May 28, 2011

இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்


புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம்!! பகுதி 02


இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்

முஸ்லிம்கள் எத்தகைய சமூகப்பின்னணிகளைக் கொண்டவர்களாக, எத்தகைய கருத்துமுரண்பாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடையிலான உறவு தாம் எல்லோரும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமை கொல்வது என்பது இன்னொரு முஸ்லிமுக்கு ஒரு தேர்வாகக்கூட இருக்கக்கூடாது. எமது தேசியங்களும், கோத்திரங்களும், மத்ஹப்களும், ஜமாஆத்களும் முஸ்லிம்கள் என்ற எமது அடையாளத்திற்கு முன்னால் வலுவிழந்தவைகள். அவை இரண்டாம் பட்சமானவை. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சியாளாரானபோது முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்கள். அவ்வொப்பந்தம் கீழ்க்கண்டவாறே ஆரம்பிக்கிறது.

“ இது அல்லாஹ்வின் து}தர் முஹம்மத்(ஸல்) அவர்களின் புறத்திலிருந்தான ஓர் ஒப்பந்தமாகும். இது குரைஷிகளைச் சேர்ந்த முஸ்லிம்களினதும்;, யத்திரிப்பின் முஸ்லிம்களினதும், அவர்களை பின்பற்றியவர்களினதும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களினதும், அவர்களுடன் சேர்ந்து போரிட்டவர்களினதும் உறவை ஒழுங்குபடுத்தும் ஆவணமாகும். ஏனையவர்களிலிருந்து வேறுபட்ட  இவர்கள் அனைவரும் ஓர் உம்மாஹ் (சமூகம்) ஆகும்.”

சகோரத்துவம் குறித்து அல்லாஹ்(சுபு) இவ்வாறு கூறுகிறான்.

“ நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே!” (49:10)

முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து முஹம்மத்(ஸல்) இவ்வாறு கூறினார்கள்.

“ எவனுடைய கருத்தில் எனது உயிருள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் எவரும் சுவர்க்கம் புகமாட்டார் விசுவாசித்தவரைத் தவிர, உங்களில் எவரும் விசுவாசித்தவராக மாட்டார், நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை, நான் உங்களுக்கு மத்தியில் அன்பினை ஏற்படுத்தும் ஒன்று குறித்து வழிகாட்டாதிருக்கவா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் (சாந்தி) பரப்புங்கள்.” (முஸ்லிம்)


வேறுபாடுகளைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொள்ளும் வழிமுறை

உண்மையில் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை அமுல் செய்யக்கூடிய பொறுப்பும், து}ய்மையுமுள்ள தலைமை இல்லாமையே. பெரும்பாலும் இஸ்லாத்தின் நீதியும், பாதுகாப்பும் மட்டுமே, பிரச்சனைகள் தோன்றுவதற்கு முன்னாலேயே அவை உருவாகாமல் இருக்க வழி செய்து விடுகின்றன. எனினும் அதனையும் தாண்டி பிரச்சனைகள் தோன்றும் பட்சத்தில் இஸ்லாமியத்தலைமை அதனை ஷாPஆவின் பிரகாசத்தில் தீர்த்து வைத்துவிடுகிறது.

இஸ்லாம் ஒர் சம்பூரண வாழ்க்கைத் திட்டமாகையால் அது எவ்வகையான பேதங்களையும் தீர்த்துவைக்கும் ஆளுமையைக் கொண்டுள்ளது. அது கிலாபாவின் குடிமக்களுக்கும், கலீபாவுக்கும் இடையில் தோன்றும் பேதங்கள் தொடக்கம் வௌ;வேறு குழுக்கள், இயக்கங்கள் என்பவற்குக்கிடையில் தோன்றும் சச்சரவுகள் மற்றும் இஸ்லாம் தொடர்பாக எழும் கருத்து வேறுபாடுகளால் உருவாகும் பிரச்சனைகள் வரை அனைத்து வகையான சச்சரவுகளையும் தனக்கேயுரிய பாங்கில் தீர்த்து வைத்து விடுகிறது. எனவே முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் பேதங்களைக் களைந்து அவர்களை ஓரணியாக மாற்றி பிளவு எனும் பாரிய ஹராத்திலிருந்து பாதுகாப்பதற்கு கிலாபா ஒன்றினாலேயே சாத்தியமாகும்.

கிலாபத் ஆட்சியிலே குடிமக்களுக்கும், கலீபாவுக்குமிடையில் தோன்றும் பிரச்சனைகளை மஹ்கமத் அல் மதாழிம் (அநீதச்செயல்களுக்கான நீதிமன்றம்) என்ற விஷேட நீதிமன்றம் தீர்த்து வைக்கும். அதேபோல ஒரு குறித்த விடயத்தில் ஷாPஆவின் நிலைப்பாடு தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றும் கருத்து பேதங்கள், கலீபா அந்நிலைப்பாடுகளில் (இஜ்திஹாத்) ஒன்றைத் தேர்வு செய்து முஸ்லிம்கள் மீது அமுல்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருப்பதால் அச்சிக்கல் நடைமுறை hPதியாகத் தீர்க்கப்பட்டு முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையும், கிலாபத்தின் ஒறுமைப்பாடும் உறுதி செய்யப்படும். மேலும் தனிநபர்களோ, அல்லது குழுக்களோ தங்களுக்கிடையில் முரண்பட்டுக்கொண்டால் அவர்களுக்கென நியமிக்கப்படும் நீதிபதி அது குறித்து விசாரித்து அவர் மேற்கொள்ளும் தீர்மானம் இறுதித்தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இத்தகைய பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். எனவே கிலாபத்தை உருவாக்குவதில் நாம் முனைப்புக்காட்டுவது எமது முரண்பாடுகள் பலவற்றை தீர்ப்பதற்காக நாம் எடுத்து வைக்கும் எட்டுக்களாகும். எனினும் கலீபா இல்லாத நிலையில் தாண்தோன்றித்தனமாக இப்பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கலீபா ஒருவர் இல்லாத நிலையில் கூட முஸ்லிம் குழுக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் ஷாPஆவிற்கு கட்டுப்பட்டு அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தமது முரண்பாட்டை தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதன்போது எவர்களேனும் அல்லாஹ்வின் சட்டத்தை அத்துமீறி நடந்தால் அவர்களை அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ் வருமாறு கட்டளையிடுகிறான்.

“விசுவாசிகளிலுள்ள இரு கூட்டத்தார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருவருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரின்மீது அக்கிரமம் செய்து வரம்பு மீறினால் (வரம்பு மீறிய ) அக்கூட்டத்தவர் (அல்லாஹ்வுடைய கட்டளையின் பால்) திரும்பி வரும் வரை நீங்கள் போர் செய்யுங்கள். அக்கூட்டத்தார் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பிவிட்டால் அவ்விருவருக்கிடையே நீதியைக்கொண்டு சமாதானம் செய்து வையுங்கள். (இதில்) நீங்கள் நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.” (49:9)

ஆகவே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ, அல்லது தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றோ அல்லது கிலாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் விடயத்தில் கூட வன்முறைகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு இரத்தம் சிந்துவதை இஸ்லாம் முற்றாக மறுத்துரைக்கிறது. இன்று முஸ்லிம் அரசுகளுக்கும் அதனை எதிர்த்து போராடும் போராட்டக் குழுக்களுக்குமிடையே இடம்பெறும் அதிகமான ஆயுதப் போராட்டங்களை எடுத்துக்கொண்டால் அவை இஸ்லாத்தின் அடிப்படையில் மாற்றத்தை அரச மட்டத்தில், சமூகத்தில் மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என முனையும் கூட்டத்தாருக்கும், அவற்றை நசுக்க முனையும் அரசுக்மிடையிலான போராட்டங்களாகவே இருக்கின்றன. எனவே முஸ்லிம்களுக்கிடையிலான இந்த முரண்பாடுகளுக்கு காரணமான இந்த முக்கிய விடயம் குறித்து இங்கே மிகச் சுருக்கமாக குறிப்பிடுவது பொருத்தமாகும். இஸ்லாமிய அரசை ஏற்படுத்த அல்லது ஷாPஅத்தை அமுல்படுத்த முனையும் இயக்கங்கள் இஸ்லாம் இது குறித்து எத்தகைய வழிகாட்டலை வழங்குகிறது என்பதை நிதானமாக ஆராய வேண்டும். அத்துடன் கிலாபத்தை நோக்கிய பாதை இஸ்லாத்தின் வெளித்தில் தீர்க்கமாக தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கு முழுமையாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் எவ்வாறு கிலாபத்தை நோக்கி இயங்கினார்கள் என்பதையும், அவர்களுடைய பாதை எவ்வித முரண்பாடுகளுமின்றி எவ்வாறு தெளிவாக அமைந்தது என்பதையும் ஆராய்வது மிக மிக முக்கியமாகும். அல்லாஹ்(சுபு) தனது து}தரிடம்(ஸல்) நீங்கள் வழிநடாத்தும் உங்கள் சமூகத்தை நோக்கி இவ்வாறு கூறுங்கள் என்று கீழ்கண்டவாறு சொல்கிறான்.

“(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும். நான் (உங்களை)அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின்மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கின்றோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (12:108)

கிலாபத்தை நோக்கிய ரஸ}ல்(ஸல்) அவர்களின் பயணத்தில் இராணுவ வழிமுறை உள்ளடங்கியிருக்கவில்லை என்பதை நாம் தெளிவாப்புரிந்து கொள்ள வேண்டும். மாறாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் மக்காவில் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்து அவர்களை முற்று முழுதான இஸ்லாமிய முன்மாதிரிகளாக மாற்றினார்கள். இவ்வாறு எவரெல்லாம் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் இஸ்லாத்தின ஷரிஆவிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு சுவர்க்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வரம்பற்ற அவாவுடன் உறுதியாக இஸ்லாத்திற்காக உழைத்தார்கள். பின்னர் ஈமானிலும், திருக்குர்ஆனிலும் நன்கு தோய்த்தெடுக்கப்பட்ட அந்த ஆரம்ப முஸ்லிம்கள் ரஸ}ல்(ஸல்) அவர்களின் தலைமையிலான ஒரு அரசியல் சமூகக் குழுவாக செயற்பட்டு மக்காவில் ஒரு அறிவார்ந்த போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் மேற்கொணடார்கள். இதன் மூலம் அங்கு நிலவிவந்த பழக்க வழக்கங்களையும், சமூக, அரசியல் கட்டமைப்புக்களையும், அங்கு நிலை கொண்டிருந்த பாரம்பரியம், வழக்காறுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் துணை கொண்டு எதிர்த்தார்கள். இவ்வாறு ஜாஹிலிய சமூக வழமைகளையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து அதற்கு பகரமாக இஸ்லாமிய சிந்தனைகளையும், தீர்வுகளையும் முன்வைத்தார்கள். இவ்வாறு வளர்ந்த போராட்டத்திற்கு மத்தியில் இஸ்லாத்திற்கான உதவியை அதாவது நுஸ்ராவை சமூகத்தலைமைகளை நோக்கியும், ஆட்சி மற்றும் அதிகார வர்க்கத்தை நோக்கியும் கோருமாறு அல்லாஹ்(சுபு) முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான். அந்த தீர்க்கமான பாரிய முயற்சியில் இடைவிடாது முயற்சித்துக்கொண்டிருந்த முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறுதியாக நுஸ்ராவை யத்ரிபின் அன்ஸார்களிடமிருந்து அல்லாஹ்(சுபு) வழங்கினான். இந்த பரிணாம வளர்ச்சியையே நாமும் எமது உம்மத்தின் மத்தியில் பொறுமையுடன் ஏற்படுத்த வேண்டும். இது எமக்குளேயே நாம் ஐக்கியமிளந்து ஒருவரை ஒருவர் குறி வைக்கும் அழிவிலிருந்து பாதுகாக்கும்.

warmcall.blogspot.com

No comments:

Post a Comment