Mar 16, 2011

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து… பகுதி 2

ஒரே தீர்வு!! கிலாஃபா!

அல்லாஹ்(சுபு) தன்னை மட்டுமே வணங்குமாறு கட்டளையிட்டுள்ளான். அதாவது நாம்,நமது கொள்கைகள், சட்டதிட்டங்கள், ஆட்சிமுறை போன்ற அனைத்தையும் அல்லாஹ்(சுபு)ஆணையிட்டுள்ளபடியே அமைத்திடவேண்டும். அவற்றை குர்ஆன் மற்றும் நபிகளாரின் சுன்னாஆகியவற்றிலிருந்து நாம் பெற முடியும். இதையன்றி வேறு எதையும் ஏற்றுக்கொள்வதென்பது
'லாயிலாஹ இல்லல்லாஹ்'(வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை)என்பதனையே மறுப்பதாகும். நம்பிக்கை கொள்வதை மட்டுமன்றி, இஸ்லாம், வாழ்வின்பிரச்சனைகட்குத் தீர்வையும் வழங்குகிறது. அத்தகைய தீர்வினை நமது வாழ்வில்நடைமுறைப்படுத்துவதும், நாம் அல்லாஹ்(சுபு)வினை வணங்குவதேயாகும். முஸ்லிம்கள்,வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாமை நடைமுறைப்படுத்தியிருந்த பொழுது, இஸ்லாமியசமுதாயம், உலகின் மேலோங்கிய சமுதாயமாகத் திகழ்ந்தது. எப்பொழுது இஸ்லாத்தின்மீதிருந்த பிடி தளர்ந்ததோ, அப்பொழுதே, சிறந்த அரசாகவும், மேலோங்கிய சமுதாயமாகவும்விளங்கிய முஸ்லிம்களின் மேலாண்மையும் சிறிதுசிறிதாகத் தளர்ந்தது. இன்று, இஸ்லாம்,வாழ்க்கையினின்றும் மறைந்து, மசூதிகளில் மட்டுமே கடைபிடிக்கப்படுவதாயிற்று. அதனால்முஸ்லிம்கள் வீழ்ந்து, பின்தங்கி, இழிநிலைக்கு ஆட்பட்டு, எதிரிகட்கு எளிதாக இரையாவதைகண்கூடாகக் காண முடிகிறது.

இஸ்லாத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதன் சட்ட திட்டங்களை, தனி மனித அளவில்மட்டுமன்றி, சமூகம், அரசு என எல்லா மட்டத்திலும் செயல்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்கள்மறுமலர்ச்சியடைய முடியும். 'நம்பிக்கை கொள்ளுதல்" என்ற அளவில் நிறுத்திவிடாமல்,'நடைமுறைப் படுத்துதல்" என்பதையும் இணைத்தாலன்றி முஸ்லிம்கள் முன்னேற முடியாது.அல்லாஹ்(சுபு)வின் அருளைப் பெற்று மேலோங்கிய சமூகமாகத் திகழ இவ்விரண்டும் இணையவேண்டும். இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள், இஸ்லாம் அல்லாத பிறசட்டதிட்டங்களையே நிறைவேற்றுவதால், முஸ்லிம்கள் தொடர்ந்து நலிந்து, ஏமாற்றப்பட்டேஇருக்கின்றனர். யாராலும் அசைக்கமுடியாதவாறு இருந்த இஸ்லாமிய அரசினை ஒருவிதஅச்சத்தோடு பார்த்த எதிரிகள், இன்று தமது கைப்பாவைகளின் உதவியுடன் செயல்படுத்தும்அடக்குமுறையின் மூலம், இஸ்லாத்திற்கு மாறான ஒரு ஆட்சியமைப்பை உருவாக்கி,முஸ்லிம்களின் வளங்களை சுரண்டி, முஸ்லிம்களை அடிமைப்படுத்தி, இஸ்லாத்தையே பின்பற்றமுடியாமல் செய்துவிட்டனர்.

இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு, இறைவன் அருளியுள்ளபடியான ஒரு இஸ்லாமியஆட்சியை, அதாவது கிலாஃபாவை நிலைநிறுத்துவதேயாகும். இஸ்லாமிய நிலங்களை ஆளும்இன்றைய கைப்பாவை அரசுகளை து}க்கி எறிந்து, கிலாஃபாவை நிலைநாட்டுவது இன்றையமுக்கியத் தேவை மட்டுமன்றி அல்லாஹ்(சுபு) நமக்கு இட்டுள்ள கட்டளையுமாகும்.

கிலாஃபா என்பது என்ன?

இஸ்லாமிய ஆட்சிமுறைக்கு இடப்பட்டுள்ள பெயர் கிலாஃபா ஆகும். அல்லாஹ்(சுபு)அருளியுள்ள ஷாPஆ சட்டதிட்டங்களை அமல் செய்து இஸ்லாத்தை உலகின் மற்ற பகுதிகட்கும்ஏந்திச் செல்கின்ற ஒரு அமைப்பே கிலாஃபா ஆகும். இது உலகளாவிய முறையில், முஸ்லிம்கள்அனைவருக்குமான தலைமைத்துவமும், இஸ்லாமிய ஆட்சி முறையுமாகும்.கிலாஃபா என்பது இமாராஹ் எனவும் அழைக்கப்படும். இரண்டும் ஒரே பொருளைக்குறிக்கின்ற வௌ;வேறு வார்த்தைகளாம். இதனை விளக்குகின்ற ஏராளமான ஹதீத்கள்உள்ளன. வௌ;வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இரண்டும் ஒன்றையே குறிக்கும்,அதாவது அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களைக்கொண்டு ஆட்சிபுரிவது என்பதே அது.

கிலாஃபா ஆட்சியில் வாழ்வது ஒரு முஸ்லிமிற்கு கட்டாயக்கடமை(ஃபர்த்)ஆகும்.

கிலாஃபா ஆட்சியில் மட்டுமே இஸ்லாமிய சட்டப்படி நாம் நடக்கமுடியும் என்பதால்கிலாஃபா ஆட்சியல் வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கட்டாயக் கடமையாகும். அதன்படிஅத்தகைய கிலாஃபா இல்லாத சமயத்தில் அதனை நிலைநாட்டுவதும் ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் ஃபர்த் ஆகும். தொழுகையைப் பேணுவது எவ்வளவு முக்கியமோ அதைப்போலவேகிலாஃபாவை நிலைநாட்டுவதும் அதிமுக்கியக் கடமையாகும். இந்த கடமையிலிருந்து எவரும்ஒதுங்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு ஒதுங்கிக்கொள்பவர்கள், அல்லாஹ்(சுபு)வின்கேள்விகணக்கிற்கு பதில் சொல்லியே தீரவேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனைஉண்டு என்பதை விளக்குகின்ற குர்ஆனிய வசனங்களும் ஹதீத்களும் ஏராளமாக உள்ளன.
கிலாஃபாவை நிலைநாட்டுவது கடமை என்பதற்கான ஆதாரங்கள் குர்ஆனிலும்,நபிகளாரின்(ஸல்) சுன்னாவிலும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்விலும் (இஜ்மா-அஸ்-ஸஹாபா) காணப்படுகிறது.

சுன்னாவிலிருந்து ஆதாரம்
முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்க ஒரு இஸ்லாமிய அரசும், அதன் ஒரே ஒருபிரதிநியும் இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையும், அத்தகைய அரசு இல்லாவிடில்அதனை நிறுவுவது முஸ்லிம் உம்மா மீது ஃபர்த்(கடமை) ஆக்கப்பட்டுள்ளது என்பதையும்ஹதீஸ்கள் மூலமும் விளங்கிக்கொள்ளலாம்.அப்துல்லா இப்ன் உமர் அறிவிப்பதாக நஃபிஅ குறிப்பிடுவிடுதாக முஸ்லிமில்பதியப்பட்டுள்ளது.

நபிகளார் கூறுகிறார்கள்: அல்லாவின் பாதையில் பைஆ செய்பவர் மறுமை நாளில் எந்தஆதாரமும் தேவையின்றி இறைவன் முன் தோன்றுவர். ஆனால் பைஆ(சத்தியப்பிரமாணம்)செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜஹிலிய மரணமடைபவராவர்.ஒவ்வொரு முஸ்லிமும் கலீஃபாவிற்கு பைஆ(சத்தியப்பிரமாணம்) கொடுத்திருக்க வேண்டும்.அவ்வாறான பைஆ கொடுக்காத நிலையில் யாரேனும் மரணித்தால் அவர் ஜஹிலிய மரணத்தையேதழுவுவர். ஜஹிலிய மரணம் என்பது காஃபிராக மரணிப்பதன்று மாறாக ஜஹிலிய மரணமென்பதுஇஸ்லாம் தன்னை வந்தடைவதற்கு முன் மரணிப்பதாகும். பைஆ என்பது கலீஃபாவிற்கு மட்டுமேகொடுக்கப்படுகிறது. அத்தகைய பைஆ கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் செய்திருக்கவேண்டும் என்பதை நபிகளார் ஃபர்த்(கட்டாயக் கடமை) ஆக்கியுள்ளார்கள்.இந்த ஹதீஸில் 'கலீஃபாவிற்கு பைஆ கொடுப்பதுதான் ஃபர்த்" எனக் கூறப்படவில்லை.மாறாக ஒவ்வொருவரும் பைஆ செய்திருக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. எனவேஒவ்வொருவரும் பைஆ செய்திருக்க வேண்டுமென்றால் கலீஃபாவும் இருக்கவேண்டும் என்பதுஃபர்த் ஆகிறது. கலீஃபா இல்லாத நிலையில் அவரை நியமிக்க வேண்டும் என்பதும்கடமையாகிறது.

அபுஹ_ரைரா(ரழி) அறிவித்ததாக ஹிஸான்-இப்ன்-உர்வா (ரழி) நபிகளார்(ஸல்) கூறியதாககுறிப்பிடுகிறார்கள்.

"எனது மறைவிற்குப் பிறகு உங்களை நிர்வகிக்க பிரதிநிதிகள்(கலீஃபாக்கள்) தோன்றுவர். இறைவிசுவாசமுள்ள பிரதிநிதி அவ்விசுவாசத்துடன் வழிநடத்துவார். இறைவிசுவாசமற்ற ஒருவரும்அதன்படி வழி நடத்துவார். அவர்களது கட்டளைகள் உண்மையைச் சார்ந்திருந்தால் அதனையேபின்பற்றுங்கள். அவர்கள் உண்மையுடன் நடந்தால் அது உங்கட்கு நன்மையாக அமையும்.அவர்கள் தீங்கு செய்தாலோ அது அவர்கட்கெதிராகவே கணக்கிடப்படும்."

நபிகளார்(ஸல்) கூறியதாக அபுஹ_ரைரா (ரழி) அறிவித்ததாக முஸ்லிமில்பதியப்பட்டுள்ளதாவது.

"இமாம் ஒரு கேடயம் ஆவார். அவர் பின் நின்றே நீங்கள் போராட வேண்டும். அவர் மூலமாகவேநீங்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்."

அபுஹாசிம் அறிவிப்பதாக முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

நான் அபுஹ_ரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி சொல்லியரசூலுல்லாவின்(ஸல்) கூற்று: ''நபிமார்கள் மக்கள் நலன்களை பேணிக்காத்தனர். ஒரு நபியின்மறைவிற்குப்பின்னர் வேறு நபிகள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபியாரும் வருவாரிலர், ஆனால் அதிகமாக கலீஃபாக்கள் தோன்றுவர்.""

நபிகளார்(ஸல்) கூறியதாக இப்ன் அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்.

"உம்மாவின் அமீர் தமக்கு விருப்பமல்லாத செயலை செய்வதாக ஒருவர் கருதினால் அவர்பொறுமையுடன் இருக்கவேண்டும். எவர் ஒருவர் ஒரு கைப்பிடி அளவேனும் இமாமை விட்டுபிரிந்து செல்கிறாறோ அவர் அடைவது ஜஹிலிய மரணமேயாகும்."

மேற்கண்ட ஹதீஸ்களினின்று முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்க,அல்லாஹ்(சுபு)விற்கு அடிபணிந்து நடக்கும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதுதெளிவாகிறது. மேலும் அத்தகைய இமாம் முஸ்லிம் உம்மாவின் கேடயம் எனக்குறிப்பிடப்பட்டதிலிருந்து இமாம் இருப்பதன் அவசியம் விளங்கிக்கொள்ளப்படுகிறது. இமாம் அன்றிமுஸ்லிம் உம்மாவிற்குப் பாதுகாவல் இல்லை. எனவே இமாம் இருப்பது ஃபர்த் ஆகிறது.அல்லாஹ்(சுபு) நபிகளாருக்கு(ஸல்) கட்டளையிடுகையில் ஒரு செயலினால் ஏற்படும்கெட்ட விளைவுகளை கூறினால் அது தடுக்கப்படவேண்டிய ஹராம் என அறிந்து கொள்ளலாம்.அதே போல அத்தகைய செயல் இஸ்லாத்தின் கட்டளைகளை நிறைவேற்ற தேவையாகஇருந்தாலோ அல்லது அத்தகைய செயலன்றி இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த முடியாமல்போனாலோ அச்செயல் ஃபர்த் ஆகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதாவது இஸ்லாமிய நலன்களைநிறைவேற்றுவது குலஃபா(கலீஃபாக்கள்) மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அத்தகையகுலஃபா இருப்பது கடமையாகிறது. மேலும் கலீஃபாவிடமிருந்து ஒரு கைப்பிடியளவேனும் பிரிவதுஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே கலீஃபா இருப்பது ஃபர்த் ஆகிறது.

நபிகளார்(ஸல்) கூறியதாக அப்துல்லா-இப்ன்-அப்ரு (ரழி) அறிவித்ததாக புஹாரியிலுள்ள கூற்று.

"தங்களுக்குள் ஒரு அமீரை நியமிக்காமல் மூன்று பேர் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது."

நபிகளார்(ஸல்) கூறியதாக சையீத் அறிவித்ததாக இமாம் அபு தாவூத் கூறுகிறார்கள்.

"மூன்று பேர் பயணம் புறப்பட்டால் அவர்களிடையே ஒரு அமீரை நியமிக்க வேண்டும்."

இந்த அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் உம்மாவிற்கு அமீர் ஒருவர் இருப்பதுஅவசியமாகிறது. மூன்று பேருக்கே ஒரு அமீர் நியமிக்க வேண்டியது ஃபர்த் எனில் இந்த முஸ்லிம்உம்மாவிற்கு ஒரு அமீரை நியமிப்பது எவ்வளவு பெரிய ஃபர்த் என்பதை தெரிந்து கொள்ளலாம்.மேலும் அமீர் 'தங்களிடையே ஒருவர்" என்பதால் அவர் 'ஒருவரே' எனவும் 'முஸ்லிம்" எனவும்அறிந்து கொள்ளலாம்.

இஜ்மா-அஸ்-ஸஹாபாவினின்று கிலாஃபா என்பது ஃபர்த் என்பதற்கான சான்று
இஸ்லாமிய சட்டங்களின் ஆதாரங்கட்கு குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றை அடுத்துசஹாபாக்களின் இஜ்மா(ஒருங்கிணைந்த தீர்வு) ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இஜ்மா-அஸ்-ஸஹாபாவின் கருத்துப்படி அனைத்து ஸஹாபாக்களும் நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பின்னர்,ஒரு கலீஃபாவை நியமிக்க ஒப்புக்கொண்டனர். அதன்படியே அபுபக்கர்(ரலி) முதல் கலீஃபாஆனார். அவரது மறைவிற்குப் பின்னர் உமர்(ரலி), பின்னர் உத்மான்(ரலி) ஆகியோரும்கலீஃபாக்களாக ஆக அனைத்து சஹாபாக்களும் ஒப்புக்கொண்டனர். கலீஃபாவை நியமிப்பது ஒருமுக்கியக்கடமை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

நபிகளாரின்(ஸல்) மறைவிற்குப்பின்னரோஅல்லது மற்ற கலீஃபாக்களின் மறைவிற்குப்பின்னரோ, யார் கலீஃபாவாக வரவேண்டும் என்பதில்கருத்து வேறுபாடு இருந்தாலும், கலீஃபா ஒருவர் இருப்பது ஃபர்த் என்பதில் அனைத்துசஹாபாக்களும் உறுதியுடனிருந்தனர். இதன் மூலம் கலீஃபா ஒருவர் இருப்பது கடமைஎன்பதற்கு இஜ்மா-அஸ்-ஸஹாபாவும் சான்றளிக்கிறது.கலீஃபாவை நியமித்து அவருக்கு பைஆ கொடுப்பது எவ்வளவு முக்கியக் கடமைஎன்பதை நபிகளார்(ஸல்) அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் சஹாபாக்கள் நடந்துகொண்ட விதத்தினின்றும் அறியலாம். முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அடக்கம் செய்வது இறந்தவரைச்சுற்றியுள்ளோருக்கு ஃபர்த் ஆகும். அதைவிடுத்து உடலை அடக்கம் செய்யாமல் வேறுவேலைகளில் ஈடுபடுவது ஹராம் ஆகும். எனவே சஹாபாக்கள் முதலில் நபிகளாரின்(ஸல்)உடலை அடக்கம் செய்வதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் சில சஹாபாக்கள்நபிகளாரின்(ஸல்) உடலை அடக்கம் செய்வதை விட்டு, ஒரு கலீஃபாவை, முஸ்லிம் உம்மாவின்தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வேறுவேலைகளில் ஈடுபடுவது ஹராம் ஆதலால் மற்ற சஹாபாக்கள் அதனை எதிர்த்திருக்க வேண்டும்.ஹராமாக்கப்பட்ட எதனையும் எதிர்க்கும் உறுதியுள்ள சஹாபாக்கள், அடக்கம் செய்யப்படுவது தாமதமாவதை எதிர்க்காமல் கலீஃபாவை நியமிக்க முனையும் சஹாபாக்கட்கு ஆதரவாகஅமைதிகாத்தனர். ஒரு குறிப்பில் நபிகளார்(ஸல்) திங்கட்கிழமை இறந்ததாகவும், அடுத்த நாள்அபுபக்கர்(ரலி) கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதன் கிழமையே நபிகளாரின் உடல் அடக்கம் தகனம் செய்யப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இமாம் மாலிக் அவர்களது குறிப்பில்அபுபக்கர்(ரலி) தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செவ்வாய்கிழமையே அடக்கம் செய்யப்பட்டதாககுறிப்பிடப்பட்டுள்ளது. அபுபக்கர்(ரலி) கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் ஆற்றியசொற்பொழிவு அனைவரும் அறிந்ததே. அதன்பிறகே நபிகளாரின்(ஸல்) உடலை குளிப்பாட்டும்பணி தொடங்கியது. அதன்பிறகு எங்கு அடக்கம் செய்வது எனப் பிரச்சனை எழுந்தபோதுகலீஃபாவாகிய அபுபக்கர்(ரலி) அவர்களின் முடிவுப்படி நபிகளார் இறந்த இடத்திலேயே அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது.நபிகளாரின் உடலை அடக்கம் செய்வதையும் விட, முஸ்லிம்கட்கு ஒரு பிரதிநிதியைநியமிப்பது ஒரு முக்கியக் கடமையாகக் கருதிய சஹாபாக்கள் அனைவரும் அதன்படிசெயல்பட்டனர். இதன்படி ஒரு கலீஃபாவை நியமிப்பது முஸ்லிம்கட்கு ஒரு முக்கியக்கடமைஎன்பதை அறிந்து கொள்ளலாம்.

To be Continue..... 


No comments:

Post a Comment