Apr 30, 2011

குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் – Determining the child gender:

கருவை உறைநிலையில் வைப்பது (Freezing the embryo) , குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பது (determining the child gender ) ஆகியவை தொடர்பான ஹுகும் ஷரியா: பகுதி 2


குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் – Determining the child gender:

வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டே மனிதர்கள் குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்வதில் விருப்பம் கொள்பவர்களாகவும் விரும்பிய பாலினம் உருவாகும்போது ஏற்றுக்கொள்கிறவர்களாகவும் விரும்பாத பாலினம் உருவாகும்போது அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் செயல்முறையை பிரயோகிகத்து அவற்றை நீக்குபவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.

அறியாமைக் காலத்தில் ஆண்குழந்தை அதிகமாக விரும்ப்பட்டது ஏனெனில் அது போர்க்களத்திலும் மற்ற விஷயங்களிலும் தந்தைக்கு உதவியாக இருப்பதோடு சந்ததியையும் நிலைநிறுத்துகிறது, அதேவேளையில் பெண்குழந்தை துயரத்தை கொடுக்கக்கூடியது என்று கருதப்பட்டதால் உயிருடன் புதைக்கப்பட்டது,அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ

உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்) குழந்தை எதற்காக கொல்லப்பட்டது என்று வினவப்படும்போது... (அத்தக்வீர் : 8. 9)


பிறகு வந்த காலகட்டத்தில் விரும்பாத குழந்தைகளை கருவிலேயே நீக்கிவிடும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டது, தாயின் கருவறையில் ஸகேன் செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து விருப்பத்திற்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் கருவை கலைத்திடும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

அறிவியல் முன்னேற்றம் அடைந்த இந்தக் காலகட்டத்தில் இவ்விஷத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன, கருவறையில் இருக்கும் கருநிலை சிசுவை (foetus) கண்காணிக்கவும் அதன் இயக்கத்தை விரும்பியவாறு கட்டுப்படுத்தவும் இப்போது சாத்தியம் இருக்கிறது, கருவறையிலுள்ள கருவின் மரபணு (gene)அமிலத்தன்மையின் சூழலில் (acidic environment) இருந்தால் பெரும்பாலும் அது பெண் சிசுவாக உருவாகும் என்றும் மரபணு காரத்தன்மையின் சூழலில் (alkaline environment) இருந்தால் அது பெரும்பாலும் ஆண் சிசுவாக உருவாகும் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது, இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்பவர்கள் உடலுறவு ஏற்படுவதற்கு முன்பு கருவறைக்குழாயில்(vegina) காரத்தன்மையுள்ள திரவத்தை பீச்சிக்கொள்வதன் மூலம் கருவறையில் காரத்தன்மையின் சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு அல்கலைன் டூஷிஸ்(ஹப்ந்ஹப்ண்ய்ங் க்ர்ன்ஸ்ரீட்ங்ள்) என்று பெயராகும். இதன் மூலமாக ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.


இதற்கு அடுத்தபடியாக பெண்ணின் உடலில் காரத்தன்மையின் சூழல் அல்லது அமிலத்தன்மையின் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு உணவுமுறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, கருவின் பாலின உருவாக்கத்தில் இரண்டு வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

முதலாவதுமுறை: கருவறை மற்றும் கருவறைக்குழாய் ஆகியவற்றில் காரத்தன்மையையோ அமிலத்தன்மையையோ செயற்கையாக உருவாக்குதல்,
பொட்டாஷியம் மற்றும் சோடியம் ஆகியவை காரத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது ஆண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும் அதேவேளையில் மெக்னீஸியம் மற்றும் கால்ஸியம் ஆகியவை அமிலத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது பெண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும் கண்டறியப்பட்டது.

இரண்டாவதுமுறை: உணவுமுறை சினைமுட்டையின் வெளிப்புறசுவரில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் அதன் மூலமாக அது விந்தணுவிலுள்ள ஆண்அணுவையோ (male sperm) அல்லது பெண்அணுவையோ (female sperm) ஈர்க்கும் திறனைப் பெற்றுக்கொள்கிறது என்றும் ஆய்வுசெய்யப்பட்டது.

இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு காரத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான உப்பேற்றிய மாமிசம்(salty meat) மசாலாபொருட்கள் கலந்த உணவுகள் பழங்கள் மற்றும் பொட்டாஷிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் பால் மற்றும் பால்பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்துக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது.

மாறாக பெண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான பால் மற்றும் பால் பொருட்கள். கால்ஸிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் மாமிசம் குறிப்பாக உப்பேற்றிய மாமிசம் பழங்கள் மசாலா மற்றும் நறுமண உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தவிர்ந்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதன்பின்னர் மற்றொரு வழிமுறையும் கண்டறியப்பட்டது: பெண்ணுடைய சினைமுட்டை முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்கையில் அதன்பின்னர் ஆணின் விந்தணு வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது என்றும் மாறாக ஆணின் விந்தணு முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்ககையில் அதன்பின்னர் பெண்ணின் சினைமுட்டை வெளிபட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது, உதாரணமாக சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்ட பின்னர் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் பெண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, இவ்வாறாக பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தம்பதிகளுக்குள் உடலுறவு எற்பட்டால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும். உடலுறவு ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் சினைமுட்டை வெளிப்பட்டால் பெண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது, ஆகவே ஆண்குழந்தையை விரும்பும்போது பெண்ணின் சினைமுட்டை கருவறையில் இருக்கும் நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளும்படியும் ஆண்குழந்தை விரும்பப்படாதபோது அந்த நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளாமலோ அல்லது உடலுறவு கொள்ளும்நிலை ஏற்பட்டால் ஆணின் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்தும்விடும்படியோ அல்லது உடலுறவின்போது ஆணுறையை பயன்படுத்தும்படியோ மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

இவ்வாறாக இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுதல் அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துதல் ஆகியவை குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் செயல்முறைகளாக இருந்துவருகிறது.

பெண்ணின் கருவறையில் சினைமுட்டை இருக்கும் தேதியை அவளது மாதவிடாய் தேதியை வைத்து தீர்மானித்து விடலாம் என்றபோதும் அது தோராயமான கணிப்பாகத்தான் இருக்கும், கருவறைக்குள் என்டோஸ்கோப்பி கருவிமூலம் உற்றுநோக்கி கணிப்பதன் மூலமே சினைமுட்டையின் வெளிப்பாட்டை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

தவ்பான்(ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

"ஆணின் இந்திரியத்திற்கு முன்பாக பெண்ணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது ஆண்குழந்தையாகும். பெண்ணின் இந்திரியத்திற்கு முன்பாக ஆணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது பெண்குழந்தையாகும்"

தவ்பான்(ரலி) அறிவித்துள்ள மற்றொரு நீண்ட ஹதீஸ் முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.

யூதரிலுள்ள ரப்பி (அறிஞர்) ஒருவர் அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) ஆண்குழந்தை பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதிலுரையாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாவது.

"அவர்கள் (உடலுறவில்) ஒன்றுபடும்போது ஆணின் இந்திரியமும் பெண்ணின் இந்திரியமும் வெளிப்படுகிறது, ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி ஆண்குழந்தை உருவாகிறது. பெண்ணின் இந்திரியம் ஆணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி பெண்குழந்தை உருவாகிறது"

"ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைத்துவிடுதல்" என்றால் பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் ஆணின் விந்தணு வெளிப்படுதல் என்று பொருள்படும்.

இதன்பின்னர் மருத்துவநிபுணர்கள் மேம்பட்ட அறிவியல் வழிமுறையை உருவாக்கினார்கள் அதற்கு ""தேர்வுசெய்து விந்தணுவை செலுத்தும்முறை அல்லது விந்தணுவை கட்டுப்படுத்தும்முறை - selective sperm vaccination or sperm inhibition என்று பெயராகும், இந்தமுறையில் விந்தணுவில் இடம்பெற்றுள்ள ஆண்பாலுக்குரிய x குரோமோஸோமிலிருந்து பெண்பாலுக்குரிய y குரோமோஸோமை பிரித்துவிடுகிறார்கள். இந்த செயல்முறை பெண்ணின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் முறையான மருத்துவ தொழில்நுட்பத்தின் மேற்பார்வயில் நடைபெறுகிறது.

ஆணின் விந்தணுவில் x மற்றும் y குரோமோஸோம்கள் (மரபணு துகள்கள்) இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் yy குரோமோஸோம்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன, அதாவது ஆணின் விந்தணுவில் ஆண்பாலுக்குரிய குரோமோஸோம்களும் பெண்பாலுக்குரிய குரோமோஸோம்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் பெண்பாலுக்குரிய குரோமோஸோமகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன, விந்தணுவிலுள்ள y குரோமோஸோம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக xy என்ற மரபணு உருவாகிறது. அது ஆண்குழந்தைக்குரியது. மாறாக விந்தணுவிலுள்ள x குரோமோúஸôம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக xx என்ற மரபணு உருவாகிறது. அது பெண்குழந்தைக்குரியது, இதனடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விந்தணுவிலுள்ள (ஆண்பாலுக்குரிய) y குரோமோஸோம்லிருந்து (பெண்பாலுக்குரிய) x குரோமோúஸôமை பிரித்துவிட்டு பின்னர் சோதனைக்குழாயில் சினைமுட்டையுடன் விந்தணுவை இணைத்து கருவூட்டம் செய்கிறார்கள், தம்பதிகள் ஆண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் y குரோமோஸோம்உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது, தம்பதிகள் பெண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் x குரோமோúஸôம் உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது.

இதேபோன்று மற்றொரு முறையை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். அது மேற்கூறப்பட்ட முறையிலிருந்து சிறிது வேறுபட்டது, இந்த முறையில் சோதனைக்குழாயில் விந்தணுவுடன் சினைமுட்டையை இணைத்து கருவூட்டம் செய்தபின்னர் கருவுற்ற முட்டையை ஆய்வுசெய்கிறார்கள். கருவுற்ற சினைமுட்டை xy மரபணுவை பெற்றிருந்தால் அது ஆண்குழந்தைக்குரிய கருவாகும். கருவுற்ற சினைமுட்டை xx மரபணுவை பெற்றிருந்தால் அது பெண்குழந்தைக்குரிய கருவாகும், ஆகவே ஆண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் xy மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள். பெண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் xx மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள்.

இவையனைத்தும் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளாகும். இது வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இன்றுவரை நிகழந்துகொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தின் எதார்த்தநிலை (taHqeeq al ManaaT) இவ்வாறு விளக்கப்பட்ட பின்னர் இதற்குரிய ஹுகும் ஷரியா(இறைசட்டம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1, விருப்பத்திற்கு மாற்றமாக பிறக்கும் குழந்தையை கொலைசெய்வது ஹராமான செயலாகும் ஏனெனில் இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்யப்படும் கொலையாகும், இதற்கு தண்டனை மறுமையில் நரகநெருப்பில் நிரந்தரமாக வீழ்வதாகும். மேலும் இந்த உலகத்தில் அதற்கு உரியவர்களால் அந்தப்பாவம் மன்னிக்கப்படாவிட்டால் அதற்காக பழிதீர்க்கப்பட வேண்டும் (qisas) அல்லது இரத்தஈட்டுத்தொகை(diya) வழங்கப்படவேண்டும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

عَذَابًا عَظِيمًا .وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ

எவரேனும் ஒருவர் ஒரு மூ*மினை வேண்டுமென்றே கொலை செய்வாராயின் அவருக்கு உரிய தண்டனை நரகமேயாகும். மேலும் அல்லாஹ் அவர்மீது கோபம் கொள்கிறான் இன்னும் அவரை சபிக்கிறான் அவருக்கு மகத்தான வேதனையை தயாரித்து வைத்திருக்கிறான். (அந்நிஸா: 93)

11, பெற்றோர்கள் விரும்பாதபோது கற்பத்தில் வைத்து கருவில் இருக்கும் சிசுவை கொல்வதும் தண்டனைக்குரிய ஹராமான செயலே.

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரி. முஸ்லிம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

"ஹுதைல் கோத்திரத்திலுள்ள பெண்கள் இருவர் (சண்டையிட்டுக்கொண்டு) ஒருவர் மீது மற்றொருவர் கல்லெறிந்துவிட்டார். அதனால் அந்தப்பெண்ணின் கற்பம் கலைந்துவிட்டது, அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) இது முறையிடப்பட்டது. குற்றவாளி ஆண்அடிமையையோ அல்லது பெண்அடிமையையோ தியத்தாக கொடுக்கவேண்டும் என்று அவர்கள்(ஸல்) தீர்ப்புக் கூறினார்கள்"


111, கற்பம் தரிப்பதற்கு வாய்ப்புள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது மூலமாகவோ அல்லது உடலுறவில் ஈடுபட்டபின்னர் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுவது மூலமாவோ அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது மூலமாகவோ தற்காலிகமாக கருவுறுதலை தவிர்த்துக் கொள்வதற்கு அனுமதியுண்டு, உணவுமுறையில் மாற்றம் செய்துகொள்வது. காரம் மற்றும் அமிலத்தன்மை கொண்ட திரவத்தை கருவறைக்குழாயில் பீச்சிக்கொள்வது ஆகியவையும் அனுமதிக்கப்பட்டதே. இவற்றில் எந்தவிதான ஆட்சேபனையும் கிடையாது அவைகளுக்கு உணவு மற்றும் மருத்துவம் ஆகியவை தொடர்பான பொதுவான ஆதாரம் உள்ளது,

அபூஸயீது அல்குத்ரி (ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

ஆகவே நாங்கள் தொடர்ச்சியாக உடலுறவு கொள்ளாமல் விலகியிருக்கும் முறையை பின்பற்றுவதற்கு தீர்மானித்து அதை அல்லாஹ்வின்தூதரிடம்(ஸல்) கூறினோம், அதற்கு அவர்கள் இவ்வாறு பதில் கூறினார்கள்.

"நீங்கள் இவ்வாறு செய்யாமல் இருக்கவேண்டாமா? அல்லாஹ் இருக்கவேண்டும் என்று விதித்த எந்த ஆத்மாவும் மறுமை நாளுக்குள் இருந்தே தீரும்"


IV. ஆணின் விந்தணுவிலிருந்து பெண்பால் குரோமோúஸôமையும் ஆண்பால் குரோமோúஸôமையும் தனியாக பிரித்துவிட்ட பின்னர் ஆண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள ஆண்பால் குரோமோúஸôமைக் (y)கொண்டு கருவூட்டம் செய்வது அல்லது பெண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள பெண்பால் குரோமோúஸôமைக் (x) கொண்டு கருவூட்டம் செய்வது ஆகிய செயல்முறையைப் பொறுத்தவரை இவற்றை செய்வதற்கு அனுமதி கிடையாது ஏனெனில் இது குழந்தைப்பேறு இல்லாத பெண் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளும் மருத்துவ முறையையோ அல்லது சிகிச்சை முறையையோ சாராது, இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள வழியில்லாத சட்டரீதியான தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே அனுமதியுண்டு.

குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்யும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்முறைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு பெண் தனது அந்தரங்க உடல்பகுதிகளை(aurah) அந்நியர்களிடம் வெளிப்படுத்த நேரிடும் ஏனெனில் இந்த செயல்முறையில் பெண்ணின் சினைப்பையிலுள்ள சினைமுட்டையை பிரித்தெடுப்பதற்கும் கருவுற்ற சினைமுட்டையை கருவறைக்குள் செலுத்துவதற்கும் அந்தரங்க உடல்பகுதிகளை வெளிப்டுத்தவேண்டிய நிலை ஏற்படும், மருத்துவ சிகிச்சை செய்துகொள்வதற்கு மட்டுமே இது அனுமததிக்கப்ட்டிருக்கிறது, குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செல்முறைகள் மருத்துவ சிகிச்சையில் அடங்காது என்ற காரணத்தால் இது தடைசெய்யப்பட்ட ஹராமான செயலாகும் இதற்கு ஷரியாவில் அனுமதி கிடையாது.

முடிவுரையாக, இஸ்லாத்தின் அகீதாவோடு தொடர்புடைய முக்கியமான உண்மையை இங்கு குறிப்பிடவேண்டும் ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு அது மிகவும் முக்கியமானதாகும், மேற்கூறப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் சிகிச்சைமுறைகளையும் மனிதன் மேற்கொள்வதற்குக் காரணம் அவன் படைப்பாற்றலை பெற்றிருக்கிறான் என்ற அர்த்தத்தில் அல்ல, ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் கருவுறுதல் என்ற நிகழ்விலும் அல்லாஹ்(சுபு) படைத்து நிர்ணயம் செய்துள்ள சில பண்புகளையும் இயல்புகளையும் மனிதன் கண்காணித்து அவற்றை விளங்கிக்கொள்ளலாம், இந்த மகத்தான செயற்பாங்கின் போக்கை மனிதன் கண்காணிக்கலாம் அவைகளைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம் மற்றும் பல பரிசோதனைகளையும் நடத்தலாம், இந்த ஆய்வின் அடிப்படையில் அவன் குறிப்பிட்ட உணவு முறைகளையும் குறிப்பிட்ட செயல்முறைகளையும் பின்பற்றலாம், மேலும் அவன் ஆணின் விந்தணுவிலுள்ள ஆண் குரோமோúஸôமையும் பெண் குரோமோúஸôமையும் தனித்தனியாக பிரித்து பெண்ணின் கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்து அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்தலாம், ஆனால் இதன் விளைவாக படைப்புகள் எதுவும் நிச்சயமாக உருவாகாது. அது முற்றிலும் அல்லாஹ்(சுபு) என்ற படைப்பாளன் கையில் இருக்கிறது, அல்லாஹ்(சுபு) தீர்மானிக்கும்போதுதான் படைப்புகள் உருவாகி இயக்கத்திற்கு வருகிறது, அல்லாஹ்(சுபு) அவ்வாறு நாடவில்லை என்றால் மனிதன் எத்தனை சோதனைகள் மேற்கொண்டாலும் எத்தனை ஆய்வுகள் மேற்கொண்டாலும் எத்தனை செயல்முறைகளை நிறைவேற்றினாலும் எந்தவிதமான படைப்பும் ஒருபோதும் உருவாகாது.

அல்லாஹ்(சுபு) படைக்க நாடும்போது மட்டும்தான் உயிர்கள் ஜனிக்கின்றன. அவன்(சுபு) நாடவில்லை என்றால் உயிர்கள் ஜனிக்காது,அல்லாஹ்(சுபு) மட்டும்தான் படைப்பாளன் என்ற உண்மையும் அவன்தான் ஆணையும் பெண்ணையும் படைக்கிறான் என்ற உண்மையும் மறுக்கமுடியாத வகையில் திட்டவட்டமான ஷரியா ஆதாரங்களால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ 6:102

அவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. அவன்தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளன். ஆகவே அவனையே வணங்கிவழிபடுங்கள் இன்னும் அவனே அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பாளன் ஆவான், (ற்ம்வ் அல்அன்ஆம் 6:102)

إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ 15:86

நிச்சயமாக உமது இறைவன் (அனைத்தையும்) படைத்தவனாகவும் எல்லாவற்றையும்அறிந்தவனாகவும் இருக்கிறான், ( அல்ஹிஜ்ர் 15:86)

ஆகவே எவன் படைக்கிறானோ அவன் படைக்காதவனைப்போல் ஆவானா? நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா? (அந்நஹ்ல் 16:17)

هَذَا خَلْقُ اللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِنْ دُونِهِ بَلِ الظَّالِمُونَ فِي ضَلَالٍ مُبِينٍ 31:11

இவை (அனைத்தும்) அல்லாஹ்வின் படைப்பாகும் அவனையன்றி இருப்பவர்கள் எதைப் படைக்கிறார்கள் என்பதை எனக்குக் காண்பியுங்கள் (என்று நீர் கேட்பீராக) அவ்வாறல்ல. அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ( லூக்மான் 31:11)


يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ

ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ 22:73

மனிதர்களே. (உங்களுக்கு) ஓர் உதாரணம் கூறப்படுகிறது ஆகவே அதை செவிதாழ்த்திக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது, இன்னும் ஒர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போய்விட்டால் பிறகு அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பவும் கைப்பற்றவும் முடியாது, தேடுபவரும் தேடப்படுபவர்களும் பலஹீனர்களே, ( அல்ஹஜ் 22:73)

يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّى وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنْبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ 22:5

மனிதர்களே (மறுமைநாளில்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள் என்றால் (அறிந்துகொள்ளுங்கள்) நிச்சயமாக நாம் உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்னர் அலக்கிலிருந்தும் பின்னர் உருவாக்கப்பட்டதும் உருவாக்கம் பெறாததுமான தசைக்கட்டியிலிருந்தும் படைத்தோம், உங்களுக்கு விளங்குவதற்காகவே (இதனை விளக்குகின்றோம்) மேலும் நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை கருவறையில் தங்கச்செய்கிறோம் பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகறோம், பிறகு உங்களை வாலிபத்தை அடையச்செய்கிறோம், அன்றியும் உங்களில் (இளம் வயதிலேயே) மரணம் அடைபவர்களும் இருக்கிறார்கள். (பெரியவராக வளர்ந்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றும் அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள், இன்னும் நீங்கள் வரண்ட பூமியை பார்க்கிறீர்கள் அதன்மீது நாம் நீரை பொழியச்செய்வோம் எனில் அது பசுமையாகி அழகான பல்வகை புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது, ( அல்ஹஜ் 22:5)

وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آَخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ 23:12-14

நிச்சயமாக நாம் (முதல்) மனிதரை களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம் பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம் பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலைக்கு ஆக்கினோம் பின்னர் அலக்கை தசைப்பிண்டமாக ஆக்கினோம் பின்னர் அந்த தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கிளோம் பின்னர் அவ்வெலும்புகளை மாமிசத்தைக் கொண்டு மூடினோம் பின்னர் அதனை நாம் முற்றிலும் வேறொரு படைப்பாக (மனிதனாக) ஆக்கினோம், (ஆகவே படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியம் உடையவன் படைப்பாளர்களில் மிக அழகானவன், (அல்மூ*மினூன் 23:12-14)

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ 42:49,50

வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சிஅதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியதாகும் ஆகவே அவன் தான் நாடியவற்றை படைக்கிறான் தான் நாடியவர்களுக்கு பெண்மக்களை அளிக்கிறான் இன்னும் தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அளிக்கிறான் அல்லது ஆண்மக்களையும் பெண்மக்களையும் சேர்த்து அளிக்கிறான் அன்றியும் தான் நாடியவர்களை மலடாகவும் ஆக்குகிறான், நிச்சயமாக. அவன் மிக்க அறிந்தவன் பேராற்றல் உடையவன், (அஷ்ஷூரா 42: 49,50)

فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ 82:6-8

மனிதனே. அருட்கொடையாளனும் சங்கைமிக்கவனுமான உனது இறைவனுக்கு மாறுசெய்யும்படி உன்னை ஏமாற்றியது எது? அவன்தான் உன்னைப் படைத்து ஒழுங்குபடுத்தி செவ்வையாக்கினான் இன்னும் எந்த வடிவத்தில் நாடினானோ அதில் உன்னைப் பொருத்தினான், (ற்ம்வ் அல்இன்*பிதார் 82: 6-8)

هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 3:6

அவன் தான் நாடியவாறு கருவறையில் உங்களை உருவாக்குகின்றான் அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை அவன் யாவரையும் மிகைத்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கிறான், ( ஆலஇம்ரான் 3: 6 )

நேர்வழியிலிருந்து விலகிப்போய் விடாமல் இருப்பதற்காக ஒருவர் இந்த உண்மைகளை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும், அல்லாஹ்(சுபு) வழிகேட்டில் சென்றுவிடாமல் நம்மை பாதுகாப்பானாக!

அல்லாஹ்(சுபு) இந்த பிரபஞ்சம் முழுவதிலும் ஞானத்தை விதைத்திருக்கிறான் மேலும் மனிதன் அறியாதவற்றை யெல்லாம் அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறான் அல்லாஹ்(சுபு) மனிதனுக்கு அறிவாற்றலையும் சிந்தனைத்திறனையும் அருட்கொடையாக வழங்கியிருக்கிறான் மேலும் அல்லாஹ்(சுபு) மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவன்மீது ஆழமான நம்பிக்கை கொள்வதற்காக அவன்(சுபு) புலனுணர்வு மூலம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலை அளித்திருக்கின்றான், நிராகரிப்பவர்கள் இந்த உலகத்தில் இழிவையும் மறுமைநாளில் கடுந்தண்டனையையும் அடைந்து கொள்வார்களாக!இந்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாளித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்(சுபு) வுக்கே எல்லா புகழும் உரித்தாகுக என்பதுதான் நமது இறுதி துஆவாகும்!

வஸ்ஸலாம்


18 ஜமாதுல்ஆஹிர் 1430


Sources From warmcall.blogspot.com

கருவை உறைநிலையில் வைப்பது (Freezing the embryo) , குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பது (determining the child gender ) ஆகியவை தொடர்பான ஹுகும் ஷரியா: பகுதி 1


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கேள்வி:

சில அறிவியல் ஆய்வுகள் முன்பு பேச்சளவில் மட்டும் இருந்துவந்த நிலைமாறி இப்போது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எதார்த்த வாழ்க்கûயில் அவற்றை மக்கள் செயல்படுத்த துவங்கிவிட்டார்கள், இவற்றில் உறைநிலையில் மனிதக்கருவை வைத்தல் மற்றும் குழந்தையின் பாலினத்தை (ஆணா அல்லது பெண்ணா என்று) நிர்ணயித்தல் ஆகியவை அடங்கும், மேற்கு நாடுகளில் இது சாதாரன விஷயமாகிவிட்ட நிலையில் இப்போது முஸ்லிம் நாடுகளில் இது நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, இந்த ஆய்வுகள் இப்போது சோதனைக் கட்டத்தையும் ஆராய்ச்சி நிலைகளையும் தாண்டி பல முஸ்லிம் நாடுகளில் மக்களால் செயல்படுத்தப்பட்டு வருக்கிறது, ஆகவே இந்த விஷயம் தொடர்பான ஹுகும் ஷரியா(இறைசட்டம்) என்னவென்று விளக்கிக் கூறுங்கள். அல்லாஹ்( சுபு) உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

பதில்:

இந்த கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்பாக சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும், அல்லாஹ்(சுபு) மனித இனத்தை படைத்து மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான், மேலும் மனிதனிடத்திலும் இந்த பிரபஞ்சத்திலும் குறிப்பிட்ட இயல்புகளையும் நியதிகளையும் அளவுகோல்களையும் பண்புகளையும் அல்லாஹ்(சுபு) படைத்து நிர்ணயித்திருக்கிறான், இதன் காரணமாக மனிதன் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவனாகவும் அதன் மூலமாக அறிவியல் ஞானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காக அவற்றை பயன்படுத்தக் கூடியவனாகவும் இருக்கிறான். இத்தகைய பயனுள்ள அறிவையும் அதனை மனிதர்களுக்கு எடுத்துக்கூறி விளக்குபவர்களையும் அல்லாஹ்(சுபு) புகழ்ந்து கூறியிருக்கிறான். ஏனெனில் இத்தகைய அறிஞர்கள்தான் அல்லாஹ்(சுபு) இருப்பதை ஆழமாக அறிந்து அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கக் கூடியவர்கள், இந்த பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் ஆய்வுசெய்து அதன் இரகசியங்களை விளங்கிக்கொள்வதன் மூலமாக அவற்றின் படைப்பாளனின் மகத்துவத்திற்கும் அவனுடைய எல்லையற்ற ஆற்றலுக்கும் அவனுடைய மகத்தான ஞானத்திற்கும் இவர்கள் உறுதியான சாட்சிகளாக விளங்குகிறார்கள்,

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ

அவனுடைய அடியார்களிலெல்லாம் அவனை அஞ்சி நடப்பவர்கள் அறிவுடையோர்தான் (அல் பாதிர் : 28)

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"وا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافر الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ الْأَنْبِيَاءِ إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ "
(உலமாக்கள் எனப்படும்) அறிவுடையோர்தான் இறைத்துனதர்களின் வாரிசுகள் ஆவார்கள், தினாரையோ அல்லது திர்கத்தையோ (தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ) இறைத்தூதர்கள் வாரிசுரிமையாக விட்டுச் செல்லவில்லை, அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் அறிவுதான்! அதை எடுத்துக் கொள்பவர் விசாலமான வாய்ப்புகளை பெற்றவர் ஆவார் (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: இப்னுமாஜா)
எனினும். ஷைத்தானும் அவனை பின்பற்றுபவர்களும் நிராகரிப்பவர்களும் இத்தகைய அறிவை தவறாக பயன்படுத்தி மனிதர்களுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துவதுடன் மனித இனத்திற்கு பெரும் களங்கத்தையும் ஏற்படுத்துகிறார்கள். மேலும் மனிதர்களை வழிகெடுத்து நேர்வழியிலிருந்து விலகிப்போகும்படி செய்கிறார்கள், அறிவியல் நுட்பங்களை சரியான வழியில் பிரயோகிப்பதை விடுத்து தவறான வழியில் பிரயோகிக்கத் தூண்டுகிறார்கள், இவ்வாறாக குளோனிங் முறையை கையாளுதல். மனிதர்களின் ஆண்விந்தணுவையும் பெண்சினை முட்டையையும் இணைத்து கருவூட்டம் செய்து அந்த கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து மற்றவர்களுக்கு அதை விற்பனை செய்தல். இறந்த உடல்களை அறுத்து பரிசோதனை மேற்கொள்ளுதல். பிறகு அந்த உடல்களிலிருந்து உறுப்புகளை அகற்றி அவற்றை விற்பனை செய்தல். இதற்கும் மேலாக உயிரோடு இருக்கும் மனிதர்களை கடத்திச்சென்று அவர்களை கொலைசெய்து பிறகு அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்தல் ஆகிய பாவச்செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள், கருவுற்ற சினைமுட்டைகள் மற்றும் கருவிலுள்ள சிசுக்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சோதனைகளில் அவற்றை உறைநிலையில் வைத்து அந்த சிசுக்களின் வாழ்வை விருப்பம்போல் தவறாக பயன்படுத்துவதற்காக அவற்றின் உறுப்புகளை பிரித்தெடுத்தல் போன்ற பாவச்செயல்களை அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரிலும் மருத்துவ பரிசோதனை என்ற பெயரிலும் கட்டுப்பாடின்றி நிகழ்த்தி வருகிறார்கள்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ

நிச்சயமாக! ஆதமுடைய சந்ததியினரை நாம் கண்ணியப்படுத்தி இருக்கின்றோம் ( அல்இஸ்ரா : 70)


அல்லாஹ்(சுபு) மனிதர்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் உண்மையான அறிவாற்றல் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. மேலும் இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் மற்ற படைப்பினங்களிலிருந்து தனித்துவம் கொண்ட சிறந்த படைப்பாக மனிதன் உருவெடுத்திருக்கிறான், இதன் மூலமாக மனிதன் அருள்பெற்றவனாகவும் மனநிறைவு கொண்டவனாகவும் ஆகலாம். மேலும் இதன் மூலமாக அவனுடைய உலக வாழ்க்கையையும் அறிவார்ந்த நிலையையும் உயர்த்திக் கொள்ள்ளலாம், ஆனால் தீயவர்களாகவும் களங்கமுற்ற சிந்தனை உடையவர்களாகவும் இருக்கும் சில அறிவியல் அறிஞர்கள் இந்த அறிவியல் அறிவைக் கொண்டு மனித இனத்தை வழிகெடுத்து அதை தாழ்ந்த நிலையிலுள்ள விலங்குகள் நிலைக்கு இட்டுச்செல்லவும் மனிதனை தீய ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி மனித குலத்தை பாவத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்தவும் துணிந்துவிட்டார்கள்.


மேற்கூறப்பட்ட கேள்விக்கு இப்போது விடை காண்போம்:

கருவை உறையவைத்தல் (Freezing the embryo):

குறிப்பிட்ட சில நோய்களின் காரணமாக மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணு இணைந்து கருவுறுதல் நடைபெற்று இயற்கையாக கற்பம் தரிக்க இயலாத நிலை சில தம்பதிகளுக்கு நேரிடுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது, பெண்ணின் சினைக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு. சினைப்பையின் இயக்கத்திறன் குறைவு. கருப்பையின் பலவீனம். அல்லது ஆணின் விந்தணுவின் எண்ணிக்கை குறைவு மற்றும் விந்தணுவின் இயக்கத்திறன் குறைவு ஆகிய காரணங்களினால் இயற்கையாக ஒரு பெண் கற்பம் தரிக்கமுடியாத நிலை ஏற்படுகிறது, ஆகவே மகப்பேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பெண்ணின் கருவறைக்கு (uterus) வெளியே தகுந்த சூழலில் ஒரு சோதனைக்குழாயில்(Test tube) மனைவியின் சினைமுட்டையை(ovum) கணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம்(fertilisation) செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள், இதன் மூலமாக மகப்போறு அற்ற நிலையிலிருக்கும் பெண்ணுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது, குளோமிட்(clomid) எனப்படும் மருத்துவமுறை மூலமாக ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சினைப்பையிலிருந்து என்டோஸ்கோப்பி(endoscopy) எனப்படும் சிகிச்சைமுறையின் வாயிலாக சரியான தருணத்தில் பிரித்தெடுத்து ஒரு கடினத்தன்மை கொண்ட தட்டில் வைத்து பின்னர் ஒரு சோதனைக்குழாயில் அதை அவளுடைய கணவனின் விந்தணுவுடன் இணைத்து கருவுட்டம் செய்கிறார்கள், பிறகு கருவுற்ற அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்துகிறார்கள். அல்லாஹ்(சுபு) நாடினால் அது குழந்தையாக வளர்ச்சி அடைகிறது அல்லது அல்லாஹ்(சுபு) நாடினால் அது செயலற்று இறந்துவிடுகிறது பின்னர் இயற்கையாக அது கருவறையில் அழிக்கப்பட்டுவிடுகிறது, இத்தகைய மருத்துவ சிகிச்சையை அந்தப் பெண்ணும் அவளது கணவனும் தெரிவுசெய்யும் சிறப்பு மருத்துவ நிபுணர் மேற்கொள்கிறார்.

சில சந்தர்ப்பங்களில் கருவின் இறப்புவிகிதம் 90 சதவீதம் அளவுக்கு இருப்பதாலும் தம்பதிகள் குழந்தைப்பேறுக்காக ஏக்கம் கொள்வதாலும் அவர்கள் இந்த சிகிச்சையை திரும்பத்திரும்ப மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விழைகிறார்கள், பெண்ணுக்கு இது ஒரு கஷ்டமான மருத்துவ சிகிச்சை என்பதால் அவளிடமிருந்து அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகளை பெறுவதற்காக குறிப்பிட்ட மருந்துகள் அவள் உடலில் செலுத்தப்படுகின்றன, சோதனைக்குழாயில் பெண்ணின் சினைமுட்டைகளை கருவூட்டம் செய்யும் செயல்முறையில் முழுவெற்றிக்கு உத்திரவாதம் இல்லை என்ற காரணத்தால் ஒரு சினைமுட்டை கருவூட்டம் பெறாதபோது மற்றொன்றை உபயோகப்படுத்தும் விதமாக சில சினைமுட்டைகளையாவது பெண்ணிடமிருந்து எடுப்பது அவசியமாக இருக்கிறது, இவ்வாறு எடுக்கப்பட்ட சினைமுட்டைகளை கருவூட்டம் செய்து அவற்றை இருப்பில் வைத்துக் கொண்டு அதில் ஒன்றை பெண்ணின் கருவறையில் செலுத்துகிறார்கள், அதை கருவறை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மற்றொன்றை செலுத்துகிறார்கள். இவ்வாறு இந்த முயற்சி சிலமுறை மேற்கொள்ளப்படுகிறது.

கருவூட்டம் பெற்ற கருமுட்டை ஒரு தனிப்பட்ட கருவியின் துணைகொண்டு பெண்ணின் கருவறையில் செலுத்தப்படுகிறது, வெற்றிவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு பொதுவாக மூன்று கருமுட்டைகள் கருவறையில் செலுத்தப்படுவதற்கு தயார்நிலையில் வைக்கப்படுகின்றன, ஒருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதில் தோல்வி ஏற்படும்போது மற்றொன்று பயன்படுத்தப்படுகிறது, சோதனைக்குழாயில் கருவூட்டம் ஏற்படுத்தும் இந்த முறையில் ஒரே தடவையில் முயற்சி வெற்றிபெற்று கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ற காரணத்தாலும் ஒவ்வொரு முறையும் என்டோஸ்கோப்பி மூலம் சினைமுட்டையை பிரித்தெடுப்பது அந்தப்பெண்ணுக்கு மிகுந்த கஷடத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற காரணத்தாலும் குறிப்பிட்ட மருந்துகளை அவள் உடலில் செலுத்தி அதன்மூலம் அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகள் அவளிடமிருந்து பெறுகிறார்கள், இதன்மூலம் அடிக்கடி மருத்துவ சிகிச்சைக்கு உட்படும் கஷடத்திலிருந்து அவள் காக்கப்படுகிறாள்.

எனினும் கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை வளர்ச்சி அடையும் நிலையோ அல்லது செயலற்றுப் போகும் நிலையோ உடணடியாக ஏற்படாது. உண்மையில் பலமணி நேரத்திற்குப் பின்னரோ அல்லது சில நாட்களுக்குப் பின்னரோதான் அதுபற்றி கண்டறியமுடியும், இந்த காலகட்டத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகளை தகுந்த சூழலில் சரியான வெப்பத்தில் இருக்கும்படியாக உறைநிலையில் (frozen) பாதுகாத்து வைக்கவில்லை எனில் அவை இறந்துவிடும். ஆகவே இந்த உபரியான கருமுட்டைகள் திரவநிலை நைட்ரஜைன் (liquid nitrogen) எனும் திரவத்தில் உறைநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. தேவைப்படும்போது பின்னர் அவை உபயோகப் படுத்தப்படுகின்றன.

இவ்வாறுதான் கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து பாதுகாக்கும் வழிமுறை ஏற்பட்டது, பலமுறை பெண்ணிடமிருந்து சினைமுட்டைகளை பிரித்தெடுக்கும் கஷ்டத்தை நீக்குவதற்காகவும் பலமுறை அதற்காக மருத்துவ சிகிச்கை பெறும் சிரமத்தை குறைப்பதற்காகவும் ஒரே சமயத்தில் பெண்ணிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட சினைமுட்டைகள் பெறப்பட்டு கருவூட்டம் செய்யப்படுகின்றன, கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளில் ஒன்று கருவறைக்குள் செலுத்தப்பட்டதற்குப் பின்னர் முயற்சி தோல்வியுறும் பட்சத்தில் மறுமுறை இதே சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏதுவாக உபரியாக உள்ள கருமுட்டைகள் உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.

இருந்தபோதிலும் முயற்சி வெற்றி பெற்று மருத்துவ சிகிச்சை முடிவுற்ற பின்னர் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் வர்த்தக பொருளாக ஆக்கப்படுகின்றன, குறிப்பாக நிராகரிக்கும் மேற்கத்திய நாடுகளில் இந்த தீயசெயல் சாதாரனமாக நடந்துவருகின்றன, நீண்ட காலத்திற்கு அல்லது சில தருணங்களில் ஒரு வருட காலத்திற்குக்கூட கருமுட்டைகள் உறைநிலையில் வைக்கப்பட்டு எந்த பெண்ணடமிருந்து எடுக்கப்பட்டதோ அந்த பெண்ணிற்கு செலுத்தப்படாமல் மற்ற தம்பதிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணிற்கோ விற்பனை செய்யப்படுகின்றன, இத்தகைய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உறைநிலைக் கருக்களின் சேமிப்பு வங்கிகளாக செயல்படுகின்றன, செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை அடிப்படையில் வெவ்வேறு பெண்களிடமிருந்து எடுக்கப்படும் சினைமுட்டைகள் வேறுபாடின்றி வெவ்வேறு ஆண்களின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யப்படுகின்றன, முதல்தடவை கருமுட்டை செலுத்தப்பட்டு முயற்சி தோல்வியடைந்த மற்ற பெண்ணகளுக்கு இத்தகைய அந்நிய கருமுட்டைகள் செலுத்தப்படுகின்றன, இவ்வாறு இவர்கள் பிறக்கப்போகும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழியை தவறாக மாற்றியமைத்து சந்ததிகளின் மரபுவழி சீர்முறையை (genetical line) திரித்து மனித இனத்தை வழிகேட்டில் ஆழ்த்துகிறார்கள்!

மேலும் இத்தகைய உறைநிலை மருத்துவ தொழில்நுட்பம் கருமுட்டை அளவில் நிறுத்திக் கொள்ளாமல் கருவூட்டம் பெறாத சினைமுட்டைகளையும் கருநிலை சிசுக்களையும்(ச்ர்ங்ற்ன்ள்ங்ள்) உறைநிலையில் சேமித்து வைத்து அவைகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள், இத்தகைய வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கும் சிலர் சில தருணங்களில் பிரபலமான சில மனிதர்களுடைய சினைமுட்டைகளையோ அல்லது கருநிலை சிசுக்களையோ உள்ளபடியே விற்பனை செய்துவருகிறார்கள்!

இதுதான் உறைநிலை கருமுட்டை மற்றும் கருநிலை சிசுக்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைநிலையாகும், இந்த விஷயம் தொடர்பாக விரிவான விளக்கம் இருந்தபோதிலும் நாம் கூறியுள்ளவை ஒட்டுமொத்த விஷயத்தையும் உள்ளடக்கிய சுருக்கமான விளக்கமாகும்.


இந்த விளக்கங்களின் அடிப்படையில் இதற்குரிய ஹுகும் ஷரியா(இறைசட்டம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1. சட்டரீதியான தம்பதிகளில் உள்ள பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய கணவனின் விந்தணுவோடு இணைத்து சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்வதைப் பொறுத்தவரை அதற்கு அனுமதியுண்டு, திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இயல்பாக விரும்புவார்கள் என்ற நிலையில் ஏதேனும் உடல்ரீதியான பிரச்சினைகளால் அவள் கருவறையில் இயற்கையாக கருவுறுதல் நடைபெறுவதற்கு வாய்ப்பபில்லை எனும்போது இது அனுமதிக்கப்பட்டதுதான் ஏனெனில் இது மருத்துவ சிகிச்சையை சார்ந்ததாகும், அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏவியிருக்கிறார்கள். உஸôமா இப்ன் ஷுரைக்(ரலி) அறிவித்து அபூதாவூதில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.


அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ

ஆம்! நீங்கள் நிச்சயமாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் ஏனெனில் அல்லாஹ் அஸ்வஜல் நிவாரணம் இல்லாத நிலையில் முதுமையைத்தவிர (மரணத்தைத் தவிர) எந்த நோயையும் விட்டுவிடவில்லை.


எனினும் குழந்தைப்பேறுக்காக இந்தமுறையில் சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.


முதலாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டுதல் மேற்கொள்வது சட்டரீதியான தம்பதிகளுக்குள் மட்டுமே நடைபெறவேண்டும்,


ருவைபா இப்ன் தாபித் அல்அன்ஸôரி(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

لَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْقِيَ مَاءَهُ زَرْ غَيْرِهِ

அல்லாஹ்வின் மீதும் மறுமைநாள் மீதும் ஈமான் கொண்ட எவருக்கும் மற்றவர்களின் பயிரில் நீர்பாசனம் செய்வதற்கு அனுமதியில்லை.


ஆகவே ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சட்டரீதியான கணவனின் விந்தணுவைக் கொண்டு அல்லாது கருவூட்டம் செய்வதற்கு அனுமதியில்லை.

இரண்டாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் மனைவியின் கருவறையில் மட்டுமே செலுத்தப்படவேண்டும், என்பதோடு மனைவி இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும், மேற்குநாடுகளில் நடைபெறுவதைப்போல கணவனின் இறப்புக்குப் பின்னர் இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனுமதியில்லை, மேற்குநாடுகளின் மக்களைப் பொறுத்தவரை ஒரு பெண் குழந்தையை விரும்பும்போது கணவன் உயிருடன் இல்லாதபோதும் கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொண்டு குழந்தை பெற்றுகொள்வதில் எந்த தீங்கும் இல்லையென்று கருதுகிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை ஏனெனில் கணவன் உயிருடன் இல்லாதநிலையில் மனைவி கற்பம் அடைந்தால் பிறகு அவள் பெரும்பாவம் புரிந்தவர்களில் ஆகிவிடுவாள், உமர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீûஸ அவர்கள் அறிவித்தபோது ஸஹாபாக்கள் எவரும் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, இவ்விருவரும் அறிவித்தது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதற்கு முரண்பாடாக இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக மற்ற ஸஹாபாக்கள் இதற்கு மறுப்பு தெரிவித்திருப்பார்கள், இதனடிப்படையில் இது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவாக (இஜ்மா அஸ்ஸஹாபா) இருக்கிறது.

எனவே கணவன் இல்லாத நிலையில் மனைவி கற்பம் அடைதல் என்பது விபச்சாரம் புரிந்ததற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது, (கணவனல்லாத) அந்நிய ஆணுடன் உடலுறவு கொண்டதன் விளைவாக கற்பம் ஏற்படும் பட்சத்தில் அந்த செயல் தண்டனை சட்டங்களுக்கு (hudood law) உட்படக்கூடியது, இதே அடிப்படையில் கற்பம் அடைதல் உடலுறவு கொள்ளாத நிலையில் ஏற்பட்டாலும் அதாவது கணவன் இறந்துவிட்ட நிலையில் சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொள்வதன் மூலம் மனைவிக்கு கற்பம் ஏற்பட்டாலும் அது தடுக்கப்பட்ட செயல்களில் உள்ள தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனடிப்படையில் சட்டரீதியான கணவன் உயிரோடு இருக்கும் நிலையில் மனைவியின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் இந்திரியங்களை(விந்தணு மற்னும் சினைமுட்டை) இணைத்து கருவூட்டம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு.

2. உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பதைப் பொறுத்தவரை முதல் முயற்சி தோல்வியுறும்போது மறுபடியும் அதே முயற்சியை மேற்காள்வதற்காக அவை உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன, இவ்வாறு இருக்கும் நிலையில் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அதே பெண்ணுக்கும் அவளுடைய சட்டரீதியான கணவனுக்கும் உரியதாக இருக்கவேண்டும். இதில் உயிரணுக்களில் கலப்படம் நிகழவில்லை என்பதை நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொண்டால் பிறகு அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் இச்சமயத்ததில் அவள் கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்.

எனினும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் சட்டரீதியான தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றில் கலப்படம் நிகழ்கிறது என்பது திட்டவட்டமாக உறுதி செய்யபட்டிருக்கிறது, இவ்வாறு நிகழும்போது சோதனைக்குழாய் முறையில் பிறக்கும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழி குறித்து சந்தேகம் ஏற்படுவதால் அந்த குழந்தையின் வாழ்வு கேள்விக்குறி ஆகிவிடுகிறது. இது மனிதகுலத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் மிகப்பாவமான செயலாகும், அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ முஸ்லிம்கள் இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது, ஆகவே சட்டரீதியான முஸ்லிம் தம்பதிகள் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை மேற்கொள்ளும்போது கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.

1, மனைவியின் சினைமுட்டையை உயிருடன் இருக்கும் கணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யும்போது முறையான கவனம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும், மனைவியின் கருவறைக்குள் கருமுட்டை செலுத்தப்படும்போதும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும்போதும் நிகழ்வுகளை எச்சரிக்கையாக கண்காணித்து வரவேண்டும்.

11, உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையை கையாள வேண்டும், அவைகள் எந்தவிமாமான கலப்படத்திற்கும் உட்படுத்தப்படாமலும் மற்றவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எந்த முகாந்திரத்திற்கு இடம் கொடுக்காமலும் அவை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும், இந்தமுறையில் கருமுட்டைகளுக்கு மத்தியில் கலப்படம் நிகழ்கிறது என்ற அறிவிப்பின் அடிப்படையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.

111, கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சியடைந்து கற்பம் உறுதிப்படுத்தப் பட்டுவிட்டால் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் உடணடியாக அழிக்கப்படவேண்டும், அவைகளை அந்நியர்கள் பயன்படுத்தும் விதத்திலோ அல்லது அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும் விதத்திலோ எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், எனினும் இதை கண்கூடாக அறிந்துகொள்வதற்கு வழிமுறை எதுவும் இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும், உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்ற இந்த நிபந்தனை முறையாக நிறைவேற்றப்பட்டதா என்பதை திட்டவட்டமாக உறுதிசெய்ய முடியாதவகையில் இந்தவிஷயம் வெறும் யூகமாவே இப்போது இருந்துவருகிறது.

"ஹராமான செயலை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் அனைத்து சாதனங்களும் (Means) ஹராமானவையே."

என்ற ஷரியா விதிமுறையின் அடிப்படையில் ஹராம் நிகழ்வதற்கு சிறிய வாய்ப்பு கூட இருக்குமானால் பிறகு இந்த சிகிச்சைமுறை ஹராமாகிவிடும், உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகள் அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும்போதும் அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ அவற்றில் கலப்படம் நிகழும்போதும் அது ஹராமாகிவிடுகிறது, மரபுவழியில் பரிசுத்தத்தை பாதுகாப்பது கட்டாய கடமை என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.

இப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ள ஹதீஸ் இப்ன் மாஜாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

""தனது தந்தையை அல்லாமல் மற்றொருவரிடம் பிறப்புரிமையை கோருபவர் மீதும் தனது பாதுகாவலரை அல்லாமல் மற்றவரிடம் பாதுகாப்புரிமையை கோருபவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்.


அபூஹுரைரா(ரலி) அறிவித்து திர்மிதியில் பதிசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

லிஆன்( (li’aan – சாபமிடுதல்) தொடர்பான வசனம் அருளப்பட்ட தருணத்தில் அல்லாஹவின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

أيَّما امرأة أدخلت على قوم نسباً ليس منهم فليست من الله في شيء، ولم يدخلها الله جنته

"எவளேனும் ஒருபெண் ஒருகூட்டத்தாருக்கு வாரிசாக இல்லாத சந்ததியை (அவர்களுக்கு உரியது என்று) அறிமுகப்படுத்துவாளாயின் அவளுக்கு அல்லாஹ்வுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது மேலும் அவன் அவளை சுவனத்தில் நுழைவிக்கமாட்டான்."


இதனடிப்படையில் சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பது ஹராமாகும், மனைவியின் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டையைத் தவிர்த்து உபரியாக கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் அனைத்தும் உடனே அழிக்கப்பட வேண்டும். அவைகளை உறைநிலையில் வைப்பதற்கோ அல்லது மறுமுறை பயன்படுத்துவதற்கோ அனுமதி கிடையாது, கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை செயலற்றுவிடுமாயின் பிறகு மனைவி மறுபடியும் அதே மருத்துவ சிகிச்சைக்கு உட்படவேண்டும், ஒவ்வொருமுறையும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுவது மனைவிக்கு கஷ்டம் என்ற காரணத்திற்காக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதியில்லை ஏனெனில் இது குழந்தையின் தாய்தந்தை மரபுவழியில கலப்படம் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும்.

கருமுட்டைகளை உறைநிலையில் வைக்கும்முறை ஷரியாவின் அடிப்படையில் ஹராம் என்று கூறப்பட வேண்டுமானால் கருமுட்டையில் கலப்படம் ஏற்படும் என்ற சந்தேகம் மிகைத்து நிற்கவேண்டும் என்றும் ஆனால் இதில் சாதாரணமான சந்தேகம் நிலவுகிறதே தவிர உறுதியான சந்தேகம் நிலவவில்லை என்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவநிலையம் நம்பிக்கைக்குரியதாக இருந்து செயல்முறைகள் உரிய கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் நடத்தப்படுமாயின் இது அனுமதிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் ஒருவர் வாதிடலாம், முதல்தடவை கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டதற்கு பின்னர் உபரியாக உள்ள கருமுட்டைகளை மீண்டும் பயன்படுத்தாமல் முறையாக அழித்துவிடும் நம்பிக்கைக்குரிய மருத்துவநிலையங்கள் இருக்குமானால் திரும்பத்திரும்ப மருத்துவ சிகிச்சைக்கு மனைவியை உட்படுத்தும் கஷ்டத்தை நீக்கும்வகையில் உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை கீழ்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது:

ஷரியாவின் இந்த விதிமுறையை பிரயோகிப்பதற்கு சந்தேகம் உறுதியான முறையில் இருக்கவேண்டும் என்ற வாதம் சரியானதுதான், சிகிச்சை பெறும் மருத்துவநிலையம் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும்நிலையில் இத்தகைய உறுதியான சந்தேகம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதும் உண்மைதான், கருமுட்டைகளில் கலப்படம் ஏற்படுவதற்கு அறவே வாய்ப்பில்லை என்றும் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ந்து முயற்சி வெற்றி பெற்றுவிட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் முறையாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் முழுமையான நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான், எனினும் இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதாலும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை திட்டவட்டமாக குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்டுகின்றன என்ற அடிப்படையிலும் இத்தகைய சிகிச்சைமுறையில் இடம்பெறும் இரண்டு நிலைகளை ஆய்வுசெய்யும்போது இதுபோன்ற நம்பிக்கைகள் நிச்சயமற்றவை என்பது உறுதியாகும்.

முதலாவதாக. கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டு அது கருவாக வளர்ச்சி அடைகிறதா இல்லையா என்பதை உறுதிசெய்வதற்கு காத்திருக்கும் காலகட்டத்தில் அனைவரின் கவனமும் கருவளர்ச்சியின் மீது நிலைத்திருக்குமே ஒழிய உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டை மீது கவனம் நிலைத்திருக்காது.

இரண்டாவதாக. கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவது உறுதிசெய்யப்பட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தையும் அழிக்கும் செயல்முறை முறையான கண்காணிப்போடு நிறைவேற்றப்படவேண்டும், ஆனால் கருவுற்ற மனைவியோ அல்லது அவளது கணவனோ இவ்விஷயத்தில் உரிய கவனத்தையோ அல்லது முறையான அக்கறையையோ எடுத்துக்கொள்வதில்லை, அதிகப்பட்சமாக "உபரியான கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதா?"என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு "ஆம், அழிக்கப்பட்டுவிட்டன" என்ற பொதுவான பதிலை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள், இவ்வாறு இருக்கும் நிலையில் மருத்துவநிலையங்கள் நம்பிக்கைக்கு உரியவை என்ற யூகத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு முழுமையாக திருப்தி கொள்ளமுடியும்?

எனவே சந்தேகம் மிகைக்கும்நிலை (strong suspicion – ghalabat dhanni)இடம்பெறாதபோதும் மேற்கண்ட ஷரியா விதிமுறையின் அடிப்படையில் இந்த செயல்முறை ஹராமாக இருக்கக்கூடாது என்பது அவசியமாகும், ஆனால் மிக நிச்சயமாக இது "சந்தேகத்திற்குரியது" என்பதுதான் உண்மைநிலையாகும்.

ஹஸன் இப்ன் அம்ர்(ரலி) அறிவித்து திர்மிதியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹஸன் ஸஹீ ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது

அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) வார்த்தைகளை நான் மனனம் செய்திருக்கிறேன் அவர்கள்(ஸல்) கூறினார்கள்.

دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ

"சந்தேகத்திற்கு உரியவைகளை விட்டுவிட்டு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளை எடுத்துக்கொள்ளுங்கள்"


முடிவுரை:

இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறையில் மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணுவை இணைத்து கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்துகொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு.

கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் சோதனைக்குழாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு கருவறையில் செலுத்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள கருமுட்டைகள் அனைத்தும் வேறெந்த வகையிலும் பயன்படுத்துவதற்கு இடம் கொடுக்காத வகையில் உடனே அழிக்கப்படவேண்டியது கட்டாயமாகும்.

அல்லாஹ்(சுபு) வின் நாட்டப்படி முதல்முறை செலுத்தப்பட்ட கருமுட்டையின் மூலம் கற்பம் தரிக்குமானால் நிச்சயமாக அந்த தம்பதிகள் அல்லாஹ்(சுபு) வுக்கு நன்றி செலுத்துவார்கள். ஒருவேளை அல்லாஹ்(சுபு) நாடி கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை செயலற்றுப்போய் முயற்சி தோல்வியுறுமானால் அந்த தம்பதிகள் மறுமுறையும் இந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டுமே ஒழிய உபரியாக கருமுட்டைகளை உருவாக்கி அவற்றை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது.

சட்டரீதியாக திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றை கருவறைக்கு வெளியே வைத்து கருவூட்டம் செய்துகொள்வதற்கு அனுமதியுண்டு ஆனால் இதை கணவன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே மேற்கொள்ளமுடியும்.


தொடர்ந்து வரும்..

Sources from warmcall.blogspot.com

அனைத்தையும் தழுவியதோர் இயற்கை வாழ்க்கை நெறி

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 7

அனைத்தையும் தழுவியதோர் இயற்கை வாழ்க்கை நெறி

இஸ்லாம் தனது நம்பிக்கைகளையும் அந்த நம்பிக்கையின் வழியமைந்த வாழ்க்கையையும் ஓர் அடிப்படையின் கீழே தான் அமைத்திருக்கின்றது. அது இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதே. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற இந்த வாழ்க்கை நெறியின் நுணுக்கமான விளக்கம் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் தெளிந்து நிறைந்து நிற்கின்றது. இஸ்லாம் கூறும் உண்மைகளின் அடிப்படையில் இந்த அகிலமெல்லாம் படைத்தவன் அந்த அல்லாஹ் தான். அல்லாஹ் விரும்பிய போதே இந்த உலகம் உருவானது. இந்த உலகை உருவாக்கிய பின்னர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பின்னால் அவன் சில விதிகளை வகுத்துத்தந்தான். இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தும் அல்லாஹ் வகுத்துத் தந்த இந்த விதிகளை அணுவும் பிரளாமல் அப்படியே பின்பற்றுகின்றன. அந்த அல்லாஹ் வகுத்துத் தந்த விதிகளை இந்த அகிலத்தில் இருப்பவை அனைத்தும் அப்படியே அடியொற்றி இயங்குவதால் ஓர் அசாதரணமான ஒழுங்குமுறை செயலில் இருக்கின்றது. அருள்மறையாம் திருமறை கூறுகின்றது.

நான் யாதொரு பொருளை (உண்டு பண்ண)க் கருதினால் அதற்காக நாம் கூறுவதெல்லாம் ஆகுக என்பது தான் உடனேயே அது ஆகிவிடுகின்றது. (அல்குர்ஆன் 16:40)

..அவனே யாவையும் சிருஷ்டித்து அவைகளுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன் (அல்குர்ஆன் 25:2)


இந்த அகிலத்தின் சீரான செயல்பாட்டின் பின் ஓர் இறைவிருப்பம் இயங்கிக் கொண்டிருக்கின்றது ஓர் அசாதாரணமான ஆற்றல் அதை அசைய வைத்துக் கொண்டிருக்கின்றது. ஓர் விதி அதை நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் இந்தப் பிரபஞ்சம் இயக்கத்தில் எந்த முரண்பாடும் இல்லை. இந்தப்பிரபஞ்சத்தில் சுழன்று கொண்டிருப்பவை மோதிக் கொள்ளவில்லை. அது போல் அவற்றின் இயக்கத்தில் எந்தக் குளறுபடியுமில்லை. இவற்றின் இயக்கம் திடீரென நின்று விடுவதில்லை இறைவன் விரும்பினாலன்றி, இவற்றின் இயக்கம் இறைவன் விரும்புகின்றவரை தொடரும். இந்த முழு பிரபஞ்சமும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டே இயங்குகிறது. இறைவனின் விருப்பத்திற்கு எதிராக இவற்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவற்றால் செய்ல்படி இயலுவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை அல்லாஹ்வின் விரு;பபத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதால் தான் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் எந்த முரண்பாடுகளுமில்லை. எந்த மோதலுமில்லை. அல்லாஹ் விரும்பினாலன்றி எந்த இடைய10யும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் தலையிட முடியாது.

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்து அர்ஷின் மீது தன் ஆட்சியை நிலைநாட்டினான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். (பகலால் இரவை மூடுகின்றான்)அது தீவிரமாகவே அதனைப் பின்தொடருகின்றது. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களு; அவன் கட்டளைக்கு உட்பட்டிருக்கின்றன. படைப்பும் (படைத்தலும்)அதன் ஆட்சியும் அவனுக்குடையதல்லவா? அகில உலகங்களையும் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க மேலானவன் (அல்குர்ஆன் 7:54)

மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் மனிதனின் இயல்புகளைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்கும் இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் ஏனையவற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்கும் இடையே எந்த வேறுபாடுமில்லை. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவனும் மனிதனைப் படைத்தவனும் இறைவன் தான். மனிதனின் உடல் மண்ணிலுள்ள பொருட்களால் ஆனது. ஆனால் அல்லாஹ் மனிதனுக்குச் சில பண்புகளைக் கொடுத்திருக்கின்றான். இந்தப் பண்புகள் தாம் அவனை உயர்ந்தவனாகவும் சிறந்தவனாகவும் ஆக்கிவிடுகின்றது. மனிதனின் கட்டுப்பாட்டிற்கு உட்படாத செயல்கள் அனைத்தும் இறைவனின் நியதிபடி செயல்படுகின்றன. இன்னும் சொன்னால் இறைவனின் விருப்பப்படியே மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன. மனிதன் இறைவன் வகுத்து வழங்கியுள்ள விதிகளின்படியே உலகில் பிறக்கின்றான். அவன் எத்தனை நாள் எத்தனை நிமிடம் தாயின் கருப்பையில் இருந்திட வேண்டும் என்பது முதல் அனைத்தும் அல்லாஹ் வகுத்து வழங்கியுள்ள முறைமையின் படியே நடக்கின்றன. மனிதன் இறைவனின் காற்றையே சுவாசிக்கின்றான். எவ்வளவு காற்றை சுவாசிக்க வேண்டும் என நியமித்துள்ளானோ அவ்வளவு காற்றையே சுவாசிக்கின்றான். அதையும் இறைவன் எப்படிச் சுவாசிக்க வேண்டும் என விதி வகுத்துள்ளானோ அப்படியே மனிதன் சுவாசிக்கின்றான். மனிதனால் உணர்வுபெற முடிகின்றது. அவனால் இன்பத்தையும் துன்பத்தையும் உணர முடிகின்றது. இவற்றில் அவனுக்கும் ஏனைய படைப்பினங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. அவனால் வேதனைகளை உணர முடிகின்றது. பசி அவனுக்கு அவன் சொல்லாமலேயே வருகின்றது. தாகம் அவனைத் தண்ணீர் அருந்தத் தூண்டுகின்றது. இப்படி எத்தனையோ செயல்களில் அவன் அல்லாஹ்வின் சட்டங்களைப் பின்பற்றி வாழுகின்றான். இவற்றில் அவன் தன் விருப்பப்படி செயல்படலாம் என்றொன்று இல்லை. இவற்றில் அவன் கண்டிப்பாக ஏனைய உயிரினங்களைப் போல் இறைவன் வகுத்த விதிகளின்படி செயல்படுகின்றான். இப்படி மனிதனின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட செயல்கள் எப்படி நடந்திட வேண்டும் என எந்த இறைவன் விதிவகுத்துத் தந்தானோ அந்த இறைவனே மனிதனின் கட்டுப்பாட்டிற்குள்ளாலுள்ள செயல்களுக்கும் விதிகளை வகுத்துத் தந்துள்ளான். அதுவே ஷாPஅத் என்ற அல்லாஹ்வின் சட்டங்களாகும். இந்த ஷாPஅத் சட்டங்களை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குட்பட்ட செயல்களிலும் பின்பற்றினால், அவனது இயற்கையோடு ஏற்புடைய சட்டங்களையே பின்பற்றுகின்றான். இதனால் அவன் தன் சொந்த இயல்போடு ஒத்துப்போகின்ற ஒரு வாழ்க்கையையே வாழுகின்றான். இந்த அடிப்படையில் மனிதனைக் கட்டுப்படுத்தும் ஷாPஅத் சட்டங்களம் இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களில் ஒரு பகுதியே ஏனெனில் மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே. இறைவனின் ஒவ்வொரு சொல்லும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் விதியாகவே நின்று செயல்படுகின்றது. இறைவனின் சொல் என்பது சில நேரங்களில் நாம் நிறைவேற்றி வாழ்ந்திட வேண்டிய கட்டளைகளாக வந்திருக்கின்றன. சில நேரங்களில் நாம் ஒதுங்கியும் விலகியும் வாழ்ந்திட வேண்டிய விலக்கல்களாக வந்திருக்கின்றன. சில நேரங்களில் எச்சரிக்கைகளாக வந்திருக்கின்றன. சில நேரங்களில் அவை ஒரு விதி சில நேரங்களில் ஒரு வழி காட்டுதல். இப்படி பலவாறாகவும் வந்த இறைவனின் சொல் ஒவ்வொன்றும் இயற்கையின் விதி இவற்றைக் கொண்டு தான் இந்த உலகின் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் இயக்கமும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் வழங்கிய ஷாPஅத் சட்டங்கள் மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தி இயற்கையோடு இயைந்து செல்லச் செய்கின்றன. மனிதன் தன் இயல்போடு ஒத்ததோர் வாழ்;க்கையை வாழ்ந்திடவும் இயற்கையின் இதர விதிகளோடு ஒத்ததோர் வாழ்க்கையை வாழ்ந்திடவும் ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் எதுவுமில்லை. தன் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட விஷய்ஙகளிலும் அவன் ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றினால் மட்டுமே அவன் நிம்மதியும் அமைதியும் நிறைந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்திட இயலும். இந்தப் பிரபஞ்சத்;தை இறைவனின் அற்புதமான விதிகள் இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை துல்லியமாகவும் தெளிவாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச்சட்டங்களை இந்த விதிகளை மனிதன் முழுமையாகப் புரிந்துகொள்வது இயலாத ஒன்றாகும். இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் பலவிதிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுவதைத் தவிர அவனால் வேறு எதுவும் செய்ய முடிவதில்லை. இன்னும் சொல்வதானால் மனிதன், தன்னையே இயக்கிக் கொண்டிருக்கும் விதிகளில் பலவற்றை இன்னமும் புரிந்துக் கொள்ளவில்லை. மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத (அனிச்சை செயல்கள்)செயல்களைக் கட்டுப்படுத்தும் விதிகளை அவன் புரிந்துகொள்ள இயலவில்லை என்பது மட்டுமல்ல அவற்றை விட்டு மயிரிழை அளவுகூட அவனால் விலகி நின்று செயல்படவும் முடிவதில்லை.

இதனால்தான் இந்த மனிதனால் தன்னை வழி நடத்திடும் கொள்கைகளையும் விதிகளையும் வகுத்திட இயலாது எனக்கூறுகின்றோம். அப்படி அவன் சில விதிகளைத் தான்தோன்றித்தனமாக யாத்திடுவானேயானால் அவை அவனுடைய இயல்போடு இடிக்கும். முன்னுக்குப்பின் முரண்பட்டு நிற்கும். மனிதனால் ஒருபோதும் அவனது உலகியல் தேவைகளுக்கும் (பௌதீக தேவைகளுக்கும்)ஆன்மீகத் தேவைகளுக்கும் ஒழுக்க மேம்பாடுகளுக்கும் தேவையான நிறைவான சட்டங்களை வகுத்திட இயலாது. அவனது இத்தனை தேவைகளையும் நிறைவேற்றிட நிறைவான விதிகளை இயற்றிட அவனைப்படைத்த அனைத்தும் அறிந்த இறைவனால் மட்டுமே முடியும். இந்த அகிலத்தையும் மனிதன் உட்பட அதிலிருப்பவை அனைத்தையும் படைத்திட்ட இறைவனால் மட்டுமே இயற்கையோடு மோதாத முரண்படாத விதிகளை வகுத்து வழங்கிட இயலும். அந்த இறைவன் தான் இந்த உலகிலுள்ளவற்றையும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவற்றையும் மனிதனின் வாழ்வையும் கட்டுப்படுத்தி ஆட்டிப்படைத்து வருகின்றான். இவை அனைத்தும் அவன் விருப்பப்படியே நடக்கின்றன. ஆக ஷாPஅத் என்ற இறைவனின் சட்டங்களைக் கீழ்ப்படிந்து வாழ்வது எல்லா நிலைகளிலேயும் அவசியமும் பயன்பல பயப்பதாகவும் இருக்கிறது. இஸ்லாமிய நம்பிக்கைகளும் போதனைகளும் இதையே வலியுறுத்துகின்றன. ஷாPஅத் என்ற இந்தச் சட்டங்களை மட்டும் எல்லா நிலைகளிலேயும் பின்பற்றி வாழும் சமுதாயமே இஸ்லாமிய சமுதாயம் எனப்படும். இந்த ஷாPஅத் சட்டங்களை இறைவனின் சட்டங்களைப் பின்பற்றுவது என்பதன் நுணுக்கமான விளக்கங்களை பெருமானார்(ஸல்)அவர்களின் விளக்கமான வாழ்க்கையிலிருந்து விளங்கிடலாம். இந்த ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றி இயற்கையோடு இயைந்து வாழ்ந்திடும் போது மட்டுமே மனிதன் முரண்படாத நிம்மதியானதோர் வாழ்க்கையை வாழ்ந்திட இயலும். மனிதன் இந்த இறைவனின் ஷாPஅத் சட்டங்களின் வழி வாழ்ந்திடும் போது மட்டுமே உள்ளும் புறமும் அலைமோதாத ஓர் வாழ்வைப் பெற முடியும். ஒரு மனிதன் தனது இயல்புகளோடும் இயற்கையின் நியதிகளோடும் ஒத்துப் போகின்ற ஓர் வாழ்க்கையை வாழ்ந்திடும் போது அவன் ஏனைய மனிதர்களிடமிருந்தும் ஏற்புடையதோர் உறவு வெளிப்படுவதைக் காண்கின்றான். இப்படி மனிதர்கள் அத்தனை பேரும் அவர்களைப் படைத்த அல்லாஹ்வின் ஷாPஅத்தைப் பின்பற்றி வாழ்ந்திடும் போது உலகில் மனிதர்களுக்கிடையே நிலையானதோர் அமைதி நிலவுகின்றது. இந்த அமைதி இயற்கையோடு முழுக்க முழுக்க ஒத்துப்போகும் நிலையானதோர் அமைதி நிம்மதி. இப்படி மனித இனம் நிலையான நிம்மதியை அடைகின்றது. மனிதன் இயற்கையோடும் தனது இயல்போடும் மோதாமல் இயைந்து போகும் ஓர் வாழ்வை வாழும் போது அவனால் இயற்கையின் விதிகளை நெறிகளைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இயற்கையில் அமிழ்ந்து கிடக்கும் ஆயிரமாயிரம் விதிகளை அற்புதங்களைக் கண்டு அவன் அகம் மகிழ்கின்றான்.

புறவாழ்வால் அவற்றைத் தொட்டுப் பார்க்கின்றான். புதிர்களை அவிழ்க்கும் பொக்கிஷமாக அவன் தன்னைக் கண்டு ஆனந்தம் கொள்கின்றான். இந்த இறைவழியில் அவன் முன்னேற முன்னேற அவன் இயற்கையின் விந்தைகள் தன் சிந்தைக்குத் தெளிவதை உணர்கின்றான். இந்தப்புதிய அறிவை புதிய தெளிவை அவன் மானும் வாழ வழங்குகின்றான் அல்லாஹ்வின் சட்டங்களின் வழியில். இயற்கையோடு இணைந்து போகும் இந்த வாழ்க்கை நெறியை ஷாPஅத்தை மனிதன் ஏற்றுக் கொண்டு வாழவில்லையென்றால் தனது வாழ்க்கை இயற்கையோடு அடிக்கடி மோதுவதைக் காண்கின்றான். அவனுடைய மிருக இச்சைகள் இந்த இறை நெறியிலிருந்து அவனை மெல்ல மெல்ல தடம் பிறழச் செய்வதைக் காண்கின்றான். இதையே இறைவன் இப்படிக் குறிப்பிடுகின்றான்.

சத்தியம் அவர்களுடைய (தப்பான)விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் ப10மியும் அவற்றிலுள்ளவைகளும் அழிந்தேவிடும். ஆகவே அவர்களுக்கு நல்லுபதேசத்தையே அனுப்பினோம். எனினும் அவர்களோ தங்களிடம் வந்த அந்த நல்லுபதேசத்தையே புறக்கணித்துவிட்டனர் (அல்குர்ஆன் 23:71)

இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. உண்மை என்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் இஸ்லாம் என்ற இந்த இயற்கை மார்க்கத்தின் அடிப்படை. இந்த வானமும் பூமியும் இந்த அடிப்படையில்; தான் நின்று கொண்டிருக்கின்றன. இந்த உலகின் விவகாரங்களும் இறப்பிற்கு பி;ன்னால் வரும் வாழ்க்கையும் இந்த அடிப்படையை அடியொற்றியே நிற்கின்றன. இந்த அடிப்படையின் அடிப்படையில் தான் மனிதன் அந்த இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் முன் பதில் சொல்லிட வேண்டியவனாக இருக்கின்றான். இந்த அடிப்படையிலிருந்து பிறழ்ந்து வாழ்ந்ததற்காகத்தான் மனிதன் தண்டிக்கப்படுகின்றான். இந்த அடிப்படையைக் கொண்டு தான் மனிதன் அந்த இறுதித் தீர்ப்பு நாளில கணிக்கவும் கணக்குக் கேட்கவும் படுகின்றான். இந்த அடிப்படை அல்லாஹ்வின் சட்டங்கள் தாம் இந்த அகிலம் அனைத்தையும் ஆண்டு வருகின்றது. இந்த அல்லாஹ்வின் சட்டங்களையே ஷாPஅத்தை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இயற்கையின் தேவை. இறைவன் கூறுகின்றான் : உங்களுக்கு(ம் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக நாம் உங்களுக்கு அருளி இருக்கின்றோம் (இனியாவது)நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? அக்கிரமக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்)வேறு ஜனங்களை உற்பத்தி செய்தோம். அவர்களும் வேதனையின் அரவததைக் கேட்ட மாத்திரத்தில் (தங்கள் ஊரைவிட்டு)ஓட ஆரம்பித்தார்கள். (அது சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் ஓடாதீர்;கள் நீங்கள் மிக்க ஆடம்பரமாக (ச் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டு)வசித்திருந்த உங்கள் வீடுகளுக்கே நீங்கள் திரும்புங்கள் அங்கு நீங்கள் நன்கு உபசரிக்கப்படலாம் (என்று கூறினோம்). அதற்கவர்கள் எங்களுடைய கேடே நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறி (ப் பாவிகளாகி)விட்டோம் என்று கூக்குரலிட்டார்கள். அவர்களுடைய அந்தக் கூக்குரல் அறுவடை செய்யப்பட்ட வயலைப்போல (அவர்களை அழித்து)அசைவின்றி அமர்த்தும் வரை நீடித்திருந்தது. வானங்களையும் ப10மியையும் அவற்றின் மத்தியிலுள்ளவைகளையம் (வீண்)விளையாட்டுக்காக நாம் சிருஷ்டிக்கவில்லை. நாம் (வீண்)விளையாட்டுக்காரனாக இருந்து (விளையாட வேண்டும் என்று)நாம் கருதியுமிருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்துக்கொண்டிருப்போம். அவ்வாறன்று மெய்யாகவே பொய்யின் மீது எறிகின்றோம். அது (அதன் தலையை)உடைத்து விடுகின்றது. பின்னர் அது அழிந்தும் விடுகின்றது. (இவ்வாறு இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும் சந்ததி உண்டென்றும் )நீங்கள் கூறுவதன் காரணமாக உங்களுக்குக் கேடுதான். வானங்களிலும் ப10மியிலும் உள்ள யாவும் அவனுக்குரியவையே அவனுடைய சந்ததியில் இருக்கக்கூடிய (முகர்ரபான மலக்குகளாயினும் சரி அவர்களும் அவனுடைய அடியார்களே அ)வர்கள் அவனை வணங்காது பெருமையடிக்கவோ சோர்வுறவோ மாட்டார்கள். அவர்கள் இரவு பகல் இடைவிடாது (எந்நேரமும்)அவனைத் துதிசெய்து போற்றிக் கொண்டேயிருக்கின்றனர். (அல்குர்ஆன் 21: 10-20) இந்த உலகம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டது. அவனுடைய விருப்பம் அவன் அமைத்துத்தந்த நியதி, சட்டங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டே இயங்குகின்றது. இந்த உண்மைக்கு உட்பட்டே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது. மனிதனின் இயல்பும் இயற்கையும் இதற்கு உட்பட்டதே. மனித இயல்பும் இயற்கையும் இந்த உலகம் அந்த ஏக இறைவனின் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றது என்ற உண்மையை விளம்பிக் கொண்டே இருக்கின்றன. இதனால் தான் இந்த உலகின் இயக்கத்தில் எந்தக் குளறுபடியும் இல்லை. நிச்சயமாக இந்தப் பிரபஞ்சத்திலிருப்பவை எந்தத் திட்டமுமில்லாமல், எந்த நெறியுமில்லாமல் இயங்கிக் கொண்டோ சுழன்றுகொண்டோ இருக்கவில்லை. ஏதோ இயங்க வேண்டுமே இயங்குவோம் என்றும் அவை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அவற்றிற்கென ஒரு திட்டமும் சட்டமும் இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை விளையாட்டாகப் படைக்கபட்டவையுமில்லை. அவற்றோடு யாரும் விளையாடிக் கொண்டும் இருக்கவில்லை. அவை அவற்றிற்கென விதிக்கப்பட்ட வரையறைக்குள் தரப்பட்ட தெளிவான நீண்டதிட்டத்தின் கீழ் முறையாகவும் சீராகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் வரையறைகளை வகுத்துத்தந்த இறைவன் தான் இவற்றிற்குத் திட்டங்களையும் தெளிவான பாதைகளையும் வகுத்து வழங்கிய இறைவன் தான் மனிதனுக்கும் வரையறைகளையும் விதிகளையும் அருளி இருக்கின்றான். இதில் குழப்பங்களும் கொந்தளிப்புகளும் எங்கே ஆரமபிக்கின்றன என்றால் மனிதன் இந்த இறைநெறிகளை வரையறைகளை மீறிடும் போதுதான். மனிதன் தானே தோன்றியவன் தானே எல்லாம் என்ற மமதைகளுக்குட்பட்டு தனது விருப்பம் தனது கருத்து என்பனவற்றிற்குக் கீழ்ப்படிந்து இறைவனை எதிர்க்கும் போதே மோதல்கள் ஏற்படுகின்றன. மனிதன் தனக்கும் இன்னும் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவைகளுக்கும் உணவளித்து வாழவைத்துவரும் இறைவனின் வழிகாட்டுதல்கள் வழி வாழாமல் அவற்றிற்கு நேர் எதிரான விதிகளைப் பின்பற்றிடும் போதே இந்த உலகில் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன. மனிதன் இறைவனின் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படியாமல் அவற்றிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்திடும் போது அவன் இயற்கைக்கு எதிராகவும் கிளர்ந்து விடுகின்றான் என்பதே உண்மை இஃதோடு மட்டுமல்லாமல் அவன்தன் இயல்புக்கும் இயற்கைக்கும் எதிராகக் கிளர்ந்து விடுகின்றான் என்று பொருள். இப்படி இயற்கைக்கும் தனது இயல்புகளுக்கும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் விதிகளுக்கும் எதிராக மனிதன் கிளர்ந்து விடுவதால் மனிதர்களுக்குள் சண்டையும் சச்சரவுகளும் போர்களும் நிரந்தர நடப்புகாளகி விடுகின்றன. மனிதன் சொந்த இனத்தை அழிப்பதற்கே வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றான். இதற்காகவே தனது ஆற்றல்களையெல்லாம் பயன்படுத்துகின்றான். முடிவில் மனிதனின் வாழ்வுக்கும் வளத்திற்கும் பயன்பட்டிட வேண்டிய இயற்கை வளங்களும் அவனது அறிவும் அவனது அழிவுக்கே பயன்படுகின்றன. இங்கே நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அல்லாஹ்வின் சட்டங்களை அடிபணிந்து வாழ்வதென்பது இறப்பிற்குப் பின்வரும் மறுமை என்ற மறுவுலக வாழ்;க்கைக்கு மட்டுந்தான் எனச் சிலர் கருதுகின்றனர். இந்த உலக வாழ்க்கை மறுமை என்ற இறப்பிற்குப் பின்னால் வரும் வாழ்க்கை. இவை இரண்டும் வேறு வேறானவையல்ல. இவை இரண்டும் மனிதனின் மொத்த வாழ்க்கையில் இரண்டு பகுதிகள். ஒன்றுக்கு ஒன்ற துணை நிற்பது. ஒன்றோடொன்று இணைந்து நிற்பது. இறைவன் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் இந்த இரண்டு வாழக்க்கைகளுக்கும் இணைந்தே வழிகாட்டுகின்றன. இந்த உலகை அந்த மறுவுலக வாழ்க்கையைச் சுபிட்சமாக ஆக்கிடும் வகையில் நெறிப்படுத்தி வகைப்படுத்தித் தருகின்றன அல்லாஹ்வின் வழி காட்டுதல்கள். இந்தப் பிரபஞ்சம் அதில் சஞ்சரிக்கும் மனிதனின் வாழ்க்கை அந்த மனித வாழ்வின் இன்னொரு பகுதியாம் மறுமை வாழ்க்கை இவையனைத்தையும் சீராகவும் சிலாக்கியமாகவும் இயற்கையோடும் மனித இயல்போடும் இயைந்து போவதாக அமைத்துத் தருகின்றன அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள். இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு இப்படியோர் அலாதியான அற்புதமான சிறப்பும் தனித்தன்மையும் உண்டு. இந்தச் சிறப்பு இந்த அற்புத ஆற்றல் வேறு எந்த வழிகாட்டுதலுக்குமில்லை. மனித மூளையில் உருவாகும் வழிகாட்டுதல்களுக்கும் இல்லை. இந்தச் சிறப்புத் தன்மைகளால்தான் இந்த இறைவனின் வழிகாட்டுதல்களுக்குச் சில சிறப்பான தனிப் பொறுப்புகள் இருக்கின்றன. இதேபோல் இன்னும் சில கடமைகளும் இருக்கின்றன. வேறு எந்த வழிகாட்டுதல்களுக்கும் இந்தப் பொறுப்பும் கடமையுமில்லை. இந்த விளக்கங்களை மனதில் வைத்துப் பார்த்தால், ஷாPஅத் சட்டங்களை அல்லாஹ்வின் சட்டங்களைக் கீழ்ப்படிந்து நடப்பது மனித வாழ்க்கையை மனிதனின் இயற்கையோடும் நம்முன்னே விரிந்து நிற்கும் இயற்கையின் இதர விதிகளோடும் இணைந்து செல்ல வைப்பது என்றாகிவிடுகின்றது. இதனால் தான் மனிதன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் எந்த நிலையிலும் கீழ்ப்படிந்திடக் கூடாது எனப் பணிக்கப்பட்டுள்ளான். இதனால் தான் மனிதன் இதர மனிதர்களை அடிபை;படுத்தித் தனது விதிகளைத் திணித்திடக்கூடாது எனத் தடுக்கப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்தின் இதர விதிகளை வகுத்து இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இறைவனின் விதிகளையே மனிதன் பின்பற்றிட வேண்டும். இந்த உண்மையை நபி இப்ராஹீம்(அலை)அவர்களுக்கும் நம்ரூத் என்ற ஆட்சியாளனுக்கும் இடையே இடம் பெற்ற வாதம் ஊர்ஜிதப்படுத்துகின்றது. நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் இறைவனுக்கு முற்றாக வழிப்பட்டவர்கள். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் தந்தை எனப் பெருமையோடு அழைக்கப்படுபவர்கள். நம்ரூத் தனது மக்களின் மேல் தனக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கின்றன என அதிர்ந்தவன். அந்த அப்பாவி மக்கள்மேல் அதிகார போதையில் அத்தனை அநியாயங்களையும் அவிழ்த்து விட்டவன். அவன் தனது அதிகாரத்தின் எல்லைக்குள் இல்லை என்று ஒத்துக்கொண்டவை வானமும் விண்மீன்களும் தாம். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வானத்தின் மீதும் அதில் நீந்தும் விண்மீன்கள் மீதும் யாருக்கு அதிகாரம் இருக்கின்றதோ அவனே மனிதர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் பெற்றவன் என்று வாதித்தபோது நம்ரூத் வாயடைத்துப் போனான். இந்த விவாதம் பின்வருமாறு:

(நபியே) நீர் ஒருவனைக் கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சிக் கொடுத்ததற்காக அவன் (கர்வங் கொண்டு)இப்ராஹிமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கஞ் செய்தான். அது சமயம் இப்றாஹீம் எவன் உயிர்ப்பிக்கவும் மரிக்குமாறும் செய்கின்றானோ அவன் தான் என்னுடைய இறைவன் என்று கூறியதற்கு அவன் நானும் உயிர்ப்பிப்பேன் மரிக்குமாறும் செய்வேன் என்று கூறினான். (அதற்கு)இப்ராஹீம் அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்குத் திசையில உதயமாக்குகின்றான். நீ அதை மேற்குத் திசையில் உதயமாக்கு எனக் கூறினார். ஆகவே (அல்லாஹ்வை)நிராகரித்த அவன் (எவ்வித விடையும் அளிக்க வகையறியாது திகைத்து)வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார ஜனங்களுக்கு (விடையளிக்க)வழிகாட்டுவதில்லை. (அல்குர்ஆன் 2:258)

அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி வேறு மார்க்கத்தையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் ப10மயிலும் உள்ளவை யாவுமே (அவை)விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. அன்றி (அவையாவும்)அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படும் (அல்குர்ஆன் 3:83)


தொடர்ந்து வரும்...

Sources From warmcall.blogspot.com

Apr 29, 2011

லா இலாஹ இல்லல்லாஹ_என்பது இஸ்லாத்தின் வாழ்க்கை நெறி


இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 6

லா இலாஹ இல்லல்லாஹ_என்பது இஸ்லாத்தின் வாழ்க்கை நெறி

லா இலாஹ இல்லல்லாஹ_ - அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. இது இஸ்லாத்தின் முதல் முழக்கம். ஈமான் என்ற இறைநம்பிக்கையின் முதற்பகுதியும் இதுதான். இதன் பொருள் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வழிபடவோ, கீழ்ப்படியவோ கூடாது என்பதாகும். முஹம்மதுர் ரஸ_லுல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள். இது இந்தப் பிரகடனத்தின் இரண்டாம் பகுதி. இதன் விசாலமான பொருள்: இறைவனைக் கீழ்ப்படிவது அவனுக்கு மட்டுமே அடிபணிவது என்பது அவனது திருத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படியே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே. இந்த இரண்டு பகுதிகளையும் உள்ளத்தில் பதித்து நாடி நரம்புகளிலெல்லாம் உறைய வைத்து தன் வாழ்வை வழிநடத்துபவனே முஸ்லிம் எனப்படுபவன். இஸ்லாத்தின் தூண்களான இதரப் பகுதிகள் இந்த அடிப்படை நம்பிக்கையின் ஊற்றாய்ப் பிறப்பனவே. இப்படி வானவர்கள் மீது நம்பிக்கை இறைவேதங்களின் மீது நம்பிக்கை இறைவனின் தூதர்கள் மேல் நம்பிக்கi மரணத்திற்குப் பின் வரும் மறு உலக வாழ்க்கையின் மேல் நம்பிக்கை இறுதித் தீர்ப்பு நாளின் மேல் நம்பிக்கை தொழுகை நோன்பு ஜகாத் என்ற ஏழைவரி, ஹஜ் என்ற இறை இல்லப் புனிதப் பயணம் ஆகுமானவற்றை ஏற்றுக் கொள்வது தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி இருப்பது ஒழுக்கங்கள் பற்றிய பாடங்கள் இப்படி இன்னும் இருப்பவை அனைத்தும் முஹம்மத்(ஸல்)அவர்கள் காட்டிய வழியில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவது என்பதன் ஊற்றாய்ப் பிறப்பனவே. முஸ்லிம் சமுதாயம் என்பது இத்தனையையும் முழுமையாக நடைமுறைப்படுத்தி வாழ்வதே. இந்த வழிகாட்டுதல்களை நம்பிக்கைகளை அந்த நம்பிக்கையின் ஊற்றாய்ப் பிறந்த நன்னடத்தைகளை நடைமுறைப்படுத்தாத சமுதாயம் முஸ்லிம் சமுதாயமல்ல. ஆக அல்லாஹ் ஒருவன் தான் என்பதை நம்புகின்றேன் என்பது ஒரு முழு வாழ்க்கை நெறியை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்ந்து காட்டுகின்றேன் என்பதன் பகிரங்கமான பிரகடனமாகும். அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் என்பதை அறுதியாகவும் உறுதியாகவும் நம்பாதவரை இந்த வாழ்க்கை நெறி நாட்டு நடப்பாக ஆகிட இயலாது. அல்லாஹ் ஒருவன் தான் என்ற இந்த அடிப்படையில் அல்லாமல் வேறு அடிப்படைகளைக் கொண்டு இந்த வாழ்க்கை நெறி அமைக்கப்படுமேயானால் அது இஸ்லாமிய வாழ்க்கை நெறி ஆகாது. அந்த வாழ்க்கை நெறியைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் எனச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. அதே போல் இந்த வாழ்க்கை நெறி, அல்லாஹ் ஒருவன் தான் இறைவன் என்ற அடிப்படையோடு வேறு அடிப்படைகளையும் சேர்த்து அமைக்கப்படுமேயானால், அந்த வாழ்க்கை நெறியையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறி என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தச் சமுதாயத்தை முஸ்லிம் சமுதாயம் என்றும் கூறிட முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்:

அவனையன்றி நீங்கள் வணங்குபவையாகவும் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக்கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர, உண்மையில் அவை ஒன்றுமே இல்லை. அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை. சகல அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்றொருவரையும்)நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான். இது தான் நேரான மார்க்கம் (திருக்குர்ஆன் 12: 40)

(எவன் அல்லாஹ்வுடைய)தூதருக்கு (முற்றிலும்)வழிப்பட்டு நடக்கின்றானோ அவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு நடக்கின்றான் (அல்குர்ஆன் 4:80)
அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த அல்லாஹ் காட்டிய வழியில் மட்டுமே வாழ்ந்திட வேண்டும். அந்த வழிகாட்டுதல் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய விதமே! இந்தத் தீர்க்கமான தெளிவான பிரகடனம் பல தெளிவான பாதைகளை நமக்கக் காட்டுகின்றது. முதன்முதலில் இது முஸ்லிம் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதைத்; தெளிவுபடுத்துகின்றது. இரண்டாவதாக இஸ்லாமிய சமுதாயம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்கின்றது. மூன்றாவதாக இது அஞ்ஞான சமுதாயங்களை (ஜாஹிலிய்ய சமுதாயங்களை)எப்படி எதிர்கொள்வது என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. நான்காவதாக மனித வாழ்வை எப்படி மாற்றி அமைத்திட வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றது. இவை அனைத்தும் இஸ்லாம் என்ற இந்தப் பேரியக்கத்தின் வளர்ச்சிப் பாதையில் மிகவும் முக்கியமானவையாகும். முஸ்லிம் சமுதாயத்தின் தனித்தன்மை என்ன? முஸ்லிம் சமுதாயத்தின் தனித்தன்மை இந்தச் சமுதாயத்தின் எல்லா விவகாரங்களும் அல்லாஹ் ஒருவனே என்ற அடிப்படையிலேயே ஒருங்கிணைக்கப்படும் என்பதே. இறைவன் ஒருவனே என்பதை நம்பாதவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்றவனாக மாட்டான். அல்லாஹ் கூறுகின்றான்:

(ஒன்றுக்கு பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்களுடைய)ஆண்டவன் ஒரே ஒருவன் தான். ஆகவே (அந்த ஒருவனாகிய)எனக்கு நீங்கள் அஞ்சுங்கள். வானங்களிலும் ப10மியிலும் உள்ள யாவும் அவனுடையவையே அவனுக்கே (என்றென்றும்)வழிபடுவது அத்தியாவசியம் (ஆகவே)அந்த அல்லாஹ் அல்லாதவற்றிற்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? (அல்குர்ஆன் 16 : 51,52)

அல்லாஹ்வோடு வேறு தெய்வங்களையும் வணங்குவோர் அல்லாஹ்வை வணங்கவில்லை. அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குபவர்களைப் போல் இவர்களும் இணைவைப்பவர்களே. (நபியே) நீர் கூறும் நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் உலகத்தாரைப் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு யாதோர் இணையுமில்லை. அவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே (அவனுக்கு வழிப்பட்ட)முஸ்லிம்களில் நான் முதன்மையானவன் (அல்குர்ஆன் 6: 162-163) அல்லாஹ் அருளிச் செய்த திருக்குர்ஆன் அதற்கோர் அழகிய விளக்கமாக வாழ்ந்து காட்டிய பெருமானார் (ஸல்)அவர்களின் வாழ்வு வாக்கு ஆகியவற்றை விட்டு வேறு அரசியல் அமைப்புச் சட்டங்களிலிருந்தும் வேறு வழிகாட்டுதல்களிலிருந்தும் சட்டங்களை வகுத்து அதன் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களாக மாட்டார்கள். இதனை அல்லாஹ் இறைமறையாம் திருமறையில் இப்படி வினவுகின்றான்.

அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்க மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை (தெய்வங்)களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (அல்குர்ஆன் 42:21)

இன்னும் இறைவன் கூறுகின்றான் :
தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அவர் எதனை உங்களுக்குத் தடுத்துக்கொண்டாரோ அவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 59:7)

இது தான் முஸ்லிம் சமுதாயம். இந்தச் சமுதாயத்தில் நம்பிக்கைகள், தனி மனிதனின் எண்ணங்கள், செயல்கள், அவனது ஒழுக்கம், அன்றாட வாழ்க்கையில் அவன் கடைப்பிடிக்கும் சட்ட திட்டங்கள், அவனது சமுதாய நீதிகள், நியதிகள் இவையெல்லாம் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் அமையும். இந்த அடிப்படை அகற்றப்பட்டு விட்டால் அது முஸ்லிம் சமுதாயமாக அமைய முடியாது. இந்தப்பகுதியில் ஏதேனும் ஒன்றிலோ அந்த ஒன்றின் பகுதியிலோ அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற அடிப்படை அல்லாதது கலந்து விடுமேயானால் அது முஸ்லிம் சமுதாயமாக அமைந்திடாது. இந்தச் சமுதாயத்தின் வாழ்வில் ஏதேனும் ஒரு சிறு பகுதியில் இதர கொள்கைகளோ கோட்பாடுகளோ புகுந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் முஸ்லிம் சமுதாயமாக ஆகிட இயலாது. ஏனெனில் அங்கே முஸ்லிம் சமுதாயம் அமைக்கப்பட வேண்டிய ஆதி அடிப்பபடையான அல்லாஹ் ஒருவனே இறைவன் முஹம்மத் (ஸல்)அவர்கள் அவனுடைய திருத்தூதர் ஆவார்கள் என்பதில் கலப்புகளும் சேர்ப்புகளும் இணைப்புகளும் ஏற்பட்டு விட்டன. ஆகவே இஸ்லாமிய சமுதாயமைப்பைப் புனரமைத்திட வேண்டும். அந்தச் சமுதாயமைப்பை அடிப்படையாகக் கொண்டு ஓர் இஸ்லாமிய அரசை நிலைநாட்டிட வேண்டும் என விரும்புவோர் முதன் முதலில் ஓர் அடிப்படைப் பணியைச் செய்திட வேண்டும். அந்த அடிப்படைப் பணி: இந்தச் சமுதாய அமைப்பில் அங்கம் வகிப்போர் அனைவருடைய உள்ளங்களையும் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதையும் முஹம்மத் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வுடைய அறுதித் தூதர் ஆவார்கள் என்பதையும் கொண்டு உறுதி பெறச் செய்திட வேண்டும். இதில் எள்ளளவு எள்ளின் மூக்களவு அந்த மூக்கின் முனையளவு கூட இடைச் செருகல்களோ கலப்படங்களோ சேர்ந்திடக் கூடாது. இப்படி லாயிலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுர்ரஸ_லுல்லாஹ் என்ற அடிப்படையில் மட்டுமே நிலைத்து நிற்கும் சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம். இந்தச் சமுதாயம் மட்டுமே இஸ்லாத்தை நிலைநாட்டிட முடியும். இதன் பின்னர் இந்த அடிப்படையை ஏற்று ஓர் இஸ்லாமிய வாழ்க்கையை வாழ விரும்புவோர் அனைவரும் இந்தச் சமுதாய அமைப்பில் வந்து அங்கம் வகித்திடுவர். இந்த அடிப்படைகளை அழுத்தமாக நம்பிடுவோர் அனைவரும் ஒன்றாய் ஓரிறைவனின் அடிமைகளாய் லாயிலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுர்ரஸ_லுல்லாஹ் என்பதன் மறுபதிப்பாய் வாழ்ந்திடுவார்கள். இப்படித்தான் அன்று அந்த முதல் முஸ்லிம் சமுதாயம் உருவானது. அந்தச் சமுதாயம் தான் அப்பழுக்கற்றதோர் இஸ்லாமிய அரசை நிலை நாட்டிற்று. இன்னும் சொன்னால் ஓர் இஸ்லாமிய சமுதாயத்தை அமைத்திட இருக்கும் ஒரே வழி இது தான். அல்லாஹ்வைத் தவிர வேறு உபாயங்கள் வழியாகவும் சிந்தனைகளின் வழியாகவும் வந்த எல்லா சட்டங்களையும் திட்டங்களையும் கோட்பாடுகளையும் வழிபாடுகளையும் உதறித் தள்ளிவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதல் வழிவாழும் சமுதாயத்தால் மட்டுமே ஓர் இஸ்லாமிய அரசை நிலைநாட்டிட இயலும்! இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாத ஜாஹிலிய்ய சமுதாயங்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் இந்தச் சமுதாயத்தோடு சங்கமித்திடலாம் அல்லது வேறுபட்டு நின்றிடலாம். அவ்வாறு அது வேறுபட்டு நின்றுவிட்டால், அது இந்த இஸ்லாமிய சமுதாயத்தோடு அமைதியாக வாழலாம். அதற்குத் தேவையான ஒப்பந்தங்களையோ உடன்படிக்கைகளையோ செய்திடலாம் அல்லது எதிரே நின்று எதிர்கொள்ளலாம். இதில் வரலாறு நமக்கோர் உண்மையை உணர்த்துகின்றது. அது இந்த அஞ்ஞான சமுதாயம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரே நின்று போரிடுவதைத் தான் தன் விருப்பமாக ஆக்கிக் கொண்டது. அது அமைதியையோ சமாதானத்தையோ விரும்பவில்லை. இதுவே வரலாறு சொல்லும் உண்மை. இந்தப் போரை எந்த ஈவிரக்கமுமின்றி அது, இஸ்லாமிய சமுதாயத்தின் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. மனித மாண்புகளையோ பொதுவான ஒழுக்கங்களையோ பற்றிக்கூட அது கவலைப்பட்டதில்லை. இந்தப் போரைத் தொடுத்திடவும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து விட்டிட அந்த அஞ்ஞான சமுதாயம் எப்போதும் காலந்தாழ்த்தியதுமில்லை.

இந்த இஸ்லாமிய சமுதாயம் ஓர் சமுதாயமாகக் காலூன்றுவதற்கு முன்பே அந்த அஞ்ஞான சமுதாயம் தன் போரைப் பிரகடனப்படுத்திற்று. இஸ்லாமிய சமுதாயம் ஓரிரு தனி மனிதர்கள் என்று துவங்கியபோதே அந்த அஞ்ஞான சமுதாயம் தன் தாக்குதலைத் துவங்கிற்று. எங்கேயும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் அஞ்ஞான சமுதாயம் இஸ்லாமிய சமுதாயத்தை எதிர்கொண்டது. இப்படித்தான். ஏன்? இஸ்லாத்தின் அழைப்பு இஸ்லாத்தின் முதல் கொள்கை முழக்கம் அதன் காதில் வீழ்ந்ததும் அந்த அஞ்ஞான சமுதாயம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர் மீது சீறித்தான் பாய்ந்;தது. வரலாறுகள் வரையிட்டுக்காட்டும் இந்த உண்மை நிலையை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும். ஒத்துக் கொண்டால் மட்டும் போதாது பயனுள்ள பாடங்களையும் படித்தாக வேண்டும். அதாவது இந்தப் படிப்பினைகள் தரும் தெளிவானப் பாடம் இது தான். ஓர் இஸ்லாமிய சமுதாயம் அதனை அழிக்கத் துடிக்கும் அஞ்ஞான சமுதாயத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள போதுமான வலுவை வளர்த்துக் கொள்ளவில்லையென்றால், அது தலையெடுக்கவோ தலைநிமிரவோ தற்காத்துக் கொள்ளவோ இயலாமற் போய்விடும். இந்த இஸ்லாமிய சமுதாயம் போதிய அளவில் வலுவைப் பெறவில்லையென்றால் அது இந்தப்ப10மியில் உயிர் வாழ்வதே கடினம் இந்த வலுவும் பலமும் எல்லாத் துறைகளிலும் வந்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக இந்த இஸ்லாமய சமுதாயம் ஈமானை உறுதிப்படுத்தியாக வேண்டும். ஆன்மீகப் பலத்தையும் ஒழுக்க பலத்தையும் பெற்றாக வேண்டும். ஒரு சமுதாயத்தை அமைக்கவும் அதனை நிலைப்படுத்தவும் பலம் பெற்றாக வேண்டும். தேவையான ஆள் பலத்தையும் ஆயத பலத்தையும் பெற்றாக வேண்டும். ஏனைய ஜாஹிலிய்யா சமுதாயத்தை வெற்றி கொள்வதற்காக என்றில்லாவிட்டாலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவாவது இந்த இஸ்லாமிய சமுதாயம் போதுமான ஆள்பலத்தையும் ஆயுத பலத்தையும் பெற்றாக வேண்டும். இந்த அஞ்ஞான சமுதாயம் ஜாஹிலிய்யா சமுதாயம் என்பது தான் என்ன? இந்த மௌட்டிக சமுதாயத்தை இஸ்லாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? ஜாஹிலிய்யா சமுதாயம் என்பது முஸ்லிம் சமுதாயமல்லாத அத்தனை சமுதாயத்தையும் குறிக்கும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற கொள்கையை ஏற்று அதன்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத சமுதாயந்தான் ஜாஹிலிய்யா சமுதாயம் அல்லது அஞ்ஞான சமுதாயம். இந்த வரையறையை வைத்துப் பார்த்தால் இந்தப் ப10மியில் இன்று வழக்கிலிரு;ககும் அத்தனை சமுதாயமும் ஜாஹிலிய்யா சமுதாயதமே அஞ்ஞான சமுதாயமே இதில் இன்றைக்கிருக்கின்ற கம்ய10னிச சமுதாயங்கள் அத்தனையும் அடங்கும். ஏனெனில் இந்தக் கம்ய10னிச சமுதாயங்கள் இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையை மறுக்கின்றன. இந்தக் கம்ய10னிச சமுதாயங்கள் இந்தப் ப10மியையும் இன்னும் இருப்பவற்றையும் படைத்தவன் இறைவன் தான் என்பதை ஏற்க மறுக்கின்றன. இந்தப் பிரபஞ்சம் தானாகவே தோன்றியது. அல்லது இயற்கையால் ஏற்பட்டது என வாதிக்கின்றன இந்தக் கம்ய10னிசக் கொள்கைகள். மனித வரலாறு என்பது ஒரு பொருளாதார போராட்டத்தால் ஆனது என்பது கம்ய10னிசத்தின் கோட்பாடு. உற்பத்திச் செய்வதும் உற்பத்திச் செய்ததைப் பங்கிட்டு உண்டு வாழ்வதும் தான் மனித வாழ்க்கை என்பது கம்ய10னிசத்தின் பாரம்பரிய கொள்கை ஒரு கம்ய10னிஸ்ட் கட்சிக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து அடிமைப்பட்டு வாழ்ந்திட வேண்டும் அல்லாமல் இறைவனுக்கோ அவனது வழிகாட்டுதல்களுக்கோ கீழ்ப்படிந்து வாழ்ந்திடக் கூடாது. கம்ய10னிச நாடுகளில் கம்ய10னிஸ்ட் கட்சி தான் மக்களைக் கட்டுப்படுத்தி கட்டாயப்படுத்தி கீழ்ப்படிய வைக்கின்றது. இது கம்ய10னிச சமுதாயங்களின் இறைவன் கம்ய10னிஸ்ட் கட்சி தான் என்பதைத் தெளிவாக விளக்குகின்றது. இந்தக் கொள்கைகளின் இயல்பான விளைவு என்னவெனில் மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்கும் விலங்குகளின் அடிப்படைத் தேவைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதே. விலங்கினங்களுக்கு எப்படி உணவு உடை உறையுள் காமம் இவை தேவையோ அதே போல் மனிதனுக்கும் இவை தேவை. மனிதன் விலங்கிலிருந்து எந்த விதத்திலேயும் மாறுபட்டவனல்ல. இப்படி மனிதனை மிருகத்தின் நிலைக்குத் தாழ்த்தி அவனது ஆன்மிகத் தேவைகளையும் ஒழுக்க விழுப்பங்களையும் அடியோடு மறந்து விடுகின்றது கம்ய10னிசம். மனிதனை விலங்கிலிருந்து உயர்த்தியும் வேறுபடுத்தியும் காட்டிடும் இந்த இயல்பான தேவைகளை மறந்துவிடுவதால் கம்ய10னிச சமுதாயங்களில் வாழ்வோர் மானுடமின்றி வதைபடுகின்றார்கள் ஆன்மிக வறுமையால் அழிகின்றார்கள். இறைவனை நம்புகின்ற சுதந்திரம் அவர்களுக்கில்லை. தங்கள் தனித்தன்மைகளை வெளிப்படுத்திடவும் தங்கள் திறமைகளை வளர்த்திடவும் கம்ய10னிசம் தனி மனிதர்களை விடுவதில்லை. தனி மனிதனின் இயல்புகள் அவனது திறமைகளை மறைக்க விரும்புவதில்லை. வளர்க்கவும் வெளிப்படுத்தவுமே விரும்புகின்றது. கம்ய10னிசம் இந்த இயற்கையை அமுக்கிவிடுகின்றது. தனி மனிதனின் திறமைகள் அவன் உழைத்துச் சேர்க்கும் சொத்துக்கள் உடைமைகள் விரும்பும் தொழிலைத் தேர்ந்தெடுத்து பெருக்கிடும் வளம் வாழ்வு இவற்றால் வெளிப்படும். தனிமனிதன் தொழிலால் அதில் காட்டும் சிறப்பான திறமையால் நுண்மாண்நுழைபுலத்தால் உயர்வான் வாழ்வான். இந்த சிறப்பான பண்புகளால் அவன் உயர்வின் எல்லைகளைத் தொடுவான். இதில் விலங்கினங்களை விட தான் உயர்ந்தவன் தனித்தவன் என்பதை உணர்த்துவான். ஆனால் கம்ய10னிச மண்ணையும் காற்றையும் நெருப்பையும் இன்னம் இவை போன்றவற்றையும் இறைவனுக்கு இணையாக வைத்து வணங்கும் அத்தனை சமுதாயங்களும் அஞ்ஞான சமுதாயங்களே. இத்தகைய சமுதாயங்களை இந்தியாவில் காணலாம். இன்னும் பிலிப்பைன்ஸ் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் காணலாம். இவற்றின் மௌட்டிகம் பின்வரும் மடமைகளில் முடங்கிக் கிடக்கின்றது. முதன் முதலாக இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ் அல்லாதவர்களையும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவற்றையும் இறைவனாக ஏற்றுக் கொண்டன. அல்லது இவை இறைவன் ஒருவனே என்பதை விடுத்து எண்ணற்ற வகையறாக்களை இறைவனாக எடுத்துக்கொண்டன. உயிருடன் இருப்பவை உயிரில்லாதவை இவற்றையெல்லாம் இவை இறைவனுக்கு இணையாகக் கற்பித்து வருகின்றன. இரண்டாவதாக இந்தச் சமுதாயங்கள் தங்கள் மௌட்டீகங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரும் சமுதாயமைப்பை நிறுவி தங்கள் தேவைகளைத் துதிக்கவும் பெருமைப்படுத்தவும் செய்கின்றன. இது போல் இந்தச் சமுதாயங்கள் தங்களைக் கட்டுப்படுத்திடவும் தங்கள் வழக்குகளில் தீர்ப்பு வழங்கிடவும் அல்லாஹ்வின் சட்டங்களைப் பின்பற்றுவதில்லை. அல்லாஹ் அல்லாதவர்களின் வழியாய் வந்த சட்டங்களையே இவர்கள் பின்பற்றுகின்றார்கள். இவர்கள் பின்பற்றும் சட்டங்களை யாத்துத் தருபவர்கள் ஜோதிடர்கள் மந்திரவாதிகள் தந்திரங்களைச் சொல்லி மக்களை மயக்கி மாயங்களைச் செய்வோர் மத குருக்கள் என மக்கள் மத்தியிலே உலாவருவோர் தேசத்தில் சமுதாயத்தில் மூதாதையர்கள் மூத்தவர்கள் எனப்படுவோர் இவர்கள் தாம்.

இன்னும் சில சமுதாயங்களில் இந்தச் சட்டங்களை எழுதி இயற்றிடுவது மதச்சார்பற்ற நிறுவனங்களும் நிருவாகங்கள் எனப்படும் சட்டசபைகளும் சட்டப்பேரவைகளும் நாட்டையாளும் மன்றங்களும், இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றவில்லை. இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ் அல்லாதவர்கள் இயற்றிய சட்டங்களைக் கொண்டே தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் மனிதன் தன் வாழ்வை வழி நடத்தும் சட்டங்களாக அல்லாஹ்வின் சட்டங்களையே எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் அந்தச் சட்டங்களைப் பின்பற்றும் அழகிய முன்மாதிரி அல்லாஹ்வின் அறுதித் தூதர் முஹம்மத்(ஸல்)அவர்களின் வாழ்க்கையிலேயே இருக்கின்றது. இன்றைக்கிருக்கின்ற எல்லா ய10த சமுதாயங்களும் கிறிஸ்தவ சமுதாயங்களும் அஞ்ஞான ஜாஹிலிய்ய சமுதாயங்களே. இந்தச் சமுதாயங்கள் உண்மையான இறை நம்பிக்கைகளை உருக்குலைத்து விட்டன. இன்னும் இந்தச் சமுதாயங்கள் இறைவனுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களையும் ஆற்றல்களையும் இன்னும் சிலருக்கும் இருப்பதாகக் கற்பிக்கின்றன. இப்படி இவர்கள் இறைவனுக்கு வை;ககும் இணை தேவகுமாரன் என இறைவனுக்கோர் மகனைக் கண்டு பிடித்துத் தந்ததிலும் பிதா சுதன் பரிசுத்த ஆவி என ஆண்டவனை கூறு போட்டுத் தந்ததிலும் வெளிப்படுகின்றது. இன்னும் சில நேரங்களில் இவர்கள் சில கடவுள் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர். இந்தக் கடவுள் கொள்கை உண்மையான இறை கொள்கையிலிருந்து வெகுதூரம் சென்று விடுகின்றன.

யூதர்கள் உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர் (இவ்வாறே)கிறிஸ்தவர்கள் மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவானாகவும் (சத்தியத்தைப் புறக்கணித்து)இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர் (அல்குர்ஆன் 9:30)

நிச்சயமாக அல்லாஹ் (பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன் தான் என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்போராகி விட்டனர். ஏனென்றால் (ஒரே)ஆண்டவனைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே (இவ்வாறு)அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில் (இவ்வாறு கூறிய)அவர்களிலுள்ள நிராகரிப்போர்களைத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும் (அல்குர்ஆன் 5:73)
அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது என்று இந்த ய10தர்கள் கூறுகின்றனர் (அவ்வாறன்று)அவர்களது கைகள் தாம் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றி இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். அல்லாஹ்வுடைய கைகளோ (எப்போதும்)விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் அள்ளிக் கொடுக்கின்றான். ஆனால் உம் இறைவனால் உமக்கு அருளப் பெற்ற இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு அட்டூழியத்தையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகின்றது. ஆகவே நாம் அவர்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் மறுமை நாள் வரையில் (இருக்கும்படி)விதைத்து விட்டோம். அவர்கள் (விசுவாசிகளுக்கிடையில்)யுத்த நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்துவிடுகின்றான். ஆனால் (இன்னும்)அவர்கள் ப10மியில் விஷமம் செய்து கொண்டே அலைகின்றார்கள். அல்லாஹ் விஷமம் செய்வோரை நேசிப்பதில்லை (அல்குர்ஆன் 5:64)

ய10தர்களும் கிறிஸ்தவர்களும் நாங்கள் அல்லாஹ்வுடைய குமாரர்களாகவும் அவனால் நேசிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர் (ஆகவே நபியே அவர்களை நோக்கி)நீர் கூறும் அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் (அடிக்கடி தண்டிக்கும் முறையில் )துன்புறுத்துகின்றான். (உண்மை)அவ்வாறன்று நீங்களும் அவன் படைத்த (மற்ற)மனிதர்கள் போன்று தாம். (நீங்கள் அவனுக்குப் பிறந்த குமாரர்களல். ஆகவே உங்களிலும்)அவன் விரும்பியவர்களை மன்னிக்கின்றான். அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். (ஏனென்றால்)வானங்கள் ப10மியுடையவும் இவைகளுக்கு மத்தியிலுள்ள யாவற்றினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே அவனளவில் தான் (யாவரும்)செல்ல வேண்டியதாயிருக்கின்றது (அல்குர்ஆன் 5:18)

இந்தச் சமுதாயங்களெல்லாம் அஞ்ஞான சமுதாயங்கள் அல்லது மௌட்டீக சமுதாயங்கள் ஏனெனில் இவை இறைவனை வணங்கும் முறை இவை கடைப்பிடிக்கும் நடைமுறை பழக்க வழக்கங்கள் எல்லாம் தவறான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. துவறானவை மட்டுமல்ல. சிதைக்கப்பட்டவை திரிக்கப்பட்டவை. இந்தச் சமுதாயங்களெல்லாம் அஞ்ஞான மௌட்டீக சமுதாயங்கள் ஏனெனில் இவையெல்லாம் அல்லாஹ்வை வணங்கவில்லை. வழிபடவில்லை. இவை அல்லாஹ் அல்லாதவர்களின் சட்டங்களைக் கீழ்ப்படிந்து நடப்பவை. இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்றுக் கொள்ளவுமில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தாம் அனைத்துச் சட்டங்களுக்கும் அடிப்படையாக அமைந்திட வேண்டும் என கருதவுமில்லை. மாறாக இவை மனிதர்களை அங்கமாகக் கொண்ட சட்டசபைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தச் சட்டப் பேரவைகள் தாம் சட்டங்களை ஏற்றிடும் அனைத்து அதிகாரங்களையும் பெற்றவை. இதன் மூலம் அல்லாஹ்வு;க்கு மட்டுமே சொந்தமான உரிமையைப் பறித்துக்கொண்டார்க்ள. திருமறையாம் திருக்குர்அன் அருளப்பட்ட நாள்களில் இந்த உரிமைப் பறிப்புகளைச் செய்யும் சமுதாயங்களை அல்லாஹ்வோடு ஏனையோரையும் இறைவனாக எடுத்துக் கொண்ட சமுதாயங்களாகவே சுட்டிக்காட்டிற்று. ஏனெனில் இந்தச் சமுதாயங்கள் பாதிரிமார்களையும் மதகுருக்களையும் சட்டம் இயற்றும் அதிகாரிகளாகவும் அடிபணிந்து நடக்க வேண்டிய ஆற்றலார்களாகவும் எடுத்துக்கொண்டன.

இவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்)தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றளர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்று இவர்கள் (யாவரும்)ஏவப்பட்டிருக்கின்றனர். வணக்கத்திற்குரிய நாயன், அவனையன்றி வேறொருவனும் இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன் (அல்குர்ஆன் 9:31)

இவர்கள் தங்கள் மதகுருமார்களின் முன்னால் மண்டியிட்டு அடிதொழுது ஆதரிக்கவில்லை. ஆனால் இவர்கள் தங்கள் வாழ்க்கையை வழி நடத்தும் சட்டங்களை யாத்துத் தருகின்ற அதிகாரத்தை தங்கள் மத குருமார்களுக்கும் தங்கள் பாதிரிகளுக்கும் தந்தார்கள். இதன் மூலம் தங்கள் மதகுருமார்களையும் பாதிரிகளையும் இறைவனாக ஆக்கிக் கொண்டார்கள். திருக்குர்ஆன் அன்றைக்கு இவர்கள் மேல் இப்படியொரு தீர்ப்பை வழங்கியது என்றால் இன்றைக்கும் அவர்களுடைய நிலை இது தான். இன்றைக்கு ஒரு சிறு மாற்றம். அது இன்று இவர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரின் கைகளில் அதிகாரம் அனைத்தையும் ஒப்படைத்து அவர் சொல்வதைப் போல் தங்கள் வாழ்க்கையை வழிநடத்துகின்றார்கள். இறுதியாக இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றவற்றில் அனேக சமுதாயங்கள் (ஜாஹிலிய்ய)அஞ்ஞான சமுதாயங்களே. இந்தச் சமுதாயங்களை அஞ்ஞான சமுதாயங்கள் என அழைக்கிறோம். காரணம் இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ் அல்லாதவர்களை நம்புகின்றன என்பதனால் அல்ல. அல்லது இந்தச் சமுதாயங்கள் தொழும் போது அல்லாஹ்வை விடுத்து அடுத்தவர்களையும் தொழுகின்றன என்பதனால் அல்ல. இந்தச் சமுதாயங்களை அஞ்ஞான சமுதாயங்கள் என அழைப்பதற்கான காரணம் இவர்களுடைய வாழ்க்கைகள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை மட்டுமே கொண்டு வழி நடத்தப்படவில்லை. இவர்கள் அல்லாஹ் ஒருவனே இறைவன் வேறு இறைவன் இல்லை என்பனவற்றை அழுத்தமாக நம்புகின்றனர். ஆனால் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் சட்டங்களை இயற்றும் அதிகாரங்களை அல்லாஹ் அல்லாதவர்களிடம் ஒப்படைத்து, இந்த அல்லாஹ் அல்லாதவர்கள் இயற்றும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றார்கள். பின்னர் இந்தச் சட்டங்களின் அடிப்படையில் சில வாழ்க்கை முறைகளையும் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் நெறிமுறைகளையும் தாரதம்மியங்களையும் இங்கிதங்களையும் வளர்த்துக் கொள்கின்றனர். இவற்றை வாழ்க்கையில் கிஞ்சித்தும் வழுவாமல் கடைப்பிடித்து வாழுகின்றனர். வாழ்க்கையில் நாம் எப்படி ஒழுகுகின்றோமோ அதைக்கொண்டே நாம் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இறைவன் நிர்ணயிக்கின்றான். இனை இறைவன் இப்படிக் குறிப்பிடுகின்றான்.

எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (அல்குர்ஆன் 5:44)

எவர்கள் அல்லாஹ் அருளிய (வேதக்கட்டளை)பிரகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அக்கிரமக்காரர்கள் தாம் (அல்குர்ஆன் 5:45)

சட்டங்களை இயற்றி அவற்றை மக்கள் மேல் திணிப்பவர்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறினான் என்றால் அந்தச் சட்டங்களைப் பின்பற்றுவோர் பற்றி இப்படிக் கூறுகின்றான்

(நபியே)உம்மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும் உமக்கு முன்னர் அருளப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே தாங்கள் விசுவாசிப்பதாகச் சாதிக்கின்ற சிலரை நீர் பார்க்கவில்லையா? நிராகரித்து விட வேண்டுமென்று கட்டளையிடப் பெற்ற ஒரு விஷமியை அவர்கள் (தங்களுக்குத்)தீர்ப்புக் கூறுவோனாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய)அந்த ஷைத்தானோ அவர்களை வெகுதூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகின்றான் (அல்குர்ஆன் 4:60)

..உம் இறைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யம் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிபடாதவரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள் (அல்குர்ஆன் 4: 65)

இதற்கு முன்னால் இறைவன் ய10தர்களையும் கிருஸ்தவர்களையும் இறைவனுக்கு இணை வைத்ததாகக் குற்றம் சுமத்துகின்றான். அதே போல் அவர்கள் உண்மையான இறைவனை நம்ப மறுத்தார்கள் என்றும் குற்றம் சுமத்துகின்றான். இவற்றிற்கெல்லாம் அவர்கள் செய்த தவறு. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான உரிமைகளைத் தங்கள் பாதிரிகளுக்கும் சந்நியாசிகளுக்கும் கொடுத்து விட்டார்கள். இதே போல் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான உரிமைகள் பலவற்றை தங்களுள் சில பல சர்வாதிகாரிகளுக்கும் உயர்குலத்தில் பிறந்நவர்கள் என்பவர்களுக்கும் கொடுத்து விட்டார்கள். ய10தர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் பாதிரிகளிடமும் ரிப்பிய10ன்களிடமும் அல்லாஹ்வின் உரிமைகளை ஒப்படைத்தது இணைவைப்பு என்றால், அந்தப் பாதிரிகளும் ரிப்பிய10ன்களும் சட்டம் என சாற்றியவை முன்பு சரணடைந்தது இணை வைப்பு என்றால் இதையே வேறு வடிவங்களில் முஸ்லிம்கள் செய்தால் அதுவும் இணைவைப்பே. பாதிரிகளும் ரிப்பிய10ன்களும் வைத்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது பாதிரிகளையும் ரிப்பிய10ன்களையம் தொழுவதுதான் என்றால் இன்று முஸ்லிம்கள் யாருடைய சட்டங்களைக் கீழ்ப்படிகின்றார்களோ அவர்களைத் தொழுகின்றார்கள் என்பதே உண்மை. கிறிஸ்தவர்கள் நபி ஈஸா(அலை)அவர்களை தேவகுமாரர் என்றும் சில நேரங்களில் தேவன் இறைவன் என்றும் கூறியது ஏகத்துவம் (தௌஹீத்)இறைவன் ஒருவனே என்ற அடிப்படைக் கோட்பாட்டிற்கு எதிராக எடுத்து வைத்தப் போர்ப்பிரகடனம். யூதர்கள் தங்கள் மதகுருமார்கள் இயற்றிய சட்டங்களுக்கு தலைதாழ்த்தியது அல்லாஹ்வின் வாழ்க்கை நெறிக்கு எதிராக செய்யப்பட்ட போர்ப்பிரகடனம். இந்த இரண்டு செயல்களுமே அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற அடிப்படைக்கு எதிராகக் கிளர்ச்சிச் செய்வது தான். இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் பகிரங்கமாகத் தங்களை மதச்சார்பற்றவர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றார்கள். எங்களுக்கும் மார்க்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறுத்தெறிந்துப் பேசுகின்றார்கள். இன்னும் சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அழகிய நிறைவான வழிகாட்டுதலாம் இஸ்லாத்திற்கு மதிப்பும் மரியாதையும் தருகின்றார்கள் உதட்டளவில். இந்த வாய்ச்சொல் வல்லுநர்க்ள, தங்களது நிஜ வாழ்க்கையிலிருந்து இஸ்லாத்தை முழுமையாக வெளியேற்றி விட்டார்கள். இன்னும் பல முஸ்லிம்கள் அல்லாஹ் வகுத்து வழங்கிய இந்த நிறைவான வாழ்க்கை நெறியின் நுழைவாயிலைக் கூடத் தீண்டியதில்லை. இவர்கள் நாங்கள் கண்களுக்குப் புலப்படாதவற்றை நம்பத் தயாராக இல்லை என்றும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை அறிவியலின் அடிப்படையில் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்ள விரும்புகின்றோம் என்றும் பிதற்றுகின்றனர். விஞ்ஞானம் என்ற அறிவியலும் கண்ணுக்குப் புலப்படாதவற்றை நம்புவதும் முன்னுக்குப் பின் முரணானவையாம். கண்ணுக்கும் காதுக்கும் ஒவ்வாதவையாம். இவர்களின் இந்தப் பிதற்றல் வடிகட்டின முட்டாள்தனமே அல்லாமல் வேறல்ல. ஏனெனில் முட்டாள்தனத்தை முன்னே விட்டுப் பின்னே செல்பவர்கள் முதன் முதலில் இப்படித்தான் பிதற்றித் தங்கள் முத்திரையைப் பதித்துக்கொள்வார்கள். (திருக்குர்ஆனின் நிழலில் எனற் செய்யித் குதுப் அவர்களின் திருமறை விளக்கவுரையில் இது குறித்து விரிவான விளக்கம் இடம் பெற்றுள்ளது). முஸ்லிம்களில் இன்னும் சிலர் சட்டங்களை வகுத்து வழங்கும் அதிகாரத்தை சிலருடைய விருப்பங்களுக்கு விட்டுவிடுகின்றார்கள். அதாவது அல்லாஹ் அல்லாத சிலரிடம் விட்டு விடுகின்றார்கள். இந்தச் சிலர் தங்களுக்குத் தோன்றியவற்றையும் தங்கள் விருப்பங்களுக்கு உகந்தவற்றையும் சட்டங்களாக ஆக்கிவைத்துவிட்டு இது தான் ஷாPஅத் அல்லாஹ்வின் சட்டங்கள் எனக் கூறுகின்றனர். இந்தச் சட்டங்களை அந்த மக்களும் பின்பற்றுகின்றார்கள். இந்தச் சமுதாயங்கள் எல்லாம் அல்லாஹ் ஒருவனைத் தவிர இறைவன் இல்லை என்ற கொள்கையிலிருந்து மாறுபட்டவை. இவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே வழிப்பட்டவர்களுமல்ல அவனை மட்டுமே தொழுபவர்களுமல்ல. இவற்றையெல்லாம் விளக்கி விட்ட பிறகு இஸ்லாம் இவற்றோடு வைத்துக்கொள்ள விரும்பும் உறவை ஒரே வரியில் சொல்லிவிடலாம். இஸ்லாம் இத்தகைய சமுதாயங்கள் அனைத்தையும் இஸ்லாத்திற்கு மாற்றமானவையாகவும் சட்டத்திற்குப் புறம்பானவையாகவும் கருதுகின்றது. இந்தச் சமுதாயங்கள் எந்தப் பெயரோடு வாழுகின்றன எந்தப் பெயரைக் கொண்டு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றன என்பனவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை இஸ்லாம். இந்தச் சமுதாயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவையல்ல என்ற அடிப்படையில் ஒரே இனத்தைச் சார்ந்தவையே. இந்தச் சமுதாயங்களின் வாழ்க்கை அல்லாஹ்வின் நிறைவான வழிகாட்டுதல்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவை அல்ல. இதில் இந்தச் சமுதாயங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களுக்கும் வாழ்க்கை நெறிகளுக்கும் இணைவைத்த ஏனைய ஜாஹிலிய்ய அல்லது மௌட்டீக சமுதாயங்களைப் போன்றவையே. இந்த விளக்கங்களுக்குப் பிறகு நாம் ஓர் அடிப்படை வினாவுக்கு விடை காண வேண்டும் அந்த வினா: மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்திட வேண்டிய கொள்கை எது? மனித வாழ்க்கையை வழிநடத்துகின்ற கொள்கைகளாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் தாம் இருந்திட வேண்டுமா? அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தாம் பின்பற்றப்பட வேண்டுமா? இஸ்லாம் இந்த வினாவுக்கு மிகவும் தெளிவாகப் பதில் தருகின்றது. மனித வாழ்க்கையை வழி நடத்திடும் கொள்கைகளாக அல்லாஹ்வின் வழி காட்டுதல்களே இருந்திட வேண்டும். இதில் தடங்கல்களோ தயக்கங்களோ தடுமாற்றங்களோ ஏற்படுமேயானால் இஸ்லாத்தின் முதல் அடிப்படை நம்பிக்கையின் முதல் தூண் மண்ணிலே வீழ்ந்தது என்று பொருள். இஸ்லாமிய நம்பிக்கையின் முதல் தூண் அல்லாஹ் ஒருவனே இறைவன் முஹம்மத் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதராவார்கள் என்பதாகும். இதற்குச் சாட்சியம் சொல்ல வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். அல்லாஹ்வால் வழங்கப்பட்ட வாழ்க்கை வழிகாட்டுதல் வழி நமது வாழ்வை வடிவமைத்திட நாம் முஹம்மத் (ஸல்)அவர்களின் அழகிய முன் மாதிரியைக் கீழ்ப்படிந்திட வேண்டும். இதையே அல்லாஹ் இப்படிக் கட்டைளையிடுகின்றான்.

..ஆகவே (நம்முடைய)தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமொப்பி)எடுத்துக் கொள்ளுங்கள் அவர் எதனை உங்களுக்குத் தடுத்துக் கொண்டாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 59:7)

யாருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றிட வேண்டும் என்ற வினாவுக்கு அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலையே பின்பற்றிட வேண்டும் என நறுக்கென்று பதில் தரும் இஸ்லாம் மனிதர்களின் பதிலுக்கு ஒரு வினாவை வைக்கின்றது. அல்லாஹ் அதிகமாக அறிவானா? அல்லது மனிதர்கள் அதிகமாக அறிவார்களா? இந்த வினாவுக்குப் பதிலும் தருகின்றது அல்லாஹ்வே அதிகமாக அறிவான் அவன் உங்களுக்க அறியத் தந்தது மிகவும் குறைவே இங்கே நாம் ஓர் உண்மையை ஒத்துக்கொண்டாக வேண்டும். எந்த இறைவன் நம்மைப் படைத்தானோ எந்த இறைவன் நம்மைப் பாதுகாத்து உணவளித்து வருகின்றானோ எந்த இறைவனிடம் நாம் மீண்டும் போய்ச் சேர்ந்திடுவோமோ அந்த இறைவனே நம்மை ஆட்சி செய்ய வேண்டும். அந்த இறைவனையே நாம் அடிபணிய வேண்டும். அந்த இறைவனின் வழிகாட்டுதல் வழியே நாம் வாழ்ந்திட வேண்டும். இந்த உண்மைக்கு நம்மை உட்படுத்திய பின்னர் பிறிதோர் அறிவுத் தெளிவை நாம் பெற்றாக வேண்டும். அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை நெறிகளைப் பொறுத்தவரை அவை மனிதர்களின் பலவீனங்களால் பாதிக்கப்பட்டவை. அவை காலப்போக்கில் நமது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராமல் போய்விடும். வழக்கிழந்துவிடும். ஏனெனில் அவை நமது அறிவின் எல்லைகளுக்குட்பட்டவை. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதா? குறையுடைய மனிதனின் அறிவில் அகப்பட்டவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவற்றைப் பின்பற்றுவதா? இதில் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதே அறிவுடைமை. அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் புதிரானவையோ சிக்கலானவையோ அல்ல. அவை தெளிவானவை, திட்டவட்டமானவை. அவை தெளிவாக முஹம்மத் (ஸல்)அவர்களால் வாழ்ந்து காட்டப்பட்டவை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் விளக்கங்களை இறைவனின் திருத்தூதர்(ஸல்)அவர்களின் வாழ்வு வாக்கு அவர்கள் வழங்கிய தீர்ப்புகள் அவர்கள் இட்டக் கட்டளைகள் தந்த விளக்கங்கள் காட்டிய சைகைகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதைத்தான் நாம் வழங்கிடும் இரண்டாவது சாட்சியமாகிய முஹம்மத்(ஸல்)அவர்கள் இறைவனின் திருத்தூதராவர்கள் என்பதில் அறிவுறுத்துகின்றோம். அல்லாஹ்வின் வழிகாட்டுததல் ஒரு விவகாரத்தில் இருந்திடும் போது அதில் நாம் கருத்துச் சொல்ல எதுவுமில்லை. அங்கே சூழ்நிலைக்கேற்ப புதுவிதி வகுக்கின்றோம் என நமது விருப்பங்களை உள்ளே புகுத்திடக்கூடாது. இன்னும் நம்மிடம் எழும் எல்லா விவகாரங்களையும் அல்லாஹ் அருளியதைக் கொண்டும் பெருமானார்(ஸல்)அவர்கள் வாழ்ந்து காட்டிதைக் கொண்டுமே தீர்த்திட வேண்டும். இறைவன் தன் அருள்மறையில் இதை இப்படிக் குறிப்பிடுகின்றான்.

(விசுவாசிகளே)உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய)தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங் கொண்டவர்களாயிருந்தால் (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஒப்புக் கொள்ளுங்கள்)இது தான் நன்iயாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

இஜ்திஹாத் என்ற சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்வது என்பதன் வரையறைகள் தெளிவாக இருக்கின்றன. அந்த முடிவுகள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் வகுத்தளித்த வரைமுறைகளுக்கு வெளியே சென்றிடக் கூடாது. அதே போல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் (ஸல்)அவர்களும் தங்கள் வழிகாட்டுதல்களின் வழி வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு எதிராகவும் இருந்திடக்கூடாது. சூழ்நிலைக்கேற்ப விதிகளை வகுக்கின்றோம் எனக்கூறிக் கொண்டு தங்கள் விருப்பங்களையும் வெறுப்புகளையம் சட்டமாக ஆக்கி அதை ஷாPஅத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் என் முழங்கிக் கொண்டிருக்கின்றனர் பலர். எல்லா நிலைகளிலேயும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தம் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுமே இ;ஙகே இயற்றப்படும் சட்டங்களின் ஆதாரம் அடிப்படை என்பது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாக வேண்டும். புதியதாக ஏற்படும் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுத்திடும் போது அல்லாஹ்வின் அறுதி வழிகாட்டுதலாம் திருக்குர்ஆன் அவனது இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்)அவர்களின் வாழ்வு வாக்கு ஆகிய அடிப்படை ஆதாரங்கள் எதை விரும்புகின்றன என்பதை அறிந்திட முனைந்திட வேண்டும். இந்த முயற்சி மிகவும் அக்கறையும் முனைப்பும் கொண்டதாக இருந்திட வேண்டும். இதில் இன்றைய காலகட்டங்களில் நாம் ஒரு விஷயத்தில் கவனமாக இருந்திட வேண்டும். இன்றைய நாள்களில் சிலர் தங்கள் அதிகாரங்களைச் செலுத்திட முன் வருகின்றார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் பெயரையும் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இது தான் ஐரொப்பாவில் இடம் பெற்றது. அங்கே சிலர் கிறிஸ்தவ ஆலயங்களின் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தில் தங்களை அமர்த்திக் கொண்டார்கள். அதை போன்றதொரு அமைப்போ முறையோ இஸ்லாத்தில் இல்லை. இப்போது என்னிடத்தில் இறைவன் கூறினான் என்று பேசுகின்ற முறை இஸ்லாத்தில் இல்லை. பெருமானார்(ஸல்)அவர்களின் காலத்திற்குப்பின்னால் யாரும் இறைவன் கூறினான் என்னிடம் என்று இங்கே கூறிட முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் மார்க்கம் இறைவனின் வழிகாட்டுதல்கள் வாழ்ந்து காட்டுவதற்கே. இதனை சிலர் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தகின்றார்கள். நிச்சயமாக இந்த மார்க்கம் வாழ்ந்து காட்டுவதற்கே இதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் எத்தகையதொரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதற்கு? அந்த வாழ்க்கை இந்த மார்;க்கம் என்னென்ன கொள்கைகளுக்காக வாழுகின்றதோ அந்தந்த கொள்கைகளுக்காக அமைந்திட வேண்டும். இந்தக் கொள்கைகளைப் போல் வழிமுறைகளும் இங்கே முக்கியம். இஸ்லாம் வழங்கும் இந்த வாழ்க்கை நெறியும் இஸ்லாம் கடைப்பிடிக்கச் சொல்லும் வழிமுறைகளும் இயற்கையோடும் மனிதனின் இயல்புகளோடும் முற்றாக இயைந்து செல்பவை. அத்தோடு இஸ்லாம் காட்டும் வாழ்க்கை வழி மனிதனின் அனைத்துத் தேவைகளையும் அப்படியே நிறைவேற்றுவது. ஏனெனில் இஸ்லாம் என்ற இந்த உன்னதமான வாழ்க்கை நெறி மனிதனைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது. அந்த அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். அந்த அல்லாஹ் மனிதனின் உள்ளும் புறமும் விளையும் வினைகளை நன்றாக அறிந்தவன். அவன் கேட்கின்றான்.

(யாவையும்)சிருஷ்டித்தவன் (இருதயங்களில் உள்ளவைகளை)அறியமாட்டானா? அவனோ உட்கிருபையுடையோனாகவும் (யாவையும் வெகு)நுட்பமாக அறியக் கூடியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 67:14)

மனிதர்கள் தங்கள் விருப்பங்கள் போல் வாழ்ந்து விட்டு இது இஸ்லாம் காட்டிய வாழ்க்கை வழிதான் என வளைத்தும் திரித்தும் விளக்கங்களை கூறுகின்றார்கள். இதையெல்லாம் நியாயப்படுத்துவது இஸ்லாத்தின் வேலையல்ல. இஸ்லாம் ஓர் உரைகல். இஸ்லாம் வழங்கும் அடிப்படைகளையும் நெறிமுறைகளையும் வைத்துக் கொண்டு யாருடைய வாழ்க்கை இஸ்லாமிய முறைப்படி அமைந்திருக்கின்றது யாருடைய வாழ்க்கை இஸ்லாமிய முறைப்படி அமையவில்லை என்பதை வேண்டுமானால் வரையறுக்கலாம். அல்லாமல் இஸ்லாத்தை வளைத்து சிலர் வாழும் வாழ்க்கையை நியாயப்படுத்திட முடியாது. இது தான் இறைவனின் வழிகாட்டுதல்கள் வாழ்ந்து காட்டுவதற்கே என்பதன் இயல்பான பொருள். மனிதனின் நல்வாழ்வை மனதில் கொண்டே அல்லாஹ் ஷாPஅத் சட்டங்களை அமைத்துத் தந்திருக்கின்றான். அவற்றின் அடிப்படையில் மிகவும் அழகிய முறையில் வாழ்ந்து காட்டினார்கள் முஹம்மத் (ஸல்)அவர்கள். ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களாகிய் ஷாPஅத்தின் அடிப்படையில் வாழ்ந்திடும் போதே மனிதனின் வாழ்க்கை நிம்மதியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும். இதைவிடுத்து எவரேனும் ஷாPஅத்திற்கு எதிராக வாழ்வதிலே தான் வாழ்க்கையின் பயன் கிடைக்கும் எனக் கருதினால் அவன் தன் சிந்தனையில் தடுமாறி விட்டான் என்றே பொருள். அத்தோடு இஸ்லாம் என்ற விசாலமான வளாகத்திற்கு வெளியே போய்விட்டான் என்று பொருள். இறைவன் கூறுகின்றான்.

அவர்கள் (தங்கள்)மனோ இச்சையையம் (வீண்)சந்தேகத்தையும் பின்பற்றுகின்றார்களேயன்றி வேறன்று. நிச்சயமாக அவர்களின் இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கின்றது. எனினும் அவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை. மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா? ஏனென்றால் இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக்குரியனவே (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்) (அல்குர்ஆன் 53:23 – 25)

சிந்தனையில் தடுமாறி அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக வாழ்வதிலே தான் பலனும் முன்னேற்றமும் இருக்கின்றன எனக் கருதும் இவர்கள் நிராகரிப்பாளர்களே. இப்படிக் கருதுபவர்களைக் கணமேனும் மார்க்கத்தன் மேதாவிகள் என ஒத்துக்கொள்ளக்கூடாது.

தொடர்ந்து வரும்...

sources from warmcall.blogspot.com