Showing posts with label உலமாக்கள். Show all posts
Showing posts with label உலமாக்கள். Show all posts

Jul 13, 2014

அப சரணய் அரசியலில் தம்பி நீ வாழ


அப சரணய் அரசியலில் தம்பி நீ வாழ ...
அசிங்கத்தை நேசித்து அயோக்கியத்துடன்
சமரசம் பேசு!
அல்லாஹ்வின் மார்க்கத்தை அளவோடு நிறுத்தி விடு!
சேப் ஆக வாழ நீ
காசாவை பேசாதே! காஸ்மீரை பார்க்காதே !
வன் உம்மா கென்செப்டை
வழக்காறு ஆக்காதே!
சடத்துவம் வேண்டி நீ
சகோதரத்துவம் தொலைத்து விடு!
அநீத தீவில் சிறுபான்மை சுண்டெலி நீ!
புர்கான் ஒரு புத்தகம் போல்
வாசிக்க இருக்கட்டும்!
கோவணத்தால் தலை மறைத்து
அவுரத்தை அவுட் ஆக்கு!
அஹ்லாகின் கடை போட்டு
ஈமானை விலை பேசு!
ஹுப்புத்துன்யாவுக்கு ஹிக்மத்
லேபல் இடு!
கொத்தடிமை சாசணத்தை
விஷம் போல் பார்க்காதே !
தேசிய கோதாவில் பாசிச பார்வையை வெள்ள தேசிய பாசம் காட்டி
தவ்ஹீதை நொக் அவுட் ஆக்கி!
அப சரணய் அரசியலில் "தம்பி"
நீயும் வாழ வேண்டும்!
.............உரிமையுடன்...................
உல(க) மா(க்கள்) சபை

Oct 13, 2013

உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்…..!

இவர்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சக் கூடியவர்களாகவும் ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் தீனுல் இஸ்லாத்தினது பாதுகாவலர்களாகவும் திகழவேண்டும்!

இதுவே, இஸ்லாம் எழுச்சிபெற மறுமலர்ச்சிபெற இஸ்லாத்திற்கு எதிரான தீயசக்திகள் தோற்கடிக்கப்பட வழிவகுக்கும்!

நபி (ஸல்) கூறினார்கள் :
'உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ திர்ஹமையோ வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. எனவே எவர் ஒருவர் அவ்வறிவைப் பெற்றுக் கொண்டாரோ அவர் முழுமையானதொரு பங்கைப் பெற்றுக் கொண்டவராவார்.'

இந்த வகையில் “சித்தீக்” எனும் உண்மையை உரைக்கம் பண்பு “அமானா” எனும் அமானிதம் பேணும் பண்பு “பதானா” எனும் புத்திகூர்மை “தப்லீக் “ எனும் பிரச்சாரம் என்ற நான்கு வகைப் பண்புகளும் நபிமார்களது பண்புகளாகும்.

இத்தகைய உண்ணதமான பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக, வாரிசா எமது உலமாக்கல் இருக்கும் போதுதான் வஹியின் ஒளியில் முழுமனித சமூகதிற்குமான நேர்வழி கிடைப்பதற்கும் குர்ஆன் சுன்னாவின்படி மனித சமூகம் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் வழிவகுக்கும்.

இத்தகைய உண்ணதமான பணியை சுமந்த உலமாக்கல் அச்சமற்றவர்களாகவும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிந்து நடப்பவர்களாகவும் ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் உலகில் நீதி நிலைக்கும். மனித சமூகம் நல்வழிப்படும்.

இன்று உலகில் முஸ்லிம் ஆட்சியாளர்களது அநீதியை எதிர்த்து போராட வேண்டிய மிகப் பாரிய பணியை உலமாக்கள் கொண்டுள்ளதுடன் அல்லாஹ்வுடைய தீன் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஒழுங்குபடுத்தப்பட முஸ்லிம்களது ஒரே தலைமை மீள நபி வழியில் உருவாக உழைக்கவும் கடமைப்பட்டவர்கள். இவர்களது மார்க்க உபதேசங்களில் இத்தகைய இஸ்லாமிய தலைமை உருவாகுவதன் அவசியம் பற்றி அதிகம் அழுத்தம் தொணிக்கவேண்டும்.

இன்று இலங்கையில் பேரினவாத சக்திகளது “இனவாதப் போக்கு” மற்றும் “இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனையுத்தம்” போன்றவற்றில் எமது உலமாக்களது பங்குபற்றி மிகப்பெரிய கேள்வி உள்ளது.

இவர்களுக்கு சமூகத்தை வழிநாடாத்துவதற்கான பாரிய பொறுப்புள்ளது. குப்பார்களுக்கு இஸ்லாத்தை தெளிவு படுத்தவும் அவர்களது நச்சுக்கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

இன்று உலமாக்களில் பெரும்பாலானவர்கள் மேற்கினது மதஒதுக்கல் சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டு இஸ்லாத்தை பள்ளிக்குள் முடக்கிய நிலையில் தமது உபதேசங்களை நிறுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தை இன்றுள்ள முதலாளித்துவ உலக ஒழுங்கினது மாற்றீடாக அதன் வாழ்வியல் அம்சங்களை, பொருளாதார முறைமைகளை, அரசியல் ஒழுங்கை முன்வைத்து ஒடுக்கப்பட்டுள்ள உலக மக்களுக்கு இஸ்லாம்தான் ஒரே தீர்வு என்பது பற்றி ஆக்கபல கருத்தியல் முன்னெடுப்புகளை எடுக்க தவறியிருப்பதனை நாம் காணலாம்.

இன்று முஸ்லிம்களது ஈமானுக்கு வேட்டு வைக்கும், இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போக்கை கண்டும் மௌனித்தபடி தானும் தன்பாடும் என்றபடி வாழும் மார்க்க அறிஞர்கள் தங்களது அமானிதம் பற்றி சிந்திக்கவேண்டும்.

அத்துடன் முஸ்லிம் புத்தி ஜீவிகள் இஸ்லாம் எனும் கண்ணாடியினூடாக இன்று முஸ்லிம்களுக்கு எதிரான சிநத்தனையுத்தத்தை பார்த்து உரிய தஃவாக்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே எமது எதிர்கால சந்ததிகளது இருப்பை பாதுகாப்பதுடன் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கும்.

சிந்திப்போம்! ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்! பேரினவாத தீயசக்திகளது நச்சுக்கருத்துக்களை எதிர்கொள்வோம்! இஸ்லாத்தை முற்படுத்துவோம்!



Mohideen Ahamed Lebbe 

Sep 15, 2013

நபி (ஸல்) மக்காவில் நிறைவேற்றிய பணி.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் எமது முதல் பணி நபி (ஸல்) மக்காவில் நிறைவேற்றிய பணி.

அது ஒரு அரசியல்பணி. ஆனால் ஆட்சி அதிகாரம் மூலம் நிறுவும் பணியல்ல.

மதீனாவில் அதிகாரம் கிடைத்த பின்பு ஒரு அரசு என்ற அடிப்படையில் இஸ்லாத்தை முழுமையான உள்நாட்டினுள் அமுல்படுத்தியதுடன் வெளிநாட்டுக்கம் தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அரசு எடுத்துச்சென்றது. அது முஸ்லிம்களதும் இஸ்லாத்தினதும் நலன்களை காப்பாற்றியது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எவ்வாறான ஒரு ஜாஹிலிய சமூக அமைப்பையும் அரசில் தலைவர்களையும் எதிர்கொண்டு இஸ்லாத்தை மக்கள் மயப்படுத்தி மக்கள் மனங்களில் மேலோங்கச் செய்தார்களோ அதேபோன்று இன்றுள்ள நவீன ஜாஹிலிய சிந்தனைகளையும், வாழ்க்கை முறையையும், சமூக அமைப்பையும் கேள்விக்குட்படுத்தி மாற்றீடாக இஸ்லாத்தை முன்வைக்கும் அரசியல் பணியை அனைத்து உலமாக்களும் செய்ய முற்படுவதுடன் ஒவ்வொரு முஸ்லிமும் இதில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகைய அரசியல் பணியை செய்வதன் மூலமாக இலங்கை மக்கள் மனங்களில் இஸ்லாம் ஒரு மாற்றீட்டு வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்தப்படமுடியும்.

அத்துடன் நாளைய இஸ்லாமிய உலக ஒழுங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தேசங்களை இணைத்து நபி வழியில் உருவாகும் போது சிறுபான்மையாக வாழும் எமது நலன்கள் நிச்சயம் காக்கப்படும்; எங்களது கண்ணியம் பேணப்பட்டும்; குர்ஆன் சுன்னாவின்படி சகல துறைகளிலும் நாம் வாழுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் எமக்கு இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்தி தரும்.

Mohideen Ahamed Lebbe via Facebook

Sep 6, 2013

இஸ்லாத்திற்கு எதிராக சவூதி மன்னர் பல இலட்சங்களை செலவிடுகின்றார்


தீவிரவாத தடுப்பு மையத்திற்கு நிதி உதவியாக ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜிஸ் 100 மில்லியன் டாலரை அளிக்க இருப்பதாக செய்தி நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. நோன்பு பெருநாள் அன்று ஆற்றிய உரையில் சவூதி மன்னர்“ஐக்கிய நாடுகள் சபைக்கு கீழ் இயங்கும் இந்த மையத்தின் செயல்பாடுகளுக்கு உதவும் வகையாக 100 மில்லியன் டாலரை வழங்க இருக்கின்றேன்” என்று கூறியதாக சவூதி செய்தி நிறுவனம் அறிவித்தது. மேலும்பயங்கரவாத சக்திகளை’முறியடிப்பதற்காக இந்த மையத்திற்கு சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும்என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னரே 2011 ஆம் ஆண்டு, இந்த மையத்தை உருவாக்குவதற்கு உதவுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் சவூதி அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொன்டு அம்மையத்தை உருவாக்க 10 மில்லியன் டாலரையும் அளித்தது. இந்த மையத்தை உருவாக்க வேண்டும் என்று முதன்முதலாக யோசனை அளித்தவரும் சவூதி மன்னர் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் இந்த யோசனையை முதன்முதலாக 2005 – ல் கூறினார். பின்பு தீவிரவாத தடுப்பை தன்னுடைய அதிமுக்கிய பணியாகவும் ஆக்கிக்கொண்டார்.

இஸ்லாத்தை எதிர்த்து போரிடுவதற்கும், முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும், இஸ்லாமிய நிலங்களின் மீதான இராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கும், உள்நாட்டு பிரிவினைகளின் வாயிலாக முஸ்லிம்களுக்குள் போர் ஏற்படுத்தவும்,அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் சர்வதேச மையங்கள் ஒரு கருவியாக  பயன்படுத்தப்படுகின்றன. இதே அடிப்படையை தான் சவூதி அரசாங்கமும் பின்பற்றுகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கத்திய நாடுகள் பரப்பிக்கொன்டிருக்கும் கருத்துக்களை, சொன்னதைச் சொல்லும் கிளிப்ப்பிள்ளையைப் போல் சவூதி மன்னர் பரப்பிக் கொண்டிருக்கிறார். இதனால் இஸ்லாத்திற்கு எதிராக திட்டம் தீட்டி மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் கண்ணியத்தை மாசுபடுத்தும் இஸ்லாத்தின் எதிரிகளின் பட்டியலில் இவரும் சேர்ந்துவிடுகிறார்.

இந்த கருத்துக்களை முழுமூச்சாக பரப்புவது மட்டுமல்லாமல் அதற்கான பணத்தையும் பெருமளவில் செலவிட்டுக்கொண்டிருக்கிறார். அப்பணத்தை முஸ்லிம் உம்மத்தில்  பசியோடு வாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு உதவி இருந்தால் ஒரு முஸ்லிம்கூட பசி பட்டினியால் உயிர் இழக்கமட்டார்.
தன்னுடைய உரையில் சவூதி மன்னர், இஸ்லாத்தின் எதிரிகளைத்தவிர  வேறு எவரும் பயன்படுத்தாத சொற்களானதீவிரவாத சக்திகள்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். இவர் கூறும்“சக்திகள்” என்ற வார்த்தை யாரைக் குறிப்பிடுகின்றது என்று இவரால் வெளிப்படையாக கூற இயலுமா?  இஸ்லாமிய உம்மத்தின் எதிரிகளான குஃப்ஃபார்களுக்கு எதிராக அல்லாஹ்வின் பாதையில் போர் செய்ய சில இயக்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. மேலும் இஸ்லாமிய கிலாஃபா ஆட்சி முறையை நிலைநாட்ட  இஸ்லாமிய அமைப்பு பாடுபடுகின்றது.  இந்த இயக்கங்களைத்தான் இவர் “தீவிரவாத சக்திகள்” என்று குறிப்பிடுகின்றார். இதுபோன்ற வார்த்தைகள், முதன்முதலாக மேற்கத்தியர்களால் இஸ்லாமிய இயக்கங்களைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டவையாகும்.

இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகவும் உம்மத்தின் பாத்துகாப்பிற்காகவும் பாடுபட்டுவரும் இஸ்லாமிய அமைப்புகளை ஒடுக்க அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கும்  அமெரிக்க ஏஜெண்டான இந்த சவூதி குடும்ப ஆட்சியாளர்களுக்கு தீர்ப்பு வழங்கவேண்டிய ஹிஜாஸின் உலமாக்கள் எங்கே! நஜ்து உலமாக்கள் எங்கே! சின்னஞ்சிறிய விசயங்களுக்கெல்லாம் தீர்ப்பு வழங்கும் இவர்கள், இந்த சவூதி ஆட்சியாளர்களுக்கு தீர்ப்பு வழங்குவதில்லையே   ஏன்?   ஊடகங்கள் அனைத்தும் அவர்களை எப்போதும் சூழ்ந்திருக்கும் நிலையில் கூட இது தொடர்பாக ஒரு வார்த்தைக் கூட அவர்களிடமிருந்து ஏன் பெற முடியவில்லை?

அமெரிக்காவையும் மேற்கத்திய குஃப்ஃபார்களையும் பின்பற்றக் கூடிய இது போன்ற ஆட்சியாளர்களையும் அவர்களுடைய தீய எண்ணங்களையும் வெளிப்படுத்த வேண்டியது ஒட்டுமொத்த உம்மத்தின்மீது கடமையாகும்.  இத்தகைய  ஆட்சியாளர்களுக்கு எதிரான   சிந்தனை மாற்றத்தை  மக்கள் மத்தியில் ஏற்படுத்தாதவரை  மறுமலர்ச்சி சாத்தியமாகாது.
புனிதமிக்க ஹரமைன் பகுதிகளிலிருந்தும் மற்ற இஸ்லாமிய நிலங்களிலிருந்தும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை வேரறுக்க வேண்டியதும், சவூதி மன்னர் போன்ற மேற்கத்திய ஆட்சியாளர்களின் ஏஜெண்டுகளின் ஆட்சியைக் கவிழ்த்து, இஸ்லாத்தை மேலோங்கச் செய்யக்கூடிய இஸ்லாமிய ஆட்சியை நிறுவ பாடுபடவேண்டியதும் முஸ்லிம் உம்மத்தின் தற்போதைய மேலான கடமையாகும்.

Aug 21, 2013

இஸ்லாம் உலகில் மீள் எழுச்சிபெறுவதில் இன்றைய உலமாக்களின் பங்களிப்பு இன்றியமையாதது!


உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்…..! இவர்கள் மறுமைநாளை அஞ்சியவர்களாக “காலத்தின் தேவையாகிய தஃவாவை” முன்னெடுத்து “இஸ்லாம் மீண்டும் உலகில் எழுச்சிபெற” தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்! தங்களது அமானிதம் பற்றி சிந்திக்க வேண்டும்!

உலமாக்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சக் கூடியவர்களாகவும் ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் தீனுல் இஸ்லாத்தினது பாதுகாவலர்களாகவும் திகழவேண்டும்!

இதுவே, இஸ்லாம் எழுச்சிபெற மறுமலர்ச்சிபெற இஸ்லாத்திற்கு எதிரான தீயசக்திகள் தோற்கடிக்கப்பட வழிவகுக்கும்!

நபி (ஸல்) கூறினார்கள் :
'உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ திர்ஹமையோ வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. எனவே எவர் ஒருவர் அவ்வறிவைப் பெற்றுக் கொண்டாரோ அவர் முழுமையானதொரு பங்கைப் பெற்றுக் கொண்டவராவார்.'

இந்த வகையில் “சித்தீக்” எனும் உண்மையை உரைக்கம் பண்பு “அமானா” எனும் அமானிதம் பேணும் பண்பு “பதானா” எனும் புத்திகூர்மை “தப்லீக் “ எனும் பிரச்சாரம் என்ற நான்கு வகைப் பண்புகளும் நபிமார்களது பண்புகளாகும்.

இத்தகைய உண்ணதமான பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக, வாரிசா எமது உலமாக்கல் இருக்கும் போதுதான் வஹியின் ஒளியில் முழுமனித சமூகதிற்குமான நேர்வழி கிடைப்பதற்கும் குர்ஆன் சுன்னாவின்படி மனித சமூகம் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் வழிவகுக்கும்.

இத்தகைய உண்ணதமான பணியை சுமந்த உலமாக்கல் அச்சமற்றவர்களாகவும், அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிந்து நடப்பவர்களாகவும், ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் உலகில் நீதி நிலைக்கும்; மனித சமூகம் நல்வழிப்படும்.

இன்று உலகில் முஸ்லிம் ஆட்சியாளர்களது அநீதியை எதிர்த்து போராட வேண்டிய மிகப் பாரிய பணியை உலமாக்கள் கொண்டுள்ளதுடன் அல்லாஹ்வுடைய தீன் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஒழுங்குபடுத்தப்பட முஸ்லிம்களது ஒரே தலைமை மீள நபி வழியில் உருவாக உழைக்கவும் கடமைப்பட்டவர்கள்.

இவர்களது மார்க்க உபதேசங்களில் இத்தகைய இஸ்லாமிய தலைமை உருவாகுவதன் அவசியம் பற்றி அதிகம் அழுத்தம் தொணிக்கவேண்டும்.

இது இன்றைய காலத்தின் தேவையாகும். இஸ்லாம் எழுச்சிபெற்றுவரும் இத்தருணத்தில் இன்றியமையாததாகும். ஹக்கிற்கும் பாதிலுக்கும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இவர்களது பொறுப்புணர்ச்சியுடன் கூடிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மிகவும் அவசியமாகும் என்பதனை உணரவேண்டும்.

இவர்களுக்கு சமூகத்தை வழிநாடாத்துவதற்கான பாரிய பொறுப்புள்ளது. குப்பார்களுக்கு இஸ்லாத்தை தெளிவு படுத்தவும் அவர்களது நச்சுக்கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

இன்று உலமாக்களில் பெரும்பாலானவர்கள் மேற்கினது மதஒதுக்கல் சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டு இஸ்லாத்தை பள்ளிக்குள் முடக்கிய நிலையில் தமது உபதேசங்களை நிறுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தை இன்றுள்ள முதலாளித்துவ உலக ஒழுங்கினது மாற்றீடாக அதன் வாழ்வியல் அம்சங்களை, பொருளாதார முறைமைகளை, அரசியல் ஒழுங்கை முன்வைத்து “ஒடுக்கப்பட்டுள்ள உலக மக்களுக்கு இஸ்லாம்தான் ஒரே தீர்வு” என்பது பற்றி ஆக்கபல கருத்தியல் முன்னெடுப்புகளை எடுக்க தவறியிருப்பதனை நாம் காணலாம்.

இன்று முஸ்லிம்களது ஈமானுக்கு வேட்டு வைக்கும், இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போக்கை கண்டும் மௌனித்தபடி தானும் தன்பாடும் என்றபடி வாழும் மார்க்க அறிஞர்கள் தங்களது அமானிதம் பற்றி சிந்திக்கவேண்டும்.

“உலகில் நீதி நிலைத்திட, அல்லாஹ்வின் அருள் நிறைந்திட, மனிதகுலம் ஈடேற்றம் பெற, வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாம் நிலைபெற” உலமாக்கள் நபிமார்கள் செய்த பணியாகிய “சியாசா” எனும் அரசியல் பணியை மேற்கொள்ளும் பாரிய பொறுப்பை சுமந்துள்ளார்கள்.

ஏனெனில் “இஸ்லாமிய அரசாகிய கிலாபா அரசை மீள நபி வழியில் நிறுவும் பணி ஒரு அரசியல் பணியாகும்”. அதன் “செயலாக்க அமைப்புகளை அடிப்படையாக கொண்டு மனித வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் பணி” அரசியல் பணியாகும்.

இத்தகைய அரசியல் பணிமூலமே இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அமுலாக்கப்பட வழிவகுக்கும் என்பதனை இன்றை உலமாக்கள் உணர்ந்து நாளை அவர்களது அமானிதம் பற்றி வினவப்படும் அந்த மறுமைநாளை அஞ்சியவர்களாக காலத்தின் தேவையாகிய தஃவாவை முன்னெடுத்து இஸ்லாம் மீண்டும் உலகில் எழுச்சிபெற தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இது அவர்களது தார்மீகக் கடமையாகும்.