Mar 1, 2011

கானல் நீரும் ஒற்றைக்காலில் கொக்கும்!


முன்பொரு நாளில் பிடித்த மீன்களும்

ருசித்த சுவையும் இன்றும் அந்நாளுக்காய்

காத்திருக்க துண்டியது.


ஆர்வ மேலீட்டில் மெய்மறந்து

எதிர்பார்த்த போதும் இன்றும்

மீனைத்தான் (கிலாபத்தை) காணவில்லை!


வயதாகியும் தளராமல் இலக்கோடு

இலக்காய் உயர்த்திய ஒன்றைக் காலையும்

மாற்றி மாற்றி அலங்கரித்துப்பார்த்து

பொறுமையும் எல்லை மீறிவிட்டது!

இருந்தும் களக்கனவுகள்

ஓர் போராளியாய் உற்சாகத்தைகொடுத்தும்

காலங்கடந்து இன்றுநான் குளத்தில் அல்ல

காணல் நீர் நிலத்தில் (வழி பிறழ்ந்த இயங்கங்கள்) எனும் உண்மைபுரிந்த போது…

என் பின்னால்

இன்றும் சில ஆயிரங்கள்

அதே ஒற்றைக்காலில்!!


அது மஹ்தி (அலை) வரும் வரையா??

அல்லது மறுமையே வரும் வரையா???



No comments:

Post a Comment