May 13, 2011

கலீபாவை நியமனம் செய்யும் வழிமுறை : طريقة نصب الخليفة பகுதி 2


முதல்நிலையைப் பொறுத்தவரை உள்ள விளக்கமாவது:

கலீபாவை நியமனம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. மாறாக கலீ*பாவுக்கு பைஅத் கொடுப்பதில் எத்தகைய எண்ணிக்கை உள்ள முஸ்லிம்களும் இடம்பெறுவதற்கு அனுமதியுண்டு, மேலும் மற்ற முஸ்லிம்கள் வெளிப்படுத்தும் மௌனத்தின் மூலமோ அல்லது கட்டுப்படுவதற்கு இணக்கம் காட்டுவதன் மூலமோ அல்லது வேறுவகையில் தங்கள் ஒப்புதலை வெளிப்படுத்துவதன் முலமோ இந்த பைஅத்திற்கு உரிய அனைத்து முஸ்லிம்களின் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்படும், இதனடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட கலீ*பா அனைத்து முஸ்லிம்களுக்கும் கலீ*பாவாக ஆகிவிடுவார், மூள்றே மூன்று நபர்களால் நியமனம் செய்யப்பட்டாலும் அவர்தான் சட்டரீதியான கலீ*பாவாக இருப்பார் ஏனெனில் கலீ*பாவை நியமனம் செய்ததின் மூலம் முஸ்லிம்கள் மீதுள்ள கூட்டுக்கடமை(*பர்லுல் கி*பாயா) நிறைவேற்றப்பட்டு விடுகிறது, முஸ்லிம்கள் தங்கள் அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தடையின்றி முழுமையாக தெரிவிப்பதற்குரிய வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் வெளிப்படுத்தும் மௌனம் அல்லது அவர்கள் கட்டுப்படுவதற்கு காட்டும் இணக்கம் அல்லது அவர்கள் சம்மதத்தை சுட்டிக்காட்டும் பல்வேறு நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் ஒப்புதல் உறுதிசெய்யப்படுகிறது, எனினும் முஸ்லிம்கள் அனைவரின் ஒப்புதலை பெறுவதை நிறைவேற்ற முடியதாபோது பெரும்பான்மை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக விளங்கும் ஒரு குழுவினர் இணைந்து கலீ*பா நியமனத்தை முறையாக நிறைவேற்றலாம் இந்தக் குழுவில் இடம்பெற்ற நபர்களின் எண்ணிக்கை எவ்வாறு இருந்தபோதிலும் சரியே, அவ்வாறு இல்லை என்றால் பிறகு கிலா*பத்தை நிலைநாட்ட முடியாது, இத்தயை தருணங்களில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றவர்கள் பைஅத்தை நிறைவேற்றுவதன் மூலம் கலீ*பாவை நியமனம் செய்யலாம் என்று சில சட்டஅறிஞர்கள் தீôமானிக்கிறார்கள். ஏனெனில் கலீ*பா ஆவதற்கு தகுதிபெற்ற எந்த நபருக்கும் முஸ்லிம்களின் ஒப்புதலை பெறுவதற்கு ஆற்றல்பெற்றுள்ள செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு குழுவாக இணைந்து பைஅத் செய்வதன் மூலம் கிலா*பத்தை நிலைநாட்டலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள், ஆகவே இத்தகைய தருணங்களில் செல்வாக்கு மிக்க மனிதர்களின் பைஅத் கிலா*பத்தை நிலைநாட்டுவதில்லை அல்லது கிலா*பத்தை நிலைநிறுத்துவதற்கு செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பைஅத் செய்யவேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. மாறாக செல்வாக்கு மிக்க மனிதர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இருப்பதால் அவர்கள் பைஅத்தை நிறைவேற்றுவதும் மற்ற முஸ்லிம்கள் இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் மௌனத்தை வெளிப்படுத்துவதும் அவர்களின் ஒப்புதலை சுட்டிக்காட்டும் ஆதாரங்களாக இருக்கின்றன, ஆகவே முஸ்லிம்களின் ஒப்புதலுடன் செய்யப்படும் பைஅத்தை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு ஆதாரமும் கிலா*பத் ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றப்பட்டு கலீ*பா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது, மேலும் இந்த பைஅத்தின் மூலம் நியமிக்கப்பட்ட கலீ*பா சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்தான்.

இதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு தங்கள் ஒப்புதலை தெரிவிப்பதற்கு முழுமையான வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் பைஅத்தை நிறைவேற்றுதல் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் பைஅத்தை நிறைவேற்றுதல் அல்லது முஸ்லிம்களில் ஒருகுழுவினர் பைஅத்தை நிறைவேற்றும்போது மற்ற முஸ்லிம்கள் மௌனமாக இருந்து அதை ஏற்றுக்கொள்வதோடு தங்கள் கட்டுப்படுதலை நிறைவேற்றுவதற்கு துரிதம் காட்டுதல் அல்லது இதுபோன்ற எந்த முறைகளிலோ முஸ்லிம்களிடம் ஒப்புதலை பெற்றதற்குரிய ஆதாரங்கள் உறுதிப்பட்ட நிலையில் எந்த கூட்டத்தினரும் கலீ*பாவை நியமித்து கிலா*பத்தை நிலைநாட்டலாம் என்பதுதான் கிலா*பத்தை நிலைநிறுத்துவதற்குரிய ஷரியாவின் விதிமுறையாகும், இந்த கூட்டத்தினர் செல்வாக்கு பெற்ற மனிதர்களாக இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் நான்கு என்ற எண்ணிக்கையிலோ அல்லது நாநூறு என்ற எண்ணிக்கையிலோ இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் தலைநகரில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றோ அல்லது அவர்கள் மாகாணங்களில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றோ இறைசட்டம் (divine law - ஹுகும்ஷரியா) கூறவில்லை. மாறாக அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் அபிப்ராயங்களையும் விருப்பங்களையும் தடையின்றி வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஒப்புதலை சுட்டிக்காட்டுகின்ற ஆதாரம் முறையாக வெளிப்படும் வகையில் பைஅத் நிறைவேற்றப்படவேண்டும் என்றுதான் இறைசட்டம் கூறுகிறது.

அனைத்து முஸ்லிம்கள் என்பதன் பொருள் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டு எல்லையில் வாழுகின்ற முஸ்லிம்கள் அனைவரும் என்பதாகும், அதாவது. கிலா*பத் அரசு நிலைபெற்றிருக்கும் பட்சத்தில் அதன் குடிமக்களாக இருப்பவர்கள் என்றும். கிலா*பத் அரசு இல்லாத பட்சத்தில் அதை நிலைநாட்டுவதற்காக கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முஸ்லிம்கள் என்றும் பொருளாகும், இந்த பட்டியலில் அடங்காத உலகில் வாழும் இதர முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் ஒப்புதலை பெறுவது அவசியமல்ல ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்பிலிருந்து விலகியபடி வாழ்ந்துகொண்டிருக்கும் மூ*மின்கள் ஆவார்கள் அல்லது தாருல்கு*ப்ரில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூ*மின்கள் ஆவார்கள், எனவே அவர்கள் தாருல்இஸ்லாத்தின் செயல்பாடுகளில் பங்குகொள்ள முடியாது என்பதால் ஒப்பந்த பைஅத்தில் பங்குகொள்வதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது, ஆனால் அவர்கள் கட்டுப்படும் பைஅத்தில் கட்டாயம் பங்குகொள்ளவேண்டும் ஏனெனில் கட்டுப்படும் பைஅத்தை நிறைவேற்றாதவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்புக்கு எதிராக கலகம் செய்கிறவர்கள் ஆவார்கள், தாருல்கு*ப்ரில் வாழ்கின்றவர்கள் உண்மையில் கிலா*பத்தை நிலைநாட்டாதவரையில் அல்லது கிலா*பத்தின் அதிகாரத்திற்குள் வராதவரையில் அவர்கள் இஸ்லாமிய அதிகார அமைப்பை பெறாதவர்களாகவே இருந்துவருவார்கள், ஆகவே சட்டரீதியாக கலீ*பாவை நியமனம் செய்வதன் மூலம் உண்மையாக இஸ்லாத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் முஸ்லிம்களுக்குத்தான் ஒப்பந்த பைஅத்தை நிறைவேற்றும் உரிமை இருக்கிறது. மேலும் அவர்களின் ஒப்புதலை பெறுவதுதான் கிலா*பத் ஒப்பந்தத்தை சட்டரீதியாக நிறைவேற்றுவதற்கு அவசியமாக இருக்கிறது, இத்தகைய கருத்து அறிவுரீதியான ஆய்விலிருந்து பிறந்த விளக்கம் என்றோ அல்லது இதற்கு ஆதாரம் இல்லை என்றோ கூறுவது தவறாகும், இந்த விளக்கத்தைப் பொறுத்தவரை இறைசட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயத்தைக் (مناط subject) குறித்த விளக்கமே தவிர இறைசட்டத்தைக் குறித்த விளக்கமல்ல, இறைசட்டத்தை பிரயோகப்படுத்தும் எதார்த்த உண்மைகளை (realities) ஆய்வுசெய்வதற்கு ஷரியா ஆதாரம் தேவையில்லை, உதாரணமாக. இறந்தவைகளின் மாமிசத்தை உண்பதற்கு ஷரியா தடைசெய்துள்ளது, இறந்தவைகளின் மாமிசம் எதுவென்று ஆய்வுசெய்து அறிந்துகொள்வது அந்த சட்டத்தை பிரயோகப் படுத்துவதற்குரிய விஷயத்தை (مناط-subject) ஆய்ந்தறிவதாகும், ஆகசே சட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயம் (subject)அதற்குரிய இறைசட்டத்தோடு தொடர்புடையதாகும், ஆகவே விஷயம் என்பதும் அதனுடன் தொடர்புடைய இறைசட்டம் என்பதும் வெவ்வேறானவை, விஷயத்தை (subject) ஆய்வுசெய்வதற்கு அதன் எதார்த்தநிலையை (Reality) ஆய்வுசெய்யவேண்டும், பிறகுதான் அந்த விஷயத்திற்குரிய இறைசட்டம் எதுவென்று அறிந்துகொள்ள முடியும், ஆகவே விஷயத்தின் எதார்த்தநிலையை ஆய்வுசெய்வதற்கு ஷரியா உரையின் ஆதாரம் தேவையில்லை, உண்மைப் பொருட்களின் எதார்த்தநிலை அல்லது விஷயத்தின் எதார்த்தநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள அறிவுரீதியாக ஆய்வுசெய்ய வேண்டுமே ஒழிய ஷரியா ஆதாரத்தின் அடிப்படையில் அல்ல, ஆகவே முஸ்லிம்கள் கலீ*பாவை நியமனம் செய்யவேண்டும் என்பது இறைசட்டமாகும். மேலும் இந்த நியமனம் முஸ்லிம்களின் ஒப்புதல் மூலமும் தேர்ந்தெடுத்தல் மூலமும் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் இறைசட்டமாகும், இந்த சட்டங்களுக்கு அவை இறைசட்டங்கள்தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரம் தேவையில்லை. ஆனால் எவர்களால் நியமனம் நிறைவேற்றப்படவேண்டுமோ அந்த முஸ்லிம்கள் யார்? அவர்களின் ஒப்புதலையும் விருப்பத்தையும் எவ்வாறு நிறைவேற்றுவது? இவைதான் மேற்கூறிய இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்குரிய எதார்த்தவிஷயமாகும் (subject) அதாவது இவைதான் மேற்கூறிய இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்குரிய மனாத் (مناط-subject) ஆகும், ஒரு குறிப்பிட்ட இறைசட்டத்தை அதற்குரிய மனாத்தின் மீது பிரயோகப்படுத்துவதுதான் அந்த இறைசட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதாகும், ஆகவே இறைசட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அதனோடு தொடர்புடைய மனாத்தை ஆய்வுசெய்வது அவசியமாகும்.

சட்டத்தின் விஷயமும் (manaat ul hukm - subject of the rule) சட்டத்தின் காரணமும் (illat ul hukm – reason of the rule)வெவ்வேறானவை. அவற்றை இணைத்துக் கூறுவது தவறாகும் ஏனெனில் இதற்கு ஆதாரம் இல்லை, இவ்விரண்டிற்கும் மத்தியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது, இல்லத் (reason -காரணம்-علة) என்பது சட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த சட்டம் வந்ததிற்குரிய காரணத்தை குறிப்பிடுகிறது, அதாவது இல்லத் என்பது சட்டத்தை வழங்கிய அல்லாஹ்(சுபு) அதை எதற்காக கொடுத்தான் என்பதற்குரிய நோக்கத்தை குறிப்பிடுகிறது, ஒரு இறைசட்டத்திற்கு இல்லத் இருக்கிறது என்பதற்கு ஷரியாஉரையில் அதை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருக்கவேண்டும், சட்டத்தின் இல்லத்தை அறிந்துகொள்வதன் மூலம் சட்டத்தை கொடுத்த அல்லாஹ்(சுபு) வின் நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும், ஆனால் மனாத் என்பது எந்த விஷயத்தின் மீது அந்த சட்டம் கொடுகப்பட்டிருக்கிறதோ அந்த விஷயம் மற்றும் அதன் எதார்த்தநிலை ஆகியவையாகும், ஆகவே ஒரு சட்டத்தை அது எந்த மனாத்தின் மீது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் மீது பிரயோகப்படுத்துகிறோமே தவிர அந்த சட்டத்தின் ஆதாரத்துடனோ அல்லது அந்த சட்டத்தின் இல்லத்துடனோ பிரயோகப்படுத்துவதில்லை, எந்த விஷயத்தின் மீது சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அல்லது எந்த பிரச்சினைக்காக சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது அந்த விஷயத்திற்கோ அல்லது பிரச்சினைக்கோ தீர்வு வழங்குவதற்காகத்தான் கொடுக்ப்பட்டிருக்கிறது, ஆகவே சட்டம் எப்போதும் அதன் மனாத்தின் மீது தொங்கிக் கொண்டிருக்கும். அதேவேளையில் சட்டம் அதன் இல்லத்தோடு சுழன்று கொண்டிருக்கும், சட்டத்தின் மனாத் என்பது சட்டத்திற்குரிய ஷரியா ஆதாரத்திலிருந்து வேறுபட்டது மேலும் சட்டத்தை உறுதிசெய்வது சட்டத்தின் இல்லத்தை உறுதிசெய்வதிலிருந்து வேறுபட்டது, ஷரியாஉரைகளில் பொதிந்துள்ள தர்க்க வாதங்களை சரியாக புரிந்துகொள்வது இல்லத்தை ஆய்ந்தறிதல் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் இது ஷரியா ஆதாரங்களை புரிந்துகொள்வதாகுமே தவிர மனாத்தை புரிந்துகொள்வது ஆகாது ஏனெனில் மனாத் என்பது ஷரியா ஆதாரங்களிலிருந்து வேறுபட்டது. அது சட்டத்தை பிரயோகப்படுத்தும் எதார்த்தத்தையோ (reality -الواقع) அல்லது பிரச்சினையையோ(ல்ழ்ர்க்ஷப்ங்ம்-المسألة) அல்லது விஷயத்தையோ(subject-مناط) குறிப்பிடுகிறது.

உதாரணமாக. ஹமர் என்று அழைக்கப்படும் மதுபானம் ஹராமாகும், மதுபானத்தை அருந்துவதற்குரிய தடை அதன் இறைசட்டமாக இருக்கிறது, சிலவகை பானங்கள் அவை ஹராமானதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக அவை மதுபானமா அல்லது இல்லையா என்ற விசாரணையை மேற்கொள்வதுதான் மனாத்தை ஆய்வுசெய்வதாகும், அதாவது அந்த குறிப்பிட்ட பானத்தின் தன்மைதான் இங்கு மனாத் என்று அழைக்கப்படுகிறது, ஆகவே ஒரு பானத்தை அது ஹராமா அல்லது இல்லையா என்பதை உறுதிசெய்ய அதில் மது (alchohol) இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வுசெய்வது அவசியமாகும், இந்த இடத்தில் பானத்தின் உண்மைநிலையை ஆய்வுசெய்வது மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான், மற்றொரு உதாரணம். உலூ(الوضوء) செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தண்ணீர் முத்தலக் நீர்(unrestricted water) என்று இறைசட்டம் கூறுகிறது, உலூ செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு தண்ணீர் கட்டுப்படுத்தப்படாமல் ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வுசெய்வதுதான் மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும், ஆகவே தண்ணீர் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது தேங்கிக்கிடக்கிறதா என்பதை தீர்மானிப்பதற்கு அதன் உண்மைநிலையை ஆய்வுசெய்வது அவசியமாகும், இவ்வாறு தண்ணீரின் எதார்த்தநிலையை ஆய்வுசெய்வதைத்தான் மனாத்தை உறுதிப்படுத்திக் கொள்வது என்று குறிப்பிடப்படுகிறது, ஹதûஸ வெளிப்படுத்தியவர் (பின்துவாரத்தின் வழியாக காற்று வெளியேறுதல்) தொழுகையை நிறைவேற்றுவதற்கு உலூ செய்யவேண்டும் என்று கூறும்போது அந்த மனிதர் ஹதûஸ வெளிப்படுத்தியவராக (முஹ்தஸ்) இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை விசாரணை செய்வதுதான் மனாத்தை உறுதிப்படுத்துவதாகும், இன்னும் இவ்வாறு கூறிக்கொண்டே செல்லலாம், அல்முஆ*பகாத் (الموافقات) என்ற நூலில் அஷ்ஷாத்தபீ (الشاطبي) கூறியிருப்பதாவது: இந்த விஷயத்திலும் மற்றும் இதுபோன்றவற்றிலும் அவற்றின் மனாத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டியிருப்பதால் அவற்றின் எதார்த்தநிலைகளின் அடிப்படையில் ஷரியா ஆதாரங்களை எடுத்துக்கொள்ளவேண்டும், மனாத்தை ஆய்வுசெய்து உறுதிப்படுத்தும் செயலோடு இஜ்திஹாதை இணைக்கவேண்டும், அவ்வாறு செய்வதற்கு சட்டத்தை கொடுத்தவரின் (அல்லாஹ் -சுபு) நோக்கத்தைப்பற்றிய அறிவும் தேவையில்லை அரபிமொழிப் புலமையும் தேவையில்லை. ஏனெனில் இஜ்திஹாதை மேற்கொள்வதின் நோக்கம் சட்டத்தோடு தொடர்புடைய விஷயத்தை அதாவது மனாத்தை உள்ளபடியே அறிந்துகொள்வதுதான், ஆகவே மனாத் (விஷயம் -subject) என்னவென்று அறிந்துகொள்வதற்கு அறிவுத்திறன் தேவைப்படுகிறது. அது இல்லாமல் விஷயத்தை (மனாத்தை) தீர்மானமாக அறிந்துகொள்ள இயலாது, இதனடிப்படையில் முஜ்தஹிதாக உள்ளவர் அறிவுத்திறன் பெற்றவராக இருக்கவேண்டும். மேலும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படும் தேவையின் அடிப்படையில் இறைசட்டங்களை பிரயோகப்படுத்துவதற்கும் ஒரு முஜ்தஹித் அறிவுத்திறன் நிறைந்தவராக இருக்கவேண்டும்.

ஷரியா உரையில் பொதிந்துள்ள சட்டம் வந்ததற்குரிய காரணங்களை (நோக்கங்களை) ஆய்வுசெய்து அறிந்து கொள்வதுதான் இல்லத்தை(reason-காரணம்-علة) கண்டுபிடித்தல் என்று கூறப்படுகிறது, இது ஷரியா உரையை (شرعي النص) விளங்கிக்கொள்வதாகும். ஆகவே அது மனாத்திலிருந்து வேறுபட்டது, மனாத்தை உறுதிப்படுத்துதல் என்பது சட்டத்தை பிரயோகப்படுத்தும் விஷயத்தை அல்லது பிரச்சினையை அல்லது எதார்த்தத்தை கண்டுபிடித்தலாகும், இதனடிப்படையில் மனாத்தை ஆய்வுசெய்பவர் முஜ்தஹிதாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாறாக அவர் அந்த விஷயத்தில் அறிவு பெற்றவராக இருக்கவேண்டும் என்பதுதான் அவசியமாகும், ஆகவே கலீ*பா நியமனத்தில் எத்தகைய முஸ்லிம்கள் பைஅத் செய்தால் அது அனைத்து முஸ்லிம்களின் அல்லது பெரும்பான்மை முஸ்லிம்களின் ஒப்புதலையும் ஏற்றுக்கொள்ளுதலையும் சுட்டிக்காட்டும் என்பதை ஆய்வுசெய்வது மனாத்தை ஆய்வுசெய்வதில் அடங்கும்.

இது முதல்நிலையைப் பொறுத்தவரை உள்ள விஷயமாகும், இரண்டாவது நிலையைப் பொறுத்தவரை. இன்றைய காலகட்டத்தில் நடந்துவரும் தேர்தல் முறையான இரகசிய ஓட்டுப்பதிவு. ஓட்டுச்சீட்டுகளையும் ஓட்டுப் பெட்டிகளையும் பயன்படுத்துதல் மற்றும் ஓட்டுக்களை எண்ணுதல் ஆகிய அனைத்தும் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்வதை நடைமுறைப்படுத்துவதற்கு பிரயோகிப்படும் செயல்முறைகளாகவும் சாதனங்களாகவும் (styles and means - الأساليب والوسائل) இருக்கின்றன. அவை இறைசட்டத்தின் எல்லைக்குள்ளோ அல்லது அந்த சட்டத்தை பிரயோகிக்கும் விஷயத்திற்குள்ளோ (மனாத்) இடம்பெறாது, ஏனெனில் இந்த செயல்முறைகளும் சாதனங்களும் முஸ்லிம்களின் செயல்பாடுகளிலோ அல்லது இறைசட்டத்தை பிரயோகிக்கும் மனாத்துடனோ எந்தவிதத்திலும் நேரடியாக தொடர்புடையவை அல்ல, முஸ்லிம்களின் செயல்பாடுகளில் இந்த சாதனங்களை பயன்படுத்துவதற்கு எந்த தடையும் கிடையாது. ஏனெனில் இறைசட்டம் முஸ்லிம்களின் செயல்பாடுகளோடு தொடர்புடைய விஷயமாகும். அதாவது கிலா*பத் முஸ்லிம்களால் நிலைநாட்டப்டவேண்டும் என்ற விஷயத்தோடு தொடர்புடையதாகுதம், ஆகவே இந்த விவகாரத்திற்குரிய இறைசட்டத்தின் நோக்கத்தோடு இத்தகைய தேர்வுமுறைகளுக்கும் அவற்றில் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது, பொதுவான ஷரியா உரைகள்(النص عاماً) அனுமதித்துள்ள விஷயங்களாக அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அவைகளை தடைசெய்யும் குறிப்பிட்ட ஆதாரங்கள் (دليل خاص) எதுவும் கிடையாது என்ற அடிப்படையில் அவைகள் முபாஹ்( مباحة) ஆகும், எனவே முஸ்லிம்கள் எத்தகைய செயல்முறை பாணியையும் எடுத்துக்கொள்வதற்கு அனுமதியுண்டு, முஸ்லிம்களின் ஒப்புதலோடும் அவர்களின் விருப்பத்தோடும் கலீ*பாவை நியமனம் செய்யும் *பர்லான செயல்பாட்டை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக உள்ள எத்தகைய செயல்முறை பாணியையும் எந்தவகை சாதனங்களையும் அவைகள் தடைசெய்யப்பட்டதற்குரிய ஷரியா ஆதாரங்கள் எதுவும் இல்லாதவரை அவற்றை பயன்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்கப்ட்டே இருக்கிறார்கள், செயல்முறைபாணி (
styles-الأساليب) என்பது மனதர்களின் செயலில் உள்ளது அதை இறைசட்டங்களின் அடிப்படையில் மட்டுமே நிறைவேற்றமுடியும் என்றும். அதன் சட்டங்களை சுட்டிக்காட்டக்கூடிய ஷரியா ஆதாரம் அதற்கு இருக்கவேண்டும் என்றும் கூறுவது சரியல்ல, ஏனெனில் இறைசட்டங்களின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் மனிதனின் செயல்பாடுகளுக்கு அவற்றின் சட்டங்களை சுட்டிக்காட்டும் ஆதாரம் இருப்பது அசலான செயல்பாடுகளுக்கும்(action of origin–الفعل أصلاً) தனிப்பட்ட ஆதாரமுள்ள கிளை செயல்பாடுகளுக்கும் மட்டுமே பொருந்தக்கூடியது, இதற்கு உதாரணம் தொழுகையாகும். அதைக் குறிப்பிடும் ஷரியா ஆதாரம் அதனை நிறைவேற்றுவதுடன் மட்டும் தொடர்புடையது. தொழுகையோடு தொடர்புடைய மற்ற செயல்பாடுகள் இதில் அடங்காது. ஏனெனில் உலூ செய்தல் போன்ற தொழுகையோடு தொடர்புடைய கிளைசெயல்பாடுகளுக்கு தனிப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன, ஆகவே நிறைவேற்றப்படும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் இறைசட்டத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு ஆதாரம் இருக்கவேண்டும், ஆனால் ஒரு செயல்பாடு அதன் அசலான செயல்பாட்டின் கிளையாக இருக்கும்நிலையில் அந்த கிளை செயல்பாட்டிற்கு தனிப்பட்ட ஆதாரம் இல்லாவிட்டாலும் அதன் அசலான செயல்பாட்டிற்குரிய பொதுவான ஆதாரமே அதை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்கும், ஒரு செயல்பாடு கிளை செயல்பாடாக இருக்கும் நிலையில் அது தடை செய்யப்பட்டதற்கு உரிய தனிப்பட்ட ஆதாரம் இல்லாவிடில் பிறகு அதை மேற்கொள்வதை தடை செய்யமுடியாது, ஆகவே இன்றைய தேர்தல்முறைகளில் இடம்பெறும் கிளை செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட சட்டம் இருக்கவேண்டும் என்று கோருவது ஒரு கிளை செயல்பாட்டை அதன் அசலான செயல்பாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்து அதற்கு புதிய சட்டத்தை கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பாக இருக்கிறது, கலீ*பாவை தேர்வுசெய்யும் செயல்பாடுகளில் இடம்பெறும் அசலான செயல்பாடு என்பது முஸ்லிம்களின் ஒப்புதலோடும் விருப்பத்தோடும் கலீ*பாவை நியமனம் செய்யவேண்டும் என்பதாகும், ஆனால் ஓட்டுப்போடுதல். ஓட்டுச்சீட்டையும் ஓட்டுப்பெட்டியையும் பயன்படுத்துதல் மற்றும் ஓட்டுக்களை எண்ணுதல் போன்ற அசலான செயல்பாட்டிலிருந்து ஏற்படும் கிளை செயல்பாடுகள் அனைத்தும் அசலான செயல்பாட்டின் சட்டங்களுக்குள் அடங்கிவிடும், இந்த கிளை செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட எந்த ஆதாரமும் தேவையில்லை, இவைகளில் எதுவொன்றையும் அசலான செயல்பாட்டின் சட்டங்களுக்கு வெளியில் கொண்டுவருவது என்றால் அதாவது அவற்றை தடைசெய்வது என்றால் அதற்கு ஆதாரம் இருக்கவேண்டும், மனிதனின் செயல்பாடுகளில் பின்பற்றப்படும் செயல்முறைபாணிகள் (styles-الأساليب) அனைத்திற்கும் இது பொருந்தும், ஓட்டுச்சீட்டு. ஓட்டுப்பெட்டி போன்ற சாதனங்களைப் பொறுத்தவரை இவை அனைத்தும் பொருட்களுக்குரிய சட்டங்களில் அடங்குமே ஓழிய செயல்பாட்டிற்குரிய சட்டங்களில் அடங்காது, இந்த விவகாரத்தில் பின்வரும் ஷரியா விதிமுறையே பிரயோகிக்கப்படும்.

"தடை செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லாதவரை எல்லா பொருட்களும் அனுமதிக்கப்பட்டதுதான்"

அதாவது ஹராமாக்கப்பட்ட பொருட்களைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் ஹலாலானவையே.

வழிமுறை (method-الطريقة) மற்றும் செயல்முறை பாணி (style-أسلوب) ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வேறுபாடு என்னவென்றால் வழிமுறை என்பது அசலான செயல்பாடுகளாகவோ அல்லது தனிப்பட்ட ஆதாரத்தைக் கொண்ட கிளை செயல்பாடுகளாகவோ இருக்கும். மாறாக செயல்முறை பாணி என்பது அசலான செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் துணை செயல்பாடுகளாகும். அவற்றிற்கு தனிப்பட்ட ஆதாரம் இருக்காது, ஆகவே அசலான செயல்பாடுகளுக்கு உரிய பொதுவான ஆதாரம் மட்டும் இருக்கும் நிலையில் அந்த அசலான செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் துணை செயல்பாடுகள் அனைத்தும் செயல்முறை பாணியில் அடங்கும் என்பதோடு அவற்றுக்கு தனிப்பட்ட ஆதாரம் எதுவும் ஷரியாவில் இருக்காது, ஆகவே வழிமுறை என்பது இறைசட்டமாக இருப்பதால் அது ஷரியா ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எனவே அதை கட்டாயமாக பின்பற்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், வழிமுறையின் சட்டம் இபாஹாவில் (அனுமதிக்கப்பட்டவற்றில்) இல்லாதவரை இறைசட்டங்களை பின்பற்றுவதில் முஸ்லிம்கள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள முடியாது, ஷரியா ஆதாரம் இல்லாத செயல்முறை பாணியிலிருந்து இது வேறுபட்டது என்பதோடு இது அசலான செயல்பாட்டின் சட்டங்களில் அடங்கக்கூடியது, ஆகவே இதை பின்பற்றவேண்டியது கட்டாயமாகும், மாறாக செயல்முறை பாணிகள் அனைத்தும் முபாஹ் என்பதால் ஒரு குறிப்பிட்ட பாணியை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பின்பற்றினாôகள் என்றபோதும் அதை முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை, ஆகவே முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கு எத்தகைய செயல்முறை பாணிகளையும் எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் செயல்பாடுகளைப் பொறுத்தே செயல்முறைபாணி எத்தகையது என்று தீர்மானிக்கப்படுகிறது.

sources from warmcall.blogsot.com

3 comments:

  1. YA ALLAH KHILAFATHIN SUGATHAI ANUPAVIKKA KUDIYA PAKKIYATHAI TARUWAYAKA

    ReplyDelete
  2. Aameen....insha allah bro....plz cont..to visit our website..give ur valuable cmnts...jazakkallahair

    ReplyDelete