Sep 10, 2015

அய்லான் குர்ஷிக்கான பதிவு...

 
நீண்ட பதிவு தான்...

அய்லான் குர்ஷிக்கான பதிவு...

ஸன்ஆ முதல் ஹழரல் மவ்த் வரை பாதுகாப்பு வழங்கியவர்களின் வாரிசுகள்.... பாதுகாப்பு என்றால் என்ன? அதை நாங்கள் உயிருடன் உள்ள போதே அனுபவிக்க முடியுமா? என கேட்கிறது.

உலகுக்கே 1300 வருடம் பாதுகாப்பு வழங்கிய உம்மத்தின் வாரிசுகள்...

தன் எல்லைப்பகுதியில் ஒரு ஆடு அநியாயமாக உயிரிழந்தால் அதற்கும்
நான் இறைவனிடம் பதில் சொல்லணும் என்று மிருகங்களிடம் கூடஇரக்கம் காட்டிய தலைவர்களின் வாரிசுகள்.
 
இன்று எங்கள் மீது இரக்கம் காட்ட யாராவது இருக்காங்களா எனறு கேட்கிறது..
 
பிறக்காமலேயே இறப்பது தானே நியாயம், நீதான் பிறந்து இரண்டு வருடம்ஆயிற்றே..இதுவே அதிகம் இனி நீ உயிருடன் இருப்பது தான் அநியாயம் என்று கூறி அய்லானை கொன்று தங்கள் இரக்கத்தை காட்டி உள்ளார்கள் இன்றைய கொடுமைக்கார ஆட்சியாளர்கள் எங்கள் பிணங்களை புதைக்கவாவது இடம் தாருங்கள் என்று கேட்டு இன்றைய கொடுமைக்கார ஆட்சிக்காரர்களை கஷ்டப்படுத்தாமல் செத்தே பிணமாய் கரை ஒதுங்கி செத்து மடிகிறது உலகை 1300 வருடம் உலகை ஆண்டு உயிர்களின் மீது இரக்கம் காட்டியவர்களின் வாரிசுகள்....
 
#அன்று...
மிகப்பெரும் தேசத்துக்கு ஆட்சியாளனாக இருந்து.. தன் ஆட்சியில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று அறிய... நகர்வலம் வருகிறார் அவர். பசியால் அழும் குழந்தையை உணவு தயாரிப்பது போல் ஏமாற்றி தூங்க வைக்க முயல்கிறார் தாய்...அருகில் சென்ற அவர் ஏன் குழந்தை அழுகிறது என்கிறார்..
 
நிலைமையை சொல்கிறார் அந்த பெண்...உடனடியாக அரசு கஜானாவுக்கு சென்று அப்பெண்மணிக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு தள்ளாத வயதில் தன் தோள் மீது சுமக்க முற்பட்ட போது...அருகில் இருந்த காவலாளி.. அமீருல் மூஃமினே ..நான் இருக்கும்போது நீங்கள் சுமப்பதா கொடுங்கள் என கேட்க...இன்று இந்த சுமையை நீ சுமந்துவிடுவாய்
நாளை மறுமையில் இறைவன் இந்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைக்காக எனக்கு தரும் பாவச்சுமையை உன்னால் சுமக்க முடியுமா என்று கூறிவிட்டு தானே தூக்கிக் கொண்டு போய்.. அங்கிருந்து சமைக்க உதவி செய்து குழந்தைகள் பசியாறி திருப்தியடைந்த பின்னரே உலகின் மூன்றில் ஒரு பகுதியை ஆட்சி செய்து ஜகாத் பணத்தை கூட வாங்க ஆள் இல்லாத நிலையை உருவாக்கிய அந்த மாபெரும் ஆட்சியாளர் கலீபா உமர் ரழி அங்கிருந்து சென்றார்.......
 
#ஆனால்_அவரின்_வாரிசுகள்_இன்று ஒரு வேளை உணவுக்காக ஹிஜ்ரத் செய்கிறார்கள்.உணவில்லாமல் பிணந்தின்னும் கழுகுக்கு உணவாகிறார்கள்...
 
சில காலங்களுக்கு முன்பு சோமாலியாவில்....ஒரு தாய் இளைய மகனை தான் தூக்கிக்கொண்டும் அவளின் மூத்த மகன் இன்னொரு இளைய மகனை தூக்கிக் கொண்டும் உணவுக்காக இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள்....
 
குறிப்பிட்ட தூரம் சென்ற பின்பு மூத்த மகனால் குழந்தையை தூக்க முடியாமல் போகவே...தாய் இரண்டு குழந்தையையும் தூக்க முயற்சிக்கிறார்...முடியவில்லை.....மிகச்சிரத்தை எடுத்தும் முடியாமல் போகவே அந்த குழந்தையை அங்கேயே இறக்கிவிட்டு  அந்த தாய் குழந்தையை நோக்கி சொல்கிறார்...மகனே... உன்னை நான் மறுமையில் படைத்தவன் முன்னிலையில் சந்திக்கிறேன் என்று நற்செய்தி கூறிவிட்டு கண்ணீர் மல்க அங்கிருந்துசெல்ல ஆரம்பிக்கிறார் அந்த தியாகத் தாய்....நாம் பசியோடு இருப்பது போலத்தானே மற்ற உயிரினங்களும் இருக்கும் என்று பிற உயிரினங்களின் பசியுணர்ந்து கழுகுகளுக்கு இரையாக்கிவிட நினைத்துவிட்டாலோ என்னவோ....தன் குழந்தையின் உயிரை கொடுத்து கழுகுகளின் பசியை போக்கி அந்த மாபெரும் ஆட்சியாளன் உமர் ரழியின் பசி போக்கிய நிகழ்வையே பின்னுக்கு தள்ளிவிட்டார்கள் அவரின் வாரிசுகள்...
 
காக்கா குருவிகள் கூட தன் குஞ்சுகள் மீது இரக்கம் காட்டி உணவளித்து உயிராய் வளர்த்து பாதுகாக்கும் போது....பத்து மாதம் வயிறறில் சுமந்து ...
சில காலம் பாசமாய் வளர்த்து...அந்த குழந்தையை அநாதையாய் விட்டுவிட்டு  குழந்தையை பார்த்துக் கொண்டே பிரிந்த அந்த தாயின் வலிமிகுந்த அந்த நொடிகள் அந்த விநாடிகள் எவ்வளவு வேதனைமிக்கதாக கொடியதாக இருந்திருக்கும்..
 
தன் தாய்,சகோதரன் இருவரும் தன்னை இப்படி விட்டு செல்கிறார்களே ...
என்னை யார் காப்பாற்றுவார்கள், யார் உணவளிப்பார்கள் என்று சிறிது நேரத்தில் நாம் ஒரு கழுகுக்கு உணவாக போகிறோம்  என அறியாமல் வெற்றுப் பார்வையை தன்னை பெற்றெடுத்த தாயை நோக்கி பார்த்த வேதனைமிக்க அந்த நொடிகள் எப்படி இருந்திருக்கும் அந்த குழந்தைக்கு....
இந்த காட்சியை,வலியை கற்பனையில் யோசித்து பாருங்கள்...
 
ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் பலஸ்தீனத்தை கைப்பற்றிய பின்னர் யூதர்கள் அகதிகளாய் பிடிக்கப்பட்டார்கள்.அதில் ஒரு தாய் தன் குழந்தையை காணாமல் பரிதவிப்புடன் அங்குமிங்கும்தேடிக்கொண்டிருக்கிறார்.. அதைக்கண்ட அய்யூபி கட்டளை இடுகிறார் தன்படை வீரர்களுக்கு அந்த குழந்தையை தாயுடன் சேர்க்குமாறு...
அப்பேர்பட்ட சமூகத்தின் வாரிசுகள் அகதிகளாய்
உதவ ஒருவருமின்றி கடலில் பிணங்களாய்....
உயிருடன் வந்த அகதிகளை கண்ட உலகம்
முதல் முறையாக பிணமாய் வந்த அகதிகளை பார்க்கிறது..
 
மீன்களுக்கு இரையாகாமல்
நீ கரை ஒதுங்கியது எதற்காக...அய்லானே
உலகில் மனிதம் கொஞ்சமாவது இருக்கிறதா என்று அறியவதற்காகவா
அல்லது மக்களின் கொடுமையை பிறருக்கு உணர்த்துவதற்காகவா....
 
ஆயிரக்கண்ககான என் சகோதர குழந்தைகளை விமான நிலையத்தில் உணவு,உடை பொம்மைகளுடன் இன்முகத்துடன்
வரவேற்றவர்கள் ரூபத்தில் மனிதம் மிச்சமுள்ளது மகனே....
(அமைய இருக்கும் கிலாபா அரசு என் மக்களுக்கு உதவிய
அந்த மக்களை நன்றியுடன் நினைவுகூறும் இன்ஷா அல்லாஹ்)
 
அகதிகளை உள்ளே விடக்கூடாது என்று மின்வேலியிட்ட ஆட்சியாளர்களின் முடிவை மாற்றியமைக்க உன் உயிரை விலையாய் கொடுத்து
உணரவும் வைத்து விட்டாய் மகனே....
 
எந்த குற்றத்திற்காக நீங்கள் கொலை செய்யப்பட்டீர்கள் என்று வினவப்படும்(போது)
அல்குர்ஆன்-81:9
உலகமே கண்ணீர் வடித்த போதும்
பிரான்ஸில் உல்லாசம் அனுபவிக்கும் அநியாயக்கார #ஸல்மான் உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.
 
அய்லானே..
நீ கிடந்த கோலத்தால்...
நரம்புகள் வரம்பு மீறி துடித்தும்
சிந்தனையில் எரிமலை ஒன்று வெடித்தும்
கொடுமைகளால் உம்மத் பாடம் படிக்கும் போது
இறை ஆட்சியால் கொடுமைக்காரர்கள் ஒழிக்கப்படும் போது
உலக முஸ்லிம்களின் அங்கமான ஷாம் தேசத்து முஸ்லிம்களே...
வலிகளை தாங்கி வாழ்ந்தீர்கள் இவ்வுலகில்...........................அகதிகளாய்
விரைவில் கொடுமைகளை தாண்டி ஆள்வீர்கள் உலகை.....ஆட்சியாளர்களாய்.
இன்ஷா அல்லாஹ்..
 
#தீர்வு
ஒரு இடத்தில் நிலவும் அசாதரணமான சூழல்
நம்மீது #தனிநபர் ஜிஹாதை கடமையாக்கும்...
ஆனால் அது தற்காப்பும், தற்காலிகமானதும் தானே தவிர
நிரந்தரப் பாதுகாப்புக்கான தீர்வு அது அல்ல...
நபிஸல் அரசு அல்லாத 13வருட மக்கா வாழ்க்கையில்
சுமையா ரழி ,யாசிர் ரழி அவர்களின் மரணத்திற்கு ஆயுதவழி தீர்வை எடுக்காமல் பொறுமையுடன் சிந்தனை ரீதியான
அரசியல் போராட்டத்தை நோக்கி,
ஆட்சியை நோக்கி இலக்கு மாறாமல் முஸ்லிம்களை
சரியான கோணத்தில் அழைத்துச் சென்றது இதற்கு நல்ல உதாரணம்...
 
ஆனால்..
மதீனாவில் ஆட்சியை நிறுவியதும்..
ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நபி ஸல் எடுத்த நடவடிக்கை வரலாறு அறிந்த ஒன்று... அது தான் நிரந்தர தீர்வும் கூட...
ஒரு அரசாக இருந்து தலைமையேற்று செய்யும் ஜிஹாத் மட்டுமே தீர்வு தரும் ,நிரந்தர பாதுகாப்பு தரும் எனபதே நபிவழி..
 
தனிநபர் ஜிஹாத் - தற்காலிகமானது - தீர்வல்ல
அரசு ஜிஹாத் - நிரந்தரமானது - தீர்வு
 
இன்றைய அனைத்து பிரச்சினைகளுக்கும்
குர்ஆன் சுன்னாவில் இருந்து பதிலளிக்கும் இந்த சமூகம்...
முஸ்லிம்களுக்கான பாதுகாப்புக்கு மட்டும் தன் அறிவை
கொண்டு பதில் சொல்வதை என்னவென்று சொல்வது....
 
நெஞ்சை உருக வைக்கிறது முஸ்லிம்களின் அலங்கோலக் காட்சி..
உடனடி தேவை உம்மத்தின் மீட்சி...
இந்நிலையை கண்டிப்பாக மாற்றும் இறைனின் ஆட்சி..
அதற்கு தூதரின் இந்த வரிகளே சாட்சி...
 
இமாம்(கலீபா) ஒரு கேடயமாவார்..
மக்கள் அவர் பின்னே நின்றே பாதுகாப்பு தேடுவார்கள்- நஸயீ திர்மிதி
நபி வழியை மீறி, நபி வழிக்கு மாற்றமாக இன்றைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று
இட ஒதுக்கீடையும் , தனிநபர் ஜிஹாதையும் நோக்கி விடுக்கும் சில அமைப்புகளின் அழைப்பானது ஒரு செய்தியை சொல்லாமல் சொல்கிறது,
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களை மிஞ்சி நாங்கள் சிந்திப்போம் என்று
ஒரு போதும் அதில் வெற்றி கிடைக்காது....
 
நபி ஸல் இந்த உம்மத்தை கொடுக்கும் நிலையில்
அமானிதமாக விட்டுச் சென்றார்கள்...
இன்றைய பாலாய் போன அறிவுகெட்ட அறிஞர்கள்
அந்த அமானிதத்தை பாழடித்து வாங்கும் நிலைக்கு மாற்றியது உட்பட
இன்றைய அனைத்து பிரச்சினைகளையும் பட்டியலிடுங்கள்...
அது அனைத்தையும் தனிநபரால் தீர்க்க முடியுமா
அல்லது ஒரு அரசால் தீர்க்க முடியுமா என பாருங்கள்..
அரசு என்று வந்தால்
அது மனித சட்டங்களை கொண்டு இயங்கும் அரசு தீர்க்குமா...
அல்லது இறைச்சட்டங்களால் இயங்கும் அரசு தீர்க்குமா என முடிவெடுங்கள்..
(தமிழகமே போராடிய போதும் , முதல்வரின் ஒற்றை கையெழுத்து தான் தீர்வை தர முடியும்... நீ தீர்வை கேட்கும் இடத்தில் இருக்கப் போகிறாயா,
கொடுக்கும் இடத்தில் இருக்கப் போகிறாயா...சிந்தி)
 
#கிலாபா..
30 நாள் வேலை செய் 31வது நாள்
சம்பளம் தருகிறேன் என்றால் முதலாளியின் வார்த்தையை #நம்புவோம்...
உன் சமூகத்து ஓட்டை வாங்கித்தா,
தேர்தலுக்குப் பின் இடஒதுக்கீடு தர்ரேன் என்றால்
இன்றைய நயவஞ்சக ஆட்சியாளர்களை #நம்புவோம்....
ஆனால் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வின் திருத்தூதர் நபிஸல்
அவர்கள் கிலாபா வரும் என்று சொன்னால் நம்ப மாட்டோம்...
 
ஸும்ம தகூனு கிலாபாஅலா மின்ஹாஜ் நுபுவ்வா-அஹமத்
நபிவழியில் மீண்டும் கிலாபா வரும்...
 
ஓ ... நீ....அது தானாக வரும் என்று கூறும் அறிவாளியா..
மரணமும் இறைவனின் புறத்திலிருந்து வருவது தான்
உனக்கான உணவும் இறைவனின் புறத்திலிருந்து வருவது தான்
இண்டுக்கும் முயற்சிப்பாயா?
அல்லது இரண்டுக்கும் முயற்சிக்க மாட்டாயா?
அல்லது ஒன்றில் அதை அடைய முயற்சி செய்யாமலும் ,
இன்னொன்றில் அதை அடைய முயற்சி செய்து பெறுவாயா?
 
உன் அறிவை ஒதுக்கிவிட்டு...
அழகிய முன்மாதிரியின் மக்கா வாழ்வையும்,
மேலே சொன்ன வார்த்தையையும்பார்..
மரணத்தை அடைய எந்த முயற்சியையும் நபிஸல் காட்டித்தரவில்லை..
ஆனால் ஆட்சியை அடைய முயற்சித்து ஒரு வழியை காட்டித் தந்து...
அந்த வழியில் தான் மீண்டும் ஆட்சி வரும் என்ற செய்தியை சொன்னது முயற்சிக்கவா அல்லது எதற்காக என்று சிந்தி என் சகோதரனே....
 
இன்னொரு கழுகு உன் சகோதரனை தின்னக் கூடாது என்றால் சிந்தி..
இன்னொரு அய்லான் உடல் ஒதுங்க கூடாது என்றால் சிந்தி...
முதல் அகபா, இரண்டாம் அகபா எதற்காக என்று சிந்தி...
நீங்கள் அரபுகளையும், அரபு அல்லாதவர்களையும்
ஆட்சி செய்யலாம் என்று நபிஸல் சொன்னதை சிந்தி...
கிலாபாவுக்காக முயற்சி செய்....காப்பாற்று இந்த உம்மத்தை
இறைத்தூதரின் வாக்கை கொண்டு...
 
#ஹிஸ்புத்தஹ்ரீர்
அமைதிவழியில் , நபி ஸல் வழியில் ஆட்சியை அடைவதற்கான முயற்சியில்
ஈடுபட்டு பலர் தஙகள் இன்னுயிரை நீத்தது எதற்காக என்று சிந்தி சகோதரனே...
உலகிலேயே நபி ஸல் வழியில் ஆட்சியை அடைவதற்கான் வழிமுறையை கொண்ட ஒரே இயக்கமும், நபிவழி ஆட்சிமுறையை தெளிவாக்கி கொண்ட இயக்கமும் ஹிஸ்புத்தஹ்ரீர் மட்டுமே.....
 
நபி ஸல் தொழுதுள்ளார்கள் எனவே நாம் நபிவழியில் தான் தொழணும் என்று நபிவழி தொழுகையை காட்டித்தந்தவர்கள்,
நபி ஸல் நோன்பு வைத்துள்ளார்கள் எனவே நாம் நபிவழியில் தான் தொழணும் என்று கூறிய நபிவழி நோன்பை காட்டித்தந்தவர்கள்...
ஏன் நபிவழி ஆட்சி இப்படி தான் என்று காட்டித்தரவில்லை?
அதில் மட்டும் சுதி குறைவது ஏன்?
ஒரு மாபெரும் நபிவழியை புறக்கணிப்பதாக உன் அறிவு சொல்லவில்லையா....சிந்தி....
 
ஹிஸ்புத்தஹ்ரீர் எழுப்பிய இந்த இயக்கம்
சுன்னாவுக்கு மாற்றமான கல்லறை இயக்கம் #அல்ல....
நபிவழியில் தாவா சிறப்பாய் போனால்
இறை உதவியுடன் கிலாபா வரும் #மெல்ல....
வல்லரசாய் இருந்து படைதிரட்டி
போவோம் எதிரிகளை #வெல்ல....
கிலாபா படையின் முன்னே
US இஸ்ரேல் படை #பெரிதல்ல
 
மின்னல் போன்று சிந்தனை வாள் ஒன்றை எடுத்து
இன்னல் தீர #அரசியல் போராட்டம் நடத்து....
 
இரத்தக்கறை படிந்த ஷாம் மக்களின் லட்சியம்(கிலாபா)
இறை ஆட்சியை கொண்டு நிறைவேறுவது நிச்சயம்...
 
சத்தியம் வந்தது
அசத்தியம் அழிந்தது
நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியதே...
ஒரு அரசாங்கமாக இராணுவ பலத்துடன்
எதிரிகள் அச்சத்துடன் இருக்கும் நிலையில்
மக்காவில் இஸ்லாமிய படை நுழைந்த போது இறங்கி வசனம் இது...
(இன்று பள்ளிவாசலை பிடிசிசதுக்கெல்லாம் இத போடறாங்க)
சத்தியம் வரும்..
அசத்தியம் அழியும்...
நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியதே...
ஷாம் தேசமும் விரைவில் அது போல் ஒரு சம்பவத்தை எதிர் நோக்கியுள்ளது..
 
முஸ்லிம்களுக்கெதிராக முதலாளித்துவம் நடத்தும்
மூன்றாம் உலகப்போரை இறை ஆட்சி முடிவுக்கு கொண்டு வரும் ...
இன்ஷா அலலாஹ்...
 
அன்புடன்
அபூகிலாபா ராஷிதா
மேலப்பாளையத்திலிருந்து...



No comments:

Post a Comment