May 21, 2011

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 06 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

இங்கே ஒருகேள்வி எழுகிறது.

அதாவது முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துகிறார்களா? அல்லது அவர்கள் அடிப்படை கோட்பாட்டை மட்டும் தழுவிக் கொண்டு இஸ்லாத்திற்கு அந்நியமான வழிமுறைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துகிறார்களா? இதற்கு இதுதான் பதில்:

இறைதூதர்(ஸல்) அவர்கள் மதினா வந்தது முதல் கி.பி.1918வரை (A.H. 1336) இஸ்லாமிய அரசு காலனி ஆதிக்க வாதிகளின் கைகளால் வீழ்த்தப்படும் வரை, அனைத்து காலங்களிலும் முஸ்லிம்கள் இஸ்லாத்தையே நடைமுறைப்படுத்தி வந்தார்கள். முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தியது மிக விரிவான விஷயமாகும். வெற்றிகரமாகவும், வெற்றி கொள்ள முடியாதவர்களாகவும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள்.

நடைமுறையில் இஸ்லாத்தை செயல்படுத்துவதை, ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பு வகிக்கும், இரண்டு தரப்பினர் உறுதிப்படுத்துகின்றனர். ஒருவர் நீதிபதி அவர் மக்களின் விவகாரங்களை தீர்த்து வைப்பவர். மற்றவர் ஆட்சியாளர், அவர் மக்களை ஆட்சி செய்பவர். தொடர்ச்சியான அறிவிப்புகள் (Tawatur) மூலம் கூறப்படுவது என்னவென்றால், அல்லாஹ்(சுபு)வின் தூதர்(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இஸ்லான்புல்லின் (Istanbul) இஸ்லாமிய கிலாஃபா அரசு மறையும் வரை மக்களின் விவகாரங்களை தீர்த்து வைக்கும் நீதிபதிகள் ஷரிஆ சட்டங்களின் அடிப்படையில்தான் அனைத்து விவகாரங்களையும் தீர்த்து வைத்தார்கள். இது முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவருக்கும், முஸ்லிம்களும் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. உரிமை மீறல்கள், குடும்ப விவகாரம், குற்றவியல் தண்டனை ஆகிய அனைத்து விவகாரங்கள் அனைத்தையும் நீதிமன்றம் தீர்த்து வைத்தது. இந்த நீதிமன்றம் இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களின் அடிப்படையிலுள்ள ஒரே நீதிமன்றமாக மட்டுமே இயங்கி வந்தது. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு வழக்கும் இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் தீர்த்து வைக்கப்பட்டதாக, எந்த ஒரு அறிவிப்பும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. இஸ்லாமிய நாடுகளிலுள்ள எந்த ஒரு நீதிமன்றமும், எந்த ஒரு வழக்கையும், இஸ்லாம் அல்லாதவைகளைக் கொண்டு தீர்ப்பு கூறவில்லை. இந்த நிலை காலனி ஆதிக்கவாதிகளின் தொடர்ச்சியான ஆதிகத்தினால் இஸ்லாமிய நீதிமன்றம் ஷரிஆ நீதிமன்றம் (Shariah Court) நிஸாம் நீதிமன்றம் (Nizam Court) என இரண்டு வகை நீதிமன்றங்களாக பிரிக்கப்படும்வரை இருந்து வந்தது. பழம்பெரும் நகரங்களான ஜெருசலம், பாக்தாத், டமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களில் அமைந்த ஷரிஆ நீதிமன்றங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் இதற்கான தெளிவான ஆதாரம் அடங்கியிருக்கிறது. இந்த ஆவணங்கள் நீதிபதிகள் ஷரிஆவை நடைமுறைப்படுத்தினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்களாக திகழ்கின்றன.

சலிம் அல்பஸ் (Saleem al Baz) போன்ற முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இஸ்லாமிய ஃபிக்ஹ் சட்டங்களை (Islamic Fiqh) பயிலவும் எழுதவும் செய்தார்கள். அவர் அல்மஜல்லாஹ் (Al - Majallah) என்ற மாத இதழில் இதற்கு வர்ணனைகளை (Commetary) எழுதினார். இஸ்லாமிய அரசின் இறுதி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களைப் பொருத்தவரை அவைகள் இஸ்லாமிய அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பு (Fatwa) அடிப்படையில் கொண்டு வரப்பட்டவை. அவைகள் அஹ்காம் ஷரிஆவிற்கு முரண்பாடாக இருக்க வில்லை. முடிவாக, 1275ல் (கி.பி.1857) உத்மானிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் உரிமையியல் சட்டங்களும் வணிக சட்டங்களும் (Law of Rights and Trade) 1276A.H. ல் (கி.பி. 1858) அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1288A.H.ல் (கி.பி.1870) நீதிமன்றம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் ஷரிஆ நீதிமன்றம் (Shariah Court) மற்றும் அலுவலக சட்ட நீதிமன்றம் (Official Law Court) ஆகிய நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1295A.H.ல் (கி.பி. 1877) அபராத தண்டனை விதிக்கும் நீதிமன்றங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 1296A.H.ல் (கி.பி. 1878) உரிமையியல் மற்றும் அபராத நடைமுறைகள் வெளியிடப்பட்டன. இதன்போது உரிமையியல் சட்டங்களை பயன்படுத்துவதற்கு எந்த முகாந்திரத்தையும் உலமாக்கள் அறியாததினால் அவைகளை கிடப்பில் போட்டு விட்டார்கள். 1286A.H.ல் (கி.பி.1868) கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு (Muamlat - Transactions) அரசாணையாக அல் மஜல்லாஹ் என்ற ஷரிஆ மாத இதழ் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் இஸ்லாம் அனுமதித்த சட்டங்கள் என்ற வகையில்தான் அரசாணைகளாக (Canons) வெளியிடப்பட்டன. இவை ஷேக் அல் இஸ்லாமினால் முறையாக தீர்ப்பு செய்யப்பட்டு, அவைகளை அவர் அனுமதித்த பிறகுதான் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. எனினும் கி.பி.1918 முதல் இஸ்லாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து வந்த காலனி ஆதிக்க அதிகாரிகள் சில உரிமையியல் வழக்குகளை இஸ்லாம் அல்லாத சட்டங்களைக் கொண்டு தீர்த்து வைத்தார்கள். ஆனால், காலனி ஆதிக்க இராணுவம் ஆக்கிரமிப்பு செய்யாத நாடுகளின் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தாத போதிலும், சமீபகாலம் வரை நீதித்துறை தொடர்ந்தும் இஸ்லாத்தின் சட்டங்களின் படிதான் செயல்பட்டு வந்தது. உதாரணமாக, ஆப்கானிஸ்தான், ஹிஜாஸ், நஜ்து (ஆகிய அரபிய தீபகற்பம்) மற்றும் குவைத் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இதிலிருந்து எமக்கு விளங்குவது என்னவென்றால் நீதித்துறையில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததுடன்;, இஸ்லாமிய அரசின் நெடிய காலம் முழுவதும் நீதித்துறையில் இஸ்லாம் அல்லாத சட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதேயாகும்.

ஆட்சியாளர்களால் ஐந்து துறைகளில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படுவது அஹ்காம் ஷரிஆவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை சமூகத்துறை, பொருளாதாரத்துறை, கல்வித்துறை, வெளிநாட்டு விவகாரத்துறை மற்றும் ஆட்சித்துறை ஆகியன. இந்த துறைகள் தொடர்பான அஹ்காம் ஷரிஆ அனைத்தும் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூகவியல் வழிமுறை (Social System) ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உறவையும், இந்த உறவின் விளைவாக எழும் விஷயங்கள் (தனிநபர் அந்தஸ்து) அனைத்தையும் விளக்குகிறது. இஸ்லாமிய நாடுகளில் காலனி ஆதிக்க சக்திகள் நிலைத்திருந்த போதிலும், குஃப்ர் ஆட்சிமுறை இருந்தபோதிலும், சமூகத்துறையில் ஷரிஆ மட்டுமே செயல்படுத்தப்பட்டது. மேலும் நிச்சயமாக வேறு எந்த வழிமுறையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொருளாதாரத் துறையைப் பொருத்தவரை, அது இரண்டு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவதாக, மக்களின் விவகாரங்களை கவனித்துக் கொள்வதற்காக அரசு பொது மக்களிடம் வருவாய் வசூலிக்கும் முறை, இரண்டாவதாக வருவாய்களை செலவிடும் முறை. வருவாய்களை வசூலிக்கும் விஷயத்தைப் பொருத்தவரை, அரசு ஸகாத்தை ரொக்கமாகவும், நிலமாகவும், கால் நடைகளை பெற்றுக் கொள்வதைக் கொண்டும் வசூலித்து வந்தது. இதை முஸ்லிம்கள் கடமையாகவும், வணக்கமாகவும் கருதி செலுத்தி வந்தார்கள். இந்த பணம்; திருமறை குர்ஆன் குறிப்பிடப்பட்டள்ள எட்டு பிரிவினருக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டது. தனது செலவினங்களுக்காக ஒருபோதும் அரசு ஸகாத் தொகையை பயன்படுத்தியதில்லை. ஷரிஆவின் கட்டளைப்படி தனது செலவினங்களுக்கு தேவையான பணத்தை அரசு வசூலித்தது.

ஆகவே, விளை நிலங்களுக்கு வரி(கரஜ்) வசூலிக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து ஜிஸ்யா வசூலிக்கப்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டு வணிகத்தின் மேற்பார்வையாளர் என்ற முறையில் சுங்க வரியை அரசு வசூலித்தது. ஷரிஆவின் கட்டளைகளுக்கு முரண்பாடாக அரசு நிதி வசூலித்தது கிடையாது. ஊனமுற்றவர்களின் நிதி விநியோகத்தைப் பொருத்தவரை அரசு நஃபகாஹ் (Nafeqah - நிதியுதவி) வழிமுறையை செயல்படுத்தியது. இயலாமையிலுள்ளவர்களையும், (Safeeh) ஹராமான வழியில்; செலவு செய்பவர்களையும் (Mubaddin) காப்பாளராக இருந்து அரசு கவனித்து வந்தது. ஒவ்வொரு நகரங்களிலும் யாத்திரீயர்களுக்காகவும், ஆதரவற்றவர்களுக்காகவும், பயணிகளுக்காகவும் சாலை நெடுகிலும் விடுதிகளை அரசு நிர்மாணித்திருந்தது. இதன் நினைவுச்சின்னங்கள் பிரதான இஸ்லாமிய நகரங்களில் இன்றளவும் காணப்படுகின்றன. அரசின் செலவினங்கள் முற்றிலும் ஷரிஆவின் வழிமுறைப்படி கட்டுப்படுத்தப்பட்டதுடன் வேறு எந்த வழிமுறைகளின்படியும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த துறைகளில் ஏற்பட்ட எந்த ஒரு குறைபாடும் கவனக்குறைவினாலும், தவறான நடைமுறைப்படுத்தலின் காரணமாகவும் ஏற்பட்டதே தவிர ஷரிஆ நடைமுறைகள் இல்லாத காரணத்தினால் அல்ல.

கல்விக்கொள்கையின் அடித்தளமாக இஸ்லாமே இருந்தது. பாடத்திட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய கலாச்சாரத்தைக் கொண்டதாக இருந்தது. இஸ்லாத்தோடு முரண்படும் அந்நிய கலாச்சாரம் எதுவும் பின்பற்றப்படாமல் இருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. உதுமானிய கிலாஃபா அரசின் இறுதி காலகட்டத்தில் புதிய கல்விக்கூடங்களை திறப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அக்காலத்தில் காணப்பட்ட குறிப்பான பிற்போக்கு அம்சமாக இருந்தது. அக்காலகட்டத்தில் முஸ்லிம்களின் அறிவுத்திறனில் ஏற்பட்ட வீழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கியது. இஸ்லாமிய அரசின் அனைத்து காலகட்டத்திலும், இஸ்லாமிய பூமிதான் அறிஞர்களுக்கும், கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கிப்லாவாக இருந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கார்ட்டோபா (Cortoba), டமாஸ்கஸ், அலக்ஸாண்டிரியா, கெய்ரோ, பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்து பல்கலைக்கழகங்கள் உலகெங்கிலுமுள்ள கல்வித்துறை நடவடிக்கைகளில் மகத்தான விளைவை ஏற்படுத்தியிருந்தன.

இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை இஸ்லாத்தின் மீது அமைக்கப்பட்டிருந்தது. இஸ்லாத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் உறவுகளை இஸ்லாமிய அரசு நிர்ணயித்தது. மற்ற நாடுகள் அதனுடன் இஸ்லாமிய அரசு என்ற முறையில் நடந்து கொண்டன. அதனுடைய அனைத்து வெளிநாட்டு உறவுகளும் இஸ்லாத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் நலனின் அடிப்படையிலும் இருந்து வந்தது. இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை இஸ்லாமிய கொள்கையாகவே இருந்து வந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் தேவையில்லை என்ற அளவுக்கு உலகெங்கிலும் நன்கு அறியப்பட்டதாக இருந்தது.

தொடரும்...

warmcall.blogspot.com

No comments:

Post a Comment