Mar 2, 2011

அதோ… கிலாபா வந்து கொண்டிருக்கிறது!

1991 ஆம் ஆண்டுடன் கம்யூனிஸம் வெறும் வரலாறாகி விட்டது. கம்யூனிஸ உலகின் வீழ்ச்சி அமெரிக்க ஆதிக்கத்தின் உதயத்திற்கான சிறந்த அறிகுறியாக அமைந்தது. இந்த நிகழ்வினால் ஐக்கிய அமெரிக்க இராச்சியம் உலகின் பலம் பெற்ற ஒன்றாகவும், உலகின் ஒரேயோரு தவிர்க்க முடியாத வல்லரசாகவும் மாறியது. இந்தக்கருத்தை சந்தேகித்த எவரும் உலகில் இருக்கமாட்டார்கள். ஆனால்; அந்த நிகழ்வே அமெரிக்க வீழ்ச்சியின் ஆரம்பமாகவும் அமைந்துவிட்ட யதார்த்தத்தை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்?

சோவியத் யூனியன் இடிந்து விழுந்து, ஐக்கிய அமெரிக்கா வல்லரசாக மாறியபோது – அது, அப்போது துங்கிக்கொண்டிருந்த மாபெரும் சக்தனான இஸ்லாத்தை எழுப்பிவிட்டது. அன்றுமுதல் நிலைமைகளை முறையாக ஊடுறுவிப்பார்த்தால் அமெரிக்கா இஸ்லாத்துடன் தோளோடு தோள் மோதுவதில் படுதோல்வியைக் கண்டு வருகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். செயற்கையாக உருவாக்கப்பட்ட 9"11 சம்பவமும், மட்றிட் ரயில் குண்டுவெடிப்பும்… மற்றும் தொடர்ந்தேர்ச்சியான துரோகத்தனங்களும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்பதிலும், ஆப்கானிஸ்தான், ஈராக் ஆக்கிரமிக்கப்படுவதிலும் போய் முடிந்தது. எனினும் இந்த நிகழ்வுகளெல்லாம் இவை அனைத்திற்கும் சூத்திரதாரியான அமெரிக்காவின் படுகுழியினை அமெரிக்காவே தோண்டுவதற்கே வழி வகுத்துள்ளதை இன்று அது உணர்ந்து வருகிறது.

பொய்யர்கள் ஒருபோதும் உண்மை பேசமாட்டார்கள் - எனினும் கதவிற்கு பின் நின்று அவர்கள் எழுப்பும் முணுமுணுப்பை எம்மால் கேட்க முடிந்தால் - அவர்களுடைய விரக்தி நிலையை எம்மால் மட்டிட முடிந்தால் - அவர்கள் து}ங்காத இரவுகளை கணக்கிட முடிந்தால் - அவர்களின் அழுகின்ற இதயங்களை கண்காணிக்க முடிந்தால் - அவை அனைத்தும் அமெரிக்கர்கள் முஸ்லிம்களுடனான மோதலில் தாம் வசமாக மாட்டிக் கொண்டதை எண்ணி களங்குவதை உணர்த்தும். அவர்கள் இஸ்லாத்தை தமது முதற்தர எதிரியாக நடத்துவதற்கு முயற்சித்து சோர்ந்து போயிருக்கிறார்கள். இஸ்லாம் எனும் அந்த சக்தன் பாரிய வலிமை கொண்டவனாகவும், இனிமேலும் எவரும் தன்னை அடிமைப்படுத்துவதை சகித்துக் கொள்ளாதவனாகவும் இன்று மாறி விட்டான்.

1924ம் ஆண்டு மார்ச் 3ம் திகதியில் கிலாபா முற்றாக வீழ்த்தப்பட்ட பின்னர், முஸ்லிம் உம்மத் ஓர் ஆழ்ந்த து}க்கத்தில் வீழ்ந்து விட்ட நிலையில், முழு மேற்குலகும் நீயா நானா எனப்போட்டி போட்டுக் கொண்டு, முழு முஸ்லிம் உலகையுமே மேய்ந்து மென்று ஏப்பமிட ஆரம்பித்தார்கள். அல்லாஹ்(சுபு) முஸ்லிம் உலகிற்கு வளங்கிய பாரிய வளங்களையெல்லாம் குப்பார்கள் தமது திறைசேரியை நிறைக்க பயன்படுத்திக்கொண்டார்கள். து}க்கத்திலிருந்த முஸ்லிம்களின் நிலை படிப்படியாக உணர்விழந்த ‘கோமா’ நிலைக்கு சென்றுகொண்டிருந்தது. இந்த நிலை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று முழு முஸ்லிம் உலகின் அயோக்கிய ஆட்சியாளர்களும் பிராத்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலை கண்டு ஆனந்தமடைந்த அமெரிக்காவும் முஸ்லிம்களை அந்த நிலையிலேயே பேணி வரலாம், அவர்களும் தொடர்ந்து அவ்வாறே இருந்து விடுவார்கள் என நினைத்திருந்தார்கள். எனினும் அவர்களின் கர்வமும், முட்டாள்த்தனமும் அவர்களைக் குளவிப்பொந்தில் நுழைந்த கதைபோல் ஆக்கிவிட்டது. அதிலும் முஸ்லிம்கள் குறித்து தப்புக்கணக்குப் போட்டு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்பதை ஆரம்பித்த அமெரிக்காவுக்கு இன்று கண்கள் பிதிங்கி விட்டன.

எனினும் இன்று முஸ்லிம் உலகு தனது உண்மையான மறுமலர்ச்சிக்கான தேட்டத்தை எட்டி விட்டிருக்கின்றது. இஸ்லாமிய வாழ்வியல் அமைப்பை மீண்டும் நிலைநாட்டுவதை தமது இலக்கின் மையமாகவும், இஸ்லாமிய ஷாPஆவை கொண்டு தாம் முற்று முழுதாக ஆளப்படுவதை மிக முக்கியமான கருத்தாடலாகவும் அவர்கள் மாற்றிவருகிறார்கள். அரசியல், சமூக, பொருளாதார, இராணுவ அனைத்துத் துறைகளிலும் ஷாPஆவின் முழுமையான அமுல்படுத்துதலை அவர்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். அல்லாஹ்(சுபு)வுக்கே எல்லாப் புகழும்!

முஸ்லிம்கள் தற்போது அரேபியாவை ‘சவூதி அரேபியா’ தன்னைத்தான் அழைப்பதைப் போல் அழைக்க மறுத்து வருகிறார்கள். ஏனெனில் சவூத்தின் குடும்பம் மோசடிக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், நயவஞ்சகர்கள் என்பதை உணர்;ந்து கொண்ட முஸ்லிம் உம்மா அரேபியாவை உம்மத்தின் சொத்தாக பார்க்க விளைந்துள்ளது. ஐக்கியமான ஒரு உம்மத்;தாக வாழ்வதும், ஒரு கலீபாவைக்கொண்டு ஆழப்படுவதும் மிகவுமே சாத்தியமானது என்பதை அவர்கள் உணரத் தளைப்பட்டுள்ளார்கள். உருவாக இருக்கும் பரந்து விரிந்த கிலாபத்திற்கு முன்னால் ஐரோப்பிய ஒன்றியமும், ஓர் உலக அரசும் (ழநெ றழசடன பழஎநசnஅநவெ)இ வல்லரசுகளும் ஒர் பொருட்N;ட அல்ல என்பதை அவர்கள் புரிந்து வருகிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் இன்னும் காலம் கடக்காமல் தற்போதாவது விழித்துக் கொண்டதில் அமெரிக்காவின் து}ர நோக்கற்ற திட்டங்கள் அதிகளவில் பங்களித்துள்ளன. அமெரிக்காவின் முட்டாள்தனமான இந்தத் திட்டங்களுக்காக நாம் நன்றி சொன்னாலும் தப்பில்லை.

கருணை, கொடூரத்தினால் ஜெயிக்கப்பட்ட, உண்மை பொய்யினால் மறைக்கப்பட்ட, வெளிப்படைத்தன்மை இராணுவச் சீருடையால் சுருட்டப்பட்ட இன்றைய உலகில் நீதியின் அர்த்தினைக் கூட உலகம் மறந்து விட்டுள்ளது. நீதியின் யெமனான அமெரிக்கா தானே பரப்பிய கொடூரத்தின், பொய்யின், அநீதியின் பிடியிலேயே சிக்கி அதன் அழுத்தத்தினால் சரிந்து கொண்டிருப்பதை, சிந்திக்கும் உலகம் கண்ணாரக் காண்கிறது. இதன் நடுவில் சவக்காளையான அமெரிக்காவை யார் ஆழ்வது என கிலாரியும், ஒபாமாவும், மெக்கைனும் போட்டி போடுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

எனவே இன்றயை உலக ஒழுங்கு வெகு சீக்கிரத்தில் மாறப்போகிறது என்பதை நாம் தயங்காமல் சொல்லலாம் இன்ஷா அல்லாஹ்(சுபு). இது வெறுமனவே உணர்வுகளின் வார்த்தையல்ல, நடுநிலையாக உலக அரசியலை ஆராயும் எவரும் இந்த முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை. குற்றத்தின் மீது ஏறி நின்று மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்கள் குற்றவாளிகளாக கருதப்படாத இன்றைய தீய உலக ஒழுங்கில், அப்பாவி முஸ்லிம்களை இந்த உலகம் துரத்தித் துரத்தி ‘பயங்கரவாதிகள்’ எனப் பெயர் சூட்டுமானால் அந்த போலிக் குற்றச்சாட்டுக்களை கண்டு முஸ்லிம்கள் ஒருபோதும் சளைத்துப் போகத் தேவையில்லை. மாறாக இந்த பொய்க் குற்றச்சாட்டுகள் சிந்திக்கக் கூடிய மக்கள்; மத்தியில் வீழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய உலக ஒழுங்கிற்கு, இஸ்லாத்தினை ஒரு அறிவார்ந்த, சித்தாந்த hPதியான, அரசியல் மாற்றீடாக கைக்கொள்வது பற்றி சிந்திக்க துண்டும் என்பதை புரிந்து கொண்டு முஸ்லிம்கள் தலைசாய்க்காது போராடத்தை தொடர வேண்டும்.

No comments:

Post a Comment