Apr 22, 2013

அமெரிக்க டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ! முஸ்லீம்கள் மீது முத்திரை குத்தும் இன்னொரு முகமூடித் தாக்குதலா!?

நியாயமாக சிந்திக்கும் மனித சமூகத்திட்கு இறந்த காலம் பல அனுபவங்களை முதலாளித்துவ
மேட்கின் விடயத்தில் கொடுத்திருக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்காது. அந்த வகையில் ஜீ.பீ.எஸ் தொழில் நுட்பம் , அதி நவீனகரமான தேசிய பாதுகாப்பிட்கான உளவு ,
இராணுவ பாதுகாப்பு பிரிவுகள் இப்படி பல்வேறு குறிப்பிடும் தகமைகளில் முதல் தர அந்தஸ்தில் பேசப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உள் வீட்டில் 9/11 , ஓக்லஹோமா, வரிசையில் நிகழ்ந்துள்ள இந்த டெக்ஸாஸ் குண்டு வெடிப்பு பற்றி பல்வேறு கருத்துக்களை முன்வைத்தாலும் சில எதிர்கால நடவடிக்கைகளுக்கான நாடக பாணி ஆதார சம்பவமாகவே நிகழ்வுகளை கருத வேண்டியுள்ளது.

அல்காயிதா அச்சத்தில் அமெரிக்கர்களையும் , உலகத்தையும் ஆழ்த்தி எண்ணை வயல்களை ஏப்பம் விட ஒரு 9/11 (டூவின் டவர்) தாக்குதல் சாதகமாகிப் போக ஈராக்கில் சதாம் வேட்டை
நடாத்தி ; காட்டிய குற்றச் சாட்டுகளுக்கு எங்கு ஆதாரம் தந்தார்கள் என்றிருக்க , ஆப்கானில் புகுந்து ஆதாரம் காட்டுக்கிறோம் என்ற வார்த்தைகளை தவிர இதுவரை என்ன கிழிததார்கள்!? பின்லாடனை ஒரு சீல்ட் கொமாண்டோஸ் மிசனில் பொறி வைத்து பிடித்ததாக கூறி கண் காணாமல் சமுத்திரத்தில் சமாதி ஆக்கி ஹோளிவூட்டுக்கு ஒரு சிறப்பான திரைக்கதை கொடுத்ததை தவிர!?

பயங்கரவாதி , அடிப்படைவாதி , தீவிரவாதி என்ற முத்திரைகளை மட்டும் முஸ்லீம்கள் மீது குத்துவதில் கடந்த கால சம்பவங்கள் எப்போதும் திட்டமிட்டே நகர்த்தப்பட்டு
வந்துள்ளது. என்பதில் இருந்து அந்த சம்பவங்களே (முஸ்லீம்கள் ,முஸ்லீம் உலகில்)சில அடைவுகள் நோக்கி செய்யப் பட்டிருக்க முடியாதா? எனும் சாதாரண ஊகம் கூட வராத விடத்து முதலாளித்துவ அரசியல் தொடர்பில் ஒரு குறை மதிப்பாகவே அத்தகு நிலைப்பாட்டை கருத முடியும். அந்த வகையில் இந்த இந்த டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ஏதட்காக!? எனும் வினாவுக்கு பதிலை ஒரு குத்து மதிப்பாக மறுமுறை தருகிறேன் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment