Aug 27, 2015

லிபியாவைச் சேர்ந்த 51 அகதிகள் பலி!!!

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்"  

நடுக்கடலில் மூச்சுத் திணறல்: 




லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற கப்பலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 51 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
லிபியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டுப்போர் காரணமாக அந்த நாட்டைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் குடிபெயர்ந்து வருகிறார்கள்.
கடல்மார்க்கமாக செல்லும் அவர்கள், பழுதடைந்த படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்செல்வதால் அடிக்கடி நடுக்கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி, உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை லிபியா மற்றும் இத்தாலி கடற்பகுதியில் 2,400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இத்தாலி கடற்படையினர் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற கப்பலில் இருந்து 51 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான பயணத்தின்போது இவர்கள் மூச்சுத் திணறல் காரணமாகப் பலியாகியுள்ளனர். கப்பலின் மையப்பகுதியில் இருந்த அறையில் சிக்கித் தவித்தவர்களை மரக்கட்டைகளை உடைத்து மீட்க முயற்சி செய்யப்பட்டது. அறைக்குள் 51 பேர் சடலமாக காணப்பட்டுள்ளனர். அவர்களது சடலும் மீட்கப்பட்டது. கப்பலில் அறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள், மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர் என்று தெரியவந்துள்ளது. 


- தினமணி.

No comments:

Post a Comment