Mar 20, 2011

உலகின் பொருளாதார நெருக்கடியும் இஸ்லாமிய பொருளாதாரமும் - பகுதி 01

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ

மனிதர்களுக்காக கொண்டுவரப்பட்ட சமுதாயத்தில் நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் நன்மையானவற்றை ( சரியானவற்றை) ஏவுகிறீர்கள், தீமையானவற்றைத் (தவறானவற்றை) தடுக்கிறீர்கள், மேலும் (ஒரே இறைவனான) அல்லாஹ்மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்,
( 3: 110)


மனித இனத்திற்காக கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்(சுபு) நம்மை சிலாகித்துக் கூறியுள்ளான், ஏனெனில் நாம் நன்மையானவற்றை ஏவுகின்றோம், தீமையானவற்றைத் தடுக்கின்றோம், இன்றைக்கு உலகம் முழுவதிலும் காணப்படும் தீமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக குரல் எழுப்பவேண்டியது நமது பொறுப்பு என்பதையும் அதுநமது கடமை என்பதையும் நாம் உணரவேண்டும், இன்றைக்கு உலகத்தில் ஆதிக்கம் பெற்றிருக்கும் முதலாளித்துவ கொள்கையின் காரணமாக பொருளாதாரத்துறையில் அநீதியும் அத்துமீறல்களும் பரவலாக காணப்படுவது மிகப்பெரிய தீமையாக இருக்கிறது,

இன்றைய உலகில் ஏற்பட்டிருக்கும் நிதிச்சந்தை நெருக்கடி(financial crisis) மேற்குலகின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைத் தகர்த்துவிட்டதோடு தாராளவர்த்தக சந்தை (free market policy) என்ற பொருளாதாரக் கொள்கையின் கோரமுகத்தை வெளிக்கொணர்ந்து விட்டது, எனினும் இந்தபிரச்சினைக்கு மாற்றுவழியைத் தேடும் மேற்குலகம் (western countries) பொதுவுடமைக்கோட்பாட்டின் செல்லறித்துப்போய் எஞ்சியுள்ள கொள்கையை மறுஆய்வு செய்வதையும் பொருளாதாரத்தில் அரசு தலையீடு செய்து நிலையை சீர்படுத்துவதையும் மட்டுமே சரியான நடவடிக்கையாக கருதுகிறது, மேற்கூறிய காரணங்களை மையமாக வைத்துதான் ஒழுங்குமுறை மற்றும் வெளிப்படையான அனுகுமுறை ஆகியவற்றை மேம்படுத்தி தாராளவர்த்தகக் கொள்கையை மேலும் தொடரவைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, அதாவது சிலசீர்திருத்தங்களை மேற்கொண்டு முதலாளித்துவ கொள்கையை இன்னும் வேகமாக செயல்படுத்தவேண்டும் என்று மேற்குலகம் கருதுகிறது, ஒருமுறை முதலாளித்துவக்கொள்கை பற்றியும் அதன் தீயஅம்சங்கள் பற்றியும் விரிவாக விவாதம் செய்யும்போது பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருக்கும் அதன் ஆதரளவாளர் ஒருவர். இருக்கின்ற மோசமான கொள்கைகளில் முதலாளித்துவம் சிறந்தது என்று கூறினார், பின்னர் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை மட்டும்தான் சிறந்த ஒரேமாற்றுவழியாக இருக்கிறது என்று அவரிடம் எடுத்துக் காட்டியபோது இஸ்லாத்தில் இத்தகைய முற்போக்கான கொள்கைகள் இருக்கிறதா? என்று ஆச்சர்யம் அடைந்ததோடு அவர் அஒ குறித்து ஒருபோதும் தாம் படித்ததில்லை என்று கூறினார்!

இன்றைக்கு உலகம் கண்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் வெளிச்சத்தில் முதலாளித்துவக் கொள்கையின் பிற்போக்குத்தனத்தையும் அதன் ஆபத்தான விளைவுகளையும் விளக்கிக்கூறி இஸ்லாத்தின் பொருளாதாரக் கொள்கையை ஒருமாற்றுவழியாக சிந்திக்கவேண்டும் என்றும் அதன் முற்போக்கான வழிகாட்டுதலை பரிசீலிக்கவேண்டும் என்றும் எடுத்துக்கூறுவதற்கு முஸ்லிம்களுக்கு அறியதொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கார்ல்மார்கஸ்(karlmarks) பிரிட்டனில் இருந்தவாறு கம்யூனிஸ கோட்பாடுகளை வரைந்தபோது அதன்மீது கணிசமான மக்களுக்கு கருத்துவேறுபாடு இருந்தபோதிலும் அதை ஒரு மாற்றுவழியாக ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்கவில்லை, எனவேதான் லெனின் (Lenin) இந்தகொள்கையை கையில்எடுத்து அதன் அடிப்படையில் ஒருஅரசியல் கட்சியை உருவாக்கி பின்னர் ஒருஅரசை ஏற்படுத்தி அதை நடைமுறைப்படுத்தினார், இந்தக்கொள்கை சரியானதுதான் நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளதுதான் என்பதற்கு ஆதாரமோ அல்லது எந்தவகையான நிரூபனமோ இல்லாத நிலையில்கூட உலகஅரங்கில் கம்யூனிஸக்கொள்கை அரங்கேற்றப்பட்டது, அல்லாஹ்(சுபு) வின் இருப்பை (existence of Allah) மறுக்கின்ற கார்ல்மார்க்ஸின் கம்யூனிஸக் கொள்கை தோல்வியுற்றுவிட்டது என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதையும் ஆனால் அல்லாஹ்(சுபு) அருளிய இஸ்லாம் என்ற சத்தியகொள்கையை நாம் கையில் வைத்திருக்கிறோம் என்பதையும் அது பதிமூன்று நூற்றாண்டுகள் இந்தஉலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உலகை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றது என்பதையும் நாம் எண்ணிப்பர்க்கவேண்டும்,

ஆகவே இஸ்லாத்தை ஒருமாற்று வழியாக உலகஅரங்கில் சமர்ப்பிப்பது மிகஇன்றியமையாத விவகாரமாகும், இஸ்லாமிய நிதியியல். இஸ்லாமிய வங்கியியல் என்று விளக்கிக்காட்டுவதைவிட இஸ்லாமிய பொருளாதாரம் என்ற கோணத்தில் நாம் விளக்கவேண்டும், வட்டியைத் தடைசெய்யும் ஷரியாவிதிகளை மீறாமல் இன்றைய வாழ்க்கைமுறையில் ஒருதனிமனிதரோ அல்லது ஒருகுடும்பமோ லாபம் ஈட்டுவதற்கு வங்கிநடவடிக்கையில் ஈடுபடுவதுதான் இஸ்லாமிய வங்கியியல் என்றும் இஸ்லாமிய நிதியியல் என்றும் கூறப்படுகிறது, எனினும் இஸ்லாமிய பொருளாதாரத்தை இப்போது விளக்கிக்கூறுவதன்மூலம் முதலாளித்துவக் கொள்கைக்கு உண்மையான மாற்றுவழி இதுதான் என்பதை தெளிவுபடுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்,

இன்றைக்கு உலகில் இஸ்லாமியஅரசு என்று ஒன்று இல்லாத காலகட்டத்தில் குர்ஆன் சுன்னா ஆகியவற்றிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆயிரம்ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையை நாம் பெற்றுள்ளோம், இதனை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரிக்கொள்கை உடையவர்களையும் வலதுசாரிக்கொள்கை உடையவர்களையும் சிந்திக்கவைப்பதற்கு தெளிவான விவாதங்கள் மேற்கொள்ளப்படவேண்டும், மற்றவை போல இஸ்லாம் என்பது வெறும் மதமல்ல அது இன்று மனிதஇனம் எதிர்கொண்டுள்ள சவால்கள் அனைத்திற்கும் தீர்வு வழங்குவதற்கு ஆற்றல் பெற்ற ஒருமுழுமையான சித்தாந்தம் (existence of Allah) என்பதை நாம் விளக்கிக்காட்டவேண்டும்,

தொடரும்...

2 comments:

  1. WE DON'T HAVE THAT QUALITY, ALLAH(SWT) what it was told in Al-QURA'N 5:105; AFTERMATH ALL ANGLES ARE POSSIBLE FOR US. INSHA ALLAH

    ReplyDelete
  2. WE DON'T HAVE THAT QUALITY, ALLAH(SWT) what it was told in Al-QURA'N 5:105; AFTERMATH ALL ANGLES ARE POSSIBLE FOR US. INSHA ALLAH

    ReplyDelete