Jun 24, 2016

மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே!




இது கதையல்ல!

அந்த பூமியில் இவள் பிறந்த போது சியோனிசத் தோட்டாக்கள் தாம் தாலாட்டுப்பாடின! 

எஞ்சிய இடிபாடுகளுக்குள் இருந்த உடைந்த பராலைகளில் கட்டப்பட்ட கிழிந்த துணியினால் ஆன தொட்டிலில் சுதந்திரக் காற்றை தேடி இவள் ஆழமாக மூச்சுவிட்டபோது...! 

அதில் கலந்திருந்த கந்தக வாசம் பிறப்புரிமை ஆனது! வெடிகுண்டுகளை தடாவிய வாறுதான் தவழ்ந்தாள்! 

யூத துப்பாக்கிகளின் குறிகளை கண்டவாறுதான் எழுந்தாள்! 


வீரத்தையும் தன்னம் பிக்கையையும் தவிர! பெரிதாக எதுவும் பாலஸ்தீன முஸ்லீம் களிடம் இல்லை! 

அதற்கு இவள் விதிவிலக்கல்ஒரு யூதக் கயவனின் வல்லுறவையும் எதிர்வு கூறிய வாரே பாலஸ்தீனில் ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்துகிறாள்! 

இந்த வருடம் மட்டும் 1823 பெண்கள் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தி படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள்! 

1000 பெண்கள் வரை சிறையிடப் பட்டுள்ளார்கள்! காரணம் ஒன்றே ஒன்றுதான்.... அவர்கள் முஸ்லீம்அவளது வயதும் வெறும் 14 மட்டுமே!

 அந்த கொடுமை மிக்க பாலஸ்தீன நிலத்தின் வரலாற்றுச் சுமையை சுமந்த வாரே கல்வி கற்பதற்காக புத்தகங்களை சுமந்தவள்! 

யூத இராணுவம் சந்தேகத்தின் பெயரில் அவளை கைது செய்தது! கொடூரமாக தம் சந்தேகத்தை பாலியல் வக்கிரம் மூலம் தீர்த்து படுகொலை செய்தன அந்த யூத நாய்கள்!

 பின்னர் ஒரு குப்பையை போல அவளை வீதியோரத்தில் வீசி எறிந்திருந்தனர்! 

எந்த மீடியா இதை பேசியது!? மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே! 

பொஸ்னியாவில் ,ஈராக்கில், காஸ்மீரில், ஆப்கானில் எல்லாம் இப்படித்தானே நடந்தது! நடக்கிறது! 

முஸ்லீம் என்றவுடன் ஏளனப் பார்வை பார்க்கும் குப்ரிய வர்க்கம், இஸ்லாத்திற் கென்றவுடன் கூட்டுச் சேர்ந்து கருவறுக்க தயங்குவதில்லை! 

முஸ்லீம் உம்மத் கிலாபா எனும் உலகலாவிய இஸ்லாத்தின் கேடயத்தின் கீழ் வராதவரை இத்தகு அக்கிரமங்கள் ஓயப் போவதில்லை. ஒரு பெண் உதவி கேட்டு அழைத்ததன் முடிவாகவே முஹம்மது பின் காசிமின் தலமையில் முழு சிந்துப் பகுதியையும் கட்டுப் பாட்டில் கொண்டுவர உமையா கிலாபத்தினால் படைநடாத்தப் பட்டது என்ற பேருண்மையை நாம் புரிந்திடல் கட்டாயமாகும்.

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-05

துருக்கி தேசியவாதமும் அரபு தேசியவாதத்துக்கும் இடையிலான மோதல்
பலஸ்தீன் பகுதியை கைப்பற்ற துருக்கி இஸ்லாமிய கிலாபத்தை வேரோடு கவிழ்க்கின்ற சூழ்ச்சு ஆரம்பமாகியது.
இந்த சூழ்ச்சியிலும் மேற்குலக அரசியல்வாதிகளோடு ஆரம்பத்தில் இருந்தே யூத சிந்தனைகளும் இணைந்தே செயற்பட்டுக்கொண்டிருந்தன.

இஸ்லாமிய சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சி அமையாமல் துருக்கி இனநலனையும் துருக்கி தேசியவாதத்தையும் அடிப்படையாக கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்ற சிந்தனை துருக்கியர்களிடையே பரப்பப்பட்டு இயக்கமாக திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் உண்மையில் துருக்கியர்கள் அரபுக்கள் குருதுக்கள் என பல பிரதேச முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சிக்குள் அடங்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட ஓர் ஆட்சியை துருக்கி இன ஆட்சியாக உருமாற்றுவதன் பொருள் என்னவெனில் துருக்கியர்கள் அல்லாத ஏனையோரின் உதவியும் ஒத்துழைப்பும் அடியோடு விலகிவிட வேண்டும் என்பதே!!

மறுபுறம் அரபிகளிடையே அரபு தேசியவாதம் நீரூற்றி வளர்க்கப்பட்டது. துருக்கியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் நிலை மாறி சுதந்திர அரபிகளாக மாற வேண்டும் என்ற சிந்தனை வேரூன்றி வளர்க்கப்பட்டது.

அரபுகளிடையே இத்தகைய அரபு தேசியவாதத்தை ஊன்றியவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ அரபுக்களாக இருந்தார்கள். ‪#‎பைரூத்_பல்கலைக்கழகம்‬ அவர்களுடைய தலமைத்தளமாக இருந்தது. இந்த அமெரிக்க பல்கலைக்கழகம் தேசியவாதத்தை பரப்புகின்ற மையத்தளமாக இருந்தது.

இவ்வாறாக துருக்கியர்களிடையேயும் அரபுக்களிடையேயும் ஒரே நேரத்தில் வேறுபட்ட இரு தேசியவாத கருத்துக்கள் வேரூன்றி வளர்க்கப்பட்டன. அவை மென்மேலும் வளர்ந்து செழிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் அமுல்படுத்திக்கொடுக்கப்பட்டன.

1914 ‪#‎1ம்_உலகப்போர்‬ தொடங்கியபோது நிலமை எந்தளவு மோசமானதாக மாறிக்காணப்பட்டது என்றால் அனைத்து உம்மத்தும் ஓரணியில் தோள்கொடுத்து போரிடுவதற்கு பதிலாக அரபிக்கள் பிரித்தானியா சார் அணியாகவும் துருக்கி ஜேர்மன் சார் அணியாகவும் ரத்தவெறிபிடித்த காட்டேறிகளாக சக முஸ்லிம் சகோதரனின் இரத்தத்தை குடித்தே தீரவேண்டும் என்ற அளவுக்கு பகைமை முற்றிப்போய் எதிர் எதிர் அணியில் நின்று போரிட்டனர்.

‪#‎இன்சாஅல்லாஹ்‬......
‪#‎தொடரும்‬.......

‪#‎புகைப்படம்‬:- அமெரிக்க பைரூத் பல்கலைக்கழகம் - சவூதி அரேபியா


சிந்தனை கலஞ்சியம்

Jun 22, 2016

இந்திய தளங்களைில் காலூன்ற முயலும் அமெரிக்க இராணுவம்....!! பகுதி - 02



இந்திய மூலோபாய பகுப்பாய்வாளர் சி. ராஜமோகன் இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரசுரித்த ஒரு கருத்துரையில், இந்து மேலாதிக்க பிஜேபி தலைமையிலான அரசாங்கம் “அமெரிக்காவுடன் வெளிப்படையாக சர்ச்சைக்குரிய உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடும் தன்னம்பிக்கை" கொண்டிருப்பதற்காக அதை பாராட்டினார், அதேவேளையில் "அமெரிக்காவுடன் ஒரு நியாயமான ஒளிவுமறைவற்ற உடன்படிக்கையைக் 'கோட்பாட்டுரீதியில்' முடிவெடுக்க" இந்தியா "ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம்" எடுத்ததற்காக அவர் வருத்தப்பட்டார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் போலவே, மோகனும் இந்தியா தன்னைத்தானே இந்தியப் பெருங்கடல் சக்தியாக நிறுவிக் கொள்வதற்கான முக்கியத்துவம் மீது கவனத்தைக் குவித்திருந்தார்—இந்த நோக்கத்திற்கு, ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் ஒபாமா இருவரின் கீழ், வாஷிங்டன் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஆதரவை அறிவித்துள்ளது. இந்திய படைகளும் அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்குப் பரஸ்பர உரிமைகளை வழங்கும் LEMOA உடன்படிக்கை, “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் புது டெல்லி அதன் பரந்து விரிந்த நலன்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கும் போது அத்தருணத்தில் துணைகண்டத்தின் கடல்களிலிருந்து வெகுதூரத்தில் செயல்பட வேண்டியிருந்தால், இந்திய இராணுவப் படைகளுக்கு, குறிப்பாக கடற்படைக்கு உதவியாக இருக்கும்" என்று மோகன் குறிப்பிட்டார். இந்த உடன்படிக்கை படிப்படியாக அமெரிக்கா-தலைமையிலான இராணுவ அணிக்குள் இந்தியா இணைவதில் போய் முடியுமென்று அவர் எச்சரிக்கிறார்.

பாதுகாப்பு மந்திரியாக அவரது நீண்ட பதவி காலத்தின் போது அந்தோணி இந்த தளவாட பரிவர்த்தனை ஒத்துழைப்பு உடன்படிக்கை மீது அமெரிக்காவுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவராவார், பின்னர் இறுதியில் அவற்றை புறக்கணித்தார், ஏனென்றால் அவரும் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் முக்கிய பிரிவுகளும் அது இந்தியாவை வாஷிங்டனின் மூலோபாய நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னால் அணிதிரட்டுமென்ற தீர்மானித்திற்கு வந்தனர்.

அவ்விதத்தில் LEMOA இன் தாக்கங்களைக் குறித்தும், அதை பிரயோகித்து இந்தியாவை சீனாவிற்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான இராணுவ கூட்டணிக்குள் இழுக்கும் வாஷிங்டனின் திட்டங்கள் குறித்தும் அந்தோணிக்கு நன்கு பரிச்சயம் உண்டு. ஸ்ராலினிச சிபிஎம், ஏப்ரல் 13 இல் பிரசுரித்த ஒரு பொலிஸ்பீரோ அறிக்கையில் குறிப்பிடுகையில், “இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களின் அடிப்படை வசதிகளை அமெரிக்க இராணுவப் படைகள் பயன்படுத்த அனுமதிக்க ஒப்புக் கொண்டதன் மூலமாக மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ கூட்டுறவை ஆழப்படுத்தும் அபாயகரமான படியை எடுத்துள்ளது,” என்று குறிப்பிட்டது.

“பாதுகாப்பு அமைச்சர் கூறுவதைப் போல கிடையாது, அமெரிக்க கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான மீள்எரிபொருள் நிரப்புவதற்கும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதிகளுக்கும் இந்திய மண்ணில் வழமையாக அமெரிக்க இராணுவப் படை சிப்பாய்களை நிலைநிறுத்த வேண்டியிருக்கும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. “தொலைதொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை (CISMOA) மற்றும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் கூட்டுறவு உடன்படிக்கை (BECA) ஆகிய ஏனைய இரண்டு உடன்படிக்கைகள்" பரிசீலனையில் இருப்பதாக இந்திய பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, சிபிஎம் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இவை இந்திய ஆயுத படைகளின் கட்டளையகம் மற்றும் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை அமெரிக்க இராணுவப் படைகளுடன் ஒருங்கிணைக்கும்.

இவ்வாறு செய்வதன் மூலமாக, பிஜேபி அரசாங்கம் கோட்டைக் கடந்து செல்கிறது, இது சுதந்திரத்திற்குப் பின்னர் வேறெந்த அரசாங்கமும் செய்திராததது—இந்தியாவை முழுமையாக அமெரிக்காவின் முழு அளவிலான இராணுவக் கூட்டாளியாக மாற்றுகிறது,” என்றது. LEMOA ஐ எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சியும் ஸ்ராலினிஸ்டுகளும், இந்திய உயரடுக்கினது பிரிவுகளின் கவலைகளுக்குக் குரல் கொடுக்கின்றனர். ஷிங்டனுடன் மிகவும் நெருக்கமான ஒரு மூலோபாய கூட்டணி இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் புவிசார் மூலோபாய நலன்களுக்குக் குழிபறிக்குமென இவர்கள் கருதுகிறார்கள்.

இவர்களது எதிர்ப்புக்கும் உண்மையான ஏகாதிபத்திய-எதிர்ப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போருக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நடவடிக்கைகளுக்கும் ஆழ்ந்த எதிர்ப்பைக் கொண்டுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களிம் மீது எப்படி அரசியல் கட்டுப்பாட்டைப் பேணுவது என்பது உட்பட, முழுமையாக அவர்களது எதிர்ப்பு, இந்திய முதலாளித்துவ வர்க்க நலன்களை எவ்வாறு சிறப்பாக முன்னெடுப்பது என்பதை சுற்றியே சுழல்கிறது.

காங்கிரஸ் கட்சி மற்றும் ஸ்ராலினிசவாதிகள் இப்போது அமெரிக்காவின் "ஒரு முழுமையான இராணுவ கூட்டாளியாக" இந்தியா மாறி வருவதற்கு அவர்களின் எதிர்ப்பை தம்பட்டமடித்தாலும், அவை இரண்டுமே புது டெல்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான முன்பினும் விரிவான இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதில் ஒரு முன்னிலை பாத்திரம் வகித்துள்ளன. பத்தாண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் போது தான், இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு “உலகளாவிய மூலோபாய பங்காண்மையை” முழுமைப்படுத்தியது, அத்துடன் புதிய இந்திய ஆயுத தளவாட ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா மிக முக்கிய விற்பனையாளராக மாறியது.

ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி, 2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்க உதவியதுடன், முழுமையாக நான்காண்டுகளுக்கு அதன் நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவு வழங்கியது. இதே காலகட்டத்தின் போது தான் காங்கிரஸ் இந்தோ-அமெரிக்க அணுஆயுதத்திற்கு அல்லாத அணுசக்தி உடன்படிக்கைக்குப் பேரம்பேசியது, இந்த உடன்படிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு இடையிலான கூட்டணி வளர்ச்சியைப் பலப்படுத்தியது.

ஐயத்திற்கிடமின்றி ஸ்ராலினிசவாதிகள் இப்போது, மோடி அரசாங்கத்திற்கு அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்குப் பின்னால் திருப்பிவிடுவதன் மூலமாக அரசியல்ரீதியில் அதை ஒடுக்கும் அவர்களது முயற்சிகளை நியாயப்படுத்துவதற்காக, வாஷிங்டனுடன் இன்னும் நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளுக்கு பிஜேபி அரசாங்கம் திரும்பியிருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். ஏற்கனவே ஸ்ராலினிஸ்டுகள் மேற்கு வங்க மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டணி அமைத்துள்ளனர்.

மிக முக்கியமாக LEMOA உடன்படிக்கையை எதிர்ப்பதில் சிபிஎம் பொலிட்பீரோ அறிக்கை, இந்தியாவின் "தேசிய இறையாண்மையை" மற்றும் "மூலோபாய சுயஅதிகாரத்தை" மோடி அரசாங்கம் சமரசப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, முற்றிலுமாக முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய நலன்களது நிலைப்பாட்டிலிருந்து அந்த உடன்படிக்கையைக் கண்டிப்பதுடன், இந்த அடிப்படையிலேயே ஆளும் வர்க்கத்திற்குள் ஆதரவைத் திரட்ட முயல்கின்றனர். “சகல அரசியல் கட்சிகளும் மற்றும் தேசப்பற்றுமிக்க பிரஜைகளும்" “அமெரிக்காவுக்கு அடிபணிவதை எதிர்க்க" வேண்டும் என்று ஸ்ராலினிஸ்டுகள் அறிவிக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிசவாதிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அஇஅதிமுக மற்றும் திமுக, ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெலுங்கு தேச கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற மாநில அளவிலான மற்றும் இந்தியாவில் தேசியளவிலான ஏனைய சகல அரசியல் கட்சிகளும் LEMOA உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிஜேபி அரசாங்கத்தின் திட்டங்களைக் குறித்து மவுனமாக உள்ளன.


இது ஆளும் வர்க்கத்தின் அனைத்து தரப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை ஆதரிப்பதையும் மற்றும் இந்தியாவின் சொந்த வல்லரசாகும் அபிலாஷைகளை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறது.

khaibarthalam.blogspot.ae

இந்திய தளங்களைில் காலூன்ற முயலும் அமெரிக்க இராணுவம்....!! பகுதி - 01

 
 
அமெரிக்க இராணுவம் மீள் எரிபொருள் நிரப்புவதற்கும், பழுது பார்ப்பதற்கும் மற்றும் நிறுத்தி வைப்பதற்கும் உரிய இடமாக இந்திய விமானத் தளங்களை மற்றும் துறைமுகங்களை வழமையாக பிரயோகிக்க அனுமதிப்பதற்கு புது டெல்லி கோட்பாட்டுரீதியில் உடன்படுகிறது என்ற கடந்த மாத அறிவிப்பை இந்திய உயரடுக்கு மனதார வரவேற்றுள்ளது.
 
 
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டரின் சமீபத்திய இந்திய விஜயத்தின் இறுதி நாளான ஏப்ரல் 12 அன்று ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், அவரும் அவரது இந்திய சமபலமான மனோகர் பாரிக்கரும் அறிவிக்கையில், புது டெல்லியும் மற்றும் வாஷிங்டனும் தளவாடங்கள் பரிவர்த்தனை புரிந்துணர்வு உடன்படிக்கையை (LEMOA) இறுதி செய்ய "கோட்பாட்டுரீதியில்" உடன்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
 
அத்தகைய ஒரு உடன்படிக்கை ஒரு தசாப்தமாக அல்லது அதற்கும் அதிகமான காலத்தில் அமெரிக்காவின் ஒரு பிரதான நோக்கமாக இருந்துள்ளது. இது சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்த, சுற்றி வளைக்க மற்றும் அவசியமானால் அதற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலில் இந்தியாவை ஒரு "முன்னிலை" நாடாக ஆக்குவதை நோக்கிய ஒரு பிரதான படியாகும்.
 
மே 2014 இல் பதவிக்கு வந்ததில் இருந்து, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கம் முன்பினும் அதிகமாக முழுமையாக அமெரிக்காவின் சீன-விரோத "ஆசிய முன்னெடுப்புக்குள்" ஒருங்கிணைந்துள்ளது.
 
 "கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கும்" மற்றும் கிழக்கு ஆசியாவில் "சுதந்திர கடல் போக்குவரத்து" மற்றும் "விமான போக்குவரத்துக்கும்" சீனாவை ஒரு அச்சுறுத்தலாக சித்தரித்து, தென் சீனக் கடல் மீதான வாஷிங்டனின் ஆக்ரோஷமான தொனியையே பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளையைப் போல கூறி வருகின்றனர். மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் மற்றும் ஆசிய-பசிபிக், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதன் பிரதான கூட்டாளிகளுடனான இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ பாதுகாப்பு உறவுகளையும் அதிகரித்துள்ளது. 
 
 இதில் வருடாந்தர இந்தோ-பசிபிக் கடற்படை பயிற்சியில் (மலபார் பயிற்சி) ஜப்பானை ஒரு பங்காளியாக ஆக்கியமை, மற்றும் இந்தோ-பசிபிக் "கடல் போக்குவரத்து பாதுகாப்பு பேச்சுவார்த்தையைத்" தொடங்கியமை ஆகியவையும் உள்ளடங்கும். இந்தியாவின் கிழக்கை நோக்கிய நடவடிக்கை (Act East) கொள்கையை (அதாவது தென்கிழக்கு ஆசியாவுடன் பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான அதன் உந்துதலை) அமெரிக்காவின் "முன்னெடுப்பு" அல்லது "மீள்சமன்படுத்தலுடன்" ஒருங்கிணைக்கவும் மற்றும் இராணுவ தளவாட அமைப்புமுறைகளைக் கூட்டாக உற்பத்தி செய்வது மற்றும் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான வாஷிங்டனின் முன்வரலையும் பிஜேபி அரசாங்கம் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது.
 
இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் எண்ணற்ற இராணுவ-மூலோபாய பகுப்பாய்வாளர்கள் அமெரிக்காவுடன் LEMOA உடன்படிக்கையை இறுதி செய்வதென்ற மோடி அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பாராட்டியுள்ளனர். அவர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு விரிவாக்கப்பட்ட இராணுவ-மூலோபாய பங்காண்மையானது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் கரங்களைப் பலப்படுத்தும் என்றும் தெற்காசியா, இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் அதன் வல்லரசாகும் அபிலாஷைகளைப் புது டெல்லி எட்டுவதற்கு உதவும் என்றும் வாதிடுகிறார்கள். அவர்கள் கூறியுள்ள ஒருசில ஆட்சேபணைகள், மத்தியக் கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் சட்டவிரோத போர்கள் நடத்துவதில் சர்வதேச சட்டத்தை அவமதிக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளையோ அல்லது அணுஆயுத ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் பொறுப்பற்ற மூலோபாய நடவடிக்கைகளுடனோ சம்பந்தப்பட்டதில்லை.
 
 
அதற்கு மாறாக அவர்களது கவலை எல்லாம், தசாப்தகாலமாக பாகிஸ்தான் இராணுவத்துடனான அமெரிக்காவின் பங்காண்மையின் மீதுள்ளது, பாகிஸ்தான் விடயத்தில் உண்மையில் வாஷிங்டன் இந்தியாவின் "கரங்களைச் சுதந்திரமாக விடாது" என்பதற்காக அவர்கள் சீறுகிறார்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏப்ரல் 14 தலையங்கத்தில், “மூலோபாய மற்றும் இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கமாக ஈடுபடுவதற்கும் மற்றும் வேகத்தை அதிகரிப்பதற்கும் சரியாக முடிவெடுத்ததற்காக" மோடி அரசாங்கத்தைப் பாராட்டியது. “சமநிலைப்படுத்தும் நடவடிக்கை: அமெரிக்கா உடனான தளவாடங்களின் உடன்படிக்கை இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தை முடமாக்குவதைக் காட்டிலும் விரிவாக்குகிறது" என்று தலைப்பிடப்பட்ட அந்த தலையங்கம் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு ஒரு தெளிவான மறுமொழியாக இருந்தது. மிக முக்கியமாக, தளிர்விட்டுவரும் இந்தோ-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியின் உண்மையான இலக்காக சீனாவை அடையாளம் காண்பதில் டைம்ஸ் மிகவும் ஒளிவுமறைவின்றி இருந்தது.
 
அமெரிக்காவுடனான நெருக்கமான பங்காண்மையானது, "சீனா இந்திய பெருங்கடலில் ஒரு கடல்போக்குவரத்து சக்தியாக வளர்வதற்கு ஏற்கனவே முயற்சித்து வருகின்ற நேரத்தில், இந்தியாவிற்குத் தவிர்க்கவியலாத நிர்பந்தமாகும்" என்றது வாதிட்டது. “சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 65 சதவீதம் இந்திய பெருங்கடல் வழியாக கடந்து செல்கின்றன. இப்பகுதியில், முக்கியமாக மலாக்கா ஜலசந்தியில், இந்தியா கடல் போக்குவரத்து மேலாதிக்கத்தைப் பேணுவது மத்திய காலத்திற்கு இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தைப் பேணுவதற்கு முக்கியமாகும்,” என்றது தொடர்ந்து குறிப்பிட்டது.
 
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு இந்திய பெருங்கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி முக்கியமானது என்ற குறிப்பானது, சீனாவுடனான ஒரு போர் நடவடிக்கையில் அல்லது போர் நெருக்கடி சமயத்தில் மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய இந்திய பெருங்கடலின் திணறடிக்கும் முனைகளைக் கைப்பற்றுவதன் மூலமாக சீனா மீது ஒரு பொருளாதார முற்றுகையைத் திணிப்பதற்கான வாஷிங்டனின் திட்டங்களுடன், இந்திய உயரடுக்கு, முழுமையாக இந்திய மக்களின் முதுகுக்குப் பின்னால், எந்தளவிற்கு அணி சேர்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
 
 
khaibarthalam.blogspot.ae

Jun 21, 2016

ரமழானும் உம்மத்தின் அதிமுக்கிய பொறுப்புக்கள் இரண்டும்!

       

 
அல்லாஹ்(சுபு) தனது நிறைவான ஞானத்திலிருந்தும், அதியுயர் அதிகாரத்திலிருந்தும் தனது அடியார்களில் சிலரை விட சிலரை மேன்மைப்படுத்தியிருக்கிறான். பூமியில் சில இடங்களை விட  சில இடங்களையும், சில சமூகங்களை விட சில சமூகங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அது போன்றே ரமழான் மாதத்தை ஏனைய அனைத்து மாதங்களையும் விடவும் சிறப்பான மாதமாக அறிவித்திருக்கிறான். அதற்கொரு முக்கிய காரணத்தையும் அவன் திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
(அல் பகறா:185)

எனவே ரமழானின் அடிப்படைச் சிறப்பு  என்னவென்றால் அது அகிலத்தாருக்கு வழிகாட்டியை கொண்டு வந்திருக்கிறது. அண்ட சராசரங்களை படைத்து கட்டியாளும் அந்த ரப்பின் நற்செய்திகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இறுதித்தூதான புர்கானை மாத்திரமல்லாது, தவ்ராத்தையும், இன்ஜீலையும், சபூரையும் கூட ரமழான் மாதத்திலேயே அல்லாஹ்(சுபு) அருளியிருப்பது ரமழானின் தனிச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

அத்தகைய சிறப்புக்குரிய மாதமான ரமழானிலே திருக்குர்ஆனை அருளிய அல்லாஹ்(சுபு), அது யாருக்கு வழிகாட்டியாகப் பயன்படும்; என்பது பற்றியும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; தக்வா பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல் பகறா:2)

உறுதியான இறைவிசுவாசமும், அனைத்து சந்தர்ப்பத்திலும் அவனது பிரசன்னத்தை மறந்திராத விழிப்புணர்வும், என்றும் அவனது விசாரணைக்கு அஞ்சி வாழ்கின்ற இறையச்சமும் உள்ள ஒருவருக்கே அல்லது ஒரு சமூகத்திற்கே அல்குர்ஆன் வழிகாட்டியாக தொழிற்படும் என்பதே இதன் பொருளாகும். ரமழானிலே மனித குலத்திற்கான வழிகாட்டலை வழங்கியதற்காக அந்த மாதத்தை ஏனைய மாதங்களை விட சிறப்பித்த அல்லாஹ்(சுபு), அந்த வழிகாட்டலால் பயன் பெறக்கூடிய ஒரு சமூகத்தின் முக்கிய பண்பான தக்வாவை வளர்ப்பதற்கான ஓர் பயிற்சியையும் அதே மாதத்திற்குள் பொதித்திருப்பது அவனது வழிகாட்டலின் பரிபூரணத் தன்மையை நிரூபிக்கிறது. ரமழானில் நோன்பை  அல்லாஹ்(சுபு) கடமையாக்கியிருப்பது அதற்காகத்தான். நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விபரிக்கும் இந்த திருமறை வசனம் இதனை தெளிவுபடுத்துகிறது.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தக்வாயுடையோர் ஆகலாம்.
(அல் பகறா:183)

எனவே ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்ற முஸ்லிம் உம்மத்தின் மீது குறைந்தது இரண்டு முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன. முதலாவது, மனிதகுலத்தின் வழிகாட்டியான அல்குர்ஆனை தனது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் அமூல்படுத்த அது தயாராக வேண்டும். அல்லது அதற்காக முயற்சிக்க வேண்டும். இரண்டாவது, அந்த வழிகாட்டலை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளக்கூடய மனோபாவமான தக்வாவை இந்த மாதத்தில் மிக ஆழமாக வளர்த்துக் கொள்ள அது எத்தனிக்க வேண்டும்.

முதலாவது அல்குர்ஆனை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது என்பதன் பொருள் என்ன என்பதை மேற்குறிப்பிட்ட அல் பகறாவின் 185 வசனத்தின் ஊடாக சுருக்கமாக பார்ப்போம்...

இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்குர்ஆனை அல்ஹுதா என அல்லாஹ்(சுபு) அறிமுகப்படுத்துவது “ அது சத்தியத்தின்பாலும், ஸிறாத்தல் முஸ்தக்கீமின் பாலும் வழிகாட்டக்கூடியது என்ற பொருளிலும், கால, இட வேறுபாடுகளைக் கடந்த முழு மனதிகுலத்திற்குமான பூகோள வழிகாட்டி என்ற பொருளிலுமாகும்.

தொடர்ந்து பய்யினாத் மின் அல் ஹுதா என்று அல்லாஹ்(சுபு) தெரிவிப்பது, அந்த வழிகாட்டலுக்கான (அனைத்தையும் பற்றிய) மிகத்தெளிவான விளக்கமாக அது அருளப்பட்டிருக்கிறது என்பதையும், அது எதனுடனும் ஒப்பிடமுடியாத, இன்னொருவரால் கொண்டு வர முடியாத அல்லாஹ்(சுபு) வின் தீர்க்கமான அத்தாட்சி என்பதையும் தெளிவுபடுத்துவதாகும். இமாம் அல் மவர்தி இந்த வசனத்தில் வருகின்ற (பய்யினாத் மில் அல் ஹுதா மற்றும் அல் புர்கான்) என்ற சொல்லாட்சிகள் குறித்து குறிப்பிடும் போது “அது எது ஹலால், எது ஹராம் என்பதை விளக்குவதாகவும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய அளவுகோளாகவும் வந்திருக்கிறது” என விளக்குகிறார்கள்.

இறுதியாக அல்குர்ஆன் தன்னை அல் புர்கான் அதாவது அளவுகோல் என்று அழைக்கும் சொல்லாட்சி அது சத்தியத்தையும், அசத்தியத்தையும், நல்லதையும், கெட்டதையும், நல்ல செயலையும், கெட்ட செயலையும் வேறு பிரிக்கக் கூடியது என்ற பொருளை விளக்குவதாக அமைந்துள்ளது. இமாம் அல் பைதாவி அல்குர்ஆன், தன்னை “பய்யினாத் மின் அல் ஹுதா மற்றும் அல் புர்கான் - என இரு விதமாக அறிமுகப்படுத்துவதன் ஊடாக சொல்லவருவது, அல்லாஹ்(சுபு), அல்குர்ஆனை அற்புதத்தன்மை பொருந்திய, மனிதகுலத்திற்கான வழிகாட்டியாக அருளியுள்ளதுடன் அது சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடிய மிகத்தெளிவான வசனங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது. மேலும் அது தனக்கும்; ஏனைய பிழையான சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் இடையான வித்தியாசத்தை பிரித்துக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது” என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

ரமதான் மாதத்திலே அல்குர்ஆனின் மகிமை பற்றி மஸ்ஜித்கள், குத்பாக்கள், வெகுசன ஊடகங்கள் என அனைத்திலும் ஞாபகமூட்டப்படுவதைப் பார்க்கிறோம். இம்மாதத்தில் அதனை ஓதுவதன் சிறப்புப்பற்றியும், அது தரக்கூடிய அதியுயர் வெகுமதி பற்றியும் நாம் தொடர்ந்து நினைவு படுத்தப்படுகிறோம். எனினும் நாம் மேலே சுட்டிக்காட்டியதைப்போல அதனை முழுமையான அந்தஸ்த்துடன் அணுகுகிறோமா? அல்லது அது வெறுமனவே பாராயணம் செய்வதற்கும், ஒரு சில கிரிகைகளில் ஓதுவதற்கும் மாத்திரம் பயன்படுகிறதா? ஏன் அல்குர்ஆனை ஹுதாவாவும்(வழிகாட்டி), அல் புர்கானாகவும்(அளவுகோல்) நாம் பயன்படுத்துவதில்லை? ஏன் முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களை அல்குர்ஆன் தீர்மானிப்பதில்லை?  இவை போன்ற கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளித்தால் எமது அணுகுமுறையின் ஆபத்து புலப்படுவதுடன் இன்று உம்மத் அடைந்துள்ள இழிநிலை ஏற்பட்டதற்கான காரணிகளும் தெளிவாகும்.

இன்று தராவீஹ் தொழுகைகளிலே அல்குர்ஆன் அதிகமதிகம் பாராயணம்  செய்யப்படுவதும், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்(சுபு) திருப்த்தியைப் நாடி இந்த மாதத்திலே ஒருமுறையேனும் முழு குர்ஆனையும் ஓதி முடிக்க முயன்று வருவதும் சந்தோசமான விடயங்கள்தான். எனினும் அந்த அல் குர்ஆன் எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்தை இன்று வரை எம்மால் நிறைவேற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது? எமது சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நீதித்துறைகள் அனைத்தும் அல்குர்ஆன் வழிகாட்டாத, இஸ்லாம் சொல்லாத அந்நிய சட்டங்களாலும், கொள்கைகளாலும் அல்லவா வழிநடத்தப்படுகின்றன? எமது அகீதாவுக்கும், பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும், வரலாறுக்கும் மாற்றமாக மனித மூளைகளிலிருந்து உதித்த சடவாத சிந்தனைகளினால் அவை கட்டுப்படுத்தப்படுவதையும், முதலாளித்துவ சிந்தனைகளாலும், முறைமைகளாலும் நாம் ஆளப்பட்டு வருவதையும் அல்லவா நாம் அனுபவித்து வருகிறோம்? காலத்திற்கு காலம் சீர்திருத்தம் என்ற வேடம் தரித்து வந்த அந்நிய சிந்தனைகள் அல்குர்ஆனை எமது நடைமுறை வாழ்விலிருந்து படிப்படியாகப் பறித்து விட்ட பிறகு நாம் இந்த இழிநிலையை அடைந்திருப்பது தவிர்க்க முடியாததுதான்.

இஸ்லாமிய அரசியல் அதிகாரம் சுமார் ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் முஸ்லிம்களின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்ட பின்னர் உம்மத்தின் விவகாரங்களை ஆளுகின்ற சட்டங்களும், முறைமைகளும் இஸ்லாம் அல்லாத மூலங்களிலிருந்தும், பெறுமானங்களிலிருந்தும் பெறப்பட்டு மோசடியான கொடுங்கோலர்களின் கரங்களினால் எம்மீது அமூல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடருகின்ற இந்த அரசியல் சாபத்தின் விளைவு சர்வாதிகாரமும், கொடுங்கோலும், வறுமையும், வன்முறையும், பலகீனமும், பாரபட்சமும் கொண்ட தேசமாக எமது தேசம் மாறியிருக்கிறது. அனைத்து வளங்களையும் பெருமளவில் கொண்ட எமது நிலங்கள் தற்போது பொருளாதார மேம்பாடற்ற, கைத்தொழில் முன்னேற்றமற்ற பிராந்தியங்களாகவும், மேற்குலகின் சுரண்டல் சந்தைகளாகவும்  உருமாறியிருக்கின்றன.

ஆனால் நம்பிக்கை தருகின்ற விடயம் என்னவென்றால் எமது மிக அண்மிய வரலாறு மாற்றத்திற்கான வேட்கை உம்மத்தில் மீண்டும் ஓங்கி வருவதை காட்டுகிறது. மக்கள் அதற்காக எவ்விலையையும் தர தயாராகி வருகிறார்கள் என்பதை தெரிவிக்கிறது. அரபுலகில் வெடித்த புரட்சிகள் மக்கள் மத்தியில் பலமான சிந்தனை அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. சிரியாவிலே அரை தசாப்த்தங்களையும் தாண்டி இன்று வரை பஷாருக்கு எதிரான புரட்சி நிலைத்து நிற்கிறது என்றால் அது குறைத்து மதிப்பிடமுடியாத நல்ல சமிஞ்ஞையே. அல்ஹம்துலில்லாஹ்!

உம்மத்தில் தோன்றியிருக்கின்ற இந்த மாற்றம் ஆறுதல் அளித்தாலும் எப்போது அல்குர்ஆன் எமது அரசியல் சாசனத்தின் அடிப்படையாக மாறுகிறதோ, எமது வாழ்வியல் விவகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக செயற்பட ஆரம்பிக்கிறதோ அப்போது மாத்திரமே உண்மையான மாற்றம் சாத்தியமாகும். எமது துயரங்களும், கஷ்டங்களும் அது வரையில் அகழப் போவதில்லை. அந்த உண்மை மாற்றத்தை அடைவதற்கு அல்குர்ஆன் தன்னைத்தான் அறிமுகப்படுத்துவதைப்போல அல்குர்ஆனை உம்மத் பூரண வழிகாட்டியாகவும் (ஹுதாவாகவும்), அந்த வழிகாட்டலின் விளக்கமாகவும், தனது வாழ்வுக்கான ஒரேயோரு அளவுகோலாகவும்(புர்கானாகவும்) முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே மறுமலர்ச்சியின் பாதையில் அதனால் பயணிக்க முடியும்.

அல்குர்ஆனை முஹம்மத்(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் இவ்வாறு எடுத்துக்கொண்டதன் விளைவுதான் அவர்களால்; முழுக்க முழுக்க அல்குர்ஆனிய ஆளுமைகளாக நடமாட முடிந்தது. அல்குர்ஆனிய சமூகமொன்றை முதன்முறையாக மதீனாவில் நிலைநாட்ட முடிந்தது. இதேபோன்றதொரு ரமழான் மாதத்திலே பத்ர் களமானது, யவ்முல் புர்கானாக - (சத்தியவான்கள் யார்?, அசத்தியவான்கள் யார்? எனத் தீர்மானிக்கும் நாளாக) மாறியதென்றால் அதற்கு காரணம் அல்குர்ஆனை அவர்கள் அல்புர்கானாக ஏற்றுக்கொண்டதே. அதேபோல அவர்கள்  அல்குர்ஆனை ஒரு பாரிய சமூகப்புரட்சியின் ஆயுதமாக எடுத்துக்; கொண்டதன்; விளைவுதான் மீண்டும் ஒரு ரமழானில் மக்காவை வெற்றி கொண்டு முழு அரேபிய தீபகற்பத்தையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு அல்குர்ஆன் தம்மீது சுமத்திய பொறுப்பின் பரப்பை ஸஹாபாக்கள் மாத்திரம் புரிந்திருக்க வில்லை. அதற்கு பின்னர் வந்த இஸ்லாமிய சமூகமும் பல நூற்றாண்டுகளாக உணர்ந்திருந்தது. அதனால்தான் எவ்வாறு ரமழான் மாதம் ஸஹாபாக்களுக்கு வெற்றியின் மாதமாக அமைந்ததோ, அவர்களுக்கு பின் வந்தவர்களுக்கும் அது வெற்றியின் மாதமாக திகழ்ந்தது. சலாஹ}த்தீன் அய்யூபி ஹித்தீன் சமரில் சிலுவை யுத்தக்காரர்களுக்கு முடிவு கட்டியதும், ஐன்ஜாலூத் போரில் சைப்புத்தீன் குத்ஸ் தாத்தாரியர்களை முறியடித்ததும் இந்த மாதத்தில்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே அல்குர்ஆனை முழுமையான வழிகாட்டியாக, நிரந்தரமான அளவுகோலாக கைக்கொள்ள வேண்டிய பொறுப்பை இன்றைய முஸ்லிம் உம்மத் ஏற்றாக வேண்டும். அதனை இந்த ரமழான் மாதம் அவர்களுக்கு ஞாபகப்படுத்துமாக இருந்தால் அது விமோசனத்தின் முதற்படியாக அமையும்.

எனினும் தாஹுத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்தின் கீழும், கொடுங்கோண்மையான குப்ரிய ஆட்சிகளுக்கு கீழும் பல இருண்ட யுகங்களை கடந்து வருகின்ற உம்மத்திற்குள் இந்த தலைகீழ் மாற்றம் தோன்றுவது இலகுவான காரியமல்ல. அந்த மாற்றம் மிக உறுதியான ஈமானும், துடிப்புள்ள தக்வாவும் இருக்கின்ற ஒரு உம்மத்தில் மாத்திரமே தோற்றம் பெறும். இந்தக்கருத்து நாம் இந்தக் ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டாவது பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது. அதுதான் தக்வாவை அடைந்து கொள்வது பற்றியது.  அல்லாஹ்(சுபு) நோன்பை கடமையாக்கியிருப்பதும், இராப்பொழுதுகளில் நின்று வணங்கச் சொல்லியிருப்பதும் அல்லாஹ்(சுபு)வின் பிரசன்னத்தை கனப்பொழுதும் மறவாத ஓர் உயர்ந்த உம்மத்தை தோற்றுவிக்கவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரமழானிலே இரவு பகலாக வளர்க்கப்படும் இந்த மனோபாவம் அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டலை உம்மத்தின் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமூல்படுத்துவதற்கு இன்றியமையாதது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், எத்தனை சோதனைகளை கடக்க வேண்டி ஏற்பட்டாலும் அவனது தீனை இந்த உலகத்திலே நிலை நாட்டுவதற்கு தக்வா எனும் இந்த மனோநிலையே அடிப்படையான ஆயுதம். எப்போது தக்வா என்னும் இந்த மனோநிலை உம்மத்திடம் வலுவிழந்து போனதோ, எப்போது அல்லாஹ்(சுபு)விற்கு மாற்றாக அவனது சிருஷ்டிகளின் பால் அதனது அவதானமும், அச்சமும் தோன்றியதோ அப்போதே அழிவின் பாதையை அது திறந்து விட்டது. அந்த அழிவின் பாதையில் மிக நீண்ட தூரம் பயணித்தது. தக்வாவுடையவர்களுக்கு மாத்திரம்தான் இந்த அல்குர்ஆன் வழிகாட்டும் என அல்லாஹ்(சுபு) கூறியதை மெய்ப்படுத்தும் விதமாக தக்வா இல்லாத நிலையில் அல்குர்ஆன் அணுகப்பட்டபோது உம்மத்தின் வழிகாட்டலுக்கும், வளர்ச்சிக்கும் அது வடிகாலாக அமையவில்லை. உம்மத் தக்வாவின் வீழ்ச்சியால் அல்குர்ஆன் வசனங்களுக்கு தனது ஆசாபாசங்களுக்கு ஏற்ப விளக்கம் அளிக்க முற்பட்டது. கிரேக்க தர்;க்கத்தின் அடிப்படையிலும், இந்திய தத்துவங்களின் அடிப்படையிலும் அதனை வியாக்கிஞானம் செய்தது. பிற்காலத்தில் அதிகளவில் மேற்குலக சிந்தனைகள் அவற்றின் இடத்தை பிடித்தன. சத்தியமும், அசத்தியமும் கலந்த, இஸ்லாமும், குப்ரும் குலைந்த ஒரு கலவையை நவீன கால இஜ்திஹாத், நடைமுறைக்கேற்ற இஸ்லாம் என்று அது பெருமிதத்துடன் அறிமுகம் செய்தது. இவ்வாறு உம்மத் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே அதனது வாழ்விலிருந்து அல்குர்ஆன்; பறிக்கப்பட்டது. அது வெறுமனவே மனனமிடுதலுக்குள்ளும், அழகான பாராயணத்துக்குள்ளும், அலங்காரமான பிரதிகளுக்குள்ளும் முடங்கிப்போனது. எதனால் இந்த உம்மத்திற்கு வெற்றியும், கண்ணியமும் கிட்டியதோ அந்த ஆற்றல் சக்தி அதனிடமிருந்து பறிபோனது.

அதனால் அன்று முஃமீன்களைக் கண்டால் குலைநடுங்கிய குஃப்பார்கள்; இன்று முஃமீன்களின் முதுகுகளில் ஏறி சவாரி செய்யும் நிலை தோன்றியிருக்கிறது. உம்மத்தின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதனது வளங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. சுயமரியாதையும், கண்ணியம் இழந்த நிலையை அது அடைந்து நிற்கிறது. அதனது பிரச்சனைகளுக்கு அந்நியர்கள் பஞ்சாயத்து சொல்கிறார்கள். அல்குர்ஆன் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் குஃப்ரிய சிந்தனைகள் அமர்ந்துள்ளன. மொத்தத்தில் இஸ்லாமிய வரலாற்றில் என்றும் வீழ்ந்திடாத அதலபாதாளத்தில் இன்றைய உம்மத் வீழ்ந்து கிடக்கிறது.

எனவே உம்மத் இந்த மாபெரும் வீழ்ச்சியிலிருந்து மீண்டு, மீள வரலாறு படைக்க வேண்டுமென்றால் இந்த  ரமழானில் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதிலும், அவனுக்கு கட்டுப்படுவதிலும் தனது உட்சாகத்தையும், விருப்பத்தையும் வெளிக்காட்டுகின்ற உம்மத் ரமழானுக்கு இந்தச் சிறப்பு எங்கிருந்து வந்தது என்பது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ரமழான் அல்குர்ஆன் அருளப்பட்டதால்தான் சிறப்பிக்கப்பட்டதென்றால் அந்த அல்குர்ஆன் இந்த உலகில் எந்த நோக்கத்தை நிறைவேற்ற வந்தது என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். அல்லாஹ்(சுபு)வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கான வழிகாட்டல் அல்குர்ஆனிலிருந்து மாத்திரம்தான் ஊற்றெடுக்க முடியும் என்பதை அது முழுமையாக நம்ப வேண்டும். தனது வாழ்விற்கான ஒரேயொரு அளவுகோல் அல்குர்ஆன் மாத்திரம்தான் என்பதில் அது உறுதியாக நிற்க வேண்டும். அத்தகைய ஒரு சூழல் உலகில் தோற்றம் பெறவேண்டுமென்றால் அது அல்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியால் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதையும் அது உறுதியாக நம்ப வேண்டும். எனவே இந்த ரமழான் அத்தகையதோர்; தூய இஸ்லாமிய அரசியற் தலைமையை நிலைநாட்ட உழைக்கின்ற உம்மத்தை தயார்படுத்துமானால் அது ரமழானின் நோக்கத்தையும், அதிலே அருளப்பட்ட அல்குர்ஆனின் நோக்கத்தையும் ஒருசேர நிறைவேற்றிய பெருமையைப் பெறும். இன்ஷா அல்லாஹ்!
 

Jun 20, 2016

பள்ளிவாசல் பரிபாலனம்

இறை இல்லங்களை பரிபாலனம் செய்வது பொறுப்பான ஒரு பணியாகும். மஸ்ஜிதுகளை நிர்மாணிப்பதும் பரிபாலிப்பதும் நேர்வழி பெற்ற சிறந்த முஃமின்களின் பண்பாக அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 9: 18)



நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஒரு கறுப்பினப் பெண் இருந்தாள். பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்வது அவளது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் அவளைக்காண முடியவில்லை. இதனை அவதானித்த நபியவர்கள் அவளைப் பற்றி விசாரித்தார்கள். அவள் இறந்து விட்டதாக அன்னாருக்கு தெரிய வந்தது. “அவள் இறந்த செய்தியை அப்போதே நீங்கள் எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா?” என்று தோழர்களை விழித்துக் கூறிய நபியவர்கள், அவளது கப்ரை தரிசித்து அவளுக்காக தொழுகையையும் நிறை வேற்றினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)



இது மஸ்ஜிது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் சிறப்பை எடுத்துச் சொல்லப் போதுமான ஆதாரமாகும். மஸ்ஜித்களை நிர்வகிப்பது ஓர் உயர்ந்த அமலாக இருப்பது போலவே ஒரு பெரிய பொறுப்புமாகும். இந்த வகையில் தகுதியுடையவர்கள் பரிபாலன சபையில் இருக்கின்றபோதே ஒரு பள்ளிவாசல் அதன் பணியை செவ்வனே நிறைவேற்ற முடியும். பரிபாலன சபைக்கு நியமிக்கப்படுவோர் அல்குர்ஆன் குறிப்பிடும் மஸ்ஜித் பரிபாலனத்திற்குரிய தன்மைகளையும் தகைமைகளையும் பெற்றவர்களாக இருக்கின்றார்களா என்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.



“அல்லாஹ்வுடைய பள்ளிகளை பரிபாலனம் செய்பவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வையன்றி மற்ற எவருக்கும் பயப்படாமலும் இருப்பவர்களே. இத்தகையோர் நேர்வழி பெற்றவர்களாக இருக்கத்தக்கவர்களே.” (அல்குர்ஆன் 9: 18)


அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத், பொறியியலாளர் ரீஸா யஹ்யா

இமாமின் வகிபங்கு

பள்ளிவாசல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இமாம் மிகச் சிறந்த ஒருவராக, நன்கு கற்றுத் தேர்ந்த, மார்க்க விவகாரங்களில் ஆழமான விளக்கமுடைய சமூகப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்த, பல கோணங்களிலும் சிந்தித்து செயலாற்றக்கூடிய செயற்திறனுடையவராக, சாணக்கியமிக்கவராகத் திகழ வேண்டும். மக்களால் புரிந்து கொள்ள முடியாத விடயங்களை இமாமினால் புரிந்து கொள்ள முடியுமாக இருக்க வேண்டும்.

எந்தவொரு விடயத்தையும் ஷரீஆ கண்னோட்டத்திலும் அறிவியல் பூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் நோக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். நல்ல மனப்பாங்கும் நுண்ணறியும் திறனும் அவரிடம் குடிகொண்டிருக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு எட்ட முடியாத சந்தர்ப்பங்களில் அல்லது சிறந்த, பொருத்தமான தீர்வை முன்வைக்கும் நோக்கில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

குலபாஉர் ராஷீதீன்கள் காலப் பகுதியில் ஆட்சியாளரே (கலீபா) பள்ளிவாசல் இமாமாகவும் கடமையாற்றினார். உமைய்யா, அப்பாஸிய காலப் பகுதியில் ஆட்சியாளர் மார்க்கத்தின் தலைவராக, இமாமாக கடமையாற்ற வில்லை. இதன் விளைவாக மத்ஹப்கள் தோற்றம் பெற்றன. ஆட்சியாளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இன்று பள்ளிவாசல் நிர்வாகமே குறித்த பிரதேசத்தை அல்லது ஊரைக் கட்டுப்படுத்துகிறது. இந்நிலை மாறி இமாம் முழு ஊரையும் பகுதியையும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்குமளவு ஆளுமை பெற்றவராகத் திகழ வேண்டும்.

பள்ளிவாசல் இமாம் ஷரீஆத் துறையில் முதமானி அல்லது முதுகலைமானிக் கற்கைகளை நிறைவு செய்தவராக அல்லது ஷரீஆத் துறை உட்பட்ட பல்வேறு துறைகளிலும் தேர்ச்சிமிக்கவராக நவீன தொழில்நுட் பங்களைக் கற்றறிந்தவராக திகழ்ந்தால் ஊர் மக்கள் இமாமைத் தேடி வருவார்கள். ஊரில் இடம்பெறும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆற்றல், ஆளுமை அல்லது பிரச்சினையை இனங்கண்டு எத்தகைய துறைசார்ந்தோரைக் கொண்டு இதற்குத் தீர்வு காணலாம் என்று வழிகாட்டக் கூடிய ஓர் இமாம் பள்ளிவாசலுக்கு தலைமை தாங்கினால் அந்த இமாமைத் தேடி மக்கள் பள்ளிவாசலுக்கு வருவார்கள். அப்போது அந்த இமாமினால் மக்களுக்கு கட்டளை பிறப்பித்து அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். அப்போதுதான் சமூக மாற்றம் சாத்தியப்படும்.

சமூகத்தை வழிநடத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகத்தின் பங்கை விட இமாமின் பங்கு மகத்தானது. உமைய்யா, அப்பாஸிய காலத்தில் இமாம்களே சமூகத்தை வழிநடத்தினார்கள். இமாம்கள் ஆட்சியாளரின் தீர்ப்புக்கு முரணாக நேர்மையான தீர்ப்புக்களை வழங்கினர்.

தொழுகை ஒரு முஸ்லிமின் தக்வாவை அதிகரிப்பது போல பள்ளிவாசல் சமூகத்தின் தக்வாவை அதிகரிக்க வேண்டும்.


அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத், பொறியியலாளர் ரீஸா யஹ்யா

கடந்தகால மற்றும் நிகழ்கால இறையில்லங்களின் நிலைமைகள்:

நமது காலங்களில் உள்ள இறையில்லங்களையும், நமது கடந்தகால நேர்வழி பெற்ற முன்னோர்கள் காலத்து இறையில்லங்களையும் நாம் ஒப்பு நோக்குவோமானால் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. நமது முன்னோர்கள் சத்தியத்தை (ஹக்) கவனமாக எடுத்துக் கொண்டார்கள். வெளித்தோற்றத்தையல்ல. ஆனால் நாம் வெளித்தோற்றத்தை எடுத்துக் கொண்டு சத்தியத்தை விட்டு விட்டோம். எல்லாமே தலைகீழாக ஆகிவிட்டது. இறையில்லங்கள் ஜங்கால தொழுகை நிறைவேற்றிப்பட மட்டும், பயன்படுத்தப்பட்டு பிறகு முடப்பட்டுவிடுகின்றன. இதன் முடிவு இறையில்லங்கள் முஸ்லிம்கள் வாழ்வியல் விவகரங்களிருந்து முற்றிலும் புறக்கணிக்கபட்டுவிட்டது. மார்க்கத்திலிருந்து நடைமுறை வாழ்கையை பிரிக்கும் நோக்கத்தோடு அரசியல் பேச்சாளர்களும் ஆலோசனை கர்த்தாக்களும் மதத்தை அரசியலுடன் கலக்கக்கூடாது என்ற ஆட்சியாளர்களின் கருத்தை ஓங்கி ஒழிப்பதற்காக தங்கள் கோஷங்களை நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மத புரோகிதர்களுக்கு அரசியலில் எந்த வேலையுமில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் முடியாது இஸ்லாம் என்பது அரசியல் , பொருளாதாரம், சமூகம், நீதி நிர்வாகம்  ஆகிய அனைத்து
துறைகளையும் உள் அடக்கிய ஒரு முழுமையான மார்க்கம். இதில் எந்த ஒன்றையும் பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்தால் முழுமையான இஸ்லாமாக இருக்காது.

 இறுதியாக இறையில்லம் என்பது இஸ்லாம் என்ற மார்கத்தின் செய்திகள் உருவாக்கப்பட்ட இடம். இந்த இடத்திலிருந்துதான் இஸ்லாமிய மாபெரும் தலைவர்கள் தங்களது ஒளிமயமான பயணித்தை ஆரம்பித்தார்கள். உலகம் எங்கிலும் இஸ்லாத்தின் சங்க நாதத்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். ஆம் அந்த மதினாவின் இறையில்லம் மிகமிக எளிமையானதாகும். அதன் தரை பாகம் கூலன்ங்கற்களை கொண்டு பரப்பப்பட்டது. அதன் விளக்குகள் இரவில் மட்டும் ஏற்றப்பட்டது. அதன் கூரைகள் ஈத்த மர ஓலை கொண்டு வேயப்பட்டது.

முஸ்லிம்களே! அறிந்துகொள்ளுங்கள்.நாம் சத்தியத்தை விட்டுவிட்டு வெளிதொற்றதை மட்டும் தக்கவைத்து கொண்டு துர்பாக்கியசாலிகளாக இருக்கிறோம்.உயர்ந்து நிற்கும் மினாரக்களையும்,எழில் கொஞ்சம் இறை இல்லங்களையும் அமைத்து பெருமை பாராட்டி கொள்ளும் நாம் இஸ்லாத்தின் உயிர துடிப்பான செயல்களை செய்வதுமில்லை நினைத்து பார்ப்பதும் இல்லை ஆகவே இறை இல்லங்களை அலங்கரிக்கும் செயல்களில் நம்மை நாம் உட்படுத்தி கொண்டு இறை இல்லங்களின் தனித்தன்மையும் அதன் முக்கியத்துவத்தையும் பாழ்படுத்திவிட்டு அங்கு சச்சரவையும் இனபாகுபாடுகளையும் கொண்டுவரவேண்டாம் இப்போது நம்மிடம் பாகிஸ்தானிய பள்ளி, சிரியா பள்ளி, பாரசிக பள்ளி, குர்திஸ் பள்ளி, துருக்கி பள்ளி என்று எண்ணில் அடங்காத பிரிவு இறை இல்லங்கள் இருக்கிறது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளிகும் சொந்தமான இறை இல்லங்களும் கட்சிகளுக்கு சொந்தமான இறை இல்லங்களும் மத்ஹபுகளுக்கு சொந்தமான இறை இல்லங்களும் இருக்கின்றன அவைகள் ஒன்றில் மற்றொரு பிரிவுகள் சொல்வதை தடுத்துக் கொள்கின்றன. இஸ்லாத்தின் செய்திகள் அவைகளுக்கு இரண்டாம் பட்சம்தான்.தலைமைதுவதிற்கும், அதிகாரத்திற்கும் பிழைத்திருக்கும் தந்திரத்திற்கும் தான் முதலிடம். இவையெல்லாம் இன்று நமது இறையில்லங்களில் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இறையில்லம் அல்லாஹ்(சுபு)விற்கு சொந்தமானது என்று இஸ்லாம் கூறியபோதும் இவ்வாறு நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.


அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல்-குர்ஆன் 72:18)


ஆகவே நாம் வலியுறுத்துவது என்னவெனில் முக்கியமாக இஸ்லாமிய குழுக்களுக்கும், கட்சிக்களுக்கும், இமாம்களுக்கும், இறையில்லங்களில் அவர்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும் அதன் கதவுகளை உண்மையான முஸ்லிம்களுக்கும் என்றும் திறந்து வைத்திருக்க வேண்டும். அறிஞர்களுக்கும் சுஜூத் செய்பவர்களுக்கும்,மார்க்கத்தை போதிப்பவர்களுக்கும்,இஸ்லாம் மார்க்கதின்ம்படி முஸ்லிம்களின் அனைத்து  வாழ்வியல் விவகாரங்களும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக பணிபுரிபவர்களுக்கும் அது எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.அப்போது மட்டும்தான் அல்லாஹ்வின் திருநாமம் இறை இல்லங்களில் உயர்ந்து ஒலிக்கும். அப்போது மட்டும்தான் முஸ்லிம்கள் நல்லக்காரியங்களில் பங்கு கொள்வார்கள்.தீயவற்றில் இருந்து தங்களை காத்து கொள்வார்கள் தங்களின் சமூகத்திற்காக அவர்கள் பொறுப்பெடுத்து சிந்தனை செய்வார்கள். இந்தநிலை மீண்டால்தான் இறை இல்லங்கள் தனது பழைய அசலான நிலைக்கு வந்துவிட்டது என்று கூறமுடியும்.அங்கு இஸ்லாமிய தீனும்,அல்லாஹ்வின் திருநாமமும் மறுபடியும் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

இறை இல்லங்களில் அல்லாஹ் தனது திருநாமங்கள் துதி செய்யப்படுவதையும். உயர்த்தப்படுவதை அனுமதித்து இருக்கிறன் (குர்ஆன்)

இறையில்லங்களின் பக்கம் உங்கள் முகங்களை திருப்பியவர்களாக அல்லாஹ்விடம் அவனுடைய மார்கத்தை (மேலோங்குவதற்காக) பணிந்து வேண்டுங்கள்.


Source - இஸ்லாத்தில் இறை இல்லத்தின் பங்களிப்பு

Jun 19, 2016

சோமாலிய சிறுமிக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலக ஓநாய்கள் - சினிமா விமர்சனம்

சினிமா எனும் கலை ஒரு வகையில் அரசியல் பிரச்சாரம் தான். ஹாலிவூட் திரைப்படங்கள், மேற்கத்திய அரசியலை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உதவுகின்றன. தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் Eye in the Sky  எனும் திரைப்படம், அமெரிக்காவின் ட்ரோன் யுத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றது.

தென்னாபிரிக்க டைரக்டர் Gavin Hood இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளார். அவரும் அதில் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தென்னாபிரிக்காவில் படமாக்கப் பட்டாலும், ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பாக இருக்கலாம். 

எது எப்படி இருப்பினும், இந்தத்  திரைப்படத்தின் நோக்கம் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களுக்கு பிரிட்டன் வக்காலத்து வாங்குவதாக உள்ளது.

இது தான் கதைச் சுருக்கம்: 

கென்யாவில் அல்ஷஹாப் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கதை நடக்கிறது. (அது சோமாலியாவாகவும் இருக்கலாம்) அங்கே ஒரு அமெரிக்க பிரஜையும், இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளும் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதில் ஒருவர் மதம் மாறிய வெள்ளையின ஆங்கிலேய பெண்மணி, மற்றய இருவரும் சோமாலிய பூர்வீகம் கொண்ட இளைஞர்கள்.

கென்யா இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இயங்கும், பிரிட்டிஷ் படையினர், அவர்களை ட்ரோன் மூலம் தாக்கியழிக்க திட்டமிடுகின்றனர். சோமாலிய உளவாளிகளை வைத்து தகவல் திரட்டுகின்றனர். கமெரா பொருத்திய இயந்திரப் பறவைகளை பறக்க விட்டு மறைவிடங்களை கண்காணிக்கின்றனர்.

எதிர்பாராத விதமாக, சதித்திட்டம் தீட்டும் தீவிரவாத குழுவினர் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் ஒரு சிறுமி இருக்கிறாள். அந்த வீட்டின் மதிலருகில், தெருவில் கடை போட்டு, பாண் (பிரெட்) விற்றுக் கொண்டிருக்கிறாள்.

ட்ரோன் தாக்குதலுக்கு தயாராகும் பிரிட்டிஷ் படை அதிகாரிகள், தமது நாட்டு அமைச்சர்கள் மட்டுமல்லாது, அமெரிக்க அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு அனுமதி கோருகின்றனர். "அமெரிக்க பிரஜையாக இருந்தாலும் அல்ஷஹாப் இயக்கத்தில் சேர்ந்து விட்டால் எங்கள் எதிரி..." என்று அமெரிக்க அமைச்சர் கூறுகின்றார்.

சோமாலிய உளவாளி இயக்கிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய இயந்திர வண்டு ஒன்றில் வீடியோக் கமெரா பொருத்தப் பட்டுள்ளது. அதன் வீடியோவில் இருந்து, அல்ஷஹாப் உறுப்பினர்கள் அந்த வீட்டிற்குள் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிடுவது தெரிய வருகின்றது. பிரிட்டிஷ் படை அதிகாரிகள், அதைக் காட்டி ட்ரோன் தாக்குதலை நியாயப் படுத்துகின்றனர்.

"தற்கொலைக் குண்டுதாரி வெளியே போனால் ஏராளமான பொது மக்களை கொல்லப் போகிறான். அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக, ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி கொல்லப் பட்டாலும் பரவாயில்லை" என்கின்றனர். அப்படி இருந்தும் பிரிட்டிஷ் அமைச்சர் அனுமதி தர மறுக்கிறார். "அல்ஷஹாப் தாக்குதலில் ஏராளமான  பொதுமக்கள் கொல்லப்  பட்டால், அது எமக்கு பிரச்சார  வெற்றி. அதே  நேரம், எமது ட்ரோன் தாக்குதலில் சிறுமி கொல்லப் பட்டால், அது அல்ஷஹாப் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி" என்று வினோதமான காரணம் ஒன்றைக்  கூறுகின்றார்.

கடைசியில் எப்படியோ, அமைச்சர்கள் அனைவரையும் ஒத்துக் கொள்ள வைத்து, மேலதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தாலும்,  ட்ரோன் விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும் படைவீரர்கள் குண்டு வீசத் தயங்குகின்றனர். அதற்குக் காரணம் "அந்த இடத்தில் இருக்கும் அப்பாவி சிறுமியும் கொல்லப் பட்டு விடுவாள்"!

இதற்கிடையே, அவர்களது உத்தரவின் படி சிறுமியிடம் செல்லும் சோமாலிய உளவாளி, அவளிடம் இருந்த பாண் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறான். ஆனால், தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் அல்ஷஹாப் போராளிகள், அவன் "கென்யா இராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பவன்" என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர். அதனால் சிறுமியை காப்பாற்றும் திட்டம் பாழாகின்றது.

இருப்பினும், குண்டு வீச்சின் தாக்குதல் திறனை குறைக்கலாம் என திட்டமிடுகின்றனர். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்ற நிலையில், அல்ஷஹாப் சதிகாரர்கள் இருக்கும் வீட்டின் மீது ட்ரோன் குண்டு வீசுகின்றது. அந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற சிறுமி, மருத்துவமனையில் இறக்கிறாள். வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்தாலும், சம்பந்தப் பட்ட எல்லோரும் தாக்குதலில் பலியான சிறுமிக்காக அழுகிறார்கள்! அத்துடன் படம் முடிகின்றது.

படம் முழுவதும் ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, அரசுத் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் மனம் இரங்குவது நம்பும் படியாக இல்லை. ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்திகளை கேள்விப் பட்டவர்களுக்கு, அது வெறும் பாசாங்கு. சினிமா எமக்குக் காட்டுவது உண்மையான கண்ணீர் அல்ல, அது நீலிக் கண்ணீர். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை இது தான்.

அது சினிமாப் படம். நிஜ வாழ்வில் உலகம் எப்படி இருக்கின்றது? அமெரிக்க படையினர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, யேமன் போன்ற பல நாடுகளில் இன்று வரைக்கும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வருவது போலில்லாமல், பல தாக்குதல்கள் இரவு நேரத்தில் நடக்கின்றன. இருட்டுக்குள் துல்லியமாகப் பார்க்கும் கமெரா பொருத்தப் பட்டாலும், ஆயுதபாணிகளுக்கும், பொது மக்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

பெரும்பாலும் ஆயுதபாணி இயக்கங்களின் முக்கிய தலைவர்களை குறி வைத்துக் கொல்வதற்கு ட்ரோன்கள் பயன்படுகின்றன. எல்லா நேரத்திலும் உளவுத் தகவல்கள் சரியாக அமைந்து விடுவதில்லை. எல்லா நேரத்திலும் குண்டுகள் ஆயுதபாணிகளை மட்டும் கொல்வதில்லை. பொது மக்களின் வீடுகள் மீதும் குண்டுகள் போடப் பட்டுள்ளன. தெருவில் சென்ற பொதுமக்களும் கொல்லப் பட்டுள்ளனர். அதில் பிள்ளைகளும் அடங்குவார்கள். 

பொது மக்களின் இழப்புகளை ஏற்றுக் கொள்ளும் அமெரிக்க அரசு, ஒப்பீட்டளவில் மிகக் குறைவு என்று சொல்கின்றது. ஆனால், ட்ரோன் தாக்குதல் நடத்திய படையினர் தாம் அப்பாவிப் பொது மக்களை, அதிலும் குழந்தைகளையும் கொன்ற குற்றவுணர்ச்சி காரணமாக வருந்துகின்றனர். ஆனால், எல்லோரும் அப்படியான மனோபாவத்துடன் இருப்பதில்லை. 

"பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டி விட்டோம்" என்று குதூகலிப்பவர்கள் தான் அதிகம். குறிப்பாக, அரச மட்டத்தில் யாரும் வருந்துவதில்லை. பொதுமக்கள், குழந்தைகள் கொல்லப் பட்டதாக தகவல் வந்தாலும், தாங்கள் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம் என்று சாதிப்பார்கள். சினிமாவில் காட்டுவது மாதிரி அவர்கள் யாரும் மனச்சாட்சியுடன் நடப்பதில்லை. பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து என்றைக்குமே கவலைப் பட்டதில்லை. 
 
 
Khaibar Thalam

Jun 18, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-04

யூதர்களின் திட்டங்கள் - இஸ்ரேல்_உருவாகிய_வரலாறு - தொடர்: 04

எப்படிப்பட்ட திட்டங்களை தீட்டி யூதர்கள் பலஸ்தீன் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என இனி பார்க்கலாம்.

முதலில் அவர்கள் ஓர் இயக்கத்தை தொடங்கினார்கள். உலகெங்கிலும் உள்ள யூதர்கள் பலஸ்தீனை நோக்கி இடம்பெயர வேண்டும் அங்கு சொத்துக்களை வாங்க வேண்டும் என்பது தான் அவ்வியக்கத்தின் குறிக்கோள் பிரச்சாரமாக இருந்தது.

இதன்படி 1880ம் ஆண்டு முதல் புலம்பெயர்வு தொடங்கியது. ஐரோப்பாவில் வசித்துவந்த யூதர்கள் ஒருவர் பின் ஒருவராக பலஸ்தீனில் குடியேறினார்கள்.

அதன் பின் புகழ்பெற்ற யூத தலைவனான #தியோடர்_ஹெர்சல் 1897ம்ஆண்டு #ஜியோனிஸ்ட்_மூவ்மென்ட் எனப்படும் யூத இயக்கத்தை துவங்கினான். (Zionist organization -ZO) பலஸ்தீனை கைப்பற்றுவது மற்றும் ஹைஹலுஸ் ஸுலைமானியை மீண்டும் கட்டுவது என்பனவற்றையே அவ்வியக்க குறிக்கோளாக அறிவித்தான். இதற்காக யூதர்கள் கோடிக்கணக்கில் செல்வங்களை வழங்கினர்.

Zionist movement இன் முதல் மாநாடு வட சுவிஸ்லாந்தின் பெஸ்லே நகரில் நடைபெற்றது. அப்போது தியோடர் தன்னுடைய டயரியில் பின்வருமாரு எழுதினான். " பெஸ்லேயில் யூத தேசத்தை நான் கண்டுகொண்டேன் என்பதை நான் அறிவித்தால் உலகமே என்னை பைத்தியக்காரன் என்று சொல்லும். ஐந்து அல்லது ஐம்பது அண்டுகளில் இந்த பேருண்மையை உலகம் உணர்ந்து கொள்ளும். "

1901ம் ஆண்டு தியோடர் இஸ்லாமிய கலீபாவான #சுல்தான்_அப்துல்_ஹமீது_கான் இடம் தன்னுடைய தூதரை அனுப்பி வைத்தான்.
"பலஸ்தீன் பகுதியை யூத தேசமாக அறிவித்துவிட வேண்டும். அதற்கு பதிலாக துருக்கிய அரசின் கடன்களை நாங்கள் கொடுத்துவிடுகிறோம்".
இதுதான் அவன் கொடுத்தனுப்பிய செய்தி

இதை கலீபா ஏற்றுக்கொள்ளவில்லை. காரித்துப்பி நிராகரித்துவிட்டார். " நான் உயிரோடு இருக்கும் வரை துருக்கி கிலாபத் நிலைத்திருக்கும் வரை பலஸ்தீனை யூதர்களிடம் ஒப்படைப்பது நடைபெறாது.உங்களது அனைத்து செல்வங்களின் மீதும் காரி உமிழ்கிறேன்" என கூறிவிட்டார்.

தியோடர் கலீபாவிடம் பேசுவதற்காக அனுப்பிய யூத தூதுவனின் பெயர் #கர்ரா_ஸவ்_ஆவ்பந்தி ஆகும்.

அதாவது இஸ்லாமிய கலீபாவிடம் நேருக்கு நேர் பலஸ்தீன் மண்ணுக்கு விலை பேரம்பேசும் அளவுக்கு யூதர்களின் பலம் கூடியிருந்தது.

பேரத்தை மறுத்த கலீபாவை நோக்கி யூத தூதுவன் "நாங்கள் சொல்வதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்" என எச்சரிக்கை செய்யும் அளவு அவன் துணிச்சல் பெற்றிருந்தான்.

கிலாபத் இருக்கும் வரை பலஸ்தீன் பற்றிய தங்கள் கனவு பலிக்காது என தெரிந்த யூதர்கள் கிலாபத்தை உடைக்கும் பணிகளில் இறங்கினார்கள்.

பிரீமேசன்,தோனாமா,மற்றும் மேற்கத்தைய கல்வியை கற்று துருக்கிய தேசியவாதத்துக்கு பலியான இளைஞர்களும் யூதர்களின் சதியில் பங்குபற்றினர்.

(இங்கு தோனாமா எனப்படுவோர் முஸ்லிம்களாக வெளியில் நடித்த யூதப்பற்றாளர்கள்)

இவர்கள் யூத இராணுவத்தின் உதவியையும் பெற்றார்கள்.

கடைசியாக இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டது. சுல்தான் அப்துல் ஹமீது கான் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதன்போது வரலாற்றிலே_மிக_மிக_கேவலமான_சம்பவம் முஸ்லிம் உம்மத்தால் நிகழ்த்தப்பட்டது. இதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அதாவது

1908ம் ஆண்டு கலீபா அப்துல் ஹமீதிடம் "நீங்கள் பதவியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள்" எனும் செய்தியை சுமந்தவாரு மூன்று நபர்கள் சென்றார்கள். அதில் இருவர் துருக்கியர். மூன்றாம் நபர் யார் தெரியுமா???

நாம் ஏற்கனவே பார்த்த #ஹர்ரா_ஸவ்_ஆவ்பந்தி அவனே தான். பலஸ்தீனை பேரம்பேச சென்று கலீபா காரி உமிழ்ந்து அனுப்பினாரே அவனேதான்.

முஸ்லிம்கள் செய்த ரோஷம்கெட்ட கேவலமான பணி இது. கலீபாவை நீக்கியும் விட்டு அந்த செய்தியை யாரிடம் கொடுத்து அனுப்பினார்கள் என்று பார்த்தீர்களா???

எந்த யூதனை காரி உமிழ்ந்து கலீபா விரட்டினாரோ அவனிடம் "நீ வெளியே போகலாம்" என்ற செய்தியை கொடுத்தனுப்பினார்கள் இந்த மானம்கெட்ட உம்மத்.

நான் காரித்துப்பியவனே என்னை வெளியே போ என்று சொல்லும் போது கலீபாவின் மனம் எப்பாடுபட்டிருக்கும் என கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

இன்சா அல்லாஹ்...
தொடரும் ....


சிந்தனை கலஞ்சியம்


 #புகைப்படம்:- கலீபா கிலாபத்தை விட்டு வெளியேறும் காட்சி



 

Jun 17, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-03

யூதர்களின் நன்றி கெட்டத்தனம்
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அதாவது கி.பி.70ம் ஆண்டிலேயே ஹைஹலுஸ் ஸுலைமானி உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டது. இதை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம்.
ஆனால் இஸ்லாத்தின் மீள்வருகைக்கு பின் உமர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலே பைத்துல் முகத்திஸ் வெற்றிகொள்ளப்படுகிறது. அப்போது அங்கே யூதர்களின் எந்தொரு வழிபாட்டுத்தலமும் இல்லை. மாறாக ஒருசில கட்டிட சிதலங்களே அங்காங்கு காணப்பட்டன.
எனவே மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பொன்னிற கூரை கொண்ட கூவ்வதுஸ் ஸக்ராவையும் எங்கள் வழிபாட்டுத்தலங்களை அழித்துவிட்டே முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள் என யூதர்கள் போலிக்குற்றச்சாட்டு சுமத்த முடியாது.
இவை வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் உண்மைகளாகும்.
இனி ஐரோப்பாவில் யூதர்கள் எப்படி நடாத்தப்பட்டார்கள் என பார்ப்போம்
 
ஐரோப்பியர்களுக்கு யூதர்கள் சபிக்கப்பட்ட ஓர் இனமாகவே கருதப்பட்டார்கள்.
இங்கிலாந்து மன்னர் ‪#‎முதலாம்_எட்வர்ட்‬ 1290ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதில் யூதர்கள் அனைவரும் இங்கிலாந்தின் எல்லையை விட்டே வெளியேறிவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கிறித்தவ பாதிரிகளும் நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து யூதர்களுக்கு எதிராக மக்களை திரட்டும் பணியை செவ்வனே செய்தார்கள்.
பிரான்ஸ்ஸில் ‪#‎மன்னர்_பிலிப்ஸ்‬ 1302ல் யூதர்கள் அனைவரும் பிரான்ஸை விட்டே போய்விடவேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
அதேபோன்று
1498ம் ஆண்டு ‪#‎12ம்லூயிஸ்_மன்னர்‬ யூதர்கள் ஒன்று நாடுதுறக்க வேண்டும் அல்லது கிறித்தவத்துக்கு மாற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
ஜேர்மனிலும் ரஸ்யாவிலும் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலும் யூதர்கள் சொல்லொனா துயரங்களுக்கு ஆளானார்கள். அவர்கள் மீது சமூக பொருளாதார அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
ஒரு சில நாடுகள் யூதர்கள் எவரையும் விட்டுவைக்காது நாட்டைவிட்டே வெளியேற்றும் பணியை செய்தன. இன்னும் சில நாடுகளோ குறிப்பிட்ட சில நிலப்பரப்பை ஒதுக்கி அவ்விடங்களில் மட்டுமே யூதர்கள் வாழ வேண்டும் என்றும் வேறு இடங்களுக்கு செல்லலாகாது என்றும் தடை விதித்தன. அப்பகுதிகளை சுற்றியும் பெரும் அரண்களை போன்று சுவர்கள் எழுப்பப்பட்டன. இப்பகுதிகள் "‪#‎ஹெட்டோ‬" என அழைக்கப்படுகின்றன.
இனி யூதர்கள் தொடர்பாக முஸ்லிம்களின் நிலைப்பாட்டை பார்க்கலாம்
 
உஸ்மானிய கிலாபத்தின் கலீபாவான ‪#‎2ம்_பயாஸீத்‬ 1493ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதாவது தன்னுடைய ஆட்சி எல்லைக்குள் வசிக்கின்ற யூதர்களோடு மக்கள் நன்முறையில் நடந்துகொள்ளவேண்டும் என்பதே அந்த அரசாணை.
இவ்வாறு யூதர்கள் கடந்த 13நூற்றாண்டுகளாக (அதாவது 1924 கிலாபத் வீழ்ச்சியடையும் வரை )யூதர்கள் ஓர் இடத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள் என்றால் அது முஸ்லிம்களின் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியின் கீழ் தான் என்பது யூதர்களும் மறுக்க இயலாத உண்மையாகும்.
ஸ்பெயின்(உந்துலிஸ்) நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த காலம் தான் எங்களுடைய வரலாற்றில் பொற்காலம் என யூத வரலாற்று ஆசிரியர்களே கூறியுள்ளார்கள்.
அழுகைக்கதவு என்ற ஒன்றை யூதர்கள் தம்முடைய மதத்தின் புனித பொருளாக கருதிவருகின்றார்கள். இந்த கதவு கூட முஸ்லிம்களின் கருணையால் தான் யூதர்களுக்கு கிடைத்தது. அதாவது இக்கதவு மண்ணுள் புதையுண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு காணாது போயிருந்தது. முற்புதர்களும் குப்பைகூளங்களும் அதை மூடிவிட்டிருந்தன. கி.பி. 16ம் நூற்றாண்டில் சுல்தான் சலீம் உஸ்மானி ஆட்சிக்காலத்தில் அக்கதவு கண்டுபிடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு யூதர்கள் அதை தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. (ஆதாரம்:- News from Israel bulletine july1987, the government of isrel Bombay)
ஆனால் இந்த நன்றிகெட்ட இனம் இன்று என்ன செய்கிறது???
இன்சா அல்லாஹ்....
தொடரும்.....

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-02

பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் யூதர்கள் எவரும் நுழைய கூடாது என ரோமானியர்கள் தடைவிதித்திருந்தனர். இவ்வாறாக பலஸ்தீனில் ஒரு யூதர்கள் கூட இல்லை என்ற நிலை காணப்பட்டது.
மேற்கூறப்பட்ட வரலாற்றிலிருந்து பின்வரும் முடிவுகளை நாம் எடுக்கலாம்
1. பலஸ்தீன் எங்களது பூர்வீக நிலம் என யூதர்கள் கூறுவது முற்றிலும் பொய்
2. இனப்படுகொலை செய்து அங்கு வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்துவிட்டே அவர்கள் அங்கு குடியேறினர்.
3. வட பலஸ்தீன் பகுதியில் அதிகபட்சம் ஐந்து நூற்றாண்டுகளே வாழ்ந்தனர்.
4. தென்பலஸ்தீனில் அதிகமாக எட்டு நூற்றாண்டுகளே யூதர்கள் வாழ்ந்தார்கள்
5. அரபுக்கள் வட பலஸ்தீன் பகுதியில் 25 நூற்றாண்டுகளும் தென் பலஸ்தீன் பகுதியில் 20 நூற்றாண்டுகளும் வசித்து வந்தனர்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க இன்று யூதர்கள் என்ன கூறுகிறார்கள்??
பலஸ்தீன் எங்களது மூதாதையர் வாயிலாக எங்களுக்கு கிடைத்த பூமியாகும். இறைவன் எங்களுக்கு வாக்களித்த பூமியாகும். எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியை எப்படியாவது வலுக்கட்டாயமாக அடைந்தே தீருவோம். அதாவது அங்கே யார் வாழ்ந்தாலும் அவர்களை இனத்தோடு அழித்துவிட்டு அப்பிரதேசத்தை அடைந்தே தீருவோம். அதற்கான உரிமை எங்களிடம் இருக்கின்றது. என கூறுகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் ஒரு பிரார்த்தனையை செய்து வருகின்றார்கள். ""பைத்துல் முகத்திஸ் எங்களது கைகளில் வந்து சேர வேண்டும் அங்கே கைஹலுஸ் ஸுலைமானை நாங்கள் நிறுவ வேண்டும் "" என்பதே அந்த பிரார்த்தனை.
அதுமட்டுமல்ல யூதர்களின் வீடுகளில் நடைபெருகின்ற சடங்குகளில் தவறாமல் ஒரு நாடகம் சித்தரிக்கப்பட்டு நடிக்கப்படுகிறது. எகிப்திலிருந்து நாம் எவ்வாறு வெளியாகினோம். பலஸ்தீன் பகுதியில் எவ்வாறு குடியேறினோம். பபிலோனியர்கள் எவ்வாறு துரத்தியடித்தனர். பலஸ்தீன் பிரதேசத்தில் எவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டோம். என்பன எல்லாம் அந்நாடகத்தில் சித்தரிக்கப்படுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு யூத குழந்தையின் மனதிலும் யூத தேசம் உன்னுடையது அதை அடைவதே உன் வாழ்வின் இலட்சியம் அங்கு கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவதே உன் இலக்கு எனும் நச்சுக்கருத்து விதைக்கப்படுகின்றது.
கி.பி.12ம் நூற்றாண்டு புகழ் பெற்ற யூத தத்துவ ஞானியான "மூசா இப்னு மைமூனிடஸ்" தன்னுடைய யூத நூலான " The code of jews law" எனும் நூலில் தெளிவாக எழுதியுள்ளதாவது:- " பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் கைஹலுஸ் ஸுலைமானியை நிறுவுவது யூதனாக பிறந்த ஒவ்வொரு நபரினதும் வாழ்க்கை குறிக்கோளாகும்."
இதற்காகவே Free Mason Movement அமைப்பினை உருவாக்கி உலகலாவிய ரீதியில் கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவது தொடர்பான கருத்தலைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த தகவல்களின் அடிப்படையில் இன்று அடிக்கடி பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் தீப்பற்றி எரிவதும் அங்காங்கே தீப்பற்றி எரிவதும் அவ்வளாகத்தை இலக்காக கொண்டு பல தாக்குதல்கள் நடைபெறுவதும் இவர்களின் திட்டத்தின் செயற்பாடுகளே.
ஆக யூதர்கள் அவர்களது முயற்சியில் வெற்றி பெறவே முயற்சி செய்வார்கள்.
இன்சா அல்லாஹ்.....
தொடரும் .......