Apr 11, 2013

தாகூத்' ஒரு பார்வை .

"ஒவ்வொரு சமூகத்திலும் அல்லாஹ்வையே வணங்குங்கள் ;தாகூத்திற்கு அடிபணிவதை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ;என்று (எச்சரிக்குமாறு ) நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம் " (TMQ அத்தியாயம் 16 : வசனம் 36)


' தாகூத் ' என்பது இறைவனை எதிர்த்து சவால் விட்டு சதி செய்பவனை குறிக்கும் ! அல்லாஹ்வை தவிர்த்து வேறு எவரை வழிபடப்படுகிறதோ அவரைக் குறிக்கும் ! வழிபட்டு நடப்பவன் கட்டாயத்தின் காரணத்தினால் வழிபட்டாலும் சரியே ! அல்லது தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வழிபட்டாலும் சரியே !அது 'தாகூத் ' ஆகும் .அது மனிதனாக இருக்கலாம் ,அல்லது ஒரு சைத்தானாக இருக்கலாம் ,அல்லது சிலை ,அல்லது அல்லாஹ் அருளாத சிந்தனை, அல்லது அல்லாஹ் அருளாத வழிமுறை ,அல்லது ஏதேனும் ஒரு பொருளாக இருக்கலாம் .
(இப்னு ஜரீர் அத்தபரி ஜாமியுள் பயான் பீ தப்சீரில் குர் ஆன் பாகம் 3, பக்கம் 13)
தவறான இலக்குகளால் இறைவனின் விதிகளை மீறும் தவறின் மீதுதான் 'தாகூத் ' தோன்றுகிறான் !
ஒரு முஸ்லீம் தன் ஈமானியத்தை விலைபேசி அதனிடம் சரணடைவதை விட அவன் கொல்லப்படுவது சுகமானது .

No comments:

Post a Comment