Nov 21, 2015

அரசு பற்றிய இஸ்லாத்தின் கருத்தாக்கம்– பாகம் – 1

அத்தவ்லா என்ற அரபி வார்த்தைக்கு மொழியியல் ரீதியாக கலப - மிகைத்துவிடுதல்’ என்று பொருளாகும். காலத்தின் மாறுதலை சுட்டிக்காட்டுவதற்கு இந்த வார்த்தையை பயன் படுத்துவதும் வழக்கத்தில் இருந்தது. ‘நாட்கள் மாற்றப்பட்டுள்ளன அல்லது சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன’ என்று மொழியியல் ரீதியாக கூறப்படுகிறது, இதற்கு நாட்கள் மாற்றமடைந்து விட்டன அல்லது அல்லாஹ்(சுபு) மக்களுக்கு மத்தியில் அவற்றை மாற்றுகிறான் போன்ற அர்த்தங்கள் உள்ளன.
 
 
கருத்தாக்கங்களில் (concepts) ஏற்படும் மாற்றங்கள், காலத்தால் ஏற்படும் மாற்றங்கள், மக்களுக்கு மத்தியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசுகள் மாற்றம் அடைகின்றன. ‘அரசு என்ற மொழிவழக்கு ரீதியான வார்த்தை குறிப்பிட்ட நிலப் பரப்பில் வாழும் மக்கள் கூட்டத்தின் மீது ஏவல் மற்றும் விலக்கல் தொடர்பான ஆணைகளை பிறப்பிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ள அமைப்பை குறிப்பிடுகிறது. எனினும் சமுதாயங்களின் எதார்த்த நிலையை பொருத்தும் அவர்களின் கண்ணோட்டங்களை பொருத்தும் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாக ‘அரசு’ தொடர்பான வரையறைகள் மாறுபடுகின்றன.
 
 
 உதாரணமாக மேற்கத்திய மக்கள் அரசின் எதார்த்தநிலை குறித்தும் அரசு அமல்படுத்தும் சட்டங்கள் குறித்தும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டிருக்கிறார்கள். வரலாற்றின் மத்தியகால கட்டத்தில் நிகழ்ந்ததை போன்று அரசின் எதார்த்தநிலை மதச்சார்பு கொண்ட தாகவோ அல்லது சர்வாதிகாரத்தை கொண்டதாகவோ அல்லது ஜனநாயக முறையை கொண்டதாகவோ இருக்கலாம். எனினும் அரசு அதன் நிலப்பரப்பிலும் அதன் மக்கள் கூட்டத்திலும் அதன் ஆட்சியாளரிலும் எதிரொலிக்கிறது என்பதை பொருத்தும், இம்மூன்று அம்சங்களும் அரசின் அடித்தளமாக விளங்குகின்றன என்பதை பொருத்தும் மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தார்கள். மேற்கத்திய மக்களை பொருத்தவரை, அரசு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்படுகிறது என்றும் அதில் குறிப்பிட்ட மக்கள் கூட்டம் நிரந்தரமாக வசித்துவருகிறது என்றும் ஆட்சியதிகாரம் பெற்ற ஆட்சியாளர் ஒருவர் அவர்களுக்கு தலைமையேற்று வழிநடத்துகிறார் என்றும் கருதுகிறார்கள்.
 
 
இஸ்லாமிய அரசை பொருத்தவரை அது ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்யும் அரசியல் மையமாகவும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பாகவும் விளங்குகிறது. வேறுவகையில் கூறினால், அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் மற்றும் இஸ்லாத்தின் செய்தியை உலக முழுவதற்கும் எடுத்துச்செல்லுதல் ஆகிய பணிகளை நிறைவேற்றுகின்ற அரசாக கிலாஃபா விளங்குகிறது, ஏனெனில் இஸ்லாமிய நிலப்பரப்புகளில் ஷரீஆ சட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கும், இஸ்லாம் முழு உலகிற்கும் ஒளியாகவும் நேர்வழி காட்டுகின்ற மகத்தான செய்தியாகவும் விளங்குகிறது என்பதால் அதை தஃவா மூலமாகவும் ஜிஹாது மூலமாகவும் எடுத்துச்செல்வதற்கும், உரிய வழிமுறையாக (தரீக்கா) இஸ்லாமிய அரசு திகழவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்.
 
 
இஸ்லாமிய அரசு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்பட்டிருந்தபோதும், தன்னுடைய குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்தற்குரிய பொறுப்பை சுமந்து கொண்டிருந்த போதும், அதன் நிலப்பரப்பின் அளவையோ அல்லது அதன் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையையோ அது அடித்தளமாக கருதுவதில்லை. எனினும் எல்லா காலகட்டங்களிலும் அதன் குடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டுதான் இருந்தது!
 
இனத்திலும் நிறத்திலும் மொழியிலும் வேறுபட்ட மக்கள் அதன் குடிமக்களாக விளங்கினார்கள். நிலப் பரப்பை பொருத்தவரை குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்பட்டிருக்கும் வகையில் அது சுருங்கிய தாகவோ குறுகிய எல்லைகளை கொண்டதாகவோ இருக்கவில்லை மாறாக எப்போதும் அதன் எல்லைகள் விரிந்துகொண்டேயிருந்தது ஏனெனில் அது உலகளாவிய மகத்தான செய்தியை தன்னிடத்தே கொண்டுள்ளது! அதை முழு உலகிற்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் உலக மக்கள் அனைவரையும் அதன்பால் அழைக்கவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) ஹகட்டளையிட்டுள்ளான்!
 
வெள்ளையராக அல்லது கருப்பராக இருந்தபோதும், அரபுகளாக அரபல்லாதவர்களாக இருந்தபோதும், ஐரோப்பியர்களாக அமெரிக்கர்களாக ரஷ்யர்களாக இருந்தபோதும் அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தை தழுவிக்கொள்ளும் வகையில் அனைவருக்கும் இஸ்லாத்தின் செய்தியை எத்திவைக்க வேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்! ஆகவே எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இஸ்லாத்தின் அழைப்பிற்கு செவி சாய்த்து அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தில் இணைந்துவிட்டால் பிறகு அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அரசின் குடிமக்களில் ஒருபகுதியினராக ஆகிவிடுவார்கள், அவர்களின் நிலப்பரப்புகள் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளாக ஆகிவிடும்! இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச்செல்லும் பொருட்டு எந்த நிலப்பரப்பை ஜிஹாது மூலமாக அரசு வெற்றிகொள்கிறதோ அதுவும் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளின் ஒருபகுதியாகவும் அதன் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டதாகவும் ஆகிவிடும், அதன் மக்கள் இஸ்லாத்தை தழுவினாலும் தழுவாவிட்டாலும் சரியே!
 
 
எந்தவொரு புதிய அரசும் அது தோன்றியுள்ள புதிய சிந்தனையின் மீதுதான் நிலை கொண்டிருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நிலப்பரப்பின் அதிகாரம் கைப்பற்றப்பட்டு ஆட்சி யதிகாரம் மாறும்போது அரசு தொடர்பான மக்களின் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஏனெனில் சிந்தனை கருத்தாக்கங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மாற்றமடையும்போது அவை ஒருவருடைய நடத்தை பண்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அப்போது அவர் இந்த கருத்தாக்கங்களி னால் வடிவமைக்கப்படுகிறார். எனவே வாழ்வியல் தொடர்பான அவருடைய கண்ணோட்டம் மாறிவிடுகிறது, இதன்விளைவாக மற்ற மக்களுடன் கொண்டுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை தொடர்பான அவருடைய கண்ணோட்டமும் மாறிவிடுகிறது. மக்களின் விவகாரங்கள், அவர்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள், அவர்களுடைய நலன்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் பொருட்டுதான் எந்தவொரு ஆட்சியமைப்பும் நிறுவப்படுகிறது.
 
 
இரண்டாவது அகபா உடன்படிக்கையில் அன்ஸாரிகள் பைஆ அளித்தபின்னர் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவை அடைந்தார்கள். அகாபாவில் அளிக்கப்பட்டது பாதுகாப்பு, போர் மற்றும் மதீனாவின் ஆட்சியதிகாரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்குதல் ஆகியவை தொடர்பான பைஆ என்பதால் மதீனாவை அடைந்த உடனேயே இஸ்லாமிய அரசை நிறுவும் பணியை நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். இஸ்லாமிய அரசின் தோற்றம் என்பது இஸ்லாத்தின் புதிய அகீதாவும் நபி(ஸல்) அவர்கள் மீது ஈமான்கொண்டிருந்த மக்கள் ஏற்றுக்கொண்டிருந்த பல புதிய கருத்தாக்கங்களும் ஏற்படுத்திய விளைவுகளாகவே இருந்தது. இந்த கருத்தாக்கங்கள் நபி(ஸல்) அவர்களை பின்பற்றிய மக்களிடம் வாழ்வியல் பற்றிய புதியதோர் கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இதன்விளைவாக மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம் புதிய பரிமாணத்தை அடைந்திருந்தது.
 
 
சட்டவடிவங்கள் தொடர்பான வசனங்கள் அருளப்படாத நிலையில் இந்த அகீதாவின் அடிப்படையிலும் அதிலிருந்து தோன்றிய கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். எனவே இஸ்லாமிய அரசு என்பது புதிய அகீதா மற்றும் அதிலிருந்து தோன்றிய பல புதிய சிந்தனைகள், கருத்தாக்கங்கள் ஆகிய வற்றின் மீது கட்டமைக்கப்பட்ட புதிய அரசாக விளங்கியது.
 
 
அதன் இயல்பிலும் கட்டமைப்பிலும் அதன் இலட்சியத்திலும் அதன் அடித்தளத்திலும் முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மை கொண்ட ஓர் அரசாக இஸ்லாமிய அரசு விளங்கியது. உலகில் நிலைபெற்றிருந்த மற்ற அனைத்து அரசுகளிலிருந்து இயல்பிலும் அமைப்பிலும் முழுமை யாக வேறுபட்ட ஓர் அரசாக திகழ்ந்தது. இஸ்லாமிய அரசு ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் & வணங்கிவழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹுவை தவிர வேறில்லை; முஹம்மது(ஸல்) அவனுடைய தூதராக இருக்கிறார்’ என்ற இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு தோன்றிய அரசாக இருந்தது. இஸ்லாத்தின் அகீதா என்பது வாழ்வியல் பற்றிய முழுமையான சிந்தனையாகும், அதனடிப்படையிலும் அதிலிருந்து தோன்றியுள்ள சிந்தனைகள் மற்றும் கருத்தாக்கங்கள் அடிப்படையிலும் வாழ்வியல் தொடர் பான முஸ்லிம்களின் கண்ணோட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கண்ணோட்டம், வாழ்வு என்பது படைப்பாளன் ஒருவனால் படைக்கப்பட்டுள்ளது அந்த படைப்பாளனின் ஏவல், விலக்கல் கட்டளைகள் அடிப்படையில்தான் அது நடத்திச்செல்லப்படுகிறது என்ற நம்பிக்கை யின்பால் மனிதர்களை இட்டுச்செல்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை, அல்லாஹ்(சுபு) ஒருவனை தவிர்த்து சட்டம் வழங்குவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை என்பதும் இந்த வாழ்க்கையிலும் இஸ்லாமிய அரசிலும் அல்லாஹ்(சுபு)வின் சட்டத்தை தவிர்த்து உம்மாவிற்கும் அல்லது மக்களுக்கும் அல்லது ஆட்சியாளருக்கும் அல்லது வேறு எதற்கும் இறையாண்மை (sovereingty) கிடையாது என்பதும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மையாக இருக்கிறது.
 
 
ஆகவே எந்தவொரு சட்டத்தை இயற்றுவதற்கும் அல்லது அல்லாஹ்(சுபு)  தன்னுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிற்கு அந்நியமான ஹஎந்தவொரு செயலாக்க அமைப்பை (system) அல்லது விதிமுறையை உருவாக்குவதற்கும் உம்மாவிற்கோ அல்லது ஆட்சியாளருக்கோ அனுமதியில்லை. இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுகின்ற ஏதேனும் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு உம்மா பொதுவான முறையில் ஒப்புதல் தெரிவித்தபோதும் அந்த ஒப்புதலுக்கு எத்தகைய மதிப்பும் கிடையாது. எனவே உதாரணமாக, வட்டி அடிப்படையிலுள்ள வரவுசெலவுகள் இல்லாமல் பொருளாதாரமும் வர்த்தகமும் செழிக்காது என்ற கருத்தில் வட்டியை சட்டரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது தனிமனித சுதந்திரம் என்ற அடிப்படையில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகளை சட்ட ரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது மனிதஉரிமை மீறல் என்ற அடிப்படையில் மார்க்கத்தை விட்டு வெளியேறியவரை கொலை செய்வதை தடைசெய்வதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது இஸ்லாமிய அரசு என்ற முறையில் இஸ்லாமிய அகீதாவிற்கு அப்பாற்பட்டு மற்றொரு அடிப்படை கோட்பாடு இருப்பதை அனுமதிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஆட்சியதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பரம்பரை வாரிசுரிமை அளிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளை அமைப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும், பொதுக்கருத்து என்ற அடிப்படையில் இதுபோன்ற எத்தகைய விவகாரங்களுக்கு ஒப்புதல் அளித்தாலும் அவையனைத்திற்கும் எத்தகைய மதிப்பும் கிடையாது அவற்றிற்கு சட்டரீதியாக எத்தகைய அங்கீகாரமும் கிடையாது, ஏனெனில் அல்லாஹ்(சுபு) மட்டுமே சட்டம் வழங்கு பவனாக (Legislator) இருக்கிறான் என்ற முறையிலும் சட்டம் வழங்குவதற்குரிய அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்ற முறையிலும் ஹஇவை இஸ்லாமிய சட்டங்களுக்கும் ஷரீஆவின் இறையாண்மைக்கும் அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள ஈமானிற்கும் முரண்பாடாக இருக்கின்றன.
 
 
இஸ்லாமிய அகீதா இஸ்லாமிய அரசின் அடித்தளமாக விளங்குகிறது என்ற முறையில் மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்தை இயற்று வதற்கோ அல்லது அரசியல் சாஸனம் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட செயலாக்க அமைப்பு அல்லது அரசாணை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கோ அல்லது அல்லாஹ்(சுபு) அருளியவற்றுஹக்கு அந்நியமான சட்டங்கள் எதனையும் இஸ்லாமிய அரசின் நடைமுறைப் படுத்துதலில் கொண்டுவருதற்கோ ஆட்சியாளர்களாக இருந்தாலும் நீதிபதிகள், அறிவுஜீவிகள், அரசியல் மேதைகள், ஷூரா கவுன்ஸில் உறுப்பினர்கள், மஜ்லிஸுல் உம்மா உறுப்பினர்கள், அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் சட்டரீதியான எத்தகைய அதிகாரமும் கிடையாது! மேலும் அரசு விவகாரங்களை நடத்திச்செல்லும் பொருட்டு மக்களை நிர்பந்தம் செய்வதிலிருந்தும், மனிதர்கள் உருவாக்கிய செயலாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதற்கு மக்களுக்கு தேர்வுரிமையை அளிப்பதிலிருந்தும் ஆட்சியாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள்.
 
 
கலீஃபா தனது சட்டரீதியான அதிகாரத்தின் அடிப்படையில் அரசியல் சாஸனத்தை அல்லது செயலாக்க அமைப்பை (system) அல்லது சட்டத்தை ஏற்று அமல்படுத்தும்போது அவற்றை அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகியவற்றிலிருந்து தனது இஜ்திஹாத் மூலமாக எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது முஸ்லிம் களிலுள்ள சட்டயியல் நிபுணர்கள் மற்றும் கற்றறிந்த அறிஞர்கள் ஆகியவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய அரசின் அரசியல் சாஸனம், அதன் செயலாக்க அமைப்புகள், மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை அல்லாஹ்(சுபு) தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிலிருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவதுஹ அல்லாஹ்(சுபு)வின் வேதம், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட கியாஸ் (anology) ஆகியவற்றிலிருந்தும் ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவுகளிலிருந்தும் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
 
 
எனவே இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றியிராத சிந்தனைகள் எதையும் பாதுகாப்ப திலிருந்தும் அல்லது அதுபோன்ற கருத்தாக்கங்கள், சட்டங்கள், அரசியல் சாஸனங்கள், விதி முறைகள் அல்லது அளவுகோல்கள் ஆகியவற்றை பரிசீலிப்பதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது. அன்றியும் அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகிவற்றிலிருந்து கொண்டுவரப்படாதவை மற்றும் சட்ட ரீதியான கியாஸ் அல்லது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டுவரப்படாதவை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதிலிருந்தும் அது தடைசெய்யப் பட்டுள்ளது. எனவே ஜனநாயகத்தின் அடிப்படையிலுள்ள வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்வதிலிருந்தும் பன்முக நம்பிக்கைகள், முஸ்லிம்கள் பரம்பரை அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை பெறுதல், மதச்சார்பின்மை கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளுதல் அல்லது பல்வேறு வகையான சுதந்திரங்கள் போன்ற ஜனநாயம் அழைப்புவிடுக்கும் ஆட்சியமைப்பு அம்சங்கள் எவற்றையும் ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இவையனைத்தும் இஸ்லாமிய ஷரீஆவிற்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் முரணாக இருக்கின்றன. மேலும் தேசியவாதம், தேசப்பற்று, சுயஆட்சி போன்ற கருத்தாக்கங்களை பரிசீலனை செய்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த கருத்தாக்கங்கள் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆ சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன. அன்றியும் இவற்றை இஸ்லாமிய ஷரீஆ ஆழமாக வெறுக்கிறது என்ற முறையிலும் இவற்றை ஏற்று அமல்படுத்துவது குறித்து கடுமையாக எச்சரித்திருக்கிறது என்ற முறையிலும் இவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. மன்னராட்சி, குடியரசு ஆட்சி, சர்வாதிகார ஆட்சி மற்றும் ஏகாதிபத்திய ஆட்சி போன்ற ஆட்சியமைப்பு தொடர்பான கருத்தாக்கங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப் பட்டுள்ளது, ஏனெனில் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆவிலிருந்து எடுக்கப்படவில்லை என்ற அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன.
 
 

Nov 15, 2015

மீண்டும் ஒருமுறை பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரயீல் போரை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது!

நமது பொறுப்பு என்ன?
 
 
 

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
 நிச்சயமாக நாம் நம்முடைய தூதருக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம் சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்! (அல்மூஃமின் : 51)

 
 அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
 
உண்ணுதல் நிமித்தம் மக்கள் ஒன்றுகூடுவது போலவே (பல்வேறு) சமுதாயத்து மக்கள் உங்களுக்கு எதிராக வெகுவிரைவில் ஒன்றுகூடுவார்கள்!  ‘அந்நாட்களில் நாங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாகவா?’ என்று வினவப்பட்டது. ‘இல்லை! அந்நாட்களில் நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பீர்கள்! எனினும் கடல் நுரையை போன்று (பலவீனமாக) இருப்பீர்கள்! அல்லாஹ்(சுபு) உங்களை பற்றிய அச்சத்தை உங்கள் எதிரிகளிடமிருந்து அகற்றிவிட்டு உங்கள் இதயங்களில் வஹ்னை போட்டு விடுவான்!’ என்று கூறினார்கள். ‘அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று வினவப்பட்டது. ‘உலக வாழ்க்கையின் மீதுள்ள (ஆழமான) விருப்பம் மற்றும் மரணத்தின் மீதுள்ள (கடுமையான) வெறுப்பு!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (நூல் : அஹ்மது, அபூதாவூது)
 
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு எதிராக பல வாரங்கள் நிகழ்த்தப்பட்டுவரும் போரில் இஸ்ரேலிய படைகள் ஆண்களையும் பெண்களையும் முதியவர்களையும் இளைஞர்களையும் குழந்தை களையும் எத்தகைய வேறுபாடுகளுமின்றி பட்டப்பகலில் கொன்று குவித்துவருகிறது! கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக புனித மண்ணை ஆக்கிரமித்துள்ள நிலையில் முஸ்லிம்களை மிருகத்தனமான கொடுமைகளுக்கு உள்ளாக்குவதில் இஸ்ரேலிய அரசு எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை!
 
முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் ஒன்றபின் ஒன்றாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன! குறிப்பாக பாலஸ்தீன மக்களின் நிலை குறித்து ரசூலுல்லாஹ்வின் இந்த சமுதாயம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளது!
 
 பாலஸ்தீனம் என்றால் என்ன? இஸ்லாத்தில் அதற்கு என்ன முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது?
பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்வெளி பயணத்திற்கு உயர்ந்துசென்ற புனித பூமியாகவும் திகழ்கிறது!
 
 அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
(அல்லாஹ்) மிகவும் பரிசுத்தமானவன்! அவன் (முஹம்மது ஸல் எனும்) தனது அடியாரை (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து (தொலைதூரத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் எனும்) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓர்இரவில் அழைத்துச்சென்றான்! நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிக்கும் பொருட்டு அதனை சூழவுள்ள பகுதிகளை நாம் செழிபுற்று அபிவிருத்தி அடையச்செய்துள்ளோம். நிச்சயமாக அவன் நன்கு செவியுறு பவனாகவும் (அடியார்களை) உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்  (அல்இஸ்ரா : 1)                                                  

 
அன்றியும் பாலஸ்தீன பூமி முஸ்லிம்களின் மூன்றாது புனித ஸ்தலமாகவும் விளங்குகிறது!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறியதை செவியுற்றதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது,
மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து வேறெதற்கும் (புனித)பயணம் மேற்கொள்ள வேண்டாம்! அவையாவன : எனது மஸ்ஜித் (மஸ்ஜித் அந்நபவி); மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா); மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) ஆகியவையாகும் (நூல் : முஸ்லிம் # 007 ஹதீஸ் எண் #  3218)
 
முஸ்லிம்களின் இத்தகைய புனித பூமியில்தான் இஸ்ரேலிய படைகள் அட்டூழியம் புரிந்து வருகின்றன! மிருகங்கள் புரிந்திடாத கொடிய செயல்களை யூதவெறியர்கள் நிகழ்த்தி வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் இளம் சிறுமிகளை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை! கல்விகற்க செல்லும் அவர்களை சோதணையிடுதல் என்ற சாக்கில் இடைமறித்து இஸ்ரேலிய இராணுவம் இழிவுபடுத்துவதோடு பகிரங்கமாக சுட்டிக்கொல்கிறது. இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன!

 
முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் அங்கமாக இருப்பவர்கள் என்ற முறையில் நமது சகோர சகோரிகளுக்கு எதிராக இழைக்கப்படும் இந்த வன்கொடுமை குறித்து கவலை கொள்ள வேண்டியதும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதும் அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதும் நம்மீது கட்டாயக்கடமையாக இருக்கிறது.

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ஒருவருக்கொருவர் பேணவேண்டிய நேசத்திலும் இரக்கத்திலும் கருணையிலும் மூஃமின்கள் (மனித) உடலுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்!‎காலில் ஒருகாயம் ஏற்பட்டால் முழு உடலும் காய்ச்சலுக்கு உட்பட்டு உறக்கமின்மை ஏற்படுகிறது (நூல் : முஸ்லிம்)

 
இக்காலகட்டத்தின் குறிப்பிட்ட வரலாற்று பாங்கின் பின்னணியில் தோன்றியுள்ள முஸ்லிம் உலகத்தின் இன்றைய தலைவர்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற தங்கள் கடமையை பற்றிய எத்தகைய தார்மீக உணர்வையும் பெற்றிருக்கவில்லை! போஸ்னியா, மியான்மர், சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் இதுதான் எதார்த்த நிலையாக இருக்கிறது. முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக மேற்கத்திய அரசுகள் கட்டவிழ்த்துவிடும் அக்கிரம செயல்களை தடுப்பதற்குரிய அரசியல் துணிவு இல்லாத அவர்களின் நிலை மேற்கத்தியர்களுக்கு அவர்கள் அடிமைப்பட்டுள்ளதை பறைசாற்றுகிறது! சர்வதேச முஸ்லிம்களை பொறுத்த சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் அவர்கள் ஆழமாக பிளவுபட்டிருக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் நிலப்பரப்புகளை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் கொடுங்கோலர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு துணிவில்லை என்பதையும் அது பறைசாற்றுகிறது!

 
 முஸ்லிம் சகோதர சகோதரிகளே!
முஸ்லிம் உலகம் ஆபத்தான பெருந்துயரத்தில் வீழ்ந்துகிடக்கும் இவ்வேளையில் உங்கள் இல்லங்களில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிகளை பார்த்து முஸ்லிம்களின் நிலை குறித்து வருந்திக்கொண்டிருப்பதில் எத்தகைய பயனும் விளையப்போவதில்லை! மாறாக, நாம் எந்த நிலப்பரப்பில் இருந்தபோதும் ஒன்றிணைந்து இந்த பாதகமான நிலையை மாற்றுவதற்கு வழிவகை காணவேண்டும்!

 
ஒரு தலைமைக்கும் மனித இனம் முழுமைக்கும் நீதி வழங்குவதற்கு திறன்பெற்ற ஓர் அரசியல் கட்டமைப்பிற்கும் கீழ் முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவது மட்டுமே இதற்குரிய தீர்வாகும். மேற்கத்தியர்களின் அத்துமீறல்களுக்கும், நமது சகோதர சகோதரிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், மாண்புமிக்க இஸ்லாமிய மண்ணில் காலனியாதிக்கவாதிகள் ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளுக்கும், நமது வாழ்க்கை முறையில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கும், நமது அனைத்து பிரச்சினைகளுக்கும் இதுமட்டுமே ஒரே தீர்வாக இருக்கும்! நமது கரங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய அரசியல் கட்டமைப்பு என்ற கிலாஃபா ராஷிதாவை மீண்டும் மறுநிர்மாணம் செய்வதற்கு அழைப்புவிடுப்பது மட்டுமே முஸ்லிம்களின் இந்த அவலநிலையை போக்குவதற்குரிய ஒரே வழியாக இருக்கிறது! கிலாஃபா அரசால் மட்டுமே முஸ்லிம்கள் இரத்தம் சிந்துவதையும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாவதையும் தடுத்துநிறுத்த இயலும்!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
இமாம் என்பவர் கேடயமாவார்! (முஸ்லிம்களாகிய நீங்கள்) அவருக்கு பின்நின்று போரிடுகிறீர்கள், அவரை கொண்டே பாதுகாப்பு அடைகிறீர்கள் (நூல் : முஸ்லிம்)

 
சுதந்திரமாகவும் நீதமாகவும் மேற்கத்திய ஆதிக்கத்தின் அடிமைத்தளைக்கு உட்படாமலும் செயலாற்றுவதற்கு திறன் பெற்றுள்ள கிலாஃபா ராஷிதாவின் தலைவரான கலீஃபாவின் இராணுவம் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படும் நிலையில் செயலற்று நின்றிருக்காது!‎‎‎‎‎ கலீஃபா உஸ்மானின்(ரளி) ஆட்சிக்காலத்தில் இவ்வாறுதான் நிகழ்ந்தது. பைசாந்திய (ரோமானிய) சஸானிய (பாரசீக) வல்லரசுகளின் அடிமைத்தளையில் சிக்குண்டு பெரும் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்த வடஆப்பிரிக்க நிலப்பரப்புகளை விடுவிப்பதற்கு முஸ்லிம் உலகத்தின் மாபெரும் வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி உஸ்மான்(ரளி) போரிட்டார்! முஸ்லிம் உலகத்தில் கிலாஃபா ராஷிதாவை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், அது ஒட்டுமொத்த உலகத்திலும் அடக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சரணாலயமாக விளங்கும்!

 
இதை சாத்தியமாக்க வேண்டுமெனில் நம்மை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவை நாம் அதிகரித்துக்கொள்ள வேண்டும், நம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ளவேண்டும், இஸ்லாத்தின் எதிரிகள் முன்வைக்கும் தர்க்க வாதங்கள் பற்றியும் அவற்றிற்குரிய மறுப்புரைகள் பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். தீனுடைய அனைத்து விஷயங்களின் கருத்தாக்கங்கள் மற்றும் அவற்றை நடைமுறையில் பின்பற்றுவது குறித்த தெளிவான விளங்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை நாம் பெற்றிருக்க வேண்டும்.

 
இந்த நோக்கத்தை நிறைவுசெய்வதற்குரிய திறன்கள் அனைத்தையும் நாம் பிரயோகிக்க வேண்டும். இதன்பொருட்டு வன்முறையற்ற ஆர்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டும், முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சம்பவங்கள் குறித்து ஊடகங்களுக்கு விபரமாக எழுதவேண்டும், நமது குரல்களை பதிவுசெய்வதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் அவர்களுடைய தீய செயல்பாடுகளை தடுக்கும் வண்ணம் அரசுகளின் மீது நாம் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்! இஸ்லாத்தின் தூதுவர்கள் என்ற முறையில் நாம் நமது நிலை குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும்! ஷரீஆ சட்டங்களுக்கு முரண்படாத வகையில் நாம் நமது செயல்பாடுகளை வன்முறையற்ற வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும்.

 
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அல்லாஹ்(சுபு)விடம் துஆ மேற்கொள்ளவேண்டும், அவனுடைய நேசத்திற்குரிய தூதர்(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் மீது கருணையையும் சாந்தியையும் நல்கவேண்டும் என்று எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு)விடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த உலகவாழ்க்கையில் இஸ்லாமிய தீனை நிலைநிறுத்துவதற்கு அவன் முஸ்லிம் உம்மாவிற்கு பலத்தையும் கண்ணியத்தையும் அளிப்பானாக!

 
இந்த பிரச்சாரம் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுங்கோண்மை மிக்க இஸ்ரேலிய யூதவெறியர்கள் மேற்கொண்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிராக உங்கள் குரல்களை பதிவுசெய்வதற்கும் கீழ்க்கண்ட இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்,


 
Facebook  : https://www.facebook.com/vaomuslims
Twitter : https://twitter.com/vaomuslims
உங்கள் கருத்துக்களை மின்னஞ்கல் மூலம் பதிவுசெய்யவும்‎‎ ‎‎‎‎‎  – mif.sindhanai@gmail.com

Nov 10, 2015

அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்

74] நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்
 
 
 
1967 - இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம்.
 
ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள்.
 
அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள்குற்றம் சாட்டினார்கள்.
 
நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், அப்புறம் இந்த அரசாங்கங்களை நம்பி என்ன புண்ணியம்?
 
ஆகவே, ஏதாவது ஒரு மாற்று வழி யோசித்தே தீரவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.மக்களுடைய இந்தச் சிந்தனைப் போக்கின் விளைவுதான், பாலஸ்தீனில் ஏராளமான விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயின. அத்தனை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, சரியான திட்டம் வகுத்து, கவனம் குவித்து, இஸ்ரேலுக்கெதிரான முழுநீள யுத்தத்தை வழி நடத்தும் பொறுப்பு, பி.எல்.ஓ.வின் தலையில் விழுவதற்குக்காரணமானது.
 
அப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் இருப்பவர், மிகப்பெரிய ராஜதந்திரியாகவும் மாவீரராகவும் மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டுமென்றுதான் யாசர் அராஃபத்தை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார்கள்.
 
அதுவரை குவைத்தில் இருந்தபடி அல் ஃபத்தாவை வழிநடத்திக்கொண்டிருந்த அராஃபத். அரபு தேசங்களில் இருந்த எந்த ஒரு போராளி இயக்கத்துக்கும் அதுவரை பரிச்சயமில்லாமல் இருந்த 'கெரில்லா' தாக்குதல் முறையில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்த அராஃபத்.1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கெய்ரோவில் கூடிய பாலஸ்தீன் தேசிய காங்கிரஸின் சிறப்புக் கூட்டத்தில், யாசர் அராஃபாத் முறைப்படி பி.எல்.ஓ.வின் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
அவர் அந்தப் பொறுப்புக்கு வந்தபோது பி.எல்.ஓ.வில் உறுப்பினராக இருந்த விடுதலை இயக்கங்கள் இவை:
 
1. Fatah, 2. western Sector, 3. Force 17, 4. Popular Front for the Liberation of Palestine PFLP, 5. Democratic Front for the Liberation of Palestine DFLP), 6. Hawatmah Faction; 7.Abd Rabbu Faction; 8. Popular Front for Liberation of Palestine (General Command), 9. Palestine Liberation Front, (PLF) 10. Abu Abbas Faction, 11. Tal'at Yaqub Faction, 12.AlSaiqa Organization, 13. Arab Liberation Front (ALF), 14. Palestinian Arab Liberation Front , 15. Palestinian Democratic Union (Fida), 16. Palestine Islamic Jihad Movement, 17.Palestinian People's Party [Hizb Al Sha'ab], 18. Palestinian Popular Struggle Front.
 
இவற்றுள் ஃபத்தா மட்டும் அராஃபத்தின் சொந்த இயக்கம்.
 
மற்ற அனைத்தும் தோழமை இயக்கங்கள். இத்தனை இயக்கங்களையும் கட்டிக்காப்பதுடன் மட்டுமல்லாமல் சரியான, முறைப்படுத்தப்பட்ட போர்ப்பயிற்சி அளிப்பது, இஸ்ரேலை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கவனம் கவர வழி செய்வது என்று அராஃபத்துக்கு இருந்த பொறுப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
 
வெற்றிகரமாக அவரால் அதனைச் செய்ய முடிந்ததற்கு மிகப்பெரிய காரணம், முன்பே பார்த்ததுபோல, அரசுகள் மீது மக்கள் இழந்துவிட்டிருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை அப்படியே அப்போது விடுதலை இயக்கங்களின்பக்கம் சாயத் தொடங்கியது.
 
இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், பாலஸ்தீன் மக்கள், ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைத்தார்கள். அதே சமயம், இந்தப் போராளி இயக்கங்கள்தான் தமக்கு விடுதலை பெற்றுத் தரப்போகிறவர்கள் என்றும் கருதினார்கள்.
 
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.போராளி இயக்கங்கள் பொதுவாக, தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களாகச் சித்திரிக்கப்படுவது சர்வதேச மரபு. இதை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா.
 
அமெரிக்க அரசுக்குத் தலைவலி தரக்கூடிய எந்த ஓர் அமைப்பையும், பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதுதான் அத்தேசத்தின் வழக்கம்.
 
அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த வழக்கத்தை முதலில் இங்கிலாந்தும் பிறகு ஐரோப்பிய யூனியனில் உள்ள அத்தனை தேசங்களும் அப்படியே எவ்வித மாறுதலும் செய்யாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன.
 
சர்வதேச அளவில் எந்த ஒரு தேசத்தில் விடுதலைக் குரல் கேட்கிறதோ, அந்தக் குரலுக்கு உரியவர்களைத் தீவிரவாதிகள் என்று உடனே சொல்லிவிடும் வழக்கம், அப்போது ஆரம்பித்ததுதான்.
 
உண்மையில் விடுதலை இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அரசாங்கங்கள் கைவிட்டு, அரபு லீக்கும் கைவிட்டு, ஐ.நா.சபையும் கைவிட்டபிறகு, இழந்த தங்கள் நிலத்தைத் திரும்பப்பெற பாலஸ்தீன் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றானது வரலாறு.
 
அவர்களைப் போராளிகள் என்று சொல்லாமல் தீவிரவாதிகள் என்று வருணிப்பது எப்படிச் சரியாகும்?ஆனால் இந்தப் போராளி இயக்கங்கள் சமயத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதுண்டு என்பதும், மறுக்கமுடியாத உண்மையே ஆகும்.
 
உதாரணமாக, யாசர் அராஃபத் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஐந்தாம் ஆண்டு, அதாவது 1974-ம் வருடம் பி.எல்.ஓ.வின் ஒரு குழுவினர் இஸ்ரேலில் உள்ள மா'லாட் என்கிற இடத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் புகுந்து, கையெறி குண்டுகளை வீசி 21 குழந்தைகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று வீசினார்கள். இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீவிரவாதம்.
 
இன்னும் சொல்லப்போனால் கொலைவெறியாட்டம். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான யுத்தத்துக்கும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? யூதர்களில் சிறுவர், பெரியவர் என்று பாராமல் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட ஆரியக் கிறிஸ்துவரான ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டது இஸ்ரேல்.
 
நியாயப்படுத்தவே முடியாத இத்தகைய செயல்களால்தான் போராளி இயக்கங்களுக்கு சர்வதேச ஆதரவோ, அனுதாபமோ பெரும்பாலும் கிடைக்காமல் போகிறது.போராளி இயக்கங்களின் நோக்கத்தில், செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய சறுக்கல்களால்தான் அவர்கள்மீது விழவேண்டிய நியாயமான கவனம், விழாமல் போகிறது.
 
அராஃபத் பொறுப்புக்கு வந்த ஆரம்ப வருடங்களில் மிகக் கவனமாக இஸ்ரேலிய ராணுவம், காவல்துறை போன்ற இலக்குகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இது,இஸ்ரேலுக்குள்ளாக. இஸ்ரேலுக்கு வெளியிலும் பல்வேறு தேசங்களில் பி.எல்.ஓ.வின் போராளிகள் கவன ஈர்ப்புக்காக ஏராளமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
 
ஆனால் மிகக் கவனமாக அத்தனை தாக்குதல்களுமே, யூத இலக்குகளின் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.உலகம் முழுக்க பி.எல்.ஓ., பி.எல்.ஓ., என்று பேசிக்கொண்டிருந்த காலம் அது. யார், என்ன என்கிற விவரம் கூடத் தெரியாமல், அராஃபத்தைப் பற்றிப் பேசினார்கள்.அணுகுண்டுகள் வைத்திருக்கும் இயக்கம் என்றெல்லாம் கதை பரப்பினார்கள். உண்மையில், நாட்டுவெடி குண்டுகளுக்கு அப்பால் பி.எல்.ஓ.வினரிடம் அப்போது வேறெந்த ஆயுதமும் கிடையாது.வாங்குவதற்குப் பணம் கிடையாது முதலில். பி.எல்.ஓ.வின் பிரசாரப் பிரிவினர் அரபு தேசங்களெங்கும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி வசூல் செய்தே இயக்கத்தை வழி நடத்திக்கொண்டிருந்தனர்.
 
சவுதி அரேபியா போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் மட்டும் மறைமுகமாக பி.எல்.ஓ.வுக்கு நிதியுதவி செய்திருப்பதாகத் தெரிகிறது.1973-ம் ஆண்டுவரை பி.எல்.ஓ.வுக்கு மிகப்பெரிய அளவில் நிதிப்பிரச்னை இருந்திருக்கிறது. இது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை.ஒரு பக்கம் பி.எல்.ஓ.வில் இருந்த இயக்கங்கள், மிகத் தீவிரமாக இஸ்ரேலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதே காலகட்டத்தில், பாலஸ்தீனில் வேறு சில புதிய இயக்கங்களும் தோன்றத் தொடங்கின.'இஸ்ரேல் என்கிற திடீர் தேசத்தை வேரோடு ஒழித்துவிட்டு, அகண்ட பாலஸ்தீனை மறுபடியும் ஸ்தாபிப்பதற்காக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.ஆயுதங்கள் மூலம் அச்சமூட்டுவோம். இன விருத்திமூலம்கலவரமூட்டுவோம். யூதர்களைத் தூங்கவிடமாட்டோம். ஜெருசலேம் உள்பட, இஸ்ரேல் எங்களிடமிருந்து அபகரித்த அத்தனையையும் திரும்பப் பெறாமல் ஓயமாட்டோம்' என்கிற யாசர் அராஃபத்தின் அன்றைய பிரகடனம் ஒரு வேத மந்திரம் போல, அத்தனைபேரின் செவிகளிலும் விழுந்து சிந்தனையைக் கிளறிவிட்டதன் விளைவே இது.
 
இப்படித் தோன்றிய இயக்கங்களில் சில திசைமாறிப் போயின என்றாலும், பெரும்பாலான இயக்கங்கள் பி.எல்.ஓ.வில் சேராவிட்டாலும் பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யத் தயங்கவில்லை.குறிப்பாக, ஆயுதங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது அன்றைக்கு பி.எல்.ஓ.வினரின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.குறிப்பாக அரபு தேசங்களுக்கு வெளியே அவர்கள் திட்டமிட்ட ஒவ்வொரு கவன ஈர்ப்புச் செயலுக்கும் தேவையான ஆயுதங்களைக் கடத்தியோ, உருவாக்கியோ, வாங்கியோ தரும் பணியைச் செய்ய இத்தகைய இயக்கங்கள் மிகவும் உதவி செய்தன.
 
அப்படி 1967 யுத்தத்துக்குப் பிறகு உதித்த பாலஸ்தீன் இயக்கங்களுள் ஒன்றுதான் ஹமாஸ்.'இஸ்ரேல் அரபுப் பிரச்னை என்பது அரசியல் சார்ந்ததல்ல.
 
அது இஸ்லாத்துக்கும் யூதமதத்துக்குமான பல நூற்றாண்டு காலப் பிரச்னையின் நீட்சி. நடப்பது அரசியல் யுத்தமல்ல. அது இரு மதங்களின் மோதல் மட்டுமே' என்கிற பிரகடனத்துடன் உருவான இயக்கம் இது.
 
பிரச்னையை முற்றிலும் அரசியல் சார்ந்து மட்டுமே பார்க்கக்கூடியவராக அராஃபத் இருந்த நிலையில், ஹமாஸின் இந்த திடீர் பிரவேசம் உரிய கவன ஈர்ப்பைப் பெற்றதே தவிர, ஹமாஸால் இதன் காரணம் பற்றியே பி.எல்.ஓ.வில் இணைய முடியாமலும் போனது.
 
அது அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னென்ன பிரகடனங்கள் செய்துகொண்டாலும், எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். குறிக்கோள் ஒன்றுதான். கனவும் நினைவும் ஒன்றுதான்.அது இஸ்ரேலை ஒழிப்பது. யூதர்களைப் பூண்டோடு அடித்துத் துரத்துவது.இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் அடைந்து, பாலஸ்தீனுக்குப் புத்துயிர் அளிப்பது.ஆகவே, பி.எல்.ஓ.வுக்குள் இல்லாமலேயே ஹமாஸ் பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான பணிகளைச் செய்ய ஆரம்பித்தது.தொடர்ந்தும் தீவிரமாகவும் இஸ்ரேலிய ராணுவத்தை, காவல்துறையை, அரசு இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலம் அச்சுறுத்தி வருவதுதான், சரியான ஆரம்பமாக இருக்கும் என்பதில் இவர்கள் யாருக்குமே கருத்து வேறுபாடு இல்லை.
 
தேவைப்பட்டால் ஆயுதப் போராட்டத்துக்காக அவர்கள் வகுத்து வைத்திருந்த வழிமுறைகளில் சில மாறுதல்கள், கூடுதல், குறைவுகள் செய்துகொள்ளலாமே தவிர, போராட்டத்தை வேறு எந்த விதமாகவும் தொடருவதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அத்தனை பேருமே கருதினார்கள்.பி.எல்.ஓ.வின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த யாசர் அராஃபத்துக்கு அந்தத் தொடக்க காலத்திலேயே வெஸ்ட் பேங்க் பகுதியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது.
 
அறிவிக்கப்படாததொரு மகாராஜாவாகத்தான், அவரை மக்கள் அங்கே கருதினார்கள்.அதே போல, காஸா பகுதியில் தோன்றி, வேர்விட்டு, வளர்ந்து, நிலைபெற்ற ஹமாஸுக்கு அங்கே பி.எல்.ஓ.வைக்காட்டிலும் செல்வாக்கு அதிகம். இந்த வெஸ்ட் பேங்க் என்று சொல்லப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்துத்தான், சுதந்திர பாலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்று இன்றுவரை பேசிவருகிறார்கள்.
 
நமக்குப் புரியும் விதத்தில் சொல்லுவதென்றால், இந்தியா - பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது எப்படி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று இரு வேறு துண்டுகளை இணைத்து ஒரே தேசத்தை உருவாக்கினார்களோ, அதுபோல.இந்தமாதிரி நிலப்பரப்பு ரீதியில் பெரிய இடைவெளிகளுக்கு அப்பால் ஒரே தேசத்தின் வேறொரு பகுதி இருக்கும் இடங்களிலெல்லாம், எப்போதுமே பிரச்னைதான். காஸா விஷயத்தில் என்ன பிரச்னை என்பதைப் பிறகு பார்க்கலாம்.

இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) மொஸாட்.

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 73
 
 
 
பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை.


அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம்.சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன?


அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா?


பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும்.


அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது?


ஏன் யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை?


எகிப்து, சிரியா, ஜோர்டன் என்று மூன்று தேசங்கள் இணைந்துதான் 1967 யுத்தத்தில் இஸ்ரேலை எதிர்த்தன. இத்தனைக்கும் அவர்களுக்கு சோவியத் யூனியனின் மறைமுக ஆதரவு வேறு இருந்தது.


ஆனாலும் யுத்தத்தில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது; தான் நினைத்ததைச் சாதித்தது. அதற்கு முன்னால் நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போதும் போர்நிறுத்தத்துக்கு முன்னதாகத் தனக்கு என்ன வேண்டுமோ அதை இஸ்ரேலால் அடைந்துவிட முடிந்தது. அதற்கும் முன்னால் நடைபெற்ற 1948 யுத்தத்திலும் இஸ்ரேலுக்குத்தான் வெற்றி.


எப்படி இது சாத்தியம்? அரேபியர்களின் வீரம் இஸ்ரேலிடம் எடுபடக்கூடிய தரத்தில் இல்லையா?


அது இருக்கட்டும். ஆயிரம் எதிர்ப்புகள் வருகின்றன; ஐ.நா. சபையில்அடிக்கொருதரம் தீர்மானம் போடுகிறார்கள்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனபோதும் எல்லாம் அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருந்து மறைந்துவிடுவது ஏன்?


இவை எல்லாவற்றுக்கும் காரணம், இஸ்ரேலின் தனிப்பெரும் அடையாளமும் மிகப்பெரிய பலமுமான அதன் உளவு அமைப்பு. அதன் பெயர் HaMossad leModiin uleTafkidim Meyuhadim. சுருக்கமாக மொஸாட் (Mossad).


உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் தரத்தில் மொஸாட், சி.ஐ.ஏ., எம் 16 ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது.


பொதுவாக உளவு அமைப்புகளுக்குரிய அதிகார வரம்புகளைக் காட்டிலும் சற்றே கூடுதல் அதிகாரங்கள் பெற்ற அமைப்பு இது. ஆனால் மொஸாடில் வெளிப்படையான ராணுவப் பிரிவு கிடையாது.


சி.ஐ.ஏ.வில் அது உண்டு. எம்.16_ல் உண்டு. ரஷ்யாவின் கே.ஜி.பி.யில் கூட ஒரு துணை ராணுவப்பிரிவு உண்டு என்று சொல்லுவார்கள்.


ளின்டின் பணிகள் மிகவும் எளிமையானவை.
 
1. ஆட்சிக்கு இடையூறு தரக்கூடியவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.
 
2. தேவைப்பட்டால் சத்தமில்லாமல் அரசியல் கொலைகளைச் செய்தல்,
 
3. யுத்தங்களுக்கான திட்டம் தீட்டி, வழி நடத்திக் கொடுத்தல்.
 
4. அரபு தேசங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் அரபு அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.


இவற்றுள் முதலாவது மற்றும் மூன்றாவது, நான்காவது பணிகளை உலகின் அனைத்து தேசங்களின் உளவு அமைப்புகளும் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு அனுமதி பெற்ற ஒரே உளவு அமைப்பு மொஸாட் மட்டுமே.


இஸ்ரேலில் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொஸாட் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது உலகின் வேறெந்த நாட்டு உளவு அமைப்புக்கும் இல்லாத அதிகாரம். சி.ஐ.ஏ.வுக்குக் கூடக் கிடையாது.


ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் மொஸாட் உளவாளிகள், எக்காரணம்கொண்டும் யூதர்களைக் கொல்லக்கூடாது! அவ்வளவுதான்.


இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியான டேவிட் பென் குரியன், 1951-ம் ஆண்டு மொஸாட்டைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் பாலஸ்தீன் போராளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மட்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக விரைவில் மிகப் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது.


இன்றைய தேதியில் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2000.
 

ஆனால் கண்ணுக்குப் புலப்படாத மொஸாட் ஏஜெண்டுகள் பல்லாயிரக் கணக்கில் உலகெங்கிலும் உண்டு.


மொஸாட்டின் இணையத்தளத்துக்கு முடிந்தால் போய்ப் பாருங்கள். அழகாக, சுத்தமாக, மிகவும் வெளிப்படையாக அப்ளிகேஷன் பாரம் கொடுத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் மொஸாட்டின் ஏஜெண்டாக விண்ணப்பிக்கலாம்.


உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டபிறகு, வேறு சில வினாக்களும் அங்கே கேட்கப்படும்.


உதாரணமாக நீங்கள் ஒரு யூதர் அல்லாதவர் என்றால் எதற்காக மொஸாட்டுக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என்று கேட்பார்கள்.


இது தவிரவும் ஏராளமான கேள்விகள் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் விடை எழுதி அனுப்பினால், அந்த விடைகள் அவர்களுக்குத் திருப்தி தரக்கூடுமென்றால் ஒரு வேளை உங்களை யாராவது ஒரு மொஸாட் ஏஜெண்ட் கண்காணிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்னும் அதிகமோ, குறைவோ. நீங்கள் சரியான நபர்தான், தேவையான நபர்தான் என்று அவர்கள் தீர்மானித்தால் அடுத்தகட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகும்.


எத்தனை கட்டங்களாகப் பரிசோதிப்பார்கள், என்னென்ன பயிற்சிகள்அளிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள். மொஸாட்டின் விண்ணப்பப் படிவம் மட்டும்தான் வெளிப்படை.


மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் மொத்தம் ஆறு துறைகள் இயங்குகின்றன. (ஆரம்ப காலத்தில் எட்டு துறைகளாக இருந்திருக்கிறது. பின்னால் அதனை ஆறாகச் சுருக்கி இருக்கிறார்கள்.)


1. தகவல் சேகரிப்புப் பிரிவு (Collections Department). இதுதான் அளவில் மிகப் பெரியது. உலகெங்கும் மொஸாட் உளவாளிகள் அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் இஸ்ரேல் அரசுக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகச் சேகரித்துத் தொகுத்து வைப்பார்கள். அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தருவது, ஆயத்தங்களுக்கு அறிவுறுத்துவது போன்றவை இந்தப் பிரிவின் தலையாய பணி.
 
 
2. அரசியல் மற்றும் நல்லுறவுப் பிரிவு (Political Action and Liaison Department). இது கிட்டத்தட்ட ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் போன்றது. இஸ்ரேலின் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்கு வழி செய்து தமக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகப் பெற்றுத் தரவேண்டியது இந்தப் பிரிவின் பணி. எதிரி தேசங்கள் என்றால் அங்குள்ள அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை வளைக்க முடியுமா என்று பார்ப்பதும் இவர்களின் பணியே.
 
 
3. Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவு. இவர்கள்தான் அரசியல் கொலைகளைச் செய்பவர்கள். ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, வழிகாட்டுவது, தேவைப்பட்டால் தாங்களே களத்தில் இறங்குவது ஆகியவை இப்பிரிவின் பணிகள்.
 
 
4. Lohamah Psichlogit என்கிற மனோதத்துவப் பிரிவு. விசாரணைகள், ரகசிய ஆராய்ச்சிகள் செய்வது, தேவையான தகவல்களை மக்களிடையே பரப்புவது, மீடியாவைக் கண்காணிப்பது, இஸ்ரேல் குறித்து மீடியா வெளியிடும் தகவல்களைச் சரிபார்ப்பது, தேவைப்பட்டால் சர்வதேச மீடியாவுக்குள் ஊடுருவி, தமக்குச் சாதகமான செய்திகளை வரவைப்பது போன்றவை இப்பிரிவின் பணிகள்.
 
 
5. Research Department என்கிற ஆராய்ச்சிப் பிரிவு. மேற்சொன்ன அத்தனை பிரிவினரும் கொண்டுவந்து சேர்க்கும் தகவல்களை வைத்துக்கொண்டு ஆய்வு செய்து வேண்டிய விவரங்களைத் தேடித்தொகுப்பது இவர்கள் பணி.
 
 
6. இறுதியாகத் தொழில்நுட்பப் பிரிவு (Technology Department). மொஸாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அல்லது கடன் வாங்கி, துறையை எப்போதும் நவீனமயமாக வைத்திருப்பது இவர்கள் வேலை.


இந்த ஆறு பிரிவினருள் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், மொஸாட்டின் Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவுதான்.


முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து குருஅக்ஷவ் பேசிய ஒரு சர்ச்சைக்கிடமான பேச்சைக் கண்டறிந்து வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.


பாலஸ்தீன் பிரச்னை குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Black September என்கிற ஒரு தீவிரவாத அமைப்பு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் ஒரு மாபெரும் படுகொலைத் திட்டத்தைத் தீர்மானித்து நடத்தி, உலகையே உலுக்கிப் பார்த்தது. இந்தச் சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இஸ்ரேல் அரசு,


படுகொலைக்குக் காரணமானவர்களைக் கொல்லும்படி மொஸாட்டுக்குக் கட்டளையிட்டது.கறுப்பு செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த அலி ஹாஸன் ஸல்மே (Ali Hassan Salameh) என்கிற தீவிரவாதிதான் அந்தக் கொலைக்குப் பொறுப்பாளி.


ஆனால் மொஸாட்டின் மெட்ஸடா பிரிவு உளவாளிகள், சம்பந்தமே இல்லாமல் நார்வே நாட்டில் இருந்த அஹமத் பவுச்சிகி (Ahmed Bouchiki) என்கிற ஒரு வெயிட்டரைக் கொலை செய்துவிட்டார்கள்.
 
அதுவும் எப்படி? மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள்!


கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை! இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘சரியான நபரை மீண்டும் தேடிக் கொலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார்கள்!


இச்சம்பவம் மட்டுமல்ல; பல்வேறு பாலஸ்தீன் போராளிகளைக் கொலை செய்வதற்காக பிரிட்டன், சைனா, ஜோர்டன் தேசத்து பாஸ்போர்ட்களைப் போலியாக உருவாக்கிப் ‘புகழ்’ பெற்றவர்கள் இவர்கள்.


மொஸாட்டின் மிகப்பெரிய பலம், அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது டெல் அவிவ் நகரில் இருக்கும் அதன் தலைமையக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருபோதும் வெளியே வராது என்பதுதான்.


அத்தனை விசுவாசமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு அது. யுத்தங்களின்போது இஸ்ரேலிய ராணுவம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை போதிப்பதற்காக, மொஸாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரமும் உலகெங்கும் நடக்கும் யுத்தங்களைக் கூர்மையாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கும்.


எதிரிப் படைகளின் இருப்பையும் நகர்வையும் கண்காணிப்பதற்குச் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள். 1967 யுத்த சமயத்தில் ஒரு மொஸாட் உளவாளி யுத்தம் நடந்த ஆறு தினங்களும் கோலன் குன்றுப் பகுதிகளில் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மரத்தடியில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தவன் போலக் கிடந்திருக்கிறான். சோறு தண்ணீர் கிடையாது! சுவாசிக்கக்கூட முடியாது! அசையாமல் அப்படியே இருந்து ரகசியமாகத் தகவல்களைக் கடத்தியிருக்கிறான்.


இஸ்ரேல் அரசு இன்றைக்கும் தனது ஆண்டு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொஸாட்டுக்காக ஒதுக்குகிறது. இது வெளியே சொல்லப் படுவதில்லை. ஆனால் ஆயிரம் சிக்கல்கள் வந்தாலும் இஸ்ரேல் சமாளிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்த மொஸாட்தான்.


மொஸாட் உருவானதிலிருந்து இன்றுவரை மொத்தம் பதினொரு பேர் அதன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் பலபேர் ராணுவ அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றபோதும் மொஸாட்டில் ராணுவப் பதவிகள் ஏதும் கிடையாது. ஒரு சிவிலியன் அமைப்பாகத்தான் மொஸாட் செயல்படுகிறது.


இந்த உளவு பலத்தைக் கொண்டுதான் இஸ்ரேல் தொட்டதிலெல்லாம் வெற்றிவாகை சூடுகிறது என்பது பாலஸ்தீனப் போராளிகளுக்குப் புரிவதற்கு வெகுகாலம் ஆனது.


பி.எல்.ஓ.விலும் ஒரு சரியான உளவுப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆறு நாள் யுத்தத்துக்குப் பிறகு முடிவு செய்தார்கள். அதற்கு முன் தலைவரை மாற்றினால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்துதான் யாசர் அராஃபத்தைப் பிடித்தார்கள்.


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 4 ஆகஸ்ட், 2005

சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் தொடரும் குரங்குச் சேட்டைகளும் !!


குரங்கு கையில் பூமாலை எனும் வார்த்தை பிரயோகத்தை நாம் அடிக்கடி கேட்டிருப்போம் . அதன் அர்த்தம் ஒரு நல்ல விடயம் ஒரு மோசமான ஜந்துவின் கையில் கிடைத்தால் நடக்கும் விளைவு குறித்து சுட்டிக்காட்டுவதாகும்.



 

சரி இப்போது விடயத்துக்கு வருவோம்.யார் இந்த சார்ல்ஸ் டாவின் ? அடிப்படையில் இவன் ஒரு யூதன் .அதனால் தான் என்னவோ இவன் மனித தோற்றம் , விருத்தி சம்பந்தமாக அல்லாஹ் (சுப) வுடன் சவால் விடும் தரத்தில் ஒரு கொள்கையை வெளியிட்டான் .
 

அதுதான் மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் எனும் கூர்ப்புக்கொள்கை !! இதன்படி நாமெல்லோரும் எமது பாட்டன் முப்பாட்டனை நோக்கி' ரிவேர்சில் ' சென்றால் காணப்போவது வாலில்லா குரங்குக் கூட்டத்தையே ! இது நீங்கள் பாடசாலைக்காலத்தில் அறிந்த விடயம்தான் .
 

இந்த கொள்கையை விலாவாரியாக எமது கல்வித்திட்டமும் விளங்கப்படுத்த' சயின்ஸ் ' பாடம் முடிந்து இஸ்லாம் பாடம் படிக்கும் போது ஆதம் (அலை ), ஹவ்வா (அலை ) என விளங்கப்படுத்த ஒரு விகார உருவங்கள் சிலவேளை எம் சிறுவயதில் நிழலாடி சென்றிருக்கலாம் .(அல்லாஹ்(சுப ) நம்மை பாதுகாக்க வேண்டும் ). ஆனால் அல்லாஹ்(சுப )மனிதனை ஒரு சிறந்த உயர்ந்த படைப்பாக குறிப்பிட்டு அவனது செயலின் காரணமாகவே தாழ்ந்தோரிலும் தாழ்ந்தோர் ஆக்குவதாகவும் தனது திருமறையிலேதெளிவு படுத்துகின்றான் . 


மேலும் மனிதனை அவனது (கலீபா எனும் ) பிரதிநிதி என்ற மிகப்பெரியகௌரவத்தையும் கொடுத்து இந்த பூமியை வளப்படுத்தும் ,பரிபாலனம் செய்யும் அதிகாரத்தையும் கொடுத்து ;அதை எவ்வாறு செய்ய வேண்டும் எனும் சட்டதிட்டங்களை காலத்துக்கு காலம் அந்த மனிதர்களுக்கு மத்தியில் இருந்தே அவன் விசேட தூதர்களை தேர்வு செய்து அவர்களை மனிதர்களுக்கு ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான் . அந்த வகையில் இறுதியாக வந்த தூதரே ரசூல் (ஸல் ) என்பதும் நீங்கள் அறிந்த விடயங்கள்தாம் . 



அதே போல அந்த ரசூல் (ஸல் ) அவர்கள் குறிப்பிடும் பிரதான விடயம் தனக்குப் பின்னால் நபிமார்கள் வரமாட்டார்கள் என்பதும் ஆனால் கலீபாக்கள் தோன்றுவார்கள் என்றும் இந்த இஸ்லாம் மார்க்கத்தை அவர்கள் அமுல் நடாத்தும் வரை அவர்களுக்கே கட்டுப்படவேண்டும் என்பதும் அவர்களது கட்டளை (அபூ ஹுரைரா (ரலி ) அறிவிக்க புஹாரி ,முஸ்லிமில் இந்த விடயம் தெளிவாக வருகின்றது ) இது முஸ்லீம்களாகிய எமது நம்பிக்கை மற்றும் தெளிவான முடிவு . ஆனால் இந்த மகத்தான பணியை முஸ்லீம்களாகிய நாம் கைவிட்டோம் சிதைவடையச்செய்தோம் ! இஸ்லாத்தின் எதிரியின்சதிகள் இதில் கணிசமாக இருந்தாலும் எம் பங்கும் மறுக்க முடியாததஇப்போது உலகம் இஸ்லாத்தின் எதிரிகளின்கைகளில் அவர்களில் அதிகமானோரின் நம்பிக்கை இந்த சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கை !





எனவேதான் இந்த உலகம் அவர்கள் கையில் என்பதை நான் குரங்கு கையில் பூமாலை என்கிறேன் .

"குடி குடியை கெடுக்கும் "என்பார்கள் வருடா வருடம் 'லைசன்ஸ்' கொடுத்து 'பார்கள் ' திறக்க வழியும் செய்வார்கள் , குடித்து விட்டு வண்டி ஓட்டினால் மட்டும் வழக்குப் போடுவார்கள் !
 
 இது குரங்குச் சேட்டை போல் தெரியவில்லையா ?!
 
 "புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிற்கும் " என சிகரெட் பெட்டியிலே எழுதி அதை விற்க சட்டம் அனுமதிக்கும் !
 
(இந்த மக்கள் நலன் )உங்களுக்கு குரங்குச்சேட்டை போல் தெரியவில்லையா ?!
 
விபச்சாரத்துக்கென விடுதி கட்டி சட்டப்பாதுகாப்போடு மருத்துவ உதவியாக (சில நாடுகளில் ) இலவச 'கொண்டோம்' கூட (குடும்பம் சிறக்க ) வழங்குவார்கள் !
 
இது குரங்குச்சேட்டை போல் தெரியவில்லையா ?!
 
இந்த சேட்டைகள் எல்லாவற்றையும் தொங்கி , தாவி நியாயப்படுத்த சுதந்திரம் ,விடுதலை , மனித உரிமை போன்ற பலத்த கொப்புகளை உடைய ஜனநாயகம் எனும் சாத்தானிய மரம் அவர்களிடம் உள்ளது .
 
              ஓஹ் முஸ்லிமே நீயும் அந்த மரத்தில் தாவித்திரிந்து குரங்காவதா?!!! சற்று சிந்தித்து பார் உன்னை புனிதனாக்கும் இறைவன் வழி உனது வஹி உனக்காகவேதான் .
 
வாழ்ந்தால் அந்த சத்தியத்தோடு வாழ் மரணித்தால் சஹீதுகளாக மரணிக்க போராடு .
 
புரிந்து கொள் உயர்ந்த ஜிஹாத் அநியாயக்கார ஆட்சியாளனை சத்தியத்தை முன் நிறுத்தி தட்டிக்கேட்பதே .


இதோ உனக்கு முன்னாலும் சுவனத்தின் வாசனை .............                                                                                                                                                                       
ஹந்தக் களம்

Nov 8, 2015

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 4




கலீஃபாவை தேர்வுசெய்யும் தேர்தல் :

     புதிய கலீஃபாவை தேர்வுசெய்வதில் மஜ்லிஸ் அஷ்ஷுரா உறுப்பினர்களில் குறைந்தபட்சம் பெரும்பான்மையினரின் ஓப்புதலையேனும் கலீஃபா வேட்பாளர் பெறவேண்டியது கட்டாயம் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

     கலீஃபா வேட்பாளர் மஜ்லிஸ் அஷ்ஷூராவில் உள்ளவராகவும் சிறந்த இஸ்லாமிய பண்புகளை பெற்றவராகவும் இருக்கும்பட்சத்தில் ஒரேயொரு ஓட்டு அடிப்படையில் கூட தகுதியுள்ள நபருக்கு கலீஃபா பதவியை அளிக்கலாம் என்று அல்அஷரி(ரஹ்) கருதுகிறார். இவ்வாறு செய்யும்போது முறையான ஆதாரம் அல்லது சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படை யிலுள்ள சட்டரீதியான ஆட்சேபனைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

     சிறந்த முஸ்லிம்களாக உள்ள மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்கள் இருவரின் ஓட்டுக்களை கலீஃபா வேட்பாளர் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்களிலுள்ள மற்றொரு குழுவினர் அபிப்ராயம் கூறுகிறார்கள் (ஏனெனில் மஜ்லிஸ் அஷ்ஷூரா என்பது ஒரு ஜம்ஆ என்ற முறையில் அதில் மூன்று நபர்கள் இடம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்)

       கலீஃபா வேட்பாளருக்கு எதிரான ஆட்சேபனைகள் எதுவும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் நான்கு ஓட்டுகளை கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்று நான்காவது அபிப்ராயம் கூறுகிறது, ஏனெனில் இஸ்லாத்தில் விபச்சாரம் தொடர்பான குற்றத்தை நிரூபனம் செய்வதற்கு நான்கு சாட்சிகள் கட்டாயமாக இருக்கிறது.

     ஒரு ஜம்ஆவின் குறைந்தபட்ச பலத்தை பெற்றிருக்கும் வகையில் கலீஃபா வேட்பாளர் குறைந்தது மூன்று ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டியது கட்டாயமாகும் என்று ஐந்தாவது அபிப்ராயம் கூறுகிறது.

     வலுவான முறையில் தீர்மானிக்கும் விதமாக கலீஃபா வேட்பாளர் குறைந்தபட்சம் ஐந்து ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டும் என்று ஆறாவது அபிப்ராயம் கூறுகிறது.

     இறுதியாக, புதிதாக தேர்வுசெய்யப்படும் கலீஃபா வேட்பாளர் மஜ்லிஸ் அஷ்ஷூரா உறுப்பினர்களின் 40 ஓட்டுக்களை பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்களிலுள்ள ஏழாவது குழுவினர் கருதுகிறார்கள், ஏனெனில் (சில அறிஞர்களின் அபிப்ராயத்தின்படி) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை சட்டரீதியாக செல்லுபடியாக வேண்டும் என்றால் அதற்கு 40 பேர்கள் இணைந்து தொழுகையை நிறைவேற்றவேண்டும்.

கலீஃபாவை பதவிநீக்கம் செய்தல் :

     அல்மாவர்தி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபா குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சி செய்யும்போது அவரை பின்பற்ற வேண்டியதும் அவருக்கு ஆதரவு அளிக்கவேண்டியதும் கட்டாயமாகும். இதற்குமாறாக, அவர் அநீதமானவராகவோ அல்லது (குருட்டுத்தன்மை அல்லது உடலுறுப்புகள் துண்டிக்கப்படுதல் ஆகியவற்றின் காரணமாக) உடல் ஊனமுள்ளவராக ஆகிவிடும் பட்சத்தில் அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்பாக்தாதி(ரஹ்)ஹ கூறுவதாவது : ‘கலீஃபா நீதி தவறி செயல்படும் பட்சத்தில் அவர் நேர்வழிக்கு திரும்பும் வகையில் உம்மா அவரை முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும், இதற்கு பலன் ஏற்படவில்லை என்றால் பிறகு அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்ஜுவைனி(ரஹ்) கூறுவதாவது : ‘உம்மாவின் இலட்சியம் இஸ்லாமாக இருப்பதால் இந்த இலட்சியத்திலிருந்து விலகிச்செல்லும் எவரையும் கலீஃபா பதிவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பது கட்டாயமாகும்’

     அஷிகிஸ்தானி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘கலீஃபா அறியாமை உடையவராகவோ அநீதம் இழைப்பவராகவோ அலட்சியம் செய்பவராகவோ இருக்கும் பட்சத்தில் அல்லது பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர் காஃபிராக ஆகிவிடும் பட்சத்தில் உடனடியாக அவரை பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்’

     அல்கஸ்ஸாலி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபா அநீதம் இழைப்பவராக இருக்கும்பட்சத்தில் தனது குற்றத்திலிருந்து விலகிக்கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தல் செய்யவேண்டும், அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் பிறகு அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்துவிவேண்டும்’

     அல்இஜி(ரஹ்) கூறுவதாவது : ‘கலீஃபாவை பதவிநீக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காரணங்கள் தொடர்பான திட்டவட்டமான பட்டியல் உம்மாவிடம் இருக்கிறது’

     அல்அஸ்கலானி(ரஹ்) எழுதியிருப்பதாவது : ‘கலீஃபா நிராகரிப்பவரை போல செயல்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் அவருக்கு கீழ்ப்படிவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதோடு அவருக்கு எதிராக போரிடுதல் வாஜிபாகும். ஒருவருக்கு ஆற்றல் இருக்கும் என்றால் அவரை எதிர்த்து நிற்கவேண்டியது வாஜிபாகும் & இதற்கு மகத்தான நற்கூலி இருக்கிறது. இத்தகைய சூழல் ஏற்படும்போது அதை கண்டுகொள்ளாமல் விலகியிருப்பதை ஒருவர் தேர்வுசெய்தால் பிறகு அவர் பாவத்தில் வீழ்ந்துவிடுவார், அதேவேளையில் அவருக்கு எதிராக போரிட ஆற்றல் இல்லாதவர்கள் (அவரை எதிர்த்து போரிடுபவர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு) ஹிஜ்ரத் செய்யவேண்டும்’

அல்அஸ்கலானி(ரஹ்) தனது அபிப்ராயத்திற்கு ஆதரவாக குர்ஆனின் இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்.

     அல்அஹ்ஸாப்  அத்தியாயத்தின் 67&68வது வசனங்கள் முதல் ஆதாரமாகும் : அன்றியும் எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் வழிபட்டோம். நாங்கள் தவறான வழியில் செல்லும்படி அவர்கள் செய்துவிட்டார்கள். எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இருமடங்கு வேதனையை கொடுத்து அவர்கள்மீது மாபெரும் சாபத்தை ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார்கள். இரண்டாவது ஆதாரம் அல்பகரா அத்தியா யத்தின் 167வது வசனமாகும் : அன்றியும் (அவர்களை) பின்பற்றிய இவர்கள், ‘நாம் மற்றொரு முறை (உலகத்திற்கு) திரும்பிச்செல்ல கூடுமாயின் எங்களை இவர்கள் கைவிட்டபடியே நாங்களும் இவர்களை கைவிட்டுவிடுவோம்’ என்று கூறுவார்கள். இவ்வாறே (அவர்களுடைய நெஞ்சங்கள் துயரமடையும் பொருட்டு) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக்காட்டுவான். அன்றியும் அவர்கள் நரக நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.

இப்னு உமர்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

     அமீர்கள் தீயவற்றை ஏவினால் தவிர அவர்களுக்கு முஸ்லிம்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (தீயவற்றை ஏவும்) இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் அவர்களுக்கு கட்டுப்படவும் கூடாது செவிசாய்க்கவும் கூடாது. (நூல் : முஸ்லிம்)

இப்னு மாலிக்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     சிறந்த அமீர் யாரெனில் அவரை நீங்கள் நேசிப்பீர்கள் அவரும் உங்களை நேசிப்பார்; மோசமான அமீர் யாரெனில் அவரை நீங்கள் வெறுப்பீர்கள் அவரும் உங்களை வெறுப்பார். எனினும் உங்களுடைய அமீர் அநீதம் இழைப்பவராக இருந்தாலும் அவர் தொழுகையை நிறைவேற்றும் வரையில்,  வெளிப்படையான குஃப்ரை ஏவாத வரையில் அவருக்கு எதிராக போரிடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (முஸ்லிம்)

உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்திருக்கும் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     அனைத்து காரியங்களிலும் அனைத்து சூழல்களிலும் நீங்கள் உங்கள் அமீருக்கு கட்டுப் பட்டு நடந்துகொள்ளுங்கள், வெளிப்படையான குஃப்ரை ஏவாத வரையில் அவரை பதவிநீக்கம் செய்யாதீர்கள்.

  அறிஞர்களின் வேறுபட்ட கண்ணோட்டங்கள் தொடர்பாக விரிவான விளக்கம் தே¬ப் பட்டால் http://www-personal.umich.edu/~luqman/Belief/Khilafah/eleven.html என்ற இணையதளத்தை பார்க்கவும்

     அல்மாவர்தி(ரஹ்) இஸ்லாமிய ஆட்சியமைப்பு சட்டங்கள் தொடர்பாக ‘அல்அஹ்காம் அஸ்ஸுல்த்தானியா’ என்ற நூலை எழுதியுள்ள போதும் அவரை போன்ற அறிஞர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டும் அதேவேளையில் இஸ்லாத்தில் ஆட்சியமைப்பு சட்டங்கள் எதுவுமில்லை என்று கூறுபவர்கள் அறிவுரீதியாக உண்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதத்தோன்றுகிறது!

சட்டங்களை ஏற்று அமல்படுத்துதல் அரசிற்கு வாஜிபு அல்ல எனும்போது இஸ்லாமிய அரசை பெற்றுக்கொள்ளும் வகையில் ஆட்சியாளர் முஸ்லிமாக இருந்தால் அதுவே போதுமானதாகும்!

     மேற்கண்ட கூற்றிற்கு விரிவான பதில் கூறத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். உட்பிரிவு விவகாரங்களில் கலீஃபா சட்டங்களை ஏற்று அமல்படுத்தலாம் அல்லது (ஆளுநர்கள், ஆமில்கள், நீதிபதிகள் ஆகியோர் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கும்வரை) அவர்களுடைய சொந்த இஜ்திஹாத் அடிப்படையில்ஹ சட்டங்களை ஏற்று அமல்படுத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கலாம்.

மக்களிடமிருந்து இல்மை பெற்றுக்கொள்ளும்போது தக்வாவை மட்டுமே அடிப்படையாக கொள்ளவேண்டும் :

ஹதீஸ்கலையின் பிதாமகர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி(ரஹ்) கூறியிருப்பதாவது,

     எவரிடமிருந்து இல்மை பெற்றுக்கொள்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் ஏனெனில் அது உங்களுடைய தீனாக இருக்கிறது!

     நமது தீனுடைய விளங்கிக்கொள்ளுதலை சிதைப்பதற்கும் திரித்துக்கூறி பிரச்சாரம் செய்வதற்கும் இஸ்லாத்தின் எதிரிகள் தங்களுடைய அனைத்து ஆற்றல்களையும் செலவிட்டு வரும் இந்த தருணத்தில் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. அறிஞர்களும், குர்ஆனை ஓதும் காரீகளும், முன்னாள் இஸ்லாமிய அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும், எழுத்தாளர்களும், இமாம்களும் இஸ்லாத்திற்கு எதிரான ஆயுதங்களாக பிரயோகப்படுத்தப் படுகிறார்கள்!

     நயவஞ்சகர்களும் (முனாஃபிகூன்), மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்களும் (முர்த்ததூன்), வெளிப்படையாக பாவம் செய்பவர்களும் (ஃபாஸிகூன்), இன்னும் நிராகரிப்பவர்களும் (காஃபிரூன்) கூட இஸ்லாத்தில் மிகுந்த அறிவுடையவர்களாக இருக்கலாம் என்பதை நாம் நமது முந்தைய வரலாற்றிலிருந்து உணர்ந்துகொள்ளவேண்டும். நாம் அவர்களிடமிருந்து மார்க்க அறிவை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் இதற்கு பொருளாகும். நேசத்திற்குரிய நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதுகுறித்து நம்மை எச்சரிக்கை செய்துள்ளார்கள்!

எனது உம்மாவின் விஷயத்தில் குர்ஆனை கொண்டு விவாதம் செய்யும் நாவன்மை பெற்றுள்ள நயவஞ்சகர்கள் குறித்துதான் நான் மிகுந்த அச்சம் கொண்டுள்ளேன் (நூல் : அஹ்மது, அல்பஸார், இப்னு அப்து அல்பர்&பக்கம் 439)

     முஸ்லிம்கள் ஒருகலீஃபாவை பெற்றிருக்கவேண்டியது வாஜிபாகும். மனித சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்வது தடைசெய்யப்பட்டுள்ளது போன்ற இஸ்லாத்தின் திட்டவட்டமான அஹ்காமில் பூசல்களை ஏற்படுத்துபவர்கள் இவர்களில் இருக்கிறார்கள். இவர்கள் ஏற்படுத்தும் பூசல்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தியுள்ளது என்றால், இஸ்லாத்தில் ஓரினசேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது என்பதில் இவர்கள் சர்ச்சை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

     அறிஞர்களின் பலவீனமான அபிப்ராயங்களையும் பூசல்களை ஏற்படுத்தும் வன்மமான அபிப்ராயங்களையும் மேற்கோள் காட்டுவதில் எப்போதும் குறியாக இருந்து வருகிறார்கள் என்பதால் இவர்களை குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளவேண்டும்!

இமாம் அல்பைஹகீ அறிவித்திருப்பதாவது :

     ‘இஸ்மாயீல் அல்காதி கூறினார், ‘ஒருநாள் நான் அப்பாஸித் கலீஃபாக்களில் ஒருவரான அல்முஃதாதித் அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். உடனடியாக அவர் ஒரு நூலை என்னிடம் காண்பித்து அதை படிக்கும்படி கூறினார். அந்த நூலில் அதன் ஆசிரியர் அனைத்து உலாமாக்களும் கூறிய விநோதமான கூற்றுகளை தொகுத்திருந்தார். எனவே இந்த நூலின் ஆசிரியர் பொதுவான மார்க்க கொள்கைகளுக்கு புறம்பாக தீய கோட்பாடுகளை பின்பற்றும் மனிதர் (லீமீக்ஷீமீtவீநீ) என்று நான் கலீஃபாவிடம் கூறினேன். அவர் ஏன் இவ்வாறு செய்துள்ளார் என்று கலீஃபா என்னிடம் வினவினார், இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறையில் எந்த அறிஞர்களும் கருத்து கூறவில்லை என்று நான் கூறினேன். மனக்கொடையுடன் (முஃதா) கூடிய திருமணத்தை சட்டரீதியானதாக ஆக்கிய அவன் இசை பாடுவதை சட்டரீதியானதாக ஆக்க வில்லை, ஒரு செயலை சட்டரீதியானதாக ஆக்கிய அவன் மற்றொரு செயலை சட்டரீதியான தாக ஆக்கவில்லை! ஒவ்வொரு ஆலிமும் சில விநோதமான அபிப்ராயத்தை கூறியிருப்பார்கள், எனவே அனைத்து இமாம்களின் வன்மமான கருத்துக்களை ஒருவர் தொகுத்து அவற்றை ஏற்று செயல்பட எண்ணினார் என்றால் பிறகு தீன் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அந்த நூலை எரித்துவிடும்படி கலீஃபா கட்டளையிட்டார்’ .

     இமாம் அல்அவ்ஸயி(ரஹ்) கூறியிருப்பதாவது, ‘அறிஞர்களின் கூற்றுகளில் விநோதமான அபிப்ராயங்களை தேடுபவர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிடுகிறார். குறிப்பிட்ட ஓர்அறிஞர் மிகுந்த அறிவு பெற்றவராகவும் மிக்க மதிப்பு உடையவராகவும் இருக்கும் அதேவேளையில் வன்மம் நிறைந்த சில கருத்துக்களை கூறுபவராகவும் இருக்கக்கூடும். எனவே ஒவ்வொரு அறிஞர்களும் கூறிய வன்மமான கருத்துக்களை திரட்டி அதை புதிய மத்ஹபாக ஆக்குவதற்கு ஒருவர் முனைந்தால் பிறகு அதிலிருந்து நீங்கள் எத்தகைய இல்மை பெற்றுக்கொள்ள முடியும்!’(நூல் : இஜ்திஹாத் மேற்கொள்வதற்கு எவருக்கு உரிமையிருக்கிறது, ஆசிரியர் : ஸல்மான் அல் உதஹ்)

 குறிப்பிட்ட சிலர் நன்கு படித்தவர்களாகவும் சிறந்த நினைவாற்றல் உள்ளவர்களாகவும் அறிவுத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கக்கூடும், எனினும் அவர்களிடமிருந்து நாம் இல்மை  பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர்களிடம் விஸ்வாசம் கொள்ளலாம் என்றும் இதற்கு அர்த்தம் கிடையாது. கடந்த காலத்தில் மகத்தான அறிவை பெற்றிருந்தவர்களும் பெரும்பெரும் ஃபிக்ஹ் நூற்களை எழுதியவர்களும்கூட இஸ்லாத்தைவிட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்! அவர்களுடன் ஒப்பிடும்போது இன்றைக்கு விந்தையான கருத்துக்களை கூறும் அறிஞர்கள் கற்றுக்குட்டிகளாகவே இருக்கிறார்கள்!ஹ

     இப்னு ருஷ்த் அவார்ரிஸ் (கி. பி. 1126-1198) மாலிக் மத்ஹபை பின்பற்றும் அறிஞராக இருந்தார், அவர் ‘பிதாயத் அல்முஜ்தஹித் வ நிஹாயத் அல்முக்தாயித் ’ என்ற பிரபலமான ஃபிக்ஹ் நூலை எழுதியிருந்தார், எனினும் அது தத்துவ நூலாக ஆகிவிட்டதால் இஸ்லாத் திலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்பதை அனேகமானவர்கள் அறிவார்கள். பிரபலமான விஞ்ஞானியாகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய இப்னு ஸினா போன்றவர்கள் இறுதியில் இந்த உலகம் அழிவற்றது என்றும் என்றென்றும் நிலையானது என்றும் சிந்தித்ததின் மூலமாக மார்க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டவர்களில் (முர்தத்) ஆகிவிட்டார்கள்!

     அறிவில் மிகைத்தவர்களை நாம் காணலாம், எனினும் தக்வா என்ற நிபந்தனையை அவர்கள் நிறைவுசெய்தால் ஒழிய அவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்வதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மற்றவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள்ளுதல் என்ற விவகாரத்தில் கீழ்க்கண்ட சில முக்கியமான கருத்துக்கள் ஒருவரின் தக்வாவை அறிந்து கொள்வதற்கு உறைக்கல்லாக பயன்படுகிறது :

  • அவர் இஸ்லாத்தின் திட்டவட்டமான விஷயங்களுக்கு எதிராக இருக்கக்கூடாது

  • அவருடைய பேச்சுக்களுடன் அவருடைய செயல்பாடுகள் முரண்படக்கூடாது

  • அவர் இரட்டை முகம் கொண்டவராக இருக்கக்கூடாது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது : இரட்டை முகம் கொண்டவர்கள்தான் மனிதர்களில் மிகவும் தீயவர்கள் ஆவார்கள்! இத்தகையவர்கள் இவர்களிடம் ஒரு முகத்தையும் அவர்களிடம் ஒருமுகத்தையும் காண்பிப்பார்கள் (நூல் : புஹாரி, முஸ்லிம்)

  • அஹ்காம் ஷரீஆவில் அவர் வரம்புமீறக்கூடாது பின்வரும் ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பது போல அவர் நிஃபாக் தன்மையை கொண்டவராக இருக்கக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘நயவஞ்சகரின் அறிகுறிகள் மூன்றாகும் : பேசும்போது பொய்யுரைப்பார்; வாஹக்குறுதி அளித்தால் அதற்கு மாறுசெய்வார்; அமானிதமாக ஏதேனும் ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வார். அவர் நோன்பு நோற்றாலும் தொழுகையை நிறைவேற்றினாலும் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் (அவர் நயவஞ்சகரே!) (புஹாரி, முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘எவர் நான்கு (வகையான) தன்மைகளை பெற்றிருக் கிறாரோ அவர் நயவஞ்சகர் ஆவார், ஒருவர் இந்த நான்கு தன்மைகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்கும் நிலையில் அதிலிருந்து நீங்கிக்கொள்ளாத வரையில் அவர் நய வஞ்சகர்களில் ஒருவராகவே இருந்துவருவார் : பேசினால் பொய்யுரைப்பார்; வாக்குறுதி அளித்தால் அதற்கு மாறுசெய்வார்; ஒப்பந்தம் செய்தால் அதற்கு துரோகமிழைப்பார்; சச்சரவு செய்யும்போது கண்ணியக்குறைவாகவும் அவமரியாதையாகவும் நடந்து கொள்வார். (புஹாரி)

     நயவஞ்சக தன்மையில் இரண்டு நிலைகள் இருக்கின்றன; ஒன்று நம்பிக்கையுடன் தொடர்புடையது மற்றொன்று செயலுடன் தொடர்புடையது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இன்னு ஆமிர்(ரளி) அறிவித்துள்ள ஸஹீஹ் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

     எனது உம்மாவிலுள்ள நயவஞ்சகர்களில் பெரும்பான்மையினர் காரீகளில் (கிராத் ஓதுபவர்களில்) உள்ளவர்களாக இருப்பார்கள்! (அஹ்மது, தப்ரானி மற்றும் இதர ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பார்க்கவும் – ஸஹீஹ் அல்ஜமீ# 1203)

இமாம் அல்மனாவி(ரஹ்) ஃபய்துல் கத்ர் என்ற தனது நூலில் இந்த ஹதீஸ் பற்றி குறிப்பிட்டிருப்பதாவது : ஹஹ

     ‘எது நோக்கமாக உள்ளதோ அந்த அசலான அர்த்தத்திற்கு அப்பாற்பட்டு இவர்கள் வியாக்ஞானம் அளிப்பார்கள், அன்றியும் அதன் அர்த்தத்தை தவறான கோணத்தில் காட்டு வார்கள். (ஷரீஆ) உரையில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளை அவர்கள் மனனம் செய்திருந்த போதும் அது சுட்டிக்காட்டும் அர்த்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) காலத்தில் இருந்த நயவஞ்சகர்கள் இத்தகைய தன்மைகளையே பெற்றிருந்தார்கள்’

இமாம் அஷ்ஷமக்ஷரி(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘நபி(ஸல்) அவர்கள் நிஃபாக் (நயவஞ்சகத்தன்மை) பற்றி குறிப்பிடும்போது ரியா (மற்றவர் களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக வணக்கவழிபாடு தொடர்பான செயல்பாடுகளை மேற் கொள்ளுதல்) என்ற அர்த்தத்திலேயே கூறியுள்ளார்கள். ஏனெனில் உள்ளரங்கமாக நம்பிக்கை மற்றும் வெளியரங்கமான செயல்பாடு ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கின்றன என்பதை (நிஃபாக், ரியா ஆகிய) இந்த இரண்டு தன்மைகளும் சுட்டிக்காட்டுகின்றன’

     ‘நபி(ஸல்) அவர்கள் நிஃபாக் பற்றி கூறும்போது செயல்பாடுகள் தொடர்பான நிஃபாக் தன்மையை சுட்டிக்காட்டுவதை நோக்கமாக கொண்டிருந்தார்களே ஒழிய குஃப்ர் தொடர்பான நிஃபாக் தன்மையை சுட்டிக்காட்டுவதை நோக்கமாக கொள்ளவில்லை’

     ‘நயவஞ்சகர்கள் உள்ளார்ந்த முறையில் ஈமான் கொண்டிராதபோதும் தங்களது உயிர்கள், உடமைகள் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்வதற்காக ஈமான் கொண்டிருப்பதை போல வெளியில் காட்டிக்கொள்வார்கள். ரியா எனும் பகட்டுக்காட்டும் தன்மையை கொண்டுள்ள மனிதர் இம்மையில் குறிப்பிட்ட சில ஆதாயங்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் மறுமையில் நற்கூலியை பெற்றுத்தரும் செயல்பாடுகளை மேற்கொள்வார். (வழி கேட்டில் உள்ள) காரீ ஒருவர் தன்னுடைய அறிவையும் செயலையும் மக்கள் புகழ்ந்து கூற வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டிருந்தபோதும் தான் அல்லாஹ்(சுபு)வின் நற்கூலியின் பொருட்டே செயல்படுவதாக வெளியில் கூறிக்கொள்வார். இந்த மூன்று வகையான மனிதர்களும் பொதுவாக ஒருதன்மையை பெற்றிருப்பார்கள் & அவர்களுடைய உள்ளரங்கமான நோக்கமும் வெளியரங்கமான செயல்பாடும் வேறுபட்டதாக இருக்கும்’

     இதன்காரணமாகவே இமாம் அல்கஸ்ஸாலி(ரஹ்) பின்வருமாறு கூறியிருக்கிறார்,

     கீழ்க்கண்ட நான்கு தன்மைகளை கொண்டுள்ள காரீகளிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

  • அல்&அமல் (உலக ஆதாயத்தை அதில் நோக்கமாக கொண்டிருப்பார்கள்)

  • அல்&அஜ்லா (தனது செயல்களுக்குரிய ஆதாயத்தை இம்மையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசரப்படுவார்கள்)

  • அல்&கிப்ர் (தற்பெருமையும் பெரும் அகம்பாவமும் கொண்டவர்களாக இருப்பார்கள்)

  • அல்&ஹஸது (பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் பெற்றுள்ளவற்றை தான் பெறவேண்டும் என்றும் மற்றவர்கள் பெற்றுள்ளதை அவர்கள் இழந்துவிடவேண்டும் என்றும் விரும்புவார்கள்)

     உலக ஆதாயத்தை தேடுவதில் வழிகேட்டில் இருக்கும் காரீ இஸ்லாத்திற்கு முரண்பட்ட வற்றையும் ஒழுக்க மாண்புகளுக்கு புறம்பானவற்றையும் மேற்கொள்வார். பொய்யுரைத்தல், தூற்றுதல், இழிவுபடுத்துதல், ஏமாற்றுதல் போன்ற தீயசெயல்பாடுகள் அனைத்தையும் கொடுங் குற்றவாளிகள் வெட்கி தலைகுணியும் அளவுக்கு மோசமான முறையில் மேற்கொள்வார்.

இமாம் அந்நவவி(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘(வழிகேட்டில் இருக்கும்) காரீ, உலமா ஆகியவரை தவிர்த்து மற்ற எவரும் என்னை இழிவு படுத்துவார்கள் என்று நான் அஞ்சவில்லை’

     அவருடைய இந்த கூற்றை செவியுற்றவர்கள் தங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்தி னார்கள், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது,

     ‘இந்த கூற்று அசலாக என்னுடையதல்ல, அது இப்ராஹிம் அந்நகய்(ரஹ்ஹ) கூறியதாகும்’

அத்தா(ரஹ்) கூறியிருப்பதாவது :

     ‘காரீகள் குறித்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்! (முக்கியத்துமற்ற சிறிய விஷயத்தில்) நான் அவர்களில் ஒருவருடன் கருத்துவேறுபாடு கொள்ளும் பட்சத்தில், உதாரணமாக ஒருபழத்தை பற்றி கூறும்போது ‘அது இனிப்பாக இருக்கிறது’ என்று நான் கூறினால் ‘அது அழுகிவிட்டது’ என்று அவர்கள் கூறுவார்கள்! பிறகு எனது இரத்தத்தை ஓட்டும் பொருட்டு (எனக்கு மரண தண்டனை அளிக்கும் பொருட்டு)ஹ கொடுங்கோலரான ஸுல்தானிடம் (சென்று) வழிவகை தேடுவார்கள்!’

அல்ஃபுதைல் இப்னு இய்யாது(ரஹ்) தனது புதல்வரிடம் கூறியதாவது :

     ‘காரீகளிடமிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ள ஒருவீட்டை விலைகொடுத்து வாங்கு வாயாக! அவர்களிடமிருந்து எனக்கு என்ன தேவை இருக்கிறது?! என்னிடமுள்ள ஒருகுறை வெளிப்பட்டால் அப்போது எனது மரணத்திற்கு அவர்கள் வழிவகை தேடுவார்கள்! என்னிடமுள்ள ஒரு நற்குணம் பற்றி மற்றவர்கள் வெளிப்படையாக பேசினால் அப்போது என்மீது பொறாமை கொள்வார்கள்! மக்களுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும்போது நிச்சயமாக அவர்கள் அகம்பாவம் கொண்டவர்களாகவும் உதவி மனப்பான்மை அற்றவர் களாகவும் இருப்பதை நீ காண்பாய். மற்றவர்கள் அனைவரைவிடவும் தங்களுடைய தொழுகை சிறந்தது போன்று அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். சுவனம் செல்வதற்கும் நரக நெருப்பி லிருந்து விடுதலை அடைவதற்கும் நன்மராயம் கூறப்படும் வகையில் அவர்களுக்கு வஹீ அருளப் பட்டுள்ளதை போன்று நடந்துகொள்வார்கள். தங்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் நாடும் அதேவேளையில் மற்றவர்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் நாடுவார்கள். தீவிரமான தற்பெருமைக்காரர்களாகவும் பெரும் அகம்பாவம் கொண்டவர்களாகவும் இருந்தபோதும் நைந்துபோன பழய ஆடையை அணிந்து கொண்டு அடக்கம் நிறைந்தவர்கள் போன்று எளிமையுடன் காட்சியளிப்பார்கள்!’  (அல்மனாவி எழுதியுள்ள விரிவுரை நூலின் பாகம் 2 பக்கம் 80-81)

      மதச்சார்பற்ற இஸ்லாத்தை முன்மொழிபவர்களின் தர்க்கவாதங்களை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் சிந்திக்கவேண்டும், நாம் அவர்களின் கண்ணோட்டங்களை பின்பற்றுவோம் எனில் இஸ்லாமிய உலகத்திலுள்ள கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும், முஸ்லிம் நிலப்பரப்புகள் துண்டாடப்பட்டிருப்பதையும், காலனியாதிக்க குஃப்ஃபார் நமது நிலங்களை ஆக்கிரமித்திருப்பதையும் அங்கீகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! அழைப்புப் பணி மேற்கொண்டுள்ள உண்மையான முஸ்லிம்களை கைது செய்வதையும் அவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்குவதையும் அங்கீகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்! இதன் விளைவாக நாம் இம்மையிலும் மறுமையிலும் பெரும் இழப்புகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்!

ஸஹீஹ் அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டு, ஹஹஅத்தப்ரானியின் அல்கபீர் வல் பஸாரில் பதிவு செய்யப்பட்டுள்ள அவ்ஃப் இன்னு மாலிக்(ரளி) அறிவிப்பில்‎ கூறப்பட்டிருப்பதாவது :

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

     எனது உம்மாவினர் எழுபதிற்கும் மேற்பட்ட பிரிவுகளாக ஆகிவிடுவார்கள்! அவர்களில் தங்கள்  சொந்த அபிப்ராயத்தின் அடிப்படையில் விவகாரங்களை மதிப்பிடும் மனிதர்கள்தான் எனது உம்மாவின் மீதுள்ள மிகப்பெரிய சோதனையாக இருப்பார்கள்! எனவே தடைசெய்யப் பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாகவும் அனுமதிக்கப்பட்டவற்றை தடைசெய்யப்பட்ட வையாகவும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்! இந்த ஹதீஸ் அல்ஹைஸமியின் மஜ்மா அஸ்&ஸவாயித் என்ற நூலின் கிதாபுல் இல்ம் என்ற முதற்பாகத்தில் அத்தக்லித் வல் கியாஸ் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

அபூஸியாது இப்னு ஹுளைர் அறிவிப்புத்தொடர் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸை அபூஷமா பதிவுசெய்துள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது :

     ‘இஸ்லாத்தை அழிக்கக்கூடியது எது என்பதை நீர் அறிவீரா?’ என்று உமர்(ரளி) என்னிடம் வினவினார். ‘இல்லை’ என்று நான் கூறினேன். ‘ஓர் அறிஞர் (சட்டத்தில்) ஒரு தவறு செய்கிறார், மக்களின் வழிகேட்டை நாடுகின்ற நயவஞ்சகர்கள் தங்களின் எழுத்தை கொண்டு அதில் விவாதம் செய்கிறார்கள்; அமீர்கள் அதை கொண்டு ஆட்சிசெய்கிறார்கள்!’ என்று கூறினார்.
 
 
Sources