Sep 22, 2015

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாளை கொண்டாட இருக்கும் உறவுகளை ISLAMIC UPRISING BLOG வாழ்த்துகிறது: ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் நாளாகும். அதேவேளை ஹஜ் கடமையானது ஒரு சர்வதேச மாநாடாகவும் அமைந்திருக்கின்றது.

ஹஜ் என்ற சர்வதேச மாநாட்டில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம் உம்மாவின் உறுப்பினர்கள் மக்காவில் ஒன்றுகூடி ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றனர். இன , மொழி, நிற , பிரதேச , தேச வேருபாடுகள் புறக்கணித்து ஒரே விதமாக ஒரேநேர காலத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்தபடி தம் கடமையை நிறைவேற்றுகின்றார்கள். இவைகள் முஸ்லிம் உம்மாவிற்கு ஒன்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் கற்றுகொடுக்கின்றது. இவற்றை நினைவில் கொண்டு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட உங்கள் அனைவரையும் Islamicuprising.blogspot.com
வாழ்த்துகின்றது.

அரபா நோன்பின் மாண்புகள்.


அரபா தினம்’ என்பது ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான். ‘இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்’ (திருக்குர்ஆன் 5:3) இந்த வசனம் ஹிஜ்ரி 10–ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின் போதும், துல்ஹஜ் பிறை 9–ம் நாளான அரபாதினத்தின் போதும் தான் இறங்கியது. இந்த வசனம் குறித்து அப்போதைய யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கூறும்போது, ‘நீங்கள் ஓர் இறை வசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரபா (துல்ஹஜ் 9–ம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீது ஆணை! நாங்கள் அப்போது அரபாவில் இருந்தோம்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: தாரிக்பின் ஷிஹாப் (ரஹ்) புகாரி: 4606)

அரபா தான் ஹஜ்’ ஹஜ் என்பதே அரபா (வில் தங்குவது) தான். துல்ஹஜ் பத்தாம் இரவில் அதிகாலைக்கு முன்பு ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால், அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி) நூல்கள்: அஹ்மது, அபூதாவூத், நஸயீ, திர்மிதி)

அரபா நோன்பின் மாண்பு: 

அரபா தினத்தில் ஹஜ்ஜிக்கு செல்லாதவர்கள் நோன்பு நோற்பது சிறப்பான வழிபாடாகும். புனித ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் அரபா தினத்தில் அதிகமதிகம் நன்மைகள் பலவற்றை புரிவதற்கும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவதற்கும் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தேவையில்லை! ‘அரபா நாளின் நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்) அரபா தினத்தை விட சிறந்தநாள் வேறெதுவும் கிடையாது. மற்ற தினங்களைவிட அன்றைய தினத்தில் அதிகமான நரக கைதிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடுதலை அளிக்கிறான். அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி வந்து, அவர்களின் மாண்பு குறித்து வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்).

Sep 18, 2015

யார் அந்த மிதவாத முஸ்லிம்?





முகத்தை மறைத்து முஸ்லிம் பெண்கள் ஆடை அணிவது தீவிரவாத முஸ்லிம்களின் அடையாளம்என்ற கருத்து உலகமெங்கும் உலா வருகிறது. இலங்கையிலும் முஸ்லிம் பெண்களின் இஸ்லாமியஆடையில் கைவைப்பதற்கு பௌத்த தீவிரவாத சக்திகள் அண்மைக்காலமாக முயன்று வருகிறார்கள்.கிலாஃத் வீழ்த்தப்பட்ட தினமான மார்ச் 3ஆம் திகதி பொது பல சேனா கொழும்பில் நிகழ்த்தியஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையில் புதிதாத நடைமுறைக்கு வந்திருக்கும் தலைக்கவச சட்டம்தொடர்பாக வினவப்பட்ட கேள்விக்கு அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் இவ்வாறு பதிலளித்தார்.

“தலைக்கவசம் தொடர்பில் சட்டம் கொண்டு வந்து, முழுமையாக முகத்தை மூடிய தலைக்கவசம்அணிவதை தடை செய்வதாயின் அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, பர்தா வகைஉடைகளையும் தடை செய்து பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். சட்டம் என்பதுஅனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமைய வேண்டும். முஸ்லிம் தீவிரவாதத்திற்குமுன்னுரிமை கொடுத்து நாட்டை சிறிது காலத்திலேயே இஸ்லாமிய தேசமாக்கும் செயற்பாடுமறைமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது..."


பொதுபலசேனா விதைத்துவரும் இத்தகைய நச்சுக்கருத்துக்கள் எந்தவித பின்னணியுமற்றுசெய்யப்படும் பிரச்சாரமாக நாம் கருதக்கூடாது. முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளை,நடத்தைகளை தீவிரவாதச் செயற்பாடுகளாக போலிப் பிரச்சாரம் செய்வது இன்றைய உலகின்வாடிக்கையாய் மாறிவிட்டது. இது BBS போன்ற சில மதவெறியர்களின் பிதற்றல்கள் மாத்திரமே என்றுநாம் நினைப்பது பாரிய தவறாகும். மாறாக இன்று உலகில் இஸ்லாத்திற்கு எதிராக நேர்த்தியாகதிட்;டமிடப்பட்ட பனிப்போர் இடம்பெற்று வருகிறது. அந்த பனிப்போரின் முக்கிய தாக்குதல்முனைதான் முஸ்லிம்களுக்கு எதிரான போலிப்பிரச்சாரம். இந்த பனிப்போரை நடத்தும் சக்திகளின்தாக்குதல் முகாம்கள் உலகெங்கும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியிலிருந்தேஇலங்கையையும் நாம் பார்க்க வேண்டும். இவர்கள் முன்வைக்கும் முக்கிய வாதங்களில் ஒன்றுதான்முஸ்லிம்களில் மிதவாத முஸ்லிம்கள் என்ற ஒரு பிரிவினரும், தீவிரவாத முஸ்லிம்கள் என்ற ஒருபிரிவினரும் வாழ்கின்றனர். இன்றைய நவீன உலகிற்கு அச்சுறுத்தலானவர்கள் இந்த தீவிரவாதமுஸ்லிம்களே. அவர்களின் அச்சுறுத்தல்களிலிருந்து உலகின் ஒவ்வொரு தேசத்தையும் காப்பாற்றவேண்டும் என்பதே அவர்களின் வாதமாகும். இத்தகைய பிரச்சாரங்கள் உலகின் வல்லரசுகளாலும்,ஏனைய அரசுகளாலும், ஊடகங்களாலும் மிகவும் ஆழமாகவும், வேகமாகவும் பரப்புரை செய்யப்பட்டுவருவதால் அது பற்றிய தெளிவு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மிதவாத முஸ்லிம்: இஸ்லாத்தின் அளவுகோல் என்ன?

மிதவாத முஸ்லிம், தீவிரவாத முஸ்லிம் என்று பிறர் எம்மை வகைப்படுத்த முன்னர் அந்தஅடையாளங்கள் குறித்த அறிவு எம்மிடம் இருக்க வேண்டும். மிதவாத முஸ்லிமாக இருப்பது என்றால்என்ன? யார் உண்மையில் தீவிரவாதிகள்? அவர்களை யார் இவ்வாறு வகைப்படுத்தியது? எந்தஅடிப்படையில்? இவை நல்ல முஸ்லிம், கெட்ட முஸ்லிம் என்ற வேறுபாடா? இவ்வடையாளங்களைபயன்படுத்தினால்தான் என்ன? போன்ற மிக அடிப்படையான கேள்விகள் இன்றைய உலகில் வாழும்ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகனிடம் இயல்பாகவே எழக்கூடும்.

அல்குர்ஆன் அஸ்ஸ_ன்ஆவின் ஒளியில் இந்த வகைப்படுத்தலை ஆராய்ந்து பார்ப்பது இங்கு மிகவும்முக்கியமானது. ரஸ_ல்(ஸல்) மிதவாதிகள், தீவிரவாதிகள் என தமது தோழர்களை பிரித்துப்பார்த்தார்களா?

ஸஹாபாக்கள் மிதவாதி, தீவிரவாதி என்ற அளவுகோலை பயன்படுத்தி பிறரைஅடையாளப்படுத்தினார்களா? அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே குறிப்பிடுகிறான்,

'அல்லாஹ்வின் பார்வையில் உங்களில் மிகச்சிறந்தவர் மிக்க தக்வா (இறையச்சம்) உள்ளவரே" (49:13)

ஆகவே இஸ்லாத்தின் அளவுகோலின்படி மக்கள் தீவிரவாதிகளாகவும், மிதவாதிகளாகவும்பார்க்கப்படவில்லை. மாறாக இஸ்லாம் முஸ்லிம்களை தக்வாவின் அடிப்படையிலேயேவேறுபடுத்திப் பார்க்கிறது. மிதவாதம், தீவிரவாதம் என்ற பார்வையினூடாக முஸ்லிம்களைபகுப்பாய்வு செய்யும் பாங்கு காலங்காலமாக வந்த உலமாக்களால் செய்யப்படவில்லை. இந்தஅடையாளப்படுத்தல் நவீன கால இஸ்லாமிய ஆய்வுகளிலேயே ஒரு பித்ஆத்தாக (புதினமாக)ஆங்காங்கே ஊடுருவியிருப்பதை நாம் காண்கிறோம்.

இஸ்லாத்தை விரும்பத்தகாத ஒன்றாக மாற்றுதல்:

முஸ்லிம்களை இவ்வாறாக பாகுபடுத்துவதன் நோக்கமே தூய இஸ்லாத்தை எம்மிடமிருந்துஅந்நியப்படுத்தி அதனை ஒரு அச்சுறுத்தலாக மாற்றுதலாகும். உலகின் பிரதான ஊடகங்களும்,சிந்தனை வட்டங்களும், அரசியல்வாதிகளும் இஸ்லாத்தை மிலிடண்ட்(இராணுவ) இஸ்லாம், ரெடிகல்(தீவிர) இஸ்லாம், எக்ஸ்ரீமிஸ்ட் இஸ்லாம் என பலவாறாக அடையாளப்படுத்தி முஸ்லிம்கள் தமதுமார்க்கத்தை எப்போதும் பீதியுடன் பின்பற்றும் சூழலையை தோற்றுவித்து வருகிறார்கள். இதற்கு பலஉதாரணங்களைக் கூறலாம்.

மது அருந்துவதை தவிர்த்தல்: முஸ்லிம் உலகிற்குள் மதுபான இறக்குமதியை தடைசெய்யும்செயற்பாட்டை ஒரு தீவிரவாத நடவடிக்கையாக சித்தரிக்கிறார்கள். ஊNN ஒருமுறை இவ்வாறு செய்திசொன்னது. 'அல்ஜீரிய பாராளுமன்றம் மதுபான இறக்குமதியை தடைசெய்யும் முடிவிற்குவாக்களித்ததன் ஊடாக ஒரு மிதவாத முஸ்லிம் நாடு என்ற நிலையிலிருந்து விலகிச்சென்று மீண்டும்இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு திரும்பியுள்ளது."

இந்த மேற்குலக ஊடகத்தின் பார்வையில் மதுபானம் அருந்துவது மிதவாத முஸ்லிம்களின்அடையாளம்;; மதுபானத்தை தடைசெய்வது தீவிரவாதம்.

ஹிஜாப் அணிதல்:
ஜலை 2014 இல் 24 வயது முஸ்லிம் பெண்ணொருவர் ஹிஜாப் தடைச்சட்டமானது தனது மத மற்றும்கருத்துச் சுதந்திர உரிமையை மீறுகிறது என்ற அடிப்படையில் மனித உரிமைக்கான ஐரோப்பியநீதிமன்றத்தில் வழக்காடிய போதிலும் நீதிமன்றம் தடை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்றே தீர்ப்புவழங்கியது.

கனடாவின் இமிகிரேஷன் மந்திரி கிரிஸ் அலக்ஸ்ஸாண்டர் அண்மையில் தனது டிவிட்டரிலேஇவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 'நிகாப், ஹிஜாப், புர்கா, திருமண வேளையில் அணியும் முகத்திரைபோன்ற ஆடைகளுக்கு பிறஜாவுரிமைக்கான சந்தியப்பிரமாணம் எடுக்கும் இடத்தில் அனுமதிகிடையாது"

இத்தகைய தடைகளை பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் என மேற்குலகெங்கும் நாங்கள் காணலாம்.எனினும் அல்லாஹ்(சுபு) பருவமடைந்த பெண்கள் தமது பொதுவாழ்வில் எவ்வாறு ஆடை அணியவேண்டும் என்பதை மிகத்தெளிவாக வரையறுத்து அதனை அவர்கள் மீது கட்டாய கடமையாக்கிஉள்ளான்.

'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின்பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைக் தாழ்த்திக் கொள்ளுமாறுகூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிக்கஇது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (33:59)

'இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத்தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்; தங்கள் அழங்காரத்தை அதினின்று(சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள்தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்..."(24:31)

கிலாஃபத் பற்றிய சிந்தனையை கைவிடச்செய்தல்:
அமெரிக்க சிந்தனை மையங்களில் ஒன்றான RAND பதிப்பகம் 'மிதவாத முஸ்லிம் வலைப்பின்னலைநிர்மாணித்தல்" என்ற அறிக்கையில் பின்வருவாறு கூறுகிறது. 'ஒரு அரசியல் தத்துவம்ஜனநாயகமயமானது எனக்கருதப்பட- அது மேற்கத்தைய சிந்தனையிலிருந்தா, அல்லதுகுர்ஆனிலிருந்தா உருவானது என்பது பிரச்சனையில்லை - அது பன்மைத்துவத்iயும் (Pluralism)சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் நிபந்தனையற்று ஆதரிக்கவேண்டும்...ஜனநாயகத்திற்கு ஆதரளிப்பது என்பது இஸ்லாமிய அரசு (கிலாஃபா) பற்றிய சிந்தனையைஎதிர்ப்பதாகும். கடவுள் சார்பில் எவரும் தனித்துப் பேச முடியாது. மாறாக எந்த விடயத்திலும்கடவுளின் விருப்பம் என்ன என்பதை - சுதந்திரமாக தெரிவிக்கப்பட்ட சமூகத்தின் ஏகோபித்த கருத்தின்(இஜ்மா) அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே மிதவாத முஸ்லிம்கள்கொண்டுள்ளனர்."

இந்த அறிக்கையும், இதுபோன்ற அறிக்கைகளும் இஸ்லாமிய வாழ்வொழுங்கின் அடிப்படையாகஅமையும் கிலாஃபத் பற்றிய சிந்தனையை நேரடியாகவே தாக்குகின்றன. மதீனாவிலே இஸ்லாமியஅரசு முதலாவது நிறுவப்பட்ட காலத்திலிருந்து ஷரியத்தின் அடிப்படையில் ஆட்சிகள்தொடர்ந்தனவே தவிர மக்களின் கூட்டான மன இச்சையின் படி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சிநடக்கவில்லை.

ஆகவே மிதவாத முஸ்லிம்கள் என மேற்குலகத் தலைமைகள் வரையறை செய்கின்ற முஸ்லிம்கள்யார் என்றால் மேற்குலக சடவாத அகீதாவிலிருந்து (Materialism) பிறக்கும் தாராண்மைவாதவிழுமியங்களுக்கு (Liberal Values) எப்போது அல்லாஹ்வின் கட்டளைகள் முரணாக நிற்கிறதோஅவற்றை ஓரங்கட்டிவிட்டு மிச்சம் மீதியை மாத்திரம் பின்பற்ற விரும்பும் அரைவேக்காட்டுமுஸ்லிம்கள். மறுபக்கத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழவிரும்பும்முஸ்லிம்கள் இவர்களின் பார்வையில் தீவிரவாதிகள்; சமூகத்தால் ஓரங்கட்டப்படவேண்டியவர்கள்.தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

சமரசம் செய்வது ஆபத்தானது:

சமரசம் செய்வதிலுள்ள ஆபத்து குறித்து நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நாம் அரசுகளாலும்,சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, இவர் தீவிரவாதியல்ல; ஒரு சிறந்த மிதவாதிஎன இவர்கள் அழைக்க வேண்டும் என்பதற்காக, நாம் சில பொழுதுகளில் எமது உயிரிலும் மேலானஇஸ்லாத்தை அதன் விபரீதம் தெரியாமல் சமரசம் செய்ய துணிந்து விடுவோம். எனினும் அதன்ஆபத்தை நபி(ஸல்) அவர்களுக்கு அவரது அழைப்புப்பணியின் ஆரம்பத்திலேயே அல்லாஹ்எச்சரித்துவிட்டான்.

ஆகவே (நபியே! உம்மைப்) பொய்யாக்கக் கூடியவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர். நீர் சமரசம்செய்தால், தாங்களும் சமரசம் செய்யலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.(68:8-9)

மிதவாத முஸ்லிம்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கொடுத்து, அவர்களுக்கு சலுகைகள் வழங்கிஅவர்களை உயர்த்திப்பிடிப்பது இன்று நேற்று உருவான காலணித்துவத் தந்திரமல்ல. மாறாக மிதவாதமுஸ்லிம்கள் - அதாவது சடவாத முஸ்லிம்களை சமூகத்தின் முன்மாதிரிகளாக இனம்காட்டிசடவாதத்தை ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் அடிப்படை அளவுகோலாக மாற்றும் முயற்சியைஇவர்கள் பல நூற்றாண்டு காலமாக செய்து வருகின்றார்கள்.

காலணித்துவப்பட்ட மனநிலையை (colonized mentality) சுதேசிகளின் (Natives) மனங்களில் ஏற்படுத்தும்இலக்கை இவர்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்னரேயே தீர்மானித்திருந்தார்கள். 1854 ஆம் ஆண்டில்இந்தியாவில் கடமையாற்றிய பிரித்தானிய பிரபு மௌண்ட் ஸ்டுவட் எல்பின்ஸ்டனின் கருத்தில்இதனை தெளிவாகக் காணலாம்.

'முடிவிலாக் காலத்திற்கு அனைத்தையும் ஆதிக்கம் செலுத்தலாம் என நாம் கனவு காணக்கூடாது; நாம்இலாபம் அடையும் வண்ணம் சுதேசிகள் தம்மைதாம் ஆழக்கூடிய ஒரு மனோநிலையை அவர்களில்ஏற்படுத்தக்கூடிய வல்லமை எம்மில் ஏற்பட வேண்டும்"

எந்நிலையிலும் உறுதி தளராது இருந்தல்:

இன்றைய உலகில் முஸ்லிம்கள் பல்வேறுபட்ட அழுத்தங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம்ஒரு பத்திரிகையை படித்தாலென்ன, தொலைக்காட்சியைப் பார்த்தாலென்ன, இணையத்தைதிறந்தாலென்ன இஸ்லாத்திற்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக, முஹம்மத்(ஸல்) அவர்களுக்குஎதிராக நச்சுப்பிரச்சாரங்கள் அலையென திரண்டு வருவதை நாம் காண்கிறோம். இந்த பிரமாண்டமானஅலைகளை சமாளிக்க முடியாமல் எங்களில் பலா,; யார் இந்த பொய்பிரச்சாரங்களைதொடுக்கிறார்களோ அவர்களை ஏதோவொருவகையில் திருப்த்திப்படுத்தினால் தப்பித்து விடலாம்என எண்ணிச் செயற்படுவதை நாம் காண்கிறோம். அதனூடாக தம்மை ஒரு மிதவாதியென நிறுவிவிடலாம் என இவர்கள் நம்புகிறார்கள். எனினும் இந்த தீய வளைக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது.மாறாக அல்லாஹ்வுடனும், அவனது தீனுடனும் எமது பிணைப்பை மிக வலிமையாக பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அவன் இத்தகைய பித்னாவுடைய காலப்பகுதியில்;;; எவ்வாறு செயற்படபணித்திருக்கிறான் என்ற எச்சரிக்கையை எமது வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

'(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள்சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணைவைத்துவணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள்பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாகஅதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்." (3:186)

'அலிப், லாம், மீம். நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம் என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள்சோதிக்கப் படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டார்களா?நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கிறோம் -ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும்பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்." (29:1-3)

ரஸ}ல்(ஸல்) சொன்னார்கள்: 'ஒரு காலம் வரும் அப்போது தீனில் உறுதியாக நிலைத்து நிற்பது என்பதுஎரிகின்ற நிலக்கரியை ஒருவருடைய கையில் பிடித்திருப்பதற்கு ஒப்பானது" (திர்மிதி)

எனவே சோதனை நிறைந்த இந்த காலகட்டத்தில் நாம் எமது ஈமானை விலைபேசிவிடாது,அடையாளத்தை இழந்துவிடாது தீனுல் இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக முன்னணியில் நின்றுதொழிற்பட வேண்டும்.

அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே தனது உதவி நிச்சயம் வரும் என்பதற்கு உத்தரவாதம்அளிக்கிறான்.

'நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அல்லாஹ் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வான்..." (47:7)

ஸஹாபாக்களின் முன்மாதிரியை எடுத்துப்பாருங்கள்; எத்தகைய நிர்பந்தங்களை அவர்கள்சந்தித்தபோதிலும் இஸ்லாத்தில் அவர்கள் கொண்ட உறுதியையும், நிலைகுழையாமையையும்பார்த்து எதிரிகளே வியந்து பார்த்தார்கள். நாம் இப்போது எதிர்நோக்குவதை போன்று இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பிழையாக அடையாளப்படுத்தும் யுக்தியை அரபிக்காபிர்களும்மேற்கொண்டார்கள். வேதம் அருளப்பட்டவர்கள் இஸ்;லாத்தை தவறாகச் சித்தரிப்பதன் ஊடாகஇஸ்லாத்தின் வளர்ச்சியில் குறுக்கே நின்றார்கள். அல்லாஹ் தனது திருமறையிலே இதுபற்றிச்சொல்கிறான்:

'நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவோரை நீங்கள் பின்பற்றினால்,அவர்கள் உங்களை நீஙகள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்." (3:100)

ரஸ}ல்(ஸல்) அவர்களையும், அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஸஹாபாக்களையும் குறைஷிச்சமூகத்தில் தீவிரவாதக்கருத்தை பரப்பும் குழுவினராகவே காபிர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள்பாவித்த வார்த்தை பிரயோகங்கள் வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாகவே இருந்தது.உதாரணத்திற்கு ஹஜ்ஜுக்காக பிற இடங்களிலிருந்து வருகின்ற யாத்திரீகர்களின் காதுகளில்முஹம்மத்(ஸல்) அவர்களின் தூது எட்டிவிடக்கூடாது என்பதற்காக முஹம்மத்(ஸல்) அவர்களையாத்திரீகர்களிடம் எவ்வாறு தவறாக அறிமுகப்படுத்தலாம் என குறைஷித்தலைவர்கள் ஒன்றுகூடிஆலோசித்ததையும், அதன்போது ரஸ}ல்(ஸல்) அவர்களை கவிஞராக, சாத்திரக்காரராக,மந்திரக்காரராக, ஜின்களால் வசியம் செய்யப்பட்டவராக சித்தரிக்கலாம் என கூறிய போது இறுதியில்அல் வலீத் இப்னு முகீரா குடும்பங்களில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வார்த்தையில் சூனியத்தைகொண்ட நபர் என கூறலாம் என முடிவெடுத்து தமது தீய பிரச்சாரத்தை முடுக்கிவிட்டதைஞாபப்படுத்திப் பாருங்கள்.

இவ்வாறு சிந்தனா ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் பல அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும்சந்தத்தபோதிலும் முஹம்மத் (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் நிலைதடுமாறிவிடவில்லை;சமரசம் செய்ய துணிந்துவிடவில்லை; மாறாக அவர்கள் எதற்கும் தலைவணங்கா கொள்கைவீரர்களாக எழுந்து நின்றார்கள்; கொடுமைகளும், வீண் பழிசுமத்தல்களும் அதிகரிக்க, அதிகரிக்கஅவர்களின் கொள்கைத் தெளிவும், துணிச்சலுமே இமயமென உயர்ந்தது.

அழைப்புப்பணியின் ஆரம்ப நாட்களில் அல் குர்ஆனை குறைஷித் தலைவர்களுக்கு முன் பகிரங்காகஉரத்து முழங்க யார் தயார் என ஸஹாபாக்கள் ஆலோசிக்கிறார்கள். அச்சபையில் வெறும்பதின்னான்கு வயதே நிரம்பிய அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி) தான் தயார் என எழுந்துநிற்கிறார்கள். உமது வயதோ சிறியது; உமது குடும்பமோ பலகீனமானது; எனவே உமக்கு இது பெரும்ஆபத்தை தேடித்தரும் என ஸஹாபாக்கள் சொல்கிறார்கள். எனினும் ஒரு காலையில் கஃபாவிற்குமுன்சென்று அல் குர்ஆனை குறைஷித் தலைவர்களின் காதுகளில் படும்படி ஓதுகிறார். தம் காதுகளில்விழுவது அல்குர்ஆன்தான் என புரிந்ததுடன் அத்தலைவர்கள் சேர்ந்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி) மிகக் கடுமையாக தாக்குகிறார்கள். அவர் ஸஹாபாக்களின் சபைக்கு வருகிறார். அவரை அந்தநிலையில் கண்ட ஸஹாபாக்கள் 'இதைத்தான் நாங்கள் உங்கள் விடயத்தில் பயந்தோம் எனக்கூறியபோது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி)... 'இன்று அல்லாஹ்வின் எதிரிகள் என் கண்ணில்பலகீனமாகத் தெரிவதைப்போன்று, இதற்கு முன்னர் எப்போதும் தெரிந்ததில்லை; நீங்கள்விரும்புவீர்களாக இருந்தால் நான் நாளைக்கும் சென்று இச்செயலைத் செய்யத் தயாராகஇருக்கின்றேன்" எனக்கூறிய ஈமானிய வார்த்தைகள் எமது உள்ளத்தில் எத்தைகய உரத்தை ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு ஈமானில் தோய்க்கப்பட்ட, தியாகங்களால் வார்க்கப்பட்ட ஸஹாபாக்களை இறுதியில்அல்லாஹ் அவர்களின் எதிரிகளின் முன் வெற்றிப்புருஷர்களாக மாற்றினான் என்பதை நாம்அனைவரும் அறிவோம். மேலும் அவர்களை அல்லாஹ் பொருத்திக்கொண்டேன் சான்றுபகர்ந்துஅவர்களின் மறுமைக்கும் உத்தரவாதமளித்தான்.

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்)முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும்இருக்கிறார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம்திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச்சிந்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கேஎன்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (9:100)

எனவே எவ்வாறு ஆரம்ப காலங்களில் இஸ்லாமிய அரசும், பாதுகாப்பும் அற்ற நிலையில்முஹம்மத்(ஸல்) அவர்களும், அவரது ஸஹாபாக்களும் பல்வேறு அழுத்தங்ளுக்கும்,நேருக்கடிகளுக்கும் முகம்கொடுத்தார்களோ அதேபோன்றதொரு சூழலை முஸ்லிம் உம்மாஹ் இன்றுசந்தித்து வருகின்றது. இந்நிலையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்துஇஸ்லாத்தை உறுதியாக பின்பற்ற நாம் திடசங்கற்பம் பூணவேண்டும். எம்மை எப்பெயர் கொண்டுஅழைத்தாலும், எம்மில் பிரிவினைகளை ஏற்படுத்த முனைந்தாலும், இஸ்லாத்தின் வளர்ச்சியில்எத்தகைய முட்டுக்கட்டைகளை போட்டாலும் அவற்றையெல்லாம் உடைத்தெரிந்து அல்லாஹ்வின்தீனை எமது வாழ்விலும், உலகமெங்கிலும் நிலைநாட்ட நாம் முன்வருவோமாக!

'எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்" (3:139)


darulaman.net

Sep 17, 2015

ஹங்கேரியில் காவல்துறையினர் - குடியேறிகள் மோதல்

செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய முயற்சி செய்து வரும் குடியேறிகளுக்கும் ஹங்கேரி காவல்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.



ஹங்கேரிக்குள் நுழைய முயலும் குடியேறிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன.

குடியேறிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசுவதோடு, தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைக்க முற்பட்டுவருகின்றனர்.

காவலர்கள் மீது கற்களை வீசியெறியும் குடியேறிகள், பாதையைத் திறந்துவிடும்படி கோஷமிட்டுவருகின்றனர்.

எல்லையில் மூன்று கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதோடு, கலவர தடுப்பு காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.




செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய முயலும் குடியேறிகளைத் தடுத்து நிறுத்தும் ஹங்கேரிய காவல்துறையினர்.

ஹங்கேரி எல்லையில் போடப்பட்டிருக்கும் முட்கம்பி தடுப்புகளைத் தாண்டி ஒரு குடியேறிகளின் குழு அந்நாட்டிற்குள் புகுந்துவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹங்கேரியில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய விதிகளின்படி செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய விரும்பும் குடியேறிகள், தடுப்புகள் போடப்பட்ட பாதைகள் வழியாகத்தான் நுழைய வேண்டும்.

இந்தப் பாதை வழியாக வருபவர்கள் மீது சில மணி நேரங்களில் விசாரித்து முடிவெடுக்கப்படும் என ஹங்கேரி அரசு தெரிவித்துள்ளது.



BBC News

குரேஷியா வழியாகச் செல்ல குடியேறிகளுக்கு அனுமதி

வடக்கு ஐரோப்பாவில் விரும்பிய இடங்களுக்கு தனது நாட்டின் வழியாகச் செல்ல குடியேறிகளை அனுமதிக்கப்போவதாக குரோஷிய அரசு தெரிவித்துள்ளது.

 

            

குரேஷியா வழியாக வடக்கு ஐரோப்பாவை நோக்கி நகரும் குடியேறிகள்.

ஹங்கேரி தற்போது, சட்டவிரோத குடியேறிகளுக்காக தனது எல்லையை சீல் வைத்து முடியுள்ள நிலையில், ஸ்லோவேனியா ஊடாக ஆஸ்திரியா செல்வதற்கு குரோஷியாவில் மாற்று வழி உள்ளது.

குடியேறிகள் நெருக்கடிக்கு முட்கம்பிகள் பதில் அல்ல என்றும் குடியேறிகள் தங்களது பாதையை சென்றடைய தனது நாடு உதவும் என்றும் குரோஷிய பிரதமர் சோரன் மிலானோவிக் தெரிவித்துள்ளார்.

குடியேறிகளுக்காக குரேஷியர்கள் அனுதாபப்படுகின்றபோதிலும், தனது நகரத்தில் அதிக குடியேறிகளை நீண்ட காலம் சமாளிக்க முடியது என்று செர்பியாலிருந்து குடியேறிகள் வந்துச்சேரும் எல்லை நகரான டொவார்னிக்கின் மேயர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான குடியேறிகள் ஜெர்மனியைச் சென்றடைய விரும்புகின்றனர்.




BBC News

Sep 16, 2015

பலஸ்தீனியர்களை எங்கள் இஷ்டபிரகாரம் கொன்றொழித்தோம்!!!

எனது தலைமையின் கீழ் இஸ்ரேலிய படையினர் அராபியரின் கிராமங்களை அழித்தொழித்தார்கள். பலஸ்தீனியர்களை எங்கள் இஷ்டபிரகாரம் கொன்றொழித்தோம்- இஸ்ரேலிய ஜெனரலின் நினைவுகள்



தான் செய்த அநியாயங்களை பெருமையுடன் யாரும் நினைவு கூறுவதில்லை. அதை முடீயுமான வரை மறைக்கவே விரும்புவார்கள். இது மனித குலத்தின் பொதுவான ஒரு பண்பு. ஆனால் அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவங்களை பொருத்தவரை இது விதிவிலக்கு. அந்த வரிசையில் தான் செய்த அக்கிரமங்களை இனிமையாக நினைவு கூர்ந்துள்ளான் ஒரு இஸ்ரேலிய ஜெனரல். அவனின் 100-வது வயது பிறந்த தினத்தையொட்டி இஸ்ரேலிய இராணுவ வானொலிக்கு வழங்கிய செவ்வியில் இதனை அவன் பெருமையுடன் சொல்லியுள்ளான்.

Yitzhak Pondak. முன்னாள் இராணுவ வீரன். இளைப்பாறும் போது அவன் ஒரு இஸ்ரேலிய ஜெனரல். இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் Givati Brigade-ன், 53 பிளட்டூனிற்கு தலைமை தாங்கியவன் இவன். கடந்த வாரம் இஸ்ரேலிய இராணுவ வீரர் 100 வயதை பூர்த்தி செய்ததையிட்டு யூத இராணுவ வானொலியான Galei Tzahal அவனை பேட்டி கண்டது. அதில் இரத்த புலால் மணக்கும் அவன் கூறிய வார்த்தைகளின் வரி வடிவங்கள் இதோ.

“நான் இப்போதெல்லாம் நிம்மதியாக தூங்குகிறேன். ஏனென்றால் என்னை சுற்றி தூய்மையான யூதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலங்களை நாம் ஆக்கிமிக்காவிட்டால் என்னை சுற்றி வகை தொகையில்லாத அரபிகள் அல்லவா தூங்கிக்கொண்டிருப்பார்கள். நாம் அவர்களை துரத்தியடித்து விட்டோம். அதானால் தான் எனது 100-வது வயதிலும் இங்கு நிம்மதியாக என்னால் தூங்க முடிகிறது”.

“எனது தலைமையின் கீழ் இஸ்ரேலிய படையினர் அராபியரின் கிராமங்களை அழித்தொழித்தார்கள். பலஸ்தீனியர்களை எங்கள் இஷ்டபிரகாரம் கொன்றொழித்தோம். எங்கள் செயற்பாடுகளிற்கு எந்த எல்லையும் இருக்கவில்லை அப்போது. நாங்களாக நிறுத்திக் கொண்டால் தவிர. அவர்களை உயிருடன் விட்டிருந்தால் இன்று மில்லியன் கணக்கில் பெருகியிருப்பார்கள் புளுக்களைப்போல. அதனால் தான் அன்று நாங்கள் ஆயிரக்கணக்கில் கொன்றதையிட்டு திருப்தியடைகின்றேன்”.

“இன்னும் அதே அச்சுறுத்தல்கள் மகத்தான இஸ்ரேல் தேசத்திற்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்கள் 1948 ல் செய்ததை இன்றும் செய்துகொண்டேயிருக்க வேண்டும். அல்லா விட்டால் தேசம் மிகவும் கடுமையான சவால்களை முகங்கொடுக்க நேரிடும்”.

“யூதர்கள் நாங்கள் செய்த தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். அரபிகளை கொல்வதை நிறுத்தி விட்டால் எமது தேசம் பயங்கரான அபாய நிலைக்கு சென்று விடும். அதனால் கொல்வதை நிறுத்தவே கூடாது”.

“யுத்தங்களே யூதர்களை இணைக்கிறது. சமாதானங்கள் வந்து விட்டால் யூதர்கள் பலவாறாக பிரிந்து விடுகிறார்கள். எனவே அராபியர்களுடனான யுத்தம் எமக்கு நித்தமும் தேவை”.

“எனது சேவைக்காலத்தில் எனது தலைமைத்துவத்தின் கீழ் மரணித்த 145 இஸ்ரேலிய இராணுவ வீரர்களிற்காக நான் வருந்துகிறேன். அவர்கள் அராபியர்களையும் அவர்கள் கிராமங்களை அழிப்பதிலும் தோள் நின்றவர்கள்”.

Yitzhak Pondak காஸா பிராந்தியத்தின் கொமாண்டிங் ஒபிஸராக ஆயிரத்தி தொளாயிரத்து எழுபதுகளில் பணியாற்றியவன். அவன் தன் சேவைக்காலத்தில் மிகச் சிறந்த தளபதியாகவும், இஸ்ரேலிய பிரதமராகவும் “ஏரியல் ஷரோனை” நினைவு கூர்கிறான். காயப்பட்ட எதிரியை கூட ஏரியல் ஷரோன் கொன்று விடுவார் என புகழாரம் வேறு சூட்டுகிறான் பொன்டக். யூதர்களின் “ரோல் மொடல்” அவர் என புகழ்கிறான். இளைய இஸ்ரேலிய தலைமுறையினர் ஏரியல் ஷரோனின் முன்மாதிரிகளை பின்பற்ற வேண்டும் என தனது 100 பிறந்த தினத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளான் இந்த ஸியோனிஸ்ட்.

மேலே உள்ளது ஒரு இஸ்ரேலிய யூத இராணுவ வீரனின் சாம்பிள் மட்டுமே..............


நன்றி:
khaibarthalam

மக்கள் விரும்பினால் மட்டுமே பதவி விலகுவேன்: சிரிய அதிபர்

சிரியாவில் இருந்த மக்களை எல்லாம் கொன்று குவித்த பிறகு எந்த மக்களாக இந்த ஆட்சி மாற்றம்.
 
 
மக்கள் விரும்பினால் மட்டுமே பதவியை விட்டு விலகுவேன் என சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் தெரிவித்திருக்கிறார்.
 
 
 
பயங்கரவாதத்திற்குப் பயந்தே மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக அதிபர் அஸாத் கூறியிருக்கிறார்.

ரஷ்ய ஊடகம் ஒன்றிடம் பேசிய அஸாத், மேற்கு நாடுகள் அழுத்தம் தருகின்றன என்பதற்காக பதவி விலகமுடியாது என்றும் கூறியிருக்கிறார்.

பயங்கரவாதத்திலிருந்து தப்ப விரும்புவதாலயே பெரிய அளவில் மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறுகிறார்களே தவிர, சிரிய ஆட்சியின் காரணமாக அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.

டமாஸ்கஸில் இருக்கும் அஸாத் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிப்பதில் ரஷ்ய உதாரணத்தை மேலும் பல நாடுகள் பின்பற்ற வேண்டும் என ரஷ்ய அதிபர் கூறியதற்கு அடுத்த நாள், அஸாத் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா அஸாதிற்கு அளிக்கும் ஆதரவைத் தொடர்வதன் மூலம் சிரியாவில் நடக்கும் மோதல் நீடிக்கக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஜான் கெர்ரி எச்சரித்துள்ளார்.
 
BBC News
 
 
பஷாருல் அஸாத் அரசை சேர்ந்த கோஷ்டிகள் உம்மத்திற்கெதிராக இழைத்த குற்றங்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். அவர்களின் கரங்களால் நசுக்கப்பட்டு வாழ்விழந்த இலட்சக்கணக்கானோருக்கு நீதி வழங்கப்படவேண்டும்.மேற்கத்திய அரசுகளின் கைப்பாவையான சிரிய தேசிய கூட்டமைப்பை ( Syrian National Council ) சிரியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்படகூடாது.மேலும் அவர்களது புதிய சிரியாவுக்கான விசுவாசம்(loyalty) என்பதை நம்பவும் கூடாது.
 
உம்மத்துடைய பலமான தற்காப்பு என்பது,முஸ்லிம் உலகத்தை மறுபடியும் ஒன்றுபடுத்துவதில்தான் இருக்கிறது. முஸ்லிம் உலகத்தை விரைவாக ஒன்றுபடுத்தி விரிவாக்கம் செய்யும் பொழுது அந்நிய ஏகாதிபத்தியங்கள் தங்களை எதிர்க்கக்கூடிய பாரிய மனிதவளம், இயற்கைவளம் மற்றும் இராணுவ வலிமை கொண்ட பரந்த நிலப்பரப்பை சந்திக்க நேரிடும்.மேலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்கா,முஸ்லிம் உலகில் அதன் ஆட்சியாளர்கள் தனக்கு ஏற்படுத்திக்கொடுத்த ராணுவத்தளங்களை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருக்கிறது. இத்தகைய போக்குவரத்து இணைப்புகளை (supply lines) துண்டித்து விடுவதன் மூலம் அமெரிக்க வலிமையை தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
 
 “அல்லாஹ் நாடியவரையிலும் உங்களிடையே நபித்துவம் இருக்கும், அதன்பின் அவன் நாடும்போது அதை நீக்கிவிடுவான்..பிறகு நபித்துவத்தின் வழியிலான   கிலாஃபா அரசு அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும். அதன் பிறகு அல்லாஹ் நாடும்போது அதை உயர்த்திவிடுவான் அதன்பின் வம்சாவழி ஆட்சி அல்லாஹ் நாடியவரை இருக்கும். அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான்.அதன்பின் அடக்குமுறை ஆட்சி அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும்.அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான். அதன்பிறகு நபித்துவத்தின் வழியிலான  கிலாஃபா தோன்றும் என்றுகூறி அமைதிகாத்தார்கள்”                                                                   (முஸ்னத் அஹ்மத்)
 
 
யா அல்லாஹ்! உன்னிடமே வேண்டுகிறோம்!
 
கொலைகாரன் பஷாரும் அவனுக்கு ஷாமின் முஸ்லிம்களை கொல்ல உதவுபவர்களும் உன்னுடைய தண்டனைக்கு தகுதியானவர்களே… அவர்களை தண்டிப்பாயாக!  அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஏற்கெனவே உள்ள இவ்வுலகின் அழிவுகளை இறக்குவாயாக. உன்னிடமே கேட்கிறோம்! அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கு உதவுபவனே! உண்மையானவனே! ஞானம் மிக்கவனே! ஷாமில் நிலை பெற்றுவரும் புனித புரட்சிக்கு எதிராக மேற்குலகு செய்யும் சதிகளை அழித்து அருள் புரிவாயாக! எல்லாவற்றையும் கேட்கக்கூடியவனே! அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவனே! இந்த கொடுங்கோல் ஆட்சியை விரைவில் கவிழச்செய்து உம்மத்தின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டு வரும் இரண்டாவது தூய கிலாபத்தை ஏற்படுத்த அருள் புரியுமாறு உன்னிடமே உதவி  கேட்கிறோம்! ஆமீன்.

ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய அகதிகள்


ஆப்கானியர்கள் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய அகதிகள்


ஹெலினா மாலிக்யர்

இவர் ஆப்கான் அரசியல் ஆய்வாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.

கடந்த ஆண்டு வரை, ஆப்கானியர்கள் தான் உலகின் பெரிய அகதி மக்கள்காக இருந்தனர் என்று எழுதி இருக்கிறார்.

மேலும் அவர் இதை பத்தி கூறும் போது ஏன் நாம் ஆப்கான் பற்றி பேசவில்லை? என்று வினாவை தொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வரை நாட்டின் முழு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆப்கானியர்கள் அகதி மக்கள்காக இருந்தன. கிட்டத்தட்ட 2.6 மில்லியன் மக்கள்களை  அகதியாக்கி உள்ளனர். இன்று 12 சதவிகித்தை தாண்டிய சிரியா மக்களால் இவர்கள் இரண்டாவது மிகப் பெரிய அகதிகள் குழுவாக ஐரோப்பிய கடற்கரையும் மற்றும் எல்லையும் கடந்து வருகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனம், அறிக்கையின்படி, 40,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஐரோப்பாவில் தஞ்சம் முயன்று வருகின்றன.

பல தசாப்தங்களாக ஆப்கான் அகதிகள் நேரிட்டதே துன்பியல், பல பயங்கரமான மரணம்  மேற்கத்திய மற்றும் சொல்லப்படாத கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்கள். இன்னும் பல குடும்பங்கள்  எளிமையாக ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் செய்திய கேட்க காத்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் நிலைமை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக  இன்னும் மாறவில்லை.

கடந்த வாரம் ஆஸ்திரிய காவல்துறை தனியாக இருந்த ஒரு சிறிய வேன் பின்புறம் அடைக்கப்பட்டு இருந்த  24 இளம் ஆப்கானியர்கள் மீட்கப்பட்டனர். இது போலவே ஆஸ்திரியாவில் ஒரு லாரியில் 71 பேர் இறந்து கிடந்தனார்.

Source: Al Jazeera

அல்-அக்ஸா மசூதியில் நுழைய தொடரும் மோதல்கள் மற்றும் எதிர்ப்புக்கள்

கடந்த மூன்று நாட்கயாக பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்த வருகிறது.

ஹராம் ஷெரீப் (நோபல் சரணாலயம்) பகுதியில் இஸ்ரேலிய புத்தாண்டு தொடக்கத்தில் இருந்தது முஸ்லிம்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை இதனால் மோதல் தொடங்கியது.



Israeli police officers detain a Palestinian protester in Jerusalem's Old City. [Ammar Awad/Reuters]


Palestinians run away during clashes with Israeli riot police after they are prevented from entering the Al-Aqsa Mosque compound. [Atef Safadi/EPA]


A Palestinian woman in Gaza City holds a copy of the Quran during a rally to protest against Israeli police raids on Jerusalem's Al-Aqsa Mosque. [Suhaib Salem/Reuters]


Palestinian youths push a rubbish bin during clashes between Palestinian stone-throwers and Israeli forces in the East Jerusalem neighbourhood of Issawiya. [Ammar Awad/Reuters]


Palestinians sweep up rock debris in Al-Aqsa Mosque after clashes with Israeli police. The compound is known to Muslims as the Noble Sanctuary and to Jews as the Temple Mount in Jerusalem's Old City. [Ammar Awad/Reuters]


Israeli police scuffle with Palestinians who were prevented from entering the Al-Aqsa Mosque compound in the Old City of Jerusalem, during the Jewish New Year.[Atef Safadi/EPA]


Israeli police raided the plaza outside Jerusalem's Al-Aqsa Mosque on Sunday in what they said was a bid to head off Palestinian attempts to disrupt visits by Jews and foreign tourists on the eve of the Jewish New Year. [Mussa Qawasma/Reuters]


Palestinian women confront Israeli troops stationed outside the mosque [Baz Ratner/Reuters]



The US state department on Monday voiced concern about violence at the compound surrounding the mosque.[Baz Ratn/Reuters]

http://www.aljazeera.com/



குடியேறிகள் விவகாரம்: ஹங்கேரியில் நெருக்கடி நிலை அறிவிப்பு

செர்பிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள தென் மாவட்டங்களில் ஹங்கேரி நெருக்கடி நிலையை   அறிவித்துள்ளது.
 
 
 
தடுப்பை மீறி நுழைய முயன்ற 60 பேரை கைதுசெய்திருப்பதாக ஹங்கேரி காவல்துறை தெரிவித்துள்ளது.
 

செர்பியா வழியாக குடியேறிகள் பெரிய அளவில் தங்களது எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் ஹங்கேரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புகளை மீறி உள்ள வர முயன்ற அறுபது பேரை கைதுசெய்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இருநூறுக்கும் மேற்பட்ட குடியேறிகள், இரு நாட்டு எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்திவருவதாக அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

செர்பியாவின் ஹோர்கோ பகுதியில் அமர்ந்திருக்கும் அவர்கள், தங்களை உள்ளே அனுமதிக்கும்படி கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.

தாங்களை எல்லை கடக்க அனுமதிக்கும்வரை சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ போவதில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

 
BBC News

கௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை!

கிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்காவை கண்டு பிடித்ததோ பற்றிய செய்திகளை சொல்லும் அளவு அங்கிருந்த சுதேசிகளான செவ்விந்திய சமூகத்துக்கு நிகழ்ந்த அநீதம் மிக்க இனத்துடைப்பு வரலாறு பெரிதாக பேசப்படுவதில்லை .

தங்களை நாகரீகம் மிக்கவர்களாக போற்றிக் கொள்ளும் மேற்குலகு ஒரு அப்பட்டமான மனித வேட்டையின் இரத்தச் சுவடுகள் மீதுதான் அமெரிக்கா எனும் ஏகாதிபத்திய நாகரீகத்தை வடிவமைத்துள்ளது.என்ற உண்மை புரியப்பட கீழ்வரும் வரலாற்று சம்பவம் சிறந்த ஆதாரமாகிறது .

நிர்ப்பந்த சமரசம் எனும் அடிமைத்துவ அரசியல் மீது கவர்ச்சிகரமான ஈர்ப்பை ஏற்படுத்தி தனது நன்மைகளையும் ,இலாபங்களையும் அடைவதே முதலாளித்துவ பொறிமுறை. இந்த சுயநலவாதம் தான் இன்றும் கூட உலகை ஆளும் சாபக்கேடாகும் .ஒரு சித்தாந்த மாற்றத்தை உலகம் அவசியம் வேண்டி நிற்கிறது .அதை உணர்த்துகிறான் ஒரு செவ்விந்திய தலைவன் 'சியாட்டல் 'எனும் அமெரிக்க சுதேசி !

கி ,பி 1853 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிராங்ளின் பியர்ஸ் என்பவர் தனது உயர் குடி ஆதிக்க குடிமக்களால் சுதேசிகளான செவ்விந்தியர் படும் துன்பங்களை கண்டு கவலை கொள்கிறார் ! ஆடு நனையும் போது அழும் ஓநாய் போல நிலைமையை வெறுமனே பார்த்துக் கொண்டிராமல் ஒரு கௌரவமான ஓநாயாக ஒரு தீர்வுத் திட்டத்தை கடிதம் மூலம் செவ்விந்திய தலைவனான 'சியாட்டலுக்கு 'அனுப்பி வைக்கிறார் .

அற்புதமான அந்த சமரச அழைப்பின் தீர்ப்பு இதுதான் ." நீங்கள் உங்கள் நிலங்களை வெள்ளையர்களுக்கு விற்று விட்டு சென்று விடுங்கள்" ! என்பதே அந்த தீர்ப்பாக இருந்தது . இன்னொரு புறத்தால் இதை ஒரு மிரட்டலாக கூட சொல்ல முடியும் . இராணுவ தொழில் நுட்பம் ,ஆயுத வலிமை போன்றவற்றில் அனுபவம் இல்லாத அந்த செவ்விந்தியர்கள் இந்த நிர்ப்பந்த சமரசத்தில் வேறு வழியின்றி உடன்பட்டுப் போகிறார்கள் .

பதில் கடிதத்தை அனுப்பும் முன் அந்த சமூகத்தின் தலைவனான 'சியாட்டல்' தன் மக்கள் முன் ஒரு வரலாற்று பிரசித்தம் மிக்க உரையை நிகழ்த்துகிறான் .அந்த உரையின் பகுதிகள் சில இதோ !

"வொசிங்க்டனில் வாழும் வெள்ளையர்களின் தலைவர் எமது நிலங்களை பணம் கொடுத்து வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் , அத்துடன் எம்முடனான (சுரண்டல் ) நட்பையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார் . அவரின் வேண்டுகோளின் பக்கம் எமது கவனத்தை திருப்பி உள்ளோம் .

 "எமது நிலத்தை நாம் விற்காவிடின் ,அவர்கள் ஆயுத பலத்தால் அதை அபகரிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனினும் நீலநிற வானத்தையும் வளமான நிலத்தையும் பணம் கொடுத்து வாங்க முடியுமா !?இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை !?

" காற்றின் தூய்மையும் , நீரின் குளிர்மையும் எம்ம்முடையதல்ல .அவ்வாறாயின் அதனை எவ்வாறு விலை கொடுத்து வாங்க முடியும் !?..........

இப்படி இயற்கையை வர்ணித்து அற்புதமாக ஒரு நீண்ட உரையை தொடுத்து விட்டு பதில் கடிதம் அனுப்புகிறார் அதில் இவ்வாறும் கூறுகிறார் ."

... எதோ ஒரு காரணத்தால் வெள்ளையர்களை இங்கு அழைத்து வந்து எம்மை வெற்றி கொண்டு அவர்களது ஆதிக்கத்தை பரப்பிட இடமளித்த இறைவனின் வல்லமையால் நீங்களும் அழிவுறக் கூடும் !

மனிதனின் விதி தீர்மானிக்கப் படுவது இன்னும் பரம இரகசியமாகவே உள்ளது ." இந்த உரையும் ,பதில் கடிதமும் தாங்களே நாகரீகத்தின் உச்சத்தில் உள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் கௌரவக் காட்டுமிராண்டிகள் குறித்த ஒரு தெளிவான விளக்கமாகவே உள்ளது .


நன்றி
ஹந்தக் களம்

ஹோலோகோஸ்ட் (யூத படுகொலை) மாயை

(இக்கட்டுரை சர்வதேசப்பார்வை என்ற இலங்கையிலிருந்து வெளிவரும் மாத இதழிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது )

 
யூத சனத்தொகை 
1897 ஆம் ஆண்டு உலக யூத காங்கிரஸ் (World Jewish Congress) யூதர்களுக்கான தனி நாடு திட்டம் ஒன்றைப்பற்றி அறிவித்தது .அதற்கான இடம் உறுதியாக தேர்வு செய்யப்படவில்லையாயினும் ,மடகாஸ்கர் அதற்குரிய இடமாக அனைவராலும் பரிசீலிக்கப்பட்டது . சில தீவிரவாத யூத்தக்குழுக்கள் பலஸ்தீனை மட்டுமே ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்த போதும் இது பரவலாக ஆமோதிக்கப்படவில்லை . 1933 இல் யூதர்களுக்கு மடகாஸ்கர் செல்ல அனுமதிப்பது பற்றி ஹிட்லரின் நாசிக்கட்சி ஆராய்ந்தது .


1937 இல் போலந்து யூதர்களும் தம்மை மடகாஸ்கர் செல்ல அனுமதிக்குமாறு வேண்டினர் . மடகாஸ்கர் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் 1938 இல் ஜெர்மன் , பிரிட்டிஷ் , யூத முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இலண்டனில் இடம்பெற்றது . இதில் பொருளாதார செலவுகள் காரணமாக பிரிட்டிஷ் அரசு உடன்பாட்டிற்கு வர மறுத்தது .1938 இன் இறுதியில் ஹிட்லர் ஜெர்மனியின் சொந்த செலவில் யூதர்களை மடகாஸ்கர் அனுப்ப முடிவு செய்தார் . (Retlinger- The final solution - London 1953, pp.20,21). 
 
இவ்வாறு  வெளியேறிய யூதர்களுள் பலர் , பொருளாதார ரீதியில் பலமாக இருந்த வளங்கொழிக்கும் அமெரிக்காவுக்கு சென்றனர் . சிலர் பலஸ்தீனுக்கு சென்றதுடன் பலர் யூத தீவிரவாதக்குழுக்களால் பலஸ்தீனுக்கு பலவந்தமாக கடத்தப்பட்டனர்.
 
1939 இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கு முன் ஜெர்மனியில் இருந்த 600,000 யூதர்களில் 400,000 பேரும் , ஜெர்மனியின் ஆட்சியின் கீழ் இருந்த ஒஸ்ரிய,செக்கோஸ்லாவாக்கிய பகுதிகளிருந்து 480,000 யூதர்கள்  வெளியேறி இருந்தனர் .

இது நாசி அரங்காத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அடால்ப் அய்க்மானால் நேரடியாக  கண்காணிக்கப்பட்டது . வெளியேறி செல்லும் யூதர்கள் பலஸ்தீனுக்கு கடத்தப்படும் அச்சம் நிலவியதால் ஒஸ்ரியாவில் சிறப்பு பயிற்சி நிலையங்களில் இளம் யூதர்களுக்கு விவசாய பயிற்சி வழங்கப்பட்டது ..(Marvell & Frankl S.S and Gestapo.p.60)
 
எனவே இரண்டாம் யுத்தம் தொடங்கும்போது 200,000 யூதர்கள் மாத்திரமே ஹிட்லரின் ஆட்ச்சியின் கீழ் இருந்தனர் இரண்டாம் உலகப்போரின்போது அய்ரோப்பாவிலிருந்த மொத்த யூத சனத்தொகையே 60 இலச்சமாகும் . ஹிட்லர் யுத்தத்தின்போது கைப்பற்றிய பகுதிகள் அனைத்தையும் சேர்த்துப்பார்த்தால் , யுத்தம் தொடங்கும்போது  30 இலட்சம் யூதர்கள் அந்நிலைப்பரப்புகளில் வாழ்ந்திருந்தனர். யுத்தத்தின் முடிவின்போது ஹிட்லரின் ஆட்சிப்பிரதேசத்தில் 1559,600 யூதர்கள் உயிருடன் எஞ்சி இருந்ததாக Jewish Joint Distribution Committee  பெயர் விபரங்களுடன் பதிவு செய்துள்ளது .

இப்பட்டியலில் எல்லோருடைய பெயரும் பதிவு செய்யப்பட்டிருந்தால் யுத்தத்திற்குப் பயந்து யுத்தம்  நிகழும்  பகுதியிலிருந்து யாரும் அமைதி பிரதேசத்திற்கு இடம்பயரவில்லை எனக்கொண்டால் , ஹிட்லர் யூதர்களை கொலை செய்திருந்தால் 15 இலட்சம் யூதர்களை மட்டுமே கொன்றிருக்கலாம் .(How is the number of Jewish ? - Journal Baselor Nachrichten- Switzerland 13-06-1946)

எனினும் யுத்தம் தொடங்க சற்று முன் 5 இலட்சம் யூதர்களும் , யுத்தத்தின்போது 2.5 இலட்சம் யூதர்களும் சோவியத் யூனியன் பகுதிக்கு தப்பிச்  
சென்றனர் .(Odyssey - sey through hell - Newyork 1946)
 Jewish Joint Distribution Committee  யின் பெயர்பட்டியல் முழுமையாக இருந்தால் 6 இலட்சம் யூதர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாது . எனினும் அந்த பெயர் பட்டியல் பூரணமானது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை .

மேலும் கடந்தகால யூத சனத்தொகை பற்றிய தகவல்களை கீழே காணலாம் .
  • 1935  இல் யூத சனத்தொகை  156,000  (World Almanac 1935)
  • 1948  இல் யூத சனத்தொகை  156,000  (World Almanac 1948)
  • 1983  இல் யூத சனத்தொகை  150,000  (Readers Digest Almanac and year book 1983)
  • 2007  இல் யூத சனத்தொகை  156,000  ( CIA World Fact book 2007)
மேற்படி தகவல்கள் , யூத சனத்தொகை ஒரு அண்ணளவாக மாறாத பெறுமானத்தைக் கொண்டிருக்கிறது . அவர்களின் தாழ்ந்த பிறப்பு விகிதம் மற்றும் வேறு சமயங்களிலிருந்து எவரையும் யூத மதத்தினுள் உள்ளீர்க்காமை போன்ற போன்ற தகவல்களை வைத்து பார்க்கும்போது இதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது . எனினும் இங்கு 1941 ற்கும்  1944 ற்கும்  இடையில் 60 இலட்சம் யூதர்கள் குறைந்திருப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்பது புலனாகிறது .


நச்சு வாயு அறைகள் ( Gas Chambers)

நச்சு வாயு அறைகள் என்ற குற்றச்சாட்டும், இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை . எனினும் நச்சு வாயு அறைகள் பற்றிய கதைகளில் ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று முரண்பட்டவை . சில கதைகளின்படி சைக்ளோன் பி (Zyklon B) என்ற பூச்சி நாசினி நச்சு வாயு அறைகளில் ஊற்றப்பட்டவுடன் ஹைட்ரஜன் சயனைட் (HCN) வாயு உருவாகி அறையினுள் இருந்தவர்களை கொலை செய்ததாகக் கூறியது. எனினும் சைக்ளோன் பி இலிருந்து HCN வாயு எவ்வாறு உருவாகியது என்ற இரசாயான சமன்பாடு இன்று வரை ஒரு விஞ்ஞானியாலும் கண்டுப்பிடிக்கப்படவில்லை . இக்கதைக்கு ஆதரவாக நியுரம்பெர்க் விசாரணைகளின்போது ஒரேயொரு ஆவணம் மட்டுமே சமர்பிக்கப்பட்டிருந்தது . அது ஜெர்மானிய அதிகாரிகள் சைக்ளோன் பி மருந்தை வாங்கியதற்கான ஒரு பற்று சீட்டு மாத்திரமே.

இன்னும் சில கதைகளின்படி அறையினுள் ஒரு திண்மம் இடப்பட்டு நீரூற்றப்பட்டப்பின் HCN வாயு  பெருமளவில் உருவாகியது . எனினும் இன்றுவரை நீருடன் சேர்ந்து HCN  பெருமளவில் வாயுவை உருவாக்கும் திண்மம் கண்டுப்பிடிக்கப்படவில்லை .

ஒஸ்ச்விட்சில் சிறிது காலம் இருந்த கிறிஸ்டோபர்சென்  நியுரம்பெர்க் குழுவின் முன் அளித்த சாட்சியத்தில் " நான் ஒஸ்ச்விட்சில் இருந்தேன். அங்கு நச்சு வாயு அறைகள் இருக்கவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் " என்று குறிப்பிட்டுள்ளார். பின் அவர் Auschwitz lie என்ற பெயரில் தன் கருத்தை உள்ளடக்கி புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளர் ப்ரெட் லூசடர் (Fred A.Leuchter Jr.) இவர் , கொலை உபகரங்கள் பற்றிய விசேட நிபுணர். அமெரிக்காவில் மரண தண்டனை அமுலில் உள்ள மாநிலங்களின் ஒரு சில தவிர்ந்து ஏனைய அனைத்தும் தூக்கிலிடும் உபகரணம் , நச்சு ஊசி ,மின்சார நாற்காலி , நச்சு வாயு  அறை போன்ற உபகரனங்களுக்காக ஆலோசனை மற்றும் வடிவமைப்புகளை இவரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றன .கனடாவில் வாழும் ஜெர்மன் வம்சாவழி  Ernst Zndel என்பவர் ஹோலோகாஸ்ட் பற்றிய உண்மைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை எழுதியமைக்காக யூதக் குழுக்களால் தாக்கப்பட்டு பின் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பு கட்சியாக லூச்டர் அழைக்கப்பட்டார். இதற்காக லூச்டர் ஐரோப்பாவில் ஹிட்லர் பயன்படுத்தியதாக கூறப்படும் நச்சு வாயு அறைகளில் ஆய்வு செய்தார் . இவ்வாய்வை செய்யும்வரை நச்சு வாயு அறைகளில் இட்டு ஹிட்லர் 60 இலட்சம் யூதர்களை கொன்றதாக லூச்டர் நம்பினார்.

லூச்டரின் ஆய்வுகளின்படி 
  1. நச்சு வாயு அறைகள் என சுட்டிக்காட்டப்படும் கட்டடங்களின் சுவர் கூரை மற்றும்  ஏனைய அமைப்புகள் நச்சு வாயு ஒன்றை கொண்டிருக்க பொருத்தமானவை அல்ல.
  2. அவ்வறைகளில்  இறந்த காலத்தில் நச்சு  வாயுக்கள் பயன்படுத்தபட்டமைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
  3. அந்த முகாம்களில் உள்ள வேறு கட்டிடங்களும் நச்சு வாயு அறையாகப் பயன்படுத்த பொருத்தமானவைகள்  அல்ல .
  4. எந்த அறையும் நச்சுவாயுவை இறுக்கமாக அடைக்கப் பொருத்தமானவைகள் அல்ல. கதவு,ஜன்னல் , கூரை இடுக்குவடிகால் போன்றவற்றை  அவை கொண்டிருக்கின்றன. இவ்வறைகள்  நச்சு வாயு அறைகளாக பயன்படுத்தப்பட்டிருந்தால் முகாமிலிருந்த காவலாளிகள் மட்டுமின்றி இவ்வூரில் வாழ்ந்த பொதுமக்களும் இறந்திருப்பர் . (1989 Journal of Historical Review).

யூத சவர்காரம் 

இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மனியில் RIF என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சவர்க்காரங்கள்  விற்பனை செய்யப்பட்டன.1941-42 கால பகுதியில் நிலவிய வதந்திகளின்படி RIF என்ற எழுத்துக்கள் Rein Juediches Fett (கலக்கப்பட்ட யூத கொழுப்பு) என்ற வாசகத்தை குறிப்பதாக சிலர் கூறினர் .
 
இங்கு RIF இல் உள்ள I என்ற எழுத்து J என்ற எழுத்திலிருந்து வேறுப்பட்டது என்பது கவனத்தில் எடுக்கப்படவில்லை . பின் உயிர்வாழும் யூதர்களிடம்  பெறப்பட்ட இரத்தம்   மூலம் கொழுப்பு பிரித்தெடுக்கப்பட்டு சவர்காரம் தயாரிக்கப்படுவதாக ஜெர்மனிக்கு எதிரணியில் இருந்தோர் பிரச்சாரம் ஒன்றை கொண்டு சென்றனர்.1942 இல் யூதப் பிணங்களை பயன்படுத்தி ஜெர்மானியர்கள் சவர்காரம் , கொழுப்பு மற்றும் உரத் தயாரிப்பில் ஈடுப்படுவதாக Jewish Congress குற்றம் சாட்டியது . எனினும் நியுரம்பெர்க் விசாரணைகளின்போது இது பற்றிய இரண்டு சாட்சியங்கள் மாத்திரமே கிடைத்தன.
 
முதலாவது ஸ்பனர் (Dr.Spenner) என்பவரால் தயாரிக்கப்பட்ட மனிதக்கொழுப்பிளிருந்து சவர்காரம் தயாரிக்கும் செய்முறைக் குறிப்பு எனும் குறிப்பில் ஜெர்மானியர்கள் இவ்வாறான ஒரு செய்முறைக் குறிப்பை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் முன் வைக்கப்படவில்லை .(Nuremberg Document USSR 196)
 
 இவை ஹோலோகாஸ்ட் நிகழவில்லை என்பதற்கான ஆதாரங்களுள் மிகச் சில மட்டுமேயாகும். இது போன்ற பல ஆதாரங்கள் பல தொகுக்கப்பட்டு பல புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 
 
  1. ஹிட்லர் நச்சு வாயு அறைகளை கொண்டிருக்கவோ பயன்படுத்தவோ இல்லை 
  2. ஹிட்லர் யூத இனப்படுகொலை செய்தார் என்ற கூற்று புனைந்துரைக்கப்பட்டது.
  3. மேற்படி குற்றச்சாட்டுக்கள் யாவும் அரசியல் நோக்கங்களுக்காக சியோநிசவாதிகளால் புனையப்பட்டவை.
  4.  மேற்படி   குற்றச்சாட்டுக்களை உருவாக்கியவர்,பரப்பியவர்கள் ,      பரப்பிகொண்டிருப்பவர்கள் அவை பொய் என்று தெரிந்து கொண்டே செய்கின்றனர்  . 
   போன்ற முடிவுகளுக்கு வரலாம் .

ஆனால், இந்த சம்பவம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட கதை என்று ஐரோப்பாவிலேயே பிரபலமான பல வரலாற்று அறிஞர்களும் சமூக, விஞ்ஞான பண்டிதர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதேநேரம், ஹோலோகாஸ்டை விமர்சிப்பதை கூட மிகப்பெரிய குற்றச்செயலாகத் தான் பல ஐரோப்பிய நாடுகளும் பார்த்து வருகின்றன. விமர்சனம் செய்பவர்களை சிறையிலடைத்தும் குரூரமாக கொடுமைப்படுத்தியும் பல அரசுக்களே ஹோலோகோஸ்டுக்கு எதிராக யாரும் வாயைத் திறப்பதைக் கூட அனுமதிக்கவில்லை.

ஆனால் அதேநேரம் இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் விமர்சிப்பதை சமூக சுதந்திரத்தின் பாகமாக மேற்கத்திய நாடுகள் உற்சாகப்படுத்தின. இறைத்தூதரை மோசமாக காட்டும் கார்ட்டூன்களை டென்மார்க் பத்திரிக்கை பிரசுரித்தபொழுதும் அதற்கு எதிராக முஸ்லிம்கள் உலகளாவிய அளவில் எதிர்ப்புகாட்டிய பொழுதும் மேற்குலகின் நிலைபாடு அதுவாகவே இருந்தது.

"சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குரிய சூழ்நிலை உருவாக வேண்டும். ஹோலோகாஸ்டைக் குறித்து பேசக்கூடாது என்று கூறுவது வெட்கம் கெட்ட நிலைபாடாகும். இக்காரணத்தினால் தான் இஸ்ரேலின் அக்கிரமங்களை உலகம் கண்டும் காணாது போல் நடித்து வருகிறது" என்று டேவிட் ட்யூக் கூறியுள்ளார்.
 
ஹோலோகாஸ்டில் மரண எண்ணிக்கை, அதிகப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கற்பனைக்கதை என்று கூறியதன் காரணத்தினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஆளானவர் ஷோர்ஷ் தீல்.
 
 
நன்றி

Sep 14, 2015

இஸ்ரேல் பற்றி ஊடகங்களின் பத்து பெரிய பொய்கள்

 
 
மைக்கல் கோலன் (Michel Collen) ஒரு பெல்ஜிய எழுத்தாளர் அதுபோல் அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட.அவர் இஸ்ரேல் பற்றி எழுதிய புத்தகமான " Isrel - Let's Talk About It " என்ற புத்தகத்தில் இஸ்ரேல் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பி இஸ்ரேலுக்கு அனுதாபம் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார்.அவர் இதை தனது புத்தகத்தில் "பத்து பெரிய பொய்கள்" என்ற தலைப்பின் கீழ் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார். இவை இஸ்ரேலின் இருப்பையும் அதன் கொடூர செயற்பாடுகளையும் நியாயப்படுத்த மேற்கத்தைய ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

1.இஸ்ரேல் என்ற நாடு ஐரோப்பாவில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டமையால் உருவாக்கப்பட்டது.இந்த கருத்து முற்றிலும் தவறானது அதுபோல் சுத்தப் பொய்யானது.ஏனெனில் தேசியவாத யூதர்கள் பலஸ்தீன பூமியை ஆக்கிரமிக்க திட்டமிட்டு முடிவு எடுக்கப்பட்டது 1897 ஆம் ஆண்டாகும்,1897 ஆம் ஆண்டு சுவிசர்லாந்து பேசல் நகரில் இடம்பெற்ற முதலாவது சியோனிச காங்கிரஸ் மாநாட்டில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டமை இஸ்ரேல் என்ற நாடு உருவாக்க மேட்கோள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு படியேயாகும்.


முதலாவது சியோனிச மாநாடு - 1897 சுவிஸ். 
 

2.இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் அடுத்த பொய் என்னவென்றால்,இஸ்ரேல் என்பது யூதர்களின் முன்னோர்களின் பூமி.யூதர்களை கி.பி.70 இல் ரோம தளபதியான டைடஸ் யூதர்களின் சொந்த பூமியிலிருந்து வெளியேற்றியதாக ஒரு வரலாறு பரவலாக கூறப்பட்டுவருகிறது.நிச்சயமாக இது ஒரு கதை மட்டுமேயாகும்.நான் யூத வரலாற்றாசிரியர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒருவரான ஷலோமோ சாண்ட் என்பவரோடு உரையாடியுள்ளேன்.அவரின் கருத்துப்படி பலஸ்தீன பூமியிலிருந்து எந்தவித வெளியேற்றங்களும் வரலாற்றில் இடம்பெறவில்லை,ஆகவே தாய் பூமிக்கு திரும்பி வரல் என்ற விடயம் அர்த்தமற்றது என்றார்.
 
தற்காலத்தில் பலஸ்தீனில் வாழும் மக்களே ஆதி யூதர்களின் உண்மையான பரம்பரை,1947 இல் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் அல்ல.இந்த பூமியில் வாழ்த்த மக்கள் இந்த பூமியை விட்டு எங்கும் செல்லவில்லை என்று மேலும் சொல்லுகிறார் ஷலோமோ சாண்ட் அவர்கள் மேலும் அவர் கூறியதாவது யூத தேசம் என்ற ஒரு தேசம் வரலாற்றில் எங்கும் இருக்கவில்லை,ஏன்

யூதர்களுக்கு அவர்களுக்கே சொந்தமான மொழி,கலாச்சாரம் மற்றும் வரலாறு கூட இருக்கவில்லை.அவர்களுக்கு இருந்தது அவர்களிம் மதம் மதம் மட்டுமேயாகும்,ஒரு நாளுமொரு மதம் ஒரு நாட்டை உருவாக்குவதில்லை என்றார்.


 
The sack of Jerusalem, from the inside wall of the Arch of Titus, Rome 

3.பலஸ்தீனை யூத குடியேற்ற ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த போது பாலஸ்தீன் மனித சஞ்சாரமற்ற விவசாயத்துக்கு பொருந்தாத ஒரு பூமியாகவே இருந்தது.இது மேற்கத்தைய மீடியாக்கள் முன்வைக்கும் மூன்றாவதும் அர்த்தமற்றதுமான பொய்யாகும்.ஏனென்றால் பத்தொம்பதாம் நூற்றாண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பிரான்ஸ் உட்பட பலஸ்தீனத்தின் விவசாயப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான எழுத்துமூலமான் ஆதாரங்கள் நிறையவே உள்ளன.

Jaffa Between 1898 - 1914 

4.நான்காவது பொய் என்னவெனில் சிலர் கூறுகின்றனர் எப்படியெனில் பாலஸ்தீனியர்கள் தமது சொந்த பூமியை அவர்களின் விருப்பத்தின் பேரிலே விட்டுச்சென்றனர் என்று.இதை பலர் நம்புகின்றனர் ஏன் நான் கூட நம்பியிருந்தேன்.இது மாபெரும்போயாகும்.இதை இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்கள் கூட மறுத்திரிகின்றனர்.பென்னி மொரிஸ் மற்றும் இலான் பெப்பே ஆகிய இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி ஆயுதனகள் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றை பயன்படுத்தியே பலஸ்தீன மக்களை யூதர்கள் வெளியேற்றினர்,அவர்கள் தாமாக வெளியேறவில்லை.


Palestine refugees.

5.மத்தியகிழக்கில் காணப்படும் ஒரே ஒரு ஜனநாயக நாடு இஸ்ரேல் ஆகும்.அதை நாம் பாதுகாக்கவேண்டும்.இது அடுத்த பொய்யாகும்.எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் ஒரு சட்டம் உண்டு அதுபோல் வரையறுக்கப்பட்ட எல்லைகளும் உண்டு.உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளிலும் இது காணப்படுகிறது,அனால் இஸ்ரேலைத் தவிர.இஸ்ரேல் எல்லையில்லா நீடிப்புத்திட்டம் கொண்ட ஒரு இதுவரை வரையறுக்கப்படாத நாடு.மேலும் இஸ்ரேலின் சாதனைகள் பாரிய இனவாதக் கருதுகொள்களைக் கொண்ட ஒரு சட்ட முறையாகும்.







No Legal Boundaries Yet.This Their Dream.

6.அமெரிக்க இஸ்ரேலை பாதுகாப்பதினூடாக மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை பாதுகாக்கிறது.இது ஒரு மாயை கலந்த பொய்யாகும்.இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் வருடாந்த செலவு மூன்று பில்லியன் டொலர்களாகும்.ஜனநாயக அமெரிக்காவின் இந்த பணம் அவ்வருடம் முழுக்க அப்பாவி பலஸ்தீன மக்களை அடிமைப்படுத்தவே பயன்படுகிறது.ஆனால் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய நோக்கம் ஜனநாயகம் அல்ல,அங்குள்ள எண்ணெய் வளங்களே.




American Democracy.

7.அமெரிக்க பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு நிரந்தர உடன்பாட்டை மேற்கொள்ள போராடிவருகிறது.இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயமாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னைநாள் வெளிநாட்டு கொள்கைவகுப்பாலராக கடமையாற்றிய ஜாவியர் சொலோனா குறிப்பிடுகையில் "இஸ்ரேல் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் 21 ஆவது நாடாகும்"என்றார்.ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்துக்கும் இடையே பல உடன்பாடுகள் காணபடுகின்றன.

8.Antisemitism இது மேற்கத்தைய ஊடகங்களில் பாவிக்கப்படும் இன்னொரு இஸ்ரேலிய அனுதாப ஆயுதம்.நீங்கள் பலஸ்தீன வரலாற்றை நன்கு ஆராய்ந்து இஸ்ரேல் பற்றிய உண்மைகளை உலகுக்கு சொன்னாலோ அல்லது பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையில் இஸ்ரேலிய நலனைமட்டும் நோக்காகக் கொண்டு செயற்படும் அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளின் முகத்திரியை கிழித்தாலோ உங்களுக்கு கிடைக்கும் பட்டமே Anti-Semite ஆகும்.இந்த ஆயுதம் கொண்டு உங்கள் வாய்களை மூட நினைக்கின்றனர்.

ஆனால் நாம் இஸ்ரேலை கண்டிப்பதன் நோக்கம் இனத்துவேசமோ அல்லது Antisemitism அல்ல.நாம் கண்டிப்பது மூன்று இன மக்களிடமும் சம அளவில் நடந்துகொள்ளதா அப்பாவி மக்களை அடிமைப்படித்தி வைத்திருக்கும் அரசாங்கத்தேயாகும்.இப்படிப்பட்ட பொறுப்பு அற்ற அரசாங்கங்களின் நடவடிக்கை காரணமாக மூன்று இன மக்களிடையே ஒரு பிரச்சனை இருந்தவண்ணமே உள்ளன.







To Keep You Silent


9.வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் மேற்கத்தைய ஊடங்கள் பெரும்பாலும் பலஸ்தீனையே குற்றம் சாட்டுகின்றனர்.முழு உலகுக்கும் தெரியும் யார் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பாவிக்கிறார்கள் என்று.







Israeli girls write messages on shells





10.பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்க்க வழியில்லை இது தற்போது அடிக்கடி எழுப்பபபட்டுவரும் ஒரு கருத்தாகும்.இது சுத்தப் பொய்.தீர்வில்லாதது பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்னைக்கு அல்ல தீர்வில்லாதது இஸ்ரேளாலும் அதன் கூட்டாளிகளாலும் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வரும் வெறுப்புக்கும் காழ்ப்புணர்ச்சிக்குமேயாகும்.பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்வுக்கான முதலில் இஸ்ரேல் பற்றியும் அதன் கொலைகார கூட்டாளிகள் பற்றியும் இவர்களின் உண்மையான முகங்கள் பற்றியும் உண்மைகள் ஊடகங்களில் வெளிவரவேண்டும்.இந்த கூட்டணிகளால் அப்பாவி பலஸ்தீன மக்கள் படும் துயரங்கள் வெளிக்கொனரப்பட வேண்டும்.இந்த நிலை வந்தாலே அந்நாட்டு மக்களால் அந்த அரசாங்கங்களுக்கு ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும்.


Award Winning Political Cartoon.By - Latuff.

Source :- vvvasutmmk