Aug 8, 2016

இஜ்திஹாத்தின் பெயரால் இஸ்லாத்தை புதிதாக பொதி செய்ய முயற்சி!


இஜ்திஹாதின் பொருளை சிதைப்பதற்கான முயற்சிகள் இன்று நிறையவே நடக்கின்றன. மார்க்கத் தீர்ப்பளிக்கின்ற உரிமையை ஒரு சில அரச அங்கீகாரம் பெற்ற அறிஞர்களிடமும், நிலையங்களிடமும் மாத்திரம் சுருக்கி மக்களின் அறிவு தேடும் வழிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் அத்ல் (நீதி) ஆனது எல்லாம் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்களே (தீர்ப்புக்களே) என இறைச்சட்டங்களுக்கு மீள வரைவிலக்கணம் வழங்குதல் என்பன இந்த முயற்சியில் முக்கியமான கைங்கரியங்களாகும்.

இந்த தீய முனைப்பில் சில இயல்புகள் அடிக்கடி பளிச்சிடுகின்றன:

1. அறிவு தேடுதலை கட்டுப்படுத்தல். (பெரும்பாலும் அரசுகளால்) அங்கீகாரம் பெற்ற அறிஞர்கள் சிலரைக் கொண்டு அல்குர்ஆன், அஸ்ஸுன்ஆவை நேரடியாக அணுகுவது ஆபத்தானது என்ற மனப்பதிவை முஸ்லிம்களின் மனதில் ஏற்படுத்தல். இந்த அழுத்தம் எந்தளவிற்கு பிரயோகிக்கபடுகிறது என்றால் சில சமயங்களில் ஒரு மார்க்கத் தீர்ப்பு மிகத் தெளிவான இஸ்லாமிய ஆதாரங்களுடன் முரண்படுவதாகத் தெரிந்தாலும், முஸ்லிம்கள் அது சம்பந்தமாக மௌனம் காத்து அவ்விடயத்தை அறிஞர்களின் கைகளில் மாத்திரம் விட்டுவிட வேண்டும் என்ற சிந்தனை வளர்க்கப்படுகிறது. இந்நிலை முன்னைய யூத, கிருஸ்தவ சமூகங்கள் அறிவை மத அறிஞர்களின் ஏகபோக உரிமையாக சுருக்கிவிட்டதன் விளைவால், மார்க்க அறிஞர்கள் வழி பிறழ்ந்த மக்களினதும், ஆட்சியாளர்களினதும் மனோ இச்சையை திருப்திப்படுத்தும் வண்ணம் வேத வெளிப்பாடுகளுக்கு வியாக்கியானம் செய்ததையொத்த கவலைக்கிடமான நிலையாகும்.

2. இஜ்திஹாத், என்ற தூய வழிமுறை இன்று “மார்க்கம் மௌனம் காக்கின்ற” விடயங்களில் “மனிதன் இயற்றுகின்ற சட்டங்கள்” என்ற பொருளை எட்டியிருக்கிறது.சில விடயங்களில் மார்க்கம் மௌனம் சாதிக்கிறது என்ற மிகப்பிழையான எடுகோளின் படி, தவறாகப் பயன்படுத்தப்படும் இஜ்திஹாத் வழிமுறை இன்றைய உலகை ஆள்கின்ற மனிதச் சட்டவாக்க பொறிமுறையுடன் நன்றாகவே ஒத்துப் போகின்றது. “எங்கெல்லாம் நீதி(அத்ல்) நிலைத்திருக்கிறதோ அதுதான் அல்லாஹ்(சுபு)வின் சட்டமாகும்” என்ற ஒரு புதுமையான வரைவிலக்கணத்தை அண்மையில் ஒரு ஷரீஆ துறை அறிஞர் என்னிடம் சொன்னது இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்லாமல்லாத குப்ர் தேசங்களில் மில்லியன் கணக்கான இஸ்லாமியச் சட்டங்கள் அமூல்படுத்தப்படுகின்றன என அவர் கூறிய பொழுது, அதிர்ச்சியோடு இல்லை...அவையெல்லாம் குப்ர் தேசங்களல்லவா... என்று நான் சுட்டிக்காட்ட, அவர் என்னை வியந்து பார்த்து “இத்தக்கில்லாஹ்” (அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்) என்று எச்சரித்ததையும் இங்கே நினைவு கூறுகின்றேன்.

3. இஜ்திஹாத் என்பது “அத்தரூரா - இன்றியமையாத நிலை” மற்றும் “ஹஃபத் தரரைன் - தீயதில் சிறியது” என்ற இரு அடிப்படைகளை மாத்திரம் சுற்றிச் சுழலும் ஒரு பொறிமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது. நவீன கால பிரச்சனைகள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்வாக்களில் ஏறத்தாழ அனைத்துமே நலன்களையும் (மஸ்லஹா), தீங்குகளையும் ஆராய்வதை மையம் கொண்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தீர்ப்புகளுக்குள் ஒரு திருமறை வசனமோ அல்லது நபிமொழியோ சொல்லப்பட்டால் அது இந்த நலன் VS தீங்கு கணக்கை தீர்க்க முன்வைக்கப்படும் ஆதாரமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தை மறுபொதி பண்ண எடுக்கப்பட்ட முயற்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை இலகுவாக காலணித்துவம் செய்வதற்காக அவர்களை அமைதிப்படுத்தி, இயங்காது வைத்துக்கொள்ள கடுமையான பிரயத்தனம் எடுத்தனர். குலாம் அஹ்மத் போன்றோர்களை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை அமைதிகாக்க கற்றுக்கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அதில் படு தோல்வியடைந்தனர். இதே நிகழ்ச்சி நிரலை “இஸ்மாயீலி” களைப் பயன்படுத்தி நிறைவேற்ற நினைத்தனர். அங்கேயும் மூக்குடைபட்டனர். காந்தியை பயன்படுத்தி அகிம்சையை போதித்த போது சில காலம் அது கைகூடினாலும் மேற்குலக மேலாதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் உம்மத்தை இயங்காது வைத்திருப்பதற்கு, எதிர்வினையாற்றாது அமைதி காக்கச் செய்வதற்கு அதுவும் நீண்ட காலம் வெற்றியளிக்கவில்லை. மேலும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும், பொருள் கொள்ளலுக்கும் ஏற்ப அல்குர்ஆனை மொழியாக்கம் செய்து முஸ்லிம்களின் கைகளில் தவழவிட்டுப் பார்த்தனர். எனினும் மூல அரபு மொழி குர்ஆனுடன் உம்மத்திற்கு இருந்த தொடர்பால் அவர்களின் சூழ்ச்சி பழிக்கவில்லை. ஹதீத்களை இஸ்லாத்திலிருந்து தொடர்பறுத்து இஸ்லாத்தை நடைமுறை ரீதியாக அமூலாக்கம் செய்வதை தடுக்க முயன்றனர். ஹதீத் கலையின் ஏற்புடமை பற்றி மக்களின் மனதில் ஐயப்பாடுகளை விதைக்கும் வண்ணம் தமது பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை ஏற்படுத்தி அதனைச் சாதிக்க நினைத்தனர். எனினும் ஒரு சிலரைத்தவிர ஏனையோரை அந்த முயற்சி வழிகெடுக்கவில்லை. இன்றும் பாகிஸ்தானிலே அல் கம்தி போன்ற தனிநபர்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தகைய ஆழமான முயற்சிகள் எல்லாம் பயனளிக்காத நிலையில் அவர்கள் பாவிக்கும் அண்மைக்கால யுக்திகளை இவ்வாறு சுருங்கக் கூறலாம்.

1) அறிவை குறித்த “அங்கீகாரம் பெற்ற அறிஞர்” களுக்கு மாத்திரம் மொத்தமாக குத்தகைக்கு வழங்குதல். அந்த அறிஞர்கள் கைமாறாக அரசாங்கங்களுக்கு கட்டுப்படும்படியும், தற்போதுள்ள (குஃப்ரான) வாழ்வொழுங்குடன் இரண்டரறக் கலந்து வாழும்படியும் மக்களுக்கு போதனை செய்தல்.

2) இஜ்திஹாத்தின் பொருளை “பலன்களையும், தீங்குகளையும் நிறுத்துப்பாக்கும் மனித மதிப்பீடு” என்பதாக மாற்றுதல்

3) “ஹுக்ம் ஷரீய்” இன் பொருளை அனைத்து “நீதி” ஆன சட்டங்களும் ஹுக்ம் ஷரீய்தான் என்பதாக மறுவிளக்கம் அளித்தல். அதன்படி மனிதன் இயற்றுகின்ற எத்தகைய நீதியான சட்டங்களும் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்கள்தான் என்ற நிலைப்பாட்டுக்கு வருதல்.

எனவே இன்றைய சூழலில் உலகில் எந்த எல்லையில் ஒருவர் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் அவர் இத்தகையதொரு ஆபத்தான திசை நோக்கி உம்மத்தை தள்ளுகின்ற முயற்சி இடம்பெற்று வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். உம்மத்தை சரியான சிந்தனை நோக்கி தொடர்ந்து விழிப்பூட்ட வேண்டும்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் கல்வி என்பது அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது முன்னமே அங்கீகாரம் பெற்ற அறிஞர்களுக்கு மாத்திரம் தனியுரிமையாக வழங்கப்பட்டதல்ல. அதேபோல சத்தியத்தை உரைப்பதும், ஆட்சியாளர்களை தட்டிக்கேட்பதும் இஸ்லாத்தின் முக்கிய அங்கங்களாகும். அதன்படி குப்ர் சிந்தனைகள் அனைத்தையும், அதனை கட்டிப்பாதுகாக்கின்ற அரசுகள், முறைமைகள் அனைத்தையும் நாங்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும். மேலும் நாங்கள் எங்களை நோக்கி வருகின்ற அனைத்து பத்வாக்களையும் கண்மூடிப் பின்பற்றக்கூடாது. அவற்றிலிருக்கும் குறைகளை, தவறுகளை கண்டு மௌனம் காக்கக் கூடாது. குறிப்பாக இன்றைய உலகை வழிநடாத்துகின்ற குப்ர் முறைமைகளுக்குள் இரண்டரறக் கலந்துவிடுவதற்காக அரசியல் நோக்கங்களுடன் வெளிவருகின்ற பத்வாக்களை ஒன்றுக்கு பலமுறை அவதானமாக அணுக வேண்டும்.

அல்குர்ஆனும், அஸ்ஸுன்ஆவும் சொல்கின்ற மிக நெருக்கமான பொருள் அல்லது சட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக எடுக்கப்படும் அதிகூடிய முயற்சியே இஜ்திஹாத் ஆகும். மாறாக முதலாளித்துவ, சடவாத, தாராண்மைவாத சட்டவாக்கப் பொறிமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சில பரிதாபமான இலாப – நஷ்ட ஆராய்ச்சி அல்ல. இஜ்திஹாத்திலிருந்து எட்டப்படுகின்ற தீர்ப்புக்கள் அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்புக்கு மிக அண்மித்த தீர்ப்புகளாகும். மாறாக மனித மூளையை நீதிபதியாக்கி “நன்மை, தீமைகளை தர்க்க ரீதியாக அளந்து பார்த்து” எடுக்கப்படும் தீர்ப்புகளல்ல. இத்தீய முயற்சி இன்னொரு வடிவில் “மனோ இச்சையை” பின்பற்றுவது கூடும் என சொல்வதை ஒத்ததே.

அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்பு என்பது அல்லது சட்டம் என்பது குர்ஆன், ஸுன்ஆவிலிருந்து மாத்திரம் யாக்கப்படுவதாகும். அதுதவிர வேறு எங்கேனும் இருந்து எட்டப்படும் முடிவுகள் - அது அல்லாஹ்வின் முடிவுக்கு ஒத்ததாக தெரிந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நபி(ஸல்) நவின்ற இந்த நபிமொழியை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் கூட அது இதற்கு சான்று பகரப் போதுமானதாகும்.

“எமது கட்டளையில் இல்லாத ஒரு செயலை ஒருவர் செய்வாரானால் அது நிராகரிக்கப்பட்டதாகும்.”

எனவே உலகை நீதியின் நிழலில் வழிநடாத்த இருக்கின்ற உம்மத்தின் எழுச்சியில் தாமதத்தை ஏற்படுத்த ஏவப்படும் இத்தகைய தீய அம்புகளிலிருந்து அல்லாஹ்(சுபு) எம்மைப் பாதுகாப்பானாக. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது, சித்தாந்தத்தை சித்தாந்தத்தால் முறியடிக்க முடியாது அற்பத்தனமான காரியங்களினூடாக உம்மத்தை குழப்பத்தில் ஆழ்த்த நினைக்கின்ற குப்பார்களினதும், முனாபிக்களினதும் முகத்தில் அவன் முன்புபோலவே இம்முறையும் கறியைப் பூசுவானாக!

DARUL AMAN

துருக்கி அரசை கவிழ்க்க நடந்த ராணுவ சதிப்புரட்சியின் அரசியல்


ஜூலை 17 ஞாயிறு அன்று ராணுவ சதிப்புரட்சியானது அதிகாரப்பூர்வமாக துருக்கி நேரப்படி மாலை 4.30 மணிக்கு முடிவுற்றது என துருக்கி ராணுவப்படை ஒரு செய்தி வெளியிட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை செயலிழக்க செய்ய உதவி புரிந்த மக்களின் ஒத்துழைப்பிற்கு இந்த செய்தி குறிப்பின் மூலம் நன்றியையும் தெரிவித்தது. 

ரெசெப் தாய்யிப் எர்துகான் அரசை கவிழ்க்கும் முயற்சியில் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் ராணுவ பீரங்கிகள் மற்றும் ராணுவ விமானங்கள் சீறி பாய்ந்ததை பார்த்து பெருவாரியான உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. தங்களின் தரப்பிலிருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ராணுவ சதிப்புரட்சியை மேற்கொண்டவர்கள் முக்கிய நகரங்களில் படையெடுப்பு நடத்தி அதை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றனர். 

ஆனால் எர்துகான் கைப்பேசி மூலம் தனது ஆதரவாளர்களை நோக்கி தெருக்களில் இறங்கி நாட்டை மீட்டெடுங்கள் என்று செய்தி அனுப்பிய உடன் பெருங்கூட்டத்தினர் வீதிகளில் பொங்கி எழுந்ததால் இந்த புரட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடிந்தது எர்துகான் அதிலிருந்து போர் புரியும் வண்ணமாக வெளிவந்து ராணுவ சதிப்புரட்சியாளர்களை நோக்கி தெளிவாக குறிப்பிட்டார் “இவ்விஷயத்திற்காக அவர்கள் பெரும் விலை கொடுக்கப்போகிறார்கள்” [1] என்று நேரடியாக ஒரு பெரும் தேடுதல் வேட்டை நடத்த தொடங்கியது, 34 ஜெனரல்கள் மற்றும் இன்சிர்லிக் விமானத்தளத்தின் கமான்டர் உட்பட பல்வேறுபட்ட நிலையிலுள்ள 6000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர், 
ஆனால் இதன் களையெடுப்பு இதைவிட மிக ஆழமானது: 

 இந்த ராணுவ புரட்சியை தொடர்ந்து 2,745 துருக்கிய நீதிபதிகள் தங்களது கடமைநிலருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளனர்.[2] இந்த ராணுவ புரட்சி தோல்வி அடைந்த உடன் எர்துகான் அவரது ஆதரவாளர்களை கொண்ட ஒரு பெரும் கூட்டத்தாருக்கு தனது செயற்திட்டம் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் போக்கு குறித்து விளக்குகையில் இவ்வாறு கூறினார்: “இந்த புரட்சி நமக்கு இறைவனிடமிருந்து வந்த அன்பளிப்பாகும் ஏனெனில் இது நமது ராணுவத்தை தூய்மையாக்க காரணமாக விளங்கும். [3]

1923 ல் துருக்கிய குடியரசு உண்டான போது ராணுவ அதிகாரியான முஸ்தஃபா கமால் உண்மையான ஆட்சியாளராக செயல்பட்டார் அவர் கிலாஃபத்தை நிர்மூலமாக்கிய பின்னர் ராணுவ படையிலிருந்த இஸ்லாமிய ஆதரவாளர்களை அப்புறப்படுத்த தொடங்கினார். முஸ்தஃபா கமாலின் காலத்தில் துருக்கிய ராணுவம் தனது துப்பாக்கிகளை ஐரோப்பிய எதிரிகளை நோக்கி இருந்த நிலையை மாற்றி சொந்த மக்களை நோக்கி திருப்பியது, அவர்களை அவர் அடிப்படைவாதிகளாக நாட்டின் மதசார்பின்மையை எதிர்ப்பவர்களாக கருதினார்.

ராணுவத்தினரை மதசார்பின்மையை முன்னெடுத்து செல்பவர்களாக ஆக்குவதே அவரது நோக்கமாகும். அவரது மரணத்திற்கு பின்னர், ராணுவம் அரசாங்கம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறையிலுள்ள இதர மதசார்பின்மை வாதிகள் எந்த விலை கொடுத்தேனும் மதசார்மையை பாதுகாப்பது தங்களது தலையாய பொறுப்பாக கருதினர். மிக குறிப்பாக ராணுவம் மதசார்பற்ற துருக்கியின் பாதுகாவலராக தன்னை கருதியது. 

மதசார்பின்மை அல்லது ராணுவத்தின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் எழுந்த அச்சமயங்களில் உதாரணமாக 1960, 1971 மற்றும் 1980 களில் அவர்கள் ராணுவ சதிப்புரட்சி மேற்கொண்டு அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர். 1997 ல் ராணுவம் அரசிடம் ஒரு நீண்ட கோரிக்கை வைத்தது அந்த கோரிக்கைகளை ஏற்று கொள்வதை தவிர அரசிற்கு வேறு வழி இல்லாமல் இருந்தது. அதன் பிரதம மந்திரி, நெக்மெட்டின் எர்பாகன், பல்கலைகழகங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பதற்கு சம்மதித்தார் பின்னர் அது தளர்த்தப்பட்டது, அவரது கட்சி 1998ல் முடக்கப்பட்டது, மேலும் எர்பாகன் அரசியலில் ஈடுபடவதிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அரசியல் நிலப்பரப்பில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வந்தது மேலும் அது உருவாகிய மதசார்பின்மை அடித்தளத்திற்கும் நாட்டில் அது கொண்டிருக்கும் அதிகப்படியான நிலைக்கும் எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பார்த்து கொள்கிறது.

1998ல் தடைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், எர்பாகனின் வெல்ஃபேர் கட்சியின் முன்னால் உறுப்பினர்கள் ஏ.கே.பி கட்சியை உருவாக்கினர் அதன் பின்னர் 2002 பொது தேர்தலில் இஸ்தான்புல்லின் முன்னால் மேயரான ரெசெப் தாய்யிப் எர்துகான் தலைமை ஏற்று பெறும் வெற்றிக்கு இட்டு சென்றார். 

21ம் நூற்றாண்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஏ.கே.பி பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து எர்துகானிற்கு ராணுவம் துருக்கியில் வழக்கமாக கொண்டிருக்கும் பங்கை எதிர்க்கும் தைரியத்தை அளித்தது. (2015 ஜூன் மாதம் நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறுவதில் ஏற்பட்ட இழப்பு 2015 நவம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.பி மீண்டும் வெற்றி பெற்றது). 

பனிப்போரில் துருக்கி ஈடுபட்டிருந்த போதும், அதன் ராணுவம் பிரித்தானியருடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு வந்தது மேலும் ஐரோப்பிய கண்டத்துடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு அது எதிர்காலத்தில் தன்னை ஒரு ஐரோப்பிய நாடாக அடையாளம் காண விரும்பியது, ஆனால் எர்துகான் அமெரிக்காவுடன் உறவை மேற்கொள்ள ஆரம்பித்தார் அது ‘Shared Vision Document’ என்ற பெயரில் துருக்கி மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு இடையே அப்துல்லாஹ் குல் மற்றும் கான்டொலீசா ரைஸ் ஆகிய இருவரும் 2006 ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம் உச்ச நிலையை அடைந்தது. 

இந்த ஒப்பந்தம் ஒரு பரந்த உலகளாவிய, பிராந்திய, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய விஷயங்களில் அமெரிக்காவும் துருக்கியும் ஒத்துழைப்பு நல்கும் விதத்தில் அமைந்தது. [4] எர்துகானின் ஆட்சி காலத்தில் அவர் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான உறவை பலப்படுத்தினார் அது ஈராக்கை நிலைபெற செய்வதாக இருப்பினும், குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கு (KRG) நிதியுதவி அளிப்பதாக இருப்பினும், இரண்டு நாடுகள் அமைத்து தீர்வு காண்பது எனும் அடிப்படையில் பாலஸ்தீன குழுக்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாகினும் மற்றும் சிரிய எதிர்ப்பு படைகளில் ஊடுருவது போன்று எர்துகான் அமெரிக்காவின் திட்டங்களுக்கு அடிமட்ட அளவிற்கு உதவி புரிந்துள்ளார். 

ஏ.கே.பி யின் ஒரு குழு ஒன்று கூடுதலில் அமெரிக்காவுடனான தனது செயலை சுட்டிக்காட்டினார்: “உலகெங்கும் உள்ள நாடுகளில் இன்று அமெரிக்கா கொண்டிருக்கும் விருப்பங்களில் துருக்கியும் அதன் பெரும்பாலான விஷயங்களில் விருப்பம் கொண்டுள்ளது. நாம் அப்கானிஸ்தானிலிருந்து ஈராக், பாலஸ்தீனம் மற்றும் பால்கன் நாடுகள் போன்று பரந்த விஷயங்களில் பொதுவான பார்வையை கொண்டுள்ளோம். ஆனால் மிக முக்கியமாக ஒரு வலுவான ஒத்துழைப்பில் நாம் இருக்கின்றோம். மிஸ்டர் ஒபாமா இங்கு வருகை தந்த போது கூறியது போன்று நாம் ஒரு மாதிரி பங்கு கொள்ளும் படி நிலையில் நுழைந்திருக்கிறோம் மேலும் நாம் அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதில் சில விஷயங்கள் நாம் வெளியே கூறும் வண்ணமும் சில விஷயங்கள் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது.

துருக்கி மற்றும் அமெரிக்க உறவை துண்டாட நினைப்பவர்கள் இந்த உறவின் பல்முனை தரம் மற்றும் ஆழத்தை உதாசீன படுத்துகிறார்கள்.” எர்துகானின் தேர்தல் வெற்றி மற்றும் பிரித்தானிய வட்ட பாதையிலிருந்து துருக்கியை நீக்குவதற்கான துணிவான நகர்த்தல்கள் ராணுவத்தை கவலைக்குள்ளாக்கியது ஏனெனில் அவர்கள் அதுவரை எப்போதும் ஒரு ராணுவத்தை சாராத ஒரு ஆட்சியாளர் இவ்வளவு பொது ஜன ஆதரவை பெற்றிருந்த நிலையை எதிர் கொண்டதில்லை. குர்திய பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக எர்துகான் தொடங்கிய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் குர்திய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவம் முன்வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கியின் அதிகார பலத்தை மாற்றும் முயற்சியில் எர்துகான் ஈடுபட்டார். அவர் அரசில் தலையிடும் உச்ச ராணுவ மன்றத்தின் சட்ட அதிகாரத்தை சுருக்கலானார். இந்த மன்றத்தின் அமைப்பில் ராணுவத்தினர் அல்லாதவரும் பங்கு பெறும் வகையில் எரதுகான் மாற்றி அமைத்தார். உச்ச ராணுவ மன்றம் ராணுவ தளபதி, அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் மற்றும் குடியரசின் ஜனாதிபதி – இவரே ராணுவ தளபதியும் ஆவார் போன்றவர்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

இந்த மன்றம் ஒரு பாதுகாப்பு மன்றம் என்பதிலிருந்து வெறுமெனே அலோசனை மன்றமாக மாறியது. அதன் வருடாந்திர கூட்டம் பணி உயர்வு, பணி நியமனம், பணி காலத்தை நீன்டிப்பது மற்றும் ராணுவ வீரர்களை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்வது போன்றவற்றிற்காக ஒப்புதல் பெறுவதற்காக வேண்டி சமர்பிக்க படுகிறது. மூத்த படைத்தளபதிகளை ஓய்வில் அனுப்பவும் மற்றும் சிறையில் அடைக்கவும் 2007ல் அரசை ராணுவத்தை கொண்டு வெளியேற்றும் ’எர்கெனெகான்’ எனும் சூழ்ச்சியை எர்துகான் பயன் படுத்தி கொண்டார். 

அதேபோல் 2010ல் ’Sledgehammer’ எனும் சூழ்ச்சியை பணியிலிருக்கும் மூத்த ராணுவ அதிகாரிகளை ஒய்வு பெற்ற அதிகாரிகளுடன் சேர்த்து வழக்குகளில் சிக்க வைக்க உபயோகப்படுத்தப்பட்டது. துருக்கி வரலாற்றில் முதன் முறையாக ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இது நாட்டில் ராணுவத்தின் பிடி பெருமளவில் தளர்ந்திருப்பதை காட்டுகிறது. இறுதியில் இரு விசாரணைகளிலும் அனைத்து பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டனர் இருப்பினும் அதற்கு சேதம் ஏற்படுத்தியாகிவிட்டது. 

எர்துகான் வெற்றிகரமாக ராணுவத்திலுள்ள மதசார்பின்மை அடிப்படைகளை நலிவடைய செய்து தனக்கு விசுவாசமாக உள்ளவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதாவது 2015 நவம்பர் மாதத்தில் விமானப்படை தன்னிச்சையாக சிரியாவில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது, ராணுவத்தின் விசுவாசம் எர்துகான் நம்பிக்கை கொள்ள முடியாத வேறு எங்கோ இருப்பதை உணர்த்துகிறது. இது சிரயாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட அனைவரும் ஒரே குறிக்கோளை கொண்டிருக்கும் வேலையில் நடந்தேரியுள்ளது.

ஆகஸ்து மாதம் 1ம் தேதி உச்ச ராணுவ மன்றத்தின் வருடாந்திர ஒன்று கூடல் நடக்க வேண்டியுள்ளது இதனூடே இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கும் எர்துகானுக்கும் இடையே பதற்றம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் இருப்பதை காண முடிகிறது. இதன் காரணமாக மூத்த ராணுவ வீரர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் விரைவில் முடித்து வைக்கக்கூடும் என்ற காரணத்தால் எர்துகானை எதிர்கொள்ள தன்னிச்சையாக இந்த ராணுவ புரட்சியை மேற்கொண்டுள்ளனர்.

கேனி டோருன் எனும் ஏ.கே.பி எம.பி கூறுகையில், இந்த குழுவினர் மீது தேச துரோகம் மற்றும் ஸ்லெட்ஜ் ஹேமர் வழக்குகளின் தொடர்ச்சியாக விசாரணை தொடங்கப்பட்டது. ராணுவ புரட்சி மேற்கொள்வதற்கு சற்று முன்னர் தான் குற்றவாளிகள் பிராசிக்யூடர்களால் அழைக்கப்பட்டு நீதிமன்றத்தால் கைது செய்யப்படுவதாக இருந்தது,“ என டோருன் அல் ஜசீராவிடம் கூறனார்.[6] “அவர்கள் இந்த முன்னேற்றத்தை அறிந்த காரணத்தால் வழக்கமாக இது போன்ற ராணுவ புரட்சியை நடத்தும் நேரத்திற்கு மாற்றமாக இரவு 10 மணிக்கு மேற்கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். அவர்கள் திட்டமிட்டதை போன்று அதை காலை பொழுதி்ல் செயல்படுத்தி இருப்பார்களேயானால் அவர்கள் பெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்”. ராணுவத்திற்குள் ராணுவ புரட்சி மேற்கொள்ள திட்டமிடும் நபர்களை கடந்த பல மாதங்களாக துருக்கி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர் என மற்றுமொரு ஏ.கே.பி அதிகாரி குறிப்பிட்டார். “தாங்கள் புலனாய்வுக்கு உட்பட்டு இருக்கிறோம் என உணர்ந்ததன் காரணமாகவே இந்த குழு ஒரு அவசரத்தில் செயல்பட்டதாகவே கருதுகிறோம்.”[7]

விமானப்படை, ராணுவ புலனாய்வுத்துறை மற்றும் தளவாடப்படையில் உள்ள சிறு குழு ஈடுபட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை ஒரு சிறு குழுவினரே மேற்கொண்டுள்ளனர் இதில் ராணுவ தளபதியின் பங்கு சற்றும் இல்லாமல் இருந்தது, ராணுவ தளபதி சூழ்ச்சியாளர்களால் சிறை பிடிக்கப்பட்டார் மற்றும் சிலர் ஊடகத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ராணுவ தலைமையிடத்தில் இருந்து ஆதரவு கிடைக்காதது தான் இந்த ராணுவ சதிப்பரட்சி தோற்று போனதற்கான முக்கிய காரணமாகும்.

இந்த தோல்வியுற்ற ராணுவ சதிப்புரட்சி குறிப்பாக இந்த ராணுவ சதிப்புரட்சியில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்தது எர்துகானை மேலும் வலுவடைய செய்துள்ளது, இப்போது எர்துகான் ஒரு ஆழமான சுத்தகரிப்பை செய்ய போகிறார் இது நம்பகத்தன்மையை இழந்த தங்களது விசுவாசத்தை வேறு இடத்தில் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் இந்த தோல்வியுற்ற ராணுவ புரட்சியை காரணம் காட்டி எர்துகான் சர்வாதிகார போக்குடையவராக மாறி வருகிறார் என குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்து வருவதை காண முடிகிறது. அவரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும், ஐரோப்பா தங்களுடைய நிலையை எர்துகான் மற்றும் அவருடைய செயல்களை நோக்கியே கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கு இன்னொரு பக்கம் அமெரிக்காவுடைய நிலையானது இந்த ராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் சட்டத்தின் விதிகளை மதிக்குமாறு கோரிக்கை விடும் வண்ணம் இருந்தது, இது கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகானுக்கு ஆதரவான நிலையாகும்.

Reference: http://www.revolutionobserver.com/2016/07/the-politics-of-turkeys-coup.html


[1] http://www.nytimes.com/live/turkey-coup-erdogan/erdogan-they-will-pay-a-heavy-price-for-their-treason-to-turkey/

[2] http://in.reuters.com/article/turkey-security-judges-idINKCN0ZW0OZ

[3] https://www.rt.com/news/351630-erdogan-turkish-military-relationships/

[4] http://www.hurriyetdailynews.com/turkey-us-invest-hopes-in-shared-vision-document.aspx?pageID=438&n=turkey-us-invest-hopes-in-shared-vision-document-2006–07-07

[5] AK Party Group Meet­ing, Jus­tice and Devel­op­ment Party web­site, June 29 2010,http://www.akparti.org.tr/english/haberler/ak-party-group-meeting-june-29–2010/25721

[6] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html

[7] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html
http://sindhanai.org/

இன்றைய துருக்கியில் நடைபெறும் ஆட்சி கிலாஃபத் கிடையாதா?


இன்றைய துருக்கியானது இஸ்லாமிய கட்சியால் ஆளப்பட்டு வருகிறது என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அது தன்னகத்தே நிச்சயமாக ஒரு இஸ்லாமியரை அதிபராகவும் இன்னொரு இஸ்லாமியரை பிரதம அமைச்சராகவும் கொண்டுள்ளது. 

இதன் காரணத்தால் இந்த துருக்கிய மாதிரி அரசாங்கம் பொருமளவில் பிரபல்யம் அடைந்துள்ளது மற்றும் மக்களது பார்வையையும் ஈர்த்துள்ளது. இந்த மாதிரியை கொண்ட அரசாங்கமானது அதாவது சில இஸ்லாமிய சட்டங்கள் மதசார்பின்மையோடு கலந்திருப்பதை விரும்பும் பல மேற்கத்திய அரசியல்வாதிகள் மற்றும் மதசார்பின்மை வாதிகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது ஏனெனில் அவர்கள் தாங்கள் இது மாதிரியான அரசாங்கத்துடன் எளிதில் உறவு கொள்ள முடியும் என்பதோடு இது போன்ற நிலையை ஏனைய முஸ்லிம் உலகில் பார்க்க விரும்புகின்றனர். 

முஸ்லிம் உலகில் பெரும்பாலோர் துருக்கி என்பது கிலாஃபத்தின் ஆட்சி முறையை கொண்டதாகவே அறிந்து வைத்திருக்கின்றனர் – இந்த கிலாஃபத்தானது ஒரு போர் குழுவை உலகின் சக்ரவர்த்திகளாக மாற்றியது. தாங்கள் இஸ்லாமிய ஆட்சி முறை படி ஆட்சி செய்கிறோம் என்ற ஏ.கே.பி கட்சியின் கூற்றினை ஆராய்ந்து பார்க்கையில் அதன் திட்டங்களில் இஸ்லாம் எவ்வகையிலும் பங்கு பெற்றிருக்கவில்லை என்றும் அது பொது மக்களிடம் அளித்து வரும் வெறும் வாய்ஜாலமே அன்றி வேறெதுவும் இல்லை. பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கைகள் ஏ.கே.பியின் பிரதான அடையாளங்கள் ஆகும் இரண்டுமே இஸ்லாம் அல்லாத பிற அடிப்படைகளை கொண்டு செயல்படுவதாக உள்ளது.

ஏ.கே.பி விற்கு ஆதரவு திரட்டுவதற்காக எர்துகான் சில பெரு வியாபாரிகள் பயன் பெரும் வகையில் துருக்கிக்கு உள்ளே பணம் கொண்டு வரும் வகையில் பொருளாதார கொள்கைகளை வகுத்துள்ளார். இஸ்லாம் இதை தடுத்துள்ளது மற்றும் அது சில பெரு முதலைகளிடம் சொத்துக்கள் சேரும் வகையிலான மேற்கத்திய மாதிரியிலான பொருளாதார விநியோக முறையிலிருந்து விலகி செல்லும். அதே போன்று துருக்கியின் வெளியுறவு கொள்கையில் இஸ்லாம் எந்த வகையிலும் பங்கு பெறவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எர்துகானின் துருக்கி் அரசாங்கம் இஸ்ரேலுடனான உறவை தொடர்ந்து நீடித்து வருவது இதை இஸ்லாம் முற்றிலுமாக தடுக்கின்றது. ஏ.கே.பி தன்னுடைய வெளியுறவு கொள்கையில் இஸ்லாமை எந்த விதத்திலும் உபயோகிக்கவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் ஆட்சியாளர்களை ஒன்று திரட்டுவதற்கு பதிலாக (சலாஹுதீன் அய்யூபி செய்தது போன்று) அல்லது அல் குத்ஸை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவும் இல்லை இதை செய்யும் ஆற்றல் துருக்கிக்கு இருந்த போதும், எர்துகான் வாய் சவடால் விடும் ஒரு குறுகிய சந்தர்ப்பவாத கொள்கையை இஸ்லாமிய வார்த்தைகள் பூசி தொடர்ந்து பேசி வருகிறார். துருக்கி ஒரு இஸ்லாமிய மாதிரி அரசாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தவில்லை, அது உண்மையில் மேற்குலக நாடுகளை போன்று மதசார்பின்மை மற்றும் தேச நலன் அடிப்படையை கொண்டதாகும்.

http://sindhanai.org/