Jan 28, 2016

சவூதி அரேபியா இஸ்லாமிய அரசா அல்லது குஃப்ர் அரசா – பாகம் – 2

 
சவூதி அரசு மற்றும் அரபுநிதியம் (Arab Monetary Fund) :
 
அபூதாபியை மையமாக கொண்டு இயங்கும் அரபு நிதியம் என்ற நிதியியல் அமைப்பு வட்டி அடிப்படையில் இயங்கும் மிகப்பெரிய நிறுவனமாகும், 4-/7/76 ல் மொரோக்கோவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அது நிறுவப்பட்டது. சவூதி அரசுதான் அதன் மிகப் பெரிய பங்குதாரராக இருக்கிறது, மற்ற அனைத்து பங்குதாரர்களை விடவும் அதன் பங்குத் தொகை மதிப்பில் சராசரியாக 3.2 சதவீதத்தை வட்டியாக பெற்றுவருகிறது!
 
சவூதி மற்றும் சர்வதேச நிதியம் (International Monetary Fund) :
 
சர்வதேச நிதியம் எனும் மேற்கத்திய நிதி நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரர்களில் சவூதி ஆறாவது பெரிய பங்குதாரராக விளங்குகிறது! இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குத் தொகையில் சவூதி 3.5 சதவீதத்தை முதலீடு செய்துள்ளது, இதன்காரணமாக அந்நிறுவனத்தின் நிர்வாக செயற்குழுவில் நிரந்தர உறுப்பு நாடாக சவூதி திகழ்கிறது!
எனவே, வட்டி அடிப்படையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதை நிரந்தர கொள்கை யாக கொண்டுள்ள ஓர் அரசு எவ்வாறு இஸ்லாமிய அரசாக இருக்கமுடியும்? ஆயிரக்கணக் கான அல்குர்ஆன் பிரதிகளை நன்கொடையாக அளிப்பதின் காரணமாகவா? அல்லது அல்&ஸவ்து ஆதரவாளர்களான அறிஞர்கள் அவ்வாறு கூறுவதின் காரணமாகவா?!
 
சவூதி மற்றும் அதன் அந்நிய உறவுகள் : நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் :
 
ஐக்கியநாட்டு சபையில் சவூதி உறுப்பினராக இருப்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்றுதான். ஐ.நா. சபையின் அரசியல் சாஸனம் விதிமுறை 92 அடிப்படையில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஐ.நா.வின் பிரதான நீதித்துறை அமைப்பாக விளங்குகிறது. ஐ.நா. சபையின் அரசியல் சாஸனத்தின் ஒருபகுதியாக விளங்கும் செயலாக்கஅமைப்பு அடிப்படையில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தனது கடமைகளை நிறைவேற்றிவருகிறது. உறுப்பினராக உள்ள ஒவ்வொரு அரசும் இந்த செயலாக்க அமைப்பை மதித்து நடக்கவேண்டியதும் அதை அங்கீகரிக்க வேண்டியதும் கட்டாயமாகும். விதிமுறை 94 கூறுவதாவது : “ஐ.நா-. சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் தான் தொடர்பு கொண்டுள்ள வழக்குகளில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளவேண்டும்”
சர்வதேச சட்டங்கள் அல்லாஹ்(சுபு)வின் வேதத்திலிருந்தும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளதா? சவூதி அரசு அதற்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? இஸ்லாத்தை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே ஐ.நா-. சபை உருவாக்கப்பட்டுள்ளது. சவூதி அரசு ஐ.நா-.வின் உறுப்பினராக மட்டும் இல்லை அதை ஆதாரிப்பதில் முன்னோடியாகவும் திகழ்கிறது! அது ஐ.நா-. சபையை நிறுவிய நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது என்று சிலர் கூறும் அளவுக்கு சவூதி அரசு அதற்கு நெருக்கமாக இருந்து வருகிறது. சவூதியின் அன்றைய வெளிவிவகார அமைச்சராக இருந்த இளவரசர் ஃபைஸல் இப்னு அப்துல் அஸீஸ் 1945ல் ஸான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் கூறியதாவது : “காகிதத்தில் எழுதியுள்ள இந்த விதிமுறைகளுக்கு நாம் கட்டுப்பட்டு நடந்து கொள்வோம் . . . இந்த அரசியல் சாஸனம் நமக்கு அடித்தளமான அமையட்டும்! அதன்மீது நமது சிறந்த புதிய உலகத்தை உருவாக்குவோம்!”
 
சவூதி மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) :
 
1946ல் ஐக்கியநாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்ற சர்வதேச நிறுவனம் உருவாக்கப்பட்டபோது சவூதி அரசு அதற்கு 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதின் மூலம் அதன் உருவாக்கத்தில் பெரும்பொறுப்பை எடுத்துக்கொண்டது. இத்தகைய பெருந்தொகையை வட்டியில்லா கடனாக அளித்ததோடு 5000 டாலர்களை அதன் திட்டங் களுக்கு நன்கொடையாக வழங்கியது. இஸ்லாத்தை திரித்து பிரச்சாரம் செய்தல் மற்றும் மேற்கத்திய சிந்தனைகளை பரப்புதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. உதாரணமாக, இந்த நிறுவனம் வெளியிட்ட ‘மனித இனத்தின் வரலாறு மற்றும் அதன் அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்களஞ்சியம்’ (Encyclopedia on the History of Human Race and its Development)  என்ற கலைக்களஞ்சியம் தொடர்பான நூலின் பாகம் 3 அதிகாரம் 10ல் கூறப்பட்டிருப்பதாவது :
  • இஸ்லாம் என்பது இட்டுக்கட்டப்பட்ட ஒரு மதமாகும், அது யூதம், கிருஸ்த்தவம் மற்றும் அரபியாவின் பலதெய்வ கோட்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக் கப்பட்டுள்ளது.
  • குர்ஆன் என்பது சகிப்புத்தன்மையற்ற ஒரு நூலாகும்
  • இறைத்தூதருக்கு பின்னர் நீண்டகாலத்திற்கு பிறகு இறைத்தூதர் பெயரால் அவரை பற்றிய ஹதீஸ் அறிவிப்புகளை சிலர் உருவாக்கினார்கள்
  • ரோமர்கள், பாரசீகர்கள், கிருஸ்த்தவ தேவாலய சட்டங்கள் மற்றும் பைபிளின் பழய   ஏற்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் முஸ்லிம் சட்ட அறிஞர்கள் இஸ்லாமிய சட்டவியலை ஏற்படுத்தினார்கள்
உள்ளபடியே, தலா நூர் அத்தர் என்பவர் ‘சவூதி மற்றும் ஐ. நா. சபை’ என்ற தமது நூலில் சவூதியை புகழந்து கூறும் வண்ணம், ‘சவூதி அரசு யுனஸ்கோ (UNESCO) நிறுவனத்திற்கு 17,040,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தது’ என்று கூறியுள்ளார்.
இஸ்லாத்தை குறித்து அவதூறு பரப்பும் வண்ணம் யுனஸ்கோ நிறுவனம் எழுதியுள்ள கருத்துக்கள் குறித்து சவூதி அரசாங்கம் அறியாமை கொண்டுள்ளதா அல்லது அதுகுறித்து ஒருபோதும் கேள்விப்படவில்லையா?! அல்லது இதன்பொருட்டுதான் அது மாபெரும் தொகையை நன்கொடையாக அளித்ததா?!
 
 சவூதி மற்றும் அரபுலீக் :
 
இந்த தேசியவாத அமைப்பில் சவூதி உறுப்பினராக மட்டும் இருக்கவில்லை மாறாக அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் திகழ்கிறது! அரபுலீக் அரசியல் சாஸனத்தின் 8வது விதிமுறை கூறுவதாவது : ‘அரபுலீக்கில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் அதன் உறுப்பினராக உள்ள மற்ற நாடுகளின் நிலையான ஆட்சிமுறையை மதித்து நடந்துகொள்ளவேண்டும். இந்த அரசுகளின் உரிமை என்று அதை கருதவேண்டும் என்பதோடு அவற்றின் ஆட்சிமுறைகளை மாற்றும் நோக்கத்துடன் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை தனக்குத்தானே கடமையாக ஆக்கிக்கொள்ளவேண்டும்’
 
சவூதியை இஸ்லாமிய அரசு என்று ஒருவேளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், குஃப்ரை அங்கீகரிப்பதற்கும் அதற்கு ஆதரவு நல்குவதற்கும் அதை மாற்றுவதற்கு முயற்சிக்க மாட்டோம் என்று உறுதியளிப்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதியிருக்கிறதா? எனவே இராக்கின் பாத்திஸ்ட் அரசும், சிரியாவின் அலவைத் அரசும் மதிக்கப்படவேண்டுமா? சவூதி அரசு பிரச்சாரம் செய்துவரும் தேசியவாதம் தொடர்பான சட்டம் பரவலாக அறியப்பட்டது என்ற முறையில் அதுகுறித்து நாம் இங்கு குறிப்பிடவில்லை.
 
சாக்குப்போக்கு வாதங்கள் :
 
சவூதி அரசு சுயவிருப்பம் இல்லாத நிலையில் நிர்பந்தத்தின் காரணமாக இந்த நிலைப் பாட்டை எடுத்துள்ளது என்று சிலர் கூறுகிறார்கள்! குறிப்பிட்ட நிகழ்வுகளை பொருத்தும் சவூதி அரசின் குறிப்பிட்ட வாக்குமூலத்தை பொருத்தும் இவ்வாறு கூறலாம், ஆனால் பிரிட்டன் அரசால் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து சவூதி அரசு மேற்கூறப்பட்ட அடிப்படையில் தனது கொள்கைகளை வகுத்து செயல்படும்போது எவரும் இவ்வாறு கூறமுடியாது. எந்தநிலையிலும் மன்னர் ஃபஹது இதற்கு மாற்றமாகவே அறிவிப்பு செய்துவருகிறார், “ஒவ்வொரு குடிமகனும் தனது நாட்டை பொருத்து தலைநிமிர்ந்து நடக்கும் வகையில் செயல்படவேண்டும். சவூதி அரேபியாவின் அரசாட்சியில் அந்நிய நாடுகள் எவ்வகையிலும் தலையீடு செய்வதற்கு அனுமதிக்காத வகையில் பரஸ்ப்பர பயன்களின் அடிப்படையில் நட்புரீதியான உறவுகளை மற்ற நாடுகளுடன் நாம் கொண்டுள்ளோம் (ஹிஜ்ரி 1405 ஸஃபர் பிறை 8 வியாழன் அன்று மன்னர் ஆற்றிய உரையிலிருந்து)
ஆகவே சவூதி அரசு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெளிவாகும். இதன்முடிவாக, கிலாஃபாவை மறுநிர்மாணம் செய்வதின் மூலமாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக பணியாற்றுதல் என்பது முஸ்லிம்கள்மீது வாஜிபாக இருக்கிறது.

சவூதி அரேபியா இஸ்லாமிய அரசா அல்லது குஃப்ர் அரசா – பாகம் – 1

 
எந்தவொரு நாட்டிலேனும் தன்னுடைய தீன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதா என்பதை அறிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயமாகும், ஏனெனில் அல்லாஹ் (சுபு)வுடைய தீனின் சட்டங்கள்ஹ அடிப்படையில் ஆட்சிசெய்யும் அரசிற்கு முஸ்லிம்கள் பைஆ செய்யவேண்டியது கட்டாயமாக இருக்கிறது. வேறுவகையில் கூறினால், இஸ்லாமிய அகீதா மற்றும் ஷரீஆ சட்டங்கள் அடிப்படையில் கலீஃபாவின் தலைமையில் இயங்குவதுதான் கிலாஃபா அரசாகும், அதற்கு நாம் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) நமக்கு கட்டளையிட்டுள்ளான். ஆகவே கிலாஃபா அரசின் தோற்றம் என்பது கற்பனையானதும் அல்ல யூககோட்பாட்டின் அடிப்படையில் உள்ளதும் அல்ல! வேறுவகையில் கூறுவதென்றால், மன்னர் சல்மான் முஸ்லிம்களின் கலீஃபாவா? சவூதி அரேபியா இஸ்லாமிய அரசா? என்பதுதான் கேள்வியாகும்! சவூதி அரேபியா இஸ்லாமிய அரசுதான் என்று நாம் முடிவு செய்தால் பிறகு இஸ்லாமிய அரசை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கட்டாயக்கடமை நம்மைவிட்டு நீங்கிவிடும்! (அன்றியும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட குறிக்கோளின் பொருட்டு இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் நேரத்தையும் ஆற்றல்களையும் வீணாக செலவிட்டு வருகின்றன என்பதுதான் இதற்கு பொருளாகும்!)

முஸ்லிம்களின் பார்வை :
 
சவூதி அரேபியா ஓர் இஸ்லாமிய அரசு என்ற கண்ணோட்டத்தை பல முஸ்லிம்கள் கொண்டுள்ளார்கள். ஓர் அரசு இஸ்லாமிய அரசா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கும் அளவுகோலை பெற்றிராத காரணத்தாலும், சவூதி அரசு பொய்யான தோற்றத்தை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் அதன் எதார்த்தநிலை குறித்த அறிவு இல்லாத காரணத் தாலும் முஸ்லிம்களில் பலர் இவ்வாறு கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரசு லட்சக்கணக்கான சங்கைமிக்க குர்ஆன் பிரதிகளையும் இஸ்லாமிய நூற்களையும் நன்கொடையாக அளித்துவருவதோடு உலகம் முழுவதிலும் மஸ்ஜிதுகளை கட்டுவதற்கு ஏராளமான பணத்தை அள்ளி வழங்குகிறது! இதன்காரணமாக மக்கள் அதை ஓர் இஸ்லாமிய அரசு என்று நம்புகிறார்கள்! எனவே அதன் உண்மைநிலையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்!
 
இஸ்லாமிய அரசிற்குரிய அளவுகோல் :
 
ஓர் அரசு இஸ்லாமிய அரசாக இருக்கவேண்டும் என்றால் அதன் அரசியல் சாஸனம், சட்டங்கள், விதிமுறைகள், கட்டமைப்புகள், அந்நியநாட்டு உறவுகள் ஆகியவற்றிற்கும் அதன் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கும் இஸ்லாமிய அகீதாவை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஓர் அரசு இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் ஆட்சிசெய்யவில்லை என்றால் அல்லது அதன் எந்தவொரு விவகாரத்திலும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரமூலங்களிலிருந்து சட்டங்களை எடுத்துக்கொள்கிறது என்றால் அது இஸ்லாமிய அரசாக இருக்காது மாறாக குஃப்ர் அரசாகவே இருக்கும்.
 
இந்த அளவுகோலின் அடிப்படையில் இப்போது நாம் சவூதி அரசை ஆய்வுசெய்வோம் :
 
சவூதி அரசும் மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களும் :
 
சவூதி அரசு கலப்படமான சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்கிறது, அவற்றில் சில இஸ்லாமிய சட்டங்களாகவும் மற்றும் சில மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களாகவும் உள்ளன. எனினும் இஸ்லாமிய பார்வையை தன்மீது நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் அவற்றை சட்டங்கள் என்று அழைப்பதிலிருந்து அது தவிர்ந்துகொள்கிறது! இஸ்லாமிய சட்டங்களையும் மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களையும் வேறுபடுத்திக்காட்டும் வகையில் குறிப்பிட்ட மொழியியல் சொல்வழக்கை அந்த அரசு பயன்படுத்திவருகிறது. ‘அரபு நாடுகளின் அரசியல் சாஸன சட்டங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள அரபி நூலில் ‘சவூதி அரேபிய அரசாட்சியின் அரசியல் சாஸனம்’ என்ற உட்பிரிவு அத்தியாயத்தில் அதன் ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார் : ‘கானூன் (சட்டம்) மற்றும் தஷ்ரீ (சட்டவடிவங்கள்) ஆகிய வார்த்தைகள் இஸ்லாமிய சட்டங்களை குறிப்பிடுவதற்கு மட்டுமே சவூதி அரசால் பயன் படுத்தப்படுகின்றன . . . செயலாக்க அமைப்புகள் போன்ற மனிதர்கள் உருவாக்கியுள்ளவை அல்லது அறிவுறுத்தல்கள் (தஃலிமாத்) அல்லது அரசாணைகள் (அவாமிர்) ஆகியவற்றை பொருத்தவரை . . .’ டாக்டர் மஹ்மூது அல்மக்ரிபி எழுதிய அல்வஜீஸ் ஃபீ தாரீக் அல் கவானீன் (அரசாணைகள் பற்றிய வரலாற்று சுருக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ள அரபு நூலின் 443 வது பக்கத்தில் கடந்தகாலத்தில் இருந்த சட்டங்கள் எளிமையான இஸ்லாமிய சட்டங்களாக இருந்தன என்று குறிப்பிட்டுவிட்டு சவூதி அரசை புகழந்துகூறும் வகையில் அதில் கூறப்பட்டிருப்பதாவது : சவூதி அரசும் அதன் இயற்கை வளங்களும் தோன்றிய பின்னர் இந்த சூழலில் மாற்றம் ஏற்பட்டது. இந்த புதிய சூழலுக்கு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் தேவைப் பட்டன. இந்த மாற்றங்களின் காரணமாக புதிய சட்டங்களின் தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக கீழ்க்கண்ட விவகாரங்களில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன : நீதிமன்றங்கள், வர்த்தம், குற்றவியல் சட்டங்கள், தொழிலாளர்கள், வரிவிதிப்பு மற்றும் இதர துறைகளில் புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன’
 
வர்த்தக சட்டங்கள் தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “தரைவழி மற்றும் கடல்வழி வர்த்தகங்கள் தொடர்பான ‘வர்த்தக செயலாக்க அமைப்பு’ என்று அறியப்பட்ட சட்டங்கள் யாவும் சவூதி அரசின் வர்த்தக சட்டங்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. கி.பி. 1931 ல் வெளியிடப்பட்ட இந்த சட்டங்கள் அரபு சட்டங்கள் என்றாலும் அல்லது ஐரோப்பிய சட்டங்கள் என்றாலும் நவீன வர்த்தக சட்டங்களுக்கு ஒப்பானவையாகும்’’ இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை பொருத்தவரை அவர் பின்வருமாறு கூறியுள்ளார் : “பொதுமக்களின் நலன்கருதி அவற்றில் சில மாற்றங்களை செய்வது அவசியமாக இருக்கிறது” மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது : “பொதுமக்களின் நலன் அடிப்படையில் அரசின் வரிவிதிப்பு வருவாய் தொடர்பான சட்டங்களை உருவாக்கவேண்டியதும் அவசியமாக இருக்கிறது”
உள்ளபடியே நவீனகால வர்த்தக சட்டங்களுக்கு ஒப்பான சட்டங்களை சவூதி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்று இந்நூலின் ஆசிரியர் நமக்கு எடுத்துக்கூறுகிறார். மேலும் பொதுமக்களின் நலன் கருதி சில இஸ்லாமிய சட்டங்களை மாற்றியதின் மூலம் அல்சவூது அல்லாஹ்(சுபு)வின் தீனில் மாற்றம் செய்துள்ளார் என்றும் அவர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்!
உண்மையில் சவூதி அரசு பல்வேறு மனித சட்டங்களை பின்பற்றி வருகிறது, அவற்றை இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடவில்லை! அவற்றில் சில பின்வருமாறு :
  • வங்கிகள் கண்காணிப்பு செயலாக்க அமைப்பு (The system of observing banks) & மன்னரின் அரசாணை (the king’s edict # M/5) அடிப்படையில் ஹிஜ்ரி 1386 ல் வெளியிடப்பட்டது.
  • சவூதி அரபு குடியுரிமை செயலாக்க அமைப்பு (the system of Saudi Arab citizenship) & மந்திரிசபை தீர்மானம் (# M/4 )அடிப்படையில் 1974 ஜனவரி 25 ல் முடிவுசெய்யப்பட்டு உயர்மட்டக்குழுவில் மன்னர் ஆற்றிய உரையின் (High Council #8/5/8604) அடிப்படையில் 1974 பிஃப்ரவரி 22 ல் அங்கீகாரம் வழங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
  • அச்சடிக்கப்பட்ட பிரதிகள் மற்றும் வெளியீடுகள் தொடர்பான செயலாக்க அமைப்பு & மன்னரின் அரசாணை (#M/17 (13-4-1402 AH)) அடிப்படையில் வெளியிடப்பட்டது.
  • தரிசுநிலங்களை பண்படுத்துதல் தொடர்பான சட்டங்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் ஒருவர் ஒருதுண்டு தரிசுநிலத்தை பண்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் அது அவருக்கு உரிமையாக ஆகிவிடும். ஆனால் இந்த இஸ்லாமிய சட்டத்தை ரத்துசெய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு கி. பி. 1987 முதல் இதுதொடர்பான மனித சட்டங்கள் அமலுக்கு வந்தன.
  • சவூதி அரேபியா குடிமகளாக இல்லாத பெண்ணை திருமணம் செய்துகொள்ளுதல் தொடர்பான செயலாக்க அமைப்பு
  • வரிவிதிப்பு தொடர்பான பொதுச்சட்டங்கள் & மன்னரின் அரசாணை (#M/9 (4-6-1395 AH)) அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது
ஷரீஆ நீதிமன்றங்கள் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் :
மற்ற முஸ்லிம் நாடுகளை போலவே சவூதியில் ஷரீஆ நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டு உரிமையியல் நீதிமன்றங்கள் அல்லது மனித சட்டங்கள் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் நீதி மன்றங்கள் இயங்கிவருகின்றன. இதற்கு முன்பு குறிப்பிடப்பட்டது போல் அங்கு வசிக்கும் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைவார்கள் என்பதற்காக அல்லது சவூதி அரசின் மிகப்பெரிய தூண்களாக விளங்கும் அந்நாட்டின் அறிஞர்கள் சங்கடம் அடைவார்கள் என்பதற்காக அவற்றை சவூதி அரசு உரிமையியல் நீதிமன்றங்கள் என்று அழைப்பதில்லை. சவூதி அரசை பொருத்தவரை, மனித சட்டங்கள் அனைத்தும் அநீதி செயல்பாடுகள் கவுன்ஸில் (Dewan of Mazhalim – council of injustice) போன்ற சட்டப்பேரவை மற்றும் தேர்வுக்குழு (legal forums council and committee) மூலமாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த பேரவைக்குழு மற்ற நாடுகளில் இயங்கும் உரிமையியல் நீதிமன்றங்களை போன்றதாகும்.
 
மற்ற நாடுகளிலுள்ள உரிமையியல் நீதிமன்றங்களை சவூதி அறிஞர்கள் குஃப்ர் என்று குறிப்பிடுகிறார்கள் ஆனால் அவர்களுடைய நாட்டில் இயங்கும் சட்டப்பேரவை தேர்வுக் குழுவை பற்றி அவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு தைரியம் ஏற்படவில்லை! இந்த குழு வட்டி, மோசடி, லஞ்சம் போன்ற ஷரீஆ நீதிமன்றங்கள் விசாரிக்காத வழக்குகளை கையாளுகின்றன. இந்த சட்டப்பேரவை தேர்வுக்குழுவில் ஷைக்குகளும் ஸொர்போன் (Sorbonne) சட்டக்கல்லூரி போன்ற கல்லூரிகளின் வழக்கறிஞர்களும் இடம் பெற்றுள்ளார்கள், இஸ்லாத்திற்கு அந்நியமான சில விதிமுறைகள் அரசாணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தீர்ப்புகளை அளித்து வருகிறார்கள்.
 
உதாரணமாக, இராணுவ நீதிமன்றங்கள் திவான் (Dewan of military courts) என்று அழைக்கப் படும் தனிப்பட்ட திவானின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் 11/11/1366 கிபி ல் வெளியிடப்பட்ட சவூதி அரேபிய இராணுவத்தின் செயலாக்க அமைப்பு (the system of Saudi Arab Army) என்றழைக்கப்படும் மனித சட்டங்கள் பிரயோகிக்கப் படுகின்றன. இராணுவத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பிரயோகிக்கப்படும் இந்த சட்டங்களில் ஷரீஆ சட்டங்களும் அதற்கு அந்நியமான சட்டங்களும் அடங்கியுள்ளன. உதாரணமாக அவற்றில் ஹிராபா எனப்படும் மனித சட்டம் இடம்பெற்றுள்ளது, இதன் அடிப்படையில் அரசை கவிழ்ப்பதற்கு முயற்சிப்பவர்கள் கொல்லப்படுவார்கள். உண்மையில் இஸ்லாமிய இயக்கவாதிகளை ஒடுக்குவதற்காகவே இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக இராணுவம் அல்-ஸவ்து குடும்பத்தை நீக்கிவிட்டு மற்றொரு இஸ்லாமிய ஆட்சி யாளரை கொண்டுவரும் முயற்சிகளை தடுக்கும் பொருட்டே இந்த சட்டங்கள் கொண்டுவரப் பட்டன. திருட்டு குற்றத்திற்கு உரிய தண்டனையை பொருத்தவரை அது இஸ்லாத்தின் அடிப் படையில் நிறைவேற்றப்படும் என்று சவூதி அரசு கூறிக்கொண்ட போதும் அதுதொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. திருட்டு குற்றம் புரிந்த நபர் குடிமக்களில் உள்ளவராக இருந்தாலும் இராணுவத்தினராக இருந்தாலும் கலீஃபா என்றாலும்கூட அவருடைய கையை துண்டிக்கவேண்டும் என்பதுதான் அறியப்பட்ட இஸ்லாமிய தண்டனையாக இருக்கிறது. எனினும் ‘சவூதி அரேபிய இராணுவ செயலாக்க அமைப்பு’ என்ற சட்டத்தின் 8 வது பிரிவு 12 வது விதிமுறையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால் : ‘இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் மற்ற அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரின் பொருட் களையோ அல்லது பணத்தையோ திருடினால் அந்த பொருள் நுகர்பொருளாக இருக்கும் நிலையில் அதை பயன்படுத்திவிட்டால் பிறகு அதற்குரிய பணத்தை கொடுத்துவிடவேண்டும் என்பதோடு ஒன்றரை மாதம் முதல் மூன்று மாதங்கள்வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் ஓர் அதிகாரி திருட்டு குற்றம் புரிந்துவிட்ட நிலையில் அதற்குரிய பரிகாரத்தையும் தண்டனையையும் ஏற்றுக்கொள்ள விரும்பினால் அவர் இராணுவ செயலாக்க அமைப்பு விதிமுறை 20 மற்றும் 22 பிரிவு 3ன் அடிப்படையில் தண்டிக்கப்படுவார். இராணுவ செயலாக்கஅமைப்பு அடிப்படையில் சில குற்றங்கள் ஷரீஆ நீதிமன்றங்களுக்கும் சில குற்றங்கள் விசாரணை குழுவிற்கும் (Council of trials) உட்பட்டதாகும்’
 
பிரிட்டனினால் உருவாக்கப்பட்டு அமெரிக்காவினால் பராமரிக்கப்படும் இந்த அரசின் ஆதரவாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியவர்களிடம் நாம் கேட்கிறோம்! இஸ்லாத்தின் சட்டங்கள் சிலர் நடைமுறைப்படுத்தும் வகையிலும் சிலர் நடைமுறைப்படுத்த முடியாத வகையிலும் உள்ளனவா-? அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றின் அடிப்படையில் தண்டனை சட்டத்தை இயற்றுவது தொடர்பான இஸ்லாமிய சட்டம் என்ன?
சவூதி அரசு வட்டி வரவுசெலவுகளை மேற்கொண்டுவருகிறது! ஹரம் ஷரீஃபிற்கு அருகில் நடந்து செல்பவர்கள் பிரிடிஷ்-சவூதி வங்கி, அமெரிக்க-சவூதி வங்கி, அரபு-தேசிய வங்கி, கெய்ரோ-சவூதி வங்கி ஆகியவற்றை காணலாம். ஹிஜ்ரி 1386ல் வெளியிடப்பட்ட மன்னரின் அரசாணை (the king’s edict # M/5) அடிப்படையில் வங்கிகள் தொடர்பான விதிமுறை 1ல் இடம்பெற்றுள்ள சவூதி சட்டங்களுக்கு இணக்கமாக இந்த வங்கிகள் வட்டி அடிப்படையிலுள்ள கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுவருகின்றன. வட்டி மற்றும் வங்கி நடிவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கையாளும் வகையில் நிதியியல் நிறுவன அமைப்பின் குறிப்பிட்ட தேர்வுக்குழுவிற்கு வழக்குகள் அனைத்தும் தானாகவே மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த வகை வழக்குகள் எதுவும் ஷரீஆ நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படாது! இந்த சட்டத்திற்கு முன்னதாக வங்கியிலோ அல்லது நிதித்துறை அமைப்புகளிலோ கடன் வாங்கிய ஒருவர் தவணையை தாமாதமாக செலுத்தும்போது அவர்மீது உபரியான வட்டி விதிக்கப்படும், அத்தகைய தருணங்களில் கடன் வாங்கியவர் ஷரீஆ நீதிமன்றத்தை நாடுவார், அவர்மீது விதிக்கப்பட்ட வட்டியை ஷரீஆ நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பு அளிக்கும், இதனால் நிதியியல் சார்ந்த சச்சரவுகள் அங்கு ஏற்பட்டுவந்தன.
 
ஒரே நிலப்பரப்பில் ஒருபுறம் ஷரீஆ நீதிமன்றங்களும் மறுபுறம் வங்கிகளும் அவர்களுக்கு தேவையாக இருக்கின்றன என்பது நகைச்சுவை காட்சிகளுக்கு ஒப்பாக இருக்கின்றன என்றே தோன்றுகிறது. நிதியியல் தொடர்பான இந்த சச்சரவுகளுக்கு தீர்வுகாணும் வகையில் இது தொடர்பான வழக்குகளில் ஷரீஆ நீதிமன்றம் தலையிடுவதற்கு ‘சிறப்பு சட்டங்கள்’ வாயிலாக தடை விதிக்கப்பட்டது.
 
 
சவூதி அரசிற்கும் GCC (Gulf Cooperation Council) எனப்படும் நிதியியல் அமைப்பிற்கும் இடையிலுள்ள உறவு வட்டி அடிப்படையில் உள்ளதாகும். ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தின் (Unified Economic Agreement) விதிமுறை 22ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது : “உறுப்பினர்களாக உள்ள அரசுகள் தங்களுடைய வங்கிநிதி தொடர்பான நிதியியல் நடிவடிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதோடு நிதியியல் நிறுவன அமைப்புகளுக்கு மத்தியிலுள்ள ஒத்துழைப்பை அதிகரிக்கவேண்டும்” இது வட்டி அடிப்படையிலுள்ள நடவடிக்கை என்பது தெளிவானதாகும் ஏனெனில் வங்கிகளும் நிதி நிறுவன அமைப்புகளும் வட்டியை அடிப்படையாக கொண்டே இயங்கிவருகின்றன.

Jan 27, 2016

Syria's war: Who is fighting and why


பெண்மணியே கேள்!


*******************
பெண்கள் விவகாரத்தில் அவசியமான வேலிகள் மீறப்பட்டு அவளது பாதுகாப்பு, இயல்புநிலை தாண்டிய பல விவகாரங்களை முதலாளித்துவ மேற்குலகு சுதந்திரம் என்ற பெயரில் அவள் மீது திணித்துள்ளது! இந்த இக்கட்டான சூழலை அறிவு பூர்வமாக சந்திப்பது என்ற தரத்தை முஸ்லீம் உம்மத் இழந்த நிலையில் வெறும் சம்பிரதாய பூர்வமாக அதை எதிர் கொள்ள நினைத்ததால் ஏகப்பட்ட தவறுகளை அது விட்டுள்ளது!
இதனால் பெண்மையின் கண்ணியத்தை காக்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் பார்வை பெண்ணிய ஒடுக்குமுறையாக சுட்டிக்காட்ட இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பாக மாறியது. ஆனால் பிரத்தியோகமாக சட்டங்கள் சொல்லப்படாத அனைத்து விவகாரங்களிலும் ஆணுக்கு நிகராக உரிமைகளை அனுபவிக்கும் உரிமை பெண்களுக்குண்டு. அதில் பிரதான விவகாரம் கல்வி கற்கும் உரிமையாகும். 
பெண்வைத்தியர்கள், தாதிகள் என அவர்களுக்கே என பிரத்தியோகமாக இருக்க வேண்டிய பல விவகாரங்களில் கூட முஸ்லீம் உம்மா சரியானதும் தகுதியானதுமான வழிநடாத்தலின்றி தவிக்கிறது! மேற்கு பெண்ணை போகப் பொருளாக பார்க்க முஸ்லீம் உம்மத்தோ பதுக்கி அனுபவிக்கும் பொருளாக பார்க்கிறது! இந்த இரண்டுமே முரண்பட்ட தீவிரங்களே! 
மருத்துவம், சமூக அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் முஸ்லீம் பெண்களின் தேவை பர்ளு கிபாயா என்ற நிலையை தாண்டி பர்ளு ஜன் என்ற அளவுக்கு ஏறத்தாழ வந்துவிட்டது. நடக்கும் இஸ்லாமிய எழுச்சியில் அவளின் பங்கு ஆணுக்கு நிகரானதென்பது உம்மத்திற்கு புரியப்படுத்த வேண்டும். தொடரும் எழுச்சிப் பணிகளில் நவ சுமையாக்கள் சுமைதாங்க தயாராகுவார்களா!?

கருத்து வேறுபாடு!


****************
ஒரு முஸ்லிமை பொறுத்தவரை வஹியின் திட்டவட்டமான (கதயி) அறிவிப்புகள் அல்லாத ஆய்வின் மூலமான தீர்வுகளை செய்ய இறைவன் அனுமதித்த பகுதிகளில் கருத்து வேறுபாடு கொள்ள முடியும். ஆனால் அந்த கருத்துவேறுபாடு முஸ்லீம்கள் என்ற உள்ளார்ந்த பொது உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது. அந்த வகையில் பனூகுரைலா சம்பவம் எமக்கு சிறந்த உதாரணமாக தெரிகிறது.

மதீனாவை அண்டிவாழ்ந்த யூதக் கோத்திரமான இந்த பனூ குரைலாக்கள் மதீனா தவ்லா அல் இஸ்லாமியாவுடன் நட்புறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டு நயவஞ்சகமாக மக்கா குறைஷிகளுடன் கூட்டுச் சேர்ந்து சதிவேலைகளை செய்தபோது குறித்த கோத்திரத்தை முற்றுகையிட்டு தகுந்த பாடம் கற்பிக்க அல்லாஹ்வின் தூதர்(ஸல்) ஒரு படைப்பிரிவை அப்பகுதிக்கு அனுப்பினார்கள். அப்போது "நீங்கள் பனூகுரைலாக்களின் பூமியை அடையும் வரை அஸர் தொழ வேண்டாம்! " என்ற கட்டளையை கூறியே வழியனுப்பினார்கள்.

குறித்த படைப்பிரிவு செல்லும் நேரம் அஸருடைய நேரம் ஆகிவிட அந்த சஹாபாக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு தோன்றியது! #ஒருபிரிவு "வேகமாக செல்ல வேண்டும் என்றே தூதர்(ஸல்) அவ்வாறு கூறினார்! " என்ற முடிவோடு அஸர் தொழுகையை நிறைவேற்ற #அடுத்த பிரிவோ "பனூ குரைலாவின் பூமியை அடைந்தே நாம் அஸர் தொழுவோம்! " என கூறினாலும் முன்னைய பிரிவோடு எவ்வித சர்ச்சையிலும் ஈடுபடவில்லை. பின்னர் அவர்கள் பனூ குரைலாவின் பூமியை அடைந்து மஹ்ரிப் நேரம் ஆகிய நிலையில் முதலில் அஸரை தொழுதுவிட்டு பின்னர் (இரு தரப்பும் இணைந்து) மஹ்ரிப் தொழுகையை நிறைவேற்றினர்!

பின்னர் பனூகுரைலாக்களின் பூமி வெற்றி கொள்ளப்பட்டு மதீனா திரும்பியதும் சம்பவம் அல்லாஹ்வின் தூதரிடம்(ஸல்) முன்வைக்கப் பட்டது! இரு தரப்பின் நியாயங்களையும் கேட்ட அண்ணலார்(ஸல்) இந்த இரண்டு செயல்களையும் அங்கீகரித்தார்கள்.

எனவே திட்டவட்டமற்ற (லன்னி) விவகாரங்களில் முஸ்லீம் உம்மா கருத்து வேறுபாடு கொண்டாலும் அது உள்ளார்ந்த சர்ச்சைகளை, மோதல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்பதையும், தமது சர்ச்சைகளின் தீர்விடமாக (அல்லாஹ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ற)வஹியின் பாலும் அதனடி உம்மத்தை வழிநடாத்தக் கூடிய பொதுத் தலமையின் கீழ் தீர்வுக்காக முன்வர வேண்டும் எனவும் இஸ்லாம் எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் மதீனா தவ்லாவில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) நபியாகவும், ஆட்சித் தலைவராகவும் ஒரே நேரத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஸாவும் அய்யூபியும்


கற்களுக்கும் குண்டுகளுக்கும்
இடையே பாலஸ்தீனத்தில்
ஒரு போட்டி!

யுத்தம் முந்தியது
மனித ரத்தம் சிந்தியது !

சஹீதுகள் வீட்டில் ஓலம் இருந்தாலும்
வெற்றியின் சந்தோசம் இருக்கின்றது ! .

மகளை பிரிந்தாலும் மகனை பிரிந்தாலும்
பிரியாமால் தொடர்கின்றது போராட்டம்!
சொல்லாமல் போனாலும்
போராடும் தொடர் குணமே
வாரிசுகளின் நாட்டம் !

அக்ஸாவை பார்க்கும் பொழுதெல்லாம்
வெட்கப்படுகின்றேன் ?

சலாஹுதீன் அய்யுபிக்கு இருந்த தைரியம்
எங்களுக்கு இல்லையே !

சலாஹுதீன் வெற்றிக்கு காரணம்
படை பலமா ? ஈமானிய உயர் பலமா ?

ஈமானிய உயர் பலம்! உறுதி பலம் !

முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்
குதிரைகளின் சேனைகளை கட்டுகிறேன்
வாள்களின் உலோகத்தை கூராக்குகிறேன்
இறைவன் கடைமைகளை சீராக்குகிறேன்
குர் ஆன் வேதத்தை இதோ வாசிக்கிறேன்
சலாஹுதீன் அய்யுபியை நோக்கி
புன்னகை சிதற விட்டு புறப்படுகிறேன்
பிரார்த்தனை செய்கிறேன்இப்போது!

இறைவா
அக்ஸாவை மீட்க உதவி செய் !

– அபூஷேக் முஹம்மத்

SOURCES FROM IQRAH.NET

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 2

அல்லாஹ்(சுபு)வின் நேசம் மனிதன்மீது இறங்குவதுதான் ஈமான் மற்றும் இறைவனுக்கு கட்டுப்படுதல் ஆகியவற்றின் மிகஉயர்ந்த நிலையாக இருக்கிறது. இறைவன்மீது ஈமான் கொண்டு அவனுக்கு கட்டுப்படும் மக்கள் அவனுடைய நேசத்திற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்(சுபு)வின்ஹ நேசத்தை பெற்றுக்கொள்வதில் அவன் விதித்துள்ள நிபந்தனையை கடை பிடிப்பவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்பாலிக்கிறான். நபி(ஸல்) அவர்களை மட்டுமே தலைவராகவும் கட்டளையிடும் அதிகாரம் பெற்றவராகவும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதுதான் அல்லாஹ்(சுபு)வின் நேசத்தில் உண்மையாக இருப்தற்குரிய நிபந்தனையாக இருக்கிறது. குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் சட்டரீதியான விதிமுறைகளுக்கு மட்டும் கட்டுப்படுவதுதான் வாழ்வியல் பயணத்தில் பங்குகொள்வதற்கும் வாழ்வியலின் கடும்பணிகளை நிறைவேற்று வததற்கும் உரிய நிபந்தனையாக இருக்கிறது. அல்லாஹ்(சுபு)வும் அவனுடையதூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் பரிந்துரை செய்துள்ள சிந்தனையுடன் முரண்படுகின்ற சிந்தனையின் அடிப்படையில் எவரேனும் தனது வாழ்க்கை பயணத்தை அமைத்துக்கொண்டால், அல்லாஹ் (சுபு) அருளியவற்றிற்கு அந்நியமான சட்டத்தை எவரேனும் மனநிறைவுடன் பின்பற்றினால், தனது அபிப்ராயம் மற்றும் சிந்தனை அடிப்படையில் தன்னை பின்பற்றவேண்டும் என்று அழைப்புவிடுக்கும் தலைவரை எவரேனும் பின்பற்றினால், அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை பின்பற்றி செயலாற்றாத குழுவை எவரேனும் பின்பற்றினால், தலைவர் குழுக்கள் ஆட்சியாளர் ஆகியவர்களின் கூற்றுகள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் இணக்கமாக இருக்கிறதா அல்லது முரண்பாடாக இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யாமல் எவரேனும் அவற்றை பின்பற்றினால் நிச்யமாக அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கேள்விக்கணக்கிலிருந்து தப்பித்துச்செல்ல முடியாது!
 
     ஆகவே அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றின்பால் மக்களிலுள்ள தலைவர் ஒருவர் அழைக்கும் நிலையில் அதை ஒருமுஸ்லிம் பின்பற்றினால், அல்லது முஸ்லிம்களை ஏமாற்றும் பொருட்டு குறிப்பிட்ட சட்டம் உண்மையாக இறைசட்டமாக இல்லாத நிலையில் அது அல்லாஹ்(சுபு)வின் சட்டத்திற்கு இணக்கமாக இருக்கிறது என்று கூறும் நிலையில் அதை ஒருமுஸ்லிம் பின்பற்றினால் அவர் அல்லாஹ்(சுபு)வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் வழங்காத சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே கருதப்படுவார்கள். மறுமைநாளில் அவருடைய நிலை மகத்துவமிக்க அல்லாஹ்(சுபு) கூறுவதை போன்று இருக்கும்,
 
إِنَّ اللَّهَ لَعَنَ الْكَافِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا خَالِدِينَ فِيهَا أَبَدًا لَا يَجِدُونَ وَلِيًّا وَلَا نَصِيرًا يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا آَتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا  ‎ ‎‎‎‎‎‎  ‎
     நிச்சயமாகஅல்லாஹ்நிராகரிப்பவர்களைசபித்துகொழுந்துவிட்டெரியும்நெருப்பைஅவர்களுக்காகதயார்படுத்திவைத்திருக்கிறான். அவர்கள்என்றென்றும்அதில்தங்கிவிடுவார்கள்.
 
அவர்களுக்குபாதுகாப்புஅளிப்பவர்களையோஉதவிசெய்பவர்களையோஅவர்கள்அங்குகாணமாட்டார்கள். நரகத்தில்அவர்களுடையமுகங்கள்புரட்டிப்புரட்டுபொசுக்கப்படும்நாளில்எங்களுடையகேடே!
 
நாங்கள்அல்லாஹ்வுக்கும்அவனுடையதூதருக்கும்வழிபட்டிருக்கவேண்டாமா?! என்றுகதறுவார்கள். அன்றியும்எங்கள்இறைவனே!
  நிச்சயமாகநாங்கள்எங்கள்தலைவர்களுக்கும்எங்கள்பெரியவர்களுக்கும்வழிபட்டோம். நாங்கள்தவறானவழியில்செல்லும்படிஅவர்கள்செய்துவிட்டார்கள். எங்கள்இறைவனே!
 
நீஅவர்களுக்குஇருமடங்குவேதனையைகொடுத்துஅவர்கள்மீதுபெரும்சாபத்தைகொண்டுசபிப்பாயாக!’ என்றுகூறுவார்கள். (அல்அஹ்ஸாப் : 64 – 68)
 
உண்மையில் தனிமனிதரை அல்லது (சட்டரீதியாக அமைக்கப்படாத) குழுவை அல்லது அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டுதலிலிருந்து விலகிச்செல்லும் சட்டத்தை, இஸ்லாத்திற்கு அந்நியமான சிந்தனையை பின்பற்றி வரும் நிலையில் தாங்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவனுடைய நேசத்தை பெறுவதற்கு பணியாற்றி வருவதாகவும் கருதிக்கொண்டு வழிகேடான் பயணத்தடத்தில் செல்லும் முஸ்லிம்களை பற்றிய துல்லியமானதும் உறுதியானது மான விவரிப்பாக இது இருக்கிறது. இந்த வழிகெட்ட கூட்டம் மறுமைநாளில் மிகுந்த வருத்தத் தையும் வேதனையையும் அனுபவிக்கும்! அப்போது ‘நாங்கள் எங்களிலுள்ள தலைவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்தோம்! அவர்கள் எங்களை வழிகேட்டில் ஆழ்த்தி விட்டார்கள்!’ என்று கூறுவார்கள். தனிமனிதரை தலைவராகவும் கட்டளையிடும் அதிகாரம் உடையவராகவும் ஆக்கிக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான இரகசியம் இங்குதான் இருக்கிறது! ஏனெனில் தன்னுடைய வாழ்க்கை பாதையில் சட்டத்திற்கு புறம்பான கட்டுப்படுதல் எதுவும் தான் அறியாத வண்ணம் உட்புகுந்துவிடாத வகையிலும் ஏமாறு தலுக்கும் வழிகேட்டிற்கும் இட்டுச்செல்லாத வாழ்க்கை முறையில் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் விஸ்வாசியான ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதன்காரணமாகவே அல்லாஹ்(சுபு) தன்மீது நேசம் கொண்டுள்ள விஸ்வாசிகளை பாதுகாத்து வருவதோடு அவர்களுக்கு தனது மன்னிப்பையும் கிருபையையும் வழங்குகிறான்! எனவே தலைமைத்துவமும் கட்டளையிடும் அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் உரியது என்பதாலும் கட்டுப்படுதல் என்பது அல்லாஹ்(சுபு)வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் தீர்மானிக்கும் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறதுஹ என்பதாலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தவிஷயத்தில் அல்லாஹ்(சுபு) விஸ்வாசிகளை நேர்வழியில் செலுத்து கிறான். எனவே அல்லாஹ்(சுபு)விற்கு மாறுசெய்வது மூலமாக மட்டுமே ஒரு மனிதருக்கு கட்டுப்படமுடியும் என்ற நிலை ஏற்படும் பட்சத்தில் அந்த மனிதரை நேசிப்பதற்கோ அல்லது அவருக்கு கட்டுப்படுவதற்கோ அனுமதியில்லை.ஹ கட்டுப்படுதலை அவசியமாக்கும் நேசம் என்பது அல்லாஹ்(சுபு)விற்கு மட்டுமே உரியதாகும். கீழ்ப்படியும் குறிப்பிட்ட செயல் தொடர்பான இறைசட்டத்தை அறிந்திராத நிலையில் அந்த செயலில் ஒருவருக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு அனுமதியில்லை. இஸ்லாத்தில் தலைமைத்துவம் என்பது சட்டரீதியான செயலை நிறைவேற்றுதலில் மற்றவரை வழிநடத்தும் வகையில் மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது; எனவே தலைவர் அல்லது அமீர் ஆகியவர்கள் வாழ்வியலில் மேற்கொள்ளும் கடும்பணி என்பது இஸ்லாமிய சட்டங்கள் அங்கீகாரம் செய்துள்ள நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு முஸ்லிம்களின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதாக இருக்கிறது. தலைமைத்துவம் மற்றும் கட்டளையிடும் அதிகாரம் ஆகியவற்றில் மிகஉயர்ந்த அந்தஸ்த்தை பெற்றுள்ள ஆட்சியாளர் அல்லாஹ்(சுபு)வின் கட்டுப்படுதலில் சமுதாயத்தின் பயணத்தடத்தை பாதுகாப்பதற்கும் அது தொடர்பான நிர்வாக மேலாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கும் பொறுப்பு வகிப்பவர் என்ற முறையில் அவருடைய தலைமைத்துவம் என்பது அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை பின்பற்றி ஒழுகும் உம்மாவின் பாதையை மேற்பார்வையிட்டு சீர்படுத்துவதற்குரிய அதிகாரமாக மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களிலுள்ள தனிமனிதர் எவரும் நரகத்தின் பாதையில் நடந்து சென்றுவிடாத வண்ணம் உம்மாவை வழிநடத்தும் பொறுப்பு ஆட்சியாளரை சார்ந்த இன்றியமையாத பணியாக இருக்கிறது!
 
     அல்லாஹ்(சுபு) அருளியவற்றுக்கு அந்நியமான சட்டங்களை கொண்டு மக்களை வழி நடத்தும் ஒருவரை பற்றி எளிமையாக கூறவேண்டுமானால் அவர் நரக நெருப்புக்கு உரியவரான நயவஞசகர் ஆவார், ஏனெனில் மக்களை வழிநடத்துவதில் இஸ்லாத்தின் விதிமுறைகள் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் உரிமையையும் ‎அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குரிய உரிமையையும் சட்டத்திற்கு புறம்பாக அவர் அபகரித்துக்கொண்டார். தாங்கள் பின்பற்றும் தலைவரின் நயவஞ்சக தன்மையில் ஏமாந்துபோய் அவரை பின்பற்றிய மக்களும் நரக நெருப்பில் இருப்பார்கள் ஏனெனில் அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய சட்டங்களுக்கும் மட்டுமே கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு எதிராக அவர்கள் கலகம் செய்கிறார்கள். மறுமை நாளில் இந்த இருசாராரும் ஒருவரையொருவர் சபித்துக்கொள்வார்கள்; ஒருவருக்கு எதிராக மற்றொருவர் வெளிப்படையாக பகைமை கொள்வார்கள்; ஒவ்வொரு சாராரும் மற்றவருக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்துவார்கள்; ஒவ்வொருவரும் மற்றவரின் நிராகரிப்பிற்கு பொறுப்பேற்க மறுப்பார்கள்! குற்றவாளிகள் ஒவ்வொருவரும் மற்றவர் மீது சாபம் இடுவார்கள்; ஒருவர் மற்றவரின் குற்றங்களை பகிரங்கப்படுத்துவார்; மகத்துவமிக்க அல்லாஹ்(சுபு) சங்கைமிக்க குர்ஆனில் தனது வார்த்தை மூலமாக இந்த காட்சியை நமக்கு எடுத்துக்காட்டுகிறான்.
 
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَنْ نُؤْمِنَ بِهَذَا الْقُرْآَنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِنْدَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا أَنَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَى بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ وَقَالَ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا بَلْ مَكْرُ اللَّيْلِ وَالنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَا أَنْ نَكْفُرَ بِاللَّهِ وَنَجْعَلَ لَهُ أَنْدَادًا وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَجَعَلْنَا الْأَغْلَالَ فِي أَعْنَاقِ الَّذِينَ كَفَرُوا هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ  
 
நிச்சயமாகநாங்கள்இந்தகுர்ஆன்மீதும்இதற்குமுன்னுள்ளவேதங்கள்மீதும்நம்பிக்கைகொள்ளமாட்டோம்என்றுஇந்தநிராகரிப்பவர்கள்கூறுகின்றனர்.ஆகவேஇந்தஅக்கிரமக்காரர்கள்தங்கள்இறைவன்முன்புநிறுத்தப்படும்போதுஅவர்களில்சிலர்சிலர்மீதுகுற்றம்சுமத்துவதைநீர்காண்பீர்!அவர்களில்பலவீனமானவர்கள்கர்வம்கொண்டவர்களைநோக்கி‘நீங்கள்இல்லாவிடில்நிச்சயமாகநாங்கள்ஈமான்கொண்டிருப்போம்’என்றுகூறுவார்கள்!கர்வம்கொண்டவர்கள்பலவீனமானவர்களைநோக்கி‘உங்களிடம்நேரானவழிவந்தபின்னர்(அதைவிட்டும்)நாங்களாஉங்களைதடுத்துக்கொணடோம்?அவ்வாறு)இல்லை!
 
நீங்கள்தான்குற்றவாளிகள்’என்றுகூறுவார்கள்.பலவீனமானவர்கள்கர்வம்கொண்டவர்களைநோக்கி‘அவ்வாறுஇல்லை!நாங்கள்அல்லாஹ்வைநிராகரிக்குமாறும்அவனுக்குஇணைவைக்குமாறும்நீங்கள்ஏவவில்லையா?இரவுபகலாகசூழ்ச்சிசெய்யவில்லையா?’என்றுகூறுவார்கள்.ஆகவேஇவர்கள்அனைவரும்வேதனையைகாணும்சமயத்தில்தங்கள்துக்கத்தைமறைத்துக்கொள்வார்கள்.எனினும்நிராகரித்தவர்களின்கழுத்தில்நாம்விலங்கிடுவோம்,இவர்கள்செய்துகொண்டிருந்தவற்றிற்குரியகூலியைதவிர்த்துவேறெதுவும்கொடுக்கப்படுவார்களா?!
(ஸபா : 31 – 33)
      மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மறுமைநாளின் நிகழ்வை தெளிவாக எடுத்துக்காட்டும் அதேவேளையில் மரணத்திற்கு முன்னர் மக்களின் வாழ்வில் இடம்பெற்றுள்ள நான்கு எதார்த்த உண்மைகளை குறிப்பிடுகின்றன.
தலைவர்கள் மற்றும் உயர்ந்த அந்தஸ்த்து கொண்ட பெரியவர்கள் ஆகியவர்களிடம் அவர்களை பின்பற்றிய மக்கள் கூறும் வார்த்தைகள் : “நீங்கள் இல்லாவிடில் நாங்கள் ஈமான் கொண்டிருப்போம்” தனது குற்றத்திற்காக அல்லது தனக்கு ஏற்பட்ட தோல்விக்காக மற்றவரை குறைகூறுதல் என்பது பெரும்பான்மையான மனிதர்களின் இயல்பாக இருக்கிறது; இத்தகைய அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கிறோம்; ஒருவரிடம் உள்ள குறிப்பிட்ட குறை பற்றி அவரிடம் சுட்டிக்காட்டும்போது அவர் அந்த குற்றச்சாட்டை மற்றவர் மீது திருப்பி விடுவார். ஆனால் உண்மையில் குற்றச்சாட்டை கூறுவதும் அதை மறுப்பதும் விவகாரத்தின் உண்மைநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுவதில்லை, ஏனெனில் குற்றச்சாட்டை கூறுவதால் மட்டும் அதை நிரூபித்துவிட முடியாது, மாறாக அதை நிரூபனம் செய்யும் சட்ட ரீதியான ஆதாரத்தை அளிக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில் பலவீனமானவர்கள், தலைவர்களை பின்பற்றும் நபர்கள், கர்வம் கொண்டவர்கள் ஆகியவர் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரம் அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகள் தொடர்பான எதார்த்த நிலையிலிருந்து கொண்டுவரப்படுமே தவிர அந்த எதார்த்த நிலையைவிட்டு அவர்கள் நீங்கிய பின்னருள்ள நிலையின் அடிப்படையில் கொண்டுவரப்படாது. நமது தலைவர்களும் நமக்கு கட்டளையிடுவதற்கு அதிகாரம் பெற்றுள்ளவர்களும் நம்மை ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நம் அனைவருடைய வாழ்வின் உண்மை நிலையாக இருக்கிறது, அவர்கள் நம்மை தவறான பாதையில் வழிநடத்துவதோடு அல்லாஹ்(சுபு)வுக்கு முழுமையாக மாறுசெய்யும் வழியிலேயே செலுத்திவருகிறார்கள், வாழ்வியல் விஷயங்களை தீர்மானிப்பதிலும் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் நோக்கங்களை நிர்ணயம் செய்வதிலும் முழுமையான நிராகரிப்பை கொண்டுள்ள வாழ்க்கையில்தான் நாம் வாழ்ந்துவருகிறோம்!
     எனினும் ‘நீங்கள் இல்லாவிடில்’ என்ற சொற்றொடர் குர்ஆன் வசனத்தில் இடம் பெற்றுள்ளது, வாழ்வியலில் தலைவர்கள், பெரியவர்கள் போன்றவர்களை பின்பற்றியவர்கள் வாழ்ந்துவந்த சூழல்தான் அவர்களுடைய நிராகரிப்புக்கு காரணமாக இருந்தது என்பதும் செயல்பாடுகள் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை அறிந்துகொள்வதில் அவர்கள் அலட்சியம் காட்டவில்லை என்பதும்தான் இதற்கு அர்த்மாகும்!ஹ அல்லாஹ்(சுபு) அவர்களை படைத்துள்ள நோக்கத்தை பற்றி அறியாமல் இருந்ததற்கும் அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக தலைவர்களுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்ததற்கும் அவர்கள் வாழ்ந்துவந்த சூழல்தான் காரணம் என்றும் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் கர்வம் கொண்ட தலைவர்கள் இருந்தது வந்த காரணத்தினால்தான் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பின்பற்றியவர்கள் தாங்கள் பின்பற்றிய தலைவர்கள் மீது குற்றத்தை சுமத்திவிட்டு தாங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளை மறைத்துவிடுகிறார்கள். இக்கூற்று அவர்களுடைய நிராகரிப்பையும் அவர்கள் நரகத்தின் வேதனைக்கு தகுதியானவர்கள் என்பதையும் அவர்கள் நிராகரிப்பில் வாழ்ந்து வந்ததை மறுக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. அல்லாஹ்(சுபு)வின் ஹகேள்வி கணக்கிற்கு உட்படும் அந்த மகத்தான நாள் என்பது உண்மையில் பாவங்களையும் குற்றங்களையும் ஒப்புக்கொள்ளும் நாளாகவே இருக்கிறது! மனிதன் தனது வாழ் நாளில் இடம்பெற்றிருந்த உண்மையையோ அவன் மேற்கொண்ட செயலையோ அவன் கூறிய வார்த்தையோ ஒருபோதும் மறுக்கமுடியாது! இதன்காரணமாகவே ‘நாங்கள் ஈமான் கெண்டிருப் போம்’ என்று பலவீனமானவர்கள் கூறுவார்கள். பலவீனமானவர்கள் அவர்களுடைய வாழ் நாட்களில் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்பதும், அவர்கள் ஈமான் கொண்டுள்ள விஸ்வாசியாக இல்லை என்றநிலையில் அவர்கள் நிராகரிப்பை கொண்டுள்ள நிராகரிப்பாளராக இருந்தார்கள் என்பதும்தான் இதற்கு அர்த்தமாகும். அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்ப்படியாத மனிதர் களை பொருத்தவரை அவர்கள் நிராகரிப்பாளர்களாக இல்லை, மாறாக கீழ்ப்படியாத காரணத் தால் ஒருமுறையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளோ தண்டனைக்கு உட்படும் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள், எனவே அவர்கள் நிராகரிப்பிற்குரிய தண்டனையை அடைய மாட்டார்கள். அல்லாஹ்(சுபு)வுக்கு அந்நியமானவர்களை பின்பற்றவதிலும் அவர்களுக்கு கட்டுப் படுவதிலும் தங்கள் வாழ்நாட்களை கழித்தார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
     எனினும் நிராகரிப்பாளர்களாக இருந்தவர்கள் தங்களுடைய நிராகரிப்புக்கு காரணமாக மற்றவர்களை காட்டுவதற்கு முனைகிறார்கள் என்றபோதும் அது உண்மையில்லை என்பதால் அவர்கள் என்றென்றும் நரகத்தில் இருப்பார்கள், நரகத்தில் அவர்கள் தலைகள் வெப்பத்தில் உருகிவிடும்! ஆரம்பமும் முடிவும் இல்லாத நரகத்தில் நிராகரிப்பவர்கள் இழிவில் வீழ்ந்து கிடப்பார்கள்! எனினும் பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘நீங்கள் இல்லா விடில் நாங்கள் ஈமான் கெண்டிருப்போம்’ என்று கூறும் வார்த்தையில் உண்மையில்லை! பூமியில் தலைவர்களாகவும் பெரியவர்களாகவும் உயர்ந்தநிலையில் வாழ்ந்தவர்கள் தங்களை பின் பற்றியவர்களை அல்லாஹ்(சுபு)வுக்கு மாறுசெய்யும் தீயவழியில் செலுத்தினார்கள் என்றபோதும், தலைவர்கள் தங்களை பின்பற்றியவர்களை அல்லாஹ்(சுபு)வின் ஈமானிலும் அவனுக்கு கீழ்ப் படிவதிலும் வழிநடத்தியிருக்க முடியும் என்றபோதும், உண்மைநிலையின் அடிப்படையில் மக்களின் நிராகரிப்பிற்கு அல்லது ஈமானிற்கு தலைவர்கள் காரணமாக இருப்பதில்லை, ஏனெனில் தலைவரின் கட்டளை அடிப்படையில் ஒருவர் நிராகரிப்பையோ அல்லது ஈமானையோ தேர்வுசெய்து கொள்ளுதல் என்பது தலைவரை பின்பற்றுதல் என்ற விவகாரத்தை சார்ந்ததாக இருக்காது மாறாக எஜமானரின் கட்டளைக்கு அடிமை கட்டுப்படுதல் என்ற விவகாரத்தை சார்ந்ததாகவே இருக்கும்! எனவே தலைவரை பின்பற்றுதல் என்ற விவகாரத்தில் மனிதர்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்கக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இதன்காரணமாகவே நிராகரிப்பவர்கள் மறுமைநாளில் இருக்கும்நிலை மற்றும் அவர்கள் கூறும் வார்த்தைகள் ஆகியவை பற்றி  எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு) கூறுகின்ற விவரிப்பு என்பது அவனுடைய(சுபு) அற்பதமாகவும் அவனுக்கு(சுபு) மட்டுமே உரித்தான தெய்வீக தன்மையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது என்பதை நாம் காண்கிறோம், மகத்துவமும் உயர்வும் அவனுக்கே உரியது! இது நமக்கும் ஓர் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது, எனவே நாம் அல்லாஹ்(சுபு) வுக்கு மாறுசெய்யும் வகையில் கீழ்ப்படியாத வாழ்க்கையை தேர்வுசெய்து கொள்வதற்கு எத்தகைய காரணங்களையும் கற்பிக்க முடியாது! இத்தகைய நிலையை தேர்வுசெய்து கொள்ளும் ஒருவர் தான் குற்றமற்றவர் என்று எத்தகைய சாக்குப்போக்குகளை கூறியபோதும் தனது செயல்பாடுகளை இரகசியமாக மறைத்துக் கொண்டபோதும் தனக்குத்தானே பொய்யுரைத்து கொண்டபோதும் அல்லது தன்னுடைய தீனின் விதிமுறைகளை அலட்சியப்படுத்திய போதும் அவர் குற்றமற்றவர் என்ற மறுப்புரைக்கு உரிய ஆதாரத்தை நிரூபனம் செய்யாதவரையில் அவருடைய தற்போதைய நிலையை மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ்(சுபு) அவரிடமிருந்து எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்! ஏனெனில் ஒவ்வொரு மனிதரின் உடலிலுள்ள உறுப்புகளும் மறுமைநாளில் அவருடைய கீழ்ப்படியாமை குறித்து அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கும்! எந்த அளவுக்கு அவர் கீழ்ப்படியாமையில் வாழ்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு எதிராக அவருடைய உடலுறுப்புகள் சாட்சியம் அளிக்கும்! நமக்கு எதிராக மலக்குகள் சாட்சியம் அளிப்பார்கள்! உண்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தூதர் முஹஹஹம்மது(ஸல்) அவர்களும் சாட்சியம் அளிப்பார்கள்! மறுமைநாளில் நாம் எவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தோமோ அந்த தலைவர்களின் நாவுகளின் சாட்சியத்தை கொண்டு உலக வாழ்க்கையில் எவ்வாறு இருந்தோம் என்பது பற்றிய உண்மைகளை எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு) நமக்கு அறிவித்து காட்டுவான்!
* இன்றைய நாட்கள் பூமியில் இஸ்லாமிய அரசு இல்லாத காலகட்டமாகவும், இஸ்லாமிய விதிமுறைகள் அடிப்படையில் மக்கள் மத்தியில் இருக்கும் உறவுகளை ஒழுங்குபடுத்துவதும் அந்த உறவுகளின் விளைவாக சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியதுமான  அல்லாஹ்(சுபு)வின் ஆட்சியை ஹமக்கள் மத்தியில் நிறுவதை தடுக்கக்கூடிய காலகட்டமாகவும் இருந்துவருகிறது! இஸ்லாமிய சமூகத்திலுள்ள முஸ்லிம்களின் உறவுகளை முஸ்லிம் அல்லாத சமூகங்களுடன் அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் அடிப்படையில் நிறுநிறுத்துவதை தடுக்கக்கூடிய காலட்டமாகவும் இன்றை காலகட்டம் விளங்குகிறது. இந்த குறுகிய வாழ்க்கையில் இருந்து வரும் நிலையில் அதனுடன் தொடர்புள்ள இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்துகொள்ளும் வகையில் ஒருமுஸ்லிம் இஸ்லாமிய விதிமுறைகளின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வழிநடத்தி செல்வதையும், முஸ்லிம்கள் தங்களுடைய மரணத்திற்கு முன்பாக இஸ்லாமிய சட்டங்களை பொருத்த நோக்கங்களை நிறைவுசெய்து கொள்வதை தடைசெய்யக்கூடியதாகவும் இன்றைய காலகட்டம் இருந்துவருகிறது! இது மக்கள் மத்தியில் குர்ஆனின் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு கட்டுப்படுவதை தடுக்கும் வகையில் தலைவர்களும் புகழ்பெற்ற மனிதர்களும் இறை மார்க்கத்திற்கு எதிராக போரிடும் காலகட்டமாகும்! எல்லாம்வல்ல இறைவன் கட்டளையிட்டுள்ள அடிப்படையில் மக்கள் மத்தியில் ஷரீஆவை நிலைநிறுத்தும் அதிகார அமைப்பை நிறுவுவதற்கு உகந்த காலகட்டம் இதுதான்! அதை அல்லாஹ்(சுபு)வின் கட்டளை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டுமே ஒழிய ஹஇஸ்லாமிய சிந்தனைகளை சிதைப்பதின் மூலமும் அதன் கோட்பாடுகளை அழிப்பதன் மூலமும் இஸ்லாத்தை அழிப்பதற்கு வழிவகைகளை தேடுபவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் அல்ல!

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 1

மனிதன் கலிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான், கலிமண்ணிலிருந்து அவனை படைத்து அவனுடைய உடலில் அல்லாஹ்(சுபு) ரூஹை ஊதுவதற்கு முன்னர் அவன் இந்த பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கவில்லை! பிறப்பின் எதார்த்த நிலையை பொருத்தவரை அது வெறுமையிலிருந்து ஏற்படுகிறதே ஒழிய வாழ்விலிருந்து ஏற்படுவதில்லை. வாழ்வு என்பது மனிதன் மீது விதிக்கப் பட்டுள்ளது, ஆரம்பம் முதற்கொண்டே இந்த விஷயத்தில் அவனுக்கு எத்தகைய தேர்வுரிமையும் அளிக்கப்படவில்லை. அவனுடைய வாழ்க்கை தவணையும் அவன் மீது விதிக்கப்பட்டுள்ளது, அது வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, அதன்மீது மனிதன் எத்தகைய விளைவையும் ஏற்படுத்தவும் முடியாது தவணை முடிந்தபின்னர் கனப்பொழுது கூட இவ்வுலகைவிட்டு வெளியேறுவதிலிருந்து தாமதிக்கவும் முடியாது. துல்லியமாக நிர்ணயிக்கப் பட்ட ஒழுங்குமுறை அடிப்படையில் மரணம் அவனை எதிர்கொள்கிறது. மரணத்திற்கு முன்னர் நிர்பந்தமாகவும் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முறையிலும் வாழ்வு அவனில் தோன்றுகிறது. துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இதே ஒழுங்குமுறை அடிப்படையில் நிர்பந்தமாகவும் மனிதனின் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முறையிலும் வாழ்வு அவனிடமிருந்து வெளியேறும்போது மரணம் அவனை வந்தடைகிறது. வாழ்விற்கு முன்னர் இருந்த வெறுமை குறித்தும் தனது உடலை உயிர்ப்பித்துள்ள வாழ்வு குறித்தும் சுய விருப்பத்திற்கு அப்பாற்பட்டு வாழ்வு அவன்மீது தோன்றியது குறித்தும் மனிதன் சிந்திக்கிறான். வாழ்வியல் நோக்கங்கள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் அவன் எதிர்கொள்ளப்போகும் மரணம் குறித்தும் மனிதன் சிந்திக்கிறான். இந்நிலையில் அல்லாஹ்(சுபு) அவனை படைத்து இறை மார்க்கமான ஹஇஸ்லாத்தின்பால் வழிகாட்டியது ஏன் என்பதற்குரிய காரணத்தை அவன் தீர்மானிக்கலாம், அவன்மீது வாழ்வு தோன்றுவதற்கு முன்னரும் அவன்மீது மரணம் நிகழ்ந்ததற்கு பின்னரும் இறை மார்க்கமான இஸ்லாம் மட்டுமே அவனுடைய மார்க்கமாக உள்ளது என்பதை அவன் விளங்கியிருக்கலாம். எனவே அவனுடைய வாழ்வில் அவன் அல்லாஹ்(சுபு)விற்கு கீழ்ப்படியவேண்டும் என்பதை பிரகடணப்படுத்துகிறான், அன்றியும் அல்லாஹ்(சுபு)விற்கு கீழ்ப்படிதல் அல்லது அவனுக்கு(சுபு) மாறுசெய்தல் ஆகியவை தான் வாழ்விற்குரிய காரணத்தின் நிரூபனமாக இருக்கிறது என்பதையும் அவன் அறிந்து கொள்கிறான். அல்லது மரணத்தை எதிர்கொள்பவர்கள் சிலதருணங்களில் அதிலிருந்து தப்பித்து வாழ்வை பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால் மரணிக்கும் முறைகளில் குளறுபடிகள் நிறைந்துள்ளது என்று கருதுவதின் அடிப்படையில் பிறப்பும் வாழ்வும் வெறுமைக்கும் மரணத்திற்கும் மத்தியிலுள்ள இடைவெளி என்று நம்புவதை அவன் தேர்வுசெய்துகொள்ளலாம். எனினும் மரணத்திலிருந்து சிலர் தப்பித்துக்கொள்ளுதல் என்பது வாழ்வியலின் இயல்பான நிகழ்வாக இருக்கிறதே ஒழிய மரணம் ஏற்படும் முறைகளில் உள்ள குளறுபடியாக இல்லை, ஏனெனில் வாழ்வு என்றாலும் மரணம் என்றாலும் மனிதர்கள் அதிலிருந்து நழுவிச் சென்றுவிட முடியாது! வாழ்வு என்பது கேளிக்கைகளில் ஈடுபடுவதற்கும் விரும்பிய வகையில் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்தவதற்கும் மனஇச்சைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கும் வேண்டிய அளவிற்கு சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் விரும்பிய முறையில் இன்பங்களை துய்ப்பதற்கும் சொத்துக்களையும் பெருமைகளையும் அடைந்து கொள்வதற்கும் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு என்று ஒருவர் கருதலாம். திண்ணமாக இவர்தான் நிராகரிப்பாளர்! வாழ்வியலின் நோக்கம் மற்றும் இறைவன் அவரை படைத்திருப்பதற்குரிய காரணம் ஆகியவற்றிலிருந்து அவர் தன்னைத் தானே விலக்கிக்கொள்கிறார். இறைவன் எதற்காக அவரை படைத்தானோ அந்த நோக்கத்தை இவர் மறுத்துவிடுகிறார், வாழ்வு அவர்மீது ஏன் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த காரணத்தை அவர் சிந்திக்க விரும்பமாட்டார். இத்தகைய மனிதர் இயல்பிற்கு புறம்பான நோக்கத்தில் மக்களை வழிநடத்துபவராகவும் இறைவனுக்கு மாறுசெய்வதில் முன்னுதாரணமாக விளங்கும் மனிதராகவும் மனித இனத்தை இறைவன் படைத்துள்ள நோக்கத்திற்கு எதிராக போராட்டம் செய்பவராகவும் விளங்குகிறார்! அல்லது இயல்பிற்கு புறம்பான பாதையில் செல்வதில் மற்றவர்களை பின்பற்றும் மனிதராகவும் இறைவன் மனிதனை படைத்ததற்கு பின்னணியிலுள்ள காரணத்தை உணர்ந்து கொள்வதிலிருந்து மக்களை தடுப்பவராகவும் இவர் விளங்குகிறார். இயல்பிற்கு புறம்பான வழியில் செல்வதில் ஒருவர் மற்றவரை பின்பற்றுபவராக இருந்தாலும் அல்லது மற்றவர்களால் பின்பற்றப்படுபவராக இருந்தாலும் இருவரும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்! அல்குர்ஆனில் அல்லாஹ்(சுபு) வாக்களித்துள்ளது போல இந்த இருசாராரும் இறைவனிடமிருந்து இருமடங்கு தண்டனையை பெற்றுக்கொள்வார்கள் என்பது நிச்சயமாகும்!

தலைமைத்துவம் என்பது கட்டளையிடுவதற்குரிய அதிகாரமாகும், மக்களின் தலைவர் என்பவர் அவர்களை வழிநடத்தி செல்பவராக இருக்கிறார். ஏனெனில் மக்களில் ஒருவர் தலைவராக இருக்கிறார் மற்றவர்களில் பெரும்பான்மையின் அவரை பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள்.ஹ ஜனநாயக கோட்பாட்டை பொருத்தவரை தலைமைத்துவம் என்பது அலங்காரமான விஷயங்களையும் சுயநலமிக்க குறிக்கோள்களையும் அடைந்துகொள்ளும் சாதனமாகும்! ஆனால் இஸ்லாத்தை பொருத்தவரை தலைமைத்துவம் என்பது அல்லாஹ் (சுபு)விற்கு கீழ்ப்படிவதாகவும் இறைவனின் மார்க்கத்திற்கு உதவுவதாகவும் இருக்கிறது, அதே வேளையில் இலட்சியம் என்பது கீழ்ப்படிதலை நிறைவேற்றுவதற்குரிய ஆற்றலாக விளங்குகிறது. வெற்றியை அடையவேண்டும் என்ற தீர்மானத்தின்பால் அழைப்பதற்கு இந்த ஆற்றல் பயன் படுத்தப்படுகிறது. ஏனெனில் இலட்சியத்தை போலவே, தலைமைத்துவம் மற்றும் கட்டளை யிடுதல் என்பது இஸ்லாத்தில் சட்டரீதியான நோக்கத்தை அல்லது சட்டரீதியான விதிமுறையை நிறைவேற்றுவதற்குரிய நிபந்தனையாக இருக்கிறது. இஸ்லாத்தை பொருத்தவரை தலைமைத்துவம் அல்லது கட்டளையிடும் அதிகாரம் என்பது அசலாக அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் உரியதாகும், அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை நிலைநிறுத்துவதற்கும் அவற்றின் நோக்கங்களை நிறைவு செய்வதற்கும் அவசியமானவற்றில் தனிமனிதர் ஒருவர் தலைமைத்துவத்தின் பொறுப்பை சுமந்து கொள்கிறார். இஸ்லாத்தை பொருத்தவரை தலைவரின் அலங்கார விருப்பங்கள் அல்லது அவருடைய சுயநல குறிக்கோள்கள் தலைமைத் துவத்திற்குரிய நோக்கமாக இல்லை. மாறாக, இறைவனுக்கு கீழ்ப்படியும் செயல்பாட்டில் மக்களை முன்னின்று வழிநடத்துவதற்கும் இஸ்லாத்தின் சட்டரீதியான விதிமுறைகளை நிலை நிறுத்துவதற்கும் சட்டரீதியான பலன்களை விளைவிப்பதற்கும் உரிய சாதனம்தான் தலைமைத்துவ அதிகாரமாகும்! இஸ்லாத்தை பொருத்தவரை இஸ்லாமிய சட்டங்களை நிலை நிறுத்துவதற்காக அல்லது சட்டரீதியான நோக்கத்தை நிறைவுசெய்வதற்காக மட்டுமே தலைவருக்கு அல்லது ஆட்சியாளருக்கு மக்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ஏனெனில் இஸ்லாத்தில் ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்க்கைப்பாதை என்பது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுவுவதற்கு கடுமையாக முயற்சிப் பதாகவும், அதேவேளையில் தலைமைத்துவம் என்பது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்துவதற்காக முஸ்லிம்களின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. (தலைமையை) பின்பற்றுபவர்களின் நேசம் தலைமைத் துவத்தை பெற்றுள்ளவருக்கு அவசியமானதாக இருக்கும் நிலையில், எல்லாம்வல்ல இறைவன் அடியார்களின் நேசத்தை தனக்கு மட்டும் உரியதாக வரையறை செய்துள்ளான். அல்லாஹ் (சுபு)வின் நேசத்தையும் அவனுடைய முஸ்லிம் அடியார்களின் நேசத்தையும் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றால் இஸ்லாத்தின் சட்டங்களையும் அவற்றை கொண்டுவந்த அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களையும் பின்பற்றவேண்டும் என்பதை அல்லது சட்டரீதியான நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்துவதற்கு நபி(ஸல்) அவர்களின் சார்பாக செயலாற்றும் ஒருவரை பின்பற்றவேண்டும் என்பதை அல்லாஹ்(சுபு) ‎நிபந்தனையாக ஆக்கியுள்ளான். அல்லாஹ்(சுபு) தன்மீதுள்ள நேசத்திற்கு ஈமானை நிபந்தனை யாக ஆக்கியுள்ளான், அல்லாஹ்(சுபு) மீதுள்ள நேசம் உறுதியானதாகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு இஸ்லாத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாக இருக்கிறது.‎‎‎‎‎ தனிமனிதர்கள், (சட்டத்திற்கு புறம்பான) குழுக்கள், அலங்கார கோட்பாடுகள் அல்லது அல்லாஹ்(சுபு)வின் நேசத்திலிருந்து ஒருவரை வெளியேற்றிவிடும் சட்டத்திற்கு புறம்பான நோக்கங்கள், அல்லாஹ்(சுபு)வின் நேசத்தை புறக்கணிக்கும் வகையில் கூறப்படும் வார்த்தைகள் போன்ற சட்டத்திற்கு புறம்பானவற்றிற்கு கீழ்ப்படிவதை அல்லாஹ்(சுபு) இஸ்லாமிய சட்டங்களுக்கு மாறுசெய்யும் செயலாகவே ஆக்கியுள்ளான். அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றிற்கு கீழ்ப்படிவதின் மூலமும் தனிமனிதர் தலைமைத்துவம், (சட்டத்திற்கு புறம்பான)குழுக்கள் ஆகியவற்றிற்கு கீழ்ப்படிவதின் மூலமும் அல்குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் மூலமாக அருளப்பட்ட இறைசட்டங்களுக்கு அந்நியமானவற்றின் அடிப்படையில் மக்களை வழிநடத்தும் மனிதருக்கு கீழ்ப்படிவதின் மூலமும் ஒருவர் அல்லாஹ்(சுபு)வின் நேசத்தை துறந்துவிடுகிறார்!


அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,


‎‎‎‎‎‎‎‎‎قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ ‎ ‎ ‎‎


கூறுவீராக! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள்! அப்போது அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் ‎மன்னிப்பவனாகவும் மிக்க கிருபை உடையவனுமாகவும் இருக்கிறான்!


கூறுவீராக! அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளுங்கள்! எனினும் நீங்கள் இதை புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிக்க மாட்டான்! (ஆலஇம்ரான் : 31-32)



செயல்பாடுகளை மேற்கொள்ளும் முறைகள், மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளை ஒழுங்கு படுத்தும் இஸ்லாமிய விதிமுறைகள், உறவுகள் அடிப்படையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்துதல், வாழ்வியல் சுமைகளையும் கடும்பணிகளையும் நிறைவேற்றும் வழிமுறைகள், இஸ்லாத்தின் விலக்கல்கள் ஆகியவற்றில் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றி செயலாற்றவதின் மூலமாக மட்டுமே இஸ்லாமிய சட்டங்களை நிலைநிறுத்த முடியும். சட்டம் இல்லாத நிலையில் எத்தகைய உறவுகளும் மக்களுக்கு மத்தியில் இடம்பெறவில்லை, அது ஏவல்கள் என்றாலும் விலக்கல்கள் என்றாலும் சரியே; மேற்கொள்ளும்முறை பற்றி தெளிவு படுத்தப்படாத வகையில் எந்த செயல்பாடுகளும் இஸ்லாத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாகவே முஸ்லிம்களின் வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தும் இஸ்லாமியசட்டங்களை நிலைநிறுத்துவதுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. பணிகளை மேற்கொள்ளும்போதும் கட்டாயக்கடமைகளை நிறைவேற்றும்போதும் இஸ்லாம் அங்கீகரித்துள்ள சட்டரீதியான முறையை பின்பற்றுவதன் மூலம் சட்டரீதியான இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்வதை சாத்தியமாக்க முடியும். பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பணிகள் தொடர்பான நோக்கத்தை நிறைவேற்றுதல் என்ற முறையில் இஸ்லாமிய சட்டங்களின் நோக்கம் தனிமனிதரின் நோக்கத்திலிருந்து வேறுபடுகிறது. இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றுவதின் மூலமாக மட்டுமே இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்துகொள்ள முடியும் ஏனெனில் அவற்றை பின்பற்றுவதில் தனிமதர்களின் வாழ்வும் மற்றவர்களின் வாழ்வும் தொடர்புடைதாக இருக்கிறது. உதாரணமாக, உண்மையை கடைபிடித்தல் என்பது இஸ்லாமிய சட்டங்களில் ஒன்றாக இருக்கிறது, எனினும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது உண்மையை கடைபிடிக்கும் மனிதர், மற்றவர், சட்டத்திற்கு புறம்பான விஷயங்கள் பரவிவிடாமல் சமூகத்தை பாதுகாப்பது தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் விதிமுறைகள் அல்லது மக்கள் மத்தியில் நம்பிக்கை, மகிழ்ச்சி, நல் ஒழுக்கம் ஆகியவற்றை பரப்புதல் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் விதிமுறைகள் ஆகியவற்றின் நோக்கத் துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இஸ்லாத்தின் சட்டங்களை கடைபிடிப்பதின் மூலம் தனிமனிதர் விளைவுகளை ஏற்படுத்திய போதிலும் இஸ்லாமிய சட்டங்களின் நோக்கத்துடன் இணைந்துள்ள விளைவுகள் என்பது தனிமனிதரின் நோக்கத்துடன் இணைந்துள்ள விளைவு களிலிருந்து வேறுபட்டது. முஸ்லிம்களிலுள்ள தனிமனிதர் ஒவ்வொருவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் நிறைவுசெய்யப்பட வேண்டிய இஸ்லாமிய நோக்கம் இடம் பெற்றுள்ளது, அதை தனிமனிதர் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும் சரியே!‎‎

ஓரின சேர்க்கை திருமணப் பிரச்சாரம்

- ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அமல்படுத்தியதால் ஏற்பட்ட கோர விளைவுகள்


பாலியில் இரண்டு ஆண்கள் இணைந்து செய்து கொண்ட ஓரின சேர்க்கை திருமணத்தின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அதனை குறித்த விமர்சனங்களும் மற்றும் அதை எதிர்த்தும் ஏகப்பட்ட பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து அரசும் மற்றும் சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களும்,பாரளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களும் இந்த ஒழுங்கீனத்தை கண்டித்தும் தடை செய்ய கோரியும் போராடி வருகின்றனர். இச்சம்பவங்கள் ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது மற்றும் தடை செய்யபட வேண்டியது என்ற கருத்திற்கு வலுசேர்க்கிறது.
 
இருந்த போதிலும், பெரும்பாலானோர் இது போன்ற சபிக்கப்பட்ட செயல்களான லெஸ்பியன், கேய், இருபாலின மற்றும் திருநங்கை(எல்ஜிபிடி- Lesbian, Gay, Bisexual and Transgender (LGBT)) குறித்த கேவலமான செயல்பாடுகள் ஒரு வழியாக சமூகத்தில் புற்றீசல் போல பரவி வருவது குறித்து அறியாமலே உள்ளனர். மேலும் பல்வேறு நபர்களும் மற்றும் இயக்கங்களும் அதன் வளர்ச்சிக்கு ஆதரவளித்தும், ஊக்கப்படுத்தியும் வருகின்றனர். ஐ.நாவின் ‘Being LGBT in Asia’ன் அறிக்கையின்படி 119 எல்ஜிபிடி இயக்க ஆதரவாளர்கள் இந்தோனேசியாவின் எல்லா மாஹாணத்திலும் பரவி வருகின்றனர் என்று குறிப்பிடுகிறது. இந்த ஓரின சேர்க்கையாளர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு தங்களுடைய கோணலான பாதைக்கு அங்கீகாரம் பெற முயற்சிக்கின்றனர். உண்மையில் அவர்கள் தங்களுடைய நடத்தையை நியாயப்படுத்த ஒரு சட்ட அடிப்படையை பெறும் பொருட்டு நாட்டினுடைய கொள்கை உருவாக்கத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.
 
1. சமூகத்தின் அனைத்து மட்டத்தில் உள்ளவர்களும் இந்த ஆபத்தான LGBT ஒழுங்கீனம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஓரின சேர்க்கை திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாவது ஒரு எச்சரிக்கை தானே தவிர, இந்தோனேசியாவின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலையை பொருத்த வரை LGBTக்கு இருக்கும் ஆதரவைப் பொறுத்து அவர்கள் தங்களின் பிரச்சாரத்தை இன்னமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. சமூகத்தில் உள்ள மக்களும் இது போன்ற மாறுபட்ட நடத்தைகளை கண்டும் காணாத்து போல் அனுமதிக்கும் போக்கும் அதிகரித்திக்கிறது. மேலும் ஜனநாயக ஆட்சி அமைப்பின் விளைவுகளான சுதந்திரம்-மனித உரிமைகள் தொடர்பான அமலாக்கங்கள் LGBT இயக்க வளர்ச்சிக்கும் அவர்களால் சமூகத்திற்கு ஏற்பட இருக்கும் பாதிப்பிற்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
 
 2. இந்த ஓரின சேர்க்கை திருமணத்தை நிராகரிப்பது என்பதை நோயை அதன் வேரிலிருந்து முற்றிலும் அழிப்பதை போல் கையாள வேண்டும். அதாவது ஜனநாயக ஆட்சியமைப்பை முற்றிலும் ஒதுக்குவதின் மூலம் சுதந்திரம்-மனித உரிமைகள் தொடர்பான கொள்கைகளை வேரறுத்து , அதனூடாக சமூகத்தில் நன்மையை ஏவி தீமையை தடுக்க கூடிய உன்னத கலாச்சாரத்தை உருவாக்குவதின் மூலம் சாதிக்க முடியும். இது செய்யாமல் இருந்தால், தற்போது ஓரின சேர்க்கை திருமணத்தை தடை செய்யும் சட்டங்கள் விரைவிலேயே சர்வதேச சூழலில் LGBTக்கு இருக்கும் ஆதரவை பொறுத்து சட்ட பூர்வமாக ஆக்குவதற்கான அபாயமும் உண்டு. நவூதுபில்லாஹ்.
 
3. இஸ்லாமிய ஷரீயாவும், கிலாஃபா அரசும் LGBT ஒழுங்கீனங்களை தடுப்பதற்கான பல்வேறு அஹ்காம்களை அமல்படுத்தும். ஐந்து வகைகளில் LGBT ஒழுங்கீனத்தை தடுக்க வழியுண்டு. அவையாவன
 
(1) இதில் அரசு ஒரு முக்கிய பங்காற்றுகிறது, அதாவது LGBT ஒழுங்கீனங்களை பெரும் பாவம் என்ற அடிப்படையில் தனி மனித தக்வாவை அதிகரிப்பதன் மூலம் தடுக்கலாம்.
 
(2) குழந்தை வளர்ப்பிலும், கல்வி முறையிலும் ஆண் மற்றும் பெண்ணிண் அடையாளங்களை மனதில் பதிவதற்கு இஸ்லாம் கட்டளை இடுவதன் வழியாகவும். ஆண்கள் பெண்களோடு கலப்பதை தடை செய்வதிலும், அதே போல் பெண்கள் ஆண்களோடு கலப்பதை தடுப்பதிலும்.
 
(3) இஸ்லாமிய ஷரீயா இளைஞர்கள் மற்றும் யுவதிகளை பிரித்து சமூக ஒழுக்க விதிகளை இவர்களுக்கு தருவதின் மூலம் மாறுபட்ட நடத்தைகள் உருவாவதில் இருந்து தடுக்கிறது.
 
(4) செக்ஸ் உணர்ச்சிகள் உந்தப்படுவதிலிருந்து பொது மக்கள் காக்கப்படுவதற்காக ஆபாசங்களை தடை செய்ய இஸ்லாமிய அரசுக்கு இஸ்லாம் கட்டளை இடுகிறது. அதே போல் LGBT ஒழுங்கீனங்களுக்கு இழுத்து செல்லும் வழிவகைகள் எதுவாகிலும் அதை முற்றிலுமாக தடை செய்ய கோருகிறது.
 
(5) மேலும் இஸ்லாம் இது போன்ற நோயினை ஏற்படுத்துகின்றவர்களுக்கு தண்டணையும் பரிந்துரைக்கிறது. மேலும் சமூகத்தின் சுழற்சியை உடைக்கக்கூடிய LGBTயை வேரறுக்க ஒரு பால் சேர்க்கையினருக்கு மரண தண்டணை வழங்குமாறு கூறுகிறது.
 
 நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,
 
“ எவரொருவர் லூத் சமூக மக்களின் செயலை செய்வதை காண்கிறாரோ, அக்குற்றவாளியை கொல்லட்டும்”
 
 ”Whoever you find committing the people of Lut, then kill the culprit”. [Tirmidhi: 1456, Abu Dawud: 4462, Ibn Majah: 2561 and Ahmad: 2727].
 
எவர் மரியாதையும் , கண்ணியம், ஒழுக்கமும் சமாதானமும் நிறைந்த ஒரு சுத்தமான சமூகத்தை விரும்புகிறாரோ அவர் இந்நாட்டில் இஸ்லாமிய ஷரீயாவை நிலை நாட்டப்படுவதையே கோரட்டும். மேலும் நபித்துவதின் வழிமுறையை பின்பற்றி கிலாஃபாவின் நிழலில் ஒரு புகழ்பெற்ற நாகரீகத்தை உருவாக்க முற்படுவோமாக.

ஜான் கெர்ரி – “சிரியாவில் நாங்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை”

கடந்த 19 டிசம்பர் 2015 சனிக்கிழமை அன்று அமெரிக்க அரசின் தலைமை செயலாளர் ஜான் கெர்ரி ரஷ்யா 1 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வாஷிங்டன் சிரியாவில் ஆட்சியை அகற்ற முற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது,:” இந்நாட்டின் அரசமைப்பை மாற்ற நாங்கள் முயற்சிக்கவில்லை” என்று வலியுறுத்தி கூறினார். மேலும் அவர் கூறுகையில் “அதாவது சிரிய அரசாங்கத்தின் அனைத்து அம்சங்களிலும் மாற்றம் வேண்டும் என்ற அர்த்தம் இல்லை மாறாக, சிரியாவில் உள்ள அரசு நிறுவனங்கள் அப்படியே இருக்கட்டும்” என்று கூறுகிறார்.

இந்த பேட்டி அமெரிக்காவின் நயவஞ்சகதனத்தை அப்பட்டமாக காட்டுகிறது: 18/8/2011ல் ஒபாமா கூறும்போது “அசாத் ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.” அசாதின் நாட்கள் எண்ணப்படுகின்றன: என்று கூறி பல செய்திகள் வெளியிடப்பட்டது.ஒரு அறிக்கையிலிருந்து மற்றொரு அறிக்கையாக தொடர்ந்து அமெரிக்க நிர்வாகம் பசாரின் குற்றங்கள் மன்னிக்க முடியாதது என்று சொல்லி வந்த நிலையில் , பல்வேறு அறிக்கைகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டும்,மேலும் மனித உரிமை அமைப்பின் சமீபத்திய அறிக்கையான “If the Dead Could Speak: the mass deaths and torture in Syrian prisons” 16 டிசம்பர் 2015 புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், “சிரியாவின் பல முகாம்களில் சித்திரவதை, துன்புறுத்தல்,பட்டினி சாவு மற்றும் நோய் ஏற்படுத்தும் காரணிகளுக்கான பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக கூறுகிறது”. அந்த அறிக்கையில் அசாதின் சிறை கொட்டடியில் சித்திரவதை காரணமாக பல ஆயிரக்கணக்கான சிறை கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மறுக்க முடியாத ஆதாரங்கள் பல அடுக்கப்பட்டுள்ளது.

வியன்னா மாநாட்டில் கடந்த 30/10/2015 அன்று எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு பிறகும், கொலைகார டமாஸ்கஸ் அரசு அப்பாவி பொதுமக்கள் மீது “நெருப்பு குழம்புகளை” வீசி வருகிறது . இதை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்தும் விதமாக அதன் கொலைகார கூட்டாளியான புதினும் பள்ளிகளிலும் , மருத்துவமனைகளிலும், முக்கிய சந்தைகளிலும் குண்டு வீசி தாக்கி மக்களை கொன்று வருகிறார். இதெற்கெல்லாம் பச்சை கொடி காண்பித்திருக்கிறது அமெரிக்கா. ஆனால் அது சோளக்கொல்லை பொம்மை “ISIS” யை , தவிர மற்றவைகளை ஒரு தீங்காகவே பார்க்கவில்லை. ஆனால் இதன் பிறகும் கெர்ரி கிரிமினல் தூதர்களையெல்லாம் அழைத்து ஒரு மிதமான எதிர்ப்பு படையை உருவாக்கி அரசு படைகளுடன் இணைத்து ISIS உடன் போரிட அழைக்கிறார்.

சிரிய மக்களுக்கு இத்துணை காயங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் ,கெர்ரி சிரியாவின் அரசு நிறுவனங்களை அமெரிக்கா பராமரிக்க விரும்புவதாக அறிவிக்கிறார். அவர் எதை “நிறுவனங்கள்” என்று அழைக்கிறார் தெரியுமா??? மனிதகுலத்திற்கு எதிராக சொல்லெனா குற்றங்கள் செய்து, ஸ்டாலின்,ஹிட்லர்,பினோச்சே அரசுகளை மிஞ்சிய கொடூரங்களை புரிந்த அமெரிக்காவின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் உளவுத்துறையையும் மற்றும் அதை சார்ந்த அரசு அமைப்புகளையே குறிப்பிடுகிறார்.

நிச்சயமாக, இஸ்லாமிய உம்மத்திற்கெதிராக அமெரிக்காவின் இந்த வெறுப்பும் வெளிப்படையான சதியையும் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட போவதில்லை. ஏனெனில், ஐரோப்பிய காலனித்துவ காலத்திலிருந்தே முஸ்லிம் நாடுகளின் மீது அமெரிக்காவிற்கு இருக்கும் பேராசை அதனை தொடர்ந்து வந்த அமெரிக்க அரசுகளிடமும் இருக்கிறது என்பது தெரிந்த ஒன்றுதான். எப்படி இருந்தாலும் கெர்ரியின் அந்த அறிக்கையோடு நாம் நின்று விடவில்லை. அதே அறிக்கையில் மேலும் அவர் “வியன்னா பேச்சுவார்த்தை ‘சிரியாவின் நெருக்கடிக்கு அரசியல் தீர்வே சரி’ என்ற ஒரே நிலைமைக்கு ரஷ்யா, அமெரிக்க மற்றும் இரான் ஆகிய நாடுகள் ஒன்றுபட்டிருப்பதை காட்டுகிறது” என்று கூறுகிறார். குப்ரின் தலைமை பீடமான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் புனிதமற்ற கூட்டணியை ஏற்படுத்திய ஈரானின் தலைவர்களை வாழ்த்துகிறோம். ஷாமின் புரட்சியை ஒடுக்குவதற்காக மிகப்பெரிய ஷைத்தானுக்கு உதவி செய்ய முயலுவதின் மூலம் எங்களை ஏமாற்றி நீங்கள் தோற்று விட்டீர்கள் என்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

எவரெல்லாம் ரியாத், இஸ்தான்புல், ஜெனிவா, வியன்னா மற்றும் நியூயார்க் பேச்சுவார்த்தைகளுக்கு நோக்கி விரைந்தீர்களோ அவர்களுக்கு கூறி கொள்கிறோம்: உலக காலனியாதிக்க தலைவர்களின் பின்னால் மூச்சிரைக்க நீ ஓடுவது குறித்து உனக்கு வெட்கமாக இல்லையா??? முக்கியமாக அமெரிக்காவின் பின்னால்.. அதாவது எந்த நாடு பாத் கட்சியினரின் , தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் காலத்திலும்இருந்த நுஸைரி அரசின் குற்றங்களை மூடி மறைத்ததோ அந்நாட்டின் பின்னால்? மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரிடமும் போர் தொடுத்து கொண்டிருக்கும் ஐநாவிடமா இன்னும் முட்டாளாகி கொண்டிருக்கிறாய்??? அது இன்னும் சிரிய மக்களுக்கு அல்லது முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு சிறந்ததை வழங்கும் என்று எதிர்பார்க்கிறாயா?? உங்கள் எவரிடமும் சிறிதளவு நன்மை இருக்குமானால் அமெரிக்காவின் கயிற்றை விட்டு விட்டு அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடியுங்கள், ஆனால் எவர் அமெரிக்காவை திருத்திபடுத்த வேண்டும் என்று முற்படுகிறாரோ அவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெருத்த ஏமாற்றத்தையும் கேவலத்தையும் அடைவார் என்பதே இறுதி முடிவாக இருக்கும்.

8:36 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَـنَّمَ يُحْشَرُوْنَۙ‏

8:36. நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் – முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.