May 11, 2011

கிலாபா பதவியை அடைவதற்கு தேடுதல் மேற்கொள்ளுதல் : طلب الخلافة

கிலாபா பொறுப்பை அடைந்துகொள்ள முயற்சி மேற்கொள்வதற்கும் அதற்காக விவாதத்தில் ஈடுபடுவதற்கும் அனைத்து முஸ்லிம்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள், இவ்வாறு செய்வது மஹ்ரூவான செயலல்ல ஏனெனில் இதற்கு மேற்கொள்ளும் போட்டியை தடைசெய்யும் எந்த அறிவிப்புகளும் கிடையாது, அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) உடல் அடக்கம் செய்யப்படாமல் வைகக்ப்பட்டிருக்கும் நிலையில் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் கலீபா பொறுப்பை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம்கள் தங்களிடையே தர்க்கம் செய்துகொண்டிருந்தார்கள் என்பது திட்டவட்டமான அறிவிப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, மேலும் உமர்(ரலி) மரணத்திற்குப் பின்னர் உயர்ந்த அந்தஸ்த்து பெற்ற ஸஹாபாக்களில் உள்ளவர்களான ஆலோசனை குழுவைச் சார்ந்த ஆறு நபர்கள் மற்ற ஸஹாபாக்கள் முன்னிலையில் கலீபா பதவிக்காக தங்களிடையே தர்க்கம் செய்துகொண்டிருந்தார்கள் என்பதும் இதற்கு எந்தவொரு ஸஹாபாவும் ஆட்சேபனை தெரிவிக்காமல் அவர்களுடன் இணக்கமாக இருந்தார்கள் என்பதும் திட்டவட்டமான முறையிலும் உறுதியான வித்திலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஸஹாபாக்களின் இந்த இஜ்மா கிலாபத்திற்காக தர்க்கம் புரிந்துகொள்வதும் அதை அடைந்து கொள்வதற்காக போட்டியிட்டுக் கொள்வதும் அனுமதிக்கபட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது, தலைமைக்குரிய பதவியை வலியுறுத்திக் கேட்டுப்பெற்றுக் கொள்வதற்கு தடைசெய்யும் ஹதீûஸப் பொறுத்தவரை அது அபூதர் கிfபாரி (ரலி) போன்ற தலைமைத்துவத்திற்கு திறன்பெறாத நபர்களுக்கு குறிப்பாக கூறப்பட்டதே தவிர பொதுவான அறிவிப்பு அல்ல, அதற்கு தகுதியானவர்கள் அதைக் கேட்டு பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு, அம்ர் இப்ன் ஆஸ்(ரலி) தனக்கு தலைமைப் பதவியை (இமாரத்) கோரியபோது அல்லாஹவின்தூதர்(ஸல்) அவரை மாகாண ஆளுநராக (வாலி) நியமனம் செய்தார்கள்.

sources from warmcall.blogspot.com

No comments:

Post a Comment