Apr 6, 2011

முஹர்ரமும், நவயுக பிர்அவ்ன்களும்!


இந்த முஹர்ரம் மாதத்திலே அருள்பாளிக்கப்பட்ட ஆசுரா தினம் எம்மை விட்டு நகர்ந்து சென்றுள்ளது. முஹர்ரம் மாதம் என்பது அல்லாஹ்வினது புனித மாதமாகவும், முஸ்லிம்களினது மிக முக்கிய மாதமாகவும் இருக்கின்றது. இந்த மாதம் ஹிஜ்ரி நாட்காட்டியில் முதலாவது மாதமாகவும், அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.அல்லாஹ் அத்தவ்பா 36ம் வசனத்தில் கூறுகிறான் “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ( ஒரு வருடத்திற்குப்) பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுவதற்குரிய) அதுதான் நேரான மார்கமாகும். எனவே அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே நீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.”

இந்த குர்ஆனிய ஆயத்தில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள்” என்ற சொற்றொடருக்கு இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் விளக்கம் அளிக்கையில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள் ” என்ற சொற்றொடர் அனைத்து பன்னிரெண்டு மாதங்களை சுட்டிக்காட்டிய பின், அவற்றிலிருந்து நான்கு மாதங்கள் விசேடமாக புனிதமானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கூறப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாதங்களிலும் செய்யப்படுகின்ற தவறுகள் மிகவும் பாரிய தவறுகளாகவும், அவற்றில் செய்யப்படுகின்ற நன்மைகள் நிறைந்த பலனை தரக்கூடியவை எனவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த நான்கு மாதங்களும் எவை என்பது குறித்து புஹாரியின் 2958ம் ஹதீஸில் பதிவாகியுள்ளது.ரஸ_ல்(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ பக்றா (றழி) அறிவிக்கிறார்கள்“வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களையுடையது. அவற்றில் நான்கு புனிதமானவை. துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் எனும் தொடர்ச்சியாக வருகின்ற மாதங்களும், ஜூம்மதுல் ஆகிருக்கும் ஸஃபானுக்கும் இடையே வருகின்ற ரஜப் மாதமுமாகும்.”
இவற்றிலிருந்து அல்லாஹ்வும், ரஸ_ல் (ஸல்) அவர்களும் இந்த மாதங்களுக்கு விஷேட முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளாரகள் என்பது புலப்படுகிறது.

இந்த மாதத்தின் சிறப்புக் குறித்து ரஸ_ல் (ஸல்) அவர்கள் கூறும் போது “ரமழானுக்கு அடுத்தபடியாக, நோன்பு நோட்பதிலே சிறப்பான மாதம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரமாகும்” என்றார்கள். (முஸ்லிம்-1982)
மேலும் இமாம் அஹ்மத் ஒரு ஹதீஸினை பதிந்துள்ளார்கள் “இந்த நாளில் (முஹர்ரம்)தான் ஜூது மலையில் நு}ஹ்(அலை)அவர்களின் கப்பல் ஒதுங்கியது. ஆகவே நு}ஹ்(அலை) அவர்கள் இந்நாளில் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காக நோன்பு நோற்றார்கள்.

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிப்பதாக இமாம் புஹாரி அறிவிக்கின்றார்கள்
“து}தர் முஹம்மத்(ஸல்)அவர்கள் மதீனாவுக்கு வந்த சமயத்தில், ஆசுராவினது தினத்தில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அவதானித்தார்கள். அவர்கள் “இது என்ன” என வினவினார்கள். அதற்கு அவர்கள் “இது புனித நாளாகும். இந்நாளிலேதான் அல்லாஹ் இஸ்ரவேலர்களின் சந்ததியினரை அவர்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாத்தான். ஆகவே மூஸா(அலை)அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள் என்றார்கள்” அதற்கு ரஸ_ல் (ஸல்) அவர்கள் “மூஸாவினிடத்தில் உங்களைவிட எங்களுக்கு உரிமை அதிகமுள்ளது” எனக் கூறி முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள். முஸ்லிம்களையும் அந்நாளில் நோன்பு நோட்கும்படி கூறினார்கள். (புஹாரி-1865)

மேலே சுட்டிக்காட்டப்பட்ட திருகுர்ஆன், மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் முஸ்லிம்கள் முஹர்ரம் பிறை 9,10ம் தினங்களில் நோன்பு நோற்று மூஸா(அலை) அவர்களையும், பிர்அவ்னின் காலகட்டத்தையும் ஞாபகப்படுத்தி வருவது நாமறிந்ததே. அதே போன்று திருமறை, பிர்அவ்ன் எவ்வாறு தனது மக்களை தன்னை “ரப்” ஆக ஏற்றுக்கொள்ளும்படியும், தனக்கு அடிபணியும்படியும் நிர்ப்பந்தித்து வந்தான் என்பதையும் எமக்கு ஞாபகப்படுத்துகிறது. மேலும் அவனது மிகப்பெரிய அறியாமையின் வெளிப்பாடாக தானே வாழ்வையும், சாவையும் நிர்வகிப்பவன் என்ற கருத்தை அவன் எவ்வாறு வெளிப்படுத்தி வந்தான் என்பதும் எமக்கு வரலாறு புலம்படத் தெரிவிக்கிறது.

தனது கருத்தை உறுதிப்படுத்துவதற்காக இரண்டு அடிமைகளை ஒன்று கூட்டி, அதில் ஒருவனை கொல்லும்படி கட்டளையிட்டான். மற்றைய அடிமையை விடுவித்தான். இத்தகைய ஒரு செயலை செய்ததன் ஊடாக தானே ஒரு மனிதனின் உயிரை பறிப்பவனும், வழங்குபவனும் ஆவேன் என வாதிட்டான்.எனினும் அல்லாஹ்வின் து}தர் மூஸா(அலை) அவர்கள் மிகவும் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு அவனது அறியாமைக்கு பதில் அளித்தார்கள். அல்லாஹ் தினமும் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்து மேற்கில் மறையச் செய்கிறான். நீ சொல்லுவது உண்மையானால் இந்த தினத்திற்கு மறுநாள் சூரியனை மேற்கிலே உதிக்கச் செய்து, கிழக்கிலே மறையச் செய்ய முடியுமா? என வினவினார்கள். இந்த வினா அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அது அவனது அறியாமையை அவனுக்கு புலப்படுத்திய போதும், அவனி;டமிருந்த அகம்பாவமும், பெருமையும் அவனை து}ய்மையான தௌஹீதை ஏற்க தடையாக இருந்து விட்டது.

இதுபோன்றே எப்பொழுதெல்லாம் சத்தியம், அசத்தியத்தை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் அசத்தியம் சத்தியத்தியத்தின் முன்னால் மண்டியிடுகிறது. எனினும் அசத்தியவாதிகள் அவர்களது கர்வத்தின் காரணமாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்;;.

இன்று எமது உலகிலும் பல பிர்அவ்ன்களை நாம் காண்கிறோம். மூஸா(அலை) அவர்களையும், அவர்களது கூட்டத்தினரையும் கொடுமைப்படுத்திய பிர்அவ்னைப் போலவே எமது முஸ்லிம் தேசங்களை ஆட்சி செய்து கொண்டு முஸ்லிம் உம்மத்தினை மனிதகுலமே ஜீரணிக்க முடியாத அளவுக்கு ஈவிரக்கமற்ற முறையில் அக்கிரமத்துக்கு உள்ளாக்கும் முபாரக்,இஸ்லாம் காPமோ, பஸார் அசாத், ஜோர்தான் அப்துல்லாஹ், சவூதி அப்துல்லாஹ், சர்தாரி, ஹாமிட் கர்சாய் போன்ற பல பிர்அவ்ன்களை நாம் காண்கின்றோம். காஸாவிலே இரத்தக்காட்டேறி இஸ்ரேல் எமது குழந்தைகளை குண்டுமழைபொழிந்து கொள்வதற்கு தனது விசுவாசத்தை இஸ்ரேலுக்கும் மேற்குலகுக்கும் காட்டுவதற்கு முபாரக் தனது எல்லைக்கதவை இழுத்து மூடி வைத்திருக்கிறான். சுமார் 450000 முஸ்லிம் துருப்புக்களை எகிப்த்துக்குள் பூட்டி வைத்திருக்கிறான். 220 மேற்பட்ட எப்ஃ 16 இராணுவ விமானங்களை துரப்பிடிக்க விட்டிருக்கிறான். அல்லாஹ் எகிப்த்தின் பிர்அவ்னை சமுத்திரத்தில் மூழ்கடித்தது மாதிரி இந்த முபாரக்கினையும் கடலிலே தள்ள வெகுகாலம் எடுக்காது.

மூஸா(அலை) காலத்து பிர்அவ்ன் தன்னை “ரப்” ஆக ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்தித்தான். அதே போன்று இன்றைய பிர்அவ்ன்களான இவர்கள் தம்மை தமது அதிபதியாக(ரப்) ஏற்றுக்கொள்ளும்படியும், அல்லாஹ்வின் சட்டங்களுக்கு பகரமாக தமது சட்டங்களை ஏற்றுக்கொள்ளும்படியும் முஸ்லிம்களை நிர்பந்திக்கிறார்கள்.

ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹ}சைன் முஸ்லிம்கள் மீது அல்லாஹ்வின் ஷரிஆவின் சட்டங்களுக்கு பதிலாக தனது கொடிய பாத்திஸத்தை திணித்து அட்டூழியம் புரியவில்லையா? லிபியாவின் அநியாயக்காரன் கடாபி முஸ்லிம்களை குர்ஆனை ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு தனது பசுமை நு}லை கடைப்பிடிக்குமாறு நிர்ப்பந்திக்கவில்லையா? முன்னாள் பாகிஸ்தானின் தலைவர் முஷர்ரப் இஸ்லாமிய சட்டங்களுடன் பொருந்திப்போகக்கூடிய அல்லது அதனையொத்த 5500 சட்டங்களை அறிமுகப்படுத்த எத்தனிக்கிறேன் என்று முஸ்லிம்களைப்பார்த்து கூறவில்லையா? அதாவது தனது குப்ர்ச் சட்டங்களுக்கு இஸ்லாமிய சாயம் பூச எத்தனித்து அவன் நாடகமாடவில்லையா? அதேபோன்றே உஸ்பகிஸ்தானின் அரக்கன் இஸ்லாம் கரிமோ தேசியவாச குப்ர் சிந்தனையின் பால் அந்நாட்டு மக்களை அழுத்தியதுடன் கிலாபத் மீதிருந்த அம்மக்களின் உணர்வு பூர்வமான ஈடுபாட்டை அடக்க முனையவில்லையா?

இவ்வாறு வரம்பு மீறி அநியாம் செய்யும் இந்த ஆட்சியாளர்கள் பற்றிதான் அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.


அல்லாஹ் சூறத்துல் மாயிதாவில் தெறிவிக்கின்றான். “எவரொருவர் அல்லாஹ் இறக்கியருளியதற்கு (சட்டங்களுக்கு) மாற்றமானதைக் கொண்டு ஆட்சி செய்கிறானோ அவன் காபிராவான்”

மூஸா(அலை) அவர்களது சமூத்தினருடன் பிர்அவ்னின் அடக்குமுறை எவ்வாறு இருந்ததோ அதேயொத்த அடக்குமுறையும், அநியாயமும் தற்போது தொடர்வதை இன்றைய உலகிலும் நாம் காண்கிறோம்.

இஸ்லாமிய ஷாPஆ சட்டங்களின் அடிப்படையில் ஆட்சியை மேற்கொள்ள முயன்ற தனிபான் ஆட்சியாளர்களை 9ஃ11 தாக்குதலை அடுத்து அமெரிக்கா எவ்வாறு இல்லாது செய்தது என்பதை சிந்தித்து பாருங்கள். உசாமா பின் லேடனை பிடிக்கப்போகிறோம் என்ற போலிவேடத்துடன் ஆப்கானிஸ்தானுக்குள் உள்நுழைந்த அமெரிக்க மற்றும் துணைப்படைகள் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களையும், பெண்களையும், குழந்தைகளையும் எவ்வாறு ஈவிறக்கமற்று கொன்றொழித்தார்கள் என்பதை சற்று மீட்டிப்பாருங்கள். இதன்போது தனது எல்லைகளையும், தனது அனைத்து வளங்களையும் திறந்து கொடுத்து ஆப்கானிய முஸ்லிம்களை கொன்றொழிப்பதற்கு எவ்வாறு முஷரப் அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்றான் என்பதை சிந்தித்து பாருங்கள். இன்று பெருமளவில் நேட்டோ குப்ர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள் ஆப்கானை மீண்டும் மீட்டு முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் கண்ணியத்தை பெற்றுத்தர தீவிரமான போராடிக்கொண்டிருக்கின்ற தலிபான் போராளிகளை கூட்டம் கூட்;டமாக கொன்றொழிப்பதற்கு அமெரிக்கா எடுத்துவரும் முயற்சி தொடர்பில் எவ்வாறு ஆப்கானின் அமெரிக்க அடிவருடி ஹாமி;த் ஹர்ஸாயும், முஷரப்பும் தமக்குள் கருத்து வேறுபாடு கொண்டு நடந்து கொண்டார்கள் என்பதை எண்;ணிப்பாருங்கள். அவர்கள் குப்பார்களிடமிருந்து முஸ்லிம்களையும், முஸ்லிம் போராளிகளையும் பாதுகாப்பதற்கு பதிலாக நாங்கள் பாக்கிஸ்தான் - ஆப்கான் எல்லையில் அமைந்துள்ள வர்க்கிஸ்தான் பஸ்து}ன் இன முஸ்லிம்களை முற்றாக அழிப்பதா? அல்லது அவர்களுள் மறைந்துள்ள தனிபான் முஜாஹித்களை இனம்கண்டு அழிப்பதா? என கேவலமான ஒரு வாதத்தில் எவ்வாறு இந்த இரு தலைவர்களும் ஈடுபட்டார்கள் என்பதை நீங்கள் நினைத்து பாருங்கள். முஷரப் தனது சுயசரிதை நு}லிலும், சிஎன்என் நேர்காணலிலும் தெரிவித்த கருத்தை எண்ணிபாருங்கள். பாக்கிஸ்தானை அமெரிக்க விமானங்கள் தாக்கியழித்து பாகிஸ்தானை மீண்டும் கற்காலத்துக்கு கொண்டு வந்துவிடுவோம் என்ற அமெரிக்கா அச்சுறுத்தியதற்காகவே ஆப்கானிஸ்தானை தாக்குவதற்கும், அல் கய்தாவையும், தலிபான்கயும் வேட்டையாடுவதற்கும் நான் ஒத்தழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என மிகவும் கேவலமாகவும், கோழைத்தனமாகவும் அவன் தெரிவித்ததை நாம் கண்டு வெட்கப்படவில்லையா? அவனுடைய பார்வையில் பாகிஸ்தான் மக்களின் உயிரும், இரத்தமும் ஆப்கானிய முஸ்லிம்களின் உயிரிலும், இரத்தத்திலும் பெறுமதியாக தெரிகிறதா? இவன் போன்ற ஆட்சியாளர்கள்தான் முஸ்லிம் உம்மத்தினை தேசியவாதத்தின் அடிப்படையில் பிரித்துப்பார்ப்பவர்கள், இவன்போன்றவர்கள்தான் உம்மத்தின் செல்வங்களையும் வளங்களையும் செயற்கை எல்லைக்கோடுகளால் பிரிப்பவர்கள்.

ஆப்கானிய பூமி, பாக்கிஸ்தான் பூமியிலிருந்து வேறுபட்டதா? அல்லாஹ்வும், அவனது து}தரும் முஸ்லிம்களின் பூமியை பிரிக்கச் சொன்னார்களா? முஸ்லிம் சகோதரர்களை பிரித்தாள்வதற்காக பரித்தானியர்களால் செயற்கையாக போடப்பட்ட இந்த எல்லைகளை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? அல்லாஹ்வும், அவனது து}தரும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் முஸ்லிம் உம்மத்தின் மீது ஆட்சி புரிவதை ஏற்றுக்கொண்டுள்ளனரா?எமதருமை ரஸ}ல் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸிலே குறிப்பிடுகிறார்கள்.

“நீங்கள் ஒருவரைக்கொண்டு ஐக்கியத்துடன் இருக்கின்ற நிலையில், உங்களது பலத்தை குழைப்பதற்காகவும், ஐக்கியத்தை பிளவுபடுத்துவதற்காகவும் எவரேனும் உங்களிடத்தில் வருவாரேயானால் அவரை கொன்றுவிடுங்கள”; என்று கூறி முஸ்லிம் உம்மத்தினை ஒருமைப்பாட்டை மிகவும் காத்திரமாக வலியுறுத்துகிறார்கள்.

மேலும் அரை நு}ற்றாண்டுக்கும் மேலாக பலஸ்தீனத்திலும், மத்திய கிழக்கிலும் அரங்கேற்றப்படும் அநியாயங்களையும், முஸ்லிம்கள் அனுபவித்துவரும் அவலங்களையும் பார்க்கிறோம். 1948ம் ஆண்டில் சட்ட விரோதமாக இஸ்ரேல் நிறுவப்பட்டதை தொடர்ந்து எத்தனை ஆயிரம் முஸ்லிம்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள் என்பதை கணக்கடுத்துப்பாருங்கள். தமது பச்சிளங்குழந்தைகளை எமது முஸ்லிம் தாய்மார்கள் தமது கண்களுக்கு முன்னாலேயே பறிகொடுத்த அவலத்தை எண்ணிப்பாருங்கள். எத்தனை சிறார்கள் அனாதைகளானார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள், எத்தனை விதவைகள், எத்தனை அங்கவீனர்கள் இவை எல்லாவற்றையும் ஆழமாக சிந்தித்து பாருங்கள். இவை எல்லாம் அந்த பிர்அவ்னின் கொடுமைகளை ஒத்தவைகள் இல்லையா? எனினும் இறுதியில் அல்லாஹ் எவ்வாறு மூஸா(அலை) அவர்களையும், பனு இஸ்ரவேலர்களையும் அவனது கட்டளைப்படி பிர்அவ்னின் படியிலிருந்து பாதுகாத்து, பிர்அவ்னையும் அவனது படைகளை அழித்தான் என்று குர்ஆன் விபரித்து உரைப்பதை பார்க்கும்போது குப்ர் ஆட்சியாளர்களுக்கும், அவர்களை ஆதரிக்கின்ற எமது முனாபிக் தலைவர்களுக்கும் இறுதியில் என்ன நடக்கப்போகின்றது என்பதை அல்லாஹ்; எமக்கு படிப்பினையாக கூறுகிறான்.

மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை அழிப்பதற்காக பிர்அவ்னின் படை பின்தொடர்ந்தபோது சமுத்திரத்திற்குள் குதித்த போது அல்லாஹ் எவ்வாறு மீண்டும் கடலை மூடச்செய்து பிர்அவ்னையும், அவனது படைகளையும் கேவலமான முறையில் அழித்தான் என்பதை ஞாபகப்படுத்தி பாருங்கள். அந்த நேரத்தில் பிர்அவ்னின் உயிரைக் கைப்பற்றுவதற்கு மலக்குல் மௌத் வந்த நேரம் அவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள முற்பட்டதையும், அதன்போது அவனது ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது அவன் கைசேதப்பட்டதையும்; ஞாபகப்படுத்தி பாருங்கள்.

இன்று ஹமாஸ}க்கு எதிரான தாக்குதல்கள் என்ற போர்வையில் இன்று அரங்கேற்றப்படும் இனப்படுகொலைகளையும், ஹமாஸ் பலஸ்தீன தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் நிகழ்த்தப்பட்ட இஸ்ரேயிலின் அடாவடித்தனங்களையும், லெபனானின் மீதும், ஹிஸ்புல்லாஹ் போராளிகள் மீதும் இஸ்ரேல் மேற்கொண்ட அரக்கத்தனமான யுதத்தையும் எடுத்தப்பாருங்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம் பொதுமக்களை காவு கொள்ளும் இத்தகைய யுத்தங்களில்; எமது அரபுலகத்தலைவர்களும், முஸ்லிம் நாட்டு தலைவர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். நு}ற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் அநியாயமாக கொலை செய்து கொண்டும், கைது செய்து சிறைகளை நிரப்பிக்கொண்டிருக்கும் இஸ்ரேயிலுக்கு எதிராக ஒரு வார்த்தையையேனும் கூற முடியாத இந்த முனாபிக் தலைவர்கள் காஸா முஸ்லிம்களை முற்றுகைக்குள் வைத்து பொருளாதார மற்றும் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்திப பட்டினிபோட்டு படுகொலை செய்ய முயன்ற இஸ்ரேலின் நயவஞ்சக ஒப்பந்ததை மீறியதாகச் சொல்லி ஹமாஸினை கண்டிப்பதிலேயே குறியாக நிற்கிறது.

இதே நிலைப்பாட்டைத்தான் 2006ம் ஆண்டின் ஹிஸ்புல்லாஹ் - இஸ்ரேல் யுத்தத்தின் போதும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் நியாயமான போராட்டத்தை ஆதரிக்காது அவர்கள் இரு இஸ்ரேல் துரப்புக்களை கடத்தியமைதான் அனைத்து அவலத்திற்கும் காரணம் எனக்கூறி ஹிஸ்புல்லாஹ் மீது சாடியமையை நாம் மறந்து விட முடியாது. இவர்கள் முஸ்லிம் உம்மத் அனுபவித்து வரும் அவலங்கள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாது தமது பொழுதை கழிப்பது மாத்திரமல்லாது குப்பார்களுக்கு தமது பூரண ஆதரவினையும் வெளிப்படுத்தி வருவது முஸ்லிம்கள் தாம் யாருக்கு கீழ் வாழ்ந்து வருகிறோம் என்பதை பல முறை சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அதேநேரத்தில் அல்லாஹ்வினதும், முஸ்லிம்களினதும் பிரதான எதிரியாக விளங்கும் குப்பார்களின் தலைவனை பற்றி சிந்தித்துப்பாருங்கள். அவன் தான் அமெரிக்கா. அட்டூழிதத்தின் அச்சாணி. நவீன கால பிர்அவ்னின் அரக்க அரசு. மூஸா(அலை) அவர்கள் காலத்து பிர்அவ்னைப்போல அமெரிக்கா தன்னை அனைவரும் ரப் ஆக ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கிறான். அணு ஆயுதங்களை தான் வேறொரு நாட்டு மக்கள் மீது பிரயோகித்து பரிசோதித்து பார்ப்பேன், எனினும் ஏனைய நாடுகள் அணு விஞ்ஞானத்தைக்கூட பரிசோதித்து பார்க்கக்கூடாது என்று அவன் நிபந்தனை விதிக்கிறான். அவன் ஈரானுக்கும், வடகொரியாவுக்கும் என்ன சொல்கிறான் என்பதை விசாரித்துப்பாருங்கள். நான் பயங்கரவாதிதான். எனினும்; எனக்கெதிராக போராடுகின்ற போராளிகளை வேரறுத்து விடுவதற்கான பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நான் முன்னெடுக்கும்போது எவரும் அதனை எதிர்த்துவிடக்கூடாது. மாறாக எனது அணியில் சேர்ந்துவிடவேண்டும்;. அவ்வாறு எனது அணியில் சேராது விலகிவிட்டால் பயங்கரவாதி என்ற பட்டியலில் நீங்கள் சேர்த்து விடுங்கள் என்று அவன் கட்டளையிடுகிறான். எனவே இத்தகைய ஒரு தீர்மானகரமான சூழலில் நாம் முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமாகவிருந்தால் எம்மை அல்லாஹ்வின் அணியிலும், அவனுக்கான மேற்கொள்ளப்படுகின்ற போராட்டத்திலும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதற்கு முதலில் முஸ்லிம் உம்மத்தின் ஒரு அங்கமாக எம்மை நாம் புரிந்துகொண்டு, அதனை உணர்வு பூர்வமான உள்வாங்கிக்கொண்டு முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களின் மிகவும் ஆழமான அறிவுடனும், ஆழமான ஈடுபாட்டுடனும் நாம் செயற்படவேண்டியிருக்கிறது.

முஹம்மது(ஸல்) அவர்கள் நவின்றார்கள். “எவனொருவன் முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்த சிந்தனை இல்லாமல் தனது காலைப்பொழுதை அடைகிறானோ அவன் எம்மைச்சார்தவன் அல்ல” (முஸ்லிம்)

எனவே ஒவ்வோரு முஸ்லிமும் ஏனைய முஸ்லிம்களின் சூழ்நிலை பற்றிய சிந்தனையுடன் இருக்க வேண்டும். இது தொழுகை எவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையோ, அதே போன்று கடமையாகும். இந்த ஹதீஸ் உலகில் வாழும் எமது முஸ்லிம் உம்மத் தொடர்பான, எமது சகோதர, சகோதரிகளின் நிலை தொடர்பான விடயங்களை நாம் ஆழமாக ஆராய வேண்டும் என்பதை எமக்கு கட்டாய கடமையாக்குகிறது. அவர்களது பிரச்சினைகள் என்ன? அவை தீர்க்கப்படுகின்றனவா? யார் தீர்க்கிறார்கள்? இந்த தீர்வுகள் இஸ்லாத்திலிருந்து பெறப்பட்டனவா? என்பவை குறித்து ஆராய்வது தவிர்க்க முடியாதது.

முஸ்லிம்களே!

எங்களுடைய தாய்மார்களும், சகோதரிகளும் யூதர்களின் கொடூரக் கரங்களில் சிக்கி இரத்தக் கண்ணீர் வடிக்கும் போது,

எங்களுடைய வயது முதிர்ந்த பெரியோர்கள் தமது இல்லங்கள் குண்டுகளால் சிதறி தமது குடும்பங்களை இழந்து அநாதரவாக கதறும் போது

எமது சின்னஞ்சிறார்கள் காஸாவிலும், ஈராக்கிலும், ஆப்கானிலே யுத்தத்தினாலும், வறுமையினாலும் ஜீவமரணப்போராட்டத்தில் இருக்கும்போது

எமது கரங்கள் அவர்களை நோக்கி நீட்டப்படாது இருக்க, அல்லது அவர்களுக்கான மீட்சிப் பாதையை நோக்கி நாம் பயணிக்காதிருக்க எமக்கு என்ன நேர்ந்து விட்டது?

இமாம் அபூஹனீபா போன்ற அறிஞர்களை ஈன்றெடுத்த, காருன் அல் ரஷீத் போன்ற கலீபாக்களின் தலைநகரமாக விளங்கிய எமது ஈராக் பூமீ கயவர்களான அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் சூறையாடலுக்குள் அகப்பட்டுக் கிடக்கிற நிலையில் அவற்றை அதன் கண்ணியத்துடன் மீட்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபடாதிருக்க எமக்கு என்ன நேர்ந்து விட்டது?

வளைகுடா யுத்தத்திற்குப்பின் சுமார் மில்லியன் முஸ்லிம்களை பொருளாதாரத்தடை என்ற பெயரில் கொன்றுகுவித்த அமெரிக்க ஆக்கிரமிப்பாளன் நாங்கள்தான் மீட்புப்படை எனக்கூறும் போது அதைக்கேட்டுக்கொண்டிருக்க எமக்கு எமது உம்மத்திற்கு வெட்கமில்லையா?
முஸ்லிம்களுடைய பரிதாப நிலையைப் பாருங்கள். குப்பார்கள் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். எமது நாட்டை ஆக்கிரமிக்கிறார்கள், எமது முஸ்லிம்களை குடும்பம் குடும்பமாக கொன்றொழிக்கிறார்கள். எனினும் அவர்களுக்குரிய சரியான. முறையான பதிலடியினை கொடுப்பதற்குரிய அதிகாரமோ, பலமோ இல்லாத நிலையில் நாமிருக்கின்றோம்.

மறுபுறத்தில் மேற்குலக நாகரீகத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் எமது முஸ்லிம் நாடுகள் அகப்படடிருப்பதை காண்கிறோம். கேளிக்கூத்துக்களும், காமக்களியாட்டங்களும் எமது நாடுகளில் சர்வசாதாரணமாக நிறைந்து கிடக்கிறது. எமது நாடுகளில் “றிபா”வின் அடிப்படையில், அல்லது அதன் ஆதிக்கத்தின் கீழ் பொருளாதாரம் நகர்கிறது. ரமழானில் மட்டும் எமது நாடுகளில் இரவு களியாட்ட விடுதிகள் சம்பிரதாய பூர்வமாக மூடப்பட்டு பெருநாள் தினத்திலிருந்து அவை மீண்டும் திறந்து விடப்படுகின்றன. பங்களாதேஸ் போன்ற முஸ்லிம் நாடுகள் விபச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதில் முன்னின்றதை நாம் காண்கின்றோம். பாகிஸ்தானில் றிபாவினை அனுமதிப்பதா? இல்லையா என விவாதம் நடந்ததை நாம் காண்டோம். இதுதான் எமது பரிதாப நிலை…

எனவே இந்த நு}ற்றாண்டுகளில் நாம் மிகவும் பலகீனமான நிலைக்கு சென்றிருக்கின்றோம். எமது இலட்சியம் குறித்த சிந்தனை பலகீனமான நிலைக்கு சென்றிருக்கிறது. இந்த இடைவெளிகளைப் பயன்படுத்திக்கொண்டு சைத்தானின் கூட்டாளிகளான குப்பார்கள் இந்த பூமியில் தமது அநியாயத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அவர்களது கைகளால் இன்றுவரை சொல்லொண்ணா அநியாயங்களை நாம் சந்தித்து விட்டோம்.

சகோதரர்களே!

நாம் இந்த சைத்தானின் சக்திகளுக்கும், அடிப்படையிலேயே பலகீனமான குப்பார்களுக்கும் அஞ்சிவிட முடியாது. அல்லாஹ்வின் மீதும், தீனின் மீதும், அல்லாஹ் எமக்கு உறுதியாக வாக்களித்திருக்கின்ற இறுதி வெற்றியின் மீதும் நாம் நம்பிக்கையிழந்துவிட முடியாது.

அல்லாஹ் ஸ_றா ஆலஇம்ரானில் கூறுகிறான்

“அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. அவன் உங்களை கைவிட்டு விட்டால் அதற்கு பிறகு உங்களுக்கு உதவி செய்வதற்கு யார் இருக்கிறார்கள்? மேலும் இறை நம்பிக்கையாளார்கள் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்”(ஆல இம்ரான்-160)

எனவே முஸ்லிம் உம்மத் தமது பலத்தையும், அதிகாரத்தையும், ஐக்கியத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக தமது முழு வாழ்வையும், உடலையும், உயிரையும் கூடத் தியாகம் செய்து போராட வேண்டியுள்ளது. இதனு}டாக முஸ்லிம்கள் இந்த உலகை அக்கிரமங்களில் இருந்தும், அசிங்கங்களில் இருந்தும் பாதுகாத்து இஸ்லாத்தின் நிழலில் கீழ் அழகான, நீதியான வாழ்வை முழு உலகிற்கும் பெற்றுத்தர முடியும். அத்துடன் இன்று பலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும்,செச்சனியாவிலும், சோமானியாவிலும், காஸ்மீரிலும் இன்னும் பல முஸ்லிம் நாடுகளிலும் தொடர்ந்தேர்ச்சியான கொடுமைகளுக்கும், பொருளாதார தடைகளுக்கும் முகம்கொடுத்து வரும் எமது முஸ்லிம்களை மீட்டெடுத்து அமைதியான வாழ்க்கையை அவர்களுக்குப் பெற்றுத்தர முடியும்.

இன்று எமது முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதற்கு கலீபா முஹ்தஸிம்பில்லாஹ்(ரஹ்) இல்லை, பட்டினியியால் வாடும் தேசங்களுக்கு உணவு அனுப்பி பாதுகாக்க கலீபா உமர் (ரழி) இல்லை, முஸ்லிம் தேசங்களை நவீன சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து மீட்பதற்கு ஒரு சலாஹ_தீன் ஐயூபீ (ரஹ்) இல்லை. மாறாக இன்று இந்த உம்மத்தினை பாதுகாப்பதற்கும், எமது இஸ்லாத்தின் பெருமையினையும், எமது பெண்களின் மானத்தையும் பாதுகாப்பகற்கும் நீங்கள்தான் பொறுப்புதாரிகளாக இருக்கின்றீர்கள். எம்மை உண்மையிலேயே பாதுகாக்கக்கூடிய அந்த கலீபாவினை, அந்த பாதுகாப்பு அரணை மீண்டும் ஏற்படுத்த நீங்கள்தான் அல்லாஹ்வால் நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

வாக்குறதியளிக்கப்பட்டுள்ள அந்த கிலாபா அர் ராசிதாவினை நாம் மீண்டும் ஏற்படுத்துவதன் ஊடாக முஸ்லிம்களின் அனைத்து விவகாரங்களையும் மீண்டும் முஸ்லிம் உம்மத்தின் கரங்களால் பராமரிக்கச்செய்யலாம். எமது வளங்களையும், சொத்துக்களையும் இஸ்லாமிய ஷரிஆவின் அடிப்படையில் பாதுகாக்கலாம். பகிர்ந்தளிக்கலாம்.

அதன் பின்பு எமது யுத்தங்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும், இஸ்லாம்pய பிரச்சாரத்திற்காகவும் முன்னெடுக்கப்படும். மாறாக அது எமது உம்மத்தை அழிப்பதற்காகவும், முதாளித்துவத்தை பிரச்சாரம் செய்வதற்காகவும் பிரயோகிக்கப்பட மாட்டாது.

உலகத்தின் அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும், உலகின் அனைத்து பிரச்சினைகள், முரண்பாடுகள், துன்பங்கள் தொடர்பானதுமான பொறுப்பு முஸ்லிம்களாகிய எமது தோளின் மேல் சுமத்தப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரணமான, ஓய்வு நேரத்தில் ஓடித்திரிகின்ற பணியல்ல. உண்டு கழித்து, மகிழ்ச்சியால் காலத்தை ஓட்டிக்கொண்டு இந்த பணியினை செய்ய முடியாது.
ஆகவே இந்த பணிக்காக நாம் மிகுந்த பொறுப்புடனும், அல்லாஹ்வின் கூலியின் மீதும், ஜன்னத்தின் மீதும், அவன் தர இருக்கின்ற வெற்றியின் மீதும் நம்பிக்கை வைத்து தியாதத்துடன் இயங்க வேண்டியிருக்கிறது. நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

“நம்பிக்கை கொண்டவர்களே, அல்லாஹ்வினதும், அவனது து}தரினதும் அழைப்பிற்கு பதில் கூறுங்கள். அது உங்களுக்கு வாழ்வளிக்கும்”

No comments:

Post a Comment