Jan 25, 2013

இஸ்லாமிய அறிஞர்களும் இஸ்லாத்தை பின்பற்றும் பாமர மக்களும்!!!


இன்று முன்பு எப்போதும் இல்லாத அளவு இஸ்லாமிய எழூச்சி உலக அளவில் இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. இதற்கான அடையாளமாக தான் இளைஞர்களின் மார்க்கப்பற்றையும், பள்ளி வாசல்களுடனான தொடர்பு, மார்க்க சம்மந்தமான தேடலையும் காண்கிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக தற்போது இந்த இளைஞர்கள் சரியான பாதையில் இட்டுச் செல்லப்படுகிறார்களா ? இவர்களின் பயணம் சரியான திசையில் செல்கிறதா ? இவர்களின் ஆசானாக திகழ்வது யார் ? இவர்களின் என்ன வோட்டம் எப்படி அமைகிறது என் என்று ஆராய்ந்தால். பின் அடைவான நிலையை யாவரும் அறிவார்கள்.
 
இன்றை உலகில் பெரும் இஸ்லாமிய அறிஞர்களாக அடையாளப்படுத்த படுபவர்கள் அமைப்பு ரீதியாகவும், அமைப்பு சார்ந்த செயல்பாடுகள் சார்ந்தும் அறியப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட அமைப்பு சார்ந்து கல்வி நிலையங்களில் பயின்று வெளியேரிய உடண் அந்த அமைப்பின் சிந்தனை பாங்கை பரப்பும் பரப்பாளர்களாக காட்சி தருகிறார்கள். இந்த நிலையில் அவர்களின் செயல் பாடுகள் குறிகிய வட்டத்துக்குள் அமைந்து விடுகிறது.அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தம் முறை மற்றும் பேச்சாற்றல் போன்றவற்றல் பெரியதோற்றத்தை அடைகிறார்கள். இதன் அடிப்படையில் ரசிகர் மன்றங்களைப் போல் காட்சியளிக்கிறது இன்றைய முஸ்லிம் இளைஞர் உலகம். இது ஆரோக்கியமான செயல்பாடுகள் அல்ல.
 
மேலும் இன்று ஆலிம்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பெரும்பாலும் அரபி பாடசாலைகளில் படித்து விட்டு வெளியேரியவுடன் தங்களை பெரிய குறியீடுகளுடன் மக்களிடம் வருகிறார்கள், அவர்கள் பின் தொடரும் அமைப்பு அதன் ஆதரவாளர்களும் அவரை தங்கள் ஆசானாக பயன் படுத்துகிறார்கள். அவர்கள் பயன் படுத்துவது தவரில்லை, என்றாலும். அவரின் கல்வி தகுதிக்கு மேல் அவரிடம் இவர்கள் எதிர்ப்பார்பதால் தங்களுக்கு தெரிந்த விசயங்களை சொல்லி இஸ்லாமாக காட்சி படுத்திவிடுகிறார்கள் தனக்கு தெரியாத விசயங்களில் இவர்களின் நிலை எப்படி இருக்கிறது என்றால் இதற்க்கும் இஸ்லாத்திற்க்கும் சம்மந்தமில்லை என்றும் கூறும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். இதை இந்த அமைப்பு சார்ந்த ஆதாரவாளர்களும். மூலதாரமாக கொண்டு விடுகிறார்கள். இந்த அறிஞர்கள் தங்கள் பின் தொடரும் அமைப்பையும் அதன் தலைவரையும், அடியேற்றிவருபவர்கள். இவர்கள் அரபி பாடசாலைகளில் அரபி இலக்கணம், சில ஹதீஸ் நூல்களில் சில பகுதிகள், மற்றும் பேச்சுக்கலை கற்றிருப்பார்கள். இவர்கள் நிறைய படிக்க வேண்டியது உள்ளது.
 
வாழ்ககைக்கு வாழிகாட்டல் தேவை தான் என்பதை ஒவ்வொருவனும் அறிவான். அப்படி அறியும்போது அவன் தனக்கு அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் காட்டப்பட்ட வழிமுறையை அறிய வேண்டும் அதன் படி செயல் பட முயற்ச்சிக்க வேண்டும். மாறாக நாம் செயல் படுவதற்க்கு அந்த வழிகாட்டலில் என்ன ஆதாரமாக பயன்படுத்தலாம் என்று தேடி அதை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது.
 
இப்போது மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடமும் குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது இது வரவேற்க்கப்படவேண்டியது தான் அதே நேரம் இந்த ஆவல் சரியான திசையில் கொண்டு செல்லப்பட வேண்டும். இல்லையேல் பின்பற்றிய மக்களையும், வழிகாட்டிய அமைப்புகளையும் தீய பாதையில் கொண்டுச் சென்றுவிடும். மேலும் இன்று இஸ்லாம் காட்டித்தந்த வழிகாட்டுதல், வழிமுறைக்கு மாற்றமாக அந்நியக் கொள்கைகளை துக்கி பிடிக்கவும், தன்னிலைப் பாட்டை நியாயப்படுத்தவும், தனது கீழ்தரமான செயல்பாடுகளுக்கும், தன் ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், அமைப்புக்களும் அதன் தலைமையும் அல் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸையும் பயன் படுத்துவது தவிர்க்க படவேண்டும். இது போன்ற நேரங்களில் மக்களும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும் ஏமார்ந்து விடக்கூடாது, அவர்கள் அல் குர்ஆன் மற்றும் ஹதீஸை பயன் படுத்தி இருந்தாலும் இது இஸ்லாமிய குறியீடுகளை அடையவா ? அந்நியக்குறியீடுகளை அடையவா? ஏன்பதை உண்ணிப்பாக கவணிக்க வேண்டும் அந்நியக் குறியீடுகளை அடைவதற்க்கு எனில், இது போன்ற நேரங்களில் இந்த அமைப்புக்களையும் அதன் தலைவர்களையும் தூக்கி எரிய வேண்டும். இதுவே சிறந்த செயலாகும்.

sources http://quraanisfinalrevolution.blogspot.com

No comments:

Post a Comment