Aug 29, 2015

அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 02


இஸ்லாத்திற்கு முன்பு!!

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு, அபூபக்ர்(ரழி) அவர்களின் இயற்பெயர் அப்துல் கஅபா என்பதாகும். இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டபின் அப்துல்லாஹ் என்று  அழைக்கப்பட்டார். ஆனால் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களைலும் சரி, அதன் பின் நாட்களைலும் சரி அவரது இயற்பெயர் மறைந்து, அபூபக்ர் என்று  அழைக்கப்பட்டார்.
அபூபக்ர் என்பது அவரது சிறப்புப் பெயராகும். நபியவர்கள் அவரை அன்போடு சித்தீக்என்றும் அழைக்கவே அபூபக்ர் சித்தீக் என்று அவரது பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்டது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர்(ரழி) அவர்களும் முர்ராஎன்ற ஒரே வம்சப் பரம்பரையிலிருந்து வந்தவர்கள். அபூபக்ர்(ரழி) அவர்களின் தாய் மற்றும் தந்தை உதுமான் இப்னு அபிகுஹாஃபா அவர்கள் இஸ்லாமிய நெறியைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபோது அவர்களின்  தந்தைக்கு 90 வயதாகி இருந்தது.

ஹிஜ்ரத்திற்கு முந்தைய 50 ஆண்டுகளுக்கு முன்பாக அபூபக்ர்(ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அந்த கால கட்டத்தில் கூட, குறைஷிக் குலத்தவர்களில் அபூபக்ர்(ரழி) அவர்கள் நல்ல மரியாதைக்குரிய ஒருவராகத் திகழ்தார்.

அபூபக்ர்(ரழி) மக்காவில் பிறந்து வளர்த்தாலும், வியாபார நிமித்தமாக அடிக்கடி சிரியா, யமன் போன்ற  நாடுகளுக்குச் சென்று வரக் கூடியவராக இருந்தார்கள். வியாபார நிமித்தமாக மக்காவை விட்டுச் சென்ற பொழுது அவர்களுக்கு வயது 18.

 இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்வதற்கு முன்னரே அபூபக்ர்(ரழி) அவர்களிடம் காணப்பட நல்லொழுக்கங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்காக மக்களிடம் மிகவும் மதிப்புள்ள மனிதராகத் திகழ்தார்கள். பிரச்சனைக்குரிய விஷயங்களில் மக்கள் இவர்களிடம் வந்து கலந்தாலோசனை செய்வதும், அபூபக்ர்(ரழி) அவர்கள் கூறக் கூடிய கருத்துகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகயும் மக்கத்து மக்கள் போற்றி வந்தார்கள். 

அன்றைய அரபுலகத்தில் கொலைக்குப் பகரமாக இரத்த இழப்பீட்டுத் தொகைப் பெற்றுக் கொள்ளும் வழக்கமிருந்தது. அவ்வாறு பெறக் கூடிய பணம் அபூபக்ர்(ரழி) அவர்களின் சம்மதமில்லாமல் பெறப்படுவதில்லை என்றதொரு நிலை அன்றைய நாட்களில் நிலவி வந்தது. இஸ்லாத்தைத் தலுவுவதற்கு முன்பு மதுவின் வாடையைக் கூட நுகராத மனிதராகத் திகழ்ந்தவர்தான் அபூபக்ர்(ரழி) அவர்கள். 

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு!!

இஸ்லாத்தின் ஒளிக்கதிர்கள் மக்காவில் பரவுவதற்கு முன்புள்ள கால கட்டத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடிக்கடிப் பார்த்துப் பேசி வரும் வழக்கமுள்ளவராக அபூபக்ர்(ரழி) அவர்கள் இருந்தும், நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்பு முதன் முதலாக விடுக்கப்பட்ட அந்த நாட்களில் அவர் யமன் நாட்டில் இருந்தார்கள். பின் அங்கிருந்து மக்காவிற்கு திரும்பிவந்த அபூபக்ர்(ரழி) அவர்களை அபூ ஜஹ்ல், உத்பா, சைபா போன்ற மக்காவில் உள்ள பிரபலமானவர்கள் சென்று சந்தித்தனர்.  

விட்டிற்குத்  தன்னைப் பார்க்க வந்த அபூ ஜஹ்ல், உத்பா, சைபா போன்றொரைப் பார்த்து "என்ன விஷயமாக வந்து இருக்கிக்கிறார்கள்? ஏதேனும் விசேஷ செய்தி உண்டா? என்று அபூபக்ர்(ரழி) அவர்கள் வினவினார்கள்.

"ஆம். அது ஒரு மிகப் பெரிய செய்தி! அபூதாலிபின் பாதுகாப்பில் வளரக் கூடிய அந்த அனாதை. தன்னை இறைத்தூதர் என்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார். நாங்கள் உங்கள் உடைய வருகைக்காகததான் காத்து இருக்கிறோம். நீர் வந்த உடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.இன்னும் இதில் உம்முடைய ஆலோசனை என்ன என்பதையும் நாங்கள் அறிய மிக ஆவலாக இருக்கிறோம். அதற்காகத் தான் உங்களது இல்லம் வந்தோம்". என்று தாங்கள் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தி, விஷத்தை கக்கினர்.

செய்தியைக் கேள்விப்பட்ட அபூபக்ர்(ரழி) அவர்கள் தன்னைப் பார்க்க வந்த பெருந்தலைகளை விட்டுவிட்டு, தன் ஆருயிர் தோழரை காண விரைந்து சென்றார்.
நபி(ஸல்) அவர்களை சந்தித்த அபூபக்ர்(ரழி) அவர்கள், "தோழரே ! நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா?" என்று கேட்டார்கள்.

அதற்கு, "ஆம்! என்று உரைத்தார் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.
" உங்களுடைய அந்த அழைப்பின் பொருள் என்ன?" என்று அபூபக்ர்(ரழி) என்று கேட்டார்கள்.

"லா இலாஹ இல்லல்லாஹ்!  முஹம்மதுர்  ரசூலுல்லாஹ்!"  என்ற ஓரிறைக் கொள்கையின் தத்துவத்தை அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் விளக்கிச் சொன்னார்கள்.

அதன்பின்னர் அபூபக்ர்(ரழி) அவர்கள், “முஹம்மது நபிஸல்) அவர்களே! என் அன்புத் தோழரே! நான் உங்களது அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் என்றுமே பொய் கூறியது இல்லையே!” என்று கூறி, திருக்கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஏற்றக் கொள்கை அர்ப்பணித்தார்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

குறிப்பு : முழு வரலாற்றை படிக்க கலிஃபாக்கள் வரலாறு நூலை வாங்கி படிக்கவும்.

சிரியாவில் இருந்து ஐரோப்பாற்கு தஞ்சம் அடையும் முஸ்லிம்கள்!!

 
சிரிய மோதல் : தப்பி வந்த அகதிகள் உயிர்களை போர் , அடக்குமுறை, வறுமை தப்பிக்க முயன்று ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆண்டு ஐரோப்பாவில் நுழைந்திருக்கின்றன. பெரும்பாலான சிரியாவில் மோதல் வெளியேறுபவர்கள் , மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அகதிகள் வகைப்படுத்தப்படுகின்றன. மோதல் மேற்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது முதல், சுமார் எட்டு மில்லியன் மக்கள் - அல்லது மக்கள் தொகையில் 40% - தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். நான்கு மில்லியன் மக்கள் அண்டை மாநிலங்களில் இப்போது பெரும்பாலான, முற்றிலும் நாட்டைவிட்டே வெளியேறி உள்ளனர்.
 
இந்த செய்தியை BBC நிறுவனம் தெரிகிறது.

Aug 27, 2015

ஏழை அகதிகளின் இடுகாடு!!!


மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு!!! ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம் பெயர்பவர்களின் எண்ணிக்கையில் நடப்பு ஆண்டான 2015-லும் எந்த மாற்றமும் இல்லை. அதாவது அகதிகளாக வருவொர் பிணங்களாக கரையேறுகிறார்கள் – அந்த எண்ணிக்கைதான் அப்படியே தொடர்கிறது.

வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி வருகிறார்கள். ஜூலை மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் அகதிகள் மத்தியத் தரைக்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் வந்திறங்கியதாக உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முந்தைய மாதத்திலும் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு இதுவரைக்கும் 1 இலட்சத்து 24 ஆயிரம் அகதிகள் கிரீசுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு, மே மாத கடைசியில் மட்டும் ஐரோப்பாவை சேர்ந்த கடற்படை மற்றும் வியாபார கப்பல்கள் மொத்தம் 1,770 அகதிகளை மத்தியத் தரைகடல் பகுதியில் மீட்டுள்ளனர். உலகிலேயே அதிக அளவு அகதிகள் கப்பல்கள் தரைத் தட்டும் இடமாக மத்தியத் தரைக்கடல் உள்ளது.

கிரீஸில் உள்ள லெஸ்போஸ் (Lesbos), காஸ் (Kos) மற்றும் சியோஸ் (Chios) தீவுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஐரோப்பாவிற்கான உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் செயலாளர் வின்சென்ட் கோசெடேல் (Vincent Cochetel) அகதிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர் வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் தங்குமிடங்கள் செய்து கொடுக்க முடியாத இந்த குழப்பமான சூழலை எனது 30 ஆண்டு அனுபவத்தில் கண்டதில்லை என்கிறார். இது வரையில் நிகழ்ந்த அகதிகளின் உயிரிழப்பில் மிகப்பெரியதும் கொடூரமானதும் இந்த ஆண்டில் நிகழ்ந்த அகதிகள் கப்பல் விபத்தாகும்.

லிபியாவின் திரிபோலியில் இருந்து கிளம்பிய அகதிகள் கப்பலில் இருந்த 850 பேரில் 350 பேர்கள் எரித்திரியாவை சேர்ந்தவர்கள். மீதி இருந்தவர்கள் சோமாலியா, சிரியா, மாலி, ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் உள்ளிட்டு 34 பேர்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். 

உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015-ம் ஆண்டில் மட்டும் 30,000 அகதிகள் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இறந்த அகதிகளில் வட ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 1,722 என்கிறது.

இங்கே மிகவும் கொடூரமான விஷயம் என்னவெனில், போன ஆண்டின் இறப்பு எண்ணிக்கையான 3,271 இந்த ஆண்டின் தொடக்க வாரங்களிலேயே எட்டப்பட்டு விட்டது.
அகதிகளின் இந்த நிலைக்கு முதன்மையான காரணம் ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக ஆப்பிரிக்க கண்டம் மாற்றப்பட்டதுதான். அது தோற்றுவித்த கலவரங்களும், உள்நாட்டுப் போரும், அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆட்கடத்தல் கும்பல்களின் முக்கியமான இலக்கு இந்த காரணங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளும் அதன் மக்களும் தாம்.

ஜூலை 27 அன்று 2,000 க்கும் மேற்பட்ட அகதிகள் பிரான்ஸ், காலேசில் (Calais) உள்ள ஐரோப்பிய சுரங்க வளாகத்தில் நுழைய முயற்சி செய்தனர். அங்கிருந்து இங்கிலாந்தை சென்றடைய செய்த இந்த கடுமையான முயற்சியில் ஏராளமானோர் காயமுற்றனர். பிரான்ஸ் போலிஸ் 200 அகதிகளை கைது செய்துள்ளனர் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இந்த கோடையில் மட்டும் 8 அகதிகள் ரயில் டிரக்கில் ஏற முற்பட்டு இறந்து போயினர்.
ஏற்கனவே பிரான்சில் 3000 பேர்கள் அகதிகளாக உள்ளனர். இந்த அகதிகளை கட்டுப்படுத்தத் தவறுவதாக பிரான்சும் பிரிட்டனும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றன.

பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் தெரசா மே மற்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு காசிநியூ இருவரும் சேர்ந்து வெளியிட்ட கடிதத்தில், பெரும்பான்மையான அகதிகள், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வழியே பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு வருவதாக் கூறினர்.
இதற்கு நிரந்தர தீர்வாக இருவரும், ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம் பெயர்வோரின் எண்ணிக்கையை குறைப்பது தான் என்று ஒரே குரலில் கூறியிருக்கின்றனர். .

கடுமையான சட்டங்கள் போடுவதன் மூலமாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலமாகவும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுபடுத்த வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் விடுக்கின்றன. உலகம் முழுதும் இந்த ஏழை எளிய உழைக்கும் மக்கள் இருமுறை புலம் பெயர்ந்துள்ளனர். காலனி ஆதிக்க காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்கள் நேரடியாக ஆப்பிரிக்க ஆசிய மக்களை அடிமைகளாக இழுத்து சென்றனர். பிறகு இன்றைய மறுகாலனிய காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களின் போர்சக்கரத்தில் மாட்டிய ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் உள்நாட்டு நிலைமைகள், அம்மக்களை தமது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இரண்டாவது முறையாக நவீன அடிமைகளாக விரட்டுகின்றன. அதிலொரு பகுதி மக்கள் தாம் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாய் வீசியடிக்கபடுகின்றனர்.
21-ம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் பலிபீடங்களாக ஆசிய ஆப்ரிக்க ஏழை நாடுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த கொடூரத்தின் வடிவம் தான் மாறியுள்ளதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை. அகதிகளாக புலம் பெயர்ந்து செல்லும் மக்களில் ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். - தகவல் வினவு. 

"முஸ்லிம்கள் ஒரு உடலைப் போன்றவர்கள் உடலின் ஒரு பகுதி காயம் அடைந்தால் அதை மற்ற பகுதி சரி செய்யும் என நபி (ஸல்) கூறினார்கள். ஆனால் நாம் உம்மத்தை பற்றி சிறிதும் கவலைப்படாமல், அவற்களின் நிலையை மாற்ற முயற்ச்சி செய்யாமல் இருப்பது நமது குப்ரு சிந்தனையை உள்வாங்கியதன் விளைவு!!! அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான இறைநம்பிக்கையாளன் ஆக மாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்!!! ஒரு கணம் சிந்தியுங்கள் நாம் எல்லாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்தானா??? 

எப்போது மாறும் உம்மத்தின் நிலை "!!!

From facebook bro Muhammad Noorulla

லிபியாவைச் சேர்ந்த 51 அகதிகள் பலி!!!

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்"  

நடுக்கடலில் மூச்சுத் திணறல்: 




லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற கப்பலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 51 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
லிபியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டுப்போர் காரணமாக அந்த நாட்டைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் குடிபெயர்ந்து வருகிறார்கள்.
கடல்மார்க்கமாக செல்லும் அவர்கள், பழுதடைந்த படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்செல்வதால் அடிக்கடி நடுக்கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி, உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை லிபியா மற்றும் இத்தாலி கடற்பகுதியில் 2,400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இத்தாலி கடற்படையினர் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற கப்பலில் இருந்து 51 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான பயணத்தின்போது இவர்கள் மூச்சுத் திணறல் காரணமாகப் பலியாகியுள்ளனர். கப்பலின் மையப்பகுதியில் இருந்த அறையில் சிக்கித் தவித்தவர்களை மரக்கட்டைகளை உடைத்து மீட்க முயற்சி செய்யப்பட்டது. அறைக்குள் 51 பேர் சடலமாக காணப்பட்டுள்ளனர். அவர்களது சடலும் மீட்கப்பட்டது. கப்பலில் அறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள், மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர் என்று தெரியவந்துள்ளது. 


- தினமணி.

Aug 24, 2015

அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 01

முதலாம் கலிஃபா
அபூபக்ர் (ரழி)



புனித மக்கா

1400 ஆண்டுகளுக்கு முன் வறுமை!! பசி!! இதைத் தவிர வேற எதுவும் தெரியாது.
கிடைத்ததை வைத்து வாழ்க்கை நடத்தும் கொடிய நிலை. வறுமையை பயன்படுத்தி அவர்களை அடிமையாக்க முனைந்தது யூதர்களின் பணக்காரக் கூட்டம். வட்டி எனும் கொடிய விதையை வதைத்து, அதை பெரும் விருட்சமாய் வளரவிட்டிருந்தனர்.

வறுமை காரணமாக கொள்ளை.

வளமின்மை காரணமாக வழிப்பறி.

வளம் வேண்டி செய்யும் கொலை.

என மாபாதகங்கள் ஒரு புறம் அந்த அரபுப் பகுதியை ஆட்டிப் படைத்தன.
எல்லா ஊர்களிலும் உள்ளது போன்ற ஏற்றத்தாழ்வு அங்கும் உண்டு. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் மட்டுமில்லை; இன, மொழி, நிற வித்தியாசங்களும் அங்கே கடைப்பிடிக்கப்பட்டதுண்டு.

நாகரிகம் செத்துப் போய் அநாகரிகம் பொருத்திருத்த வேலை அது. நாகரிகம் பேசினால் அவன் பைத்தியக்காரன். மனிதாபிமானம் பற்றி சிந்தித்தால் அவன் ஏமாளி என்பது தான் அந்த காலக்கட்டத்தின் நிலையாக இருந்தது.

இறைவழிபாடு கூட கேலிக் கூத்தாக்கப்பட்ட காலமது!! புனித இல்லம் கபாவில் நிர்வாணமாய் வலம் வருவர். குளவிக் குரல் எழுப்பி, கும்மாளம் போடுவதுதான் வழிபாட்டு முறை.

இப்படி எல்லா வகையிலும் சீர்கெட்டு, சிதைந்து போய் இருந்த மக்காவில்தான் அபூபக்ர்(ரழி) அவர்கள் பிறக்கிறரர்கள். அபூபக்ர் என்பது அவர்களின் குறிப்புப் பெயராகும்.

அவர்களின் பெயர் : அப்துல்லாஹ்

தந்தை பெயர் : உதுமான் (அபிகுஹாஃபா)

தாய் பெயர் : உம்முல் கைர் (ஸல்மா)

‘தைம்’ எனும் வம்சத்தில் பிறந்தார். இவரின் வம்சாவழித் தொடர்பில்தான் நபி(ஸல்) அவர்களின் வம்சாவழியும் இணைக்கிறது.

அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு சித்தீக் (அதிகமாக உண்மைபடுத்துபவர்) என்ற புனைபெயரும் உண்டு. இஸ்லாமிய வரலாற்றில் அபூபக்ர் சித்தீக் என்ற பெயரை விட்டு விட்டு எந்த குறிப்பையும் எழுத இயலாது என்பது நிதர்சனம்.

நபி(ஸல்) அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியின் போதும் அவர்கள் உடன் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் “நீங்கள் நபிதான் என வர்க்கா பின் நவ்ஃபல் அவர்கள் கூறிய பின் ஆண்களில் முதலில் இஸ்லாத்தை உண்மை என நம்பி ஏற்றவர்கள் இவர்கள்தான்.

3660. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். 
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன். (புகாரி)

3656. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார். 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி)

நபி(ஸல்) அவர்களின் பேரன்பை பெற்ற அபூபக்ர்(ரழி) அவர்கள் பேரரறிராகவும் திகழ்ந்தார் என்பதற்கு பின்வரும் ஹதிஸ் சான்றாக உள்ளது.

3654. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், 'அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்" என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம். இறைத்தூதர் தாம் அந்த சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி - ஸல் - அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூ பக்ர் - ரலி - அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூ பக்ர்(ரலி) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூ பக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூ பக்ரின் வாசலைத் தவிர" என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பாசப்பிணைப்பில் இருந்தவரும், இஸ்லாமிய வளர்ச்சியில் பேரருவமிக்கவரும், சொர்க்கத்திற்குரியவர் என அடியாளம் காணப்பட்டவருமான அபூபக்ர்(ரழி) அவர்களின் வரலாற்றை இன்ஷா அல்லாஹ் தெரிந்து கொள்வோம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


குறிப்பு : முழு வரலாற்றை படிக்க கலிஃபாக்கள் வரலாறு நூலை வாங்கி படிக்கவும்.

Aug 22, 2015

கலிஃபாக்கள் வரலாறு என்ற நூலிருந்து...

நூல் பெயர் : கலிஃபாக்கள் வரலாறு
ஆசிரியர் :  மஹ்முத் அஹ்மத் கழன்ஃபர்
தமிழில் : M.S.S அப்துல் ஹமீது
வெளியீடு : சாஜிதா புக் சென்டர் 
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

பதிப்புரை: எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்... எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!! அவனுடைய சாந்தியும் சமாதானமும் அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களை பின்தொடர்ந்து நல்அமல் செய்யும் அனைவரின் மீதும் உண்டாவதாக!! இஸ்லாம் எனும் இறைமார்க்கம் உலக எங்கும் பரவி கிடக்கிறது. முஸ்லிம்கள் மட்டுமே வாழும் நாடுகளும், இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தி இஸ்லாமிய எமது கொள்கை என ஏற்று பிரகடனம் செய்த நாடுகளும் உண்டு. பாமரர்-படித்தவர்-விஞ்ஞானி என பலரும் இஸ்லாத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர். இப்படி வளர்ச்சி அடைந்துவரும் இஸ்லாத்தின் அடித்தளம் நபித்தோழர்கள் என்றால் அது மிகையாகாது. நபி (ஸல்)அவர்கள் தூய இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொன்ன போது, நபி (ஸல்)அவர்களுக்கு துணை நின்ற ஒரே காரணத்திற்காக சொந்த மண்ணிலிருத்து துரத்தப்பட்டரர்கல். கொலை செய்வதற்குத் துணித்து, நபி (ஸல்)அவர்கள் மீது வன்மம் கொண்டு அலைந்த கொடியவர்களுக்கு மந்

தியில் எந்த தயக்கமுமின்றி துணிவோடு நபி (ஸல்)அவர்களை ஆதரித்து தோள் கொடுத்தார்கள் அந்த தியாகச் சீலர்கள். இஸ்லாத்தை எல்லோருக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களின் சொத்து சுகங்களை தானம் செய்தார்கள். அதுமட்டுமல்ல உயிரையும் இழந்தார்கள். எனவே தான், 
 
“எனது தோழர்களை ஏசாதீர்கள்! “எனது தோழர்களை ஏசாதீர்கள்! எனது உயிரை தன் கைவசம் வைத்திருப்பான் மீது ஆணையாக! உங்களின் ஒருவர் உஹத் மலையைப் போன்ற அளவிற்கு தங்கமாக செலவு செய்தலும், எனது தோழர்களான அவர்களில் ஒருவர் இருகைக் கொள்ளளவு செய்த தர்மத்தையோ, அதில் பகுதியையோ பெற்றுக் கொள்ள முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                                                      நூல்: புகாரி (3673)

இந்த நபிமொழி, நபித்தோழர்களின் சிறப்பை உச்சிக்கு கொண்டு செல்கிறது.இப்படி இஸ்லாத்திற்காக பாடுபட்டவர்களுக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்களின் உற்றத் தோழர்களாக, நபி (ஸல்) அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று உலக ஆட்சியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்த அபூபக்ர் சித்தீக் (ரழி), உமர் (ரழி), உதுமான் (ரழி மற்றும் அலி (ரழி) ஆகிய நான்கு கலிஃபாக்களின் வரலாற்றை இன்ஷா அல்லாஹ் வரும் பதிவுகளில் பாக்கலாம். 

Aug 21, 2015

குழப்பமான சூழ்நிலையில் தனித்திருக்க இஸ்லாம் வலியுறுத்துகிறதா?


ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடமிருந்து அபூஇத்ரீஸ் அல்கவ்லானி அறிவித்ததாக புஸ்று இப்னு உபைதுல்லாஹ் அல்ஹளரமி அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ، فَجَاءَنَا اللهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ شَرٌّ؟ قَالَ: «نَعَمْ» ، فَقُلْتُ: هَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ؟ قَالَ: «نَعَمْ، وَفِيهِ دَخَنٌ» ، قُلْتُ: وَمَا دَخَنُهُ؟ قَالَ: «قَوْمٌ يَسْتَنُّونَ بِغَيْرِ سُنَّتِي، وَيَهْدُونَ بِغَيْرِ هَدْيِي، تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ» ، فَقُلْتُ: هَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ؟ قَالَ: «نَعَمْ، دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا» ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، صِفْهُمْ لَنَا، قَالَ: «نَعَمْ، قَوْمٌ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا» ، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَمَا تَرَى إِنْ أَدْرَكَنِي ذَلِكَ؟ قَالَ: «تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ» ، فَقُلْتُ: فَإِنْ لَمْ تَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ؟ قَالَ: «فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ عَلَى أَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ
அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் மக்கள் நன்மையைப்பற்றி வினவிக்கொண்டிருந்தார்கள். தீமை என்னை பீடித்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அதுபற்றி நான் அவர்களிடம் வினவினேன்.அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஜாஹிலிய்யத்திலும்,தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம்.அப்போது அல்லாஹ் (இஸ்லாம் என்ற) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான்.ஆகவே இந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா? என்று நான் கேட்டேன்.ஆம்! என்று அவர்கள் பதிலுரைத்தார்கள்.அந்த தீமைக்குப் பிறகு ஏதேனும் நன்மை ஏற்படுமா? என்று நான் வினவினேன். ஆம்! அதில் புகைமூட்டம் (கலங்கல்) இருக்கும்!என்று அவர்கள் கூறினார்கள்.புகைமூட்டம் என்றால் என்ன? நேர்வழியல்லாத ஒன்றைக்கொண்டு வழிகாட்டுவார்கள். அவற்றில் நன்மையையும், காண்பாய்; தீமையையும் காண்பாய்; அந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா? என்று நான் வினவினேன். ஆம்! ஒரு கூட்டத்தினர் நரகத்தின் வாயிலை நோக்கி (மக்களை) அழைப்பார்கள். அதை ஏற்றுக்கொண்டவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார்கள்! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்களைப்பற்றி எங்களுக்கு விவரியுங்கள் என்று நான் கூறினேன். அவர்கள் நம்மை சேர்ந்தவர்களாகவும், நமது மொழிகளை பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அது என்னை பீடித்துக் கொள்ளும் பட்சத்தில் எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். முஸ்லிம்களின் ஜமாஅத்தையும், இமாமையும் பற்றிப்பிடிப்பீராக என்று கூறினார்கள். மக்கள் மத்தியில் அந்த ஜமாஅத்தும் இமாமும் இல்லை என்றால் என்ன செய்ய? என்று நான் வினவினேன். ஒரு மரத்தின் வேர் பாகத்தை உமது பற்களால் கவ்விப் பிடிக்க நேர்ந்து, அதே நிலையில் உமக்கு மரணம் ஏற்பட்டாலும் இந்த பிரிவினர்கள் அனைவரையும் விட்டு விலகியிருப்பீராக! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை சிலர் மேற்கோள் காட்டி குழப்பமான காலகட்டத்தை முஸ்லிம்கள் அடைந்துவிட்டதால் ஒவ்வொரு முஸ்லிமும் தனித்து செயல்படவேண்டுமென்றும்,இனி வர இருக்கும் காலகட்டம் இன்னும் மோசமாக இருக்குமென்றும்,காடுகளுக்கு சென்று விவசாயம் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் உயிர் வாழ வேண்டுமென்றும், அல்லது அவரவர் தங்கள் ஈமானை பாதுகாத்துக்கொள்ள தனித்து வாழவேண்டுமென்றும் கிலாஃபத்தின்மூலம் அல்லாஹ் அருளிய சட்டங்களை இந்த பூமியில் நிலைநிறுத்துவதற்கான உழைப்பை செய்யாமல்  ஒதுங்கி இருக்கவேண்டுமென்றும் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இந்த ஹதீஸில் பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்கள் சந்திக்க இருக்கும் நல்ல சூழ்நிலை குறித்தும், மோசமான சூழ்நிலை குறித்தும்,அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒவ்வொரு முஸ்லிமும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மக்களிடமிருந்து விலகி தனித்திருப்பதைப்பற்றி கூறப்பட்டுள்ள இதுபோன்ற ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை வணக்க வழிபாடுகளில் பின்பற்றவேண்டிய விஷயங்களில் தொடர்புடையவை என்பதையும் கலீஃபாவிடமிருந்து விலகி இருப்பதற்கோ,முஸ்லிம்களுக்கான அமீரான கலீஃபா இல்லையெனில் கிலாஃபத்தை நிலைநாட்டும் பணியிலிருந்து விலகி இருப்பதற்கோ அனுமதி அளிக்கவில்லை என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முஸ்லிம்கள் தங்களுக்கான ஜமாஅத்தையும்(கிலாஃபா)  இமாமையும்(கலீஃபா) பெற்றிராதபோது என்னசெய்வது என்பது பற்றியும்,நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களைப் பொறுத்து என்னசெய்வது என்பது பற்றியும் ஹுதைஃபா(ரலி) அவர்கள் வினவியபோது, இத்தகைய பிரிவினரை விட்டு விலகிவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டுள்ளார்களே ஒழிய, முஸ்லிம்களை விட்டு பிரிந்துவாழ வேண்டுமென்றோ,கிலாஃபா இல்லாத சூழலில் கிலாஃபத்தை நிலைநிறுத்தும் கடமையிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்றோ கட்டளையிடவில்லை! ஆகவே வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகிக்கொள்ளவேண்டும் என்ற இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் கட்டளை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மரத்தின் வேரை தமது பற்களால் கவ்விப்பிடித்தவாறு இருக்கும் நிலையில் தமக்கு மரணம் நேர்ந்தாலும் வழிகெடுக்கும் கூட்டத்தினருடன் இணையாமல் விலகியிருக்க வேண்டும் என்று இங்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் அழுத்தமாக கூறியுள்ளார்கள்.
“மரத்தின் வேரை தமது பற்களால் கவ்விப்பிடித்தவாறு” – என்று அலங்காரமாக (metaphorical – مَجَازِيّ) கூறப்பட்டுள்ளதை, காட்டிற்கு செல்லவேண்டுமென்றும் முஸ்லிம்களை விட்டும் விலகி வாழ வேண்டுமென்றும் சிலர் தவறாக விளக்குகின்றனர்.இதுபோன்ற அலங்கார பதங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் ஏராளமாக உபயோகிக்கப்பட்டுள்ளன. இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்ளவேண்டுமென்ற அடிப்படை கல்வியினை பெறாதவர்கள் இதுபோன்ற தவறான விளக்கங்களை அளிப்பது ஆபத்தானதாகும்.இங்கு ஒரு காரியத்தை அழுத்தமாக கூறுவதற்காக “மரத்தின் வேரை தமது பற்களால் கவ்விப்பிடித்தவாறு” என்று கூறப்பட்டுள்ளது; எந்த சூழ்நிலையிலும் தீனை விட்டுவிட அனுமதியில்லை என்பதே இதன் பொருளாகும்.நரகத்தின் வாயிலில் நின்றுகொண்டு மக்களை வழிகேட்டின் பக்கம் அழைக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு முற்றிலும் விலகி ஒருவர் தமது தீனை பின்பற்றவேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஹதீஸில் கலீஃபாவை நிலைநிறுத்தும் பணியைவிட்டு விலகியிருப்பதற்கான அனுமதியோ அல்லது விதிவிலக்கோ எவருக்கும் அளிக்கப்படவில்லை.மாறாக, தீனை பின்பற்றவேண்டும் என்ற கட்டளைக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களை விட்டும் விலகியிருக்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.அந்நிலையில் கூட கலீஃபாவை நிலைநிறுத்தும் பணியில் அவர் ஈடுபடாவிடில் அவர்மீது பாவம் நிலைகொண்டிருக்கும். ஆகவே அவர் மரத்தின் வேரை தமது பற்களால் கடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு மரணம் நேர்ந்தாலும் நரகத்தின் வாயிலை நோக்கி அழைக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகியிருந்து தன்னுடைய தீனை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமே ஒழிய, முஸ்லிம்களின் ஜமாஅத்திலிருந்து விலகிக்கொள்வதற்கோ அல்லது தீனின் சட்டங்களை நிலைநாட்டும் பணியை மேற்கொள்ளாமல் புறக்கணித்து விடுவதற்கோ அல்லது முஸ்லிம்களுக்குரிய இமாமை (கலீஃபாவை) ஏற்படுத்தும் கடமையை விட்டு ஒதுங்கியிருப்பதற்கோ அவருக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.
நபி  صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ المُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ وَمَوَاقِعَ القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ
“ஆடு ஒரு முஸ்லிமின் சிறந்த சொத்தாக ஆகும்நிலை ஏற்படும்போது அவர் அதனுடன் மலையின் உச்சிக்கு சென்றுவிடுகிறார். அவருடைய தீனை ஃபித்னாவிலிருந்து காக்கும் விதத்தில் மழை பொழிகிறது”
                                                                    (அபூ ஸயீதுல் குத்ரி(ரலி),புஹாரி)
குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதால் முஸ்லிம்களைவிட்டு தனித்து வாழவேண்டுமென்றும் காட்டிற்கு சென்று கால்நடைகளை மேய்த்து வாழ்க்கையை நடத்தி தீனை பாதுகாக்க வேண்டுமென்றும் சிலர் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி விளக்கமளிக்கின்றனர்.ஒருவர் முஸ்லிம்களின் ஜமாஅத்தான கிலாஃபத்தைவிட்டு விலகியிருக்க வேண்டுமென்பதையோ அத்தகைய கிலாஃபா இல்லாத போது அதை நிலைநாட்டுவதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமென்பதையோ இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டவில்லை. மாறாக உணர்சிப்பூர்வமான பாமர முஸ்லிம் ஒருவருக்கு எது சிறந்த சொத்தாக இருக்கும் என்பதையும், ஃபித்னாவுடைய காலகட்டத்தில் அவர் எவ்வாறு பாதுகாப்பு பெறுகிறார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.எனவே மக்களிடமிருந்து விலகி தன்னை தூரமாக்கிக் கொள்வதற்கு இந்த ஹதீஸ் ஆர்வமூட்டவில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
இஸ்லாமிய நிலப்பரப்பானது பல நாடுகளாக பிரிந்து கிடப்பதற்கோ பல ஆட்சியாளர்களின் கீழ் ஆளப்படுவதற்கோ அறவே அனுமதி கிடையாது என்ற நிலையில், முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களின் தயவில் இருப்பவர்கள் இது போன்ற மார்க்க விளக்கங்களை அதிகமாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ் سبحانه وتعالى வழங்கியருளிய இஸ்லாமிய சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்யும் முஸ்லிம்களின் ஒரே ஜமாஅத்தான கிலாஃபா என்பது ஒரே இமாமையும்(கலீஃபா) ஒரே தேசத்தையும் கொண்டதாகும். அத்தகைய முஸ்லிம்களின் ஒரே தலைமையான கிலாஃபத்தை மீண்டும் நிறுவுவதற்கான உழைப்பில் ஈடுபடுவதை திசை திருப்புவதற்காகத்தான் இதுபோன்ற விளக்கங்களை பரவலாக்கிவிட்டுள்ளனர்.
நபி  صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
وَمَنْ بَايَعَ إِمَامًا فَأَعْطَاهُ صَفْقَةَ يَدِهِ، وَثَمَرَةَ قَلْبِهِ، فَلْيُطِعْهُ إِنِ اسْتَطَاعَ، فَإِنْ جَاءَ آخَرُ يُنَازِعُهُ فَاضْرِبُوا عُنُقَ الْآخَرِ
“எவரேனும்  ஒருவர்  தமது   கரத்தால்   கைலாகு  செய்வதன் மூலமும் தமது  இதயத்தால் நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஓர் இமாமுக்கு   பைஆ செய்தால்,  பிறகு    இயன்றவரை   அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும்.  இந்நிலையில் மற்றொருவர்   வந்து (அதிகாரத்தில்)  அவரிடம்  சர்ச்சை செய்தால்  அவரது கழுத்தை வெட்டுங்கள்”                         ( அப்துல்லாஹ்  இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி),   முஸ்லிம் )
مَنْ أَتَاكُمْ وَأَمْرُكُمْ جَمِيعٌ عَلَى رَجُلٍ وَاحِدٍ، يُرِيدُ أَنْ يَشُقَّ عَصَاكُمْ، أَوْ يُفَرِّقَ جَمَاعَتَكُمْ، فَاقْتُلُوهُ
“உங்களின் விவகாரங்கள் ஒருவரின்   தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருக்கும்போது  (கலீஃபாவிற்கு  போட்டியாக  வருவதின் மூலம்) உங்கள் பலத்தை  குறைப்பதற்கோ அல்லது உங்கள் ஒற்றுமையை குலைப்பதற்கோ நாடியவராக எவரேனும்   வந்தால் அவரை கொன்றுவிடுங்கள்”            (அரஃபஜா(ரலி), முஸ்லிம் )
إِذَا بُويِعَ لِخَلِيفَتَيْنِ، فَاقْتُلُوا الْآخَرَ مِنْهُمَا
“இரண்டு கலீஃபாக்களுக்கு   பைஆ பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்”
 (அபூஸயீது  அல் குத்ரி(ரலி),  முஸ்லிம் )
அபூஹாஸிம்  அறிவித்து முஸ்லிமில்  பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:-

قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الْأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي، وَسَتَكُونُ خُلَفَاءُ فَتَكْثُرُ»، قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ، فَالْأَوَّلِ، وَأَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ
 “நான் ஐந்து வருடங்கள் அபூஹுரைராவுடன்  இருந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்   கூறியதாக அவர் அறிவித்துள்ளதை  செவியுற்றிருக்கிறேன்:- பனூஇஸ்ராயீல்  மக்களை  நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒரு நபி மரணித்ததும் மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பப்பட்டார். நிச்சயமாக! எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள்;  ஆனால் கலீஃபாக்கள்  வருவார்கள். அவர்கள்  அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.   (அதுகுறித்து)  எங்களுக்கு  என்ன  கட்டளையிடுகிறீர்கள்? என்று(ஸஹாபாக்கள்)   வினவினார்கள்.  அவர்கள் அனைவருக்கும்  ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத்  கொடுங்கள். அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக!   அவர்களிடம்   ஒப்படைக்கப்பட்ட   பொறுப்பு பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்”
முஸ்லிம் உலகில்  ஒன்றிற்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருப்பதற்கு அனுமதியில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே இஸ்லாத்தின் எதிரிகளால் வரையறுக்கப்பட்ட இன்றைய முஸ்லிம் நாடுகளின் எல்லைக்கோடுகள் தகர்த்தெறியப்பட்டு அனைத்து நிலப்பகுதிகளும் ஒரே கலீஃபாவின் கீழ் ஆளப்பட வேண்டுமென்றால் அத்தகைய கிலாஃபத்தை மீண்டும் நிறுவுவதற்காக முஸ்லிம்கள் அயராது உழைக்கவேண்டும்.

எனக்காக துஆ செய்யுங்கள் !


‘உங்களுள் உவைஸ் இப்னு ஆமிர் இருக்கிறாரா?’……. யமன் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் மதீனாவிற்கு வருகை தரும்போதெல்லாம் அவர்களுடன், உவைஸ் அல்கர்னி(ரஹ்) அவர்கள் வந்துள்ளார்களா என்று விசாரிப்பது உமர் (ரலி) அவர்களின் வாடிக்கையாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் இஸ்லாத்தின் செய்தியை கொண்டுசெல்வதற்காக  ரோமர்களிடமும் பாரசீகர்களிடமும் ஏககாலத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் முஸ்லிம்களின் படைகளுக்கு நிறைய வீரர்கள் தேவைப்பட்டனர்.அதற்கான போர்களில் கலந்து கொள்வதற்காகவே பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் மதீனாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அவ்வாறு வந்திருந்தவர்களை தேர்ந்தெடுத்து அணிவாரியாக பிரித்து, போர் நடைபெறும் பகுதிகளுக்கு உமர்(ரலி) அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.யமன் மாநிலத்திலிருந்தும் போரில் பங்கு பெறுவதற்காக முஸ்லிம்கள் வந்திருந்தனர்.
யமன் மாநிலத்திலிருந்து வந்திருந்த முஸ்லிம்களிடம் எப்பொழுதும்போல் உமர்(ரலி) அவர்கள் விசாரிக்க, அந்த குழுவில் உவைஸ் இப்னு ஆமிர் அல்கரனி அல்முராதி என்பவர் இருந்தார். எனவே தாம் தேடியவர் அவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக  உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்களைப்பற்றி நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறிய தகவல்களை  வைத்து உமர்(ரலி) அவர்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். இதுபற்றிய ஹதீஸ், சஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِذَا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمَنِ، سَأَلَهُمْ: أَفِيكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ؟ حَتَّى أَتَى عَلَى أُوَيْسٍ فَقَالَ: أَنْتَ أُوَيْسُ بْنُ عَامِرٍ؟ قَالَ: نَعَمْ، قَالَ: مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَكَانَ بِكَ بَرَصٌ فَبَرَأْتَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ؟ قَالَ: نَعَمْ، قَالَ: لَكَ وَالِدَةٌ؟ قَالَ: نَعَمْ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ، مِنْ مُرَادٍ، ثُمَّ مِنْ قَرَنٍ، كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ، لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ، لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ» فَاسْتَغْفِرْ لِي، فَاسْتَغْفَرَ لَهُ، فَقَالَ لَهُ عُمَرُ: أَيْنَ تُرِيدُ؟ قَالَ: الْكُوفَةَ، قَالَ: أَلَا أَكْتُبُ لَكَ إِلَى عَامِلِهَا؟ قَالَ: أَكُونُ فِي غَبْرَاءِ النَّاسِ أَحَبُّ إِلَيَّ. قَالَ: فَلَمَّا كَانَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ حَجَّ رَجُلٌ مِنْ أَشْرَافِهِمْ، فَوَافَقَ عُمَرَ، فَسَأَلَهُ عَنْ أُوَيْسٍ، قَالَ: تَرَكْتُهُ رَثَّ الْبَيْتِ، قَلِيلَ الْمَتَاعِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَأْتِي عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ، ثُمَّ مِنْ قَرَنٍ، كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ، إِلَّا مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ، لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ» فَأَتَى أُوَيْسًا فَقَالَ: اسْتَغْفِرْ لِي، قَالَ: أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ، فَاسْتَغْفِرْ لِي، قَالَ: اسْتَغْفِرْ لِي، قَالَ: أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ، فَاسْتَغْفِرْ لِي، قَالَ: لَقِيتَ عُمَرَ؟ قَالَ: نَعَمْ، فَاسْتَغْفَرَ لَهُ، فَفَطِنَ لَهُ النَّاسُ، فَانْطَلَقَ عَلَى وَجْهِهِ، قَالَ أُسَيْرٌ: وَكَسَوْتُهُ بُرْدَةً، فَكَانَ كُلَّمَا رَآهُ إِنْسَانٌ قَالَ: مِنْ أَيْنَ لِأُوَيْسٍ هَذِهِ الْبُرْدَةُ
  “கலீஃபா உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப்படைகள் வந்தால்,அவர்களிடம் உங்களிடையே உவைஸ் இப்னு ஆமிர் இருக்கிறாரா? என்று கேட்பார்கள்.இந்நிலையில்  ஒருமுறை (யமன்வாசிகளின் உதவிப்படைகளுடன் உவைஸ் இப்னு ஆமிர்(ரஹ்) வந்தபோது) நீர்தான் உவைஸ் இப்னு ஆமிரா என்று கேட்டார்கள்;அதற்கு உவைஸ் அல்கர்னி(ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.உமர்(ரலி) அவர்கள் அவரிடம் ‘முராத்’ கோத்திரத்தையும் ‘கரன்’ கிளையையும் சேர்ந்தவரா? என்று கேட்டார்கள்;அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் ஆம் என்றார்கள்.உமர்(ரலி) அவர்கள்,உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு அதில் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாகிவிட்டதா என்று கேட்டார்கள்;அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.உமக்கு தாயார் இருக்கிறாரா என்று கேட்டார்கள்; அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:-அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருக்கிறார்கள்: யமன்வாசிகளின் உதவிப்படையினருடன் ‘முராத்’ கோத்திரத்தையும் ‘கரன்’ கிளையையும் சார்ந்த உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார்;அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு பின்னர் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாயிருக்கும்;அவருக்கு தாயார் ஒருவர் இருப்பார்;அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார்;அவர் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டால்,அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான்.(உமரே!) அவர் உமக்காக பாவமன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வாய்ப்பு கிட்டினால் அவரை பிரார்த்திக்க சொல்லுங்கள்! (அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளபடி) எனக்காக பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள் என்றார்கள்! அவ்வாறே உவைஸ்(ரஹ்) அவர்களும் உமர்(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள். பிறகு உமர்(ரலி) அவர்கள்,நீங்கள் எங்கே செல்கிறீர்கள் அன்று வினவினார்கள்;அதற்கு உவைஸ்(ரஹ்) அவர்கள் “கூஃபாவிற்கு”என்று பதிலளித்தார்கள்.கூஃபாவின் ஆமிலிடம்(கலக்டர்) உமக்காக (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா? என்று கேட்டார்கள்.அதற்கு உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள்,”சாதாரன மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு விருப்பமானதாகும்” என்று கூறிவிட்டார்கள். அடுத்த ஆண்டில் கரன் கிளைய சார்ந்த பிரமுகர் ஒருவர் ஹஜ்ஜுக்காக சென்றிருந்தபோது உமர்(ரலி) அவர்களை தற்செயலாக சந்தித்தார்.அப்போது உமர்(ரலி) அவர்கள், உவைஸ்(ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள்.அதற்கு அவர், “மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கை சாதனங்களிலுமே அவரை விட்டும் வந்துள்ளேன் என்று கூறினார். அப்போது உமர்(ரலி) அவர்கள்  அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருக்கிறார்கள்: யமன்வாசிகளின் உதவிப்படையினருடன் ‘முராத்’ கோத்திரத்தையும் ‘கரன்’ கிளையையும் சார்ந்த உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார்;அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு பின்னர் ஒரு திர்ஹம் அளவு (அடையாளம்) தவிர மற்றவை குணமாயிருக்கும்;அவருக்கு தாயார் ஒருவர் இருப்பார்;அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார்;அவர் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டால்,அல்லாஹ் அதை நிறைவேற்றிவைப்பான்.(உமரே!) அவர் உமக்காக பாவமன்னிப்புக் கோரி பிரார்த்திக்க வாய்ப்பு கிட்டினால் அவரை பிரார்த்திக்க சொல்லுங்கள்! என்று உமர்(ரலி) அவரிடம் சொன்னார்கள்.ஆகவே அப்பிரமுகர் உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்களிடம் சென்று எனக்காக பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள் என்று கோரினார்.அப்போது உவைஸ் அவர்கள் “நீர்தான் இப்போது ஹஜ் கடமையை  நிறைவேற்றி வந்துள்ளீர்! ஆகவே நீர்தான் எனக்காக பாவமன்னிப்பு கோர வேண்டும்; “நீர் உமர்(ரலி) அவர்களை சந்தித்தீரா? என்று கேட்டார்கள். ‘ஆம்’ என்று அவர் பதிலளித்தார்.உவைஸ்(ரஹ்) அவர்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரி பிரார்த்தித்தார்கள்.அப்போதுதான் மக்களும் உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்களை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ்(ரஹ்) அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள். தொடர்ந்து (உஸைர் பின் ஜாபிர்(ரலி)  அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ்(ரஹ்) அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன்;அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம் உவைஸ் அவர்களுக்கு இந்த போர்வை எப்படி கிடைத்தது என்று கேட்பார்கள்.
                                                                                              (உஸைர் இப்னு ஜாபிர்(ரலி), முஸ்லிம்)
உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் தாபீயீன்களில் முதன்மையானவர் ஆவார். நபிصلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் இவர் வாழ்ந்தபோதும் நபிصلى الله عليه وسلم அவர்களை சந்தித்ததில்லை. உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்கள் தாயாருக்கு பணிவிடை செய்வதில் மிகவும் போற்றத்தக்கவகையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதால் நபிصلى الله عليه وسلم அவர்களை சந்திக்க இயலவில்லை. உவைஸ் அல்கரனி(ரஹ்) அவர்களுக்கு கிடைத்த மாபெரும் சிறப்பு அந்தஸ்திற்கான காரணம், தாயாருக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதாகும் என்பதாக அறிஞர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.எனவே நாமும் பெற்றோருக்கு செய்யவேண்டிய கட்டாயக் கடமைகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு வெறுமனே ஒதுங்கிவிடாமல்,அதற்கும் மேலான உபரியான பணிவிடைகளையும் செய்து,அவர்களின் கண்குளிர்ச்சியில் நாமும் பங்குபெற்று அல்லாஹ்سبحانه وتعالى வின் திருப்பொருத்தத்தை அடைய  முயற்சிப்போமாக!.