Sep 10, 2016

எனது ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்கினிய சகோதரர்களே!

நமது இஸ்லாமிய மறுமலர்ச்சி இணையதளம் 7 ஆண்டு பணியை நிறைவு செய்து, 8 ஆம் ஆண்டு இணையப் பணியில் கால் எடுத்து வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.


இன்ஷா அல்லாஹ்... விரைவில் islamicuprising.blogspot.com என்ற முகவரியில் செயல்படும் இந்த இணையதளம் www.islamicuprising.com என்று செயல்பட இருக்கிறது.

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாளை கொண்டாட இருக்கும் உறவுகளை ISLAMIC UPRISING BLOG வாழ்த்துகிறது: ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் நாளாகும். அதேவேளை ஹஜ் கடமையானது ஒரு சர்வதேச மாநாடாகவும் அமைந்திருக்கின்றது.

ஹஜ் என்ற சர்வதேச மாநாட்டில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம் உம்மாவின் உறுப்பினர்கள் மக்காவில் ஒன்றுகூடி ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றனர். இன , மொழி, நிற , பிரதேச , தேச வேறுபாடுகள் புறக்கணித்து ஒரே விதமாக ஒரேநேர காலத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்தபடி தம் கடமையை நிறைவேற்றுகின்றார்கள். இவைகள் முஸ்லிம் உம்மாவிற்கு ஒன்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் கற்றுகொடுக்கின்றது. இவற்றை நினைவில் கொண்டு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட உங்கள் அனைவரையும் Islamicuprising.blogspot.com
வாழ்த்துகின்றது.

Sep 7, 2016

10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகள் கஷ்மீர் மக்கள் மீ்து பிரியோகித்துள்ளது

கஷ்மீரில் 10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகளை மக்கள் மீ்து பிரியோகித்துள்ளதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
 
உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு ஆறு லட்சம் ராணுவ படையை இரக்கி இந்திய அரசு கஷ்மீரை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அது மட்டுமின்றி கஷ்மீர் மக்களின் மீது ஆயுதங்கள் பிரயோகிப்பதும் எப்போதையும் வீட கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளது (பாகிஸ்தான் செய்தி நிறுவனம் – தி நியூஸ்)
 
கடந்த 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட் குண்டுகளை சாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரயோகப்படுத்தியதாக இந்திய துணை ராணுவம் ஜம்மு-கஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன் ஒப்புக் கொண்டுள்ளது.
 
மேலும் அந்த அறிக்கையில் 8000 கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் 2000 பிளாஸ்டிக் பெல்லட் குண்டுகளும் பிரயோகித்துள்ளதாக  குறிப்பிடபட்டுள்ளது.
 
சாமானிய முஸ்லிம்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பலபயங்கர இன்னல்களையும், அச்சுருத்தல்களையும் சந்தித்து வரிகின்றனர் எனினும் முஸ்லீம் நாடுகளின் ராணுவம் தங்களது இருப்பிடங்களைவிட்டு  நகருவதில்லை..
 
 
 
செய்தி பார்வை 20.08.16

ஏமன் மீதான போர்

ஏமன் மீதான போரில், சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைப்பதாக அறிவித்துள்ளது.
 
ஒபாமாவின் யுக்தியை அமெரிக்கா தொடர்கிறது, தொலைவிலிருந்து போர்களை இயக்கும் அந்த யுக்தியின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களை அமெரிக்கா குறைத்துள்ளது. (செய்தி – ரியுடர்ஸ்)
 
கூட்டுப்படை போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல், உளவு செயதிகள் பரிமாற்றம் போன்றவற்றை சவுதி அரேபியாவோடு ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு “ஜாயின்ட் கம்பைன்ட் பிளானிங் செல்” என்ற செயல்திட்டதை தொடங்கியது, இதில் தற்போது ஐந்திற்கும் குறைவானவர்களே பனியமர்த்தபட்டுள்ளார்கள் என்று அமெரிக்காவின் கடற்படையின் செயதிதொடர்பாளர் லெஃப்டினன்ட்  இயன் மேக் கன்னகெய் பஹ்ரைனில் ரியுடர்ஸ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இந்த பணிக்காக சவூதி தலைநகர் ரியாத் உட்பட பல இடங்களில் ஆமாரத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 45 லிருந்து 5 ஆகா குறைக்கப்படுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வாறு அமெரிக்க ராணுவத்தினர்களின்ண் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் ஏமனில் தொடுக்கப்படும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. இது தொடர்பாக குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தீர்வின்றி முறிவுற்றதால் ஏமன் மீதான சவுதியின் தாக்குதல் தீவிரமடயக்கூடும்.
 
முஸ்லீம் நாடுகளில் அமெரிக்கா நேரடியாக் இறங்கி போர் புரியும் நம்பிக்கையை இழந்துவிட்டது, அதனால் மற்ற தோழமை நாடுகளின் உதவியின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருகிறது. அமெரிக்காவின் இந்த நிலமையை எப்போது உலகம் கண்டறிந்து புரிந்துகொள்ளும்?
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பு

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பை அமெரிக்கா வழங்குகிறது.
 
இஸ்லாம் மற்றும் முஸ்லிம் மகளுக்கு எதிராக சிரியாவில் நடந்துவரும் போரில் அமெரிக்கா தனது திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது, ஏதாவது ஒரு வகையில் தனது அதிகார வரம்பை மீறி செயல்கள் போகும் பட்சத்தில் அமெரிக்கா தனது படையை உபயோகிக்க தயராகவுள்ளது. ( செய்தி – 19/8/2016  தி நியூயார்க் டைம்ஸ்)
 
குர்து போராளிகள் சிரியாவின் வடகிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இவர்கள் அமெரிக்காவுடன் இனைந்து ISIS ஐ எதிர்த்துவருகிறார்கள். சிரியாவின் பஷார் அல் அசாத் அரசின் விமானம் குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தாக்கியதை கண்டித்து அமெரிக்கா உடனடியாக தனது விமானத்தை அந்த நிலப்பரப்பின் மேல் பரக்க செய்து குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பென்டகன் செய்தி தெரிவித்துள்ளது. சிரியாவின் பஷார் அரசுக்கும், குர்து போராளிகளுக்கும் இடையே அவ்வப்போது சில சிறிய மோதல்கள் நடந்துள்ளதே தவிர இவ்விருவருக்கும் இடையே பெரிய அளவிலான போர் நடைபெறாத நிலையில் இந்த விமான தாக்குதலை சிரியா அரசு குர்துகள் மேல் தொடுத்துள்ளது.
 
அமெரிக்கா இது போன்ற உதவிகளை சிரியாவில் உள்ள மற்ற எந்த போராட்ட குழூக்களுக்கும் வழங்கவில்லை, இஸ்லாமிய போராட்ட குழூக்கள் அமெரிக்காவின் செயல் திட்டங்களை ஏற்கமருப்பதாலும் இஸ்லாத்தைமையமாக வைத்து செயல்படுவதாலும் அந்த போராட்ட குழுக்களுக்கு எதிராகவே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வி

 
சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வியை அடுத்து  ரஷ்யா, முஸ்லிம்களுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது .
 
 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவதாள் அலெப்போவில் ஏற்படுத்தப்பட்ட முற்றுகையை அங்குள்ள பல இஸ்லாமிய போராட்ட குழுக்கள் இனைந்து உடைத்தார்கள். இதில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து ரஷ்யா மதியதரைகடலில் நிறுதிவைத்துள்ள போர்க்கப்பல் மூலமாகவும், ஈரனிலுள்ள விமானதளத்தை பயன்படுத்தி  விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் தனது தாக்குதலை சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது.
 
சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காக போராடும் முஸ்லிம்களை எதிர்த்து முதல் முறையாக ரஷ்யா போற்கப்பல் மூலம் ஏவுகணை தாக்குதலை தெடுத்துள்ளது.
 
இது போன்ற பலமுனை தாக்குதல் நடவடிக்கையை  மேற்கொள்வதன் மூலம் ரஷ்யா தனது ராணுவ திறனை நிரூபித்து சிரியாவில் தனது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது. இதற்கு முன் சிரியாவில் லடாகியவில் உள்ள தனது ராணுவதளத்திலிருந்தும், காஸ்பியன் கடலில் நிறுத்தி வைத்துள்ள போர்க் கப்பல்கள் மூலமும் சிரியாவின் கொடுங்கோல் அரசுக்கு ஆதரவாக அங்குள்ள முஸ்லிம்கள் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கூடுதலாக மத்திய தரைகடலில் நிறுதிவைத்துள்ள  போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள் மூலமும், ஈரானின் விமான தளங்கலில் இருந்து போர் விமானங்களை பயன்படுத்தி குண்டுமலைகலை பொழிந்தும் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் முழு அனுமதியின் பெயரில் நடந்துவருகிறது, சிரியாவில் இஸ்லாத்திற்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க ஈரானின் ராணுவதளத்தை ரஷ்யா பயன்படுத்தும் அளவிற்கான ஒரு சுமூக போக்கையும் அமெரிக்கா அனுமதித்துள்ளது.
 
சிரியாவில் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா ஒருபுறம் அமெரிக்காவின் கொள்கைக்கு இணங்க செயல்படுவதால். கிரிமியா தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு வழிவிட்டுள்ளது
 
 உக்ரைனுடைய எல்லைகளுக்கு அருகில் பத்தாயிரம் வீரர்களை உள்ளடக்கிய ரஷ்யபடை நகர்த்தப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை, மேலும் பென்டகனோரஷ்யாவின் இந்த நகர்வை வழக்கமான பயிற்சி நடவடிக்கை தான், அதனால் உக்ரைனின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.
 
 
செய்தி பார்வை 20.08.16

Sep 6, 2016

கிலாஃபத் ஜனநாயக அமைப்பையோ அல்லது சர்வாதிகார அமைப்பையோ கொண்டதாக இருக்குமா?

இஸ்லாமிய அரசு இவை இரண்டையும் கொண்டிருக்காது.  மேற்கத்திய காலனியாதிக்க சக்திகள் தேர்தல் முறைதான் ஜனநாயகம் என்று தொடர்பு படுத்திவிட்டார்கள், ஆனால் இந்த விஷயத்தின் உண்மை நிலை அதுவல்ல. கிலாஃபத்தில் கலீஃபா உட்பட பல்வேறு பதவிகளுக்கு நபர்களை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெறும், ஆனால் இவர்களில் ஒருவருக்கு கூட ஜனநாயகத்தில் இருப்பது போன்று தனி நபராகவோ அல்லது ஓரு கூட்டாகவோ சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்காது. அஃதாவது இது மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அதே சமயம் அவர்களால் ஷரீ’ஆவிற்கு மாறுபட்டு ஆட்சியாளர்கள் எவ்வித விசாரணைக்கும் தண்டனைக்கும் ஆளாவதிலருந்து விடுவிப்பது போன்ற கறைபடிந்த சட்டங்களை அவர்களால் இயற்ற முடியாது என்பதை விளக்குகின்றது. 6
நடைமுறை உபயோகத்தில், சர்வாதிகார ஆட்சி அமைப்பு என்பது அதன் தலைமையை சட்டமோ, அரசியல் அமைப்போ அல்லது இதர உள்நாட்டிலுள்ள சமூக மற்றும் அரசியல் காரணங்களும் அதன் வரையறைக்கு  கட்டுப்படுத்தாத ஒரு ஏகாதிபத்திய தன்மையுடையதை குறிக்கின்றது. இது இஸ்லாமிய சட்டத்திற்கு மாற்றமானதாக இருக்கின்றது ஏனெனில் கலீஃபா தனது செயல்பாடுகளை சில வரையறைக்குள் அமைத்து கொள்ளும்படியும் அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதை சரிகாணும் செயல்பாட்டை கொண்டிருக்கும் அது அவரின் அதிகாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும். கலீஃபா சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார், அவரும் மற்ற எல்லா குடிமக்களை போன்று அதற்கு கட்டுப்பட்டவராகவே இருப்பார்.
 
http://sindhanai.org/

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குறை கூறியதால் பாகிஸ்தான் அதிர்ப்தி

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குற்றம் சாட்டியதால் பாகிஸ்தான் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய அரசை நிலைபெரச்செய்வது குறித்த பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த குற்றச்சாட்டால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை மற்றும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொல்வதாகவும், மற்ற தீவிரவாத அமைப்புகளான ஹக்கானி குழு உட்பட பல குழுக்களுக்கு அது அடைக்கலம் அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. (செய்தி – வாய்ஸ் ஆப் அமெரிக்கா)
ஒபாமா அரசு, மாணிய அடிப்படையில் பாகிஸ்தானுக்கு விற்கவிருந்த F 16 போர் விமான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அண்மையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் “பாகிஸ்தான் நட்பு நாடா அல்லது எதிரி நாடா” என்ற தலைப்பில் நடந்த விவாதம் பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய ஆப்கனிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கிவரும் ஹாக்கணி, தாலிபான் போன்ற குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. ஆகையால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துவரும் பொருளாதாரம் மற்றும் இராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை பதிவுசெய்தனர்.
ஆப்கனிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதரான ஸல்மே கலில்ஜாத் அமெரிக்கா, வட கொரியாவை கையாளுவதை போல் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஆப்கனிஸ்தானில் தனக்கு சாதகமான நாடவடிக்கைகளை சாதித்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனினும் பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறிய பிரிவினரால் எழுப்பப்பட்ட அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறிவிட்டனர். (செய்தி – பிஸ்னஸ் ரேகார்டர்)
செய்தி கண்ணோட்டம்:
அமெரிக்காவின் குற்றச்சாட்டால் பாகிஸ்தான் ஆச்சரியபடவோ, அதிருப்தி அடையவோ ஒன்றும் இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரை, ஆசியாவில் தனது முதன்மை ஏஜென்டாக இந்தியாவை நிலைநிறுத்த பாகிஸ்தானை பணயமாகவே பயன்படுத்துகிறது. மேலும் பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் நாடு என்பதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் இஸ்லாமிய அரசான கிலாபா நிறுவப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டவாறே அமெரிக்கா செயல்படுகிறது.
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்

“மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்”
மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் இரண்டு முஸ்லிம் பெண்கள் மத்திய பிரதேசத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அப்பெண்களிடம் அதிக அளவிலான மாட்டு இறைச்சி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பெண்களை கைது செய்யும் தருணத்தில் ஒரு கும்பல் அவ்விரு பெண்களையும் “கோமாதா வாழ்க” என்ற குரலோடு காவல் துறை முன்னிலையில் தாக்கினார்கள் (NDTV செய்தி அறிக்கை).
மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்ஸுர் ரயில் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியிலும், NDTV செய்தியிலும் ஒளிபரப்பானது . காவல் துறையினர் அந்த பெண்களிடம் பறிமுதல் செய்த இறைச்சியை சோதனை செய்ததில் அது பசு இறைச்சி அல்ல எருமை மாட்டின் இறைச்சி என்றும் தெரிய வந்தது . ( இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி)
ஆனாலும் அப்பெண்களிடம் தகுந்த உரிமம் இல்லாததால் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் இந்து மக்கள் பசு மாட்டை புனிதமாக கருதுகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் பசுவை அறுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
சென்ற மாதம் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் பசுவை அறுத்ததாக கூறி 4 தலித் இனத்தை சேர்ந்தவர்களை ஆடைகளை அவிழ்த்து காரில் கட்டிவைத்து ஒரு இந்து கும்பல் கடுமையாக தாக்கியதால் தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி கண்ணோட்டம்:
இந்திய அரசியல் வாதிகள் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறி பெருமை கொள்கின்றனர். ஆனால் உண்மையோ இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமக்களாக தான் கருத படுகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்து வெறியர்களால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கையால் முஸ்லிம்கள் வரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14.4% சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் இருகின்றனர், ஸச்சார் அறிக்கை படி 31% சதவிகித முஸ்லிம்கள் அதாவது மூன்று முஸ்லிம்களில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறுகின்றது..
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர் வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக் கூடாது

“ஐரோப்பாவிற்கு முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர்வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக்கூடாது என்று டச்சு (நெதர்லாண்டு) வலதுசாரி தலைவர் கீர்ட் வில்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்”.

சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளின் ஒருவர் ISISயின் பெயரால்- அண்மையில் ஜெர்மனியிலுள்ள அன்ஸ்பாக் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலையொட்டி, நெதர்லாண்டின் சுதந்திர கட்சியின் தலைவரான கீர்ட் வில்டர்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருப்பது தீவிரவாதிகள் நுழைவதற்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கிறது என்று கூறி நெதர்லாண்டின் பிரதமர் மார்க் ரூட் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சென்ற மாதம் அமெரிக்க ஊடகத்தில் (Breitbart) வெளிவந்த கட்டுரை ஒன்றில் வில்டர்ஸ் கூறுகையில், முஸ்லிம்கள் இஸ்லாத்தை புறம் தள்ளுமாறும், மேற்குலகின் சுதந்திரப்போக்கை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவர் அக்கட்டுரையில் குறிப்பிடுகையில் ‘இஸ்லாம் சர்வாதிகார போக்கை கொண்ட மார்க்கம், அதன் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளானவர்கள் தான் முஸ்லிம்கள்.

மேலும் அக்கட்டுரையில் அவர் எழுதுகையில், முஸ்லிம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரின சேர்க்கையாளராக மாறுவதை பற்றி சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பெண், முஸ்லிம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய முன் வருவதற்கு கற்பனை செய்ய வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்துவத்திற்கோ, வேறு மதத்திற்கோ அல்லது இறைமறுப்பாளராகவோ மாற முன் வர வேண்டும்.

இது போன்று முஸ்லிம்கள் சிந்திக்க தொடங்கினால் அது அவர்களுக்கு மட்டுமன்றி மேற்கத்திய கலாச்சாரத்தின் நலனிற்கும் உகந்ததாகும்.

முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமிய மார்க்கத்திற்கு புறமுதுகு காட்டி விட்டு, கிறிஸ்துவராகவோ, இறை மறுப்பாளராகவோ அல்லது வேறு கொள்கைகளை நோக்கி விரைய வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்கள் தங்களை இஸ்லாம் மற்றும் முஹம்மதின் கடிவாளத்திலிருந்து விடுவித்து கொள்வதே அவர்களுக்கு சிறந்ததாகும். இவ்வாறு வில்டர்ஸ் தனது கட்டுரையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்தை பதிவு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நெதர்லாண்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தேர்தலுக்கான கருத்து கணிப்பில் இவர் முன்னிலையில் உள்ளார். இவர் வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி மற்றும் வலதுசாரிகளின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கை கையாளுபவர் என்பது பலரும் அறிந்ததே.

வில்டர்ஸ்யின் எழுத்தில் 2008 ஆம் ஆண்டு ‘பித்னா” எனும் ஆவணப்படம் வெளிவந்தது அதில் இஸ்லாத்தையும், குர்ஆனையும் தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்தது முஸ்லிம்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

செய்தி கண்ணோட்டம்:

முஸ்லிம்கள் இஸ்லாத்தை முழுமையாக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்ற முயல்வதும், அதை நிலைநிறுத்தும் உண்மையான இஸ்லாமிய அரசான கிலாபாவை நோக்கி முயற்சிகள் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாததால் இஸ்லாத்திற்கெதிரான இவர்களது கருத்துக்களும், செயல்பாடுகளும் அப்பட்டமாக வெளிபடுவதை காணமுடிகிறது. போர் காரணமாக முஸ்லிம்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதை தடுக்கும் வகையிலான இவரது கருத்துக்கு ஐரோப்பியர்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது.

http://sindhanai.org

செய்தி பார்வை 29.07.16



அலெப்போவின் விளக்கம் தரும் தருணம்

2012 ல் சிரியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக நகரத்தை புரடசி படைகள் வெற்றி பெற்று கைப்பற்றியது, இத்தருணத்தில் அது ஒரு தூரத்து கனவாக இருக்கின்றது. அலெப்போ மாகானத்தின் பெரும் பகுதியையும் அதே பெயரை கொண்ட அதன் தலைநகரத்தையும் கைப்பற்றியது அசாதிற்கு மாற்று சக்தியாக விளங்கும் ஒரு எதிர்ப்பை நிறுவ எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இது மேலும் அரசாங்கத்தின் பின்னடைவை வேகப்படுத்தியுள்ளதோடு அதன் வசமிருந்த பகுதிகளை இழக்க செய்துள்ளது இதன் காரணத்தா் அல்-அசாத் சிரியாவின் வட பகுதியை மீளும் முயற்சியை கைவிடும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால் இன்று இந்நாட்டில் நடைபெற்று வரும் போர்களில், அலெப்போவிற்கான போரே மிகப்பெரியதும் மற்றும் வெற்றியை முடிவு செய்யும் ஆற்றலுடைய உறுதியான போராகும் அது இப்போது விளக்கும் தருணத்தை அடையும் நிலையை எட்டியுள்ளது. அசாத் மற்றும் புரட்சியாளர்கள் இவ்விரு தரப்பினரும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர் ஒரு தீர்க்கமான ராணுவ வெற்றியின் மூலம் அசாத் தனது நிலையை உறுதி படுத்த விழைகிறார். அதே வேளையில் புரட்சியாளர்கள் தங்களது நோக்கம் நிலைத்திருக்க போராடுகிறார்கள். ஒரு வேளை அலெப்போவை இழந்து விட்டால் அதன் பிறகு அல்-அசாதிற்கு எதிராக எந்தவொரு ராணுவ வெற்றியை பெறுவது என்பது புரட்சியாளர்களுக்கும் சிரிய மக்களுக்கும் ஒரு நெடிய கனவாக ஆக்கிவிடும். அதே சமயம் அல்-அசாதிற்கு 10 மாதத்திற்கு முன்பு கவிழும் நிலையிலிருந்த தனது ஆட்சிக்கு புத்துயிர் ஊட்டியது போல் ஆகிவிடும்.


2016 ஜூலை 17ம் நாள் அன்று அசாதின் படைகள், ஈரானிய படைகள், ஹிஸ்புல்லாவின் வீரர்கள் ரஷ்ய விமானப்படை மற்றும் இதர புரட்சிப்படைகளின் உதவியோடு புரட்சியாளர்களின் கட்டுப்படாட்டில் இருந்த அலெப்போவின் கிழக்கு பகுதியில் இருக்கும் கடைசி தொடர்பு சாலையான கேஸ்டெலோ சாலையை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் இச்சாலை 2012ம் ஆண்டு முதல் புரட்சியீளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதுவே ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை கொண்டு செல்ல மீதமிருந்த ஒரூ பாதையாகும்.[1] அல்-அசாதின் படைகள் இப்போது புரட்சியாளர்கள் கடைசியாக தங்கள் கைவசம் வைத்திருந்த பலம் பொருந்திய பகுதயான அலெப்போ நகரத்தின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டு சுற்றி வளைத்துள்ளனர், அந்த மக்களுக்கு உணவு கிடைக்காமல் செய்தும் அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் செயலை செய்து அவர்களை தண்டிக்க ஆரம்பித்துள்ளனர். அலெப்போ நகரத்ரிற்கு எதிரான அல்-அசாதின் ராணுவ நடவடிக்கை 2015 அக்டோபர் மாதம் தொடங்கியது இது ரஷ்ய தலையீடு நிறுத்தப்பட்ட பின்னரும் லட்டாக்கியா மற்றும் இத்லிபிலிருந்து புரட்சியாளர்களை பின்னோக்கி செலுத்தியதை அடுத்து நிகழ்ந்தது. ரஷ்ய ஆகாய சக்தி மற்றும் ஈரானிய தலைமை மற்றும் ஷிஆ புரட்சிப்படைகளின் உதவியை கொண்டு அலெப்போ மற்றும் இத்லிப் மாகாணங்களில் பன்முனை தாக்குதல் நடத்தியதில் எதிரணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியதோடு அவர்களை அளவுக்கு அதிகமாக தங்களது எல்லைகளுக்கு அப்பால் இழுக்க முடிந்தது. எதிர் படையினரை நகரப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி ஒரு தீர்க்கமான முடிவு தரக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு அந்நகரை சுற்றி வளைக்க சூழ்நிலைகளை தோதுவாக அமைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள அலெப்போ நகரத்தில் உள்ள கிராம பகுதிகளில் நடைபெற்றது. ரஷ்ய விமானப்படையும் ஈரானின் மனித வளமும் பஷார் அல்-அசாத் அலெப்போ நகரத்தை அனைத்து புரத்திலும் முழுமையாக சுற்றி வளைக்க வைத்தது.

சர்வதேச சக்திகள், இவர்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, இவர்களும் புரட்சியாளர்களை பணிய வைக்க அதே போன்று தாக்குதல் நடத்தி படுகொலைகள் செய்தனர். ஜூலை 18ம் நாள் அமெரிக்க போர் விமானங்கள் மன்பிஜ் நகரத்தை அடுத்து ரத்தம் வழியச்செய்யும் ஒரு படுகொலையை நிகழ்த்தியது, இதில் 20 அப்பாவி குடிமக்கள் உயிரிழந்தனர் மேலும் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.[2] அதற்கு அடுத்த நாள் பிரஞ்சு போர் விமானங்கள் நீஸில் நடந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக மன்பிஜ் நகரின் வடக்கே உள்ள டவ்கான் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தியது, இந்த உதிரம் வழியும் படுகொலை தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர் சில இடங்களில் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[3] ஜூலை 23ம் நாள் ரஷ்யாவும் அலெப்போவை சுற்றி பல இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தி குழந்தைகள் உட்பட 70 நபர்களை கொன்று குவித்தது. அனைத்து பயங்கர தாக்குதல்களும் பல உயிர்களை பலி கொண்டும், பெருமளவிலான உடமைகள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியும் இதன் காரணமாக இடர்பாடுகளுக்கு மத்தியில் சிக்கி இருந்த பிரேதங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியை சிரமமாக்கியது. புரட்சி்ப்படையினரின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அலெப்போவின் கிழக்கு பகுதியில் அவர்களை சுற்றி வளைத்து அவர்களின் மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

பலதரப்பட்ட எதிராளிகள் மற்றும் புரட்சிப்படையினருடன் அரசு கொண்ட அமைதி ஒப்பந்தம் அலெப்போவில் துவம்சம் செய்வதற்கான ஒரு முன் ஏற்பாடாக அரசு சரியாக பயன்படுத்தி கொண்டது. அனைத்து போர் நிறுத்த ஒப்பந்தங்களும் சிரிய பிரட்சியின் ஆரம்பத்திலிருந்து அரசு அதை பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை விரிவாக்க செய்தது பின்பு அந்த ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை முழுமையாக உதாசீனப்படுத்தியது. ஏப்ரல் 2012ல் நடைபெற்ற கோஃபி அன்னன் போர் நிறுத்த ஒப்பந்தம், அக்டோபர் 2012ல் ஈத் அல்-அழ்ஹாவில் நடைபெற்ற லக்தார் பிராஹிமி போர் நிறுத்த ஒப்பந்தம், ஜனவரி 2014ல் நடைபெற்ற பர்ஃஜா சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் செப்டம்பர் 2014ல் நடைபெற்ற காபூன் சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் போன்று 2011லிருந்து அல்-அசாத் பல்வேறு போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பின்பு அதை மீறி உள்ளார். ஜபாதானி போர் நிறுத்த ஒப்பந்தமானது அதில் கையொப்பமிட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்று நிபந்தனை கொண்டிருந்தது மற்றும் அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தமும் அவர்களை இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்கிற நிபந்தனை கொண்டிருந்தது. இதேபோல் ஃஜபாதானி மற்றும் மதாயா போர் நிறுத்த ஒப்பந்தங்களின் படி மக்கள் இத்லிபிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. டிசாம்பர் 2015ல் நடைபெற்ற அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தம், எதிர்ப்பாளர்களின் துப்பாக்கி ஏந்திய வீரர்களை அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேறி இத்லிப் நோக்கி செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதக்கப்பட்டது, இதன் மூலம் ஹோம்சில் சண்டையிடுவதை நிறுத்தி புரட்சியின் தொட்டிலை முழுமையாக மீண்டும் அசாதிடம் ஒப்படைக்கும் விதமாக இருந்தது. எதிர்ப்பாளர்கள் மற்றும் பல அமைப்புகள் இத்லிபில் இருந்த காரணத்தினால் இந்த பகுதியில் ரஷ்ய விமானப்படைகளால் பலமாக தாக்கப்பட்டு அல்-அசாத் அரசு அந்த புரட்சியாளர்களுக்கு மரண அடி கொடுக்கவும் அலெப்பாவிற்கான பாதையை திறந்து வைக்கவும் வழிவகை செய்தது, இதன் மூலம் அரசை அந்த மக்களை சுற்றி வளைக்க செய்தது. இந்த அமைதி ஒப்பந்தம் என்பது புரட்சியாளர்கள் தரப்பிலிருந்து நிகழ்ந்தப்பட்ட ஒரு பெரிய தவறாகும் இது இறுதியில் அரசுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது.

ஜூலை 31ம் தேதி கிட்டத்தட்ட 20 பெரிய புரடசி குழுவினர், அலெப்போவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முற்றுகையை முறிக்கும் எண்ணத்தில் தாக்குதலை தொடங்கினார்கள். அது அதன் நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றாலும், இந்த தாக்குதல் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது மேலும் இதன் மூலம் போராட்டக்குழுவினர் இடையே உள்ளுக்குள் ஒற்றுமையாக இருப்பது இன்றியமையாதது என்ற கண்ணோட்டத்தை உறுதிபடுத்தும். அனால் வெளிப்புற உதவி இல்லாதது கூடுதல் படைகள் இல்லாதது அலெப்போவில் தங்கள் உயிருக்காக போராடுபவர்கள் அந்த கணக்கிடும் தருணத்தை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. சில அமைப்புகள் துருக்கி, சவூதி அரேபியா, கத்தர் மற்றும் அமெரிக்காவிடம் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகள் பெற்றிருந்தாலும் இந்த உதவிகள் அரசுக்கு எதிரான போரில் ஒரு நல்ல மாற்றத்தை தரக்கூடிய அளவிலான ஆயுத உதவி அவர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை. புரட்சியாளர்களின் தற்காப்பை பலவீனப்படுத்துவதிலும் அலெப்போவில் தற்பொதைய சுற்றி வளைப்பிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ. ம் முக்கிய பங்கு வகித்தது. புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அலெப்போவை கைப்பற்றவும் இத்லிபில் முன்னேற்றம் அடையவும் ஐ.எஸ்.ஐ.எஸ். பலமுறை முயன்றது. அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்ந்து தோற்றிருந்தாலும் புரட்சியாளர்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது, 7000 வீரர்களை அது இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.[4] சிரியாவின் வட பகுதியில் உள்ள போராட்ட குழுவினர் கிழக்கிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் தாக்குதலையும், தெற்கிலருந்து நடத்தப்படும் அரசின் தாக்குதல்களையும் மற்றும் நாட்டின் அனைத்து திசையிலிருந்து ஈரானிய புரட்சிப்படையினருடன் சேர்ந்து ரஷ்யா தொடுக்கும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது இங்கு நடத்தப்பட்ட முற்றுகையின் காரணமாக ஒரு மாதம் காலம் தொடர்ந்து நடந்த போரினால் அவர்களின் தாக்குதல் திறனில் பலவீனத்தை ஏற்படுத்தியது.

அலெப்போவிற்கான போராட்டம் மற்றும் அதன் விளைவு சிரிய புரட்சியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். அல்-அசாதின் படைகள் கடந்த 5 ஆண்டுகளில் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது, ஆனால் அதற்கு அந்நகரங்களை தக்க வைத்துக்கொள்ளவதை விட அதற்கு அந்நகரங்களை கைப்படுத்துவது எளிதாக இருந்தது மேலும் அது கைப்பற்றிய அலெப்போ நகரை தக்கவைத்துக் கொள்ள அதற்கு ஒரு நகரத்தில் பிரச்சினை இருப்பது அதற்கு தேவை படுகிறது, அது புரட்சியாளர்களை வலுப்படுத்துவதற்காக வேண்டி பாடுபடும. இந்த புரட்சி ரஷ்யாவில் நடந்தது போன்று ஸ்டாலின்கார்ட் stalinguard தருணத்தை அடைந்துள்ள காரணத்தால் அலெப்போவிற்கான போராட்டம் நிச்சயமாக சிரியாவிலுள்ள மக்கள் ஒரு உண்மையான மாற்றத்தை கோரும் வண்ணம் நிச்சயமாக ஒரு தீர்வை தரும் வண்ணம் அமைந்திருக்கும்.

Reference : http://www.revolutionobserver.com/2016/08/aleppos-moment-of-reckoning.html



http://sindhanai.org/