Mar 26, 2014

இஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன !!?


சம்பிரதாய பூர்வமான சில ஏற்பாடுகளோடு சூழலின் ஆதிக்க அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு வாழ்வின் மீது முஸ்லீம் உம்மத் இன்று பழக்கப்பட்டுள்ளது . அதாவது முஸ்லீம் உம்மாவின் தெளிவான இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் பார்வை முற்றாக கைவிடப்பட்டு குப்ரோடு ஒன்றிய வாழ்வுக்கான அரசியல் களம் இஸ்லாமிய இயக்கங்களால் முன் மொழியப்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது .
இப்போது நடைமுறை ரீதியாக குப்ரின் விருப்பு வெறுப்புகளை ,ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு தக்கன பிழைத்தல் வாழ்வை நோக்கி இஸ்லாத்தின் பெயரோடு முஸ்லீம் உம்மத்தை அழைப்பது மட்டும்தான் 'தவ்வா ' என்பதாக மூத்த 'தாயிகள் 'வெளிப்படையாக பேசி நிற்கின்றனர் .இந்த சரணடைவு பாதை தான் காலத்தின் தேவையாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது .
இங்கு 'ஹராத்தோடு' கலந்த விடயங்கள் 'ஹலால் 'என்ற பெயரில் மிகச் சுலபமாக ஜீரணிக்கப்படும்! சில பாரிய ஹராம்களின் பாரதூரங்கள் ஏதோ சிறு பாவம் போல சித்தரிக்கப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வு . மிக அண்மையில் ஒரு பொலிஸ்மா அதிபர் ஒரு பிரசித்தமான இயக்கத்தின் 'இஜ்திமாவிட்கு' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் . அவர் அங்கு பௌத்த சிந்தனையை சிறப்பாக 'பிரித்' ஓதி! பேசிவிட்டு விட்டு போயுள்ளார் ! கேட்டால் மத நல்லிணக்கம் என அதற்கு ஒரு நியாயம் சொல்கிறார்கள் !!!இதை 'சிர்க்கோடு ' நல்லிணக்கம் என அழகாக மொழி பெயர்க்கலாமே!!!
இன்னொரு பிரசித்தமான இயக்கம் ஜெனீவாவுக்கு எதிராக ,இலங்கை அரசுக்கு ஆதரவாக பகிரங்கப் போராட்டத்தில் இன்றைய தினம் இறங்கியுள்ளார்கள் !! இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த எத்தனையோ அநீதிகளுக்கு முன் பெயரளவு பெறுமானத்தோடு அடக்கி வாசித்த அரசியலை . ஜெனீவாவுக்கு எதிராக முடுக்கி விட்டிருப்பது யாரை திருப்திப் படுத்தவாம் !? இதை சரியாக புரிந்து கொண்டால் 'பிர் அவ்னுக்கு' பிடில் வாசிக்கும் இவர்களது அரசியல் தரம் புரிந்து போகும் .
தவ்ஹீதை கப்ரு வணக்கத்தில் கண்டு பிடித்த இவர்களுக்கு ,தமது தூய அகீதாவுக்கு மண்ணள்ளிப் போடும் இத்தகு மடத்தனம் புரியாதது அதிசயமே 

தேர்தல் திருவிழாவும் தேர் இழுக்கும் முஸ்லீம்களும் !!

நேற்றுவரை குன்றும் குழியுமாக இருந்த வீதிகளுக்கு திடீரென கற்கள் கொட்டப் படுகின்றது ! செபனிடப் போகிறார்களாம் . ஆளும் அதிகாரத்தின் பாசப்பார்வையில் பக்காவான சுயநலம் .இது தேர்தல் காலம் அல்லவா ! வாக்கு வேட்டைக்காகாக நடத்தும் நாடக அரசியல் அது .
மக்களுக்காக அதிகாரமா அதிகாரத்துக்காக மக்களா? இந்தக் கேள்வியை புரிந்த நிலையிலேயே இன்றைய அரசியல் நோக்கப்பட வேண்டும் . சுய தேவைக்காக சேவை என்றால் அது வியாபாரம் . உரிமைகளை எதோ சலுகை போல் காட்டி நூற்றுக்கு தொண்ணூறை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் களவாணித் தனமே இன்றைய அரசியல் .
சந்தர்ப்பதிட்கு சேறு பூசிவிட்டு குட்டிக்கரணங்கள் அடித்து கட்சி மாறி சாக்கடையை சந்தனமாக்கி பேசும் (அ)யோக்கிய தலைவர்களை நம்பி அடிமாடாய் உழைக்கும் முஸ்லீம் உம்மத்தின் உதிரங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அது பட்ட மரத்தில் ஏறி பழம் பறிக்க முடியாது எனும் உண்மையே ஆகும் . சந்தனமாக இஸ்லாம் இருக்க சாக்கடையை நம்பிய வாழ்வு எதற்கு !? குப்ரை நம்பினால் உனக்கு இம்மையும் ஏமாற்றமே ,மறுமையும் ஏமாற்றமே.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் முஸ்லிம்களை நரவேட்டையாட துணைபோவது யார்?


பதில்:-

இதற்கு பதிலளிக்கும் முன் மத்திய ஆப்பிரிக்காவின் நிலை குறித்தும், அங்கு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளின்(coups) மூலம் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் குறித்தும், அதற்கும் சர்வதேச பிரச்சினைகளிலூடான தொடர்புகள் குறித்தும் தெரிந்தாக வேண்டும்.

1. மத்திய ஆப்பிரிக்காவின் மொத்த ஜனத்தொகையான 50 லட்சம் மக்களில், முஸ்லிம்கள் 15% லிருந்து 20% வரை உள்ளனர். முஸ்லிம்கள் நாடெங்கும் பரவி வாழ்வதை பார்க்கையில் இந்த புள்ளி விவரம் கேள்விக்குரியதாக இருக்கிறது; மேலும் இந்த புள்ளி விவரங்கள் சமநிலையற்றதாகவும், நியாயமற்றதாகவும் இருக்கிறது. பல காரணங்களுக்காக முஸ்லிம்களின் சதவிகிதம் வேண்டுமென்று குறைத்து கூறப்பட்டிருக்கிறது... முஸ்லிம்களின் சதவிகிதம் இந்த புள்ளி விவரத்தை காட்டிலும் அதிகமாகவே இருக்கும். மீதமுள்ள சதவிகிதத்தை கிறித்தவர்களும் பலதெய்வ வழிபாட்டாளர்களும் பூர்த்தி செய்கிறார்கள். தலைநகர் பெங்குய்யில் முஸ்லிம்கள் பரவி வாழ்கின்றனர். அங்கே அவர்கள் அதிகமான மஸ்ஜிதுகளையும் மதரசாக்களையும் நிறுவியுள்ளனர். அது போலவே மற்ற பெருநகரங்கள் மற்றும் மாகாணங்களிலும் பரவி வாழ்கின்றனர். குறிப்பாக நாட்டின் வட பகுதியில் வசிக்கின்றனர். அங்கே தெற்கு சாட்டை சார்ந்த பஜ்ரமி இஸ்லாமிய ராஜாங்கத்தின் (Bajrami Islamic Sultanate in the south of Chad) பல சுல்தான்கள் மத்திய ஆப்பிரிக்காவின் வடக்கு ராஜாங்கத்திடம் வீழ்ந்ததன் காரணத்தால் புலம்பெயர்ந்தார்கள். இவர்கள் மூலம் ஏராளமானோர் இஸ்லாத்தில் இணைந்தனர். 13-ம் நூற்றாண்டில் மத்திய ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் இஸ்லாம் நுழைந்ததை அறிந்து, வடக்கு பகுதியை சார்ந்த இந்த்லி(Indli) தலைநகரை சார்ந்த ரோங்கா(Rongha) கோத்திரத்தார் மற்றும் ப்ராவ்(Prao) நகரை சார்ந்த வகாகா(Vakaca) கோத்திரத்தார் இஸ்லாத்தில் இணைந்தனர். இப்பகுதி தங்கம், வைரம் மற்றும் யுரேனியம் போன்றவைகளால் நிறைந்திருக்கின்றன. பல காரணங்களுக்காக முஸ்லிம் குழுக்கள் 18 மற்றும் 19ம் நூற்றாண்டில் இங்கு வந்தன. இவர்கள் தங்கள் நாட்டில் பிரஞ்சு காலனியாதிகத்தை தோற்கடிக்க தமது சகோதரர்களுடன் போராட்டத்தில் பங்கு பெற்றனர். அதுபோல மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வருகை தந்த முஸ்லிம்கள் மற்றும் ஹவ்ஸா(Hausa)கோத்திரத்தாரும் ஃபுலானி(Fulani) கோத்திரத்தாரும் காமரூனுக்கு அருகாமையில் உள்ள தென்மேற்கு பகுதிகளில் அதிகமான சதவிகிதத்தை கொண்டிருந்தனர். பல தெய்வ வழிபாட்டுக்காளர்களிடம் இஸ்லாம் பரவி விடுமோ என அஞ்சிய பட்டாஸே(Pattase)அரசு பிரான்ஸின் உதவியுடன் அவர்களை முஸ்லிம்களிடமிருந்து தனிமைப்படுத்தும் முறையை கையாண்டது. அதுமட்டுமின்றி அரசு மற்றும் பொதுத்துறையில் முஸ்லிம்கள் வேலை செய்வதை தடுத்தது. ஆகையால் முஸ்லிம்கள் வணிகத்தை நோக்கி திரும்பினர். முஸ்லிம் வணிகர்கள் படுகொலை செய்யப்பட்டதன் காரணத்தால் வணிகம் ஸ்தம்பித்தது.மேலும் தலைநகர் பெங்குய்யின் மக்கள் மிகுந்த உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதை கண்டனர்.

2. 1885ல் மத்திய ஆப்பிரிக்காவில் பிரஞ்சு காலனியாதிக்கம் தொடங்கியது; பிரான்ஸ் தனது தளத்தை பெங்குய்யில் அமைத்தது. அதனையடுத்து 1894ல் அது பிரான்ஸின் அதிகாரப்பூர்வ காலனியாகியது. 1960ல் பிரான்ஸ் அதிகாரப்பூர்வ சுதந்திரத்தை வழங்கிய போது நாட்டின் கட்டுப்பாட்டை கிறிஸ்தவர்களிடம் ஒப்படைத்தது. ஆனாலும் அதன் செல்வாக்கு மற்றும் ஆக்கிரமிப்பு முன்பிருந்தது போலவே இருந்தது; அது கிறிஸ்தவர்களை இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு(coup)களின் மூலமோ அல்லது பெயரளவில் நடத்தப்படும் தேர்தல்கள் மூலமோ நியமித்தது.டேவிட் டேக்கோவை(David Dacko) மத்திய ஆப்பிரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ சுதந்திரம் வழங்கிய பின் முதல் ஜனாதிபதியாக பிரான்ஸ் நியமித்தது, ஆனால் பதவியேற்ற இரண்டு வருடங்களிலேயே அவனுடைய கொடுங்கோல் மற்றும் எதிரணியினரை அடக்குவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிப்பட்டது. ஆப்பிரிக்காவை நோக்கி பார்வையை வைத்திருந்த அமெரிக்கா இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது. அச்சமயம் சோவியத் யூனியன் பழைய காலனித்துவத்திற்கு எதிராக சண்டையிடும் நோக்கம் கொண்டிருந்தது.இதனையடுத்து பின்னர் அமெரிக்காவுடன் 1961ல் இந்த காரியத்தை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தது.

இவ்விரு நாடுகளும் இந்த கொள்கையில் தங்களுடைய இணக்கத்தை தெரிவித்ததன் மூலம் ஆப்பிரிக்க மக்களை இந்த பழைய காலனித்துவத்திற்கு எதிராக எழுச்சி அடைய செய்வதற்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. பிரான்ஸ்,இந்நாட்டில் தனது செல்வாக்கை இழந்து விடுவோமோ என அஞ்சி 1966ல் தனது முதன்மை அதிகாரி ஜான் பெடுல் பொகாஸா(Jean Beddle Bokassa)வை அங்கு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை(coup) மேற்கொண்டு அதிகாரத்தை பலமாக தனது கரத்தில் வைத்து கொள்ள அனுப்பியது. அமெரிக்கா-சோவியத்தையும் எதிர் கொள்ளவே இந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு(coup) நடத்தப்பட்டது என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட, பின்னர் அவர் டேவிட் டேக்கோவை தனது ஆலோசகராக நியமித்து கொண்டான்; இது பிரஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராக எவரொருவரையும் நசுக்க ஏற்படுத்தப்பட்ட ராணுவ ஏற்பாடேயாகும். பொகாஸா தன்னுடைய கொடுங்கோலை தொடர்ந்து வந்ததோடு தனது ஆட்சி மூலம் நாட்டில் பிரஞ்சு ஆதிக்கத்தை காப்பதில் கவனம் செலுத்தினான். மேலும் தன்னை ஒரு அதிபராக 1976-ல் அறிவித்து கொண்டான்! இவன் பிரான்சுக்கு அடிபணிந்தான். மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி சார்லஸ் டி கா லிற்கு(Charles de Gaulle) போப் பட்டத்தை கொடுத்து தனது நாட்டை பிரான்ஸிற்கு மெத்தையாக ஆக்கினான்.நரமாமிசம் உண்பவன் என்றும் குழந்தைகளை கொலை செய்பவன் என்றும் பல வதந்திகள் பொகாஸாவை பற்றி கிளம்பின. இது சர்வதேச அளவில் எதிரான அபிப்பிராயத்தை அவனுக்கு உருவாக்கியது. பிரான்ஸ் அங்கு நிறுத்தியிருந்த தனது படைகளைக் கொண்டு தலையீடு செய்து அவனை பதவியிலிருந்து தூக்கி எறிந்து டேவிட் டேக்கோவை மறுபடியும் 1979ல் ஜனாதிபதியாக நியமித்தது. 1981ல் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல் ஆன்ட்ரெ கொலிங்பா(Andre Kolingba) இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு(coup) மூலம் டேக்கோவை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்தான். 1990ல் சாட்டில்(chad) அமெரிக்கா ஆதரவாளரான ஹேபரை வெளியேற்றி அதனுடைய ஏஜண்டான இத்ரீஸ் டெபியை(Idriss Deby) ஆட்சியில் அமர்த்தியது. மத்திய ஆப்பிரிக்காவில் பிரான்ஸின் அதிகாரம் வளர்ந்து வந்தது. ஏனென்றால் சாட்(chad) ஒரு தூணைப்போல் மத்திய ஆப்பிரிக்காவில் பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு துணை புரிந்தது...அதே போல் பிரான்ஸும் தனக்கு மத்திய ஆப்பிரிக்காவில் பலமான ஆதிக்கம் இருப்பதை உணர்ந்து கொண்டது; அது ஜனநாயகத்தின் வர்ணத்தை கொண்டு ஆட்சியமைக்க நாடியது! அது அங்கு ராணுவத்தை ஆட்சியிலிருந்து அகற்றி தேர்தலை நடத்த முடிவெடுத்தது. 1993ல் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று ஃபெலிக்ஸ் பட்டாஸே(Felix Pattase) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது, இவன் பிரான்ஸுடன் தொடர்புடையவன். மேலும் இவன் எதிரணியை தலைமை தாங்கி நடத்தி வந்தான். அமெரிக்காவின் குறிக்கோளான ஜனநாயகத்தை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்தி பழைய காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டி அதை மாற்றியமைக்க இவன் பிரான்ஸினால் ஏவப்பட்டவன் ஆவான். பிரான்ஸ் எதிரணியினருடன் சேர்ந்து தேர்தலை நடத்தி அங்கு ஆட்சியமைத்தது.ரெவ் பிரான்கோய்ஸ் போஸிஸின்(Rev Francois Bozize) தலைமையில் முஸ்லிம்கள் உட்பட பூர்வீகக்குழுவினருடன் சேர்ந்து ஆட்சியமைத்தது. பட்டாஸே செய்த ஊழல்களை எதிரணியினர் வெறுத்தனர். அவன் எதிரணியினரை, குறிப்பாக முஸ்லிம்களை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினான். இது எதிரணியினரை ஆயுத போராட்டம் செய்ய தூண்டியது. பிரான்ஸ், பட்டாஸேவை தூக்கி அவனுக்கு பதிலாக ரெவ் போஸிஸை(Rev Bozize) குடியரசின் ஜனாதிபதியாக 15/03/2013ல் நியமிக்கப் பார்த்தது. போஸிஸ்(Bozize) ஆட்சிக்கு வர முஸ்லிம்கள் உதவினர்...ஆனால் அவன் ஆட்சிக்கு வர உதவிய முஸ்லிம்கள் மற்றும் மற்ற எதிரணியிருக்கு தன் நன்றியைக் காட்ட தவறிவிட்டான். அவர்களைப் பற்றிய அக்கறையும் செலுத்த மறந்துவிட்டான்; மாறாக அவர்களை எதிரிகள் போல் அணுகினான்! அவன் தனக்கு பாதுகாவலர்களாக ஓய்வுபெற்ற பிரஞ்சு ஜெனரல் ஜான்-பியர் பியர்ஸ்(Jean-Pierre Pierce) தலைமையில் பிரஞ்சு பாதுகாப்பு நிறுவனத்தை ஏற்பாடு செய்தான். 2005 மற்றும் 2011ல் தேர்தல் நடத்தி இரண்டிலும் தான் வெற்றி பெற்றதாக அறிவித்தான். இச்சமயம் ஒரு புதிய எதிர்ப்பு கிளம்பியது, மேலும் செலிகா(Celica) என்ற [ஒரு கூட்டமைப்பு அல்லது ஜோடோடியா(Djaotodia) என்பவரின் தலைமையை கொண்ட பெரும் குழுவினரை சேர்த்து ஐந்து குழுவினருக்கிடையேயான ஒப்பந்தம், இதன் தலைவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்] போராட்ட குழு ஆரம்பமாகியது. போஸிஸ் இவ்வளவு தேர்தல் நாடகங்கள் அரங்கேற்றியும் நாட்டில் சூழ்நிலைகள் சரியாகவில்லை.அவனுடைய அட்டூழியம் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கவே செய்தது. எவ்வாறெனில் போஸிஸ் தனது படைகளை அனுப்பி முஸ்லிம்களின் உடைமைகளை தாக்க அனுப்பினான். இதன் விளைவாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் தற்காத்து கொள்ள போராடி தங்கள் இன்னுயிரை நீத்தனர்.

3. அதனைத் தொடர்ந்து 01/11/2013 அன்று கேபனின்(Gabon) தலைநகர் லிபர்வில்லில்(Libreville) ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ஜனாதிபதி போஸிஸும் செலிகா அமைப்பினரும் ஒரு நல்ல தீர்வு ஏற்பட கலந்து கொண்டனர்; இந்த கருத்தரங்கம் முஸ்லிம்கள் மத்திய ஆப்பிரிக்காவில் எந்த அளவிற்கு அநீதியை எதிர்கொண்டார்கள் என்பதை வெளிக்கொண்டு வந்தது; அங்கே அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்; அவை சாதாரண கோரிக்கைகளாக இருந்தன: அதாவது மற்ற மதங்களை போல் இஸ்லாத்தையும் அங்கீகரிக்க வேண்டும்; ஈதுல்-ஃபித்ர் மற்றும் ஈதுல்-அள்ஹாவிற்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்; முஸ்லிம்களை கொடுமை செய்யக்கூடாது. ஆனால் போஸிஸ் இதை தந்திரமாக கையாண்டு முஸ்லிம்கள் மற்றும் செலிகாவின் சில கோரிக்கைகளை ஏற்றது போல் நடித்ததால் பிரான்ஸின் ஏஜன்டான இவன் 2016 வரை இருக்குமாறு தன்னுடைய பதவியை தக்க வைத்து கொண்டான். இருப்பினும் இந்த அளவு படுகொலைகள் செய்த போதிலும் இந்த ஒப்பந்தம் மூலம் போஸிஸ் தொடர்ந்து ஆட்சி புரிய அமெரிக்கா அங்கீகரித்து என பிரஞ்சு செயதி நிறுவனம் வெளியிட்டது ... இவை அனைத்தையும் மீறி பிரான்ஸும் போஸிஸும் அடிப்படை உரிமைகளை தடுத்தே வைத்திருந்தன. அவர்களுக்கு எதிராக திரும்பி முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளை தொடர்ந்து செய்து வந்தனர். இது செலிகாவை, மிசெல் ஜொடோடியாவின் தலைமையில் அரண்மனை நோக்கி முன்னேற செய்து 24/03/2014 அன்று அதை கைப்பற்ற செய்தது; பின்னர் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இதனால் பிரான்ஸ் ஆத்திரமுற்றது...ஏனென்றால் ஜொடோடியா முஸ்லிம் பின்னணியை கொண்டவர். அவர் நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை அறிவித்த நாளிலிருந்து மேற்கை சாந்தப்படுத்த தன் குறிப்புரைகளில் "மத்திய ஆப்ரிக்க குடியரசு ஒரு மதச்சார்பற்ற நாடு எனவும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கின்றனர். நான் முஸ்லிம் என்பது உண்மை; ஆனாலும் என்னுடைய நாட்டிற்காகவும் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மக்களுக்காகவும் உழைப்பதும் எனது கடமையாகும்" (The Gulf, 31/03/2013).என்று கூறியிருந்தார். இது மேற்கையும் குறிப்பாக பிரான்ஸையும், கிறிஸ்தவர்களையும் சாந்தப்படுத்த கூறிய வார்த்தைகளாகும். அதனால் அவர் கிறிஸ்தவ படைகளை தடைப்படுத்தவில்லை. மேலும் அவர்களை செயல்பட அனுமதித்தார். ஆனால் பிரான்ஸ் புதிய ஜனாதிபதியையும், அவர்களுடைய ஏஜன்டுகளையும் அங்கீகரிக்கவில்லை. அவர் முஸ்லிம் பின்னணியை கொண்டிருப்பதால் பிரான்ஸ் அவருக்கு எதிராக பலமாக வேலை செய்ய துவங்கியது. பிரான்ஸ் சாட்டின்(chad) தலைநகர் ட்ஜமொனா(N'Jamena)வில் மத்திய ஆப்ரிக்க தலைவர்களை ஒன்றுகூட்டி 03/04/2013 அன்று ஒரு கருத்தரங்கை நடத்தியது. பிரான்ஸின் முக்கிய ஏஜன்டான இத்ரீஸ் டெபி பேசும் போது கூறியதாவது:- "தன்னைத்தானே நியமித்து கொண்டவரை அங்கீகரிப்பது சாத்தியமற்றதாக தெரிகிறது". (Al-Wasat 05/04/2013) இது மிச்செல் ஆன்டோ ஜொடோடியாவை நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததை 13/04/2013 அன்று ஆட்சிமாற்ற குழு அறிவித்ததையும் மீறி நடந்த செயலாகும். இவர் முஸ்லிமாக இருந்த காரணத்தால் இது அவருக்கு உதவவில்லை. இந்நாட்டின் யுரேனியம், தங்கம், வைரம் போன்றவற்றை சுரண்டிய போதிலும் பிரான்ஸ் இவ்வரசாங்கத்திற்கு உதவித்தொகை அளிப்பதை நிறுத்தி கொண்டது, அதோடு மட்டுமல்லாமல் அது மத்திய ஆப்பிரிக்க அரசாங்களுக்கு உதவி புரிவதை போல் நடித்து கொண்டிருக்கிறது.இங்கிருக்கும் சொத்துக்கள் அனைத்தும் தன்னுடையதென எண்ணி, நினைக்கும் நேரத்தில் உதவி புரிவதை நிறுத்தி கொள்கிறது!

4. பிரான்ஸ் அங்கு தான் தலையிடுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த தயாராகி கொண்டிருந்தது. மேலும் பிரச்சினைகள் உருவானதே தன் தலையீட்டிற்கான காரணம் என நியாயப்படுத்தும் நோக்கம் கொண்டிருந்தது. அது 05/12/2013 அன்று மத்திய ஆப்ரிக்கா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் வெற்றி கண்டது; 08/12/2013 அன்று தலையீடு ஆரம்பித்தது. பிரஞ்சு ஜனாதிபதி ஃபிராங்கொய்ஸ் ஹொலன்ட்(Francois Hollande) மிச்செல் ஆன்டோ ஜொடோடியாவை(Michel Andorra Djotodia) ராஜினாமா செய்து விரைவில் தேர்தல் நடத்த வேண்டினார். அதனையடுத்து சாட்டி(chad) தலைநகர் ஜமெனா(N'Djamena)வில் பிராந்திய ஆப்பிரிக்க மாநாட்டை 10/01/2014 அன்று ஜெடோடியாவை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுப்பதற்காக நடத்தியது. அந்த மாநாட்டில் அவர் அதனை அறிவித்தார். தலைநகர் பெங்குய்யின் மேயரான சாம்பா பான்ஸாவை(Samba Panza) தற்காலிக அதிபராக தேர்ந்தெடுத்ததை 20/01/2014 அன்று அறிவித்தார். இதனையடுத்து கிறிஸ்தவ படைகளின் அட்டூழியங்கள் பிரஞ்சு படையின் மேற்பார்வையில் அரங்கேறியது. இது பாதுகாப்பை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் 7000 செலிகா வீரர்களை நிராயுதபாணியாக்கியது. ஆனால் கிறிஸ்தவ போராளிகளை குறிப்பாக ஆன்டி பாலகா(Anti Balaka)போன்றோரை நிராயுதபாணியாக ஆக்கவில்லை; மாறாக அவர்களை ஆதரித்தது! அதிபர் ஜொடோடியாவை வெளியேற்றிய பின்னர் இக்காட்டுமிராண்டிகள் மிகவும் கொடூரமான செயல்களை செய்தார்கள். முஸ்லிம்களை கொன்றும், எரித்தும், அவர்களுடைய மாமிசத்தை உண்டும், அவர்களுடைய வீடுகள், மஸ்ஜிதுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களை சூறையாடி அவர்களுடைய சொத்துக்களை பிரஞ்சு. மற்றும் ஆப்பிரிக்க படையினரின் கண்ணெதிரிலேயே சூறையாடினர். அதே சமயம் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதங்களை அவர்களுக்கு கிடைக்க செய்யாமல் நிராயுதபாணியாக பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கிறிஸ்தவ போராளிகளை பிரான்ஸ் ஆதரிப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியது. இந்த கொடூர குற்றங்களை அங்கீகரித்த அதிபர் கூறுகையில் "ஆன்டி பலாக்கா தங்களுடைய குறிக்கோளின் அர்த்தத்தை இழந்து விட்டனர், இன்று அவர்கள் கொலை செய்பவர்களாக மாறி விட்டனர். "நான் பெண்ணாக இருப்பதன் காரணத்தால் பலவீனமாக இருப்பதாக நினைக்கிறார்கள்;, ஆனால் ஆன்டி பலாக்கா அமைப்பை சார்ந்தவர்கள் எவராவது கொலை செய்ய நாடினால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள்."(BBC 12/02/2014) BBC இதையும் சேர்த்தது: "ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி காமரூன் மற்றும் சாட்(Chad)டிற்கு சென்றார்கள்; சிலர் நாட்டிற்குள் கூடாரங்கள் அமைத்து தங்கும் நிலைக்கு ஆளானார்கள். Amnesty International கூறியது போன்று ராணுவ தாக்குதல்களே முஸ்லிம்களை வரலாறு காணாத அளவில் கூட்டம் கூட்டமாக வெளியேற செய்தது.. இது இன அழிப்பை தவிர வேறெதுவும் இல்லை என்றும் கூறியது. அவ்வாறிருப்பினும் அதிபர் இக்கூற்றை மறுத்தார். மாறாக "நாட்டில் நடைபெற்று கொண்டிருப்பது பாதுகாப்பு பிரச்சினையே" என கோரினார்!

5. பிரஞ்சு மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசுகளின் படுகொலைகளை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அமெரிக்கா முயன்றது. அதன் காரணமாக மத்திய ஆப்பிரிக்க குடியரசு(CAR)ல் ஆப்பிரிக்க படைகளை பிரஞ்சு படைகளுக்கு நிகராக வலுவடைய செய்யும் வேலையை செய்தது. இதன் மூலம் பிரான்ஸின் தனித்துவத்தை நீக்குவதற்கு காரணமாக அமையும். இதனால் அமெரிக்கா பிரான்ஸின் நிலையை மாற்ற அல்லது அதனுடன் கூட்டு சேருவதற்கு விரும்பியதோடு, போக்கிரி கிறித்தவ போராளிகளுடன் மக்கள் கைகோர்த்து நிற்பதை குற்றம் சாட்டினார்கள்; மேலும் அவர்கள் பிரஞ்சு துருப்புகளுக்கு பதிலாக ஆப்பிரிக்க துருப்புகளை அதிகமாக்கும் கோரிக்கைகளை எழுப்பினார்கள். இதற்கு அமெரிக்காவின் சீரிய உந்துதல் மூலம் அமெரிக்க தரப்பிலிருந்தும் ஐ.நா. சபை தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகள் உதவியாக இருந்தது... ஆப்பிரிக்க விவகாரங்களின் U.S Senate Foreign Relations Subcommittee-ன் தலைவர் கிறிஸ்டோபர் கூன், கூறியதாவது:- "ஆப்பிரிக்க காரிய துணை கமிட்டி ஆப்பிரிக்க கூட்டமைப்பு(AU) படைகளுக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும் வன்முறையை நிறுத்த தேவையான தகுதியை மேம்படுத்தவும் பன்முக முயற்சிக்கு அமெரிக்கா மேலும் எவ்விதமான ஆதரவை தரலாம் என்பதை தீர்மானிக்க ஆலோசனை கூட்டம் கூட்டியது".(IIP Digital, U.S. Department of State site 23/12/2013) அமெரிக்காவின் ஐ.நா. சபைக்கான நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் ஆப்பிரிக்க காரியத்திற்கு துணை செயலாளரான லிண்டா தாமஸ் -க்ரீன்ஃபீல்டு நிலைமாற்று அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடலுக்காக 19/12/2013 அன்று பெங்குய் வந்தனர். ஆப்பிரிக்க கூட்டமைப்பு நோக்கமான CAR MISCAவின் பலமான நிலையான ஆணை என்பது ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்களை எதிர்க்கவும் அவர்களை நிராயுதபாணியாக்குவதற்கும் மிகவும் தேவையானதாக இருக்கிறது என தாமஸ்-க்ரீன்ஃபீல்ட் கூறினார். இதற்கு மாற்றமாக பிரான்ஸ் 4400 சிப்பாய்களையும் அதனுடன் சேர்க்கவிருக்கும் ருவாண்டா துருப்பின் 850 வீரர்களை கொண்ட ஆப்பிரிக்க படைகளையும் எதிர் கொள்ள ஐரோப்பிய நாடுகளின் சர்வதேச படைகளை கொண்டு வலுவடைய செய்யும் காரியங்களை செய்தது. இதன் காரணமாக "14/02/2014 அன்று பிரஞ்சு அதிபர் தனது படையின் பலத்தை அதிகரிக்க மேலும் 400 வீர்ர்களை அனுப்பி CAR-ல் தனது படையின் எண்ணிக்கையை 2000 -மாக அதிகரிக்க முடிவு செய்தார். பிரஞ்சு ஜனாதிபதியின் கூற்றுப்படி: இந்த 400 வீரர்களை கொண்டு அதிகரிக்கும் முயற்சியானது பிரான்ஸின் விரைவில் அனுப்பப்படும் பிரஞ்சு படையினரையும் சேர்ந்ததாகும். இது ஏற்கனவே செய்யப்பட்ட EU mission-ன் திட்டத்தில் அடங்கும். பிரான்ஸ் EUவை EUFOR படையினரை ஐரோப்பாவின் கலந்தடங்கிய காவல்துறையினரை(gendermarie) அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதிகாரப்பூர்வ தகவலின்படி ஐரோப்பிய கூட்டமைப்பின் பங்கேற்பு எதிர்பார்த்த 500 வீர்ர்களை விட அதிகமாகி 900 வீர்ர்களை தொடும்."(AFP 14/02/2014) அமெரிக்கா ஆப்பிரிக்க படைகளுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்தது. அமெரிக்க அரசுத்துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ஃப்(Mary Harff) கீழ்வருமாறு கூறினார்:-
" மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நிலவும் வன்முறை மோசமடைந்து வருவது குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம், இது மனித மேம்பாடு குறித்த பிரச்சினைகளை அதிகமாக்கும்.மேலும் பெரும் அட்டூழியங்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. நேற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானமான MISCAவிற்கும், MISCA விற்கு ஆதரவாக பிரஞ்சு படைகளுக்கும் ஆதரவாக வாக்களித்தோம். இந்த தீர்மானமான MISCA வின் Chapter VII க்கு நீண்ட நாட்களாக துன்புறும் மக்களுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்ட அதிகாரம் வழங்கியது. நாங்கள் MISCA விற்கு உபகரணங்கள், பயிற்சி மற்றும் தளவாடங்களுக்காக 40 மில்லியன் டாலர்கள் வழங்கி இந்த ஆணையை நிறைவேற்ற அதன் திறனை மேம்படுத்த எண்ணம் கொண்டுள்ளோம். மேலும் நாங்கள் ஆப்பிரிக்க ஐக்கிய கூட்டணிகள் மற்றும் பிரஞ்சு கூட்டாளிகளுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் உதவ ஆயத்தமாக உள்ளோம்."(IIP Digital, site of the U.S. Department of State 06/12/2013).
இந்த படைகளின் நடவடிக்கைகள் நமக்கு தெளிவாக உண்ர்த்துவது யாதெனில், அமெரிக்காவின் செல்வாக்குடைய ஆப்பிரிக்க நாடுகளானாலும், அல்லது பிரான்ஸ் மீது விசுவாசம் கொண்டுள்ள ஐரோப்பிய படைகளாயினும், இவ்விரு தரப்பும் கொண்டுள்ள 8000 வீரர்களின் செயல்கள் அவர்கள் அங்கு ஆப்பிரிக்க குடியரசின் பாதுகாப்பிற்காக இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களையும, கொடுமையான படுகொலைகளையும் தடுக்க எதையும் செய்யவில்லை. அவர்கள் இதைப்பற்றிய அக்கறை கொண்டிருந்தார்களேயானால் இந்த சிறிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் எளிதாக அதை செய்திருக்கக்கூடும்....இது தன்னுடைய ஆதிக்கத்தை திணிக்கவும் அதை செயல் படுத்துவதற்கான பிரஞ்சு மற்றும் அமெரிக்க ஆதிக்கத்திற்குமான போட்டியே ஆகும்...இவ்வகையில் தான் முஸ்லிம்களின் உதிரம் சிந்தப்படுகிறது; அவர்களின் சதைகள் கிழிக்கப்படுகிறது .. பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா தங்கள் கால்களால் முஸ்லிம்களின் உரிமத்தின் மீது நாட்டியமாடும் ஓரு மல்யுத்த களமாக அதை ஆக்கிவிட்டனர்.

6. ஆகவே அமெரிக்கா தன்னுடைய காரியத்தை வலுவாக்க, மத்திய ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க படையை வலுப்படுத்தி தன் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் காரியத்தை செய்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க கொள்கைக்கு ஏற்றவாறு ஊழியம் செய்து வரும் ஐ.நா சபையின் பொது செயலாளர் பான் கி மூன் பாதுகாப்பு கவுன்சிலிடம் "பொது ஜனங்களுக்கு பாதுகாப்பு அளித்து காப்பதற்கு உடனடியாக 3,000 கூடுதல் வீரர்கள் மற்றும் காவலாளிகளை அனுப்ப வேண்டினார்."(AFP 20/02/2014), இந்த கூடுதல் படையினர் ஆப்பிரிக்க படைகளை சார்ந்தவர்களாக இருப்பது தெரிந்த விஷயமே... மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பிரான்ஸுடன் தனது ஆதிக்கத்தை பகிர்ந்து கொள்ள முஸ்லிம்களின் உதிரத்தை உறிஞ்சி ஓர் அரசியல் நிகழ்வை தடுத்து நிறுத்த அமெரிக்கா நாடுவதாக தெரிகின்றது! பிரான்ஸும் தான் முழுவதையும் இழந்து விடாமல் இருக்க அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இத்தருணம் முன்பிருந்த தருணங்களை காட்டிலும் மிகவும் ஆபத்தானதாகும்.அதன் பிறகு அவர்கள் தங்களுடைய ஏஜன்டுகளை அதிகாரத்திற்கு தேர்தல் மூலம் கொண்டு வரும் காரியத்தில் இறங்குவார்கள்.

7. முடிவுரையாக:- முஸ்லிம்களின் உதிரம் அமெரிக்காவிற்கும் பிரான்சுக்கும் இடையே நடைபெறும் செல்வாக்கிற்கான போராட்ட களமாக மாறிவிட்டது...அவர்கள் முஸ்லிம்களின் உதிரம் ஆறாக ஓடுவதை பற்றி கவலையும் அக்கறையும் கொள்ளவில்லை. மேலும் முதியோர், குழந்தைகள்,பெண்கள் போன்றோர் சித்திரவதைகள் செய்யப்பட்டு அவர்களை உயிரோடு சாப்பிடப்படுவதை பற்றியும் கவலை கொள்ளவில்லை...மாறாக இந்த காலனித்துவ குஃப்ஃபார்களுக்கு முக்கியமாக இருப்பது என்னவெனில் இறுதியாக யார் நிலைத்து நின்று முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் பிணங்கள் மீது யார் ஏறி நின்று கொண்டாடுவது என்பதேயாகும். இக்காலனித்துவ குஃப்ஃபார்கள் அனைவரும் ஒரே வகையை சார்ந்தவர்கள், அவர்கள் முஸ்லிம்களிடையே எவ்வொரு சகோதரத்துவத்தையும் அவர்களை பாதுகாப்பதற்கான எண்ணத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள்...ஆகையால், இவ்விரு தரப்பினரும் முஸ்லிம்களை கொலை செய்வதை குறியாக கொண்டுள்ளனர். அவர்களின் வியூகமும் நோக்கமும் வெவ்வேறாக இருப்பினும், அவர்கள் கிறிஸ்தவ ராணுவத்திற்கு, சுதந்திரமாக ஆட்டம் போட்டு, தோன்றியவாறு முஸ்லிம்களின் உதிரத்தை குடிக்க வைத்து விட்டனர்...

ஆனால் மிகவும் வேதனைக்கும் வருத்தத்திற்குமான விஷயம் என்னவெனில், முஸ்லிம்களுக்காக அழுவதற்கு யாருமில்லை! அவர்களுடைய உதிரம் உக்கிரமான முறையில் பாலஸ்தீனம், பர்மா, காஷ்மீர், செச்சினியா, டார்டார்ஸ்தான், சிரியா, மத்திய ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் சிந்தப்படுகிறது. மேலும் இப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள், முஸ்லிம்களின் நலனுக்காக அல்லாமல் மேற்கின் நலனுக்காக சேவை செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் அங்கு நடத்தப்படும் படுகொலைகளை தங்கள் நாடுகளில் அல்லாமல் வெகு தூரத்திலோ அல்லது வேறு உலகிலோ நடப்பதை போன்று எண்ணியுள்ளனர்.ஆனால் இவையனைத்தும், அவர்களுடைய நாடுகளில், சில நேரங்களில் இக்கொடூரங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக்கு மிக அருகாமையில் நடந்து கொண்டிருக்கும். இருந்தும் அவர்கள் எதையும் செய்யாமல் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இன்று முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கும் கேடயத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் கலீஃபாவை,தங்களைக் காக்கும் கேடயத்தை, அவர்களை பாதுகாப்பவரை இழந்து தொன்னூறு ஆண்டுகள் கடந்து விட்டது.
 
 அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:-

«وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ»

"நிச்சயமாக இமாம் ஒரு கேடயமாவார். அவரின் பின்னால் இருந்து போர் புரிவார்கள். அவரைக்கொண்டு பாதுகாக்கப்படுவார்கள் ". (அபு ஹுரைரா(ரலி), புகாரி)

وَيَقُولُونَ مَتَى هُوَ قُلْ عَسَى أَن يَكُونَ قَرِيبًا

அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக! (அல் இஸ்ரா 17:51)
 
 
sources Sindhanai.org

Mar 25, 2014

சமூகமாற்றம் குறித்த ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பார்வை....?

தனிமனிதர்கள் மாறினால் சமூகம் மாறிவிடும் எனும் கருத்து இன்று பரவலாக உணரப்படும் ஒரு சிந்தனையாகும். இது அடிப்படையில் முதலாளித்துவச் சிந்தனையின் “சமூகம்” தொடர்பான அடிப்படை எண்ணக்கருவாகும். ஏனெனில் இவர்கள் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்ட வாழ்வொழுங்கை (life System) முன்வைக்கும் சிந்தனைப் போக்குடையவர்கள்.

உண்மையில் இஸ்லாம் தனிமனிதனுக்குள் காணப்படும் உணர்வுகள் (சந்ததியை பெருக்கும் உணர்வு (Procreational Instinct) சொத்துச் சேர்க்கும் உணர்வு (Accumulating wealth) ஆத்மீக உள்ளுணர்வு (religious instinct) மற்றும் பாதுகாப்பு உணர்வு (Protection) ) போன்ற உணர்வுகளையும் அதனை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய சிந்தனைகளையும் தனிமனிதனுக்குள் “குர்ஆன் சுன்னா அடிப்படையில்” ஒழுங்குபடுத்தும் வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் “ஒரு வாழ்க்கைச் சித்தாந்தம்” என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரவேண்டும்.

இவ்வாறு சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு முஸ்லிமின் உணர்வையும், சிந்தனையையும் இஸ்லாமிய வரையறைக்குள் வைத்துக்கொண்டு வாழ்வில் இஸ்லாத்தை கடைப்பிடித்து ஒழுகிட அதற்கான வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு மனிதனது வாழ்வொழுங்கை (அரசியல், சமூகவியல், பொருளியல் மற்றும் கல்வி முறைமைகள் (Systems)) நடைமுறைப்படுத்த அவசியம் அரசு இருக்கவேண்டும். ஏனெனில் இதனை நடைமுறைப்படுத்த அவசியம் அதிகாரம் தேவை.

ஒரு நாட்டினது அரசு குப்ரிய சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்டு அச்சிந்தனையை அடிப்படையாக கொண்ட அரசியல், பொருளியல், சமூகவியல் மற்றும் கல்விஒழுங்கை நடைமுறைப்படுத்தும் வேளையில் ஒரு முஸ்லிம் தனது தனிப்பட்ட வாழ்வை குர்ஆன் சுன்னாவின்படி முடிந்தளவு ஒழுங்குபடுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் இஸ்லாமிய சரீஆவை அவனால் அமுல்படுத்த முடியாது என்பது ஒரு பொதுவான உண்மை.

இந்நிலையில் அவனது வாழ்வில் ஹறாம் ஹலாலை பின்பற்றி வாழ்வது ஒரு சவாலாக மாறிவிடும். அவன் வாழும் சமூகம் அவ்வரசினால் அச்சுறுத்தப்படும் நிலைக்குத் தல்லப்படுவான். இதனை இன்று நாம் இலங்கை போன்ற சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாட்டில் உணர ஆரம்பித்துவிட்டோம். இப்போது விட்டுக்கொடுப்பை நோக்கி முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

“தாடியும் தொப்பியும், ஜூப்பாவும்” முஸ்லிம் சமூகத்துக்குள் வளர்ந்து வருவது அச்சுறுத்தலாக உணரப்படுகிறது. முஸ்லிம்களுக்கு என “தனியான வங்கிமுறைகளும், ஹலால் முறைகளும்” அச்சுறுத்தலாக உணரப்பட்டு முஸ்லிம் சமூகம் இலங்கைச் சமூகத்தில் இருந்து பிரிந்துவிடும் அபாயமாக இன்று உணரப்படுகிறது. பெண்கள் மத்தியில் “அபாயா மற்றும் நிகாப் கலாச்சாரம்” அதிகரிக்கும் போது அதுவும் பாரிய அச்சுறுத்தலாக உணரப்பட்டு அதற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனும் போக்கு இன்று இலங்கையில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இது பொதுவான ஒரு அம்சமாக இன்று உலகில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

முஸ்லிம்கள் இவ்வாறு ஒரு அரசினது “அரசியல், பொருளியல் மற்றும் சமூகவியல் ஒழுங்கிற்கு” மாற்றமான “இஸ்லாமிய ஒழுங்கை நோக்கி” நகரும்போது இவ்வாறு ஏற்படுகிறது. அத்துடன் முஸ்லிம்களை “தீவிரவாதிகளாகவும் அவர்களது சரீஆ அடிப்படையிலான வாழ்வொழுங்கு கொச்சைப்படுத்தப்படும் நிலையை நோக்கியும் கோசங்களும், அழைப்புக்களும் குப்ரிய சமூகத்தினுள் விதைக்கப்பட ஆரம்பித்து விட்டது. அவ்வாறாயின் இதனை நாம் எவ்வாறு எதிர்கொண்டு பாதுகாக்க முடியும்?

இதற்கு இஸ்லாம் உலகில் ஒரு முன்மாதிரியான தலைமைத்துவத்தை கொண்டு உலகில் ஒரு சக்தியாக நிலைபெற்றிருக்க வேண்டும். அது நபி வழியிலான ஒரே இஸ்லாமியத் தலைமையாக இருக்கவேண்டும். இன்று அதனை நாம் இழந்துள்ள நிலையில் அதன் மீள் உருவாக்கத்திற்கு உழைக்க பாடுபட கடமைப்பட்டுள்ளோம். அதுவே இஸ்லாத்தை முழுமையாக, வாழ்வின் அனைத்துத்துறைகளிலும் எடுத்து நடக்க வழிவகைகளை ஏற்படுத்தித்தரும் என்பதனை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் இலங்கையில் “இஸ்லாத்தை ஒரு மாற்றீட்டு வாழ்க்கை முறையாக, வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்கு படுத்தும் வாழ்கைச் சித்தாந்தமாக” தஃவாச்செய்து பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்துவோம். இதுவே நபி (ஸல்) மக்காவில் சிறுபான்மையாக வாழ்ந்த போது அவர்கள் செய்த மிக உண்ணதமான தஃவாவாகும்.

மேலும், முஸ்லிம் உம்மத்தில் ஒரே இஸ்லாமியத் தலைமையாக இருக்கவேண்டும், அதுவே முஸ்லிம்களது கண்ணியம் மற்றும் பாதுகாப்பு என்பது குறித்த “ஹதீதுகளையும்” “இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும்” நாம் அவசியம் கருத்திற்கொண்டு ஆக்கபல தஃவா முன்னெடுப்புக்களை மேற்கொள்வோம்!

அபூ ஹூரைரா (றழி) இடம் இருந்து அஃராஜ் அறிவிக்கிறார்கள்.
“நிச்சயமாக இமாம் என்பவர் கேடயமாவார். அவருக்கு பின்நின்று மக்கள் போர்புரிகிறார்கள். இன்னும் அவரைக்கொண்டே மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.” (முஸ்லிம்)

மேலும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்)அவர்கள் தனது அல் மவ்சூஆ அல் அக்தியா என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்!
'இமாம் (கலீபா) நியமிக்கப்படாவிட்டால் மக்களுடைய விவகாரங்களில் பித்னா ஏற்பட்டுவிடும்.'

மேலும், இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
'நிச்சயமாக கிலாபா என்பது மார்க்கத்தின் தூண்களில் ஒரு தூணாகும் அதைக்கொண்டுதான் முஸ்லிம்களின் ஆற்றல் உறுதிபெறும்'

மேலும், இப்னு தைமியா தனது அஸ்ஸியாஸா அஷ் ஷர்இய்யா எனும் நூலில் இவ்வாறு கூறுகிறார்கள்.
'மக்களின் விவகாரங்களில் பொறுப்பேற்கும் ஒரு தலைமைத்துவம் அமைவது கடமைகளில் மிகவும் தலையாய கடமையாகும். இல்லாவிடில் தீன் என்பது நிலைநாட்டப்பட முடியாத ஒன்றாகிவிடும்

Mar 24, 2014

அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .



இனத் துவேச துரோக வரிகளில்
எனக்கும உன் அடக்கு முறை
அடிமை சாசனம் தயார்தான்
என்பது நான் அறிந்ததே !

சிறுபான்மை நசுக்களை அவசியமாக்கி
பெரும்பான்மை சுகம் காட்டுவதில்தான் - உன்
ஜனநாயக பெயர் தாங்கி வாக்கு வங்கிகளுக்கு
கொளுத்த இலாபம் என்பது அறிந்த வரலாறே !

காலம் காலமான இந்த சதிகளில்
நேற்று 'எல்லாளன்' தெரியாத அரசியலை
'துட்டகைமுனுவின்' வரலாற்றில்
அநீதமாய் ஊடுருவி கற்றுக் கொடுத்தீர்கள் !

விளைவு மகாவலியை விட
இங்கு ஒரு இரத்த ஆறு
முப்பது வருடங்கள் பேய்த்தனமாக ஓடியதே !
இன்னுமா தாகம் தீரவில்லை !

அச்சுறுத்தும் உன் கோஷங்களுக்கு அஞ்சி
அடிமைப் பட்டையை நெற்றியில் இட்டு
நீ கேட்கும் விலையில் தன்மானத்தை விற்க
தரங்கெட்ட பிண்டமல்ல - நான் முஸ்லிம் .

உன் நிகழ்கால நகர்வுகளில் போதி மரத்திலும்
அந்த இந்துத்துவா அல்லவா பளிச்சிடுகிறது !
அதே சீருடை காவி அழிப்புப் பனி ஒரே பாணி
அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .

http://khandaqkalam.blogspot.ae/2012/12/blog-post_7.html#more

'பெண்' எமது புரிதல்களுக்கு அப்பால் !!!

" அந்த குறிப்பிட்ட மரத்தை மட்டும் நெருங்காதே. என்ற இறைவனின் கட்டளையை சாத்தான் மறக்கடித்தான் .அவனது ஆசை வார்த்தைகளில் ஆதாமும் (அலை ) ,ஏவாளும் (அலை ) ஏமாந்தது உண்மை . இருந்தும் அந்த முதல் பாவத்தை நோக்கி ஆதத்தை (அலை ) ,ஏவாள் (அலை ) தூண்டினாள் என குத்திக் காட்டுவது ஆண் ஆதிக்க அராஜஹம் இல்லையா!? அப்படியானால் இந்த ஆதி வரலாற்றில் இருந்தே பெண்கள் மீதான ஆணிய அடக்குமுறை தொடங்கியதா !?
இப்படி ஒரு சகோதரி என்னிடம் கேட்டாள் ! பெண் இனத்தின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் கயமை மிக்க இத்தகு வரலாற்றுப் புரிதல்களால் காலாகாலமாக பெண்கள் ஒரு ஈனப்பிறவியாக பார்க்க கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது எனக்கும் புரிந்தது . ஆனால் உண்மை என்ன ?
பெண்ணின் படைப்பிலக்கணம் மார்க்கத்தின் அடிப்படையில் புரியாமல் சந்தர்ப்ப வாத குற்றத்தை சுமத்தி நிற்பது ஒரு மகா அநியாயமே .முதலில் படைக்கப்பட்டது ஆதம் (அலை ) இவர் ஆண் .மண்ணிலிருந்து படைக்கப்பட்டார் .பின் ஏவாள் (அலை ) எனும் பெண் படைக்கப்பட்டது எதிலிருந்து !? இந்த இடத்தில இருந்தே வாத விவாதங்களுக்கு அப்பால் உள்ள ஒரு இயற்கையின் உண்மை புரியப்பட வேண்டும் .அதுதான் ஆதத்தின் (அலை ) விலா எலும்பில் இருந்தே ஏவாள் (அலை ) எனும் பெண் படைக்கப்பட்டாள் என்பதே இறை வேதம் காட்டி நிற்கும் அடிப்படை .
அதாவது பெண் என்பவள் பிறிதொரு கூறு அல்ல . ஆணின் ஒரு பாகம் .இந்த இடத்தில இருந்தே ஆணுக்கும் ,பெண்ணுக்குமான பொதுச் சுதந்திரத்துக்கான அடிப்படை அரசியலை இறைவன் வகுத்து விடுகிறான் .விடயத்தை இப்படி புரியாமல் அவளை மட்டுப்படுத்துவதும் ,கட்டுப்படுத்துவதும் மகா தவறுகளே .
இன்னும் ஆணுக்கும் ,பெண்ணுக்குமான வாழ்வியல் ஒழுங்கையும், சட்ட திட்டங்களையும் காட்டித் தரும் தகுதியும் இறைவன் ஒருவனுக்கே உண்டு . அவன் படைத்ததால் கட்டளையிடும் தகுதி அவனுக்கு மட்டுமே உண்டு . இதை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது .ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் என்ற இயற்கையின் நியதியை தவிர்ப்பதோ ,மாற்றுவது மிகப்பெரிய குற்றம் .
எனவே பெண்ணை இழிவு படுத்தி பார்க்கும் ஆண் ,அடிப்படையில் தன்னையே இழிவு படுத்தி பார்க்கிறான் என்பதே உண்மை ."உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே ." எனும் இறை தூதர் (ஸல் ) வாக்கு சொல்லி நிற்கும் உண்மை யாதெனின் ,ஒரு ஆணின் உண்மை உருவத்தை காட்டி நிற்கும் பண்புக் கண்ணாடியாக பெண்ணே இருக்கிறாள் என்பதே . புரிந்தால் (குறிப்பாக மார்க்கத்தின் பெயரால் )பெண்ணை அவமதிக்கும் ஆண்கள் தம் செயல்களை சற்று அடக்கி வாசிக்கட்டும் 

காரத்தைப் பாருங்கள் கடுகின் பருமனைப் பார்க்காதீர்கள்




திறமைக்கும் அரசியல் சாணாக்கியத்திற்கும் வயதும்

அனுபவமும் ஒரு காரணியல்ல . திறமை இருந்தால்

அனுபவத்தையும் சாதகமாக வளைத்துப் போடலாம்

என்பதன் வரலாற்று ஆதாரமே கீழ் வரும் சம்பவமாகும் .

எமது முஸ்லீம் உம்மத் இன்னும் பல

முஹம்மத் அல் பாதிஹ், தாரிக் பின் சியாத் , முஹம்மத் பின்

காசிம், போன்றவர்களை சுமந்தே உள்ளது. எதிர் கால ரோமின்

வெற்றிக்காகவும், பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூத

சத்துருக்களை சம்ஹாரம் செய்யவும், முழு முஸ்லீம் உம்மத்தை

பாதுகாக்கவும் , காத்துக் கொண்டிருக்கிறார்கள் . 'இன்ஷா அல்லாஹ் '.

மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நியமித்து விட்டு அணைத்துப் பொருப்புக்களிலிருந்தும் ஒதுங்கி தூர இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார். முஹம்மதோ அறிவு, வால் வீச்சு, குதிரை ஓட்டம், போர் பயிற்சி என்று அணைத்திலும் சிறந்து விளங்கினும் போதிய அனுபவமற்றவனாக இருந்தான்.

இந்நிலையில் பதவி ஏற்று சில மாதங்கள் ஆவதற்குள் ரோம பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பை மேற்கொண்டது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு 
மிகக்கடினமாக இருந்தது. எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தான். விரைவாக வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினான். தந்தையிடமிருந்து “இப்பொழுது நீ தான் கலீபா, படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் 
வர முடியாது” என்று பதில் வந்தது.

இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு இருந்தது. 

“ஆம் நான் தான் கலீபா
இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக வந்து 
படையை வழி நடாத்துங்கள்..!”

இந்த சிறுவன் தான் வரலாற்றில் சுல்தான் முஹம்மத் அல் பாதிஹ் என்று போற்றப்படும். நபிகளாரால் முன்னறிவுப்பு செய்யப்பட்டபடி கொன்ஸ்தாந்திநோபிலைரோமர்களிடமிருந்து கைப்பற்றிய மாவீரனாகும்.

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புச் செய்த அந்த 
ஹதீஸ் 
கொன்ஸ்தாந்திநோபில் நிச்சயம் வெற்றி கொள்ளப்படும். அதை வெற்றி கொள்ளும் தளபதி எவ்வளவு சிறந்த தளபதி..!, அதை வெற்றி கொள்ளும் படை 
எவ்வளவு சிறந்த படை..!” 

(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்- ஹதீஸ் இல:2918)

http://khandaqkalam.blogspot.ae/2012/12/blog-post_5103.html#more

Mar 22, 2014

சவுதி அரேபிய அரசை மிரட்டும் இரண்டு மந்திரங்கள் - “இஸ்லாமிக் கிலாபா” & “இஸ்லாமிக் எமிரேட்ஸ்”


சவுதி அரேபியாவின் நீதிமன்றம் 28 பேருக்கு சிறைத்தண்டனையை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தமை, மாட்சிமைமிகு ஆட்சியாளர்களிற்கு எதிரான கருத்துக்களை பரப்பியமையும், அவர்களிற்கு எதிராக செயற்பட்டமையும், பயங்கரவாத அமைப்புக்களிற்கு ஆயுத உதவி, நிதி உதவி என்பவற்றை வழங்கியமை, சிரியா ஈராக் ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற நாடுகளிற் போராளிகளை அனுப்பியமை போன்ற பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது.

அன்றைய ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க ஆயுதங்களை உஸாமா பின் லாதின் போன்ற பல செல்வாக்குமிக்க சவுதியர்கள் ஜித்தா கடற்தளம் ஊடாக ஆப்கானிஸ்தானுள்ளும், பாகிஸ்தானுள்ளும் விநியோகம் செய்த போது அதனை அனுமதித்த சவுதிய அரசு தான் அதே செயற்பாட்டினை மேற்கொண்ட இந்த நபர்கள் மீது தண்டனைகளை விதித்துள்ளது.

சிரியாவில் பஸர் அல்-அஸாத்தின் அரசிற்கு எதிராக போராடுவதற்கு F.S.A.-யின் போர்வலு போதாது என்ற C.I.A.-யின் ரிப்போட்டிற்கு அமைய பல இஸ்லாமிய குழுக்களை ஜிஹாத் என்ற பெயரில் கட்டாருடனும் அமெரிக்காவுடனும் சேர்ந்து ஹோம்ஸில் தரையிறங்கியதும் இதே சவுதி அரேபிய அரசே. அவர்களிற்கான ஆயுதம், நிதி, போராளிகள் போன்றவர்களை வழங்கியது. மார்க்க அடிப்படைவாத முத்தவாக்கல் சிரிய ஜிஹாத்திற்கு ஆள்திரட்டி அனுப்பிய போது அதனை அனுமதித்த சவுதி அரசு இப்போது யாரெல்லாம் சிரியாவிற்கும், ஈராக்கிற்கும், யெமனிற்கும், லிபியாவிற்கும் அங்குள்ள முஜாஹித்களிற்கு உதவ பகிரங்கமாக செயற்பட்டார்களோ அவர்களையெல்லாம் இப்போது பிடித்து சிறையில் தள்ளியுள்ளது.

சிரியாவில் ஆப்கானிஸ்தான் போன்று மண் விடுதலை என்ற இலக்கில் இருந்து மாறி “இஸ்லாமிய கிலாபா”, “இஸ்லாமிய எமிரேட்ஸ்” என்ற இரு சிந்தனைகளின் பாதையில் போராட்டம் வழி நடாத்தப்பட்ட போது விழித்துக்கொண்டது அரேபியாவின் மன்னராட்சி மட்டுமல்ல, மேற்கின் ஜனநாயகம், ஸியோனிஸம், பிறீமேஷ்ன் என பல தாகூத்திய சக்திகளும் கூட. தங்கள் மன்னராட்சியின் ஆயுள் இதனால் பாதிக்கப்படும் என்று உணர்ந்தவுடன் இந்த கைதுகளும் தண்டனைகளும் நிகழ்ந்துள்ளன.

13 பேர் கொண்ட குழு ஒன்றை சவுதி அரசு கைது செய்த போது அதில் 08 சவுதி அரேபியர்கள், 02 ஜோர்தானியர்கள், 02 சிரியர்கள், 01 எகிப்தியர் அடங்கியிருந்தனர். இவர்களிற்கு 03 முதல் 14 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அல்-காயிதாவின் அனுதாபிகள் எனும் ஸிம்பதைசர்ஸ், அவர்களின் முகாம்களிற்கு நிதி வழங்கியவர்கள் என பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது.

இவற்றை விட “மனி லோன்டரிங்” செயற்பாடுகளில் ஈடுபட்ட சவுதியர்கள் பலரையும், உலகின் ஏனைய பிரதேசங்களில் நடக்கும் இஸ்லாமிய போராட்டங்களிற்கு சவுதி அரேபியாவில் நிதி திரட்டி அதனை சட்டவிரோதமான முறையில் அந்தந்த இடங்களிற்கு அனுப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சவுதி அரேபியர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சவுதி அரேபியன் பிரஸ் ஏஜென்ஸி உறுதி செய்துள்ளது.

சில வாரங்களிற்கு முன்பு தான் சவுதி அரேபியா பயங்கரவாத இயக்கங்கள் என்ற பெயரில் சில அமைப்புக்களை தடைசெய்து கறுப்பு பட்டியலில் சேர்த்தது. குறிப்பாக அல்-காயிதா, இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம், ஹிஸ்புல்லாஹ், யெமனிய அல்-ஹுதி அமைப்பு போன்றவையும், சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாகாணத்தில் செயற்படும் ஹிஸ்புல்லாஹ் சார்பு சவுதி ஷியாக்கள், அது போலவே அல்-காயிதாவின் குடையின் கீழ் இயங்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுமாகும்.

இப்போது சவுதி அரேபிய அரசு தனது சிம்மாசனத்தை பாதுகாக்கும் பொருட்டு வேட்டையை ஆரம்பித்துள்ளது. ஆனால் சாதாரண சவுதியர்கள் இது பற்றி உணராமல் வழக்கம் போல் வாழ்கின்றனர். புட்போல் மெட்சுகளும், சொப்பிங் மோல்களும் இருந்தால் போதுமே. அது தானே உலகம் அவர்களிற்கு.




http://khaibarthalam.blogspot.ae/2014/03/28.html

Mar 21, 2014

ரஷியாவுடன் முறைப்படி இணைந்தது கிரீமியா



ரஷியாவுடன் கிரீமியா பகுதி முறைப்படி இணைக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். இதையடுத்து ரஷிய வரைபடத்தில் கிரீமியா சேர்க்கப்பட்டது.

பின்னர் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ""மக்களின் இதயம் மற்றும் நினைவுகளில் கிரீமியா பகுதி ரஷியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வந்தது'' என்றார்.

இதன்மூலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய எல்லை வரைபடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழவுள்ளது.

ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ள கிரீமியாவை, நாட்டின் ஒரு பகுதியாக அங்கீரிகரிப்பதற்காக புதின் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று குறித்து ரஷிய நாடாளுமன்றத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க மறுத்ததால் எதிர்க்கட்சிகள் அளித்த நெருக்கடியைத் தொடர்ந்து தலைநகர் கீவை விட்டு உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் வெளியேறினார்.

அதையடுத்து கிரீமியாவை ரஷியப் படை கைப்பற்றியது. கிரிமீயாவை ரஷியாவுடன் இணைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 97 சதவீத கிரீமிய மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், இந்த வாக்கெடுப்புக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையும் விதித்துள்ளன.

ஜப்பான் பொருளாதாரத்தடை: இதனிடையே, ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா விடுத்துள்ள அறிக்கையில், "உக்ரைனில் இருந்து கிரீமியா பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அது அந்நாட்டின் இறையாண்மையை மீறிய செயல்.

படை பலத்தின் மூலம் ரஷியாவின் முயற்சியில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. அந்த நாட்டின் மீது செவ்வாய்க்கிழமை முதல் சில வகை பொருளாதாரத்தடை விதிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான விசா தளர்வு, முதலீடுகள், விண் வெளி ஆராய்ச்சி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்படுகிறது. ரஷியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றன''

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் இணைவதற்கு கிரிமியாவில் உள்ள 97 சதவீதம் பேர் விரும்பியதையடுத்து விரைவில் ரஷ்யாவுடன் கிரிமியா இணைகிறது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த இணைப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளன. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source:thenee.com

Mar 20, 2014

உங்கள் பொன்னான வாக்குகள்!



இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது!
செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுயர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்!
மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது!எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்!
வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!
யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்?
ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா?
ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா?
இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை!
அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே.
பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிற்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது?
இதோ அல்லாஹ் சொல்கிறான்.
”யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான்.” (அல் குர்ஆன் 4:85)
நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)
வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது?
அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.
நன்றி: பி.ஜே., அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989
thanks.thalaimaithuvam.blogspot.in

Mar 19, 2014

இஸ்லாத்தின் போராட்டம் வரலாற்று வரிகளில் இருந்து.............!


சிரியா தொடர்பில் இன்றைய சில தகவல்களில் சற்று கலக்கமடைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்காக இது மீள் பதிவிடப்படுகிறது . 'உஹத் ' களத்தின் கசப்புகள் 'பத்ரின்' இனிப்பை மறக்கடித்தன ! மொங்கோலிய ஆக்கிரமிப்பு இனி ஒரு இஸ்லாத்தின் எழுச்சி வரலாறா !? என்ற அவ நம்பிக்கையை கொடுக்க ஜன் ஜலூத்தில் சத்தியத்தின் வீரர்கள் அல்லாஹ்வின் உதவியோடு அந்த அவ நம்பிக்கையை கபுரில் போட்டு புதைத்தனர் ! வெற்றி தோல்வி தொடர்பான நம்பிக்கை யார் வசம் செல்லவேண்டும் !?என்ற உண்மையை புரிந்து தங்களின் பங்களிப்பையும் ,அர்ப்பணிப்பையும் முஸ்லீம் உம்மாஹ் செய்ய வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும் .

# அல்லாஹ் நாடியவரை உங்களிடையே நபித்துவம் இருக்கும் .அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .

# பிறகு நபித்துவத்தின் வழியில் 'கிலாபா ' ஆட்சி முறையாக அது அமையும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .

# பிறகு அது கடினமான மன்னராட்சி முறையாக அது அமையும் ;அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .

# பிறகு அது அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சியாக அது அமையும் .அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .

# பின்னர் (மீண்டும் ) நபித்துவ வழிமுறையில் கிலாபா ஆட்சி ஏற்படும் என்று கூறி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அமைதி காத்தார்கள் .
அறிவிப்பவர் :- ஹுதைபா (ரலி )
ஆதாரம் :- முஸ்னத் அஹ்மத்

முஸ்லீம்களைப் பொறுத்தவரை வரலாற்று நிகழ்வுகளை இரத்தினச் சுருக்கமாகவும் மிகத் துல்லியமான தீர்க்க தரிசனமாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் )குறிப்பிட்டிருக்கும் ஒரு முன்னறிவிப்பே இந்த செய்தியாகும் .

"அவர் தம் இச்சைப்படி எதையும் பேசுவதில்லை அது அவருக்கு 'வஹி ' மூலம் அறிவிக்கப் பட்டதே அன்றி வேறில்லை " என்ற அல்குர் ஆன் வசனப் பிரகாரம் முஸ்லீம் உம்மாவோடு, மனித சமூகத்தோடு அல்லாஹ்வின் தூதரது வார்த்தைகளால் அல்லாஹ் (சுப) சொல்லும் செய்தியானது , ஒரு தூய நிலையில் இருந்து படிமுறையாக கடந்து வந்த கசப்பான கடந்த காலத்தையும் ,எதிர்காலத்தின் மிகத் தெளிவான சுப சோபனமும் தான் என்றால் அது மிகையான கருத்தல்ல .அந்த வகையில் உண்ணிப்பாக நாம் அவதானித்தால் இந்தக் கால நகர்வுகளின் தொடரில் இன்று எஞ்சி இருப்பது தூய கிலாபத்தின் மீள் வருகையில் சுதந்திரமான வஹி வழிகாட்டலின் அமுலாக்கம் தான் .

வஹியின் முன்னறிவிப்பு என்பது முஸ்லிமின் முயற்சியை பிற்போடும் ,அல்லது நடந்தே தீரும் என்ற எதிர்பார்ப்போடு கைகட்டி காத்திருக்கும் ஒரு விடயமாக மாறி விடக் கூடாது .சத்தியத்தின் உயர்சிக்கான உயர்ந்த பட்ச முயற்சி என்ன ? தியாகம் என்ன ? என்பது பற்றி நாம் இறைவனால் கேள்வி கேட்கப் பட மாட்டோம் ! என இந்த நபி மொழி மூலம் ஒரு முஸ்லீம் முடிவெடுத்தால் அதைவிட மிகப்பெரிய அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது .

வஹியின் முன்னறிவிப்புகள் பற்றி அல்லாஹ்வின் தூதரோ (ஸல் ) எமதருமை சஹாபாக்கள் , தாபியீன்கள் , தபஹ் தாபியீன்கள் , இமாம்கள் ஆகியோரது நடவடிக்கைகள் இவ்வாறு அமையவில்லை . மாறாக குறித்த முன்னறிவிப்பில் தமது பங்களிப்பு ,அதற்கு இடைப்பட்ட கால சவால்களை எதிர்கொள்வது தொடர்பான ஆக்க பூர்வமான முயற்சி ,ஆவல் ,அதற்கான போட்டி , ஆழமான பிரார்த்தனை என்பவற்றை உள்ளடக்கியே அவர்களது வாழ்வு அமைந்திருந்தது .

# கந்தக் போரில் ஷாம், பாரசீகம் ,எமன் என்பன இஸ்லாத்தின் கொடியின் கீழ் வரும் என்ற முன்னறிவிப்பு அல்லாஹ்வின் தூதரால் (ஸல் ) விடப்பட்டது .
(பரா இப்னு ஆசிப் (ரலி ) , நசயி, அஹ்மத் )

எதிரியின் ஒரு கொடூரமான முற்றுகை நிலையில் பட்டினியோடும் , குறைந்த பட்ச ஆயுத வலிமையிலும் நின்று சொல்லப்பட்ட இந்த முன்னறிவிப்பு அந்த சஹாபாக்கள்மத்தியில் பரவியபோது அவர்களது பார்வை இது விடயத்தில் தம்மை பங்காளியாக்கும் போராட்ட உணர்வையே ஏற்படுத்தியது . சத்தியத்தின் கரங்களால் குறித்த பகுதிகளை தட்டித் திறக்கும் கடின முயற்சிக்கு தமது உள்ளக் கதவுகளை தெளிவோடு திறந்தார்கள் என்பதும் காலத்தின் பரிணாமத்தில் அந்த வெற்றிகள் காலம் கடந்தவையாகவே கிடைக்கவும் பெற்றுள்ளதை வரலாறு காட்டி நிற்கின்றது .

# இதே போல இஸ்லாத்தின் முதலாவது கடற்படை தொடர்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) சுபசோபனம் கூறியபோது அதில் தானும் பங்காளியாக வேண்டும் என ஒரு சஹாபிப் பெண்மணி பிரார்த்திக்க கேட்ட வரலாறும் எம்மால் மறக்க முடியாதது . காலத்தால் நீண்ட பிந்தைய அவ்வரலாற்றில் அப்பெண்மணி அந்த படையில் பங்களிப்பு
செய்ததையும் எம்மால் மறக்க முடியாது.

# கான்ஸ்தான்டிநேபல் வெற்றி பற்றிய சுப செய்தியின் முயற்சிகள் மிகத் தெளிவாகவே அமீர் மூஆவியா (ரலி ) அவர்களின் காலப்பகுதியில் தொடங்கப் பட்டாலும் அதன் வெற்றிச் செய்தி பைசாந்திய பேரரசு பலம் பொருந்திய நிலையில் இருந்த போது ஒரு பலத்த போராட்டத்தின் முடிவில் மாவீரர் முஹம்மத் அல் பாதிர் பெற்றுத் தந்ததை எம்மால் மறக்க முடியாது.(ஹிஜ்ரி 857, கி.பி 1453) அதுவரை இப்பாதையில் கொடுத்த இழப்புகள் சந்தித்த சோதனைகள் என்பது சொல்லில் வடிக்க முடியாதது .

# தாதாரியரால் இஸ்லாமிய சாம்ராஜ்யம் முற்றாகவே செயலிழக்கப் பட வைக்கப் பட்ட போதும் முஸ்லீம் உம்மா செயலற்றுப் போகவில்லை 'ஜன் ஜலூதில் ' அவர்களது இராணுவ வலிமை இஸ்லாமிய இராணுவத்தால் பதம் பார்க்கப் பட்டது . இன்னும் சில இஸ்லாமிய தா யிகள் துல்லியமான பிரச்சார நகர்வின் மூலம் அந்த மொங்கோலிய அதிகாரத்தை அசைத்து மீண்டும் இஸ்லாத்தின் கொடியை பாரினில் ஒரு சக்தி மிக்கதாக பறக்க விட முயற்சி செய்தனர் 'அல் ஹம்துலில்லாஹ் ' வென்றனர் .

வஹியை வார்த்தைகளாக நம்புவதை விட வாழ்க்கையாக்குவது தொடர்பில் எம் முன்னோர்ர்கள் தவறு விட்ட சந்தர்ப்பம் எப்போதும் ஒன்றே ஒன்று தான் அது 'உலகத்தை நேசிப்பதும் மரணத்தை வெறுப்பதும் என்ற அடிப்படையில் தம்மை மாற்றிய போதே நிகழ்ந்தது . தம்மை மறு சீரமைத்து இறைவனை திருப்தி பொருந்திய முகத்தோடு சந்திக்க திட சங்கற்பம் பூண்ட போது எதிரி அஞ்சினான் . இப்போது சுமைகள் சுகங்களாகியது. சுவனம் எல்லையாகியது .

இன்று போலவே சதிமுகங்கள் சூழ இருந்தன யூதர்கள் ,முனாபிக்குகள் என முடிச்சி மாறி கூட்டங்கள் பசப்பு வார்த்தைகளாலும் , உதவும் கரங்கள் போலவும் காட்டி நின்று கழுத்தறுக்கப் பார்த்தனர் .இந்த சில்லறை சித்தாந்திகளை பெரிது படுத்தி இஸ்லாமிய சுடர் முன் நாளை எப்படியும் விழப் போகும் விட்டில் பூச்சிகளுக்கு தமது கருத்து வீட்டில் கௌரவ தொட்டில் கட்டி எதோ பூதம் போல் கட்டும் ,அச்சத் தாலாட்டுப் பாடும் தளங்களை உடையோர் சற்று இது விடயத்தில் சிந்திப்பது நலம் .

யூதனின் கொப்பி, கிறிஸ்தவனின் பேனா , படிப்பது இஸ்லாமா !? என சாதனங்களையும் , சித்தாந்த நடத்தைகளுக்கும் இடையில் வித்தியாசம் காணத் தெரியாத சிலருக்கு இன்றைய மத்திய கிழக்கின் நிகழ்வுகள் குறிப்பாக சிரிய நிகழ்வுகள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை . மஜூசிகளின் மஞ்சனீக்கை எடுத்து பாரசீக கோட்டையை தாக்கினார்கள் என்பதற்காக முஸ்லீம்களை நெருப்பு வணங்கிகளாக சித்தரிப்பது மிகத் தவறானது . மேலும் மேற்கின் உதவி என்ற போலி நாடக பிரச்சார யுத்தத்தை அவன் காட்டும் போலி ஆதாரங்களோடு மீடியாக்கள் வெளியிட கிளிப்பிள்ளை பாடமாக அதை எடுத்தாள நினைப்பதும் மிகத் தவறானது . சர்வதேச முஸ்லீம் உம்மாவின் சகோதரப் பார்வை சந்தேகப் பார்வையாக மாறவேண்டும் என்பதே சியோநிசத்தினதும் , எல்லா குப்ரிய ஆதிக்க சக்திகளதும் ஒரே எதிர்பார்ப்பாகும் .

அரசியல் முஸ்லீம் உம்மத்தின் அடிப்படை இபாதத் ! (முக நூல் பதிவுகளில் இருந்து ...)


ரிஸாலத் - நுபுவ்வத் என்பதில் ஆட்சியும் அடக்கம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில் இருந்தும் நாம் அறியலாம்.

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.
நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்தளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள்.

நூல் : அஹ்மத் 17680.


இந்த ஹதீஸில் ஆட்சி முறையைப் பற்றி நபியவர்கள் அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள் எனினும் தன்னுடைய ஆட்சி முறையைப் பற்றிக் குறிப்பிடும் போது, நபித்துவம் இருக்கும் என்றே குறிப்பிடுகின்றார்கள். எனவே அல்லாஹ்வின் திருத்தூதர் என்ற பெயரைத் தவிர வேறு ஆட்சி முறைகளைக் குறிப்பிடும் எந்த அடை மொழியிலும் நபியவர்களை அழைப்பது சரியல்ல என்பதை இதில் இருந்து உணரலாம்.

இவ்வாறு ரிஸாலத்தை (அல்லாஹ்வின் தூதர் எனும் தகுதியை) அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாத்திரம் ஆட்சி செலுத்தவில்லை. இஸ்ரவேல் மக்களையும் நபிமார்கள் இப்படித் தான் ஆட்சி செலுத்தியுள்ளனர்.

இஸ்ரவேலர்களை நபிமார்களே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஒரு நபி மறைந்ததும் இன்னொரு நபி அவருக்குப் பதிலாக பொறுப்பு வகிப்பார். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது. கலீஃபாக்கள் உருவாவார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நபியவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! (அது தொடர்பாக) எங்களுக்கு என்ன கட்டளையிடப் போகிறீர்கள் எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள், அவர்களில் முதலில் யாரிடத்தில் உடன்படிக்கை செய்தீர்களோ அவரிடத்திலேயே அதை நிறைவேற்றுங்கள். அவர்களுடைய கடமையை அவர்களுக்குச் செலுத்தி விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் விசாரனை செய்வான் என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : புகாரி 3455


இவ்விரு ஹதீஸ்களும் ரிஸாலத் (அல்லாஹ்வின் தூதர் எனும் தகுதி) என்பதில் ஸியாஸத் (அரசியல் தலைமை)யும் அடங்கும் என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன.


இஸ்லாமிய ஆட்சி என்பது....?

வாழ்வில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை குர்ஆன் சுன்னாவில் இருந்து எடுத்து மனிதனது வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் ஆட்சிமுறைதான் இஸ்லாம் கூறும் ஆட்சிமுறையாகும்!

இஸ்லாம் ஆட்சிசெய்யப்படுவதென்பது குறித்த தேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைய முடியாது. அது தாவாமூலமும் ஜிஹாத் மூலமும் அவ்வரசினால் முன்னெடுக்ப்படவேண்டும். அத்துடன் ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினை என்றால் அந்த ஆட்சியாளன் அது குறித்து தீவிரமான நடவடிக்கை எடுத்து குறித்த இஸ்லாத்தின் எதிரியுடன் கடும்போக்கை கையாளவேண்டும். மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளனை பதவிநீக்கம் செய்யும் வழிமுறையாக காலவரையறை என்பது இஸ்லாத்தில் கிடையாது.

நான்கு வருடத்திற்கு ஒருமுறை விரும்பியவரை தெரிவுசெய்து ஆட்சிசெய்வது என்பது எமது வழிமுறை இல்லை. ஆட்சித் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரிடம் தெளிவான குப்ர் வெளிப்படும் வரை அந்த ஆட்சியாளரை பதவி நீக்கம் செய்ய முடியாது. அவ்வாட்சியாளர் இன்று முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போது கண்டுகொல்லாமல் மேற்கோடும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளோடும் கைகுழுக்கியபடி முஸ்லிம்களது விவகாரங்களை கவனிக்க முடியாது.

அவ்வாட்சியாளர் எதிரிகளுடன் கண்டிப்பான இராஜதந்திர முறைப்படி நடந்து உம்மத்தை மீட்கவேண்டும். இவை யாவற்றையும் இந்த பல்கட்சி முறைகளுடன் கூடிய எதிர்கட்சி ஆளும்கட்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட மனிதன் சட்டத்ததை ஆக்கும் சட்டசபை வடிவமைப்புக்குள் இருந்து கொண்டு நிறைவேற்ற முடியாது. நிறைய விட்டுக் கொடுப்பபுடன் பகுதியாக தீனுல் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியுமே தவிர முழுமையாக இஸ்லாத்தை ஆளுகை நிலைக்குள் வைத்துக்கொள்ள முடியாது.

இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அமுலாக்கப்படத் தேவையான அரசு கிலாபா அரசு மட்டுமேயாகும் . இவ்வரசு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் நபி வழியில் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதுவே இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சவால்களுக்கும் முகம் கொடுக்கும் அரசாகும்.

இவ்வரசு முஸ்லிம் நாட்டு இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்படுவது நபி வழியாகும். அவ்வாறு நிறுவப்பட்டால் அவ்வரசு இன்றுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான தேசிய எல்லைகளை களையச் செய்யும். முஸ்லிம்களை உம்மத் எனும் சகோதரச் சிந்தனையால் இணைக்கும். பொது எதிரியை எதிர்கொள்ளும். தீனுல் இஸ்லாத்தை முழுமையான தனது அரசின் எல்லைக்குள் அமுல்படுத்தும். வெளிநாட்டு கொள்கை மூலமும் ஜிஹாத் மூலம் அவ்வரசு தீனுல் இஸ்லாத்தை உலகமுழுவதிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

இன்றைய முஸ்லிம் இராணுவங்கள் கற்றவேண்டிய பாடங்கள்?

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் கேடயமாக இருந்தது முஸ்லிம்களது இராணுவம். அது ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றில் மேற்கொண்டதன் பயனாகவே மதீனாவில் நிறுவிய இஸ்லாம் மிகப்பெரும் இரு பேரரசுகளான ரோம் மற்றும் பாரசீகத்தை தோற்கடிக்கும் சக்தியை பெற்று இஸ்லாத்தை நிலைநிறுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கியது என்பது எமது வீரவரலாறு. ஆனால் இன்று எமது உம்மத்தினது இராணுவம் 4.7 மில்லியனாக அமெரிக்க ரஷ்ய மற்றும் இந்திய இராணுவங்களின் தொகையிலும் அதிகமாக இருந்தும் எத்தகைய பங்களிப்பைச் செய்கிறது? அது இஸ்லாத்தின் எழுச்சியிலும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதிலும் இன்று நாம் இழந்துள்ள கிலாபத அரசை நிறுவுவதிலும் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?

நிச்சயமாக, இன்றைய எமது முஸ்லிம் இராணுவம் தமது தேசிய எல்லைக்கு அப்பால் இணைந்து தமது அமானிதமான இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்து இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுவுவதில் பங்களிப்பு செய்யும் அதி உன்னத காலத்தில் உள்ளது. இன்றுள்ள துர்பாக்கியமான நிலை யாதெனில் இன்றுள்ள முஸ்லிம் தலைமைகளால் தங்களது சொந்த நலனுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகவும் தொழிற்பட்டு இன்று முஸ்லிம்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய முஸ்லிம் இராணுவங்கள் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களையும் கொன்று குவிக்கும் கொடூர நிலைக்கு அவர்களது போக்கை மாற்றி வைத்துள்ளார்கள்.

இந்த இழிநிலையில் இருந்து எமது சகோதர இராணுவத்தினை மீட்டெடுப்பதற்கு நாம் பொறுப்புடனும் பக்குவமாகவும் தஃவத் கொடுத்து அவர்களை இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலன்களின் பக்கம் மீட்கவேண்டும். அத்துடன் இஸ்லாம் மீண்டும் ஒரு வல்லரசாக மாற்றப்படுவதிலும் குர்ஆன் சுன்னா வாழ்வின் அனைத்து துறைகளில் அமுலாக்கப்படுவதிலும் பாரிய பங்களிப்பை கோரி அவர்கள் மத்தியில் மிகப்பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இன்றைய முஸ்லிம் சகோதர சகோதரிகளிக்கு பாரிய பொறுப்புள்ளது.

ஒரு நாடு இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமாயின்...?

ஒரு நாடு இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமாயின் அங்கு இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் நிறுவப்பட்ட மனிதனுடைய அரசியல் பொருளில் சமூகவியல் கல்வி மற்றும் வெளிநாட்டு உறவுகளுடன் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு வழங்கப்படும் நிலையில் ஆட்சி நிகழ வேண்டும்.

அதன் ஆட்சியாளர் என்பவர் ஆட்சி புரிதல், ஆட்சி அதிகாரத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுதல் மற்றும் அஹ்காமுஸ் ஷரீஆவை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் உம்மாவின் சார்பில் அதன் பிரதிநிதியாக செயலாற்றுவார்.

இந்த இஸ்லாமிய ஆட்சியில் 4 விதிமுறைகள் இருக்கும்.

1.இறையாண்மை ஷரீஆவிற்குரியது. அது உம்மாவிற்குரியதல்ல.
2.ஆட்சி அதிகாரம் உம்மாவிற்குரியது.
3.கலீபாவை நியமனம் செய்யவேண்டியது அனைத்து முஸ்லிம்களின் மீது வாஜிபாகும்
4.இறைசட்டங்களை ஏற்று அமுல்படுத்துவது கலீபாவிற்குரிய தனிப்பட்ட அதிகாரம்.


அதே நேரம் இஸ்லாமிய அரசில் 8 ஆட்சியமைப்பு அம்சங்கள் காணப்படும்.

1.கலீபா
2.ஆட்சித்துறை உதவியாளர்
3.நிர்வாகத்துறை உதவியாளர்
4. அமீருல் ஜிஹாத்
5.மாகாண ஆளுநர்கள்
6.நீதித்துறை
7.அரசத்துறைகள்
8.மக்கள் ஆலோசனை மன்றம் (மஜ்லிசுல் உம்மா)


இஸ்லாத்தை ஒட்டுமொத்தமான நன்மையாக ஏவவேண்டும்..!

இன்று இஸ்லாம் அல்லாத வாழ்கைமுறை இன்றைய நவீன உலகில் நன்மையாக பல மேற்கினது ஊடகங்களால் ஏவப்பட்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மேற்கினது சிந்தனை மற்றும் வாழ்கைமுறைக்கு ஆட்பட்டு சீரழிவதனை நாம் காணலாம். அத்துடன் இஸ்லாம் மனிதவாழ்வில் பின்பற்றப்படாத நிலையில் இருப்பது மிகப்பபெரிய தீமை! இந்த தீமையை நாம் தடுக்கவேண்டும்.

தனிமனித வாழ்வில் தீமைகளை முடிந்தளவு தவிர்ந்து வாழ்ந்தலும் பொதுவாழ்வில் இஸ்லாமிய வாழ்வு அதன் சமூகவியல் பொருளியல் அரசியல் போன்ற துறைகளில் இல்லாது மேற்கினது வாழ்வில் சீரழிந்த நிலையில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் வாழும் துர்பாக்கிய நிலையில் இருந்து உலக மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு மிகப்பெரிய பொறுப்பு. இந்த தீமையை தடுப்பதற்கு இஸ்லாமிய உலக தலைமை - "கிலாபா" மீள உருவாக்கப்படவேண்டும்.

இகாமதுத்-தீன் (மார்க்கத்தை நிலைநிறுத்தல் ) பற்றிய சில புரிதல்கள் !


இகாமதுத் தீன் (மார்க்கத்தை நிலைநாட்டுதல் ) என்றால் என்ன? அதற்கான பாதையை அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) எவ்வாறு காட்டித் தந்துள்ளார்? இது விடயத்தில் ஒரு திட்டமிட்ட செயட்கிரமம் இருந்ததா ? அல்லது பல்வேறுபட்ட செயட்கிரமங்கள் பிரயோகிக்கப் பட்டதா ? இப்படி பல்வேறுபட்ட கேள்விகளை முன்வைத்தே இன்று இடம் பெறும் இஸ்லாமிய மறுமலர்ச்சி தொடர்பான செயட்களத்தை நோக்க வேண்டியுள்ளது .

அநேகமாமாக முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் இயங்கும் எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் இந்த வார்த்தையை சொல்லி நிற்கின்றன. அதன்படி இந்த இயக்கங்கள் எல்லாமே தாம் சுன்னாவின் வழி இயங்குவதாக மார்தட்டி நிற்கின்றன . அந்த அடிப்படையில் தமக்கான ஆதரவுத் தளத்தையும் ,ஆட் சேர்ப்பையும் மையப்படுத்திய அழைப்பை முன்வைத்து நிற்கின்றன .

இஸ்லாத்தை நிலைநாட்டுதல் என்ற பொதுக் கருத்தில் ஒன்று பட்டிருந்தாலும் ,பல்வேறு பாதைகளையும் ,வழிமுறைகளையும் இவை பேசி நிற்பதால் முரண்பாட்டு மோதலுக்கான காரணங்கள் இங்கு தோற்றம் பெற்று குழு நிலை போட்டியும் ஆரம்பித்து விடுகின்றது .அது இறுதியாக பலத்த சச்சரவுக்கும் ,உள்வீட்டு சண்டைகளுக்கும் , சகோதரத்துவ முறிவுக்கும் இட்டுச் செல்கின்றது . இதை எல்லாம் விட ஆபத்தான நிலையாக தம்மை சரிகாட்டி ஏனைய அமைப்புகளை வழிகேட்டு பட்டம் கொடுத்தும் .விடுகின்றனர் .

இகாமதுத் தீன் எனும் விடயத்தில் அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) சீறா மிக அவதானமாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் . அந்தவகையில் இஸ்லாமிய சரீயாவை சுதந்திரமாகவும் , தெளிவாகவும் பிரயோகிக்கத் தக்கதும் ,அமுல் படுத்தத் தக்கதுமான அரசியல் அதிகார வடிவமே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) காட்டித் தந்த இகமதுத் தீன் என்ற உண்மை புரிய வரும் .

இது விடயத்தில் அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) பார்வையும் ,நடத்தையும் தெளிவானது . அவரது மக்கா வாழ்வின் பகிரங்க பிரச்சாரம் இகாமதுத் தீன் நோக்கிய நிபந்தனை அற்ற ஆதரவையும் , உதவியையும் வேண்டியதாகவே ஆரம்பிக்கின்றது . குறைசிகளிடம் விடயம் எடுபடாத போது தகுதியும் ,தரமும் மிக்க பல கோத்திரங்கள் இதற்காக அனுகப்பட்டது . இறுதியில் அவ்ஸ் ,கஸ்ரஜ் எனும் இரு கோத்திரத்தினதும் நிபந்தனை அற்ற ஆதரவுடன் மதீனாவில் இகாமதுத் தீன் கட்டமைப்பு வடிவம் பெறுகின்றது .

ஒரு முக்கியமான விடயத்தை முஸ்லீம் உம்மா புரிந்து கொள்ள வேண்டும் . அது இஸ்லாமிய சரீயாவின் ஒரு அணு அளவு பகுதியை பிரயோகிக்க முடியா விட்டாலும் 'தீன் ' நிலை நாட்டப் பட்டதாக கருத முடியாது . அதே போல நிபந்தனைகளும் ,தடைகளும் இருக்கும் நிலையிலும் என்றும் தீனை நிலைநாட்ட முடியாது . அத்தகைய நிலையில் சரீயாவை பிரயோகிக்க நினைப்பது இஸ்லாத்தின் எதிரிகளால் அரசியல் ,இராணுவ ,பொருளாதார ரீதியில் முஸ்லீம் உம்மத் ஒடுக்கப்படும் ,அவமதிக்கப்படும் நிலைக்கே இட்டுச் செல்லும் . மிகக் குறைந்த பட்ச அடையாலங்களுக்காக இன்று முஸ்லீம் உம்மத் இன்று சந்திக்கும் அவலங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும் .

இஸ்லாமிய அகீதாவில் வார்க்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பு ,தனது உறுதியான சகோதரத்துவ பலத்தின் மூலம் ,சுன்னாவின் வழி தனது இயலுமையின் இறுதிக் கட்டம்வரை தீனை அமுல் படுத்த தயாரான நிலை இகாமதுத் தீன் நோக்கிய முதல் நிலையாகும் . அதே நேரத்தில் அந்த குறிப்பிட்ட பகுதி பௌதீக நில அமைப்பு ,வளங்கள் என்பவற்றிலும் அதிக பட்ச தயார் நிலை கொண்டதாக தீர்மானிக்கப் படவேண்டும் . இத்தகு தேடலும் போராட்டமும் தான் தீனை நிலைநாட்டுவதட்கான போராட்டமாகும் .

மேலும் இத்தகு எல்லை விரிவடைந்து செல்லத் தக்க தொடர் போராட்டமாக அமைய வேண்டும் . அதாவது அல்லாஹ்வின் பூமியில் அவனது மார்க்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ,அனைத்து மர்ர்க்கங்களையும் மிகைத்து செல்லும் வரை போராடுவது கடமை . மேலும் 'தாகூத்திய ' கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதர்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான , நியாயமான வடிவத்தை எடுத்துக் காட்டுவதும் இந்த இகாமதுத் தீனின் எதிர்பார்ப்பாகும் .

இதிலிருந்து புரியக்கூடிய விடயம் யாதெனில் இகாமதுத் தீன் என்பது சுதந்திரமாகவும் , தெளிவாகவும் இஸ்லாத்தை பூரணமாக பிரயோகித்து பாதுகாக்கும் அரசியல் அதிகார நிலையாகும் . அகீதா பலத்தையும் ,சகோதரத்துவ பலத்தையும் முன்னெடுத்த சமூக ஆதரவுடன் கூடிய தொடர் அரசியல் போராட்டமே இகாமதுத் தீன் நோக்கிய மிகச் சரியான நகர்வாகும் . மாற்றமாக கருத்து வேறுபாடுகளுக்குள் காலம் தள்ளி சமூகத்தை பிளவு படுத்துவதோ , குப்ரிய தாகூத்திய அதிகாரங்களின் கீழ் இருந்து கொண்டு முடிந்தவரை சரீயாவை பிரயோகித்து திருப்தி காண்பதோ இகாமதுத் தீன் ஆகாது . மாறாக அவை குப்பார்களால் தீனை அவமதிக்க வைப்பதற்கான தயார் நிலையே ஆகும் .

முஸ்லிமே ! காலம் வேண்டுவது என்ன ?



இஸ்லாத்தின் வரலாறு என்பது ஒரு தெளிவான அரசியல் போராட்ட வரலாறே ஆகும் . அது தீனுல் இஸ்லாம் என்ற வகையில் மனித குல வரலாற்றின் ஒவ்வொரு நபிமார்களோடும் தொடர்பு பட்டதும் ,இறுதி நபியான முஹம்மத் (ஸல் ) அவர்களை தொடர்ந்து இறுதி நாள்வரை இந்தப் போராட்டம் இருந்து கொண்டே இருக்கும் . இப்படி தீன் என்பது ஒரே அடிப்படையில் இருந்தாலும் ஷரீஆ என்பது ஒவ்வொரு நபிக்கும் வேறுபட்டதாக இருக்கின்றது . யுக முடிவு வரை இனி பின்பற்றத்தக்க ஷரீஆ வாக நபி முஹம்மத் (ஸல் )அவர்களின் ஷரீஆ வே இருக்கும் என்பது முஸ்லீம்களின் தெளிவான அகீதா . இகாமதுத் தீன் (தீனை நிலைநாட்டுதல் ) என்பது இந்த ஷரீஆ எவ்வித தங்கு தடையும் இன்றி பிரயோகிக்கவும் ,அமுல் படுத்தவும் கூடிய ஒரு ஆட்சி அதிகார கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும் .

ஆனால் அந்த ஆட்சியின் வடிவம் ,உருவாக்கம் , அதை நோக்கிய செயற்பாடு என்பதும் இந்த ஷரீஆ வரையறுத்த பாதை ஊடாகவே அமைய வேண்டும் .ஏதாவது ஒரு ஆட்சியில் இஸ்லாமிய ஷரீஆ வின் அதிகமான பகுதிகள் பின்பற்றப் பட்டாலும் அது இஸ்லாமிய ஆட்சியாக கருத முடியாது . விடயம் இப்படி இருக்க சிலர் நினைக்கிறார்கள் ,இஸ்லாத்தின் மேலாதிக்கம் ,அதன் அரசியல் அதிகாரம் ,அல்லது இகாமதுத் தீன் என்ற விடயம் திட்டமிட்டு நகர வேண்டிய ஒரு இலக்கு அல்ல என்றும் , வெறுமனே ஆன்மீக ஒழுக்கக் கோவைகள் என சில விடயங்களையும் , சில அடிப்படையான இபாதத்துகளை கிராமமாக கூட்டாகவும் ,தனியாகவும் பேணி வரும் நிலையில் இறைவனால் வழங்கப்படும் ஒரு எதேச்சையான வெகுமதியே அரசியல் அதிகாரம் என்பதாக கருதி வருகிறார்கள் .(இன்னும் சிலர் அரசியல் என்பது இஸ்லாத்தில் இல்லை என்று கூட கூறுகிறார்கள் !) இது மிகத் தவறான ஒரு முடிவு ஆகும் .

சிந்தனை வீழ்ச்சி காரணமாக முஸ்லீம் தன்னை சூழ்ந்துள்ள இத்தகு நிலைப்பாட்டின் மூலமே ,குப்ரிய அதிகார வடிவத்தையும் (குப்ரிய தீன் ), அதன் சட்ட திட்டங்களையும் (குப்ரிய ஷரீஆ ) அரசியல் வேறு மதம் வேறு என்ற அடிப்படையில் இடைக்காலத்தில் பின்பற்ற முடியும் என தவறாக கருதிக் கொண்டிருக்கின்றான். இந்த தவறான அளவுகோல் இஸ்லாமிய அரசியல் மற்றும் அதற்கான போராட்டம் என்பவற்றில் இருந்து முஸ்லிமை தெளிவாகவே திசைதிருப்பியுள்ளது . இறைவனை வணங்குதல் என்பதன் இஸ்லாம் கூறும் அர்த்தம் அந்த இறைவனுக்காக வாழ்தல் அவனுக்காக மரணித்தல் எனும் அரசியலையே ஆகும் . இந்த வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட அவனது சகல அசைவுகளையுமே இபாதத் என்ற நிலையில் இஸ்லாம் கணிக்கிறது . இன்னும் அந்த இபாதவை இப்படித்தான் செய்ய வேண்டும் என ஷரீஆ மூலம் வரையறுக்கிறது .

உண்மையில் இபாதத் என்ற விடயம் ஒரு முஸ்லிமுடைய குறிப்பிட்ட சில செயல்களோடு முற்றுப் பெறுவதல்ல . அதன் தேவை ,வடிவம் , என்பன இடம் காலம் , சூழ்நிலை என்பவற்றை பொறுத்து வேறுபடுவதோடு ,நன்மையை எவுதல் ,தீமையை தடுத்தல் என்ற தீர்க்கமான இலக்கு நோக்கி காணப்படும் . அதற்காக ( நன்மையையும் தீமையையும் தெளிவாக வரையறுக்கும்) இஸ்லாத்தை நிலைநாட்டுதல் என அதன் அடிப்படையான முதற்கட்டம் நிறைவுபெற அத்தகு தூய்மையான அதிகாரத்தை பாதுகாத்தல் மற்றும் அதனூடாக அல்லாஹ்வின் பூமியை நன்மையான அடிப்படையில் வளப்படுத்தல் என்ற மிகப்பாரிய பணியின் ஊடாக இபாதத் முற்றுப் பெறாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் .

இத்தகு யதார்த்தத்தின் ஊடாகவே ,இத்தகு போராட்டத்தின் ஊடாகவே முஸ்லீம் என்ற சொல்லின் அர்த்தம் நிரூபிக்கப்படுகின்றது . எனவே முஸ்லிமின் வாழ்க்கை இபாதத் மூலம் (இறைவனுக்கு முற்றாக கீழ் படிதல்) கிலாபத் (இறை பிரதிநிதித்துவ ஆட்சி )ஊடாக இமாரத் (பூமியை வளப்படுத்தல் ) வரை தொடரக் கூடியதும் ,ஒரு முஸ்லிமின் பௌதீக அசைவுகளை முற்றாக கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்க அரசியல்
ஆகும் .

இந்தவகையில் இஸ்லாத்தை ஒரு ஆற்றல் மிக்க சித்தாந்தமாக அறிமுகப் படுத்தல் ,அடையாளப்படுத்தல் ,என ஒரு அரசியல் பார்வை கொண்ட விடயமாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாய கடமை முஸ்லிமுக்கு இருக்கின்றது .


இபாதத் என்ற சொல்லின் அர்த்தத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் அரசியலை அவன் பிரதிநிதியாக நின்று இறை மறுப்பு அதிகாரங்களுக்கு சவாலாக அறிமுகப்படுத்தும் ,அடையாளப்படுத்தும் அரசியல் வாதியாக தனது இயலுமையிலும் ,இயலாமையிலும் வாழ்வதே உண்மை முஸ்லிமின் முன்மாதிரி அடையாளமாகும் .

காலத்தின் தேவையை புரிந்து கொள்ளாமல் திட்டவட்டமற்ற விடயங்களில் வரும் கருத்து வேறுபாடுகளை பெரிது படுத்தி பகை உணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விவாத அரங்குகளை ஏற்படுத்துவதும் , அழிவுச் சத்தியம் (முபாஹலா ) வரை விடயத்தை கொண்டுவரும் பிரச்சார ஒழுங்குகளுக்கு முஸ்லீம் உம்மத்தை பழக்கப்படுத்துவதும் , அதில் வரும் உள் வீட்டு குழப்பங்களுக்கு !! குப்ரிய சட்டத்திடமும் , அதன் அரசியலிடமும் தஞ்சம் புகுவதும் , ஆளுக்கொரு பள்ளி கட்டி புனித ஜும்மா பயானையும் சகோதர சதையை மார்க்கத்தின் பெயரில் பச்சையாக தின்னும் நிலையில் நடாத்துவதும் , சுன்னாஹ் காட்டித் தராத விவேகமற்ற செயல்களாகும் .

முஸ்லீம்களாகிய நாம் எமக்குள் எம்மை சில உசூல் விடயங்களுக்காக வேறுபடுத்தி பிரிந்து போவது ,எம்மிடமிருந்து இஸ்லாத்தை அழிக்கவும் ,அது முடியாதபோது எம்மையே அழிக்கவும் தயாராக உள்ள குப்ரிய பொது எதிரிக்கு உதவுமே தவிர இஸ்லாத்தை நிலைநாட்ட உதவவே உதவாது . காலத்தின் சரியான தவ்வாவை கற்றுக்கொள்ள ரசூல் (ஸல் ) அவர்களின் மக்கா வாழ்வை இன்று உதாரணப் படுத்தலாம் .அதற்கு ஒப்பான வாழ்வுச் சூழல் தான் இன்றுள்ளது .

நிர்ப்பந்தத்துக்கும் சரணடைவு அழைப்புக்கும் மத்தியில் எனது போராட்டங்கள் !!

அவ நம்பிக்கை ஆக்கப்பட்டுள்ளது நம்பிக்கை !
சமத்துவம் சகவாழ்வு என்ற போர்வையில் நான் 
சடத்துவ வெப்பத்தில் குடித்தனம் நடத்த அழைக்கப் படுகிறேன் !
இஸ்லாத்தின் இலட்சியங்களை ஏட்டுச் சுரக்காய் ஆக்கிவிட்டு 
அலட்சிய அதிகாரத்துக்குள் அடிமைப்படுவதில் சத்தியம் உள்ளதாம் !
உளரும்' உலமாத்' தனங்களில் 'பிக்ஹுல் அகல்லியாத் ' எனும் 
தன்மான விற்பனை நிலையத்தின் இலவச விளம்பரங்கள் 
வெளியிடப் படுகின்றன !கோழையாக வாழ்வதில் கொள்கை சிறக்குமாம் !

காலங்கள் மாறிய  கேவலக் காட்சிகள் மாறுமுன்பே 
ஒரு பான்மை தந்த ஓயாத வஞ்சனைகள் ஆறும் முன்பே 
மகா பான்மை மறுபடியும் பெற்றோலை ஊற்றியது !
மாபாவிகள் மத வாத தீயை பற்ற வைத்தனர் ! அதற்காக 
மாநபி பாதையை ஒழித்து வைத்து இங்கு நாம் 
புத்தனுக்கு பிடித்ததாய் வஹியை 'ரீ வேர்சன் ' செய்வதா !?
புத்தி ஜீவிகள் அப்படித்தான் சொல்கிறார்கள் !!

என்னை எரித்து அந்த அழிவு வெப்பத்தில் 
எதிரிகள் அரசியல் குளிர் காய எத்தனிக்கிறார்கள் !
பற்றுவது நான் பற்று மிக்க இலட்சிய நெருப்பாய் சுடர்விட்டு 
சுட்டெரிப்பேன் அசத்திய அசுத்தங்களை என்ற வரலாற்று வரிகளை 
தெளிவோடு சொல்லி நிற்கிறேன் ! 
அசிங்கமான நிர்ப்பந்த நியாயங்களோடு நான் 
சிங்கத்திடம் சுஜூது செய்ய அழைக்கும் 
அபூர்வ தாயிகளிடம் சொல்ல விரும்புவது ஒன்றுதான் .
எந்நிலையிலும் நான் ஒரு முஸ்லிம் !!!

http://khandaqkalam.blogspot.ae/2014/02/blog-post_22.html#more