Sep 17, 2015

ஹங்கேரியில் காவல்துறையினர் - குடியேறிகள் மோதல்

செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய முயற்சி செய்து வரும் குடியேறிகளுக்கும் ஹங்கேரி காவல்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.



ஹங்கேரிக்குள் நுழைய முயலும் குடியேறிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன.

குடியேறிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசுவதோடு, தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைக்க முற்பட்டுவருகின்றனர்.

காவலர்கள் மீது கற்களை வீசியெறியும் குடியேறிகள், பாதையைத் திறந்துவிடும்படி கோஷமிட்டுவருகின்றனர்.

எல்லையில் மூன்று கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதோடு, கலவர தடுப்பு காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.




செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய முயலும் குடியேறிகளைத் தடுத்து நிறுத்தும் ஹங்கேரிய காவல்துறையினர்.

ஹங்கேரி எல்லையில் போடப்பட்டிருக்கும் முட்கம்பி தடுப்புகளைத் தாண்டி ஒரு குடியேறிகளின் குழு அந்நாட்டிற்குள் புகுந்துவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹங்கேரியில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய விதிகளின்படி செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய விரும்பும் குடியேறிகள், தடுப்புகள் போடப்பட்ட பாதைகள் வழியாகத்தான் நுழைய வேண்டும்.

இந்தப் பாதை வழியாக வருபவர்கள் மீது சில மணி நேரங்களில் விசாரித்து முடிவெடுக்கப்படும் என ஹங்கேரி அரசு தெரிவித்துள்ளது.



BBC News

No comments:

Post a Comment