Mar 16, 2011

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து - பகுதி 3

ஷரிஆ கொள்கை

நமது தீனை நிலைநாட்டி, அனைத்துத் துறைகளிலும் இறைச்சட்டங்களைநடைமுறைப்படுத்தவேண்டும் என்பது இஸ்லாமிய ஆதாரங்களினின்றும் தெளிவாக அறியப்பட்டஒன்று. ஆனால் அத்தகைய சட்டங்களை நிலைநாட்டும் அதிகாரம் படைத்த ஒரு ஆட்சியாளர்இன்றி அத்தகைய சட்டங்களை செயல்படுத்தி, பாதுகாக்க முடியாது. ஷரிஆவின் கருத்துப்படிஒரு வாஜிபை கடைபிடிப்பதற்காக செய்யவேண்டிய அனைத்து செயல்களும் வாஜிபாகும்.எனவே கலீஃபா எனும் தலைவர் ஒருவர் இன்றி எந்த ஷரிஆ சட்டத்தையும் நிலைநாட்டமுடியாது என்பதால் கலீஃபா ஒருவர் இருப்பது நமக்கு ஃபர்த் ஆகும். அதேபோல கலீஃபாஇல்லாவிடில் அந்த கலீஃபாவை நியமிப்பதும் அல்லது அத்தகைய நியமனத்திற்காக முயற்சிசெய்வதும் நமக்கு ஃபர்த் ஆகும்.ஷரிஆவை வாழ்வின் சகல துறைகளிலும் செயல்படவைப்பது கட்டாயம்என்பதற்கான குர்ஆனிய ஆதாரங்கள்கிலாஃபாவை நிலைநாட்டி அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக் கொண்டு ஆட்சிபுரியும் ஒரு அரசின் கீழ் வாழ்வது முஸ்லிம்களுக்கு ஃபர்த்(கட்டாயக் கடமை) என்பதற்கானஆதாரங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன.

"அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக.உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றவேண்டாம். "(5:48)

அல்லாஹ்(சுபு) தான் அருளியவற்றைக் கொண்டே மக்களிடையே தீர்ப்பளிக்குமாறுநபிகளாரிடம் கட்டளையிடுகிறான். அதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமையும் அந்தச் சட்டங்களையேபின்பற்றுமாறு பணிக்கிறான். நபிகளாருக்கு(ஸல்) இடப்பட்ட கட்டளையானது, நபிகளாரை மட்டும்குறிப்பிடும்படியான சொற்பதம் இல்லாவிடில் அனைத்து முஸ்லிம்கட்கும் இடப்பட்டகட்டளையாகும். இந்தக் குர்ஆன் வசனத்தில் அத்தகைய கட்டளை எதுவும் இல்லை ஆதலால்இது அனைத்து முஸ்லிம்கட்கும் இடப்பட்ட கட்டளையாகும். இறைச் சட்டங்களை நிறைவேற்றகலீஃபா ஒருவர் இருப்பது அவசியமாகிறது.இந்த வசனத்தில் வரும் 'மா" எனும் வார்த்தையானது பொதுவாக அனைத்தையும்குறிக்கும். இதன் மூலம் வாழ்வின் அனைத்து சந்தர்பங்களிலும் அல்லாஹ்(சுபு)வின் கட்டளையைநடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தெளிவு. மேலும் இவ்வசனம் இரு வேறு அர்த்தம்கொள்ளும் படியான விதத்தில் அமையவில்லை. இது ஒரே பொருள் கொள்ளக்கூடியஆணித்தரமான வசனமாகும்.

"அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை."( 12:40)

அதிகாரம் அனைத்தும் அல்லாவிற்கே எனக் கூறும் இக்குர்ஆன் வசனத்தில் அதிகாரம்என்பது மனித சமுதாயத்தின் அனைத்து துறைகளுக்கமான
'ஹ{க்ம்" (சட்டமியற்றுதல்) ஆகும்.எனவே வாழ்வின் அனைத்து விசயங்களிலும், தனிமனிதனையோ அல்லது சமுதாயத்தையோகட்டுப்படுத்த செயல்படுத்தப்படும் சட்டதிட்டமானது அல்லாஹ்(சுபு)விடமிருந்து மட்டுமேபெறப்படவேண்டும். இதுவே தவ்ஹீதின் அம்சம். மேலும் அல்லாஹ்(சுபு)வே அல்-ஹாக்கிம்(நீதியாளன்) ஆவான்.

"எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்நிச்சயமாக காஃபிர்கள்தாம். (5:44)

"எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோநிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே. (5:45)

"அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோஅவர்கள் தான்பாவிகளாவார்கள்." ( 5:47)

அல்லாஹ்(சுபு) அருளியவற்றைக்கொண்டும் நிர்வகிக்காதவர் 'காஃபிர்,அநியாயக்காரர்(தாலிம்), பாவிகள்(ஃபாசிக்)" என அல்லாஹ்(சுபு) கூறுகிறான். இதிலும் 'மா"எனும் வார்த்தை உள்ளது. இது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் குறிக்கும். எனவேநாட்டை ஆள்வதோ, சமுதாயத்தை நிர்வகிப்பதோ, தனி மனித நடவடிக்கைகளைசெயல்படுத்துவதோ எதுவுமே அல்லாஹ்(சுபு) அருளியபடியே அமைய வேண்டும். ஆதலால்அத்தகைய அமைப்பான கிலாஃபா இருப்பதும் அவசியமாகும்.

"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்)து}தருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில்ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்)
து}தரிடமும்ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாகஇருக்கும்." (4:59)

இவ் வசனத்தில் அல்லாஹ்(சுபு) நபிகளாருக்கு(ஸல்) அடுத்தபடியாக அதிகாரத்தில்மேலுள்ளோருக்கு கட்டுப்படும்படி கட்டளையிட்டுள்ளான். எனவே அத்தகைய அதிகாரம் படைத்தஒருவர் (ஆட்சியாளர்) முஸ்லிம் உம்மாவிடையே இருப்பது அவசியமாகிறது. வாழ்க்கையில்,நடைமுறையில் இல்லாத ஒருவருக்கு கட்டுப்படும்படி ஒருபோதும் அல்லாஹ்(சுபு) கூறவதில்லை.எனவே ஆத்தகைய ஆட்சியாளர் இருப்பதும், இல்லாவிடில் அத்தகைய ஒருவரை ஏற்படுத்துவதும்முஸ்லிம் உம்மா மீது கடமையாகிறது.இங்கு 'அதிகாரத்தில் மேலுள்ள ஆட்சியாளர்' என்பது அல்லாஹ்(சுபு) அருளியசட்டதிட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்பவர் என்பதே பொருளாகும். அவர் மூலமாகவேஇஸ்லாமிய சட்டதிட்டங்களை அமல் செய்ய முடியும்.

அஸஸ்(ரலி) அறிவித்ததாக அஹ்மத்குறிப்பிடுகிறார்கள்.
நபிகளார்(ஸல்) கூறுகிறார்கள் : "அல்லாஹ்விற்கு கட்டுப்படாதோர்க்கு கட்டுப்படுதல் இல்லை."

இஸ்லாத்தில் ஆட்சியமைப்பு முறை இல்லை எனக் கூறுவோரின் கூற்றுக்கு மாறாக,முஸ்லிம் உம்மாவிடையே எப்பொழுதும் அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக அமல்செய்யும் ஒரு பிரதிநிதி இருக்கவேண்டியது ஃபர்த் (கட்டாயக் கடமை) என்பதையே இவ்வசனம்குறிப்பிடுகிறது.

"உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மைநீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம்மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள்நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்."(4:65)

இஸ்லாமிய முறைப்படியான கிலாஃபா அரசு இல்லாவிட்டால் இறைவன் அருளியபடிதீர்பளிப்பது(சட்டங்களை நிறைவேற்றுவது) நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாம்ஒரு முழுமையான மார்க்கம் எனக் கொண்டால் இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதும்அதனை நிறைவேற்றும் ஒரு கிலாஃபா அரசு இருப்பதும் அவசியமாகிறது.''ஒரு இஸ்லாமிய அரசு இருந்தால் மட்டுமே மேற்படி ஆதாரங்கள் பொருந்தும். அப்படிஇல்லாவிடில் இந்த ஆதாரங்கள் பொருந்தாது. இன்றைய அரசியல் சமுதாய அமைப்பினைஏற்றுக்கொள்ளலாம்"" எனக் கூறுவோரும் உண்டு.

ஆனால் அத்தகைய நிபந்தனை எதுவும்மேற்படி எந்த வசனத்திலும் இல்லை. எனவே கலீஃபா ஒருவரும் கிலாஃபா எனும் இஸ்லாமியஆட்சியமைப்பும் இருப்பது ஃபர்த் ஆகும். ஃபர்த் ஆன காரியம் செய்ய மேற்கொள்ளப்படும்ஒவ்வொரு முயற்சியும் ஃபர்த் ஆகும்.உதாரணம் தொழுகைக்காக ஒது(ளு) செய்தல். ஆதலால்கிலாஃபா இல்லாத நேரத்தில் அதனை உருவாக்க முனைவதும் ஃபர்த் ஆகும்.கலீஃபாவை நியமிப்பதற்கான காலக் கெடுவும், அந்தக் கடமையைநிறைவேற்றத் தவறுவதன் விளைவுகளும்கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாமல் இரண்டு இரவுகட்குமேல் இருப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராம் ஆகும். இஜ்மா-அஸ்-ஸஹாபா (சஹாபாக்களின்ஒருங்கிணைந்த தீர்வு) மூலம் இதற்கான ஆதாரத்தை அறியலாம்.

நபிகளார் மறைந்த செய்தியைக் கேட்ட சஹாபாக்கள், பனு சாயிதாவின் இடத்தில் கூடி,முஸ்லிம்கட்கு அடுத்த பிரதிநிதியை நியமிப்பதற்காக விவாதித்தனர். இந்த விவாதத்தின்போதுநபிகளாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. இரண்டு நாட்களாக இந்த விவாதம்தொடர்ந்தது. அடுத்த நாளில் அபுபக்கர்(ரலி) அவர்களுக்கு அனைவரும் பைஆ கொடுத்தனர்.பைஆ கொடுத்ததன் பிற்பாடே அவர்கள் நபிகளாரின் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகளைகவனிக்கத் தொடங்கினர்.

மரணப்படுக்கையிலிருந்த உமர்-இப்ன்-அல்-கத்தாப்(ரலி) தன்னால் மீண்டு வரமுடியாதுஎன்பதை அறிந்து, தனக்குப்பின்னர் முஸ்லிம் உம்மாவின் தலைவராக ஒரு கலீஃபாவை நியமிக்கஎண்ணி, மற்ற அனைத்து சஹாபாக்களையும்(ஷ_ரா) அழைத்து ''இறைத்து}தர் மறைந்துவிட்டார்கள். அவர்கள் குறைஷியரின் ஆறுபேரிடம் மிகுந்த திருப்தி கொண்டவர்களாகஇருந்தார்கள்."" எனக்கூறி அலி(ரலி), உத்மான், தல்ஹாஹ்-இப்ன்-உபைதுல்லாஹ்,அஸ்ஸ_பைர்-இப்ன்-அல்அவ்வாம் சவூத்-இப்ன்-அபி-வகாஸ் மற்றும் அப்துர்ரஹ்மான்-இப்ன்-அவுஃப்ஆகிய ஆறு பெயரை குறிப்பிட்டார்கள். ''அவர்கள் தங்களிடையே பேசி முடிவுசெய்துதங்களுக்குள் ஒருவரை இஸ்லாத்தின் பிரதிநிதியாக, கலீஃபாவாக தேர்ந்தெடுக்கட்டும்"" என்றும்கூறினார்கள். மூன்று நாட்களில் எந்த முடிவும் ஏற்படாவிடில், அந்த ஆறுபேரில், எதிர்ப்பவரைகொன்றுவிடுவதற்காக ஐம்பது முஸ்லிம் படை வீரர்களையும் நியமித்தார்கள்.

இவை அனைத்தும்சஹாபாக்களின் முன்னிலையிலேயே கூறப்பட்டது. எனினும் எந்த சஹாபாவும் எதிர்ப்போமறுப்போ கூறாமல் முழுவதுமாக ஒப்புக்கொண்டனர்.இஸ்லாத்தில் ஒரு முஸ்லிமை கொலைசெய்யச் சொல்வதென்பது மிகப் பெரியவிசயமாகும். ஒரு முஸ்லிமை காயப்படுத்துவதே ஹராமாக்கப்பட்டுள்ள நிலையில்நபித்தோழர்களையே கொல்வதென்பது எவ்வளவு பெரிய செயல். இந்த நிலையில் சஹாபாவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, அனைவரும் சம்மதித்தனர். இதன்மூலம் ஒருகலீஃபாவை நியமிப்பது எவ்வளவு முக்கியக் கடமை என்பதை அறியலாம். சஹாபாக்களின்உயிரே போனாலும், ஒரு கலீஃபாவை நியமிக்க வேண்டியது அவசியம் என்பது இதன் மூலம் இதுதெளிவாகிறது.மூன்று நாட்களுக்கு மேல் கலீஃபா ஒருவர் இல்லாமல் இருப்பது ஒவ்வொரு முஸ்லிமிற்கும்பாவமாகும். அதற்கான முயற்சியில் அவர்கள் உடனடியாக ஈடுபடவேண்டும். அவ்வாறாககலீஃபாவை நியமிக்க முயற்சி செய்யும் பொழுது அதில் வெற்றி கிடைக்காவிடினும் பரவாயில்லை.ஏனெனில் கலீஃபாவை நியமிக்கப்பாடுபடுவது கடமை, அதில் வெற்றி கிடைப்பது நமது சக்திக்குஅப்பாற்பட்டது. நமது செயல்பாடுகட்கு மட்டுமே நாம் கேள்விகணக்கிற்கு உள்ளாவோம்.அச்செயல்ளின் விளைவுகள் அல்hலாஹ்(சுபு)வின் ஆணைப்படியாகும்.

கிலாஃபாவை நிலைநாட்டவேண்டியது ஃபர்த் எனத் தெரிந்தபின்னரும் அக்கடமையைச்செய்யாமல் இருப்பது அதற்குறிய பாவத்தைத் தேடித்தரும். கிலாஃபாவால் மட்டுமே மற்றையஅனைத்து இஸ்லாமியச் சட்டங்களும் வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.எனவே கிலாஃபாவிற்காக முயற்சிசெய்யாமல் இருப்பது மற்றைய சட்டங்களையும் பின்பற்றமுனையாமல் இருப்பதற்குச் சமம். அந்தப்பாவச்சுமையானது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும்உள்ளது. எவர் ஒருவர் கிலாஃபாவை நிலைநாட்ட முனைகிறாறோ அவரது பாவச்சுமைநீங்கிவிடும். எனினும் அவர் அம்முயற்சியை கிலாஃபா ஒன்று வரும் வரையோ அல்லது தமதுஉயிர் பிரியும் வரையோ தொடர்ந்து செய்ய வேண்டும். எனவே அல்லாஹ்(சுபு) நம்மீதுகடமையாக்கியுள்ள கிலாஃபா ஒன்று இருப்பதும், இல்லாவிடில் அதனை நிலைநாட்டமுயற்சிப்பதும், ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஃபர்த் என்பதை அறியமுடியும்.கிலாஃபாவின் ஒற்றுமைஇறைவன் வழங்கியருளிய இஸ்லாமியச் சட்டமனைத்தையும் பின்பற்றி நடக்கும் கிலாஃபாஆட்சிமுறையானது ஒரே ஒரு தலைமையும், ஒரே ஒரு நாடும் கொண்டதாகும். அது இன்றையகாலகட்டத்திலுள்ள "ஃபெடரல் சிஸ்டம்" போன்றதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டஇஸ்லாமிய அரசு இருப்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமை இருப்பதும் இஸ்லாத்தில்கடுமையாக கண்டிக்கப்பட்ட ஒன்று. அதற்கான ஷரிஆ ஆதாரங்கள் உள்ளன.

அப்துல்லா இப்ன்அம்ர் இப்ன் அல்ஆஸ் அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுகிறார்கள்

"எவர் ஓர் இமாமிற்கு மனமுவந்து தன் சத்தியப்பிரமாணத்தை கொடுக்கிறாறோ, அவர் அந்தஇமாமின் கட்டளைப்படி நடக்க வேண்டும். அந்த இமாமிற்கு போட்டியாக இன்னொரு இமாம்வந்தால் அந்த இரண்டாவது இமாமை கொன்றுவிடவேண்டும்."

மேலும் அபுசெய்யத் அல்குத்ரி ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்.

"இரண்டு கலீஃபாக்களுக்கு பைஆ(சத்தியப்பிரமாணம்) கொடுக்கப்பட்டால் அவர்களுள்இரண்டாமவரை கொன்றுவிடவேண்டும்."
அர்ஃபாஜா அவர்கள் ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,

"யார் ஒருவர் உங்களிடையே பிளவு ஏற்படுத்த முனைகிறாரோ அவரை கொன்றுவிடுங்கள்."

மேற்கண்ட ஹதீஸ்கள் வாயிலாக ஒரு தலைமைக்கு மேல் இருக்கமுடியாது என்பதைஅறியலாம். ஒரு முஸ்லிமாக இருந்தாலுமே அவரைக் கொல்லுதல் வலியுறுத்தப்பட்டுள்ளதால், ஒருதலைமையும், ஒரே நாடும், ஒரே உம்மாவும் எவ்வளவு முக்கியம் என்பதனை அறியலாம்.கிலாஃபாவானது மீண்டும் ஏற்படும்பொழுது அதன் முக்கிய செயல்பாடுகளுள் ஒன்றுஇன்றைய முஸ்லிம் பகுதிகள் அனைத்தையும் கிலாஃபா அரசின் கீழ் கொண்டுவந்து "ஒரே நாடு,ஒரே மக்கள்" என முஸ்லிம்கள் அனைவரையும், அவர்களின் செயல்பாடுகளையும் ஒரே அரசின் கீழ் கொண்டுவருவதாகும். இன்று காணப்படும் எல்லைக்கோடுகள் செயற்கையாகஉருவாக்கப்பட்ட ஒன்றாதலால் அது தகர்த்தெரியப்படும்.

To be Continue..... 

No comments:

Post a Comment