Showing posts with label துருக்கி (Turkey). Show all posts
Showing posts with label துருக்கி (Turkey). Show all posts

Aug 8, 2016

துருக்கி அரசை கவிழ்க்க நடந்த ராணுவ சதிப்புரட்சியின் அரசியல்


ஜூலை 17 ஞாயிறு அன்று ராணுவ சதிப்புரட்சியானது அதிகாரப்பூர்வமாக துருக்கி நேரப்படி மாலை 4.30 மணிக்கு முடிவுற்றது என துருக்கி ராணுவப்படை ஒரு செய்தி வெளியிட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை செயலிழக்க செய்ய உதவி புரிந்த மக்களின் ஒத்துழைப்பிற்கு இந்த செய்தி குறிப்பின் மூலம் நன்றியையும் தெரிவித்தது. 

ரெசெப் தாய்யிப் எர்துகான் அரசை கவிழ்க்கும் முயற்சியில் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் ராணுவ பீரங்கிகள் மற்றும் ராணுவ விமானங்கள் சீறி பாய்ந்ததை பார்த்து பெருவாரியான உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. தங்களின் தரப்பிலிருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ராணுவ சதிப்புரட்சியை மேற்கொண்டவர்கள் முக்கிய நகரங்களில் படையெடுப்பு நடத்தி அதை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றனர். 

ஆனால் எர்துகான் கைப்பேசி மூலம் தனது ஆதரவாளர்களை நோக்கி தெருக்களில் இறங்கி நாட்டை மீட்டெடுங்கள் என்று செய்தி அனுப்பிய உடன் பெருங்கூட்டத்தினர் வீதிகளில் பொங்கி எழுந்ததால் இந்த புரட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடிந்தது எர்துகான் அதிலிருந்து போர் புரியும் வண்ணமாக வெளிவந்து ராணுவ சதிப்புரட்சியாளர்களை நோக்கி தெளிவாக குறிப்பிட்டார் “இவ்விஷயத்திற்காக அவர்கள் பெரும் விலை கொடுக்கப்போகிறார்கள்” [1] என்று நேரடியாக ஒரு பெரும் தேடுதல் வேட்டை நடத்த தொடங்கியது, 34 ஜெனரல்கள் மற்றும் இன்சிர்லிக் விமானத்தளத்தின் கமான்டர் உட்பட பல்வேறுபட்ட நிலையிலுள்ள 6000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர், 
ஆனால் இதன் களையெடுப்பு இதைவிட மிக ஆழமானது: 

 இந்த ராணுவ புரட்சியை தொடர்ந்து 2,745 துருக்கிய நீதிபதிகள் தங்களது கடமைநிலருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளனர்.[2] இந்த ராணுவ புரட்சி தோல்வி அடைந்த உடன் எர்துகான் அவரது ஆதரவாளர்களை கொண்ட ஒரு பெரும் கூட்டத்தாருக்கு தனது செயற்திட்டம் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் போக்கு குறித்து விளக்குகையில் இவ்வாறு கூறினார்: “இந்த புரட்சி நமக்கு இறைவனிடமிருந்து வந்த அன்பளிப்பாகும் ஏனெனில் இது நமது ராணுவத்தை தூய்மையாக்க காரணமாக விளங்கும். [3]

1923 ல் துருக்கிய குடியரசு உண்டான போது ராணுவ அதிகாரியான முஸ்தஃபா கமால் உண்மையான ஆட்சியாளராக செயல்பட்டார் அவர் கிலாஃபத்தை நிர்மூலமாக்கிய பின்னர் ராணுவ படையிலிருந்த இஸ்லாமிய ஆதரவாளர்களை அப்புறப்படுத்த தொடங்கினார். முஸ்தஃபா கமாலின் காலத்தில் துருக்கிய ராணுவம் தனது துப்பாக்கிகளை ஐரோப்பிய எதிரிகளை நோக்கி இருந்த நிலையை மாற்றி சொந்த மக்களை நோக்கி திருப்பியது, அவர்களை அவர் அடிப்படைவாதிகளாக நாட்டின் மதசார்பின்மையை எதிர்ப்பவர்களாக கருதினார்.

ராணுவத்தினரை மதசார்பின்மையை முன்னெடுத்து செல்பவர்களாக ஆக்குவதே அவரது நோக்கமாகும். அவரது மரணத்திற்கு பின்னர், ராணுவம் அரசாங்கம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறையிலுள்ள இதர மதசார்பின்மை வாதிகள் எந்த விலை கொடுத்தேனும் மதசார்மையை பாதுகாப்பது தங்களது தலையாய பொறுப்பாக கருதினர். மிக குறிப்பாக ராணுவம் மதசார்பற்ற துருக்கியின் பாதுகாவலராக தன்னை கருதியது. 

மதசார்பின்மை அல்லது ராணுவத்தின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் எழுந்த அச்சமயங்களில் உதாரணமாக 1960, 1971 மற்றும் 1980 களில் அவர்கள் ராணுவ சதிப்புரட்சி மேற்கொண்டு அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர். 1997 ல் ராணுவம் அரசிடம் ஒரு நீண்ட கோரிக்கை வைத்தது அந்த கோரிக்கைகளை ஏற்று கொள்வதை தவிர அரசிற்கு வேறு வழி இல்லாமல் இருந்தது. அதன் பிரதம மந்திரி, நெக்மெட்டின் எர்பாகன், பல்கலைகழகங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பதற்கு சம்மதித்தார் பின்னர் அது தளர்த்தப்பட்டது, அவரது கட்சி 1998ல் முடக்கப்பட்டது, மேலும் எர்பாகன் அரசியலில் ஈடுபடவதிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அரசியல் நிலப்பரப்பில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வந்தது மேலும் அது உருவாகிய மதசார்பின்மை அடித்தளத்திற்கும் நாட்டில் அது கொண்டிருக்கும் அதிகப்படியான நிலைக்கும் எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பார்த்து கொள்கிறது.

1998ல் தடைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், எர்பாகனின் வெல்ஃபேர் கட்சியின் முன்னால் உறுப்பினர்கள் ஏ.கே.பி கட்சியை உருவாக்கினர் அதன் பின்னர் 2002 பொது தேர்தலில் இஸ்தான்புல்லின் முன்னால் மேயரான ரெசெப் தாய்யிப் எர்துகான் தலைமை ஏற்று பெறும் வெற்றிக்கு இட்டு சென்றார். 

21ம் நூற்றாண்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஏ.கே.பி பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து எர்துகானிற்கு ராணுவம் துருக்கியில் வழக்கமாக கொண்டிருக்கும் பங்கை எதிர்க்கும் தைரியத்தை அளித்தது. (2015 ஜூன் மாதம் நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறுவதில் ஏற்பட்ட இழப்பு 2015 நவம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.பி மீண்டும் வெற்றி பெற்றது). 

பனிப்போரில் துருக்கி ஈடுபட்டிருந்த போதும், அதன் ராணுவம் பிரித்தானியருடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு வந்தது மேலும் ஐரோப்பிய கண்டத்துடன் நெருங்கிய உறவை மேற்கொண்டு அது எதிர்காலத்தில் தன்னை ஒரு ஐரோப்பிய நாடாக அடையாளம் காண விரும்பியது, ஆனால் எர்துகான் அமெரிக்காவுடன் உறவை மேற்கொள்ள ஆரம்பித்தார் அது ‘Shared Vision Document’ என்ற பெயரில் துருக்கி மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு இடையே அப்துல்லாஹ் குல் மற்றும் கான்டொலீசா ரைஸ் ஆகிய இருவரும் 2006 ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம் உச்ச நிலையை அடைந்தது. 

இந்த ஒப்பந்தம் ஒரு பரந்த உலகளாவிய, பிராந்திய, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய விஷயங்களில் அமெரிக்காவும் துருக்கியும் ஒத்துழைப்பு நல்கும் விதத்தில் அமைந்தது. [4] எர்துகானின் ஆட்சி காலத்தில் அவர் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான உறவை பலப்படுத்தினார் அது ஈராக்கை நிலைபெற செய்வதாக இருப்பினும், குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கு (KRG) நிதியுதவி அளிப்பதாக இருப்பினும், இரண்டு நாடுகள் அமைத்து தீர்வு காண்பது எனும் அடிப்படையில் பாலஸ்தீன குழுக்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாகினும் மற்றும் சிரிய எதிர்ப்பு படைகளில் ஊடுருவது போன்று எர்துகான் அமெரிக்காவின் திட்டங்களுக்கு அடிமட்ட அளவிற்கு உதவி புரிந்துள்ளார். 

ஏ.கே.பி யின் ஒரு குழு ஒன்று கூடுதலில் அமெரிக்காவுடனான தனது செயலை சுட்டிக்காட்டினார்: “உலகெங்கும் உள்ள நாடுகளில் இன்று அமெரிக்கா கொண்டிருக்கும் விருப்பங்களில் துருக்கியும் அதன் பெரும்பாலான விஷயங்களில் விருப்பம் கொண்டுள்ளது. நாம் அப்கானிஸ்தானிலிருந்து ஈராக், பாலஸ்தீனம் மற்றும் பால்கன் நாடுகள் போன்று பரந்த விஷயங்களில் பொதுவான பார்வையை கொண்டுள்ளோம். ஆனால் மிக முக்கியமாக ஒரு வலுவான ஒத்துழைப்பில் நாம் இருக்கின்றோம். மிஸ்டர் ஒபாமா இங்கு வருகை தந்த போது கூறியது போன்று நாம் ஒரு மாதிரி பங்கு கொள்ளும் படி நிலையில் நுழைந்திருக்கிறோம் மேலும் நாம் அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதில் சில விஷயங்கள் நாம் வெளியே கூறும் வண்ணமும் சில விஷயங்கள் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது.

துருக்கி மற்றும் அமெரிக்க உறவை துண்டாட நினைப்பவர்கள் இந்த உறவின் பல்முனை தரம் மற்றும் ஆழத்தை உதாசீன படுத்துகிறார்கள்.” எர்துகானின் தேர்தல் வெற்றி மற்றும் பிரித்தானிய வட்ட பாதையிலிருந்து துருக்கியை நீக்குவதற்கான துணிவான நகர்த்தல்கள் ராணுவத்தை கவலைக்குள்ளாக்கியது ஏனெனில் அவர்கள் அதுவரை எப்போதும் ஒரு ராணுவத்தை சாராத ஒரு ஆட்சியாளர் இவ்வளவு பொது ஜன ஆதரவை பெற்றிருந்த நிலையை எதிர் கொண்டதில்லை. குர்திய பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக எர்துகான் தொடங்கிய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் குர்திய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவம் முன்வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கியின் அதிகார பலத்தை மாற்றும் முயற்சியில் எர்துகான் ஈடுபட்டார். அவர் அரசில் தலையிடும் உச்ச ராணுவ மன்றத்தின் சட்ட அதிகாரத்தை சுருக்கலானார். இந்த மன்றத்தின் அமைப்பில் ராணுவத்தினர் அல்லாதவரும் பங்கு பெறும் வகையில் எரதுகான் மாற்றி அமைத்தார். உச்ச ராணுவ மன்றம் ராணுவ தளபதி, அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் மற்றும் குடியரசின் ஜனாதிபதி – இவரே ராணுவ தளபதியும் ஆவார் போன்றவர்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

இந்த மன்றம் ஒரு பாதுகாப்பு மன்றம் என்பதிலிருந்து வெறுமெனே அலோசனை மன்றமாக மாறியது. அதன் வருடாந்திர கூட்டம் பணி உயர்வு, பணி நியமனம், பணி காலத்தை நீன்டிப்பது மற்றும் ராணுவ வீரர்களை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்வது போன்றவற்றிற்காக ஒப்புதல் பெறுவதற்காக வேண்டி சமர்பிக்க படுகிறது. மூத்த படைத்தளபதிகளை ஓய்வில் அனுப்பவும் மற்றும் சிறையில் அடைக்கவும் 2007ல் அரசை ராணுவத்தை கொண்டு வெளியேற்றும் ’எர்கெனெகான்’ எனும் சூழ்ச்சியை எர்துகான் பயன் படுத்தி கொண்டார். 

அதேபோல் 2010ல் ’Sledgehammer’ எனும் சூழ்ச்சியை பணியிலிருக்கும் மூத்த ராணுவ அதிகாரிகளை ஒய்வு பெற்ற அதிகாரிகளுடன் சேர்த்து வழக்குகளில் சிக்க வைக்க உபயோகப்படுத்தப்பட்டது. துருக்கி வரலாற்றில் முதன் முறையாக ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இது நாட்டில் ராணுவத்தின் பிடி பெருமளவில் தளர்ந்திருப்பதை காட்டுகிறது. இறுதியில் இரு விசாரணைகளிலும் அனைத்து பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டனர் இருப்பினும் அதற்கு சேதம் ஏற்படுத்தியாகிவிட்டது. 

எர்துகான் வெற்றிகரமாக ராணுவத்திலுள்ள மதசார்பின்மை அடிப்படைகளை நலிவடைய செய்து தனக்கு விசுவாசமாக உள்ளவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதாவது 2015 நவம்பர் மாதத்தில் விமானப்படை தன்னிச்சையாக சிரியாவில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது, ராணுவத்தின் விசுவாசம் எர்துகான் நம்பிக்கை கொள்ள முடியாத வேறு எங்கோ இருப்பதை உணர்த்துகிறது. இது சிரயாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி உள்ளிட்ட அனைவரும் ஒரே குறிக்கோளை கொண்டிருக்கும் வேலையில் நடந்தேரியுள்ளது.

ஆகஸ்து மாதம் 1ம் தேதி உச்ச ராணுவ மன்றத்தின் வருடாந்திர ஒன்று கூடல் நடக்க வேண்டியுள்ளது இதனூடே இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கும் எர்துகானுக்கும் இடையே பதற்றம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் இருப்பதை காண முடிகிறது. இதன் காரணமாக மூத்த ராணுவ வீரர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் விரைவில் முடித்து வைக்கக்கூடும் என்ற காரணத்தால் எர்துகானை எதிர்கொள்ள தன்னிச்சையாக இந்த ராணுவ புரட்சியை மேற்கொண்டுள்ளனர்.

கேனி டோருன் எனும் ஏ.கே.பி எம.பி கூறுகையில், இந்த குழுவினர் மீது தேச துரோகம் மற்றும் ஸ்லெட்ஜ் ஹேமர் வழக்குகளின் தொடர்ச்சியாக விசாரணை தொடங்கப்பட்டது. ராணுவ புரட்சி மேற்கொள்வதற்கு சற்று முன்னர் தான் குற்றவாளிகள் பிராசிக்யூடர்களால் அழைக்கப்பட்டு நீதிமன்றத்தால் கைது செய்யப்படுவதாக இருந்தது,“ என டோருன் அல் ஜசீராவிடம் கூறனார்.[6] “அவர்கள் இந்த முன்னேற்றத்தை அறிந்த காரணத்தால் வழக்கமாக இது போன்ற ராணுவ புரட்சியை நடத்தும் நேரத்திற்கு மாற்றமாக இரவு 10 மணிக்கு மேற்கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். அவர்கள் திட்டமிட்டதை போன்று அதை காலை பொழுதி்ல் செயல்படுத்தி இருப்பார்களேயானால் அவர்கள் பெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும்”. ராணுவத்திற்குள் ராணுவ புரட்சி மேற்கொள்ள திட்டமிடும் நபர்களை கடந்த பல மாதங்களாக துருக்கி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர் என மற்றுமொரு ஏ.கே.பி அதிகாரி குறிப்பிட்டார். “தாங்கள் புலனாய்வுக்கு உட்பட்டு இருக்கிறோம் என உணர்ந்ததன் காரணமாகவே இந்த குழு ஒரு அவசரத்தில் செயல்பட்டதாகவே கருதுகிறோம்.”[7]

விமானப்படை, ராணுவ புலனாய்வுத்துறை மற்றும் தளவாடப்படையில் உள்ள சிறு குழு ஈடுபட்டது. இந்த ராணுவ சதிப்புரட்சியை ஒரு சிறு குழுவினரே மேற்கொண்டுள்ளனர் இதில் ராணுவ தளபதியின் பங்கு சற்றும் இல்லாமல் இருந்தது, ராணுவ தளபதி சூழ்ச்சியாளர்களால் சிறை பிடிக்கப்பட்டார் மற்றும் சிலர் ஊடகத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ராணுவ தலைமையிடத்தில் இருந்து ஆதரவு கிடைக்காதது தான் இந்த ராணுவ சதிப்பரட்சி தோற்று போனதற்கான முக்கிய காரணமாகும்.

இந்த தோல்வியுற்ற ராணுவ சதிப்புரட்சி குறிப்பாக இந்த ராணுவ சதிப்புரட்சியில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்தது எர்துகானை மேலும் வலுவடைய செய்துள்ளது, இப்போது எர்துகான் ஒரு ஆழமான சுத்தகரிப்பை செய்ய போகிறார் இது நம்பகத்தன்மையை இழந்த தங்களது விசுவாசத்தை வேறு இடத்தில் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் இந்த தோல்வியுற்ற ராணுவ புரட்சியை காரணம் காட்டி எர்துகான் சர்வாதிகார போக்குடையவராக மாறி வருகிறார் என குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்து வருவதை காண முடிகிறது. அவரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும், ஐரோப்பா தங்களுடைய நிலையை எர்துகான் மற்றும் அவருடைய செயல்களை நோக்கியே கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கு இன்னொரு பக்கம் அமெரிக்காவுடைய நிலையானது இந்த ராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் சட்டத்தின் விதிகளை மதிக்குமாறு கோரிக்கை விடும் வண்ணம் இருந்தது, இது கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகானுக்கு ஆதரவான நிலையாகும்.

Reference: http://www.revolutionobserver.com/2016/07/the-politics-of-turkeys-coup.html


[1] http://www.nytimes.com/live/turkey-coup-erdogan/erdogan-they-will-pay-a-heavy-price-for-their-treason-to-turkey/

[2] http://in.reuters.com/article/turkey-security-judges-idINKCN0ZW0OZ

[3] https://www.rt.com/news/351630-erdogan-turkish-military-relationships/

[4] http://www.hurriyetdailynews.com/turkey-us-invest-hopes-in-shared-vision-document.aspx?pageID=438&n=turkey-us-invest-hopes-in-shared-vision-document-2006–07-07

[5] AK Party Group Meet­ing, Jus­tice and Devel­op­ment Party web­site, June 29 2010,http://www.akparti.org.tr/english/haberler/ak-party-group-meeting-june-29–2010/25721

[6] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html

[7] http://www.aljazeera.com/news/2016/07/turkish-putschists-acted-early-fear-arrests-160718131344577.html
http://sindhanai.org/

இன்றைய துருக்கியில் நடைபெறும் ஆட்சி கிலாஃபத் கிடையாதா?


இன்றைய துருக்கியானது இஸ்லாமிய கட்சியால் ஆளப்பட்டு வருகிறது என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அது தன்னகத்தே நிச்சயமாக ஒரு இஸ்லாமியரை அதிபராகவும் இன்னொரு இஸ்லாமியரை பிரதம அமைச்சராகவும் கொண்டுள்ளது. 

இதன் காரணத்தால் இந்த துருக்கிய மாதிரி அரசாங்கம் பொருமளவில் பிரபல்யம் அடைந்துள்ளது மற்றும் மக்களது பார்வையையும் ஈர்த்துள்ளது. இந்த மாதிரியை கொண்ட அரசாங்கமானது அதாவது சில இஸ்லாமிய சட்டங்கள் மதசார்பின்மையோடு கலந்திருப்பதை விரும்பும் பல மேற்கத்திய அரசியல்வாதிகள் மற்றும் மதசார்பின்மை வாதிகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது ஏனெனில் அவர்கள் தாங்கள் இது மாதிரியான அரசாங்கத்துடன் எளிதில் உறவு கொள்ள முடியும் என்பதோடு இது போன்ற நிலையை ஏனைய முஸ்லிம் உலகில் பார்க்க விரும்புகின்றனர். 

முஸ்லிம் உலகில் பெரும்பாலோர் துருக்கி என்பது கிலாஃபத்தின் ஆட்சி முறையை கொண்டதாகவே அறிந்து வைத்திருக்கின்றனர் – இந்த கிலாஃபத்தானது ஒரு போர் குழுவை உலகின் சக்ரவர்த்திகளாக மாற்றியது. தாங்கள் இஸ்லாமிய ஆட்சி முறை படி ஆட்சி செய்கிறோம் என்ற ஏ.கே.பி கட்சியின் கூற்றினை ஆராய்ந்து பார்க்கையில் அதன் திட்டங்களில் இஸ்லாம் எவ்வகையிலும் பங்கு பெற்றிருக்கவில்லை என்றும் அது பொது மக்களிடம் அளித்து வரும் வெறும் வாய்ஜாலமே அன்றி வேறெதுவும் இல்லை. பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கைகள் ஏ.கே.பியின் பிரதான அடையாளங்கள் ஆகும் இரண்டுமே இஸ்லாம் அல்லாத பிற அடிப்படைகளை கொண்டு செயல்படுவதாக உள்ளது.

ஏ.கே.பி விற்கு ஆதரவு திரட்டுவதற்காக எர்துகான் சில பெரு வியாபாரிகள் பயன் பெரும் வகையில் துருக்கிக்கு உள்ளே பணம் கொண்டு வரும் வகையில் பொருளாதார கொள்கைகளை வகுத்துள்ளார். இஸ்லாம் இதை தடுத்துள்ளது மற்றும் அது சில பெரு முதலைகளிடம் சொத்துக்கள் சேரும் வகையிலான மேற்கத்திய மாதிரியிலான பொருளாதார விநியோக முறையிலிருந்து விலகி செல்லும். அதே போன்று துருக்கியின் வெளியுறவு கொள்கையில் இஸ்லாம் எந்த வகையிலும் பங்கு பெறவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எர்துகானின் துருக்கி் அரசாங்கம் இஸ்ரேலுடனான உறவை தொடர்ந்து நீடித்து வருவது இதை இஸ்லாம் முற்றிலுமாக தடுக்கின்றது. ஏ.கே.பி தன்னுடைய வெளியுறவு கொள்கையில் இஸ்லாமை எந்த விதத்திலும் உபயோகிக்கவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் ஆட்சியாளர்களை ஒன்று திரட்டுவதற்கு பதிலாக (சலாஹுதீன் அய்யூபி செய்தது போன்று) அல்லது அல் குத்ஸை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவும் இல்லை இதை செய்யும் ஆற்றல் துருக்கிக்கு இருந்த போதும், எர்துகான் வாய் சவடால் விடும் ஒரு குறுகிய சந்தர்ப்பவாத கொள்கையை இஸ்லாமிய வார்த்தைகள் பூசி தொடர்ந்து பேசி வருகிறார். துருக்கி ஒரு இஸ்லாமிய மாதிரி அரசாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தவில்லை, அது உண்மையில் மேற்குலக நாடுகளை போன்று மதசார்பின்மை மற்றும் தேச நலன் அடிப்படையை கொண்டதாகும்.

http://sindhanai.org/

Jul 27, 2016

துருக்கிய சதிப்புரட்சி - இவர் சொல்வது உண்மையானால்...?

- உஸ்தாத் சஈத் ரித்வான் !


தற்போது அஷ்ஷாமினுடைய நிலத்தில் நடந்தேறி வருகின்ற நிகழ்வுகள் சர்வதேச சக்திகளினதும், பிராந்திய சக்திகளினதும் அதிமுக்கிய கவனத்தை ஈர்த்துள்ள விடங்களாகும். ஏனெனில் அஷ்ஷாமிலே தொடருகின்ற போராட்டம் முதலில் முஸ்லிம்களுக்கும், இரண்டாவது ஐரோப்பாவுக்கும். மூன்றாவது அமெரிக்காவுக்கும், பின்பு ஏனைய தரப்பினர்களுக்கும் வாழ்வா சாவா போராட்டம் எனக்கருதும் அளவிற்கு கனதியானதாகும். அந்தப் போராட்டத்தின் முடிவிலே வெற்றியோடும், இலாபத்தோடும் திரும்புபவரே தோன்றவிருக்கும் அடுத்த யுகத்தின் அதிபதியாக வெளியேறுவதுடன், அதிலே தோற்கடிக்கப்படுவர் சர்வதேச அரங்கில் மதிப்பிழந்த செல்லாக்காசாகி விடும் சூழல் தோன்றிவிடும்.


சிரியாவில் புரட்சி வெடித்த சந்தர்ப்பத்திலிருந்து இன்றுவரை ஏனைய சர்வதேச சக்திகள் சிரிய விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை தடுப்பதற்காக அமெரிக்கா கடுமையான பிரயத்தனத்தை எடுத்து வருகிறது. இதுவரை காலமும் எவரேனும் அதற்குள் தலையிட்டு இருப்பார்களேயானால் அது அமெரிக்காவின் அனுமதியுடனோ அல்லது கடைசியாக ரஸ்யா தலையிட்டதைப்போல அமெரிக்காவில் வேண்டுதலின் பேரிலோதான் அவை இடம்பெறுகின்றன.


பேச்சுவார்த்தைகள் போன்ற அரசியல் வழிமுறைகளினூடாக, அல்லது ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டிப் படுகொலைகளினூடாக சிரியப் புரட்சியில் பாரிய அலுத்தத்தை பிரயோகித்து அமெரிக்கா வழங்குகின்ற தீர்வுக்கு இணங்கச் செய்யும் அமெரிக்காவின் அனைத்து முயற்சிகளும் படு தோல்வியில் முடிந்துள்ளன.


சிரியப்புரட்சி அனைத்து பிரதான தரப்புக்களையும் கதிகலங்கும் ஓர் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக யாருடைய கையில் களத்தின் கயிறுகள் இருக்கின்றனவோ அந்த அமெரிக்காவையே அது விழிபிதுங்கச் செய்துள்ளது.


பாவித்த அனைத்து துரும்புகளும் கை கொடுக்காத நிலையில் இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெறியேறும் பாதையாக துருக்கியை பயன்படுத்த அமெரிக்கா கண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அதன்படி அதனது நாசத்திட்டத்தை தனது முக்கிய முகவரான அர்துகானின் கரங்களால் அமூல்படுத்த அது காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய பிரபல்யத்தை தன்னகப்படுத்தியிருக்கும் அர்துகானுக்கு சிரியாவுக்குள் இயங்கும் சில குழுக்களிடையே காணப்படும் ஏற்பு நிலையை அது பயன்படுத்த நினைத்திருக்கிறது. குறிப்பாக சிரியாவுக்குள் ஈரானிய வகிபாகம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயமாக தோற்றம் பெற்றுள்ள நிலையிலும், சிரியாவுக்குள் ரஸ்ய - ஈரானிய கூட்டணி முயற்சி இனி பலிக்க போவதில்லை என்ற நிலை உருவாகியிருக்கின்ற நிலையிலும் அமெரிக்காவின் கவனம் துருக்கி மீது குவிந்துள்ளமை தவிர்க்கப்பட முடியாததே.


எனவே அது வரவிருக்கின்ற அரங்கிற்கு ஏற்றவாறு அனைத்தையும் தயார்படுத்த களத்திற்குள் குதித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை,


1. எதிர்கால சிரியா இஸ்ரேலுடன் விரோதத்தைப் பேண மாட்டாது என்பதற்கான உத்தரவாத்தை வழங்குவதற்காக துருக்கியின் சியோனிச யூதர்களுடனான உறவை சுமூகப்படுத்துவது.



2. “அஷ்ஷாமின் கொடுங்கோலன் பஷாரின் முழுமையான வெளியேற்றமே சிரியாவின் தீர்வுக்கான நிபந்தனை” என இதுவரை காலமும் பேரளவுக்காவது முன்வைத்து வந்த அர்துகானின் உறவை பஷாருடன் சுமூகப்படுத்தி பலப்படுத்துவது.



3 சிரியாவில் துருக்கியின் தலையீட்டால் ஈரானுக்கும் அதன் நலன்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தி ஈரானுடனான உறவை மேம்மடுத்துவது.



4. துருக்கியின் தலையீட்டால் ஈராக்கின் உள்ளரங்கில்; ஏற்படக்கூடிய பாதிப்பை விளக்கி ஈராக்குடனான உறவை மேம்படுத்துவது.



5. திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் அதனுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படவும், ஐரோப்பியத் தலையீட்டை தொடர்ந்து தள்ளி வைத்துக் கொள்வதற்கும் ரஸ்யாவுடனான உறவை சுமூகப்படுத்துவது



6. அண்மையில் இஸ்ரேலுடன் சமூகமான நல்லுறவை ஏற்படுத்திய கேவலமான செயலினால் அர்துகானின் பிரபல்யம் துருக்கிக்குள் சரிவடைந்து செல்வதை தடுத்து நிறுத்துவது. துருக்கிய இராணுவத்திற்குள் அர்துகானுக்கு எதிராக உருவாகி வரும் எதிர் சக்திகளின் விவகாரத்தை தீர்;த்து வைப்பது...


தமது அரசியல் தீர்மானப் பொறிமுறைக்கு வெளியே இடம்பெற்றதாக அர்துகானே ஏற்றுக்கொண்ட சம்பவமான ரஸ்ய தாக்குதல் விமானத்தை துருக்கிய விமானப்படை சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்த எதிர் சக்திகளின் வளர்ச்சியை தெளிவாகக் காட்டியது துருக்கிய நிகழ்வுகளை அவதானிப்போர் அறிந்த விடயமே.


7. சிரியக் களத்துக்குள் அர்துகான் முழுமையான நுழைவதாக இருந்தால் உள்நாட்டுக்குள் அவரை புறமுகுகில் குத்துகின்ற எந்தவொரு உறைவாளையும்; விட்டு வைக்க முடியாத நிலை உருவாகும். இத்தகைய உறைவாட்கள் இராணுவத்துக்குள் அவரை எதிர்க்கின்ற அணிகளில் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்ததால் அவற்றை முற்றாக அகற்றுவது.



மேலும் முக்கிய சில அவதானங்கள்...


முறியடிக்கப்பட்ட சதிப்புரட்சி, மக்கள் ஆதரவைத் திரட்டக்கூடிய விதத்தில் மக்களை விழித்து ஆற்றப்பட்ட எத்தகைய உரையையும் தாங்கி வராமலும், அர்துகானுக்கு எதிராக மக்களை தூண்டிவிடக்கூடிய விதத்தில் அவரது கொள்கைகளை அம்பலப்படுத்தாமலும், இன்னும் சொல்லப்போனால் சதியினை மேற்கொண்டவர்களின் இலக்குகளை சுட்டிக்காட்டக்கூடிய அல்லது சதிப்புரட்சியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நலனை சுட்டிக்காட்டக்கூடிய எத்தகைய சைக்கினையைக் கொண்டிராத வெறுமையாக ஒன்றாகவே காட்சியளிக்கிறது.


அதற்கும் மேலாக சதிப்புரட்சியின் இரு மருங்கிலுள்ளவர்களும் ஒரே திசையை பின்பற்றுபவர்கள். அர்துகானும், அவரது எதிராளிகளான பத்ஹ}ல்லாஹ் குலனும் அமெரிக்காவை பின்பற்றுவர்கள்!


மேலும் சதிப்புரட்சியினால் இராணுவத்துக்குள் தமக்கு இருக்கின்ற செல்வாக்கிற்கு என்னவாகும் என்பது பற்றி பிரித்தானியர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சதிப்புரட்சி தொடர்பாக பேசிய அமெரிக்க பேச்சாளர்களின் பேச்சுக்களில் சஞ்சலமற்ற நிலை தெரிகிறது.


மேலும்...

இந்த சதிப்புரட்சி அர்துகானினதும், அவரது அரசாங்கத்தினதும் பிரபல்யத்தை அதிகரிக்கும்.
மேலும் இராணுவத்தின் மீதான அவரது இறுங்குப்பிடியை உறுதிப்படுத்தும்.
அத்துடன் அவரது அரசியல் எதிராளிகளை மென்மேலும் பலகீனப்படுத்தும்.


இவை அனைத்தும் அர்துகானுக்கு கைகூடி வருமானால், சிரியாவில் அமெரிக்காவுக்காக சேவகம் செய்யும் துருக்கியின் வகிபாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வலிமையை அது அர்துகானுக்கு வழங்கும்.

முடிவாக,



சிரியா மீது துருக்கி செய்ய இருக்கின்ற தலையீடு சிரியப்புரட்சி தொடர்பான அமெரிக்காவின் அதிமுக்கியமானதும் ஆபத்தானதுமான செயற்திட்டங்களில் ஒன்றாகவே இருக்கப் போகிறது.


இந்தப் புரட்சிக்கு பலியாகிய துருக்கிய இராணுவம் அமெரிக்காவின் பலிக்கடாக்களாகியிருக்கின்ற அதேவேளை அரங்கேற்றப்பட்ட துருக்கிய சதிப்புரட்சியானது கொடியதொரு எதிர்காலத்திட்டத்திற்காக, காணப்படும் நிலைமைகளை கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வாகவே தெரிகிறது. மாறாக அது ஏற்கனவே நடந்துகொண்டிருந்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாக தென்படவில்லை.


எனவே நிகழ்வுகள் எதை நோக்கி? எந்தளவு தூரத்திற்கு? எவ்வளவு காலத்திற்கு? நீளப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Source : Darulaman.net

Jul 23, 2016

துருக்கிய சதிப்புரட்சியை அரங்கேற்றியது பத்ஹுல்லாஹ் குலனா? தைய்யிப் அர்துகானா? அல்லது மூன்றாவது சக்தியா?




 பல முஸ்லிம்களின் உயிரைக் குடித்த மக்களின் இயல்பு வாழ்வில் வீணான குழப்பத்தை ஏற்படுத்திய அண்மைய துருக்கிய இராணுவ புரட்சி முயற்சியை முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். புரட்சியின் வீரர்களாக மேற்குலக கைக்கூலி ஜெனரல்களால் களத்தில் இறக்கி விடப்பட்டு இன்று குற்றவாளிகளாக களங்கப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவச் சிப்பாய்களுக்காகவும் ஒரு கணம் எமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்களும் எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று மேற்குலக அடிவருடிகளின் காய் நகர்த்தல்களுக்காக அடிக்கடி பலிக்காடாவாக்கப்படும் எமது உம்மத்தின் இளைஞர்களே!

கமாலிச, பிரத்தானிய விசுவாச அணிகளுக்கும், தற்போது இராணுவத்திற்குள் மிகப்பெரும்பான்மை செல்வாக்கிலுள்ள அமெரிக்க சார்பு – அர்துகான் அணிகளுக்கும் இடையான முறுகல் நிலை தொடர்ந்து இருந்து வருவது நாம் அறித்ததே. அதேபோல இன்று பத்ஹுல்லாஹ் குலன் சார்பினரே சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என அர்துகான் அணியினரால் அரசியல் நோக்கத்துடன் பரப்புரை செய்யப்படும் விடயம் அனேகமாக யதார்த்ததுடன் முரண்பட்டாலும், அமெரிக்க முகவரான பத்ஹ}ல்லாஹ் குலனின் ஆதரவு இராணுவ உளவுத்துறைக்குள்ளும், பொலிஸ்துறைக்குள்ளும், நீதித்துறைக்குள்ளும் கணிசமான அளவில் காணப்படுவதும் மறுப்பதற்கில்லை. இதற்கிடையே சிரியாவில், அமெரிக்காவும், ரஸ்யாவும், துருக்கியும் ஒரே இலக்குடன் ஒருக்கிணைக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் நி;லையில் நவம்பர் 2015 இல், சிரியா மீது தாக்குதல் நடாத்திய ரஸ்ய தாக்குதல் விமானம் ஒன்றை துருக்கிய விமானப்படை தன்னிச்சையாக சுட்டு வீழ்த்திய சம்பவத்தை நாம் அறிந்திருப்போம். அதிபர் அர்துகானினதும், அவருக்கு விசுவாசமான இராணுவ உயர் தலைமையினதும் அனுமதியில்லாமல் இடம்பெற்ற இதுபோன்ற நிகழ்வுகள் இராணுவத்திற்குள் அர்துகானுக்கு பதிலாக வேறேங்கோ தமது விசுவாசத்தை வைத்திருக்கும் சக்திகளும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காட்டி நிற்கின்றன.

 இந்தப் பின்னணியில் எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி அதியுயர் இராணுவ சபையில் வருடாந்தக் கூட்டம் இடம்பெற இருந்த சூழலில் அர்துகானுக்கும், இராணுவத்துக்குள் சில அணிகளுக்கும் இடையேயான முறுகல் நிலை வலுவடைந்து இருந்தது. இதன் விளைவாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல இராணுவ அதிகாரிகள் தமது பதவியை கட்டாயமாக கைவிட வேண்டிய அல்லது சிக்கலான விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அதற்கு அஞ்சிய இராணுவ அதிகாரிகளின் அவசரத் தீர்மானமே இந்த சதிப்புரட்சி முயற்சியாக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

அர்துகானின் நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி (AKP) யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கானி டொரனும் இதுபோன்ற ஒரு கருத்தை அல்ஜெஸீராவுக்கு தெரிவித்திருந்தார்,

“ தற்போது சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டவர்கள் சதிப்புரட்சி முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு சற்று முன்னர் சதிப்புரட்சியினூடாக ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரால் வழக்கறிஞர்களால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட இருந்தவர்கள்...” இதே கருத்தை இன்னுமொரு AKP அதிகாரி,


“ கடந்த சில மாதங்களாக இராணுவத்திற்குள் சதி புரட்சியொன்றை நடத்த முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலுள்ளவர்களை துருக்கிய அதிகாரிகள் அவதானித்து வந்தார்கள், எங்களுடைய கணிப்பின்படி சதி முயற்சியில் ஈடுபட்ட இந்தக்குழு, தாம் விசாரணைக்கு உட்படுத்தப்படப்போகிறோம் என்பதை உணர்ந்ததன் விளைவால் தோன்றிய பதற்றத்தாலேயே இவ்வாறு செயற்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.


இராணுவத்தின் அதியுயர் பீடத்தினதும், அதன் சிரேஷ்ட தலைமையினதும் ஆசிர்வாதம் இல்லாத நிலையிலும், சமூக மட்டத்தில் மக்கள் ஆதரவும், ஆணையும் தமக்கு சாதகமாக இருக்க முடியாத சூழலில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் அரசியல் முதிர்ச்சியற்றது. எனினும் காலணித்துவ அரசுகளின் போலியான நம்பிக்கையூட்டல்கள் சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை மறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. எனவே காலணித்துவ சக்திகளுக்கு விலைபோய் தமது சொந்த மக்களுக்கு எதிராகவே துப்பாக்கியை நீட்டும் குறைப்பிரவசப் புரட்சிகள் இவ்வாறு தோல்வியிலேயே முடியும் என்பது வியப்புக்குரியது அல்ல. இதேபோல காலணித்துவ சக்திகளின் தூண்டுதலின் பேரில் பல சதிப்புரட்சி முயற்சிகள் நவீன துருக்கிக்குள் இதற்கு முன்னரும் இடம்பெற்றிக்கின்றமை நாம் அறிந்த விடயமே.


துருக்கிய அரசு குற்றம் சாட்டுவதைபோல இந்த சதிப்புரட்சி முயற்சி துருக்கிய அரசுக்கு சமாந்தரமான கட்டமைப்பு என மிகைப்படுத்தி அழைக்கப்படும் குலன் இயக்கத்தின் (இது கிஷ்மத் இயக்கம் எனவும் அழைக்கபடுவதுண்டு) வேலையாக இருக்க சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகும். 1999 இலிருந்து அமெரிக்கா, பென்சில்வேனியாவில் அடைக்களம் புகுந்திருக்கும் பத்ஹுல்லாஹ் குலனின் தலைமையில் இயங்கும் இந்த இயக்கத்தின் ஆளுமையை விட இந்த புரட்சி முன்னெடுப்பு பாரியது என்பதே அதற்கான காரணமாகும்.


“பென்சில்வேனியாவிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துருக்கியை இயக்க முடியாது” என்று கடந்த சனிக்கிழமை பத்ஹுல்லாஹ் குலனை புரட்சியுடன் தொடர்புபடுத்திச் சாடிய அர்துகான், அமெரிக்கா அவரை தம்மிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


மேலும் துருக்கிய பிரதமர் பின்னலி யில்டிரிம் குலனுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு நாட்டையும், துருக்கியுடன் போர் பிரகடனம் செய்த நாடாகவே துருக்கி கருதும் என்றும் எச்சரித்திருந்தார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை பத்ஹுல்லாஹ் குல்லன் திட்டவட்டமாக நிராகரித்து “கடந்த ஐந்து தசாப்த்தங்களாக பல இராணுவப்புரட்சிகளால் பாதிக்கப்பட்டவனாக இருக்கின்ற என்னை இந்த புரட்சி முன்னெடுப்புடன் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்துவது என்னை விசேடமாக கேவலப்படுத்தும் ஒரு செயலாகும். நான் அதனை திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த சதிப்புரட்சி சிவில் சக்திகளின் சுதந்திரத்தை முடக்கவும், நீதித்துறையையும், இராணுவத்தையும் தனக்கு சார்பாக ஒடுக்கவும், அர்துகான் கனவு காணுகின்ற நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கான நியாயாதிக்கத்தை உருவாக்கவும் அர்துகானே ஏற்பாடு செய்த நாடகமென பழியை அர்துகான் பக்கமே திருப்பியிருந்தார். அமெரிக்காவும் சதிப்புரட்சியின் பின்னணி எதுவும் தெரியாததுபோல நீழிக்கண்ணீர் வடித்த வண்ணம் குலனுக்கு இந்த சதிவேலையில் சம்பந்தம் இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆதாரத்தை முன்வைக்குமாறு துருக்கியிடம் கேட்டிருந்தது. ஒரு வாதத்திற்கு குலனுக்கு இச்சதியுடன் சம்பந்தம் இருந்தாலும் கூட குலனும் ஒரு அமெரிக்க முகவர் என்ற அடிப்படையில் அது அமெரிக்காவுக்கு தெரியாதிருக்க எந்தச் சாத்தியமும் இல்லை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

பத்ஹுல்லாஹ் குலன் குற்றம் சாட்டுவதைப்போல அர்துகானே அமெரிக்க ஒத்துழைப்புடன் இந்த சதி நாடகத்தை நடாத்தியிருப்பதற்கான சாத்தியப்படுகளும் இல்லாமல் இல்லை.

காலணித்துவ சக்திகளின் தீய அரசியல் நோக்கங்களுக்காக துருக்கியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களும், அதனை அடிப்படையாக வைத்து இன்று பிரான்ஸிலும், ஏனைய மேற்குலக நாடுகளிலும் செய்யப்படுவதைப்போல “தீவிரவாதத்திற்கு எதிராக(அரசியல் இஸ்லாத்திற்கு) முழு உலகுமே அணி திரள வேண்டும”; என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தமது மதச்சார்பற்ற மிதவாதப்போக்கை தூக்கிப்பிடித்து, பிராந்தியத்தில் தீவிரவாத்திற்கு எதிரான போராட்டத்தில் தாம் முன்னணி வீரர்கள் என்பதை நிறுவ நினைக்கும் துருக்கிய அரசின் பரப்புரைகளும் இனிவரும் காலங்களில் துருக்கிய அரசியலின் திசையையும், அது பிராந்தியத்தில் வகிக்க இருக்கும் வகிபாகத்தையும் துல்லியமாகக் காட்டி வந்தன.

மேலும் அரைத் தசாப்பதங்களையும் தாண்டி தொடர்கின்ற சிரிய மக்கள் புரட்சியில் அமெரிக்க நலன்களை பாதுகாப்பதற்கு பஷாருக்கு பின் தனக்கு விசுவாசமான ஒரு முகவரை இன்று வரை இனம்காண முடியாது பதறிப்போயிருக்கும் அமெரிக்கா, தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டது. சவூதி, ஜோர்தான், ஈரான், துருக்கி என அனைவரும் அமெரிக்காவுக்காக முண்டியடித்து முயன்று பார்த்தாகி விட்டது. ரஸ்யாவும் அமெரிக்காவுக்கு ஊழியம் செய்ய மூக்கை நுழைத்தும் பார்த்து விட்டது. எனினும் அல்லாஹ்(சுபு) புரட்சியின் தூய்மையை காலணித்துவ சதிவலையில் அகப்படாது இன்று வரை பாதுகாத்து வருகிறான். இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சிரிய புரட்சியின் திசையும், அதனால் விரியும் அரசியல் களமும் முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் தங்குவதற்கு துருக்கியின் வகிபாகமும் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால் ஏனையோர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது துருக்கிக்கு சிரிய புரட்சியாளர்களுக்குள்ளும், முஜாஹிதீன்களுக்குள்ளும் ஆதரவைத் திரட்டும் ஆற்றல் அதிகமாகவே உள்ளதால் அதன் பகிவாகம் எதிர்காலத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

எனவே அமெரிக்கா சொல்கின்ற திசையில் துருக்கி இயங்குவதற்கு வழிவிடுவதற்கு அர்துகானுக்கு இரு முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவது, உள்நாட்டுக்குள் கணிசமான ஆதரவை அவர் தன்வசப்படுத்த வேண்டும். அது துருக்கியின் அரசியலைப் பொருத்த மட்டில் துருக்கிய இராணுவத்தின் பூரண ஆதரவு இல்லாது சாத்தியமேயில்லை. எனவே அந்த ஆதரவுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய எதனையும் அர்துகான் விட்டு வைக்க முடியாது. மேலும் மக்கள் ஆதரவை தன் பக்கம் வளைத்து வைத்திருப்பதற்கு அரசியல் களத்தில் தனது எதிர் சக்திகளை நசுக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கின்றது. அதற்கு என்றோ ஒருநாள் தானும் துருக்கிய அதிபர் கதிரையில் அமரலாம் என நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பத்ஹ}ல்லாஹ் குலனின் கட்டமைப்பின் செல்வாக்கை நாட்டில் தரைமட்டமாக்குவது அர்துகானுக்கு மிகவும் அவசியமாகும். அதனையே இந்த சதிபுரட்சியுடன் பத்ஹுல்லாஹ் குலனை வலிந்து முடிச்சுப்போடுவதன் மூலமாக அர்துகான் செய்து வருவதையும் நாம் காண்கிறோம்.

இரண்டாவது பிராந்தியத்திலும், அண்டை நாடுகளிலும் அர்துகானின் இயக்கத்திற்கு பாரிய தடைகள் எதுவும் இருக்கக் கூடாது. அந்த வகையில் அமெரிக்கா சைக்கினை செய்தால் ஈரானோ, ஈராக்கோ, சவூதியோ அதற்கு தடையாக இருக்கப்போவதில்லை. எனினும் இஸ்ரேலுடனான உறவை மாத்திரம் மீள் புதுப்பித்துக் கொள்வது இந்தக்கட்டத்தில் தவிர்க்க முடியாதது. அர்துகானின் ஆட்சிக்காலங்களில் அர்துகான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சிற்சில சர்ச்சைகள் தவிர்க்க முடியாது தோன்றினாலும் கூட பொதுவாகப் பார்த்தால் தேசிய நலன் கருதிய பரஸ்பர நல்லுறவே அவர்களிடையே இருந்து வந்துள்ளது. எனினும் இம்முறை சிரிய புரட்சினால் உருவாகியிருக்கும் அமெரிக்க நலன் சார்ந்த களவேலையை, துருக்கி இடைஞ்சல்கள் எதுவுமில்லாது செய்வதற்கு இஸ்ரேலுடனான உறவு மீள் சீரமைக்கப்பட்டு மென்மேலும் உறுதிப்படுத்தப்படுவதன் தேவை உள்ளது. அதன் வெளிப்பாடுதான் இஸ்ரேலுடனான நல்லுறவை புதுப்பொலிவுடன் புதுப்பித்து அதனை வெளிப்படையாகவே அறிவித்து, அமெரிக்க நலன்களுக்காக அவர்களுடன் பிராந்தியக் கூட்டாளிகளாக இயங்கும் முடிவினை அர்துகான் அண்மையில் எடுத்திருந்தார். அவரின் சியோனிஸத்தினுடனான உறவு உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் அவர் மீதான ஆதரவை கேள்விக்குறியாக்கியிருந்தது.

அமெரிக்க காலணித்துவ நலனையும், பிராந்தியத்தில் துருக்கியின் இராஜ தந்திர வெற்றியையும், அர்துகானின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு முக்கியமான சந்தியில்தான் இந்த சதி முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதால் அர்துகான் மீதும் சந்தேகம் எழுவதில் தவறில்லை. இராணுவ கட்டமைப்புக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்த அணி முரண்பாடுகளும், சிரியா உட்பட பிராந்தியத்தில் காணப்படும் களநிலை மாற்றங்களால் இராணுவத்திற்குள் அரசியற் தலைமையை மீறி இயங்க நினைக்கும் போக்கின் வளர்ச்சியும், இராணுவ கட்டமைப்புக்குள் களையெடுப்பு ஒன்றிற்கான அல்லது இராணுவ உயர் நிலைகளில் அதிபர் அர்துகான் சார்பான மேலதிக சுத்தப்படுத்தல் ஒன்றின் அவசியத்திற்கான காலநிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே இந்த சதி முயற்சி நடந்தேரியிருப்பதையும், சதிப்புரட்சி முறியடிப்புடன் அர்துகான் இராணுவ உயர் பீடங்கள் உட்பட, நீதித்துறை உட்பட சிவில் சேவை அதிகாரிகளில் ஆயிரக்கணக்கானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவரும் பின்னணியையும் வைத்துப்பார்த்தால் குலன் சொன்னதில் உண்மையேதும் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கே முஸ்லிம்கள் சில முக்கிய விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும். இராணுவ புரட்சி ஒன்றின் ஊடாக அல்லது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளின் புரட்சிகர தீர்மானம் ஒன்றின் ஊடாக நடைமுறையில் இருக்கின்ற ஆட்சியை மாற்ற நினைக்கும் முயற்சி அடிப்படையில் தவறானது அல்ல. அல்லது ஜனநாயம் என்ற தீய குப்ரிய அரசியல் வழிமுறையினூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சடவாத ஆட்சியை பலத்தை பயன்படுத்தி மாற்ற நினைப்பதும் தவறானது அல்ல. அதேபோல தொடர்ந்து தமது சுயநல அரசியலுக்காக காலணித்துவ சக்திகளின் கால்களில் மண்டியிட்டு தமது தீனையும், நாட்டையும், மக்களின் வாழ்வையும் அற்ப கிரயத்திற்கு விற்றுவரும் தலைமைகளுக்கு எதிராக முதுகெழும்புள்ள வீரர்களாக எழுந்து நிற்பதிலும் தவறில்லை. அந்தவகையில் அர்துகானின் அரசை தூக்கி எறிய யாரேனும் முயன்றிருந்தால் அதனை நாம் வரவேற்க வேண்டும். எனினும் இன்று துருக்கியில் நடந்து முடிந்திருப்பது அர்துகானின் காலணித்துவ நலன் பேணுகின்ற ஒரு குப்ரிய சடவாத அரசைக் கவிழ்த்து “துருக்கியின் சடவாத அரசியலமைப்பையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கப் போகிறோம்” என்ற போலி வாக்குறுதியுடன் இடம்பெற்ற இன்னுமொரு காலணித்துவ சடவாத முன்னெடுப்பு. எனவே இந்த இழி இலக்கிற்காக எமது உம்மத்தின் தூய இரத்தம் சிந்தப்படுவது எவ்வகையிலும் அனுமதிக்கப்பட முடியாதது. 1924ஆம் ஆண்டில் கிலாஃபத்திற்கு எதிராக சதிப்புரட்சியை மேற்கொண்ட முஸ்தபா கமாலின் காலத்திலிருந்து இன்று வரை துருக்கியில் இடம்பெறுவது இத்தகைய இழிப்புரட்சிகள்தான். எனவே அவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நாம் எதிர்த்தாக வேண்டும்.

மாறாக அல்லாஹ்(சுபு)வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் விரும்பக்கூடிய தூயதொரு இஸ்லாமிய புரட்சியே துருக்கி போன்ற உயர்ந்த வரலாற்று தேசத்திற்கு பொருத்தமானது. காலணித்துவ தலையீடுகளை வேரடி மண்ணோடு பிடுங்கியெறிந்து ஷரீஆவை முழுமையாக நிலைநாட்டும் தன்மானம் உள்ள ஓர் தலைமையே அதற்கு தேவையானது. எவ்வாறு முஹம்மத்(ஸல்) அவர்களின் மதீனத்துப் புரட்சிக்கு அவ்ஸ், ஹஸ்ரஜ் கோத்திரத்தலைமைகள் தமது கழுத்தை பணயம் வைத்து ஆதரவு தந்தனரோ அதேபோன்றதொரு இஸ்லாமிய புரட்சிக்கு ஆதரவு தருவதே துருக்கிய இராணுவம் போன்றதொரு புகழ்பெற்ற முஸ்லிம் இராணுவத்திற்கு தகுதியானது.

மக்கள் ஆணைக்கு முன்னால் பீரேங்கிகள் ஒரு பொருட்டே இல்லை என சதிப்புரட்சியை முறியடிக்க வீதிக்கிறங்கிய துருக்கிய முஸ்லிம்கள் ஜனநாயகத்தையோ, சடவாதத்தையோ பாதுகாக்கவல்ல களத்தில் வந்து நின்றனர்;. மாறாக மஸ்ஜித்களிலே அதான் ஒலி முழங்கி நாட்டைக் காக்க புறப்பட்டு வாருங்கள் என அர்துகான் அழைப்பு விடுத்ததும் அவர்கள் “யா அல்லாஹ்! யா அல்லாஹ்! அல்லாஹஹு அக்பர்” எனக் கோஷமிட்டபடி வெற்று மார்புடன் டாங்கிகளுக்கு முன்வந்து நின்றது காலணித்துவ சதிகளுக்கு எதிராக இஸ்லாத்தை பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. அர்துகானையும் AKP கட்சியையும் இஸ்லாத்தின் காலர்களாக நினைப்பது குருட்டுத்தனமானது என்றாலும் மக்களின் நோக்கம் உயரியது, அவர்களது குறிக்கோள் தெய்வீகமானது.

எனவே துருக்கிய இராணுவத் தளபதிகளும், வீரமிக்க துருக்கிய பொதுமக்களும் எவ்வாறு சதிப்புரட்சிக்கு எதிராக துணிகரமாக செயற்பட்டார்களோ அதைவிட பல மடங்கு தூய்மையுடனும், தியாகத்துடனும் அல்லாஹ்(சுபு)வின் ஷரீயத்தை தமது மண்ணில் நிலைநாட்டும் புரட்சிக்கு வித்திட வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய காலணித்துவ சக்திகளின் பிடியிலிருந்து தமது இராணுவத்தையும், நாட்டையும் பாதுகாக்க களத்தில் குதிக்க வேண்டும். அவர்களின் கைக்கூலிகளாக இயங்கும் கட்சிகளையும், தலைமைகளையும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். 'துருக்கிய தேசம்' என்ற குறுகிய குப்ரிய தேசிய சிந்தனையிலிருந்து விடுபட்டு 'ஓர் உம்மத்' என்ற அகீதா வழியமைந்த கோட்பாட்டில் நின்று அஷ்ஷாமையும், முழு முஸ்லிம் உலகையும் விடுதலை செய்யப்; புறப்பட வேண்டும்.

அப்போது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையில் வீதிக்கிறக்கிய முஸ்லிம்கள் இரு நாட்கள் கழித்து இவை போன்ற செய்திகளை வாசிக்க மாட்டார்கள்.

அப்போது சதிப்புரட்சியை அடக்கிய சூடு தணிய முன்னரே எமது தலைமைகள் எம்மை ஏலமிடும் இவைபோன்ற அவலமும், அவமானமும் எமக்கு ஏற்படாது.

வெள்ளியன்று சதிப்புரட்சி முயற்சிக்கப்படுகிறது...

ஞாயிறன்று...


“இன்சேர்லிக் இராணுவ விமானத்தளத்திலிருந்து அமெரிக்க யுத்த விமானங்கள் சிரியாவுக்குள்ளும், ஈராக்குக்குள்ளும் தாக்குதல் நடாத்தும் அனுமதியை அர்துகானின் அரசு மீள வழங்கியுள்ளது.”

(17-07-2016 பென்டகன் அறிவிக்கிறது)


இருநாள் கழித்து செவ்வாய் அன்று...


“செவ்வாய்க்கிழமை ISIL போராளிகள் என நினைத்து தவறுதலாக நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க விமானத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்...”

...தோற்கடிக்கப்பட்ட சதிப்புரட்சியுடன் மூடப்பட்ட இன்சேர்லிக் இராணுவ விமானத்தளம் மீளத்திறக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக பறந்த விமானங்களைக் கொண்டே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது... (19-07-2016 டெலிகிராஃப் செய்தி வெளியிடுகிறது)



அர்துகானின் துருக்கி எங்கு பயணிக்கிறது புரிகிறதா?


Sources
http://darulaman.net/

Jul 19, 2016

இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா..??



இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா, அதாவது சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் (தாலிபானிற்கு கீழ்) போன்ற நாடுகளில்?


ல்லை
, தற்போதய முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தின் சில பகுதிகளை மட்டுமே நடைமுறை படுத்தி வருகின்றன: அதிகப்படியாக அவை குடும்பவியல் சட்டங்களின் சில பகுதிகளை உபயோகித்து வருகின்றன, ஆனால் எந்தவொரு நாடும் முழுமையாக தன் சட்டங்களையும் கொள்கைகளையும் இஸ்லாமிய அடிப்படையில் பிரித்தியேகமாக அமைத்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில், இஸ்லாமிய சட்டத்தை குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் அல்லது இஸ்லாமிய உணர்வுகள் மீது தான் அக்கறை கொண்டுள்ளதாக அடையாள படுத்துவதற்காக மட்டுமே உபயோகித்து வருகிறது, ஹுதூத்(தண்டனை) சட்டத்திலும் இதே நிலை தான். இது தான் தகுதியற்ற ஊழலுற்ற அரசாங்கங்கள் மற்றும் அவைகளின் மேற்கத்திய எஜமானர்கள் மற்றும் ஊடகங்கள் இஸ்லாமிய சட்டம் செயலற்று இருப்பதாகவும் மேலும் அதனால் சமூகத்தை நிர்வகிக்க முடியாது என்று சித்தரிப்பதற்காக செயல்படுத்தும் திட்டமாகும்.3

பல லட்சக்கணக்கான திருக்குர்’ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்களை அன்பளிப்பாக வழங்கலாம் மற்றும் உலகெங்கும் பள்ளிவாயில்கள் நிர்மானிக்க அதிகப்படியான நிதிகளை சவூதி அரேபியா அன்பளிக்காக வழங்கலாம், எவ்வாறிருப்பினும் சில இஸ்லாமிய அடிப்படைகளை கொண்ட சட்டங்கள் மற்றும் சில மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களையும் கொண்டு சவூதி அரேபியா ஒரு கலப்படமான சட்டங்களையே பின்பற்றி வருகின்றது. எனினும் இஸ்லாமிய கண்ணோட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அவைகளை அது சட்டங்கள் என குறிப்பிடுவதில்லை. இஸ்லாமிய சட்டங்களையும் மனிதன் இயற்றிய சட்டங்களையும் வேறுபடுத்தி காட்ட சவூதி பிரத்தியேகமாக குறிப்பிட்ட சில வார்த்தைகளை உபயோகிக்கின்றது. அரசியலமைப்பு சம்மந்தமான ஒரு அரபி நூலில் அதன் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், “சவூதியில் விதி(ஆனூன்) மற்றும் சட்டம்(தஷ்ரீ’) போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய ஷரீஆவிலுருந்து எடுக்கப்பட்டவைகளை குறிப்பிடுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது…4 மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களை பொறுத்தவரை அதாவது அமைப்புகள் (அந்திமா) அல்லது வழிமுளைகள (த’லீமாத்) அல்லது பிரகடனங்கள் (அவாமிர்)……. இது தவிர ஒரு பரம்பரை முடியாட்சியான சவூதி அரேபியா மார்க்க நிறுவனங்களை முதலாளித்துவ மற்றும் மேற்கத்திய உலகிற்கு ஆதரவான திட்டங்களுக்கான எதிர்ப்புகளை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக உபயோகித்து வருகிறது.

இதை போன்று தாலீபானும் இஸ்லாத்தின் சில அம்சங்களை நடைமுறை படுத்தி வந்தது. ஆப்கானிஸ்தானை தாலீபான்கள் ஆண்ட போது அவர்கள் ஒருபோதும் தாங்கள் இஸ்லாமிய அரசாங்க முறையான கிலாஃபத் முறையை பின்பற்றுகிறோம் என்று கூறியதில்லை, மாறாக தங்களை ஒரு அமீரகமாகவே அடையாள படுத்தியது அது வெளியுறவு கொள்கை அற்ற ஒரு சில சட்ட வறையறைகளை கொண்டு ஒரு எல்லைக்குள் மட்டுமே செயற்படும் ஒரு அரசியல் நிறுவனமாக தான் செயல்பட்டது. இஸ்லாமிய ஆட்சியமைப்பானது பொருளாதாரம், சமூகவியல், ஆட்சிமுறையாக இருக்கட்டும் மேலும் வெளியுறவு கொள்கை அமைத்து கொள்வது ஆகட்டும் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் நடைமுறை படுத்தக்கூடியதாக இருக்கும், கிலாஃபத்தானது ஒரு தனித்து விடுபடக்கூடிய நாடு கிடையாது.

ஈரானிய அரசியலமைப்பு பல அம்சங்கள் இஸ்லாத்தோடு ஒத்து போகக்கூடிய வகையில் இருக்கின்றன அதேபோல மற்றவைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிராக உள்ளது. ஈரானிய அரசியல் சாசனத்தின் விதி 6 இவ்வாறு கூறுகின்றது: “ஈரானின் இஸ்லாமிய குடியரசு, நாட்டின் விவகாரங்களை ஜனாதிபதி, இஸ்லாமிய கலந்தாய்வு சபை உறுப்பினர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் போன்றவர்களை தேர்தல்கள் நடத்தி தேர்த்தெடுப்பது உட்பட பொதுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் நாட்டின் விவகாரங்களை மேற்கொள்ள வேண்டும், அல்லது பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அதன் சில விவகாரங்களில் அரசியல் சாசனத்தின் இதர விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை தழுவி மேற்கொள்ள வேண்டும்.” இஸ்லாமிய அமைப்பை கொண்ட அரசியலமைப்பு – அதாவது கிலாஃபத்தானது முழுமையாக இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாகும். ஈரானின் விஷயத்தில் இது பொருந்தாது ஏனெனில் அது தனது அரசியலமைப்பில் ” நாட்டின் விவகாரங்களை தேர்தல்கள் மூலம் வெகுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவதாக” அறிவிக்கிறது”. இஸ்லாத்தை பொறுத்தவரை நாட்டின் விவகாரங்கள் வெகுஜன கருத்தின் அடிப்படையில் அல்லாமல் ஷரீ’ஆவின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

Sources: sindhanai.org

Jul 17, 2016

மதிப்பிற்குறிய தையுப் எர்தூகான் அவர்களுக்கு!



உங்களது விவேகமான முயற்சி மூலம் ஒரு மோசமான விளைவை தரத்தக்க சதிமுயற்சி முறியடிக்கப் பட்டது! அல்ஹம்துலில்லாஹ். உங்கள் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்த மக்கள் மீண்டும் அதே மதிப்பை தருவார்கள் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமுமில்லை.

நீங்கள் ஹிக்மத் என்ற பெயரில் உறவாடிய அல்லாஹ்வின் எதிரிகளே உங்களை கழுத்தறுக்க துணிந்தார்கள் என்பதை தாங்கள் எம்மைவிட நன்றாக அறிவீர்கள். ஆனாலும் துருக்கியின் வெளியுறவுக் கொள்கையின் சகல ஒப்பந்தங்களும் உடன் பாடுகளும் அந்த துரோகிகளுக்கு சாதகமாகவே இன்னும் இருப்பதையும் எம்மை விட நீங்கள் நன்றாக அறிவீர்கள்!


தம்மோடு நட்புறவு பாராட்டிய யூதக் கோத்திரங்களே வஞ்சம் செய்ய துணிந்தபோது அல்லாஹ்வின் தூதரது(ஸல்) முதல் அரசியல் நடவடிக்கை அவர்களுடனான ஒப்பந்தங்களை துண்டித்தது தான்! ஆனால் தாங்கள் இது விடயத்திலும் உங்கள் பாணியில் ஹிக்மத் வர்சனை பின்பற்றி படிப்படியாக முறிப்பதாக கூறுவீர்கள் என்றே எதிர்பார்க்கிறேன். அல்லது (உருப்படியான ஒரு ஜெனரேட்டர் பிளான்ட் கூட இருக்காத )துருக்கியில் உள்ள!!!! ஒரு அமெரிக்கன் மிலிட்டரி பேசுக்கு பவர்கட் செய்து! எம்மனதை குளிரப் பண்ணியது போல காத்திரமான சில பல வேலைகளை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

நீங்கள் உடன்பாடு ரீதியாக உறவு வைத்திருக்கும் அந்த இஸ்லாத்தின் எதிரிகள் நட்புறவோடிருந்து திடீரென வஞ்சத்தில் குதித்தவர்கள் அல்ல! மாறாக காலம் காலமாக துரோகத்தை வழிமுறையாக கொண்டவர்கள்! இதெல்லாம் நாம் சொல்லித்தான் தாங்கள் தெரிய வேண்டியதில்லை! இதற்குப் பிறகும் அவர்கள் எந்த விதத்திலும் நம்பிக்கைக்கு உரித்தானவர்கள் அல்ல! மேலும் இவர்களே முஸ்லீம் நிலங்களில் இரத்த ஆற்றை ஓடவிட்டவர்கள்! இடுகாடாய் மாற்றியவர்கள், மாற்றிக் கொண்டிருப்பவர்கள்! இப்படிப் பட்டவர்களோடு நீங்கள் ஸிலோ மோசனில் ஒப்பந்தங்களை முறிக்கும் போது அவர்கள் வேகமாக எம்மில் பலருக்கு கபன் அணிவிக்கும் பணியை முடிப்பார்கள்!

அதைவிட ஒரு முக்கியமான விடயம் நீங்கள் செக்கியூலரி சத்தையும் தேசிய ஜனநாயகத்தையும் நம்பியுள்ளதே அந்த குள்ள நரிகள் முஸ்லீம் உம்மத்தை ஆடுகளாக்கி தேவைக்கு ஏற்ப பலியெடுக்க போட்ட திட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்! அதற்கு உடந்தையாக இருந்த முஸ்தபா கமால் அத்தாதுர்க் என்ற நயவஞ்சக துரோகியை மதிப்பித்தவாறே துருக்கியின் ஆட்சிக்கதிரையில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை நாம் நினைவூட்ட கடமைப் பட்டுள்ளோம்! அந்தவகையில் ஒரு அடிப்படை சதியின் நிழலில்தான் தாங்கள் அமர்ந்துள்ளீர்கள் என்பதை தங்களால் மறுக்க முடியாது!

இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்; அது சதிப்புரட்சியை தடுக்க மக்களை அழைத்த அதே வார்த்தைகளை கொண்டு செக்கியூலரிச ஜனநாயகம் எனும் கமால் பாட்சாவின் ரூலிங் சிஸ்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து அவ்விடத்தில் இஸ்லாத்தை பிரதியீடு செய்ய மக்களை அழையுங்கள் என்பதே! உங்கள் வார்த்தைகளை நம்பி அதற்கு மக்கள் செவிசாய்க்க மறுத்தால் ஏதோ மிகப்பெரிய தவறு நிகழ்கிறது என்பதை உங்களாலும் எம்மாலும் புரிய முடியும்! இந்த சரியான சந்தர்ப்பத்தை தவறவிட்டால் எப்போதுதான் இவைகளை செய்யப் பேகிறீர்கள்!?

இவண்
முஸ்லிம் உம்மத்தில் ஒருவன்.

கசப்பான சில உண்மைகள்!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கவேண்டும் என்ற துருக்கியின் அந்த நினைப்பு வரவேற்கத் தக்கது. ஆனால் அதுதான் ஒரு முஸ்லிம் எதிர்பார்க்கும் இஸ்லாமிய அரசியலின் ரூபம் என நினைத்தால் அதுவும் ஒரு தவறான நிலைப்பாடு! இஸ்லாத்தின் அரசியல் என்பது முற்றாக வஹிவழியில் தன் அதிகாரக்கட்டமைப்பையும் அதனடி உடனடியாக சிவில் நிர்வாகம் இஸ்லாத்தின் ஏவல் விலக்கள்களை அடிப்படையாக கொண்டு அமுலாக்கப் படுவதாகும்.

இதனடி அந்த நிலத்தின் பொருளாதாரக் கொள்கை , கல்வி கலாச்சாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்ற சகல துறைகளும் ‪#‎வஹியின்‬ கட்டளைக்கு ஏற்ப பிரகடனப்படுத்தப்பட்டு அமுல் நடாத்தப்படுவதாகும்; அதுவரை அந்த நிலம் முஸ்லீம்களை அதிகமாக கொண்டும் ஒரு முஸ்லிமை கொண்டும் ஆளப்பட்டாலும் அது ‪#‎தாருல்‬ குப்ர் என்ற அந்தஸ்த்தை விட்டும் மாறிவிடாது!


முன்னால் சோவியத் யூனியனின் உடைவிற்கு பிறகும் அமெரிக்காவை அதன் பாலிசியை எதிர்க்கும் பல அதிகார வலயங்களை எம்மால் இனங்காட்ட முடியும். கியூபா, வடகொரியா, பிரேசில், கொலம்பியா, வெனிசுலா.... இப்படி இந்த லிஸ்ட் நீண்டது! ஒருவகையில் முஸ்லீம் உலகுக்கான சாதக அரசியலாக இதை கருத முடியுமே தவிர இஸ்லாமிய அரசியலின் வடிவமாக இதை கருத முடியாது! மேலும் அமெரிக்காவுக்கு உள்ளேயே அமெரிக்க எதிர்ப்பாளர்களை ஏராளமாக காணலாம்.

ஒரு நிலம் முதலாளித்துவ, கம்யூனிச அரசியல் பொருளாதார சமூக கல்வி கலாச்சார நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விடுபட்டு அந்நிலத்தின் இராணுவம், மக்கள் நிபந்தனையற்ற முறையில் இஸ்லாத்தை அமுலாக்கம் செய்ய உடன்படும் நிலையிலேயே அது #தாருல் இஸ்லாமாக மாறுகிறது. அங்கு பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இல்லாதிருப்பினும் சரியே! இத்தகு கோட்பாட்டு உண்மையை கருத்தில் கொண்டே நாம் துருக்கியை மட்டுமல்ல முஸ்லிம் உலகின் சகல அதிகார நிலங்களையும் நோக்க வேண்டியுள்ளது! கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.

இப்போது அமெரிக்க எதிர்ப்பு முகத்தை எர்தூகான் அரசு காட்டினாலும் கமால் பாட்சாவின் துரோக அரசியலை கைவிட்டு அதன் மேல் காறி உமிழ்ந்துவிட்டு அந்த எதிர்ப்பை காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முஸ்லீம் உலகின் மனோபாவத்தை தன் பக்கம் ஈர்க்கும் ஒருவகை மொஸ்மரிச பாலிசியை அவர் கையால்வதாகவே கருத முடிகிறது! இந்தப் பதிவின் மீது ஏகப்பட்ட முரண் விமர்சனங்கள் வரும் என்பதை நான் அறிவேன். அதற்கெல்லாம் பதில் சொல்லப் போவதில்லை காலம் இன்ஷா அல்லாஹ் பல உண்மைகளை புரியவைக்கும்.

Jul 16, 2016

துருக்கியில் இராணுவச் சதிப்புரட்சி தோல்வி...!!!!


துருக்கியில் இராணுவச் சதிப்புரட்சி தோல்விகண்டிருப்பதும், அர்துகானின் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதும் உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான விடயம். இதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்: வரவிருந்த மாற்றீடு மிக மோசமானது! முஸ்தபா கமாலை “நபியாக” ஏற்றுக்கொண்ட அதிதீவிர மதஒதுக்கல் கொள்கையை “தீனாக” ஏற்றுக்கொண்ட இராணுவ ஆட்சியாளர்கள் ஒரு சாபக்கேடே! அவர்களை எந்த முஸ்லிமாலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

அர்துகானை உள்ளதில் நல்லதாக ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அதேவேளை, இன்னொரு கூட்டமோ அர்துகானிற்கு அப்பால் ஒரு நல்லது இல்லவே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. இந்த இரண்டாம் நிலைப்பாடு ஆரோக்கியம் இல்லாத ஒரு நிலைப்பாடு; அது அர்துகான் என்ற மனிதனின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களைக்கூட பரிசீலனை செய்யவும் ஏற்கவும் மறுக்கின்ற ஒரு நிலைப்பாடு.

பொதுவாக இஸ்லாமிய அரசியல் குழுக்களுக்கு மத்தியில் தங்கள் இலக்குகள் தொடர்பாக கருத்துவேறுபாடுகள் எதுவுமில்லை. (இஸ்லாமிய ஆட்சியினை நிறுவுவதே அனைவரதும் இலக்கு.) இலக்குகளை அடைவது தொடர்பான வழிமுறைகள் தொடர்பாகவே அநேக முரண்பாடுகள் காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், பாராளுமன்ற ஜனாநாயக முறையினூடாக ஒரு இஸ்லாமிய ஆட்சியினை நிறுவுவது சாத்தியம் என்று நம்புகின்றார் அர்துகான். எனவே இவ்வாறன வழிமுறையில் நம்பிக்கை கொண்டோர் பொதுமக்களின் அமோக ஆதரவைத் தம் பக்கம் வைத்திருப்பதிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றார்கள்.

இந்த வழிமுறையை (எனவே அர்துகான் போன்றோரை) விமர்சிப்போரின் நிலைப்பாடு பின்வருமாறு காணப்படுகின்றது:

உண்மையான ஆட்சிமாற்றம் இராணுவத்தின் ஆதரவைப் பெறுவதிலேயே தங்கியுள்ளது; அது வெறுமனே மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் அல்ல.

இதற்கு உதாரணமாக தென்னமெரிக்காவில் இடம்பெற்ற அத்தனை இராணுவப்புரட்சிகளையும் பட்டியல் இடுகின்றார்கள் இவர்கள். அதுமட்டுமல்லாது, அல்ஜீரியா, பாலஸ்தீன், அண்மையில் எகிப்து போன்ற முஸ்லிம் நாடுகளிலும் கூட இராணுவத்தின் ஆதரவு தங்கள் பக்கம் இல்லாததால் தேர்தல்களில் அமோக வெற்றியீட்டிய இஸ்லாமியக் கட்சிகள் எவ்வாறு அதிகாரத்தைப் பிடிக்கமுடியாமல் போயின என்பதையும், பின்னர் எவ்வாறு இராணுவங்களால் துவம்சம் செய்யப்பட்டன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

இந்தக் கருத்துமுரண்பாட்டின் தொடர்ச்சியையே “அர்துகான் எவ்வாறு இராணுவப் புரட்சியிலிருந்து தப்பித்துக்கொண்டார்?” என்ற கேள்விக்கான விடையிலும் அவதானிக்க முடிகின்றது.

பொதுமக்களே இந்தப் புரட்சியைத் தோற்கடித்தனர் என்கின்றனர் அர்துகானிய சிந்தனையாளர்கள். இல்லை! இராணுவத்தில் ஒரு பகுதியே இந்தப் புரட்சியைத் தோற்கடித்தனர் என்கின்றனர் அவரின் அரசியல் போராட்ட வழிமுறையை விமர்சிப்போர்.

இதில் எந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது? பொதுவாக இராணுவங்கள் “ரோபோக்கள்” போன்றவவை. அவற்றிடம் மனிதாபிமானச் சிந்தனைகள் இருப்பதில்லை. சுடுவது, கொல்லுவது, எரிப்பது அவர்களின் தொழில். சீனாவின் தினமன் சதுக்கத்திலும் எகிப்தின் அந்-நஹ்தா சதுக்கத்திலும் இதை நம்மால் காணமுடிந்தது.

துருக்கியில் முயற்சிக்கப்பட்ட இராணுவப் புரட்சியை எதிர்த்து மக்கள் வெள்ளமாக வீதிக்கு இறங்கியது உண்மை. ஆனால், புரட்சிசெய்த இராணுவத்தினரின் யுத்ததாங்கிகளை நிறுத்தியது மக்கள் அல்ல! அது துருக்கிய இராணுவத்தினரின் மற்றொரு பகுதியினரே! புரட்சிக்காரர்களுக்கு இராணுவத்திற்குள் பரவலான ஆதரவு இருக்கவில்லை. எனவே அர்துகானிற்கு ஆதரவான இராணுவப் பகுதியினர் தங்களின் F16 க்கொண்டு பயமுறுத்தியும், தாக்கியும் புரட்சிக்காரர்களைப் பணியவைத்தார்கள்.

இந்த இராணுவப் புரட்சியின் போது துருக்கிய இராணுவத்தின் பெரும் பகுதியினர் அர்துகானுக்கு ஆதரவாக செயற்பட்டது உண்மை. ஆனால், இஸ்ரேலுடனான ஒரு யுத்தமோ அல்லது சிரியாவில் ஒரு மனிதாபிமானத் தலையீடோ என்று வருகின்றபோது இந்த இராணுவம் அர்துகானுக்கு எந்த அளவிற்கு ஆதரவு வழங்கும் என்பதில் பெரும் சந்தேகம் இருக்கின்றது. அர்துகான் ஏற்கனவே இஸ்ரேலுடனான சுமுக நிலையைப் பேணிவருவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம்.


From Mohamed Faizal

Dec 1, 2015

துருக்கி, ரஸ்ய விமானத்தை தாக்கயளித்த சம்பவத்திலிருந்து நாம் புரிய வேண்டிய 10 விடயங்கள்

1) இது ரஸ்ய யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கிய விமானியின் படம். அவர் ஒரு வீர புருஷன். இதற்கு முன்னமே மாஸ்கோவின் கதவுகளை உரத்துத் தட்டிய உத்மானிய இராணுவத்தின் வழித்தோன்றல் அவர். அவர் இச்செலுக்காக பெருமைப்படவேண்டும்.
 
2) ரஸ்யா சிரிய முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர யுத்தத்தில் முன்னணியில் நின்று தாக்குதல் நடாத்தி  நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்களை இதுவரை குடித்திருப்பதால் இந்தச் செய்தி கேட்டு சிரிய முஸ்லிம்களும், உலகின் ஏனைய சொரணையுள்ள முஸ்லிம்களும் ஆறுதல் அடைந்திருப்பார்கள்.
 
3) இந்தத்தாக்குதல் மிகவும் தாமதமானதும், மட்டுப்படுத்தப்பட்டதும் என்றாலும் முஸ்லிம்கள் நீண்ட நாட்களாய் எதிர்பார்த்து நின்ற போற்றுதலுக்குரிய செயலாகும். இத்தாக்குதல்; கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எமது கண்ணியத்தையும், சுயமரியாதையையும் இழந்து நிற்கும் எமக்கு எமது புகழ்பெற்ற வரலாற்றை கண் முன்னே கொண்டுவந்து ஆறுதல் அளிக்கின்றது.
 
4) உத்மானியர்களின் தமது வரலாற்றில் எதனைச்செய்தார்களோ, தமது வீர வரலாற்றுடன் எதனை இணைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்களோ அந்த அளவீட்டின் படி இந்த சம்பவத்தை அளந்து பார்த்தால்; யார் தன்னை உத்மானிய கிலாஃபத்தின் உண்மையான வழித்தோன்றலாக கருதுகிறார்களோ அவர்களில் ஒருவனின் செயற்பாடாகவே இந்தத்தாக்குதல் கருதப்பட வேண்டுமெயொழிய இன்றைய சடவாத துருக்கியின் ஒரு விதி விலக்கான செயலாகப் பார்க்கப்படக்கூடாது.
 
5) ரஸ்ய விமானத்தை குறிவைத்து தனது ரிகரை அழுத்திய துருக்கிய விமானி தனது செயலுக்காக மிகுந்த உவகை கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்த மனோநிலைக்கும் முஸ்லிம் உலகிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்களின் உணர்வுகளுக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்பதை இந்த இடத்தில் நாம் மறந்துவிடலாகாது.
 
6) எதிரிக்கு எதிராக எமது சிப்பாய்களின் ரிகர் அழுத்தப்படுவதற்கு மேலிடத்திலிருந்து வரும் ஒரு கட்டளை மாத்திரம் போதுமானது என்பதையே இந்த சம்பவம் எமக்கு திரும்பவும் ஞாபகமூட்டுகிறது. எனவே எமது அடிப்படை பலகீனம் என்பது துணிச்சலான அரசியல் தீர்மானமின்மை என்பதேயொழிய அது இராணுவ வளம் தொடர்பானதாகவோ, மோசடியான இராணுவம் தொடர்பானதாகவோ எப்போதும் இருந்ததில்லை.
 
7) ஒரு பேச்சுக்கு துருக்கிய வான்வெளிக்குள் இந்த ரஸ்ய விமானம் அத்துமீறாதிருந்து துருக்கியிலிருந்து சில மைல்களுக்கு அப்பால் சிரியாவின் வான்வரப்பில் முஸ்லிம்களை பலியெடுப்பதில் ஈடுபட்டிருந்தால், துருக்கி அந்த விமானத்தை தாக்கி அழித்திருக்குமா? சிரியாவில் சிந்தப்படும் முஸ்லிமின் இரத்தத்தைப் பாதுகாப்பது துருக்கியின் வான் எல்லையைப் பாதுகாப்பதை விட மகத்தானது என்பதில் எந்தவொரு முஸ்லிமுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா?அதற்காகத்தானே துருக்கி களமிறங்கியிருக்க வேண்டும்? உண்மையில் அதைத்தானே இஸ்லாம் அதன் மீது கடமையாக்கியிருக்கிறது? அது கஷ்டமான செயலா? என்று கேட்டால், பதில் 'கஷ்டமானதுதான்'.  ஆனால் முடியாத காரியமா? என்று கேட்டால் பதில் 'இல்லை' என்று தயங்காமல் கூறலாம்.
 
வரலாற்றின் முக்கிய திருப்பு முனைகள் அரிதாகவே வந்துபோகும். இது அப்படியான ஒரு திருப்பு முனை. பிராந்தியம் அதியுச்ச நிலையில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. உலகளாவிய மற்றும் பிராந்திய சக்திகள் முஸ்லிம் உலகில்(அது துருக்கிக்கும் பொருந்தும்) ஒரு முடிவு கண்டுதான் தீருவோம் என்று களமிறங்கியிருக்கின்றபோது களத்தில் துருக்கியின் விவேகமான முடிவே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
 
8) நவ காலணித்து வேட்டையிலிருந்து துருக்கி தப்பித்துவிடலாம் என்று பகற்கனவு காணுகிறதா? குப்பார்களும், பிராந்திய சக்திகளும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான பொறி பற்றக்கூடும் என எதிர்பார்க்கின்ற இந்தவொரு நிலத்தையும் விட்டுவைக்கப்போவதில்லை. இதனைப்புரிந்து கொள்ள துருக்கிய தலைமைகள் பெரிதாக சிரமப்பட வேண்டியதில்லை. வெறுமனவே ஈராக்கின் இன்றைய நிலையை பார்த்தால் போதுமானது. எனவே துருக்கி தனது கடப்பாட்டை புரிந்துணர்ந்து உண்மையான சவால்களை முகம் கொடுப்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.  இன்று அதனைச் செய்வதற்கு தயங்கினால் நாளை அதன்மீது சாபக்கேட்டின் மேகங்கள் சூழ்ந்து கொள்வதை தடுக்க முடியாது போய்விடலாம்.
 
9) இன்று சிரியாவிலே முஸ்லிம்களின் அழுகுரல் வானத்தை பிளக்கிறது. அவர்களின் குருதி ஆறாகப் பாய்கிறது. மேலும் இதையொத்த வேதனையிலும், சோதனையிலும் பலஸ்தீனிலும், ஈராக்கிலும், செச்னியாவிலும், காஸ்மீரிலும், பர்மாவிலும் எமது உம்மத் நீண்ட காலமாகத் தவிக்கிறது. இந்நிலையில் அல்லாஹ்(சுபு) உதவி மந்திரத்தால் மலரப்போவதில்லை. மாறாக அல்லாஹ்(சுபு) எம்முள்ளிருக்கும் துணிச்சலும், வாய்மையும், தக்வாவுமுள்ள தலைமைகளின் கரங்களாலேயே அந்த வெற்றியை  கொண்டு வருவான்.
 
முஸ்லிம்கள் அவரில் தேவையுடையவராக இருக்கின்ற நிலையில் எந்தவொரு தலைவர் முஸ்லிம்களை தவிப்பில் விட்டு விடுகின்றாரோ அவரை அல்லாஹ(சுபு) தவிப்பில் விட்டு விடுவான் என்பதை எமது மார்க்கம் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இது குறித்து பின்வரும் நபிமொழியில் தீர்க்கமாகச் சொன்னார்கள்.
 
“ஒரு மனிதனின்(முஸ்லிமின்) மரியாதைக்கு பங்கம் விளைவிக்கப்படுகின்ற இடத்தில் அல்லது அவனது கண்ணியம் களங்கப்படுத்தப்படுகின்ற இடத்தில் அந்த மனிதனை(முஸ்லிமை) கைவிடும் ஒருவருக்கு, அல்லாஹ்வின் உதவியை அவர் அதிகம் நாடுகின்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ் அவரை கைவிடாமல் இருக்க மாட்டான். ஒரு மனிதனின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கப்படுகின்ற இடத்தில் அல்லது அவனது கண்ணியம் களங்கப்படுத்தப்படுகின்ற இடத்தில் அந்த மனிதனுக்கு உதவும் ஒருவருக்கு, அல்லாஹ்வின் உதவியை அவர் அதிகம் நாடுகின்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ் உதவாமல் இருக்க மாட்டான்.” (அபுதாவூத்)
 
10) இந்த தாக்கியளிப்பு சம்பவத்தை துருக்கி தன்னிச்சையாக செய்திருந்தாலும் சரி, அல்லது அமெரிக்கா துருக்கியினூடாக ரஸ்யாவுக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்காக இது இடம்பெற்றிருந்தாலும் சரி அல்லது துருக்கிய அரசியற் தலைமையின் உத்தரவே இல்லாமல் இராணுவத்தின் ஒரு சில ஜெனரல்களின் சொந்த முடிவாக இருந்தாலும் சரி உண்மை எதுவென காலம் விரைவில் பதில் சொல்லும். எனினும் அதனது எதிர்காலத்தில் துருக்கிக்கு உண்மையான அக்கறை இருந்தால் ஒரு அடிப்படை கேள்விக்கு அது தீர்க்கமாக பதில் தேட வேண்டும்.
 
மேற்குலக சக்திகளின் நலன்களுக்காக தன்னை தாரைவார்த்து, கைமாறாக சில குறுகிய நலன்களை பெற்றுக்கொள்கின்ற பாதையிலேயே துருக்கி தொடர்ந்து பயணிக்கப்போகிறதா? அல்லது யாரெல்லாம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அணிதிரட்டு நிற்கிறார்களோ அவர்களுக்கு எதிராக முஸ்லிம் உம்மத்துடன் கைகோர்த்து முன்னேறப்போகிறதா? அவ்வாறு செய்வதன் ஊடாக பல மில்லியன் கணக்கான மக்கள்  அதன் பின்னால் அணிதிரள மீண்டும் முஹம்மத் அல் பாதிஹ், சுலைமான் அல் காநூனி, இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீத் போன்ற மாபெரும் கலீஃபாக்களின் வரலாற்றை உயிர்ப்பிக்கப்போகிறதா? இந்தக் கேள்விக்கான நேர்மையான பதிலிலேயே உண்மையான துருக்கியின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பதை தூரநோக்குள்ள ஒரு முஸ்லிம் தலைவர் துல்லியமாகப் புரிந்து கொள்வார்!
 
யா அல்லாஹ்! ரஸ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய அந்த முஸ்லிம் விமானியின் கரங்களுக்கு அருள்பாலிப்பாயாக! மேலும் துருக்கியினூடாக இஸ்லாத்திற்கு கண்ணியத்தையும், வெற்றியையும் தந்தருள்வாயாக!

Nov 6, 2015

முஸ்லிம் ஆட்சியாளர்களும் அவர்களது வழிமுறையும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!!! 




ட்சியாளர்களும் அவர்களது வழிமுறையும்:- ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களை நிர்வகிக்க கூடியவர்கள். ஆட்சியாளர்களின் சிந்தனையும், செயலும்தான் மக்களின் வாழ்க்கை முறைக்கு அடித்தளமாக விளங்குகிறது. ஆட்சியாளர்களின் அகீதாவும், தரீக்காவும் இஸ்லாமாக இருந்தால் மட்டும் அங்கு இஸ்லாமிய வாழ்வொழுங்கு கட்டமைக்கப்படும். மாறாக அது குப்ராக இருக்கும் பட்சத்தில் மக்களின் வாழ்வொழுங்கும் குப்ராகவே அமையும். 

அவ்வப்போது இஸ்லாமிய நாட்டு தலைவர்கள் யாராவது இஸ்ரேலை அழித்து விடுவோம்! அமெரிக்காவை சிதைத்து விடுவோம்! என வெற்று அறிக்கை விட்டால் அதை முஸ்லிம்கள் நம்பி பாராட்டுகிறார்கள், பரப்புகிறார்கள். 

நூற்றாண்டுகள் கடந்தும் யாரும் அதை செய்யவில்லை! இனியும் செய்யப் போவதில்லை! முஸ்லிம்களின் ஆதங்கம் இங்கு கவனிக்கதக்கது. யாராவது உம்மத்தின் நிலையை மாற்ற மாட்டார்களா? பாலஸ்தீன படுகொலையும், காஷ்மீர் கற்ப்பழிப்பும், இலங்கை இனப்படுகொலையும் ஓயாதா என்ற ஏக்கம்தான்??? 

கொஞ்சம் சிந்தியுங்கள் உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருந்தும் ஏன் உம்மத்தின் இழிநிலையை அவர்கள் மாற்றவில்லை? காரணம் அவர்கள் கொண்ட குப்ரு கொள்கைதான். தேசியவாத கொள்கையில் அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள். உம்மத்திற்க்கு பணத்தை மட்டும் அனுப்புபவர்கள், படையை அனுப்ப மறுப்பதேன். இவர்களல் உம்மத்தின் நிலையை நிச்சயமாக மாற்ற முடியாது. 

இவர்கள் கொண்ட கொள்கைகள் குப்ரு ஜனநாயகமாகவும், இஸ்லாம் வழங்காத மதச்சார்பின்மை, தேசியவாதமாகவும் உள்ளது இவை எல்லாம் குப்ரு வழிமுறைகள் இவை உம்மத்திற்க்கு பயனற்றது மாறாக இஸ்லாம் வழங்கிய வழிமுறையான கிலாபத் மட்டுமே உம்மத்தின் அனைத்து இழிநிலைகளுக்கும் தீர்வு!!! கொஞ்சம் சிந்தியுங்கள் குப்ரு சிந்தனையில் வெற்றிகாண முடியுமா?????

Muhammad Noorulla
Via Facebook

Jul 16, 2014

இவரும் எச்சரிக்கிறார்!!!!


by-ஆர் எஸ்-துர்கிய பிரதமர் அர்துகான் இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்தவிடின் துர்க்கியூடனான உறவுகள் மிக கடுமையாக இருக்கும் எனவும்
விளைவுகள் பாரதூரமாக அமையும் எனவும் கூரினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கயில் சர்வதேச சமூகம் மற்றும்
ஐ.நா சபை உடனடியாக நடைபெறும் அநியாயத்தை தட்டிக்கேட்க வேண்டும்
என்றும் கூரினார்.

யுத்த நிறுத்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஒவ்வொருமுறையும் மீறுவதாகவும், சமாதானம் குறித்து அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினர். தொடர்ந்தேர்ச்சியான அத்துமீறல்களும் நியாயமற்ற
நடவடிக்கைகளும். துர்கியுடனான உறவில் விரிசலையே ஏட்படுத்தும்
என்றும் அவர் எச்சரித்தார்.

துர்க்கி பலஸ்தீனுடன் மிக நெருங்கிய நல்லுறவு வைத்திருக்கும் நாடாகும்.
கடந்த வெள்ளியன்று துர்கியின் பல பிரதேசங்களிலும் இஸ்ரேலின்
படுகொலைக்கு எதிரான பாரிய ஆர்பாட்டங்கள் நிகழ்தன
என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் நேற்று கூறுகையில் இஸ்ரேல்
உடனடியாக காஸா மீதான ஏவுகணை தாக்குதலை நிறுத்த
வேண்டும் என்றும், தரை மார்க்கமான எந்ததாக்குதலையும் நடத்த கூடாது என்றும் எச்சரித்துள்ளார். காஸா பகுதியில் அதிகரித்து வரும் மனித
படுகொலைகள் குறித்து நேற்று வெளியிட்ட எழுத்து மூல அறிக்கையின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவரது அறிக்கையில் இஸ்ரேல் 2012 யுத்த நிறுத்த
நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும், காஸாவுக்கான மனிதாபிமான
உதவிகளை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும், பாலஸ்தீனுடன் ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தித்க்கு வரவேண்டும் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

May 31, 2014

'VALLEY OF THE WOLVES : PALESTINE ...' ஒரு விமர்சனப் பார்வை .


நியாயத்தை நியாயமாக சொல்வதில் தான் அநியாயம் வார்த்தை அளவிலாவது அழிக்கப்படுகின்றது.பாலஸ்தீனத்தின் விவகாரங்களில் தமக்கொரு நியாயத்தோடு சூழவுள்ள தேசியங்கள் தீர்வு காண புறப்படுவது , அதன் உண்மையான தீர்வு தொடர்பில் ஒரு தடையாகவே ஆகி விடும் . தேசியம் என்பதுதான் எமக்கு முன்னுள்ள முதல் தர 'ஜாஹிலீயத் '.

இந்த தேசிய வரைவிலக்கணத்தை மனதில் சுமந்தவர்களாக எடுக்கப் படும் எந்த முயற்சிக்கும் அந்த 'ஜாஹிலீயத்' கண்டிப்பான எல்லைகளை இட்டிருக்கும் . 'ஓநாய்களின் பள்ளத் தாக்கு பாலஸ்தீனம் ' என்ற துருக்கிய திரைப்படம் சுவையான திருப்பங்கள் , ஆக்கிரோசமான சண்டைக் காட்சிகள் , பாலஸ்தீனர்களின் யதார்த்த வாழ்வு என்பவற்றை பிரதிபலித்தாலும் இஸ்ரேல் , பாலஸ்தீன் என்ற இரண்டு தேசியங்களை அங்கீகரிக்கும் மனோ பாவத்தோடு தான் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது .

அந்த வகையில் 'ஓமர் முக்தார் ' என்ற உண்மையை சுற்றி லிபிய தேசிய வாதம் தத்ரூபமாக பிண்ணப்பட்டது போல் , இங்கும் துருக்கிய துறைமுகம் ஊடாக 'காசா ' துறைமுகம்
நோக்கி நிவாரண உதவிக்காக தன்னார்வ தொண்டர்களை ஏற்றி வந்த கப்பல், யகூதிய கமாண்டோக்களால் தாக்கப் பட்டு திருப்பி அனுப்பப் பட்ட உண்மையை சுற்றியே கதையின் அடிப்படைக் கரு பிண்ணப்பட்டுள்ளது . (அதாவது இத்தாக்குதலை நடாத்திய இராணுவ அதிகாரி கொல்லப் படுவதில் துருக்கி திருப்தியடைகின்றது . இதுவும்' எய்தவன் இருக்க அம்பை நோதல் ' எனும் தத்துவத்தையே நடைமுறை படுத்துகின்றது ).

அப்படியானால் மேற்படி சம்பவம் நடந்திரா விட்டால் ,(திரைக் கதைப்படிகூட) துருக்கிய கமாண்டோக்களின் 'வெஸ்ட் பேங்க் ' நுழைவே நிகழ்ந்திருக்காதா ? அல்லது தனது அரசியல் ,இராணுவ தோல்வியை மறைக்க U .S ஹொலிவூட் பாணியில் துருக்கியும் சினிமாக் கலையால் மக்களை விலை பேசியுள்ளதா ? அப்படியானால் பாலஸ்தீனில் உள்ளார்ந்த யகூதிய அநியாயங்களுக்கு இந்த தேசிய வாத அரசியல் கொள்கையில் தீர்வில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்களா ?

எது எப்படியோ இஸ்லாத்தின் தீர்வை புறம் தள்ளிய மனோபாவத்தை தமது கலைப் படைப்புகளிலும் முஸ்லீம்களை மயக்கும் விதத்தில் காட்சிப்படுத்த ஒரு பழுத்த அனுபவம் தேவை .அந்த வகையில் அற்புதமான் ஹொலிவூட் + பெண்டகன் பொலிடிகல் ஸ்டைல் துருக்கிக்கு கை கொடுத்துள்ளது .

http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks
http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks

Sep 8, 2013

உண்மையான மறுமலர்ச்சி

மறுமலர்ச்சி(Revival – النهضة) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகள்(thoughts),  உணர்வுகள்(sentiments) , ஆட்சியமைப்பு (system)ஆகியவற்றை மாற்றியமைத்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையான மறுமலர்ச்சி (النَّهضةِ الصحيحةِ) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் சிந்தனைகள், உணர்வுகள், செயலாக்க அமைப்பு ஆகியவற்றை இஸ்லாமிய அடிப்படையில் மாற்றியமைப்பது என்பதாகும்.
  மறுமலர்ச்சி என்பது அறிவாற்றலின் எழுச்சி(الاحتفال الفكرية -Intellectual elevation) என்றும் அழைக்கப்படுகிறது. பொருளாதார   முன்னேற்றத்தை மறுமலர்ச்சி என்று கொள்ளமுடியாது. குவைத்   நாட்டை ஐரோப்பிய நாடுகளான சுவீடன், ஹாலந்து, பெல்ஜியம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறது. இருந்தபோதிலும் இந்த ஐரோப்பிய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை குவைத் இன்னும் அடையவில்லை. ஒழுக்க மாண்புகள் உயர்ந்து நிற்பதும்  மறுமலர்ச்சி என்று கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் மதீனா மாநகரம் இன்று உலகில் உள்ள எந்த இடத்தைவிடவும் நற்பண்புகளில் உயர்ந்து  நிற்கிறது. இருந்தபோதும் இது முன்னேற்றம் என்று கொள்ளப்படமாட்டாது. ஆகவே மறுமலர்ச்சி என்பது அறிவாற்றலின் எழுச்சியாகும்.
சில சமயங்களில் மறுமலர்ச்சி (نهضة)  தவறான அடிப்படையில் ஏற்படுவதும் உண்டு.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா போன்றவை முன்னேறிய நாடுகளாகும். எனினும் அவைகளின் முன்னேற்றம் மிகவும் பலவீனமானது. ஏனெனில் அந்த முன்னேற்றம் ஆன்மீக அடிப்படையில் ஏற்பட்டதல்ல. ஆகவே உண்மையான மறுமலர்ச்சி  இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் மட்டுமே ஏற்படவேண்டும். ஏனென்றால் இஸ்லாம் மட்டுமே ஆன்மீகமும் அரசியலும் இணைந்த அகீதாவை ( عقيدة) கொண்டதாகும்.
மறுமலர்ச்சி (نهضة) ஏற்படவேண்டுமெனில்  மனிதன்,   வாழ்வு,   பிரபஞ்சம் ஆகியவற்றை பற்றிய முழுமையான சிந்தனையின்( الفكرةِ الكُلِّيَةِ – comprehensive thought) அடிப்படையில் ஏற்படும் ஓர்ஆட்சிமுறையை நாம் நிறுவவேண்டும். மாறாக அது மனித சட்டங்களின் அடிப்படையிலான செயலாக்க அமைப்பு(نظام-system) மற்றும் சட்டவரைவுகள்(legislation) ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கக்கூடாது. மனித  சட்டங்கள் மற்றும் அரசியல் சாசனங்களின் அடிப்படையில் நிறுவப்படும் அரசு  மறுமலர்ச்சிக்கு இட்டுச்செல்லாது. மாறாக அது  மறுமலர்ச்சியை திசைதிருப்பி மக்களை  கடுந்துயரிலும் ஆழ்த்திவிடும். அன்றாட வாழ்வியல் விவகாரங்களின் தீர்வுகள்..அதாவது;  ஆட்சிமுறை, சட்ட வரைவுகள் ஆகியவை இந்த சிந்தனையிலிருந்து வெளிவரும்.
ஐரோப்பாவின் மறுமலர்ச்சி (نهضة) என்பது  விடுதலை(liberty)மற்றும் சுதந்திரம்(freedom) ஆகியவற்றை  கருத்தில் கொண்டு வாழ்வியல் விவகாரங்களிருந்து மதத்தை பிரிப்பது – فَصْل الدينِ عنِ الحياةِ -என்ற மதச்சார்பின்மை( علمانية- secularism)சிந்தனையின் அடிப்படையில் ஏற்பட்ட தவறான மறுமலர்ச்சியாகும். ரஷ்யாவில் ஏற்பட்ட கம்யூனிஸ புரட்சியானது  இயற்பொருட்களின் பரிணாம வளர்ச்சி(materialistic evolution) பற்றிய கோட்பாட்டின்படி இயற்பொருட்கள்(matter -المادَّة ) பல்வேறு மாற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்து ஒரு குறைவற்ற நிறைபொருளாக (utopian position)மாறும் என்ற இயற்பொருள்வாத)ஜடவாத(அடிப்படையில் ஏற்பட்டதாகும். ஆகவே ரஷ்யாவில் 1917-ல் இந்த சிந்தனையின் அடிப்படையில் ஜடவாதிகளான(المادي) கம்யூனிஸ்டுகள் ஓர் அரசை நிறுவி தவறான மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
ஆனால் அரேபிய தீபகற்பத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியானது அல்லாஹ்سبحانه وتعالىவிடமிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள்கொண்டு வந்த இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். நபி صلى الله عليه وسلمஅவர்கள் இந்த சிந்தனையின் அடிப்படையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் நிறுவி உண்மையான மறுமலர்ச்சியை(النَّهضةِ الصحيحةِ) ஏற்படுத்தினார்கள்.
மேற்கண்ட உதாரணங்களின் மூலம்  மறுமலர்ச்சி என்பது அடிப்படை சிந்தனையான(القاعدة الفكرية) அகீதாவின் அடிப்படையில் நிறுவப்படும்  ஓர்  ஆட்சிமுறையை கொண்டுதான் ஏற்படும் என்பதற்கு  தெளிவான சான்றுகளாகும்.
1924ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா இஸ்லாமிய அரசான கிலாஃபத்தை பிரிட்டனின் உதவிகொண்டு அழித்த பின்னர்  மனிதசட்ட வரைவுகளையும், ஆட்சிமுறையையும் கொண்டு ஏற்படுத்திய துருக்கிய தேசியவாத  அரசு துருக்கியில் எந்தவிதமான மறுமலர்ச்சியையும் கொண்டுவரவில்லை என்ற பேருண்மை, மனித சிந்தனையின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களும் ஆட்சிமுறைகளும் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டுவராது என்பதையும்  நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.  இத்தகைய ஆட்சிமுறையில் துருக்கி எந்தவித மறுமலர்ச்சியையும் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக பொருளாதாரம், சமூகம் மற்றும் சர்வதேச அந்தஸ்து ஆகிய அனைத்து துறைகளிலும் அது ஆழமாக பின்தங்கியது. மேற்கத்திய ஆட்சிமுறையும் சட்டங்களும் முஸ்லிம் நாடுகளில் பலவந்தமாக குஃப்ஃபார்களின் ஏஜெண்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் பலவந்தமாக அமல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக முஸ்லிம் உம்மா இழிநிலைக்கு ஆட்பட்டதோடு அவ்வளவு வளங்கள் இருந்தும் அனைத்திற்கும் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிட்டது.
   கம்யூனிச வீழ்ச்சிக்கு முன்னர் சோவியத் ரஷ்யாவை நாம் நோக்குவோமானால்,  தவறான சிந்தனையான இயற் பொருள்வாத)ஜடவாத( அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பெற்றாலும், அது  மக்களை ஒன்றிணைத்தது. மேலும் மகா வல்லரசு என்ற நிலையை அடையும்வரை அதன் மறுமலர்ச்சி பலவருடங்கள் நீடித்தது. கம்யூனிச சிந்தனையின் அடிப்படையில் லெனின் 1917ல் நிறுவிய இந்த  அரசு ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தது. ஆனால் 1924ல் முஸ்தபா கமால் பாஷாவால்  மேற்கத்திய ஆட்சிமுறை சட்டங்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட அரசு தோல்வி கண்டது. 1952ல் எகிப்து நாட்டில் ஜமால் அப்துல் நாஸர்  மனித சட்ட வரைவுகள் கொண்ட ஆட்சிமுறையை நிறுவியதையும் உதாரணமாக குறிப்பிடலாம். ஆரம்பத்தில் மன்னராட்சிக்கு பதிலாக மக்களாட்சிமுறையை கொண்டுவந்து அதனடிப் படையில் விவசாய நிலங்களை விநியோகம் செய்தார். பிறகு பொதுவுடமை(اشتراكية – Socialism) தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களை அமல்படுத்தினார். ஆனால் மறுமலர்ச்சியை கொண்டு வருவதற்கு அவரால் இயலவில்லை.  மாறாக அறிவாற்றல்,    பொருளாதாரம் மற்றும் அரசியல் பகுப்பாய்வு ஆகிய விசயங்களில்  1952க்கு முன்பு எகிப்து இருந்த நிலையைவிட பின்தங்கவே நேரிட்டது.
எனினும் ஒரு  சிந்தனையின் மீது  அல்லது குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் அரசை நிறுவது என்பது வெறும் இராணுவ புரட்சி மூலமாகவோ அல்லது கிளர்ச்சியின் மூலமாகவோ அதிகாரத்தை கைப்பற்றுவது என்று பொருள் அல்ல. ஏனெனில் இது  மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவும் செய்யாது; ஒருபோதும்  வெற்றி பெறவும் முடியாது.  இதன்  பொருள் என்னவெனில், அடிப்படை  சிந்தனையான அகீதாவின் அடிப்படையில் நம்பிக்கை ஏற்படுத்துவது, அதுகுறித்த உறுதியான வெகுஜனகருத்தினை(Public opinion) உருவாக்குவது, மற்றும் வாழ்க்கை போராட்டத்தை இந்த கருத்தின்படியே நடத்தி செல்லுவது, பிறகு இந்த உறுதியான சிந்தனையின் அடிப்படையில் ஒர் அரசு  நிறுவப்படுவது என்பதாகும். ஆகவே ஒரே சிந்தனையின் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைப்பதும், இதன் அடிப்படையிலேயே   அதிகாரம் நிறுவப்படுவதும் நோக்கமாகும். அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது இங்கு உண்மையான நோக்கம் அல்ல. மாறாக அகீதாவின் அடிப்படையில்  ஒர்  அரசை நிறுவி மறுமலர்ச்சியை கொண்டு வருவதேயாகும்.  இதற்கு மிகச்சரியான உதாரணம்,   நபி صلى الله عليه وسلمஅவர்களுக்குஅல்லாஹ்سبحانه وتعالى விடமிருந்து வஹீ வந்தபோது, அவர்கள் மக்களை இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் அழைத்தார்கள். பிறகு அந்த அடிப்படையிலேயே வெகுஜனகருத்தையும்(Public opinion)  மக்களிடத்திலே ஏற்ப்படுத்தி அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திர தலைவர்களின் உதவியைப்(نصرة)பெற்று மதீனாவில் ஒர் அரசை நிறுவினார்கள். பிறகு அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
       أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ الله،… فَإِذَا فَعَلُوا، عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ، وَأَمْوَالَهُمْ
   வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்  ஒருவனைத்தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது   அல்லாஹ்வின் தூதர்   ஆவார்கள்  என்ற கலிமாவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்களுடன் போர் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்…. அவர்கள்  ஏற்றுக்கொண்டால் அவர்களுடைய உயிருக்கும் உடமைக்கும் என்னால் எந்தவித தீங்கும் ஏற்படாது.                                                                                                      (புஹாரி)
 இவ்வாறே அவர்கள்  இந்த கருத்தின் அடிப்படையிலேயே மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். பிறகு மதீனாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. பிறகு, அரேபிய தீபகற்பம் முழுவதிலும் ஏற்பட்டது. பிறகு இஸ்லாமிய நிலப்பரப்பு விரிவடைந்த காலமெல்லாம்  இஸ்லாத்தில் இணைந்து இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ்ந்த மக்கள் சமுதாயம் அனைத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
இன்று அனைத்து துறைகளிலும் முஸ்லிம் உம்மா  வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக அது தன்னை மறுசீரமைக்க முயன்று வருகிறது. முஸ்லிம் நாடுகளில்  இஸ்லாம் அல்லாத குஃப்ர் சட்டங்கள் மற்றும்   ஆட்சிமுறைகளின்படி  ஆட்சி  நடைபெறுகிறது. சில இடங்களில் இஸ்லாமிய ஆட்சிமுறையில் அரசு அமைக்கப்பட்டதாக     கூறப்பட்டாலும் சில இறைசட்டங்களோடு குஃப்ருடைய சட்டங்களும்  இணைக்கப்பட்ட  குஃப்ர் ஆட்சிமுறைதான்    நடைபெற்று  வருகிறது.
ஆகவே இஸ்லாமிய அகீதாவான லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ்– -لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ என்ற கலிமாவின் அடிப்படையில் அமைக்கப்படும் அரசே மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியும். இஸ்லாமிய ஆட்சிமுறை, இஸ்லாமிய சட்டங்கள் இவைகள் எல்லாவற்றுக்கும் உயிரோட்டமான لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ  என்ற கலிமாவின் உயிரோட்டம் இல்லையெனில் இவையாவும் உயிரற்ற உடல் போன்றதாகிவிடும்.
வெறுமனே சில சீர்திருத்த (reform) பணிகளை செய்வதால் ஒருபோதும் மறுமலர்ச்சி –(نهضة – revival)  ஏற்படாது. இமாம் அபூஹனீஃபா رحمه الله அவர்களுடைய மத்ஹபின் சட்டங்களை மட்டும் கொண்டு ஆட்சியை நிறுவினாலும் மறுமலர்ச்சி வந்துவிடாது. மாறாக لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ என்ற கலிமாவின் அடிப்படையில்தான் அரசு அமைக்கப்பட வேண்டும். பிறகு அல்லாஹ்سبحانه وتعالى அருளிய சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறு ஃபிக்ஹு  சட்டங்களை ஏற்புஅமலாக்கம்(تبني – adoption)செய்யவேண்டும். இவற்றை  அல்லாஹ்سبحانه وتعالى  வின் ஏவல்–விலக்கல் பற்றிய கட்டளைகளாக அமல்படுத்தப்பட வேண்டுமே தவிர அவைகளின் நன்மைகள் மற்றும் அவைகளின் உலகப் பயன்கள் பற்றிய கண்ணோட் டத்துடன்   அமல்படுத்தப்படக்கூடாது.
ஆகவே இன்று உம்மத்தில்  மறுமலர்ச்சி (نهضة)  ஏற்பட வேண்டுமெனில் அந்த சமூகம் கலிமாவின் அடிப்படையில் தமது   வாழ்வை சீரமைத்துக் கொண்டு, ஆட்சியையும் அதிகாரத்தையும் அந்த கலிமாவின் அடிப்படையில் நிறுவி, அனைத்து வாழ்வியல் விவகாரங்களையும் அந்த கலிமாவின்படி அதாவது அல்லாஹ்سبحانه وتعالىமுஸ்லிம்களுக்கு இந்த சட்டங்களை அருளி இருக்கிறான் என்ற ஒரே அடிப்படையில் செயல்பட்டால் மறுமலர்ச்சி நிச்சயமாக வரும். முஸ்லிம் உம்மா முன்பிருந்த உன்னதமான நிலையை நிச்சயமாக மீண்டும் அடையும்.                   
இன்ஷா அல்லாஹ்!

http://sindhanai.org

Sep 1, 2013

முஜாஹிதீன்களுக்கு எதிராக கூட்டுச் சேர்வது மிகப்பெரிய அநியாயமாகும்.!!

குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.

சிரியாவில் அசாத் பலவீனப்பட்டுவிட்டதை அடுத்து முஜாஹிதீன்களது கை மேலோங்கிவிடக் கூடாது என்ற நிலையில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய காலனித்துவ சக்திகள் சிரியாவில் இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு மனிதாபிமான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் எமது முஸ்லிம் நாடுகள் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து குப்பார்களது காலனித்துவக் கொடியின்கீழ் இந்த பொய்யான காரணங்களுக்கு உடந்தையாக முஜாஹிதீன்களுக்கு எதிராக கூட்டுச் சேர்வது மிகப்பெரிய அநியாயமாகும்.

சிரியா மீதான இந்த இராணுவ முன்னெடுப்புக்கு முன்பு கட்டார், சவூதி போன்ற நாடுகள் இந்த காலனித்துவ சக்திகளது ஜெனரல்களுடன் அம்மானில் கூடியெடுத்த முடிவைத் தொடர்ந்தே இந்த இராணுவ முன்னெடுப்பு நகர்கிறது.

அத்துடன் யூ.என் அனுமதியின்றி தேவையான முழுமையான இராணுவப் பங்களிப்பை இந்த குப்பார்களுடன் சேர்ந்து சிரியாவிற்கு எதிரான இராணுவ முன்னெடுப்பில் வழங்குவதாக “துருக்கி” வாக்களித்துள்ளது. இது சிரிய முஜாஹிதீன்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் மாத்திரமன்றி அவர்கள் இஸ்லாத்தை ஷரீஆவை நிறுவும் போராட்டத்தை பலவீனப்படுத்தி குப்ருடைய ஆட்சி மீண்டும் தொடர வழிவகுக்கும் ஒரு ஈனச் செயலாகும்.

இவ்வாறு குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.

“(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர். (தௌபா 9:8)”

“முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?” (4: 144)

“எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.” (5: 52)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'முஷ்ரிகீன்களது நெருப்பில் ஒளியைத்தேடாதீர்கள்.'

அதேநேரம் இஸ்லாத்தை நிலைநட்டுவதில் உதவி தேவைப்பட்டால் முஸ்லிம்களுக்கு உதவி வழங்குமாறு அல்குர்ஆன் ஏவுகிறது.

“எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும்.” (8: 72)