“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)
Jan 15, 2013
தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 05)
" பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்!
அதன் கொள்கைகள் கொலைக் களங்களை பிரசவிக்கும் !அதன் சட்டங்களும் கோரமாக இரத்தம் குடிக்கும் !சுயநல மேடை போட்டு நீதியை மிதித்து அங்கு அநீதி ஆனந்தக் கூத்தாடி மகிழும் ! - இதுதான் இன்றைய அதிகாரங்கள் அரசியலாக கற்றுத் தருபவை "
டெல்லியில் நடந்த அந்த மிருகத் தனமான பாலியல் வன்முறையோடு கூடிய படு கொலையோ , அல்லது அதே இந்தியாவில் காஸ்மீரில் இந்த முஸ்லீம் உம்மத்தின் சகோதரிகளின்
உடல்கள் மீது படுபயங்கரமாக இந்திய இராணுவ ஜவான்களால் நிகழ்த்தப் படும் பயங்கர வாத எதிர்ப்பு
யுத்தமோ, அரசியல் தரத்தில் இரண்டு வேறுபட்ட பார்வைகள் . மனித குலத்தின் கீழ்த்தரமான அணுகு முறைகளுக்கு இது சிறந்த உதாரணம் .
பார்வையின் கோணத்தில் இருந்தே நடைமுறைகள் தீர்மானிக்கப் படுகின்றன . அந்த பார்வையை தீர்மானிப்பது கொள்கைகள் என்றால் அது மிகையான கருத்தல்ல .இது பொதுவாக எல்லா
விடயங்களுக்கும் பொருந்தும் . எப்போதும் எமக்கு முன் ஏற்படும் அநீதமான வன்முறைகள் தொடர்பாக
எமது தீர்வுகள் தற்காலிகமான சில உணர்ச்சி கரமான நடவடிக்கைகள் பற்றியே சிந்திக்கின்றன . ஒரு அடிப்படைக் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக அந்த வன்முறை பார்க்கப் படுவதில்லை .
இன்று எம்முன் நிற்கின்ற ஒட்டு மொத்த கொள்கைகள் ,சிந்தனைகள் பெண்கள் தொடர்பில் எவ்வாறான கருத்தை வைத்திருக்கின்றது ? என ஆராயப் போகும் போது ஒரு விரிவான
தேடல் அவசியமாகின்றது . ஆனால் பொதுக்கருத்தில் பெண்கள் தொடர்பான கருத்தில் பல உடன்பாடுகளை அவை கொண்டிருக்கின்றது ; என்பதை நிரூபிக்க பக்கம் பக்கமாக ஆராயும் அவசியம்
இருக்காது .
கிரேக்கமோ , ரோம் சமூகமோ , அல்லது ஐரோப்பாவோ , அரேபியாவோ ,ஆபிரிக்காவோ , ஆசியாவோ , தமது கருத்தில் பெண்கள் தொடர்பான நிலைப்பாட்டை விளக்க , அல்லது அவைகளின் பெண் தொடர்பான பொதுப் பண்பை விளக்க சில உதாரண சம்பவங்களே போதுமாக இருந்தது . இந்த விதி
இன்று எம்முன் நிற்கும் கொள்கைகள் , சிந்தனைகள் பற்றி ஆராயவும் போதுமானதாகும் .
அந்த வகையில் முதலாளித்துவமோ , கம்பியூனிசமோ , பெண் தொடர்பில் பார்த்த பார்வை என்ன ? என்று நாம் ஆராய முற்படுகையில், எல்லாம் பாலியல் கவர்ச்சியே என்ற 'சிக்மன் புரைடின் ' சிந்தனை ஆதிக்கமும் , சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் அறிந்தும் அறியாமலும் இரண்டறக் கலந்த கோட்பாடுகளாகவே (முதலாளித்துவமும் , கம்பியூனிசமும் ) இருக்கின்றன . என்ற முடிவிற்கு எம்மால் வரமுடியும் .
இந்த விடயத்தை ஆராய முன் இன்னும் ஒரு விடயத்தை விளக்க வேண்டிய தேவை
எனக்கிருக்கின்றது . அது ஒரு கேள்விக்கான விடையாய் வந்து எம்மை ஆச்சரியப் படுத்தும் . அந்தக் கேள்வி இதுதான் ' மனித குல வரலாற்றின் மிகப் பழமையான தொழில் எது ?' என்ற வினாவே
அதுவாகும் . பல வருடங்களுக்கு முன்னர் உளவுத்துறை சம்பந்தமான ஒரு ஆய்வு நூலில் இது பற்றி நான் படித்துள்ளேன் . அதன் விடையைக் கண்டு நான் சற்று ஆச்சரியம் அடைந்தேன் .
அதன் விடை இவ்வாறு இருந்தது 1. விபச்சாரம் , 2. உளவு வேலை என்பதாக இருந்தது . அதிலும் இந்த இரண்டு தொழில்களிலும் வெற்றிகரமாக இயங்கியவர்கள் பெண்கள் என்பதாகவும் , பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்றும் இலாபகரமாக இயங்கும் நிறுவனங்கள் இவைதான் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது .
(தொடரும் ...)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment