلى الله عليه وسلمஅவர்களிடமிருந்து கேட்டதாக  அபூ தல்ஹா(ரலி) மற்றொரு அறிவிப்பில் கூறுகிறார்கள்:-
إِلَّا رَقْمًا فِي ثَوْبٍ
                                  “துணிகளில் உள்ள சித்திரங்களை அச்சிடுதல் தவிர”  (புகாரி,முஸ்லிம்)
இது துணிகளில் சித்திரங்கள் அச்சிடுவதற்கான விதிவிலக்கு இருப்பதற்கு ஆதாரமாக திகழ்கிறது. அஃதாவது மலக்குகள் சித்திரம் உடைய துணிகளைக் கொண்ட வீடுகளில் நுழைவார்கள்;அஃதாவது கைகளால் தீட்டப்பட்ட சித்திரம்,தட்டையான சித்திரம் “துணிகளில் அச்சிடப்பட்டவை” ஆகுமானதாகும். ஏனென்றால் மலக்குகள் தட்டை வடிவிலான சித்திரம் கொண்ட வீடுகளில் நுழைவார்கள் என்பதாக அர்த்தம் கொள்கிறது. இருப்பினும், இது எவ்வகையில் அனுமதிக்கப்படுகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள மற்ற அறிவிப்புகள் கீழே குறிப்பிடப்படுகிறது:
ஆயிஷா(ரலி)  அறிவிக்கிறார்கள்:-
دَخَلَ عَلَيَّ النَّبِيُّ وَفِي الْبَيْتِ قِرَامٌ فِيهِ صُوَرٌ فَتَلَوَّنَ وَجْهُهُ ثُمَّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ
“நபிصلى الله عليه وسلمஅவர்கள் வீட்டில் நுழையும்போது அங்கு சித்திரங்கள்(மிருகங்கள்) உடைய திரைகள் தொங்குவதை கண்டு கோபத்தால் முகம் சிவக்க, அதை தன் கைகளால் பிடித்து பின்பு அதை துண்டு துண்டாக கிழித்து எறிந்தார்கள். (புகாரி)
அல்-கிராம் “القرام” என்பது ஒரு வகையான துணியை குறிக்கும். இது கதவுகளில் திரையாக உபயோகிக்க கூடியது. நபிصلى الله عليه وسلم அவர்களின் முகம் சிவந்து அதை தங்களது கைகளால் பிடித்தது என்பது, கதவுகளின் திரைகளில் உருவம் பதியப்பட்டவைகளை உபயோகிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது, எனவே இது மலக்குகள் உருவம் பதியப்பட்ட வீடுகளில் நுழைவது குறித்த அனுமதித்தலை பொறுத்தமட்டில், இதை விளக்குவதற்கான ஆதாரமானது இதற்கு ஆதரவாக இல்லை, அதாவது இது வெறுக்கப்பட்ட செயலாக உள்ளது. ஏனெனில் இந்த உருவம் பதியப்பட்ட திரைகளானது கதவுகளில் தொங்கவிடப்பட்ட இடமாக உள்ளது; இது மதிக்கப்படும் இடமாகும்.ஆகையால் மதிக்கப்படும் இடங்களில் உருவம் பதியப்பட்டதை தொங்கவிடுவது வெறுக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிصلى الله عليه وسلمஅவர்களிடம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது;-
وَمُرْ بِالسِّتْرِ يُقْطَعْ فَيُجْعَلَ مِنْهُ وِسَادَتَانِ تُوطَآَنِ
“திரையை கிழித்து அதிலிருந்து இரண்டு மெத்தைகளை அதன் மீது புரளுவதற்காக செய்யுங்கள் என்று  (ஜிப்ரீல்(அலை) அவர்கள் எனக்கு) கட்டளையிட்டார்கள்.”
                                                                                                             (அபூ ஹுரைரா(ரலி),  அஹ்மது)
ஆகவே ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிصلى الله عليه وسلمஅவர்கள் அவர்களுக்கு மதிப்பிற்குரிய இடத்திலிருந்து திரையை அகற்றி மக்கள் அதன் மீது புரளுவதற்குரிய இரண்டு மெத்தைகளாக ஆக்கிக்கொள்ள ஆணையிட்டுள்ளார்கள்.
இதிலிருந்து உருவம் பதியப்பட்டவைகளை மதிப்பிற்குரிய இடங்களில் அல்லாமல் வேறு இடங்களில் உபயோகிக்க அனுமதி உண்டு  என்பதை அறிய முடிகிறது.

Sources sindhanai.org