May 12, 2011

கலீபாவை நியமனம் செய்யும் வழிமுறை : طريقة نصب الخليفة பகுதி 1

கலீபா ஒருவரை நியமனம் செய்யவேண்டும் என்பதை ஷரியா முஸ்லிம் உம்மாவுக்கு கட்டாய கடமையாக ஆக்கியிருப்பதால் அவரை எவ்வாறு நியமனம் செய்யவேண்டும் என்ற வழிமுறையை (طريقة – method) அது விளக்கமாகக் கூறியுள்ளது, அதுதான் பைஅத் (البيعـة ) என்ற வழிமுறையாகும். குர்ஆன் சுன்னா இஜ்மாஅஸ்ஸஹாபா ஆகியவற்றிலுள்ள ஆதாரங்களின் வாயிலாக அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே கலீபாவின் நியமனம் பைஅத் கொடுப்பதின் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படுகிறது, முஸ்லிம்கள் அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) பைஅத் கொடுத்தார்கள் என்ற ஆதாரத்திலிருந்தும். இமாமுக்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்று அல்லாஹ்வின்தூதர்(ஸல்) முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ள ஆதாரத்திலிருந்தும் பைஅத் செய்யவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது, அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) முஸ்லிம்கள் பைஅத் கொடுத்தது அவர்களின் நபித்தவத்திற்காக அல்ல மாறாக ஆட்சிஅதிகாரத்தை மேற்கொள்ளத்தான் முஸ்லிம்கள் அவர்களுக்கு(ஸல்) பைஅத் செய்தார்கள், ஏனெனில் அவர்கள் கொடுத்தது செயல்பாட்டின் மீதுள்ள பைஅத்தே தவிர நம்பிக்கையின் மீதுள்ள பைஅத் அல்ல, ஆகவே அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) கொடுக்கப்பட்ட பைஅத் அவர்கள்(ஸல்) ஆட்சியாளர் என்ற முறையில் உள்ளதே தவிர நபி என்பதற்காகவோ அல்லது ரஸல் என்பதற்காகவோ அல்ல, ஏனெனில் நபியையும் அவர் கொண்டுவந்த செய்தியையும் ஏற்றுக்கொள்வது நம்பிக்கையுடன் தொடர்புடைய விஷயமே தவிர பைஅத்துடன் தொடர்புடைய விஷயமல்ல, பைஅத்தைப் பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

நபியே! மூமினான பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்குவதில்லை என்றும் திருடுவதில்லை என்றும் விபச்சாரம் செய்வதில்லை என்றும் தங்கள் குழந்தைகளை கொலை செய்வதில்லை என்றும் தங்கள் கைகளுக்கும் தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக்கொண்டு வருவதில்லை என்றும் இன்னும் நன்மையான காரியத்தில் உமக்கு மாறு செய்வதில்லை என்றும் அவர்கள் உம்மிடம் பைஅத் செய்தால் அவர்களுடைய பைஅத்தை ஏற்றுக்கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் கிருபை உடையவனாகவும் இருக்கிறான், (ற்ம்வ் அல் மும்தஹினா 60 : 12)

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ

உம்மிடம் பைஅத் செய்தவர்களெல்லாம் அல்லாஹ்விடம் பைஅத் செய்தவர்கள் ஆவார்கள். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறது…… (அல்பதஹ் 48 : 10)

உபாதா இப்ன் அஸ்ஸôமித் (ரலி) அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

على السمع والطاعة في المنشط والمكره، وأن لا ننازع الأمر أهله وأن نقوم أو نقول بالحق حيثما كنّا لا نخاف في الله لومة لائمrبايعنا رسول الله

"நாங்கள் விரும்புகின்றவற்றிலும் வெறுக்கிள்றவற்றிலும் செவிமடுப்போம் என்றும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரம் கொடுக்கப்ட்டவர்களுடன் சர்ச்சை செய்யமாட்டோம் என்றும் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சாமல் எந்நிலையிலும் சத்தியத்தில் உறுதியாக இருப்போம் என்றும் அல்லாஹ்வின்தூதருக்கு நாங்கள் பைஅத் செய்தோம்."

அபூஉகைல் அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

هو صغير فمسح رأسه ودعا لهr فقالت يا رسول الله بايعه، فقال النبي r وذهبت به أمه زينب ابنة حميد إلى رسول الله rفقد حدث أبو عقيل زهرة بن معبد عن جده عبد الله بن هشام وكان قد أدرك النبي

"அபூஉகைல் ஸஹ்ரா இப்ன் மபத் தனது பாட்டனார் அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாமிடமிருந்து அறிவிப்பதாவது. அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் இறைத்தூதரிடம் வந்தார். அவருடன் அவர் தாயாரும் ஹமீதின் புதல்வியுமான ûஸனபும் வந்தார். அல்லாஹ்வின்தூதரே(ஸல்) இவரிடம் (அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம்) பைஅத் பெற்றுக்கொள்வீர்களாக என்று அவர் கூறினார், அதற்கு இறைத்தூதர்(ஸல்), அவர் சிறுவராக இருக்கிறார் என்று கூறி (பைஅத் பெற்றுக்கொள்ள மறுத்து) விட்டு அவரின் தலையை தடவிக்கொடுத்தவாறு அவருக்காக துஆ செய்தார்கள்."

அபூஹுரைரா(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم: رجل على فضل ماء بالطريق يمنع منه ابن السبيل، ورجل بايع إماماً لا يبايعه إلاّ لدنياه إن أعطاه ما يريد وفى له وإلا لم يف له، ورجل يبايع رجلاً بسلعة بعد العصر فحلف بالله لقد أعطي بها كذا وكذا فصدقه فأخذها ولم يُعط بها

"மூன்று விதமான மனிதர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவுமாட்டான் அவர்களை தூய்மைப் படுத்தவுமாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, (அவர்கள் யாரெனில்) நடைபாதையின் பக்கமாக உள்ள அதிகமான தண்ணீரைப் (பயன்படுத்த இயலாதவாறு) வழிப்போக்கருக்கு தடுத்து வைத்துள்ள மனிதர். உலக நலனை நாடியவராக இமாமுக்கு பைஅத் செய்யும் மனிதர். அவர் நாடியது கொடுக்கப்பட்டால் அதை (பைஅத்தை) நிறைவேற்றுவார் இல்லையெனில் நிறைவேற்றமாட்டார். ஒரு மனிதருக்கு பொருளை வியாபாரம் செய்யும் மனிதர். அதை (எவருக்கும்) விற்காதபோதும் இன்னார் இன்னாருக்கு அதை விற்றதாக மாலைநேரத்தில் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வார். உண்மை என்று எண்ணி அவரும் அதை வாங்கிச்செல்வார்"

இந்த மூன்று ஹதீஸ் அறிவிப்பிலிருந்து கலீபாவை நியமனம் செய்வதற்குரிய வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பது தெளிவாக விளங்குகிறது, உபாதா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் தான் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) சொல்லை கேட்டுநடப்பதாகவும் அவர்களுக்கு கட்டுப்படுவதாகவும் பைஅத் கொடுத்ததாக கூறியுள்ளார், இந்த பைஅத் ஆட்சியாளர் ஒருவருக்கு கொடுக்கும் பைஅத்தாகும், அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் அறிவித்துள்ள ஹதீஸில் தான் சிறுவராக இருந்ததால் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவரது பைஅத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார், இந்த பைஅத் ஆட்சியாளர் ஒருவருக்கு கொடுக்கப்படும் பைஅத்தாகும், அபூஹுரைரா(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது இமாமுக்கு கொடுக்கப்பட்ட பைஅத் என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது, இமாம் என்பதற்கு இந்த ஹதீஸில் விளக்கம் கூறப்படாவிட்டாலும் மற்ற ஹதீஸ்களில் அதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

من بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر

"'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸபா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் பிறகு அவர் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்"

அபூஸயீது அல்குத்ரி (ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

إذا بويع لخليفتين فاقتلوا الآخر منهما

"இரண்டு கலீபாக்களுக்கு பைஅத் பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்"

அபூஹிஸôம்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பபட்டிருப்பதாவது.

நான் ஐந்துவருடங்கள் அபூஹுரைராவுடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அவர் அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

كانت بنو إسرائيل تسوسهم الأنبياء، كلما هلك نبي خلفه نبي، وأنه لا نبي بعدي، وستكون خلفاء فتكثر، قالوا: فما تأمرنا ؟ قال: فوا ببيعة الأول فالأول،

"பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாக. எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீபாக்கள் வருவார்கள் அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், (அதுகுறித்து) எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள் என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள்"

ஆகவே குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள உரைகள் கலீபாவை நியமனம் செய்யும் வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பதை தெளிவாகக் கூறுகின்றன, ஸஹாபாக்கள் அனைவரும் இதை விளங்கிக்கொண்டு பின்பற்றி வந்தார்கள், ஆகவே அபூபக்கருக்கு(ரலி) பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் தனிப்பட்ட பைஅத்தும் பிறகு மதீனாவின் மஸ்ஜிதில் பொதுவான பைஅத்தும் நிûவேற்றப்பட்டது, அலீ இப்ன் அபூதாலிப்(ரலி) போன்றவர்கள் மஸ்ஜிதில் பைஅத் செய்யாவிட்டாலும் பிறகு தனிப்பட்டமுறையில் பைஅத்தை நிறைவேற்றினார்கள், மேலும் உமர்(ரலி) உஸ்மான்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரும் பைஅத் பெற்ற பின்னரே கலீபாவாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள், ஆகவே முஸ்லிம்கள் கலீபாவை நியமனம் செய்வதற்குரிய ஒரே வழிமுறை பைஅத் செய்வதுதான் என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பைஅத்தை நிறைவேற்றுவது குறித்த நடைமுறை செயல்பாடுகள் பற்றிய விளக்கத்தைப் பொறுத்தவரை. அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் வந்த நேர்வழி காட்டப்பட்ட கலீபாக்களான உமர்(ரலி) உஸ்மான்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோர் நியமனத்தில் அவை தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன, இந்த நடைமுறையை அனைத்து ஸஹாபாக்களும் ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள், இந்த நடைமுறைகள் ஷரியாவிற்கு முரண்பாடாக இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அவற்றை மறுத்திருப்பார்கள் ஏனெனில் இது முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நலனோடும் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடும் தொடர்புடைய மிகமுக்கியமான விஷயமாகும், இந்த கலீபாக்கள் நியமனம் செய்யபட்ட நிகழ்வுகளை ஆய்வுசெய்யும் பட்சத்தில் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் முதல் கலீபா நியமனம் செய்யப்பட்டபோது நிகழ்ந்த நடப்புகளை வைத்து இதற்குரிய வழிமுறையை அறிந்துகொள்ளலாம்,

அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) மரணத்திற்கு பின்னர் முஸ்லிம்கள் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் சந்தித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள், ஸது. அபூஉபாதா(ரலி). உமர்(ரலி) மற்றும் அபூபக்கர்(ரலி) ஆகியோர் மட்டுமே கலீபா பதவிக்கு முன்மொழியப் பட்டிருந்தார்கள், இந்த விவாதத்தின் முடிவில் முஸ்லிம்கள் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் கொடுத்தார்கள், மறுநாள் முஸ்லிம்கள் அனைவரும் மஸ்ஜிதிற்கு அழைக்கப் பட்டார்கள். அவர்கள் அனைவரும் அபூபக்கருக்கு (ரலி) பைஅத் கொடுத்தார்கள், இந்த பைஅத்தின் முடிவில் அபூபக்கர்(ரலி) முஸ்லிம்களுக்கு கலீபாவாக நியமிக்கப்பட்டார், அபூபக்கர்(ரலி) தனது நோயின் காரணமாக மரணத்தை உணர்ந்தபோது அவர் முஸ்லிம்களை அழைத்து யார் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்பது பற்றி ஆலோசனை கலந்தார், இந்த ஆலோசனையின் மூலமாக உமர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரை மட்டுமே முஸ்லிம்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொண்டார் மேலும் இந்த ஆலோசனையை அபூபக்கர்(ரலி) தொடர்ந்து மூன்று மாதங்கள் மேற்கொண்டார், ஆலோசனை கலப்பதை அவர் முழுமையாக முடித்த பின்னர் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதை அறிந்துகொண்டு தனக்குப் பின்னர் உமர்(ரலி) கலீபாவாக வரவேண்டும் என்று அறிவிப்பு செய்தார், அபூபக்கர்(ரலி) மரணம் அடைந்தவுடன் முஸ்லிம்கள் மஸ்ஜிதிற்கு வந்து உமருக்கு(ரலி) பைஅத் செய்தார்கள், முஸ்லிம்கள் பைஅத் நிறைவேற்றப்பட்டவுடன் அவர் கலீபாவாக நியமிக்கப்பட்டார், அபூபக்கர்(ரலி) முஸ்லிம்களிடம் ஆலோசனை கலந்ததாலோ அல்லது ஆலோசனை முடிவை அறிவித்ததாலோ உமர்(ரலி) கலீபாவாக ஆகவில்லை மாறாக முஸ்லிம்கள் பைஅத் செய்து கிலாபத் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதாலேயே அவர் கலீபாவாக நியமிக்கப்பட்டார், அதுபோலவே உமர் (ரலி) கத்தியால் குத்தப்பட்டபோது அவருக்கு அடுத்தபடியாக வரக்கூடிய கலீபாவை நியமனம் செய்யும்படி அவரிடம் முஸ்லிம்கள் வேண்டினார்கள் ஆனால் அதற்கு உமர்(ரலி) மறுத்துவிட்ôர், அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே ஸஹாபாக்களில் சிறந்தவர்களாக இருந்த ஆறு நபர்களை அவர் முன்மொழிந்தார், அவரது மரணத்திற்குப் பின்னர் அந்த அறுவர் குழு தங்களுக்குள் ஆலோசனை செய்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்பை (ரலி) முகவராக ஆக்கியது, அவர் முஸ்லிம்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக அவர்களுடன் ஆலோசனை செய்தார், பின்னர் அவர் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற உஸ்மானை(ரலி) கலீ*பாவாக முன்மொழிந்து பைஅத் செய்தார். பிறகு முஸ்லிம்கள் உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்தார்கள் அவர் கலீபாவாக நியமனம் செய்யப்பட்டார், பிறகு வந்த காலகட்டத்தில் உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டார், அலீ இப்ன் அபூதாலிப்(ரலி) போட்டியின்றி தேர்ந்தெடுக்ப்பட்டார், அவருக்கு மதீனாவிலும் கூபாவிலும் இருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் பைஅத் செய்தார்கள் அவர் கலீபாவாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வுகளிலிருந்து கிலாபத்திற்கு உரிய பைஅத்தை நிறைவேற்றும் நடைமுறை செயல்பாடு அறிந்துகொள்ளப்படுகிது, யார் கலீபாவாக வரவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடம் ஆலோசனை நடத்துவதுதான் அந்த நடைமுறை செயல்பாடாகும், இவ்வாறு ஆலோசனை மேற்கொள்வதன் விளைவாக கலீபா பொறுப்பிற்கு வருவதற்கு குறிப்பிட்ட சிலர் மீது கருத்து உடண்பாடு ஏற்பட்டவுடன் அவர்களின் பெயர்கள் முஸ்லிம்கள் மத்தியில் அறிவிப்பு செய்யப்படும், அவர்களில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவருடைய பெயர் அறிவிக்கப்படும், பின்னர் முஸ்லிம்கள் அவர் மீது பைஅத்தை நிறைவேற்றவேண்டும், மேலும் கலீபா பதவிக்கு போட்டியிட்ட மற்றவர்களும் அவர் மீது பைஅத்தை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவார்கள், பைஅத் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர் கலீபாவாக நியமனம் செய்யப்படுவார்,

(ஸல்) மரணத்திற்குப் பின்னர் பனூஸôயிதா மைதானத்தில் கலீபாவாக வருவதற்கு தகுதி பெற்றவர்கள் என்று கருதப்பட்ட ஸது(ரலி). அபூஉபைதா(ரலி). அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோருக்கு மத்தியில் விவாதம் நடைபெற்றது, பின்னர் அபூபக்கருக்கு(ரலி) மீதமுள்ள மூவரும் பைஅத் செய்தது கலீபா பதவிக்கு அவரை தேர்வு செய்ததற்கு ஒப்பான நடவடிக்கையாக இருக்கிறது, ஆனால் அனைவரும் அவருக்கு பைஅத் செய்யும்வரை இந்த தேர்வு முஸ்லிம்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை, எனவே முஸ்லிம்களின் பைஅத் மூலமாகவே அபூபக்கர்(ரலி) கலீபாவாக ஆக்கப்பட்டார், அவர் இறக்கும் தருவாயில் கலீபா நியமனம் பற்றி முஸ்லிம்களிடம் ஆலோசனை மேற்கொண்டார், உம்ர்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகியோரில் உமருக்கு(ரலி) முஸ்லிம்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதை அறிந்துகொண்ட அபூபக்கர்(ரலி) உமரின்(ரலி) பெயரை அறிவித்தார், பிறகு முஸ்லிம்கள் அபூபக்கரின்(ரலி) தேர்வை அங்கீகரித்து உமருக்கு(ரலி) பைஅத் செய்து அவரை கலீபாவாக ஏற்றுக் கொண்டார்கள், உமர்(ரலி) இறக்கும் தருவாயில் முஸ்லிம்களின் ஆதவை பெற்றுள்ள ஆறு நபர்களை கலீபா பதவிக்கு முன்மொழிய முன்வந்தார், முஸ்லிம்களின் ஆதரவு பற்றிய கருத்துக்களை அவர்களிடம் கலந்தாலோசனை செய்தபின்னர் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) உஸ்மான்(ரலி) பெயரை அறிவித்தார், முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுத்தபின்னர் அவர் கலீபாவாக ஆக்கப்பட்டார், உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டபோது அலீ(ரலி) க்கு இணையான போட்டியாளர் எவரும் இல்லாதநிலையில் முஸ்லிம்கள் அவரை ஏகமானதாக தேர்வுசெய்து அவருக்கு பைஅத் கொடுத்து கலீபா பதவியில் அமர்த்தினார்கள்.

இவ்வாறுதான் கலீபாவை நியமனம் செய்யும் பைஅத் என்ற வழிமுறை நிறைவேற்றப்படுகிறது, முதலில் தகுதியுள்ள நபர்களை அறிந்துகொள்வதற்காக விவாதம் நடத்தப்படுகிறது. பின்னர் அவர்களில் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர் தேர்வு செய்யப்படுகிறார். பின்னர் தேர்வு செய்யப்பட்ட நபருக்கு முஸ்லிம்கள் பைஅத்தை நிறைவேற்றுகிறார்கள். பின்னர் அவர் கலீபாவாக நியமிக்கப்படுகிறார், அபூபக்கர்(ரலி) கலீபாவாக நியமிக்கப்பட்ட போது இந்த விஷயம் தெளிவாக தெரிந்தாலும் உஸ்மான்(ரலி) கலீபாவாக நியமிக்கப்பட்டபோது இதை திட்டவட்டமாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.

அல்மெஸ்வர் இப்ன் மஹ்ரமா(ரலி) விடமிருந்து ஹமீது இப்ன் அப்துர்ரஹ்மான் அறிவித்து. அவரிடமிருந்து அல் ஸýஹ்ரீ அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.

'"உமர்(ரலி) நியமித்த அறுவர் குழுவில் இடம்பெற்றிருந்த ஸஹாபாக்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் ஆலோசனை கலந்தார்கள், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) அவர்களிடம். "இந்த விவகாரத்தில் நான் உங்களுடன் போட்டியிடப்போவதில்லை. ஆனால் நீங்கள் சம்மதிக்கும் பட்சத்தில் உங்களிலிருந்து ஒருவரை நான் தேர்வுசெய்ய தயாராக உள்ளளேன் என்று கூறினார், ஆகவே அவர்கள் இந்த பொறுப்புக்கு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்பை(ரலி) நியமித்தார்கள், இந்த விஷயத்தை முஸ்லிம்கள் அறிந்தபோது அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்பை(ரலி) சுற்றி குவிந்து விட்டார்கள், கலீபா பொறுப்புக்கு போட்டியிடும் மற்ற ஐந்து நபர்களிடம் விவாதிப்பதற்கோ அல்லது ஆதரவாக நிற்பதற்கோ ஒருவரையும் நான் காணவில்லை, அந்த இரவு முழுவதும் முஸ்லிம்கள் அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்புடன்(ரலி) ஆலோசனை கலந்தார்கள், காலையில் நாங்கள் எழுந்தபோது உஸ்மான்(ரலி) மீது கிலாபத் தேர்வு முடிவு செய்யப்பட்டு விட்டதால் நாங்கள் அவருக்கு பைஅத் செய்தோம்"

மேலும் மெஸ்வர்(ரலி) அறிவிப்பதாவது

'"அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) எனது வீட்டின் கதவை தட்டினார் ( நாங்கள் இருவரும் கலந்தாலோசனை செய்தோம்) இரவின் ஒரு பகுதிவரை நான் விழித்திருந்தேன்(பின்னர் உறங்கிவிட்டேன்) "நீர் உறங்குவதை நான் காண்கிறேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக இன்றிரவு எனது கண்கள் உறக்கத்தை காணவில்லை, ஸýபைர்(ரலி) மற்றும் ஸது(ரலி) ஆகிய இருவரையும் அழைத்துவர ஏற்பாடு செய்வீராக என்று அப்துர்ரஹ்மான்(ரலி) கூறினார், நான் அவர்களை அவரிடம் அழைத்துவந்தேன், அவர்களிடம் அவர் ஆலோசனை கலந்தார், பிறகு அவர் என்னை அழைத்து "அலீயை எனக்காக அழைத்துவருவீராகஃ என்று கூறினார், நான் அலீயை அழைத்துவந்த பின்னர் இரவு மறையும் வரை அவருடன் சப்தமின்றி மெதுவாக உரையாடினார், பிறகு சில எதிர்பார்ப்புடன் அலீ(ரலி) அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) அலீ விஷயத்தில் ஒருவித அச்சம் கொண்டிருந்தார், பிறகு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) "உஸ்மானை எனக்காக அழைத்துவருவீராக என்று கூறினார், நான் உஸ்மானை அழைத்துவந்த பின்னர் பஜ்ர் தொழகைக்காக முஅத்தினின் அழைப்பு கேட்கும்வரை அவருடன் சப்தமின்றி மெதுவாக உரையாடினார், பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார், அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) பஜர் தொழுகைக்கு இமாமத் செய்து முடித்த பின்னர் அந்த அறுவர்குழு மின்பர் அருகில் கூடியது, முஹாஜிர்கள் மற்றும் அன்ஸôர்களிலுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார் மேலும் அந்த ஆண்டு உமருடன்(ரலி) ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இராணுவ தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார், அவர்கள் அனைவரும் மஸ்ஜிதில் கூடியபோது ஷஹாதத்தை ஓதியவாறு அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) கூறினார். "ஓ அலீயேõ நான் மக்களின் விவகாரத்தை ஆய்வுசெய்தேன். அவர்கள் உஸ்மானுக்கு இணையாக எவரையும் காணவில்லை, (إني نظرت في أمر الناس فلم أرهم يعدلون بعثمان) ஆகவே உம்மை நீர் சங்கடத்தில் ஆழ்த்திக் கொள்ளவேண்டாம் என்று கூறிவிட்டு உஸ்மானை நோக்கி. "நான் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மீதும் அவர்களுக்குப் பின்னர் வந்த இரண்டு கலீ*பாக்கள் வழிமுறையின் மீதும் உமக்கு பைஅத் செய்கிறேன் என்று கூறினார், ஆகவே அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) முஹாஜிர்கள் அன்ஸôர்கள் மற்றும் இராணுவத்தலைவர்கள் மற்றுமுள்ள முஸ்லிம்கள் அனைவரும் அவருக்கு பைஅத் செய்தார்கள். ஆகவே முஸ்லிம்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிலாபத்திற்கு உரிய போட்டியாளர் பட்டியலை உமர்(ரலி) ஆறுநபர்களுக்குள் கட்டுப்படுத்தினார், கிலாபத்தின் போட்டியிலிருந்து அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் யார் கலீபாவாக வரவேண்டும் என்பது தொடர்பான முஸ்லிம்களின் கருத்தை அறிந்துகொண்டார், பின்னர் அவர் முஸ்லிம்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு அவர்கள் விரும்பும் நபரின் பெயரை அறிவித்தார், இந்த அறிவிப்புக்குப் பின்னர் உஸ்மானுக்கு(ரலி) பைஅத் செய்யப்பட்டு அந்த பைஅத்தின் மூலமாக அவர் கலீபாவாக நியமிக்கப்பட்டார், ஆகவே கிலாபத்திற்கு முன்மொழியப்படும் போட்டியாளர்களின் பட்டியல் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுள்ள குறிப்பிட்ட பிரதிநிதிகளுடன் மட்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் கலீபாவை நியமனம் செய்வது தொடர்பான ஹுகும்ஷரியாவாகும், இவ்வாறு பட்டியல் முடிவான பின்னர் அவர்களுடைய பெயர்கள் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களில் ஒருவரை அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிய கலீபாவாக தேர்வுசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும், பெரும்பான்மையான முஸ்லிம்கள் எவரை தேர்வுசெய்துள்ளார்கள் என்பதை முறையாக அறிந்துகொண்ட பின்னர் அனைத்து முஸ்லிம்களிடமிருந்தும் அவருக்காக பைஅத் பெற்றுக்கொள்ளப்படும் மக்கள் அனைவரும் அவரை தேர்வுசெய்வதில் பங்கேற்றாலும் அல்லது பங்கேற்காவிட்டாலும் சரியே.

இதுதான் கலீபாவை நியமனம் செய்வதற்குரிய வழிமுறையாகும் ஏனெனில். கிலாபத்திற்கு போட்டியிடுபவர்களின் பட்டியலை உமர்(ரலி) ஆறுநபர்களுக்குள் கட்டுப்படுத்தியபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) யார் கலீபாவாக வரவேண்டும் என்பது குறித்த முஸ்லிம்களின் அபிப்ராயத்தை திரட்டியபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. "நான் மக்களின் விவகாரத்தை ஆய்வுசெய்தேன். அவர்கள் உஸ்மானுக்கு இணையாக எவரையும் காணவில்லை (إني نظرت في أمر الناس فلم أرهم يعدلون بعثمان) என்று கூறியபின்னர் முஸ்லிம்கள் உஸ்மானை தேர்வுசெய்துள்ளார்கள் என்று அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ப்(ரலி) தெளிவாக அறிவித்து மக்களை பைஅத் செய்யும்படி கேட்டுக்கொண்டபோது ஏற்பட்ட இஜ்மாஅஸ்ஸஹாபா. இவை அனைத்தும் கலீபாவின் நியமனம் குறித்த ஹுகும்ஷரியாவை தெளிவுபடுத்துகின்றன.

இந்த விஷயத்தில் இன்னும் இரண்டு விவகாரங்களை விளக்கவேண்டியிருக்கிறது, முதலாவதாக. கலீபாவை நியமனம் செய்யும் முஸ்லிம்கள் யார்? அவர்கள் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களா? அல்லது குறிபிட்ட எண்ணிக்கையுள்ள சில முஸ்லிம்களா? அல்லது அனைத்து முஸ்லிம்களுமா? இரண்டாவதாக. இந்த நூற்றாண்டின் நவீன தேர்தல்முறைகளிலுள்ள ஓட்டுப்பதிவு, ஓட்டுச்சீட்டை பயன்படுத்துதல் மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகிய செயல்முறைகள் இஸ்லாத்துடன் ஒத்துப்போகக்கூடியதா? அவற்றை இஸ்லாம் அனுமதிக்கிறதா அல்லது இல்லையா?

முதலாவது விவாகாரத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்(சுபு) ஆட்சிஅதிகாரத்தை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கியதன் மூலம் கலீபாவை நியமனம் செய்வதை முஸ்லிம்களின் கடமையாகவும் உரிமையாகவும் ஆக்கியிருக்கிறான், மேலும் அவன்(சுபு) இதை முஸ்லிம்களிலுள்ள மற்ற கூட்டத்தினரை விலக்கிவிடும் வகையில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினருக்கோ அல்லது மற்ற ஜமாஅத்தை விலக்கிவிடும் வகையில் ஒரு குறிப்பிட்ட ஜமாஅத்திற்கோ உரிமையாக்கி வைக்கவில்லை ஏனெனில் பைஅத் கொடுப்பது அனைத்து முஸ்லிம்களின் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية'

"எவர் தனது கழுத்தில் பைஅத் இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்"

இது முஸ்லிம்கள் அனைவருக்குமுள்ள பொதுவான கட்டளையாகும் , ஆகவே செல்வாக்கு பெற்ற முஸ்லிம்கள் மட்டும் கலீபாவை நியமனம் செய்வதற்கு ஏகபோக உரிமை பெற்றிருக்கவுமில்லை மற்ற முஸ்லிம்களின் பங்களிப்பை அவர்கள் புறக்கணிக்கவும் முடியாது, எந்வொரு நபருக்கும் இதில் ஏகபோக உரிமை கிடையாது, மாறாக விதிவிலக்கின்றி இந்த உரிமை அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும், இந்த உரிமையில் முஸ்லிம்களிலுள்ள தீயவர்களுக்கும் (பாஜிர்) நயவஞ்சகர்களுக்கும் (முனாபிகீன்) அவர்கள் புத்திசுவாதீனமுள்ள வயதுவந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் உரிமையுண்டு. ஏனெனில் இந்த விவகாரத்தில் ஷரியா உரை வயதுக்கு வராத சிறுவர்களின் பைஅத்தை மறுப்பதைத் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவான முறையில் வந்திருக்கிறதே தவிர எவரையும் இதிலிருந்து கட்டுப்படுத்தும் வகையில் வரவில்லை, ஆகவே ஷரியாஉரையின் அர்த்தத்தை பொதுவான முறையில்தான் எடுத்துக் கொள்ளமுடியும்.

எனினும் இந்த உரிமையை எல்லா முஸ்லிம்களும் பிரயோகித்தே தீரவேண்டும் என்பது நிபந்தனையல்ல, மேலும் பைஅத் செய்வது கட்டாய கடமை என்றபோதும் அது பர்லுல் கிபாயாவாக (கூட்டுக்கடமை) இருக்கிறது என்ற அடிப்படையில் முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் இதை நிறைவேற்றும் பட்சத்தில் மற்ற முஸ்லிம்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடுகிறது, ஆனால் கலீபாவை தேர்வுசெய்யும் விஷயத்தில் அனைத்து முஸ்லிம்களின் உரிமையும் நிலைநாட்டப்படும் விதத்தில் அவர்களின் அபிப்ராயம் அறிந்து கொள்ளப்பட வேண்டும். அவர்கள் இந்த உரிமையை செயல்படுத்த முன்வந்தாலும் முன்வராவிட்டாலும் சரியே, வேறுவகையில் கூறுவதென்றால் கலீபாவை தேர்வுசெய்யும் தேர்தலில் அனைத்து முஸ்லிம்களும் பங்குகொள்ளும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அவர்கள் அனைவரும் இதில் பங்குகொள்ள ஆர்வம் காட்டினாலும் காட்டாவிட்டாலும் சரியே, அல்லாஹ்(சுபு) முஸ்லிம்கள் மீது விதித்துள்ள கடமையை நிறைவேற்றி பாவத்திலிருந்து மீளும் வகையில் கிலாபத்தை நிலைநிறுத்தும் கடமையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம்க் அனைவருக்கும் வாய்ப்பு வசதிகள் அமைத்து தரப்படவேண்டும் என்பதுதான் நிபந்தனையே தவிர இந்தக் கடமையை நிறைவேற்றும் பணியில் அனைத்து முஸ்லிம்களும் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பது நிபந்தனையல்ல, இதுஏனெனில் முஸ்லிம்களின் ஒப்புதலின் மீது கிலாபத் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை அல்லாஹ்(சுபு) கட்டாயமாக ஆக்கியிருக்கிறானே தவிர அவர்கள் அனைவரும் இதில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கவில்லை, இந்த விவகாரத்தில் இரண்டு முடிவுகள் எய்தப்படுகின்றன, ஒன்று. கிலாபத்தை நிலைநாட்டுவதில் அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலை பெறும் நிலை, மற்றொன்று. அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதலை பெறமுடியாத நிலை, எனினும் இந்த இரண்டு நிலைகளிலும் முஸ்லிம்கள் அனைவரும் கலீபாவின் நியமனத்தில் பங்குகொள்வதற்கு ஏற்ப வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் கட்டாயமாகும்.

தொடரும்

warmcall.blogspot.com

No comments:

Post a Comment