Apr 27, 2011

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 3

புரட்சி - திருக்குர்ஆனின் வழியில்

மக்காவில் அருளப்பட்ட இறைவசனங்களின் மூலம் இறைவன் உலகுக்கு தந்த ஒளி மக்காவில் அருளப்பட்ட திருமறையின் இறைமொழிகள் ஒரு கேள்விக்கு தெளிவாகவும் தீர்க்கமாகவும் விடை தந்து கொண்டே இருந்தன. 13 ஆண்டுகளாக இந்த விடை கொண்டு அந்த மக்கள் அல்லாஹ்வின் வழிநோக்கி அழைக்கப்பட்டார்கள். இந்த 13 ஆண்டுகளிலும் இந்தக் கேள்விக்கு விடைதந்த இறைவசனங்களின் அடிப்படைத் தன்மைகள் மாறவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்கு விடைதந்த பாங்கும் பாணியும் மாறிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் திருக்குர்ஆன் இந்தக் கேள்விக்குப் பதில் தந்த பாங்கில், அந்தக் கேள்வி அன்று தான் புதிதாக எழுப்பப்பட்டது போலும், அன்று தான் அதற்கான பதில் அருளப்பட்டது போலும் இருந்தது. மக்கமா நகர் காலம் முழுவதும் இந்த அடிப்படைக் கேள்விக்கு தெளிவு தருவதில், அதைக் கொண்டு அந்த மக்களை இந்தப் பேரியக்கத்தில் பிணைத்திடுவதில் திருக்குர்ஆன் தன் முழுக் கவனத்தையும் செலுத்திற்று. புதமையும் புரட்சியும் நிறைந்த இந்த மார்க்கத்திற்கு இந்தக் கேள்விக்கான பதில்தான் அடித்தளம். இந்தக் கேள்வி அதன்பதில் இரண்டு முக்கியமான அடிப்படைகளைக் கொண்டது.

முதலாவது அல்லாஹ்வின் ஏக இறைவனின் ஆளுமை ஆற்றல் அதிகாரம் ஆட்சி இவற்றின் எல்லை. இந்த ஏக இறைவனுக்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அடியானின் பணிவும் பக்தியும் இரண்டாவது இறைவனுக்கும் அல்லாஹ்வுக்கும் அவன்பால் பணிவும் பக்தியும் கொள்ளும் மனிதனுக்கும் இடையேயுள்ள தொடர்பும் உறவும் பிணைப்பும் இந்த இரண்டு அடிப்படைகளுக்கும் தெளிவு தருகின்ற போது திருக்குர்ஆன் இந்த உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை ஒட்டுமொத்தமாக நோக்கத்தின் தெளிவையும் விளக்கத்தையும் வழங்கிற்று. அவர்கள் அரேபியாவில் வாழ்ந்தாலும் சரி அரேபியாவுக்கு வெளியே இந்த உலகம் முழுவதும் பரவி வாழ்ந்hலும் சரி அவர்கள் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்தாலும் சரி அதற்குப் பின்னே இந்த உலகத்தில் வாழவந்த மனித மகாக்கடலிலே கலந்தவர்களாக இருந்தாலும் சரி. அத்தனை மனிதர்களுக்கும் அத்தனை காலங்களுக்கும் பொதுவானவை திருக்குர்ஆன் தரும் தெளிவும் தீர்வும். இந்தத் தெளிவும் தீர்வும் மனிதனின் அடிப்படை இயல்புகளோடு தொடர்புடையன. அவை காலத்தால் ஞாலத்தில் வரும் மாறுதல்களால் மாறாதவை. எல்லாக் காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் ஏற்புடையவை. மக்காவில் ஆரம்பநாள்களில் அருளப்பட்ட இறைவசனங்களில் மனித வாழ்வின் தன்மைகள் இந்த உலகிலிருக்கும் ஏனைய படைப்பினங்களுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்புகள் ஆகியவை தெளிவுபடுத்தப்படுகின்றன.

· மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?
· அவன் இறுதியாக எங்கே செல்லவிருக்கின்றான்?
· அவனை உயிர் தந்து வாழவிட்டது யார்?
· அவனுடைய வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவது யார்?
· அவன் காணவியலாத ஆனால் அவனால் உணரவும் அறியவும் முடிகின்ற அந்த ஒப்பற்ற ஆற்றல் மிக்கவன் யார்?
· வனப்பும் வியப்பும் மிக்க இந்த உலகைப் படைத்தது யார்?
· இந்த உலகை இயக்கிக் கொண்டிருப்பது யார்?
· இந்த உலகில் காணும் பல்வேறு அற்புதமான மாற்றங்களை யார் கண்பாணித்துக் கொண்டிருக்கின்றார்?
· இத்தனையையும் செய்து கொண்டிருக்கின்ற அல்லாஹ்விடம் மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

என்பனவற்றையெல்லாம் மக்காவில் அருளப்பட்ட அந்த இறைவசனங்கள் தெளிவுபடுத்தின. முதல் 13 ஆண்டுகளிலும் இவைபோன்ற அடிப்படை விஷயங்களுக்கே அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டது. தௌஹீத் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற அடிப்படையில் அத்தனை விளக்கங்களும் தரப்பட்டு அந்த மக்கள் இந்த அடிப்படையில் தோய்த்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் உள்ளங்கள் இந்த அடிப்படைகளில் தெளிவடைந்து தேர்ச்சி பெற்ற பின்னரே ஏனையவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த அடிப்படைகளில் அந்த மக்கள் ஐயங்களுக்கு அப்பால் நின்றிட வேண்டும் என இறைவன் விரும்பினான் காரணம் இந்த மக்களைக் கொண்டுதான் இந்த மார்க்கத்தை நடைமுறைப் படுத்திடவும் இந்த உலகில் நிலைநாட்டிடவும் முடிவு செய்திருந்தான் இறைவன். இன்றைக்கு அல்லாஹ்வின் இந்த வழிகாட்டுதலை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும் என்பதை இலட்சியமாகக்கொண்டு செயல்படுவோர், இந்த வாழ்க்கை நெறியைப் பிரதிபலிக்கும் ஓர் உலக சமுதாய அமைப்பை உருவாக்க விரும்புவோர், இந்த அடிப்படையை ஆழ்ந்து கூர்ந்து கவனித்திட வேண்டும். இந்த அடிப்படைகளைத் தெளிவுபடுத்திட இந்த அடிப்படைகளில் அந்த சமுதாயத்தினரை தேற்சிப் பெறச் செய்திட திருக்குர்ஆன் 13 ஆண்டுகளை எடுத்திருக்கின்றது. இந்த 13 ஆண்டுகளிலும் இந்த சமுதாய் அமைப்பில் கொண்டுவரவிருக்கின்ற சட்டதிட்டங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற்காக. இந்த அடிப்படை செய்தியிலிருந்து அணுவும் பிறழ்ந்திடவில்லை அல்குர்ஆன். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்)அவர்களின் பணி தௌஹீத் இறைவன் ஒருவனே என்பதிலிருந்துதான் ஆரம்பித்தது. லா இலாஹ இல்லல்லாஹ_ அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற இந்த அடிப்படைதான். அத்தனை நபிமார்களும் மக்கள் முன்னே எடுத்து வைக்கும் முதற்செய்தியாக இருந்திட வேண்டும். இந்த அடிப்படையிலிருந்தே அவர்களின் புரட்சிப்பணி துவங்கிட வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம் திட்டம். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் மனித வரலாற்றில் ஒப்புவமையற்ற ஓர் சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்கள். அந்தச் சமுதாயத்தின் முன்பும் எடுத்து வைக்கப்பட்ட முதற்செய்தி இதுதான்.

அதாவது அந்த மக்கள் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற சத்தியத்திற்குச் சாட்சியங்களாக வாழ்ந்திட வேண்டும். உங்களுக்க உணவளித்து உங்களைப் பாதுகாத்து பராமரித்து வருபவன் அல்லாஹ்தான். இந்த அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதையே அந்த மக்களுக்கு விளக்கிச் சொன்னார்கள் இறைவனின் தூதர் (ஸல்)அவர்கள். அந்த மக்களின் அன்றைய நிலையை வைத்துப்பார்த்தால், அஞ்ஞான அந்தகாரத்தில் மூழ்கியிருந்த அந்த மக்கள் இந்த அடிப்படைக் கொள்கையை தௌஹீத் இறைவன் ஒருவனே என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வார்கள் என்பது நினைத்துப் பார்க்கவியலாத ஒன்று. அரபிமொழி அந்த மக்களுக்குத் தாய்மொழி. அரபி மொழியில் அதன் இலக்கியவளத்தில் தங்களை ஆழமாகப் பதித்துக் கொண்டவர்கள் அவர்கள். அந்த மொழியின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் நன்றாக அறிந்த அவர்கள் இலாஹ் இறைவன் என்ற சொல்லின் முழுப் பொருளையும் நன்றாக அறிவார்கள். அதேபோல் உளுகியாஃ என்றால் முழுமையான ஆளுமை எந்த இடைச் செருகலும் இடைத்தரகரும் இல்லாத ஏக அதிகாரம் ஆற்றல் என்பதையும் அந்த மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த முழமையான அதிகாரம் இந்த முழுமையான ஆற்றல் இந்த முழுமையான ஆளுமை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம் என்பதை ஏற்றுக்கொண்டால் தங்களிடம் அறுதியான அதிகாரம் செலுத்தி வந்த மதகுருமார்களின் கைகளிலிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும். அந்த அதிகாரம் இனி அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். அதே போல் அந்த அதிகாரம் தங்கள் குலத்தின் தலைவர்களிடமிருந்து கோத்திரத்தின் தலைவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிடும். இனி அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வே அதிகாரம் செலுத்துவான். அதே போல் செல்வத்தில் செழித்தவர்கள் என்பதனால் எல்லோர் மீதும் அதிகாரம் செலுத்தி வந்தார்களே அவர்களின் பிடியிலிருந்து அதிகாரம் அகற்றப்பட்டுவிடும். இனி அந்த அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும். இந்த உண்மைகள் அந்தத் (தௌஹீத்)இறைவன் ஒருவனே என்ற முழக்கத்தில் பளிச்சிட்டு பிரவாகமெடுத்து ஓடவதை அவர்கள் கண்ணெதிரே கண்டார்கள். லா இலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதர் ரசூலுல்லாஹ் அல்லாஹ் ஒருவனே இறைவன் முஹம்மத் (ஸல்)அவர்கள் அவனது திருத்தூதராவார்கள் என்ற திருக்கலிமாவை ஏற்றுக்கொண்டால் அடுத்த கணமே,

· எண்ணங்களில்
· இதயங்களில்
· மத அனுஷ்டானங்களில்
· வாழ்க்கை பிரச்சனைகளில்
· செல்வத்தை சேர்ப்பதில்
· செலவு செய்வதில்
· நீதி வழங்கப்படுவதில்
· திருமண ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்
· வியாபார பரிவர்த்தனைகளில்
· பரிமாற்றங்களில்
· அண்டை அயலாரோடு உறவு வைத்துக் கொள்வதில்

சுருங்கச் சொன்னால் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் எல்லாத் துறைகளிலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களே வாழும். ஆதுவரை (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரை)பழகி வந்த பழக்கங்கள் சிந்தனைகள் கோட்பாடுகள் நடைமுறை நாகரிகங்கள் மதச்சடங்குகள் மூடப்பழக்கங்கள் அத்தனையும் எடுத்து எறியப்பட வேண்டும். இத்தனையையும் அந்த மக்கள் இந்த முழக்கம் தங்கள் காதுகளை எட்டியதும் உணர்ந்தார்கள் புரிந்தார்கள். அதே போல் அதிகாரம் எனக்குச் சொந்தம் என்று யார் யாரெல்லாம் அல்லாஹ்வுக்கச் சொந்தமான அதிகாரத்தை அபகரித்துக் கொண்டார்களோ அவர்களுக்கு நேருக்கு நேர் எடுத்து வைக்கப்படும் சவால்தான் இந்த அல்லாஹ் ஒருவன் என்ற முழக்கம் என்பதையும் அவர்கள் நன்றாக அறிவார்கள். லா இலாஹ இல்லல்லாஹ_ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற இந்த சத்திய முழக்கம் மக்களைக் கட்டுப்படுத்தி தன் பிடிக்குள் வைத்திருந்த அத்தனை சடங்கு சம்பிரதாயங்களுக்கும் வாழ்க்கை வழிமுறைகளுக்கும் நெறிகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்திட முன் வைக்கப்பட்ட ஓர் விடுதலை முழக்கமே. அல்லாஹ் அனுமதிக்காத அங்கீகரிக்காத சட்டங்களை ஏற்றி அவற்றை மக்கள் மேல் திணித்துக் கொண்டிருக்கும் அத்தனை ஆட்சியாளருக்கும் எதிராக எடுத்து வைக்கப்பட்ட முழக்கமே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற இந்த உரிமைப்போர். இந்த விடுதலை முழக்கம் தௌஹீத் என்ற அறைகூவல் எடுத்து வைக்கப்பட்ட அரபி மொழியின் நெளிவு சுளிவுகளை அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அந்த மக்கள் நன்றாக அறிவார்கள். அந்த அரபு மக்கள் கண்டெடுத்து வைத்திருந்த வாழ்க்கை நெறிகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மூடப்பழக்க வழக்கங்களையும் அவர்களின் தலைவர்களையும் அதிகாரம் செலுத்தி ஆட்சி செய்பவர்களையும் சமருக்கு இழுக்கின்றது என்பதை உணர்ந்தார்கள். ஆகவே தான் அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ_ என்ற இந்த முழுக்கத்தை வேறு சொற்களால் சொன்னால் இந்தப் புரட்சிப் பிரகடனத்தை வெறுப்பு குரொதம் கோபம் வன்முறை என்பனவற்றைக் கொண்டு எதிர்கொண்டார்கள். இந்தப் பிரகடனத்திற்கு எதிராக தங்கள் ஆற்றல்களையெல்லாம் ஒன்று திரட்டிப் போராடினார்கள். அவர்கள் எத்துணை வீம்போடும் வீறாப்போடும் எதிர்த்துப் போராடினார்கள் என்பதை வரலாறு நன்றாக அறியும். இங்கே சில வினாக்கள்.



· ஏன் இந்த பேரியக்கம் லா இலாஹ இல்லல்லாஹ_ என்ற முழக்கத்தை முன்வைத்து ஆரம்பித்தது?
· அனைத்தையும் அறிந்த இறைவன் ஏன் இந்த மகத்தான வாழ்க்கை நெறியை எல்லோரும் எதிர்க்கின்ற எதிர்த்துப் போராடுகின்ற ஓர் முழக்கத்தை (தௌஹீதை)முன்வைத்து ஆரம்பிக்கப் பணித்தான்?
· இந்த அழைப்பை இந்த முழக்கத்தை முன்வைத்து அழைக்கும் போது அந்த மக்கள், இந்த வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்டால் எண்ணற்ற துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டியது வரும் என்பதை அறிந்திருந்தும் அல்லாஹ் ஏன் இந்த முழக்கத்தை முன்வைத்து மக்களை இந்த வாழ்க்கை நெறியின் பக்கம் அழைக்கச் செய்தான்?
பெருமானார் (ஸல்)அவர்கள் ஏன் தேசியவாதத்தை முன் வைத்துத்தன் பணியைத் துவங்கவில்லை?

இறைவனின் இறுதித்தூதர் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற கண்ணியமிக்கப் பொறுப்பை ஏற்ற காலக் கட்டத்தில் அந்த அரேபியாவன் சூழல் என்ன என்பதைச் சற்று ஏறெடுத்துப் பார்ப்போம். அந்த அரபுநாட்டின் வளம் நிறைந்த பகுதிகள் எதுவும் அந்த அரபு மக்களின் கைகளில் இருக்கவில்லை. செழித்துக் கிடந்த பகுதிகளெல்லாம் அரபுக்கள் அல்லாத வேற்று மக்களின் பிடியிலேயே இருந்தன. அரபு நாட்டின் வடபகுதியில் ரோமர்களின் ஆதிக்கம் நிலை பெற்றிருந்தது. இந்த ரோமர்கள் தங்கள் ஆதிக்கத்திலிருந்த அரபு நிலப்பரப்பை; பரிபாலனம் செய்திட அரபுக்கள் சிலரையே நியமித்திருந்தார்கள். அரபு நாட்டு மக்களி;ன் கைகளில் இருந்ததெல்லாம் வறண்ட மணற்பாங்கான பகுதிகள் மட்டுமே. இவற்றில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த நீர்ச்சுனைகளே. இவற்றிலிருந்த இந்த வறண்ட பகுதிகளிலிருந்த பெருஞ்செல்வம் (ஹிஜாஸ் திஹாமா நஜ்த் போன்ற பகுதிகள் இதில் அடங்கும்) இப்படி அரேபியாவில் வளம் வாழ்ந்த பகுதிகளெல்லாம் அரபுக்கள் அல்லாதவர்களின் ஆதிக்கத்திலிருந்த போது தான் பெருமானார்(ஸல்)அவர்கள் அந்த அரபுக்களால் நம்பிக்கைக்குரியவர்கள் உண்மையாளர்கள் என்றெல்லாம் புகழப்பட்டு போற்றப்பட்டு வந்தார்கள்.

முஹம்மத் (ஸல்)அவர்கள் நபி என்ற கண்ணியமிக்கப் பொறுப்பைப் பெறுவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அந்த அரபுக்களில் உயர்ந்த குலத்தினர் எனப் போற்றப்பட்டு வந்த குறைஷி குலத்தவர்கள் கஅபாவில் கருங்கல்லை எடுத்து வைப்பது யார்? என்ற வழக்கைத் தீர்த்திட முஹம்மத் (ஸல்)அவர்களை நடுவராக நியமித்தார்கள். இந்த அளவிற்கு அந்த மக்களின் நம்பிக்கை;குரிய நல்லவர்களாகத் திகழ்ந்தார்கள் முஹம்மத் (ஸல்)அவர்கள். இன்னும் முஹம்மத் (ஸல்)அவர்கள் அரபுக்களிடையே உயர்ந்த குலம் எனப் போற்றப்பட்டு வந்த குறைஷி குலத்தில் பிறந்தவர்கள். இந்த உயர்ந்த குலத்தில் உயர்ந்த கோத்திரம் எனப் பாராட்டப்பட்ட பனூஹாஷிம் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள்ட இத்துணை சீலமிக்க சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருந்தார்ள் முஹம்மத் (ஸல்)அவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அரபு தேசியம் என்ற தேசியவாதத்தை முன்வைத்து அந்த மக்களின் உணர்வுகளைத் தூண்டி தங்களுக்குப் பின்னால் அணி திரள வைத்திருக்கலாம். இதை அவர்கள் மிக எளிதாகச் செய்திருக்க இயலும் ஏனெனில், மௌட்டிகத்தில் மூழ்கி இருந்த அந்த மக்கள் இனவாதம் பேசியே பழி தீர்த்தல் பழிக்குப் பழி தீர்த்தல் என ரத்தத்தை ஆறாக ஓட்டி பெருமை கொண்டாடியவர்கள். ஆகவே அரபு தேசியம் என்ற வெறியை ஊட்டி அந்த மக்களை ஒன்று திரட்டி ரோமர்களின் ஆதிக்கத்தையும் பாரசீகர்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துவிட்டு தனது ஆதிக்கத்தை அந்த மக்களிடையே நிலைநாட்டிய பின்னர் இறைவன் ஒருவன் தான் என்பதை எடுத்துச் சொல்லி இருந்தால் எதிர்ப்புகளைக் குறைத்திருக்கலாம்.

ஒரு பெரும் கூட்டத்தினரை முஹம்மத் (ஸல்)அவர்கள் தங்களுக்குப் பின்னால் அணி திரள வைத்திருக்கலாம். 13 ஆண்டுகாலம் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பெருவாரியாகக் குறைத்திருக்கலாம். ஆனால் முஹம்மத் (ஸல்)அவர்கள் எடுத்து வைத்தக் கொள்கை முழக்கமோ அரபுக்களிலேயே ஒரு பெரும் கூட்டத்தைத் தனக்கு எதிராகக் கிளர்ந்திடச் செய்துவிட்டது. காரணம் எல்லாம் அறிந்த அல்லாஹ் தனது திருத்தூதரை வேறு அடிப்படையில் வேறு வழிமுறையில் நடத்திட விரும்பவில்லை. அல்லாஹ் ஒளிவு மறைவின்றி ஐயங்களுக்கு அப்பாற் நின்று ஓர் உண்மையை அல்லாஹ் ஒருவனே என்ற உண்மையை அந்த மக்கள் ஆரம்பத்திலேயே ஒத்துக்கொள்ள வேண்டும் இந்த அடிப்படையை அடிப்படையாகக் கொண்டு தான் அந்த மக்கள் வளர வேண்டும் வாழ வேண்டும் என விரும்பினான். இந்தக் கொள்கையை அந்த மக்களிடம் எடுத்த எடுப்பிலேயே எடுத்து வைப்பதால் ஏற்படும் இன்னல்கள் எவையானாலும் தன் தூதர் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்பினான். தன் திருத்தூதர் மட்டுமல்ல தன் திருத்தூதருடன் அணிதிரளும் அத்தனை அடியார்களும் இதில் எதிர்ப்படும் எல்லா இன்னல்களையும் ஏற்றிட வேண்டும் என எதிர்பார்த்தான். நிச்சயமாக அல்லாஹ் தன் திருத்தூதரையும் தன்னை நம்பி தன் திருத்தூதரோடு சேர்ந்த நம்பிக்கையாளர்களையும் சிரமங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்க வேண்டும் என விரும்பியிருக்க மாட்டான். ஆனால் அவன் அறிவான் இந்தக் கொள்கையைத் தூய்மையாக நிலைநாட்டிட ஏற்புடைய வழி வேறொன்றுமில்லை என்பதை. அல்லாஹ்வின் அடிமைகள் ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு பாரசீகர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அரபுக்களின் ஆதிக்கத்திற்கு ஆட்படுவது எந்த நியாயத்தின் கீழும் வராது என்பதை நீதிமிக்க அந்த இறைவன் நன்றாக அறிவான்.

அநியாயம் அடக்குமறை ஆதிக்கவெறி இவை எந்த உருவத்தில் வந்தாலும் யாரிடமிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. எல்லா நிலைகளிலேயும் அநியாயம் அநியாயமே. இந்த நீழ்நிலம் உலகம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். இங்கே நீதிமிக்க அந்த அல்லாஹ்வின் ஆட்சியும் அதிகாரமும் மட்டுமே நிலைநாட்டப்பட வேண்டும். அல்லாஹ்வின் ஆட்சியை ஆளுமையை நிலைநாட்டிட அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற இந்த உண்மை முழக்கமே முதன் முதலில் முன் நிறுத்தப்பட வேண்டும். அரபு மொழியை நன்றாக அறிந்த அந்த மக்களுக்கு இந்த (தௌஹீத்)முழக்கத்தைச் செவிமடுத்தவுடன், தேசியம் என்பது இந்த இறை நம்பிக்கையைக் கொண்டே நிர்ணயிக்கப்படும் அல்லாமல் மனிதன் பிறந்த இடத்தைக் கொண்டோ இன்ன பிறவற்றைக் கொண்டோ நிர்ணயிக்கப்பட மாட்டாது. இந்த வகையில் எந்த நிறத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அரபு தேசத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ரோமன் தேசத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பாரசீக தேசத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த இறை நம்பிக்கையின் அடிப்படையில் அனைவரும் சமமானவர்களே. திருக்குர்ஆனின் பார்வையில் இந்தத் திருக்கலிமா அதாவது தௌஹீத் முழக்கம் மட்டுமே மனிதர்களை ஒன்றாய்ப் பிணைக்கும் ஒரே சக்தி (என்ற உண்மைகள் நன்றாகத் தெரிந்தன).

தொடர்ந்து வரும்...

sources from warmcall.blogspot.com

No comments:

Post a Comment