May 22, 2016

அமெரிக்கா சிரியாவிற்கென கொண்டிருக்கும் செயற்திட்டத்தை அடையாளம் காணுதல்

 

கடந்த வருடம் நடந்த “பாரீஸ் தாக்குதல்” மிகவும் துர்அதிர்ஷ்டமானது ஏனெனில் அது 130 அப்பாவி உயிர்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் இந்த சிரியாவில் நடைபெற்று வரும் புரட்சிக்கு எதிராக உலக சக்திகளை ஒன்று சேர்த்திருக்கின்றது. மேலும்  ஐ.எஸ்.ஐ.எஸ், அதன் செயல்கள் மூலம், இந்த புரட்சிக்கு இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவது இது முதன்முறை கிடையாது.
 
 
சிரிய புரட்சி 2011 ல் அரபு புரட்சியின் ஒரு கிளையாக தொடங்கியது. இது அந்த ஆண்டின் மார்ச் மாதம் பல தரப்பட்ட சிரிய சமுதாயத்தினர் தங்களுக்கு நாட்டின் அரசியல் இயந்திரத்தில் அடிப்படை மாற்றங்கள் வேண்டி சாலையில் இறங்கி போராடியதன் மூலம் தொடங்கியது. போராட்டக்காரர்கள் அதிபரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை, ஆனால் அவர்கள் கோரியது அதிகாரத்தின் தூன்களாக இருக்கும் அனைத்தையும் பிடுங்கி பொது ஜனங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பதே.
 
 
இந்த நிகழ்வு நடப்பது பற்றி எதுவம் தங்களுக்கு தெரியாது என்றே மேற்குலகு அரசுகளின் ஆரம்பகால விளக்கங்களாக இருந்து வந்தன. அல்-அசாதின் குடும்பம் சிரியாவை பல ஆண்டுகளாக கொடூரமான, இரும்பு கரங்களை கொண்டு ஆட்சி செய்து வருகின்றது. முதலில் ஹாஃபிஸ் அல் அசாதிற்கு கீழ் அதன் பின்னர் அவருடைய மகன் பஷார் அல்- அசாதிற்கு கீழ், சிறிய சந்தேகத்திற்குரிய செயல்கள் செய்தவதால் கூட கைது செய்யப்பட்டும், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டும்   (விடுவித்துக்கொள்ள முடியாத அளவில் சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டும்) மேலும் பெரும்பாலும் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆகையால், மேற்குலகின் அரசியல்வாதிகளின் எண்ணம் என்னவென்றால் துனீசியா மற்றும் எகிப்தில் செய்ததை போன்று சிரியாவில் செய்வதற்கு எவரும் துனிய மாட்டார்கள் என்பதே. உதாரணத்திற்கு, 2015 ம் ஆண்டு மார்ச் 7 ம் தேதி, சிரியாவில் போராட்டம் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஃபாரீன் அஃப்பையர்ஸ் (Foreign Affairs) எனும் பத்திரிக்கை மைக்கேல் ப்ரோனிங் என்பவர் எழுதிய ” The Sturdy House that Asad Built: Why Damascus is not Cairo”. என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியிட்டது.[1] எனினும், இரண்டு மாதங்கள் கழித்து 2015 ம் ஆண்டு மே 19ம் தேதி, ப்ரோனிங்  ”Cracks in the House of Asad: Why a Supposedly Stable Regime Is Looking Fragile”. [2]என்ற தலைப்பில் மற்றொரு தலையெங்கம் எழுத நிர்பந்திங்கப்பட்டார்.
 
 
இதற்கு அடுத்தபடியாக ஆச்சரியத்தில் இருந்த அமெரிக்காவும் சிரியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை விரும்பவில்லை. திரைமறைவில் அது சிரிய அரசுக்கு மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது, அதாவது 2000ம் ஆண்டில் ஹாஃபிஸ் அல் அசாத் இறந்தவுடன், அமெரிக்கா அவருடைய மகன் பஷாரை பதவியேற்க தூண்டியது. அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மேடலின் ஆல்பிரைட், இது விஷயமாக இவ்வாறு கூறினார்: “டாக்டர். பஷார் அசாத் பொறுப்பேற்று கொண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்வதை நான் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறேன்”. [3] அது முதற்கொண்டு பஷார் அல் அசாதை ஜான் கெர்ரியும் அமெரிக்க அரசை சார்ந்த மற்ற முன்னனி உறுப்பினர்களும் பலமுறை சந்தித்த நிகழ்வுகள் நடைபெற்றன[4] மேலும் இச்சந்திப்புகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 70% விஷயங்களுக்கு பஷார் அல் அசாத் ஒப்புக்கொண்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. [5] இதன் விளைவாக அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சிரியா மிகுந்த ஆதரவை அளித்து வருகிறது, எந்த அளவிற்கு என்றால் தனிநபர்களை அமெரிக்காவின் சார்பாக கொடுமை படுத்தும் அளவிற்கு இருந்து வருகிறது. [6]
 
 
ஆச்சர்யத்திற்கு இடமளிக்காத வகையில், இதன் காரணமாக, அமெரிக்கா சிரியாவில் நடைபெற்று வரும் புரட்சிக்கு ஒரு ” அரசியல் தீர்வை” மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. இந்த விஷயத்திற்காக ஆதரவை திரட்ட ஒரு சர்வதேச செயற்திட்ட குழுவை அமைக்க அது ஏற்பாடு செய்தது மேலும் ஜெனீவாவில் கருத்தரங்கம் முடிந்தவுடன் இந்த செயற்திட்ட குழு ஒரு “இறுதி செய்தியை” வெளியிட்டது அது அரசியல் தீர்வு” என்பதற்கான உண்மையான அர்த்தத்தை விளக்கியது: “அரசு மற்றும் எதிரணி உறுப்பினர்களை கொண்டு ஒரு அரசு மாற்றத்தை செயல்படுத்தும் ஒரு மேலான்மை குழுவை முழு செயலாற்றும் சக்திகளை உள்ளடக்கிவாறு உருவாக்க வேண்டும், மேலும் அரசு நிர்வாகங்கள் மற்றும் கைதேர்ந்த ஊழியர்கள் ராணுவப்படை மற்றும் பாதுகாப்புப்படை போன்றவை உள்ளடக்கிய  தொடர்ந்து செயல்படும் வண்ணம் அதை பரஸ்பர சம்மதத்துடன் அமைக்க வேண்டும்”. [7] வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், அரசின் தலை விழுவது தான் அமெரிக்காவின் திட்டம், எந்த வகையில் என்றால் அரசின் மற்ற தூண்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை போன்றவற்றை முன்னிருந்தவாரே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
 
 
ஆகையால், சிரிய புரட்சியாளர்களுக்கு உதவப்போவதில்லை என அமெரிக்கா முடிவெடுத்தது மேலும் ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஹிலாரி கிளிண்டன் விவரித்தார். ” நீங்கள் ஒரு ராணுவ திட்டத்தை தீட்டக்கூடியவராகவோ அல்லது வெளியுறவு அமைச்சராகவோ இருந்து உங்களது கண்ணுக்கு புலப்படாத  நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்ள கூடிய ஒரு எதிரணி இருக்கின்றதா என்று கண்டு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கையில்”, இதன் அர்த்தம் என்னவெனில் அமெரிக்காவிற்காக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி அதற்காக வேலை செய்யக்கூடிய எந்தவொரு எதிரணியையும் கண்டுகொள்ள முடியாமல் போனது. [8] கார்னெகீ என்டோவ்மெண்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் ஆரோன் லண்டு எனும் சிரியா ஆய்வாளர், கிளிண்டனின் கணக்கை ஊர்ஜிதப்படுத்தினார். “நீங்கள் மனித உரிமையை மதிக்கும் தூய்மையான, சுத்தமான, மதசார்பற்ற போராட்டக்குழுவை காணப்போவதில்லை ஏனெனில் அதுபோன்ற ஒன்று அங்கு இல்லவே இல்லை”, என்று கூறினார், மேலும் இதன் காரணமாகத்தான் அமெரிக்கா ஒரு” மிதவாத எதிரணியை” உருவாக்க முயலும் முயற்சிகள் முழுமையான தோல்வி அடைந்துள்ளது – சிரியன் நேஷனல் கவுன்சிலின் (SNC) ஆதிக்கமானது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களின் வரவேற்பு அறை வரை தான் உள்ளது [9], அதே சமயம் அமெரிக்காவால் பயில்விக்கப்பட்ட சிறிய அளவிளான சிரிய வீரர்களில் பெரும்பாலோர் சுதந்திர போராட்டக்குழுவினருடன் மறுபடியும் சேருகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. [10]
 
 
இந்த சூழ்நிலையில் சிரியாவினுல் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் வருகை அமெரிக்காவிற்கு பேருதவியாக அமைந்தது. 2013 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி முதல் 2014 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி வரை ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியாவில் நடத்திய தாக்குதல்களில் 64% மற்ற போராட்டக்குழுக்களின் மீது நடத்தப்பட்டதாகும் வெறும் 13% தாக்குதல்கள் தான் அரசின் மீது நடத்தப்பட்டது என ஜேன்ஸ் இன்டெலிஜென்ஸின் ஆய்வு தெரிவிக்கின்றது. அதேபோல் அல்-அசாதின் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ பெரும் அளவில் தொடாமல் விட்டுள்ளது. அதே காலத்தில் அது நடத்திய 982 தாக்குதல்களில் வெறும் 6% தாக்குதல்களை மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது நடத்தியுள்ளது. [11] ஆகையால் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் வருகை சிரிய புரட்சியாளர்களுக்கு இரண்டாவது எதிரியை கொண்டு வந்துள்ளது மேலும் இதன் காரணமாக அவர்களுக்கு இரண்டாவது முனையை எதிர்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளது, அவர்களை நோக்கி அல்-அசாத் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கும் வேளையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிழக்கிலிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
 
அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக பெரும் காரியம் செய்யும் என ஒருவரும் எதிர்பார்க்க முடியாது, ஆகையால், சிரியாவின் மேடையில் அவர்கள் தோன்றியதிலிருந்து அமெரிக்காவின் நோக்கமான அரசை தக்கவைக்கும் செயலுக்கு உதவியாக அமைந்தது அதாவது போராட்டக்குழுக்கள் அல்-அசாதை தோற்கடிப்பதிலிருந்து தடுத்து நிறுத்துவது. மேலும் நிச்சயமாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக அமெரிக்கா 2014 ல்  நடத்திய தாக்குதல்களில் மிகவும் அரிதாகவே அதன் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் இலக்கை சென்றடைந்தது – இது தன்னிச்சையாக செயல்படும் போராட்டக்குழுக்களை தாக்க வேண்டும் என திட்டமிட்டு நடத்தப்பட்ட மறைமுக தாக்குதல்களாகும். [12]
 
 
ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ துடைத்தெறிவது ஒருபோதும் எங்களது நோக்கமாக இருந்தது அல்ல என ஒபாமா சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். “முதலில் அவர்களை கட்டுப்படுத்துவதே  ஆரம்பத்திலிருந்து எங்களுடைய நோக்கமாக இருந்து வந்தது, அவர்களை நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். அவர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் சிரியாவில் எந்தவொரு அடித்தளத்தையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்த பகுதியல் ஐ.எஸ்.ஐ.எல் ன்  இந்த படிப்படையான முன்னேற்றத்தை உங்களால் பார்க்க முடியாது”. [13] என அவர் கூறினார்.
 
 
இவை அனைத்தையும் காட்டிலும், 2015 கோடையில் சிரிய அரசு கவிழ்ந்து விடுமோ என அமெரிக்கா அச்சமுற தொடங்கியது. குறைந்த இடைவெளியில் அரசு தன் கட்டுப்பாட்டிலுள்ள  லட்டாக்கியா மற்றும் டமாஸ்கஸ் ஆகிய பகுதிகளை தவிர இத்லிப், ஹோம்ஸ், அலெப்போ மற்றும் தெய்ர் அல்-ஜோர் ஆகிய பகுதிகளில் புரட்சியாளர்களிடம் தோற்றது. ஆனால் புரட்சியாளர்கள் இவ்விரு பகுதிகளையும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்த ஒன்று கூடினர். [15] அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்த சூழ்நிலை பற்றி கலந்தாலோசிக்க  அதிகாரபூர்வமாக சந்திப்புகளை மேற்கொண்டனர். இந்த சந்திப்புகளின் வெளிப்பாடாக ரஷ்யா சிரிய அரசுக்கு ராணுவ ஒத்துழைப்பை வழங்க ஆரம்பித்தது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இவ்வாறு கூறினார்: நாங்கள் அனைவரும் ஒரு ஜனநாயக, ஒருங்கிணைந்த, மதசார்பற்ற சிரியாவை விரும்புகிறோம், அதை எப்படி அடைய போகிறோம் என்பது பற்றி சில விஷயங்களில் நாங்கள் கருத்து வேறுபாடு கொட்டுள்ளோம் (அமெரிக்காவுடன்). ஆனால் உடனடியாக எடுக்கப்போகும் சில நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்”. [16]
 
 
லாவ்ரோவ் தெரிவித்த கருத்து வேற்றுமை என்னவென்றால் அமெரிக்காவின் “அரசியல் தீர்வில்” பஷார் அல் அசாதின் பங்கு என்ன என்பது தான், ஆனால் இந்த விஷயத்திலும்  இவ்விரு தரப்பினரும் வெகு விரைவில் ஒரு தீர்வை ஏற்படுத்தி கொண்டனர். 4 வருட காலமாக அசாத் வெளியேற வேண்டும் என நிர்பந்தித்து வந்த அமெரிக்கா 2015 அக்டோபர் மாதத்தில் திடீரென அவர் வெளியேற வேண்டும் ஆனால் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது அவசியமில்லை என திடீரென அறிவித்தது. வேறு வார்த்தையில் கூற வேண்டும் எனில், ரஷ்யாவின் நிலையில் அமெரிக்கா தன்னை நிலைநிறுத்தி தங்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேற்றுமையை சரி செய்தது. [16] கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோ பயணம் மேற்கொண்ட அசாதிடம் கண்டிப்பாக தாங்கள் வெளியேற வேண்டும் என ரஷ்யா கூறியதாக இஸ்ரேலிலிருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. [17]
 
 
ஆகையால், 2015 அக்டோபர் தொடக்கத்தில் ரஷ்யா சிரியாவில் ராணுவ தாக்குதல்களை தொடங்கியது, இது அந்த நாட்டில் அமெரிக்காவின் நலன்களை பாதிக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி அல்ல. ஏனெனில் இது அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதராவாக, ரஷ்யா  அமெரிக்காவின் ஒப்புதலோடு தான் இதுபோன்று செயல்பட்டது. 2014 செப்டம்பரில் அமெரிக்கா எதை செய்ததோ அதே போன்று  ரஷ்யா சிரியாவில் தான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த வேண்டியே ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ  காரணம் காட்டியது ஏனெனில் அது ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தன்னுடைய தாக்குதல்களை தொடங்கவில்லை. மாறாக, அதன் தாக்குதல் சிரிய அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்த மற்றும் அரசின் மீது தாக்குதல்களை மேற்கொண்ட  மற்ற புரட்சிக்குழுக்களின் மீது தான் இருந்தது. [18] லாவ்ரோவ் இதை விவரித்து இவ்வாறு கூறினார்: “நாங்கள்  இவ்விஷயத்தில் இந்த கூட்டணியுடன் ஒரே பார்வையை தான் கொண்டுள்ளோம். நாங்கள் ஒரே அனுகுமுறையை தான் கொண்டுள்ளோம்: அது ஐ.எஸ்.ஐ.எல், அல்-நுஸ்ரா அல்லது வேறு தீவிரவாத குழுக்களாக இருந்தாலும் சரி.” [19]
 
 
அத்தருணத்தில், லாவ்ரோவ் குறிப்பிட்ட கூட்டணியில் பிரான்ஸ் சேராமல் இருந்தது. உண்மையில், சிரியாவில் பிரான்ஸ் எப்போதும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின்  திட்டங்களுக்கு மாற்றமாகவே செயல்படும் வரலாறை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, 2013 ல்,அசாத் டமாஸ்கஸிற்கு அருகில் கவ்ட்டா எனும் இடத்தில் ரசாயன ஆயுதங்களை உபயோகித்து 1,400 பேரை கொன்ற போது, பிரான்ஸ் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள கடின முயற்சி மேற்கொண்டது ஆனால் அதன்படி செயல்பட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மறுத்துவிட்டார். மிக சமீபத்தில்,  அமெரிக்கா அல்-அசாத் வெளியேற வேண்டும் என்ற  தனது முந்தய கோரிக்கையிலிருந்து அரசு மாற்றத்தை செயல்படுத்தும் காலம்வரை சில மாதங்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்று பின்வாங்கிய போது, அல்-அசாதை வெளியேற்ற வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து உறுதியாக இருந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அல்-அசாத் பிரச்சினை பற்றி விவாதித்து கொண்டிருந்த சமயம், அசாத் அரசின் மீது போர் குற்றத்திற்கான விசாரணையை திடீரென பிரான்ஸ் தொடங்கியது. [20]
 
 
2015 செப்டம்பர் மாதம் சிரியாவில் பிரான்ஸ் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளும் அமெரிக்காவுடன் ஒன்றிணையாமல் நடத்தப்படவை ஆகும். [21] இதன் விளைவாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அடங்கிய ஐந்து கண்கள் புலணாய்வு கூட்டணி எனப்படும் கூட்டணியில் பிரான்ஸ் இடம் பெறவில்லை. இந்த கூட்டணியில் மேற்கூறப்பட்ட ஐந்து நாடுகள் அத்தருணத்தில், லாவ்ரோவ் குறிப்பிட்ட கூட்டணியில் பிரான்ஸ் சேராமல் இருந்தது. உண்மையில், சிரியாவில் பிரான்ஸ் எப்போதும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின்  திட்டங்களுக்கு மாற்றமாகவே செயல்படும் வரலாறை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, 2013 ல்,அசாத் டமாஸ்கஸிற்கு அருகில் கவ்ட்டா எனும் இடத்தில் ரசாயன ஆயுதங்களை உபயோகித்து 1,400 பேரை கொன்ற போது, ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டது ஆனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இதை செயல்படுத்த மறுத்துவிட்டார். மிக சமீபத்தில், அமெரிக்கா அல்-அசாத் வெளியேற வேண்டும் என்ற தன்னுடைய முந்தய கோரிக்கையை தளர்த்தி ஆட்சி மாற்றம் நடைபெறும் காலம் வரை சில மாத காலம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்று பின்வாங்கிய போது, பிரான்ஸ்  தொடர்ந்து அல்-அசாதை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் தொடர்ந்து திடமாக இருந்து வந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அல்-அசாத் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த சமயம், பிரான்ஸ் திடீரென அசாத் அரசின் மீது போர் குற்றத்திற்கான விணாரணையை தொடங்கியது. [22]
 
 
நவம்பர் மாதம் 13ம் தேதி மாலை பாரீஸில் நடந்த தாக்குதல்கள் அமெரிக்காவுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள  பெருமளவில் உதவி புரிந்தது.
 
 
அச்சமயம் அமெரிக்கா சிரியாவுக்கான தன் திட்டத்திற்காக உலகை ஒன்றிணைப்பதற்காக சர்வதேச சமூகத்துடன் வியன்னாவில் கலந்தாய்வில் இருந்தது. அதிகாரபூர்வமாக, இந்த கலந்தாய்வு “ஒரு தீர்வை காணவேண்டும்” என்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டது, ஆனால் அங்கு நடந்த நிகழ்வுகளில் அது போன்ற ஒரு நிலை இருந்ததாக தெரியவில்லை. சிரியாவுக்கான வெளியுறவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஸ்டாஃபன் டி மிஸ்டுரா அமைத்த செயற்குழுவின் அனைத்து தலைமை பொறுப்பையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான செயற்திட்டம் குறித்து வரையறுத்தது. உலகின் இதர முன்னனி நாடுகளான ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தலைமை பொறுப்பு கொடுக்கப்படவில்லை இவர்கள் அனைவரும் அமெரிக்கா தயாரித்த செயற்திட்டத்தின் அடிப்படையிலான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தான்  அனுமதி அளிக்கப்பட்டது. வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், அமெரிக்கா சர்வதேச சமூகங்கள் தான் முன்வைக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறது, இந்த விஷயத்தில் ரஷ்யாவும் உடன்பட்டது. [23]
 
 
இது அந்த கலந்தாய்வின் முன்னேற்றத்தை தடுத்தது. அதாவது, பாரீஸ் தாக்கப்படும் வரை. நவம்பர் 14ம் தேதி, இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் திடீரென ஒரு ஒப்பதலுக்கு வந்தனர். சர்வதேச ஊடகங்கள்  வெளியிடப்பட்ட செய்தியாவது: “பாரீஸில் நடந்த தாக்குதலால் தூண்டப்பட்டு பதினேழு நாடுகள் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடித்து வைக்க தங்களுக்கிடையே இருந்து வேற்றுமைகளை களைந்து ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து கொண்டனர்”. [24] “பாரீஸ் நகரி்ல் நடந்த தாக்குதல் தூதர்களை ஒன்று சேர்த்திருக்கின்றது, இவர்கள் தங்கள் அளவிலான முந்தய பேச்சுவார்த்தைகளில்  ஏற்பட்ட வேற்றுமைகளை களைய முடியாமல் இருந்தனர். இந்த பாரீஸ தாக்குதல் ‘நீங்கள் அசாதிற்கு ஆதரவாக இருக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை என்பதை காட்டுகின்றது’, என்று லாவ்ரோவ் கூறினார், ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தான் உங்களது எதிரி’. [25]
 
 
சிரியாவிற்கான அமெரிக்காவின் திட்டங்களின் விவரங்கள் வரிமாறு:
 
. 2015 டிசம்பர் 14ம் தேதி: தூதர்கள் மறுபடியும் கூடி செயல்பாடுகளை சரிபார்க்க வேண்டும்.
 
. 2016 ஜனவரி 1ம் தேதி: சிரியா அரசையும் எதிரணியினரையும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா சபையிடம் கோரிக்கை வைக்க வேண்டும்
. 6 மாதங்களில் அல்லது 2016 மே மாதம் 14 ம் தேதி: சிரயா அரசுக்கும் எதிரணியினருக்கும் இடையே போர் நிறுத்தம் செய்து; புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை தொடங்க வேண்டும்.
. 18 மாதங்களில், அல்லது 2017 ம் ஆண்டு மே 14 ம் தேதி: ஐ.நா மேற்பார்வையில் புதிய அரசியல் அமைப்பின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும். [26]
 
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அதனுடன் அல்-கய்தாவின் அங்கமான நுஸ்ரா ஃபிரண்ட் தீவிரவாத அமைப்பையும், போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டில்  இருக்கும் நிலையிலும் ராணுவ தாக்குதல்கள் தொடுக்கும் பட்டியலில் இவர்களை வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஜோர்டானிய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த பட்டியலில், பிற்காலத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் திட்டங்களுக்கு உடன்பட மறுக்கும் சிரியாவின் இதர குழுக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். [27]
 
 
இந்த ஒப்பந்தத்திற்கு பிரான்சும் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் கார்டருக்கும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஜான்-வேஸ் லா டிரியானுக்கும் இடையே பாரீஸ் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து அந்த வார இறுதி நாட்களில் நடந்து தொலைபேசி உரையாடல்கள் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகள் களையப்பட்டது, இதன் விளைவாக சிரயாவில் அமெரிக்காவின் தலைமையில் செயல்பட பிரான்ஸ் சம்மதித்தது. இதன் பின்னர் அமெரிக்கா பிரான்சுடன் உளவுத்துறை தகவல்களை பரிமாற தொடங்கியது, மேலும் இவ்வாறு இரு நாடுகளும் சிரியாவில் ராணுவ தாக்குதல்களை ஒன்றினைந்து நடத்த தொடங்கியது. அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகளை நோக்கி பிரெஞ்சு போர் விமானங்கள் தாக்குதல் நடத்த தொடங்கியது. [28]
 
 
முடிவுறையாக, சிரியாவினுள் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் வருகை அல்-அசாத் அரசின் ஆட்சி நீடித்து இருக்க பெரும் உதவி புரிந்தது, மேலும் உண்மையில் அல்-அசாத் அரசுக்கு ஆதரவாக இருக்கும் சிரியாவின் மீதான அமெரிக்க, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு (மேலும் மற்றவர்கள்) நடத்தும் ராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்தும் வண்ணம் அமைந்தது, மேலும் இது உலகை சிரியாவிற்கான அமெரிக்காவில் திட்டத்தின் பால் ஒன்றிணைத்தது.
 
 
[1] “The Sturdy House that Asad Built: Why Dam­as­cus is not Cairo”, www.foreignaffairs.com/articles/syria/2011–03-07/sturdy-house-assad-built
[2] “Cracks in the House of Asad: Why a Sup­pos­edly Sta­ble Regime Is Look­ing Frag­ile”, www.foreignaffairs.com/articles/syria/2011–05-19/cracks-house-assad
[3] “Albright press brief­ing prior to depar­ture for Al-Asad funeral”, www.usembassy-israel.org.il/publish/peace/archives/2000/june/me0612d.html
[4] “Kerry dis­cov­ers Assad is no reformer”,
[5] www.enduringamerica.com/home/2010/12/1/wikileaks-document-syrias-assad-gives-the-ultimate-response.html
[6] “Syria: The Not So Long Ago Cher­ished US Part­ner in Intel­li­gence, Ren­di­tion & Tor­ture Oper­a­tions”, www.boilingfrogspost.com/2011/12/10/syria-the-not-so-long-ago-cherished-us-partner-in-intelligence-rendition-torture-operations/
[7] “Action Group for Syria: Final Com­mu­nique”, www.un.org/News/dh/infocus/Syria/FinalCommuniqueActionGroupforSyria.pdf
[8] “Clin­ton: Arm­ing rebels could help Al-Qaeda”, www.cbsnews.com/news/clinton-arming-syrian-rebels-could-help-al-qaeda/
[9] “Syr­ian Oppo­si­tion Groups Stop Pre­tend­ing”, www.newyorker.com/news/news-desk/syrian-opposition-groups-stop-pretending
[10] “Obama Admin­is­tra­tion Ends Effort to Train Syr­i­ans to Com­bat ISIS”, www.nytimes.com/2015/10/10/world/middleeast/pentagon-program-islamic-state-syria.html?_r=0
[11] “Is ISIS a US Proxy?”, www.revolutionobserver.com/2014/12/isis-a-us-proxy.html
[12] “Syria rebels dis­mayed by US air attacks on non-ISIS groups”, www.ft.com/intl/cms/s/0/12cd016e-4328-11e4-8a43-00144feabdc0.html#slide0 See also: www.revolutionobserver.com/2014/09/operation-saving-bashar-al-assad.html
[13] “Obama on ISIS: ‘We have Con­tained Them’ ”, www.realclearpolitics.com/video/2015/11/13/obama_on_isis_we_have_contained_them.html
[14] “String of losses in Syria leaves Asad regime increas­ingly pre­car­i­ous”, www.theguardian.com/world/2015/jun/11/syria-losses-east-assad-regime-precarious
[15] “Remarks with Russ­ian For­eign Min­is­ter Lavrov”, www.state.gov/secretary/remarks/2015/09/247662.htm
[16] “US says Asad must go, tim­ing down to nego­ti­a­tion”, www.reuters.com/article/2015/09/19/us-mideastcrisis-kerrytalks-idUSKCN0RJ0FX20150919
[17] “Putin told Assad ‘go or you’ll be made to go,’ Israeli offi­cials say”, www.timesofisrael.com/putin-told-assad-to-go-or-be-made-to-go-israeli-officials-say/
[18] “Rus­sians Strike Tar­gets in Syria, but not ISIS Areas”, www.nytimes.com/2015/10/01/world/europe/russia-airstrikes-syria.html
[19] “Rus­sia is strik­ing same tar­gets in Syria as US: Lavrov”, http://news.yahoo.com/russia-not-planning-air-strikes-iraq-lavrov-160921744.html
[20] “France more active than rest of the west in tack­ling Syria”, www.theguardian.com/world/2015/nov/14/france-active-policy-syria-assad-isis-paris-attacks-air-strikes
[21] “France launches its first airstrikes against ISIS in Syria”, http://edition.cnn.com/2015/09/27/middleeast/syria-france-isis-bombing/
[22] “France Launches Airstrikes Against Islamic State Strong­hold in Syria”, www.wsj.com/articles/u-s-providing-targeting-intelligence-to-france-for-strikes-on-islamic-state-after-paris-attacks-1447618522
[23] “Rus­sia accuses US of hijack­ing meet­ings to pre­pare for Syria talks, US says Moscow didn’t show”, www.usnews.com/news/world/articles/2015/11/12/russia-accuses-us-of-hijacking-preparations-for-syria-talks
[24] “Paris attacks: Syr­ian tran­si­tion plan reached by US, Rus­sia in Vienna talks”, www.smh.com.au/world/paris-attacks-syrian-transition-plan-reached-by-us-russia-in-vienna-talks-20151115-gkz9qa.html#ixzz3rqvYg8Vx
[25] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[26] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[27] “Syr­ian Tran­si­tion Plan Reached by U.S., Rus­sia in Vienna”, www.bloomberg.com/news/articles/2015–11-14/syrian-transition-plan-achieved-by-u-s-allies-kerry-says
[28] “France Launches Airstrikes Against Islamic State Strong­hold in Syria”, www.wsj.com/articles/u-s-providing-targeting-intelligence-to-france-for-strikes-on-islamic-state-after-paris-attacks-1447618522

http://sindhanai.org/

May 3, 2016

தஃவா, களப்பணி, சிறை: ரிஷ்க் பற்றிய புரிதல்

     
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்று வந்த ஒரு நண்பர் எழுதிய, எமது சிந்தனையை தூண்டக்கூடிய ஓர் சிறிய ஆக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கிலாஃபத்தின் மீள்வருகைக்காக தீவிரமாகக் களப்பணிகளில் ஈடுபட்டு அடிக்கடி சிறைவாசம் அனுபவித்த சகோதரர்களை சந்தித்த அவரின் வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுபவை. நிச்சயம் அது உங்களையும் சிந்திக்கத் தூண்டும் என நம்புகிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்றிருந்த எனக்கு நீண்டகாலமாகத் அறிமுகமான ஒரு நண்பரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னை விட மிகவும் வயதில் குறைந்தவராய் இருந்தாலும் வாழ்வின் சோதனைகளை முகம் கொடுப்பதில் அவர் மிகவும் பக்குவப்பட்டவர். அவர் ஒரு அரசியல் செயற்பாட்டாளர். இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாக ஏற்று, அதன்படி வாழ்கின்ற, ஐக்கியப்பட்ட ஓர் உம்மத்தை உருவாக்குவதை நோக்கி அழைத்தல் என்ற அடிப்படையில் எங்களது செயற்பாடுகளுக்கு மத்தியில் பெரிய வேறுபாடு கிடையாது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், அவர் அந்த அரசியல் கருத்துக்களைக் கொண்டிருப்பதால் முகம் கொடுத்த சோதனைகள்தான்.
 
அவர் பல முறை சிறைவாசம் அனுபவித்ததால் அவரது கல்வியிலும், தனிப்பட்ட வாழ்விலும் அது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது. ஒருவருக்கு சிறை அனுபவத்தை வழங்க அவர் சிறைகளின் இழிவான வாழ்க்கைத் தரத்தையும், சித்திரவதையும் அனுபவிப்பது கட்டாயமானது என்பது முஸ்லிம் உலகின் சிறைகளின் யதார்த்தத்தை நீங்கள் அறிந்திருந்தால் தெரிந்திருக்கும்.
 
ஏன் அவர் அடிக்கடி சிறைக்குச் செல்ல வேண்டும்? அவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல மனிதர். வன்முறைகளை பரப்புரை செய்பவருமல்ல. எனினும் முஸ்லிம் உலகின் துரதிஷ்டமான நிலை என்னவென்றால் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்பது மாத்திரம் அரச இயந்திரத்தினால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட போதுமானது என்பதே.
 
இம்முறை அவரை சந்தித்த பொது பல மணிநேரங்கள் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். எனினும் விடைபெற முன்னர் அவர் எனக்கு ரிஷ்க் பற்றி புகட்டிய பாடத்தை, அத்தலைப்பில் பல கட்டுரைகளை வாசித்த பின்னரும், பல குத்பாக்களை நிகழ்த்திய பின்னரும் கூட அவர் விளக்கியது போல நான் புரிந்து கொண்டிருப்பேன் என்று நம்பவில்லை.
 
முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ரிஷ்க் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது என நாம் நம்புகிறோம். அந்த உறுதியான நம்பிக்கை எமது வாழ்வில் தொழிலை இழக்க நேரிடல், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படல் போன்ற சில பாதகமாக விடயங்கள் நடக்கின்றபோது எமது ஜீவனோபாயத்திற்கு என்ன செய்யப்போகிறோமோ தெரியவில்லை என்று அங்கலாய்ப்பதிலிருந்து எம்மை விடுவிக்க வேண்டும். மேலும் இந்த நம்பிக்கை வாழ்வாதாரம் பாதிப்படைந்து விடுமோ என அஞ்சி அல்லாஹ்(சுபு) எம் மீது சுமத்தியிருக்கின்ற கடமைகளை செய்வதில் சமரசம் செய்யாதிருக்க உதவ வேண்டும்.
 
ஒன்றை அறிந்து வைத்திருப்பது வேறு அதன்படி வாழ்வது என்பது வேறு
 
அந்த சகோதரர் வெளியேறிச் செல்லமுன் எனக்கு ஒரு கதை சொன்னார். அவர் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் அவரது குடும்பம் வேறொரு இடத்தில் சென்று வாழவேண்டியேற்பட்டதாம். அதனால் அதுவரை காலமும் படித்த பாடசாலையை விட்டு விலக வேண்டிய நிலை. அது அவரது பழைய நண்பர் வட்டத்திலிருந்து அவரைத் தூரமாக்கியதாம். பின்னர் புதிய நண்பர் வட்டம் ஒன்றை அவர் ஏற்படுத்திக் கொண்டாராம். அவருக்கு புதிய நண்பர்கள் கிடைந்த அதே சமயம் அவரது பழைய பாடசாலை நண்பர்கள் போதை பொருட்களுடனும், குற்றச்செயல்களுடனும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். அந்தத் தருணத்தில் தனக்கு நல்ல நண்பர்களை பெற்றுத்தந்தது அல்லாஹ்(சுபு) செய்த பேரருளாகும் என்று அவர் சொன்னார்.
 
பின்னர் அவரது பழைய நண்பர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது நண்பரும் ஏறத்தாழ அதே அனுபவத்தைதான் பெற்றிருக்கிறார். அவரும் சிறைக்கு சென்றிருக்கிறார். அவரது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருபாலாரினதும் அனுபவமும் ஒன்றாக இருந்தாலும் அதனை  அவர்கள் அடைந்த பாதை முற்றிலும் வேறுபட்டது. அவரது நண்பர்கள் தமது சுய இச்சையை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டார்கள். எனது நண்பரோ அல்லாஹ்(சுபு)வை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டிருக்கிறார்.
 
அவர் இறுதியாக ஒன்று சொன்னார், அதாவது அவரது ரிஷ்க் சிறைக்குள்தான் கிடைக்கும் என்று முன்பே எழுதப்பட்டிருந்தால் எந்த வகையிலோ நான் சிறைக்கு வந்து சேர்ந்துதான் இருப்பேன்;. ஆனால் அந்த ரிஷ்க்கை பெற்றுக் கொள்வதற்கு நாம் பாவிக்கும் வழியே கவனத்திற்குரியது என்று ரிஷ்க் பற்றிய புரிதலை மிக தத்ரூபமாகக் கூறி  முடித்தார்.
 
பின்னர் அவரை அழைத்துச் செல்ல வந்து விட்டார்கள். அவரும் விடைபெற்று சென்றுவிட்டார். அவரை திரும்ப எப்போது காணுவேனோ என சிந்தித்துக் கொண்டு எனது வீட்டுத்தொகுதிக்கு வந்துவிட்டேன். சில நிமிடங்கள் கழித்து எனது வீட்டு அழைப்பொலி கேட்டது. உள்ளே நுழைந்த எனது அன்னை  “பார், யாரை நான் திரும்ப அழைந்து வந்துள்ளேன்” என்று சொல்லி அந்த நண்பரைக் காட்டினார். அந்த நண்பர் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய போது அம்மா வீட்டில் இருக்கவில்லை, மாடிப்படியால் அவர் இறங்கிச் சென்று கொண்டிருந்தபோதுதான் வீடு திரும்பிக்கொண்டிருந்த அம்மா அவரைக் சந்தித்திருக்கிறார். அவர் வெளியேறிய போது இரவுச் சாப்பாட்டு நேரம் ஆகியிருந்தது. அவர் உணவருந்தாது சென்றதை அனுமதிக்காத எனது அம்மா அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் எங்களுடன் இராபோசனத்திற்காக மேசையில் அமர்ந்த அவர் பின்வருமாறு கூறினார், “இன்றிரவு எனது ரிஷ்க் இங்குதான் என எழுதப்பட்டிருக்கிறது” என்று.
 
sources:

May 2, 2016

அமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா?


 

சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள்  தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த நாட்டிற்கென எந்தவொரு செயற்திட்டமும்  இல்லை எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் அன்மையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  ஜெர்மனியில் ஜூன் 8ம் தேதி நடந்த எழுவர்(7) குழு (G7) உச்சி மாநாட்டில் ஒரு செய்தி அறிவப்பின்போது இவ்வாறு கூறினார்: “பயிற்சியளிப்பதையும் உதவி புரிந்து வருவதையும் அமெரிக்கா தொடர்ந்து செயல்படுத்தும்,” என கூறி அதன் பின்னர் “எங்களிடம் இன்னும் ஒரு முழுமையான செயற்திட்டம் இல்லை” என ஒப்புக்கொண்டார்.[1] அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரும் ஜான் கெர்ரியும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ எதிர்கொள்ள ஒரு முழுமையான செயற்திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என அறிவித்துள்ளனர்.  அமெரிக்காவின் சிரியா மற்றும் ஈராக்கின் நோக்கத்தை மேலும் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய அளவு வெளிதோற்றத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பெருமளவு சக்தியுடையதாக தோற்றம் அளித்தாலும், உண்மையில் அமெரிக்க அதிகாரிகள் அவர்களுடைய செயற்திட்டத்தை வெளி உலகிற்கு தெரிவிக்காமல் இருக்கின்றனர் இது அவர்களுடைய உண்மையான செயற்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு கால அவகாசம் எடுத்து கொண்டிருக்கின்றனர், இந்த உண்மை சிரியா எனும் அரங்கில் பங்கு கொண்டிருக்கும் அனைவருக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் நமக்கு தெரியவரும்.

பஷார் அல்-அசாதின் அரசை பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் ஒரே நிலைபாட்டை கொண்டிருக்கிறது, இது அதற்கென ஒரு தெளிவான செயற்திட்டத்தை கொண்டிருப்பதை காட்டுகிறது. மார்ச் 2011ல் புரட்சி முழுவீச்சில் தடைபெற்று கொண்டிருந்த சமயம், அமெரிக்காவின் திட்டத்தை மேற்கோள் காட்டி ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறினார்: “சிரியாவின் உள்ளே நடைபெற்று கொண்டிருப்பவை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது, நான் அறிவது என்னவெனில் ஒரு மறு சீரமைப்பிற்கான திட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பு அவர்களிடம் உள்ளது. சிரியாவில் முன்னேற்றத்திற்கான வழி இருப்பதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவே நாங்கள் எங்களுடைய அனைத்து நேசர்களுடன் தொடர்ந்து கை கோர்ந்து இந்த விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்.” [2] இந்த புரட்சி மாதக்கணக்கிலிருந்து வருடக்கணக்காக நடைபெற்று கொண்டிருக்கிறது, அமெரிக்க அதிகாரிகள் அல்-அசாதை கண்டித்தார்களே தவிர அவரையோ அல்லது அவரது அரசை நீக்கவோ எதையும் செய்யவில்லை. பல நேரங்களில் உபயோகப்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்கள், கணக்கில்லாமல் போடப்பட்ட குழாய் வெடிகுண்டுகள், புரட்சி படைகளை உபயோகித்தது மேலும் பொது மக்களை ராணுவத்தை கொண்டு சுற்றி வளைத்தது மற்றும் அவர்கள் மீது குண்டு மழை பொழிந்தது இவ்வனைத்து செயல்களுக்கும் கண்டனத்தை தவிர அமெரிக்கா வேறு எதையும் செய்யாதததை காண்கிறோம், இது அல்-அசாதின் அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க செய்யவும் மேலும் அவர் அந்த நிலையை தக்க வைத்து கொள்வதற்கான பாதுகாப்பு அரணாகவும் அமைந்தது. சிரிய அரசு பற்றிய அமெரிக்காவின் உண்மை நிலையை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பேனெட்டா சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் மூலம் ஊர்ஜிதமாக்குகிறது, அதில் அவர் இவ்வாறு கூறினார்: “அசாத் வெளியேறும்போது முக்கிய விஷயமாக நான் கருதுவது-நிச்சயமாக அவர் வெளியேறுவார்-அந்த நாட்டில் நிலைத்தன்மையை பாதுகாக்க முயல வேண்டும். மேலும் அந்த வகையான நிலைத்தன்மை நீடித்து இருக்க அதிக அளவிளான ராணுவத்தையும், காவல்துறையையும் பாதுகாப்பு படையினருடன் சேர்த்து நிலை நிறுத்த வேண்டும், மேலும் அவர்கள் ஜனநாயக முறையிலான அரசை ஏற்படுத்துவதற்கு முன் வருவார்கள் என நம்புகிறேன்.” [3] அமெரிக்கா இந்த புரட்சியின் முடிவு எதுவாகினும் இந்த அரசு தொடர்ந்து நீடிக்க விரும்புகிறது, ஒன்று அசாத் இருக்கும் நிலையில் அல்லது அசாத் இல்லாத நிலையில்.

சிரியாவின் புரட்சியானது மக்களை பல படை பிரிவுகளாக ஒருங்கிணைக்க வைத்தது, நாட்டின் வெளியே இருந்தும் பலர் தங்களுடைய சகோதரர்களுடன் சேர்ந்து அந்நாட்டிற்காக போராடத்தில் கலந்து கொண்டனர். அல்-அசாத் தேவை ஏற்படின் கொடூரமான முறைகளை கையாளக்கூடிய வழக்கத்தை கொண்டிருப்பவர் என்பதால் பெரும்பாலான உலகம் இந்த புரட்சியை அந்த அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என நம்பினர். ஆனால் புரட்சியாளர்கள் நாட்டின் அனைத்து முனைகளிலிருந்து அரசுக்கு எதிராக போராடி வருவதால், குறிப்பாக ராணுவத்திலிருந்து பல அதிகாரிகள் வெளியேறியதால், இந்த அரசு இந்த புரட்சியை தோற்கடிக்கும் திறனை முழுமையாக பெற்றிருக்கவில்லை; இந்த போராட்டம் வெகுவிரைவில் ஒரு இக்கட்டான நிலையை அடைந்தது. இங்கு தான் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவும், ஆயுத உதவி செய்வதற்கும் மற்றும் சர்வதேச மாநாடுகளில் சிரியாவின் எதிர்காலம் குறித்து அவர்களுடைய கருத்தை கேட்பதற்கு தோதுவான ஒரு எதிரணியை உருவாக்கும் முயற்சியை தொடங்கியது. அமெரிக்கா மற்ற குழுக்களை விடுத்து சில குறிப்பிட்ட குழுக்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதிலிருந்து அதன் செயற்திட்டம் தெளிவாக தெரிகிறது. அதே போல் அந்த நாட்டின் நிலைப்பாட்டை மாற்றக்கூடிய அளவிற்கான எந்த குழுவிற்கும் போதிய ஆயுதத்தை அது வழங்கவில்லை. நான்கு வருடங்கள் ஆகின்றது, ஃபிரீ சிரியன் ஆர்மி(FSA), தி சிரியன் தேஷனல் கோஅலிஷன் (SNA) போன்ற அமைப்புகளை அமெரிக்கா வியாபாரம் செய்ய விரும்பாத அமைப்புகள் மறைக்க செய்தது. இஸ்லாமிய அமைப்புகள் உட்பட உண்மையான அமைப்புகளை விட மதசார்பற்ற அமைப்புகளை ஊக்கப்படுத்துவதே அமெரிக்காவின் செயற்திட்டமாகும். இந்த முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்தது இதன் காரணமாகவே அமெரிக்கா சிரியா அரங்கில் குழுக்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கப்போவதாக அறிவித்தது.[4] இவையனைத்தும் சிரியாவிற்கென அமெரிக்கா ஒரு தெளிவான செயற்திட்டத்தின் அடிப்படையில் செயலாற்றி கொண்டிருப்பதை காட்டுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸின் வருகை சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் புரட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதே தவிற எந்த விதத்திலும் அதற்கு உதவியாக இருக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் விஜயமானது போராட்டக்காரர்கள் நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் தாக்குதல்கள் நடத்தி கொண்டிருக்கையில் நடைபெற்றது. அல்-அசாத் அரசு வெகு சில வீரர்களை மட்டுமே  நம்பி இருந்தது மேலும் இந்த புரட்சியில் தாக்குபிடிக்க அது ஈரானிய உதவியையும் ஆதரவையும் முழுமையாக நம்பி இருந்தது.   இந்த வசந்தத்தில் இஸ்லாமிய வாசம் வீசுவது தெளிவாக தெரிகின்றது, இந்த அரசை நீக்கி இஸ்லாமிய அடிப்படையிலான ஒன்றை நிறுவ வேண்டியே போராட்டக்குழுக்களின் பெரும்பான்மையான கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த சமயத்தில் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் விஜயமானது வந்ததோடு இந்த புரட்சியை தடம்புரள செய்தது. ஜூன் 2014ல் மொசூலை வெற்றி கொண்டதிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் விரிவாக்கத்தை தொடக்கி வைத்தது.  ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றுவதற்கு உகந்த நிலையை ஏற்படுத்த உதவும் விதத்தில் ஈராக்கிய ராணுவத்திலிருந்து எண்ணிலடங்கா அதிகாரிகளை தங்களின் பொறுப்பையும்  நிலையையும் விட்டு செல்லுமாறு கட்டளையிடப்பட்டதாக அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதை  நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே ரெவல்யூஷன் அப்சர்வரில் (www.revolutionobserver.com) நாம் இந்த நிலைபாட்டை தெளிவாக விளக்கி வருகிறோம். ஈராக்கிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியா நோக்கி விரிவடைந்து அங்குள்ள அனைத்து போராட்ட குழக்களுடன் நீடித்து நடைபெறக்கூடிய யுத்தத்தில் நுழைந்தது. சிரியாவின் வட பகுதியில் போராட்ட குழுக்கள் வசமிருந்த பல பகுதிகளை கைப்பற்றியது. பிரபலமான சர்வதேச பாதுகாப்பு நிறுவனமான ஜேம்ஸ் இன்டெலிஜென்ஸ், 2014 ல் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 64% இதர போராட்ட குழுக்களின் மீது நடத்தப்பட்டது எனவும் அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் வெறும் 13% அல்-அசாத் படையினரை நோக்கி இருந்தது என அறிவித்தது.[5]

இப்போது தெளிவாக்க்கூடிய விஷயம் என்னவெனில் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ அழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஈராக்-சிரியா இடையே தன்னுடைய படைகள் மற்றும் ஆயுதம் தாங்கி வாகனங்களுடன் தங்குதடையின்றி கடந்து செல்கின்றது, இந்த எல்லையோர பகுதியில் எவ்விதமான விமான தாக்குதல்களையும் அமெரிக்கா மேற்கொள்ளவில்லை.  பெறுவாரியான நிலப்பரப்பில் இவர்கள்  விரிவாக்கம் செய்தபோதும்  எதிரிகளின் எண்ணிக்கை இவர்களை விட 30 மடங்கு அதிகம் இருந்த போதிலும்  எப்படியோ எதிரணியினரை தோற்கடித்த போதிலும், டமாஸ்கஸ் அரசிற்கு நெருக்கமாக பாக்தாத் வந்தடையும் வரை அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக எதையும் செய்யவில்லை. அமெரிக்க விமானப்படையின் இந்த நிலைபாடு பல ஈராக்கியர்களையும் சிரியர்களையும் நிலைகுலைய செய்தது. அமெரிக்கர்கள் மற்றும் அதன் நேச நாடுகள் இதுவரை தாங்கள் எங்கும் அனுப்பியராத ஆகாயத்திலிருந்து  துள்ளியமாக தாக்கக்கூடிய போர் விமானங்களை கொண்டுள்ளது, இருந்த போதிலும் சமீபத்தில் ரமாதியில் நடந்த போரில் அமெரிக்க வெறும் 19 வான்வழி தாக்குதல்களை மட்டுமே நடத்தியது.[6] மேஜர். முஹம்மத் அல்-துலைமி, அன்பார் பிராந்தியத்தை சார்ந்த ஒரு ஈராக்கிய அதிகாரி “அன்பாரில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்கள் எங்களது படைகளுக்கு ஐஃஎஸ்.ஐ.எஸ் ஐ எதிர்கொண்டு தடுத்து நிறுத்த எந்த வகையிலும் உதவவில்லை. அமெரிக்க தலைமையிலான கூட்டணி வான்வழி தாக்குதல்களின் செயலற்ற தன்மையால் நாங்கள் பெருமளவிளான இடங்களை இழக்க வைத்தது.” [7] என  கூறினார். அன்பாரில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் தரைப்படை பலத்தை சமாளிக்க போதுமான உதவிகளை  சர்வதேச படைகள் அளிக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் வெற்றியை கொண்டாட ரமாதியில் ராணுவ பேரணியை கூட நடத்தியது, அப்பேரணியில் அது கைப்பற்றிய அமெரிக்க ராணுவ தளவாடங்களும் அடங்கும், இருந்தும் அதன் மீது எவ்வித வான்வழி தாக்குதலும் நடத்தப்படவில்லை.[8] அமெரிக்க விமானப்படை கீழே வீசிய ராணுவ தளவாடங்கள் பல முறை நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் கைவசம் சென்றடைந்தது.[9] ஐ.எஸ்.ஐ.எஸ் அல்-அசாதிற்கு எதிரான போராட்ட குழுக்களை திசை திருப்பும் விதமான போராட்டத்தை மேற்கொண்டதன் மூலம் அவர்களிடம் உள்ள பொருட்களையும் ஊக்கத்தையும் குறைத்து அவர்களை பலவீனமாக்கி வருகிறது. அமெரிக்காவின் கண்ணோட்டத்திற்கு ஒத்து போகும் வகையில் அமைந்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் கண்ணோட்டம் தற்சமயம் அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதன் காரணத்தால் தான் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக குறைவான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பதை காட்டுகிறது.

புரட்சியின் உயிரோட்டத்தை வெளியேற்றும் செயற்திட்டத்தை அமெரிக்கா மிகவும் ஜாக்கிரதையாக செயல்படுத்தி வருகிறது, ஆனால்  அது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக நடத்திய போரில் நேரடியாக ஈடுபட்டு தோற்றதை போன்றல்லாமல், அதன் செயற்திட்டமானது பிராந்தியத்திலுள்ளவர்கள் மற்றும் உள்நாட்டினரை பெரும்பாலும் ஈடுபடுத்தி தூரத்திலருந்து அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில்  போராட்டக்குழுக்களுக்கு எதிராக சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் மக்கள் அவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து போராடி வருவது தான். அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா விரும்பும் குழுக்கள் மக்கள் மத்தியில் துளி அளவு நம்பிக்கை கூட பெற்றிருக்கவில்லை. இதன் விளைவாக அமெரிக்கா சிரியாவில் ஒரு நெடிய போராட்டத்தை பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறக்கூடிய அளவிலான போராட்டத்தை  நடத்தி வருகிறது. இந்நிலை சிரியாவில் அமெரிக்கா இன்னும் சில ஆண்டுகள் ஈடுபட்டிருக்கும்  என்பதை சுட்டி காட்டுகின்றது. அமெரிக்கா விரும்பிய முடிவு ஏற்படாததன் காரணத்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வர நீண்ட காலமாகும். அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுவதற்குரிய நேரம் வரை காலம் தாழ்த்தப்பட வேண்டும் என்ற காரணத்தால் தான் தொடர்ந்து  தங்களிடம் எந்தவொரு முழுமையான செயற்திட்டம் இல்லை என்று கூறி வருகிறார்கள்.











[9] http://21stcenturywire.com/2015/02/18/in-plain-sight-coalition-forces-routinely-air-drop-military-supplies-to-isis-fighters-in-syria/