Oct 29, 2013

சர்வதேச உளவுச் செயற்பாட்டில் சவுதி அரேபியா - லிபியாவின் சீப் ஒப் இன்டலிஜென்ட் சவுதியின் நண்பரானார்!!



பந்தர் பின் சுல்தான். சவுதி அரேபியாவின் உளவுப்பிரிவு டைரக்டர் ஜெனரல். அதாவது Al Mukhabarat Al A'amah-வின் அமீர். சவுதி ரோயல் அரசாட்சியின் அபிலாஷைகளிற்கு முழு வடிவம் கொடுப்பவர். அமெரிக்காவின் நண்பர். இன்நாட்களில் விளாடிமிர் புட்டினின் நண்பரும் கூட. அண்மையில் அவர் சவுதி அரசிற்கு நன்மைபயக்கும் ஒரு முக்கியமான காரியத்தை செய்து முடித்துள்ளார். லிபியாவின் அதிபர் கேர்ணர் முஹம்மர் அல்-கடாபியின் உளவுப் பிரிவின் தலைவரான Moussa Koussa-வை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளார். அதாவது அவரை சவுதியின் நண்பனாக மாற்றியுள்ளார்.

கடாபியின் காலத்தில் லிபிய ஸ்பை விங்கின் சீப் டைரக்டர் ஜெனரலான Moussa Koussa, கேர்ணல் கடாபியின் வேண்டுகோளிற்கிணங்க சவுதி அரேபிய அரசிற்கு எதிரான பல அசைன்மென்ட்களை தயாரித்திருந்தார். சவுதி அரேபிய அரசு எதிர் கொண்ட முதல் தர எதிரிகளில் இவரும் ஒருவராக விளங்கினார். எந்நேரமும் சவுதி ரோயல் பமிலியில் உள்ளவர்களின் உயிரிற்கு இவரால் ஆபத்து நிகழ உள்ளது என முன்பு சவுதி அரேபிய உளவமைப்பு எச்சரிக்கை செய்திருந்தது. அவரை இப்போது பந்தர் பின் சுல்தான் சவுதியின் சேவகனாக மாற்றியுள்ளார்.

உலகின் பல பாகங்களிலும் பல சதி நாச வேலைகளை லிபிய அரசிற்காக திட்டமிட்டு துல்லியமாக அதனை நிறைவேற்றுவதில் வல்லவர் இந்த Moussa Koussa. லொக்கர்பி குண்டு வெடிப்பின் சூத்திரதாரி.

பந்தர் பின் சுல்தானின் திட்டப்படி அவரை சவுதி அரசு உம்ரா வருமாறு அழைத்து கவுரவப்படுத்தியது. பின்னர் புனித ஹஜ்ஜிற்கு சிறப்பு யாத்திரிகராக வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. இரண்டையும் ஏற்று கொண்டு மூஸா கொஃஸா சவுதியின் சிறப்பு விருந்தினராக ரோயல் பிரின்ஸ் பலஸில் அண்மைய நாட்களில் தங்கியிருந்தார். அப்போது சவுதி அரேபிய உளவுத்துறை தலைவர் இவருடன் பல மணி நேரங்கள் தொடரான பல சந்திப்புக்களை நிகழ்த்தியுமிருந்தார்.

சவுதி அரேபிய மன்னர் கிங் அப்துல்லாவை 2003-ல் நடைபெற்ற அரபு உச்சி மாநாட்டில் வைத்து கொலை செய்யும் திட்டத்தை தீட்டியவரும் இந்த மூஸா கொஃஸாவேயாகும். கடாபி இதற்கான கட்டளையை இவரிற்கு பிறப்பித்திருந்தார். இதன் பிரகாரம் சவுதி அரேபிய அரசால் முக்கிய விதேச குற்றவாளியாக இவர் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார். இப்போது சவுதி அரேபிய அரசு அந்த குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளது.

சவுதி அரேபிய அரசின் உளவமைப்பானது அதன் பிரதான பணியாக மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள், செயற்பாடுகள் என்பவற்றை கண்டறிந்து கருவருப்பதையே கொண்டிருந்தது. சர்வதேச சதி திட்டங்களை தீட்டி நிறைவேற்றும் அளவிற்கு அதற்கு தகைமையோ அனுபவமோ இல்லை. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக மூஸா கொஃஸாவை பயன்படுத்த சவுதி அரசும் அதன் உளவுத்துறைத் தலைவரும் தீர்மானித்துள்ளார்கள். “அசைன்மென்ட் சிரியா” இப்போது இவர் வசம் வழங்கப்பட்டுள்ளது. சிரியாவில் யாரை போட்டுத்தள்ள வேண்டும் என பந்தர் சொல்ல அதை இவர் நிறைவேற்றுவார்.

சவுதி அரேபிய அரசின் இராஜதந்திர தூதுவராக இவரை போலியாக நியமித்து சிரயா, பஹ்ரைன், ஈராக், ஈரான் போன்ற நாடுகளில் பல புரஜெக்ட்களை செய்ய சவுதி அரேபியா தீர்மானம் செய்துள்ளது. இந்த தீர்மானங்கள் அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டவையாக தெரியவில்லை. ரஷ்ய ஆதரவுடனேயே இது நிகழ்துள்ளமைக்கான அறிகுறிகளே தென்படுகின்றன. எது எவ்வாறாயினும் சவுதி அரேபியாவின் உளவுத்துறை தலைவர் பந்தர் அல்-சுல்த்தான் வெற்றிகரமாக ஒரு வேலையை செய்து முடித்துள்ளார்.

(அரேபிய மன்னர் மந்தையோடு சேர்ந்துள்ளது அனுபவமுள்ள லிபிய கிழக் கடா ! குப்ரோடு கூட்டாகி இஸ்லாத்தின் மார்பில் பாய் வதற்காக !!!)

Oct 28, 2013

முஹர்ரமும், நவயுக பிர்அவ்ன்களும்! பகுதி - 1

இந்த முஹர்ரம் மாதத்திலே அருள்பாளிக்கப்பட்ட ஆசுரா தினம் எம்மை விட்டு நகர்ந்து சென்றுள்ளது. முஹர்ரம் மாதம் என்பது அல்லாஹ்வினது புனித மாதமாகவும், முஸ்லிம்களினது மிக முக்கிய மாதமாகவும் இருக்கின்றது. இந்த மாதம் ஹிஜ்ரி நாட்காட்டியில் முதலாவது மாதமாகவும், அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.அல்லாஹ் அத்தவ்பா 36ம் வசனத்தில் கூறுகிறான் “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஒரு வருடத்திற்குப்) பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுவதற்குரிய) அதுதான் நேரான மார்கமாகும். எனவே அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே நீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.”


இந்த குர்ஆனிய ஆயத்தில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள்” என்ற சொற்றொடருக்கு இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் விளக்கம் அளிக்கையில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள் ” என்ற சொற்றொடர் அனைத்து பன்னிரெண்டு மாதங்களை சுட்டிக்காட்டிய பின், அவற்றிலிருந்து நான்கு மாதங்கள் விசேடமாக புனிதமானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கூறப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாதங்களிலும் செய்யப்படுகின்ற தவறுகள் மிகவும் பாரிய தவறுகளாகவும், அவற்றில் செய்யப்படுகின்ற நன்மைகள் நிறைந்த பலனை தரக்கூடியவை எனவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த நான்கு மாதங்களும் எவை என்பது குறித்து புஹாரியின் 2958ம் ஹதீஸில் பதிவாகியுள்ளது.ரஸ_ல்(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ பக்றா (றழி) அறிவிக்கிறார்கள்“வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களையுடையது. அவற்றில் நான்கு புனிதமானவை. துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் எனும் தொடர்ச்சியாக வருகின்ற மாதங்களும், ஜூம்மதுல் ஆகிருக்கும் ஸஃபானுக்கும் இடையே வருகின்ற ரஜப் மாதமுமாகும்.”
இவற்றிலிருந்து அல்லாஹ்வும், ரஸ_ல் (ஸல்) அவர்களும் இந்த மாதங்களுக்கு விஷேட முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளாரகள் என்பது புலப்படுகிறது.

இந்த மாதத்தின் சிறப்புக் குறித்து ரஸ_ல் (ஸல்) அவர்கள் கூறும் போது “ரமழானுக்கு அடுத்தபடியாக, நோன்பு நோட்பதிலே சிறப்பான மாதம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரமாகும்” என்றார்கள். (முஸ்லிம்-1982)
மேலும் இமாம் அஹ்மத் ஒரு ஹதீஸினை பதிந்துள்ளார்கள் “இந்த நாளில் (முஹர்ரம்)தான் ஜூது மலையில் நு}ஹ்(அலை)அவர்களின் கப்பல் ஒதுங்கியது. ஆகவே நு}ஹ்(அலை) அவர்கள் இந்நாளில் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காக நோன்பு நோற்றார்கள்.

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிப்பதாக இமாம் புஹாரி அறிவிக்கின்றார்கள்
“துதர் முஹம்மத்(ஸல்)அவர்கள் மதீனாவுக்கு வந்த சமயத்தில், ஆசுராவினது தினத்தில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அவதானித்தார்கள். அவர்கள் “இது என்ன” என வினவினார்கள். அதற்கு அவர்கள் “இது புனித நாளாகும். இந்நாளிலேதான் அல்லாஹ் இஸ்ரவேலர்களின் சந்ததியினரை அவர்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாத்தான். ஆகவே மூஸா(அலை) அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள் என்றார்கள்” அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் “மூஸாவினிடத்தில் உங்களைவிட எங்களுக்கு உரிமை அதிகமுள்ளது” எனக் கூறி முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள். முஸ்லிம்களையும் அந்நாளில் நோன்பு நோட்கும்படி கூறினார்கள். (புஹாரி-1865)

மேலே சுட்டிக்காட்டப்பட்ட திருகுர்ஆன், மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் முஸ்லிம்கள் முஹர்ரம் பிறை 9,10ம் தினங்களில் நோன்பு நோற்று மூஸா(அலை) அவர்களையும், பிர்அவ்னின் காலகட்டத்தையும் ஞாபகப்படுத்தி வருவது நாமறிந்ததே. அதே போன்று திருமறை, பிர்அவ்ன் எவ்வாறு தனது மக்களை தன்னை “ரப்” ஆக ஏற்றுக்கொள்ளும்படியும், தனக்கு அடிபணியும்படியும் நிர்ப்பந்தித்து வந்தான் என்பதையும் எமக்கு ஞாபகப்படுத்துகிறது. மேலும் அவனது மிகப்பெரிய அறியாமையின் வெளிப்பாடாக தானே வாழ்வையும், சாவையும் நிர்வகிப்பவன் என்ற கருத்தை அவன் எவ்வாறு வெளிப்படுத்தி வந்தான் என்பதும் எமக்கு வரலாறு புலம்படத் தெரிவிக்கிறது.

தனது கருத்தை உறுதிப்படுத்துவதற்காக இரண்டு அடிமைகளை ஒன்று கூட்டி, அதில் ஒருவனை கொல்லும்படி கட்டளையிட்டான். மற்றைய அடிமையை விடுவித்தான். இத்தகைய ஒரு செயலை செய்ததன் ஊடாக தானே ஒரு மனிதனின் உயிரை பறிப்பவனும், வழங்குபவனும் ஆவேன் என வாதிட்டான்.எனினும் அல்லாஹ்வின் துதர் மூஸா(அலை) அவர்கள் மிகவும் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு அவனது அறியாமைக்கு பதில் அளித்தார்கள். அல்லாஹ் தினமும் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்து மேற்கில் மறையச் செய்கிறான். நீ சொல்லுவது உண்மையானால் இந்த தினத்திற்கு மறுநாள் சூரியனை மேற்கிலே உதிக்கச் செய்து, கிழக்கிலே மறையச் செய்ய முடியுமா? என வினவினார்கள். இந்த வினா அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அது அவனது அறியாமையை அவனுக்கு புலப்படுத்திய போதும், அவனிடமிருந்த அகம்பாவமும், பெருமையும் அவனை துய்மையான தௌஹீதை ஏற்க தடையாக இருந்து விட்டது.

இதுபோன்றே எப்பொழுதெல்லாம் சத்தியம், அசத்தியத்தை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் அசத்தியம் சத்தியத்தியத்தின் முன்னால் மண்டியிடுகிறது. எனினும் அசத்தியவாதிகள் அவர்களது கர்வத்தின் காரணமாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Oct 27, 2013

ரஷ்யாவை நோக்கி சரிகிறதா சவுதி அரேபிய அரசு?


                                  

Al Mukhabarat Al A'amah. என்றால் என்ன தெரியுமா?. சவுதி அரேபியாவின் உளவு ஸ்தாபனம். மன்னரிற்கு விசுவாசமாக செயற்படும் இரகசிய அமைப்பு. இதன் ஆங்கில கருத்து (GIP - General Intelligence Presidency). உளவறிதல், சவுதி அரசர் இடும் கட்டளைகளை இரகசியாமாக செயற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை இது செய்கிறது. 1956-ல் கிங் அப்துல் அசீஸ் அல் சவுத்தினால் தேசிய தேவை கருதி இது உருவாக்கப்பட்டது. மபாகித் எனப்படும் (General Investigation Directorate) மபாகித்ல் (சவுதி உளவு ஸ்தாபனம்) இருந்து இந்த அமைப்பு தனியாக பிரிக்கப்பட்டு மன்னரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதன் இயக்குனராக சவுதி ரோயல் குடும்பத்தை சார்ந்த ஒருவரே இருந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது “பந்தர் பின் சுல்தான்” அதன் தலைவராக இருந்து வருகிறார்.

1983-ல் இருந்து 2005 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவிற்கான சவுதி அரேபிய அம்பாஸிடராக கடமையாற்றியவர் இந்த பந்தர் பின் சுல்தான். ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன், ஜோர்ஜ் புஷ் போன்ற அமெரிக்க அதிபர்களுடன் கடமையாற்றியவர். 2012-ரீல் அல் முக்பராத் அல் ஆமாஃவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். மன்னராட்சிக்கு எதிரான அனைத்துவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒழிக்கும் பொருப்பினை மன்னர் அப்துல்லாஹ் இவரிடம் கையளித்திருந்தார். ஜித்தாவை தளைமாக மாற்ற அல்-காயிதாவினர் எடுக்கும் அனைத்து பிரயத்னங்களையும் முடியடிப்பதில் கணிசமான வெற்றியையும் இவர் பெற்றுள்ளார். அமெரிக்க உளவமைப்பான சீ.ஐ.ஏ.யுடன் சவுதி அரேபியா சார்பாக இராணுவ, உளவு விவகாரங்களை இவரே கவனித்தும் வருகிறார்.

இவர் சவுதி ரோயல் எயார் போஸில் கடமையாற்றியவர். அமெரிக்க மக்ஸ்வெல் எயார் பேஸில் சிறப்பு பயிற்ச்சிகளை மேற்கொண்டவர். இவர் ஒரு பைலட். அதுவும் சண்டை விமானங்களை ஓட்டும் பயிற்ச்சி பெற்ற பைலட். ஆயுத படைகளை கையாளும் பயிற்ச்சியையும் முடித்துள்ளார்.

அண்மை காலங்களில் இவர் அமெரிக்க செயற்பாடுகள் குறித்து பல அதிருப்தி தரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சிரிய சமர்களத்தில் அமெரிக்க சடுதியாக பின்வாங்கியுள்ளதாகவும், சிரிய அரசுடன் பேச்சுக்களை அது ஆரம்பிக்க முற்பட்டுள்ளதாகவும் இதனால் சவுதி அரேபியா ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பஹ்ரைன் கிளற்ச்சியின் போது சவுதி அரேபியா பஹ்ரைனிற்கு ஆதரவாக தனது படையை அனுப்பியது. ஷியாக்கிளின் புரட்சியை அடக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு உதவவில்லை என்பதும் இவரது குற்றச்சாட்டாகும். அங்கே தான் அமெரிக்காவின் 5வது கடற்படை பிரிவு தளமமைத்துள்ளது. பலஸ்தீன விவகாரங்களில் அமெரிக்கா இரட்டை வேடம் பூண்டுள்ளது என அவர் அண்மையில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். ஈரானுடன் அமெரிக்கா உறவுகளை வளர்பதும் சவுதி அரேபியாவிற்கு அது செய்யும் துரோகம் என்பது அவரது கருத்து.

அமெரிக்கா தொடர்பான கொள்கைகளில் சவுதி அரேபிய அரசு சில மாற்றங்களை கொண்டு வருவதுடன் ஒட்டுமொத்த கொள்கையில் மீளாய்வுகள் செய்யப்படல் வேண்டும் என அவர் மன்னரிற்கு தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக அவரது ரஷ்ய விஜயங்களும் அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்புக்களும் இந்த மாற்றங்களிற்கு காரணமாக அமைந்துள்ளதா என சில கேள்விகள் அமைந்துள்ளன. இரண்டு இராஜதந்திரிககளின் சந்திப்பு என்பதனையும் விட சவுதி அரேபிய உளவமைப்பின் தலைவரும் ரஷ்யாவின் முன்னாள் கே.ஜீ.பீ. உளவமைப்பின் தலைவரும் சந்திப்பது என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

வருகிறது முஹர்ரம் இப்படி வரவேற்போம் !


                                              

ஈமான் கொண்டோரே !நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் ;அன்றியும் ,சைத்தானின் அடிச்சுவடுகளை பின் பற்றாதீர்கள் .நிச்சயமாக அவன் உங்கள் பகிரங்க விரோதியாவான் .

எனவே தெளிவான ஆதாரங்கள் உங்களிடம் வந்த பின்னும் , நீங்கள் சறுகி விடுவீர்களானால் ,(உங்களை தண்டிப்பதில் )நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன் ;தீர்க்கமான அறிவுடையவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் . (சூரா அல் பகரா வசனங்கள் 208,209)

இன்னொரு முஹர்ரத்தையும் நாம் நெருங்கி விட்டோம் .ஆனாலும் அரசியல் அநாதைகளாக , கேட்பார் அற்றவர்களாக அல்லாஹ்வின் எதிரிகளின் சகல விதமான அடாவடித் தனங்களையும் சந்தித்தவர்களாகவே இந்த இஸ்லாமிய புதுவருடத்தையும் அடைய இருக்கின்றோம் .வழமை போலவே ஒரு சராசரி நாளாகவா இந்த நாளும் முஸ்லிமை வந்தடையப் போகின்றது ?

ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய ஆண்டுக்கணிப்பின் இலட்சியவாத பேருண்மை ,ஒவ்வொரு முஸ்லிமையும் நான் யார் ? எங்கிருந்து வந்தேன் ? எதற்காக வந்தேன் ? எங்கே செல்லப் போகிறேன் ? எனும் வினாக்களுக்கு ஆழமான பதிலை புரியவைக்கும் ஒரு நிகழ்வாகும் .

ஒரு சிலவேளை மக்காவில் மிக ஆழமான காயம்பட்ட மூத்த சஹாபா பெருமக்களுக்கு அந்த உண்மை இயல்பாகவே புரிந்திருக்கும் .ஏனென்றால் இஸ்லாம் எனும் இலட்சியத்தோடு இல்லை அந்த இலட்சியமாகவே மாறி நின்று அன்று போராடியவர்களின் வெற்றி அத்தியாயம் இந்த ஹிஜ்ரத்தில் இருந்துதான் மைல்கல் ஆகின்றது .

முஹர்ரத்தின் வரவை இத்தகு வடிவத்தில் இருந்து நோக்கும் பக்குவம் எமக்கில்லை .காரணம் சத்தியத்தை உணர்ந்து அதன் அடைவுக்கான தியாகங்களை சுவையானதாக கருதும் மனப்பக்குவத்தில் நாமில்லை . அதற்கான அடிப்படைக் காரணமும் இருக்கத்தான் செய்கிறது . அதை உணர்ந்து கொள்ள இப்போது நாம் எத்தகு சூழ்நிலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதல்களில் இருந்து விடயத்தை ஆராய்வது பொருத்தமானது .

குப்ர் முற்றாக சூழ்ந்த ஆதிக்க கட்டமைப்பு , அதன் நாகரீக கலாச்சார பதிப்புகளோடு கூடிய அசிங்கமான வாழ்வியல் போக்கில் முஸ்லீம்களாகிய நாம் விரும்பியோ ,விரும்பாமலோ இழுத்து வரப்பட்டிருக்கிறோம் .அந்த வகையில் அத்தகு தாக்கங்களின் புரிதல்கள் ,நடத்தைகள் ,தீர்வுகள் என்பன ஒரு அன்றாட நிகழ்வாகவே போய்விட்டது .

அது வருடக்கணிப்பு என்ற விடயத்திலும் இஸ்லாமியப் பார்வையும் தேடலுமற்ற ,அல்லது இஸ்லாமிய வருடக்கணிப்பின் வரலாற்றின் மீது பூரண உளத் தாக்கமற்ற மனோபாவம் கொண்டவர்களாக முஸ்லீம்களாகிய எம்மை மாற்றியுள்ளது .ஆனாலும் ஒரு சம்பிரதாயமாக இந்த முஹர்ரத்தையும் வரவேற்கிறோம் .


(ஆனால் எமது வாழ்வியல் நடத்தைகளின் வருடக்கணிப்பு பிரயோகம் என்பது ஆங்கில 'கலண்டரை ' அடிப்படையாக கொண்டு இடம்பெறுவதை யாராலும் மறுக்க முடியாது .இன்று எம்மில் ஒருவரிடம் இன்றைய திகதியை ,அல்லது குறித்த ஒரு நாளைப் பற்றி கேட்டால் ,ஆங்கில 'கலண்டர் ' பிரகாரம் பதில் சொல்வது சாதாரண இயல்பு .இது ஏன் என்றால் எது உலகின் அதிகார ஆதிக்க சக்தியாக இருக்கின்றதோ ,அந்த சிந்தனையின் தாக்கமும் விருப்பு வெறுப்பும் மனித வாழ்வியலை தீர்மானிக்கும் விடயமாகிவிடும் . இந்த பொது விதியில் முஸ்லீம்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல.)

முதலில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் மிகத் தெளிவான 'இஜ்திஹாதே ' ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய கலண்டர் முறையாகும் .இந்த விடயத்தில் உமர் (ரலி )யின் சமகாலத்திலோ ,அவருக்குப் பின்னாலோ எந்த ஒரு கலீபாவோ ,இமாமோ முரண்படவோ ,மாற்றுக்கருத்தோ கொள்ளவில்லை .

இஜ்திஹாத் மூலம் பெறப்பட்ட முடிவு ஒரு இபாதத் என்பதிலும் எந்த இமாம்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாடுகளும் இல்லை .அந்த வகையில் 1924 ம் ஆண்டு வரை இருந்த இஸ்லாமிய கிலாபா அரசின் சகல விதமான நிர்வாக நடவடிக்கைகளும் இந்த ஹிஜ்ரா கலண்டரை அடிப்படையாக கொண்டே இடம்பெற்றுள்ளன . முஸ்லீம் உம்மாவும் தனது அன்றாட நடத்தைகளை ஹிஜ்ரா கலண்டரை அடிப்படையாக வைத்தே செய்தும் வந்துள்ளது ;என்பது மறுக்க முடியாத உண்மை .

முஸ்லீம் உம்மத்தில் ஆங்கில ஆண்டுக்கணிப்பு நூதனமாக எப்போது உட்புகுந்தது? என்று பார்த்தால் ,இஸ்லாத்தின் அரசியல் அதிகார ஆதிக்கத் தரம் வீழ்த்தப் பட்டு குப்ரிய அதிகார ஆதிக்க வடிவத்தினுள் முஸ்லீம் கட்டுப்பட்டு போன பின்புதான் ஆகும் .எனவே இங்கும் ஆட்சிக்கும் வாழ்வியலுக்கும் இடையிலான தவிர்க்க முடியாத இடைத்தொடர்பு முஸ்லீம்களால் மிகக் குறிப்பாக நோக்கப்பட வேண்டியதாகும் . இஸ்லாமிய அரசற்ற பூரண இஸ்லாமிய வாழ்வு முஸ்லிமுக்கு சாத்தியமே அற்றது .

மேலும் உண்மையிலேயே ஆங்கில கலண்டர் முறை கிறிஸ்தவ மதத்தையும் ,சமரச பேரத்தின் அடிப்படையிலும் அதன் பின்னால் ஆண்டுவந்த மன்னர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ,நிர்ப்பந்த மாற்றங்களை சுமந்த வடிவமே ஆகும் .

அத்தகு மேட்டுக்குடி அரசர்களின் பெயர்களையும் , நாள் மாத மாற்றங்களையும் , கிறிஸ்தவ மதவியலின் கோட்பாட்டிடமான ,கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்ற அடிப்படையையும் கொண்டு கட்டமைக்கப் பட்ட ஒரு கணிப்பு முறையே ஆங்கிலக் கலண்டர் ஆகும் .எனவே இத்தகு முறைமையில் முஸ்லிமும் பங்களிப்பு செய்வது ஆழமாக சிந்திக்கப் படவேண்டிய விடயம் .

உதாரணமாக ஏப்ரல் 1ம் திகதியை முட்டாள்கள் தினமாக கூறுவதும் ,டிசம்பர் 25ம் திகதியை கிறிஸ்து பிறந்த நாளாக பெயரளவிலாவது கருதுவதும் சிறுவயது முதல் முஸ்லீம்களாகிய நாம் கடைப்பிடிக்கும் கணிப்பு முறையாகும் .இந்த நம்பிக்கையில்லாத நம்பிக்கையின் கீழ் இருந்துதான் எம்மை அறியாமல் ஒரு வேற்று நாகரிகத்தின் கருத்து ஆதிக்கம் ஏற்பட்டு விடுகின்றது . அதாவது 'பொசிடிவ் 'ஆகவோ 'நெகடிவ் 'ஆகவோ ஒரு வழிதவறிய குப்பாருக்காக முஸ்லீம்களாகிய நாம் பயன்பாட்டுப் போக இந்த ஆங்கிலக் கலண்டர் முறை ஒரு காரணமாகி விடுகிறது .

இன்னும் உமர் (ரலி ) கலீபாவாக இருக்கும் அன்றைய பொழுதுகளில் ஆங்கிலக் கலண்டர் முறையும் ,இன்னும் வேறுபட்ட காலக் கணிப்பு முறைகளும் இருக்கத்தான் செய்தது . ஆனால் அதை எடுத்து பயன்படுத்துவதில் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த காரணத்தினால் தான் . ஹிஜ்ராவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாகரீகத்துக்கான கலண்டரை 'இஜ்திஹாத்' செய்திருக்கலாம் .

எமது சத்திய மீள் கட்டுமானமும் ,பூரண இஸ்லாமிய மயப்பட்ட நாகரீகத்தையும் இஸ்லாத்தின் அதிகாரத்தில் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் . அது அற்ற நிலையில் குப்பாரின் நரித்தனமான சதிகளில் முஸ்லீம்களாகிய நாம் சிக்குவது தவிர்க்க முடியாதது .அதற்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்றே அவர்கள் எமக்கு கற்றுதந்துள்ள ஆங்கிலக் காலக் கணிப்பீட்டு முறையாகும் .

சூழ்நிலை ,நிர்ப்பந்தம் ,தவிர்க்க முடியாமை போன்ற பதில்களோடு குப்ர் தெளிவாகவே தன்னைத் தழுவ அழைக்கிறது .எமது" செவிமடுத்தோம் வழிப்பட்டோம் " என்ற நடத்தை யாருக்காக? என்பதே எதிர்வரும் முஹர்ரத்தை முன்னிறுத்தி நாம் தீர்மானிக்க வேண்டிய நேரமிது .நாம் முஸ்லீம்கள் என்ற அசைக்க முடியாத பதிலை சொல்ல ,செயலால் பூரணமாக காட்ட எமது கேடயமான கிலாபா அரசு இன்று அவசரத் தேவையாக இருக்கின்றது .அதன் கீழ் மட்டுமே இஸ்லாமிய வாழ்வோடு கூடிய எமது கண்ணியம் பாதுகாக்கப் படும் இன்ஷாஅல்லாஹ் .

எனவே அவ்வழியில் சிந்திப்போம் , அதற்காக பிரார்த்திப்போம் ,அதன்வழி பூரண தியாகத்தோடு முயற்சிப்போம் .இந்த உறுதிப்பாட்டுடன் இந்த முஹர்ரம் வரவேற்கப் படட்டும் .அல்லாஹு அக்பர் ....!.அல்லாஹு அக்பர் ....!

Oct 26, 2013

ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை


ஒற்றுமை என்பது குர்ஆன் சுன்னா அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும்! 

அந்த ஒற்றுமையை ஏற்படுத்தத் தேவையான இஸ்லாம் இழந்துள்ள தலைமை உருவாக்கப்பட்டால் மாத்திரமே நிரந்தரமாக உம்மத் ஒன்றுபடுத்தப்படும்! காரணம் மேற்கினது சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டதாக இன்று உம்மத் காணப்படுகிறது.

முஸ்லிம் நாட்டுத் தலைமைகள் மேற்கினது பிரித்தாளும் யுக்தியினது அடிவருடிகளாக மாறி அவர்களது சுயநலன்களுக்காக உம்மத்தை சுரண்டிவாழ்வதுடன் தீனுள் இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைப்பதனை நாம் காணலாம்.

எனவே உம்மத் ஒற்றுமைப்படவேண்டுமாயின் இஸ்லாத்திற்கு அன்னியமான மேற்கினது சிந்தனைகளான “தேசியவாதம் களையப்பட்டு” “உம்மத் மற்றும் சகோதரத்துவ சிந்தனை” ஊட்டப்படவேண்டும்!

மேற்கினது பிரித்தாளும் ஆட்சிமுறையினது கருவியான “மனிதன் சட்டத்தை ஆக்கும் ஜனனாயகப் பாராளுமன்ற முறை” மூலமான ஆட்சிமுறை மாறி “கிலாபா ஆட்சி” வரவேண்டும்!

“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்” (ஆல-இம்ரான்:103)

''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.'' (ஸுரா : அர்ரூம் :32)

''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.'' (அல் அன்ஆம் :159)

Oct 25, 2013

முஸ்லீம் எனும் அடையாளத்தை விட்டுக் கொடுத்தால் நாம் யார் !?


(ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து ( இறுதிப் பகுதி )

அந்த 1990 அக்டோபர் 29 ம் திகதி யாழ்ப்பாண முஸ்லீம் பகுதி அதிகாலையிலேயே விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப் படிருந்தது . சேம்பரில் ஏற்றப்பட்ட தோட்டாக்கள் எம்மில் பதியும் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது .ரிகரை நெருங்கிய புலி விரல்கள் அழுத்தத் துடிக்கும் ஆசையோடு துருதுருத்துக் கொண்டிருந்தது. 'மெக்சிமம் ' பிடுங்கி விட்டு விரட்டி அடிப்பது மட்டும்தான் கட்டளை என்பதால் முஸ்லீம் மூளைகளை சிதறடிக்கும் இரத்த விளையாட்டுக்கு இப்போது சந்தர்பம் இல்லையே என அந்த ஆயுத பாணியான வீர வேங்கைகள் வெறுப்போடு வெறுங்கை சிவிலியன்களான எம்மை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

பின்னாளில் இளம்பருதி என அழைக்கப்பட்ட அந்நாள் ஆஞ்சநேயர் புலிகளின் கட்டளையை அறிவிக்கிறான் . ("பராக் பராக் இதனால் (சோனி )எனப்படும்) முஸ்லீம்களுக்கு அறிவிப்பது என்வென்றால் கிழக்கு பகுதியில் வாழும் முஸ்லீம்களின் செயல்களால் கோபாவேசத்தில் துடித்துக் கொண்டிருக்கும் கிழக்குப் புலிகளின் முஸ்லீம் வேட்டைக்கு நீங்கள் உள்ளாகி அழிந்து போகாமல் இருக்க உங்களை உயிரோடும் மானத்தோடும் அனுப்பி வைக்கிறோம் " என்ற முடிவுதான் அதுவாகும் .வேடிக்கையான நியாயம் !

ஒரே இயக்கம் ,ஒரே தலைவர் ,ஒரே தலைமை ,ஒரே கட்டளை என நேற்றுவரை பேசியவர்களின் இந்த வார்த்தைகள் விசித்திரமாக இருந்தது ! கிழக்குப் புலிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அந்த 1990 களில் அவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் !? பிரபாகரனுக்கு வாகரைப் பாலம் அப்போதே சிம்ம சொப்பனமாகவா இருந்தது !? என்ற கேள்வி ஒருபக்கம் இருக்க குறைந்த பட்சம் கிழக்குப் புலிகள் வடக்கில் வந்து ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியாத ஒரு புலித் தலைமை கேலிக் கூத்தாக இல்லையா !?

இந்த சம்பவத்தை நியாயம் காட்ட விடுதலைப் புலிகளாலும் ,இன்று வரை உள்ள அதன் வால்களாலும் ,எஞ்சி சிதறிப் போயுள்ள அதன் நகங்களாலும் ,சதைகளாலும் , சிங்கத்துக்கு சாமரம் வீசும் முன்னாள் உறுப்பினர்களாலும் முடியவே முடியாது . யாழ் பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்த ராஜா சுடப்பட்டதட்கும் மன்னார் அரச அதிபர் மஹ்ரூப் சுடப் பட்டதற்கும் இடையில் ஒரு பொதுக் காரணம் இருந்தது . அது இலங்கை இராணுவத்தோடு , அரசோடு சேர்ந்து புலிகள் விரும்பாத நடத்தையில் அவர்கள் ஈடு பட்டார்கள் என்பது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் இருக்கும் உண்மையாகும் .

ஆனால் வடக்கு கிழக்கின் முழு முஸ்லீம் சமூகத்தையும் விடுதலைப் புலிகள் குறிவைத்த இரத்த தாகத்தின் பின் ஈழ விடுதலை இலட்சியத்தை தாண்டிய ஒரு 'அசைன்மெண்ட் பொலிடிக்ஸ் 'இருப்பது நிரூபிக்கப் பட இந்தியன் றோ போல ,அமெரிக்க C .I .A போல , இஸ்ரேலின் மொசாட் போல முஸ்லீம்களாகிய எம்மிடம் உளவுப் பிரிவில்லை . அல்லது இந்த உளவுப் பிரிவுகள் போலவே முஸ்லீம் எதிர்ப்பு என்ற பொது அஜன்டாவுக்குள் புலிகள் வந்ததில் இவர்களை இணைத்து சந்தேகப் படாமல் இருக்கவும் முடியவில்லை .

" மட்டக் கிழப்பான் ...." என கிழக்கு முஸ்லீம்களை கீழ்த்தரமாக பார்க்கும் சாதீயத்தின் ஏதோ ஒரு வடிவம் வடக்கு முஸ்லீம்களிடம் ஒட்டி இருந்தது . முஸ்லிமை முஸ்லிமே கீழ்த்தரமாக பார்க்கும் இந்த அசிங்கத்துக்கு சூப்பரான ஆப்பு விடுதலைப் புலிகளால் கிடைத்தது . குப்பார் குப்பார் தான் . தாகூத் தாகூத் தான் ;இங்கு இஸ்லாம் முஸ்லீம் என்ற எதிரியின் பொதுப் பார்வைக்குள் ஒன்று சேர்க்கப் பட்டே அடிக்கப் படுவோம் என்ற ஒரு பொது உண்மை அப்போது எனக்குப் புரிந்தது .

இங்கு சாபி ,ஹனபி ,ஹன்பலி , மாலிகி என்றோ ,தப்லீக் , ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான் ,சலபி , தவ்ஹீத் என்றோ அரபி ,அஜமி என்றோ குப்பார்கள் எம்மை பார்க்கப் போவதில்லை . எமது தனித்துவம் வெளிப்படும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் நிச்சயம் நாம் வேட்டை யாடப்படுவோம் . நடந்ததும் அதுதான் ,நடப்பதும் அதுதான் . அதற்காக முஸ்லீம் என்ற அடையாளத்தை என்றும் எம்மால் விட்டுக் கொடுக்கவா முடியும் !

Oct 24, 2013

யெமனில் நடந்த துயர சம்பவம்...!!!

“ட்ரோன் அட்டாக்” எனும் பெயரில் நிகழ்த்தப்படும் அமெரிக்க பயங்கரவாதம் !!



written by: Abu Sayyaf

அமெரிக்க தாக்குதல்களில் அவர்கள் எதிரிகளை கொன்றதை விட எதிலும் சம்மந்தம் இல்லாத சாதாரண பொது மக்களை கொன்றதே அதிகம் .

ஒரு ஜீப் வண்டி புளுதியை கிளப்பிக்கொண்டு விடியல் காலை செல்கிறது. சில நிமிடங்களில் அது வெடித்து சிதறுகிறது. எங்கும் புகை மண்டலம். சிதறடிக்கப்பட்ட கருகிப்போன ஜீப்பினுள் எட்டிப் பார்த்தால் ஒரு தாயும் அவள் குழந்தைகளும் அவள் கணவரும் பிணமாக எரிந்த நிலையில் கோரமாக காட்சி தருகின்றனர்.

விடயம் இது தான். அமெரிக்க கண்காணிப்பு சட்டலைட் தொழில் நுட் ப தகவல்களிற்கமைய, ஜீப்பில் செல்வது அல்-காயிதா ஆதரவு பயங்கரவாதிகள். ட்ரோன் ஆளில்லா கட்டுப்பாட்டியக்க விமான கமெராக்கள் மூலம் அந்த ஜீப் கண்காணிக்கப்பட்டு பின் இலக்கு வைக்கப்படுகிறது. ஒரு ஏவுகணை மூலம் இலக்கு அழிக்கப்படுகிறது. ஜீப்பினுள் ஏ.கே.47 ஒன்று மட்டும் கிடந்தால் போதும் அமெரிக்க அறிக்கையில் மிஷன் கொம்பிளீடட் என அறிக்கை வரும். இறந்தது பொது மக்களாக இருந்தால் ரியலி வீ ஆர் வொரியிங் திஸ் ஸ்ரஜடி என அறிக்கை வரும். அவ்வளவு தான்.

யெமனில் மீண்டும் அப்பாவிகள் ட்ரோன் விமான தாக்குதலில் பலியாக்கப்பட்டுள்ளதாக Human Rights Watch மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தனது எதிரிகளை ட்ரோன் மூலம் வேட்டையாடுவது இப்போததைய அமெரிக்க ஸ்டைலும் டெக்னிக்குமாகும். சட்டலைட் உதவியுடன் வழிப்படுத்தப்படும் கட்டளைகளிற்கிணங்க ட்ரொன் ஆட்கொல்லி விமானங்கள் தங்கள் லேசர் கைடட் ஏவுகணைகளை இலக்கு நோக்கி ஏவுகின்றன.

102 பக்க அறிக்கையை ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பானது யெமன் மீதான அமெரிக்காவின் பொது மக்கள் படுகொலைகள் பற்றி பேசுகிறது. அம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பும் 2013ல் அமெரிக்கா மேற்கொண்ட பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மற்றும் குனார் பிரதேசங்கள் மீதான ட்ரோன் தாக்குதலால் பலியாகியுள்ள அப்பாவி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பற்றி குற்றம் சுமத்துகிறது.

அமெரிக்காவின் லோ ஒப் வோர் எனும் சண்டைக்கான சட்டங்கள் ட்ரோன் தாக்குதலிற்கு தாராள அனுமதியை அளிக்கின்றன. அதை உயர்தரமான இழப்புக்கள் அற்ற, செலவு குறைந்த, துரிதகதியில் நிகழ்த்தப்படும் தாக்குதல் என நியாயப்படுத்துகிறது. “சேர்ஜிகல் ஸ்ரைக்” எனும் இவ்வகை தாக்குதல்கள் அமெரிக்க லோ ஒப் வோரில் முதன்மை ரக தாக்குதல்களில் ஒன்றாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.

அமெரிக்க தாக்குதல்களில் பயங்கரவாதிகளை விட பொதுமக்களே அதிகம் மரணிக்கின்றனர் என ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பு சாடியுள்ளது. ட்ரோனினால் இலக்கு வைக்கப்படுபவர்களில் 70 விகிதமானவர்கள் அப்பாவி பொதுமக்கள் எனவும் மிகுதி 30 விகிதமானவர்களே பயங்கரவாதிகள் என்றும் அந்த அமைப்பு புள்ளி விபரங்களுடன் உறுதிபட தெரிவிக்கின்றது.

ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பின் இந்த அறிக்கையிடல் பாராட்டத்தக்க ஒரு செயற்பாடாகும். அதே வேளை அமெரிக்காவின் எதிரிகளை “பயங்கரவாதிகள்” என்று எந்த அளவுகோலின் அடிப்படையில் அது குறிப்பிடுகிறது என்பது நியாயமிக்க கேள்வியாகும். ஒரு யெமனியிடமோ அல்லது ஒரு வசிரிஸ்தான் வாசியிடமோ இறந்தது யார் என்றால் அது ஒரு புனித போராளி என்பான். இறந்தவரை கண்ணியமாக “அஷ்-ஷஹீத்” என்று சங்கையாக விளிப்பான்.

ஆக இறந்தவர் ஒரு தரப்பினரிற்கு புனித போராளி. மறு தரப்பினரிற்கு பயங்கரவாதி. இதில் ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பும், அம்னஸ்டி இன்டர்னஷனலும் அமெரிக்க எதிர்தரப்பினரை அமெரிக்கா குத்தும் முத்திரைகளான “பயங்கராவாதி, முஸ்லிம் அடிப்படைவாதி” போன்ற பதப்பிரயோகங்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் அடிப்படை பார்வைகள் என்ன என்பத பற்றிய கேள்விகள் எழுவதும் நியாயமானதே.

மனித குலத்திற்கு எதிரான ஒரு அப்பட்டமான ஒரு இனஅழிப்புசார் குற்றத்தை அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் நடாத்திகொண்டிருக்கிறது. டிஜிட்டல் மெக்கானிக்கள் உபகரணங்கள் இன்று ஒரு முஸ்லிமின் உயிரை எடுப்பதா விடுவதா என்று தீர்மானிக்கின்றன.

இதோ இன்னொரு முஹர்ரம் ....



அது கலீபா உமர் (ரலி ) ஆட்சிக்காலம் ; அபூ மூசா அல் அஸ் அரி (ரலி )  கலீபாவிட்கு எழுதிய கடிதத்தின் வரிகளின் முக்கியத்துவம் கலீபாவால் உணரப்பட்டது . அப்படி என்னதான் எழுதியிருந்தார் ?விடயம் இதுதான் " உங்களிடம் இருந்து வரும் கடிதங்களில் காலம் குறிப்பிடப்படுவதில்லை " எனும் செய்தியே அது . கலீபா முக்கியமான சஹாபாக்களை ஓன்று கூட்டி ஆலோசித்தார்கள் . முஸ்லீம் உம்மாவின் காலக்கணிப்பின்' கலண்டர் ' உதித்தது . அந்தக் கட்டங்கள் சுருக்கமாக உங்கள் கண்முன் தருகிறேன் .கீழே அவதானியுங்கள் .

ஆலோசனை கட்டத்தில் பற்பல ஆலோசனைகள் சிலர்  நபி (ஸல்) அவர்களின் பிறப்பில் இருந்து வருடக்கணிப்பை தொடங்கலாம் என்றனர் ,இன்னும் சிலர் நுபுவத்திளிருந்து தொடங்கலாம் என்றனர் ,ஒரு சாரார் ஹிஜ்ரத்தில் இருந்து தொடங்கலாமே என்றனர் . இந்த  ஆலோசனையே ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . சிந்திக்க வேண்டிய இடம் இதுதான் .
                                           
இந்த ஹிஜ்ரத்தின் நிகழ்வுதான் உண்மையில் இஸ்லாத்தின் கட்டமைப்பு வடிவத்தை , அதன் பிரத்தியோகமான நாகரீகத்தை காட்டக்கூடிய   ,அதன் பூரண பிரயோகத்தின் திட்டமிட்ட வாயிலாக அமைந்தது .  'சுரகாவிட்கு' பாரசீக மன்னரின் தங்கக் காப்புகள் பெற்றுத்தரப்படும் என்ற  வாக்குறுதி வழங்கப்பட்டதும் இந்த ஹிஜ்ராவில் தான் .அதாவது இனி தாகூத்திய சாம்ராஜ்யங்கள் இறைவனின் படைக்கு முன் நிம்மதியாக நிமிர்ந்து நிற்க முடியாது . என்ற எதிர்வு கூறப்பட்ட சுப செய்தி சொல்லப்பட்டதும். இந்த ஹிஜ்ராவில் தான் . அதாவது சத்தியத்துக்கும் அசத்தியதுக்கும் இடையில் அதிகாரப் பிரிகோடு தெளிவாக வரையப்பட்டது.
                                                                         
அதனையடுத்து எந்த மாதத்தில் இருந்து வருடக் கணிப்பை மேட்கொள்ளலாம்  என்ற ஆலோசனை மேட்கொள்ளப்பட்டது .அதன் போது சில சஹாபாக்கள் நபி (ஸல் ) ஹிஜ்ரத் சென்ற ரமலான் மாதத்தை முன் மொழிந்தனர் .ஆனால் தீர்மானிக்கப்பட்டதோ 'முஹர்ரம் ' காரணம் இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட 'துல்ஹஜ் ' மாதத்தை இறுதியாக்கி அதற்கு அடுத்ததாக வரும் 'முஹர்ரம் ' தலை மாதமாக அங்கீகரிக்கப்பட்டது . அத்தோடு இந்த மாதம் அல் குர் ஆன் குறிப்பிடும் புனித மாதங்களில் ஒன்றுமாகும் . இதுதான் இஸ்லாமிய 'கலண்டர் 'உத்தியோக பூர்வமாக பிறந்த வரலாறாகும்.

இன்று இன்னோர் முஹர்ரத்தை நாம் எதிர்கொள்ளப்போகிறோம் . ஆனால் அரசியல் அனாதைகளாக!! பசித்த எதிரியின் புசிக்கும் பண்டங்களாக !! எமது நிலங்களில் 'டெண்ட் 'அடித்த எதரிகளின் செருப்புகளாக வீற்றிருக்கும் மனிதர்கள் முன்னாக  , 'வெஸ்டனை' சிஷ்டமாக்கி இனி இதுதான் இஸ்லாம் என கூச்சலிடும் மேற்கின்  அடிவருடித்தன மேதாவிகள் முன்பாக .  யா அல்லாஹ் உனது கருணையை எங்கள் மீது பொழிவாயாக இந்த சாபக்கேடுகளில் இருந்து எங்களுக்கு மீட்சியை தருவாயாக . மீண்டும் தூய இஸ்லாத்தின் அதிகார நிழலில் கண்ணியம் பொருந்திய முஸ்லீம்களாக வாழ அருள் பாலிப்பாயாக.

http://khandaqkalam.blogspot.ae

Oct 23, 2013

இதுதான் 'ஹிக்மத்' 'லேபில் அடித்த அசல் கோழைத்தனம் !

                                         

மஸ்ஜிதில் இருந்து அதான் ஒலித்தது . அது அல்லாஹ்வின் அழைப்பு ! அதிகாரத்தில் இருந்து குப்ரியத் கட்டளையிட்டது .அது உலக வாழ்வியலுக்கான அழைப்பு .துன்யா வேறு ஆகிரா வேறா!? மறுமையின் வெற்றிக்காக இம்மை இல்லையா !? வெற்றி பெற விரைந்து வாருங்கள் என்ற அதானுக்கு மறுமைக்கு என ஒரு ஆன்மீக நியாயத்தை கூறிவிட்டு மறுபக்கம் 'தாகூத்தின்' அதே போன்ற அழைப்புக்கு புரிந்தும் புரியாமலும் தலைவணங்கிப் போவது சரியா !? இது தானா முஸ்லிமின் நடத்தை !?

பரலோகத்தில் (ஆகிரத்தில் ) அல்லாஹ்வின் அதிகாரத்தை மட்டுப் படுத்தி விட்டு பூலோகத்தில் (துன்யாவில் ) ஏதோ ஒரு ஆளும் சக்திக்கு கட்டுப்படுவது ,அதன் விருப்பு வெறுப்பின் படி நடத்தைக் கோலத்தை மாற்றுவதா முஸ்லிமின் பண்பு!? ,யஹூதிகள் இறை சாபத்துக்கு உள்ளானதும் , கிறிஸ்தவர்கள் வழி தவறியதும் இதனால் தான் என்பது ஒரு நாளைக்குள் பலதடவை சூரத்துல் பாத்திஹாவை ஓதியும் முஸ்லீம்களே ! ஏன் உங்களுக்கு புரியவில்லை !?

அரபி தெரிந்தவனே நாசரானிகளோடு கூட்டுச் சேர்ந்து யகூதிக்கு தோள் கொடுக்கும் போது நாம் என்ன செய்வது !? எல்லாம் 'கல்லி வல்லி ' என நரகத்து விசா எடுக்கும் 'ஈஸி டெக் நிக்' ஹிக்மத்தாக தெரிவது ஆச்சரியமே ! மறுமையில் எவனையும் வைத்து உன்னிடம் கேள்வி கேட்கப் படாது உனது தேடல் ,உனது முயற்சி ,உனது நடத்தையை வைத்தே உன்னிடம் கேள்வி கேட்கப்படும் .

குப்ரியத்தின் அகீதா ,அது காட்டும் வாழ்வியல் ,மற்றும் அதன் நாகரீக ,கலாச்சார வட்டம் என்பன ஒரு தவிர்க்க முடியாத ஈர்ப்பு விதியாகிப் போக 'டாவின் வீட்டு குரங்குப் பிள்ளையாக' ஒரு அநாகரீக மாற்றத்தை அரவணைத்துள்ளது இன்னும் புரியவில்லையா ?மதம் வேறு வாழ்வியல் வேறு என பக்குவமாக பிரிக்கப் பட்டுள்ள குப்ரியத்தின் சித்தாந்த கட்டமைப்பில் முஸ்லீம் உம்மத்தையும் இணைத்து take it easy policy போடுவதா காலத்தின் தேவை !?

தேசம் ,தேசியம் என்ற 'ஜாஹிலீயத்தினுள் 'சகோதரத்துவத்தை சம்பூர்ணமாக புதைத்து விட்டு ,சாத்தானிய வேதங்களை நம்பி ஜனநாயக விலாசத்தில் குடியிருக்க முஸ்லீம் கற்றுக் கொண்டது சரிதானா !?இப்போது 'முஸ்லிம் முஸ்லிமுக்கு சகோதரன் என்ற இஸ்லாத்தின் உறுதியான தீர்ப்பு 'nationalize' border இல் முக்காடு போட்டு குந்திவிட ,அதற்கு அப்பால் எல்லை தாண்டினால் கலிமாச் சொன்னவனும் அயல் நாட்டான் என்று குப்ரியக் கண்ணாடி போட்டுதான் குசலம் விசாரிக்கப் படுகிறது .
பலஸ்தீனை பிரிக்கும் எகிப்திய 'போர்டருக்கும் ' பர்மிய முஸ்லீம்களை ஏற்க மறுத்த பங்களா தேஷ் 'போர்டருக்கும் ' தேசியம் எனும் same பிரிகோட்டு policy தான் ஒரே நியாயம் .அதற்கும் அப்பால் சகோதரனின் படுகொலையும் ஏதோ கண்ணா மூச்சி போல தேசியக் கொடியால் கண்கள் கட்டப்பட்டே காட்டப்படும் .அனுதாபங்கள் கூட எல்லை தாண்ட 'பொலிடிகல் டிப்லோமடிக் ' வேண்டுமாம் !

face book இலும் டுவிடரிலும் அழுதென்ன பயன் !அரவணைத்திருப்பது அந்நிய அகீதா !சகோதரத்துவம் ,ஒரே உம்மத ,ஒரே பெருநாள் , இப்படி எல்லாவற்றையும் தேசம் ,தேசியம் என்ற சாத்தானிய எல்லைக்கோடுகள் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது . 'குர்பான் மட்டையும் ஏதோ 'கொமர்' விடயம் போல ஒழித்து மறைத்து முடிக்கச் சொல்வதும் ,'போயா' தினத்தில் 'அய்யாமுத் தஷ்ரீக் ' வந்தால் சபூர் செய்யச் சொல்லி பௌத்த இஸ்லாம் பேசுவதும் இன்று கோழை நியாயத்தில் முஸ்லீமுக்கு கொள்கையாய் போயுள்ளது .

தெளிவற்ற உம்மத் திற்கும் ,தகுதியற்ற ஆலிம்களுக்கும் மத்தியில் சத்திய மார்க்கம் மாட்டுப்பட்டு தவிக்கின்றது .சிந்தனை வீழ்ச்சியும் ,சிற்றின்ப ஆசையும் சுவன எதிர்பார்ப்புகளை ஏதோ ஏட்டுச் சுரக்காய் போல் ஆக்க ,முஸ்லீம் அழகுராணிப் போட்டி களிலும் இராகத்தோடு ஓதப்படும் வேதாந்தமாக போய் விட்டது இறை வேதம் .

ஓதுவோம் ,விளங்குவோம் , அதன் வழி நடப்போம் , அதன் பால் அழைப்போம் என கூறியவர்களும் ,சூழ்நிலைவாத சிட்டிவேசன் பேசி தாகூத்துக்கு ஆலோசகராகி பேய்க்கு பேன் பார்க்கப் போய் விட்டார்கள் .ஸுன்னாவை ஓரம்கட்டி குப்ரை தலை தடாவினால் இஸ்லாம் சுகப் பிரசவம் ஆகும் என்று ஆரூடம் கூறும் இந்த ஆலிம்களிடம் அலிப் ,பே கற்கச் செல்வதும் ஆபத்தானது தான் .

Oct 22, 2013

சமரசம் என்ற நச்சு விதை

முந்தைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கிடையே சமரசம்(Compromise) என்ற பிரயோகம் நடைமுறையில் இருக்கவில்லை. மேற்குலகிலிருந்தும் முதலாளித்துவ சித்தாந்தத்திலிருந்தும் உருவாகிய  “சமரசம் – وسطية” என்ற ஆபத்தான சிந்தனை காலனித்துவவாதிகளால் முஸ்லிம்களிடம் திட்டமிட்டு திணிக்கப்பட்டது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதகுருமார்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மத்தியில் நிலவிவந்த கருத்து முரண்பாடுகளை   போக்கும் விதமாக சமரச பேரத்தின் அடிப்படையில் உருவானதே வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிக்கும் மதச்சார்பின்மை(Secularism) கோட்பாடாகும். இந்த மதச்சார்பின்மை கோட்பாட்டை அகீதாவாக கொண்ட  முதலாளித்துவ  சித்தாந்தம்  இன்று முஸ்லிம் உலகையும்  ஆதிக்கம் செலுத்தி வருவதால் சமரச சிந்தனை சில முஸ்லிம்களை யும் ஆட்டிப்படைக்கிறது.
கிறிஸ்தவ தேவாலய மதகுருமார்களின்  உறுதுணையோடு மக்களை அடக்கியாண்ட அரசர்களுக்கும், “அறிவியல் ஆரய்ச்சியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ” என்ற மற்றொரு தரப்பினருக்குமிடையே நடைபெற்றுவந்த போராட்டங்களை தீர்க்க உருவான  தீர்வே இந்த ‘சமரசம் – وسطية’ என்ற எண்ணக்கருவாகும்.தேவாலய தரப்பானது கிறிஸ்தவம் வாழ்வின் எல்லா சிக்கல்களையும் தீர்க்கக்கூடியது என வாதிட்டது. அதே நேரம் சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்ட தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ளாததோடு, எல்லாவகையான பிற்போக்கு வாதங்களுக்கும், அடக்கு முறைகளுக்கும் கிறிஸ்தவமே காரணம் என்று  கூறிவந்தனர்.மனிதனுடைய சுய அறிவுத்திறன் மனிதகுலத்தை சிறந்த முறையில்  ஒழுங்குபடுத்துவதற்கும், அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்கவும் சக்திமிக்கது என்ற புதிய கருத்தை அவர்கள் கூறலானார்கள்.
நீண்டகால  மோதலுக்குப் பின்னர், மேற்கண்ட இரு சாராரும் தமது சிந்தனைகளை விட்டுக்கொடுக்க முன்வந்து சமரச கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு காண முயற்சித்தனர். இந்த சமரச முயற்சியின்போது மதமானது மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள  தொடர்பாக மட்டும் வரையறை செய்யப்பட்டது. அதாவது அந்த மதத்திற்கு அல்லது அதனது சட்டங்களுக்கு இந்த உலக வாழ்வின் விவகாரங்களில் எந்தவிதமான ஆதிக்கமும் இனிமேல் இருக்கலாகாது என்பதே இங்கு முக்கிய நிபந்தனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதன்காரணமாக வாழ்வியலிலிருந்து மதம் பிரிக்கப்பட்டு மதச்சார்பின்மை(secularism) என்ற சிந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்தகைய   சமரசத்தின் மூலம்  மனிதன் தனது சுய அறிவைக் கொண்டே சட்டதிட்டங்களை வகுக்க வேண்டும் என்ற  சிந்தனை மேலோங்க ஆரம்பித்தது.வாழ்வின் அனைத்து விவகாரங்களிலிருந்தும் மதத்தை  பிரிக்கும் மதச்சார்பின்மை கொள்கையை, முதலாளித்துவ சித்தாந்தத்தின்  அடிப்படை அகீதாவாக மேற்குலகு  ஏற்றுக்கொண்டது. அத்துடன் நின்றுவிடாமல் ஏனைய நாடுகளை காலனித்துவம் செய்வதன் ஊடாக முதலாளித்துவ கொள்கையை உலகில் வளர்ப்பதற்கு மேற்குலகு தயாரானது.
எனவே யாரெல்லாம் மேற்குலகின் முதலாளித்துவ கொள்கையை ஏற்றுக்கொண்டார்களோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களிடம் அனைத்து மட்டங்களிலும் ‘சமரசம்’ என்ற எண்ணக்கருவின் தாக்கம் காணப்படுகின்றது. அது அரசியல், சட்டம், சமூகவியல் என அனைத்து மட்டத்திலும் ஊடுருவியுள்ளது.ஃபாலஸ்தீன விவகாரம் இதற்கோர் நல்ல உதாரணமாகும். ஃபாலஸ்தீனம் முஸ்லிம்களின் நிலமாகும். ஆனால் பாலஸ்தீனை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த யூதர்களோ தமக்கு கடவுள் வாக்குறுதியளித்த புனித பூமியாக அதனை நோக்குகின்றனர். எனவே அந்த நிலமும் அதிலுள்ள அனைத்தும் தம்முடையது என அவர்கள் வாதாடுகிறார்கள்.மேற்குலக முதலாளித்துவ நாடுகள், 1947ம் ஆண்டில், முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையே ஃபாலஸ்தீனை பிரித்து வழங்குதல் என்ற  தீர்வை முன்வைத்தனர். இது இரு நாடுகளை ஃபாலஸ்தீனத்தில் உருவாக்கும் ஒரு சமரச தீர்வாகும். இதே போன்ற தீர்வு திட்டங்களை காஷ்மீர், போஸ்னியா, சைப்ரஸ் போன்ற பிராந்தியங்களுக்கான தீர்வாகவும் அநேகமான முதலாளித்துவ நாடுகள் முன்வைத்தன.
எனவே முதலாளித்துவ நாடுகளின் அரசியலானது மோசடிகளையும், வஞ்சகத்தையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. அவர்கள் சத்தியத்தை முழுமையாக அடைவதை இலக்காக கொள்வதில்லை. மாறாக அவர்கள் தமக்கு எது சாதகமானது என கருதுகிறார்களோ அதனை அடைவதையே முழு நோக்காக கொண்டுள்ளனர். பொதுவாக அனைத்து குழுவினர்களும் தங்களின் முழுமையான இலட்சியத்தை முதலாளித்துவ கட்டமைப்பின் மூலம் அடையமுடிவதில்லை. எனவே இத்தரப்புகள் சமரச பேரத்தின் மூலம்  உருவாகின்ற பொதுவான ஒரு தீர்வினையே ஏற்றுக்கொள்ள முன்வருகின்றனர்.எந்த தீர்வில் லாபம் இருக்கிறதோ  அல்லது எந்த தீர்வை சரியானதாக அவர்களின் மனோ இச்சை எற்றுகொள்கிறதோ, அவ்வாறான தீர்வை ஒப்புக்கொள்ள முன்வருகின்றனர்.
இத்தகைய சமரச தீர்வு என்பது சூழ்நிலைகள்  மற்றும்  தீர்வில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினரிடையே யார் பலமானவர் போன்ற காரணிகளை கருத்திற்கொண்டே எட்டப்படுகின்றது. இதன்மூலம்  பலமுள்ளவன்  தான் விரும்பியதை அடைவதோடு, பலவீனன் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாததையும் ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறான். இங்கு  பிரச்சினை என்னவென்றால் முஸ்லிம்களில் சிலர் ‘சமரசம்’ என்ற இத்தகைய ஆபத்தான கொள்கையையும், அதன் தவறுகளையும், பிழையான போக்கையும் விளங்காமல் அதை இஸ்லாத்தின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கு தலைப்பட்டுள்ளனர்.அவர்கள் இஸ்லாமும் இத்தகைய இயல்புகளின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் யதார்த்தவாதியாக இருங்கள் என்றும் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுக்கின்றனர். இஸ்லாத்தை நிலைநாட்டவே நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறிக்கொண்டே இத்தைகைய நச்சுக்கொள்கையை திணிக்க முற்படுகின்றனர்.
இத்தைகையவர்கள், இஸ்லாம் என்பது ஆன்மீகத்துக்கும், சடவாதத்திற்கும்(materialism) இடையிலும்; தனிப்பட்ட வாழ்க்கைக்கும், கூட்டுவாழ்வுக்கும் இடையிலும், யதார்த்த வாதத்ததிற்கும், இலட்சிய வாதத்திற்கும் இடையிலும், படிப்படியான மாற்றத்திற்கும், சடுதியான மாற்றத்திற்கும் இடையிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வியாக்கியானம் செய்கின்றனர்.எல்லாவற்றுக்கும் இரு தீவிர நிலைகளும், ஒரு நடுத்தர நிலையும் காணப்படுகிறது; நடுத்தரமான  நிலை எப்போதும் பாதுகாப்பான பாதை எனவும் கூறி இஸ்லாத்தில் இத்தகைய அடிப்படையை நிறுவுவதற்கு இந்த நவீன முஸ்லிம்கள் முயல்கின்றனர். இஸ்லாத்தில் காணப்படுகின்ற நடுத்தர பாதையும், ‘சமரசம்’ என்ற அணுகுமுறையும் ஒத்த இயல்பை கொண்டுள்ளதால், இஸ்லாமும் சமரசமும் ஒன்றோடொன்று முரண்பட்ட ஒன்றல்ல என்பதாகவும் தவறாக விளக்கமளிக்கிறார்கள். எனவே இஸ்லாம், நம்பிக்கைக்கும், வணக்க வழிபாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும், நற்பண்புகளுக்கும் மத்தியில் நடுநிலையான பாதையை வகுத்து தந்துள்ளது என்பதாக இவர்கள் அதிகமதிகம் பறைசாற்றுகிறார்கள். எனவே இவர்கள் தமது சொந்த அறிவைக்கொண்டு அல்லது தாம் யதார்த்தம் என கருதுவதைக்கொண்டு இஸ்லாத்தின் சட்டங்களை விளங்கிக்கொண்ட பின்புதான் ஷரீஅத்  என்ன சொல்கிறது என்று வினவுகின்றனர். தாம் ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்கு பொருத்தமாக ஏதேனும் மார்க்கச்சட்டங்கள் இருக்கின்றனவா அல்லது அந்த சட்டங்களை தமது கருத்துக்கேற்ப வளைக்கமுடியுமா எனவும் இவர்கள் ஆராய்கின்றனர்.
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا
இதே போன்று நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்         (அல்பகரா:143)”
என்ற வசனத்திற்கு கீழ்கண்டவாறு விளக்கமளிக்கின்றனர்.
முஸ்லிம் உம்மத்துடைய நடுநிலை என்பது, அதன் வழிமுறைகளிலும் செயலாக்க முறைமைகளிலும்(Systems) மிதமானபோக்கை பேணுவதாகும். இது கிறிஸ்தவர்கள் மார்க்கத்தில் காட்டிய பொடுபோக்குத் தன்மைக்கும், யூதர்கள் மார்க்கத்தில் காட்டிய தீவிரத்தன்மைக்கும் இடையில் ஒரு கோட்டை வரைவதற்கு ஒத்ததாகும் என்பதாகவும் நடுநிலையான சமூகம் என்பதற்கு விளக்கமளிக்கின்றனர்.
மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில் வருகின்ற ‘வஸத் وسط – ’ என்ற பதத்திற்கு ‘நீதி’ என்று விளக்கமளித்தாலும் கூட நீதி என்பதற்கு இரு முரண்பட்ட எல்லைகளுக்கு இடையில் காணப்படும் நடுநிலைமையே நீதி என்று கருதப்படவேண்டும் என்பதாக தவறான  விளக்கத்தை அளிக்கின்றனர். இதன்மூலம் நீதி அல்லது நடுநிலைமை என்பது முரண்பாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்ற சமரசக்கோட்பாட்டின் விளக்கத்தை தமது விளக்கமாக முன்வைக்கின்றனர்.
தஃப்ஸீர் அறிஞர்களின் விளக்கத்தின்படி இந்த வசனம்   இஸ்லாமிய சமுதாயமானது நீதி செலுத்துகின்ற சமுதாயம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது.  இஸ்லாத்தின் பார்வையில் நீதி செலுத்துவது என்பது சத்தியத்தை அல்லது இஸ்லாத்தை நிலைநிறுத்துவதாகும்.இந்த இஸ்லாமிய உம்மத்தானது இஸ்லாத்தை நிலைநாட்டுவதன் மூலம் மற்றைய சமுதாயங்களுகக்கிடையில் சத்தியத்திற்கு சான்று பகரும். இந்த வசனமானது  முஸ்லிம் உம்மத்திற்கு  கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு பண்பை சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்திருந்தாலும், முஸ்லிம் உம்மா  இஸ்லாத்தின் செய்தியை  மற்றைய சமுதாயங்களுக்கு எத்திவைக்கவேண்டும் என்றும் கட்டளையிடுகின்றது.. “அல்லாஹ்வின் தூதர் உங்கள் மீது சாட்சியாக இருக்கட்டும்” என அல்குர்ஆன் கூறுவதிலிருந்து எப்படி நபி صلى الله عليه وسلمஅவர்கள் இஸ்லாமிய உம்மத்திற்கு சத்தியத்தில் சான்று பகர்பவர்களாக அமைந்தார்களோ, அதேபோன்று இஸ்லாமிய உம்மத்தானது மற்றைய சமுதாயங்களுக்கு சான்று பகர்கின்ற உம்மத்தாக விளங்கவேண்டும் என்பதையும் அல்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதனையே நபி صلى الله عليه وسلمஅவர்கள் தனது இறுதிப்பேருரையில் “இங்கு வந்திருப்போர், வராதவர்களுக்கு எத்திவைப்பீர்களாக” என்று வலியுறுத்தினார்கள்.
இஸ்லாத்தைப்  பொறுத்தவரை நடுநிலைப்பாதை அல்லது சமரச தீர்வு என்ற கோட்பாடு கிடையாது. மனிதனைப் படைத்த அல்லாஹ் سبحانه وتعالىஅவனைப் பற்றி தீர்க்கமாக அறிந்தவன். அவன் மட்டுமே மனித வாழ்வின் விவகாரங்களை சரியாக வரையறை செய்யக்கூடியவன். இவ்விடயத்தினை வேறுயாரும் செய்யமுடியாது. மனிதகுலம் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் நடுநிலைப்பாதை அல்லது சமரச தீர்வு என்ற கொள்கை கிடையாது.மாறாக இஸ்லாத்தில் அல்லாஹ் سبحانه وتعالىவழங்கியிருக்கின்ற சட்டதிட்டங்கள், ஏவல் விலக்கல்கள் மட்டுமே காணப்படுகின்றது.
இவ்வரையறைகளைப்பற்றி அல்லாஹ் سبحانه وتعالىகூறுகிறான்:-
وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
 “இவை அல்லாஹ்வின்(சட்ட) வரம்புகளாகும்.அறிந்து கொள்ளும் சமூகத்தாருக்கு இவற்றை அவன் தெளிவு செய்கிறான்”.                                                                   (அல் பகரா: 230)
.மேலும் அல்லாஹ் سبحانه وتعالىகூறுகிறான்:-
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ
இன்னும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து அல்லாஹ் ஏற்படுத்திய) வரம்புகளை மீறிவிடுகிறாரோ அவரை அவன் நரகத்தில் புகுத்தி விடுவான். அதில் அவர்கள் நிரந்தரமாக(தங்கி) இருப்பார்கள்”.                                                                                          (அந்நிஸா:14)
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلمஅவர்களை  சிறிய தந்தையின் ஊடாக குறைஷித்தலைவர்கள் இஸ்லாத்திற்கு பகரமாக பணத்தையும், பதவியையும், அதிகாரத்தையும் காட்டி சமரசம் செய்யும்படி கோரியபோது இந்த நடுநிலைப்பாதை, சமரசத்தீர்வு என்பவை அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلمஅவர்களின் ஆளுமையான வார்த்தைகளில் எவ்வாறு அடிபட்டு போனது என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்.நபி صلى الله عليه وسلمஅவர்கள் அபுதாலிபின் வேண்டுகோளுக்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்.
 يَا عَمِّ وَاللَّهِ لَوْ وَضَعُوا الشَّمْسَ فِي يَمِينِي، وَالْقَمَرَ فِي يَسَارِي عَلَى أَنْ أَتْرُكَ هَذَا الْأَمْرَ حَتَّى يُظْهِرَهُ اللَّهُ، أَوْ أَهْلِكَ فِيهِ مَا تَرَكْتُهُ
என்னுடைய சிறிய தந்தையே ! அல்லாஹ்வின் மீது ஆணையாக ! எனது வலக்கரத்தில் சூரியனையும் இடக்கரத்தில் சந்திரனையும் வைத்து இந்த விஷயத்தை நான் விட்டுவிட வேண்டுமென்று அவர்கள் கூறினாலும், அல்லாஹ் எனக்கு  வெற்றியளிக்கும்வரை அல்லது இதன்பொருட்டு நான் கொல்லப்படும்வரை அதைவிட்டு நான் விலகமாட்டேன்.                (தபரீ)”
நபி صلى الله عليه وسلمஅவர்களிடம் பனீ ஆமிர் பின் ஸஃஸஆ கோத்திரத்தார், தமது உதவியை (நுஸ்ரா) உங்களுக்கு வழங்குகிறோம்; ஆனால் உங்களின் மரணத்திற்கு பின்னர் எங்களுக்கு தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும் என்று  வினவியபோது  அல்லாஹ்வின் தூதர்  صلى الله عليه وسلمஅவர்கள் “அதிகாரம் அல்லாஹ்வுக்குரியது; அவன் எவருக்கு அதை நாடுகின்றானோ அவருக்கு அதையளிப்பான்” என்று கூறி அவர்களின் உதவியைப்பெற மறுத்த விடயத்தில் சமரசத்தின் ஒரு பகுதியேனும் பொதிந்துள்ளது என்பதாக  எவராலும் கூறமுடியுமா?
ஆகவே மத்தியபாதை, சமரசம் போன்றவை  இஸ்லாத்திற்கு வெகுதூரமான ஓரு கோட்பாடாகும்.மேற்கத்திய நாடுகளும் அவர்களிடம் மண்டியிட்டு வாழும் முஸ்லிம்களில் சிலரும் நவீனத்துவம், விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை என்ற பெயரில் இஸ்லாத்தின் எல்லைக்குள் இந்த குஃப்ர் சிந்தனையை கொண்டுவர எத்தனிக்கின்றனர். இதனூடாக நேர்மையான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் தெளிவான வரையறைகளை பேணி வாழ்வதிலிருந்து வழிமாறி  செல்வதற்கு இவர்கள் எத்தனிக்கின்றனர் என்பதனை முஸ்லிம் உம்மா  அவதானத்துடன் புரிந்து கொள்ள வேண்டும்.

Oct 21, 2013

ஹோம்ஸை அதிரவைக்கும் இன்னொரு அணி !!


ரஷ்ய அரசு பஸர் அல்-அஸாதின் சிரிய இராணுவ அரசிற்கு அரசியல் ரீதியான ஆதரவை மட்டும் நல்கவில்லை. ஆயுத தளவாட உதவிகள், வெடிபொருட்கள், போரியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள், சிக்னல் தொழில்நுட்ப உதவிகள் என பல தரப்பட்ட உதவிகளை வழங்கி வருகிறது. போதாக்குறைக்கு ரஷ்ய இராணுவ வீரர்களையும் சில களமுனைகளிற்கு சிரிய இராணுவ சீருடையில் நகர்த்தியுள்ளது. சிரிய படையினருடன் தோளோடு தோள் சேர்ந்து ரஷ்ய தாக்குதல் அணியினரும் சண்டையிட்டு வருகின்றனர்.

ஹோம்ஸ் மாகாணத்தின் புறநகர் பகுதிகளிலும் குறிப்பாக Sakhnah பகுதியில் சிரிய சமர்க்களத்தில் சண்டையிடும் அணியான ஜெய்ஸுல் இஸ்லாம் குழுவினர் சிரிய வாகன தொடரணியை வழிமறித்து தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் பல ரஷ்ய படையினரும் பலியாகியுள்ளனர். இதில் 03 அதிகாரிகள் காயங்களிற்கு உட்பட்டுமுள்ளனர்.

Jaisyul இஸ்லாமி அணியினர் ஹோம்ஸினை தளமாக கொண்டு பல தாக்குதல்களை தொடராக முன்னெடுத்து வருகின்றனர். சிரிய அரசு படைகளுடன் கடந்த தினங்களில் நடைபெற்ற சண்டைகளில் இரு தரப்பிலும் பாரிய உயிர்ச்தேதங்கள் ஏற்பட்டிருந்தன. “இன்லேன்ட் லிபரேஷன் வோர்” என்றே ஜய்ஸுல் இஸ்லாமி அணியினர் தங்கள் நடவடிக்கைகளை பெயர் குறிப்பிடுகின்றனர். ஹிஸ்புல்லாக்களை போல அதி நவீன தொடர்பாடல் வசதிகள், நவீனரக ஆயுதங்கள் சகிதம் இவர்கள் களமிறங்கியுள்ளனர். பல பயிற்றப்பட்ட போராளிகள் இவர்கள் அணியில் இருப்பது விஷேட அம்சமாகும். செச்னிய போராளிகள் பலரும் இந்த அமைப்பில் இணைந்து போராடுகின்றனர். ஜபாஃ அல் நுஸ்ராவின் ஒரு கிளை அமைப்பாகவே இதுவரை இவர்கள் கணிப்பிடப்பட்டுள்ளனர்.

ஓமர் முக்தாரின் போராட்டமும் ஈழப் போராட்டமும் ஒரு ஒப்பீடு ....


ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து (PART 09)

“ஓமர் முக்தார்” முசோலினியின் ஃபாசிச காலனியாதிக்க வெறியில் சீரழிந்த லிபியா நாட்டின் ‘முஸ்லீம் ’ போராளிதான் ஓமர் முக்தார். ஓமர் சுமார் 20 ஆண்டுகள் இத்தாலிய ஆதிக்க வெறியைச் சமாளித்து எதிர்த்து நின்று, 1931ல் ஒரு போரில் காயம்பட்டு, இத்தாலிய ராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, பழி சுமத்தப்பட்டு அவரது மக்களுக்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்.

வியட்நாம் போரில் அமெரிக்கா உணர்ந்தது போல் இங்கு பெரும்படை கொண்ட இத்தாலி அரசு, சிறு கூட்டமாய் இருப்பினும் சொந்த மண்ணை விட்டுக்கொடுக்கக் கூடாதென்ற உணர்வில் உந்தப்பட்ட போராளிகளின் கொரில்லாப் போர்முறையைச் சமாளிக்க முடியாமல் திணறியது முசோலினியின் பாசிச இராணுவம் .

ஓமரின் புத்திசாலித்தனம், வீரம், நாட்டின் நிலப்பரப்பு பற்றிய தேர்ந்த அறிவு ஆகியவற்றின்முன் இத்தாலியின் மிகப்பெரிய ராணுவமும் நவீனத் தளவாடங்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை . அதனால் ஒவ்வொரு முறை அடிவாங்கும்போதும் லிபிய மக்களை அநியாயமாகச் சித்திரவதை செய்து வெறியைத் தணித்துக்கொள்கின்றனர் ஜெனரல் க்ரேசியானி தலைமையிலான இத்தாலியினர்.

அதுமட்டுமன்றி அப்பாவி மக்களைக் கூட்டம் கூட்டமாக அகதி முகாம்களென்ற பெயரில் சிறைப்படுத்தித் துன்புறுத்துகின்றனர். அதில் பெரும்பகுதி மக்கள் இறக்கின்றனர். ஓமர் தூக்கிலிடப்பட்டாலும் அம்மக்கள் தொடர்ந்தும் போராடினார்கள் . விடுதலை பற்றிய அவர்களது தெரிவு நவகாலனித்துவ மனித அடிமைத்துவத்தின் மறுபிரவேசம் என்பது புரியாமல் அம்மக்கள் இருந்தார்கள் என்பது இஸ்லாத்தை முன்னிறுத்தி ஆராயும் போது 'ஹைலைட்டாகும் ' முக்கிய விடயம் .

மன்னர் முறை முடியாட்சி மமதைகளுக்கு பின்னாலும் , முஸ்தபா கமால் அதாதூர்கின் துருப்பிடித்த தேசிய நஞ்சுக் கோட்பாட்டின் பின்னாலும் உடைந்து அணிதிரண்ட இஸ்லாமிய உம்மத்தின் தவறான நடத்தையின் பொதுப் போக்கிலே ஒமர் முக்தாரின் விடுதலைப் போர் உள்ளடங்கி விடுவதை 1981 களில் திரைப்படமாக அந்த வரலாறு பார்க்கக் கிடைத்த போது என்னாலும் உணர முடியாதிருந்தது .

கொடிய இனவாத யுத்தம் சூடு பிடித்த ஆரம்பப் பொழுதுகளில் தான் இந்த ஓமர் முக்தார் விடுதலைப் போரின் உதாரண வீரனாக வடபுல யாழ்ப்பாணத்தில் அறிமுகமானார் .சிந்தனை வீழ்ச்சியின் உச்சத்திலும் எஞ்சி நின்ற மார்க்கத்தின் எச்சங்களிலும் நின்று பார்க்கும் போது சுதந்திரம் தொடர்பாகவும் , ஜிஹாத் தொடர்பாகவும் தவறான வரைவிலக்கணம் அன்று எனக்குள் பதிந்ததும் தவிர்க்க முடியாதது.

இருந்தும் அன்று எனக்குத் தெரிந்த வகையில் ஈழப் போராட்டத்தோடு ,லிபிய சுதந்திரப் போரை ஒப்பிட்ட போது ஒரு அதீத தூய்மை இழப்பை ஈழ விடுதலைப் பாதை அடைந்திருப்பதை அன்றே கணித்தேன் . கல்வியங்காட்டில் TELO வின் சிறீ சபாரத்தினம் சுடப்பட்டு 'டயர்' போடப்பட்டபோதும் , PLOT மென்டிஸ் கொடூரமாக சிறைப் படுகொலை செய்யப்பட்ட போதும் சில முடிவுகளை என் உள்மனது எடுத்துக் கொண்டது .

அதுவரை ஜெனரல் கிரசியாணியாக தெரிந்த லலித் அத்துலத் முதலி விடுதலைப் புலிகளின் கிட்டு வாக மாறிப்போக , முசோலினி போல் தெரிந்த ஜே .ஆர் .ஜெயவர்தன ,வேலுப்பிள்ளை பிரபாகரனாக மாறிப்போனார் . ஆதிக்க வெறி என்பதன் அப்பட்ட வடிவங்களாக இவர்கள் இருந்தாலும் தமிழர்களால் இன்றும் ஒரு உயர்ந்த அந்தஸ்தில் வைத்து இவர்கள் பார்க்கப் படுவது ஆச்சரியமானது .

குறைந்தளவு போராளிகள் , பலம் வாய்ந்த எதிரி மக்கள் இழப்பை தவிர்க்க சண்டைக் களங்களை மக்கள் இல்லாத பாலைவனங்களையும் , மலைப்பாங்கான பகுதிகளையும் நோக்கி இழுத்துச் சென்ற ஓமர் முக்தாரின் போரியல் யுக்தி என்பவற்றுக்கு முன்னால் விடுதலைப் புலிகள் செய்த சமர்கள் ,தாக்குதல்கள் ஒரு பாரிய தவறை கொண்டியங்கியதை என்னால் காணக்கூடியதாக இருந்தது .

மக்களே புலிகள் ,புலிகளே மக்கள் ! என்ற பார்வையின் கீழ் 'பொசிசன்' எடுத்து பதுங்கித் தாக்கும் ஒரு 'டூல் ' ஆக தமிழர்கள் மாறிப்போக ,மறுபக்கம் சிவிலியன் என்ற கரிசனை இல்லாத இலங்கை இராணுவம் தாக்குதல்களை தொடுத்தது ! 'இழப்புகள் எமக்கு புதியவை அல்ல ' என்ற வீர வசனத்தோடு பிணக் குவியல்கள் வீடியோ நாடாக்களாக நிதி சேகரிப்புக்காக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செயப்பட்டது .முல்லியவலையின் இறுதிச் சமர்வரை வேலுப்பிள்ளை பிரபாகரனின் யுத்த பிரபுத்துவம் மரணத்தின் பின்னும் இன்றுவரை சாதித்த ஒரே சரித்திரம் இதுதானாகும்.

ஓமர் முக்தாரின் ஒரே பார்வை தனது போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும் . ஜெனரல் கிரசியாணி போராளிகளை ஒரு திசையை நோக்கி தாக்குதல் வியூகத்தில் விரட்டிச்சென்ற போது கூட அவருக்கு இரண்டு முடிவுகள் இருந்தன. 1. துனீசியா ,அல்ஜீரியா ,எகிப்து போன்ற பகுதிகளை நோக்கி தப்பிச் செல்வது .2. சாகும் வரை சண்டையிடுவது . இதில் இரண்டாவது முடிவிலேயே ஓமர் முக்தார் இருந்தார் . ஏறத்தாழ 2000 போராளிகளை பறிகொடுத்தாலும் இத்தாலிய அதிகாரம் அற்ற லிபியாவை நோக்கி மக்கள் நகர வேண்டும் என்பதே அவரது கனவு ஆகும் . அவரது தன் தளபதிகளுக்கான இறுதிக் கட்டளையும் இதுவாகத்தான் இருந்தது .

கொல்லப்படும்வரை தாக்குதல் என்ற முடிவோடு கால்களை கட்டியவர்களாக வெறுமையான பாலை நிலத்தில் இத்தாலிய டாங்கிகளுக்கு முன் வெறும் 'ரைபிள்களோடு 'சண்டையிட்ட காரணமும் இதுதான் . போராளிகள் மரணிக்கலாம் போராட்டம் மரணிக்கக் கூடாது . அந்த வகையில் ஓமர் முக்தார் தூக்கில் இடப்பட்டதும் அவரது கனவு நிதர்சனமானது . ஈழ விடுதலைப் போரில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுதான் மிச்சம் .

“லஷ்கர்-ஏ-தொய்பா” - பற்றிய அமெரிக்க இந்திய எச்சரிக்கைகளின் அடிப்படைகள் என்ன?




by: Salahudeen Iyoobi

“லஷ்கர் ஏ-தொய்பா“. இந்த உருது மொழியின் தமிழ் மூலம் என்ன தெரியுமா?, “இறைவனின் இராணுவம்”. இந்திய கட்டுபாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை இராணுவ மற்றும் அங்குள்ள மக்கள் வலுவை கொண்டு பிரித்து ஆஸாத் காஷ்மீருடன் இணைத்து அதனை பாகிஸ்தானிடம் தாரை வார்க்கும் புரொக்ஜெட்டின் பெயர் என்றும் சொல்லலாம். காஷ்மீரின் பள்ளத்தாக்கு கிராமமான சிட்டிசிங்புரா தாக்குதலில் ஆரம்பித்து இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வரை அது தன்னை தெளிவாகவே இந்தியாவிற்கு அடையாளப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 12 காஷ்மீரிய இளைஞர்களை பயிற்றுவித்ததில் ஆரம்பமான அதன் இராணுவ பலம் இன்று “ஆசியாவின் ஹிஸ்புல்லாஹ்” என குறிப்பிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஏனைய காஷ்மீரிய விடுதலை அமைப்புக்கள் போலல்லாது இது நீண்டகால திட்டமிடல்களுடனும் இஸ்லாமிய சாம்ராஜ்ய கனவுகளுடனும் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது. ஆப்கானில் உள்ள தலிபான்களுடனும் அல்-காயிதாவுடனும் நேரடி உறவுகளை கொண்ட அமைப்பு.

இங்கே நாம் லஷ்கரின் வராலாறு பற்றியோ அதன் காஷ்மீரிய செயற்பாடுகள் பற்றியோ குறிப்பிடுவதல்ல நோக்கம். லஷ்கரிற்கு இரண்டு கொள்கைள் உள்ளன.

காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி ஆஸாத் காஷ்மீருடன் இணைந்த காஷ்மீர் மாநிலத்தை (தனி நாட்டையல்ல) உருவாக்கி அதனை பாகிஸ்தானின் ஐந்தாவது மாகாணமாக இணைப்பது. (இதற்கு பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.யின் பரிபூரண உதவிகள் இவர்களிற்கு உண்டு)

உலகில் குறிப்பாக ஆசியா கண்டத்தில் உள்ள முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துவதும் அதற்கான பதில் நடவடிக்கைகளை உருவாக்குவதும். (இதற்கு அல்-காயிதா போன்ற பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் பரிபூரண உதவிகள் இவர்களிற்கு உண்டு)இவர்களது இரண்டாவது கோட்பாடே அமெரிக்கா, மேற்குலகு, முஸ்லிம்களை நசுக்க விரும்பும் தேசங்கள் போன்றவற்றிற்கு பிரச்சனைக்குரிய விடயமாக உள்ளது.

லஷ்கர்-ஏ-தொய்பா தனது எல்லைகளிற்கு அப்பால் உள்ள தேசங்களில் முஸ்லிம் ஆயுத போராட்ட அமைப்புக்களை உருவாக்குவதில் பல வெற்றிகளை கண்டுள்ளது. அங்குள்ள இளைஞர்களிற்கு பயிற்ச்சியளித்தல், அவர்களிற்கான நேரடி களப்பயிற்ச்சிகளிற்கான பிரயாணங்களை ஒழுங்கு செய்தல், அவர்களது நேரடி களப்பயிற்ச்சிகள் முடிந்த பின்னர் அவர்களை அவர்களது தாயகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தல், அவர்களிற்கான ஆயுத விநியோகங்களிற்கான ஒழுங்குகளை செய்தல் போன்ற ஒரு போராட்டத்தின் பல மிக முக்கியமான தயாரிப்புக்களை செய்து கொடுக்கும் ஸ்பொன்சராக செயற்படுகிறது.

தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரோகீங்கியா, தாய்லாந்து, மிண்டானோ, ஷின்ஷியாங், டுபாய் என அது தனது செயற்களங்களை விரிவாக்கி வருகிறது. பம்பாய், குஜாராத், மற்றும் கேரள மாநிலம் போன்றவற்றிலும் அவர்களின் நிழல் செயற்பாடுகள் உள்ளன.

நேரடியாக போராளிகளிற்கிடையிலான தொடர்பாடல்கள், உறவுகள், இணைந்த செயற்பாடுகள் என்பவற்றிற்கும் அப்பால் சர்வதேச முஸ்லிம் வர்த்தக மாபியாக்களுடனும் இவர்களிற்கு தொடர்புகள் உள்ளன. இந்த நெட்வோர்க் தடுத்து நிறுத்த முடியாத சிவில் பிரச்சனைகாகவே இன்றும் உள்ளது.

இலங்கையில் லஷ்கர்-ஏ-தொய்பா செயற்படுகிறது என முதலில் அமெரிக்கா சொன்னது. பின்னர் இந்தியா சொன்னது. இப்போது இலங்கை அது பற்றி கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதன் செயற்பாடுகள் உள்ளன என்பது எக்ஸ்ட்ரா மெசேஜ். இந்த தகவலின் உண்மைகள் பற்றிய அடிப்படைகள் ஆராயப்படல் வேண்டும்.

விஞ்ஞான தகவல் தொழில் நுட்ப தொழிற்பாட்டின் மகோன்னத வளற்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் உலகம் ஒரு கிராமமாகி விட்டது என்கிறார்கள். அது பொருளாதாரம், வர்த்தகம், சமூக கலாச்சார உறவுகள், விஞ்ஞான பரிமாற்றங்கள் என்ற எல்லைகளிற்கு மட்டும் பொருந்தும் என்பது போல் அவர்கள் கருத்துக்கள் உள்ளன. இதே தகவல் தொழில் நுட்ப மற்றும் தொடர்பாடல் வளற்ச்சி என்பது இராணுவம், தீவிரவா அமைப்புக்கள், பயங்கரவாத இயக்கங்கள், மதஅடிப்படைவாத மையங்கள், விடுதலை போராட்ட அமைப்புக்கள், சுதந்திர போராளிகளின் குழுக்கள், புரட்சியாளர்கள் தளங்கள், பாசிஸ சக்திகள், நவ நாசிஸ்ட்கள் என எல்லோருக்குமே பொருந்தும்.

இதனடிப்படையில் யாருக்கும் உலகில் எந்த மூளையிலும் இரகசிய தொடர்புகள் செயற்பாடுகள் இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை. அதே வேளை இலங்கையின் கிழக்கு பிரதேசத்தில் லஷ்கர் என்பது அடிப்படைகள் அற்ற ஊகம் என்பதற்கான வாய்ப்புக்களே நிறைய உள்ளன.

தமிழ் நாட்டில் பி.ஜே.பி.யின் செயற்களத்தின் வாசல்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழ் நாட்டு முஸ்லிம்களிற்கான சமூக பாதுகாப்பு என்பதற்கான களத்தின் வாயில்களும் திறக்கப்படவேயிருக்கின்றன. அதன் திறப்பு லஷ்கராக இருக்க வாய்ப்புக்கள் நிறையவேயுள்ளன. விடயம் என்னவென்றால் லஷ்கர்-ஏ-தொய்பாவிற்கு தமிழ் நாட்டில் இயங்கு தளமமைத்து செயற்படுவது சற்று சிரமமானது. தமிழ் நாட்டு முஸ்லிம்களிற்கு போராட்டவியல் என்றால் என்ன என்றே தெரியாது.

அந்த நிலையில் லஷ்கரின் செயற்பாடுகள் அவர்களை மக்கள் மத்தியில் அந்நியப்படுத்தி விடும். இந்திய உளவமைப்பான றோ இலகுவாகவே இவர்களை மோப்பம் பிடித்தும் விடும். புலிப்பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை முஸ்லிகள் தங்கள் உயிர்வாழ்தல் என்ற இருப்பிற்கான போராட்டவியலில் நிறையவே பரீட்சையமானவர்கள். தமிழ் நாட்டு களத்திற்கான தளமாக கிழக்கிலங்கையை லஷ்கர் இலக்கு வைக்கிறதா என்ற கேள்வி இதிலிருந்தே பிறக்கிறது. இது இந்திய நியாயம் சார் அச்சங்கள்..

அமெரிக்கா இலங்கையில் லஷ்கர் பற்றி பிரஸ்தாபிப்பது பற்றி நோக்கின்,.. அல்-காயிதா போன்ற சர்வதேச வலைப்பின்னல் கொண்ட ஜிஹாதிய அமைப்புக்களுடன் தொடர்புடைய எந்த அமைப்பையும் அமெரிக்கா ஏற்றுகொள்ளாது. இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. தெற்காசியாவில் கிறிஸ்தவ தேசம் கிடையாது. பிலப்பைன்ஸ், கிழக்கு திமோரை தவிர. தமிழ் ஈழம் என்ற தேசத்தை உருவாக்கி அதனை கிறிஸ்தவ தேசமாக மாற்றும் பிராந்திய கனவுகளிற்கு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இடையூறான இருப்பை இல்லாமல் பண்ணும் வில்லங்கமான திட்டமாகவும் இது இருக்கலாம்.

பொது பல சேனா போன்ற பௌத்த அடிப்படைவாத மதவாத அமைப்புக்களின் நெருக்கடிகள் இலங்கை அரசிற்கு உள்ளன. பௌத்த மதவாத சக்திகளை சரிநிகர்சமானமாக முகங்கொள்ளும் இஸ்லாமிய அமைப்புக்களை லஷ்கர் என்ற முத்திரையை குத்துவதன் ஊடாக ஊற்றி மூடிவிடாலம். அதற்கு கிழக்கிலங்கை லஷ்கர் பூச்சாண்டி பெரிதும் உதவும்.

பொது பல சேனாவின் அடாவடித்தனங்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஹர்த்தால் தெற்கிலங்கையில் தோற்றுப்போன போது அது கிழக்கிலங்கையில் வெற்றியளித்தமை இனவாத சக்திகளிற்கு கிழக்கு முஸ்லிம்களை முடக்க வேண்டும் என்ற தேவையை ஏற்படுத்தியிருந்தது. லஷ்கர் சாயம் பூசுவதன் ஊடாக அதை இலகுவாக அவர்கள் நிறைவேற்றி விடலாம் அவ்வளவுதான் .

சர்வதேச அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணி ஸ்டைலில் இந்த மேட்டரை முடித்து கொள்கிறோம்.

source :- கைபர் தளம்

ஒரு சராசரி பாமர யாழ் முஸ்லிமின் குறிப்பிடத்தக்க வீரம் !



ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லீம்களின் நினைவுகளில் இருந்து ....(PART 08)

கடந்த 12 அக்டோபர் 2013 அன்று நிஸ்தார் அஹமட் என்பவர் இறைவனடி சேர்ந்தார் ,நீர்கொழும்பை பிறப்பிடமாகவும் ,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் வாழ்ந்திருந்த இவர் 1990 களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முஸ்லீம் இனத்துடைப்பு எனும் கேவல அரசியலை செய்வதற்கு சற்று சில நாட்களுக்கு முன் 10 பிள்ளைகளுடன் கூடிய தன் குடும்ப சகிதம் இலங்கையின் தென்பகுதிக்கு புலம் பெயர்ந்தவர் .

இனவாத யுத்தத்தின் அருவருப்பான சின்னங்களில் ஒன்றான அகதி முத்திரை இவர் குடும்பத்துக்கும் கிடைத்தது .நிவாரணம் , உணவு முத்திரை ,அரைவயிற்று சோறு எனும் கசப்பான அனுபவங்களை இவர் குடும்பமும் தாராளமாகவே அனுபவித்தது .அர்த்தமற்ற ஒரு ஆயுதக் கலாசாரத்தின் விளைவு வட்டத்தில் இவர் குடும்பமும் மறுக்க முடியாத ஒரு அங்கமாகியது .

ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு மேல் வடபுல யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருந்த இவர் நெல்லியடி , குருநகர் , சோனகதெரு போன்ற பகுதிகளில் வாழ்ந்திருந்த பழுத்த அனுபவசாலி .கொடிய இனவாத யுத்தத்தின் மோசமான விளைவுகளை இவரும் ,இவர் குடும்பமும் சந்தித்திருந்த போதிலும் வடபுல யாழ்ப்பாணத்தோடு ஓர் இனம் புரியாத பற்றிருந்த காரணத்தினால் யுத்தம் சூடு பிடிக்க ஆரம்பித்தும் இறுதிவரை புலம் பெயராமல் இருந்தார் .

1990 களில் இரண்டாம் கட்ட நாசகாரம் ஈழ விடுதலை என்ற பெயரில் விடுதலைப் புலிகளால் பிரகடனப் படுத்தப் பட்டபோது ,இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்கு இவரது வீடும் இலக்கானது. இதன் பின்னரே புலம் பெயரும் முடிவை எடுத்தார் .

தொழுகையை விடாப்பிடியாகவும் , இமாம் ஜமாத்துடனும் நிறைவேற்றும் இவரிடம் ,இவருக்கு புரிந்த விபரங்களின் அடிப்படையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகவே குறைகாண்பார் .அத்தோடு தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களுடன் இணைந்திருந்த முஸ்லீம் இளைஞ்சர்களை கண்டு அர்த்தமற்ற அந்த முயற்சியை கைவிட்டு விடும்படி பணிப்பார் .அத்தோடு பல அந்நிய மனிதர்களை இஸ்லாத்தை தழுவ வைத்த உதாரணமும் இவருக்கு உண்டு .

இவர் PLOT இயக்கத்தை சேர்ந்த நிலந்தன் என்று அழைக்கப்பட்ட 'இக்பாலின் ' தாய் மாமன் . மேலும் விடுதலைப் புலிகளின் கப்டன் பாரூக் என அழைக்கப் பட்ட 'ஹனீபா ' எனும் அக்கரைப்பற்று இளைஞன் வரை அக்காலத்தில் இவரோடு பரிச்சயமானவர்கள் .இந்த இருவரது மரணங்களிலும் தனக்கு சந்தேகம் இருப்பதாக இவர் அடிக்கடி கூறுவார் . அத்தோடு யாழ்ப்பாணத்தில் EROS இயக்கத்தில் இருந்தவரும் ,பின்னர் இலங்கை இராணுவத்தின் 'கஜபா ரெஜிமென்டில்' இருந்து மர்மமான முறையில் மரணத்தை தழுவிய சித்தீக் இவரது கடையில் சிறு வயதில் இருந்தே பணியாற்றியுள்ளார் .

ஒருமுறை ஆயுதக் கொள்வனவுக்காக நிதி சேகரிப்பு நடவடிக்கை ஒன்று தொடர்பாக பாரூக் சோனக தெரு மக்களிடம் வந்த சந்தர்ப்பத்தில் இவர் பாரூக்கை தனியே அழைத்து "இது வீண் வேலை இது இஸ்லாமிய போராட்டம் அல்ல " என கூற மௌனமாக தலையை குனிந்தவாறு கேட்டுவிட்டு சென்றுள்ளான் பாரூக் .(பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளோடு இணையச் சென்ற முஸ்லீம்களை நோக்கி பாரூக் இது இஸ்லாமிய போராட்டம் அல்ல நீங்கள் இதில் இணைய வேண்டாம் என இரகசியமாக புத்திமதி கூறியதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும் .)

அன்று விடுதலைப் புலிகளின் வட பிராந்திய தளபதியாக இருந்த கிட்டு வின் கட்டளையின் பிரகாரம் ஜெலீல் மாஸ்டரையும் , வெள்ளையனையும் மண்டையில் போட்டது (படுகொலை செய்தது ) இந்த பாரூக் தான் என்றவகையில் மிகக் கடுமையான விமர்சனம் இவருக்குண்டு .

ஆழ்ந்த படிப்பறிவோ ,மிகத் தெளிவான மார்க்க அறிவோ இல்லாத நிலையிலும் இரத்த வெறிபிடித்த இனவாத யுத்தத்தையும் அதன் கொடூரத்தையும் பாமர முஸ்லிமாக இருந்து இந்த நிஸ்தார் அஹமட் புரிந்திருந்தது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது .ஒரு சாதாரண ரொட்டிக்கடை முதலாளிக்கு ஈழப் போராட்டத்தில் இருந்த இத்தகு சராசரிப் பார்வை தட்டிக் கழித்து விட முடியாதது .

1987 அக்டோபர் மாதம் விடுதலைப் புலிகள் (IPKF) இந்திய அமைதிகாக்கும் படையுடன் தமது சண்டையை தொடங்கினர் .ஏறத்தாழ சிவிலியன்கள் புலிகள் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி ஏதோ பாகிஸ்தான் போடர் போல நினைத்து இந்திய அமைதிப் படை அட்டகாசமாக முன்னேறிக் கொண்டிருந்தது .
புதிய சோனக தெரு என அழைக்கப் பட்ட பொம்மை வெளிப் பகுதியில் கண்ணிவெடிகளைப் புதைத்து காத்திருந்தது ஒரு புலிகளின் அணி . வழமை போலவே அதிகாலை சுபஹுத் தொழுகைக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற இந்த நிஸ்தார் அஹமட் ஒரு துணிகரமான வேலையை செய்துள்ளார் . அது என்ன ?

குறித்த தாக்குதல் இடம்பெற்றாலும் இந்தியர்களின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது .ஆனால் அந்த சேதத்தின் மூலம் வெளியாகும் பழிவாங்கும் கோப உணர்வு அப்பகுதியில் வாழும் முஸ்லீம்கள் மீது காட்டப் பட்டால் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என முடிவெடுத்தார்.

தனது மருமகன்களில் ஒருவரை அழைத்துக் கொண்டு கண்ணிவெடி புதைக்கப் பட்டுள்ள பகுதிக்கு விடியாத அந்த நேரத்தில் சென்று வயர்களை அறுத்து சுற்றி எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் பழைய பொருட்கள் போடும் அறைக்குள் போட்டு விட்டார் .

விடுதலைப் புலிகளால் நிலைமை புரியப்பட்டது நன்றாக விடிந்த பின்னர்தான் ஆகும் .அவர்கள் கோபத்தோடும் ஆவேசத்தோடும் யார் இதை செய்தது !? எனத் தேடியபோது சம்பந்தமே இல்லாதவர் போல் அங்கிருந்தார் .பின் அவரது வீட்டில் துணி உலர்த்தும் கொடி கட்டப் பட்டது இந்த வயர்களை வைத்தே என நகைச்சுவையாக கூறுவார் இந்த நிஸ்தார் அஹமட் !இத்தகு ஒரு சராசரி பாமர யாழ் முஸ்லிமின் தைரியம் நிச்சயமாக நினைவு கூறப்படவேண்டியதே .

சிந்தனை வீழ்ச்சியில் உதித்த ஆபத்தான ஆலிம்கள் !

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லீம்களின் நினைவுகளில் இருந்து ....(PART 07)


வரலாறு தனது பதிவில் சில மனிதர்களை பற்றி காணாமல் சென்றுவிடும் அவர்கள் செய்த சில செயல்களை அறியக்கிடைக்கும் போது அதிர்ச்சியோடு சேர்ந்த ஆச்சரியம் எமக்கு ஏற்படுவதுண்டு . இலங்கையின் வடபுல யாழ்ப்பாண முஸ்லீம்களின் வரலாற்றிலும் இத்தகு மனிதர்கள் நிறையவே இருக்கின்றார்கள் .அதில் பலர் அல்லாஹ்வை சந்திக்க சென்று விட்டார்கள் . இன்னும் சிலர் அறியப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

1990 அக்டோபர் நாட்களில் விடுதலைப் புலிகளால் பலாத்கார இனத்துடைப்பாக முஸ்லீம்கள் விரட்டப் பட்டதற்கு முன்னர் ,இனவாத யுத்தத்தில் முஸ்லீம் உம்மத் ஒரு கொடூரத்தையும் ,அசிங்கத்தையும் கண்டது .ஆயுதக் கவர்ச்சியிலும் , சூழ்நிலை வாதத்திலும் கட்டுண்டு அதன் பக்கம் இழுபட்டுச் செல்லும் முஸ்லீம் இளைஞ்சர்கள் தொடர்பில் கவலை கொண்டது .

முஸ்லீம் உம்மத்தின் சமூக செல்வாக்கு மிக்க நபர்கள் இந்த விடயம் பற்றி தமக்கு தெரிந்த வகையில் ஆழமாக அன்று சிந்தித்தார்கள். அந்த வகையில் அமைப்பு ரீதியான ஒரு கட்டமைப்பு வடிவத்தை கொடுப்பது தவிர வேறு வழி அவர்களுக்கு தெரியவில்லை .அஹிம்சையை 'வெபனுக்கு' சிங்கர் ஆயில் போட்டு' ரீபிரஷ்' பண்ணவே பாவிக்கும் போராட்டமாகவே கருதும் விடுதலைப் புலிகள் போன்ற கொடூரிகளுக்கு மத்தியில் இந்த முடிவைத் தவிர வேறு வழி தெரியவில்லை .

முஸ்லீம்களின் தனித்துவம் , அடையாளப்படுத்தல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவே இந்த 'இளைஞ்சர் அமைப்பாகும் ' தவிர ஈழப் போராட்டத்தின் பெயரில் கொலைகாரக் கொள்ளையர்களாக வலம்வரும் ஆயுத தாரிகளுக்கு எதிராகவோ , அல்லது இனத் துவேசத்தின் தெளிவான வடிவமாக வலம்வரும் சிங்கள அரச பயங்கர வாதத்துக்கு எதிராகவோ முஸ்லீம்கள் இத்தகு அமைப்பை ஏற்படுத்தவில்லை .

ஏதோ ஒரு வகையில் இந்த இளைஞ்சர் அமைப்பில் கட்டுண்டு போக இருந்த இளைஞ்சர்களை காட்டிக் கொடுக்கவும் இஸ்லாத்தின் பெயரோடு கோடரிக் காம்புகள் முளைத்தன , சந்தர்ப்ப சம்பவங்கள் சிலதும் நடந்தன ,சமூகம் சகோதரத்துவத்தை விலைபேசி சாத்தானிய அதிகாரத்தை தம்மீது திணித்துக் கொள்ள தயாரானது , தப்லீக் ஜமாஅத் ,ஜமாஅதேஇஸ்லாமி மோதல் என்ற அசிங்கமான 'பிரேம் வேக்' விடுதலைப் புலிகளை நரி முகத்தோடு முஸ்லீம் உம்மத்துக்கு தீர்ப்பு சொல்ல இழுத்து வந்தது .

சமூகப் பற்று மிக்க ஒரு சிறந்த மனிதரான ஜெலீல் மாஸ்டர் மற்றும் , 'வெள்ளை'என்று அழைக்கப்படும் இளைஞ்சனை சுட்டுக் கொன்றதோடு விடுதலைப் புலிகளின் official நடவடிக்கைகள் யாழ் முஸ்லீம் உம்மத்தினுள் பிரவேசிக்கின்றது .'ஹாக்கீமியத்தை பேசி இகாமதுத் தீனை தனது முடிவாக கூறியவர் புலிகள் எனும் ஒரு கொடிய 'தாகூத்தை ' காக்கா' பிடித்து தனது ஆதிக்க வெறிக்கு 'டிபென்ஸ் லைன் ' போட்டது இங்கு குறிப்பிட்டு கூறத்தக்கது .

இறுதியாக யாழ் முஸ்லீம்கள் விரட்டப் படுவதற்கு முன்னர் சமூக செல்வாக்கு மிக்க மனிதர்களை ,இளைஞ்சர்களை விடுதலைப் புலிகள் தமது கைதிகளாக்கி ,சமூகத்தை ஒரு தெளிவான வழிகாட்டல் பெறக்கூடிய நிலையை இல்லாமல் செய்தபின்னே விரட்டி அடித்தனர் . சூழ்நிலைக்காக புலித் தாகூத்தை 'காக்கா' பிடித்தவரும் இங்கு கைதியாகிறார் !

இவர் பேசிய 'ஹாக்கிமீயதும் இகாமதுத் தீனும் இன்று வரை பிறவிக் குருடன் கொடுத்த கொக்கு பற்றிய விளக்கம் போல இருக்கின்றது .'சிந்தனை வீழ்ச்சி வடித்தெடுத்த அகௌரவத்தின் வடிவங்கள் தம்மை 'தாயிகளாக' தம்பட்டம் அடிப்பது யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல ,முழு முஸ்லீம் உம்மத்துக்கும் அவமானம் மட்டுமல்ல ஆபத்தானதுமாகும் .

(இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் ..)

'அஷ்ஷாம்' சொல்லும் தெளிவான செய்தி என்ன ?

எம்மீது பிணைக்கப் பட்டிருந்தது காலனித்துவ அடிமைச் சங்கிலி .நவ காலனித்துவ இலாபத்தில் நரித்தனமாக அது நீட்டப்பட்டது .அந்த அசிங்கத்தை விடுதலைபோல் காட்டி ,தேசிய சுவாசம் எனும் பிரித்தாளும் நாசத்தை சுதந்திரப் போலியில் புதுவரவாக்க ,எமக்கு சாக்கடை சிலகாலம் சந்தனமாக தெரிந்தது !

துர்நாற்றத்தை கஸ்தூரி போல் காட்டி எம்மில் இருந்த அயோக்கிய அவமானங்கள் எம்மை அதிகாரம் செலுத்த ஆட்சிபீடம் ஏறினர் . அவர்கள் துரோகத்தின் முகவரிகள் .மார்க்கத்தை மதமாக்கிய மாற்றானின் அகீதாவை
'செக்கியூலரிச ' செக்கில் போட்டு இழுத்து ,' தாகூத்திய' குப்பாருக்கு ' எண்ணை வார்க்கும் எடுபிடிகள் .

சிந்தனை வீழ்ச்சியில் சிக்கித்தவித்த நாம் 'வஹியின் ' ஒளியால் தெளிந்தோம் பாதை தெரிந்தோம் .அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் அடிமை என்ற எம் கண்ணியமான முடிவுக்கு சவாலாக அந்த கோடரிக் காம்புகள் வெறியோடு வந்தன .

இந்த 'சாத்தானின் ஏஜெண்டுகளை 'சந்திக்க நாம் திட சங்கற்பம் பூண்டோம் .
மரணத்தை விலை கொடுத்து சுவனத்தை வாங்கும் ,உண்மையான தியாகத்தில் உறுதியோடு உழைக்கிறோம் .சத்தியமே தீர்வென்று சகாதத்தை
அணைக்கிறோம் .

சத்தியத்தை உணர்ந்த போது எமக்கு தியாகங்கள் இனிப்பாக தெரியும் என்பது எம் தந்தை இப்ராஹீம் (அலை ) கற்றுத்தந்தது . எம் தூதர் (ஸல் ) தெளிவாகவே காட்டித் தந்தது .வெற்றி அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வரக்கூடியது. முயற்சியும் தியாகமும் மட்டுமே எம்முடையது .

http://khandaqkalam.blogspot.ae/2013/10/blog-post_17.html

Oct 20, 2013

சிரியாவில் அசாத்தின் அடக்குமுறையினால் அகதியாக்கப்பட்ட முஸ்லிம்கள்


இன்று சிரியாவில் அசாத்தின் அடக்குமுறையினால் அகதியாக்கப்பட் முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ள விதத்தை விபரிக்கும் படவரைபுதான் இது.

இவர்கள் இந்த கஷ்டமான சூழலில் இருந்து விடுவிக்கப்பட இன்று உலகில் எத்தகைய முஸ்லிம் தலைமைத்துவமும் அக்கறை எடுக்கவில்லை.

1300 வருட இஸ்லாம் வழங்கிய தலைமத்துவமான கிலாபா ஆட்சிமுறையில் இத்தகைய நெருக்கடியான சூழலில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. 

முஸ்லிம்களது உரிமை, கண்ணியம், உயிர், மானம் என்பன காக்கப்பட அமீருல் முஃமினீன் தனது முஸ்லிம் இராணுவத்தை பயன்படுத்தினார் என்பது எமது வரலாறு.

ஆகவே இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள ஒரே இஸ்லாமிய தலைமை நபி வழியில் மீள நிறுவப்படுவதன் மூலமே முஸ்லிம்களுக்கு விடிவும் விமோசனமும் உருவாகும். குர்ஆன் சுன்னா உலகில் முழுமையாக அமுலாக்கப்பட்டு முழு உலக மக்களும் இன்றைய முதலாளித்துவ அடக்குமுறையில் இருந்து விடுவிக்கப்பட வழிவகுக்கும்.

இன்று உலகில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிமுதல் ஒழுக்க வீழ்ச்சி வரையிலான அனைத்து பிரச்சினைகளுக்குமான மாற்றீட்டுத் தீர்வை இஸ்லாம் முன்வைத்து முழு உலக மக்களும் நிம்மதி பெருமூச்சு விடவும் அமைதியடையவும் வழிவகுக்கும். ஏனெனில் அகிலங்களின் ரப்பாஹிய இறைவன் ஏற்றுக் கொண்ட வாழ்க்கை முறை தீனுல் இஸ்லாம் மாத்திரமே என்பதனை நாம் உணர்வோம்.

இஸ்லாம் கூறும் ஆட்சிமுறை என்பது மிகத்தெளிவானது.

அது 1300 ஆண்டுகாலம் உலகில் முன்றில் இரண்டுபகுதியை ஆட்சி செய்து இஸ்லாத்தை வாழ்வின் அனைத்துதுறைகளிலும் அமுல்படுத்தியதுடன் சிறுபான்மையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்த கிலாபா ஆட்சிமுறைதான் இஸ்லாம் கூறும் ஆட்சிமுறை!

அது உருவாகும் முறைபற்றிய மிகத் தெளிவான ஹதீஸ்: நபிகளாரின் நுபுவத்துடைய ஆட்சி...குலபாஉர் ராசிதீன்களது ஆட்சி ... நீண்ட கால ஆட்சி ... சர்வாதிகாரிகளது ஆட்சி ..அதன் பின் மீண்டும் நபித்துவ வழியிலான கிலாபா ஆட்சி!

இன்று இந்த ஆட்சிமுறையை ஏற்படுத்துவதற்கு பல வழிமுறைகள் கையாளப்படுகிறது. அதில் ஒன்று காலனித்துவ வாதிகளால்துன்டாடப்பட்ட தேசங்களை அடித்துப்பிடிக்கும் ஜிஹாதிய வழிமுறையிலானது- இது பற்றிய பார்வை - அல்கயிதா கொண்டுள்ளது.

அடுத்த வழிமுறை - இன்று துண்டாடப்பட்டுள்ள முஸ்லிம் நாடுகளது தலைமைகள் இஸ்லாமிய வாதிகளால் மாற்றீடு செய்யப்பட்டு அதன் மூலம் கிலாபாவை கொண்டுவருவது. இங்கு இவர்களது வழிமுறையில் ஆட்சியாளர்கள் மாற்றீடு செய்யப்படுகிறார்களே தவிர ஆளப்படும் முறை - மேற்கினது பாராளுமன்ற ஜனனாயக வழிமுறை! இது மேற்கினது ஒரு கருவி!

மூன்றாவது வழிமுறையானது ஹிஸபுத் தஹ்ரீர் முன்மொழியும் வழிமுறை- அது இஸ்லாமிய நாடுகளது இராணுவம் ஏற்கனவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்கு தத்தமது தேசத்திற்குள் செயற்படுகிறது. அந்த இராணுவ தலைவர்களது ஒத்துளைப்பை (நுஸ்றாவை) பெற்று தேசத்திற்கு வெளியே இராணுவம் இணைக்கப்பட்ட அடிப்படையில் தேசத்தின் எல்லைகள் களையப்படும்.

இங்கு மேற்கினது ஜனனாயக வழியிலான தேர்தல் இல்லை. கலீபா நபிவழியல் நியமிக்கப்படுவார்- பின்னர் அவர் ஏனைய நாடுகளது நுஸ்றாவை கோருவார்.


Mohideen Ahamed Lebbe

இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதே அவர்களது இலக்கு!


மேற்கினது முகவரான மனித உரிமைகள் அமைப்பினது இரட்டை வேடங்கள்! இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதே அவர்களது இலக்கு!

இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இஸ்லாத்திற்கு எதிரான விஷமப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடும் போக்கை நாம் சர்வ சாதாரணமாக காணலாம்.

முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பெயர்சூட்டுவது அவர்களுக்கு கைவந்த கலை. கற்காலத்தை நோக்கி நகர்த்தும் மார்க்கம் இஸ்லாம் என்றும் காட்டுமிராண்டித்தனமான சரீஆ சட்டத்தை கொண்ட மார்க்கம் இஸ்லாம் என்றும் தமது மீடியாக்களைப் பயன்படுத்தி கீழைத்தேய வாதிகளால் பல்வேறு விதமான இஸ்லாமிய விரோத நச்சுக்கருத்துக்களை விதைக்கும் சிந்தனைப் படையெடுப்பை நாம் நாளாந்தம் எமது ஊடகங்களில் பார்க்கலாம்.

மனித உரிமைக்காக உலகமெல்லாம் குரல்கொடுப்பார்கள். முஸ்லிம்களது விடயத்தில் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களது பார்வையில் முஸ்லிம்கள் காட்டுமிராண்டிகள். கரப்பொத்தான் பூச்சிகள்.

பெண்ணியம் கதைக்கும் முஸ்லிம் பெண்களை உருவாக்கி அவர்களை இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை விதைக்க பாடுபடுவார்கள்.

முஸ்லிம் பெண்களது கல்வி உரிமை மீறப்படுவதாக நாடகங்களை அரங்கேற்றம் செய்வதற்கு மலாலா போன்ற பெண் விடுதலை போராளிகளை புரோமோட் பண்ணி இஸ்லாத்திற் கல்வி கற்கும் உரிமை மீறப்படுவதாக கொக்கரிப்பார்கள்.

ஆபியா சித்தீக்கா போன்ற கல்விமான்கள் இஸ்லாத்திற்காக குரல்கொடுத்தால் அவர்களை போன்ற பெண்களை பிடித்து சிறையிலிட்டு கற்பழித்து பெண்ணுரிமையை பாதுகாப்பார்கள். இதுதான் இன்று மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம் உலகினை நடாத்தும் விதம்.

எனவே இஸ்லாம் எழுச்சி பெறக்கூடாது என்பதற்கான அவர்கள் முன்னெடுக்கும் சிந்தனைப் படையெடுப்பின் ஒரு கைபொம்மையாக கருவியாக மலாலா நாடகம் உலகில் அரங்கேற்றப்பட்டு இஸ்லாத்திற்கு சேறு பூச நினைக்கிறது மேற்குலகும் அதன் முகவர்களும் என்பதனை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.



கிலாஃபத்தை தாக்கிப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

قَدْ بَدَتِ الْبَغْضَاء مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الآيَاتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ
அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).                                                       (ஆல இம்ரான் 118)
கடந்த மாதம் (27/9/2013) ஐக்கிய நாடுகளின் பொது சபையில் பேசிய  ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பின்வரும்  எச்சரிக்கையை விடுத்திருந்தார் “
…..“That the most powerful of the armed groups inside Syria are the Jihadist which include many extremists that came from all parts of the world, and the aims that they are pursuing have no connections to Democracy, and their basis is an extreme ideology, they aim to destroy the secular state and to establish a Khilafah Islamic State.”
சிரியாவில் உள்ள ஆயுத குழுக்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களான ஜிஹாதியர்கள், உலகின்  பல பகுதிகளில் இருந்தும்  வந்த தீவிரவாதிகள் ஆவர்;  அவர்கள் கொண்டுள்ள நோக்கம், ஜனநாயகத்துடன் எந்த வகையிலும் தொடர்புடையுதல்ல; மேலும் அவர்களின் அடித்தளம் ஒரு தீவிர சித்தாந்தமாகும்,  மதச்சார்பற்ற அரசை அழித்து கிலாஃபத்தை அமைப்பதே அவர்களின் நோக்கமாகும் “.
சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் அழிப்பு தொடர்பாக நடந்த ஐ.நா. கூட்டங்களில் இருந்து அவர் வெளியேறியதை தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
..”His country does not exclude the participation of armed Syrian opposition in the Geneva 2 Conference as long as they do not think to establish a Khilafah.”
 …”அவருடைய நாடு ஆயுதம் ஏந்திய சிரிய எதிர்ப்பாளர்கள் ஜெனீவா- 2 மாநாட்டில் கலந்து கொள்வதை  தடுக்கவில்லை, அவர்கள் கிலாஃபத்தை நிலைநாட்ட நினைக்காதவரை.”
ரஷ்ய வெளியுறவு அமைச்சரான  செர்ஜி லாவ்ரோவ், சிரியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள முரண்பாடு பற்றிய உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது, இது இரு நாகரீகங்களுக்கிடையே  உள்ள சித்தாந்த மோதலாகும். அதுவே சத்திய தீனுல்  இஸ்லாத்திற்கும் கொடூரமான  ஜனநாயகம் மற்றும்  நாத்திக  மதச்சார்பின்மைக்குமிடையே உள்ள மோதலாகும். இஸ்லாம், கிலாஃபா மற்றும் ஜிஹாத்  தொடர்பாக தானும்  மேற்கத்திய நாடுகளும் கொண்டுள்ள வெறுப்பு மற்றும் மறைமுக எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.  இஸ்லாத்தின் மீதுள்ள தன்னுடைய  வெறுப்பு, சிரிய அதிபர்  பஷருல் அசாதை விட எந்த வகையிலும் குறைவில்லை என்பதை வெளிபடுத்தியுள்ளார். சீனா, ரஷ்யா, மேற்குலகம், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள்  பஷருல் அசாதுடன்  சேர்ந்து முஸ்லிம்களை குறிவைக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார். இந்நாடுகளின் ஆதரவையும் ஊக்கத்தையும் கொண்டே முஸ்லிம்களின் மீது கொடூரமான கொலைகளை பஷருல் அசாத் மேற்கொண்டான்.
இஸ்லாத்திற்கு எதிராக குஃப்ஃபார்கள் ஒன்று கூடுவதை  அல் குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது.
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.              (அல் கமர்:45)
 ஆம், உண்மை தான்; ரஷ்யர்கள், மேற்கத்தியர்கள் மற்றும் யூதர்கள் புரட்சி நடைபெற்றுவரும் ஷாம் பகுதியின்  கிலாஃபா உச்சரிப்பை கேட்டு பிரம்மை பிடித்து ஆடிப்போயுள்ளனர்.
இவர்கள்  சிரிய மக்களின் இந்த கோரிக்கைகளின் தீவிரத்தை உணர்ந்தபோது, அவற்றை தடுக்க இயலாது என்ற நிலையில், இவர்களின்  கனவுகளில் கூட அச்சுறுத்தல்களைகாணமுடிகிறது. இதை மறைவாகவும் வெளிப்படையாகவும் எதிர்ப்பதை விட அவர்களுக்கு வருத்தம் ஏதும் இல்லை. அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தபோதும் அல்லாஹ்سبحانه وتعالىவின் அனுமதிகொண்டு அவை முறியடிக்கப்படும்.
அல்லாஹ்سبحانه وتعالى கூறுகிறான் :-
يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ * هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُون
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்).                                                     (அத்தவ்பா :32-33)
 வரவிருக்கும் கிலாஃபா பகுதியில் உள்ள முஸ்லிம்களே!, ஷாமை சேர்ந்தவர்களே!, இஸ்லாத்தின் இல்லத்தை சேர்ந்தவர்களே(இன்ஷா அல்லாஹ்)!
முஸ்லிம்களின் தீனான இஸ்லாத்தை தாக்கி சவால் விட்ட பஷருல் அசாதின் அதிகாரப்பூர்வ பேச்சாளராக பிரதிபலித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், கிலாஃபத்திற்காக போராடும் குழுக்கள் மீது தனது நேரடியான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவருடைய நாடு ஆயுதம் ஏந்திய சிரிய எதிர்ப்பாளர்கள் ஜெனீவா-2மாநாட்டில் கலந்து கொள்வதை தடுக்கவில்லை,அவர்கள் கிலாஃபத்தை  நிலைநாட்ட நினைக்காதவரை.”என்று அவர் இங்கே குறிப்பிடுவது தேசிய சிரிய கூட்டணி தலைவர் அஹ்மத் அல் ஜப்ரா போன்ற ஐ.நா வின் மேடையை சேர்ந்தவர்களையே !  இவர் இஸ்லாமிய தீவிரவாதிகள் இப்போராட்டத்தை திருடியதாக குற்றம் சாட்டி அவர்களுக்கு இப்போராட்டத்தில் எந்த சம்மந்தமும் இல்லை என்றார். மேலும் இவருடைய மதச்சார்பற்ற குருவான  மிஷால் கிலோ, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் லவ்ராவ் கூறிய அதே மூலத்தில் பின் வருமாறு கூறியதிலிருந்து அறியலாம் “புரட்சிக்கு எதிராக இந்த குழுக்கள் செய்பவற்றை குறைத்து மதிப்பிடக்கூடாது… நாம் எந்த சூழ்நிலையிலும் அதன் ஆபத்துக்களை தொடர்ந்து புறக்கணிக்கக் கூடாது..  அவர்களை புறக்கணிப்பது மிகப்பெரிய தவறு.. அதைப்போலவே தற்போதைய ஆட்சிக்கு எதிரணி அவசியம்  என்ற நோக்கத்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் தவறாகும்.
இஸ்லாம் மற்றும் கிலாஃபத்திற்கு  எதிரான இது போன்ற ஒரு வெளிப்படையான விரோத நிலைக்கு முஸ்லிம்களிடமிருந்து தக்க பதில் தேவைப்படுகிறது; மாற்றத்திற்கான வழிமுறை என்பது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلمஅவர்களுடைய வழிமுறை என்பதும் இந்த புரட்சியின் நோக்கம் கிலாஃபா ராஷிதா என்பதுமே பதிலடியாகும்.
அல்லாஹ்سبحانه وتعالى கூறுகிறான் :-
مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُمْ مِنَ الْأَعْرَابِ أَنْ يَتَخَلَّفُوا عَنْ رَسُولِ اللَّهِ وَلَا يَرْغَبُوا بِأَنْفُسِهِمْ عَنْ نَفْسِهِ ذَلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَطَئُونَ مَوْطِئًا يَغِيظُ الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَيْلًا إِلَّا كُتِبَ لَهُمْ بِهِ عَمَلٌ صَالِحٌ إِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ * وَلَا يُنْفِقُونَ نَفَقَةً صَغِيرَةً وَلَا كَبِيرَةً وَلَا يَقْطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا كَانُوا يَعْمَلُون
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன – நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.                        (அத்தவ்பா :120)
(ஹிஷாம் அல்பாபா, சிரியாவிலுள்ள ஹிஸ்புத்தஹ்ரீரின் ஊடகத்துறை  தலைமை பொறுப்பாளர்) 

Oct 16, 2013

இஸ்லாத்தின் பார்வையில் மக்களாட்சி!


முதலாளித்துவக்கொள்கையின் ஆட்சிமுறையில் அனைத்து ஆட்சி அதிகாரமும் மக்கட்கேயாகும். எனவே மக்களே தமக்காக சட்டமியற்றுபவர் ஆவர். அவர்களே தாம் விரும்பிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள்.

மக்களாட்சிமுறையில் ஆள்வது இறைநம்பிக்கையற்ற முறையில் ஆள்வதாகும்.

மக்களாட்சி முறைக்காக அழைப்பு விடுப்பது குஃப்ர் முறைக்காக அழைப்பு விடுப்பதாகும். இஸ்லாத்தில் இது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

மக்களாட்சிமுறை இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் ஒரு முஸ்லிம் நடைமுறைபடுத்தவேண்டிய சட்டம் அல்லாஹ்விடமிருந்தே வருவதாகும்.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை. ஆதலால் அல்லாஹ்(சுபு) அமைத்த பாதை வழி நடப்பதும், அவன் அனுமதிக்காதவற்றினின்று விலகியிருப்பதும் கடமையாகும்.

அனைத்து ஆட்சி அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விடமே இருப்பதால் முஸ்லிம் உம்மா தனது விருப்பப்படி நடக்க இயலாது. ஷாPஆவிடமே அனைத்து அதிகாரமும் இருப்பதால் அதன் வழி மட்டுமே செல்ல இயலும்.

சட்டமியற்றுபவன் அல்லாஹ் மட்டுமே. அதனால் முஸ்லிம் உம்மா தானாக சட்டமியற்ற இயலாது.

முஸ்லிம் உம்மா அல்லாஹ்(சுபு) விலக்கியவற்றை (உதாரணம்:வட்டிப்பணம்) நடைமுறைப்படுத்த இசையுமானால் அச்சட்டத்திற்கு எவ்வித அங்கீகாரமும் இஸ்லாத்தில் இல்லை.

அடிப்படையில் அது ஷாPஆவிற்கு எதிரானது. அதனை எதிர்த்து போராடுவது கடமையாகும்.

ஆனாலும் மக்களை ஆட்சி புரியவும், ஷாPஆவை நடைமுறைபடுத்தவும் அதிகாரம் படைத்த ஆட்சியாளரை தமக்காக தேர்ந்தெடுக்கும் உரிமை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆட்சியாளர் சத்தியப்பிரமாணம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எனவே ஆட்சியாளர் என்பது அல்லாஹ்வின் சட்டமனைத்தையும் நடைமுறைபடுத்துபவரே!

ஏனெனில் சட்டமனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே அருளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களாட்சி முறை இஸ்லாமிய முறை அல்ல.

மேலும் அது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கோட்பாடாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு கடுமையாக கண்டிக்கிறது!

"ஆகவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்கள் மத்தியில் ஆட்சி செய்வீராக மேலும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோ இச்சைகளைப் நீர் பின்பற்ற வேண்டாம்." (அல்குர்ஆன் 5:48)

"அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்களிடையே ஆட்சி செய்வீராக. மேலும் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக" (அல்குர்ஆன் 5:49)

"எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர்கள் காபிர்களாவார்கள்" (அல்குர்ஆன் 5:44)

எனவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யத்தேவையான ஆட்சிமுறையாகிய கிலாபா ஆட்சிமுறைபற்றி அதீத கவனம் செலுத்தவேண்டியது இன்றைய முஸ்லிம் உம்மத்தின் மிகப்பாரிய பணியாகும்.

இதற்குத் தேவையான நுஸறாவை எமது முஸ்லிம் இராணுவத்திடம் கோரவேண்டும்.

மேற்கினது ஆட்சியமைப்பாகிய ஜனநாயக வழிமுறையில் இஸ்லாத்தை பகுதியாக அமுல்படுத்த முற்படும் போக்கை கைவிடவேண்டும்.

தேசியவாதச் சிந்தனையை களைந்து உம்மத் எனும் சிந்தனையை வலுப்படுத்த வேண்டும்.

மீண்டும் நபி வழியில் இஸ்லாமிய அரசாகிய கிலாபாவை நிறுவ பாடுபடவேண்டும். அதற்காக உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிபாகும்