Mar 18, 2014

காஷ்மீர் பிரச்சனையும் இஸ்லாமிய தீர்வும்


காஷ்மீர்  பிரச்சனை  இந்தியத் துணைக்கண்டம் துண்டாக்கப்பட்டதிலிருந்து 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றிய பொழுது அது 565 சமஸ்தானங்களாக முடிமன்னர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. 1947யில் சுதந்திரம் மற்றும் பிரிவினையின்போது இந்த சமஸ்தானங்கள் இந்தியாவுடனோ அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானுடனோ சேருமாறு பணிக்கப்பட்டது. காஷ்மி மன்ரோ சுதந்திரமாக செயல்பட எண்ணினார் .

அக்காலத்திலிருந்தே காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வாக மூன்று திட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. 

ஒன்று            : காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது.
இரண்டு         : காஷ்மீரை பாகிஸ்தானுடன்  இணைப்பது.
மூன்றாவது : சுதந்திர காஷ்மீர்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதைப் பற்றி பார்ப்போமானால், பாகிஸ்தானின் பழங்குடியினப்படைகள் காஷ்மீருக்குள் படையெடுத்தபோது காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இடைக்கால (தற்காலிக) இணைப்புக்கான ஒப்பந்தத்தில் (Instrument of Accession) கையெலுதிட்டார். ஆகையால் சிலர் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படுவதே சரியென்று வாதாடுகிறார்கள். 

முதலாவதாக மகாராஜா ஹரிசிங் ஆவணத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படும் சம்பவம் அக்டோபர் 26 1947 யில் தான் நடந்ததா அல்லது அதற்கு மறுநாளா என்பதில் பலத்த கருத்துவேறுபாடு நிலவுகிறது. இந்தியாவோ மன்னர் 26ந் தேதி கையெழுத்திட்டார் என கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான் ஸ்ரீநகருக்குள் இந்திய படைகள் ஊடுருவிய  பிறகுதான் மகாராஜா கையெழுத்திட்டார் என வாதாடுகிறது. மேலும் மகாராஜா ஹரிசிங் இந்திய மாநிலங்களின் அமைச்சரவை செயலர் (Secretary of the ministry of states) வி.பி. மேனன் முன்னிலையில் மது அருந்தியிருந்த நிலையில்தான் ஆவணத்தில் கையெழுத்திட்டார் என கூறப்படுகிறது.

(Source: Quaid-e-Azam and his struggle for Pakistan. page no:135)

மகாராஜா கையொப்பத்தை பெற்றுவிட்ட பிறகு இந்தியா அதன் துருப்புகளை பள்ளத்தாக்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.ஆனால் ஆசிரியர் ஸ்டான்லி உல்பெர்ட் தனது புத்தகமான 'ஜின்னா'வில் துருப்புகள் ஸ்ரீநகருக்குள் நுழைந்த பிறகே ஆவணம் கையெழுத்திடப்பட்டது என்று கூறி இந்திய அரசின் துரோகத்தையும் பொய்மைதனத்தையும் தோலுரித்துக்காட்டியுள்ளார்.

இந்த அடிப்படையில்தான் இந்தியா காஷ்மீரை அதன்   பிரிக்கமுடியாத பகுதியாக வரலாறு முழுக்க கூறிக்கொண்டு வந்துள்ளது. இறுதியாக ஆனால் மிக முக்கியமாக ஒரு கேள்வி எழுகிறது. 60 ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அத்தனை கொடுமைகளையும் தாண்டி காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படவேண்டும் என்று எப்படி நேர்மையான ஒருவரால் சிந்திக்கமுடியும்? எத்தனை சகோதரிகள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள் ? எதனை சகோதரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? இந்திய ஆளுமையை எதிர்த்து முஸ்லிம்கள் ஒன்றுப்படும்போதெல்லாம் இந்திய அரசு அதை எவ்வளவு கொடுரமாக நசுக்கி இருக்கிறது. மேலும் 1987 இன் எழுச்சிக்குப்பிறகு இதை மிகுதியான முறையில் நம்மால் காணமுடிகிறது. ஸ்ரீநகர் போன்ற நகரங்களை போராட்டங்கள் குலுங்கடித்தபோதெல்லாம் ஊரடங்கு சட்டம்போட்டு முடக்கியதையும், காஷ்மீரை அராஜக போலீஸ் ஆட்சி மூலம் அடக்கியத்தையும் எவ்வாறு நாம் மறக்க இயலும்?

காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்படுவதை குறித்து பார்ப்போமானால், இம்முடிவைதான் பிரிவினையின் போது காஷ்மீரின் பெரும்பான் மக்கள் ஆதரித்தார்கள். ஏனெனில் அது பெரும்பான்மை முஸ்லிம்களின் தேசமாக இருப்பதாலும், பாகிஸ்தான் முஸ்லிம்களும் இதையே விரும்பியதாலும் அத்தகைய நிலைமை காணமுடிந்தது. மேலும் பாகிஸ்தானும் காஷ்மீரை தனது 'இரத்தநாளம்' என்றும், பாகிஸ்தானிலுள்ள 'K' என்ற எழுத்து காஷ்மீரையே குறிப்பதாகவும் வாதாடியது.

துரதிஷ்டவசமாக மேற்கூறப்பட்டதுபோல் மகாராஜா இடைகால ஒப்பந்தத்தில் கையெலுத்திட்டுவிட்டார். ஆனால் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தொடர்ச்சியான போர்நிறுத்தங்கள், 1965 போரில் ஏற்பட்ட தோல்வி மற்றும் படைகளை திரும்பபெறுவது தொடர்பான நாஷ்கண்ட் பிரகடணத்தில் அயூப்கான் கையெழுத்திட்டது ஆகிய நிகழ்வுகள் பாகிஸ்தான் காஷ்மீரை வென்றுவிடும் சாத்தியங்கள் மிகவும் குறைவு என்பதையே காட்டுகின்றன. பின்னால் அமைந்த அரசுகளும் காஷ்மீரை கைப்பற்றுவதில் எதையும் பெரிதாக சாதித்துவிடவில்லை. ஆயுதக்குழுக்களை ஆதரிப்பது இந்தியாவிற்கு சிறுது தொல்லைதந்தாலும் அது சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானுக்கு தீவிரவாத தேசம் என்ற அவப்பெயரை ஏற்படுத்தி தந்துவிட்டது. பாகிஸ்தான் அரசு காஷ்மீரை மீட்பதில் நேர்மையாக இருந்திருக்குமானால் அது எந்தவிதமான போர் நிருத்தங்களுக்கும், பேச்சுவார்த்தைகளுக்கும் ஒத்துக்கொண்டிருகாது. கார்கில் போரில் பின்வாங்கியது போன்ற வெட்கக்கேடுகள் நடந்திருக்காது. மேலும் ஐ நா தீர்மானத்துடன் சமரசம் செய்துகொண்டு பொது வாக்கெடுப்புக்கும் அழைப்பு விடுத்திருக்காது.

எந்தவொரு விழிப்புணர்வுள்ள  அரசியல் நோக்கரும் முன்பு எப்போதையும்விட இன்றைய சூழலில் காஷ்மீர் பாகிஸ்தான் வசம் செல்வது சாத்தியமற்றது என்பதை உணர்ந்துகொள்ளலாம். பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க முஜாஹிதீன்களின் முகாம்களை அழிப்பதற்கு இனங்கியபொழுதே அது கஷ்மிருடனான தனது கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டுவிட்டது என்பதை உணரலாம். இந்த அரசுதான் பழங்குடியின பகுதியில் தனது சொந்த மக்களையே தாக்கிக்கொண்டும், அப்பகுதியில் அமெரிக்க தானியங்கி விமானங்கள் மூலம் குண்டுமழை பெய்வதை அனுமதித்துக்கொண்டும் இருக்கிறது. இந்த பாகிஸ்தான் அரசுதான் ஆஃப்கனை ஆக்கிரமிப்பதற்கு சப்ளை ரூட்களை திறந்துவிட்டது. பாகிஸ்தான் அரசுதான் 2005 இன் நிலநடுக்கத்தாலும் 2010 இன் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டவர்களின் துயர்நீக்கப் பணிகளில்கூட வெற்றிபெறமுடியவில்லை. பின்னர் எங்ஙனம் காஷ்மீரில் பல சதாப்தங்களாக இடம்பெறக்கூடிய துயரங்களை முடிவுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியும். 

ஐ நா சபை தீர்மானத்தை பொருத்தமட்டில், இந்த தீர்மானம் காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேருவதற்கு மட்டும் வாய்ப்பு வழங்குகின்றனவேயல்லாமல் அது ஒரு சுதந்திர நாடாக தனித்து செயல்படுவதற்கு அனுமதிக்கவில்லை. ஐ நா சபை இந்த பிரச்சனையை தீர்த்துவிடும் என்று எண்ணுவதும் தவறாகும். ஐ நா சபையை பொறுத்தவரை ஒரு கேள்வி எழுகிறது. ' எந்த ஐ நா விடம் நாம் கேட்பது?' ஈராக்கில் பொருளாதாரத்தடை விதித்து இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் மரணத்திற்கு காரனமாகிவிருந்த ஐநா விடமா? அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட  ஃபாலஸ்தீனை இஸ்ரேலிடமே கொடுத்துவிடக்கூடிய 'இருதேச' தீர்வை (Two states solution ) முன்வைக்கும் ஐநா விடாம? அல்லது போஸ்னியாவிலும் தற்சமயம் சிரியாவிலும் படுகொலைகள் அரங்கேரிக்கொண்டிருந்ததை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த மேலும் பார்த்துகொண்டிருக்கும் ஐநா விடாம? முஸ்லிம்களின் விவகாரங்கள் என்று வரும்போது ஐநா சபை நம்பிக்கையைற்றது. மேலும் ஐநா சபையை அணுகுவதை இஸ்லாமும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது முஸ்லிம்களுடைய நிலங்களுக்குள் காஃபிர்களை அனுமதிப்பதாகவும் நம்முடைய இறையாண்மையை பரிகொடுக்கக்கூடியதாகவும் ஆகிவிடும்.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான் (அந் நிஸா : 141):
(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர்; அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றனர்; மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று: அவர்களுடன் சேர்ந்து) “உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?” என்று கூறுகின்றனர்; எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்; மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.

ஆகவே அவர்களை அனுகுவதென்பதன் அர்த்தம் அவர்களுடைய தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதாகும். மேலும் அதை ஏற்றுக்கொள்பவரின் மேல் அதற்குக் கட்டுப்படுவது கட்டாயமாகிவிடும். இது ஷரியத்திற்கு முற்றிலும் மாறானது, ஏனெனில் நாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (ஸல்) மட்டுமே பின்பற்றக் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான் (அல் அஹ்ஸாப் : 36):
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

அல்லாஹ் (சுபு) காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வை முன்னதாகவே அறிவித்துவிட்டான். அது யாதெனில் ஏதாவதொரு முஸ்லிம் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படும்போது அதை விடுவிப்பது கடமையாகும்.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான் (அல் பகறா : 171):
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

சுதந்திர காஷ்மீரை பொறுத்தவரை அது நடைமுறை சாத்தியமற்றது. முதலாவதாக இந்தியா காஷ்மீரை தனது பிரிக்கமுடியாத பகுதியாக கருதுகிறது. ஆதலால் அது வேறெந்த பிரிவினைவாத குழுக்களோடும் எவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதோ அவ்வாறுதான் காஷ்மீரிலும் நடந்துகொள்ளும். 1984 இல் சீக்கியர்களைப் படுகொலை செய்ததையும், ULFA, நக்சல்பாரி - மாவோயிஸ்ட் பிரிவினைவாத இயக்கங்களை நசுக்கிய முறையையும் நாம் கண்ணுற்றிருக்கிறோம். காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டால் அதைப் பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பிவிடும். ஆகையால் சுதந்திர காஷ்மீரை இந்தியா ஒருபோதும் அனுமதியாது.

இறுதியாக ஆனால் மிக முக்கியமாக இந்த சுதந்திரம் முஸ்லிம் நிலங்களை மேலும் துண்டாடுவதிலேயே முடிந்துவிடும். அதை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்காது.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான் (ஆல இம்ரான்: 103):
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

மேலும் இத்தகைய 'சுதந்திரங்கள்' பலகீனமான தேசங்களையே தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டுள்ளன. காஷ்மீர் சுதந்திரம் பெற்ற பிறகு அதன் மீது இந்தியா போர்தொடுத்தால் அது என்ன செய்யும்? அத்தகைய சமயத்தில் பாகிஸ்தானையும் நம்பமுடியாது. அது வழக்கம்போல் 'தார்மீக ரீதியான' ஆதரவோடு நிறுத்திக்கொள்ளும்.

மேற்கூறப்பட்ட 'தீர்வுகள்' யாவும் தோல்வியடைந்துவிட்டது. இவை இந்திய முஸ்லிம்கள் மீதான தன் கொடுங்கோன்மையை விரிவுபடுத்துவதற்கோ அல்லது முஸ்லிம் நிலங்கள் மீண்டும் மீண்டும் கூருபோடப்படுவதற்கோ தான் இட்டுச்செல்லும்.

இதரமுஸ்லிம் ஆட்சியாளர்களைப் பொருத்தவரை அவர்களும் பாகிஸ்தானிய ஆட்சியாளர்களை விட்டும் வேறுபட்டவர்கள் கிடையாது. காஃபிர்கள் முஸ்லிம்களை ஃபாலஸ்தீனிலும், சிரியாவிலும், காஷ்மீரிலும் காவு வாங்கிக்கொண்டு இருக்கும்போது அந்த அநீதியிழைக்கப்பட்ட  மக்களுக்காக இவர்களும் இவர்களது OIC, அரபுலீக் போன்ற கூட்டமைப்புகளும் ஒரு சிறு துரும்பையும் நகர்த்தாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 'தார்மீக ஆதரவு' என்ற வெற்றுக் கோஷத்தைத் தவிர வேறெதையும் இவர்களிடமிருந்த எதிர்பார்க்க முடியாது.

மேலும் காஷ்மீர் விவகாரம் என்பது இஸ்லாமிய விவகாரமாகவும் முழு உம்மத்தின் மீது தாக்கம் செலுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. இது வெறுமனே காஷ்மீர், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் மட்டும் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. என்னெனில் இந்த உம்மத்தின் ஒற்றுமை பிரிக்கமுடியாதது. இந்த தேசம் (உம்மத்) ஒரே தேசமாகும். மேலும் இந்த உம்மத் தன் சகோதரனின் வலியை உணரக்கூடியதாகவும் இருக்கிறது. நாம் நெடுங்காலமாகவே காஷ்மீரை காஷ்மீரிகளின் பிரச்சனையாகவும், ஃபலஸ்தீன் பிரச்சினையை ஃபலஸ்தீனியர்களுடைய  பிரச்சினையாகவும் பார்த்து பழக்கப்பட்டுவிட்டோம். இத்தகைய தேசியவாத குறுகிய பார்வையில் நம்மை நாம் கட்டுப்படுத்திக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மாறாக எந்த ஒரு முஸ்லிமுடைய பிரச்சனையும் முழு உம்மத்தை பாதிக்கக்கூடிய பிரச்சனையாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செயும்பொழுது கஃபாவைப் பார்த்து கூறினார்கள்:-

"உன்னுடைய பெருமை எவ்வளவு பெரியது, உன்னுடைய நறுமணம் எவ்வளவு சுகந்தமானது. உன்னுடைய பெருமை எவ்வளவு பெரியது மேலும் உன்னுடைய புனிதம் எவ்வளவு உயர்ந்தது. எவனுடைய கையில் முஹம்மதின் உயிர் இருக்கிறதோ அவன்மீதானையாக! ஒரு நம்பிக்கை கொண்டவரின் புனிதம் அல்லாஹ்விடத்தில் உனது புனிதத்தைவிட மேலானதாக இருக்கிறது." (இப்னுமாஜா)

இன்று உம்மத்தின் தேவை அரசியல் ஒருமைப்பாடேயல்லாமல் வெறும் தார்மீக ஆதரவு (Solidarity) அல்ல. அரசியல் ஒருமைப்பாடு (Political unity) என்பது கிலாஃபாவின் கீழ் மட்டுமே சாத்தியம் ஆகும். என்னெனில் அதுதான் ஆக்கிரமிப்பாளர்களை ஜிஹாதின் மூலாமாக அப்புறப்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை தன்னுடன் இன்னைத்துக்கொள்ளும்.  கிலாஃபா அரசு வெகுவிரைவில் அமைந்து அது காஷ்மீரை விடுவித்து அதைத் தன்னுடன் இன்னைத்துக்கொள்ளும். அந்த மகிழ்சிகரமான தருணம் வெகுவிரைவில் அமைவதற்கு நாம் அல்லாஹ் (சுபு)வை பிராத்திப்போமாக! மேலும் அல்லாஹ் (சுபு)வுடைய சட்டங்கள் நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களின் துயர்துடைக்கும் கிலாஃபாவை கட்டியமைப்பதற்காக நாம் அனைவரும் தேசிய, இன, மொழி வேறுபாடுகளைக் களைந்து ஒரே இஸ்லாமிய கொடியின்கீழ் ஒன்றிணைந்து உழைப்போமாக! நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கிறது. ஆமீன்!

No comments:

Post a Comment