Feb 16, 2011

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 2

அதிலிருந்து தொடர்ந்து வந்த 100 ஆண்டுகளில் டெல்லி சாம்ராஜியம் என அழைக்கப்பட்ட அவ்வாட்சி கிழக்கு நோக்கி வங்காளம் வரையும், தெற்கு நோக்கி டெக்கன் வரையும் விரிவடைந்தது. அந்த டெல்லி சாம்ராஜ்ஜியத்தை 5 வேறுபட்ட அரச பரம்பரையினர் ஆட்சி செய்தனர். அவர்கள் ஸ்லேவ் பரம்பரை(1206 - 1290), ஹல்ஜி பரம்பரை(1290 – 1320), துக்லக் பரம்பரை(1320 – 1413), சைய்யித் பரம்பரை(1414 -1451), லோடி பரம்பரை(1451 – 1526) என அழைக்கப்பட்டனர்.பின்னர் மத்திய ஆசியாவிலிருந்து தோன்றிய பாபரினால் டெல்லி சாம்ராஜியம் 1526 இல் கைப்பற்றப்பட்டு முகலாய சாம்ராஜியம் தோற்றம் பெற்றதுடன் அவரே முதலாவது முகலாய ஆட்சியாளராக தோற்றம் பெற்றார். அவரின் மரணத்திற்கு பின்னர் அவரின் மகன் ஹ}மையுன் (1530 – 1556) ஆட்சிக்கு வந்தார். போபாலில் அமைந்துள்ள அரச நு}லக ஆவனங்களின்படி பாபர் தனது மகனுக்கு பின்வரும் உயிலை எழுதினார் எனத் தெரிய வருகிறது. இந்த உயில் பாரின் தவறுகளையெல்லாம் தாண்டிப்பார்க்கும்போது அவர் இஸ்லாத்தினை நீதியான முறையில் அமுல்செய்யவேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார் என தெளிவாகக் காட்டுகிறது.

“ எனது மகனே! பின்வரும் விடயங்களை கவனத்திற்கொள். மத hPதியான பாரபட்சங்களுக்கு உனது மனதில் இடங்கொடுக்காதே. மக்களின் மத hPதியான உணர்வுகளையும், வழிபாடுகளையும் கவனத்திற்கு கொண்டு அவர்களுக்கு மத்தியில் நீதி செலுத்துவாயாக. இத்தேசத்தவர்களின் மனதை வெல்வதற்காக பசுக்களை அறுப்பதை தவிர்த்துக்கொள். அது உன்னை மக்களின் பால் நெருக்கமடையச்செய்யும். எந்த மதத்தினரின் வழிபாட்டிங்களையும் அழிக்கவோ, தேசப்படுத்தவோ கூடாது. நாட்டிலே அமைதி ஏற்படும்படி மக்கள் அனைவரின் மீதும் நீதி செலுத்து. இஸ்லாம் கொடுங்கோண்மை அக்கிரமம் எனும் ஆயுதத்தால் போதிக்கப்படுவதைவிட அன்பு ஆதரவு எனும் ஆயுதத்தால் சிறப்பாக போதிக்கப்படலாம். ஷியா , சுன்னி வேறுபாடுகளை புறம்தள்ளிவிடு. வேறுபட்ட பருவ காலங்களை காண்பதைப்போலவே மக்களின் வேறுபட்ட தன்மைகளையும் பார்.”

வரலாற்றை திரிபு படுத்தும் வரலாற்றாசிரியர்கள் நிறைந்திருக்கும் சூழலில் இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சி பற்றி நாம் எங்கிருந்து தகவல்களைப்பெறுகிறோம் என்பதில் மிகவுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய முஸ்லிம் ஆட்சியாளர்கள் சிலர் சில இஸ்லாமிய சட்டங்களை பிழையாகப்பயன்படுத்தினார்கள் என்பதையும், சில அநீதிகளை செய்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எனினும் இந்தியா இஸ்லாமிய கிலாஃபத்தின் ஒரு பகுதியாக இருந்ததும், அங்கே ஷரிஆ சட்டங்களே அமுல்படுத்தப்பட்டது என்பதும் மறைக்க அல்லது மறுக்க முடியாத உண்மையாகும். சில இந்திய மாநகரங்கில் காணப்படும் நிதிமன்ற ஆவணங்களை பார்க்கும்போது, மக்களின் பிரச்சனைகளைத்தீர்ப்பதில் இஸ்லாமிய ஷரிஆச் சட்டங்களைத்தவிர வேறொரு மூலாதாரத்தை அந்நீதிமன்றங்கள் கொண்டிருந்தாகத் தெரியவில்லை.

ஷரிஆச்சட்டங்களில் சிலதை தவறாகப்பயன்படுத்துவது என்பது, இஸ்லாமிய கிலாஃத்தின் ஆட்சியையும், வாலி(ஆளுநர்கள்),மற்றும் ஆமில் ( நகராதிபதி) ஆட்சியையும் இல்லாது செய்துவிடாது. பல ஹதீஸ்கள் ஆட்சியாளர்ளகள் அநியாயக்காரர்களாக இருந்தாலும் கூட அவர்கள் வெளிப்படையான குபர்ரினை (குபர் புவா) வெளிப்படுத்தாது அல்லது செய்யாது ஷாPஆவினை அமுல்படுத்தும வரை அவர்களுக்கு கட்டுப்படும்படி கூறுகின்றன.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அல்லாஹ்வின் து}தர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறுகிறார்கள். “ உங்கள ஆட்சியாளர் காய்ந்த திராட்சைகள் போன்ற முடியுடைய அபிஸீனிய அடிமையாக இருந்தால்கூட அவருக்கு செவி சாயுங்கள், கட்டுப்படுங்கள்”

இன்னுமொரு அறிவிப்பில் “ அவர் அல்லாஹ்வின் கிதாபைக்கொண்டு வழிநடத்தினால்” என வந்துள்ளது. அவ்ப் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “ ரஸ}ல்(ஸல்) சொல்ல நான் கேட்டேன், “ உங்களிடையே சிறந்த தலைவர்கள் என்பவர்கள் யாரென்றால் நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள், அவர்களும் உங்களை நேசிப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள், அவர்களும் உங்களுக்காக பிரார்த்திப்பார்கள். உங்களிடையே கெட்ட தலைவர்கள் யாரென்றால் நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள், அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களை சபிப்பீர்கள், அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்.” அதற்கு நாங்கள் கேட்டோம். “எனவே அவர்கள் மீது நாங்கள் போர் அறிவிக்கக்கூடாதா?” ரஸ}ல் (ஸல்) கூறினார்கள், “ இல்லை, அவர்கள் உங்கள் மத்தியில் ஸலாஹ்வை நிலைநாட்டும் வரை. எச்சரிக்கை! எவரேனும் தம்மீது ஆட்சிசெலுத்தும் வாலி பாவம் செய்வதைக்கண்டால் அல்லாஹ்வுக்கு எதிராக செய்யப்படும் அந்த தீமையை அவர் வெறுக்கட்டும். ஆனால் அவர் கட்டுப்பாட்டிலிருந்து (பைஆ) தனது கையை எடுக்க வேண்டாம். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் து}தர்(ஸல்) கூறிய ஹதீஸை அபுதாவூத்திலும், அஹ்மத்திலும் பதிந்திருக்கிறார்கள். “அபு தர்ரே! போர் வெற்றிப்பொருட்களை கைப்பற்றி வைத்துக்கொண்டு அதனை உங்களுக்கு தருவதற்கு ஏவெரேனும் ஒரு வாலி (ஆளுநர்) மறுத்தால் அந்த விசயத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் கூறினார் “ உங்களை சத்தியத்து}துடன் அனுப்பியவன் மீது ஆணையாக, நான் எனது வாளை உயர்த்தி உங்களை வந்து அடையும் வரை போராடுவேன்.” இதற்கு ரஸ}ல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் சொன்னதை விட சிறந்ததொன்றை நான் கூறட்டுமா? நீங்கள் பொறுமையைக்கடைப்பிடித்து என்னை வந்து அடையும் வரை அதனைப் பேணுவதாகும்.”
இந்தியா கிலாஃபத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது என்ற உண்மையை இந்து வரலாற்றாசிரியர்கள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். சுசி சர்மா என்ற இந்து எழுத்தாளர் தனது புத்தகமான “ “ Caliphs and Sultans – Religious Idealogy and Political Praxis” என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

“டெல்லி ராஜ்ஜியம் (1205–1526) இருக்கும் வரை அது அப்பாசிய கலீஃபாக்களின் கீழிருந்து முஸ்லீம்களின் சாம்ராஜியத்தின் ஒரு சட்டரீதியான பகுதியாகவே இருந்து வந்தது. சுல்தான்கள் தம்மை கலீஃபாவின் பிரதிநிதிகள் என்றே கருதியதுடன் அதன் மூலமான நிர்வாகத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை பிரதிநிதிகள் என்ற நிலையிலேயே பெற்றுக்கொண்டனர். நிர்வாகத்தின் உச்ச அதிகாரம் கலீஃபாவிடமே இருந்ததால் ஏனைய நிர்வாகிகளும் சிற்றரசர்களும் கலீஃபாவின் சார்பிலேயே அரச அதிகாரத்தை பிரயோகித்தார்கள்”. (Caliphs and Sultans – Religious Idealogy and Political Praxis, page 247).
“மூன்றாம் பஹமனி முஹமது ஷாஹ் (1463-1482)அவர்கள் உத்மானிய சுல்தான் இரண்டாம் முஹம்மது அவர்களைப்பார்த்து “நீங்கள் கலீஃபாவாக இருக்கத் தகுதியானவர்கள்” எனப் பாராட்டுகிறார். அத்துடன் துருக்கிய உத்மானிய இலச்சினையை தமது அரச இலச்சினையாக பிஜாபுர் இராச்சியம் உபயோகப்படுத்தியிருந்தது. குஜராத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய மாலிக் அயாஸ் என்பவர் முதலாம் சுல்தான் சலீமை “உலகின் கலீஃபா” என தெரிவித்திருந்தார். முகலாய மன்னர்கள் துருக்கிய சுல்தான் மீது வைத்திருந்த மரியாதையை டெல்லிக்கும் இஸ்தான்புலுக்கும் இடையே பிரதிநிதிகள் சிலர் சென்று வந்தமை காட்டுகிறது. சுல்தான் சுலைமானுக்கு ஹ}மாயுன் ( இந்திய ஆட்சியாளர் ) எழுதிய கடிதத்தில் சுல்தான் சுலைமானை சிறந்த குணநலன்கள் கொண்ட கலீஃபா என வர்ணித்திருந்ததுடன் அவரின் ஆட்சி நிலைக்க வேண்டுமென பி;ரார்தித்திருந்தார்,“அவன் (அல்லாஹ்) உம்மை உலகின் கலீபாக அனுப்பி வைத்தான்” என்ற குர்ஆன் வசனத்தையும் அவர் மேற்கோள் காட்டியிருந்தார். சுல்தான் இப்ராஹீம் சாஜஹானுக்கு அனுப்பிய கடிதத்தில் “தாம் உலக அரசர்களின் பாதுகாவலர்” எனக்குறிப்பட்டதுடன் கலீஃபாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார். சுல்தானிடமிருந்து துருக்கிய பிரதிநிதியான அஹமத் அகா ஓளரங்கசீப்புக்கு 1690ம் ஆண்டு ஒரு கடிதத்தை கொண்டு வந்தார். அதில் சுல்தான் இஸ்லாத்தின் பிரதிநிதி (கலீஃபா) என்பதை வலியுறுத்தும் குர்ஆனிய வசனங்கள் அடங்கிருந்தன. 1723ம் ஆண்டு முகமது ஷாஹ் (1719-1748) இஸ்தான்புல்லுடன் தொடர்புகளை ஏட்படுத்தியிருந்தார். முஹமது ஷாஹ் சுல்தானுக்கு அனுப்பிய கடிதத்தில்;. “பெரும் சுல்தான்களின் பாதுகாப்பிடம்” “மரியாதைக்குரிய “ மன்னர்களின் பாதுகாவலன்” ஷரிஆவின் போதனையை பரப்புபவர்” என வாழ்த்துகிறார். ( Sasi S. Sharma, Caliphs and Sultans – Religious Ideology and Political Praxis, page 248-249).

இந்தியாவுக்கும் கிலாஃபாவுக்கும் இருந்த தொடர்பை சில தொல்பொருட்கள் கூட எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக இந்தியாவின் வாலியாக இருந்த சுல்தான் அல்தமாஷ் (1211-1236) உடைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளி நாணயங்களில் ஒரு பக்கத்தில் கலீஃபா அல்முஸ்தன்ஸிரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததுடன் மறுபுறம் கலீஃபாவின் உதவியாளர் என்ற அல்தமாஷ்ஷின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.1258ல் பக்தாத் வீழ்தப்பட்டு கலீஃபா அல் முஸ்தன்ஸிர் மரணமடைந்த போதும் அவர் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களே இந்தியாவில்; பயன்படுத்தப்பட்டு வந்தன. ஷெய்க் அஹமத் சிரிந்தி போன்ற பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் கூட இந்தியா கிலாஃத்தின் கீழ்; இருக்கும்போதே உருவாகியிருந்தனர். பிக்ஹ{த்துறையின் அறிஞராக விளங்கிய இவர் முஜத்தித்; அல்ஃப் தானி என்றும் அறியப்பட்டார். அவர் மொத்தமாக 536 கடிதங்களை உத்மானிய ஆட்சியாளருக்கு அனுப்பியிருநதார். ஆது தோகுக்கப்பட்ட கடிதங்கள் அல்லது “மக்துபாத்” என்று அழைக்கப்பட்டது. அக்கடிதங்களினு}டாக அவர் தனது ஆலோசனைகளை கிலாஃபத்திற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மற்றுமொருவர்தான் ஷாஹ் வலீயுல்லாஹ் டெஹ்லாவி (1703-1762) என்று அழைக்கப்பட்ட இந்தியாவில் பெரிதும் மதிக்கப்பட்ட உலமாவாகும். தெற்காசியா மற்றும் ஏனைய பகுதிகளிலும் பல இஸ்லாமிய இயக்கங்கள் அவரை ஏற்று மதிப்பளித்தனர். இஸ்லாம் தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் அவர் எழுதியுள்ளார். அவர் காலத்திலிருந்த பல அறிஞர்கள் குர்ஆனை அதன் மூல மொழினான அறபிலே மாத்திரம் கற்க வேண்டும் எனக் கருதிய போது குர்ஆனை உருதிலும் சமஸ்கிரதத்திலும் மொழிபெயர்த்த அவரின் மொழிபெயர்ப்புக்கள் காலத்தால் முந்தியவைகளாகும். காலப்போக்கில் அவரது செயற்பாட்டை இந்திய உலமாக்கள் ஏற்றுக்கொண்டனர்.“ஹ{க்கத் அல் பலகா அம்த் அல்-தவ்ஹீமத் அல்-இலாஹியா” என்பது அவரின் புகழ்பெற்ற இன்னொரு ஆக்கமாகும். “இலாலத் அல் கஃபா” என்ற தனது ஆக்கத்தில் கிலாஃபத்தைப் பற்றியும் அவர் எழுதியிருந்தார். அதில் “ இஸ்லாத்தை நிலைநாட்டுவதினு}டாகவும், அதன் கிளைகளான மார்க்க கல்வி, மார்கக் கிரிகைகளை மேற்பார்வை செய்யும் நிறுவனம், ஜிஹாத்; எனும் கட்டமைப்பு…, இராணுவ வழிநடாத்தல், நீதித்துறை உருவாக்கமும் சட்ட அமுலாக்கமும், குற்றச்செயல் கட்டுப்பாடு… போன்றவற்றினுடாக மக்களின் பொதுநலன்களின் அடிப்படையில் உருவான ஓர் தலைமைத்துவமே கிலாஃபாவாகும். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் து}தர் (ஸல்) அவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்.” எனக் குறிப்பிடுகின்றார்.

No comments:

Post a Comment