Showing posts with label ஈராக். Show all posts
Showing posts with label ஈராக். Show all posts

Jul 11, 2016

இராக் மீதான டோனி பிளேரின் போர் நியாயமற்றது: சில்காட்



சதாம் ஹுசைனிடம் இருந்து பிரிட்டனுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லாத நிலையில், அமைதி வழிக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி முடிக்காமலே பிரிட்டிஷ் அரசாங்கம் 2003 ஆம் ஆண்டில் இராக் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இணைந்ததாக அந்த போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
தவறான உளவுத்தகவல்களின் அடிப்படையில் இராக் மீது போர் தொடுக்கும் கொள்கைமுடிவு எடுக்கப்பட்டது தெளிவாகியுள்ளதாக சர் ஜான் சில்காட் தனது விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளார்.
அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தனது முக்கிய கூட்டாளிகளுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அமெரிக்காவுடன் சேர்ந்து இராக் மீது போருக்கு போனதாகவும் அந்த விசாரணை அறிக்கை கூறியுள்ளது.

பிரிட்டன் அரசியலில் முக்கிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சில்காட் விசாரணை அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கும் காணொளி.

BBC

May 2, 2016

அமெரிக்கா சிரியாவிற்கென செயற்திட்டம் கொண்டுள்ளதா?


 

சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள்  தங்களுக்கு இந்த விஷயம் முக்கியமற்றது எனவும் தங்களுக்கு அந்த நாட்டிற்கென எந்தவொரு செயற்திட்டமும்  இல்லை எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் அன்மையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  ஜெர்மனியில் ஜூன் 8ம் தேதி நடந்த எழுவர்(7) குழு (G7) உச்சி மாநாட்டில் ஒரு செய்தி அறிவப்பின்போது இவ்வாறு கூறினார்: “பயிற்சியளிப்பதையும் உதவி புரிந்து வருவதையும் அமெரிக்கா தொடர்ந்து செயல்படுத்தும்,” என கூறி அதன் பின்னர் “எங்களிடம் இன்னும் ஒரு முழுமையான செயற்திட்டம் இல்லை” என ஒப்புக்கொண்டார்.[1] அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரும் ஜான் கெர்ரியும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ எதிர்கொள்ள ஒரு முழுமையான செயற்திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என அறிவித்துள்ளனர்.  அமெரிக்காவின் சிரியா மற்றும் ஈராக்கின் நோக்கத்தை மேலும் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய அளவு வெளிதோற்றத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பெருமளவு சக்தியுடையதாக தோற்றம் அளித்தாலும், உண்மையில் அமெரிக்க அதிகாரிகள் அவர்களுடைய செயற்திட்டத்தை வெளி உலகிற்கு தெரிவிக்காமல் இருக்கின்றனர் இது அவர்களுடைய உண்மையான செயற்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு கால அவகாசம் எடுத்து கொண்டிருக்கின்றனர், இந்த உண்மை சிரியா எனும் அரங்கில் பங்கு கொண்டிருக்கும் அனைவருக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் நமக்கு தெரியவரும்.

பஷார் அல்-அசாதின் அரசை பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் ஒரே நிலைபாட்டை கொண்டிருக்கிறது, இது அதற்கென ஒரு தெளிவான செயற்திட்டத்தை கொண்டிருப்பதை காட்டுகிறது. மார்ச் 2011ல் புரட்சி முழுவீச்சில் தடைபெற்று கொண்டிருந்த சமயம், அமெரிக்காவின் திட்டத்தை மேற்கோள் காட்டி ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறினார்: “சிரியாவின் உள்ளே நடைபெற்று கொண்டிருப்பவை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது, நான் அறிவது என்னவெனில் ஒரு மறு சீரமைப்பிற்கான திட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பு அவர்களிடம் உள்ளது. சிரியாவில் முன்னேற்றத்திற்கான வழி இருப்பதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவே நாங்கள் எங்களுடைய அனைத்து நேசர்களுடன் தொடர்ந்து கை கோர்ந்து இந்த விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்.” [2] இந்த புரட்சி மாதக்கணக்கிலிருந்து வருடக்கணக்காக நடைபெற்று கொண்டிருக்கிறது, அமெரிக்க அதிகாரிகள் அல்-அசாதை கண்டித்தார்களே தவிர அவரையோ அல்லது அவரது அரசை நீக்கவோ எதையும் செய்யவில்லை. பல நேரங்களில் உபயோகப்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்கள், கணக்கில்லாமல் போடப்பட்ட குழாய் வெடிகுண்டுகள், புரட்சி படைகளை உபயோகித்தது மேலும் பொது மக்களை ராணுவத்தை கொண்டு சுற்றி வளைத்தது மற்றும் அவர்கள் மீது குண்டு மழை பொழிந்தது இவ்வனைத்து செயல்களுக்கும் கண்டனத்தை தவிர அமெரிக்கா வேறு எதையும் செய்யாதததை காண்கிறோம், இது அல்-அசாதின் அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க செய்யவும் மேலும் அவர் அந்த நிலையை தக்க வைத்து கொள்வதற்கான பாதுகாப்பு அரணாகவும் அமைந்தது. சிரிய அரசு பற்றிய அமெரிக்காவின் உண்மை நிலையை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பேனெட்டா சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் மூலம் ஊர்ஜிதமாக்குகிறது, அதில் அவர் இவ்வாறு கூறினார்: “அசாத் வெளியேறும்போது முக்கிய விஷயமாக நான் கருதுவது-நிச்சயமாக அவர் வெளியேறுவார்-அந்த நாட்டில் நிலைத்தன்மையை பாதுகாக்க முயல வேண்டும். மேலும் அந்த வகையான நிலைத்தன்மை நீடித்து இருக்க அதிக அளவிளான ராணுவத்தையும், காவல்துறையையும் பாதுகாப்பு படையினருடன் சேர்த்து நிலை நிறுத்த வேண்டும், மேலும் அவர்கள் ஜனநாயக முறையிலான அரசை ஏற்படுத்துவதற்கு முன் வருவார்கள் என நம்புகிறேன்.” [3] அமெரிக்கா இந்த புரட்சியின் முடிவு எதுவாகினும் இந்த அரசு தொடர்ந்து நீடிக்க விரும்புகிறது, ஒன்று அசாத் இருக்கும் நிலையில் அல்லது அசாத் இல்லாத நிலையில்.

சிரியாவின் புரட்சியானது மக்களை பல படை பிரிவுகளாக ஒருங்கிணைக்க வைத்தது, நாட்டின் வெளியே இருந்தும் பலர் தங்களுடைய சகோதரர்களுடன் சேர்ந்து அந்நாட்டிற்காக போராடத்தில் கலந்து கொண்டனர். அல்-அசாத் தேவை ஏற்படின் கொடூரமான முறைகளை கையாளக்கூடிய வழக்கத்தை கொண்டிருப்பவர் என்பதால் பெரும்பாலான உலகம் இந்த புரட்சியை அந்த அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என நம்பினர். ஆனால் புரட்சியாளர்கள் நாட்டின் அனைத்து முனைகளிலிருந்து அரசுக்கு எதிராக போராடி வருவதால், குறிப்பாக ராணுவத்திலிருந்து பல அதிகாரிகள் வெளியேறியதால், இந்த அரசு இந்த புரட்சியை தோற்கடிக்கும் திறனை முழுமையாக பெற்றிருக்கவில்லை; இந்த போராட்டம் வெகுவிரைவில் ஒரு இக்கட்டான நிலையை அடைந்தது. இங்கு தான் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவும், ஆயுத உதவி செய்வதற்கும் மற்றும் சர்வதேச மாநாடுகளில் சிரியாவின் எதிர்காலம் குறித்து அவர்களுடைய கருத்தை கேட்பதற்கு தோதுவான ஒரு எதிரணியை உருவாக்கும் முயற்சியை தொடங்கியது. அமெரிக்கா மற்ற குழுக்களை விடுத்து சில குறிப்பிட்ட குழுக்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதிலிருந்து அதன் செயற்திட்டம் தெளிவாக தெரிகிறது. அதே போல் அந்த நாட்டின் நிலைப்பாட்டை மாற்றக்கூடிய அளவிற்கான எந்த குழுவிற்கும் போதிய ஆயுதத்தை அது வழங்கவில்லை. நான்கு வருடங்கள் ஆகின்றது, ஃபிரீ சிரியன் ஆர்மி(FSA), தி சிரியன் தேஷனல் கோஅலிஷன் (SNA) போன்ற அமைப்புகளை அமெரிக்கா வியாபாரம் செய்ய விரும்பாத அமைப்புகள் மறைக்க செய்தது. இஸ்லாமிய அமைப்புகள் உட்பட உண்மையான அமைப்புகளை விட மதசார்பற்ற அமைப்புகளை ஊக்கப்படுத்துவதே அமெரிக்காவின் செயற்திட்டமாகும். இந்த முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்தது இதன் காரணமாகவே அமெரிக்கா சிரியா அரங்கில் குழுக்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கப்போவதாக அறிவித்தது.[4] இவையனைத்தும் சிரியாவிற்கென அமெரிக்கா ஒரு தெளிவான செயற்திட்டத்தின் அடிப்படையில் செயலாற்றி கொண்டிருப்பதை காட்டுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸின் வருகை சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் புரட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதே தவிற எந்த விதத்திலும் அதற்கு உதவியாக இருக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் விஜயமானது போராட்டக்காரர்கள் நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் தாக்குதல்கள் நடத்தி கொண்டிருக்கையில் நடைபெற்றது. அல்-அசாத் அரசு வெகு சில வீரர்களை மட்டுமே  நம்பி இருந்தது மேலும் இந்த புரட்சியில் தாக்குபிடிக்க அது ஈரானிய உதவியையும் ஆதரவையும் முழுமையாக நம்பி இருந்தது.   இந்த வசந்தத்தில் இஸ்லாமிய வாசம் வீசுவது தெளிவாக தெரிகின்றது, இந்த அரசை நீக்கி இஸ்லாமிய அடிப்படையிலான ஒன்றை நிறுவ வேண்டியே போராட்டக்குழுக்களின் பெரும்பான்மையான கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த சமயத்தில் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் விஜயமானது வந்ததோடு இந்த புரட்சியை தடம்புரள செய்தது. ஜூன் 2014ல் மொசூலை வெற்றி கொண்டதிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் விரிவாக்கத்தை தொடக்கி வைத்தது.  ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றுவதற்கு உகந்த நிலையை ஏற்படுத்த உதவும் விதத்தில் ஈராக்கிய ராணுவத்திலிருந்து எண்ணிலடங்கா அதிகாரிகளை தங்களின் பொறுப்பையும்  நிலையையும் விட்டு செல்லுமாறு கட்டளையிடப்பட்டதாக அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் என்பதை  நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே ரெவல்யூஷன் அப்சர்வரில் (www.revolutionobserver.com) நாம் இந்த நிலைபாட்டை தெளிவாக விளக்கி வருகிறோம். ஈராக்கிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் சிரியா நோக்கி விரிவடைந்து அங்குள்ள அனைத்து போராட்ட குழக்களுடன் நீடித்து நடைபெறக்கூடிய யுத்தத்தில் நுழைந்தது. சிரியாவின் வட பகுதியில் போராட்ட குழுக்கள் வசமிருந்த பல பகுதிகளை கைப்பற்றியது. பிரபலமான சர்வதேச பாதுகாப்பு நிறுவனமான ஜேம்ஸ் இன்டெலிஜென்ஸ், 2014 ல் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 64% இதர போராட்ட குழுக்களின் மீது நடத்தப்பட்டது எனவும் அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் வெறும் 13% அல்-அசாத் படையினரை நோக்கி இருந்தது என அறிவித்தது.[5]

இப்போது தெளிவாக்க்கூடிய விஷயம் என்னவெனில் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ அழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஈராக்-சிரியா இடையே தன்னுடைய படைகள் மற்றும் ஆயுதம் தாங்கி வாகனங்களுடன் தங்குதடையின்றி கடந்து செல்கின்றது, இந்த எல்லையோர பகுதியில் எவ்விதமான விமான தாக்குதல்களையும் அமெரிக்கா மேற்கொள்ளவில்லை.  பெறுவாரியான நிலப்பரப்பில் இவர்கள்  விரிவாக்கம் செய்தபோதும்  எதிரிகளின் எண்ணிக்கை இவர்களை விட 30 மடங்கு அதிகம் இருந்த போதிலும்  எப்படியோ எதிரணியினரை தோற்கடித்த போதிலும், டமாஸ்கஸ் அரசிற்கு நெருக்கமாக பாக்தாத் வந்தடையும் வரை அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக எதையும் செய்யவில்லை. அமெரிக்க விமானப்படையின் இந்த நிலைபாடு பல ஈராக்கியர்களையும் சிரியர்களையும் நிலைகுலைய செய்தது. அமெரிக்கர்கள் மற்றும் அதன் நேச நாடுகள் இதுவரை தாங்கள் எங்கும் அனுப்பியராத ஆகாயத்திலிருந்து  துள்ளியமாக தாக்கக்கூடிய போர் விமானங்களை கொண்டுள்ளது, இருந்த போதிலும் சமீபத்தில் ரமாதியில் நடந்த போரில் அமெரிக்க வெறும் 19 வான்வழி தாக்குதல்களை மட்டுமே நடத்தியது.[6] மேஜர். முஹம்மத் அல்-துலைமி, அன்பார் பிராந்தியத்தை சார்ந்த ஒரு ஈராக்கிய அதிகாரி “அன்பாரில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்கள் எங்களது படைகளுக்கு ஐஃஎஸ்.ஐ.எஸ் ஐ எதிர்கொண்டு தடுத்து நிறுத்த எந்த வகையிலும் உதவவில்லை. அமெரிக்க தலைமையிலான கூட்டணி வான்வழி தாக்குதல்களின் செயலற்ற தன்மையால் நாங்கள் பெருமளவிளான இடங்களை இழக்க வைத்தது.” [7] என  கூறினார். அன்பாரில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் தரைப்படை பலத்தை சமாளிக்க போதுமான உதவிகளை  சர்வதேச படைகள் அளிக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் வெற்றியை கொண்டாட ரமாதியில் ராணுவ பேரணியை கூட நடத்தியது, அப்பேரணியில் அது கைப்பற்றிய அமெரிக்க ராணுவ தளவாடங்களும் அடங்கும், இருந்தும் அதன் மீது எவ்வித வான்வழி தாக்குதலும் நடத்தப்படவில்லை.[8] அமெரிக்க விமானப்படை கீழே வீசிய ராணுவ தளவாடங்கள் பல முறை நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் கைவசம் சென்றடைந்தது.[9] ஐ.எஸ்.ஐ.எஸ் அல்-அசாதிற்கு எதிரான போராட்ட குழுக்களை திசை திருப்பும் விதமான போராட்டத்தை மேற்கொண்டதன் மூலம் அவர்களிடம் உள்ள பொருட்களையும் ஊக்கத்தையும் குறைத்து அவர்களை பலவீனமாக்கி வருகிறது. அமெரிக்காவின் கண்ணோட்டத்திற்கு ஒத்து போகும் வகையில் அமைந்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ன் கண்ணோட்டம் தற்சமயம் அமெரிக்காவிற்கு சாதகமாக இருப்பதன் காரணத்தால் தான் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் ஸிற்கு எதிராக குறைவான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பதை காட்டுகிறது.

புரட்சியின் உயிரோட்டத்தை வெளியேற்றும் செயற்திட்டத்தை அமெரிக்கா மிகவும் ஜாக்கிரதையாக செயல்படுத்தி வருகிறது, ஆனால்  அது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக நடத்திய போரில் நேரடியாக ஈடுபட்டு தோற்றதை போன்றல்லாமல், அதன் செயற்திட்டமானது பிராந்தியத்திலுள்ளவர்கள் மற்றும் உள்நாட்டினரை பெரும்பாலும் ஈடுபடுத்தி தூரத்திலருந்து அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில்  போராட்டக்குழுக்களுக்கு எதிராக சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் மக்கள் அவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து போராடி வருவது தான். அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா விரும்பும் குழுக்கள் மக்கள் மத்தியில் துளி அளவு நம்பிக்கை கூட பெற்றிருக்கவில்லை. இதன் விளைவாக அமெரிக்கா சிரியாவில் ஒரு நெடிய போராட்டத்தை பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறக்கூடிய அளவிலான போராட்டத்தை  நடத்தி வருகிறது. இந்நிலை சிரியாவில் அமெரிக்கா இன்னும் சில ஆண்டுகள் ஈடுபட்டிருக்கும்  என்பதை சுட்டி காட்டுகின்றது. அமெரிக்கா விரும்பிய முடிவு ஏற்படாததன் காரணத்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வர நீண்ட காலமாகும். அமெரிக்க அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுவதற்குரிய நேரம் வரை காலம் தாழ்த்தப்பட வேண்டும் என்ற காரணத்தால் தான் தொடர்ந்து  தங்களிடம் எந்தவொரு முழுமையான செயற்திட்டம் இல்லை என்று கூறி வருகிறார்கள்.











[9] http://21stcenturywire.com/2015/02/18/in-plain-sight-coalition-forces-routinely-air-drop-military-supplies-to-isis-fighters-in-syria/

 

Apr 6, 2016

அமெரிக்கா-சிரியா இடையே உள்ள உறவின் ரகசியங்கள்

 
உதுமானிய கிலாபா முதல் உலக யுத்தத்தில் தோல்வி அடைந்திருந்த நிலை மற்றும்  1916ல் பிரான்ஸ் இங்கிலாந்து இடையே ஏற்பட்ட சைக்ஸ் பீகாட் ஒப்பந்தம் மூலம், இன்று சிரியா என நம்மால்  அறியப்படும் பகுதியை பிரான்ஸ் ஆக்கிரமித்தது. ஒருவருக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்த அளவிற்கு இருக்கின்றது என்றும் அசாத் அரசிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவை பற்றி புரிந்து கொள்ள, அவர் இக்கால சிரியா உருவான வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியமாகும். கீழ்வரும் 10 கால வரிசையிலான முக்கிய புள்ளிகள் அதாவது சிரியாவின் மீதான மேற்கத்திய காலனியாதிக்கம் முதல் இன்றைய நிலை வரையிலான நிகழ்வுகள் இந்நாட்டில் அமெரிக்காவின் ஈடுபாட்டை குறிப்பிட்டு காட்டுகிறது.
1. அமெரிக்கா மற்றும் சி்.ஐ.ஏ 1949 முதல் சிரியாவில் நடத்திய ராணுவ புரட்சிகள்:
 
அமெரிக்கா டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம்  மற்றும் சி்.ஐ.ஏ வாயிலாக முதன் முதலில் 1949 ல் ராணுவ புரட்சியை நடத்தியது, என மைல்ஸ் கோப்லேண்ட் எனும் எழுத்தாளர் தனது “The game of Nations” எனும் நூலில் விவரித்துள்ளார். இதன் மூலம் மத்திய கிழக்கின் மீதான சர்வதேச போராட்டம் புது வரவான  அமெரிக்காவிற்கும் இந்த பிராந்தியத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வந்து இரண்டாம் உலக யுத்தத்தில் பேரழிவை சந்தித்து வெளியேறிய ஐரோப்பாவிற்கும் (பிரஞ்சு மற்றும் பிரிட்டன்) இடையே தொடங்கியது. அமெரிக்க தூதரகமும் சி.ஐ.ஏ வும் தொடர்ந்து பல அடுத்தடுத்த ராணுவ புரட்சிகளை சிரியாவில் 50 மற்றும் 60 களில் ஐரோப்பிய எதிரிகளுக்கு எதிராக நடத்தியது, இந்த காலம் திறத்தன்மை அற்ற நிலையில் இருந்தது இந்நிலைமை 20 ஆண்டுகள் நீடித்தது.
2. இஸ்ரேலை பாதுகாக்க 1967ம் ஆண்டு நடந்த போரில் ஹாஃபிஸின் பின் வாங்கல்: 
 
முன்னால் அதிபர் அமீன் அல்-ஹாஃபிஸ், 2001 ம்ஆண்டு ஜூலை 2ம் தேதி அல்-ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஹாஃபிஸ் அல்-அசாத், அந்த போரின் ஆரம்பத்தில் கோலன் ஹைட்ஸில் உள்ள சிரியாவின் ராணுவத்தினரை பின் வாங்குமாறு கண்டிப்பான உத்தரவு ஒன்றை அவர்களுக்கு அனுப்பினார் இது சிரியா தோல்வி அடையாத நிலையிலும் இஸ்ரேலிய ராணுவத்துடன் எவ்வித தாக்குதலை துவக்காத நேரத்தில் நடைபெற்றது. இச்செயல் இந்த இடத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் நிலைக்கு இட்டு சென்றது.[1] இச்செயலை செய்ததன் காரணமாக இஸ்ரேலின் வடக்கு எல்லையை பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் நம்பிக்கையை அசாத் பெற்றார், அதை அவர் 30 வருடங்களாக தொடர்ந்து செவ்வனே செய்து வருகிறார்.
3. அமெரிக்கா சிரியாவை ஐ.நா தீர்மானம் 242 மூலம் 1967 ல் ஆதரித்தது:
 
கோலன் ஹைட்ஸ் எனும் இடத்தை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு எதிராக ஆறு நாள் போர் என அறியப்பட்ட 1967 போருக்கு பின் நிறைவேற்ற பட்ட ஐ.நா தீர்மானம் 242, சிரியாவுக்கு இது நாள் வரை அந்த இடத்தின் மீதான அதன் உரிமையை திரும்ப பெற்றுத்தந்தது.[2] அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தையும் இந்த இடத்தின் மீதான சிரியாவின் உரிமையையும் ஆதரித்தது. ஏதோவொரு நேரத்தில் வெளிப்படும் வெத்துவாக்காகவும் அல்லது இந்த கடல்வழி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இஸ்ரேலின் நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தது,
4. 1973ம் ஆண்டின் போருக்கு பின் அமெரிக்க – சிரியாவுடனான உறவை பலப்படுத்தல்:
 
1973 ல் திடீரென நடைபெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர்ந்து, அமெரிக்கா சிரியாவை கண்டித்திருக்க வேண்டும் மற்றும் அதன் மீது தடைகள் விதித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக, 1974ல், அசாதுடனான உறவை வலுப்படுத்த அதிபர் நிக்சன் டமாஸ்கஸிற்கு விஜயம் புரிந்தார்.
5. 1976ம் ஆண்டு முதல் சிரியா மேற்கொண்ட லெபனான் மீதான ஆக்கிரமிப்பை அங்கீகரித்தல்:
 
லெபனானில் நடைபெற்ற உள்நாட்டு போரின் தொடக்கத்தில் சிரியா லெபனான் மீது ராணுவ படையெடுப்பு நடத்தியது. இது குறித்து அமெரிக்காவின் மௌனம் என்பது ஹாஃபிஸ் அல்-அசாதின் இந்த ஆக்கிரமிப்பை தொடங்கியதற்கான “பச்சை விளக்கு” காட்டப்பட்டது போல் இருந்தது இந்த ஆக்கிரமிப்பு 2005 வரை நீடித்து இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி பிரஞ்சு தீர்மானம் கொண்டு வத்ததன் மூலம் சிரியாவை வெளியேற்றியது. அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து ஒரு அரசியல் ஆய்வாளர் இவ்வாறு கூறினார்: “[அமெரிக்கா] லெபனானில் சிரியாவின் ஆதிக்கம் நீடித்திருக்க விரும்பியது.” [3]
6. சிரியா மற்றும் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை 1989ல் நடைபெற்ற தாயிஃப் ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றுதல்:
 
தாயிஃப் ஒப்பந்தம் சவூதி அரேபியாவில் பல லெபனானிய குழுக்களுக்கு இடையே 1989 உள்நாட்டு போரை நிறுத்துவதற்காக போடப்பட்டது. இதன் மத்தியஸ்த்தராக பிரான்ஸ், சவூதி அரேபியா, எகிப்து தவிர சிரியாவுடன் அமெரிக்கா செயல்பட்டது அது “சர்வதேச ஆதரவை லெபனான் மீது சிரியாவின் – பாதுகாப்பு பொறுப்பை நிலைநிறுத்த உதவியது. [4]
7. அமெரிக்காவின் 1991 ல் ஈராக் மீதான படையெடுப்பில் சிரியா பங்கு கொள்ளுதல்:
 
(ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்) என்னும் ஈராக் மீதான போரில் அமெரிக்காவிற்கு சிரியா ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல் 14,500 படை வீரர்களை அமெரிக்க படையெடுப்புக்கு உதவுவதற்காக ஈராகிற்கு அனுப்பி வைத்தது. [5]
8. அமெரிக்கா 1990 களில் சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக செயல்படுதல்:
 
சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமெரிக்கா மத்தியஸ்ராக செயல்பட ஹாஃபிஸ் அல்-அசாத் ஒப்புக்கொண்டார். ராணுவ தலைமை அதிகாரி Lt. Gen. ஹிக்மத் அல்-ஷிஹாபி, தலைமையில் ஒரு குழு அமெரிக்காவுக்கு சென்று அமைதி பேச்சுவார்த்தை சம்பந்தமாக கருத்துரையாடினர். ரஷ்யா டுடே எனும் தொலைக்காட்சிக்கான பேட்டி ஒன்றில் சிரியாவின் முன்னால் பாதுகாப்பு அமைச்சரும் அசாத் அரசின் ஒரு தூணாக இருந்த முஸ்தபா த்லாஸ், அல்-ஷஹாபி ஒரு அமெரிக்காவின் சி்.ஐ.ஏ ஏஜன்ட் என குறிப்பிட்டார். [6]
9. சி.ஐ.ஏ மற்றும் சிரியாவுக்கு இடையே 2001 முதல் கைதிகளை சித்திரவதை செய்வது தொடர்பான உளவுத்துறை உடன்பாடு:
 
சி.ஐ.ஏ விற்கும் சிரிய அரசுக்கும் இடையேயான உறவு மிக நெருக்கமானதாகும், அதாவது சிரியாவை பொருக்கி நாடு என அறிவிக்கப்பட்ட காலத்தில் கூட, சிரிய அரசு அதன் அழுக்கடைந்த சேவையை சி.ஐ.ஏ விற்கு ஆற்றி வந்தது. அந்த அரசு உலக புகழ்பெற்ற தனது உளவுத்துறையை சி.ஐ.ஏவிற்காக கைதிகள் மற்றும் போர் கைதிகளிடமிருந்து விவரங்களை சேகரிக்க உபயோகித்தது. இதற்கு உதாரணமாக  கனடாவை சார்ந்த மாஹெர் அரார் என்பவரது நிகழ்வு சர்வதச செய்திகளில் வலம்வந்தது. [7]
10. 2011 முதல் நடைபெரும் சிரிய புரட்சியில் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா: 
 
அசாத் அரசு சிரிய மக்களின் மீது 5 வருடங்களாக நடத்திவரும் தினசரி படுகொலைகளை கண்டு வாய் மூடி மவுனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்களை பாதுகாத்து கொள்ளவும் அசாதை வெளியேற்றவும் போராளிகளுக்கு தேவைப்படும் ஆயுதங்களை கொடுக்காமல் தடுத்து வருகிறது.
சிரியாவின் நவீன கால வரலாற்றில் அமெரிக்கா தொடக்கத்தில் அதன் கைப்பாவைகளை அதிகாரத்திற்கு கொண்டு வர ராணுவ புரட்சிகள் மூலம் முயற்சித்து வந்தது தெளிவாக தெரிகிறது. அமெரிக்கா சிரியாவுக்கு எதிரான வார்த்தைகளை பொது இடங்களில் உபயோகித்தாலும், அதன் கைகூலி ஹாஃபிஸ் அல்-அசாத் 1970 ல் ஆட்சிக்கு வந்ததும் சிரியாவில் தனது முழு கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியது. அல்-அசாத் வந்தது முதல் சிரியா அமெரிக்காவின் பிரதிநிதி நாடாக அப்பிராந்தியத்தில் அதன் நலன்களுக்கு சேவை செய்யவும் இஸ்ரேலிய வட எல்லைகளை பாதுகாக்கும் செயலை செய்து வருகிறது, ஆனால் வெளியே அரபு பகுதியல் நான் தான் அதை எதிர்ப்பதில் முன்னோடி என கூறி வருகிறது.
[1] http://www.aljazeera.net/programs/pages/fa527ac3-2308–4892-945e-7978486e3ac5 (ara­bic)
[2] http://en.wikipedia.org/wiki/Resolution_242 
[3] http://www.meforum.org/research/lsg.php
[4] http://www.gmu.edu/programs/icar/ijps/vol14_2/SALAMEY%20-%2014n2%20IJPS.pdf
[5] http://en.wikipedia.org/wiki/Coalition_of_the_Gulf_War
[6] http://arabic.rt.com/prg/telecast/23261/ (ara­bic)
[7] http://en.wikipedia.org/wiki/Maher_Arar

Mar 26, 2016

சுன்னிகளுக்கு எதிராக ஷியாக்களை நிறுத்தி முஸ்லிம்கள் பலகீனப்படுத்தும் சந்தர்ப்பம்

பொதுநலனுக்கான பந்தம்
 

ஈரான்-மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர்– றுதி பாகம்

அமெரிக்காவுடன் தனது உறவை சுமூகப்படுத்தியதன் ஊடாக பிராந்தியத்தில் தனது செல்வாக்கை உயர்த்த நினைத்த ஈரானுக்கு அதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன், அமெரிக்காவுக்கு ஈரானின் ஆசையை நிறைவேற்ற வழிவிடுவதன் ஊடாக சுன்னிகளுக்கு எதிராக ஷியாக்களை நிறுத்தி முஸ்லிம்கள் பலகீனப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சுயநலனையும், பேராசையையும் அடிப்படையாகக்கொண்ட தீய உடன்பாட்டின் அடிப்படையிலேயே இரு தரப்புக்களும் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஜெனிவாவிலே இரு தரப்புக்களும் சந்தித்து ஆராய்ந்ததும் இதனைத்தான். எனவே ஈரானின் ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலையும், இத்தகைய உடன்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்தால்; ஈரான் இஸ்லாத்தின்பாலோ அல்லது அதற்கென்ற ஒரு சித்தாந்தத்தின்பாலோ, குறைந்தபட்சம் அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்கின்ற ஷியாயிஸத்தின்பாலோ இயங்கவில்லை என்பதை தெளிவாகக் புரிந்துகொள்ளலாம். மாறாக ஈரானின் நிகழ்ச்சி நிரல்களெல்லாம் அதன் தேசிய மேலாதிக்கத்தை பிராந்தியத்தில் உயர்த்துவது என்ற குறுகிய தீவிர தேசியவாத எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நிர்மாணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். எனவே ஈரான், இந்த குறுகிய இலக்கை அடைந்து கொள்வதை அளவுகோளாகக் கொண்டே தனது செயற்பாடுகளை எடைபோடுகிறது. அந்த இலக்கிற்கு சாதகமான எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடுத் துணிகிறது. எனவே ஷியா கிரஸண்ட் என்ற அதனது நிகழ்ச்சித்திட்டமும்கூட இந்த நோக்கத்தை இலக்காகக்கொண்டதேயல்லாமல் ஷியா கிரஸண்டின் ஊடாக ஷியாயிஸத்திற்கு சேவகம் செய்வதற்காகவல்ல. ஷியாக்கொள்கைதான் அதன் இலக்காக இருந்திருந்தால் அதன் நடவடிக்கைகள் அனைத்து ஷியாக்களையும் தழுவியதாக அமைந்திருக்கும். எனினும் ஈரான் உலகிலுள்ள அனைத்து ஷியாக்களையும்; பாரபட்சமின்றி அணுகுவதில்லை. மாறாக தனது பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் ஷியாக்களுக்கு மாத்திரம்தான் அது உதவி வருகிறது என்ற விடயத்தை ஆராய்ந்தால் இது இலகுவாகப்புலப்படும். உதாரணமாக அஜர்பைஜான் அல்லது தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழுகின்ற ஷியாக்கள் அதிகளவில் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவுவது பற்றி ஈரான் எப்போதும் சிந்திப்பதில்லை. மாறாக தனது பிராந்தியக்கனவுக்கு அத்தியவசியமானது என்பதால் ஆப்கானிஸ்தானிலோ அல்லது சவூதியிலோ வாழும் ஷியாக்களின் பிரச்சனைகளை அது தனது பிரச்சனைகளாகக் கருதுகிறது.

முடிவுரை

அமெரிக்காவை பொருத்தமட்டில் அமெரிக்காவுக்கும் - ஈரானுக்குமிடையில் உருவாகியுள்ள இந்த சுமூக நிலையும், புரிந்துணர்வும் ஈரானை பிராந்தியத்தில் ஊக்கப்படுத்துவதன் ஊடாக உம்மத்தை ஷியாசுன்னி என்ற அடிப்படையில் சிதைத்து, பிளவுபடுத்துவதற்கு ஈரானை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்காகும். மேலும் சிரியாவிலே அமெரிக்க நிகழ்ச்சி நிரலை பாதுகாப்பதற்கு ஈரானின் வகிபாகம் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. ஈரானின் உதவியில்லாதிருந்திருந்தால் அஸாத்தின் கணக்கு என்றோ தீர்க்கப்பட்டு இஸ்லாமிய நிகழ்ச்சிநிரல் நடைமுறைக்கு வந்திருக்கும். அது அமெரிக்காவின் அராஜகத்திற்கு முற்றிபுள்ளி வைத்திருக்கும். அஸாத்தின் அழிவுக்கு பின்னால் சிரியாவில் உதயமாகக்கூடிய கிலாஃபத்தின் வருகை குறித்த இந்த அச்சமே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ஈரானை சுமூகமான ஒரு உறவுடன் அவசர அவசரமாக களத்துக்கு கொண்டுவருவதற்கு நிர்ப்பந்தப்படுத்தியது. மத்திய கிழக்கில் நீண்ட காலங்களாக தோல்வியைச் சந்தித்து வரும் அமெரிக்காவின் மானத்தை மறைப்பதற்கு எடுக்கப்படும் உச்சகட்ட முயற்சிகளில் ஒன்றே ஈரானுடனான ஊடலாகும் என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். எனவே மத்திய கிழக்கிலே களத்தில் நிற்கின்ற சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் அமெரிக்கா போஷிக்க நினைக்கும் ஷியா-சுன்னி குழுவாதத்தை அடிப்படையாகக்கொண்டு செயற்படாமல் ஒரு அரசியல் முறைமையின் ஊடாக முஸ்லிம்களின் வேறுபாடுகளைக் கையாண்டு அவர்களின் ஒற்றுமைக்காக உழைத்து எதிரி வளர்த்தெடுக்க நினைக்கும் இத்தகைய குழுவாதங்களுக்கு எதிராக களமிறங்க வேண்டும்.

மேலும் கட்டம் கட்டமாக வெளுத்து வரும் ஈரானின் சாயமும், அதனது குறுகிய தேசிய நலனைத்தவிர இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலுக்கும் அதற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்ற உண்மையும, ஈரானின் நயவஞ்சகத்தனத்தை முஸ்லிம்கள் முன் தோலுரித்துக்காட்டியிருக்கிறது. அமெரிக்க-ஈரானிய அணுதிட்ட உடன்பாட்டின் பின்னால் உள்ள யதார்த்தத்தை இனங்கண்ட உம்மத், உம்மத்தை பிளவுபடுத்தும் தீய குழுக்களுக்கு பின்னால் இருக்கும் ஈரானின் மறைகரத்தையும், அஸாத் போன்ற அரக்கனை பாதுகாக்க அது காட்டும் பிரயத்தனத்தையும் தற்போது நேரடியாக சான்று பகர்கிறது. அந்த வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நலனைப்பாதுகாப்பதில் சவூதியையும், இஸ்ரேலையம் விஞ்சிய நிலையில் ஈரான் களமிறங்கியிருக்கிறது என்பதை 79 இன் ஈரானியப்புரட்சியை இன்றும் அசைமீட்டிக் கொண்டிருப்பவர்களும், ஈரான் இஸ்ரேலின் எதிரி, அமெரிக்காவின் எதிரி என்று பிதற்றிக்கொண்டிருப்பவர்களும், ஈரானின் வளர்ச்சி இஸ்லாத்தின் வளர்ச்சி என மணற்கோட்டை கட்டுபவர்களும் எப்போது சிந்திப்பார்கள்?
 

முற்றும்.