Showing posts with label ஆப்கானியர்கள். Show all posts
Showing posts with label ஆப்கானியர்கள். Show all posts

Oct 28, 2015

பாகிஸ்தான், ஆப்கன் நிலநடுக்க பலி 300 ஆக அதிகரிப்பு

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.  

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.
 
வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
 
இதனால் பாகிஸ்தானின் ஸ்வாட், பெஷாவர், கசூர், கல்லார் கஹார், பைஜார் பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
 
நிலநடுக்கத்துக்கு ஆப்கானிஸ்தானில் 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
இதேபோல பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் 237 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தரப்பில் பலி மற்றும் காயமடைந்தவர்களின் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
The Hindu

Sep 16, 2015

ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய அகதிகள்


ஆப்கானியர்கள் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய அகதிகள்


ஹெலினா மாலிக்யர்

இவர் ஆப்கான் அரசியல் ஆய்வாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.

கடந்த ஆண்டு வரை, ஆப்கானியர்கள் தான் உலகின் பெரிய அகதி மக்கள்காக இருந்தனர் என்று எழுதி இருக்கிறார்.

மேலும் அவர் இதை பத்தி கூறும் போது ஏன் நாம் ஆப்கான் பற்றி பேசவில்லை? என்று வினாவை தொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வரை நாட்டின் முழு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆப்கானியர்கள் அகதி மக்கள்காக இருந்தன. கிட்டத்தட்ட 2.6 மில்லியன் மக்கள்களை  அகதியாக்கி உள்ளனர். இன்று 12 சதவிகித்தை தாண்டிய சிரியா மக்களால் இவர்கள் இரண்டாவது மிகப் பெரிய அகதிகள் குழுவாக ஐரோப்பிய கடற்கரையும் மற்றும் எல்லையும் கடந்து வருகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனம், அறிக்கையின்படி, 40,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஐரோப்பாவில் தஞ்சம் முயன்று வருகின்றன.

பல தசாப்தங்களாக ஆப்கான் அகதிகள் நேரிட்டதே துன்பியல், பல பயங்கரமான மரணம்  மேற்கத்திய மற்றும் சொல்லப்படாத கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்கள். இன்னும் பல குடும்பங்கள்  எளிமையாக ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் செய்திய கேட்க காத்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் நிலைமை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக  இன்னும் மாறவில்லை.

கடந்த வாரம் ஆஸ்திரிய காவல்துறை தனியாக இருந்த ஒரு சிறிய வேன் பின்புறம் அடைக்கப்பட்டு இருந்த  24 இளம் ஆப்கானியர்கள் மீட்கப்பட்டனர். இது போலவே ஆஸ்திரியாவில் ஒரு லாரியில் 71 பேர் இறந்து கிடந்தனார்.

Source: Al Jazeera