Mar 4, 2013

எதிர்காலக் கிலாஃபத்தின் இராணுவம்


உலகிலேயே முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட உறுதியான இராணுவத்தைக் கொண்டதாக கிலாஃபத் ஆட்சி இருந்ததாக வரலாறு கூறுகிறது. கி பி 1453 இல் இஸ்தான்புல் ஐக் கைப்பற்றிய பீரங்கிப் படை இதற்கு முன்னுதாரணமாகும். ஐரோப்பிய நாடுகள் அன்று கிலாஃபத்தின் தீவிர சக்திக்கும் பொருளாதார வல்லமைக்கும் பயந்தன. இஸ்லாமிய இராணுவ வரலாற்றில் காலித் பின் வலீத் (ரலி), அமர் பின் அல்-அஸ் (ரலி), தாரிக் பின் சியாத் (ரலி), சலாஹுதீன் அயுபி, சுல்தான் முஹம்மது அல் பதிஹ் (இஸ்தான்புல் ஐக் கைப்பற்றியவர்) ஆகிய தலைவர்களும் இராணுவ தளபதிகளும் இஸ்லாத்துக்காக பணியாற்றி முஸ்லிம் உம்மாஹ்விற்கு கௌரவத்தையும் கண்ணியத்தையும் உண்டாக்கினார்கள். 16 ஆம் நூற்றாண்டில் உத்மானி கிலாபா பலம் பொருந்திய இராணுவத்தை தன்வசம் கொண்டிருந்ததோடு, கருங்கடல் "உத்மானிய வாவி" எனக் கூறுமளவுக்கு கலீபாவின் சாம்ராச்சியம் விரிந்திருந்தது. எனினும், 1924 இல் கிலாஃபத்தின் வீழ்ச்சியின் பின்னர் முஸ்லிம் உலகம் எந்த இராணுவ முன்னற்றத்தையும் காணவில்லை. மேலும் மேற்கூறிய தலைவர்களைப் போல் தலைவர்களை உருவாக்கவுமில்லை. 

இன்றைய முஸ்லிம் உலகம் கிலாஃபத்தின் நிழலில் வாழ்ந்தாலும் முன்னையோரின் வல்லமையையும் கௌரவத்தையும் இன்று காண முடியவில்லை. இன்ஷா அல்லாஹ், முஸ்லிம் உலகம் மீண்டும் உதயமாகி முஸ்லிம் உம்மாஹ்வின் கேந்திரமாக அமைவதற்கு ஒரே வழி, கிலாஃபத்தை நிலை நாட்டுவதன் மூலமேயாகும்

முஸ்லிம் உலகம் பலவீனமானது என்பதோடு இன்று உலகில் பலம் வாய்ந்த சக்திகளுக்கு சவாலாக முடியாது என்று பலரும் கருதுகிறார்கள். சோர்வும் ஊழலும் உள்ள அரசாங்கமும் நலிவடைந்த ஆட்சியும் இருந்தாலும், பாகிஸ்தான், துருக்கி, ஈரான், இந்தோனேஷியா போன்ற நாடுகள் இராணுவத்தில் சில முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுள்ளன.

முஸ்லிம் நாடுகளிடையே உள்ள இராணுவ தொழில்நுட்பத்தையும் உட்கட்டமைப்பையும் பயன்படுத்தி தனது செயல்திறனை வலுப்படுத்த கிலாஃபா கொள்கைகளை ஸ்தாபிக்கும்.

பாகிஸ்தான் அதன் இராணுவ பலத்தை பின்வருமாறு காட்டுகிறது,

· அல் காலித் அல் சாரார் யுத்த தாங்கிகள் (H I T )

· J F பல நோக்கு யுத்த விமானம் (இது சீனாவுடன் இணைந்து உற்பத்தி செய்யப்பட்டது)

· MFI-17 முசாக் பயிற்சி விமானம்

· ஆளில்லா விமானம்

· ஏவுகணை

· உலகில் 6 வது தரைப் படை

துருக்கியின் இராணுவ உற்பத்திகள்

· அனுமதிப்பத்திரம் பெற்ற யுத்த விமானம் (TAI)

· யுத்த விமான உதிரிப்பாகங்கள்

· ஆளில்லா விமானம்

· யுத்தக் கப்பல்

· இராணுவ வாகனங்கள்

· உலகில் 7 வது தரைப்படை

· NATO வில் 2வது பெரிய தரைப் படை

· 2020 இல் ஜெட் யுத்த விமானங்களை சுயமாக தயாரிக்கவுள்ளது.


ஈரானின் உற்பத்திகள்

· ராடார் தொழில்நுட்பம்

· தனி இருக்கை யுத்த விமானம்

· ஏவுகணை முறைகள்

இந்தோனேஷியாவின் இராணுவ உற்பத்திகள்

· கணணி யுத்த விமான அமைப்பு

· போர்த் தளபாடங்களும் வாகனங்களும்


கிலாஃபத் அதன் திறமையையும் பாதுகாப்பையும் தொடங்க மேற்குறிப்பிட்ட அபிவிருத்திகள் கட்டி எழுப்பப் பட வேண்டும்.

முஸ்லிம் உலகின் சில இடங்கள் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடங்களாகும். உதாரணமாக, பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் விமான மற்றும் கடற்படைத் தளங்களைக் குறிப்பிடலாம். இதனால் தான் காலனித்துவ சக்திகள் முஸ்லிம் உலகை நசுக்கி அதில் லாபத்தையும் வெற்றியையும் கண்டுள்ளன. உத்மானிய கிலாபத்தில் போச்போரோஸ் நீரினையை அதன் கட்டுப்பாட்டிலே வைத்திருந்ததோடு அதன் அனுமதியுடனே வேறு நாடுகள் கடக்க வேண்டியிருந்தது; கிலாபா ஒருபோதும் தனது நிலத்தையோ நீரினைகளையோ கடற்தலங்களையோ எதிராளிக்கு விட்டுக்கொடுக்கவில்லை.

எதிர்கால கிலாஃபத்தின் இராணுவக் கொள்கைகள் பின்வரும் விடயங்களைக் கொண்டிருக்கும்,

· தற்போதைய இராணுவ உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல்

· வெளிச்சக்திகளால் இராணுவ பலத்தை முன்னேற்றாது சுய பலத்தால் முன்னேற்றுதல்

· பொறியியலாளர்கள், விமானிகள், வைத்தியர்கள் போன்ற நிபுணத்தவர்களை உருவாக்கும் நிறுவனங்களை அபிவிருத்தி செய்தல்

· இராணுவ அமைப்பை திறம்பட அமைத்தல்

மேற்குறிப்பிட்ட கொள்கைகள் கிலாஃபத்தின் உறுதியான இராணுவ பலத்திற்கு வழிவகுக்கும். முஸ்லிம் உலகில் உள்ள இயற்கை வளங்களும் மனித சக்தியும் கிலாபாத்திற்கு சர்வ வியாபித்த பலத்தைக் கொடுக்கும்.

பின்வரும் காரணிகள் கிலாபாத்தின் வளர்ச்சிக்கு சாதகமாயிருக்கும்,

· உலகின் மிகப்பெரிய இராணுவம்

· பரந்த நிலப்பரப்பு

· கேந்திர முக்கியத்திவம் பெற்ற விமான, கடற் தளங்கள் மற்றும் நீரினைகளைக் கொண்டுள்ளமை

· பாரிய இயற்கை வளம்

கிலாஃபத்திற்கு இராணுவ அபிவிருத்தியைப் பெற காலம் எடுக்கும், எப்படி இருப்பினும், திறமிக்க இராணுவ பலத்தைப் பெற ஒழுங்கு முறை அவசியம். சக்தி வாய்ந்த உலக நாடுகள் அதன் இராணுவ பலத்தைப் பெற பல தசாப்தங்கள் ஆய்வை மேற்கொண்டு முன்னேறின.

கிலாஃபத் உலகின் பலம்மிக்க இராணுவத்தை கொண்டிருப்பது தமது எல்லைக்குள்ளும் வெளியிலும் பாதுகாப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதுடன் கிலாபத்தின் இராணுவ வல்லுமை காலனித்துவச் சூழ்ச்சியில் முஸ்லிம் உலகம் இன்று சிக்கியிருப்பது போல் எதிர்காலத்தில் சிக்காமல் இருப்பதற்கு முக்கிய பங்களிக்கும். கிலாஃபத் முஹம்மது பின் காசிம் போன்றோரை உருவாக்குவதுடன் அத்தகையோர் இஸ்லாத்திற்காகவும் கிலாஃபத்திற்காகவும் பணியாற்ற வழி செய்யும். கிலாஃபத் மனிதகுலத்திற்கு ஒரு கலங்கரை விளக்காக இருப்பதுடன் அனைத்து தேசங்களுக்கும் ஒரு நல்லுதாரணமாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.

எந்த ஒரு சுதந்திர நாடும் தனது எல்லைகளை வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது அதன் ஸ்திரத்தன்மைக்கு அவசியமாகும். எந்த ஒரு நாடு தனது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கிறதோ அது தனது உள்நாட்டு அபிவிருத்தி மற்றும் சுபீட்சம் குறித்து கவனம் செலுத்த முடிவதுடன் வெளிநாட்டு இடையூறுகள் குறித்து அஞ்சத்தேவையில்லை. வலிமைமிக்க இராணுவ அபிவிருத்தியைப் பெறுவதன் மூலமே இவ்இலக்கை அடைய முடியும்.

கடந்த கால வரலாற்றை நோக்கின் நாடுகள், குலங்கள், சாம்ராஜ்யங்கள் என்பன அவற்றைப் பாதுகாக்கவும் இராணுவ பலத்தைப் பேணவும் பலவகையான ஆயுத உற்பத்திகளையும் தொழில் நுட்பங்களையும் உருவாக்கியதைக் காணலாம். உலக வரலாற்றை நோக்கின் அனைத்து வல்லரசுகளும் தத்தமக்கென படைப்பலத்தையும் நவீன ஆயுதங்களையும் கையாண்டு எதிரிகளைத் தாக்கின. உரோம சாம்ராஜ்யம், பிரித்தானிய சாம்ராஜ்யம், ஐக்கிய அமெரிக்கா, போனபாட்டின் பிரான்ஸ், நாசி ஜெர்மனி, ஜப்பானிய ஏகாதிபத்தியம், சோவியத் யூனியன், சீனா அதேபோன்று கிலாபத்தும் கூட இராணுவ பலத்தினையே உருவாக்கின.

உலகின் நவீன முதிர்ச்சியடைந்த இராணுவ அபிவிருத்தியைக் கொண்டுள்ள தேசங்கள் வல்லரசுகளாக இருப்பது ஆச்சரியமான விடயமல்ல; இவ்வல்லரசுகள் தமது சுய லாபத்துக்காக சர்வதேச அமைப்புமுறைகளைக் கையாள்கின்றன. ஆனால் நம் முஸ்லிம் உலகை நோக்கின், அவை தமது அடிப்படை இராணுவ தேவைகளுக்குக் கூட மேற்குலக நாடுகளையே தங்கியுள்ளன. இதனாலேயே முஸ்லிம் தலைவர்கள் சுதந்திரமாக செயற்பட இயலாத கைப்பாவைகளாக உள்ளனர்.

அரபு வசந்தத்தின் நிகழ்வுகள், முஸ்லிம் உம்மாஹ் இன்றுள்ள நடைமுறைகளை மாற்றி வெளிநாற்றுத் தலையீடுகளைத் தகர்த்து எல்லைகளைப் பாதுகாத்து தசாப்தங்களாக இருந்து வரும் அந்நிய சக்திகளை உடைத்தெறிய எழுந்துள்ளது என்பது தெளிவு..

No comments:

Post a Comment