May 1, 2011

இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8

இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்

இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதாயங்கள்தாம் உண்டு. ஒன்று இஸ்லாமிய சமுதாயம் இன்னொன்று ஜாஹிலிய்ய சமுதாயம் என்ற அஞ்ஞான சமுதாயம். இஸ்லாமிய சமுதாயம் என்பது அல்லாஹ் ஒருவனே என்பதை நம்பி அந்த அல்லாஹ் காட்டிய வழியில் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அமைத்துக் கொள்கின்ற சமுதாயம். ஜாஹிலிய்ய சமுதாயம் என்பது அதாவது அஞ்ஞான சமுதாயம் என்பது இஸ்லாத்தைப் பின்பற்றாத சமுதாயம். ஒரு சமுதாயத்தில் அங்கம் வகிப்பவர்கள் தங்களை முஸ்லிம்கள் என அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தொழுகை நோன்பு ஹஜ் போன்றவற்றையும் நிறைவேற்றி வருகின்றார்கள். ஆனால் ஷாPஅத் என்ற அல்லாஹ்வின் சட்டங்களைச் சட்டை செய்வதில்லை. இந்தச் சமுதாயத்தை இஸ்லாமிய சமுதாயம் எனக் கொள்ள முடியாது. இன்றைக்கிருக்கின்ற சூழ்நிலைகளுக்கேற்ப வாழும் இஸ்லாத்தைக் கற்றுத் தருகின்றோம். இது தான் நவீன இஸ்லாம் முன்னேற்றமான இஸ்லாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்(ஸல்)சொல்லாதவற்றையும் செய்யாதவற்றையும் கண்டுபிடித்து இஸ்லாத்தில் நுழைக்கின்றார்களோ அவர்களையும் பின்பற்றிச் சிலர் வாழுகின்றார்களே அந்தச் சமுதாயம் இஸ்லாமியச் சமுதாயமல்ல. ஜாஹிலிய்ய சமுதாயம் இறைவனின் வழிகாட்டுதல்களை அறவே அறிந்திடாத சமுதாயம். இது பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திடும். சுpல நேரங்களில் இந்த அஞ்ஞான சமுதாயம் இறைவனைப் பட்டவர்த்தனமாக மறுப்பது என்ற அளவில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும். அது மனித வரலாற்றையே பொருளாதாரப் போராட்டத்தின் வரலாறு எனப் பேசிக் கொள்ளும். பொன்னையும் பொருளையும் சுற்றி வாழ்வதே மனித வாழ்க்கை என சித்தாந்தம் பேசி சிந்தையைக் குழப்பும். மனித இனம் வாழவும் வளம் பெறவும் விஞ்ஞானப் பொதுவுடைமை என்றொரு போலித் தீர்வை முன்வைக்கும். மனிதன் சீரோடும் பேரோடும் வாழ இறைவனை இல்லை என்று சொல் அவனை இருக்கின்றான் என்று சொல்பவனை சாடு எனப் பறையறிவிக்கும். இந்த ஜாஹிலிய்யா இந்த மௌட்டிகம் இன்னும் சில காலங்களில் வேறொரு வேடம் ப10ண்டு தன் உருவை வெளிக்காட்டும். இங்கே அது இறைவன் இருக்கின்றான் என்பதைப் பகிரங்கமாக மறுப்பதில்லை. அது இறைவன் இருக்கின்றான் ஆனால் அவன் தன் ஆட்சியை ஆகாயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விதானத்தில் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றான். உலகில் வாழும் மனிதர்கள் வாழ்வுக்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அந்த ஆண்டவனின் ஆட்சி ப10மியைத் தொடவில்லை என்n;றல்லாம் வீம்பு பேசித் தன்னை வெளிப்படுத்திடும். ஷாPஅத் என்ற இறைவனின் சட்டங்களுக்கும் மனிதனின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கும் அவன் தன் வாழ்க்கைக்காகப் போட்டுக் கொள்ளும் திட்டங்களுக்கும் எந்த நிலையிலும் எந்தத் தொடர்புமில்லை என்றெல்லாம் தன்னை விளம்பரப்படுத்தி வெளிக்காட்டிக் கொள்ளும். இப்படித் தத்துவம் தந்து மக்களை மடையர்களாக மாற்றித் தன் கையில் வைத்துக் கொள்ளும் இந்த அஞ்ஞானம், மக்களை நீங்கள் மஸ்ஜிதுகள் என்ற பள்ளிவாயில்களுக்குச் சென்ற அல்லாஹ்வை தொழ வேண்டாம் எனத்தடுப்பதில்லை. அதேபோல் ஆலயங்களுக்கோ மடாலயங்களுக்கோ போக வேண்டாம் எனத்தடை விதிப்பதில்லை. தாராளமாய்ப் பின்பற்றுவோம் என அடம் பிடிக்காதீர். இந்த உலக வாழ்க்கையில் நாங்கள் தருகின்ற சட்டங்களைப் பின்பற்றி நாங்கள் வழங்கும் விதிகளுக்குட்பட்டு எங்களைத் தலை தாழ்த்தி வாழுங்கள் எனக் கட்டாயப்படுத்தும். அல்லாஹ்வின் ஷாPஅத்தைத் தான் நாங்கள் பின்பற்றுவோம் என உறுதியாய் நிற்பவர்களை இவை பொறுத்துக் கொள்ளமாட்டா. இப்படி இந்த அஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட மௌட்டீக சமுதாயங்கள் தங்கள் இறைமறுப்பை பக்குவமாகவும் பாங்காகவும் வெளிப்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளும். ஆனால் அல்லாஹ் அருள் மறையாம் திருக்குர்ஆனில் அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றான்:

வானத்திலும் அவன் தான் இறைவன் ப10மியிலும அவன் தான் இறைவன். ஆவனோ மிக்க ஞானமுடையோனும் நன்கறிந்தோனுமாக இருக்கின்றான் (அல்குர்ஆன் 43:84)

அல்லாஹ் தனது ஆட்சியும் ஆளுமையும் ப10மியிலும் வானங்களிலும் இருக்கும் என அறிவிக்கும் போது அது ப10மியில் இல்லை. வேண்டுமானால் வானத்தில் இருக்கட்டும். ப10மியில் எங்கள் ஆட்சியே நிலைக்கும் என்று இறைவனின் அதிகாரத்தை அபகரிக்கும் இந்தச் சமுதாயங்கள் அஞ்ஞான சமுதாயங்களே. இறைவன் இன்னும் கூறுகின்றான் :

..சகல அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (மற்றெவருக்கும்)இல்லை. அவனைத் தவிர (மற்றெவரையும்)நீங்கள் வணங்கக்கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான்.. (அல்குர்ஆன் 12 : 40)
இந்த இறைமொழி நாம் மேலே விவரித்த சமுதாயங்கள் மௌட்டீக சமுதாயங்களே என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதனால் தான் நாம் கூறுகின்றோம் இஸ்லாமிய சமுதாயம் மட்டுந்தான் நாகரிகமான பண்பாடான சமுதாயம் அதன் இயல்பினாலேயே அஃதோர் நாகரிகமான சமுதாயம். இதற்கு நேர் எதிராக அஞ்ஞான சமுதாயங்கள் மௌட்டீகத்தைச் செயல்முறையாகக் கொண்டு வாழும் சமுதாயங்கள், ஆண்டவனை வானத்தோடு நிறுத்திவிட்டு தங்கள் ஆதிக்கத்தைப் ப10மியில் நிலைநாட்டி வாழும் சமுதாயங்கள் பிற்போக்கானவை. இந்த உண்மையைச் சற்று விளக்கிச் சொல்லிவிடுவது இங்கே இன்றியமையாதது. ஓருமுறை நான் என்னுடைய நூல் ஒன்றுக்கு இஸ்லாமிய சமுதாயமே நாகரிகமான சமுதாயம் எனப் பெயரிட்டேன்.

அந்நிலையில் அந்த நூல் அச்சாகிக் கொண்டிருந்தது. விளம்பரங்கள் வெளிவந்தன. இந்த விளம்பரங்கள் அல்ஜீரிய எழுத்தாளர் ஒருவரின் பார்வையிலும் பட்டது. இப்படி ஒரு சமுதாயத்தைத் தலைக்குமேல் தூக்கிவைத்துப் பேசுவது ஆணவமானது என்றும் இது என்னுடைய சிந்தனையின் முதிர்ச்சியற்ற நிலையையே காட்டுகின்றது என்றும் சாடினார் அவர். நான் அந்த எழுத்தாளரை மன்னித்துவிட்டேன். காரணம் இவர் ஏன் இப்படிக் கடிந்து விழுகின்றார் என்பதை நானறிவேன். நானும் ஒரு காலக்கட்டதத்pல் இந்த அல்ஜீரிய எழுத்தாளரைப் போல் இஸ்லாமிய சமுதாயம் என்பது என்னவென்று தெரியாமல் வாழ்ந்தவன் தான்.

அந்நிலையில் நான் மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் முழுமையாக அமிழ்ந்திருந்தேன். என்னுடைய சிந்தனை அந்த மேலை நாட்டுப் பாணியில் சிந்தித்துப் பழகிப் போயிருந்தது. நான் இந்த மேலைநாட்டுப் பாணியில் என்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தபோது கூட இஸ்லாத்தின் பால் நேசங்கொண்ட ஒருவனாகவே என்னை நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த வெளியேயுள்ள சிந்தனைகள் என்னுடைய அறிவை ஆக்கிரமித்திருந்ததை நான் அறிந்திடவில்லை. என் அறிவைக் கவ்வியிருந்த இந்தக் காரிருள் விலகியப் பின்னர்;தான் நான் இஸ்லாத்தின் வெளிச்சத்தைக் கண்டேன். புதியதோர் ஒளி புதியதோர் உலகம் இல்லை புதியதோர் பிரபஞ்சமே என்னை வரவேற்றது. எனது அறிவையும் உணர்வையும் ஆழப்படுத்தியது. ஆகலப்படுத்தியது இஸ்லாம். அப்போது தான் இஸ்லாமிய சமுதாயத்தின் பல்வேறு பரிணாமங்களும் எனது பார்வையில் பட்டன. ஆழ்ந்து அதில் முத்தெடுத்தேன். இஸ்லாமிய சமுதாயம் மட்டுந்தான் உண்மையான நாகரிகமான சமுதாயம் என்பதைத் தெளிந்தேன். அதனை எழுத்தாய்த் தந்தேன். இந்த அல்ஜீரிய எழுத்தாளர் என்னுடைய பழைய மனநிலையில் இருக்கின்றார். அவருடைய சிந்தனை அந்த மேலை நாட்டு மோகத்தில் வெளிச்சத்தைக் காணவில்லை இன்னும் என்னுள் ஏற்பட்ட எத்தனையோ மாற்றங்கள் அவருள் ஏற்படவேண்டியதிருக்கின்றது. அவரது அறிவைக் கல்வி அழுத்திக் கொண்டிருக்கும் அஞ்ஞான சிந்தனையிலிருந்து விடுதலை பெறும் வரை மன்னிப்பதே மாண்பு இஸ்லாமிய சமுதாயந்தான் உண்மையான நாகரிகமான சமுதாயம் என்பதை விளக்கவந்த வழியில் தான் இந்த அல்ஜீரிய எழுத்தாளரைப் பற்றியக் குறிப்பைத் தந்தேன்.

இப்போது நாம் இஸ்லாமிய சமுதாயந்தான் நாகரிகமான சமுதாயம் என்பதன் விளக்கத்தைப் பார்ப்போம். முதன் முதலில் நாகரிகம் என்பதன் பொருளைப் புரிந்து கொள்வோம். ஒரு சமுதாயம் இருக்கின்றது. இந்தச் சமுதாயத்தில் இறைவனே அதிகாரி. ஆட்சியாளன். இந்தச் சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழியே வாழ்கின்றன. இந்தச் சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவும் அந்த அல்லாஹ்வின் ஷாPஅத் படியே அசைகின்றன. இந்தச் சமுதாயத்தில் யாருக்கு யாரும் அடிமையல்ல. ஒவ்வொரு மனிதனும் உண்மையான முழுமையான சுதந்திரத்தைப் பெற்று வாழுகின்றான். ஒவ்வொருவரும் தனது திறமைகளையும் ஆற்றல்களையும் தாராளமாகப் பயன்படுத்திடும் உரிமை அங்கே இருக்கின்றது. இந்த உரிமையைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தி விளைவிக்கும் பலன்கள் அந்தச் சமுதாயத்தின் வாழ்வுக்குப் பயன்படுகின்றது.

இப்படி முழுமையான சுதந்திரத்தோடு வாழும் ஒரு சமுதாயமே நாகரிகமான சமுதாயம். இதுவே மனித நாகரிகம். நாகரிகம் என்பதன் அடிப்படையே எல்லோருக்கும் முழுமையான விடுதலை. சுதந்திரம் என்பதன் அடிப்படையில் ஏற்படுவதே. மனித நாகரிகம் என்பதன் உயிர் மூச்சே எல்லோரும் சமம், யாருக்கும் யாரும் குறைந்தவனல்ல யாருக்கு யாரும் அடிமையல்ல என்ற அடிப்படையின்மேல் எழுப்பப்படும் பண்பாடுதான். இதற்கு நேர்மாறாக ஒரு சமுதாயம் இருக்கின்றது. இந்தச் சமுதாயத்தில் சில மனிதர்கள் சீமான்களாகவும் கோமான்களாகவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் தாம் சட்டங்களையும் தங்களுக்குத் தாழ்பணிபவர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற விதிகளையும் வகுத்துத் தருகின்றார்கள். இதே சமுதாயத்தின் இன்னொரு பிரிவினர் அடிமைகளாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கு இந்தச் சீமான்கள் சொன்னதைச் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றொரு நிலை. தங்கள் திறமைகளைப் பயன்படுத்திட சுதந்திரம் வழங்கப்படவில்லை. தங்கள் ஆற்றல்களைப் பயன்படுத்தி ஆளாக முடிவதில்லை. இவர்கள் தங்கள் ஆற்றல்களையும் திறமைகளையும் அந்தக் கோமான்களின் போக வாழ்வுக்குத்தாரை வார்த்துத் தந்திட வேண்டியதிருக்கின்றது. இந்தச் சமுதாயமே நாகரிமற்ற சமுதாயம்.

இங்கே ஓர் கருத்தைத் தெளிவுபடுத்திடுவது அவசியம். சில சடங்குகள் சம்பிரதாயங்கள் இவைகளைக் குறித்து சில நெறிமுறைகளை வகுப்பது தான் சட்டம் என்றொரு கருத்து பரவலாகப் புழக்கத்திலிருக்கின்றது. ஷாPஅத் என்ற அல்லாஹ்வின் சட்டங்களுக்கும் இப்படித் தான் மிகக் குறுகலானதொரு பொருள் தரப்படுகின்றது. இல்லை இது நிச்சயமாகத் தவறு. இந்தக் குறுகலான பொருள் ஏனைய சட்டங்களுக்குப் பொருந்தலாம் நிச்சயமாக இறைவனின் சட்டங்களாம் ஷாPஅத்திற்குப் பொருந்தாது. ஷாPஅத் சட்டங்கள் மனிதனின் சிந்தனை அவனது எண்ணம் இவற்றால் விளையும் அவனது செயல் வாழ்க்கையில் அவன் கொள்ள விரும்பும் தத்துவங்கள் செயல்முறைகள் பண்பாடுகள் கலாச்சாரங்கள் மண ஒப்பந்தங்கள் பண ஒப்பந்தங்கள் ஆன்மீக விருப்பங்கள் உணர்வுகள் கோபதாபங்கள் வணக்கங்கள் உறவுகள் இப்படி அனைத்தையும் தழுவி நிற்பன. இத்தனை விவகாரங்களிலும் வாழ்வின் அத்தனை விவகாரங்களிலும் மனிதர்கள் மீது ஒரு சிறு கும்பல் சீமான்கள் சட்டங்கள் எனத் தங்கள் தான்தோன்றித் தனத்தைத் திணித்துக் கொண்டிருப்பது தான் அநாகரிகம் நாகரிகம் என்பதற்கு எதிரானது.

இந்தச் சமுதாயந்தான் இஸ்லாமிய சொல்லாட்சியில் அஞ்ஞான சமுதாயம் என அழைக்கப்படுகின்றது. எந்த ஒரு சமுதாய அமைப்பில் மனிதர்களின் மனதிலே வாழும் நம்பிக்கையும் அவர்களின் வாழ்க்கையிலே வெளிப்படும் வழிகாட்டுதல்களும் இறைவன் ஒருவனே என்ற கொள்கையை அடியொற்றி அமைந்திருக்கின்றதோ அந்தச் சமுதாயமே கண்ணியமிக்க சமுதாயம். அந்தச் சமுதாயத்தில் அங்கம் வகிப்பவர்களே கண்ணியத்தோடு வாழ்ந்திட முடியும். எந்தச் சமுதாயங்களில் மனிதனின் கண்ணியம் அவனது தோல் சார்ந்த நிறத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றதோ எந்தச் சமுதாயத்தில் மனிதனின் கண்ணியம் அவன் பிறந்த நிலத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றதோ அந்தச் சமுதாயங்கள் நிம்மதி இழந்து நிலை குலைந்தே வாழும். அங்கே ஒரு சாரார் எல்லாக் கண்ணியங்களையும் இழந்து இன்னொரு சாராருக்கு அடிமைகளாகக் குற்றேவல் புரிந்து குனிந்தே வாழ்ந்து வருவார்கள். இந்தச் சமுதாயத்தை எப்படி ஒரு கண்ணியமான சமுதாயமாகக் கருத முடியும்?. அதே போல் எந்தச் சமுதாயத்தில் மனிதர்களின் கண்ணியம் அவன் பிறந்த இனம் அல்லது குலம் என்பதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றதோ அந்தச் சமுதாயத்தையும் பண்பாடான கண்ணியமான நாகரிகமான சமுதாயமாகக் கொள்ள முடியாது. மனிதன் தான் கொண்ட கொள்கையை மாற்றிடும் மனத்திடமும் அறிவுப் பலமும் பெற்றவன். தான் நம்பிய கொள்கை தவறானது என்பதை அறிந்தவுடன் அதனை மாற்றிட முடியும். தான் ஏற்றுக் கொண்ட இறை நம்பிக்கை தவறு என உணர்ந்தால் அவனால் அதை மாற்றிட முடியும். தனது நிறந்தான் தான் கண்ணியக்குறைவாக நடத்தப்படுவதற்குக் காரணம் என்பதை அறிந்தாலும் அவனால் அதை மாற்றிட இயலுமா? தான் பிறந்த இடந்தான் தனக்கு உரிமைகள் மறுக்கப்படுவதற்குக் காரணம் என்பதை அறிந்தாலும் அவனால் அதை மாற்றிட முடியுமா? தான் பிறந்த இனந்தான் தான் அடிமையாக நடத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்தாலும் அவனால் அதை மாற்றிட இயலுமா? எந்த இடத்தில் பிறந்;தாலும் எந்த இனத்தில் பிறந்தாலும் எந்த நிறத்தில் பிறந்தாலும் மனிதன் மனிதனே அவனது உணர்வுகள் உறவுகள் உரிமைகள் எல்லாம் எல்லோரையும் போன்றது தான். ஓர் இடத்தில் பிறந்தது ஓர் இனத்தில் பிறந்தது ஒரு மொழி பேசுவோரிடையே பிறந்தது ஒரு குறிப்பிட்ட நிறத்தோடு பிறந்தது ஒரு மனிதனின் தவறன்று.

இப்படி அவன் செய்யாத தவறைக் காரணங்காட்டி அவனது உரிமைகளைப் பறிப்பது திறமைகளை மாய்ப்பது கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது எந்த நியதியின் கீழும் வராது. இதனால் தான் இந்தப் பேதங்களைக் கற்பிக்கும் சமுதாங்களை நாகரிகமான சமுதாயங்கள் என ஏற்றுக் கொள்வதற்கில்லை. அதனால் தான் இந்தச் சமுதாயங்களை என அழைக்கின்றது இஸ்லாம். இந்தச் சமுதாயங்களுக்கு நேர் எதிரானது இஸ்லாமிய சமுதாயம். அங்கே மேலே சொன்னவற்றால் மனிதன் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதில்லை. அங்கே எல்லோரும் மனிதர்களாகவே மதிக்கப்படுகின்றார்கள். ஆதலால் தான் இஸ்லாமிய சமுதாயமே நாகரிகமான சமுதாயம் எனப் போற்றப்படுகின்றது. உலகிலிருக்கும் ஏனைய எல்லா சமுதாயங்களிலும் இஸ்லாமிய சமுதாயம் மட்டுமே மனித உறவுகளையும் கண்ணியத்தையும் மனிதன் ஏற்றுக் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்புகின்றது.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவன் கறுப்பு நிறத்தை உடையவனாக இருந்தாலும் வெள்ளை நிறததை உடையவனாக இருந்தாலும் அவன் அரபு மொழியை பேசுபவனாக இருந்தாலும் இதர மொழிகளைப் பேசுபவனாக இருந்தாலும் கிரேக்கத்து தேசியத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் பாரசீகத்துப் பேரரசைச் சார்ந்தவனாக இருந்தாலும் கண்ணியத்தில் உரிமையில் உறவில் சமமானவனே. இறை நம்பிக்கையின் அடிப்படையில் மனிதர்களை ஏற்றத்தாழ்வின்றி நடத்திடும் ஒரே கொள்கை இஸ்லாமே. மனிதர்களுள் கண்ணியமானவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் ஒழுக்கத்தில் சிறந்தவர்களே. இந்த ஒரு விதிவிலக்கை விடுத்துவிட்டால் எல்லோரும் எல்லா நிலைகளிலேயும் சமமானவர்களே குறிப்பாக சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுபோல் நடத்தப்படுவர். ஏனெனில் இந்தச் சமுதாய அமைப்பில் அதாவது இஸ்லாமிய சமுதாய அமைப்பில் சட்;டங்கள் அனைவரையும் படைத்த ஆண்டவனால் அருளப்பெற்றது. அல்லாமல் சில மனிதர்களால் தொகுக்கப் பெற்றதன்று. மனிதனுக்குச் சிறந்த கண்ணியத்தை வழங்குகின்ற சமுதாயம் அதிலும் ஒழுக்கத்தில் விழுப்பம் நிறைந்தவர்களைப் பெரிதாகப் போற்றிவாழும் ஒரு சமுதாயமே நாகரிகமான சமுதாயம். எத்துணை ஒழுக்கக் கேடுகளில் வேண்டுமானாலும் வீழட்டும். கண்ணைமூடிக்கொள் அவனிடம் பணமிருக்கின்றதா பார். பணமிருந்தால் அவனே உயர்ந்தவன் எனப்பேசிடும் சுகபோகிகளையும் அடுத்தவர்களைச் சுரண்டி வாழ்வதைத் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் கொள்கையாகக் கொண்ட சமுதாயத்தையும் எப்படி நாகரிகமான சமுதாயம் என ஏற்றுக் கொள்ள இயலும். இப்படி ஒரு சமுதாய அமைப்பை நாம் ஐரோப்பாவில் பார்க்கின்றோம். இதே போன்றதொரு அமைப்புதான் அமெரிக்காவிலும் செயலில் இருக்கின்றது. இந்தப் போகவாழ்வின் மோகத்தில் அவர்கள் மனித மாண்புகள் அனைத்தையும் மண் தோன்றிப் புதைத்து விட்டார்கள். இருப்பினும் அவர்கள் தாங்கள் தாம் நாகரிகமானவர்கள் என வாய்கிழியப் பேசிக் கொள்கின்றனர். கொலையும் சூதும் சுரண்டலும் விபச்சாரமும் மலிந்து கிடக்கும் ஒரு சமுதாயத்தை எப்படி நாகரிகமான சமுதாயம் எனப் பேசிட முடியும். இதே போல்தான் கம்ய10னிச நாடுகளும் கம்ய10னிசத்தைத் தங்கள் வாழ்க்கை வழியாக எடுத்துக்கொண்ட சமுதாயங்களும். மனித வரலாறும் வாழ்க்கையும் வயிற்றை நிரப்பிட போடும் போரின் விளைவுகளே எனப் பேசுகின்றன கம்ய10னிச நாடுகள். இதே போரில் மனிதனிடம் வெளிப்பட்டு வளர்ந்திட வேண்டிய அத்தனை மாண்புகளும் மனிதத்தன்மைகளும் மறக்கப்பட்டு விடுகின்றன. உடலின் தேவைகளை மட்டுமே பிரச்னையாக்கி மனிதனிடம் இயல்பாகவே இருந்திடும் அருங்குணங்களை அழிக்கத்துடிக்கும் ஒரு சமுதாயத்தை எப்படிப் பண்புள்ள சமுதாயமாக நாகரிகமான சமுதாயமாக எடுத்திட இயலும். இதனால் தான் இந்தச் சமுதாயங்களெல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் அஞ்ஞான சமுதாயங்கள்.

மௌட்டிகத்தை மூலதனமாகக் கொண்ட சமூக அமைப்புகள். இஸ்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகளையோ அவன் நியாயமாக இந்த உலகில் அனுபவிக்க வேண்டியவற்றை அள்ளிப் பருகிவிடுவதையோ மறுக்கவில்லை. நியாயமான இந்தத் தேவைகளுக்குப் போதிய ஏற்பாடுகளைச் செய்து தருகின்றது. ஆனால் இஸ்லாம் ஒரு போதும் இந்தத் தேவைகளெல்லாம் தான் மனிதவாழ்வு இந்தத் தேவைகளின் அடிப்படையில்தான் சமுதாயங்களின் தராதரங்கள் நிர்ணிக்கப்பட வேண்டும் என எடுத்துக் கொண்டதில்லை. அடிப்படைத் தேவைகளுக்க அவசியமான கவனத்தைச் செலுத்திய பின்னர் இஸ்லாம் மனிதனின் நல்ல ஒழுக்கத்திற்கே எல்லா முக்கியத்துவத்தையும் தருகின்றது. அங்கே ஒழுக்கத்தைக் கொண்டே தராதரங்கள் கணிக்கப்படுகின்றன. அல்லாமல் பணம் நிறம் மொழி இனம் ஆகியவற்றைக் கொண்டு அங்கே கண்ணியங்கள் கணிக்கப்படுவதில்லை. நல்ல பண்புகளும் நல்ல ஒழுக்கங்களும் தான் மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டிடுவது. ஆகவே மனிதனை அல்லது மனித நாகரிகத்தை மிருகங்களைப் போன்ற இயல்புளைக் கொண்டு கணக்குப் போடாமல் ஒழுக்கங்களைக் கொண்டு கணக்குப் போடுவதே முறையானது. ஏழைகள் விவசாயிகள் உழைப்பாளர்கள் தனவந்தர்கள் தொழில்கள் முதலீடு செய்து உற்பத்தியைப் பெருக்கும் முதலாளிகள் நாட்டின் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் அலுவலர்கள் ஆட்சியாளர்கள் அத்தனைபேரும் நல்ல ஒழுக்கத்தின் குன்றாய் நின்றிட வேண்டும் என விரும்புகின்றது இஸ்லாம். இதைக் கொண்டே நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் என்பனவற்றை நிர்ணயிக்கின்றது இஸ்லாம். ஒரு சமுதாயம் என்பது பல குடும்பங்களின் கோர்வை. குடும்பம் என்பது தனிமனிதர்களால் வேயப்படுவது. இந்தத் தனிமனிதர்கள் எப்படி இருக்கின்றார்களோ அப்படியே அமையும் குடும்பம். குடும்பங்கள் எப்படிக் கோர்க்கப்படுகின்றனவோ அப்படியே அமையும் குடும்பம். ஆகவே குடும்பங்கள் எப்படிப் பராமரிக்கப்டுகின்றனவோ அதில் அங்கம் வகிக்கும் தனிமனிதர்கள் எப்படி வளர்க்கப்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே சமுதாங்கள் பரிணாமமெடுக்கும்.

நல்ல பண்பாடுமிக்க ஒழுக்கமிக்க சமுதாயங்கள் உருவாக வேண்டும் என்றால் குடும்பங்கள் தங்கள் உறுப்பினர்களான தனிமனிதர்களை நன்றாகத் தயாரித்திட வேண்டும். குடும்பங்களைத் தாங்கி நிற்பவர்கள் குடும்ப உறுப்பினர்களை பயிற்றுவிப்பவர்கள் தாயும் தந்தையுமே. ஓரு குடும்பத்தின் தலையாயப்பணி குழந்தைகளை சீலமிக்கவர்களாக வளர்த்தெடுப்பதே. தாயும் தந்தையும் தாங்கள் ஆற்றிடவேண்டிய பணிகளைத் தங்கள் இயல்புகளுக்கேற்ப பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதில் குழந்தையை வளர்க்கின்ற பணிக்குத் தலையாய மதிப்பதை; தந்திட வேண்டும். தந்தை உழைத்து உண்ணத் தருவார். தாய் உருவாக்குவாள் குழந்தைகள் ஒழுக்கமிக்கவர்களாக. இந்த அமைப்புப் பாங்குற பரிபாலிக்கப்படுகின்ற ஒரு சமுதாயமே நாகரிகமான பண்பாடு மிக்கச் சமுதாயம். இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள குடும்ப அமைப்பில் இந்த அமைப்பு அப்படியே செயல்படுத்தப்படுகின்றது. இதனால் இஸ்லாம் சொல்லும் ஒழுக்க மாண்புகள் இளைய தலைமுறையிடம் இனிவரும் புதிய தலைமுறையிடம் அப்படியே சென்று சேருகின்றது. இந்த ஒழுக்கங்களை மனித மாண்புகளை புதிய தலைமுறையிடம் கொண்டுவந்திட இருக்கும் ஒரே வடிகால் குடும்ப அமைப்பே. இதற்கு பெற்றோர்கள் ஒரு பெரும் பொறுப்பை முறையாகச் சுமந்து நிறைவாக நிறைவேற்றிட வேண்டியதிருக்கின்றது. பெற்றோர்கள் இந்தப் பொறுப்புக்களை நிறைவாக நிறைவேற்றிட வேண்டிய சமூக விதிகளை நிறைவாக வகுத்துத் தந்திருக்கின்றது இஸ்லாம். இதற்கு நேர்மாறாக பெண்களும் ஆண்களும் விருப்பம் போல் கலந்து விரும்பும் விதத்தில் கூடலாம். அதில் குடும்ப விதிகளுக்கு எதிராக குழந்தைகளைப் பெறலாம். இந்தக் குழந்தைகள் எதிர்வரும் நாள்களில் சட்டத்திற்குப் புறம்பான குழந்தைகள் என அழைக்கப்படலாம்.

அது சமுதாயத்தின் கவலை இல்லை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமுதாயங்கள் இயங்கத் தொடங்கினால், அந்தச் சமுதாயத்தில் ஒழுக்கங்கள் எப்படித் தழைக்கும். கணவன் - மனைவி ஆகியோருக்கு இடையேயுள்ள உறவும் பிணைப்பும் நல்ல பண்புகளால் பின்னப்படாமல் உடல் தாகங்களைக் கொண்டே பிணைக்கப்பட்டால் எதிர்வரும் தலைமுறையினர் என்ன ஆவார்கள்? கணவனும் மனைவியும் தங்கள் பணிகளைத் தாங்கள் சுமக்கும் பொறுப்பின் அடிப்படையில் பிரித்திட வேண்டும். அத்தோடு பொறுப்புக்கள் ஆணின் இயல்புகளுக்கேற்பவும் பெண்ணின் இயல்புகளுக்கேற்பவும் பகிரப்பட வேண்டும். அல்லாமல் பெண்கள் உடல் தாகம் தணிக்கும் கவர்ச்சிப் பொருள்களாகவும் காதல் பொருள்களாகவும் மட்டுமே பார்க்கப் படுவார்களேயானால் அங்கு குடும்பப் பொறுப்புக்களைப் பகிர்ந்திடுவதில் குளறுபடிகளே மிஞ்சும். பேண்கள் புதிய தலைமுறையைக் கண்காணித்து வளர்ப்பது அதாவது குழந்தைகளின் பராமரிப்பு வளர்ப்பு என்ற விமானங்களில் பறந்து செல்லும் செல்வந்தர்களை உபசரித்து உற்சாகப்படுத்தப் போய்விட்டால் அவள் குடும்பப் பொறுப்புக்களிலிருந்து விலகிக் கொண்டு ஹோட்டல்களின் வரவேற்பு அறைகளில் அலங்காரமாக அமர்ந்து வந்தாரை வராத புன்முறுவலை வரவழைத்துக்கொண்டு வரவேற்கப் போய்விட்டால் அவள் குடும்ப பொறுப்பிலிருந்து மிரண்டு கப்பல்களிலும் வியாபார நிறுவனங்களிலும் உற்பத்தி நிர்வாகங்களிலும் உள்ளே புகுந்து உழைக்கின்றேன் என்று போய்விட்டால் குடும்பங்கள் குலையும் இளையதலைமுறையினர் எடுப்பார் கைப்பிள்ளைகளாக தறுதலைகளாக ஆக்கப்படுவார்கள். பெண்கள் குடும்பப் பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு வெளியே சென்று உழைக்கப் போவதற்கு ஆயிரம் காரணங்களை அள்ளித்தரலாம். அது அவளது உரிமை இன்றைய சமுதாயத் தேவை என்றெல்லாம் முழங்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் ஆபத்து குடும்பத்தைக் கவ்விக் கொள்கின்றது.

அது புதிய தலைமுறையை நெறி கெடவைத்து விடுகின்றது. இதனால் குடும்பங்களும் அந்தக் குடும்பங்களின் கோர்வையாக அமையும் சமுதாயங்களும் பாழ்பட்டுப் போகும் என்பது உண்மை. நடைமுறை வாழ்க்கைகள் நமக்குப் புகட்டும் பயனுள்ள பாடம். இது எதனால் நடக்கின்றது சமுதாயங்கள் பொருள்களை உற்பத்தி செய்து செல்வத்தைக் குவித்துக் கொள்வதே வாழ்வின் ஒரே இலட்சியம் எனக் கொண்டு வாழ்வதால் தான். இங்கே ஒழுக்கங்களை விட பொருளும் பணமுமே முக்கியம் எனக் கருதப்படுகின்றது. இதனால் தான் இந்தச் சமுதாயங்களைப் பிற்போக்கான சமுதாயங்கள் நாகரிகமடையாத சமுதாயங்கள் என்கின்றோம். இஸ்லாத்தின் சொல்லாட்சியில் இதற்கு ஜாஹிலிய்யா அஞ்ஞான சமுதாயம் என்று பெயர். இன்றைக்கிருக்கின்ற எல்லாச் சமுதாயங்களிலும் ஒழுக்கம் என்பது மிகவும் குறுகலான ஒரு பொருளிலேயே எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இன்னும் சொன்னால் மிகவும் குளறுபடியானதோர் பொருளிலேயே புழங்கப்படுகின்றது. மனிதனை விலங்கிலிருந்து பிரித்துக்காட்டும் உயர்ந்த ஒழுக்கங்கள் இன்றைய சமுதாயங்களின் கணக்கில் வரவே இல்லை. இந்த ஒழுக்கங்கள் இன்றைய சமுதாயங்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் வெளியேதான் இருந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சமுதாயங்களில் திருமண ஒப்பந்தங்களின் மூலம் கைப்படித்த காரிகைகளை மறந்து கண்டவர்களோடு கூடுவது தவறில்லை என்றொரு மனநிலை நிலவுகின்றது. ஏன்? ஒருபால் புணர்ச்சி இந்த உணர்ச்சியற்ற சமுதாயங்களில் தனிமனித உரிமை என்ற சாக்கில் புனிதமாகிவிட்டது. ஒழுக்க நெறிமுறைகள் என்பன அங்காடிகளில் விலைக்குக் கிடைக்குமா என வினவும் சமுதாயங்கள் இவை. ஒரு முறை ஒரு வெட்கங்கெட்ட ஒரு விவாதம் ஆங்கிலேயர்களின் நாடாளும் மன்றத்தில்.. பிரஃபீமோ என்றொரு அமைச்சர் இவருக்கும் கிரிஸ்டைன் கீலர் என்றொரு அழகிக்கும் கூடா காதல். அரசியல் அந்தஸ்தில் இருவருங்கூடி பால்வினை நோய்களுக்கு எதிர்க்கலாம் ஒன்று வேண்டுமே என முழுமூச்சாய் உழைத்துக்கொண்டிருந்தனர். இந்த அந்தரங்க சங்கமம் சந்திக்கு வந்தது. சபை கூடி விவாதித்தது. அது போது கிரிஸ்டைன் கீலர் என்ற இந்த அழகிக்கு இன்னொரு படுக்கை துணை உண்டென்பது ஊரெல்லாம் உலகமெல்லாம் தெரியவந்தது. இந்த அம்மணியின் இரண்டாவது உடல் கவர்ந்த காதலன் ரஷ்யாவின் கப்பற்படை அதிகாரி. இப்படி தனது உடலை அரசியல் அந்தஸ்து உள்ளவர்களுக்கு விளையாட்டு அரங்கமாக அமைத்து ஆனந்தித்துக் கிடந்தாள் இவள். இந்த உண்மைகள் ஆங்கில நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன.

பிரஃபீமோ என்று அந்த ஆங்கில அமைச்சர், பொய்யைச் சொல்லி தப்பிக்கப் பார்த்தார். அதற்குள்ளால் இந்த அழகி ஆங்கில அமைச்சருக்குத் தன் உடலைத்தந்து இராணுவ இரகசியங்களுக்குத் தன் உள்ளத்தில் இடத்தைப் பிடித்திருந்தாள் என்பது உலக அரங்கில் பேசப்பட்டது. இந்த மொத்த விவகாரத்திற்கு அவனியிலே கீர்த்தியும் கித்தாப்பும் பெற்ற ஆங்கில நாடாளுமன்றம் தந்ததீர்ப்பு என்ன தெரியுமா? அழகியொருத்தியோடு ஆங்கில அமைச்சர் ஆனந்தக்கூத்தாடியது தவறில்லை. அது பண்பாட்டின் வரையறைக்கு உட்பட்டது தான். ஆனால் அதில் இராணுவ இரகசியங்கள் சிக்கியது தான் சிலாக்கியமில்லாமல் போய்விட்டது என்பது தான். கோமான்களின் சபையும் சீமான்களின் அவையும் இப்படிப்பார்த்தது இந்தப் பிரச்னையையென்றால் அந்தச் சமுதாய அமைப்பில் வாழ்ந்த சாமான்யர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? மாதுவின் மோகத்தில் மந்திரி மயங்கியது தவறில்லை. ஆனால் இராணுவ இரகசியங்கள் ரஷியா போனதுதான் சற்று நெருடலாக இருக்கின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக அந்த நாடாளும் மன்றத்தில் அந்த அமைச்சர் விழுந்து விழுந்து பொய் சொன்னார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து அமைச்சர் பொய் சொல்கின்றார் என்பதை நிரூபித்தார்கள். இதையாரும் கண்டுகொள்ளNவு இல்லை. மக்கள் பிரதிநிதி பொய் சொன்னது குற்றமில்லை. அமைச்சர் பெருமகன் அழகியோடு கொண்ட கூடா உறவில் குற்றமில்லை என்பது அந்தச் சமுதாயத்தில் வேரூன்றி வளர்ந்துவரும் பண்பாடு. இந்தக் காமக்களியாட்டத்தின் நடுவே இராணுவ இரகசியங்கள் அகப்பட்டது தான் சிக்கலாய் போய்விட்டது அந்த மக்களுக்கு இந்தச் சமுதாயத்தைப் பண்பாட்டின் முகட்டில் நிற்கும் சமுதாயம் எனப் பிரச்சாரம் செய்தால் ஏற்றுக் கொள்வார்களா ஏற்றமிகு ஒழுக்கத்தை உயிராய்க் கொண்ட இஸ்லாமிய சமுதாயத்தினரா? மாந்தர்கள் அனைவரும் ஒப்பானவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தோரை உயர்ந்தவர் எனப்போற்றும் சமுதாயம் மேலே நாம் விவாதித்த சமுதாயத்தை ஒத்துக்கொள்ளுமா? அதனால் தான் இந்தச் சமுதாயங்கள் இந்தச் சமுதாயத்தில் வளரும் பண்பாடுகள் அனைத்தும் அநாகரிகமானவை.

இஸ்லாத்தின் மொழி அகராதியில் அவற்றிற்கு (ஜாஹிலிய்ய சமுதாயம்)அஞ்ஞான சமுதாயம் என்று பெயர். இதே போல் எத்தனையோ விவாதங்கள் காமவெறியின் களிநடனங்கள் சல்லாப சர்ச்சைகள் அமெரிக்காவின் நாடாளும் மன்றத்திலும் ஆங்கில நாடாளும் மன்றத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. வேவு பார்க்க பெண்களை வேசிகளாக மாற்றுவது இவர்களின இராஜயுக்திகளில் ஒன்று. இந்த வேசிகளும் அவர்களிடம் தாகந்தணித்துக் கொள்பவர்களும் பின்னர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திடுவது வாடிக்கை. இந்தச் செயல்களெல்லாம் ஒழுக்க நெறிகளை மீறிய செயல்கள் என்பதால் தவறானவை என இந்தச் சமுதாயங்கள் கருதுவதில்லை. இவற்றிலெல்லாம் நாட்டின் பாதுகாப்பிற்கும் பங்கம் தரும் செயல்கள் சம்பந்தப்பட்டு விட்டனவோ என்பதால் தான் இந்தச் சமுதாயங்கள் கவலைப்படுகின்றன. இதனால் தான் இந்தச் செயல்களைத் தவறானவை எனக்கருதுகின்றன. இதனால் தான் இஸ்லாம் இவற்றை அஞ்ஞான சமுதாயங்கள் என அழைத்திட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகுகின்றது. இந்த அஞ்ஞான சமுதாயங்களில் எழும் எழுத்தாளர்கள். வரும் பத்திரிகையாளர்கள் வாணிபம் பெருக்கும் விளம்பரதாரர்கள் இவர்களெல்லாம் ஒருபெரும் ஒழுக்கத்தைப் பிரச்சாரம் செய்கின்றார்கள். அது திருமணமான தம்பதிகளும் திருமணமாகாத இளைஞர்களும் தகாத உறவுகளில் தாராளமாக ஈடுபடலாம் என்பதே. (என் மகள் திருமணமாகும் வரை தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என நான் கருதவில்லை என்ற கூறும் தாய்மார்களை உருவாக்கியது இந்த எழுத்தாளர்களின் சாதனை - மொழிபெயர்ப்பாளர்) இந்த ஒழுக்கத்தை நிலைநாட்டிய பின்னர் அவர்கள் இன்னொரு பண்பாட்டுப் புரட்சிக்குப் படை நடத்திச் செல்கின்றனர். தாம்பத்திய உறவு என்ற கோட்டையை அவர்கள் குறிவைத்துத் தாக்குகின்றார்கள். திருமணமான தம்பதியரில் மனைவிக்கு விருப்பமில்லாத நேரத்தில் கணவன் அவளைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளச் செய்தால் அது கற்பழிப்பு என்ற கொடிய குற்றத்தின் கீழ் வருமாம். அதேபோல் பெண்ணொருத்தி ஒருவனுக்கு மனைவியாகிவிட்டாள். காலப்போக்கில் அவள் இன்னொருவனுக்குத் தன் இதயத்தில் இடந்தந்து விட்டாள். இதயத்தில் மட்டுமல்ல இல்லத்திலும் இடம் கொடுத்துவிட்டாள். இதை அவன் தட்டிக்கேட்கலாமா? கூடாது.

அப்படி அவன் தட்டிக்கேட்டால் அவன் மனைவியின் தனிப்பட்ட உரிமையில் கைவைத்து விட்ட குற்றத்தைச் செய்துவிட்டான். இந்த அநாகரிகத்தை விதியாக ஆக்கிடத் துடிக்கின்றனர் ஒரு சில் எழுத்தாளர்கள் (திருமணமான முதல் இரவிலேயே தன் கணவனை வெளியே இருத்திவிட்டு தன் உள்ளங்கவர்ந்த கள்வனோடு அறையிலே களித்துக் கொண்டிருந்தாள் ஒரு வங்காள தேச எழுத்தாளர். பெண்கள் தங்கள் கருப்பைக்குள் தாங்கள் விரும்பும் ஆணின் விந்துவைப் பெறும் உரிமையைப் பெற்றாக வேண்டும். இந்த விந்து அவளுடைய கணவனுடையதாகத் தான் இருந்திட வேண்டும் என்றில்லை. குசநநனழஅ ழக வாந ருவநசரள கருப்பையின் சுதந்திரம் என்கிறார் இந்த வங்காள மொழி எழுத்தாளர் இந்த எழுத்தாளருக்கு உலகப் பெண் விடுதலை தலைவி எனப் பாராட்டு பதக்கம் பரிசு பாதுகாப்பு குடும்பம் என்ற நல்லதொரு பல்கலைக்கழகத்தை விபச்சார மடமாக ஆக்கிடத்துடிக்கும் இந்தப் பெண்ணை எதிர்த்த முஸ்லிம்கள் அநாகரிகமானவர்களாம். தீவிரவாதிகளாம் இந்தப் பெண்ணுடைய விபச்சார எழுத்துக்களை மலிவு விலையில் அச்சிட்டு குறைந்த விலையில் விநியோகம் செய்து பரிசும் பதக்கமும் தந்தவர்கள் நாகரிகமானவர்களாம். இந்த அம்மணிக்கு ஐரோப்பாவில் நாள் தவறாமல் விருந்து அந்த விருந்திற்கு உலகெங்கும் தொலைகாட்சியில் விருந்து. இந்த எழுத்தாளர் தான் தஸ்லீமா நஸ்hPன் - மொழி பெயர்ப்பாளர்). அதன் வழியில் ஒழுகப் பணிக்கும் இஸ்லாமே உண்மையான நாகரிகம் என்றால் அது மிகையாகாது. மனிதன் தன்னுள் புதைந்து கிடக்கும் மிருக உணர்வுகள் தலையெடுத்துத் தன்னை ஆட்டிப் படைத்திடாமல் தடுத்திட வேண்டும். மனிதன் தன்னுள் கொட்டிக் கிடக்கும் மனித மாண்புகளைப் பட்டைத் தீட்டி பளபளக்கச் செய்திட வேண்டும். மனிதன் தன் மிருக உணர்வுகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திட இருக்கும் மிகப்பெரிய கடிவாளந்தான் குடும்பம். இந்தக் குடும்பம் என்ற புண்ணி இடத்தில் அவனது மிருக உணர்வுகள் தாகம் தீர்த்துத் திருப்தியைப் பெறுகின்றன. இந்தக் குடும்பம் என்ற கலாசாலையில் தான் இளைய தலைமுறையினர் இனிவரும் தலைமுறையினர் தங்கள் முதல் பாடத்தையும் முத்தான பயிற்சியையும் பெறுகின்றனர். இந்தப் பயிற்சியும் பாடமும் தான் அவர்களை எதிர்வரும் நாட்களில் ஏற்றத்தோடு வாழவைக்கின்றது. இந்த ஏற்றமிகு வாழ்க்கையிலிருந்து தழைப்பது தான் அடுத்து வரும் தலைமுறை. இதற்கு நேர் எதிராக மனிதர்கள் தங்கள் காமத்திற்குக் கரைகளை அமைக்காமல் காமத்தைக் காட்டாற்று வெள்ளமாய் எல்லா ஒழுக்க நெறிகளையும் அடித்துச் செல்ல விட்டுவிட்டால் குடும்பம் குலைந்து விடும்.

எந்த நீதியும் நெறியுமில்லாத தறுதலையான இளைய சமுதாயம் தோன்றிவிடும். இந்த ஒழுக்கமற்ற இளைய தலைமுறை இருப்பதும் இறப்பதும் எதற்கு என்பதை அறியாமல் தட்டலைந்திடும். குழப்பம் கொந்தளிப்பு இவற்றால் சமுதாயம் போர்க்களமாகக் குரதியைக் கொட்டிக் கொண்டிருக்கும். இதில் மனித இயல்புகள் வாழ்வதற்கு உபாயங்களே இல்லை என்றாகிவிடும். இதனால் தான் குடும்பங்கள் ஆழமாய் வேர்விட்டு ஆலமரமாய்த் தழைக்க வேண்டும் என்பதில் இஸ்லாம் தனிககவனத்தைச் செலுத்துகின்றது. நிலையான முறையான ஒழுக்க வரம்புகளை செயலில் கொண்டு வந்து அந்தக் குடும்பங்களைத் தற்காத்து வருகின்றது இஸ்லாம். இந்த ஒழுக்க நீதிகளையும் வரையறைகளையும் எந்த நிலையிலேயும் இஸ்லாம் தாழ்த்தவோ தளர்த்தவோ தயாராக இல்லை. இஸ்லாத்தின் உறுதியான இந்த ஒழுக்க நெறிகள் மனித இனம் தழைக்கப் பெரிதும் துணை நிற்கின்றன. இனிவரும் தலைமுறைக்கும் தக்கதோர் தளம் அமைத்துத் தருகின்றன. இதனால் தான் அது உண்மையான நாகரிகம் பண்பாடு எனப் போற்றப்படுகின்றது. இறுதியாக ஒரு கருத்தை நாம் விரிவாக விவாதிக்க வேண்டும். மனிதனைப் படைத்த இறைவன், ப10மியில் மனிதனுக்கு தனியானதோர் கண்ணியத்தை வழங்கியுள்ளான். அந்தக் கண்ணியம் மனிதன் இந்தப் ப10மியில் இறைவனின் பிரதிநிதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதே. இந்தப் பிரதிநிதி என்ற பொறுப்பை அவன் இறைவனுக்கு முற்றாகக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம்தான் நிறைவேற்றகின்றான். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் அவன் இறைவனையன்றி வேறு யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. அவன் இறைவன் வகுத்துத் தந்த உன்னதமான குடும்ப அமைப்பைக் கூடுதல் குறைவின்றி நிலை நாட்டுகின்றான். வேறு எந்தச் சமுதாய அமைப்புக்களையும் அவன் ஏற்றுக் கொள்வதில்லை. அவன் அல்லாஹ் வழங்கிய ஷாPஅத் சட்டங்களையன்றி வேறு எந்தச் சட்டங்களையும் தன் வாழ்க்கையில் ஏற்று நடப்பதில்லை. அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற உயர்ந்த கண்ணியத்திற்கு உரித்தான அவன் அல்லாஹ் நியமித்த ஒழுக்க நியதிகளைக் கிஞ்சிற்றும் பிறழாமல் அப்படியே கடைபிடிக்கின்றான். இத்தனையிலும் அவன் அந்த இறைவனை மகிழ்விக்கின்றான். பெருமையுறச் செய்கின்றான். இத்தனைப் பாங்கோடும் பணிவோடும் அவன் தன் வாழ்வை அதை;துக் கொள்ளும் போது அவன் இயற்கையை ஆராய்ச்சி செய்கின்றான். மனித இனத்திற்குப் பயன்படுமு; எத்தனையோ கனிவளங்களை அகழ்ந்தெடுக்கின்றான். இந்த ஆராய்ச்சிகளையும் அந்த ஆராய்ச்சியின் பயனாய் கிடைத்த இயற்கை வளங்களையும் அவன் இறைவனின் வழியில் தான் மேற்கொண்ட முயற்சியில் கிடைத்ததாய்க் கருதுகின்றான். இறைவன் அவனுக்குக் கொடுத்த அருள்கொடையாம் அறிவைப் பயன்படுத்தி தொழிற் சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை இயற்கையிலிருந்து அகழ்ந்தெடுக்கின்றான். இறைவன் மனிதனுக்காக மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கும் அதிசயமான வளங்களைக் கண்டு ஆச்சரியப்படுகின்றான். அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுகின்றான்.

மனிதனுக்குக் கேடு பயப்பனவற்றைத் தவிர்த்து விடுகின்றான். மனித இனத்தை அழிக்கின்ற எந்தச் சிறு ஆராய்ச்சியையும் அவன் செய்வதில்லை. இத்தனையிலும் அவன் இறைவன் தந்த கண்ணியமாம் பிரதிநிதி என்பதைப் பணிவோடு நிறைவேற்றுகின்றான். இஸ்லாம் வெறும் புதிய கண்டுபிடிப்புகளை எந்தச் சமுதாயம் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். இறைமறையாம் திருமறை இதுபற்றி தெளிவாகவே கோடிட்டு காட்டி இருக்கின்றது.

ஆது (என்னும் ஜனங்களும் நம்முடைய)தூதரைப் பொய்யாக்கினார்கள். அவர்களுடைய சகோதரர் ஹ_து அவர்களை நோக்கி நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா? நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பெற்ற நம்பிக்கையான ஒரு தூதனாவேன். ஆதலால் நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடவுங்கள். இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் உலகத்தார் யாவரையும் சிருஷ்டித்துப் போஷிப்போனிடமே இருக்கின்றது, நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் ஞாபகச் சின்னங்களை வீணாகக் கட்டுகின்றீர்களா? நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கின்றீர்கள். நீங்கள் (எவரையும்)பிடித்தால் (ஈவிரக்கமின்றி)மிக்கக் கொடுமையாக நடத்துகின்றீர்கள். நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடவுங்கள். நீங்கள் அறிந்த பல பொருள்களையும் எவன் உங்களுக்கு(க் கொடுத்து)உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள். சந்ததிகளையும் ஆடு மாடு ஒட்டகங்களையும் உங்களுக்கு (க் கொடுத்து) உதவி செய்திருக்கின்றான். தோட்டாந்துரவுகளையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கின்றான். அவனுக்கு நீங்கள் மாறு செய்தால்) நிச்சயமாக நான் மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று பயப்படுகிறேன் என்று கூறினார் (அல்குர்ஆன் 26:123-135) 



இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம் மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கின்றது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக் கூடிய புற்ப10ண்டு முதலியவைகளுடன் கலந்து அடர்ந்த பயிராக வளர்ந்து (ப10த்துக் காய்த்துக் கதிர்விட்டுப்) ப10மியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில் அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்துவிட்டது. நாளைக்கு) அதனை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம் இரவிலோ பகலிலோ நம்முடைய கட்டளையினால் ஓர் ஆபத்து வந்தது. அதனால் அவை நேற்றையதினம் அவ்விடத்தில் இருக்கவே இல்லை என்று எண்ணிக் கூடியவாறு அவைகளை நாம் அழித்துவிட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்துணரக்கூடிய மக்களுக்கு (நாம் நம்முடைய) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் 10:24)

இங்கே நாம் ஒன்றை உறுதியாகக் கவனிக்க வேண்டும். இந்த உலகிலே கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புக்கள், அறிவியலின் அதிசயமான முன்னேற்றங்கள் இவற்றிற்கு இஸ்லாம் எதிரானது அல்ல. இதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கின்றோம். இஸ்லாம் அவற்றை இறைவனின் அருட்கொடைகள் எனப் பார்க்கின்றது. அவை மனிதனின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மனிதனின் நல்வாழ்வை மனதிற்கொண்டு அகழ்ந்தெடுக்கப்படும் அத்தனைக் கண்டுபிடிப்புகளும் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் அழகிய வழிபாடு எனப் போற்றுகின்றது இஸ்லாம். திருமறையாம் திருக்குர்ஆன் இறைவன் மனிதனுக்கு அள்ளித்தந்திருக்கும் அருள்கொடைகளைப் பற்றிய வாக்குறதிகளை ஏராளமாகப் பார்க்கின்றோம். ஆனால் இதற்கோர் நிபந்தனை. அது மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்திட வேண்டும். நூஹ் (அலை) அவர்கள் சொன்னார்கள்

(நான் என் மக்களிடம் சொன்னேன்) உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மன்னிப்பவன். (அவ்வாறு செய்வீர்களானால் தடைபட்டிருக்கும்)மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாய் பொழியச் செய்வான். பொருள்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்குத் தோட்டங்களiயும் உற்பத்தி செய்து ஆறுகளை உங்களுக்காக ஓட்டிவைப்பான். (அல்குர்ஆன் 71: 10-12)

அவ்வ10ர்களில் இருந்தவர்கள் விசுவாசங் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்திருந்தால் அவர்களுக்காக வானத்திலும் ப10மியிலுமுள்ள பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும் அவர்கள் (நபிமார்களை விசுவாசிக்காது) பொய்யாக்கினார்கள். எனவே நாம் அவர்கள் தேடிக் கொண்டதன் காரணமாக (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக்கொண்டோம். (அல்குர்ஆன் 7:96).


ஆனால் ஒன்று, மனிதன் இறைவனின் அருட்கொடைகளைக் கொண்டு என்னென்ன செய்கின்றான் என்பது மிகவும் முக்கியம். அவன் மனித இனத்தின் வாழ்வுக்கு உதவி செய்பவற்றை உற்பத்திச் செய்தால் அவன் நாகரிகம் அடைகின்றான். அதை மனித இனத்தின் அழிவுக்குப் பயன்படுத்தினால் அநாகரிகமானவன். நல்ல ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் உருவாகும் சமுதாயமே அல்லாஹ்வின் அருள்கொடைகளை மானிடர்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்திடும் என்பது ஊரறிந்த உண்மை. ( சிறு நீரகங்களை மாற்றலாம் என்பது ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பு . இது கண்டுபிடிக்கப்பட்ட அன்று முதல் அப்பாவி மக்களின் சிறுநீரகங்களை அவர்களுக்கே தெரியாமல் மாற்றி தேவையானவர்களுக்கு விற்பனை செய்கின்றார்கள். இதனால் சிறுநீரக அங்காடி என்றொன்று சர்வதேசிய அளவில் உருவாகி இருக்கின்றது. விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புகள், இறைவனைப் பற்றிய எண்ணமும் அச்சமும் இல்லாதவர்களின் கைகளிலே சிக்கிடும் போது இப்படித்தான் செயல்படும் -- மொழிபெயர்ப்பாளர்) நாகரிகம் என்ற சொல்லுக்கு நாம் மேலே தந்துள்ள விளக்கம் ஏதோ நூல்களிலே நுகர்ந்துவிட்டு விட்டு விடப்பட வேண்டியதல்ல. அல்லது இது கடந்து போன காலங்களில் வாழ்ந்து மடிந்த ஒரு நாகரிகமுமல்ல. அது மனித இனத்தில் என்றும் வாழ்ந்திட வேண்டிய ஒன்று. இத்தகையதொரு நாகரிகம், அந்த நாகரிகம் உயிருடன் உலாவிய இஸ்லாமிய சமுதாயம் அன்று போல் இன்றும் இன்று போல் என்றும் தேவைப்படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் அது மட்டுமே மனித இனத்தை எதிர்நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஒழுக்க அழிவுகளிலிருந்து காப்பாற்றிடும்.

இது அறிவியல் துறையிலே அதிசயமான முன்னேற்றங்களை சாதனைகளை நடத்திக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு மட்டுந்தான் தேவை என்றில்லை. அதே போல் பொருளாதார வளங்கள் வாய்க்கப் பெற்ற நாடுகளுக்கு மட்டுந்தான் தேவையென்றில்லை. இந்த நாகரிகம் இந்த இஸ்லாமிய பண்பாடு, பொருளாதாரத் துறையிலும் இதர துறைகளிலும் பின்தங்கிய நாடுகளுக்கு மிகவும் அவசியம். வரலாற்றில் இந்த நாகரிகம் வனப்போடு வாழ்ந்து பலன் தந்தது இஸ்லாமிய வரலாற்றில் தான். ஒழு முழுமையான இஸ்லாமிய சமுதாய அமைப்பில் மட்டுமே இந்த நாகரிகம் முழமையாகப் பரிணமித்திட இயலும். இப்படிச் சொல்லி விடுவதால் இந்த நாகரிகம் எழுத்துக்களோடு வாழ்ந்திட வேண்டிய ஒன்று தானா? என வினவிடத்தோன்றும். இல்லை, இதை இன்றும் மனித வாழ்வில் முகிழ்ந்திடச் செய்திட இயலும். இதற்கு ஒரே ஒரு வாய்ப்புத்தான் உண்டு. அது இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகவும் முறையாகவும் பின்பற்றிடுவதே. இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகவும் முறையாகவும் பின்பற்றினால் எந்தச் சூழ்நிலையிலும் இப்படியொரு சமுதாயத்தை நிறுவிடலாம். அது பொருளாதாரத்தில் முன்னேறிய சமுதாயமானாலும் சரி பொருளாதாரத் துறையில் பின்தங்கிய சமுதாயமாக இருந்தாலும் சரியே. ஆது விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டுத் தழுவி நிற்கும் சமுதாயமாக இருந்தாலும் சரி, அறிவியல் வளர்ச்சியில் தவழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயமாக இருந்தாலும் சரி. நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போல் பொருளாதார வளம் பெறுவதும் அறிவியல் துறையில் அதிசயங்களை நிகழ்த்துவதும் இஸ்லாத்தால் உற்சாகமும் உதவியும் தந்து வளர்க்கப்படுபவை. இவற்றை இறைவனுக்குச் செய்யப்படும் தொண்டு எனப் போற்றி உற்சாகம் தருகின்றது இஸ்லாம்.

அத்தோடு நிற்காமல் மனிதன் இறைவனின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவன் நிறைவேற்றித் தீரவேண்டிய பொறுப்பு எனவும் பணிக்கின்றது இஸ்லாம். இந்த அடிப்படையில் அறிவியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் முன்னேற முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்குத் தீர்க்கமானதோர் வழியைக் காட்டுகின்றது இஸ்லாம். இந்த நாடுகளை நீங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்திடாமல் உழைத்து முன்னேறுங்கள். இறைவனின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நீங்கள் நிறைவேற்றிட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றிட வேகமாக முயற்சி செய்யுங்கள் என உந்தித் தள்ளுகின்றது இஸ்லாம். இப்படி வளர்ந்து வாழும் சமுதாயங்களை முறைப்படுத்தும் கொள்கை இஸ்லாம். அதே போல் வளராத சமுதாயங்களை வளர்ச்சியை நோக்கிப் பிடித்துத் தள்ளும் ஆற்றல் பெற்றது இஸ்லாம். இதனால் தான் இஸ்லாம் எல்லா சமுதாயங்களுக்கும் ஏற்புடைய ஒரு கொள்கை ஒரு நாகாPகம். உண்மையைச் சொல்வதானால் எல்லாச் சமுதாயங்களுக்கும் அவசரமான தேவை இஸ்லாம். இஸ்லாமிய நாகரிகம் மிகவும் முன்னேறிய சமுதாயத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் அது மனித இனத்தின் இவ்வுலக வாழ்க்கைக்கும் மறுவுலக வாழ்க்கைக்கும் வகை செய்யும். பின்தங்கிய சமுதாயங்களில் அது ஒழுக்கங்களை நெறிப்படுத்தி அவர்களைப் பண்பாட்டின் பாதையிலும் பாங்கான வளர்ச்சியின் பாதையிலும் இட்டுச் செல்லுகின்றது. இந்த மாறுபட்ட வளர்ச்சி நிலைகளையுடைய சமுதாயங்களில் இஸ்லாமிய நாகரிகத்தின் பணி பலவாக இருந்தாலும் இந்த இஸ்லாமிய நாகரிகம் அமைக்கப்படும் அடிப்படைகள் மாறமாட்டா, அந்த அடிப்படைகள் இறைவன் ஒருவனே அவனை மட்டுமே மனிதர்கள் அனைவரும் வணங்கிட வேண்டும். மனிதர்களுக்கிடையில் உள்ள உறவுகள் இறைவன் ஒருவனே என்ற அடிப்படையில் தான் அமைக்கப்பட வேண்டும்.

மனிதன் தன் மிPருக இச்சைகளைக் கட்டுப்படுத்தி மனித மாண்புகளை வளர்த்திட வேண்டும். குடும்ப அமைப்பையும் பொறுப்பான குடும்ப வாழ்க்கையையும் அவன் ஏற்று வாழ்ந்திட வேண்டும். இந்தச் சமுதாய அமைப்பை உருக்குலைக்கும் செயல்களை அவன் செய்திடக் கூடாது. மனிதன் இறைவனின் பிரதிநிதி என்ற கண்ணியத்தைக் காப்பாற்றிடும் வகையில் தனது ஒழுக்கங்களை இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களின் வழி சீரமைத்திட வேண்டும். இறைவனின் சட்;டங்களான ஷாPஅத் சட்டங்களையே வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றிட வேண்டும். இஸ்லாமிய நாகரிகத்தின் இந்த அடிப்படைகளில் எந்த மாற்றமும் எந்த நிலையிலும் இல்லை. மாறாக இந்த அடிப்படைகளைக் கொண்டு மாறிவரும் சூழ்நிலைகளோடு நின்று அந்தச் சூழ்நிலைகளை மானுடம் வாழ மாற்றிடும் ஆற்றல் பெற்றது இஸ்லாம். இப்படித்தான் இநத் இஸ்லாம் சொல்லும் நாகரிகம் ஆப்பிரிக்காவில் நுழைந்து அந்த மக்களை ஆடையணியக் கற்றுத் தந்தது. அவர்களுக்கள் நிலையான நிம்மதியான சமுதாய அமைப்புக்களை ஏற்படுத்தித் தந்தது. இந்த உலகத்தின் இதரப் பகுதிகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று தனித்துக் கிடந்த அந்த மக்களை இந்த உலகத்தின் ஏனைய பகுதியில் வாழும் மக்களோடு பிணைத்தது. சமுதாயத் துறையில் முன்னேறி அவர்கள் நாகரிகத்திலும் முன்னேறினார்கள். உழைப்பில் அவர்களுக்கு ஓர் ஈடுபாட்டை ஏற்படுதத்pத் தந்தது. அதனால் அவர்கள் உழைப்பில் ஓர் உயர்ந்த சுகம் இருப்பதைக் கண்டார்கள். அதன் பயனாய்த் தங்கள் வாழ்க்கை முன்னேறுவதையும் கண்டார்கள்.

இனம் குலம் எனச்சுரங்கிக் கிடந்த மக்கள் இஸ்லாம் என்ற உலக சமுதாயத்தின் அங்கங்களாக ஆனார்கள். அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக ஆகினார்கள். அத்தோடு தாங்கள் கண்மூடித்தனமாக வழிபட்டு வந்த தெய்வங்களையும் சிலைகளையும் தூக்கியெறிந்தார்கள். உலகைப்படைதது, உலகைப் பரிபாலித்துவரும் படைத்தவனின் பிரதிநிகளாக உலகமா சமுதாயத்தில் சங்கமித்தார்கள். (இதைப் போல் இந்தியாவில் இஸ்லாம் ஒரு பெரும் மனிதக் கடலை மௌட்டீகத்திலிருந்து விடுவித்து உண்மையான நாகரிகத்தில் இணைத்தது. தீண்டாமை பிறப்பின் பெயரால் போற்றப்படும் பேதங்கள் இவற்றிலிருந்து மக்களை விடுவித்து உலகெங்கும் பரவி வாழும் உலக இஸ்லாமிய சமுதாயத்தின் அங்கங்களாக ஆக்கிற்று). (மொழிபெயர்ப்பாளர்). இது போன்ற எண்ணற்ற வீரவரலாறுகளையும் சாதனைகளையும் தன்னகத்தே கொண்ட இஸ்லாமே உண்மையான நாகரிகம். எல்லா சூழ்நிலைகளுக்கும் அறிவியல் வளர்ச்சிப் பெற்ற சமுதாயங்களுக்கும் பொருளாதார வளர்ச்சி பெற்ற சமுதாயங்களுக்கும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட அமுக்கப்பட்ட சமுதாயங்களுக்கும் ஏற்புடைய ஒரே நாகரிகம் இஸ்லாமே. இந்தத் தனிமைத்தன்மைகளால் அது அனைத்து மௌட்டீக சமுதாயங்களின் நாகரிகங்களிலிருந்து அது வேறுபட்டும் மாறுபட்டும் நிற்கின்றது.

தொடர்ந்து வரும் 

SOURCES FROM WARMCALL.BLOGSPOT.COM

No comments:

Post a Comment