Apr 13, 2013

அமெரிக்காவின் நலன் கறுதி கயானியும் சர்தாரியும்

ஹிஸ்ப் உத் தஹ்ரிர் கராச்சியில் இடம்பெற்ற இரட்டைக் குண்டு வெடிப்பு குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த 45 பேருக்காகவும் மற்றும் காயமடைந்த நூற்றுக் கணக்கானோருக்காகவும் அல்லாஹ்(swt)விடத்தில் பிரார்த்தனை செய்கிறது. ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு இந்த அட்டூலியமான சம்பவத்தை முகம் கொடுக்கக்கூடிய வலிமையை அல்லாஹ்(swt) அவர்களுக்குக் கொடுப்பானாக, ஆமீன்.

அமெரிக்காவின் நலன் கறுதி கயானியும் சர்தாரியும் முஸ்லிம் இரத்தத்தால் ஹோலி வன்னப்பூச்சு பூசிக் கொண்டு பிரிவினை வாதத்தை தூண்டுகிறார்கள். ஜெனெரல் கயானியும் ஜனாதிபதி சர்தாரியும், அரசியல் மற்றும் இராணுவ தலைமைத்துவத்தில் உள்ள துரோகிகளுமே, கராச்சி குவெட்டா மற்றும் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வரும் குண்டு வெடிப்பு, கொலை மற்றும் கலவரங்களுக்கான பொறுப்பாளிகள். இவர்கள் அமெரிக்காவால் வேண்டப்படும் முஸ்லிம்களை கைது செய்து பின், மக்கள் தமது உயிரையும் உடமைகளையும் பாதுகாத்து குற்றவாளிகளை நீதி முன் கொண்டுவரச் சொல்லி கோரிக்கை விடுக்கும் போது, இந்தத் துரோகிகள் ஒருவர் மீது மற்றவர் பலி சுமத்துகிறார்கள்.

கயானியின் கையாட்கள் ஹிஸ்ப் உத் தஹ்ரிரின் பேச்சாளர் நவீத் பட் ஐ பாகிஸ்தானின் 2வது பெரிய நகரத்தில் வைத்து, வன்முறை இல்லாத அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்தனர்; ஆனால் உண்மையான குற்றவாளியையோ, தீவிரவாதியையோ, கொலைகாரனையோ கைது செய்யாமல் எதுவும் தெரியாதது போல் நாடகமாடுகின்றனர். பாகிஸ்தானின் முக்கிய இரு நகரங்களில் மத்திய அரசினதும் மாகான சபையினதும் இராணுவம், போலிஸ், நீதிமன்றம், அமைப்புகள், அதிகாரிகள் மற்றும் அரசின் சகல இராணுவ இயந்திரங்களும் இருக்குமிடத்து இவ்வாறு அடிக்கடி குண்டு வெடிப்புகளும் கொலைகளும் இத்தகைய அளவில் இடம்பெறுவது அரசாங்கத்தின் ஆதரவுடனே சாத்தியமாகும்.

பாகிஸ்தானின் அரசியல் பற்றியும் , அதன் அதிகாரிகளினதும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பலத்தைப் பற்றியும் தெரிந்த எந்தவொரு சுய அறிவுள்ள பிரஜையாவது, இவர்கள் கூறும் பொய்யை நம்புவாரா? இல்லவே இல்லை!

http://www.darulaman.net/

No comments:

Post a Comment