Mar 6, 2013

கிலாஃபாவின் வீழ்ச்சியின் பின் .............

அந்த இறுதி மூச்சுக் கூட அனாதரவாக பிரிய ஒரு சம்பிரதாயமாக கூட கிலாஃபத் வீழ்ச்சி முஸ்லீம் உம்மத்தால் உணரப்படவில்லை . அவமானம் விடுதலையாக கருதப்பட மனித அடிமைத்துவம் சுதந்திரமாக காட்டப்பட்டது . அந்தக் காட்சிகளில் தாருள் இஸ்லாம் தேசிய துண்டுகளாக சிதற எம்மவர் சிலரே குப்ரின் பாதத்தில் செருப்பாக ஏறி அமர்ந்து அந்த 
அநீதிகளின் அதிகார நெருப்பை இஸ்லாமிய பூமிகளில் சாவகாசமாக அள்ளி இறைத்ததனர்.

முஸ்லீம் அல்லாஹ்வை தவிர்த்து வாழ்வியலில் வேறு கடவுள்களை நம்ப
திசை திருப்பப்பட்டான் . இஸ்லாம் மஸ்ஜித்துக்குள் முடங்கி சில குறிப்பிட்ட கடமைகளோடு
சுருங்க மார்க்கம் மதமாக்கப்பட்டது . முஸிலிமுக்கே இஸ்லாம் ஒரு விமர்சனப் பொருளானது.
ஹராத்தில் முஸ்லீம் ஹலாலை கண்டான் . ஹலாலை சூழ்நிலைகளுக்காக ஹராமும் ஆக்கினான் . குப்ரின் திருப்திக்கு இஸ்லாத்தை திருப்ப நெகிழும் எனும் எலாஸ்டிக் போட்டுகுப்ர் ஓகே சொல்லும் வரை இழுத்ததுச் சென்றான் .

வஹி ஓசை நயம் மிக்க ஓதும் பொருளானது மற்றும் படி பரணில் கண்ணியமாக அமர்ந்து கொண்டது. எதிரிகள் முஸ்லிம்களை தம் விருப்பப்படி ஆண்டார்கள்,ஆழித்தார்கள், அவமதித்தார்கள். நாம் அரசியல் அனாதையானோம் எனும் சிந்தனை வரும் போதெல்லாம் ஒரு தேசிய முட்டையை காட்டி அதில் மயிர் பிடுங்க சிறுபான்மை பிக்ஹ்
எனும் நாச தீர்ப்புகளை நேச மனப்பான்மை கொண்டு உளமாக்கள் தந்தனர். இந்த புதுப்புது அர்த்தங்களில் பாஸிசப் பூமிகளில் சகஜ வாழ்வாம்!?

இப்போது ஹிஜாப்பை நீக்க குப்ர் சொன்னால் அவுரத்தை மறைக்க சேறு
பூச உளமாக்கள் சொல்வார்களோ!? என முஸ்லிம் சகோதரிகள் இலங்கையில் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். பார்மவை பேசிய ஃபேஸ்புக்கில் நாமும் காட்சியாவோமோ!? எனும் அளவுக்கு அரசியல் அனாதை தனம் தொடர நாளை கிலாஃபாவின் மீள் வருகையில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஒரு சிறு நம்பிக்கையில் முஸ்லிம் வாழ்கிறான்.

No comments:

Post a Comment