Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Feb 3, 2018

சிரியாவில் அமெரிக்காவின் திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் எர்டோகனின் எரிச்சல்

அமெரிக்கா சிரியாவில் அதன் திட்டத்தை செயல்படுத்த எர்டோகனை (துருக்கியை) கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளது. எர்டோகன், அமெரிக்கா சிரியாவில் குருதிஸ்களுக்கு ஆதரவாக உள்ளதால் அதன் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளியன்று சிரியாவின் ஆப்ரின்(Afrin) பிராந்தியத்தில் துருக்கியின் பீரங்கிகள் மற்றும் இராணுவ தடவாளங்கள் தரைமட்டமாக்கபட்டன. துருக்கி உள்துறை அமைச்சர் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் போராளிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை அறிவித்தார். அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஏழு ஆண்டுகால யுத்தத்தால் சிதைக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தை இன்னும் நிலைகுலைய செய்ய அது அச்சுறுத்தியது.
சிரியாவில் அஸ்ஸாதின் தலைமையால் முழு சிரியாவையும் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. எனவே அமெரிக்கா மீண்டும் ஒரு திட்டத்தை தீட்டுகிறது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அஸ்ஸாதிற்கு எதிராக போராடும் குழுக்களை கட்டுபடுத்துவதற்கு அமெரிக்காவிற்கு துருக்கியின் உதவி தேவைப்படுகிறது, ஏற்கனவே அலப்போவில் முஸ்லிம் போராளிகளை துருக்கி இராணுவம் அடக்கி ஒடுக்கி கொன்று குவித்ததால் இம்முறையும் அவ்வாறு செயல்பட அமெரிக்கா துருக்கியை உதவிக்கு அழைக்கிறது.
சிரியாவில் அஸ்ஸாதின் திறனற்ற செயலற்ற தன்மையால் ஈரானும் ரஷ்யாவும் அவர்களை(முஸ்லிம்களை) இடமாற்றம் செய்தது. குப்ரை தலைமையாக ஏற்றாலோ அல்லது குப்ர்க்கு ஆதரவாக செயல்படும்வரை முஸ்லிம்கள் ஒரு போதும் வெற்றி அடைய மாட்டார்கள். முஸ்லிம்கள் தங்கள் நாடுகளிலுள்ள காபிர்களுக்கு எதிராகவும் குப்ர்க்கு ஆதரவாக செயல்படும் அட்சியாளர்களை எதிராக உறுதியாக தீரத்துடன் போராட வேண்டும்.
இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மட்டுமே உலக முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அவர்களை அமைதியாக வாழ வைக்கும். அத்தகைய அறிவார்ந்த தலைமைக்கு சத்திய பிரமாணம் செய்வதின் மூலம் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

Sep 7, 2016

ஏமன் மீதான போர்

ஏமன் மீதான போரில், சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைப்பதாக அறிவித்துள்ளது.
 
ஒபாமாவின் யுக்தியை அமெரிக்கா தொடர்கிறது, தொலைவிலிருந்து போர்களை இயக்கும் அந்த யுக்தியின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களை அமெரிக்கா குறைத்துள்ளது. (செய்தி – ரியுடர்ஸ்)
 
கூட்டுப்படை போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல், உளவு செயதிகள் பரிமாற்றம் போன்றவற்றை சவுதி அரேபியாவோடு ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு “ஜாயின்ட் கம்பைன்ட் பிளானிங் செல்” என்ற செயல்திட்டதை தொடங்கியது, இதில் தற்போது ஐந்திற்கும் குறைவானவர்களே பனியமர்த்தபட்டுள்ளார்கள் என்று அமெரிக்காவின் கடற்படையின் செயதிதொடர்பாளர் லெஃப்டினன்ட்  இயன் மேக் கன்னகெய் பஹ்ரைனில் ரியுடர்ஸ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இந்த பணிக்காக சவூதி தலைநகர் ரியாத் உட்பட பல இடங்களில் ஆமாரத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 45 லிருந்து 5 ஆகா குறைக்கப்படுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வாறு அமெரிக்க ராணுவத்தினர்களின்ண் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் ஏமனில் தொடுக்கப்படும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. இது தொடர்பாக குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தீர்வின்றி முறிவுற்றதால் ஏமன் மீதான சவுதியின் தாக்குதல் தீவிரமடயக்கூடும்.
 
முஸ்லீம் நாடுகளில் அமெரிக்கா நேரடியாக் இறங்கி போர் புரியும் நம்பிக்கையை இழந்துவிட்டது, அதனால் மற்ற தோழமை நாடுகளின் உதவியின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருகிறது. அமெரிக்காவின் இந்த நிலமையை எப்போது உலகம் கண்டறிந்து புரிந்துகொள்ளும்?
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பு

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பை அமெரிக்கா வழங்குகிறது.
 
இஸ்லாம் மற்றும் முஸ்லிம் மகளுக்கு எதிராக சிரியாவில் நடந்துவரும் போரில் அமெரிக்கா தனது திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது, ஏதாவது ஒரு வகையில் தனது அதிகார வரம்பை மீறி செயல்கள் போகும் பட்சத்தில் அமெரிக்கா தனது படையை உபயோகிக்க தயராகவுள்ளது. ( செய்தி – 19/8/2016  தி நியூயார்க் டைம்ஸ்)
 
குர்து போராளிகள் சிரியாவின் வடகிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இவர்கள் அமெரிக்காவுடன் இனைந்து ISIS ஐ எதிர்த்துவருகிறார்கள். சிரியாவின் பஷார் அல் அசாத் அரசின் விமானம் குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தாக்கியதை கண்டித்து அமெரிக்கா உடனடியாக தனது விமானத்தை அந்த நிலப்பரப்பின் மேல் பரக்க செய்து குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பென்டகன் செய்தி தெரிவித்துள்ளது. சிரியாவின் பஷார் அரசுக்கும், குர்து போராளிகளுக்கும் இடையே அவ்வப்போது சில சிறிய மோதல்கள் நடந்துள்ளதே தவிர இவ்விருவருக்கும் இடையே பெரிய அளவிலான போர் நடைபெறாத நிலையில் இந்த விமான தாக்குதலை சிரியா அரசு குர்துகள் மேல் தொடுத்துள்ளது.
 
அமெரிக்கா இது போன்ற உதவிகளை சிரியாவில் உள்ள மற்ற எந்த போராட்ட குழூக்களுக்கும் வழங்கவில்லை, இஸ்லாமிய போராட்ட குழூக்கள் அமெரிக்காவின் செயல் திட்டங்களை ஏற்கமருப்பதாலும் இஸ்லாத்தைமையமாக வைத்து செயல்படுவதாலும் அந்த போராட்ட குழுக்களுக்கு எதிராகவே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வி

 
சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வியை அடுத்து  ரஷ்யா, முஸ்லிம்களுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது .
 
 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவதாள் அலெப்போவில் ஏற்படுத்தப்பட்ட முற்றுகையை அங்குள்ள பல இஸ்லாமிய போராட்ட குழுக்கள் இனைந்து உடைத்தார்கள். இதில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து ரஷ்யா மதியதரைகடலில் நிறுதிவைத்துள்ள போர்க்கப்பல் மூலமாகவும், ஈரனிலுள்ள விமானதளத்தை பயன்படுத்தி  விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் தனது தாக்குதலை சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது.
 
சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காக போராடும் முஸ்லிம்களை எதிர்த்து முதல் முறையாக ரஷ்யா போற்கப்பல் மூலம் ஏவுகணை தாக்குதலை தெடுத்துள்ளது.
 
இது போன்ற பலமுனை தாக்குதல் நடவடிக்கையை  மேற்கொள்வதன் மூலம் ரஷ்யா தனது ராணுவ திறனை நிரூபித்து சிரியாவில் தனது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது. இதற்கு முன் சிரியாவில் லடாகியவில் உள்ள தனது ராணுவதளத்திலிருந்தும், காஸ்பியன் கடலில் நிறுத்தி வைத்துள்ள போர்க் கப்பல்கள் மூலமும் சிரியாவின் கொடுங்கோல் அரசுக்கு ஆதரவாக அங்குள்ள முஸ்லிம்கள் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கூடுதலாக மத்திய தரைகடலில் நிறுதிவைத்துள்ள  போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள் மூலமும், ஈரானின் விமான தளங்கலில் இருந்து போர் விமானங்களை பயன்படுத்தி குண்டுமலைகலை பொழிந்தும் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் முழு அனுமதியின் பெயரில் நடந்துவருகிறது, சிரியாவில் இஸ்லாத்திற்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க ஈரானின் ராணுவதளத்தை ரஷ்யா பயன்படுத்தும் அளவிற்கான ஒரு சுமூக போக்கையும் அமெரிக்கா அனுமதித்துள்ளது.
 
சிரியாவில் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா ஒருபுறம் அமெரிக்காவின் கொள்கைக்கு இணங்க செயல்படுவதால். கிரிமியா தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு வழிவிட்டுள்ளது
 
 உக்ரைனுடைய எல்லைகளுக்கு அருகில் பத்தாயிரம் வீரர்களை உள்ளடக்கிய ரஷ்யபடை நகர்த்தப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை, மேலும் பென்டகனோரஷ்யாவின் இந்த நகர்வை வழக்கமான பயிற்சி நடவடிக்கை தான், அதனால் உக்ரைனின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.
 
 
செய்தி பார்வை 20.08.16

Sep 6, 2016

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குறை கூறியதால் பாகிஸ்தான் அதிர்ப்தி

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குற்றம் சாட்டியதால் பாகிஸ்தான் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய அரசை நிலைபெரச்செய்வது குறித்த பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த குற்றச்சாட்டால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை மற்றும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொல்வதாகவும், மற்ற தீவிரவாத அமைப்புகளான ஹக்கானி குழு உட்பட பல குழுக்களுக்கு அது அடைக்கலம் அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. (செய்தி – வாய்ஸ் ஆப் அமெரிக்கா)
ஒபாமா அரசு, மாணிய அடிப்படையில் பாகிஸ்தானுக்கு விற்கவிருந்த F 16 போர் விமான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அண்மையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் “பாகிஸ்தான் நட்பு நாடா அல்லது எதிரி நாடா” என்ற தலைப்பில் நடந்த விவாதம் பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய ஆப்கனிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கிவரும் ஹாக்கணி, தாலிபான் போன்ற குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. ஆகையால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துவரும் பொருளாதாரம் மற்றும் இராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை பதிவுசெய்தனர்.
ஆப்கனிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதரான ஸல்மே கலில்ஜாத் அமெரிக்கா, வட கொரியாவை கையாளுவதை போல் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஆப்கனிஸ்தானில் தனக்கு சாதகமான நாடவடிக்கைகளை சாதித்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனினும் பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறிய பிரிவினரால் எழுப்பப்பட்ட அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறிவிட்டனர். (செய்தி – பிஸ்னஸ் ரேகார்டர்)
செய்தி கண்ணோட்டம்:
அமெரிக்காவின் குற்றச்சாட்டால் பாகிஸ்தான் ஆச்சரியபடவோ, அதிருப்தி அடையவோ ஒன்றும் இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரை, ஆசியாவில் தனது முதன்மை ஏஜென்டாக இந்தியாவை நிலைநிறுத்த பாகிஸ்தானை பணயமாகவே பயன்படுத்துகிறது. மேலும் பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் நாடு என்பதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் இஸ்லாமிய அரசான கிலாபா நிறுவப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டவாறே அமெரிக்கா செயல்படுகிறது.
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

Jul 27, 2016

துருக்கிய சதிப்புரட்சி - இவர் சொல்வது உண்மையானால்...?

- உஸ்தாத் சஈத் ரித்வான் !


தற்போது அஷ்ஷாமினுடைய நிலத்தில் நடந்தேறி வருகின்ற நிகழ்வுகள் சர்வதேச சக்திகளினதும், பிராந்திய சக்திகளினதும் அதிமுக்கிய கவனத்தை ஈர்த்துள்ள விடங்களாகும். ஏனெனில் அஷ்ஷாமிலே தொடருகின்ற போராட்டம் முதலில் முஸ்லிம்களுக்கும், இரண்டாவது ஐரோப்பாவுக்கும். மூன்றாவது அமெரிக்காவுக்கும், பின்பு ஏனைய தரப்பினர்களுக்கும் வாழ்வா சாவா போராட்டம் எனக்கருதும் அளவிற்கு கனதியானதாகும். அந்தப் போராட்டத்தின் முடிவிலே வெற்றியோடும், இலாபத்தோடும் திரும்புபவரே தோன்றவிருக்கும் அடுத்த யுகத்தின் அதிபதியாக வெளியேறுவதுடன், அதிலே தோற்கடிக்கப்படுவர் சர்வதேச அரங்கில் மதிப்பிழந்த செல்லாக்காசாகி விடும் சூழல் தோன்றிவிடும்.


சிரியாவில் புரட்சி வெடித்த சந்தர்ப்பத்திலிருந்து இன்றுவரை ஏனைய சர்வதேச சக்திகள் சிரிய விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை தடுப்பதற்காக அமெரிக்கா கடுமையான பிரயத்தனத்தை எடுத்து வருகிறது. இதுவரை காலமும் எவரேனும் அதற்குள் தலையிட்டு இருப்பார்களேயானால் அது அமெரிக்காவின் அனுமதியுடனோ அல்லது கடைசியாக ரஸ்யா தலையிட்டதைப்போல அமெரிக்காவில் வேண்டுதலின் பேரிலோதான் அவை இடம்பெறுகின்றன.


பேச்சுவார்த்தைகள் போன்ற அரசியல் வழிமுறைகளினூடாக, அல்லது ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டிப் படுகொலைகளினூடாக சிரியப் புரட்சியில் பாரிய அலுத்தத்தை பிரயோகித்து அமெரிக்கா வழங்குகின்ற தீர்வுக்கு இணங்கச் செய்யும் அமெரிக்காவின் அனைத்து முயற்சிகளும் படு தோல்வியில் முடிந்துள்ளன.


சிரியப்புரட்சி அனைத்து பிரதான தரப்புக்களையும் கதிகலங்கும் ஓர் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக யாருடைய கையில் களத்தின் கயிறுகள் இருக்கின்றனவோ அந்த அமெரிக்காவையே அது விழிபிதுங்கச் செய்துள்ளது.


பாவித்த அனைத்து துரும்புகளும் கை கொடுக்காத நிலையில் இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெறியேறும் பாதையாக துருக்கியை பயன்படுத்த அமெரிக்கா கண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அதன்படி அதனது நாசத்திட்டத்தை தனது முக்கிய முகவரான அர்துகானின் கரங்களால் அமூல்படுத்த அது காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய பிரபல்யத்தை தன்னகப்படுத்தியிருக்கும் அர்துகானுக்கு சிரியாவுக்குள் இயங்கும் சில குழுக்களிடையே காணப்படும் ஏற்பு நிலையை அது பயன்படுத்த நினைத்திருக்கிறது. குறிப்பாக சிரியாவுக்குள் ஈரானிய வகிபாகம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயமாக தோற்றம் பெற்றுள்ள நிலையிலும், சிரியாவுக்குள் ரஸ்ய - ஈரானிய கூட்டணி முயற்சி இனி பலிக்க போவதில்லை என்ற நிலை உருவாகியிருக்கின்ற நிலையிலும் அமெரிக்காவின் கவனம் துருக்கி மீது குவிந்துள்ளமை தவிர்க்கப்பட முடியாததே.


எனவே அது வரவிருக்கின்ற அரங்கிற்கு ஏற்றவாறு அனைத்தையும் தயார்படுத்த களத்திற்குள் குதித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை,


1. எதிர்கால சிரியா இஸ்ரேலுடன் விரோதத்தைப் பேண மாட்டாது என்பதற்கான உத்தரவாத்தை வழங்குவதற்காக துருக்கியின் சியோனிச யூதர்களுடனான உறவை சுமூகப்படுத்துவது.



2. “அஷ்ஷாமின் கொடுங்கோலன் பஷாரின் முழுமையான வெளியேற்றமே சிரியாவின் தீர்வுக்கான நிபந்தனை” என இதுவரை காலமும் பேரளவுக்காவது முன்வைத்து வந்த அர்துகானின் உறவை பஷாருடன் சுமூகப்படுத்தி பலப்படுத்துவது.



3 சிரியாவில் துருக்கியின் தலையீட்டால் ஈரானுக்கும் அதன் நலன்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தி ஈரானுடனான உறவை மேம்மடுத்துவது.



4. துருக்கியின் தலையீட்டால் ஈராக்கின் உள்ளரங்கில்; ஏற்படக்கூடிய பாதிப்பை விளக்கி ஈராக்குடனான உறவை மேம்படுத்துவது.



5. திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் அதனுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படவும், ஐரோப்பியத் தலையீட்டை தொடர்ந்து தள்ளி வைத்துக் கொள்வதற்கும் ரஸ்யாவுடனான உறவை சுமூகப்படுத்துவது



6. அண்மையில் இஸ்ரேலுடன் சமூகமான நல்லுறவை ஏற்படுத்திய கேவலமான செயலினால் அர்துகானின் பிரபல்யம் துருக்கிக்குள் சரிவடைந்து செல்வதை தடுத்து நிறுத்துவது. துருக்கிய இராணுவத்திற்குள் அர்துகானுக்கு எதிராக உருவாகி வரும் எதிர் சக்திகளின் விவகாரத்தை தீர்;த்து வைப்பது...


தமது அரசியல் தீர்மானப் பொறிமுறைக்கு வெளியே இடம்பெற்றதாக அர்துகானே ஏற்றுக்கொண்ட சம்பவமான ரஸ்ய தாக்குதல் விமானத்தை துருக்கிய விமானப்படை சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்த எதிர் சக்திகளின் வளர்ச்சியை தெளிவாகக் காட்டியது துருக்கிய நிகழ்வுகளை அவதானிப்போர் அறிந்த விடயமே.


7. சிரியக் களத்துக்குள் அர்துகான் முழுமையான நுழைவதாக இருந்தால் உள்நாட்டுக்குள் அவரை புறமுகுகில் குத்துகின்ற எந்தவொரு உறைவாளையும்; விட்டு வைக்க முடியாத நிலை உருவாகும். இத்தகைய உறைவாட்கள் இராணுவத்துக்குள் அவரை எதிர்க்கின்ற அணிகளில் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்ததால் அவற்றை முற்றாக அகற்றுவது.



மேலும் முக்கிய சில அவதானங்கள்...


முறியடிக்கப்பட்ட சதிப்புரட்சி, மக்கள் ஆதரவைத் திரட்டக்கூடிய விதத்தில் மக்களை விழித்து ஆற்றப்பட்ட எத்தகைய உரையையும் தாங்கி வராமலும், அர்துகானுக்கு எதிராக மக்களை தூண்டிவிடக்கூடிய விதத்தில் அவரது கொள்கைகளை அம்பலப்படுத்தாமலும், இன்னும் சொல்லப்போனால் சதியினை மேற்கொண்டவர்களின் இலக்குகளை சுட்டிக்காட்டக்கூடிய அல்லது சதிப்புரட்சியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நலனை சுட்டிக்காட்டக்கூடிய எத்தகைய சைக்கினையைக் கொண்டிராத வெறுமையாக ஒன்றாகவே காட்சியளிக்கிறது.


அதற்கும் மேலாக சதிப்புரட்சியின் இரு மருங்கிலுள்ளவர்களும் ஒரே திசையை பின்பற்றுபவர்கள். அர்துகானும், அவரது எதிராளிகளான பத்ஹ}ல்லாஹ் குலனும் அமெரிக்காவை பின்பற்றுவர்கள்!


மேலும் சதிப்புரட்சியினால் இராணுவத்துக்குள் தமக்கு இருக்கின்ற செல்வாக்கிற்கு என்னவாகும் என்பது பற்றி பிரித்தானியர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சதிப்புரட்சி தொடர்பாக பேசிய அமெரிக்க பேச்சாளர்களின் பேச்சுக்களில் சஞ்சலமற்ற நிலை தெரிகிறது.


மேலும்...

இந்த சதிப்புரட்சி அர்துகானினதும், அவரது அரசாங்கத்தினதும் பிரபல்யத்தை அதிகரிக்கும்.
மேலும் இராணுவத்தின் மீதான அவரது இறுங்குப்பிடியை உறுதிப்படுத்தும்.
அத்துடன் அவரது அரசியல் எதிராளிகளை மென்மேலும் பலகீனப்படுத்தும்.


இவை அனைத்தும் அர்துகானுக்கு கைகூடி வருமானால், சிரியாவில் அமெரிக்காவுக்காக சேவகம் செய்யும் துருக்கியின் வகிபாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வலிமையை அது அர்துகானுக்கு வழங்கும்.

முடிவாக,



சிரியா மீது துருக்கி செய்ய இருக்கின்ற தலையீடு சிரியப்புரட்சி தொடர்பான அமெரிக்காவின் அதிமுக்கியமானதும் ஆபத்தானதுமான செயற்திட்டங்களில் ஒன்றாகவே இருக்கப் போகிறது.


இந்தப் புரட்சிக்கு பலியாகிய துருக்கிய இராணுவம் அமெரிக்காவின் பலிக்கடாக்களாகியிருக்கின்ற அதேவேளை அரங்கேற்றப்பட்ட துருக்கிய சதிப்புரட்சியானது கொடியதொரு எதிர்காலத்திட்டத்திற்காக, காணப்படும் நிலைமைகளை கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வாகவே தெரிகிறது. மாறாக அது ஏற்கனவே நடந்துகொண்டிருந்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாக தென்படவில்லை.


எனவே நிகழ்வுகள் எதை நோக்கி? எந்தளவு தூரத்திற்கு? எவ்வளவு காலத்திற்கு? நீளப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Source : Darulaman.net

Jul 23, 2016

துருக்கிய சதிப்புரட்சியை அரங்கேற்றியது பத்ஹுல்லாஹ் குலனா? தைய்யிப் அர்துகானா? அல்லது மூன்றாவது சக்தியா?




 பல முஸ்லிம்களின் உயிரைக் குடித்த மக்களின் இயல்பு வாழ்வில் வீணான குழப்பத்தை ஏற்படுத்திய அண்மைய துருக்கிய இராணுவ புரட்சி முயற்சியை முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். புரட்சியின் வீரர்களாக மேற்குலக கைக்கூலி ஜெனரல்களால் களத்தில் இறக்கி விடப்பட்டு இன்று குற்றவாளிகளாக களங்கப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவச் சிப்பாய்களுக்காகவும் ஒரு கணம் எமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்களும் எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று மேற்குலக அடிவருடிகளின் காய் நகர்த்தல்களுக்காக அடிக்கடி பலிக்காடாவாக்கப்படும் எமது உம்மத்தின் இளைஞர்களே!

கமாலிச, பிரத்தானிய விசுவாச அணிகளுக்கும், தற்போது இராணுவத்திற்குள் மிகப்பெரும்பான்மை செல்வாக்கிலுள்ள அமெரிக்க சார்பு – அர்துகான் அணிகளுக்கும் இடையான முறுகல் நிலை தொடர்ந்து இருந்து வருவது நாம் அறித்ததே. அதேபோல இன்று பத்ஹுல்லாஹ் குலன் சார்பினரே சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என அர்துகான் அணியினரால் அரசியல் நோக்கத்துடன் பரப்புரை செய்யப்படும் விடயம் அனேகமாக யதார்த்ததுடன் முரண்பட்டாலும், அமெரிக்க முகவரான பத்ஹ}ல்லாஹ் குலனின் ஆதரவு இராணுவ உளவுத்துறைக்குள்ளும், பொலிஸ்துறைக்குள்ளும், நீதித்துறைக்குள்ளும் கணிசமான அளவில் காணப்படுவதும் மறுப்பதற்கில்லை. இதற்கிடையே சிரியாவில், அமெரிக்காவும், ரஸ்யாவும், துருக்கியும் ஒரே இலக்குடன் ஒருக்கிணைக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் நி;லையில் நவம்பர் 2015 இல், சிரியா மீது தாக்குதல் நடாத்திய ரஸ்ய தாக்குதல் விமானம் ஒன்றை துருக்கிய விமானப்படை தன்னிச்சையாக சுட்டு வீழ்த்திய சம்பவத்தை நாம் அறிந்திருப்போம். அதிபர் அர்துகானினதும், அவருக்கு விசுவாசமான இராணுவ உயர் தலைமையினதும் அனுமதியில்லாமல் இடம்பெற்ற இதுபோன்ற நிகழ்வுகள் இராணுவத்திற்குள் அர்துகானுக்கு பதிலாக வேறேங்கோ தமது விசுவாசத்தை வைத்திருக்கும் சக்திகளும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காட்டி நிற்கின்றன.

 இந்தப் பின்னணியில் எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி அதியுயர் இராணுவ சபையில் வருடாந்தக் கூட்டம் இடம்பெற இருந்த சூழலில் அர்துகானுக்கும், இராணுவத்துக்குள் சில அணிகளுக்கும் இடையேயான முறுகல் நிலை வலுவடைந்து இருந்தது. இதன் விளைவாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல இராணுவ அதிகாரிகள் தமது பதவியை கட்டாயமாக கைவிட வேண்டிய அல்லது சிக்கலான விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அதற்கு அஞ்சிய இராணுவ அதிகாரிகளின் அவசரத் தீர்மானமே இந்த சதிப்புரட்சி முயற்சியாக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

அர்துகானின் நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி (AKP) யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கானி டொரனும் இதுபோன்ற ஒரு கருத்தை அல்ஜெஸீராவுக்கு தெரிவித்திருந்தார்,

“ தற்போது சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டவர்கள் சதிப்புரட்சி முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு சற்று முன்னர் சதிப்புரட்சியினூடாக ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரால் வழக்கறிஞர்களால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட இருந்தவர்கள்...” இதே கருத்தை இன்னுமொரு AKP அதிகாரி,


“ கடந்த சில மாதங்களாக இராணுவத்திற்குள் சதி புரட்சியொன்றை நடத்த முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலுள்ளவர்களை துருக்கிய அதிகாரிகள் அவதானித்து வந்தார்கள், எங்களுடைய கணிப்பின்படி சதி முயற்சியில் ஈடுபட்ட இந்தக்குழு, தாம் விசாரணைக்கு உட்படுத்தப்படப்போகிறோம் என்பதை உணர்ந்ததன் விளைவால் தோன்றிய பதற்றத்தாலேயே இவ்வாறு செயற்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.


இராணுவத்தின் அதியுயர் பீடத்தினதும், அதன் சிரேஷ்ட தலைமையினதும் ஆசிர்வாதம் இல்லாத நிலையிலும், சமூக மட்டத்தில் மக்கள் ஆதரவும், ஆணையும் தமக்கு சாதகமாக இருக்க முடியாத சூழலில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் அரசியல் முதிர்ச்சியற்றது. எனினும் காலணித்துவ அரசுகளின் போலியான நம்பிக்கையூட்டல்கள் சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை மறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. எனவே காலணித்துவ சக்திகளுக்கு விலைபோய் தமது சொந்த மக்களுக்கு எதிராகவே துப்பாக்கியை நீட்டும் குறைப்பிரவசப் புரட்சிகள் இவ்வாறு தோல்வியிலேயே முடியும் என்பது வியப்புக்குரியது அல்ல. இதேபோல காலணித்துவ சக்திகளின் தூண்டுதலின் பேரில் பல சதிப்புரட்சி முயற்சிகள் நவீன துருக்கிக்குள் இதற்கு முன்னரும் இடம்பெற்றிக்கின்றமை நாம் அறிந்த விடயமே.


துருக்கிய அரசு குற்றம் சாட்டுவதைபோல இந்த சதிப்புரட்சி முயற்சி துருக்கிய அரசுக்கு சமாந்தரமான கட்டமைப்பு என மிகைப்படுத்தி அழைக்கப்படும் குலன் இயக்கத்தின் (இது கிஷ்மத் இயக்கம் எனவும் அழைக்கபடுவதுண்டு) வேலையாக இருக்க சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகும். 1999 இலிருந்து அமெரிக்கா, பென்சில்வேனியாவில் அடைக்களம் புகுந்திருக்கும் பத்ஹுல்லாஹ் குலனின் தலைமையில் இயங்கும் இந்த இயக்கத்தின் ஆளுமையை விட இந்த புரட்சி முன்னெடுப்பு பாரியது என்பதே அதற்கான காரணமாகும்.


“பென்சில்வேனியாவிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துருக்கியை இயக்க முடியாது” என்று கடந்த சனிக்கிழமை பத்ஹுல்லாஹ் குலனை புரட்சியுடன் தொடர்புபடுத்திச் சாடிய அர்துகான், அமெரிக்கா அவரை தம்மிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


மேலும் துருக்கிய பிரதமர் பின்னலி யில்டிரிம் குலனுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு நாட்டையும், துருக்கியுடன் போர் பிரகடனம் செய்த நாடாகவே துருக்கி கருதும் என்றும் எச்சரித்திருந்தார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை பத்ஹுல்லாஹ் குல்லன் திட்டவட்டமாக நிராகரித்து “கடந்த ஐந்து தசாப்த்தங்களாக பல இராணுவப்புரட்சிகளால் பாதிக்கப்பட்டவனாக இருக்கின்ற என்னை இந்த புரட்சி முன்னெடுப்புடன் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்துவது என்னை விசேடமாக கேவலப்படுத்தும் ஒரு செயலாகும். நான் அதனை திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த சதிப்புரட்சி சிவில் சக்திகளின் சுதந்திரத்தை முடக்கவும், நீதித்துறையையும், இராணுவத்தையும் தனக்கு சார்பாக ஒடுக்கவும், அர்துகான் கனவு காணுகின்ற நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கான நியாயாதிக்கத்தை உருவாக்கவும் அர்துகானே ஏற்பாடு செய்த நாடகமென பழியை அர்துகான் பக்கமே திருப்பியிருந்தார். அமெரிக்காவும் சதிப்புரட்சியின் பின்னணி எதுவும் தெரியாததுபோல நீழிக்கண்ணீர் வடித்த வண்ணம் குலனுக்கு இந்த சதிவேலையில் சம்பந்தம் இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆதாரத்தை முன்வைக்குமாறு துருக்கியிடம் கேட்டிருந்தது. ஒரு வாதத்திற்கு குலனுக்கு இச்சதியுடன் சம்பந்தம் இருந்தாலும் கூட குலனும் ஒரு அமெரிக்க முகவர் என்ற அடிப்படையில் அது அமெரிக்காவுக்கு தெரியாதிருக்க எந்தச் சாத்தியமும் இல்லை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

பத்ஹுல்லாஹ் குலன் குற்றம் சாட்டுவதைப்போல அர்துகானே அமெரிக்க ஒத்துழைப்புடன் இந்த சதி நாடகத்தை நடாத்தியிருப்பதற்கான சாத்தியப்படுகளும் இல்லாமல் இல்லை.

காலணித்துவ சக்திகளின் தீய அரசியல் நோக்கங்களுக்காக துருக்கியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களும், அதனை அடிப்படையாக வைத்து இன்று பிரான்ஸிலும், ஏனைய மேற்குலக நாடுகளிலும் செய்யப்படுவதைப்போல “தீவிரவாதத்திற்கு எதிராக(அரசியல் இஸ்லாத்திற்கு) முழு உலகுமே அணி திரள வேண்டும”; என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தமது மதச்சார்பற்ற மிதவாதப்போக்கை தூக்கிப்பிடித்து, பிராந்தியத்தில் தீவிரவாத்திற்கு எதிரான போராட்டத்தில் தாம் முன்னணி வீரர்கள் என்பதை நிறுவ நினைக்கும் துருக்கிய அரசின் பரப்புரைகளும் இனிவரும் காலங்களில் துருக்கிய அரசியலின் திசையையும், அது பிராந்தியத்தில் வகிக்க இருக்கும் வகிபாகத்தையும் துல்லியமாகக் காட்டி வந்தன.

மேலும் அரைத் தசாப்பதங்களையும் தாண்டி தொடர்கின்ற சிரிய மக்கள் புரட்சியில் அமெரிக்க நலன்களை பாதுகாப்பதற்கு பஷாருக்கு பின் தனக்கு விசுவாசமான ஒரு முகவரை இன்று வரை இனம்காண முடியாது பதறிப்போயிருக்கும் அமெரிக்கா, தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டது. சவூதி, ஜோர்தான், ஈரான், துருக்கி என அனைவரும் அமெரிக்காவுக்காக முண்டியடித்து முயன்று பார்த்தாகி விட்டது. ரஸ்யாவும் அமெரிக்காவுக்கு ஊழியம் செய்ய மூக்கை நுழைத்தும் பார்த்து விட்டது. எனினும் அல்லாஹ்(சுபு) புரட்சியின் தூய்மையை காலணித்துவ சதிவலையில் அகப்படாது இன்று வரை பாதுகாத்து வருகிறான். இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சிரிய புரட்சியின் திசையும், அதனால் விரியும் அரசியல் களமும் முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் தங்குவதற்கு துருக்கியின் வகிபாகமும் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால் ஏனையோர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது துருக்கிக்கு சிரிய புரட்சியாளர்களுக்குள்ளும், முஜாஹிதீன்களுக்குள்ளும் ஆதரவைத் திரட்டும் ஆற்றல் அதிகமாகவே உள்ளதால் அதன் பகிவாகம் எதிர்காலத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

எனவே அமெரிக்கா சொல்கின்ற திசையில் துருக்கி இயங்குவதற்கு வழிவிடுவதற்கு அர்துகானுக்கு இரு முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவது, உள்நாட்டுக்குள் கணிசமான ஆதரவை அவர் தன்வசப்படுத்த வேண்டும். அது துருக்கியின் அரசியலைப் பொருத்த மட்டில் துருக்கிய இராணுவத்தின் பூரண ஆதரவு இல்லாது சாத்தியமேயில்லை. எனவே அந்த ஆதரவுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய எதனையும் அர்துகான் விட்டு வைக்க முடியாது. மேலும் மக்கள் ஆதரவை தன் பக்கம் வளைத்து வைத்திருப்பதற்கு அரசியல் களத்தில் தனது எதிர் சக்திகளை நசுக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கின்றது. அதற்கு என்றோ ஒருநாள் தானும் துருக்கிய அதிபர் கதிரையில் அமரலாம் என நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பத்ஹ}ல்லாஹ் குலனின் கட்டமைப்பின் செல்வாக்கை நாட்டில் தரைமட்டமாக்குவது அர்துகானுக்கு மிகவும் அவசியமாகும். அதனையே இந்த சதிபுரட்சியுடன் பத்ஹுல்லாஹ் குலனை வலிந்து முடிச்சுப்போடுவதன் மூலமாக அர்துகான் செய்து வருவதையும் நாம் காண்கிறோம்.

இரண்டாவது பிராந்தியத்திலும், அண்டை நாடுகளிலும் அர்துகானின் இயக்கத்திற்கு பாரிய தடைகள் எதுவும் இருக்கக் கூடாது. அந்த வகையில் அமெரிக்கா சைக்கினை செய்தால் ஈரானோ, ஈராக்கோ, சவூதியோ அதற்கு தடையாக இருக்கப்போவதில்லை. எனினும் இஸ்ரேலுடனான உறவை மாத்திரம் மீள் புதுப்பித்துக் கொள்வது இந்தக்கட்டத்தில் தவிர்க்க முடியாதது. அர்துகானின் ஆட்சிக்காலங்களில் அர்துகான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சிற்சில சர்ச்சைகள் தவிர்க்க முடியாது தோன்றினாலும் கூட பொதுவாகப் பார்த்தால் தேசிய நலன் கருதிய பரஸ்பர நல்லுறவே அவர்களிடையே இருந்து வந்துள்ளது. எனினும் இம்முறை சிரிய புரட்சினால் உருவாகியிருக்கும் அமெரிக்க நலன் சார்ந்த களவேலையை, துருக்கி இடைஞ்சல்கள் எதுவுமில்லாது செய்வதற்கு இஸ்ரேலுடனான உறவு மீள் சீரமைக்கப்பட்டு மென்மேலும் உறுதிப்படுத்தப்படுவதன் தேவை உள்ளது. அதன் வெளிப்பாடுதான் இஸ்ரேலுடனான நல்லுறவை புதுப்பொலிவுடன் புதுப்பித்து அதனை வெளிப்படையாகவே அறிவித்து, அமெரிக்க நலன்களுக்காக அவர்களுடன் பிராந்தியக் கூட்டாளிகளாக இயங்கும் முடிவினை அர்துகான் அண்மையில் எடுத்திருந்தார். அவரின் சியோனிஸத்தினுடனான உறவு உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் அவர் மீதான ஆதரவை கேள்விக்குறியாக்கியிருந்தது.

அமெரிக்க காலணித்துவ நலனையும், பிராந்தியத்தில் துருக்கியின் இராஜ தந்திர வெற்றியையும், அர்துகானின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு முக்கியமான சந்தியில்தான் இந்த சதி முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதால் அர்துகான் மீதும் சந்தேகம் எழுவதில் தவறில்லை. இராணுவ கட்டமைப்புக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்த அணி முரண்பாடுகளும், சிரியா உட்பட பிராந்தியத்தில் காணப்படும் களநிலை மாற்றங்களால் இராணுவத்திற்குள் அரசியற் தலைமையை மீறி இயங்க நினைக்கும் போக்கின் வளர்ச்சியும், இராணுவ கட்டமைப்புக்குள் களையெடுப்பு ஒன்றிற்கான அல்லது இராணுவ உயர் நிலைகளில் அதிபர் அர்துகான் சார்பான மேலதிக சுத்தப்படுத்தல் ஒன்றின் அவசியத்திற்கான காலநிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே இந்த சதி முயற்சி நடந்தேரியிருப்பதையும், சதிப்புரட்சி முறியடிப்புடன் அர்துகான் இராணுவ உயர் பீடங்கள் உட்பட, நீதித்துறை உட்பட சிவில் சேவை அதிகாரிகளில் ஆயிரக்கணக்கானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவரும் பின்னணியையும் வைத்துப்பார்த்தால் குலன் சொன்னதில் உண்மையேதும் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கே முஸ்லிம்கள் சில முக்கிய விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும். இராணுவ புரட்சி ஒன்றின் ஊடாக அல்லது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளின் புரட்சிகர தீர்மானம் ஒன்றின் ஊடாக நடைமுறையில் இருக்கின்ற ஆட்சியை மாற்ற நினைக்கும் முயற்சி அடிப்படையில் தவறானது அல்ல. அல்லது ஜனநாயம் என்ற தீய குப்ரிய அரசியல் வழிமுறையினூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சடவாத ஆட்சியை பலத்தை பயன்படுத்தி மாற்ற நினைப்பதும் தவறானது அல்ல. அதேபோல தொடர்ந்து தமது சுயநல அரசியலுக்காக காலணித்துவ சக்திகளின் கால்களில் மண்டியிட்டு தமது தீனையும், நாட்டையும், மக்களின் வாழ்வையும் அற்ப கிரயத்திற்கு விற்றுவரும் தலைமைகளுக்கு எதிராக முதுகெழும்புள்ள வீரர்களாக எழுந்து நிற்பதிலும் தவறில்லை. அந்தவகையில் அர்துகானின் அரசை தூக்கி எறிய யாரேனும் முயன்றிருந்தால் அதனை நாம் வரவேற்க வேண்டும். எனினும் இன்று துருக்கியில் நடந்து முடிந்திருப்பது அர்துகானின் காலணித்துவ நலன் பேணுகின்ற ஒரு குப்ரிய சடவாத அரசைக் கவிழ்த்து “துருக்கியின் சடவாத அரசியலமைப்பையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கப் போகிறோம்” என்ற போலி வாக்குறுதியுடன் இடம்பெற்ற இன்னுமொரு காலணித்துவ சடவாத முன்னெடுப்பு. எனவே இந்த இழி இலக்கிற்காக எமது உம்மத்தின் தூய இரத்தம் சிந்தப்படுவது எவ்வகையிலும் அனுமதிக்கப்பட முடியாதது. 1924ஆம் ஆண்டில் கிலாஃபத்திற்கு எதிராக சதிப்புரட்சியை மேற்கொண்ட முஸ்தபா கமாலின் காலத்திலிருந்து இன்று வரை துருக்கியில் இடம்பெறுவது இத்தகைய இழிப்புரட்சிகள்தான். எனவே அவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நாம் எதிர்த்தாக வேண்டும்.

மாறாக அல்லாஹ்(சுபு)வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் விரும்பக்கூடிய தூயதொரு இஸ்லாமிய புரட்சியே துருக்கி போன்ற உயர்ந்த வரலாற்று தேசத்திற்கு பொருத்தமானது. காலணித்துவ தலையீடுகளை வேரடி மண்ணோடு பிடுங்கியெறிந்து ஷரீஆவை முழுமையாக நிலைநாட்டும் தன்மானம் உள்ள ஓர் தலைமையே அதற்கு தேவையானது. எவ்வாறு முஹம்மத்(ஸல்) அவர்களின் மதீனத்துப் புரட்சிக்கு அவ்ஸ், ஹஸ்ரஜ் கோத்திரத்தலைமைகள் தமது கழுத்தை பணயம் வைத்து ஆதரவு தந்தனரோ அதேபோன்றதொரு இஸ்லாமிய புரட்சிக்கு ஆதரவு தருவதே துருக்கிய இராணுவம் போன்றதொரு புகழ்பெற்ற முஸ்லிம் இராணுவத்திற்கு தகுதியானது.

மக்கள் ஆணைக்கு முன்னால் பீரேங்கிகள் ஒரு பொருட்டே இல்லை என சதிப்புரட்சியை முறியடிக்க வீதிக்கிறங்கிய துருக்கிய முஸ்லிம்கள் ஜனநாயகத்தையோ, சடவாதத்தையோ பாதுகாக்கவல்ல களத்தில் வந்து நின்றனர்;. மாறாக மஸ்ஜித்களிலே அதான் ஒலி முழங்கி நாட்டைக் காக்க புறப்பட்டு வாருங்கள் என அர்துகான் அழைப்பு விடுத்ததும் அவர்கள் “யா அல்லாஹ்! யா அல்லாஹ்! அல்லாஹஹு அக்பர்” எனக் கோஷமிட்டபடி வெற்று மார்புடன் டாங்கிகளுக்கு முன்வந்து நின்றது காலணித்துவ சதிகளுக்கு எதிராக இஸ்லாத்தை பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. அர்துகானையும் AKP கட்சியையும் இஸ்லாத்தின் காலர்களாக நினைப்பது குருட்டுத்தனமானது என்றாலும் மக்களின் நோக்கம் உயரியது, அவர்களது குறிக்கோள் தெய்வீகமானது.

எனவே துருக்கிய இராணுவத் தளபதிகளும், வீரமிக்க துருக்கிய பொதுமக்களும் எவ்வாறு சதிப்புரட்சிக்கு எதிராக துணிகரமாக செயற்பட்டார்களோ அதைவிட பல மடங்கு தூய்மையுடனும், தியாகத்துடனும் அல்லாஹ்(சுபு)வின் ஷரீயத்தை தமது மண்ணில் நிலைநாட்டும் புரட்சிக்கு வித்திட வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய காலணித்துவ சக்திகளின் பிடியிலிருந்து தமது இராணுவத்தையும், நாட்டையும் பாதுகாக்க களத்தில் குதிக்க வேண்டும். அவர்களின் கைக்கூலிகளாக இயங்கும் கட்சிகளையும், தலைமைகளையும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். 'துருக்கிய தேசம்' என்ற குறுகிய குப்ரிய தேசிய சிந்தனையிலிருந்து விடுபட்டு 'ஓர் உம்மத்' என்ற அகீதா வழியமைந்த கோட்பாட்டில் நின்று அஷ்ஷாமையும், முழு முஸ்லிம் உலகையும் விடுதலை செய்யப்; புறப்பட வேண்டும்.

அப்போது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையில் வீதிக்கிறக்கிய முஸ்லிம்கள் இரு நாட்கள் கழித்து இவை போன்ற செய்திகளை வாசிக்க மாட்டார்கள்.

அப்போது சதிப்புரட்சியை அடக்கிய சூடு தணிய முன்னரே எமது தலைமைகள் எம்மை ஏலமிடும் இவைபோன்ற அவலமும், அவமானமும் எமக்கு ஏற்படாது.

வெள்ளியன்று சதிப்புரட்சி முயற்சிக்கப்படுகிறது...

ஞாயிறன்று...


“இன்சேர்லிக் இராணுவ விமானத்தளத்திலிருந்து அமெரிக்க யுத்த விமானங்கள் சிரியாவுக்குள்ளும், ஈராக்குக்குள்ளும் தாக்குதல் நடாத்தும் அனுமதியை அர்துகானின் அரசு மீள வழங்கியுள்ளது.”

(17-07-2016 பென்டகன் அறிவிக்கிறது)


இருநாள் கழித்து செவ்வாய் அன்று...


“செவ்வாய்க்கிழமை ISIL போராளிகள் என நினைத்து தவறுதலாக நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க விமானத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்...”

...தோற்கடிக்கப்பட்ட சதிப்புரட்சியுடன் மூடப்பட்ட இன்சேர்லிக் இராணுவ விமானத்தளம் மீளத்திறக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக பறந்த விமானங்களைக் கொண்டே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது... (19-07-2016 டெலிகிராஃப் செய்தி வெளியிடுகிறது)



அர்துகானின் துருக்கி எங்கு பயணிக்கிறது புரிகிறதா?


Sources
http://darulaman.net/

Jul 17, 2016

கசப்பான சில உண்மைகள்!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கவேண்டும் என்ற துருக்கியின் அந்த நினைப்பு வரவேற்கத் தக்கது. ஆனால் அதுதான் ஒரு முஸ்லிம் எதிர்பார்க்கும் இஸ்லாமிய அரசியலின் ரூபம் என நினைத்தால் அதுவும் ஒரு தவறான நிலைப்பாடு! இஸ்லாத்தின் அரசியல் என்பது முற்றாக வஹிவழியில் தன் அதிகாரக்கட்டமைப்பையும் அதனடி உடனடியாக சிவில் நிர்வாகம் இஸ்லாத்தின் ஏவல் விலக்கள்களை அடிப்படையாக கொண்டு அமுலாக்கப் படுவதாகும்.

இதனடி அந்த நிலத்தின் பொருளாதாரக் கொள்கை , கல்வி கலாச்சாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்ற சகல துறைகளும் ‪#‎வஹியின்‬ கட்டளைக்கு ஏற்ப பிரகடனப்படுத்தப்பட்டு அமுல் நடாத்தப்படுவதாகும்; அதுவரை அந்த நிலம் முஸ்லீம்களை அதிகமாக கொண்டும் ஒரு முஸ்லிமை கொண்டும் ஆளப்பட்டாலும் அது ‪#‎தாருல்‬ குப்ர் என்ற அந்தஸ்த்தை விட்டும் மாறிவிடாது!


முன்னால் சோவியத் யூனியனின் உடைவிற்கு பிறகும் அமெரிக்காவை அதன் பாலிசியை எதிர்க்கும் பல அதிகார வலயங்களை எம்மால் இனங்காட்ட முடியும். கியூபா, வடகொரியா, பிரேசில், கொலம்பியா, வெனிசுலா.... இப்படி இந்த லிஸ்ட் நீண்டது! ஒருவகையில் முஸ்லீம் உலகுக்கான சாதக அரசியலாக இதை கருத முடியுமே தவிர இஸ்லாமிய அரசியலின் வடிவமாக இதை கருத முடியாது! மேலும் அமெரிக்காவுக்கு உள்ளேயே அமெரிக்க எதிர்ப்பாளர்களை ஏராளமாக காணலாம்.

ஒரு நிலம் முதலாளித்துவ, கம்யூனிச அரசியல் பொருளாதார சமூக கல்வி கலாச்சார நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விடுபட்டு அந்நிலத்தின் இராணுவம், மக்கள் நிபந்தனையற்ற முறையில் இஸ்லாத்தை அமுலாக்கம் செய்ய உடன்படும் நிலையிலேயே அது #தாருல் இஸ்லாமாக மாறுகிறது. அங்கு பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இல்லாதிருப்பினும் சரியே! இத்தகு கோட்பாட்டு உண்மையை கருத்தில் கொண்டே நாம் துருக்கியை மட்டுமல்ல முஸ்லிம் உலகின் சகல அதிகார நிலங்களையும் நோக்க வேண்டியுள்ளது! கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.

இப்போது அமெரிக்க எதிர்ப்பு முகத்தை எர்தூகான் அரசு காட்டினாலும் கமால் பாட்சாவின் துரோக அரசியலை கைவிட்டு அதன் மேல் காறி உமிழ்ந்துவிட்டு அந்த எதிர்ப்பை காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முஸ்லீம் உலகின் மனோபாவத்தை தன் பக்கம் ஈர்க்கும் ஒருவகை மொஸ்மரிச பாலிசியை அவர் கையால்வதாகவே கருத முடிகிறது! இந்தப் பதிவின் மீது ஏகப்பட்ட முரண் விமர்சனங்கள் வரும் என்பதை நான் அறிவேன். அதற்கெல்லாம் பதில் சொல்லப் போவதில்லை காலம் இன்ஷா அல்லாஹ் பல உண்மைகளை புரியவைக்கும்.

Jul 11, 2016

சிரியாவை துண்டாட அமெரிக்காவின் திட்டம்



ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்தின் நூறாவது ஆண்டு மற்றும் சிரிய புரட்சியின் ஐந்தாவது ஆண்டில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி சிரியாவிற்கான அமெரிக்காவின் திட்டம் உறுதியானது என கூறினார். அவையின் வெளியறவு கமிட்டியிடம் அமெரிக்க அமைச்சர் தாம் ஏற்கனவே திட்டமிட்டபடி போர் நிறுத்தம் ஏற்படாமல் போனால் அல்லது ஒரு மாற்று அரசு ஏற்படுவதற்கான ஒரு உண்மையான மாற்றம் வரும் மாதங்களில் ஏற்படாமல் போனால் சிரியாவை பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ள தனது அடுத்த திட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாக கூறினார். “சிரியாவை முழுமையாக இப்படியே காலம் தாழ்த்தி வைத்திருப்போமேயானால் மிகவும் காலம் கடந்து போயிருக்கும்”, என ஜான் கெர்ரி கூறினார். [1] “நாம் (பேச்சுவார்த்தை) மேஜையில் வெற்றி பெறாமல் போனால் கைவசம் உள்ள அடுத்த திட்டத்தை மேற்கொள்வது குறித்து தற்போது  தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது”[2]. ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்தின் நூறாவது ஆண்டு மற்றும் சிரிய புரட்சியுன் 5வது ஆண்டில் அமெரிக்கா என்ன விலை கொடுத்தேனும் தற்போது நிலவி வரும் நிலை நீடித்து இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா நீண்ட நாட்களாக முயற்சித்து வரும் போர் நிறுத்தமானது 2015  டிசம்பர் மாதம் வியன்னா மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது, இது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜெனீவா மாநாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.  அனைத்து உச்சிமாநாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் மையமாக அல்-அசாதுடன் எதிரணியினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு ஒரு மாற்று அரசை உருவாக்குவதே. இது போன்ற மாநாடுகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட அழைப்புகள் எப்போதும் ஒரு சிலருக்கு மட்டுமே விடுக்கப்பட்டது அதிலும் குறிப்பாக இந்த திட்டத்திற்கு ஓத்து போகும் சில குழுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து விடுக்கப்பட்டது. முந்தய அரசில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களை சேர்த்து கொண்டதும் அரசின் மாற்றத்தை கோரிக்கையாக வைத்த ஆதிக்கம் வாய்ந்த குழுக்களை வெளியேற்றியதும் இந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகள் அல்-அசாத் அரசை தக்கவைப்பதற்காக வேண்டியே நடைபெறுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது மற்றும் இந்த திட்டத்தை எதிர்ப்போரை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறது. தற்போது நிலவிவரும் போர் நிறுத்தமும் நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்பது எதிர்மாறானதல்ல மாறாக அது அமெரிக்காவின் நிலைபாடான தமாஸ்கஸில் அரசை தக்கவைப்பதன் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இது அல் ஜசீராவால் குறிப்பிடப்பட்டது:  “இந்த பிரச்சினையின் தொடக்கத்தில், அமெரிக்கா வெளிப்படையாக (சிரிய அதிபர்) பஷார் அல்-அசாதிற்கு எதிராக நின்றது. ஆனால் அதே சமயம் எதிரணியருக்கு தவறான வாக்குறுதிகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. இப்போது அதன் உண்மையான நிலைபாடு வெளிப்பட்டுள்ளது. அமெரிக்கா அசாதிற்கு எதிராக நிற்கவில்லை.  பேச்சுவார்த்தையில் அசாத் கலந்துகொள்ள அது சம்மதம் தெரிவித்துள்ளது மேலும் அவரை ஒரு தலைவராகவும் அங்கீகரித்துள்ளது. [3]
மேலும் சிரியாவையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் துண்டாடும் கொள்கையை அமெரிக்கா சில காலமாக கொண்டுள்ளது. இன்று, அமெரிக்க அதிகாரிகள் ஒரு காலத்தில் அரபுலகை துண்டாடுவது சாத்தியப்படாத ஒரு இலக்காகவும் வெளிப்படையாக அதை பற்றி துண்டாடும் எண்ணம் என்பது ஆபத்தானது என்று கருதிய காலாவதியான திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். அரபுலகின் பிரச்சினை குறித்து பல்வேறு வாக்கியங்களை உபயோகித்து விவரித்து வருகின்றது அதாவது “மண்ணில் மூழ்குகிறது,” “பிரச்சினையின் உச்சி,” “பால்கனைசேஷன்,” அல்லது “மத்திய கிழக்கின் மிகப்பெரிய முயற்சி,” போன்ற அனைத்தும் இன்று வரை தொடர்ந்து நீடித்து வரும் ஐரோப்பிய மேலாதிக்கத்தையும் நலன்களையும் பாதுகாத்து வந்த 1916 ல் நடைபெற்ற ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்திலிருந்து திருப்பி விடுவதற்கான முயற்சிகளாகும். 2006 ம் ஆண்டு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல்.  ரால்ஃப் பீட்டர்ஸ்  பழங்குடி, பிரிவினைவாத மற்றும் கோத்திரத்தின் அடிப்படையிலான மத்தியகிழக்கு மற்றும் ஆசிய எல்லைகளை சிந்திப்பது என்னும் ஆயதப்படை ஜர்னலில்
 ”இரத்த எல்லை (Blood borders)”யை கோடிட்டு காட்டினார்.[4] சிரியா மற்றும் பெரும்பாலான மத்தியகிழக்கு பகுதிகளை துண்டாடும் எண்ணத்தை புஷ்ஷின் ஆதரவாளர்கள் கொண்டிருந்தனர் அவர்கள் ஒரு தெளிவான பிளவு: realm ஐ தக்கவைத்து கொள்வதற்கான ஒரு புதிய வழிமுறை(strategy) என்னும் திட்டத்தை வரைந்தனர். இந்த ஆவணம் சதாம் ஹுசேனை அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் சிரியாவை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தது.   பிரிவினையை ஒரு கருவியாக உபயோகித்து தற்போது நிலவிவரும் நிலையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்கா நெடு நாட்களாக கொண்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
தற்போது போர் நடைபெற்று வரும் சிரியா எல்லைகள் தான் அமெரிக்கா நாடிய எல்லைக்கோடுகளாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன சிரியாவை பிரிக்கும் வகையில் வட பகுதிகளான ஹஸாகா முதல் கோபானி மற்றும் துருக்கிய எல்லை வரையிலான பகுதிகளில்  வரலாற்றின் பெரும் பகுதியல் அதிகமாக குர்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வட பகுதியான இத்லிப் மாகானத்திலிருந்து யுப்ரைடஸை கடந்து ஈராக்கிய எல்லையிலுள்ள அல்-ரக்கா வரையில் அஹ்லுஸ் சுன்னாவினர் பெரும்பான்மையாக வசித்து வரும் பகுதியாகும். நாட்டின் மையப்பகுதியான டமாஸ்கஸலிருந்து லடாக்கியா மாகாணம் வரை, அரசின் விசுவாசிகள் மற்றும் சிறுபான்மையினரான அலவிகள் வசித்து வருகின்றனர் இந்த பகுதி தானாக ஒரு நாடாக உருவாகக்கூடும். இந்த புதிய வரைபடம்  ஸைக்ஸ்-பைகாட் ஒப்பந்தம் ஏற்பட்ட பின் சிரியா எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையான பிரஞ்சு வரைபடத்தை காட்டிலும் வேறுபட்டிருக்கவில்லை மக்களிடம் பிரித்து இந்த நாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயன்றதால் பிரான்ஸ் இந்த வரைபடத்தில்  1920 களில் பல திறுத்தங்கள் மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளானது. எவ்வாறிருப்பினும் இப்போது எழும் கேள்வி என்னவெனில் ஜான் கெர்ரியும் அவரது கூட்டாளிகளும் தீட்டும் வரைபடமானது இப்போது நிலவி வரும் நிலையிலிருந்து  மாறுபட்டிருக்குமா மேலும் அது நிலைத்திருக்குமா என்பது தான்?
மக்களுடைய மதிப்பு மற்றும் கலாச்சாரம் ஸைக்ஸ்-பைக்காடிற்கு முற்றிலும் மாறுபட்டிருந்த காரணத்தால் அது தோல்வி அடைந்துவிட்டது. நூறு வருடங்களுக்கு பிறகு ஸைக்ஸ்-பைக்காட் வரைந்த எல்லையை போன்று வரையப்பட்டுள்ள இன்றைய எல்லைகளும் அந்த பிராந்திய மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை அதனால் இன்றும் அது நிலைபெறுவதில் தோல்வியை சந்தித்து வருகிறது எல்லையை போல் மக்கள் தங்களது
இஸ்லாமிய அடிப்படையில் கொண்டுள்ள ஒற்றுமையை கைவிட்டு தேசியவாத அடையாளங்களை  தனதாக்கி கொள்ளவார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை இல்லாத இந்த எல்லைகள் புது அமைப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு ஈராக்கியர், சிரியர், ஜோர்டானியர் அல்லது லெபனியர் போன்ற ஒன்று இல்லாமல் இருந்தது, இந்த தேசங்கள் திட்டமிட்டு உருவாப்கப்பட்டவை ஆகும். தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் வல்லுனர்கள் முன்வைப்பது புதிய வகையான இனம் சார்ந்த பிரிவினைவாத அடையாளங்களை தவிர வேறில்லை. கெர்ரி மற்றும் ஒபாமாவின் ஸைக்ஸ்-பைகாட்டின் 21ம் நூற்றாண்டின் வடிவமானது இனவாத அடிப்படையில் எல்லைகளை பிரித்து உருவாக்க வேண்டும், இவைகளை குழுக்கள் போன்ற அமைப்பதால் இந்த பிராந்தியத்தில் இவைகளால் ஆதிக்கம் செலுத்த முடியாது இது மட்டுமல்லாமல் இவை அனைத்து வகையிலும் நிலைத்திருக்க அரும்பாடு பட வேண்டும். இதன் காரணத்தால் தான் கெர்ரி மேற்கொள்ளும் இத்திட்டமும் தோல்வி அடையும்.
சிரியாவை பிரிப்பது குறித்த ஜான் கெர்ரியின் அறிவப்பு உண்மையான மாற்றம் வேண்டும் என்ற புரட்சிப்படையினர் தங்களது கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதற்காக
பல கருத்தரங்கங்கள் மற்றும் உச்சி மாநாடுகள் நடத்திய பிறகும் அவர்களை சம்மதிக்க வைப்பதில் அமெரிக்கா தோல்வி அடைந்ததை ஒட்டி வந்ததாகும். ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிரியாவின் போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பது யாரும் எதிர்பாராதது, ஆனால் அம்மக்கள் சிரிய அரசை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளனர், புரட்சியாளர்கள் மீது தாக்குதல்களை கொண்டு செல்வதற்கு பதிலாக தனது அரசை தற்காத்து கொள்ளவதற்கே வெளியிலிலுந்து உதவியை தொடர்ந்து எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் நிச்சயமாக தோல்வியை அடையக்கூடும், ஏனெனில் இதில் அரசிற்கு எதிராக போராடும் புரட்சி குழுவினர் ஈடுபடுத்தவில்லை, மற்றும் இந்த சிரிய புரட்சியின் எதிர்காலம் அமெரிக்கா இந்த விஷயத்தில் பெரும்பாலும் எவ்வாறு  அனுகுகிறது என்பதை பொறுத்து தீர்மானிக்கும்.
அத்நான் கான்
[1]http://www.theguardian.com/world/2016/feb/23/john-kerry-partition-syria-peace-talks
[2]http://sputniknews.com/politics/20160225/1035293806/kerry-plan-.html#ixzz41Hnw8Yve
[3]http://www.aljazeera.com/blogs/middleeast/2016/01/shifting-lines-syria-160131100323293.html
[4] http://www.armedforcesjournal.com/blood-borders/

sindhanai.org

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-02


உலகில் உள்ள அத்தனை பயங்கரவாத இயக்கங்களுக்கும் சில அரசியல் இலக்குகள் உள்ளன. பயங்கரவாதம் என்பது அந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறை மாத்திரமே. ஒரு கிலாபாவை நிறுவுதல் அல்லது ஷரீஆவுடைய ஆட்சியை அமைத்தல் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இராணுவங்களை முஸ்லிம் நிலங்களில் இருந்து விரட்டுதல் அல்லது முஸ்லிம் நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சியார்ளகளைப் பதவியிறக்கம் செய்தல் என்ற ஏதாவது ஒன்றை ISIS இன் அரசியல் இலக்குகளில் ஒன்றாகக் கொள்ளலாம். அவ்வாறானதொரு தோற்றப்பாட்டையே மீடியாக்கள் உருவாக்கி இருக்கின்றன.

பொதுவாகவே எவ்வளவுதான் நியாயமான அரசியல் இலக்குகளாக இருந்தாலும் அவற்றைப் பயங்கரவாதம் என்ற வழிமுறையூடாக அடைந்து கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளையும் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதே சமூகத்தினால் இலக்குகளுக்கும் வழிமுறைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்து அறியமுடிவதில்லை என்பதால் பயங்கரவாதம் என்கின்ற வழிமுறையை எதிர்க்கின்ற அச்சமூகம் பயங்கரவாதத்தின் உயர்ந்த இலக்குகளையும் எதிர்க்க ஆரம்பிக்கும். ISIS என்ற இந்தப்பயங்கரவாத இயக்கத்திற்கு மீடியாக்களில் வழங்கப்படும் அதிகூடிய நேரஒதுக்கீடு, மற்றும் ISIS ஐ ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளோடு தொடர்புபடுத்திக்காட்டல் என்பவற்றின் மூலமாக இஸ்லாத்தின் எதிரிகள் இதனையே சாதித்துள்ளார்கள்: ISISஇன் பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற மக்கள் ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளையும் தற்போது எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள். ISISஇன் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்ட மேலைத்துவக் காலனித்துவ சக்திகளையும் அவற்றின் உள்நாட்டு முகவர்களையும் அவர்கள் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

எனவேதான் ISIS என்ற இந்த இயக்கம் முஸ்லிம் நாடுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடாது என்று விரும்புகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் கைப்பொம்மையா? என்று சந்தேகிக்கவேண்டி இருக்கின்றது. உண்மையிலேயே அவ்வாறு சந்தேகிப்போர் நிறையப்பேர் இருக்கின்றார்கள். இருப்பினும் இவர்கள் விடுகின்ற இமாலயத்தவறு என்னவெனில், முஸ்லிம் தேசங்களைத் தொடர்ந்து அடிமைத்துவத்தில் வைத்திருக்கவேண்டும் என்கின்ற அந்த இலக்கை அடைவதற்காக ISIS ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் – அல்லது அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் எனத் தாங்கள் நம்பும் - அந்தத் தீய சக்திகளைக் கண்டிக்காமல், ISIS என்ற அந்தக் கருவியைக் கண்டிப்பதாகும். அவ்வாறு செய்வதனால், உண்மையான குற்றவாளிகள் விமர்சனங்களிலிருந்து தப்பி விடுகின்றார்கள். ISIS மீது உண்டாக்கப்படும் வெறுப்பு இறுதியில் கிலாபா மற்றும் ஷரீஆ போன்றவற்றின் மீதான வெறுப்பாக மாறிவிடுகின்றது.

இஸ்லாமிய உலகில் இன்று எத்தனையோ அரசியல் / அறிவியல் இயக்கங்கள் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் இந்த அரசியல் / அறிவியல் இயக்கங்களின் இலக்குகளும் ISIS போன்ற இயக்கங்களின் இலக்குகளும் ஒன்றாக அமைவதும் உண்டு. ஒரு உதாரணத்திற்கு கிலாபா என்கின்ற இலக்கையே எடுத்துக்கொள்ளலாம். இது எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இலக்கு. ஆனால், ISISஐ முதலில் வெறுத்து, பின்னர் அந்த வெறுப்பின் தொடராய் கிலாபாவையும் வெறுப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்ட மக்களால் கிலாபா என்ற உயர்ந்த இலக்கைப் பயங்கரவாதம் அல்லாத அறிவியல் / அரசியல் வழிமுறைகளுக்கூடாகப் பெற்றுக்கொள்ளலாம், அவ்வாறு அதைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கும் இயக்கங்கள் இருக்கின்றன, அவ்வாறன இயக்கங்களுக்கு தாம் ஆதரவு வழங்கவேண்டும் என்ற உண்மைகள் புரிவதில்லை.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Mohamed Faizal

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-05

இறுதியில் நீங்கள் ஒரு பெரிய பொல்லால் அடித்துக் கொல்லப்படுவீர்கள்.


பயங்கரவாதம் என்ற பதப்பிரயோகத்தின் குளறுபடிகள்.
பயங்கரவாதம் என்ற சொல் பொதுவாக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வன்முறைச் சம்பவங்களுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தை நோக்குவோம்:
அமெரிக்காவில் இடம்பெற்ற ஒக்கலஹாமா குண்டுவெடிப்பின் போது 168 பேர் கொல்லப்பட்டு 680க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு ஆளானார்கள். அதேபோல் அமெரிக்காவின் பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பின் போது வெறும் 3 பேர் மாத்திரம் கொல்லப்பட்டார்கள்.
இந்த பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு அரசியல்வாதிகளாலும் மீடியாக்களாலும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று கண்டிக்கப்பட்டது. ஆனால், அதிக கொடுமை மிக்க ஒக்கலஹாமா குண்டுவெடிப்போ ஒரு வெறும் குற்றச்செயல் என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியே அழைக்கப்பட்டது. ஏனெனில், ஒக்கலஹாமா குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் முஸ்லிமல்லாத ஒரு வெள்ளைக்கார அமெரிக்கவன். பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு சந்தேகநபரோ ஒரு முஸ்லிம்.
பயங்கரவாதம் என்ற சொல்லை முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் வன்முறைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துகின்றார்கள். இதன் மூலம் முஸ்லிம் அல்லாதோரால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அத்தனை மகா பயங்கரவாதங்களும் ஒரு சாதாரண, போலீஸ் நிலையைப் பதிவுகளுக்குள் அடங்குகின்ற அன்றாட நிகழ்வுகளில் ஒன்று போல் சித்தரிக்கப்படுகின்றது. எனவே, பயங்கரவாதம் எனும் பதத்தைப் பயன்படுத்தப்படுவதாக இருந்தால் அது வன்முறை புரிவோரின் இன மத அடையாளங்களுக்கு அப்பால் பயன்படுத்தப்படவேண்டும். ஈராக்கில் அமெரிக்காவும், மியன்மாரில் அவர்களின் இராணுவ-தீவிர பெளத்த கூட்டமைப்பும், சிரியாவில் அசாத்தும் ரஷ்ய இராணுவமும் புரியும் வன்முறைகள் எல்லாமே பயங்கரவாதம் என்று அழைக்கப்படல் வேண்டும். இல்லையேல் அப்பதம் வழக்கிலிருந்து விலக்கப்படவேண்டும்.

அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கும் பயங்கரவாதத்திற்குமிடையான தொடர்பு.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னதான மற்றும் பின்னரான இரண்டு ஈராக்குகளையும் எடுத்துக்கொண்டால், ஆக்கிரமிப்புக்குப் பின்னரான ஈராக்கினுள்ளேயே வன்முறைக்குழுக்களும் வன்முறைகளும் தோற்றம் பெற்றன. ஆக்கிரமிப்புக்கு முன்னதான ஈராக் பாதுகாப்பும் இன மத ஐக்கியம் நிறைந்ததாகவும், அபிவிருத்தியில் உச்சநிலையத் தொட்டதாகவுமே இருந்தது.
அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ இராணுவங்கள் முஸ்லிம் தேசங்களில் உள்ள ஆளுகைக் கட்டமைப்புகளைச் சிதைக்கின்றபோது அங்கே ஒரு வலு-வெற்றிடம் தோன்றுகின்றது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக புதிய புதிய ஆயுதக்குழுக்கள் உருவாகுகின்றன. அது தவிர்க்க முடியாதது. அது இயற்கையானது.
ஜெர்மனிய நாட்சிக்கள் பிரான்ஸ் நாட்டை ஆக்கிரமித்தபோது பிரான்ஸ் நாட்டுக்குள்ளும் அவ்வாறான ஆயுதக்குழுக்கள் தோற்றம் பெற்றன. நாட்சிச எதிரிகளையும் அவர்களின் உள்ளூர் ஒத்துழைப்பாளர்களையும் விரட்டுவதற்காக வன்முறையை ஒருவழியாக இவர்கள் கருதினார்கள். இருப்பினும் எவரும் இந்த வன்முறைக் குழுக்களையோ பிரான்ஸிய சமூகத்தையோ குற்றம் சொல்லவில்லை. மாறாக, எல்லாவற்றிற்கும் அடிப்படைக்காரனமான ஜெர்மனிய நாட்சிக்களையே குற்றம் பிடித்தார்கள்.
ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கத்தின் நேரடி விளைவாக முஸ்லிம் தேசங்களில் வன்முறைக் குழுக்கள் தோற்றம் பெறுகின்றபோது, வெறுமனே அந்தக் குழுக்களும் அந்நாட்டு முஸ்லிம் மக்களுமே குற்றம் பிடிக்கப்படுகின்றார்கள். அடிப்படைக்காரனமான அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் தப்பித்துக்கொள்கின்றார்கள்.
சர்வதேச அரச பயங்கரவாதிகளை விட்டுவிட்டு, அவர்களின் பயங்கரவாதத்தைத் தினமும் அனுபவிக்கின்ற, பாதிப்புக்குள்ளான முஸ்லிம் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது வெறும் கோழைத்தனம். குறைந்தபட்சம் நான்கு வார்த்தைகள் கொண்டாவது முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் எவ்வாறு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு உள்நாட்டிலே வண்முறைக்குழுக்களின் பிறப்பிற்குக் காரணமாய் அமைகின்றது என்பதை எமது சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகள் முஸ்லிம்களை நோக்கி பயங்கரவாதம் என்ற பதத்தைத் திரும்பத்திரும்ப உபயோகிக்கப்பதற்கு இரண்டு பிரதான காரங்கள் இருப்பதாகக் கொள்ளலாம்: ஒன்று கவனக்கலைப்பு; மற்றையது முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தலும், முஸ்லிம்கள் மீதான மேலதிக பயங்கரவாதக் கட்டவிழ்ப்பிற்கான காரணிகளைத் தோற்றுவித்தலும்.

கவனக்கலைப்பு:

பொதுவாகவே மனிதர்களில் பெரும்பாலோனோர் இருக்கின்ற ஆதாரங்களை ஆராய்ந்து அல்லது வாதப்பிரதிவாதங்களைப் பரிசீலனை செய்து அதன் விளைவாக முடிவுகளுக்கு வருவதில்லை. அதிகாரத்தில் உள்ளோர் (இது அரசியல் அதிகாரமாக இருந்தாலும் சரி ஆன்மீக அதிகாரமாக இருந்தாலும் சரி) அவர்கள் எடுக்கின்ற முடிவுகளை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள்.
இன்றைய மேலைத்தேய உலகும் அவர்களுடைய மீடியாக்களும் மிகப்பெரும் அதிகார வர்க்கங்கள். இந்த அதிகார வர்க்கங்கள் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் அது ஒரு தேவவாக்கு போல், குரானிய வசனம் போல் அப்படியே பெரும்பாலோனோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்தவிதமான ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே அமெரிக்க-ஐரோப்பிய உலகு (முஸ்லிம்) பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் போது, அதன் பக்கவிளைவாய், கண்டனம் செய்கிற அமெரிக்க-ஐரோப்பிய உலகு பயங்கரவாதத்தை விட்டும் மிகவும் தூரமானவர்கள் என்ற ஒரு மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தை விட்டும் உலகின் கவனம் கலைக்கப்படுகின்றது. இது ஒருவகையான பிர்அவுனிய மாயாஜாலமே! இந்தக் கவனக்கலைப்பில், இந்த பிர்அவுனிய மாயாஜாலத்தில் அதிகமான முஸ்லிகளும் சிக்குண்டு போயுள்ளார்கள்.
அடுத்ததாக...
நச்சுப் பாம்புகளாகச் சித்தரிக்கப்படும் ஒரு சமூகம் இறுதியில் பெரிய பொல்லால் அடித்துக் கொல்லப்படும். இது ஒரு வரலாற்று உண்மை.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பொய்யான நச்சுப் பிரச்சாரங்களை முஸ்லிம்கள் எதிர்கொள்ளவில்லையெனில், முஸ்லிம்கள் அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தின் பாதிப்புக்களைத் தினமும் அனுபவிப்பவர்கள் என்கின்ற உண்மையை நாம் உலகுக்கு எடுத்துக் காட்டவில்லையெனில், அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளே அதிபெரிய பயங்கரவாதத்தின் ஊற்றிடம் என்பதை உலகுக்கு உணர்த்தவில்லையெனில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகளையும் அநீதிகளையும் அரச பயங்கரவாதங்களையும் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள்.
எனவே பயங்கரவாதம் பற்றிய ஆழமான அகலமான புரிதலை முஸ்லிம் சமூகம் எட்டவேண்டிய ஒரு மாபெரும் தேவை உள்ளது.
அந்தத் தேவையை எட்டச் செய்வதற்கான ஒரு சிறு முயற்சியே இந்தக் கட்டுரைகள். இதை அங்கீகரிக்குமாறு அல்லாஹ்வை வேண்டியவனாக....


Mohamed Faizal

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-04




இஸ்லாமிய / முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள் எதுவும் எந்தவொரு முஸ்லிம் பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அச்சமடைவதில்லை என்றும்; உண்மையில் அவ்வாறான குழுக்களின் இருப்பை அவர்கள் விரும்புகின்றார்கள் என்றும்; இதற்குக்காரணம் இக்குழுக்களின் இருப்பைக் காரணமாகவைத்து அவர்களால் தங்களின் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகளை இலகுவாக அடைந்துகொள்ளமுடியும் என்பதுதான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த வாரம் Dr. ஜாகிர் நாயிக் மற்றும் அவரது Peace TV இரண்டையும் தடைசெய்யக் கோரி இந்தியாவில் எழுந்துள்ள கூக்குரல் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இன்று இந்தியாவின் சின்னவீடாகிப்போயுள்ள பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் ஒன்றிற்கும் Dr. ஜாகிர் நாயிக் அவர்களுக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் பிதற்றுகின்றார்கள்.

Dr. ஜாகிர் நாயிக், பொதுவாக, மதங்களுக்கிடயான ஒற்றுமை வேற்றுமைகள் பற்றிப்பேசும் ஒரு அறிஞர். ஓரிரு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கெதிரான அமெரிக்க ஐரோப்பியப் பயங்கரவாதத்தைத் தோலுரித்துக்காட்டியும் உள்ளார். மேற்குலகினர் முஸ்லிம் பயங்கரவாத்தைச் சுட்டிக்காட்டுவதில் தம் வாழ்நாளைச் செலவழிப்பது தமது பயங்கரவாத்தைச் செயல்களிலிருந்து உலகின் கவனத்தைத் திருப்புவதற்கே என்பதையும் இவர் விளக்கியுள்ளார். இவரது இந்த அறிவியல் செயற்பாட்டை முடக்குவதற்காகவே இவரை அவர்கள் பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் ஒன்றோடு தொடர்புபடுத்துகின்றார்கள். இந்த வன்முறைச்சம்பவத்தொடு தொடர்புபட்ட ஒருவர் Dr. ஜாகிர் நாயிக்கின் சமூகவளைத்தலத்தில் இணைந்திருந்ததுதான் இதற்கு ஆதாரம் என்கின்றார்கள்.

(Dr. ஜாகிர் நாயிக் அவர்களை எதிர்த்துக்கொண்டு இஸ்லாமிய விரோதிகளோடு கைகோர்க்கவும் முஸ்லிம்களில் ஒருசாரார் புறப்பட்டுள்ளார்கள். இஸ்லாமிய சட்டக்கலை தொடர்பான விடயங்களில் இவரோடு உள்ளக முரண்பாடு கொண்டவர்களே இவர்கள்.)
*******
பயங்கரவாதம் பற்றிய சரியான புரிதலை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமெனில் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்” (Agent Provocateurs) மற்றும் “பொய்க்கொடித் தாக்குதல்” (False Flag Operations) என்றால்
என்னவென்று நாங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

“ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்”

அநீதிக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆட்படுகின்ற ஒரு சமூகம் நீதியையும் சுதந்திரத்தையும் பெறுவதற்கு முயற்சி செய்யும். பொதுவாக இந்த முயற்சிகள் அவசியமானவை; பாராட்டப்படவேண்டியவை; அனைவரும் பங்கெடுக்கவேண்டியவை. இருப்பினும் இம்முயற்சிகளிற் சில, சில சமையங்களில், புறநடையாக, உசிதமற்ற முயற்சிகளாக அமைவதும் உண்டு. இவ்வாறன உசிதமற்ற முயற்சிகளில் ஒன்றுதான் பயங்கரவாதமும்.

பயங்கரவாதிகள் எனப்படுவோரின் இலக்குகள் உன்னதமானதாக இருப்பினும் அவர்களின் வழி முறைகள் சாத்தியமற்றவையாக, ஆபத்தானவையாக, எமது உன்னதமான இலக்குகளை விட்டும் எம்மைத் தூரப்படுத்துபவையாக அமைந்து விடுகின்றன. எனவே இவ்வாறான உசிதமற்ற முயற்சிகள் அறிவுரைகளூடாக சீர் செய்யப்படவேண்டும். உசிதமற்ற முயற்சிகளைக் காட்டிக்கொடுப்புகள் மூலம் சீர்திருத்தம் செய்யலாம் என்பது சீர்திருத்தம் என்கின்ற இன்னுமொரு உயர் இலக்கிற்கான இன்னுமொரு பிழையான வழிமுறை; இன்னுமொரு உசிதமற்ற முயற்சி. காட்டிக்கொடுப்புகள் அநீதிக்கு ஆட்பட்ட சமூகத்தை மேலும் பலமிழக்கச் செய்யும்; அதற்கெதிரான அநீதிகளை இன்னும் அதிகரிக்கும்; அதிகரிக்கின்ற அந்த அநீதிகள் இன்னும் அதிகமான உசிதமற்ற வழிமுறையாளர்களின் பிறப்பிற்குக் காரணமாகும். இதனை ஒரு “விஷியஸ் சைக்கிள்” என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

அநீதிகளைக் கண்டு ஆத்திரப்படாதவன் ஒரு ஜடம். அவனால் எதுவித பிரயோசனமில்லை. ஆனால், அநீகளுக்கெதிரான நியாயமான அந்த ஆத்திரம் மாத்திரம் இருப்பது போதாது. ஆத்திரம் என்பது ஒரு உனர்ச்சி. வெறும் உணர்சிகளால் மாத்திரம் உந்தப்படும் செயல்கள் எதிர்பார்க்கப்படும் விளைவுகளைத் தரப்போவதில்லை.

ஆகவே ஆத்திரமும் சீரான சிந்தனையும் ஒன்றிணையவேண்டும். அவ்வாறு இரண்டும் ஒன்றாகக் கிடைக்கப்பெற்றவனே பிரயோசனமான ஒரு மனிதன். அவனால் மாத்திரமே தீர்வுகளுக்கான சரியான வழிமுறைகளைக் கண்டறிய முடியும். அத்துடன், தன்னிடமுள்ள ஆத்திரத்தையெல்லாம் ஒரு இயக்க சக்தியாக மாற்றி தீர்வுக்கான வழியில் பயணிக்க முடியும்.

அநீதிக்கு ஆட்பட்ட எந்தவொரு சமூகத்திலும் அதிக ஆத்திரமும் குறைவான, சீரற்ற சிந்தனைகளும் கொண்ட ஒரு சிலர் இருப்பது இயற்கையானதே. இதற்கு முஸ்லிம் சமூகம் விதிவிலக்கல்ல. 

“ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்”
எனப்படுவோர் இவ்வாறான அதிக ஆத்திரமும் சீரற்ற சிந்தனைகளும் கொண்ட இளைஞர்களைத் தேடி அலைவார்கள். அவர்களின் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பேசி அவர்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற ஆத்திரத்தை இன்னும் அதிகரிப்பார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கின்ற அல்லது அவ்வாறு கருதப்படுகின்ற தேசத்திற்கெதிராக அல்லது சமூகத்திற்கெதிராக வன்முறைகளில் ஈடுபடத் தூண்டப்படுவார்கள். அவ்வாறன வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்குத் தேவையான பயிற்சிகளையும் தளவாடங்களையும் வழங்குவார்கள். இவர்கள் “வெற்றிகரமாக” ஒரு வன்முறையைப் புரிந்துவிட்டால் மிக்க மகிழ்ச்சியுறுவார்கள். ஏற்கனவே வன்முறையைப் பிரயோகித்துக்கொண்டிருந்த அரசோ அல்லது சமூகமோ இந்த வன்முறையைச் சுட்டிக்காட்டித் தங்களை பாதிக்கப்படுவோராகக் காட்டும். இந்த வன்முறையைக் காரணம் காட்டி புதியதும் அதிகமானதுமான வன்முறையத் தங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடும்.

“பொய்க்கொடித் தாக்குதல்” என்பது அநீதிகள் இளைத்துக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தை அல்லது குழுவைப் பிரதிநிதித்துவம் செய்யும் முகவர்கள், குறிப்பாக புலனாய்வுப் பிரிவுகள், தாமாகவே நேரடியாக தாம் பிரதிநிதித்துவம் செய்யும் அரசுக்கு அல்லது சமூகத்திற்கு எதிரான ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து, பின்னர் அந்தப் பழியை எதிரிச் சமூகத்தின் மீது சுமத்துவதைக் குறிக்கும். இவ்வாறான “பொய்க்கொடித் தாக்குதல்களின்” விளைவும் நான் மேலே விளக்கிய “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்களின்” செயற்பாடுகளை ஒத்ததாகவே இருக்கும்.

(சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்ட “பொய்க்கொடித் தாக்குதல்கள்” மற்றும் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்களின்” செயற்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்களை நீங்கள் சுயதேடலில் பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.)

எனவேதான், முஸ்லிம் சமூகத்தைப் போன்ற ஒரு (underdog) சமூகத்திற்கெதிராகப் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இடம்பெற்ற பயங்கரவாதச் செயலில் “பொய்க்கொடித் தாக்குதல்கள்” மற்றும் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்” களின் வகிபாகம் என்னவென்றெல்லாம் நாங்கள் ஆராய முற்படவேண்டும். இதயசுத்தி இழந்து, எதிரிகளிடம் நற்பெயர் பெறவேண்டும் என்ற நோக்கில், வேண்டாதவனைக் காட்டிக்கொடுக்கவேண்டும் என்ற முனைப்புகளோடு சக முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமாகப் பயங்கரவாத முத்திரை குத்தப் புறப்படக்கூடாது.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Jul 8, 2016

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-03


இன்று அநேகமான முஸ்லிம்கள், முஸ்லிம்கள் பயங்கரவாதிகளும் அல்ல இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் மார்க்கமும் அல்ல என்பதை நிரூபிப்பதற்குக் கடும் பிரயத்தனம் எடுப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த முயற்சியின் விளைவுதான் மதீனாவில் நடந்தது போன்ற ஒரு வன்செயலுக்குக் காரணம் முஸ்லிம்களில் ஒருசாரார்தான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட உடனேயே முந்தியடித்துக்கொண்டு அந்த வன்செயலைக் கண்டிப்பதுவும், அதற்குக் காரணமானவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டோருக்கு காபிர்கள் என அவசரமாக பத்வா கொடுக்கமுனைவதும்.

சாதாரனமாக எந்தவொரு குற்றச்செயலும் இழைக்கப்படும்போது எழுப்பப்படும் கேள்விகள் எதுவும் இங்கு எழுப்பப்படவில்லை. இதில் ஒரு மடமையும், தெளிவான ஒரு சுயநலமும் இருக்கின்றது: தாங்கள் எந்த வகையிலும் குற்றவாளிகள் அல்ல என்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்போர் முன்னிலையில் நிரூபித்து நற்பெயர் பெறவேண்டும் என்ற ஒரு உந்துதல் இருக்கின்றது.

இவ்வாறு நாம் செயற்படுவது எமது சுயபெறுமானம் வலுவிழந்த நிலையக்காட்டுகின்றது. அவ்வாறு செய்யவேண்டிய எந்தத் தேவையும் எமக்கில்லை. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பதிலளிப்பதையே ஒரு மார்க்கக் கடமையைப்போல் நாம் எடுத்துக்கொண்டால் நாம் ஒருபோதும் முன்னேற்பாட்டுச் செயற்பாட்டாளர்களாக (proactive) மாறமாட்டோம்; தொடர்ச்சியான எதிர்வினைச் செயற்பாட்டாளர்களாகவே (reactionary) இருப்போம். அதாவது, எமக்கென சொந்தமான எதுவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், எம் எதிரிகளின் நிகழ்ச்சிநிரலிலேயே இயங்கிக்கொண்டிருபோம். எமது பொதுஎதிரிகள் யார் என்பதை மறந்து, அவர்களின் நோக்கங்கள் என்ன என்பதை மறந்து, எம் இருப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பான அவர்களின் வேலைத்திட்டங்கள் என்ன என்பதை மறந்து உள்ளக முரண்பாடு வளர்ப்பதிலேயே நாம் காலம் கழிப்போம். இது எழுச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத்தின் பண்பாக இருக்கமுடியாது.

எமக்கிடையான உள்ளக முரண்பாடுகள் மிகவும் உக்கிரமாகத் தூண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஈரான் மற்றும் சவூதியின் ஊக்குவிப்போடு குறிப்பாக ஷீஆ-சுன்னி முரண்பாடுகள் இன்று சூடுபிடித்து வருகின்றன. சவூதி சலபிக்களை எதிர்க்கும் சில ஷீஆ ஆதரவுக் குழுக்கள் தங்களின் எதிரிகளை ISIS காரர்களாகச் சித்தரித்து காட்டிக்கொடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவர்களுக்கு
ISIS இலங்கையில் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கு விடைகான்பதில் எதுவித அக்கறையும் இல்லை. தங்கள் எதிரிகளைக் காட்டிக்கொடுத்துப் பழிவாங்கவேண்டும் என்ற வேட்கையில் இலங்கையிலும் ISIS இருக்கின்றது என்ற மாயையையும் அச்சத்தையும் இவர்கள் தோற்றுவிக்க முனைகின்றார்கள்.

அத்துடன் இந்தக் காட்டிக்கொடுப்புகள் சில சவூதிசார் சலபிக்களாலும் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. சவூதியின் சர்வாதிகாரப் போக்கையும், அதன் காலனித்துவ நாடுகளுடனான கள்ளத்தொடர்பைக் கண்டிக்கின்ற அத்தனை குழுக்கள் மீதும் இவர்கள் ISIS முத்திரை குத்துவார்கள். இக்குழுக்களின் வழிமுறை வன்முறை அற்ற வெறும் அரசியல் / அறிவியல் வழிமுறையாக இருக்கின்றபோதும் கூட இந்தக் காட்டிக்கொடுப்பைச் செய்ய இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

2011ஆம் ஆண்டிலே ஆப்கானிஸ்தானிற்குள் தாலிபான் என்ற “பயங்கரவாதிகளும்” 2013ஆம் ஆண்டிலே ஈராக்கிற்குள்ளே சத்தாம் ஹுசைன் என்ற “பயங்கரவாதியும்” இருப்பதாகக் கூறிய அமெரிக்கா அவ்விரு “பயங்கரவாதிகளிடமுமிருந்து”அந்நாட்டு மக்களைத் தான் விடுவிக்கப்போவதாகப் பொய்க்கோசம் எழுப்பியது. அப்போது ஆப்கானிஸ்தானிற்கு எதிராக ஈரானும், ஈராக்கிற்கு எதிராக சவூதியும் அமெரிக்காவுடன் இணைந்து காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அந்தத் துரோகத்தனத்தின் விளைவாக இன்றும் அவ்விரு நாடுகளிலும் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று இங்கு (இலங்கையில்) இல்லாத ஒரு ISIS இற்கு எதிரான காட்டிக்கொடுப்பு அவ்வாறன ஒரு விபரீதத்தையே ஏற்படுத்தும்.

அமெரிக்கா உலகில் உள்ள எந்தவொரு இராணுவச் சக்தியுடனும் ஒப்பிடமுடியாத அளவு பலம் கொண்ட ஒரு இராணுவச் சக்தி. அதனோடு இரானுவரீதியாகப் பொருதி வெற்றிகொள்ளக்கூடிய எந்தவொரு நாடும் உலகில் இல்லை. அப்படியிருக்க, சாதாரண ஆயுதக்குழுக்களால் எவ்வாறு அதனைத் தோற்கடிக்க முடியும்? எனவே எந்தவொரு பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அமெரிக்கா அச்சமடைவதில்லை. மாறாக அவ்வாறன பயங்கரவாதக் குழுக்களின் இருப்பு அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகின்றது. ஏனெனில், அவ்வாறன குழுக்கள் இருக்கின்றபோதுதான் அமெரிக்காவை எங்கள் நாடுகளுக்குள்ளும் சமூகங்களுக்குள்ளும் வரவேற்கின்ற துரோகிகள் எங்களுக்குள் உருவெடுக்கின்றார்கள். எனவே, உண்மையிலேயே அவ்வாறன பயங்கரவாதக்குழுக்கள் இல்லாவிடில் அவற்றைத் தாமே தோற்றுவிக்கும் பணியிலும் தாமே இறங்குகின்றார்கள். இதற்கான சான்றுகள் தென்னமெரிக்க நாடுகளுடனான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் நிறையவே காணக்கூடியதாக உள்ளது.

எனவே எம்மத்தியில் ISIS போன்ற குழுக்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்ற கேள்விகளும்; உண்மையிலேயே அவை காணப்பட்டால் அவற்றைத் தோற்றுவித்தது யார்? என்ற கேள்விகளும்கூட அர்த்தமற்றவை. இருக்கின்ற அல்லது இல்லாதிருக்கின்ற இந்தப் பயங்கரவாதக்குழுக்களைக் காரணமாகக் காட்டி அமெரிக்கா (மற்றும் ஏனைய முஸ்லிம் விரோத சக்திகள்) எவ்வாறு எங்களுக்குள் ஊடுருவல் செய்யமுனைகின்றன என்பதிலேயே எங்கள் பிரதான கவனம் இருக்கவேண்டும். முஸ்லிம் நாடுகளுக்கெதிரான இன்றைய யுத்தங்களைத் தலைமை தாங்குகின்ற மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள்தான் எங்களின் எதிரிகள். அந்நாடுகளின் நகர்வுகள் தொடர்பாகவே நாங்கள் அதிகூடிய கவனம் செலுத்தவேண்டும்.

இயக்கவெறி என்ற நோய்க்கு ஆட்படாத எவராலும் இந்த இயக்கவாதத்தின் ஆபத்துகளை உணரமுடியும். இந்த இயக்கவெறி நோயிலிருந்து இந்த உம்மத்தைக் காப்பதற்கான ஒரேயொரு வழி எமது பொது எதிரி யார் என்பதை அடையாளப்படுத்திக்கொண்டு அந்த எதிரி தொடர்பான எமது செயற்பாடுகளைக் கூட்டிக்கொள்வதில்தான் உள்ளது.

எமது பொதுஎதிரி மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள்தான். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இவர்களின் யுத்தங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலத்தில் தொடங்கிய முஅத்தா யுத்தம் முதல், பின்னர் சிலுவை யுத்தங்கள், அதன் பின்னர் காலனித்துவம், தற்போது “பயங்கரவாதத்திற்கு” எதிரான யுத்தம் என்று தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே எமது பொது எதிரி மீதான கவனத்தை விட்டுவிட்டு முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற அல்லது இருப்பதாகச் சொல்லப்படுகின்ற குழுக்களை விமர்சிப்பதிலேயே நாம் காலம் கழிப்பது எமது எதிரிக்கு நன்மையாகவே அமைகின்றது. நாம் அப்படிச் செய்வதையே அவர்களும் விரும்புகின்றார்கள்.

அமெரிக்கா எந்தவொரு பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அச்சமடைவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்குக்காரணம் அதனிடம் இருக்கின்ற அதியுயர் இராணுவ பலம். அமெரிக்கா மிகவுமே அஞ்சுவது அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனங்களைத் தோலுரித்துக்காட்டி மக்கள் மனங்களிலிருந்து அதனைத் தூரப்படுத்த முனைகின்ற அறிவியல் / அரசியல் இயக்கங்களையே. உதாரணமாக இலங்கையில் உள்ள ஒரு இஸ்லாமிய இயக்கம் இலங்கைவாழ் சமூகங்களிடையே அமெரிக்காவின் காலனித்துவ யதார்த்தத்தைப் புரிய வைத்து, அதன் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக்காடுகின்ற வேலையைச் செய்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த முயற்சியில் அது வெற்றியும் பெறுகின்றது என்றும் வைத்துக்கொள்வோம். இதன் விளைவு என்னவாக இருக்கும்? இது இலங்கை – அமெரிக்காவிடையான உறவுகளில், ஒத்துளைப்புகளில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும்? இவ்வாறான இயக்கங்கள் உலக நாடுகள் அனைத்திலும் செயற்பட்டால், உலகநாடுகளிடையே அமெரிக்காவின் நிலை என்னவாகும்? எனவே அமெரிக்கா, மற்றும் காலனித்துவ ஐரோப்பிய சக்திகள் மிகவும் அஞ்சுவது இவ்வாறான முஸ்லிம் அறிவியல் / அரசியல் இயக்கங்களையே. எனவே, ISIS போன்ற இயக்கங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அச்சத்தையும் கோபத்தையும் பயன்படுத்தி, வன்முறையற்ற, சாத்வீகமான அறிவியல் / அரசியல் முயற்சிகளை முன்னெடுக்கின்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் இவர்கள் தடை செய்வார்கள். இதை முஸ்லிம்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் அனைவரும் மிகவும் வருந்தவேண்டி வரும்!



From Mohamed Faizal
(தொடரும் இன்ஷா அல்லாஹ்

Jul 3, 2016

முதலாளித்துவத்தின் கோரமுகம்...? ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்!


"ஒரு நாட்டை வெற்றி கொண்டு அடிமை படுத்த இரண்டு வழிகள் உண்டு ஒன்று வாளினைக்கொண்டு மற்றையது கடனைக்கொண்டு” – ஜான் ஆடம்ஸ்.

ஆனால் கடந்த அரசாங்கத்தை விட தமது அரசு பல நாடுகளில் அதிலும் IMF போன்ற நிதி நிறுவனங்களின் இருந்து கடனை பெற்று கொண்டதை பாரிய வெற்றியாக மார்பு தட்டி கொள்கிறது இந்த நல்லாட்சி. 

அபிவிருத்திக்கு கடன் தேவை தானே என்று நினைக்கலாம் ஆனல் நான் சொல்லப்போகின்ற விடயம் எவ்வாறு இந்த அபிவிருத்திக் கடன் இந்தோனேசியாவை கடனில் மூழ்கடித்தது என்பதே!

இந்த விடயம் 1960களில் இருந்து ஆரம்பமாகின்றது. எண்ணெய் , தங்கம் , திறமையான மனித வளம் , என்பன இருந்தும் 70 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டிருந்தனர் .வருமான இடைவெளி பாரிய அளவில் அதிகரித்தது அதாவது சாதரணமான ஊதியம் பார்க்கும் ஒருவர் அங்குள்ள செல்வந்தர் போல திருமணம் செய்ய வேண்டுமாயின் 400 வருடங்கள் ஊதியம் பார்க்க வேண்டும் “ரிசப்ஷன் கோல்” செலவை மாத்திரம் ஈடு செய்ய!

GAP,NIKE,ADIDAS போன்ற நிறுவனங்களின் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களான பெரும்பாலான பெண்கள் அதிக உஷ்ணம் உள்ள அதாவது 42 செல்சியத்திலும் அதிக வெப்பமான தொழிற்சாலையில் சில நேரங்களில் 24 மணித்தியாலங்களிற்கு அதிகமாக வேலை செய்து பெரும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? அவர்கள் உற்பத்தி செய்யும் பாதணி எட்டு பவுண்ட்ஸ் எனின் அவர்களுக்கு கிடைப்பது வெறும் நான்கு சதமே! ஆனால் கம்பனியின் இலாபமோ 138 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியது.

இது இவ்வாறு இருக்க அமெரிக்க மற்றும் பிரித்தானியா தங்களது வணிகத்திற்கு சிறந்த சந்தையாக இதனை கண்டது இதனால் இவர்கள் நலன் பேணும் ஊழல் மிக்க அரசை ஆட்சிக்கு அமர்த்தி IMF மற்றும் World Bank மூலம் வெளிநாட்டு உதவி என்ற பேரில் பல பில்லியன் அமரிக்க டாலர்களை கடனாக வழங்கி ஆட்சியாளனின் பையை நிறைத்தது.ஆனல் தங்களுக்கு எந்த நலனுமே கிடைக்காத இந்த பணத்திற்கு இன்றும் மக்கள் வரிச்சுமயை தாங்கி கொண்டுதான் இருகின்றனர் .ஜனநாயகம் பேசும் நாடுகள் இவர்களின் கடன் விலக்களிப்பை சிந்திப்பதே கிடையாது ஆனால் வங்கொரோத்து அடையும் வங்கிகளுக்கு பல டிரில்லியன் டாலர்களை உதவிக்கரமாக நீட்டுகிறது. இந்த ஜனநாயகத்தை வாங்க இந்தோனேசியாவிடம் வசதி இல்லை என்றே கூறவேண்டும்.

இந்த கடனை பெற்றுக்கொள்ள கட்டமைப்பு மாற்றம் என்ற பேரில் வறிய மக்களுக்கான சமூக செலவினை குறைத்தது. இது வறியோர்களை மேலும் வறியோராக்கியது எந்தளவுக்கு என்றால் மூன்று வேலை உணவை உண்ணும் சிலர் இரண்டு வேலை உணவைதான் பூர்த்திய செய்ய முடிந்தது ஆனால் இதனை தனது வணிகத்திற்கான வாய்ப்பாக குறைந்த ஊதியம் வழங்கி ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது.

இதுமட்டுமா ஒரே நாளில் நிதி சந்தையினை ஊழல் செய்து ஒரு டாலர் 2500 ரூபியா இருந்தததை ஒரு டாலர் 10000 ரூபியா என்றளவுக்கு நாணய மதிப்பிறக்கம் செய்ததது இது உலகமயமாக்கலின் திறந்த நிதிச் சந்தை என்ற அடிப்படையில் செய்யப்பட்டது. இது மேற்கு கம்பனிகளின் ஏழை பணியாலர்களின் ஊதியத்தை ஒரே நாளில் 25% ஆள் குறைத்தது . இதன் தாக்கம் இன்றும் இந்தோனேசியாவில் -மேற்கு சுமாத்திராவில் மாத்திரம் 32000 சிறுவர்கள் போதிய சத்து இன்மை குறைபாட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு 1.3 மில்லியன் சிறுவர்கள் வறுமையின் காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை !

இவ்வாறு கடன் மூலம் அடிமைப்படுத்தப்பட்ட பல நாடுகள் இன்றும் நிமிர முடியாத நிலையிலேயே காணப்படுகிறது .


இலாபத்தை மாத்திரம் நலன் என்ற அடிப்படைடியில் கட்டப்பட்ட முதலாளித்துவ ஒழுங்கில் இது ஒன்றும் வியத்தகு விடயமல்ல தனது பை பல பில்லியன்களால் நிரம்ப வேண்டுமானால் இதற்காக பலர் பட்டணியில் கிடப்பது ஒன்றும் பெரிதல்ல என்ற இவர்களது கொள்கை எத்தகைய ஜாகிலியம்.

From Mohamed Imran