Apr 27, 2013

முதலாளித்துவப் பொய்ககளும் முஸ்லீம் உம்மாவும் !!!

பாலஸ்தீனில் படியேறி பக்தாதை ஊடறுத்து
மியன்மரில் இளைப்பாரி காஸ்மீரில்
பாட்டி வடை சுட்ட கதை கூறி
அவல அரங்கேற்றத்திற்கு நியாயக் கவிபாடும்
உன் ஊடகத் தாலாட்டில் உலகம் பூரிக்க
நான் பொய்ப்பிக்கப் பட்டு விட்டேன் !

ஓலங்களை இராகமாயும் குருதியை பாணமாயும்
அழகாய் நீ மாற்றிப் பருக்கிய போது உன்
ஏகாதிபத்திய மாயத் தொட்டிலில்
பூகோளமே உறங்கி விட்டதே !

உன் கசாப்புக் கடைக்கு எம்மை அடிமாடுகளாக்கி விட்டு
முதலைக் கண்ணீரோடு நீ பூசும் சமாதானச் சாயம்
உன் வழமையான வியாபாரம் தான் !

சதிகளின் மீது நீ சுத்த சரித்திரம் எழுதுவது எமக்கு
முதற் தடவை அல்லதான் ! அதை உனது சித்தாந்த
நியாயங்களில் யதார்த்த முத்திரையிட்டு
விதியாக்கிக் கொள்ளும் முட்டாள் தனத்தில்
முஸ்லீம்கள் உள்ள வரை உன் பாடு கொண்டாட்டம் தான் !

No comments:

Post a Comment