Jun 24, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-05

துருக்கி தேசியவாதமும் அரபு தேசியவாதத்துக்கும் இடையிலான மோதல்
பலஸ்தீன் பகுதியை கைப்பற்ற துருக்கி இஸ்லாமிய கிலாபத்தை வேரோடு கவிழ்க்கின்ற சூழ்ச்சு ஆரம்பமாகியது.
இந்த சூழ்ச்சியிலும் மேற்குலக அரசியல்வாதிகளோடு ஆரம்பத்தில் இருந்தே யூத சிந்தனைகளும் இணைந்தே செயற்பட்டுக்கொண்டிருந்தன.

இஸ்லாமிய சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சி அமையாமல் துருக்கி இனநலனையும் துருக்கி தேசியவாதத்தையும் அடிப்படையாக கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்ற சிந்தனை துருக்கியர்களிடையே பரப்பப்பட்டு இயக்கமாக திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் உண்மையில் துருக்கியர்கள் அரபுக்கள் குருதுக்கள் என பல பிரதேச முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சிக்குள் அடங்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட ஓர் ஆட்சியை துருக்கி இன ஆட்சியாக உருமாற்றுவதன் பொருள் என்னவெனில் துருக்கியர்கள் அல்லாத ஏனையோரின் உதவியும் ஒத்துழைப்பும் அடியோடு விலகிவிட வேண்டும் என்பதே!!

மறுபுறம் அரபிகளிடையே அரபு தேசியவாதம் நீரூற்றி வளர்க்கப்பட்டது. துருக்கியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் நிலை மாறி சுதந்திர அரபிகளாக மாற வேண்டும் என்ற சிந்தனை வேரூன்றி வளர்க்கப்பட்டது.

அரபுகளிடையே இத்தகைய அரபு தேசியவாதத்தை ஊன்றியவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ அரபுக்களாக இருந்தார்கள். ‪#‎பைரூத்_பல்கலைக்கழகம்‬ அவர்களுடைய தலமைத்தளமாக இருந்தது. இந்த அமெரிக்க பல்கலைக்கழகம் தேசியவாதத்தை பரப்புகின்ற மையத்தளமாக இருந்தது.

இவ்வாறாக துருக்கியர்களிடையேயும் அரபுக்களிடையேயும் ஒரே நேரத்தில் வேறுபட்ட இரு தேசியவாத கருத்துக்கள் வேரூன்றி வளர்க்கப்பட்டன. அவை மென்மேலும் வளர்ந்து செழிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் அமுல்படுத்திக்கொடுக்கப்பட்டன.

1914 ‪#‎1ம்_உலகப்போர்‬ தொடங்கியபோது நிலமை எந்தளவு மோசமானதாக மாறிக்காணப்பட்டது என்றால் அனைத்து உம்மத்தும் ஓரணியில் தோள்கொடுத்து போரிடுவதற்கு பதிலாக அரபிக்கள் பிரித்தானியா சார் அணியாகவும் துருக்கி ஜேர்மன் சார் அணியாகவும் ரத்தவெறிபிடித்த காட்டேறிகளாக சக முஸ்லிம் சகோதரனின் இரத்தத்தை குடித்தே தீரவேண்டும் என்ற அளவுக்கு பகைமை முற்றிப்போய் எதிர் எதிர் அணியில் நின்று போரிட்டனர்.

‪#‎இன்சாஅல்லாஹ்‬......
‪#‎தொடரும்‬.......

‪#‎புகைப்படம்‬:- அமெரிக்க பைரூத் பல்கலைக்கழகம் - சவூதி அரேபியா


சிந்தனை கலஞ்சியம்

No comments:

Post a Comment