Jun 21, 2014

இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டதை நிர்மாணித்தல்


அரபு எழுச்சியும் (Arab spring) அதனையடுத்து ஆட்சியை பிடித்த அமைப்புகள் கண்ட தோல்விகளும் பல அரசியல் குறைபாடுகள் உள்ளதை வெளிக்காட்டியது. இது கடந்த கால அரசியலை வரலாற்றின் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு புதிய அரசியல்  எழுவதற்கான நம்பிக்கை தோன்றியிருக்கிறது. எனினும் அதிகாரத்தை கைப்பற்றிய இஸ்லாமிய குழுக்கள் தற்போது நிலவிவரும் அரசியல் அமைப்பை தற்காத்து கொள்ள தங்களுடைய சக்திக்கு  உட்பட்டு இஸ்லாமிய அரசியல் எப்போதும் எழுந்துவிடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்துவருகின்றனர்.
இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்றால் என்ன?
முஸ்லிம் உம்மா இன்றைய சூழலில் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வை கொண்டிருப்பது அவசியமாகும்.உலகின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வையில் இஸ்லாம் ஒரு சிறப்பான கண்ணோட்டத்தை வழங்கியிருப்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாமிய அரசியலை தெளிவாக முழுமையான முறையில் எவர் தனதாக்கி கொள்ளவில்லையோ அவரை ஆதரப்பது கூடாது.
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை
(அர்-ரஃது, 11)
அரசியல்வாதிகளை உருவாக்குதல்
ஒரு திறன்மிக்க அரசியல்வாதி அரசியலைப்பற்றிய சீரிய சிந்தனை கொண்டிருப்பது அவசியமாகும். அதாவது உலகின் நிகழ்வுகள் மற்றும் நடப்புகளை பற்றிய பார்வையில் அவருக்கு என ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அந்நிகழ்வுகள் மற்றும் நடப்புகளை பார்வையிட வேண்டும். அவ்வாறு அவரிடம் தனக்கென ஒரு கண்ணோட்டம்  இல்லாத பட்சத்தில் அடிக்கடி ஏற்படும் முரண்பாடான சூழ்நிலைகளில் பனிமூட்டத்தில் தெளிவில்லாத பார்வை உடையவரை போன்று அவர் குழம்பிப்போவார். அவருடைய குறிக்கோளை  அடையும் ஆற்றலை இழக்கும் நிலைக்கு ஆளாவார். மேலும் அவருடைய அரசியல் நிலை ஒழுங்கற்றதாகவும் மற்றும் முரண்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும்.
அபு மர்யம் அல்-அஜ்தி அறிவித்ததாக நபி(ஸல்) கூறினார்கள்.
مَنْ وَلاَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ فَاحْتَجَب دُونَ حَاجَتِهِمْ وَخَلَّتِهِمْ وَفَقْرِهِمُ احْتَجَبَ اللَّهُ عَنْهُ دُونَ حَاجَتِهِ وَخَلَّتِهِ وَفَقْرِهِ
“எவரொருவரை முஸ்லிம்களின் விவகாரங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்து அதில் அவர் பொடுபோக்காக இருந்து அவர்களின் தேவைகள் மற்றும்  ஏழ்மையை போக்க அக்கறை கொள்ளவில்லையெனில் மறுமை நாளில் அல்லாஹ் இவருடைய விஷயத்தில் கவலையற்றவனாகவும் அவருடைய தேவை மற்றும் ஏழ்மையில் அக்கறை கொள்ளவும் மாட்டான்.”                    (அபூதாவூத் 2948)
மேற்குலகில் குஃப்ஃபாரிய அரசியல்வாதிகள் நிகழ்வுகள் மற்றும் உலக நடப்புகளை பார்வையிட தங்களுக்கென ஒரு பிரத்தியேக கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். அவர்கள் முதலாளித்துவம் மற்றும் அதன் அடிப்படையை கொண்ட சிந்தனைகளான மதச்சார்பின்மை, ஜனநாயக கோட்பாடுகள், சுதந்திரம் மற்றும் ஒருவரின் நலனை அடைவதற்கான தேடல் ஆகியவைகளின் அடிப்படையில் அவர்களின் கண்ணோட்டம் அமைந்திருக்கும். அவர்கள் அரசியலில் ஈடுபடும்போது அவர்களின் வெளியுறவு கொள்கை அவர்களது தேச நலனை அடைவது மட்டுமே தங்களது அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பதை புரிந்துள்ளனர்.அவர்கள் இதர தேசங்களை எவ்வாறு நோக்கவேண்டும் எனவும் அவர்களுடனான உறவில் எதை எதிர்பார்க்க வேண்டும் எனவும் நன்கு புரிந்துள்ளனர். உள்நாட்டில் மக்களின் விவகாரங்களை மேற்கொள்வதில் தங்களுடைய அரசின் பொறுப்புகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வை கொண்டுள்ளனர். தனிமனிதன் எவ்வாறு தன் வாழ்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்களின் உரிமைகள் என்ன என்ற சிந்தனையும் அவர்களிடத்தில் உள்ளது. அவர்களது சித்தாந்தம் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் உள்ளது அதை தழுவி உலகத்தை நோக்கிய பார்வையை அதனடிப்படையில் அமைத்து கொள்கின்றனர்.
அவர்கள் அரசியல் வாழ்வில் ஈடுபடும்போது அவர்களுடைய நாட்டில் உள்ள அரசியல் பாரம்பரியத்தின் மூலம் அனுபவம் பெற்று அரசியல் கொள்கைகளை உருவாக்கி கொள்கின்றனர். அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும், பலவிதமான சொல்வாக்கு கொண்டவர்களாகவும், சமயத்திற்கு ஏற்றார்போல மாறுபவர்களாகவும், தங்களை நியாயப்படுத்துவதற்கும் அவர்கள் ஊழல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் அதை மறைப்பதற்கு பொய் சொல்லவும் பழகிக் கொள்கின்றனர். அவர்கள் ஒரு விஷயத்தில் தீர்ப்பளிக்கும் போது சரி – தவறு என்னும் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய நலனை எவ்வாறு அது தொடர்புபடுத்துகிறது என்பதை பொறுத்தே அவர்களது தீர்ப்பு அமையும்; நிகழ்வுகளையும் பிறருக்கு சாதகமற்ற நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும்  தன்மையை வளர்த்துக்கொள்வார்கள். அவர்கள் உண்மையில் என்ன உணர்கிறார்களோ அல்லது நினைக்கிறார்களோ அதனடிப்படையில் அல்லாமல் பொதுமக்களிடையே ஒரு குறிப்பிட்ட முகத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் அரசியலைப் பொறுத்தமட்டில் அது காட்டின் சட்டம் எனவும், இன்று நண்பராக இருக்கக்கூடியவர் வேறொரு நாள் எதிரியாக இருக்கக்கூடும் என்பதையும் அறிந்துள்ளனர். இதனடிப்படையில் மேற்கத்திய அரசியல்வாதி நிகழ்வுகள் மற்றும் உலக நடப்புகளை நோக்குவதற்கு தனக்கென ஒரு கோணத்தை ஏற்படுத்திக்கொள்கிறான். மேலும் தனக்கும் தன் நாட்டிற்கும் எவ்வகையான அரசியல் நடவடிக்கை மேற்கொள்வது முக்கியம் என்பதை தீர்மானிக்கிறான்.
இஸ்லாம் மேற்கத்திய அரசியல்வாதி கொண்டுள்ள பல தன்மைகளை கண்டிக்கின்றது. அதேபோல் அரசியலில் ஈடுபடுவதற்கு அவர்கள் அடிப்படையாக கொண்டுள்ள கண்ணோட்டத்தையும் கண்டிக்கின்றது.இஸ்லாம் ஒரு அரசியல்வாதியை அதனுடைய பிரத்தியேக அடிப்படை மற்றும் மதிப்புகளின் அடிப்படையில் உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. தன்னலன் மட்டுமே அல்லாமல் இஸ்லாம் தன்சார்பற்ற நிலையை வளர்க்கின்றது, ஒரு குறிக்கோளை அடைய இழிவான யுக்திகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக உண்மை நிலையையும் வெளிப்படை நிலையையும் மேற்கொள்ள இஸ்லாம் ஊக்குவிக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு எதை நாடுகிறானோ அதையே தன் சகோதரனுக்கு நாடச் சொல்லி இஸ்லாம் கற்றுத்தருகிறது- மேற்குலகமோ அதிகமாக மற்றவர்களின் நலனை விட தன்னலன் மட்டுமே முக்கியமென கற்றுத்தருகிறது.
முஸ்லிம்களை பொறுத்த வரை, உஸ்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சியின் போது இஸ்லாமிய கண்ணோட்டத்தை கொண்ட அரசியல்வாதிகள் அநேகமாக காணாமல் போய்விட்டனர். காலனியாதிக்க இஸ்லாமிய எதிரிகள் முஸ்லிம்களுடைய அரசியல் சிந்தனையில் நஞ்சை விதைத்து அவர்களின் பிரத்யேக அரசியல் கண்ணோட்டத்திலிருந்து அவர்களை திசை திருப்புவதில் வெற்றி கண்டனர். அவர்கள் இஸ்லாத்திற்கு அந்நியமான அரசியல் சிந்தனைகளான தேசியவாதம் போன்றவற்றை அறிமுகப்படுத்தி அதை வேகமாக பரவச்செய்தனர் இதனால் அரேபிய பகுதியை சார்ந்த  முஸ்லிம்கள் இஸ்தான்புல்லை சார்ந்த முஸ்லிம்களை வேற்றுமையுடன் பார்க்க தொடங்கினார்கள். 1924-ல் இஸ்லாமிய அரசு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு இஸ்லாமிய நிலங்களில் சோசியலிசம் மற்றும் முதலாளித்துவ சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தின. அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் இஸ்லாமிய சட்டங்களுக்கு பதிலாக இவ்வரசு அமைப்பின் கீழ் செயலாற்றியதால் இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக செயலிழந்து வெறும் ஒரு உபகரண்மாக மட்டுமே உபயோகிக்கப்பட்டது. அவர்களுடைய அரசியல் கண்ணோட்டமானது இஸ்லாத்திற்கு மாறுபட்டதாகும்; அதை நாம் இன்று கண்கூடாக காணலாம். அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதே அவர்களின் அடிப்படை கவலையாக இருக்கின்றது.
கடந்த நூற்றாண்டில் முஸ்லிம் நிலங்களில் அரசியலில் ஈடுபட்டவர்களான முஸ்தபா கமால், முஹம்மத் அலி ஜின்னா, ஜமால் அப்துல் நாசர், அன்வர் சத்தாத், ஜோர்டான் மன்னர் ஹுசைன், யாசர் அராபத், சதாம் ஹுசைன், நவாஸ் ஷரீஃப், பர்வேஸ் முஷாரஃப் மற்றும் பேநசிர் பூட்டோ போன்றோர் இவர்களில் அடங்குவர். இவர்கள் அனைவரும்  இஸ்லாமிய அரசியலை தங்களிடமிருந்து வெகு தொலைவில் வைத்து தங்கள் மக்களின் நலனுக்காக அல்லாமல் மேற்கத்திய சக்திகளின் நலனுக்காக பாடுபடுவதையே தங்கள் குறிக்கோளாக வைத்திருந்தனர். ஜமால் அப்துல் நாசர் போன்றோர் தங்களது தேசத்தை உருவகப்படுத்துகையில்  மிகவும் பலவீனமான அடிப்படையை கொண்ட அரபு தேசியவாதத்தை மையமாக வைத்து தங்களது தேசங்களை உருவாக்க முயன்றனர்.அனைவரும் மேற்கத்திய நாடுகளால் மேற்கத்திய கோட்பாடுகளின் அடிப்படை மூலம் நிறுவப்பட்ட அரசியல் அமைப்பில் ஈடுபட்டனர். இந்த காரணத்தால் இந்த அமைப்பை கொண்ட அரசு மற்றும் அரசியல் அமைப்பில் உள்ள ஒருவர் முஸ்லிம்களுக்கு எந்தவொரு நன்மையையும் செய்ய இயலாது. காலனியாதிக்கவாதிகள் முஸ்லிம் அரசியல்வாதிகளை தங்களுடைய கைக்கூலிகலாக ஆக்கி தங்களின் கோணத்தில் என்றென்றும் நிலைக்கொண்டு இருக்கவும் அவர்களின் வளங்களை சுருட்டுவதையுமே விரும்புகின்றன.
இதன் காரணமாக முஸ்லிம்களை கொண்ட ஒரு குழு இஸ்லாத்தை வாழ்வியல் வழியாக்க் கொண்ட ஒரு சித்தாந்தமாக ஏற்று முஸ்லிம்களுக்கு மத்தியில் மீண்டும் ஓர் அரசியல் கட்டத்தை நிலைபெறுமாறும் அதைக் கொண்டு உம்மத்தின் வீழ்ச்சியிலிருந்து திருப்ப அவர்களை பண்படுத்த தொடங்கினர்.
இந்த இஸ்லாமிய பண்படுத்தலின் விளைவை நாம் முஸ்லிம் உலகின் அனைத்து பகுதிகளிலும் மேலும் அதனையும் தாண்டி இப்போது காணலாம். எனினும் கிலாஃபா இன்னும் நிறுவப்படாததன் காரணத்தால் உண்மையான அரசியல் அனுபவம் பெறுவதில் குறைவு உள்ளதை காணமுடிகிறது. முஸ்லிம்களை பொறுத்தவரையில் அரசியல் என்பது அதிகாரத்தில் இல்லாதபோது அரசின் குறைகளை எடுத்துரைப்பதும் ஆட்சியில் இருக்கும் போது உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் உம்மத்தின் விவகாரங்களை கவனித்து கொள்வதுமாகும். அவ்வாறு இஸ்லாமிய நாடு இல்லாத போது அந்த கிலாஃபத்தை நிலைபெறச் செய்வதே முஸ்லிம்கள் செய்ய வேண்டிய மிகவும் முக்கியம் வாய்ந்த மற்றும் மிகவும் உயரிய அரசியல் செயல்பாடாகும். இதை தவிர்த்து முஸ்லிம்கள் தற்போது நிலைபெற்றிருக்கும் அரசு வடிவங்களில் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அல்லது உம்மா எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளை சரி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது என்பது மிகவும் உயரிய அரசியல் விவகாரமான கிலாஃபத்தை மறு நிர்மாணம் செய்வதற்கு இடையூறாக அமைந்துவிடும்.
பிரத்தியேக கண்ணோட்டம்
ஒரு முஸ்லிம் அரசியலில் ஈடுபடும் முன் அவருடைய பார்வை மற்றும் அவருடைய கண்ணோட்டத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிடில்  மற்றவர்கள் சூழ்ச்சி செய்து தங்களின் திட்டத்திற்கு இவரை உபயோகித்து கொள்வர். ஒருவருடைய மனதில் தெளிவான கோணமும், கண்ணோட்டமும் இல்லாவிடில் அவரை ஒரு பலவீனமான அரசியல் தன்மை உடையவராக ஆக்கிவிடும்; அது அவருடைய குறிக்கோளை விட்டுவிடும் நிலைக்கு இட்டுச் செல்லும்.
இஸ்லாத்தை மையமாக கொண்டுள்ள அரசியல் கண்ணோட்டமானது  மற்றவைகளை விட மாறுபட்ட  தனித்தன்மை வாய்ந்ததாகும்.ஆகவே இதை ஒரு பிரத்யேக கண்ணோட்டமாக விவரிக்கலாம். இந்த பிரத்யேக கண்ணோட்டமானது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு திசை காட்டியாக சரியான அரசியல் செயல்பாடுகளை அமைக்க உதவுவதோடு அவரை சரியான திசை நோக்கி  கொண்டு செல்லும்.
இந்த பிரத்யேக கண்ணோட்டமானது அவர்களின் இச்சைகளின் படியோ அல்லது அவர்களின் ஆசைகளின் படியோ இருக்கக் கூடாது.மாறாக இது அவர்களின் ஆகீதாவிலிருந்து வரவேண்டும். இஸ்லாமிய மூல ஆதாரங்கள் மூலமாக நிறுவப்பட்ட விஷயம் என்னவெனில், இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாக வந்ததாகும். மேலும் அதனுடைய கண்ணோட்டமானது லாஇலாஹா இல்லல்லாஹ் என்பதை நோக்கியே அனைத்து செயல்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும். அதாவது ஷரீஆ சட்டங்கள் மற்றும் இஸ்லாமிய சித்தாந்தத்தை பற்றிய புரிந்துணர்வே ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு நடப்புகளை காணும் கண்ணாடியாக இருக்க வேண்டும்.
சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் வாழ்வியல் பிரச்சினைகள் குறித்த ஒரு முஸ்லிமின் பிரத்தியேக கண்ணோட்டத்தை இஸ்லாம் மற்றும் அதன் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்குவது அவசியமாகும்.அக்கண்ணோட்டம் முதலாளித்துவ்வாதிகளைப் போல ஆதாயம் மற்றும் உபயோகம் போன்ற காரணங்களை கொண்டு உருவாக்கியதை போன்று இருக்கக்கூடாது. இது அந்த தனி மனிதன், அமைப்பு மற்றும் நாட்டின் அரசியலை மாசுபடுத்தி விடும். வேறுபட்ட அரசியல்வாதிகளின்  எதற்கு, எங்கு மற்றும் அவர்களின செயற்குறிப்புகளை புரிந்துகொள்வது மட்டும் ஒருவர் சிறப்பாக அரசியல் புரிய போதாது
இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டத்தை அமைத்தல்
சாதாரண சூழ்நிலைகளில் முஸ்லிம்கள் பிரத்தியேக கண்ணோட்டத்தை அமைப்பதென்பது ஒரு சாதாரணமான விஷயமாக இருக்கும். இஸ்லாம் நாட்டிலும் சமூகத்திலும் நடைமுறைப்படுத்தும் போது சமூகத்தில் இஸ்லாமிய சித்தாந்தம் சிறந்த முறையில் நிலைநாட்டப்பட்டிருக்கும். அதுவே தனி மனித வாழ்விலும் பிரதிபலிக்கும். முஸ்லிம் சமூகம் இன்று எதிர்கொள்ளும் இழிகேடான சூழ்நிலை என்னவென்றால், சமூகங்கள் இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு அமைக்காமல் அவைகள் கலப்படமான உணர்வுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல்வாதிகள்  ஒரு குழப்பமான கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அரசியல் என்பது மக்களின் விவகாரங்களை பார்த்து கொள்வது என எப்போதும் விவரிக்கப்படுகிறது. அதன் அர்த்தமானது அரசியல்வாதிகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுவது, மக்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதாகும். இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் உம்மா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.முஸ்லிம் உலகில் ராணுவ, அரசியல் மற்றும் கலாச்சார ஆக்கிரமிப்பு, பசி, பட்டினி, பற்றாக்குறையான கல்வி வாய்ப்புகள் மற்றும் மருத்துவத்திற்காக செலவு செய்ய முடிந்தவர்களுக்கு கூட சேவை அளிக்க செயலற்று கிடக்கும் சுகாதார அமைப்பு போன்றவையே உலகெங்கிலும்  பெருவாரியான முஸ்லிம்களுடைய நிலையாக இருக்கின்றது. இதை கருத்தில் கொண்டால் – தனி மனிதர்கள் இப்பிரச்சினைகளை சரி செய்ய முனைவது இயற்கையானதாகும்.
மக்களின் இச்சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்காக உள்ளார்ந்த நோக்கில் தங்கள் சேவையை தொடங்கிய பலர் அதிகப்படியான நேரங்களில் ஊழலுக்கு ஆட்பட்டு இன்றைய முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களுக்கு கருவிகளாக மாறிவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் உலகின் சில பகுதிகளில் மக்களுக்கு ஏதாவது  செய்ய முயல்வது தடைசெய்யப்பட்டதாக கருதப்படுகிறது,  இவ்வகையான செயல், பேச்சு அல்லது சிந்தனை தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதால் பெரும்பாலான சமயங்களில் சிறையில் அடைத்தல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் போன்ற தண்டனைகளை பெற்றுத்தரக்கூடியதாக அமைந்து விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பல அரசியல் இயக்கங்கள் வந்தும் சென்றும் இருக்கின்றன; அல்லது அதை நிர்மாணித்தவர்களின் நோக்கத்திலிருந்து வெகுவாக மாறுபட்டு வேறொன்றாக பரிணாமம் அடைய செய்திருக்கிறது.
முஸ்லிம்கள் மக்களின் நிலையை அல்லது தேவைகளை பூர்த்தி செய்ய தொடங்கும் முன் அவர்கள் ஈடுபடவிருக்கும் காரியத்தை பற்றிய அவர்களுக்கான ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அமைத்திருப்பது அவசியமாகும்.
இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் மட்டுமே இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டத்தை அமைப்பது கட்டாயமாகும்.
ஒரு முஸ்லிம் தன் வாழ்வை இஸ்லாமிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அமைத்துக்கொள்கிறார் – இதுவே அவர் ஈடுபடும் அரசியலுக்கும் அடிப்படையாக அமையும்.ஆகவே அவருடைய அரசியல் கண்ணோட்டமானது இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் இஸ்லாமிய கொள்கைகள் பற்றிய சரியான புரிந்துணர்வு கொண்டிருப்பதும் அவசியமாகும். அவர் இப்போதுள்ள யதார்த்த நிலைகள் மற்றும் நிகழ்வுகளை இதன் அடிப்படையிலேயே காணவேண்டும்.
எடுத்துக்காட்டாக சில முஸ்லிம்கள் தற்போதுள்ள அரசில் பங்கு கொள்வதன் மூலம் மட்டுமே இஸ்லாத்தை நிலைநாட்ட முடியும் என கோருவது, மற்றும் இதன் மூலம் இன்றைய யதார்த்த நிலையில் இஸ்லாத்தின் சில பகுதிகளை நிலைநாட்டுதலில் வெற்றி பெற்றிருப்பதாக பறைசாற்றுவதன் மூலம் அவர் இஸ்லாமிய அகீதாவில் அடிப்படையாக கொண்டுள்ள புரிந்துணர்வை நிராகரித்து விடுகிறார். ஏனென்றால் இஸலாத்தை பகுதியாகவோ படிப்படியாகவோ நிலைநாட்டுவதென்பது கூடாத ஒன்றாகும்.மேலும் குஃப்ரிய அமைப்புடன் இஸ்லாமிய அமைப்பு ஒருங்கிணைந்திருப்பது கூடாது. இதுவே இஸ்லாமிய கொள்கையை புரிந்து கொள்வதற்கான ஒரு அடிப்படையாகும்.இதுவே குறப்பிட்ட விஷயத்தில் இஸ்லாமிய அரசியல்வாதிக்கு சரியான கோணத்தை அமைக்க வழிவகுக்கும்.
وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக;   (அல் மாயிதா: 49)
இதைப்போன்று ஒருவேளை மற்றவர்கள் ஜனநாயகம் முஸ்லிம்களுக்கு  நன்மையை கொண்டு செல்வதற்கான வழி என்று கோருவார்களேயானால் – ஜனநாயகம் குஃப்ரிய தன்மையுடையதாலும் மேலும் அது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமாக இருப்பதாலும் அவர் அந்த அழைப்பை நிராகரித்து விடவேண்டும்.
إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ
அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை.
(யூசுஃப் : 40)
சிலர் கிலாஃபா என்பது யதார்த்த நிலையிலிருந்து வெகுதொலைவில் உள்ளது எனவும் அதை சீக்கிரத்தில் நிறுவுவது இயலாது எனவும்,அதேவேளையில் நாம் நம் பகுதியில் உள்ள தனி நபர்களுக்கு உதவி புரிவது போன்ற உடனடி நோக்கத்திற்காக பாடுபட வேண்டும் எனவும் கோருகின்றனர். ஒருவேளை அவருடைய கண்ணோட்டம் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் உருவாகியிருந்தால் அந்த நபர் சமூகத்தில் உள்ள தனிநபர்களுக்கு உதவும் செயல் ஸதக்காவை சார்ந்ததாகும். அந்த அமலுக்கு அல்லாஹ் سبحانه وتعالى கூலி வழங்குவான் என்பதை புரிந்து கொண்டிருப்பார். மாறாக அவருடைய கண்ணோட்டம் சரியான வகையில் அமைந்திருக்குமேயானால், கிலாஃபத்தை மறு நிர்மாணிப்பதற்கான செயலே மிகவும் முன்னுரிமை பெற்றுள்ளதாக அவருக்கு உணர்த்தும். அவர் கிலாஃபத்தை நிர்மாணிப்பதை வெகுதொலைவில் உள்ளதா இல்லையா என்பதை பற்றி பரிசீலனை செய்யமாட்டார்.  இதன் அடிப்படையில் சரியான அரசியல் கண்ணோட்டத்தை அமைக்க இஸ்லாமிய கொள்கையை பற்றிய சரியான புரிதல் இருப்பது இன்றியமையாததாக இருக்கிறது.
فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ ۖ قُلْ عَسَىٰ أَنْ يَكُونَ قَرِيبًا
அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக             (அல் இஸ்ரா,:51)
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விழையும் நபர்களிடம் இஸ்லாமிய கொள்கை பற்றிய அடிப்படையான புரிதல் அவர்களின் மனதில் பலவீனமாக இருந்தால், அவர்கள் அரசியல் அமைப்பிலிருந்து திசைமாறவும் சிலசமயங்களில் முற்றிலும் அரசியலை விட்டுச்செல்வதும் எளிதாக இருக்கும். ஆகையால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் தங்களை பக்குவப்படுத்தி கொள்ள விடாமுயற்சி செய்யவேண்டும். அவ்வாறு இல்லாதபோது முதல் தடங்களிலேயே அவர்கள் தடுமாற நேரிடும். ஒரு முஸ்லிமின் அரசியல் கண்ணோட்டம் எப்போதும் இஸ்லாமிய கொள்கையில் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து அவர் எக்காலத்திலும் திசை மாறுவது கூடாது. முஸ்லிமானவர் முதலில் தனக்கான ஒரு பார்வையை உருவாக்கவேண்டும் அதாவது அவருடைய கருத்தாக்கம் எதைக்கொண்டு பார்ப்பதென்பதும், பின்னர் அவரை சுற்றி ஏற்படும் உலக நிகழ்வுகள், செயல்கள் பற்றிய புரிந்துணர்வை உருவாக்குவதுமாகும். அதன் பின்னர் அவருடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – அது இன்று உம்மத்தை மறுமலர்ச்சி அடைய செய்வதிலும் மற்றும் கிலாஃபத்தை மறுநிர்மாணம் செய்வதை மையமாகக் கொண்டும் இருப்பது கட்டாயக் கடமையாகும்.

இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா?


ஒரு நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் அடுக்கடுக்கான பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அதற்கான தீர்வை நோக்கி இந்த உம்மா பயணித்து வருகின்றது.இதன் காரணமாக முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள மாபெரும் எழுச்சி, இந்த உம்மா மீண்டூம் மறுமலர்ச்சி அடைய இருப்பதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு உணர்த்தியுள்ளது. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் ஒரே தலைமையின் கீழ் இருந்ததாலும், அதன் காரணமாக இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் இஸ்லாமிய  அரசு வல்லரசாக விளங்கி வந்தது.மேற்கத்திய காலனி ஆதிக்க காஃபிர்களின் சூழ்ச்சியால் இந்த தலைமை அழிக்கப்பட்டு அவர்களின் ஏஜண்டுகள் முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களாக அமர்த்தப்பட்டனர்.இந்த சர்வாதிகார ஆட்சியாளர்கள் மேற்கத்திய காலனியாதிக்க காஃபிர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இஸ்லாத்தை புறக்கணித்து குஃப்ரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.மேலும் இஸ்லாத்தை மீண்டும் நடைமுறையில் கொண்டு வருவதற்காக பாடுபடும் முஸ்லிம்களை தங்களின் எஜமானர்களின் உத்தரவின் பேரில் இந்த ஆட்சியாளர்கள் ஒடுக்கி வருகின்றனர்.இந்த சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களும்,இஸ்லாமிய ஆட்சியமைப்பு குறித்து போதிய அறிவில்லாதவர்களும்,இஸ்லாத்தின் எதிரிகளால் திரித்து எழுதப்பட்ட வரலாற்றின் ஆதிக்கத்தில் சிக்கியவர்களும் இந்த உலகில் இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று வினா எழுப்பி வருகின்றனர்.
கிலாஃபா முப்பது ஆண்டுகள் மட்டும் தான் இருந்ததா?
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் மதீனாவில் நிறுவப்பட்ட இஸ்லாமிய அரசு முஸ்தபா கமால் அத்தா துர்க் எனும் நாசகாரனின் கரங்களால் 1924 ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி(1342 ஹிஜ்ரி,ரஜப் 28) வீழ்த்தப்பட்டது வரை நிலைத்திருந்தது. ராஷிதீன்(நேர்வழி) கலீஃபாக்களுக்கு பிறகும் இஸ்லாமிய அரசான கிலாஃபா தொடர்ச்சியாக இருந்ததை இஸ்லாமிய அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.எனினும் தற்கால  சலஃபி அறிஞர்கள் என்று அறியப்படுபவர்களில் சிலர் கிலாஃபா முப்பது ஆண்டுகள் மட்டுமே இருந்ததாகவும் அதன் பிறகு இந்த உலகில்  மன்னராட்சி மட்டுமே இருந்ததாகவும், இஸ்லாம் நடைமுறயில் இருக்கவில்லை என்றும் கூறுகின்றனர்..இதன் மூலம் இன்றயை முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களை(காலனியாதிக்க காஃபிர்களின் ஏஜண்டுகள்) முஸ்லிம் உம்மா அங்கீகரிக்க வேண்டுமென்று மறைமுக அழைப்பு விடுக்கின்றனர்.இவர்கள் தங்களின் வாதங்களுக்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை சுட்டிக்காட்டுகின்றனர்.
الخِلَافَةُ فِي أُمَّتِي ثَلَاثُونَ سَنَةً، ثُمَّ مُلْكٌ بَعْدَ ذَلِكَ
 என்னுடைய உம்மத்தில் கிலாஃபா முப்பது ஆண்டுகள் இருக்கும்;பின்னர் அதன் பிறகு அரசாட்சி இருக்கும்.                (திர்மிதி,அபூதாவூது)
இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு கிலாஃபா முப்பது ஆண்டுகள் மட்டும் இருந்ததாக ஒருபோதும் கூறவில்லை;ஏனெனில் இந்த ஹதீஸிற்கு மாற்றமாக வேறு சில ஹதீஸ்களும் வந்துள்ளன.
إِنَّ هَذَا الْأَمْرَ لَا يَنْقَضِي حَتَّى يَمْضِيَ فِيهِمِ اثْنَا عَشَرَ خَلِيفَةً ، كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ
பன்னிரண்டு கலீஃபாக்கள் வரும் வரை இந்த ஆட்சியதிகாரம் அவர்களை விட்டும் முடிவு பெறாது.அவர்கள் அனைவரும் குறைஷியர்களில் உள்ளவர்கள் ஆவர்.                                   (முஸ்லிம்)
இந்த ஹதீஸ் கிலாஃபா முப்பது வருடங்கள்தான் இருந்தது என்ற கருத்திற்கு முரண்படுகிறது.இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிற்கு பின்வரும் விளக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
الخلافة بعدي ثلاثون سنة ثم تكون ملكا وهذا مخالف لحديث اثني عشر خليفة فإنه لم يكن في ثلاثين سنة إلا الخلفاء الراشدون الأربعة والأشهر التي بويع فيها الحسن بن علي قال والجواب عن هذا أن المراد في حديث الخلافة ثلاثون سنة خلافة النبوة
 ‘என்னுடைய உம்மத்தில் கிலாஃபா முப்பது ஆண்டுகள் இருக்கும்;பின்னர் அதன் பிறகு அரசாட்சி இருக்கும்’ என்ற ஹதீஸ் ‘பன்னிரண்டு கலீஃபாக்கள் வரும் வரை இந்த ஆட்சியதிகாரம் அவர்களை விட்டும் முடிவு பெறாது’ என்ற ஹதீஸிற்கு முரண்படுகிறது…அதாவது நேர்வழி பெற்ற நாற்பெரும் கலீஃபாக்கள் மற்றும் ஹஸன்(ரலி) அவர்கள் அவர்களுக்கு சில மாதங்களுக்கு பைஆ கொடுக்கப்பட்டிருந்த முப்பது ஆண்டுகளில் பண்னிரண்டு கலீஃபாக்கள் என்பது முரணாகும்.எனவே கிலாஃபா முப்பது ஆண்டுகள் இருக்கும் என்பது, நுபுவ்வத்தின் வழிமுறையிலான கிலாஃபத்தை(கிலாஃபா ராஷிதா) குறிக்கும்.                                                    (ஷரஹ் சஹீஹ் முஸ்லிம்)
ஃகாளி இயாள்(ரஹ்) அவர்கள் இதைப்பற்றி கூறும்போது:-
قال القاضي عياض: لعل المراد بالاثني عشر في هذه الأحاديث وما شابهها أنهم يكونون في مدة عزة الخلافة، وقوة الإسلام، واستقامة أموره، والاجتماع على من يقوم بالخلافة
இந்த ஹதீஸில் வந்துள்ள பன்னிரண்டு கலீஃபாக்கள் என்பது,புகழ்மிக்க நெடிய கிலாஃபத்தின்  கலீஃபாக்களையும்,இஸ்லாத்தின் வலிமையையும்,நிலையான அதிகாரத்தையும், கிலாஃபத்தின் கீழ் மக்கள் ஒன்றிணைந்து இருப்பதையும் குறிக்கும்.
                                                (தாரிஃகுல் குலஃபா – இமாம் சுயூத்தி)
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் இதை சரிகண்டு கூறியிருப்பதை காணமுடிகிறது.”இதைப்பற்றி கூறியிருப்பவைகளில்  ஃகாளி இயாள்(ரஹ்) அவர்கள் கூறியிருப்பது தான் மிகச்சிறந்ததாகும்; நான் இதை வலுவானதாக கருதுகிறேன் ஏனென்றால் நபி(ஸல்) அவர்களின் திட்டவட்டமான ஹதீஸ்கள் இதற்கு ஆதரவாக இருப்பதை ஆதாரமாக தருகிறார்”.(ஃபத்ஹுல் பாரி) மேலும் மக்கள் கிலாஃபா ராஷிதாவிற்கு பிறகு சில குறிப்பிட்ட கலீஃபாக்களின் கீழ் எவ்வாறு ஒன்று திரண்டனர் என்பதையும் அவர் உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) போன்றவர்களையும் சான்றாக  குறிப்பிடுகிறார்; மேலும் அப்பாஸிய கலீஃபாக்களில் உள்ள சிலரையும் குறிப்பிடுகிறார்.
இமாம் ஜலாலுதீன் சுயூத்தி(ரஹ்) அவர்கள் தாரிஃகுல் குலஃபா (கலீஃபாக்களின் வரலாறு) என்ற நூலின் முகவுரையில் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்க்ளின் காலம் முதல் நம்முடைய கால கட்டம் (900 ஆண்டுகள்) வரையுள்ள அமீருல் முஃமினீன்களான கலீஃபாக்களின் வரலாற்றை எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் காலத்தில் மரணித்த கலீஃபா முதவக்கில் அலல்லாஹ்(903 ஹிஜ்ரி) மற்றும் அவருடைய மகன் முஸ்தன்ஸிக் பில்லாஹ் கலீஃபாவாக நியமிக்கப்பட்டது வரை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவிப்பதாவது,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، ” كَتَبَ إِلَى عَبْدِ المَلِكِ بْنِ مَرْوَانَ يُبَايِعُهُ: وَأُقِرُّ لَكَ بِذَلِكَ بِالسَّمْعِ وَالطَّاعَةِ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ رَسُولِهِ فِيمَا اسْتَطَعْتُ
அப்துல் மலிக் இப்னு மர்வானுக்கு பைஆ செய்யும்போது, அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னத்தின்படியும் செயல்படும்போது தாங்களுக்கு இயன்றவரை செவிமடுப்பதாகவும் கட்டுப்பட்டு நடப்பதாகவும் நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் எழுதிக்கொடுத்தார்கள்.  (புகாரி)
இமாம் அபூஹனீஃபா(ரஹ்), இமாம் மாலிக்(ரஹ்) போன்ற இமாம்கள் தங்கள் காலத்தில் நடைபெற்ற கிலாஃபத்தை ஒப்புக்கொண்டதோடு அப்பாஸிய கலீஃபா அபூமன்சூர் அவர்களின் தவறை தட்டிக்கேட்டுள்ளனர். இமாம் அபூயூசுஃப்(ரஹ்) அவர்கள் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களின் கிலாஃபத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்கள்.தார்த்தாரியர்கள் பக்தாதை நிர்மூலமாக்கி கலீஃபாவையும் கொன்ற பிறகு, கெய்ரோவில் முஸ்தன்ஸிர் பில்லாஹ் அவர்களுக்கு நடைபெற்ற பைஆவில் இஸ்ஸுதீன் இப்னு அப்துஸ்ஸலாம், அப்துல் ஹலீம் போன்ற இமாம்கள் பங்கெடுத்து பைஆ செய்தனர்.
இந்தியாவிலுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் உஸ்மானிய கிலாஃபத்துடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு சான்றாக உள்ளது. ஷைகுல் ஹிந்த் மவுலானா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி (ரஹ்)அவர்கள் மால்டா சிறையில் சிறைவாசம் அனுபவித்துவிட்டு 1920 ம் ஆண்டு இந்தியா திரும்பிய காலகட்டத்தில் வெளியிட்ட ஃபத்வாவின் சில வரிகள் :-
 “இஸ்லாத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்க எதிரிகள் சகல வழிகளையும் கையாண்டுவிட்டனர்.நபி (ஸல்)அவர்கள், ஸஹாபாக்கள் மற்றும்  அதற்குப்பின் வந்தவர்களின் கடுமையான தியாகத்தின் விளைவாக வெற்றி கொள்ளப்பட்ட ஈராக், பலஸ்தீன், சிரியா போன்ற பிரதேசங்கள் மீண்டும் எதிரிகளின் இலக்காகியுள்ளன. கிலாஃபத்தின் மரியாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. பூமியிலுள்ள முஸ்லிம் உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டிய, இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய, முஸ்லிம்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய அல்லாஹ்வின் வசனங்களை நிலைநாட்ட வேண்டிய கலீஃபா தற்போது எதிரிகளால் சூழப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இஸ்லாமிய கொடி கீழிறங்கி பறக்கிறது. ஹஸ்ரத் அபூ உபைதா(ரலி), சஅத் பின் அபிவக்காஸ்(ரலி), காலித் பின் வலீத்(ரலி), அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) போன்றோரின் ஆத்மாக்கள் இன்று அமைதியடையாமல் உள்ளன. முஸ்லிம்கள் தமது மதிப்பையும், கௌரவத்தையும், சுய மரியாதையும் இழந்தமையே இதற்கு காரணமாகும். வீரமும், மார்க்கப்பற்றுமே அவர்களது விருப்பமாகவும் செல்வமாகவும் இருந்தது. கவனயீனத்தாலும், இலட்சியமின்மையாலும் முஸ்லிம்கள் இதனை இழந்துவிட்டார்கள்… இஸ்லாத்தின் புதல்வர்களே! இஸ்லாமிய உலகை எரித்து கிலாஃபத்தை  தீயிட்ட இடியும் நெருப்பும் அரபிகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் தான் பெறப்பட்டது என்பதை என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம் தேசங்களை கட்டுப்படுத்த கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய அதிகாரத்தையும் வளத்தையும் உங்களின் கடும் உழைப்பிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.” மேற்கத்திய கிறிஸ்தவர்களுடன் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் விளைவுகளை அறியாத முட்டாள் முஸ்லீம்கள் யாரும் இருக்கிறார்களா?
(From Fatwa of Moulana Mahmood Hasan on 16th Safar 1339 Hijri, Corresponding to October 29th, 1920, Georgian year, The Prisoners of Malta, (Asira’h – e- malta), Moulana Syed Muhammed Mian, Jamiat ulama- e- hind, English edition, page 78-79.)
மேற்கண்ட விசயங்களிலிருந்து இஸ்லாமிய அறிஞர்கள் கிலாஃபா ராஷிதாவிற்கு பிறகும் இருந்த கிலாஃபத்தை அங்கீகரித்துள்ளதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
அபூஹாஸிம்  அறிவித்து முஸ்லிமில்  பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:-
قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الْأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي، وَسَتَكُونُ خُلَفَاءُ فَتَكْثُرُ»، قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ، فَالْأَوَّلِ، وَأَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ
நான் ஐந்து வருடங்கள் அபூஹுரைராவுடன்  இருந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்   கூறியதாக அவர் அறிவித்துள்ளதை  செவியுற்றிருக்கிறேன்:- பனூ இஸ்ராயீல்  மக்களை  நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒரு நபி மரணித்ததும் மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பப்பட்டார். நிச்சயமாக! எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள்;  ஆனால் கலீஃபாக்கள்  வருவார்கள்.அவர்கள்  அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.   (அதுகுறித்து)  எங்களுக்கு  என்ன  கட்டளையிடுகிறீர்கள்? என்று(ஸஹாபாக்கள்)   வினவினார்கள்.அவர்கள் அனைவருக்கும்  ஒருவருக்குப்பின் ஒருவராக பைஆ  கொடுங்கள்.அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக!   அவர்களிடம்   ஒப்படைக்கப்பட்ட   பொறுப்பு பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்.
இந்த ஹதீஸிலுள்ள ” وَسَتَكُونُ خُلَفَاءُ فَتَكْثُرُ ..கலீஃபாக்கள்  வருவார்கள்.அவர்கள்  அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.”என்பதிலிருந்து கிலாஃபா முப்பது ஆண்டுகளோடு முடிவுறக்கூடியதல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முஸ்னது அஹ்மதில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட ஹதீஸிலிருந்து கிலாஃபத்தின் தொடர்ச்சியையும் அதன் கட்டங்களையும் விளங்கிக்கொள்ளலாம்.
تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللَّهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ» ثُمَّ سَكَتَ
அல்லாஹ் நாடியவரையிலும் உங்களிடையே நபித்துவம் இருக்கும், அதன்பின் அவன் நாடும்போது அதை நீக்கிவிடுவான்..பிறகு நபித்துவத்தின் வழியிலான   கிலாஃபா அரசு அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும். அதன் பிறகு அல்லாஹ் நாடும்போது அதை உயர்த்திவிடுவான் அதன்பின் வம்சாவழி ஆட்சி அல்லாஹ் நாடியவரை இருக்கும். அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான்.அதன்பின் அடக்குமுறை ஆட்சி அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும்.அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான். அதன்பிறகு நபித்துவத்தின் வழியிலான  கிலாஃபா தோன்றும் என்றுகூறி அமைதிகாத்தார்கள்.
முப்பது ஆண்டுகள் நடைபெற்ற நபித்துவத்தின் வழியிலான   கிலாஃபா (مِنْهَاج النُّبُوَّة கிலாஃபா ரஷிதா) அதைத்தொடர்ந்து வம்சாவழியிலான(مُلْكًا عَاضًّا) உமைய்யா கிலாஃபா,அப்பாஸியா கிலாஃபா, உஸ்மானியா கிலாஃபா என்று தொடர்ச்சியாக  ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக கலீஃபாக்கள் ஆட்சி செய்துள்ளனர்.தற்போது முஸ்லிம் உலகில் அடக்குமுறை ஆட்சி (مُلْكًا جَبْرِيَّةً) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மீண்டும் இன்ஷா அல்லாஹ் நபித்துவத்தின் வழியிலான கிலாஃபா(ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ) வர இருக்கின்றது.
கலீஃபாக்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்களா?
கிலாஃபத்தின் காலகட்டத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளையும், சில கலீஃபாக்கள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது.இஸ்லாத்தின்பால் குரோதம் கொண்டிருந்த கீழைத்தேய(Orientalists) எழுத்தாளர்கள்  கலீஃபாக்களின் நல்லாட்சியைப்பற்றி கூறுவதைவிட அவர்களின்  தவறுகளையே முன்னிலைப்படுத்தியுள்ளனர்.எனவே இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதை இதைவைத்து ஒருபோதும் மதிப்பிடக்கூடாது.ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக கிலாஃபத்தில் இஸ்லாமிய சட்டங்கள்தான் நடைமுறையில் இருந்தது. கிலாஃபத்தின் நெடிய வரலாற்றில் கலீஃபாக்கள் ஒருபோதும் குஃப்ர் சட்டங்களை அரசியல் சாசனத்தில் சேர்த்துக்கொண்டதில்லை. உஸ்மானிய கிலாஃபத்தின் இறுதியில் நடைபெற்ற தவறுகளை விடுத்துப் பார்த்தால் சில கலீஃபாக்கள் அடக்குமுறையாளர்களாக இருந்தபோதிலும் இஸ்லாத்தையே நடைமுறைப்படுத்தினர்.பிந்தைய காலத்தில் கலீஃபாக்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தியதில் அலட்சியம் காட்டினாலும் இஸ்லாத்தின் எதிரிகளோடு கடுமையாகவே நடந்துகொண்டனர். ஷூறாவின் அடிப்படையில் ஆட்சி புரிவது முஸ்லிம்களின் உரிமையாக இருந்தாலும் கிலாஃபா ராஷிதீனிற்கு பிந்தைய காலத்தில் அத்தகைய ஷூறா இல்லாமல் அல்லது அதை தவிர்த்து ஆட்சி புரிந்ததால் அதன் அமைப்பு மாறிவிட்டதாக ஆகிவிடாது; ஏனெனில் அது இல்லாமல் ஆட்சி புரிவதும் கூடும். வரலாற்றைப் பொறுத்தவரை இஸ்லாமிய அரசு நிலைபெற்றிருந்ததா இல்லையா என்பதை ஆய்வு செய்வதற்கு அப்போதிருந்த ஆட்சியமைப்பின்  கட்டமைப்பை மனதில் கொள்ளுதல் அவசியமாகும். அப்போதிருந்த ஆட்சிமுறை எட்டு தூண்களை அடிப்படையாக கொண்டிருந்தது.
1.கலீஃபா(الخليفة)
2.கலீஃபாவின் அதிகார உதவியாளர்கள்(معاون التفويض)
3.கலீஃபாவின் நிர்வாக உதவியாளர்கள் (معاون التنفيذ)
4.ஜிஹாத் தலைவர்(أمير الجهاد)
5.கவர்னர்கள்(الولاة)
6.நீதிபதிகள் (القضاء)
7.அரசுத்துறைகள்(مصالح الدولة)
8.மஜ்லிஸுல்-உம்மா(مجلس الأمة)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைஃபா(ரலி) அறிவிக்கிறார்கள்:-
يَكُونُ بَعْدِي أَئِمَّةٌ لَا يَهْتَدُونَ بِهُدَايَ، وَلَا يَسْتَنُّونَ بِسُنَّتِي، وَسَيَقُومُ فِيهِمْ رِجَالٌ قُلُوبُهُمْ قُلُوبُ الشَّيَاطِينِ فِي جُثْمَانِ إِنْسٍ» ، قَالَ: قُلْتُ: كَيْفَ أَصْنَعُ يَا رَسُولَ اللهِ، إِنْ أَدْرَكْتُ ذَلِكَ؟ قَالَ: «تَسْمَعُ وَتُطِيعُ لِلْأَمِيرِ، وَإِنْ ضُرِبَ ظَهْرُكَ، وَأُخِذَ مَالُكَ، فَاسْمَعْ وَأَطِعْ
எனக்கு பின்னர் இமாம்கள் வருவார்கள்.அவர்களில்(சிலர்) என்னுடைய நேர்வழியைக் கொண்டு வழிகாட்டமாட்டார்கள்;என்னுடைய வழிமுறையைக்கொண்டு செயலாற்ற மாட்டார்கள்.ஷைத்தானின் இதயத்தோடும் மனிதனின் உடலோடும் சில மனிதர்கள் உங்கள் மத்தியில் தோன்றுவார்கள்.அல்லாஹ்வின் தூதர் அவர்களே அத்தகைய நிலை ஏற்பட்டால் நான் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று வினவினேன்.உங்கள் முதுகில் அடித்தாலும்,இன்னும் உங்கள் செல்வத்தை பறித்துக்கொண்டாலும் அவர்களுக்கு செவிமடுத்து கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.    (முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ، وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ، وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ» ، قِيلَ: يَا رَسُولَ اللهِ، أَفَلَا نُنَابِذُهُمْ بِالسَّيْفِ؟ فَقَالَ: «لَا، مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ
உங்கள் இமாம்களில் சிறந்தவர் யார் எனில் நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள்; அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காக துஆ செய்வீர்கள். அவர்களும் உங்களுக்காக துஆ செய்வார்கள்.இன்னும் உங்கள் இமாம்களில் மோசமானவர் யார் எனில் அவர்கள் உங்களை வெறுப்பார்கள்.நீங்களும் அவர்களை வெறுப்பீர்கள்.அவர்கள் உங்களை சபிப்பார்கள்;நீங்களும்  அவர்களை சபிப்பீர்கள். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் அவர்களுடன் போரிட வேண்டாமா?  என்று நாங்கள் வினவினோம். “இல்லை! உங்கள் மத்தியில் அவர்கள் “ஸலா”( (صلاةவை நிலைநாட்டும் வரை  (அவர்களுடன் போரிட வேண்டாம்) என்று கூறினார்கள்.                          (முஸ்லிம்)
இந்த ஹதீஸில் “ஸலா” (صلاة)வை நிலை நிறுத்துதல் என்பது ‘தீனை நிலை நிறுத்துதல்’ என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது.கலீஃபாக்கள்  கெட்டவர்களாக இருந்தாலும், கொடுமைக்காரர்களாக இருந்தாலும்,மக்களின் சொத்துக்களை பறிப்பவர்களாக இருந்தாலும்   அவர்கள் தீனை நிலைநாட்டும் வரை அவர்களுக்கு கட்டுப்படவேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே வரலாற்றில் சில கலீஃபாக்கள் இத்தகைய நடத்தை கொண்டவர்களாக இருந்ததை அடிப்படையாக வைத்து இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று முடிவு செய்யக்கூடாது.
மூன்றரை ஆண்டுகள் கலீஃபா இல்லை
மூன்றரை ஆண்டுகள் கலீஃபா இல்லை என்றாலும் கிலாஃபா தொடர்ந்ததை மறுக்க முடியாது. ஏனெனில் தார்த்தாரியர்கள் லட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்து கிலாஃபத்தின் தலைநகரான பக்தாதை நிர்மூலமாக்கினர். தார்த்தாரியர்கள் என்று அறியப்படும் மங்கோலியர்கள், கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்களையும் கொண்றனர். என்வே கிலாஃபா மிகவும் பலவீனமான இருந்ததால்  மூன்றரை ஆண்டுகள் கலீஃபா நியமிக்கப்படவில்லை.கலீஃபா கொல்லப்பட்டாலும் கிலாஃபத்தின் கட்டமைப்பு அப்படியே இருந்தது.கலீஃபாவால் நியமிக்கப்பட்டிருந்த மற்ற மாகாண ஆளுநர்களும் இதர துறையினரும் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். அய்ன் ஜாலூத் என்ற பகுதியில் வைத்து தார்த்தாரியர்கள் முறியடிக்கப்பட்ட பிற்கு கெய்ரோவில் உலமாக்கள் முயற்சியால் முஸ்தன்ஸிர் பில்லாஹ் அவர்களுக்கு  பைஆ  பெறப்பட்டு கலீஃபாவாக நியமிக்கப்பட்டார்.எனவே இஸ்லாமிய ஆட்சி தொடர்ச்சியாக நடைபெறவில்லை என்ற வாதம் தவறானதாகும்.
வம்சாவழி ஆட்சிமுறையும் பைஅத்தும்
உமைய்யாக்கள்,அப்பாஸியாக்கள்,உஸ்மானியாக்கள்  தொடர்ச்சியாக வம்சாவழி அடிப்படையில் கிலாஃபா பொறுப்பிற்கான பைஅத்தை பெற்றுக்கொண்டதால் அது மன்னராட்சி என்றும் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்றும் சிலர் வாதிடுகின்றனர். மன்னராட்சி முறையில் அரசனுக்கு பிறகு அவனுடைய வாரிசு குடும்பத்தினரால் முடிசூட்டப்படுவார்.ஆனால் கிலாஃபத்தின் வரலாற்றில் பைஆ இல்லாமல் கலீஃபா நியமிக்கப்பட்டதில்லை.மன்னராட்சியில் தான் விரும்பியதை அரசன் சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.ஆனால்  ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக கிலாஃபத்தில் இஸ்லாத்தை புறக்கனித்து விட்டு எந்த குஃப்ர் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.ஷரியா சட்டங்கள் தான் சட்டமியற்றுதலில்(legislation) அடிப்படையாக கொள்ளப்பட்டது. ஒரு கலீஃபா இருக்கும்போது அடுத்த கலீஃபா யார் என்று வாரிசு அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு முதலில் பைஆ பெறப்பட்டாலும், அந்த கலீஃபா மரணித்த பின்னர் புதிய கலீஃபாவிற்கு கிலாஃபத்திற்கான ஒப்பந்த பைஅத்தை அஹ்லுல் ஹல்லி வல் அக்த் (செல்வாக்கு மிக்க மக்கள் பிரதிநிதிகள் أهل الحل والعقد) அல்லது ஷைகுல் இஸ்லாம் செய்த பிறகுதான் அவர்கள் கலீஃபா பொறுப்பை ஏற்றனர். முதலில் பெறப்பட்ட பைஆ ஷரியா அடிப்படையில் செல்லுபடியாகாது என்றாலும் இரண்டாம் முறையாக கிலாஃபத்திற்கான ஒப்பந்த பைஅத்தை மக்களின் பிரதிநிதிகளான செல்வாக்கு மிக்க நபர்கள் செய்துள்ளதால் சட்டபூர்வமாக அவர் கலீஃபா ஆவார். எனவே  இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் வரலாற்றில் இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கிய அமீருல் முஃமினீன்களின் பட்டியல்

கிலாஃபா ராஷிதா (11-40 ஹிஜ்ரி;632-661 கி.பி)
632–634      அபுபக்கர் சித்தீக் (ரலி)
634-644       உமர் இப்னு கத்தாப் (ரலி)
644-656       உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி)
656-661       அலீ இப்னு அபீ தாலிப் (ரலி)
661-661       ஹஸன் இப்னு அபீ தாலிப் (ரலி)
உமைய்யா கலீஃபாக்கள் (41-132 ஹிஜ்ரி; 661-750 கி.பி)
661-680       முஆவியா இப்னு அபு சுஃப்யான் (ரலி)
680-683       யஜீத் இப்னு முஆவியா
683-683       முஆவியா  இப்னு யஸீத்
683-692       அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி)
683-692       மர்வான் இப்னு ஹகம்
692-705       அப்துல் மலிக் இப்னு மர்வான்
705-715       வலீது இப்னு அப்துல் மலிக்
715-717       சுலைமான் இப்னு அப்துல் மலிக்
717-720       உமர் இப்னு அப்துல் அஜீஸ்
720-724       யஜீத் இப்னு அப்துல் மலிக்
724-743       ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்
743-744       வலீத் இப்னு யஜீத் இப்னு அப்துல் மலிக்
744-744       யஜீத் III
744-744       இப்ராஹீம் இப்னு வலீத்
744-750       மர்வான் இப்னு முஹம்மது
அப்பாஸிய கலீஃபாக்கள் (132-923 ஹிஜ்ரி 750-1517 கி.பி)
அப்பாஸியாக்கள் I பக்தாத் தலைநகரம்
750-754       அபுல் அப்பாஸ் ஸஃப்ஃபாஹ்
754-775       அபூஜஃபர் மன்சூர்
775-785       மஹ்தீ
785-786       ஹாதீ
786-809       ஹாரூன் ரஷீத்
809-813      அமீன் இப்னு ஹாரூன் ரஷீத்
813-833       மஃமூன் இப்னு ஹாரூன் ரஷீத்
833-842       முஃதஸிம் பில்லாஹ்
842-847       வாஸிக் பில்லாஹ்
847-861       முத்தவக்கில் அலல்லாஹ்
861-862       முன்தஸிர்       பில்லாஹ்
862-866         முஸ்தயின் பில்லாஹ்
866-869        முஃதஸ்  பில்லாஹ்
869-870        முஹ்த்ததீ       பில்லாஹ்
870-892        முஃதமித்          அலல்லாஹ்
892-902        முஃததித்           பில்லாஹ்
902-908       முக்தஃபி பில்லாஹ்
908-932         முக்ததிர் பில்லாஹ்
932-934           காஹிர் பில்லாஹ்
934-940          ராதிபில்லாஹ்
940-944          முத்தகீ லில்லாஹ்
944-946           முஸ்தக்ஃபி பில்லாஹ்
946-974           முத்தீ லில்லாஹ்
974-991             தாயீ லில்லாஹ்
991-1031           காதிர் பில்லாஹ்
1031-1075         காயிம் பி அம்ரில்லாஹ்
1075-1094          முக்ததீ பி அம்ரில்லாஹ்
1094-1118           முஸ்தஷீர் பில்லாஹ்
1118-1135            முஸ்தர்ஷித் பில்லாஹ்
1135-1136            ராஷித் பில்லாஹ்
1136-1160            முக்தஃபி லி அம்ரில்லாஹ்
1160-1170            முஸ்தன்ஜித் பில்லாஹ்
1170-1180            முஸ்ததி பி அம்ரில்லாஹ்
1180-1225            நாஸிர் லி தீனில்லாஹ்
1225-1226            ஸாஹிர் பி அம்ரில்லாஹ்
1226-1242            முஸ்தன்ஸிர் பில்லாஹ்
1242-1258            முஸ்தஃஸிம் பில்லாஹ்
தார்த்தாரியர்களின் கோரத்தாக்குதலால் கிலாஃபத்தின் தலைநகரான பக்தாத் நிர்மூலமாக்கப்பட்டது.தார்த்தாரியர்கள் கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்களை கொண்றனர். கிலாஃபா மிகவும் பலவீனமான இருந்ததால்  மூன்றரை ஆண்டுகள் கலீஃபா நியமிக்கப்படவில்லை.கலீஃபா கொல்லப்பட்டாலும் கிலாஃபத்தின் கட்டமைப்பு அப்படியே இருந்தது.கலீஃபாவால் நியமிக்கப்பட்டிருந்த மற்ற மாகாண ஆளுநர்களும் இதர துறையினரும் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். அய்ன் ஜாலூத் என்ற பகுதியில் வைத்து தார்த்தாரியர்கள் முறியடிக்கப்பட்ட பிற்கு கெய்ரோவில் உலமாக்கள் முயற்சியால் முஸ்தன்ஸிர் பில்லாஹ் அவர்களுக்கு  பைஆ  செய்யப்பட்டு கலீஃபாவாக நியமிக்கப்பட்டார்.
அப்பாஸியாக்கள் II கெய்ரோ தலைநகரம்
1261-1262            முஸ்தன்ஸிர் பில்லாஹ்
1262-1301            ஹாகிம் பி அம்ரில்லாஹ்       I
1301-1339            முஸ்தக்ஃபி பில்லாஹ்       I
1339-1341            வாஸிக் பில்லாஹ்           I
1341-1352            ஹாகிம் பி அம்ரில்லாஹ்        II
1352-1362            முஃததித் பில்லாஹ்
1362-1377            முத்தவக்கில் அலல்லாஹ்         I   (First Reign)
1377-1377         முஸ்தஃஸிம் பில்லாஹ் I    (First Reign)
1377-1383          முத்தவக்கில் அலல்ல்லாஹ் I (Second Reign)
1383-1386            வாஸிக் பில்லாஹ்       II
1386-1389         முஸ்தஃஸிம் பில்லாஹ் I  (Second Reign)
1389-1406        முத்தவக்கில் அலல்ல்லாஹ்  I  (Third Reign)
 1406-1430       முஸ்தயின் பில்லாஹ்
1430-1441        முஃததித் பில்லாஹ்  II
1441-1450        முஸ்தக்ஃபி பில்லாஹ்  II
1450-1459      காயிம் பி அம்ரில்லாஹ்
1459-1479      முஸ்தன்ஜித் பில்லாஹ்
1479-1497      முத்தவக்கில் அலல்ல்லாஹ்   II
1497-1508      முஸ்தன்ஸிக் பில்லாஹ்  (1st Reign)
1508-1516      முத்தவக்கில் அலல்ல்லாஹ்  III (1st Reign)
1516-1517     முஸ்தன்ஸிக் பில்லாஹ்  (2nd Reign)
1517-1517     முத்தவக்கில் அலல்ல்லாஹ்  III (2nd Reign)
 கலீஃபா முதவக்கில் அல்லாஹ் III அவர்களிடமிருந்து உஸ்மானிய சுல்தான் சலீம்  I அவர்களுக்கு கிலாஃபா பொறுப்பு மாறியது.
உஸ்மானிய கலீஃபாக்கள் (923-1349ஹிஜ்ரி 1517-1924கி.பி)
1517-1520            சலீம்  I
1520-1566            சுலைமான் I
1566-1574            சலீம் II
1574-1595            முராத் III
1595-1603             முஹம்மது III
1603-1617            அஹ்மது I
1617-1618            முஸ்தஃபா I (1st Reign)
1618-1622            உஸ்மான் II
1622-1623            முஸ்தஃபா I  (2nd Reign)
1623-1640            முராத்  IV
1640-1648            இப்ராஹீம் I
1648-1687            முஹம்மது  IV
1687-1691            சுலைமான் II
1691-1695            அஹ்மது II
1695-1703            முஸ்தஃபா II
1703-1730            அஹ்மது III
1730-1754            மஹ்மூது I
1754-1757            உஸ்மான் III
1757-1774            முஸ்தஃபா III
1774-1789            அப்துல் ஹமீது I
1789-1807            சலீம் III
1807-1808            முஸ்தஃபா IV
1808-1839            மஹ்மூது II
1839-1861            அப்துல் மஜீத் I
1861-1876            அப்துல் அஜீஸ்
1876-1876            முராத் V
1876-1909            அப்துல் ஹமீது II
1909-1918             முஹம்மது V
1918-1922            முஹம்மது VI (வஹீதுத்தீன்)
1922-1924           அப்துல் மஜீத் I

Jun 20, 2014

இறையாதிக்கம் (ஹாகிமிய்யத்துல்லாஹி)

2. இறையாதிக்கம் (ஹாகிமிய்யத்துல்லாஹி)

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 4


உலகத்தைப் பற்றிய இக்கருத்துக்களின் அடிப்படையில் யார் உண்மையில் இவ்வுலகின் மீது ஆதிக்கம் செலுத்துகிறானோ அவனே மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்துபவன் என்று குர்ஆன் கூறுகின்றது. கட்டுப்பத்தக்கூடிய, கட்டளையிடக்கூடிய அதிகாரம் அவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

இவ்வுலகத்தில் சிறிய அணு முதற்கொண்டு வானளாவிய விண்வெளி அமைப்புவரை அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தே செயல்படுகின்றன. அதுபோன்ற மனிதனைப் பொறுத்த வரையிலும் அவனுடைய வாழ்க்கையில் அவனால் கட்டுபடுத்த இயலாத பகுதிகள் இறைவன் வகுத்த நியதிகளின் படியே செயல்படுகின்றன. ஆனால் மனிதன் சிந்தித்து முடிவுக்கக்ககுடைய விசயங்களில் தனது ஆளுமையை அல்லாஹ் பலவந்தமாக திணிப்பதில்லை. மாறாக இறைவேதங்களின் வாயிலாக வழிகாட்டுகிரான்!!

அவ்வழிவந்த இறுதிவேதம்தான் திருக்குர்ஆன் . அறிவு பூர்வமாக சிந்தித்து அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளுமாறு, கட்டுப்பாடு நடக்குமாறு குர்ஆன் மனிதனுக்கு அறிவுறுத்துகிறது.

பல்வேறு கோணங்களில் குர்ஆன் இதை விரிவாக வலயுறுத்துகின்றது.


(அ) இவ்வுலகின் ‘ரப்’ தான் மனிதனின் ‘ரப்’ (இரட்சகன்) ஆகவும் உள்ளான். அவனுடைய ‘ரபூபிய்யத்’ தையே ஏற்று நடக்கவேண்டும்:

6:162. நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

6:163. “அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

114:2. (அவனே) மனிதர்களின் அரசன்;

114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.

10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?


Jun 6, 2014

தேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ளது !?




பேரம் பேசுதலுக்கான சூழ்நிலை நியாயங்களை உருவாக்குவது ,
அந்த உருவாக்கத்தின் ஊடாக யதார்த்தம் மறந்த ஒரு வாழ்வியலில் எதிர்
தரப்பை சிக்கவைப்பது என்பதுதான் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின்
அடிப்படை அரசியல் சிந்தனை . இன்னோர் வகையில் இதை தெளிவுபடுத்த
ஒரு சிறந்த உதாரணம் 'இஸ்ரேல் ' ஆகும் .


ஒரு அநியாயமான ஆக்கிரமிப்பாக 'முஸ்லீம் உம்மா' தேசியம் எனும்
சூழ்நிலை நியாயங்களை சரிகான வைக்கப் பட்டதன் ஊடாக இந்த 'இஸ்ரேலையும்' ஒரு (விரும்பத் தகாத) தேசமாக தானும்
அங்கீகரிக்க வைக்கப் பட்டது . அரசியல் நுணுக்கமான இந்த கருத்தியல் பேரம்
பேசல் முரண் பாடான ஒரு உணர்வலைகளை கொண்ட
ஒரு சமரசமாகும் இஸ்ரேல் ஒரு தேசமாகி அங்கும் 'மஸ்ஜித்கள் ' ! அந்த அரசியலை அங்கீகரித்த முஸ்லீம்கள் ! என ஒரு தேசிய சூழ்நிலை ஒரு புறம் , இன்னொரு புறம் தேசம் எனும் 'இறைமைக்குள் ' இஸ்ரேலை வைத்து கண்டிக்கவும் ,தண்டிக்கவும் துடிக்கும் இன்றைய முஸ்லீம் உலகு !
நகைப்புக்கு இடமான இந்த நாடக அரசியலில் ஏமாளி + கோமாளிப்பாத்திரத்தில் தன்னை அறியாமல் முஸ்லீம் நடிக்க வைக்கப் படுகிறான் . அரபி ,அஜமி காரணம் கூறி உதுமானிய
கிலாபத்தில் இருந்து உடைத்தெடுத்து அரேபியம் மன்னரிசமாக
மாறிய போது அவர்களுக்கு கூஜா தூக்கும் ' முல்லாக்கள் + சீடர்களுக்கு அரசியல் என்பது (அந்தப்புர சமாச்சாரங்களை மட்டுமே கொண்ட)
வெறும் பராக் ,பராக் என மாறித்தான் போனது ! கிலாபா பற்றி பேசுவோர்
'சைத்தான்களாக ' இவர்களால் சித்தரிக்க வைக்கப் பட்டார்கள் . 'யகூதியோடு'
நட்புறவாடி , நசாராவோடு கூட்டுக் குடும்பம் நடத்தும் 'கிங்குகள் '
நிணைக்கும் , விரும்பும் 'ரேஞ்சுக்குள்' வஹிக்கு விளக்கம்
கொடுக்கும் புரோகிதக் கும்பலாக பலர் 'புறமோசன் ' பெற்றார்கள் .
(இவர்களுக்கு இஸ்ரேலின் முஸ்லீம்கள் மீதான நரவேட்டையை விட , சவூதி மன்னன் அகற்றிய நான்கு முசல்லாக்கள் விடயம்'
வெரி இம்போர்ட் ' மத்ஹபு வாதத்தை உடைத்தானாம் சவூதி மன்னன் !!) 'சாபிரா , சாதிலா முதல் பாலஸ்தீனில் இன்று வரை தினம் தினம் கொல்லப்படும் , துன்புறுத்தப் படும் , அவமானப் படுத்தப்
படும் முஸ்லீம்கள் விடயத்தில் நிவாரணப் பிச்சையை விட அதிகமாக என்ன
கொடுத்தார்கள் இந்த 'மல்டி மில்லியன் கிங்குகள் '!!


முதல் கிப்லா எக்கேடு கெடட்டும் ! எமது சமஸ்தானம் ,தேசியம் டெவலப்'
செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனையிலேயே 'கஆபாவை ' தினம்
தினம் உடைக்கிறார்கள் இந்த மன்னரிச சுயநலவாதிகள் ! எவ்வாறு என்றால் முஸ்லீம்களை அவமானப் படுத்துபவர்களோடு (யகூதி ,நசாராவோடு ) பகிரங்க கூட்டாளிகளாக இவர்களே இருக்கிறார்கள் . தேசம் ,தேசியம் என்ற மனப்பாங்கு முஸ்லீம்களை எங்கே கொண்டு வைத்துள்ளது !
சிந்திக்க வேண்டிய விடயம்தான் .

Jun 4, 2014

பள்ளிவாசலுக்குள் புகுந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல்!

இன்ஷா அல்லாஹ்!! இனியாவது இந்தியாவில் நடத்தப்படும் போராட்டங்களில் கிலாபத்தை உச்சயரிக்க வேண்டும்!! இது இந்தியாவின் இஸ்லாமிய மறுமலர்ச்சி நேரம்.....


வேலூர் மாவட்டம் கே.கே.நகர்பகுதியில் உள்ள ஆர்.என்.பாளையம் “மஸ்ஜிதே சுபானியா “03-06-2014 இன்று மாலை மக்ரீஃப் தொழுகைக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பி.ஜே.பி. பாசிச சக்திகள் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தீடீரென பள்ளிவாசலுக்குள் புகுந்து சராமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த திடீர் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் மோதினார் பலத்த காயம் அடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் .

பள்ளிவாசல் மற்றும் பள்ளிவாசல் பக்கத்தில் உள்ள வீடுகள் என பயங்கரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். முஸ்லீம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தவுடன் தாங்கள் வந்த பைக்கை விட்டுவிட்டு வன்முறையாளர்கள் தப்பி ஓடினர் ..

கயவர்கள் வந்த பைக்கை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர் (அந்த பைக்கை மேலே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணலாம்). காவல்துறைக்கு தகவல் கொடுத்தபின் வந்த போலிசார் ஓன்று கூடியிருந்த மக்களை விரட்டி அடித்தனர்

Sources From http://www.adiraipirai.in/

காவல்துறை ..... ஓடியும் பிடிக்கவில்லை ! ஆடியும் பிடிக்கவில்லை !!


அல் - உம்மா இயக்கத்தை சார்ந்தவர் ஹைதர் அலி கேரளா மாநிலம் பாலக்காட்டில் கைது,,, சுமார் 15-ஆண்டுகளாக தேடப்படும் நபராம்,,
1993-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் வழக்கில் முக்கிய குற்றவாளி
- சில ஊடகங்களில் தலைப்பு செய்திகள் !
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி
- சில ஊடகங்களில் தலைப்பு செய்திகள் !
சென்னையில் சமிபத்தில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு
வழக்கில் முக்கிய குற்றவாளி என
- சில ஊடகங்களில் தலைப்பு செய்திகள் ! இவருக்கு
தொடர்பாம் 15 ஆண்டுகளாக காவல்துறை இவரை வலைவீசி
தேடி வந்துள்ளதாக இன்றை தமிழக ஊடகங்களில் எல்லாம் தலைப்பு செய்திகள் ?
அட பாவி ஊடகங்களே உண்மையை சொல்லுகின்றோம்
என முஸ்லீம்களை பாவிகளாக சித்தரிப்பது தான் உங்கள்
தொழிளா ? அதைவிட எத்தனையோ தொழில் இருக்கு
அதை பாருங்கள் ....
யார் இந்த ஹைதர் அலி கோவை கோட்டை மேடு பகுதியை
சேர்ந்தவர் வயது சுமார் 43 இருக்கும் ஆரம்பகாலத்தில் அல்-உம்மா இயக்கத்தில் இருக்கும் சில நபர்களுடன் லேசான தொடர்பு இருந்தது ஆனால் அல்-உம்மா அமைப்பில் இவர் இல்லை கோவை காவல்துறையில் IPC - 307 / Cr.no 1886/93 வழக்கில் இவரை குற்றவாளியாக சேர்த்தது கோவை காவல்துறை . ஹைதர் அலி பிணையில் (ஜாமினில்) வெளியே
வந்தவர் கேரளாவில் திருமணம் செய்துக்கொண்டார் அங்கேயே குடும்ப வாழ்க்கையை நடத்திவருகின்றார் .
IPC - 307 / Cr.no 1886/93 இந்த வழக்கு கோவை நீதிமன்றம்
காவல்துறையின் தவறான நடவடிக்கை என வழக்கை
தள்ளுப்படி செய்தது என்பது குறிப்பிட தக்கது .
வழக்கு தள்ளுப்படி செய்யப்பட்டதை அறிந்த ஹைதர் அலி
நீதி மன்றம் வருவதை நிருத்திக்கொண்டார் .
அந்த வழக்கில் வந்து ஆஜராகி விடுதலை பத்திரத்தில் கையெழுத்து செலுத்தி இருந்தால் இன்று ஊடகத்துறையின்
பித்தல்லாட்டங்களுக்கு வழி இருக்காது .
குறிப்பு :- வழக்கு நிலுவையில் இருப்பதை காவல்துறை
அவரது வீட்டில் சென்று ஹைதர் அலியை காவல்துறையில்
சரண்டர் செய்யுங்கள் உடனே வழக்கை முடித்து அவரை
விடுதலை செய்கின்றோம் என சொன்னவுடன் ஹைதர் அலி
குடும்பத்தார் கேரளாவில் இருந்த ஹைதர் அலியை
அழைத்துவந்து காவல்துறையிடம் ஓப்படைத்தது என்பது
குறிப்பிடதக்கது .
காவல்துறை .....
ஓடியும் பிடிக்கவில்லை !
ஆடியும் பிடிக்கவில்லை !!
ஊடகத்துறையே உண்மையை சொல்லுங்க அல்லது
ஒதுங்கிகொள்ளுங்கள் ...
By இந்திய தேசிய லீக் கட்சி

மகாராஷ்டிராவில் காவிகள் வெறியாட்டம் : முஸ்லிம் இஞ்சீனியர் அடித்துக்கொலை !


பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; 500 குர்ஆன் எரிப்பு.... கடும் அச்சத்தில் முஸ்லிம்கள்!! 

116 காவி குண்டர்கள் கைது !!! 

மகாராஷ்டிர மாநிலம் முழுவதிலும், கடந்த 5 நாட்களாக, 30 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, முஸ்லிம்களின் உயிர்-உடமைகளுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (03/06) 'முஹ்சின் சாதிக் ஷேக்' என்ற 24 வயது 'ஐடி இஞ்சீனியர்' அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார், பள்ளியின் இமாம் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறைந்த மும்பை ரவுடி பால்தாக்கரே குறித்தும் சத்ரபதி சிவாஜி, மற்றும் சில ஹிந்து தலைவர்கள் குறித்தும் யாரோ ஒரு விஷமி, 'பேஸ்புக்'கில் மார்பிங் செய்து படம் போட்டுள்ளான் எனக்கூறி, கடந்த சனிக்கிழமையன்று, காவிகள், கலவரத்தில் ஈடுபட்டனர்.

200 க்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.

குறிப்பாக 'புனே' நகரை சுற்றிவளைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மஸ்ஜிதுல் தன்சீமுல் முஸ்லிமீன், தாருல் உலூம் அஷ்ரபிய்யா, லாண்டேவாடி, பூசரியா போன்ற பள்ளிவாசலுக்குள் நுழைந்த 500 க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள், பள்ளியின் திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியுள்ளனர்.

50 க்கும் அதிகமான 'குர்ஆன்' பிரதிகளை கிழித்தெறிந்தும், தீவைத்துக் கொளுத்தியும் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

பீர்ஷா ஜலாலுத்தீன் காதிரி 'தர்கா'வும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நூர் முஹல்லா பள்ளிவாசலுக்குள் வீச்சறுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் நுழைந்த கும்பல், கப்ருஸ்தானை சேதப்படுத்தியும், தண்ணீர் டாங்கிகளை உடைத்தும், முஸ்லிம்களை பீதிவயப்படுத்தியுள்ளனர்.

பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 25 வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது.

ஆயிஷா பள்ளிவாசலின் இமாம், மவுலவி அஷ்பாக் மிஸ்பாஹி, கடுமையாக தாக்கப்பட்டு 'இனாம்தார்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹன்டேவாடி பகுதியில் உள்ள 5 மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், 'மதரசா ஷப்னம் கரீப்நவாஸ்' பாடசாலயில் அரபி பயில வந்த 20 சிறுவர்களையும் தாக்கி, அவர்கள் வைத்திருந்த குரான் உள்ளிட்ட புத்தகங்களை கிழித்துள்ளனர்.

குர்வே ரோடு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 20 பேக்கரிகள் சேதப்படுத்தப்பட்டுள்ள அழிவின் மதிப்பீடு மட்டும் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும், மகாராஷ்டிர மாநிலத்துக்கு, விரைவில் நடக்கவுள்ள தேர்தலில், பாஜக-சிவசேனை கூட்டணி வெற்றிப்பெறவே, இக்கலவரங்கள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Maruppu

Jun 3, 2014

'லாரன்ஸ் முதல் பந்தர் பின் சுல்தான் வரை '!

( டி. ஈ. லாரன்ஸ் அல்லது டி. ஈ.லாரன்சு (Thomas Edward Lawrence, ஆகஸ்ட்
16, 1888 – மே 19, 1935)
ஒரு பிரிட்டானியப் போர் வீரர், தூதுவர், ராச தந்திரி மற்றும் எழுத்தாளர். முதல் உலகப்
போரில் உதுமானிய கிலாபாவுக்கு எதிராக ஏற்பட்ட அரபுப் புரட்சியில்
பிரிட்டனின் தூதுவராகவும் ராச தந்திரியாகவும் புரிந்த செயல்களுக்காக
லாரன்ஸ் ஆஃப் அரேபியா (அரேபியாவின் லாரன்ஸ், Lawrence of Arabia) என்று பரவலாக
அறியப்படுகிறார்.


வேல்சில் பிறந்த லாரன்ஸ், தன் இளமைக் காலத்தில் களத் தொல்லியளாராக பணி புரிந்தார். மத்திய கிழக்காசியாவின் பல மொழிகளை லாரன்ஸ் அறிந்திருந்ததால்,
பாலஸ்தீனத்தின் நெகேவ் பாலைவனத்தை ஆய்வு செய்ய பிரிட்டானிய ராணுவத்தால் வேலைக்கமர்த்தப்பட்டார். முதல் உலகப் போர் மூண்டபின் முறைப்படி பிரிட்டானிய தரைப்படையில் சேர்ந்தார். உதுமானியகிலாபாவுக்கு எதிராக பிரிட்டனும் ஏனைய நேச நாடுகளும் அரபுக் பழங்குடியினரை புரட்சி செய்ய்த் தூண்டினர். அப்படி உருவான அரபுப்
புரட்சியின் போது பிரிட்டனின் சார்பாக அரபு குடிகளுக்குத் தூதுவராகவும் ஆலோசகராகவும் லாரன்ஸ் அனுப்பப்பட்டார். உதுமானிய கிலாபாவின் முக்கிய நகரங்களான ஆக்வபா மற்றும் தமாஸ்கஸ் போன்றவற்றை கைப்பற்றும் முயற்சிகளில் அரபுப்படைகளுடன் இணைந்து பங்கேற்றார். முதலாம் உலகப்போரில் அவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக பிரிட்டானிய அரசு அவருக்கு பல உயரிய
பதக்கங்களை வழங்கி லெப்டினன்ட் கர்னலாகப் பதவி உயர்வு அளித்தது.போர் முடிந்த
பின்னர் ஒரு சுதந்திர மன்னரிச அரபி தேசியம் அமைப்பதற்காக அரபுத் தலைவர்
எமிர் ஃபைசலின் ஆலோசகராகப் பணியாற்றினார்.


இக்காலகட்டத்தில் வெளியான இவரது செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம் என்ற நூலும், அமெரிக்கப் பத்திரிக்கையாளர் லோவல் தாமசின் மிகைப்படுத்தப் பட்ட செய்திக்
குறிப்புகளும் மேற்குலகில் லாரன்சுக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. அவருக்கு அரேபியாவின் லாரன்ஸ் என்ற பெயர் உருவாகி வெகுஜன நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டது. லாரன்ஸ் 1922ல் பிரிட்டானிய வான்படையில் சேர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிந்தார். லாரன்ஸ் தனது பெயரை டி. ஈ. ஷா என்று மாற்றிக்
கொண்டார். விசையுந்து (மொட்டார் சைக்கிள்) ஆர்வலரான லாரன்ஸ் 1935ம் ஆண்டு ஒரு விசையுந்து விபத்தில் மரணமடைந்தார். )

லாரன்ஸ் இவன் யாரென்றால் உதுமானிய கிலாபா அரசில் இருந்து ஒரு மன்னர் ஆதிக்க
சுயாட்சியாக பிரிவினை அடைய உறுதுணையாக இருந்த பிரித்தானியாவின்
கிறிஸ்தவ உளவாளி ! இந்த பந்தர் பின் சுல்தான் யாரென்றால் அந்த கிறிஸ்தவ உளவாளி அமைக்க உதவிய அந்த 'கிங் டோம் ஒப் சவூதி அரேபியாவின் ' மன்னராட்சி மரபை பாதுகாக்கும் மன்னரின் விசேட உளவுப்பிரிவின் இன்றைய தலைவர் .லாரன்ஸ் ஒரு கிறிஸ்தவன் இந்த பந்தர் பின் சுல்தான் ஒரு முஸ்லிம் !
கிலாபா அரசு உடைக்கப்படுவதன் அவசியத்தின் பின்னால் யூத, கிறிஸ்தவர்களுக்கு பல இலாபாங்கள் இருந்தன . பாலஸ்தீனை பறிகொடுக்க பிரதான காரணமாக
இந்த பிரிவினை எனும் வரலாற்றுத் துரோகம் இருந்தது அதன் பின்னாலும் மன்னராட்சியை தக்கவைப்பதில் இன்றுவரை முஸ்லீம் சகோதரப்
படுகொலைகளை நியாயம் காண்கிறது ! அந்த கேவலமான இரத்தக் கறை படிந்த கரங்களின் உரிமையை இன்று தன்வசமாக்கியுள்ளவன் தான்
இந்த பந்தர் பின் சுல்தான் !!


முஸ்லீம் உம்மத் இஸ்லாத்தின் அரசியலான கிலாபா அரசின் நிழலில் வந்துவிடக்
கூடாது ;என்ற மேற்கின் அச்சத்தை தவிர்க்கும் பணியை லாரான்சுக்காக
இன்று செய்து கொண்டிருக்கும் அரேபியக் குள்ளநரிதான் இந்த பந்தர் பின் சுல்தான் !
அதாவது சவூதிக்காக மட்டுமல்ல , அமெரிக்காவுக்காக ,ரஷ்யாவுக்காக ,
இஸ்ரேலுக்காக ,முழு குப்ரிய ஆதிக்க உலகுக்காக ,இன்னும் அதிர்ச்சிகரமாக
ஈரானுக்காக என தனது பணியை விரிவாக்கி இருக்கும் செல்வச் செழிப்பு மிக்க ஒரு விசுவாசம் மிக்க கைக்கூலி !!!
ஒரு முஸ்லிம் தனது உலகியல் வாழ்வை இஸ்லாத்தின் அடிப்படையில்
வேண்டி நிற்பதில் இருந்தே அவனது இஸ்லாத்தின் அரசியல் பரிமாணம் தோற்றம்
பெறுகிறது .மறுமைக்காக இம்மையை பயன்படுத்தல் என்ற கோட்பாட்டின்
பிரகாரம் அவனது நடத்தையின் ஒவ்வொரு விவகாரமும் ஆன்மீக
விவகாரமாகின்றது . இத்தகு அவசியத்தில் இருந்துதான்
கிலாபா கோட்பாடு ஒரு அதி முக்கிய கடமையாக தோற்றம் பெறுகிறது .
இஸ்லாம் மனித நடவடிக்கைகளை உறுதியாகவும் ,தெளிவாகவும் வரையறுத்த நிலையில் ஒரு சித்தாந்தமாக இருக்கின்றது . அந்த வகையில் அதன் பிரயோக
வடிவத்தின் மூலம் நிரூபிக்கப் பட்டதும் சுன்னாவின் மூலம் அங்கீகரிக்கப் பட்டதும்
கிலாபா அரசு மட்டுமே ஆகும் . அப்படியான ஒரு நிலைக்கான மீள்வருகையை தடுக்கும்
ஒரே நோக்கத்தோடு தொழில்படும் ஒரு உளவு நிறுவனத்தின் தலைவரே இந்த பந்தர்
பின் சுல்தான் . எப்படி இவர் வேலை செய்கிறார் இன்ஷா அல்லாஹ்
இன்னொரு தொடரில் .

by Abdur Raheem