May 24, 2013

குப்ரிய மீடியா' யுத்தம் சாதிக்க நினைப்பது என்ன ?



சில நிறுவல்களுக்காக சம்பவங்களை தோற்றுவித்தல் , அந்த சம்பவங்களின் ஊடாக வெறும் உணர்வு மயமான முரண்பாட்டு குழுக்களை உருவாக்குதல் ,அந்த உருவாக்கம் தனது பின்னணி பற்றி அலட்டிக் கொள்ளாத பலிக்கடா அரசியலை செய்ய ,இலாபமும்
கொண்டாட்டமும் என்னவோ எப்போதும் ஏகாதிபத்திய முதலைகளுக்குத்தான் . எனும் விடயத்தை மனித சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் .

'ஹிட்லரின்' வலது கை 'கோயபல்சு ' சொன்னது" இல்லாததை திரும்ப திரும்ப சொல்லும் போது அது இருப்பதாக ஆகிவிடும் " எனும் விடயத்தை 'பென்டகனும் ,CIA யும் தெளிவாகவே பின்பற்றுகின்றன ;இதில் இருந்துதான் கொடூரமான ஏகாதிபத்திய சர்வதிகாரம் தனது 'மீடியா ஆதிக்கத்தின் மூலமான தெளிவான கொலைகார அரசியலை
முழு உலகத்தின் மீதும் ,முஸ்லீம்களின் மீதும் திணிக்கின்றது .என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக் காட்டு .

வன்முறைக்கும், தற்காப்புணர்வுக்கும் இடையில் இருக்கும் சராசரி வித்தியாசத்தை கூட மனித சமூகம் புரிந்து கொள்ளவில்லை ,அது இன்று ஏகாதிபத்திய மீடியா யுத்தம் அடைந்துள்ள மிகப்பெரிய வெற்றி இந்தப் பார்வையே முஸ்லிமை பயங்கரவாதியாக ,மிருக வதைக்காரனாக ,பெண் அடக்கு முறையாளனாக , என பல்வேறு கோணங்களில் சித்தரித்துக் காட்டியது . இந்த கொடூரமான சித்திரத்தின் மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் நாளுக்கு நாள் ,நிமிடத்துக்கு நிமிடம் முஸ்லீம் அல்லாதவனிடம் தன்னை தற்காத்துக் கொள்ளும் போராட்டத்திலேயே இருக்கிறான் . குறைந்த பட்சம் ஒரு தர்ம சங்கடத்தை தானும் உணர்கிறான் .

இந்த மானசீக அழுத்தம் குப்ரை ஒரு முஸ்லிமிடம் ,படிமுறை மாற்றம் என்ற பெயரிலேயோ அல்லது வேறு வழியற்ற நிலையிலேயோ அங்கீகரிக்க சொல்கிறது . அந்நிய சமூகத்தோடு பரஸ்பர உறவு என்பதை இஸ்லாம் மறுக்கவில்லை , ஆனால் குப்ரிய சிந்தனைகளோடு பரஸ்பர உறவு ! மனோ பாவத்தை நோக்கி முஸ்லீம் தள்ளப்பட்டுள்ளான் இது தவறானது . இந்த வகையில் ஒரு தொடர் வெற்றியை குப்ரிய மேலாதிக்கம் முழு உலகிலும் எதிர்பார்க்கிறது . ஆனால் .....

"அவன் எத்தகையவன் என்றால் தன்னுடைய தூதரை நேர் வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான் ; சகல மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்வதற்காக ; இன்னும் இதற்கு சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன் " (TMQ அல் பத்ஹ் : வசனம் 28)

No comments:

Post a Comment