Mar 6, 2014

இன்று எனது நினைவு நாள்

عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ

திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின

وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ

உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது

كُفِّنتِ في لَيلِ الزَفافِ بِثَوبِه

திருமண இரவன்று அந்த ஆடையால் உனக்கு கஃபனிடப்பட்டது

وَدُفِنتِ عِندَ تَبَلُّجِ الإِصباحِ

அதிகாலைப் பொழுதில் நீ அடக்கம் செய்யப்பட்டாய்

شُيِّعتِ مِن هَلَعٍ بِعَبرَةِ ضاحِكٍ

ஆனந்தக்கண்ணீருடன் திகிலூட்டம் புடைசூழ உன் அடக்கம் நடந்தேறியது

    في كُلِّ ناحِيَةٍ وَسَكرَةِ صاح

ஒவ்வொரு நிலப்பகுதியும் மரண வேதனையால் அலறியது

ضَجَّت عَلَيكِ مَآذِنٌ وَمَنابِرٌ

மிம்பர்களும் மினாராக்களும் உனக்காக ஓலமிட்டன

وَبَكَت عَلَيكَ مَمالِكٌ وَنَواحِ

பேரரசுகளும் மாகாணங்களும் உனக்காக அழுதன

الهِندُ والِهَةٌ وَمِصرُ حَزينَةٌ

இந்தியா துக்கத்தால் தடுமாறியது; எகிப்து கவலையுற்றது

تَبكي عَلَيكِ بِمَدمَعٍ سَحّاحِ

இவை உனக்காக கண்ணீர் பெருக்கெடுக்க அழுதன

وَالشامُ تَسأَلُ وَالعِراقُ وَفارِسٌ

ஷாம்,ஈராக் மற்றும் பாரசீகம் வினவின

أَمَحا مِنَ الأَرضِ الخِلافَةَ ماحِ

 உங்களுடைய நிலத்திலிருந்து கிலாஃபத்தை யாராவது துடைத்தெறிந்து விட்டார்களா?

وَأَتَت لَكَ الجُمَعُ الجَلائِلُ مَأتَماً

மேன்மை பொருந்திய நன்மக்கள் உன்னுடைய அடக்கத்தில் பங்கெடுத்தனர்

فَقَعَدنَ فيهِ مَقاعِدَ الأَنواحِ

அவர்கள் ஒப்பாரி வைக்குமிடத்தில் அமர்ந்தார்கள்

يا لَلرِجالِ لَحُرَّةٍ مَوؤودَةٍ

ஓ ! மனிதா ! உயிருடன் புதைக்கப்பட்ட கண்ணியமிக்கவளை கவனி !

قُتِلَت بِغَيرِ جَريرَةٍ وَجُناحِ

இவள் எந்த குற்றமோ பாவமோ செய்யாமல் கொல்லப்பட்டிருக்கிறாள்

(“امير الشعراء – கவிஞர்களின் அமீர்” என்று போற்றப்படும் எகிப்திய கவி அஹ்மது ஷவ்கி அவர்கள் முஸ்லிம் உம்மத்தின் ஒரே தலைமையான கிலாஃபா வீழ்த்தப்பட்டபோது மனம் வருந்தி பாடிய அரபுக் கவிதைகளிருந்து சில வரிகள்)

உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம்  ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் இஸ்தான்புல் நகரில் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார். முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாஸானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை கீழ்க்கண்டவாறு உமிழ்ந்தார்.

The situation now is that Turkey is dead and will never rise again because we have destroyed its moral strength, the Khilafah and Islam.”

  “துருக்கி இப்பொழுது வீழ்ந்துவிட்டது.. அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்ட சக்தியான கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் நாம் வீழ்த்திவிட்டோம்.

நபி  صلى الله عليه وسلمஅவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உஸ்மானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3 ) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை, கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது.

கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் தகர்க்கும் முதல் முயற்சியாக பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாவது  சிலுவைப்போரை போப் இரண்டாம் உர்பன் துவக்கி வைத்தார்..எனினும் இவர்களின் இருநூறு ஆண்டுகால சிலுவை ஆக்கிரமிப்பை சலாஹுதீன் அய்யூபி(ரஹ்) அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.

கவுன்ட் ஹென்றி டெகாஸ்ட்ரி என்ற பிரஞ்சு எழுத்தாளர் 1896 ஆம் ஆண்டு எழுதிய “இஸ்லாம்” என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:-

“I cannot imagine what the Muslims would say if they heard the tales of the mediaeval ages and understood what the Christian orators used to say in their hymns; all our hymns even those which emerged before the 12th century emanated from one concept which was the cause of the crusades, these hymns were filled with hatred towards the Muslims due to the total ignorance of their religion. As a result of those hymns and songs, hatred against that religion became fixed in people’s minds, and the erroneous ideas deeply rooted, some of which are still carried nowadays. Everyone used to regard the Muslims as polytheists, disbelievers, idol worshippers and apostates.”

“மத்தியகால கற்பனை கதைகளைப்பற்றி கேள்விப்பட்டாலோ,அதைப்பற்றி கிறிஸ்தவ கதாசிரியர்களின் கடவுள் துதிபாடுதலில் கூறப்பட்டவற்றை கேள்விப் பட்டாலோ முஸ்லிம்கள் என்ன கூறுவார்கள் என்று  என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. நமது அனைத்து துதிபாடுகளும் 12-ம் நூற்றாண்டிற்கு முன்னர் கிளம்பிய ஒரு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டவைகள். அதுவே சிலுவைப் போர் ஏற்பட காரணமாக அமைந்தது. இப்புகழ் பாட்டுக்கள் அனைத்தும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உள்ளடக்கியதாக இருந்தது. இது முஸ்லிம்களின் மதத்தை பற்றிய அவர்களின் அறியாமையால் ஏற்பட்டது. இவ்வகையான துதிபாட்டுகள், இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான வெறுப்பை கிறிஸ்தவ மக்களின் மனதில் நிரந்தரமாக்கியது.இதன் மூலம் ஆழ்ந்து வேரூன்றிய சில தவறான எண்ணங்கள் இன்றளவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரும் முஸ்லிம்களை பல் தெய்வ கொள்கை உடையவர்கள் எனவும் இறைமறுப்பாளர்கள் எனவும் சிலை வழிபாட்டாளர்கள் எனவும் கிரிஸ்தவ சமயத்திலிருந்து வெளியானவர்கள் எனவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்”.

முஸ்லிம்களுடன் நீண்டகாலம் போராடி தோல்வி கண்ட சிலுவை ஆக்கிரமிப்பாளர்கள், ஆயதப்போராட்டத்தால் முஸ்லிம்ளை ஒருபோதும்  வீழ்த்தமுடியாது என்பதை விளங்கிக் கொண்டார்கள். எனவே முஸ்லிம்களை சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என்பதை  உணர்ந்து அதற்கான சதித் திட்டங்களைத் தீட்டினார்கள். எனவே இதற்காக 16 ஆம் நூற்றாண்டின் முடிவில்  மால்டாவில் ஒரு மையத்தை கிறிஸ்தவ மிஸனரியினர் நிறுவினார்கள்.மால்டாவை தலைமையிடமாக்க் கொண்டு முஸ்லிம்களின் உள்ளத்தில் மேற்கத்திய நச்சு சிந்தனைகளை பிரிட்டிஷ்-பிரஞ்சு-அமெரிக்க மிஸனரியினர் விதைக்கலாயினர்.இந்த காலகட்டத்தில்தான் முஸ்லிம்களிடையே மேற்கத்திய சிந்தனைகள் ஊடுருவத் துவங்கியது.

இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தைத் தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள். இதற்காக பெய்ரூட் மையம் துவக்கப்பட்டது.கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஸனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதின் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர்.அவர்கள் சமூகத்தில் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளைக் கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றிபெற முடியும் என்பதால், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும், துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.இதற்காக துருக்கிய இளைஞர் சங்கம் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.கிலாஃபத்தை அழித்த முஸ்தஃபா கமால் பாஷா இதில் உறுப்பினராக இருந்தான்.

எனவேதான் முஸ்தபா கமால் இவ்வாறு கூறினான்:-

“Was it not because of the Khilafah, Islam and the clergy that the Turkish peasants fought and died for five centuries? It is high time Turkey looked after her own interests and ignored the Indians and the Arabs. Turkey should rid itself of leading the Muslims.”

“துருக்கி குடியானவர்கள் கடந்த ஐந்து நூற்றாண்டு காலமாக கிலாஃபா, இஸ்லாம் மற்றும் திருச்சபைக்காக சண்டையிட்டு உயிர் நீத்துள்ளார்கள். இனி துருக்கி தன்னுடைய நலன்களை மட்டுமே கவனித்துக் கொண்டு இந்தியர்கள் மற்றும் அரபியர்களை புறக்கணிக்க வேண்டும். மேலும் முஸ்லிம்ளை தலைமை தாங்குவதிலிருந்து துருக்கி தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும்

ஒரே அமீரின் கீழிருந்த கிலாஃபத்தின் நிலப்பரப்பை பல நாடுகளாக கூறுபோட்டு தங்களின் ஏஜண்டுகளை ஆட்சியில் அமர்த்துவதற்காக 1916 ஆம் ஆண்டு பிரிட்டனும் ஃபிரான்ஸும் ஒன்றிணைந்து Sykes-Picot  agreement என்று அறியப்படும் ரகசிய ஒப்பந்த்ததை ஏற்படுத்தினர்.    ஃபிரான்ஸ் தூதர்    Georges-Picot  மற்றும் பிரிட்டிஷ் அரசியல் ஆலோசகர் Mark Sykes மத்தியில் இந்த சதித்திட்டத்திற்கான பெசுவார்தை ப்ப்ப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்கிழக்கு துருக்கிய பகுதி, ஈராக்கின் வட பகுதி,சிரியா,லெபனான் போன்ற நிலப்பரப்புகளை ஃபிரான்ஸ் எடுத்துக் கொள்வது எனவும்,ஜோர்டான்,ஈராக்,ஹைஃபா போன்ற பகுதிகளை பிரிட்டன் எடுத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.இன்றைய மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைக்கோடுகள் Sykes-Picot  ஒப்பந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன.

கிலாஃபத்தை வீழ்த்துவதற்கு பிரிட்டன், ஃபிரான்ஸ்,ரஷ்யா போன்ற நாடுகள் திட்டம் தீட்டினர்.இதில் முஸ்தஃபா கமாலை முன்னிறுத்தி பிரிட்டன் சதிவலையை பின்னியிருந்தது.இதன் விளைவாகவே முஸ்தஃபா கமால் பாஷா உஸ்மானிய கிலாஃபத்தின் அதிகாரத்தில் நுழைய முடிந்தது.துருக்கியின் விடுதலைக் குறித்து விவாதிக்க 1922 ஆம் ஆண்டு லாஸான் மாநாட்டை பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் கர்ஸன் பிரபு கூட்டினார்.கிலாஃபத்திலிருந்து துருக்கியை விடுவிக்க  கீழ்க்கண்ட நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.

1.கிலாஃபத்தின் ஒட்டுமொத்த மறைவு

2. கிலாஃபத்தின் எல்லையிலிருந்து  கலீஃபாவை வெளியே துரத்துதல்

3.கிலாஃபத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்

4. துருக்கியை மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்தல்

இந்த நான்கு நிபந்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் மாநாடு  வெற்றியாக கருதப்பட்டது.எனினும் துருக்கியில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் கிலாஃபத்தை தங்களின் இதயத்தில் வைத்து போற்றியதால் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த முஸ்லிகளின் தலைமையை ஒரேயடியாக வீழ்த்த முடியவில்லை.இதனால் லாஸான் மாநாட்டு தீர்மானங்கள் தோல்வியை தழுவியது.ஆயினும் பிரிட்டன் தன்னுடைய தந்திர முயற்சியை விட்டுவிடவில்லை. எனவே தங்களின் கங்காணி முஸ்தஃபா கமாலை முழு பலத்தையும் பிரயோகித்து கிலாஃபத்தை வீழ்த்துமாறு கூறினர்.இறுதியாக கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் முழு பலத்தை வைத்து அச்சுறுத்தி கிலாஃபத்தை அகற்றுவதற்கான மசோதாவைக் கொண்டுவந்து கிலாஃபத்தை அழித்தான்.

முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற பிரிட்டனின் கங்காணி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட்தும் முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாமிய பூமி பல தேசங்களாக பிளவுபடுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்ஃபார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர். மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர். அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கிவருகின்றனர்

கிலாஃபத்தை அழித்தபின்னர் காலனியாதிக்க காஃபிர்கள் ஓய்ந்துவிடவில்ல. அந்த கிலாஃபா மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான் கர்ஸன் பிரபு இவ்வாறு கூறினார்:-

“We must put an end to anything which brings about any Islamic unity between the sons of the Muslims. As we have already succeeded in finishing off the Caliphate, so we must ensure that there will never arise again unity for the Muslims, whether it be intellectual or cultural unity”

முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவேதான் கிலாஃபத்தின் மீள்வருகை குறித்து அச்சமும் கவலையும் கொண்டிருந்த அமெரிக்க அதிபராயிருந்த  புஷ் இவ்வாறு கூறினார்:-

“…establish a violent political utopia across the Middle East, which they call Khilafah, where all would be ruled according to their hateful ideology… This Khilafah would be a totalitarian Islamic empire encompassing all current and former Muslim lands, stretching from Europe to North Africa, the Middle East and Southeast Asia”.                                                                                                                                                                                                                                           …………Washington Post

 மத்திய கிழக்கில் கிலாஃபத்திற்காக அழைப்பு விடுப்பவர்கள் வெறுப்புமிக்க சித்தாந்தத்தின்(இஸ்லாம்) அடிப்படையில் ஆட்சி செய்ய முயல்வதாகவும்அந்த கிலாஃபா என்பது தற்போதைய மற்றும் முந்தைய இஸ்லாமிய நிலங்களை உள்ளடக்கிய பரந்து விரிந்த ஐரோப்பாவிலிருந்து வடஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலான  பகுதிகளை உள்ளடக்கிய முழுமையான இஸ்லாமிய அரசாகும்”.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் சமீபத்தில் இரண்டாவது ஜெனீவா மாநாடு  முடிவுற்றதும்  NTV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“It is important that the political process is accompanied by combining the healthy forces, who are thinking about their homeland, and not about the establishment of the Khilafah in the Middle East and North Africa. To unite them and help them in many different ways to combat a terrorist threat. This is a goal for the whole region and for the world”.

சிரியாவின் அரசியல் நிகழ்வானது தன் தாய்நாட்டின் சிந்தனை கொண்ட ஆரோக்கியமான சக்திகளுக்கிடையே ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டுமே தவிர, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் கிலாஃபத்தினை மீண்டும் நிறுவுவதற்காக  அமையக்கூடாது. தாய்நாட்டின் சிந்தனை கொண்ட சக்திகளை ஒருங்கிணைத்து பல வழிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். இதுவே அனைத்து பிராந்தியத்திற்கும்  அனைத்து உலகிற்குமான குறிக்கோளாகும்.

மேற்குலகினர் மீண்டும் கிலாஃபா ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான தடைக்கற்களை ஏற்படுத்தியுள்ளனர்.

*தேசியவாதம்,தேசப்பற்று,சோஷலிஸம்,மதச்சார்பின்மை போன்ற சிந்தனைகளை முஸ்லிம்களின் உள்ளத்தில் திணித்துவிட்டனர்.இதற்கான  அரசியல் குழுக்களையும் தன்னார்வ நிறுவனங்களையும் முஸ்லிம் உலகில்  ஏற்படுத்தியுள்ளனர்.

*இஸ்லாத்திற்கு முரணான பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை இதற்காகவே வடிவமைத்தனர்.இது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

*முஸ்லிம் உலகின் பொருளாதாரத்தை மேற்கத்திய காலனியாதிக்க அரசுகளும், அந்நாட்டின் தனியார் நிறுவனங்களும் தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.இதனால் முஸ்லிம் உம்மா தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

*முஸ்லிம் நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனைகளை ஊக்குவித்து அதில் மேற்குலகம் குளிர் காய்ந்து வருகிறது.

அரபு லீக்,இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC – Organisation of Islamic countries) போன்ற அமைப்புகளை மேற்குலகினர் தோற்றுவித்து முஸ்லிம்களின்  பிரச்சனைகளை இதன் மூலமாகவே தீர்த்துவைக்க முடியும் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

*முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்கத்தியர்களின் ஏஜண்டுகளாக இருப்பதால் இஸ்லாத்தை முற்றாக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ ஆட்சியமைப்பை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். மேலும் இஸ்லாத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநாட்ட பாடுபட்டுவரும் முஸ்லிம்களை தங்களின் மேற்கத்திய எஜமானர்களின் முழு ஆசீர்வாதத்துடன் ஒடுக்கி வருகின்றனர்.

எனினும் இவர்களின் சதிவலைகளையெல்லாம் அறுத்தெறிந்து  உலகளாவிய முஸ்லிம்கள் முன்னேறி வருகின்றனர்.எனவே இந்த மாபெரும் பணியில் பங்கெடுக்காத சகோதர சகோதரிகள் இனியும் காலந்தாழ்த்தாமல்  கிலாஃபத்தின் மீள்வருகைக்காக பாடுபடுபவர்களுடன் இணைந்து தோள் கொடுப்போமாக.

No comments:

Post a Comment